Wednesday, April 8, 2009

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா

Idhuthaan Arasial said...

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பாதேர்தலில் ஒருபோதும் போட்டியிட மாட்டோம் என்று கூறி தமுமுகவுக்கு ஆள் சேர்த்த அதன் தலைவர்கள் தற்போது மாமா.கட்சி என்ற பெயால் கட்சி துவங்கி சீட்டுக்காக நாயாக அலைந்து கொண்டிருப்பது அனைவருக்கும் தொந்ததே! இந்த பேர்வழிகள் வழக்கமான அரசியல்வாதிகளை விட மிகக் கேவலமான அரசியல் நடத்துவதைக் கண்டு தமிழக மக்கள் காறித் துப்புவதும் அறிந்ததே! காங்கிரஸ் கூட்டணியில் ஒருபோதும் சேர மாட்டோம் என்று ஜவாஹிருல்லா அறிவித்த மூன்று நாட்களில் காங்கிரஸ் கூட்டணியான திமுகவிடம் போய் சீட் கேட்டு கெஞ்சத் துவங்கினார். அதிமுக திமுக கட்சிகளுடன் ஒரே சமயத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாக பிபிசி தமிழோசை நிருபாடம் கூறி கேவலப்பட்டுக் கொண்டார்.

8 தொகுதிகளில் போட்டி என்று சென்னையிலும்
6 தொகுதிகளில் போட்டி என்று நேல்லையிலும்
3 தொகுதிகள் தந்தால் தான் கூட்டணி என்று திருச்சியிலும்
2 தொகுதி தந்தால் தான் கூட்டணி என்று பி.பி.சி. திசையில் புலம்பித் தள்ளிக்
கொண்டிருக்கின்றனர். உயர்மட்டக்குழு கூடி முடிவெடுக்கும் என்று கூறி மூன்று நாட்களைக் கடத்தினர்.அதன் பிறகு உயர்மட்டக்குழு முடிவெடுத்து விட்டதாகவும் 4.4.09 செயற்குழுவில் அறிவிப்பதாகவும் அது தமிழக அரசியலில் திருப்புமுனையை (?) ஏற்படுத்தும் என்றும் பத்திகை அறிக்கை விட்டனர்.தற்போது 4.4.09 செயற்குழுவில் கூட்டணி குறித்து முடிவெடுக்க தலைமை நிர்வாகக் குழுவுக்கு அதிகாரம் வழங்கியுள்ளதாக பழையபடி ஆரம்பத்திலிருந்து துவக்குகின்றனா.அப்படியானால் இவ்வளவு நாளும் கூட்டணிக்காக தெருத்தெருவாக அலைந்ததற்கு யார் அதிகாரம் வழங்கினார்கள் என்றெல்லாம் கேட்கக்கூடாது. ஏனென்றால்அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா

Thanks http://adiraixpress.blogspot.com/2009/04/blog-post_7098.html?showComment=1239225600000