Saturday, April 11, 2009

சிராஜுல் மில்லத் அவர்களுக்கு கவிதைப் பூக்களால் பிரார்த்தனை

சிராஜுல் மில்லத் அவர்களுக்கு கவிதைப் பூக்களால் பிரார்த்தனை



தொகுப்பு - ஆலிமான் ஆர்.எம். ஜியாவுதீன்

எங்கள் அருமைத் தலைவரின் சமுதாயச் சேவையை
உழைப்பை - தொண்டூழியத்தை - கருணையோடு
அங்கீகரித்து இறைவா ஏற்றுக் கொள் பிழைகளைப்
பொறுத்து ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்
வாழ்வைக் கொடுத்தருள்!
-எழுத்தரசு ஏ.எம். ஹனீப்

சிறகில்லாமல் பறந்து போன
சிராஜுல் மில்லத் செம்மலே!
அறிவொளி பரப்பும் மணிச்சுடராக அன்பை வழங்கிய வள்ளலே!
கபருஸ்தானில் மறைந்தபோதிலும்
கல்புஸ்தானில் வாழுகிறார்.
காதர் மொகிதீன் தலைமையிலே - நம்
கட்டுப்பாட்டுக்கு வாழ்த்துகிறார்
- நாகூர் சலீம்

தலைவரே! உங்களின்
தெவிட்டாத செந்தமிழ்ப் பேச்சு
எங்கள் செவிகளில்
மரணித்துவிட வில்லை....
எங்களின்
அரசியல் பயணம்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது
ஆம்!
உங்களின் வழிகாட்டுதல்
மரணித்துவிட வில்லை.....
- கவிஞர் இஸட். ஜபருல்லாஹ்

வாழிய சிராஜுல் மில்லத்!
வாழிய அமீனுல் உம்மத்
வாழிய அப்துஸ் ஸமது
வல்லவன் அருளைக் கொண்டே
ஊழியம் செய்து (உ) வந்த
உன்னத நெஞ்சே வாழ்வில்
நாழிகை தோறும் செய்த
நன்மையுள் என்றும் வாழ்க!
- ஏம்பல் தஜம்முல் முஹம்மது

அன்புப் பெட்டகமே
அறிவுக் கருவ+லமே
சிராஜுல் மில்லத்தே
நும் நினைவில்
எம் பயணம்
என்றும் தொடரும்
- வடக்குகோட்டார் வ.மு. செய்யது அஹமது

சோபனச் சுரங்கமே! - எங்கள் சொப்பன அரங்கமே
சேமச் சிகரமே! சிராஜுல் மில்லத்தே!
இன்றைய அரசியலுக்கு நேற்றைய வழிகாட்டியே!
உங்கள் புகழ் நாரின் ப+க்களல்ல
நட்சத்திரப் ப+க்கள் என்றும் உதிராதவை உயர்ந்தவை!
- தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

பிழை சேரா நபிவழியைத் தொடர்ந்தவர்! - என்றும்
பிறைக்கொடியைப் புகழ்க் கொடியாய்
தலைநிமிர வைத்தார்

கலைநோக்கு கவிதைத் திறன் -
சொல்லாற்றல் மிக்கவர்! - அப்துஸ்
ஸமதெனம் சமுதாய விளக்கு! - இஸ்லாம்
அமுதக் கொள்கைகளே அன்னாரின் இலக்கு!
- கவிஞர் வழுத்தூர் ஒளியேந்தி

பல்வேறு சாதனைகள்
படைத்திட்ட சாதனையாளர்!
நல்லோர்கள் நாவினிலே
நாளும் வாழும் சிராஜுல் மில்லத்
- சீர்காழி இறையன்பன்

மதுப்புதுவை மாநிலத்தில்
பிறந்தபோதும்
மதுவிலக்கு கொள்கையிலே
பிடித்திருக்கும்!
எது புதுமை என்பதிலே
தெளிவிருக்கும்
என் தலைவரின் புகழென்றும்
நிலைத்திருக்கும்!
- கவிஞர் கிளியனூர் அஜீஸ்

என்னவென்று எழுத்தில் சொல்ல
எப்படிதான் அழுது சொல்ல
பொன்னுடலை அடக்கம் செய்தோம்
பொறுமையுடன் பிரார்த்திப்போம் நாம்!
- கவிரூர் இக்பால் ராஜா