Saturday, May 29, 2010

மாவட்ட தலைவர் - செயலாளர்களுக்கு வேண்டுகோள்

மாவட்ட தலைவர் - செயலாளர்களுக்கு வேண்டுகோள்

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட் டம் 25-05-2010 செவ்வாய் கிழமை மாலை 3.30 மணிக்கு மாநில தலைமை நிலையமான காயிதெ மில்லத் மன்ஜிலில் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் கள்
1) கல்வி விழிப்புணர்வு மாநாடு
09-06-2010 அன்று கரூர் மாவட்டம். பள்ளபட்டியில் நடைபெற இருக்கும் காயிதெ மில்லத் 115வது பிறந்த நாள், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு வெற்றிக்கு அனைத்து மாவட்ட, பிரைமரி நிர்வா கிகள் முழு ஒத்துழைப்பு நல்கி, திரளாக பங்கேற்க வேண்டுமென இக்கூட்டம் வேண்டிக் கொள்கின்றது.
2) ஜூலை 31-க்குள் மாநில மாவட்ட தேர்தல்கள்
பெங்களூருவில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் தீர்மானித்தபடி, வரும் ஜுலை 31க்குள் மாநிலத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கு வழிவகுக்கும் வகையில் தமிழகமெங்குமுள்ள பிரைமரி தேர்தல் மற்றும் மாவட்டத் தேர்தல்களை விரைவாக நடத்திட அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஒத்துழைத்து இயக்க அமைப்புப்பணிகளை விரைந்து நிறைவு செய்யு மாறு இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
3) மக்கள் ஜனத்தொகை கணக்கு
இந்திய மக்கள் தொகை கணக்கு எடுக்கும் பணி 2010 ஜுன் மாதத்தில் துவங்க இருக்கிறது. ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் ஜூலை மாதம் 15-ம் தேதி முடிய வீடு வீடாக இப் பணி நடைபெற உள்ளது.
இந்த கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் எவர் பெய ரும் விடுபடாத வகையில் முழு கவனம் செலுத்தி அப் பணியாளர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய தகவல்களை கொடுத்து பதிவு செய்யப்பட்டதற் கான ரசீதையும் பெற்று பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள ஒவ் வொருவருக்கும் அடையாள அட்டையான பயோ - மெட்ரிக் கார்டு வழங்கப்பட உள்ளது. இந்த அடை யாள அட்டைதான் இனி அனைத்து அரசு காரியங்களுக்கும் பயன்படும்.
இந்த அட்டை பெறுவதற்கு மேற்கண்ட ரசீது தேவைப்படும்.
முஸ்லிம் பெயர்களில் குளறுபடி வராமல் இருப்பதற்கு பெயர்களை தெளிவாக நாமே எழுதிக் கொடுக்க வேண்டும்.
உயிர் நாடி பிரச்சினையாக இருக்கக்கூடிய இப்பணியில் மஹல்லா ஜமாஅத்துகளுடன் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகினர் இணைந்து பணியாற்ற வேண்டும் என இக் கூட்டம் மாவட்ட, பிரைமரி அமைப்புகளை கேட்டுக் கொள்கிறது.
4) உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
2010 ஜுன் மாதம் 23ம் தேதி முதல் 27ம் தேதி முடிய கோவையில் புதிய வரலாறு படைக்க இருக் கும் உலகத் தமிழ் செம் மொழி மாநாட்டிற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மன நிறைவான வாழ்த்துக்களையும் முத் தமிழ் அறிஞர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை தமிழக முஸ்லிம்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றது. இம் மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சமுதாய பெருமக்கள் பெருமளவில் பங்கேற்று எல்லா வகை யான ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அனைத்து மாவட்ட, பிரைமரி நிர்வாகிகளையும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
5) இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மாநாட்டை 2010 அக்டோபர் மாதத்தில் சென்னையில் நடத்தி இம்மாநாட்டிற்கு முத்தமிழ் அறிஞர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர் களை சிறப்பு விருந்தினராக அழைப்பதென்றும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.
இம்மாநாட்டில் தமிழ கத்தில் நல்லிணக்கம் தழைத்தோங்கவும், அனைத்து சமுதாய மக்களும் சகோதர வாஞ்சை யோடு வாழ்த்திடவும், எல்லோரும் எல்லாமும் பெற்றிட பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தி நல்லாட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு சமுதாயத்தின் சார்பில் | நல்லிணக்க நாயகர்| விருது வழங்கி சிறப்பிப்பதென்றும் இக்கூட்டம் தீர்மா னிக்கின்றது.
மாநில நிர்வாகிகள் கூட்டத் தீர்மானவிவரம் தங்களின் மேலான தகவலுக்காகவும், உரிய நடவடிக்கைகளுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளது.
கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர்
மாநில பொதுச் செயலாளர்

Thursday, May 27, 2010

இடஒதுக்கீடு - பேச்சுரிமை - அதிகாரப்பங்கு என அனைத்தையும் பெற்றுத் தந்தது முஸ்லிம் லீக் குணங்குடி ஆர்.எம். ஹனீபா புகழாரம்

இடஒதுக்கீடு - பேச்சுரிமை - அதிகாரப்பங்கு என அனைத்தையும் பெற்றுத் தந்தது முஸ்லிம் லீக் குணங்குடி ஆர்.எம். ஹனீபா புகழாரம்

நாங்கள் பிறப்பதற்கு முன்பே எழுத்துரிமை, பேச்சுரிமை, ஆட்சி அதி கார உரிமை, இடஒதுக்கீடு என அனைத்தையும் பெற் றுத் தந்த பெருமைக்குரிய பேரியக்கம் முஸ்லிம் லீக் என குணங்குடி ஆர்.எம். ஹனீபா குறிப்பிட்டார்.

தாய்ச்சபை என் தாய் வீடு

13 ஆண்டு காலம் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியில் வந்துள்ள இவர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலுக்கு வருகை தந்தார். அப்போது இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்று கொண்டிருந்தது.

தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு பொன் னாடை அணிவித்து நன்றி தெரிவித்து உரையாற்றிய குணங்குடி ஆர்.எம். ஹனீபா குறிப்பிட்டதா வது-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தலைமை யகத்துக்கு வந்துள்ள நான் தாய் வீட்டிற்கு வந்த உணர்வோடு இருக்கிறேன். ஏனெனில் இந்த தாய்ச்சபைதான் இந்திய முஸ்லிம்களுக்கு முழுமை யான சுதந்திரத்தை பெற் றுக் கொடுத்த பேரியக்கம். இன்றைக்கு எல்லோரும் பேசுகின்ற இடஒதுக் கீட்டை 1919ம் ஆண்டி லேயே இந்த சமுதாயத் துக்கு பெற்றுத் தந்த இயக்கம் முஸ்லிம் லீக். அதுமட்டுமின்றி நாங்கள் பிறப்பதற்கு முன்பே பேச்சு, எழுத்து, சுதந்தி ரத்தையும், ஆட்சி யில் அதிகார பங்களிப் பையும் அது பெற்றுத் தந்தது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. எனது மகள் திருமணத் தின்போது அநியாயமாக நான் கைது செய்யப்பட்டு, ரயில் குண்டு வெடிப்பு வழக்குகளில் சேர்க்கப் பட்டு 13 ஆண்டு காலம் சிறையில் இருந்தேன். கண் பார்வை மங்கி, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்களெல்லாம் கூடி இன்று வெளியில் வந்துள் ளேன். என்னைப் போல் எத்தனையோ நிரபராதிகள் சிறையில் உள்ளனர்

எங்களுடைய விடு தலைக்கு ஒட்டு மொத்த சமுதாய அமைப்புகளும் போராடின. இதில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பங்களிப்பு என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அனைவருமே குரல் கொடுத்த காரணத்தால் நாங்கள் வெளியில் வந்துள்ளோம். இதற்கெல் லாம் மனநிறைவான நன்றியை சமர்ப்பிக்கின் றோம்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மணிவிழா மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஆயுள்சிறைவாசிகள் விடுதலைக்காக தாய்ச்சபை யினர் குரல் கொடுத்தார் கள். முதல்வரையும், துணை முதல்வரை யும் பார்க்கும் போதெல்லாம் பேரா சிரியர் கே.எம் காதர் மொகிதீன் அவர்கள் எங்கள் விடுதலைக்காக வலியுறுத்தினார்கள். இறைவன் அருளால் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி நாங்கள் வெளியில் வந்துள்ளோம்.

ஆயுள் சிறைவாசிகள் ஏற்கனவே விடுவிக்கப் பட்டது போல் மீதியுள்ள வர்களும் விடுவிக்கப்படுவ தற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பெரு முயற்சி செய்ய வேண்டும். தாய்ச்சபை நம் சமுதாயத்திற்கு நிறைய செய்திருக்கிறது. இதையும் செய்து தர வேண்டும்.

இவ்வாறு குணங்குடி ஆர்.எம் ஹனீபா பேசினார்.

தலைவர் பேராசிரியர் வாழ்த்து

நீண்ட காலம் சிறையில் இருந்த குணங்குடி ஆர். எம். ஹனீபா இன்று விடுதலையாகி வெளியில் வந்துள்ளது நமக்கு மகிழ்வையும், மனநிறை வையும் தருகிறது. முறுக் கிய மீசையோடும், இளமை துடிப்போடும் சிறைக்குச் சென்ற அவர் இன்று தாடியோடும், தொப்பியோடும் பழுத்த ஆன்மீகவாதியாக, பக்குவப்பட்டவராக வெளியில் வந்துள்ளார்.
தனித்திருந்து, பசித்தி ருந்து, விழித்திருந்து, சிந்தனையில் ஆழ்ந்து புதிய மனிதராக இன்று வெளியில் வந்துள்ள அவர் சிறைச்சாலையை தவச் சாலையாக கருதி அவர் பெற்ற பக்குவத்தை இந்த சமுதாயத்திற்கு போதிக்க வேண்டும். பல்வேறு வகையான கஷ்டங்களை, அவநம்பிக்கைகளை, ஏமாற்றங்களை சந்தித்த அவர் அவைகளை பாட மாக கொள்ள வேண்டும்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், தான் செய்த அனைத்தையும் சொல்லிக் காட்டுவதில்லை. ஆனால் அவர் விஷயத்திலும், சிறை வாசிகள் விடுதலை விஷயத் திலும் நாங்கள் என்ன செய்தோம்? செய்கிறோம் என்பது அவருக்கு நன்றா கத் தெரியும். அவருடைய நலத்திற்கும், வளத்திற்கும் வல்ல இறைவனை நாம் பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார்.

மாநில நிர்வாகிகள் பங்கேற்பு

நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், மாநில துணைத் தலைவர் கள் அரூர் அப்துல் ஹாலிக், சேலம் காதர் உசைன், கோவை எல்.எம். அப்துல் ஜலீல் ஹாஜியார், நெல்லை கோதர் மொகி தீன், திருப்ப+ர் ஹம்சா,

மாநிலச் செயலாளர்கள் தளபதி ஏ. ஷபீகுர் ரஹ் மான், ராமநாதபுரம் ஷாஜ ஹான், நெல்லை அப்துல் மஜீத், காயல் மஹப+ப், கமுதி பஷீர்

காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங் கிணைப்பாளர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., அணிகளின் அமைப்பா ளர்கள் திருப்ப+ர் சத்தார், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், மில்லத் இஸ்மாயில், கே.எம். நிஜாமுதீன், ஓசூர் ஹபீபுர் ரஹ்மான் உள் ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Muslim League

Dear Brothers...

I am happy to see the healthy discussion in the net about bringing in all the community youth and intellectuals into one fold for the sake of community service.
It is needless to say that IUML is the one and only social, community and political organisation which is responsible for the Muslims of India living today with self respect. No other organisation in this country can claim credit for the same. There are more than 100 organisations claiming to be working for the betterment of the community. But the net result what we have witnessed is that the youth were sent to jails and their families were thrown into streets. No organisation came forward to take the responsibility. But they were busy in "Fund Raising".

The youth are very vigourous and emotional who want to see instant results like fast food. They don't know the history of this country (India).

Muslim League is the only party which was founded by the sons of the soil with a noble cause of liberating this country from the clutches of slavery.
They fought the British. During kilafath movement they not only faught against Englishmen, but also boycotted the education through English language.
They boycotted higher education, convent education and any thing offered by British and their language. The consequenses are even now visible where the Sachar Commission in it's report says that the Muslim community's literacy level is far below than the scheduled caste community of this country. It reflects in their economic conditions. The leaders and cadres without any distinction have sacrificed their life, future and prosperity for the sake of this country.
But some parties founded by the agents of British claim that they are the freedom fighters.

The same party which is having the legacy of leading freedom movement without any compromise is now leading the movement to safeguard the freedom we have achieved. I will storngly recommend all of you to first of all read the "MUSLIM LEAGUE NOOTRAANDU VARALAARU" written by Ezhuththarasu Janab.Haneef and published by the Muslim League publications. It is not mere history of Muslim League. It is the History of the freedom movement led by one and only party in India which is a standing example for patriotism. Till date IUML is guided only by patriotism. Its leaders are known for their simplicity, self lessness, hard work, and cordial approach.

Being part of Muslim League will itself mould a Man into a Gentleman. Let us teach the youth to be "Gentlemen" rather than mere "Men".

Regards
V.Jeevagiridharan

Thursday, May 20, 2010

குவைத் காயிதே மில்லத் பேரவை ஏற்பாடு செய்த சிறப்புக் கருத்தரங்கம்.

குவைத் காயிதே மில்லத் பேரவை ஏற்பாடு செய்த சிறப்புக் கருத்தரங்கம்.

கடந்த 30/04/2010 வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணியளவில் குவைத் மிர்காப் பகுதியிலுள்ள முபாரக்கியா தர்பார் (பழைய தஞ்சை) உணவகம் மர்ஹும் தளபதி திருப்பூர் மொய்தீன் நினைவரங்கில், சமுதாய பிரச்சினைகளும் - முஸ்லிம் லீக்கின் அணுகுமுறையும் " அன்றும்! இன்றும்! என்னும் தலைப்பில் சிறப்புக்கருத்தரங்கம் நடைபெற்றது.


முகம்மது பந்தர் ஆர்.எம்.பாருக் (டி.எம்.சி.ஏ), முஸ்லிம் லீக் முன்னோடி, தலைமை வகிக்க வடக்கு மாங்குடி எஸ்.எச்.அப்துல்கரீம் கிராத் ஓதினார். பேரவை அமைப்புக்குழு உறுப்பினர்கள் வடக்கு மாங்குடி ஹாஜி.முத்தலிப், கூனிமேடு ஹபிபூர் ர்ஹ்மான், சென்னை ஷகின்ஷாகான், டிம்.எம்.சி.ஏ துணை பொதுச் செயலாளர் அப்துல் ரசாக் அல் பானி, பேரவை செய்தி தொடர்பாளர் ஆரிப் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகிக்க, பேரவை அமைப்புக்குழு உறுப்பினர் ஹசன் முகம்மது வரவேற்புரையாற்றினார், பேரவை அமைப்புக்குழு உறுப்பினரும், டி.எம்.சி.ஏ காப்பாளர் குழு அய்யம்பேட்டை கம்பளி பஷிர் நிகழச்சியை தொகுத்து வழங்க, சிறப்புக்கருத்தரங்கம் இனிதே
துவங்கியது. --

பெரம்பலூர் மெளலவி முகம்மது ஷரிப் மன்பயீ ஹஸரத் (பேரவை உலமாக்கள் பிரிவு பொருப்பாளர்), ஹாஜி நாஸர் ரப்பாணி (அல் அமி9இன் உம்ரா சர்வீஸ்) பேரவை உலமாக்கள் பிரிவு, வல்லம் ஷேக் ஆதம் (தலைவர்.முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றம்) , புத்தாநத்தம் ஹாஜி.நாஸர் (பேரவை அமைப்புக்குழு உறுப்பினர், சிறப்புரையாற்றினார்கள்.


இறுதியாக குவைத் காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ்.அன்வர்பாட்சா அவர்கள் "இந்திய அரசியலில் தாய்ச்சபை முஸ்லிம் லீக்கின் வரலாற்று சிறப்பு மிக்க செயல்பாடுகளை விளக்கியும், முஸ்லிம் லீக்கின் அணியில் சமுதாயம் ஒன்றுபடுவதன் அவசியத்தையும் - கண்ணியத்திற்குறிய காயிதே மில்லத் அவர்களின் அளப்பறிய அரசியல் வழிகாட்டுதல்களையும், அதைத் தொடர்ந்து முஸ்லிம் லீகை வழிநடத்த இன்று தமிழக முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள முனிருல் மில்லத் பேராசிரியரின் அமைதியான தலைமை குறித்தும், அரசியல் ராஜதந்திர அணுகுமுறைகளை விளக்கியும், சிறப்பாக வரலாற்று ரீதியான நிறைவுரையாற்றினார். சமுதாய பாடகர்கள் தச்சன் குறிச்சி ஏ.கலிபுல்லா, அருப்புக்கோட்டை இராவுத்தர் கனி சமுதாய எழுச்சி பாடல்கலை பாடினார்கள். அய்யப்பேட்டை கம்பளி பஷீர் துஆ ஓதினார். பேரவை அமைப்புக்குழு உறுப்பினர் விருத்தாசலம் ஏ.நிஜாமுதீன் எம்.ஏ நன்றி கூற இரவு உணவோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. கருத்தரங்கத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி ஜமாத் செயலாளர் ஆவூர் பஷீர், ஒர்ங்கிணைப்பாளர் தம்பிதுரை என்கிற அப்துல் முகம்மது, திசா அன்வர், டி.எம்.சி.ஏ பொருளாளர்.சாமிமலை ஜாகிர், குவைத் தமிழோசை கவிஞர்.சிவக்குமார், கவிஞர்.சிவமணி, புதுவை கவிஞர் முபாரக், பெரம்பலூர் கவிஞர் பஷீர் அகமது, மஹாராஜா டெக்ஸ்டைல்ஸ் அப்துல்ரசாக், மரைக்காயர் அப்துல் ஜப்பார், ஹபீப் ராஜா மற்றும் தோழமை இயக்க நிர்வாகிகளும், ஆன்றோர்களும், சான்றோர்களும், உலமா பெருமக்களும் பெருந்திரளாக கலந்துகொணடனர். டாக்டர்.கே.எஸ்.அன்வர்பாட்சா
குவைத் காயிதே மில்லத் பேரவை
அமைப்பாளர் & அமைப்புக்குழு
00965-97862316,
http://iumlkuwait.blogspot.com,
http://qmfkuwait.blogspot.com.

Wednesday, May 19, 2010

நிழலும் நிஜமும் - வெ. ஜீவகிரிதரன் கட்டுரை

நிழலும் நிஜமும் - வெ. ஜீவகிரிதரன் கட்டுரை

ஹைதராபாத் நகரில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் - லஷ்கர் அமைப்பின் கைவரிசை என போலீஸ் சந்தேகம்|

- 15-5-2010 சனிக்கிழமை ஹிந்து| நாளிதழின் தலைப்பு செய்தி இது.

நாட்டின் எந்த மூலையில் துப்பாக்கி வெடித்தாலும், வெடிகுண்டுகள் வெடித்தாலும், படுகொலைகள் நடந்தாலும் உடனே ஏதேனும் ஒரு முஸ்லிம் அமைப்பின் பெயர் உடனடியாக ஊடகங்களுக்கு வழங்கப்படும். அதன் தொடர்ச்சியாக சில முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவார்கள். பல ஆண்டு காலம் பிணை மறுக்கப்பட்டு விசாரணைக் கைதிகளாகவே அந்த இளைஞர்கள் சிறைகளில் வாடுவார்கள். அவர்களின் குடும்பங்கள் நிர்க்கதியாகி, சமுதாயத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்டு, பழி பாவங்களைச் சுமந்து சீரழியும். ஐந்து வருடங்களோ, பத்து வருடங்களோ வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டு நாட்டில் உள்ள அனைத்து தடா, பொடா என்ற பயங்கரவாத தடுப்பு சட்டங்களாலும் பதம் பார்க்கப்படும். ஊடகங்களும் தத்தம் ஊகங்களை செய்திகளால் வெளியிட்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளும். இறுதியில் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் போதுதான் தெரியும் கைதான இளைஞர்கள் நிரபராதிகள் என்று!

விடுதலை செய்யப்பட்ட பாவப்பட்ட அந்த இளைஞர்கள் தங்களின் இளமையை, குடும்பத்தை, வாழ்க்கையை இழந்த நிலையில் சிறையை விட்டு வெளிவரும் போது, ஊடகங்களால் ஹஅறிவ+ட்டப் பட்ட| இச் சமுதாயம் அவர்களை நிரபராதிகளாக ஏற்றுக் கொள்வதில்லை. சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து, தப்பித்து வெளிவந்துள்ள பயங்கரவாதி களாகவே பார்க்கிறது. நீதிமன்றங்களால் நிரபராதி கள் என அறிவிக்கப்பட்டாலும் இச்சமுதாயம் அவர்களை புறக்கணித்து, தனிமைப்படுத்துவதன் மூலம் கழுவேற்றிக் கொன்று விடுகிறது.

உலகை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதல் போல் இந்திய நாட்டை உலுக்கியது 26-11 மும்பை தாக்குதல். இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு, தாக்குதல் இலக்குகளை வரைபடங்களாக தந்துதவி செய்ததாக பஹீம் அன்சாரி மற்றும் சலாவுத்தீன் அஹமது அகிய இருவரும் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கெதிராக எந்த வலுவான சாட்சியமும் போலீஸ் தரப்பில் காட்ட இயலவில்லை. நீதிமன்றம் அந்த இருவரையும் நிரபராதிகள் என விடுதலை செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை கேள்விக்குரியதாக்கிய மிகக் கொடூரமான மும்பை தாக்குதல் வழக்கில் கூட பாரபட்சமற்ற புலன் விசாரணை நடத்த போலீசால் இயலவில்லை. காரணம் ஏற்கனவே அவர்களின் மூளைக்குள் திணித்து வைக்கப்பட்டிருக்கும் ஹமுஸ்லிம் வெறுப்புணர்வு|.

டெல்லி லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி 14 வருட காலம் சிறையில் வாடிய கஷ்மீரை சேர்ந்த சகோதரர்கள் நிரபராதிகள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது மும்பை வழக்கின் தீர்ப்பு சொல்லப்பட்ட நான்காம் நாள் நடந்தது.

கஷ்மீர் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தந்ததாக கைது செய்யப்பட்டிருந்த மவுலானா குலாம் யஹியா என்பவர் 4 வருடங்கள் சிறையில் வாடிய பின்னர் கடந்த சனவரி மாதம் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். டேராடூன் இந்திய ராணுவ அகாதமியை தற்கொலைப் படை தாக்குதல் மூலம் தகர்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இப்திகார் முல்லிக் ஐந்து வருடங்கள் கழித்து கடந்த சனவரியில்தான் விடுதலை செய்யப்பட்டார். இப்திகார் முல்லிக் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். டேராடூனிலே பயோடெக்னாலஜி படித்துக்கொண்டிருந்த மாணவன். லஷ்கர் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டு 5 வருடங்கள் சிறையில் அடைக் கப்பட்டதால் படிப்பை இழந்து, வாழ்க்கையை இழந்து, நிரபராதி என நீதிமன்றம் கூறினாலும், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவராக இன்று சிறை மீண்டிருக்கிறார்.

2007-ம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் ஷெரீப் ஆகியவற்றில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களுக்கு முஸ்லிம்களே காரணம் என கூறப்பட்டது. ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்கு காரணம் எனக் கூறி கைது செய்யப்பட்ட 21 முஸ்லிம் இளைஞர்கள் ஏறக்குறைய இரண்டு வருட சிறைவாசத்திற்கு பின்னர் நிரபராதிகன் எனக் கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு தாக்குதல்களையும் நடத்தியது காவி பயங்கரவாதிகள்தான்| என சி.பி.ஐ. தற்போது கூறுகிறது. ஆனால், இந்த தாக்குதல்கள் நடந்த உடனேயே வங்காள தேசத்தைச் சேர்ந்த ஹஹியுஜி| - என்ற அமைப்பு தாக்குதலை நடத்தியதாக கூறி அஜ்மீரில் சில வங்கதேசத்தை சேர்ந்தவர் களை போலீஸ் கைது செய்தது. மராட்டிய, ஜார்க்கண்ட் மாநிலங்களிலிருந்து சில மவுலானாக்களையும் போலீஸ் கைது செய்தது. ஆனால், அவர்கள் அனைவருமே தற்போது நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2006 மலேகான் குண்டுவெடிப்பு 2007 ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் தாக்குதல் அஜ்மீர் குண்டுவெடிப்பு இவை அனைத்திலுமே தாக்குதல் நடந்த உடனேயே சில முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளின் பெயர்கள் போலீசாரால் சொல்லப்பட்டது. முஸ்லிம் இளைஞர்கள் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அனைத்து ஊடகங்களும் இஸ்லாமிய தீவிரவாதம்|,ஜிகாத்|, புனிதப்போர்|, ஹஇந்திய முஸ்லிம்களின் நாட்டுப்பற்று| ஆகியவை குறித்து பட்டிமன்றங்களை நடத்தின.

முஸ்லிம்களின் வணக்கத் தலங்களை முஸ்லிம்களே தாக்க முடியுமா என்ற சந்தேகங்களை போக்கும் வகையில் வஹாபி, சூஃபி இடையிலான முரண்பாடுகளை முன்னிறுத்தினர்.
ஹைதராபாத் இந்தியாவிலிருந்து விடுவிக்கப்பட்டு நிஜாமுதீன் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென்பது முஸ்லிம்களின் நோக்கம் என பரப்புரை செய்யப்பட்டது. ஆனால், இன்று இத் தாக்கு தல்களை முன்னின்று நடத்தியது ஹகாவி பயங்கர வாதிகளே| என கண்டறியப்பட்டுள்ளது. 2006- ஏப்ரல் மாதம் நடந்த நான்டெட் குண்டு வெடிப்பு ஆர்.எஸ்.எஸ். ஊழியர் ஒருவரின் வீட்டுக்குள் நடந்தது. புலன் விசாரணையில் அது பஜ்ரங்தள் தொடர்பானவர்கள் நடத்தியது என தெரிய வந்தது. அவர்கள்தான் பர்பானி, ஜல்னா மற்றும் ப+ர்ணா பள்ளிவாசல்களின் வெளியே நடந்த வெடிகுண்டு தாக்குதல்களுக்கும் காரணமானவர்கள் என கண்டறியப்பட்டது. தென்காசியிலும், கான்ப+ரிலும் நடந்த குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு உள்ளதை நாமே அறியும். ஹஅபினவ் பாரத்| என்ற ஹகாவி பயங்கர வாத அமைப்பு| நடத்திய செயல்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் மறைந்த ஹேமந்த் கர்கரே அம்பலப்படுத்தியுள்ளார். சனாதன சனஸ்தா| என்ற காவி பயங்கரவாத அமைப்பு கோவா, தானே மற்றும் பான்வெல் குண்டுவெடிப்பு களுக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்திலும் இந்த காவி பயங்கரவாதிகள்| ஊடுருவி ஆதிக்கம் செலுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் கடந்த மார்ச் மாதம் மராட்டிய மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் கூறுகையில், புனே குண்டுவெடிப்புக்கு இந்து அமைப்பு களே காரணம் என ஏ.டி.எஸ். (பயங்கரவாத தடுப்புப் பிரிவு) தலைவர் கூறுவாரேயானால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்| என்றார். அதைத் தொடர்ந்து ஏ.டி.எஸ். தலைவர் கே.பி. ரகுவன்ஷி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அந்த பதவியிலே தற்போது குற்றப்பிரிவு தலைவரும், மும்பை 26ஃ11 தாக்குதல் வழக்கின் புலன் விசாரணை அதிகாரியுமான ராகேஷ் மரியா அமர்த் தப்பட்டுள்ளார். இந்த ராகேஷ் மரியா என்பவர் திருட்டு வழக்கில் கைதான முஸ்லிம் ஒருவரை சோட்டா ஷகில் குழுவைச் சேர்ந்தவர் என்றும், மலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி சாத்வி பிரக்யாவின் வழக்கறிஞர்களை கொல்ல அனுப்பப்பட்டவர் என்றும் ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தி அதனால் மும்பை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளா னவர். இவர் தான் இனி புனே மலேகான் குண்டு வெடிப்பு வழக்குகளிலே புலன் விசாரணை நடத்துவார்.

முஸ்லிம்களை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி களாக சித்தரித்து அவர்களின் மேல் தொடர்ச்சியாக பல்வேறு பொய் வழக்குகளை போடுவதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்தின் நற்பெயர் கெடுவதோடு மட்டுமல்லாமல் பிற சமுதாயங்களைச் சேர்ந்த மக்களுடனான முஸ்லிம்களின் உறவும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. அப்பாவி மக்களைக் கொல்லும் கொலைகாரர்களாக இவ் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் அடையாளம் காட்டப்படுகின்றனர். சிறைகளில் இவர்கள் அடைக்கப்படும் போது அங்குள்ள மாற்று சமூகத்தைச் சார்ந்த கொலைக் குற்றவாளிகள் கூட இவர்களை ஒதுக்கியே வைக்கின்றனர். இவர்கள் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டாலும் கூட சமூகம் இவர்களை நிரபராதிகளாக ஏற்றுக் கொள்வதில்லை. இவர்களை மட்டுமல்ல இவர்கள் சார்ந்த சமுதாயத்தையே சந்தேகத்துடன் பார்க்கிறது. இவையெல்லாம் ஊடகங்களின் முழு ஆதரவுடனும், ஒத்துழைப்புடனே நடக்கிறது.

காவிமயமாதல்| என்பது சமூகப் புற்றுநோய். மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கும் நாலாந்தர வியாபார ஊடகங்கள் இந் நோய்க் கிருமிகளை மிக லாவகமாகவும், வேகமாகவும் பரப்புகின்றன. போலீசும், அதிகாரவர்க்கமும் அதற்கு துணை நிற்கின்றன. முதல் பத்தியில் நான் குறிப்பிட்டுள்ள ஹிந்து| நாளிதழின் தலைப்பு செய்தியே இதற்கு சான்று.


ந‌ன்றி : ம‌ணிச்சுட‌ர் நாளித‌ழ்

Tuesday, May 11, 2010

திருநெல்வேலி மாவட்டம் அம்பை வட்டம் ஜமீன் சிங்கம்பட்டியில் முஸ்லிம் லீக் அமைப்புக்கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பை வட்டம் ஜமீன் சிங்கம்பட்டியில் முஸ்லிம் லீக் அமைப்புக்கூட்டம்.


திருநெல்வேலியிலிருந்து மணிமுத்தாறு அணைக்கட்டு செல்லும் வழியில் உள்ளது ஜமீன் சிங்கம்பட்டி. அது சுதந்திர காலத்துக்கு முன்னர் பெருமையோடு திகழ்ந்த பாளையங்களில் ஒன்றாக இருந்தது..சிங்கம்பட்டி ஜமீன் தார் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் இன்றளவும் அப்பகுதி முஸ்லிம் மக்களால் பெரிதும் மதித்துப் பாராட்டப்படுபவர்.

அவரது நிர்வாகத்திலிருந்த பல்வேறு பகுதி முஸ்லிம் மக்களுக்கு பள்ளி வாசல் மற்றம் ஈத்கா திடல் அமைக்க இடவசதி செய்து கொடுத்த தீர்த்தபதி அரசா,; சிங்கம்பட்டி முஸ்லிம் மக்களுக்கு பள்ளிவாசல் கட்ட சுமார் 60 சென்ட் நிலத்தை அன்பளிப்பாக வழங்கியதோடு பள்ளிவாசல் அமையவும் மிகவும் தொண்டுள்ளம் கொண்டு, உதவிகளும் செய்தார். பல்சமய மக்கள் ஒன்றாக வாழும் பகுதிகளில், பள்ளிவாசல் பாங்கோசையும் சர்ச்சுகளின் மணியோசையும்.கோவிலில் எழுப்பும் சங்கொலியும் இணக்கமாக ஒலித்தால் தான் அப்பகுதியில் மதநல்லிணக்கம் பாதுகாக்கப்படும் என்ற இலக்கணத்தை இன்றளவும் சொல்லிக்காட்டி வருபவர்.அவர் திருநெல்வேலிச்சீமையின் தலை சிறந்த மத நல்லிணக்க வாதியாகவும்,மிகச்சிறந்த தமிழறிஞர்களில் ஒருவராகவும் உள்ளார்..அவரது ஆங்கிலத் திறமையும் அசாதாரணமானதாகும்.இஸ்லாமிய ஞானவான்கள் மீது அளவு கடந்த மரியாதைகாட்டி வருபவர்.

அவர்களது சமஸ்தானத்தில் தளபதிகளாக இருந்த முஸ்லிம் வீரர்களின் படங்களும் சாகசங்களும் அவர்களது அரண்மணயில் இன்றும் பல வீர வரலாறுகளைச் சொல்லிக்காட்டுகின்றன. அத்தகு வீர வழிக் கொடியை கொண்ட இஸ்லாமிய சமூகத்தின் மீதும் அவர்களின் சந்ததியினர் மீதும் ராஜா கொண்டுள்ள மதிப்பும் மரியாதையும் அவர் சொல்லிக்காட்டும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது.

அத்தகு பெருமை வாய்ந்த சிங்கம்பட்டியில் உள்ள ஜூம்ஆ பள்ளி வாசலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதிய நிர்வாக அமைப்புக்கூட்டம் 7.5.10.அன்று ஜூம்ஆ தொழுகைக்குப்பின்னர் மாவட்ட முஸ்லிம் லீக் துணைத்தலைவர் கவிஞர் வீரை எம்.அப்தர் ரஹ்மான் தலைமையில் நடை பெற்றது .நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும் மாநில் மாணவரணி அமைப்பாளருமான எல்.கே.எஸ்.மீரான் முகைதீன் சிறப்புரையாற்றினார். மாவட்டதுணைச்செயலாளர் கானகத்து மீரான், அம்பா சமுத்திரம் வட்டார முஸ்லிம் லீக் அமைப்பாளர் அம்பை அமானுல்லா,பள்ளி வாசல் இமாம் முஹம்மது அனீபா உஸ்மானி,பள்ளிவாசல் நிர்வாகி ஏ.அபுபக்கர்,எம்.அசன் முகைதீன்,எஸ்.சாகுல் அமீது,எஸ்.முகைதீன்,ஏ.ரப்பானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Thursday, May 6, 2010

இனிவேண்டாம் அயர்வு : வேண்டாம் தளர்ச்சி தாய்ச்சபைப் பெருமைகளை உரைப்போம்!

இனிவேண்டாம் அயர்வு : வேண்டாம் தளர்ச்சி தாய்ச்சபைப் பெருமைகளை உரைப்போம்!


பிறைமேடை தலையங்கம் - மே 1-15, 2010




புறப்படு பிறைக் கொடியுடன்! முழங்கிடு தக்பீர் நாதத்துடன்!!


அன்புத் தம்பிக்கு!
இறைவனின் பேரருள் நம் அனைவரின் மீதும் இலங்கட்டுமாக!

பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையிலும், வாரத்தில் ஐந்து நாட்கள் டில்லியிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாட்டிலும் என்று தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். சென்ற இரண்டு வாரங்களில் கண்ட காட்சிகளையும், கொண்ட உணர்வுகளையும் உன்னுடன் பகிர்ந்து கொள்கிறபோது ஒரு அலாதி மகிழ்வு.

ஏப்ரல் 17 ரூ டெல்லியிலிருந்து சென்னை வந்து அரை மணி நேரத்திற்குள்ளாகத் தயாராகி ரயில் மூலம் திண்டுக்கல் பயணம். பொதுச் செயலாளர் அப+பக்கர் அவர்களும் பயணிக்க மறுநாள் காலை ஊழியர் கூட்டம். வழக்கம்போல் நிகழ்வுகள் ஒருபுறம் இருந்தாலும் கலந்து கொண்ட இளைஞர்களின் புத்துணர்வும், புதிய பொலிவும் அவர்களின் பேச்சால் மிளிர்ந்தன. நமது இதயங்கள் குளிர்ந்தன. செயல்திறன்மிக்க அவர்களின் உணர்வலைகள் அயர்ந்து இருந்தவர்களையும் உலுக்கின என்றுதான் சொல்ல வேண்டும். மாலை தேவதானப்பட்டி, தேனி வழியாகச் செல்லுகிற பாதையில் கொடியேற்றும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று கம்பத்திற்குள் நுழைகிறோம். அவ்வ+ரிலும் பல இடங்களில் பச்சிளம் பிறைக் கொடிகள் ஏற்றப்பட்டு இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கு கொண்டோம். ஓய்வு பெற்ற காவல்துறை மேலதிகாரியும், நமது மாநில நிர்வாகிகளில் ஒருவருமாகிய அண்ணன் அப்துர் ரவ+ப் அவர்களின் சீரிய முயற்சியால் நடந்தேறிய இந்நிகழ்ச்சியில் தாய்ச்சபை முஸ்லிம் லீகின் அவசியம், வலிமையுற செய்ய வேண்டிய அவசரம் குறித்து விரிவான உரைகள் வழங்கப்பட்டன.

மறுநாள் ஈரோடு காலையில் திருமண நிகழ்வு. பல்வேறு இடங்களில் கொடியேற்றம் என்று தொடர மாலை 5 மணிக்கு நகர மற்றும் புறநகர் ஊழியர்கள் கூட்டம் தலைவர் பேராசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் தாய்ச்சபை உணர்வுகள் மிகுதியாகக் காணப்பட்டாலும் செயல்பாடுகளில் கொண்ட அதிவேகத்தின் போக்கில் உருவாகியிருந்த சில கருத்து வேறுபாடுகள், மனம் திறந்து பேசிய காரணத்தினால் பனிபோல் கரைந்து போயின. மகிழ்ச்சிப் பெருக்கோடு அனைவரும் இரவு நடைபெற்ற ஈரோடு கல்வி மையத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கு கொண்டோம். சமுதாயத்தின் கல்வி மேம்பாட்டிற்கு திறம்பட உழைத்துவரும் நூறு பேர் கொண்ட அந்தச் சிறப்பான குழுவின் நிர்வாக பொறுப்பிலுள்ள டாக்டர் அபுல்ஹசன், சகோதரர் ரபீக் ஆகியோர் காட்டிய ஆர்வமும் தாய்ச்சபை முஸ்லிம் லீக்மீது கொண்டிருந்த ஆழமான ஆதங்கமும் பாராட்டுக்குரியவையாக இருந்தன. மாநிலம் தழுவிய அளவில் முஸ்லிம் லீகின் சார்பாக கல்வி மேம்பாட்டுக் குழு ஒன்றையமைத்து இவர்களைப் போன்றவர்கள் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்தும் இடம் பெற்றால் சமுதாயத்தின் கல்விச் சேவைகளை மிகச் சிறப்பாக ஆற்ற முடியும் என்ற புதிய நம்பிக்கை பிறந்தது. இக்கருத்தை வெளிப்படையாக சொல்லிக் காட்டியபோது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க வரவேற்பு கிடைத்தது. இன்ஷா அல்லாஹ் விரைவில் இந்த கல்விக் குழு உருவாக வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். ஆவன செய்ய வேண்டும்.

மறுநாள் டில்லி வந்துவிட்டு ஏப்ரல் 23 வெள்ளிக்கிழமை மீண்டும் சென்னை திரும்பி சென்னை வண்டலூர் புஹாரியா அரபிக் கல்லூரியின் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றேன். சமுதாயப் புரவலர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்களின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த அரபிக் கல்லூரியின் பேராசிரியர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி முகாம் அமெரிக்க தூதரகத்தால் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா அது. உலமாக்கள், இமாம்கள், அரபிப் பேராசிரியர்கள் என்று மார்க்க விஷயங்களை மக்களுக்கு எடுத்தியம்புகையில் ஆங்கில மொழி பயன்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை விளக்கமாக எடுத்துரைக்க இந்நிகழ்ச்சி பெரிதும் உதவியது எனலாம்.

அடுத்த நாள் ஆயங்குடி பயணம். பட்டதாரிகள் சங்கத்தார் நடத்திவரும் பள்ளிக்கூடத்தின் வெள்ளிவிழா மாநாடு. பெண்கள் ரூ ஆண்களுக்கு இணையாகத் திரண்டிருந்த காட்சி கல்வியில் பெண்கள் பெற்றிருக்கிற விழிப்புணர்வை விவரித்துக் காட்டியது. அல்ஹம்துலில்லாஹ். மாலையில் மீலாது முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம். சமுதாய கவலை உணர்வோடு தொடர்ந்து பாடுபட்டுவரும் முஸ்லிம் லீக் இயக்கத்தை கீழாக விமர்சனம் செய்தே வழக்கமாக்கிக் கொண்டு சுயநலத் தேவைகளுக்காக அவரவர் திட்டங்களுக்கேற்ப தொடங்கப்பட்ட கானல் நீர் அமைப்புகள் நடத்துவோர் முஸ்லிம் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வுகள் பல என்றாலும், நம்முடைய தெளிவான பாதையை விவரித்து உரையாற்றியபோது உள்ளத்தால் ஏற்று உவகைப் பெருக்கோடு நம்மை அணுகி சலாம் சொல்லி ~~முஸ்லிம் லீகின் உன்னத வழியில் இனி எங்களின் பயணம் இருக்கும்|| என்றுரைத்தனர் புதுமுகங்கள் பலர். இவர்கள் பல்வேறு முகாம்களில் இதுநாள் வரையிலும் தவறான புரிதலின் காரணத்தினால் பணி செய்தவர்கள். நம்மை நெருங்கியபோது அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி அவர்களை அரவணைத்துக் கொண்டோம் ஆனந்த பெருக்கோடு! அல்ஹம்துலில்லாஹ்.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. தாய்ச்சபை முஸ்லிம் லீகின் சீரான, தெளிவான கொள்கை விளக்கங்களையும், நேரிய நெறி சார்ந்த செயல்பாடுகளையும் மற்றவர்களுக்கும் எடுத்துரைத்துப் புரிய வைக்க வேண்டிய கடமை நமக்குண்டு. ~~இதனைச் சரிவர நாம் செய்கிறோமா?|| என்று நமக்குள்ளே ஒரு சுய கேள்வியாக கேட்டுக் கொண்டால் நம்முடைய பணிகள் மேலும் செம்மையாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இளைஞர்களின் எழுச்சியை எங்கு நோக்கினும் காணுகிறோம்.

இளைய சமுதாயம் இனி கானல்நீர் திசையை நோக்காது.

இனிவேண்டாம் அயர்வு : வேண்டாம் தளர்ச்சி

அன்போடு அனைவரையும் அழைப்போம்.

தாய்ச்சபைப் பெருமைகளை உரைப்போம்!

அன்புத் தம்பியே!

புறப்படு பிறைக் கொடியுடன்@

முழங்கிடு தக்பீர் நாதத்துடன்@

தொடர்ந்திடு தாய்ச்சபைக் கொள்கையுடன்@

நாரே தக்பீர்! அல்லாஹ_ அக்பர்!

- எம். அப்துல் ரஹ்மான் எம்.பி
ஆசிரியர்