Tuesday, August 25, 2009

WAFAATH OF HAJI A.S.ABDUL HAKEEM SAHIB


WAFAATH OF HAJI A.S.ABDUL HAKEEM SAHIB - Inna Lillahi Wa Inna Ilaihi Razioon

SIRAJUL MILLATH FORUM HONG KONG
Hong Kong
Email : millathforum@gmail.com

Tel : 852 – 9262 4715

Date : 25th August 2009
4th Ramadhan Hijri 1430
Sub : Wafaath of Haji A.S.Abdul Hakeem Sahib – Inna Lillahi Wa Inna Ilaihi Razioon

Dear Brothers / Sisters,

Assalamu Alaikum.

On behalf of our Sirajul Millath Forum Hong Kong, we are deeply saddened to announce the sudden demise of our Respected Brother Janab Haji A.S.Abdul Hakeem- second son of Our Beloved Leader Sirajul Millath AKA Abdul Samad Sahib, at his age 48, @12:30PM today(25th August 2009) in Chennai, Inna Lillahi Wa Inna Ilaihi Razioon.


Janab Haji A.S.Abdul Hameed is the second son of our beloved leader Sirajul Millath A.K.Abdul Samad Sahib. He is the Current Political Advisory Committee Member of our Tamil Nadu State Indian Union Muslim League & served in the past as State Tresurer and also the Head Office State Secretary and in various positions in our Tamil Nadu State Indian Union Muslim League.

He was very active with the Indian Union Muslim League since from his childhood and committed serving the community in various aspects. He is a very good moral for the youths in League. Today Muslim Youth & Ummah lost a great leader. He is well known for his soft speaking charactor with humbleness & kindness.

He is the publisher of the Manichudar Daily Newspaper, He served in the Management Committee of New College.

We pray Almighty ALLAH to forgive his sins and place him in Jannathul Firdous and our condolence to his family and relatives and the family of our Indian Union Muslim League.

Note : Insha Allah the Burial will be on today @5:00PM (IST) at Rayapettah Mosque Graveyard, Chennai.

Wassalam

VMT Mohamed Hasan
Organizer

On Behalf of SIRAJUL MILLATH FORUM HONG KONG




SIRAJUL MILLATH FORUM HONG KONG

("Communal amity with hearts" harmony, effective democracy through proper representation.")

Please visit Our Official Website of Tamilnadu Indian Union Muslim League for updated news http://www.muslimleaguetn.com

READ "MANICHUDAR" printed version availbale in INDIA (The first and only Muslim Tamil Daily Newspaper for more then a decade)

சிராஜுல் மில்ல‌த் சாஹிப் ம‌க‌ன் அப்துல் ஹ‌க்கீம் வ‌ஃபாத்து

சிராஜுல் மில்ல‌த் சாஹிப் ம‌க‌ன் அப்துல் ஹ‌க்கீம் வ‌ஃபாத்து

தமிழ்நாடு மாநில் இந்திய யுனியன் முஸ்லிம் லீக் முன்னாள் தலைமை நிலைய செயலாளர், பொருளாளர், தலைவர் சிராஜீல் மில்லத் மகனாரும் மணிச்சுடர் வெளியீட்டாளுருமான எ. அப்துல் ஹக்கீம் இன்று 25.08.09 அதிகாலை அல்லாஹ்வின் நாட்டப்படி காலமானார்கள்;. (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன்) ஜனாஸா இன்று 25.08.09 மாலை அஸர் நேரத்தில் ராயப்பேட்டை கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Monday, August 24, 2009

Video of Maiden Speech done by M.Abdul Rahman (Vellore MP)

Video of Maiden Speech done by M.Abdul Rahman (Vellore MP)

Assalamualaikum Wara.....

Please check out the Link:

http://www.youtube.com/watch?v=T-kIZzRBi30
.
This link contains the video of
The maiden speech done by the Vellore MP (M. Abdul Rahman).
As followed by 14/08/2009.

Kind Regards,

Siddiq Ahmed
S/O. M.Abdul Rahman. (Vellore MP)
+91 97917 00305
+91 95000 73786
+971 50 8779144
siddiqar@yahoo.com

Video of the Maiden Speech done by M.Abdul Rahman (Vellore MP)

Video of the Maiden Speech done by M.Abdul Rahman (Vellore MP)

Assalamualaikum Wara.....

Please check out the Link:

http://www.youtube.com/watch?v=T-kIZzRBi30
.
This link contains the video of
The maiden speech done by the Vellore MP (M. Abdul Rahman).
As followed by 14/08/2009.

Kind Regards,

Siddiq Ahmed Abdul Rahman
S/O. M.Abdul Rahman (Vellore MP)
+91 95000 73786
+91 97917 00305
+971 50 8779144
siddiqar@yahoo.com

Saturday, August 15, 2009

Welfare aid distributed to 90 beneficiaries

Welfare aid distributed to 90 beneficiaries



Special Correspondent



HELPING THE NEEDY: C. Rajendran, Vellore Collector, presenting a laptop computer to a student who scored high marks in SSLC public examinations, at the Independence Day celebrations held in Vellore on Saturday.

VELLORE: Distribution of welfare aids worth about Rs.9.26 lakh to 90 beneficiaries living below the poverty line, `best government servant’ awards to 56 government officials, and laptop computers totally worth Rs.10.50 lakh to 35 students who scored high marks in the March/April 2009 Secondary School Leaving Certificate (SSLC) public examinations (with Tamil as the first language) marked the Independence Day celebrations in Vellore on Saturday.

C. Rajendran, District Collector, hoisted the national flag and took the salute at a guard of honour by the Armed Reserve policemen at the Government Nethaji Stadium. He went over to the seats where freedom fighters were seated and honoured them with shawls. He, later, distributed loan-cum-subsidy worth Rs.2.60 lakh to two persons on behalf of the Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation (TAHDCO) for the purchase of autorickshaws, marriage assistance worth Rs.two lakh to 10 beneficiaries under the Moovalur Ramamirtham Ammayar Scheme, fixed deposit receipts of the Tamil Nadu Power Finance Infrastructure Development Corporation Limited totally worth Rs.1,21,600 (Rs.15,200 each) to eight girl children under the Sivakami Ammayar Memorial Girl Child Protection Scheme, Rs.80,000 to four couples under the Anjugam Ammayar Memorial Inter-Caste Marriage Assistance Scheme, Rs.37,500 to three dependents of persons who had a natural death, under the social protection scheme, motorised tricycles worth Rs.70,000 to two persons with disability, total marriage assistance of Rs.15,000 to three ex-servicemen, iron boxes worth Rs.24,000 to 10 persons and sewing machines worth Rs.16,100 to seven beneficiaries.

P. Thamarai Kannan, Deputy Inspector General of Police, Vellore Range, N. Arivuselvam, Superintendent of Police, Vellore district, N. Aruljothi Arasan, Project Officer, District Rural Development Agency, M. Abdul Raghman, Vellore MP and P. Karthikeyan, Mayor of Vellore participated.

http://www.hindu.com/2009/08/16/stories/2009081651170300.htm

Wednesday, August 12, 2009

காயிதெ மில்லத் குறித்து ஆவணப்படம

காயிதெ மில்லத் குறித்து ஆவணப்படம

http://muslimleaguetn.com/news.asp?id=999

இந்திய அரசியல் வானில் கண்ணியத்தின் சின்னமாய் மின்னிய முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் முஹம் மது இஸ்மாயில் பற்றி ஹகண்ணியத் தமிழர்| என்ற ஆவணப்படம் தயாரிக்கப் பட இருக்கிறது. மிகுந்த பொருட்செலவில் நேர்த்தி யுடனும், உயர் தொழில் நுட்ப தரத்துட னும் தாயரிக்கப்பட உள்ள இந்த படத்தில் காயிதெ மில்லத் பற்றிய வர லாற்றுச் சுவடு களும், அவரைப் பற்றிய மூத்த அரசியல் தலைவர் களின் கருத்துக்களும் இடம் பெற உள்ளன.

இந்த ஆவணப்பட தயாரிப்பு பற்றிய அறிவிப்பை வெளியிடும் நிகழ்ச்சி கடந்த 8-8-2009 வியாழன் அன்று சென்னை ராதாகிருஷ்ணன் சாலை யில் உள்ள சவேரா ஓட்ட லில் நடைபெற்றது.

ஆவணப்படத்தின் இயக்குநர் ஆளுர் ஷா நவாஸ், ஆவணப் படத்தை தாயரித்து வெளியிடும் எஸ்.டி. கூரியர் நிறுவனத் தலைவர் கே.அன்சாரி, பேராசிரியர் அ. மார்க்ஸ், தமிழ் மைய இயக்குநர் ஜெகத் கஸ்பர் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஆவணப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் கூறியதா வது-

ஒரு மணி நேரம் ஓடும் வகையில் ஆவணப்படம் தயாரிக்கப்படுவதோடு, முதலில் தமிழ் மொழியி லும் பின்னர் மலையாளம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்படும்| என்றும் தெரிவித்தனர். காயிதெ மில்லத் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் அறிவிப்பு செய்தனர்.

இந்த ஆவணப்படம் டிசம்பர் இறுதியில் வெளியிடப்படும் என்று தெரிவித்த ஆளுநர் ஷாநவாஸ், இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, காயிதெ மில்லத் வாழ்க் கையை திரைப்படமாக இயக்குவதற்கு முயற்சி எடுக்கப்படும் என்றார். பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப் படமாக எடுக்கப்பட்டுள்ள நிலையில் காயிதெ மில்லத் பற்றி எந்தப் பதிவும் இல்லையென்றால் அது வரலாற்றுப் பிழையாகி விடும் என்பதாலேயே இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தலைவர் பேராசிரியர் வாழ்த்து

கண்ணியத் தமிழர் ஆவணப்பட இயக்குநர் ஆளுர் ஷானவாஸ் 10-8-09 மாலை முஸ்லிம் லீக் தலைமை நிலையம் காயிதெ மில்லத் மன்ஸி லுக்கு வருகை தந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். அபூபக்கர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆவண படம் குறித்த விவரங்களை ஆளுர் ஷானவாஸ் 65139, போலீஸ் கமிஷனர் ஆபீஸ் சாலை, கணேன் டிரா வல்ஸ், எழும்பூர், சென்னை 600 008 செல்-9444976476 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, August 8, 2009

EXCLUSIVE INTERVIEW OF OUR INDIAN UNION MUSLIM LEAGUE MP JANAB HAJI ABDUR RAHMAN SAHIB IN SAMARASAM

EXCLUSIVE INTERVIEW OF OUR INDIAN UNION MUSLIM LEAGUE MP JANAB HAJI ABDUR RAHMAN SAHIB IN SAMARASAM

DEAR BROTHERS / SISTERS,

ASSALAMU ALAIKUM.

AL-HAMDULILLAH

HOPE THIS EMAIL FINDS YOU ALL WHILE ENJOYING BEST OF HEALTH, WEALTH AND HIGH ISLAMIC SPIRIT...

PLEASE READ THE BELOW WEBSITE LINK FOR OUR HONOURABLE MEMBER OF PARLIAMENT JANAB HAJI ABDUR RAHMAN SAHIB...

http://www.samarasam.net/16-31_Jly_09/index.htm

MAY ALLAH GUIDE ALL OF US IN HIS RIGHT PATH AND MAKE US UNITED AND SERVE FOR OUR COMMUNITY AND OUR NATION...

DEAR READERS, IF YOU HAVE ANY SUGGESTIONS / COMMENTS / OPINIONS / QUESTIONS FOR THE WELFARE OF OUR UMMAH FOR THE ATTENTION OF OUR RESPECTED MP BR.ABDUR RAHMAN.. (or) to our Newly elected General Secretary of Tamil Nadu Indian Union Muslim League Br.Mohamed Abubakr... PLEASE SENT EMAIL TO millathforum@gmail.com and it will be delivered to him Insha Allah in time.. thanks.

Thursday, August 6, 2009

Vellore MP Abdul Rahman Function News & Gallery

Vellore MP Abdul Rahman Function News & Gallery

Link : http://www.thangamonline.com/general/abdulrahman.htm

Plz Check it.

Regards,
T. Shaik Mydeen
CEO & Editor,
Thangam Tamil Monthly,
www.thangamonline.com
Mob: 098417 41392.

Wednesday, August 5, 2009

INTERVIEW OF OUR MP BR.ABUDUR RAHMAN IN THANGAM MONTHLY MAGAZINE

INTERVIEW OF OUR MP BR.ABUDUR RAHMAN IN THANGAM MONTHLY MAGAZINE

DEAR BROTHERS,

ASSALAMU ALAIKUM.

PLEASE FIND THE INTERVIEW OF OUR HONOURABLE MP BR.ABDUR RAHMAN ON THAMGAM MONTLY ONLINE MAGAZINE DURING JULY 2009..

http://www.thangamonline.com/thangam/july09/index.html

WASSALAM

SIRAJUL MILLATH FORUM HONG KONG

("Communal amity with hearts" harmony, effective democracy through proper representation.")

Please visit Our Official Website of Tamilnadu Indian Union Muslim League for updated news http://www.muslimleaguetn.com

READ "MANICHUDAR" printed version availbale in INDIA (The first and only Muslim Tamil Daily Newspaper for more then a decade)

Monday, August 3, 2009

EXECUTIVE COMMITTEE MEETING ON 01-AUG-2009

Dear Brothers,

Assalamu Alaikum.

Al-Hamdulillah.

Please find the news published in the Daily Thanthi about our Tamil Nadu Indian Union Muslim League Executive Committee Meeting held on 01-Aug-2009 in Tenkasi... and the pictures for your information.

Detailed Email regarding will be sent soon after upload to our website...


http://www.dailythanthi.com/article.asp?NewsID=504533&disdate=8/2/2009&advt=2

Wassalam

SIRAJUL MILLATH FORUM HONG KONG

("Communal amity with hearts" harmony, effective democracy through proper representation.")

Please visit Our Official Website of Tamilnadu Indian Union Muslim League for updated news http://www.muslimleaguetn.com

READ "MANICHUDAR" printed version availbale in INDIA (The first and only Muslim Tamil Daily Newspaper for more then a decade)

ஷிஹாப் தங்ஙள் வஃபாத் - குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இரங்கல்

ஷிஹாப் தங்ஙள் வஃபாத் - குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இரங்கல்

கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் பானக்காடு சையது முஹம்மதலி ஷிஹாப் தங்ஙள் வஃபாத்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இரங்கல்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் பானக்காடு சையது முஹம்மதலி ஷிஹாப் தங்ஙள் (வயது 73) சனிக்கிழமை (01.08.2009) அன்று கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். அன்னாரின் மறைவு செய்தி கேள்வியுற்று குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க (K-Tic) நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் அன்னாரின் ஹக்கில் துஆ செய்தனர்.

அன்னாரின் வாழ்க்கைக் குறிப்பு

கேரள மாநிலம் மலப்புரம் ஜில்லா பானக் காட்டில் வசித்து வந்த ஷிஹாப் தங்ஙள் 1936-ம் வருடம் மே மாதம் 4-ம் தேதி பிறந்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெருந்தலைவர் பூக்கோயா தங்ஙள் மறைவிற்குப் பின் 1975-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி கேரள மாநில தலைவராக பொறுப் பேற்ற ஷிஹாப் தங்ஙள் 34 வருடங்கள் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து சரித்திர சாதனை படைத்துள்ளார். கேரள மாநிலத்தில் அரசியல் கட்சியின் தலைவர் பொறுப்பில் அதிக ஆண்டுகள் இருந்த பெருமை ஷிஹாப் தங்ஙளுக்கே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சந்திரிகா நாளிதழில் நிர்வாக இயக்குநராகவும், 400 மஹல்லா ஜமாஅத்களின் தலைமை காஜியாகவும் சேவையாற்றியுள்ளார். பானக்காடு டி.எம். ஆர்.டி. பள்ளிக்கூடத்தில் ஆரம்ப கல்வியும், கோழிக்கோடு எம்.எம். உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.,யும் படித்த ஷிஹாப் தங்ஙள், 1958 முதல் 1961 வரை அல்-அஸ்கர் பல்கலைக்கழகத்தில் 1961 முதல் 1966 வரை கெய்ரோ சர்வ கலாசாலையிலும் அரபிக் கல்வி பயின்ற ஷிஹாப் தங்ஙளின் தாயார் பெயர் ஆயிஷா பீவியாவார்.

1966-ம் ஆண்டு கல்வி முடித்து திரும்பிய ஷிஹாப் தங்ஙள் 1966-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி ஷரீபா பாத்திமாவை மணந்தார். அவருக்கு செய்யது பஷீர் அலி ஷிஹாப் தங்ஙள், செய்யது முனவர் அலி ஷிஹாப் தங்ஙள் ஆகிய 2 மகன்களும், செய்யது ஃபைரோஸ், செய்யது ஷுஹாரா, செய்யது ஷமீரா ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

வஃபாத்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 39-வது தலைமுறையில் வந்த 73 வயதை எட்டிய ஷிஹாப் தங்ஙள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களில் அகில இந்திய அளவில் முன்னணி தலைவராகவும், கேரள மாநிலத்தின் முக்கியத் தலைவராகவும் இருந்து வந்த ஷிஹாப் தங்கள் சனிக்கிழமை (01.08.2009) அன்று மாலை குளியலறைக்குச் சென்றபோது கால் தடுமாறி விழுந்ததை தொடர்ந்து கோழிக்கோடு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இரவு 9 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.

அன்னாரது உடல் பொது மக்கள் பார்வைக்கு பானக்காடு தங்ஙள் வீட்டில் வைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை (02.08.2009) அன்று பிற்பகலில் பானக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

இரங்கல் அறிக்கை

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் தலைவரும், குவைத் ஜலீப் பகுதியிலுள்ள உக்காஷா பள்ளிவாசலின் இமாமாக பணியாற்றிவரும் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைஃக் டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமீ ஹழ்ரத் கிப்லா அவர்களும், சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைஃக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., அவர்களும் கூட்டாக வெளியிட்ட இரங்கல் அறிக்கை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சரித்திரத்தில் மறைந்த ஷிஹாப் தங்ஙள் அவர்கள் செய்த சேவை மிக மகத்தானதாகும். அரசியல் மேதையாகவும், ஆன்மீகத் தலைவராகவும் திகழ்ந்து, தக்வாவின் தென்றல் தங்கமான தங்ஙள் அவர்களின் மறைவு இஸ்லாமிய சமுதாயத்துக்கும் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கும் மாபெரும் இழப்பாகும்.

நம் நாட்டு அரசியல் தலைவர்களாலும், மார்க்க மேதைகளாலும் போற்றப்பட்ட தங்ஙள் அவர்களின் தியாக மிகு சேவையால் சமுதாயம் சிறப்பான நன்மைகளைப் பெற்றது. நம் நாட்டு தலைவர்களாலும், உலகத் தலைவர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டவர் ஷிஹாப் தங்ஙள் அவர்கள்.

சமுதாயத்தை நோக்கி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புனித ஸ்தாபனத்தை நோக்கி தேவையற்ற சர்ச்சைகளையும், சோதனைகளையும் சிலர் உருவாக்கிய காலக் கட்டத்தில் அவற்றையெல்லாம் தனது அன்பான அழகு மிகு பஷாரத் எனும் இன்முகத்துடனும் துஆவுடன் எதிர் நோக்கி வெற்றியைத் தேடித்தந்த மார்க்க மேதை தங்கள் அவர்களாகும்.
நம் அண்டை நாடான மாலத்தீவின் அதிபர் கய்யூம் அவர்களையும் அவர்கள் அரசையும் அங்குள்ள கடல் கொள்ளையர்கள் சூழ்ச்சிக்காரர்களைப் பற்றி அந்நாட்டு அதிபரை சிறைப் பிடிக்க திட்ட மிட்டு புரட்சி செய்த காலத்தில் மாலத்தீவு அதிபரின் நண்பரான ஷிஹாப் தங்ஙள் அவர்களுக்கு இச்செய்தியை கேள்விபட்டு அதிபர் கைய்யூம் அவர்களை தைரியப்படுத்தினார். அன்றைய நம் நாட்டு பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஷிஹாப் தங்ஙள் அவர்கள் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்து காப்பாற்றி கொடுத்த சிறப்பு ஷிஹாப் தங்ஙள் அவர்களைச் சார்ந்ததாகும்.

இருட்டில் இருந்த மக்களுக்கு ஒளிவிளக்காக திகழ்ந்தவர் பானக்காடு சையது ஷிஹாப் தங்ஙள் ஆவார். மக்களுடைய எல்லா உணர்வுகளுக்கும் உரித்தானவராக திகழ்ந்தவர். அவர் எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் முஸ்லிம் லீக்கர்கள் எதிராக இருந்ததில்லை. அவருடைய காலத்தில் முஸ்லிம் லீக் அதிக பலம் பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
எல்லா விஷயங்களிலும் திறந்த மனதுடன் செயல் படக்கூடியவர். எத்தகைய சுயநலமும் இல்லாமல் முழு நேரமும் இந்த இயக்கத்திற்காக அரும்பாடுபட்டவர். உடல் நலம் குன்றியிருந்த நிலையிலும் சமுதாய பணிகளில் முழுமையாக ஈடுபட்டவர்.
இந்தியாவில் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட போது நாடு முழுவதும் கொந்தளிப்பும், கலவரமும் ஏற்பட்ட போதும், கேரள மாநிலத்தில் எந்தவித கலவரமும் ஏற்படாமல் அமைதி காக்க செய்தது ஷிஹாப் தங்ஙளையே சாரும். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் அனைவரும் மதிக்கக் கூடிய தலைவராக திகழ்ந்தவர் என பல அரசியல் கட்சி தலைவர்களாலும் புகழாரம் சூட்டப்பட்டவர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலை சிறந்த தலைமகனாக திகழ்ந்தவர் பானக்காடு சையது முஹம்மதலி ஷிஹாப் தங்ஙள். ஆன்மீக நெறியில் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தார். அனைத்து சமுதாய மக்களின் அன்பைப் பெற்று கேரள மாநில மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பெற்றவராக விளங்கினார் அன்னாரின் மறைவு செய்தி வானத்திலிருந்து சூரியன் விலகியது போன்ற நிலையை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் இறை நாட்டப்படி அவர் மரணமடைந்ததை அறிந்து மீளாத் துயரமும், வேதனையும் ஏற்பட்டது. இத்துணை நாட்கள் முஸ்லிம் லீக்கை வழி நடத்திய ஒளிவிளக்கு மறைந்ததால் வெளிச்சம் போய் விட்டது. மனிதர்கள் மத்தியில் மனிதர்களே மரணித்த செய்திகளை கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது மனிதர்களிலே ஒரு மகான் மவுத்தான உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

உலகத் தலைவர்களாலும், அரசியல் மேதைகளாலும், ஆன்மீக தலைவர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்ட ஷிஹாப் தங்ஙள் அவர்களின் கப்ரை கருணையுள்ள ரஹ்மான் பிரகாசமாக்கிவைப்பானாக! அன்னாரின் மறைவால் வாடும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் முஸ்லிம் லீக்கினர்களுக்கும் 'ஸப்ரன் ஜமீலன்' என்ற அழகிய பொறுமையை அல்லாஹ் வழங்குவானாக!!

அனைவரின் துஆக்களோடு அல்லாஹ் அவருடைய ஆன்மாவை பொறுத்துக் கொள்வானாக. ஏன துஆ செய்கின்றோம். அவரை இழந்த தவிக்கும் குடும்பத்தாருக்கும், இயக்கத்திற்கும் அனு தாபங்களை தெரிவிப்பதோடு அவருடைய மறுமை வாழ்விற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

வஸ்ஸலாம்

மவ்லவீ டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமீ - தலைவர்
மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., - பொதுச் செயலாளர்
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
மின்னஞ்சல்கள்: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
இணையதளம்: www.k-tic.com
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group

Mohamed Salih Noohu Sahib
dateMon, Aug 3, 2009 at 11:38 AM
subjectRE: ஷிஹாப் தங்ஙள் வஃபாத் - குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இரங்கல்

Dear Brothers,

I deeply regretted the sudden demise of our beloved National Leader of Indian Union Muslim Leaque who had dedicated his whole life for the upliftment and development of Muslim Ummah. May Allah forgives all his sins and provides him Jannathul Firdous Ul Aala.Ameen.

I t is a great loss and for our movement and or muslim community.Please covey my condlolences to the office beares of Indian Union Muslim Leaque.

Regards & Salams.
Noohu Sahib
Quaidemillath Peravai.UAE.

SIRAJUL MILLATH FORUM HONG KONG

SIRAJUL MILLATH FORUM HONG KONG
Hong Kong
Email : millathforum@gmail.com

Tel : 852 – 9262 4715

Date : 2nd August 2009

Sub : Sudden Demise of our Great Leader of Indian Union Muslim League Janab Haji Sayeed Mohamed Ali Shihab Thamngal – Inna Lillahi Wa Inna Ilaihi Razioon

Dear Brothers / Sisters,

Assalamu Alaikum.

On behalf of our Sirajul Millath Forum Hong Kong, we are deeply saddened to hear the news of sudden demise of our Respected Spiritual Leader of the Ummah & a great Political Leader of Indian Union Muslim League Janab Haji Sayeed Mohamed Ali Shihab Thangal, at his age 73, Inna Lillahi Wa Inna Ilaihi Razioon.

Sayyidi Panakkad Syed Mohammed Ali Shihab Thangal is the president of the Kerala state committee of the Indian Union Muslim League. He is a member of the Thangal family, who were the descendents of our beloved Prophet Mohammed (Peace Be Upon Him). He has a doctorate in Islamic Studies from Cairo's Al Azhar University.

He has championed the propagation and importance of education. He was one of Kerala's most prominent leaders and led the Indian Union Muslim League (IUML) for many decades with great distinction. He was a nationalist who cherished secular values and a social worker and a powerful orator. The nation has lost an eminent public figure, and the Muslim Ummah lost a great leader.

He always resisted pressures to take up plum postings in Muslim countries that had good relations with India and also preferred to keep away from the corridors of power.

He came from the family , who were well known for their patriotism by taking a strong anti-imperialist stance during the British rule.

We pray Almighty ALLAH to forgive his sins and place him in Jannathul Firdous and our condolence to his family and relatives and the family of our Indian Union Muslim League, indeed it’s a great loss to the Muslim Ummah and the Nation.

Wassalam

VMT Mohamed Hasan
Organizer

On Behalf of SIRAJUL MILLATH FORUM HONG KONG



http://www.thehindu.com/2009/08/02/stories/2009080256930100.htm

http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?sectionName=IndiaSectionPage&id=d26bf21e-7028-42bf-aaa3-07fe55c8320a&Headline=Prez+PM+Sonia+pay+homage+to+Thangal

http://www.hindu.com/2009/08/02/stories/2009080259760400.htm

http://www.thaindian.com/newsportal/politics/kerala-mourns-panakkad-thangals-death-lead_100226578.html






SIRAJUL MILLATH FORUM HONG KONG

("Communal amity with hearts" harmony, effective democracy through proper representation.")

Please visit Our Official Website of Tamilnadu Indian Union Muslim League for updated news http://www.muslimleaguetn.com

READ "MANICHUDAR" printed version availbale in INDIA (The first and only Muslim Tamil Daily Newspaper for more then a decade)

Saturday, August 1, 2009

கேர‌ள‌ மாநில‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் பான‌க்காடு முஹ‌ம்ம‌து த‌ங்க‌ள் வ‌ஃபாத்து


கேர‌ள‌ மாநில‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் பான‌க்காடு முஹ‌ம்ம‌து த‌ங்க‌ள் வ‌ஃபாத்து

கேர‌ள‌ மாநில‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் பான‌க்காடு சைய‌து முஹ‌ம்ம‌த‌லி ஷிஹாப் த‌ங்க‌ள் அவ‌ர்க‌ள் 01.08.2009 ச‌னிக்கிழ‌மை மாலை 7.30 ம‌ணிய‌ள‌வில் ம‌ல‌ப்புர‌த்தில் உள்ள‌ த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னையில் வ‌ஃபாத்தானார். ( இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் )
அன்னார‌து ஜ‌னாஸா ந‌ல்லட‌க்க‌ம் ஞாயிற்றுக்கிழ‌மை மாலை ந‌டைபெறும்.

பேரா. கே.எம்.கே. ச‌கோத‌ரி வ‌ஃபாத்து

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் த‌மிழ் மாநில‌ த‌லைவ‌ர் பேராசிரிய‌ர் கே.எம். காத‌ர் மொகிதீன் அவ‌ர்க‌ள‌து அக்கா 01.08.2009 ச‌னிக்கிழ‌மை காலை திருச்சியில் வ‌ஃபாத்தானார். ( இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் )

காயிதேமில்ல‌த் பேர‌வை இர‌ங்க‌ல்

அமீர‌க‌ காயிதேமில்ல‌த் பேரவையின் செய‌ற்குழுக்கூட்ட‌ம் ச‌னிக்கிழ‌மை மாலை துபாயில் ந‌டைபெற்ற‌து. கேரள மாநில‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் பான‌க்காடு சைய‌து முஹ‌ம்ம‌த‌லி ஷிஹாப் த‌ங்க‌ள் ம‌றைவுக்கும், பேராசிரிய‌ர் கே.எம். காத‌ர் மொகிதீன் ச‌கோத‌ரி ஆகியோர‌து ம‌றைவுக்கு இர‌ங்க‌ல் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து.

அன்னார்க‌ள‌து ம‌றுமைப் பேருக்காக‌ துஆச் செய்ய‌ப்ப‌ட்ட‌து

இக்கூட்ட‌த்தில் அமீர‌க‌ காயிதேமில்ல‌த் பேரவை பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி, பொருளாள‌ர் எம். அப்துல் க‌த்தீம், செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, ஊட‌க‌த்துறை செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த், இணைச்செய‌லாள‌ர் காய‌ல் முஹ‌ம்ம‌து ய‌ஹ்யா, ஏ. ஹ‌மீது யாசின் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

வெற்றி வெகு தூரத்தில் இல்லை

வெற்றி வெகு தூரத்தில் இல்லை
திருச்சி – A. முஹம்மது அபூதாஹிர்

“அல்லாஹ்வின் கயிற்றை
பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் (குர்ஆன்)
ஆம்
வேலூரில் ஒற்றுமையால்
முஸ்லிம்களுக்கு
வெற்றி கிடைத்தது
அது நன்மையால் ஆனது !
“நீங்கள் பிரிந்தால்
உங்கள் வலிமை குன்றி விடும்” (குர்ஆன்)

நாம்
வேறு இடங்களில் பிரிந்து நின்றதால்
தோல்வி கிடைத்தது
ஆம்
அல்லாஹ்வின் வாக்கு
என்றுமே உண்மையானது !
வேறு கட்சியினர்
தோற்றது
ஓட்டு வித்தியாசத்தால்தான் !
நம்மவர்கள்
தோற்றதெல்லாம்
வேறுபாட்டு வித்தியாசத்தால்தான் !

உதய சூரியனுக்கு
ஓட்டுப் போடப்பட்டது
இளம் பிறை உதித்தது !
சின்னம்
வேறாக இருந்தாலும்
நல்லெண்ணத்தால்தான்
வெற்றிக் கிடைத்தது !

வேலூர் சிப்பாய் புரட்சி
சுதந்திரத்திற்கு
குரல் கொடுத்தது !
துபாய் ஈமானின் எழுச்சி
சுதந்திர இந்தியாவில்
முஸ்லிம்களின்
உரிமைக்கு குரல் கொடுக்கிறது

நாடு கடந்து
தொலை தூரத்தில்
சமூகத்துக்கு
உதவிய, உரிமை குரல் கொடுத்த ஈமான்
இப்போது
நாட்டின் தலைநகரத்திலும்
குரல் கொடுக்கப் போகிறது

நமக்கு கிடைத்த
“வெகுமானம்” என்று
ஈமானை சொல்லலாம்
எம்பிக்களுக்கு
இவர் நல் உவமானமாய் இருப்பார் என்று
அப்துர் ரஹ்மானை சொல்லலாம்

எம்பி என்றாலே
நடையில் மிடுக்கமும்
மற்றவரை நடுக்கமும்
ஏற்பட செய்வதுதான்
அதுதான்
அவர்களின் சிம்பள் !

அடக்கமான குணமும்
அனைவரையும்
அரவணைக்கும் மனமும்
கொண்டவர்தான்
அப்துர் ரஹ்மான்
இவர் மிகவும் சிம்பிள்

பேருக்கு
அறிக்கை விடும்
நூறு எம்பிக்கள்
நமக்கு தேவையில்லை !
சமூகத்தின் கோரிக்கையை
மன்றத்தில் வைக்கும்
இவர் போன்று
ஒரு எம்பி இருந்தாலும்
நமக்கு பிரச்சினையில்லை !

முடிந்து போன காலங்களை
நினைத்து கவலைப் படுவதால்
அவை திரும்ப போவதில்லை !
முடிவெடுங்கள்
வருங்காலத்தில்
நாம் அனைத்து நிலைகளிலும்
அனைவரும் ஒன்றுபட்டால்
வெற்றி மிக தூரத்தில் இல்லை !

ஈட்டியதை எண்ணிக் கொண்டிருக்கும்
செல்வந்தர்களிடையே
சமுதாயம் ஈட்டியது என்ன?
என – சிந்திக்கும் ஈ.டி.ஏ ஸலாஹுத்தீன் காக்காவின்
அர்ப்பணிப்பு மேலானது
அவரது தலைமையில்
துபையில் ஒலித்துக் கொண்டிருக்கும்
ஈமான்
இப்போது புதுடெல்லியிலும்
ஜொலிக்கப் போகிறது !

ஈமான் பலமாகட்டும் ,
முஸ்லிம்கள் லீக்கில் ஒன்றாகட்டும் !
முஸ்லிம் சமூகம்
தலை நிமிர்ந்து நிற்கும்
அத்தியாயம் தொடங்கட்டும் !
அதில்
ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட
சமூகங்கள்
நிலைமாறி
நீதி நியாயம் கிடைக்கட்டும் !

நம்பிக்கையோடு
நாம் கால்களை
எடுத்து வைப்போம் !
நாளை
வரலாற்று தாள்களில்
வரும் தலைமுறைக்கு
சவால்களை
சமாளிக்க முன்மாதிரி வைப்போம் !

அல்லாஹ்வை வேண்டுகிறோம் !
பதவியாளர்கள்
அனைவருக்கும்
அவன்தான் உதவியாளன் !
ஆட்சிக்கு அதிபதியான
அவன்தான்
மறுமையின் நீதிபதி !

அல்லாஹ்வே ! வளத்தோடு
நலத்தோடு எங்களை
வாழ செய் !
நிறைவான முஸ்லீமாய்
உறுதியான
ஈமானோடு மரிக்க செய்
நபியின் துஆதான்
எங்களின் அவாவும் ஆகும் !

சமுதாயச் சேவையே என்னுயிர் மூச்சு ! -எம். அப்துர் ரஹ்மான் பேட்டி!

சமுதாயச் சேவையே என்னுயிர் மூச்சு ! -எம். அப்துர் ரஹ்மான் பேட்டி!

வந்தார் ! நின்றார் ! ஜெயித்தார் ! என எல்லோராலும் வியந்து பாராட்டும்படியாக மாபெரும் வெற்றிதனை வேலூரில் நிலைக்க வைத்தவர் முத்துப்பேட்டை எம். அப்துர் ரஹ்மான். காலமெலாம் சமுதாயத்திற்கு வெளியேயே சுற்றி விட்டுக் காலம் போன கடைசியில் சமுதாயத்தைத் திரும்பிப் பார்க்கும் சிலருக்குத்தான் அப்துர் ரஹ்மான் ‘இறக்குமதி’ செய்யப்பட்டவராகத் தெரியும். சமுதாயச் சேவையிலேயே ஊறித் திளைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அரபு மண்ணில் அலுவல் பார்த்தாலும் பிறந்த மண்ணில் சமுதாயம் மேம்பாடு காண அவர் அயராது ஆற்றி வந்த அரும்பணிகள் தெரிந்தே இருக்கும். உதட்டில் உதிர்க்கும் வார்த்தைகளில் மட்டும் அல்ல…. உள்ளத்தில் ஊற்றெடுக்கும் அவரது உணர்ச்சிகளிலும் இணைந்து கலந்தது இந்திய யூனியன் முஸ்லிம்லீக்.

வெற்றிவீர்ராகச் சென்னை திரும்பிய எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி. ‘இனிய திசைகள்’ இதழுக்கு அளித்த பிரத்யேகமான பேட்டி இதோ:

? தங்கள் வெற்றியின் இரகசியம்?

! சமுதாயக் கண்ணியம் காக்கப்பட – சமுதாயத்தினரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அரசியல் இயக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேலூரில் வெற்றிபெற்றே ஆக வேண்டுமென ஆன்றோர்கள், சான்றோர்கள், சங்கைமிகு உலமாக்கள், நடுநிலையாளர்கள், அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்ட நல்லெண்ணம் கொண்டவர்கள் என நல்லோர் பலரும் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சிக் கேட்ட துஆ – தஹஜ்ஜத்துத் தொழுகை தொழுது அழுது கேட்ட துஆ – ஹாஜத்து நோன்பு வைத்துக் கண்ணீர் பெருகக் கேட்ட துஆ இவற்றையெல்லாம் கபூல் செய்து அல்லாஹ் அளித்த தீர்ப்பு தான் இந்த வெற்றி!


? தேர்தலில் தாங்கள் சந்தித்த சங்கடம் என்ன? சந்தோஷம் என்ன?

! ‘உருது பேசத் தெரியாதவர்’ மண்ணின் மைந்தர் அல்லர்’ எனப் பரப்பப்பட்ட துவேஷமேசங்கடம், பல்வேறு ஜமாஅத் கூட்டங்களிலும், சந்திப்புகளிலும் உருதுமொழி பேசி அவர்கள் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டதும் அந்தப் பகுதி மக்களோடு பன்னெடுங்காலமாக நான் கொண்ட நெருங்கிய தொடர்பும் அப்பகுதியில் ஆற்றிய சமுதாயப் பணியும் தெரியவர இன்னும் அதிகமாக அப்துர்ரஹ்மான் இன்ஷா அல்லாஹ் சமுதாயப் பணியாற்றுவாரென்று எல்லோர் மத்தியிலும் ஏற்பட்ட நம்பிக்கை சங்கடத்திற்குப் பிறகு கிடைத்த சந்தோஷம் சமுதாயச் சேவையே என்னுயிர் மூச்சு என்பதை மக்கள் உணர்ந்து கொண்டதே மிகப்பெரும் சந்தோஷம்.


? இலட்சத்திற்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோமென எதிர்பார்த்தீர்களா?

தொடக்கத்தில் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பிரச்சார முடிவில் எதிர்பார்த்தேன். ஒவ்வோர் ஊரிலுள்ள பெரியவர்கள் முக்கிய பிரமுகர்கள் ஒருங்கிணைந்து குழு அமைத்து ஜமாஅத் வாரியாகப் பணி புரிந்ததும் குறிப்பாக முஸ்லிம் பெண்களே குழுவாகச் சேர்ந்து ஜமாஅத் ஜமாஅத்தாக வாக்குகள் சேகரிக்க முனைந்ததும் பெருவாரியான வித்தியாசத்தில் இறையருளால் வெற்றி பெறுவோமென்ற நம்பிக்கையைத் தந்தது.


? வெற்றிக்கு முக்கிய காரணம்?

தமிழக முதல்வர் நாட்டு மக்களுக்குக் கடந்த மூன்றாண்டு களாக ஆற்றி வரும் சாதனைகளும் சமயச் சார்பற்ற மத நல்லிணக்கத்தை நிலைப்படுத்தும் நடுவண் அரசின் சாதனை களும் மக்களை வெகுவாக ஈர்த்திருந்தமையே முக்கிய காரணமெனலாம்.

தொகுதி முழுவதும் பயணம் செய்து பல தரப்பட்ட மக்களையும் சந்தித்தேன். மன்மோகன் அரசின் சாதனை களையும் கலைஞரின் சாதனைகளையும் நாம் சொல்ல முற்படும்போதே அவர்களே நன்றியுணர்வோடு சொல்லுகிற காட்சியை அனுபவித்தேன். வசதி படைத்தோர் முதல் பாமரர் வரை எல்லாத் தரப்பினரிடமும் இத்தகைய உணர்ச்சி இந்தத் தேர்தலில் பிரதிபலித்ததைப் போல வேறெந்தத் தேர்தலிலும் பிரதிபலிக்கவில்லையென்றே கூறலாம்.


?எம்.பி ஆகியுள்ளீர்களே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வளர்ச்சி இனி எப்படி இருக்கும்?

! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அருமைத்தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் தலைமையில் சிறப்பாக வளர்ந்தே வந்திருக்கிறது. இந்த வளர்ச்சி மேலும் தொடரும். அந்த வளர்ச்சிக்கு இந்த எம்.பி. வாய்ப்பு மேலும் வலிமை சேர்க்கும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இறைவன் பெயரால் முற்றிலும் சமுதாயத்திற்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட இறையடியார்களால் தோற்றம் பெற்ற இயக்கமாகும். எனவே இந்த இயக்கத்தை – இதன் தத்துவத்தை – எவராலும் அழிக்க முடியாது. இயக்கச் செயல்பாடுகளில் அவ்வப்போது தொய்வு ஏற்படுவது இயல்பானதேயாகும். அதனைச் சரிசெய்து சரியான திசையில் மேலும் வீறுகொண்டு வலிவோடும் பொலிவோடும் செலுத்த வேண்டிய பொறுப்பு இப்போது எனக்கு இன்னும் அதிகமாகியுள்ளதென்றே கருதுகிறேன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சியென்பது சமுதாயத்தின் உயிரோடும் உணர்வோடும் இரண்டறக் கலந்ததென்பதால் நிச்சயமாக வளர்ச்சி மேலும் தொடரு மென்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு.


? முஸ்லிம் லீகில் இளைஞர்கள் இல்லையென ஒரு குறை நிலவுகிறதே?

! அது உண்மை இல்லை. இளைஞர்கள் கணிசமாக முஸ்லிம் லீகில் இருக்கவே செய்கிறார்கள். ஆர்ப்பாட்ட மின்றி ஆரவாரமின்றி அமைதியாகக் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் காட்டிய நெறியில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் தலைமையில் அவர்கள் செயல்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.

சூழ்நிலைக் கைதிகளாக ஆங்காங்கே வேறுவேறு அமைப்புகளில் சிக்கிக் கிடந்த இளைஞர்களும் இப்போது மீண்டு வருகிறார்கள். இஸ்லாமியப் பண்பாட்டு வழிமுறையை இஸ்லாமிய ஒழுக்க நெறியோடு பேணி வரும் ஒரே இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான் என்பதை அவர்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள். இதனால் பல்வேறு அமைப்புகளில் இருந்த இளைஞர்கள் இன்றைக்கு அணி அணியாக முஸ்லிம் லீகில் இணைந்த வண்ணம் உள்ளார்கள்.


? அரசியலில் சமுதாய ஒற்றுமை ஏற்பட என்ன செய்யலாம்?

! சமுதாய உரிமைகளைப் பேணிக் காத்து நமக்கே உரிய கண்ணியத்தையும் மரியாதையையும் எல்லாத் துறை களிலும் பெற்று நாம் வாழ்ந்திட சமுதாய மக்களால் அங்கீகரிக்கப்பட்ட தாய்ச் சபையான இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் அனைவரும் இணைவதே அரசியலில் நாம் வலிமை பெற உதவும். இந்தியத் திருநாட்டின் ஒருமைப் பாட்டையும் இறையாண்மையையும் காத்து எல்லாரும் எல்லாமும் பெற்று மனிதநேயம் மதக் காழ்ப்பின்மை மிளிர அனைவரும் ஒன்று பட்டுப் பச்சிளம் பிறைக் கொடியின் கீழ் ஒருங்கிணைந்து ஒற்றுமை உணர்வு கொண்டு வாழ்வோம் … புத்தெழுச்சி பெறுவோம்.

அப்துர் ரஹ்மான் அவர்களுடைய கண்களின் மலர்ச்சியும் கருத்துகளின் தெளிவும் செயல்பாட்டில் முனையும் உறுதியும் ஆற்றலில் தெரியும் விவேகமும் இந்த நாடாளு மன்ற உறுப்பினர் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் நிறைய சாதிப்பாரென்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. துஆ செய்வோம்!

-பேட்டி ‘சேயோன்’

நன்றி : இனிய திசைகள்
ஜுன் 2009

அவரை நான் பாராட்டவில்லை

அவரை நான் பாராட்டவில்லை

ஜமால்
நல்ல மாணவர்களை மட்டுமல்ல
சமூகத்துக்கு
முக்கியமானவர்களை தந்திருக்கிறது !

பி.காம். பி.எஸ்ஸி
மட்டுமல்ல
பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸுகளை
தந்திருக்கிறது !
எம்.காம். எம்.பி.ஏ
மட்டுமல்ல
பல எம்.பி எம்.எல்.ஏக்களையும்
தந்திருக்கிறது !

முனைவர்
பட்டத்திற்காக மட்டும்
ஆராயும் நவீன உலகில்
சமூக துயரங்களுக்கும்
தீர்வு காண
முனைபவர்களை
அளித்திருக்கிறது !

தங்கப் பதக்கத்திற்கு
மட்டும்
முக்கியத்துவம் கொடுக்கும்
கல்வி உலகில்
தனி மனித ஒழுக்கத்திற்கும்
முக்கியத்துவம்
கொடுத்திருக்கிறது !
ஜமால்
அதனுடைய சுவர்களில்
சாயம் இருக்கலாம் !
ஆனால்
அதில்
அதனை
உருவாக்கியவர்களின்
தியாகமும் இருக்கிறது !

கல் மண்
கலவையில்தான்
அது கட்டப்பட்டது !
ஆனால்
அது நல்மனம் படைத்தோரின்
கவலையால்
எழுப்பப்பட்டது !

அங்கு படித்த போது
மாணவர்கள்
மகிழ்ச்சியடைகிறார்கள் !
அவர்கள் சாதிக்கும் போது,
ஜமால்
மகிழ்ச்சியடைகிறது !

அரை நூற்றாண்டிற்கு
முன்,
கல்விக்கு
தங்கள் செல்வத்தை அளித்த
கொடையெழு வள்ளல்கள்
ஜமால் முஹம்மது
காஜாமியான் ராவுத்தரின்
”ஜமால் முஹம்மது கல்லூரி”
இன்று
சமூகத்துக்கு பல கல்வியாளர்களை அளித்து
வருகிறது !

நேர்மையான
தூய்மையான
அந்நன்மக்களின் கனவு – இன்று
பலிக்க ஆரம்பித்திருக்கிறது !

ஆம்
“அப்துர் ரஹ்மான் எம்பி”
போன்றோரை
சமூகத்துக்கு அளித்து
அதனை
பிரதிபலிக்கச் செய்திருக்கிறது !

அப்துர் ரஹ்மானை
பாராட்ட
எனக்கு தகுதி இல்லை !
ஏனென்றால்
அவரைவிட
அகவையிலும்
அறிவிலும்
அனுபவத்திலும்
நான் மிகுதி இல்லை !

சிறியவன்
நான் – அவரை
பாராட்டவில்லை !
அவரை
படிக்கிறேன் !

முத்துப்பேட்டை
அவரை
பெற்றுத்தந்தது !

மலைக்கோட்டை ஜமால்
அவருக்கு கற்றுத்தந்தது !

வேலூர் கோட்டை – அவருக்கு
வெற்றித் தந்தது !

துபை இஸ்லாமிய வங்கியில்
அவர்
பணிபுரிந்தார் !

எனினும்
கல்லூரியின் மீது
மிகுந்த பற்று வைத்திருந்தார் !

வரையறாப் பொறுப்புக்கள்
நிறைய அவருக்கு
இருந்தாலும்
கல்லூரி சமூக நிகழ்ச்சிகளில்
அவரின்
தவறாத வரவு இருக்கும் !

நாடு கடந்து
தூரத்தில் இருந்தாலும்
ஜமாலில் படித்தோருடன் – என்றும்
அவரின் உறவு இருக்கும் !

சமூகத்தில்
மனிதர் படும் துயரங்களை
அவர் கூறியதை கேட்டு
நான்
மிகுந்த கண்ணீர் வடித்திருக்கிறேன் !

மற்றவர்களை புண்படுத்தாத
மரியாதையான
அவரின் பேச்சை
ஆழ்ந்து கவனித்திருக்கிறேன் !

நீண்ட நேரம்
உருக்கமாக
பேசும் எவ்வளவோ பெரிய மனிதர்கள்
நெருக்கமாக இருந்து
மக்களுடன்
செயலாற்ற இருக்க மாட்டார்கள்
அதற்கு
இவர் விதிவிலக்கு !

மனித நேயம் என்ற
தலைப்பில்
அழகாக பேசும்
எவ்வளவோ மனிதர்களின் இதயம்,
மனிதர்கள்
உதவி வந்து கேட்டால்
இளகுவதில்லை
இவர் – அப்படியல்ல
உதவுவதுதான்
இவரின் இலக்கு !

முதுகலை
பொருளாதாரத்தில்
தங்கப் பதக்கம்
பெற்ற அவர்,
சமுதாயம்
முன்னேற
சங்கம் பல துவக்க
காரணமானார் !

தங்கள்
தேவையை மட்டுமே
நோக்கி ஓடும்
அவசர உலகில்
சமூக சேவையில்
தன்னை அர்ப்பணித்தார் !

எம்பியாகி
இருக்கும் இவர் – மன்றத்தில்
மக்கள் பிரச்சினைகளை
எடுத்தியம்பி வருவார் !

துபையில் இருந்து
தில்லியை நோக்கிய
அவரது சேவை பயணம்

பல பயன்களை
சமூகத்துக்கு
கொண்டு வரணும் !

-திருச்சி A. முஹம்மது அபுதாஹிர்

அவரை நான் பாராட்டவில்லை

அவரை நான் பாராட்டவில்லை

ஜமால்
நல்ல மாணவர்களை மட்டுமல்ல
சமூகத்துக்கு
முக்கியமானவர்களை தந்திருக்கிறது !

பி.காம். பி.எஸ்ஸி
மட்டுமல்ல
பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸுகளை
தந்திருக்கிறது !
எம்.காம். எம்.பி.ஏ
மட்டுமல்ல
பல எம்.பி எம்.எல்.ஏக்களையும்
தந்திருக்கிறது !

முனைவர்
பட்டத்திற்காக மட்டும்
ஆராயும் நவீன உலகில்
சமூக துயரங்களுக்கும்
தீர்வு காண
முனைபவர்களை
அளித்திருக்கிறது !

தங்கப் பதக்கத்திற்கு
மட்டும்
முக்கியத்துவம் கொடுக்கும்
கல்வி உலகில்
தனி மனித ஒழுக்கத்திற்கும்
முக்கியத்துவம்
கொடுத்திருக்கிறது !
ஜமால்
அதனுடைய சுவர்களில்
சாயம் இருக்கலாம் !
ஆனால்
அதில்
அதனை
உருவாக்கியவர்களின்
தியாகமும் இருக்கிறது !

கல் மண்
கலவையில்தான்
அது கட்டப்பட்டது !
ஆனால்
அது நல்மனம் படைத்தோரின்
கவலையால்
எழுப்பப்பட்டது !

அங்கு படித்த போது
மாணவர்கள்
மகிழ்ச்சியடைகிறார்கள் !
அவர்கள் சாதிக்கும் போது,
ஜமால்
மகிழ்ச்சியடைகிறது !

அரை நூற்றாண்டிற்கு
முன்,
கல்விக்கு
தங்கள் செல்வத்தை அளித்த
கொடையெழு வள்ளல்கள்
ஜமால் முஹம்மது
காஜாமியான் ராவுத்தரின்
”ஜமால் முஹம்மது கல்லூரி”
இன்று
சமூகத்துக்கு பல கல்வியாளர்களை அளித்து
வருகிறது !

நேர்மையான
தூய்மையான
அந்நன்மக்களின் கனவு – இன்று
பலிக்க ஆரம்பித்திருக்கிறது !

ஆம்
“அப்துர் ரஹ்மான் எம்பி”
போன்றோரை
சமூகத்துக்கு அளித்து
அதனை
பிரதிபலிக்கச் செய்திருக்கிறது !

அப்துர் ரஹ்மானை
பாராட்ட
எனக்கு தகுதி இல்லை !
ஏனென்றால்
அவரைவிட
அகவையிலும்
அறிவிலும்
அனுபவத்திலும்
நான் மிகுதி இல்லை !

சிறியவன்
நான் – அவரை
பாராட்டவில்லை !
அவரை
படிக்கிறேன் !

முத்துப்பேட்டை
அவரை
பெற்றுத்தந்தது !

மலைக்கோட்டை ஜமால்
அவருக்கு கற்றுத்தந்தது !

வேலூர் கோட்டை – அவருக்கு
வெற்றித் தந்தது !

துபை இஸ்லாமிய வங்கியில்
அவர்
பணிபுரிந்தார் !

எனினும்
கல்லூரியின் மீது
மிகுந்த பற்று வைத்திருந்தார் !

வரையறாப் பொறுப்புக்கள்
நிறைய அவருக்கு
இருந்தாலும்
கல்லூரி சமூக நிகழ்ச்சிகளில்
அவரின்
தவறாத வரவு இருக்கும் !

நாடு கடந்து
தூரத்தில் இருந்தாலும்
ஜமாலில் படித்தோருடன் – என்றும்
அவரின் உறவு இருக்கும் !

சமூகத்தில்
மனிதர் படும் துயரங்களை
அவர் கூறியதை கேட்டு
நான்
மிகுந்த கண்ணீர் வடித்திருக்கிறேன் !

மற்றவர்களை புண்படுத்தாத
மரியாதையான
அவரின் பேச்சை
ஆழ்ந்து கவனித்திருக்கிறேன் !

நீண்ட நேரம்
உருக்கமாக
பேசும் எவ்வளவோ பெரிய மனிதர்கள்
நெருக்கமாக இருந்து
மக்களுடன்
செயலாற்ற இருக்க மாட்டார்கள்
அதற்கு
இவர் விதிவிலக்கு !

மனித நேயம் என்ற
தலைப்பில்
அழகாக பேசும்
எவ்வளவோ மனிதர்களின் இதயம்,
மனிதர்கள்
உதவி வந்து கேட்டால்
இளகுவதில்லை
இவர் – அப்படியல்ல
உதவுவதுதான்
இவரின் இலக்கு !

முதுகலை
பொருளாதாரத்தில்
தங்கப் பதக்கம்
பெற்ற அவர்,
சமுதாயம்
முன்னேற
சங்கம் பல துவக்க
காரணமானார் !

தங்கள்
தேவையை மட்டுமே
நோக்கி ஓடும்
அவசர உலகில்
சமூக சேவையில்
தன்னை அர்ப்பணித்தார் !

எம்பியாகி
இருக்கும் இவர் – மன்றத்தில்
மக்கள் பிரச்சினைகளை
எடுத்தியம்பி வருவார் !

துபையில் இருந்து
தில்லியை நோக்கிய
அவரது சேவை பயணம்

பல பயன்களை
சமூகத்துக்கு
கொண்டு வரணும் !

-திருச்சி A. முஹம்மது அபுதாஹிர்