Wednesday, November 19, 2008

இராம‌நாத‌புர‌த்தில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாவ‌ட்ட‌ செயற்குழுக் கூட்ட‌ம்

இராம‌நாத‌புர‌த்தில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் மாவ‌ட்ட‌ செயற்குழுக் கூட்ட‌ம்

இராம‌நாத‌புர‌த்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவ‌ட்ட‌ செய‌ற்குழுக் கூட்ட‌ம் மாவ‌ட்ட‌ த‌லைமை அலுவ‌ல‌க‌த்தில் 15 ந‌வ‌ம்ப‌ர் 2008 ச‌னிக்கிழ‌மை காலை ந‌டைபெற்ற‌து.
மாவ‌ட்ட‌ செய‌ற்குழுக் கூட்ட‌த்திற்கு இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாவ‌ட்ட‌ த‌லைவ‌ர் ஹாஜி எம்.எஸ். சௌக்க‌த் அலி த‌லைமை தாங்கினார். பேரையூர் ம‌வ்ல‌வி சாகுல் ஹ‌மீது அரூஸி இறைவ‌ச‌னங்க‌ளை ஓதினார்.

மாவ‌ட்ட‌ செய‌லாள‌ர் ஹாஜி எம்.எஸ்.ஏ. ஷாஜ‌ஹான் அனைவ‌ரையும் வ‌ர‌வேற்று தீர்மான‌ங்க‌ளை முன்மொழிந்தார். கூட்ட‌த்தில் ப‌ல்வேறு தீர்மான‌ங்க‌ள் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌. அவை வ‌ருமாறு :

மறைந்த‌ மாவ‌ட்ட‌ துணைத்த‌லைவ‌ர் ஹாஜி கே.கே.எஸ்.ஏ.ப‌க்ருதீன் ம‌றைவுக்கு தீர்மான‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌து. அன்னார‌து தியாக‌ மன‌ப்பான்மையை மாவ‌ட்ட‌ நிர்வாகிக‌ள் நினைவு கூர்ந்த‌ன‌ர். அவ‌ருக்காக‌ துஆ ஓத‌ப்ப‌ட்ட‌து.

இராம‌நாத‌புர‌ம், விருதுந‌க‌ர், சிவ‌கெங்கை,க‌ன்னியாகும‌ரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய‌ மாவ‌ட்ட‌ங்க‌ள் ப‌ங்கேற்கும் ம‌ண்ட‌ல மாநாட்டினை இராம‌நாத‌புர‌த்திலேயே ந‌ட‌த்த‌ மாநில த‌லைமையினை கேட்டுக் கொள்வ‌து என‌ தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து. இத‌ற்காக‌ 31 பேர் அட‌ங்கிய‌ குழு ஏற்ப‌டுத்தப்ப‌ட்டுள்ள‌து. இக்குழு பிற‌ மாவ‌ட்ட‌ நிர்வாகிக‌ளுட‌ன் க‌ல‌ந்துரையாட‌ல் செய்யும்.
டிச‌ம்ப‌ர் மாத‌ம் 26,27 ஆகிய‌ தேதிக‌ளில் உத்திர‌ பிர‌தேச‌ மாநில‌ம் ல‌க்ணோவில் ந‌ட‌க்கும் அகில‌ இந்திய‌ மாநாட்டில் மாவ‌ட்ட‌த்தில் இருந்து அதிக‌ அள‌வில் ப‌ங்கேற்ப‌து என‌ தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து.

மாலேகான் குண்டுவெடிப்பில் உண்மைக் குற்ற‌வாளியை க‌ண்டுபிடித்து ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ வேண்டும் என‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌ட்ட‌து.

இல‌ங்கைத் த‌மிழ‌ர் துய‌ர்துடைக்க‌ ஒத்துழைப்பு ந‌ல்கி வ‌ரும் அனைத்து அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளுக்கும் ந‌ன்றி தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து.

மேலும் இப்பிர‌ச்ச‌னையில் ஒரு குழுவை ஏற்ப‌டுத்த‌ பிர‌த‌ம‌ரை த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் கேட்டுக் கொள்ள‌வேண்டும் என‌வும், அக்குழு இல‌ங்கை சென்று பிர‌ச்ச‌னைக‌ளை ஆராய்ந்து ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ப்ப‌ட‌ வேண்டும் என‌வும் வேண்டுகோள் விடுக்க‌ப்ப‌ட்டது.
ராமேசுவ‌ர‌ம் தொட‌ர்வ‌ண்டிப்பாதை விரிவாக்க‌ப் ப‌ணி ந‌ட‌ந்த‌ பின்ன‌ர் அர‌சு அறிவித்த‌ப‌டி வ‌ட‌மாநில‌ங்க‌ளை இணைக்கும் வ‌ண்ண‌ம் தொட‌ர்வ‌ண்டிக‌ளை விட‌ அர‌சும், ர‌யில்வே நிர்வாக‌மும் ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ வேண்டும்.

மாநில‌ பொருளாள‌ர் நிதிநிலை குறித்து அனுப்பிய சுற்ற‌றிக்கை கூட்ட‌த்தில் வாசிக்க‌ப்ப‌ட்ட‌து.
ப‌யிற்சிப் பாச‌றைக‌ள் ந‌ட‌த்திய‌ ப‌னைக்குள‌ம், ம‌ண்ட‌ப‌ம், கீழ‌க்க‌ரை ந‌க‌ர‌ முஸ்லிம் லீக் கிளைக‌ளுக்கு பாராட்டு தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. இதே போல் மாவ‌ட்ட‌த்தின் இத‌ர‌ ப‌குதிக‌ளிலும் ப‌யிற்சிப் பாச‌றையினை விரைந்து ந‌ட‌த்தி முடிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌ட்ட‌து.

சென்னையில் ந‌டைபெற்ற‌ மாநில‌ மாநாட்டில் ஆர்வ‌த்துட‌ன் அதிக‌ அள‌வில் ப‌ங்கேற்ற‌ அனைவ‌ருக்கும் பார‌ட்டு தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. இம்மாநாட்டுக்காக‌ சீருடைக‌ளை தயாரித்து வ‌ழ‌ங்கிய‌ ப‌னைக்குள‌ம் ந‌க‌ர‌ முஸ்லிம் லிக்கிற்கு பாராட்டு தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. என்ப‌ன‌ உள்ளிட்ட‌ ப‌ல்வேறு தீர்மான‌ங்க‌ள் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌.

கூட்ட‌த்தில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை செய்தித் தொட‌ர்பாள‌ர் முதுவை ஹிதாய‌த், ப‌னைக்குள‌ம் அபு முஹ‌ம்ம‌து, கீழ‌க்க‌ரை வ‌ரிசை முஹ‌ம்ம‌து ஹாஜியார், கீழ‌க்க‌ரை லெப்பைத்த‌ம்பி, ஆர்.எஸ்.ம‌ங்க‌ல‌ம் அமானுல்லாஹ், தேவிப‌ட்டிண‌ம் சித்திக், ம‌ண்ட‌ப‌ம் லியாக்க‌த் அலி, வேதாளை அப்துல் ர‌ஷீத் ஆலிம், இராம‌நாத‌புர‌ம் சாதுல்லாஹ் கான், இராம‌நாத‌புர‌ம் ம‌ணிச்சுட‌ர் ஏஜெண்ட் யாக்கூப், முதுகுள‌த்தூர் அமானுல்லாஹ் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்றுச் சிற‌ப்பித்த‌ன‌ர்.

வேதாளை அப்துல் ர‌ஷீத் ஆலிம் துஆவுட‌ன் செய‌ற்குழுக் கூட்ட‌ம் நிறைவுற்ற‌து. கூட்ட‌த்திற்குப் பின்ன‌ர் மீன் பொறிய‌லுட‌ன் ம‌திய‌ உண‌வுக்கு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

செய்தி : முதுவை ஹிதாயத் ( எம்.என்.ஏ. )

குவியலாக மாறட்டும்....!

குவியலாக மாறட்டும்....!
ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,அபுதாபி.
தம்பி...!
உன்னைத் தான்...!!
காயிதே மில்லத்தும்,
சிராஜுல் மில்லத்தும்,
ஏன் நமது முனீருல் மில்லத்தும் கூட


அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை
தம்பி...!உன்னைத்தான்..!!
இந்த வார்த்தைகளை வைத்து
நம்மை நம் தலைவர்கள்
அறவழியில் நடத்துகின்றனர்..!


கருத்தரிந்த காலம் முதல்
கட்டாய வசூல் செய்ததில்லை
முஸ்லிம் லீக்!

கடமை என்று வந்து விட்டால்
கட்டாயம் அதில் முஸ்லிம் லீக்
பங்கும் படியாமல் இருந்ததில்லை..!

இன்று...!
முஸ்லிம் லீகிற்க்கு நிதி வேண்டும்
திரட்ட களத்தில் இறங்குங்கள்..!இது பொருளாளர்
வடக்கு கோட்டையாரின் வாஞ்சையான வேண்டுகோள்!!!


ஆம் சொந்தங்களே...!
இது வரை நம் தலைவர்கல் நம்மை
தம்பி என்று அழைத்து...
தர்பியத் செய்து வந்தார்கள்!


ஆனால்...!இன்று
தேங்கி அழைக்கிரார்கள்...!
அவர்களுக்கு பயம்,நம்மை
பாரத்தில் ஆழ்த்துகிரோமோ என்று..!


நாம் சொல்ல வேண்டாமா..?
வலது கைக்கு கொடுப்பது
இடது கைக்கு தெரியாமல் இறுக்கிறதென்று...!
இது தானே நாம் செய்து
வரும் பாரம்பரியம்...!


படம் பிடித்து...
புடம் போட்டு...
துண்டு விரித்தோமா..?


தூய எண்ணத்தை சொல்லி
கேட்டோமே மாண்டவர்களுக்கு
மீலாது ஊர்வலத்தில்...!அன்று!


அரவமில்லாமல் ஆதரவளித்தாரே
சுனாமியில் சிக்கியவர்களுக்கு
தாய்ச் சபையின் பெயரைச் சொல்லி பொதுச் செயலாளர்...!
அவைகளை சொல்லிக் காட்டவில்லையே நாம் இன்று...!


நாம் சொல்லிக் காட்டாததின்
விளைவு நிதி நெருக்கடி..!
இனி வரக் கூடாது அடிக்கடி...!


உரிமையோடு சமுதாயத்திடம்
சென்று உண்மை பேசுவோம்...!
உவப்புடன் தருவதை பெற்று
உள்ள்ம் பூரிப்போம்!


தாய்ச் சபையின் உரங்களாக...
விழுதுகளாக வீற்றிருக்கும்
பெரியவர்களின் அனுமதியோடு...
அவர்களை அசர வைக்க
புறப்படுவோமே...! பெருவதற்க்கு...!


வசூலை வேளையாக செய்து,
கொண்டிருப்பவர்களல்ல நாம்
வேளையின் தேவைக்காக,காலத்தின் வேகத்திற்க்காக
ஒரே ஒறு முறை உங்களிடம்!!


உரிமை பெற்றவர்கள் என்ற
உரிமையோடு...!சமுதாயத்தின்
உண்மையான உதிரத்தின் உணர்வோடு
கனிந்த இதயத்தோடு கைகுலுக்கும் உங்களை
கடமை உணர்வோடு கட்டித் தழுவுங்கள் எங்களை!!!


குருவிகளாக சேகரிப்போம்..!
குவியலாக மாறட்டும்..!
தாய்ச் சபையின் பணிகள் மிளிரட்டும்...!


Abdul rahman

ibnuthalabathi@yahoo.co.in