Thursday, July 24, 2008

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு குறுந்தகடு வெளியீட்டு விழா!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு குறுந்தகடு வெளியீட்டு விழா!


எதிர்வரும் 26.07.2008 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் திருச்சி, பாலக்கரை - மதுரை ரோடு, பேலஸ் தியேட்டர் அருகிலுள்ள சந்தன மஹாலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு குறுந்தகடு வெளியீட்டு விழா மற்றும் எழுத்தரசு ஏ.எம்.ஹனீஃபின் எழுத்துலக சேவைக்கு பாராட்டு விழா ஆகியன நடைபெறவுள்ளன.

விழாவுக்கு துபை காயிதெமில்லத் பேரவை தலைவர் ஹாஜி எம்.அப்துர் ரஹ்மான் தலைமையேற்கிறார். திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் வி.எம்.ஃபாரூக் வரவேற்புரையாற்றுகிறார்.

புறநகர் மாவட்ட தலைவர் ஜி.எஸ்.ஏ.மன்னான், மாநகர் மாவட்டத் தலைவர் கே.எம்.கே.ஹபீபுர்ரஹ்மான், புறநகர் மாவட்ட பொருளாளர் எம்.ஒய்.ஷாஜஹான், மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.அப்துல் கப+ர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு குறுந்தகட்டை, மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ.சையத் சத்தார் வெளியிட, முதல் பிரதியை துபை காயிதெ மில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஏ.லியாகத் அலி, துபை காயிதெ மில்லத் பேரவை ஏ.முஹம்மது தாஹா ஆகியோர் பெறுகின்றனர்.

மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.செய்யது அஹமது, எம்.ஏ.கலீலுர் ரஹ்மான் எம்.எல்.ஏ., எச்.அப்துல் பாஸித் எம்.எல்.ஏ., தளபதி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், கவிஞர் இஸட்.ஜபருல்லாஹ், நெல்லை மஜீத், திருப்ப+ர் எம்.ஏ. சத்தார், கோவை எம்.எஸ். முஹம்மது ரபீக், ஜி.எம். ஹாஸிம், முஃப்தி ஏ.உமர் பாரூக், எம். ஜெய்னுல் ஆபிதீன், காயல் மஹப+ப், கமுதி பஷீர், கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், கோவை நாஸர் எம்.சி., வழக்கறிஞர் வெ.ஜீவகிரிதரன், வழுத்தூர் ஏ.பஷீர் அஹமது, மில்லத் எஸ்.பி.முஹம்மது இஸ்மாயில், எம்.ஏ.எம். நிஜாமுத்தீன் (எம்.ஏ.எம். கல்லூரி), கே.பி.இஸ்மத் பாட்ஷா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மாநில துணைத்தலைவர் எழுத்தரசு ஏ.எம்.ஹனீஃப் ஏற்புரை நிகழ்த்துகிறார்.

விழா ஏற்பாடுகளை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி புறநகர் மாவட்டம் ஆகியன இணைந்து செய்துள்ளன.

இதனையே அழைப்பாக ஏற்று தாய்ச்சபையின் முன்னணியினர், சமுதாய பெருமக்கள் அனைவரும் பெருந்திரளாக வருகை தர அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

தகவல்:
எம்.கே.எஸ்.ஜமால்,
மாநகர் மாவட்ட செயலாளர்.

http://www.muslimleaguetn.com/news.asp?id=113

Thursday, July 17, 2008

துணை ஜனாதிபதியுடன் பேராசிரியர் சந்திப்பு!

துணை ஜனாதிபதியுடன் பேராசிரியர் சந்திப்பு!

சிறுபான்மை சமூகத்தின் முதல் கவனம் கல்வி, சமூக நலத்திட்டங்களில்தான் இருக்க வேண்டும் என தம்மை சந்தித்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. தலைமையிலான குழுவினரிடம் இந்தியக் குடியரசு துணைத் தலைவர் அன்ஸாரி கேட்டுக் கொண்டார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., தமிழ்நாடு சிறுபான்மையினர் நிதி மேம்பாட்டுக் கழக தலைவர் சேவியர் அருள்ராஜ், தென்னக ரயில்வே சென்னை கூடுதல் மேலாளர் சுல்தான் முசாதிக், மஜ்லிஸே முஸாவராத் தலைவர் டாக்டர் சத்தார், திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி தலைவர் அப்துல் ஹக், பொருளாளர் நல்லாசிரியர் அப்துல் முத்தலிப், சித்திக் அஹமது, சென்னை பார்த்தியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் நஸீமா பேகம், தென்சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் கே.பி.இஸ்மத் பாஷா ஆகியோர் நேற்று (ஜூலை 14) மாலை இந்திய குடியரசு துணைத்தலைவர் அன்ஸாரியை புதுடெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை:
நீதிபதி சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் சிறுபான்மை மாணவர்களுக்கு தற்போது கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த உதவிகள் அனைத்தும் மாணவர்களின் மதிப்பெண் தகுதி அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. இதனால் கல்வியில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின ஏழை மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கியது போல், சிறுபான்மையின மக்களுக்கும், குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கினால் கிராமப்புறங்களை சார்ந்த பின்தங்கியுள்ள ஏழை மாணவர்களும் பயன்பெறுவர் என இக்குழுவினர் குறிப்பிட்டனர்.

குஜராத், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இத்தகைய கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதே இல்லை. சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்படும் மத்திய அரசின் மானியங்கள் கூட திருப்பி அனுப்பப்படுகின்றன என்ற அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இதில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர்.

வக்ஃப் அபிவிருத்தி:
மேலும், வக்ஃப், செய்யப்பட்டுள்ள சொத்துக்களின் ஆக்கிரமிப்புக்கள் செய்திருப்பவர்களை அகற்றுவதோடு அந்த சொத்துக்களை அபிவிருத்தி செய்வதற்கு தனி திட்டங்கள் செயல்படுத்த வலியுறுத்தினர்.

குழுவினரின் கோரிக்கைகளை கேட்டறிந்து குடியரசு துணைத் தலைவர் மத்திய - மாநில அரசுகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என்றார்.

சிறுபான்மையினருக்கு இன்று ஏராளமான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அரசு அமைத்த குழுக்களின் பரிந்துரையில் நிறைய பலன் கிட்டியுள்ளது. ஆனால் இவைகள் மக்களுக்குப் போய் சேரவேண்டும். அரசு திட்டங்கள் பத்திரிகை விளம்பரத்தால் முழுமையாக மக்களை போய் சென்றடையாது.

ஜமாஅத் அமைப்புகள், பள்ளிவாசல் ஜும்ஆ மேடை, பொது நல அமைப்புகள் மூலம் தனி பிரச்சாரம் செய்யப்பட்டு இந்த நல்ல பலன்கள் உரியவர்களை சென்றடைய வாய்ப்பு ஏற்படுத்தித் தர சிறுபான்மை அமைப்புக்கள் முன்வர வேண்டும்.

கவ்வியில் முதல் கவனம் வேண்டும்:
இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மையினரின் முழு முதல் கவனமும் கல்வி, சமூக நலத் திட்டங்களில்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர், சிறுபான்மையினர் அனைவரும் கல்வி கற்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் நடத்தும் ஒரு கல்வி நிறுவனத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினேன்.

ஆனால், அதில் ஒரு முஸ்லிம் மாணவர் கூட இல்லை. இதுபற்றி விசாரித்தபோது அந்த கல்வி நிறுவனத்தின் தரம் அறிந்து அனைவருமே அதில் சேர்ந்துள்ளனர் என தெரிய வந்தது. திறமையாக கல்வி நிறுவனம் நடத்துகின்றவர்கள் தங்கள் சமுதாயத்தில் திறமை மிக்க மாணவர்களை உருவாக்கவும் முன்வர வேண்டும்.

இவ்வாறு தம்மை சந்தித்த குழுவினரிடம் குடியரசு துணைத்தலைவர், அன்ஸாரி கேட்டுக் கொண்டார்.

www.muslimleaguetn.com

இராம‌நாத‌புர‌த்தில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் மாவ‌ட்ட‌ செயற்குழுக் கூட்ட‌ம்

இராம‌நாத‌புர‌த்தில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் மாவ‌ட்ட‌ செயற்குழுக் கூட்ட‌ம்

இராம‌நாத‌புர‌த்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவ‌ட்ட‌ செய‌ற்குழுக் கூட்ட‌ம் மாவ‌ட்ட‌ த‌லைமை அலுவ‌ல‌க‌த்தில் 15 ந‌வ‌ம்ப‌ர் 2008 ச‌னிக்கிழ‌மை காலை ந‌டைபெற்ற‌து.

மாவ‌ட்ட‌ செய‌ற்குழுக் கூட்ட‌த்திற்கு இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாவ‌ட்ட‌ த‌லைவ‌ர் ஹாஜி எம்.எஸ். சௌக்க‌த் அலி த‌லைமை தாங்கினார். பேரையூர் ம‌வ்ல‌வி சாகுல் ஹ‌மீது அரூஸி இறைவ‌ச‌னங்க‌ளை ஓதினார்.

மாவ‌ட்ட‌ செய‌லாள‌ர் ஹாஜி எம்.எஸ்.ஏ. ஷாஜ‌ஹான் அனைவ‌ரையும் வ‌ர‌வேற்று தீர்மான‌ங்க‌ளை முன்மொழிந்தார். கூட்ட‌த்தில் ப‌ல்வேறு தீர்மான‌ங்க‌ள் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌. அவை வ‌ருமாறு :

மறைந்த‌ மாவ‌ட்ட‌ துணைத்த‌லைவ‌ர் ஹாஜி கே.கே.எஸ்.ஏ.ப‌க்ருதீன் ம‌றைவுக்கு தீர்மான‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌து. அன்னார‌து தியாக‌ மன‌ப்பான்மையை மாவ‌ட்ட‌ நிர்வாகிக‌ள் நினைவு கூர்ந்த‌ன‌ர். அவ‌ருக்காக‌ துஆ ஓத‌ப்ப‌ட்ட‌து.

இராம‌நாத‌புர‌ம், விருதுந‌க‌ர், சிவ‌கெங்கை,க‌ன்னியாகும‌ரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய‌ மாவ‌ட்ட‌ங்க‌ள் ப‌ங்கேற்கும் ம‌ண்ட‌ல மாநாட்டினை இராம‌நாத‌புர‌த்திலேயே ந‌ட‌த்த‌ மாநில த‌லைமையினை கேட்டுக் கொள்வ‌து என‌ தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து. இத‌ற்காக‌ 31 பேர் அட‌ங்கிய‌ குழு ஏற்ப‌டுத்தப்ப‌ட்டுள்ள‌து. இக்குழு பிற‌ மாவ‌ட்ட‌ நிர்வாகிக‌ளுட‌ன் க‌ல‌ந்துரையாட‌ல் செய்யும்.

டிச‌ம்ப‌ர் மாத‌ம் 26,27 ஆகிய‌ தேதிக‌ளில் உத்திர‌ பிர‌தேச‌ மாநில‌ம் ல‌க்ணோவில் ந‌ட‌க்கும் அகில‌ இந்திய‌ மாநாட்டில் மாவ‌ட்ட‌த்தில் இருந்து அதிக‌ அள‌வில் ப‌ங்கேற்ப‌து என‌ தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து.

மாலேகான் குண்டுவெடிப்பில் உண்மைக் குற்ற‌வாளியை க‌ண்டுபிடித்து ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ வேண்டும் என‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌ட்ட‌து.

இல‌ங்கைத் த‌மிழ‌ர் துய‌ர்துடைக்க‌ ஒத்துழைப்பு ந‌ல்கி வ‌ரும் அனைத்து அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளுக்கும் ந‌ன்றி தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து.

மேலும் இப்பிர‌ச்ச‌னையில் ஒரு குழுவை ஏற்ப‌டுத்த‌ பிர‌த‌ம‌ரை த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் கேட்டுக் கொள்ள‌வேண்டும் என‌வும், அக்குழு இல‌ங்கை சென்று பிர‌ச்ச‌னைக‌ளை ஆராய்ந்து ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ப்ப‌ட‌ வேண்டும் என‌வும் வேண்டுகோள் விடுக்க‌ப்ப‌ட்டது.
ராமேசுவ‌ர‌ம் தொட‌ர்வ‌ண்டிப்பாதை விரிவாக்க‌ப் ப‌ணி ந‌ட‌ந்த‌ பின்ன‌ர் அர‌சு அறிவித்த‌ப‌டி வ‌ட‌மாநில‌ங்க‌ளை இணைக்கும் வ‌ண்ண‌ம் தொட‌ர்வ‌ண்டிக‌ளை விட‌ அர‌சும், ர‌யில்வே நிர்வாக‌மும் ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ வேண்டும்.

மாநில‌ பொருளாள‌ர் நிதிநிலை குறித்து அனுப்பிய சுற்ற‌றிக்கை கூட்ட‌த்தில் வாசிக்க‌ப்ப‌ட்ட‌து.
ப‌யிற்சிப் பாச‌றைக‌ள் ந‌ட‌த்திய‌ ப‌னைக்குள‌ம், ம‌ண்ட‌ப‌ம், கீழ‌க்க‌ரை ந‌க‌ர‌ முஸ்லிம் லீக் கிளைக‌ளுக்கு பாராட்டு தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. இதே போல் மாவ‌ட்ட‌த்தின் இத‌ர‌ ப‌குதிக‌ளிலும் ப‌யிற்சிப் பாச‌றையினை விரைந்து ந‌ட‌த்தி முடிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌ட்ட‌து.
சென்னையில் ந‌டைபெற்ற‌ மாநில‌ மாநாட்டில் ஆர்வ‌த்துட‌ன் அதிக‌ அள‌வில் ப‌ங்கேற்ற‌ அனைவ‌ருக்கும் பார‌ட்டு தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. இம்மாநாட்டுக்காக‌ சீருடைக‌ளை தயாரித்து வ‌ழ‌ங்கிய‌ ப‌னைக்குள‌ம் ந‌க‌ர‌ முஸ்லிம் லிக்கிற்கு பாராட்டு தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. என்ப‌ன‌ உள்ளிட்ட‌ ப‌ல்வேறு தீர்மான‌ங்க‌ள் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌.

கூட்ட‌த்தில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை செய்தித் தொட‌ர்பாள‌ர் முதுவை ஹிதாய‌த், ப‌னைக்குள‌ம் அபு முஹ‌ம்ம‌து, கீழ‌க்க‌ரை வ‌ரிசை முஹ‌ம்ம‌து ஹாஜியார், கீழ‌க்க‌ரை லெப்பைத்த‌ம்பி, ஆர்.எஸ்.ம‌ங்க‌ல‌ம் அமானுல்லாஹ், தேவிப‌ட்டிண‌ம் சித்திக், ம‌ண்ட‌ப‌ம் லியாக்க‌த் அலி, வேதாளை அப்துல் ர‌ஷீத் ஆலிம், இராம‌நாத‌புர‌ம் சாதுல்லாஹ் கான், இராம‌நாத‌புர‌ம் ம‌ணிச்சுட‌ர் ஏஜெண்ட் யாக்கூப், முதுகுள‌த்தூர் அமானுல்லாஹ் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்றுச் சிற‌ப்பித்த‌ன‌ர்.

வேதாளை அப்துல் ர‌ஷீத் ஆலிம் துஆவுட‌ன் செய‌ற்குழுக் கூட்ட‌ம் நிறைவுற்ற‌து. கூட்ட‌த்திற்குப் பின்ன‌ர் மீன் பொறிய‌லுட‌ன் ம‌திய‌ உண‌வுக்கு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

செய்தி : முதுவை ஹிதாயத் ( எம்.என்.ஏ. )

Sunday, July 13, 2008

மலையாள சகோதரர்கள் பனாத்வாலா சாஹிப் மறைவுக்கு இரங்கல்

assalamu alaikkum...
am glad to see this work...
may ALLAH bless u and ur family...
please visit community in orkut for our beloved leader marhoom banatwala sahib(its in malayalam language)

http://www.orkut.co.in/Community.aspx?cmm=52748966

Saturday, July 12, 2008

முஸ்லிம் லீகின் 60வது ஆண்டு விழா மாநாடு

வல்ல அல்லாஹ் அருளால் 2008,ஜுன் 21ஆம் நாள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய துணைத் தலைவரும் தமிழ் மாநில தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரியர் அல்ஹாஜ் கே.எம். காதர் முஹையத்தீன் M.A.M.P அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 60வது ஆண்டு விழா மாநாடு உங்கள்
www.tamilmuslimtube.com ல்

Indian Union Muslim League (IUML) - 60th Anniversary Public Conference held at Chennai on 21st June 2008 , now available in your favorite www.tamilmuslimtube.com

Monday, July 7, 2008

உணர்வுகளைத் தூண்டி சிறைக்கனுப்பும் இயக்கமல்ல முஸ்லிம் லீக்! பேராசிரியர்

உணர்வுகளைத் தூண்டி சிறைக்கனுப்பும் இயக்கமல்ல முஸ்லிம் லீக்! பேராசிரியர்



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் சொத்து! ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்கு அழைக்கிறோம். இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிரவாதத்திற்கு இடமும் இல்லை@ உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு சிறைச்சாலைக்கு அனுப்பும் செயலும் இல்லை@ நாம் நாமாக இருப்போம். நம் கலாச்சார தனித்தன்மையைப் பாதுகாப்போம் என தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற கட்சிகளிலிருந்து, விலகி தாய்ச்சபையாம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் ஏராளமானோர் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கான நிகழ்ச்சி மாநில முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸில் - பரக்கத் ஹால் கூட்ட அரங்கில் நடைபெற்றபோது அவர்களை வரவேற்று பேசுகையில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சதுரங்கபட்டினம், மெய்யூர் புதுப்பட்டினம், கூவத்தூர், அடையாளச்சேரி, கருமாரப்பாக்கம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பெருமளவில் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் செயலாளர் எஸ்.ஜாகீர், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் எம்.எச்.நியமத்துல்லாஹ் ஆகியோர் தலைமையில் கிளைகளின் நிர்வாகிகளை எஸ்.எம்.முஹம்மது இஸ்மாயில், ஏ.ரஷீத் பாஷா, எம்.அமீர், ஜே.முஹம்மது கபீர், ஏ.சலீம், எம்.முஹம்மது இல்யாஸ், பி.முஹம்மது அலி, கே.அப்துல் ரஹ்மான் என்ற பாரூக், பி.இம்ரான், பி.ஆரிப், கே.நிஸார் அஹமது, ஜே.உசேன், ஜே.காதர் பாஷா, பிலால், எஸ்.சுலைமான், பஷீர், கபீரான், பாஷா, சபீர், சவுகர், சாகுல் ஹமீது, ஹயாத், அஸ்மத், அல்தாப் உள்ளிட்ட ஏராளமானோர் முஸ்லிம் லீகில் இணைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் கே.எஸ்.தாவூது இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

முஸ்லிம் லீகில் இணைந்தவர்களை வரவேற்று தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. பேசியதாவது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தம்பிகள் ஜாஹீர், நியமதுல்லா உள்ளிட்ட ஏராளமான சகோதரர்கள் இணைகின்ற இந்த நிகழ்ச்சியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டிருக்கிறேன்.

இது தாய் வீடு. இங்கு வருகின்றவர்களை அரவணைத்து ஆதரிப்பது என் கடமை. இங்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். இந்த வரவேற்பு சடங்குக்காக அல்ல. ஒரு வரலாற்றுப் பேரியக்கத்தில் இணைந்து சேவையாற்ற வந்துள்ளவர்களை வாழ்த்துவது சம்பிரதாயத்திற்காகவும் அல்ல.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய பேரியக்கம். இதில் ஊழியர்களாக இருந்து சமுதாய சேவை செய்வதே ஒரு பெருமை.

ஒரு காலத்தில் அகில இந்திய முஸ்லிம் லீகாக இருந்தது. 1948இல் காயிதெ மில்லத் அவர்களால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகாக உருவாக்கித் தரப்பட்டது. இன்று 18 மாநிலங்களில் செயல்படுகிறது. சில மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில இடங்களில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் உறுப்பினர்களாக உள்ளனர்.

இது தமிழ்நாட்டு இயக்கம் அல்ல. தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் பெயரை இணைத்து பல பேர் பல இயக்கங்களை வைத்துள்ளனர். அவைகள் பெயரளவில் உள்ளன. தி.மு.க. பெயரை பயன்படுத்தி பல இயக்கங்கள் உள்ளன. சட்டத்தால் அதை தடுக்க முடியவில்லை.

பெயரை ஒட்டு போட்டதுபோல் கொடியையும் ஒட்டு போட்டு பயன்படுத்துகின்றனர். நட்சத்திரம் பதிக்கப்பட்ட பச்சிளம் பிறைக்கொடி பிரபலமானது. அது வரலாற்று பெருமைமிக்கது. அந்த கொடியையும் விட்டு வைக்கவில்லை.

முஸ்லிம்களில் பல இயக்கங்களாக இருக்கும் இயக்கங்களையெல்லாம் ஒன்றாக இணைத்து செயல்பட வைக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டோர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் 56 இயக்கங்கள் இருந்தன. அவைகள் எல்லாம் அழைத்துப் பேசப்பட்டன., அந்த கூட்டத்தில் பங்கேற்ற நான் கூறினேன்: இந்திய யூனியன் முஸ்லிம் லீகை நான் உருவாக்கவில்லை@ எனக்கு முன்பே உருவாக்கப்பட்ட இயக்கம் அது. எனக்கு முன்பிருந்தவர்கள் உருவாக்கிய அமைப்பிற்கு இப்போது நான் தலைவர். எனக்கு முன்பே பலர் தலைவர்களாக இருந்துள்ளனர். எனக்குப்பின் இன்னொருவர் தலைவராக வருவார். ஆனால் மற்ற இயக்கங்கள் அப்படி அல்ல. அவைகள் முன்பு உருவாகி இருந்திருக்கவில்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகை தவிர, வேறு எந்த முஸ்லிம் இயக்கத்திற்கும் கடந்த கால வரலாறு இல்லை. முஸ்லிம் லீகை விட சிறந்த ஒன்றை வேறு யாராலும் உருவாக்கித் தர இயலாது. நாங்கள் செய்வதை சொல்வதில்லை. எங்களை விட வேறு யாரும் எதுவும் செய்து விட முடியாது. ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்காக அழைக்கிறோம்.

இந்த இயக்கத்திற்காக தலைமைப் பொறுப்பேற்றவர்கள் அந்த பதவியை அலங்கரித்துள்ளனர்., தாய்ச்சபையின் தலைவராக, பனாத்வாலா அவர்கள் இருந்தார்கள். உலகின் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என பிரிட்டிஷ் நாடாளுமன்றமே அவரைப் பாராட்டி கவுரவித்தது. இப்படிப்பட்ட இயக்கத்தில் இணைந்து சமுதாயத்தை பாதுகாக்க பொறுப்பேற்க முன்வர வேண்டும்.

ஏனெனில் நேற்று போல் இன்று இல்லை@ இன்று சூழ்நிலை நன்றாக இல்லை@ என்றைக்கும் ஏதாவது பிரச்சினை வராதா என ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

கஷ்மீர் - அமர்நாத் கோவில் நில விவகாரத்தை காரணமாக வைத்து இன்று இந்தியா முழுவதும் பிரச்சினையாக்குகின்றனர். கஷ்மீரில் ஏதாவது நடந்தால் மதவெறியை தூண்டிவிட்டு இந்தியா முழுவதும், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட தயாராக உள்ளனர்.

இந்த நேரத்தில் நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ஒற்றுமையாக ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு நடந்து கொள்ளவேண்டும். நாம் அனைவரிடமும் சமமாக பழக வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களுடன் தொடர்பு வைக்காதே என்று சொல்பவர்களை புறக்கணிக்க வேண்டும்.

நாம் யாருடனும் சண்டை போட வேண்டாம். தெய்வங்களாக நினைத்து வழிபடுகின்ற எதையும் திட்ட வேண்டாம். அவர்களின் தெய்வங்களை திட்டினால் அவர்கள் நமது இறைவனை திட்டுவார்கள். இதை குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிர வாதத்திற்கு இடமும் இல்லை@ நாம் நாமாக இருப்போம்@ நம் கலாச்சார தனித்தன்மையை பாதுகாப்போம். உணர்ச்சிவசத்தால் தூண்டப்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் இருப்பதாக இங்கே காயல் மஹப+ப் குறிப்பிட்டார். அந்த நிலை இனி தொடரக்கூடாது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளராக இருக்கும் கே.எஸ்.தாவூது இன்று சிறப்பாக செயல்படுகிறார். முஸ்லிம் லீகே இல்லாமல் இருந்த இடங்களில் முஸ்லிம் லீகை உருவாக்கி வருகிறார்.

அவருடைய முயற்சியில் இன்று நீங்கள் எல்லாம் தாய்ச்சபையில் இணைகின்றீர்கள். உங்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படும். அந்த பொறுப்புகளுக்கு தகுதியானவர்களாக உங்கள் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

முஸ்லிம் லீக் வளர்ந்தால் சமுதாயம் வளரும்@ முஸ்லிம் லீக் சிறந்தால் சமுதாயம் சிறக்கும்@ முஸ்லிம் லீக் உயர்ந்தால் சமுதாயம் உயரும்.

-இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் எம்.பி. பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.ஏ.செய்யது அஹமது, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹபூப், மாநில தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்ச்சியை முஸ்லிம் லீக் பதிப்பக பொறுப்பாளர் மில்லத் எஸ்.பி.இஸ்மாயில், வட சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் கே.பி.இஸ்மத் பாட்சா, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.முஹம்மது ய+னுஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.யஹ்யா சித்தீக், பனையூர் கிளை தலைவர் ஏ.அப்துல் காதர், செயலாளர் ஏ.ஜே.உசேன் ஆகியோர் பங்கேற்றனர்.

http://www.muslimleaguetn.com/news.asp?id=86

Sunday, July 6, 2008

பேர்ணாம்பட்டு சம்பவம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்

பேர்ணாம்பட்டு சம்பவம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்

வாணியம்பாடி, ஜூலை 5: பேர்ணாம்பட்டில் மின்தடையைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தின்போது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளதற்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேலூர் மாவட்ட தலைவர் எஸ்.டி. நிஸôர் அகமது கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

பேர்ணாம்பட்டு பகுதியில் 3 தினங்களாக அடிக்கடி ஏற்படும் மின் தடையை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தில் சில விஷமிகள் கல்வீச்சு, ஆசிட் வீச்சு போன்றவற்றில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது.

இத்தகைய வன்முறைகளை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எப்போதும் ஆதரிக்காது. மக்கள் பிரச்னைக்காக போராடுவதாகக் கூறி வன்முறையில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை காவல் துறையினர் எடுக்க வேண்டும்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பெயரை சொல்லி வன்முறை கும்பலோடு எவரேனும் தொடர்பு வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

Friday, July 4, 2008

சவுதி அரேபிய தமிழக பிரமுகருக்கு சமுதாய ஒளிவிளக்கு விருது


சவுதி அரேபிய தமிழக பிரமுகருக்கு சமுதாய ஒளிவிளக்கு விருது

சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் தமிழகப் பிரமுகர் அப்துல் மாலிக். இவரது பல்வேறு சமுதாயப் பணிகளைப் பாராட்டி கடந்த ஜுன் 21 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் மணிவிழா மாநாட்டில் சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவ்விழாவில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ. அஹமது, மறைந்த முஸ்லிம் லீக் தலைவர் ஜி.எம். பனாத்வாலா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் கே. எம். காதர் மொகிதீன் எம்பி, தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

அப்துல் மாலிக் அவர்கள் 12 ஆண்டுகளுக்கு முன் ஜித்தா தமிழ்ச் சங்கத்தை நிறுவி இன்றளவும் அதன் தலைவர்.அண்மையில் சவுதியில் அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைத்து ‘சவுதி தமிழ்ச் சங்கம்' எனும் ஒரே அமைப்பாக்கியுள்ளார். முதுநிலைப்பட்டத்துடன் தொழில் மேலாண்மையில் பட்டம் பெற்ற இவர் கடந்த 25 ஆண்டுகளாக விளம்பரத்துறையில் வல்லுநராக சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். வழிகாட்டி நூல்கள் பல வெளியிட்டவர். கல்லூரியில் மாணவர் சங்க முதல் பொதுச்செயலாளர், தமிழ் மன்றச் செயலாளர் பதவிகளை வகித்தவர். கல்லூரியில் விடுதி இதழ் வெளியிட்டவர்.

ஜித்தாவில் உள்ள சர்வதேசப்பள்ளிக்குழுவின் தேர்வு செய்யப்பட்ட முதல் உறுப்பினர். இவரது பதவிக்காலத்தில் தான் தமிழ் விருப்பப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது சவுதி அரேபியாவில் உள்ள உயர்மட்டக்குழுவின் பெருமைக்குரிய உறுப்பினராய் பணியாற்றும் முதல் இந்தியத் தமிழர் என்கிற கவுரமும் இவரைச் சாரும். இதன் கட்டுப்பாட்டில் உள்ள சவுதி கல்வித் துறையாலும், இந்தியத் தூதரகத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட பத்து இந்தியப் பள்ளிகள் பல இடங்களில் 50,000 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களுக்கு தரமிக்க கல்வியை வழங்குகின்றன.

இந்திய யாத்ரீகர்கள் நல அமைப்பின் நிறுவனர், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பொறுப்பாளர், சிறுகதை எழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகிப்பவர்.

மூன்று சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். பல சமூக மற்றும் கல்வி நிறுவனங்களால் கௌரவிக்கப்பட்டு பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

தகவல் : அஹ்மது இம்தியாஸ்


Award for Indian community leader

Indian Union Muslim League recently celebrated its Platinum Jubilee celebrations in Chennai, India. The party recognized outstanding community members and awarded mementoes for their distinguished services. Minister of State for External Affairs E. Ahamed and Minister Rajaa, President of IUML (Late) Banathwala, Vice President Professor Kader Mohideen and Tamil Nadu Cabinet ministers, MPs and MLAs from all parties attended the ceremony.
On that occasion, Abdul Malik was given the title ‘Samudaya Oli Vilakku’ (Torch Bearer of the Community) in appreciation of the community service rendered by non-party cadres
Abdul Malik is an advertising and printing specialist working in the Kingdom for the past 25 years. He is one of the pioneers in introducing directory concept here.
He was the first elected committee member, signatory and acting chairman of International Indian School Jeddah and is currently a member of the higher board, a higher level body to frame and facilitate the functioning of 10 Indian schools affiliated by the Saudi Arabian Ministry of Education and Embassy of India. – SG

http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentID=2008062910444


http://www.yahind.com/news/directory.php?id=1359

IUML DEMANDS INTEREST-FREE MONETARY SYSTEM

The Indian Union Muslim League (IUML) has submitted a memorandum to the Planning Commission of India, urging it to promote interest-free banking in the country. The monetary system should be based on profits, not interest, the organisation demanded.

IUML president G. M. Banatwala submitted the memorandum with the Planning Commission’s committee for monetary system reform set up to suggest ways to reform the system.

Headed by Raghuram Rajan, member of the Working Group for the formulation of Tenth Five Year Plan (2002-2007), the committee submitted its draft report in April this year and has asked public to come up with suggestions. After going through those suggestions, the committee will present its final report.

In the memorandum, Banatwala said that interest-free monetary system will open a floodgate of investment from Gulf region and other Muslim countries. That system will also attract hundreds of millions of Muslims in India also because interest is prohibited in Islam. The profit-based system has been a hit in the Muslim countries. It has helped them keep the annual rate of development between 15-20%


http://www.radianceweekly.com/inside_india.php?content_id=2252&issue_id=113&issuedate=2008-06-22&title=Iuml-Demands-Interest-free-Monetary-System&topic=GUJJARS-Vs-MEENAS-IN-RAJASTHAN

ஒரு தலைவருடைய எண்ணங்கள் பனாத்வாலாவைப் போல் இருக்கவேண்டும்:மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்


ஒரு தலைவருடைய எண்ணங்கள் எப்படியிருக்க வேண்டும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படியிருக்க வேண்டும் என என்னிடம் கேட்டால், பனாத்வாலாவைப் போல் இருக்கவேண்டும் என சொல்வேன் என மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் குலாம் மஹ்முது பனாத்வாலா அவர்களுக்கு இரங்கல் கூட்டம் புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் மணிமாடத்தில் அமைந்துள்ள அரசியல் சாசன அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பொதுச்செயலாளருமான இ.அகமது தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீல், மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் மோகன்தேவ், நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹித் சித்தீகி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சகாபுதீன், டெல்லி பத்தேப+ர் மஸ்ஜித் இமாம் மௌலானா முஃப்தி முகர்ரம், ஜமாஅத்தே இஸ்லாமி பொதுச் செயலாளர் மௌலானா ஷபீர் முனீஸ், அஹ்லே ஹதீஸ் ஜமாஅததி;ன் சார்பில் மௌலானா அப்துல் வஹாப் கில்ஜி, நாடாளுமன்ற மக்களவை செயலாளர் பி.டி.ஆச்சாரி, டெல்லி பிரதேஷ் முஸ்லிம் லீக் தலைவர் மர்கூப் ஹூசைன் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் சார்பில் பேராசிரியர் ரியாஸ் உமர், ~இக்னோ~ அமைப்பின் துணைவேந்தர் டாக்டர் பஷீர் அகமத்கான் ஆகியோர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய தலைவர்கள் அனைவரும் பனாத்வாலா ஸாஹிபின் தன்னலமற்ற சமூக சேவையையும், சிறுபான்மை சமூகத்திற்கு அவர் ஆற்றியுள்ள அரும்பணிகளையும், நாடாளுமன்றத்தில் அவரின் மகத்தான பங்களிப்பையும் நினைவு கூர்ந்தனர்.

மத்திய வெளியுறவு இணை அமைச்சர் இ.அகமது பேசும்போது, கடந்த ஒருவாரமாக நான் தனிமையில் வாடுவதாக உணருகிறேன்... மகத்தான தலைவர் பனாத்வாலா ஸாஹிப் என குறிப்பிட்டார்.

மத்தியகனரக தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் மோகன்தேவ், மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியான பனாத்வாலாவின் தியாகங்கள் போற்றத்தக்கவை என புகழஞ்சலி செலுத்தினார்.

மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பேசுகையில் குறிப்பிட்டதாவது:


பனாத்வாலா ஸாஹிப் என்னோடு கொண்டிருந்த தொடர்பு நீண்ட நாட்களுக்குரியது. மகாராஷ்டிர சட்டமன்றத்தில் நானும், அவரும் ஒரே சமயத்தில் உறுப்பினர்களாக இருந்து செயல்பட்டோம்... சட்டமன்றத்திலேயே அவரது செயல்பாடு சிறப்பானது.

அவர் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தபோது நான் சபாநாயகராக இருந்தேன். அவரை மதிப்பிற்குரிய ஒரு நாடாளுமன்றவாதியாகவே நான் பார்த்திருக்கிறேன்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படியிருக்க வேண்டும்@ ஒரு தலைவருடைய எண்ணங்கள் எப்படியிருக்க வேண்டும் என என்னிடம் யாராவது கேட்டால் தயக்கமின்றி பதில் சொல்வேன் பனாத்வாலாவைப் போல் இருக்க வேண்டுமென்று! அந்த அளவிற்கு உதாரண புருஷராக திகழ்ந்தவர் அவர்...

இவ்வாறு சிவராஜ் பாட்டீல் குறிப்பிட்டார்.
இறுதியில் மறைந்த மாபெரும் தலைவரின் மறு உலக நன்மைக்கு பிராத்தனை செய்யப்பட்டது.

http://www.muslimleaguetn.com/news.asp?id=84

http://wwwlalpetcom-deen.blogspot.com/2008/07/blog-post_04.html

முதுகுளத்தூரில் மறைந்த தலைவர் பனாத்வாலா சாஹிபுக்கு யாசின் ஓதி துஆ

முதுகுளத்தூரில் மறைந்த தலைவர் பனாத்வாலா சாஹிபுக்கு யாசின் ஓதி துஆ


முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா அவர்கள் வஃபாத்தானதையடுத்து 27-06-08 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப்பின் யாசின் ஓதி துஆ செய்யப்பட்டது.

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி பஷீர் சேட் ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் யாசின் ஓதி துஆ செய்யப்படது.

இந்நிகழ்வில் ஜமாஅத் நிர்வாகிகள், முஸ்லிம் லீக் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.

Thursday, July 3, 2008

A Pillar of the Community has fallen” - Please pray for his Maghferat...

A Pillar of the Community has fallen” - Please pray for his Maghferat...




In Demise of Haji Gulam Mahmood Banatwala Sahib Ex
M.P.
(The President of Indian Union Muslim League),
“A Pillar of the Community has fallen”

Members of Indian Union Muslim League in Hong Kong,
Tributes to his Memory, Offers Condolences to his
Family, Followers and Admirers

Prays to Allah for his Maghferat

Hong Kong , 26 June 2008:

V.M.T.Mohamed Hasan & Pirabu Shuhaib on-behalf of the
members of Indian Union Muslim League in Hong Kong,
has issued the following Statement:

“We deeply mourn the sudden demise of our Great
National Leader Janab Haji Gulam Mahmood Banatwala
Sahib (President of Indian Union Muslim League), age
of 74 on 25th June 2008 at his Bombay Residence. As
an irreparable loss to the Community. Inna Lillahi Wa
Inna Ilaihi Razioon..

Honourable “Mujahida Millath” Banatwala Sahib, as he
was friendly called, played long role in the national
and Muslim politics. A member of Parliament for
decades, he was associated with every struggle of the
Muslim community for security and dignity, equality
and justice, whether it was the movement for the
defence of the Shariat against any interference by the
Executive, the Legislature or the Judiciary, the
movement for the restoration of the Babari Masjid, as
a member of the Babari Masjid Movement Coordination
Committee or the Movement for the Empowerment of
Muslim Indians. A spell-binding speaker in Urdu &
English, he had the entire country as his field of
action. In every sense of the term, he was a pillar of
the Muslim community.

A gifted parliamentarian & national face of the
minority community.

He had exceptionally clear perception on minority
politics. As an MP for seven terms, he outshone many
politicians in dealing with the minority issues at
national level. He could convert even a private bill
into a Parliamentary law; such was his caliber as a
parliamentarian.

Today that pillar has fallen; the stirring voice has
fallen silent.

We, members of the Indian Union Muslim League in Hong
Kong, pays its sincere tribute to him as one of the
greatest leaders of the Muslim community after
independence and prays to Allah to accept his services
to the community and grant him eternal peace and
offers its condolences to the members of the bereaved
family and his admirers and followers all over the
country.



NEWS ON THE ONLINE NEWSPAPERS & WEBSITES about our
beloved leader..

http://www.thehindu.com/2008/06/26/stories/2008062651570300.htm

http://www.hindu.com/2008/06/26/stories/2008062661051300.htm

http://www.deccanherald.com/Content/Jun252008/scroll2008062575294.asp?section=scrollingnews

http://www.indianmuslims.info/news/2008/jun/25/iuml_leader_g_m_banatwala_dead.html_0

http://news.oneindia.in/2008/06/25/gm-banatwala-passes-away.html

http://www.rediff.com/news/2008/jun/25league.htm

http://topics.ibnlive.com/G+M+Banatwala.html

http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=2784&cls=row3&ncat=IN

http://www.dailythanthi.com/article.asp?NewsID=421447&disdate=6/26/2008&advt=1



MOHAMED HASAN
HK 852-9262 4715
CHINA 86-13434311707

venamanzil@yahoo.com

குவைத்தில் பனாத்வாலா சாஹிப் மறைவுக்கு இரங்கல்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

குவைத்,
ஹிஜ்ரி 1429 ஜமாதுல் ஆஃகிர் பிறை 22
ஜூன் 26, 2008

கண்ணியத்திற்குரிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழ் மாநில தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி...
குவைத் தமிழ் இஸ்லாமிச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் செய்தி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதெ மில்லத் அல்ஹாஜ் குலாம் முஹம்மது பனாத்வாலா அவர்கள் வஃபாத்தான தகவலறிந்த குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) அதிர்ச்சியடைந்தது.

அவர்களின் மறைவு சமுதாயத்திற்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். குவைத் வாழ் இந்திய இஸ்லாமியர்கள் மிகவும் துக்கத்திற்குள்ளான அதிர்ச்சி நிகழ்வாகும். மனிதநேயத்திற்கும், சமய நல்லிணக்கத்திற்கும் முன்னுதாரணமாக வாழ்ந்த அவர்களின் மறைவு இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி, இந்தியத் திருநாட்டிற்கே பேரிழப்பாகும்.

தாய்ச்சபையின் பொன்விழாவில் அவர்கள் உதிர்த்த வாhத்தைகள் என் றென்றும் வரலாற்றில் பொறித்துவைக்கப்படும். அவர்கள் இஸ்லாமிய மக்களுக்காக மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்காகவும், சமய நல்லிணக்கத்திற்காகவும் அயராது பாடுபட்டவர். மிகச் சிறந்த தலைவர். பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் எழுப்பியவர்.

சமுதாய முன்னேறமடைய வேண்டும் என்று தீராத வேட்கை கொண்ட அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகைச் சேர்ந்த தோழர்களுக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பாவப் பிழைகளைப் பொறுத்து, அவர்களின் சமுதாயச் சேவைகளை ஏற்று, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்கிடவும் துஆ செய்கிறது.

தலைவர் - மவ்லவீ அல்ஹாஜ் டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத்
பொதுச்செயலாளர் - மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத்



குவைத்தில் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் மர்ஹும் குலாம் முஹம்மது பனாத்வாலா ஸாஹிப் அவர்களுக்கு பிரார்த்தனையும், இரங்கல் கூட்டமும் நடத்தப்பட்டது!



குவைத் 28.06.2008

நேற்று 27.06.2008 குவைத் ஹவல்லி அஷ்ஷைக்கா ஷபீக்கா பள்ளிவாசலில் (வாரந்தோறும் (K-Tic) குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சார்பாக ஹதீஸ் விளக்கவுரை வகுப்புகள் நடக்கும் பள்ளிவாசல்) ஜும்ஆ தொழுகைக்கு பின் சங்கத்தின் சார்பாக மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் மர்ஹும் குலாம் முஹம்மது பனாத்வாலா ஸாஹிப் அவர்களுக்கு மறுமை வாழ்வின் வெற்றிக்காக துஆ செய்யப்பட்டது.

சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை அரங்கத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ மறைந்த தலைவரின் சேவையை நினைவு கூர்ந்து உரையாற்றினார். சங்கத்தின் கொள்கை பரப்புக்குழு செயலாளர் மவ்லவீ எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ அண்னாரின் மஃக்பிரத்திற்க்காக துஆ செய்தார்கள். இந்நிகழ்வில் முஸ்லீம் லீக்கர்கள் உட்பட பலர் பங்கேற்று அண்னாரின் மறுவுலக வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.

---------------

குவைத் மிர்காப் மஸ்ஜித் பின் நப்ஹான் பள்ளிவாசலில் அஸர் தொழுகைக்கு பின் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை (TMCA) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புனித உம்ரா செயல்முறை வகுப்பு நிகழ்ச்சியிலும் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் மர்ஹும் குலாம் முஹம்மது பனாத்வாலா ஸாஹிப் அவர்களுக்கு மறுமை வாழ்வின் வெற்றிக்காக துஆ செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ, பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ, இணைப்பொருளாளர் அல்ஹாஜ் எம். முஹம்மது நாஸர், ஹவல்லி கிளை பொறுப்பாளர் ஏ. ஹஸன் முஹம்மது, லீகர் ஷாஹின் ஷா உட்பட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினர், முஸ்லீம் லீக்கர்கள் உட்பட பலர் பங்கேற்று அண்னாரின் மறுவுலக வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.

---------------

குவைத் அப்பாஸிய்யா யுனைடேட் இந்தியன் பள்ளிகூடத்தில் மக்ரிப் தொழுகைக்கு பின் குவைத் கேரளா முஸ்லிம் கலாச்சாரப் பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குவைத் இந்தியன் முஸ்லிம் லீக் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா கலந்துகொண்டு மறைந்த தலைவரின் சேவையை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ, இணைப்பொருளாளர் அல்ஹாஜ் எம். முஹம்மது நாஸர், ஹவல்லி கிளை பொறுப்பாளர் ஏ. ஹஸன் முஹம்மது, லீகர் ஷாஹின் ஷா உட்பட முஸ்லீம் லீக்கர்களும், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினரும், நூற்றுக்கணக்கான கேரள முஸ்லிம் லீக்கர்களும் பங்கேற்று அண்னாரின் மறுவுலக வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.

செய்தி :
- பரங்கிப்பேட்டை 'அய்மான்',
குவைத் தமிழ்ச் செய்தி ஊடகம் (TNBK).

ktic.kuwait@gmail.com