Saturday, December 18, 2010

Karunanidhi steps in to save minority languages in Tamil Nadu

Karunanidhi steps in to save minority languages in Tamil Nadu



show details 3:21 PM (1 minute ago)

http://twocircles.net/2010dec16/karunanidhi_steps_save_minority_languages_tamil_nadu.html
Submitted by admin4 on 16 December 2010 - 2:51pm
Indian Muslim
By Shafee Ahmed Ko, TwoCircles.net,


Chennai: Enacting his assurance at Indian Union Muslim League conference here last week, Tamil Nadu Chief Minister M
Karunanidhi on December 15 issued an order restoring the status of minority languages including Urdu and Arabic at
schools covered under the Uniform System of School Education (Samacheer Kalvi).
According to the order, four classes a week will be set apart for teaching minority languages such as Urdu, Kannada,
Malayalam, Telugu and Arabic. Being part of syllabus, examinations will be held for these minority languages, mark
sheets will also indicate marks scored by students in these subjects. The government also said that text books in these
languages are under preparation.


The order follows Mr. Karunanidhi’s assurance at a public meeting organised by the Indian Union of Muslim League on
11 December in Chennai. Through the resolutions passed at the conference, IUML had demanded the CM to intervene
for safety of the minority languages in the state.


There are around 10 lakh Urdu speaking people in the state, with 350 schools offering Urdu as medium of instruction.
There are other linguistic minorities including those who speak Telugu, Malayalam or Kannada. It is hoped that as many
as 27 oriental Arabic schools will also get benefit of the order. The CM’s order enhances the study of BUMS, the Unani
medical course wherein Urdu is the medium of instruction.


Various Urdu and different associations, including OMIET were constantly knocking the doors of the Tamil Nadu
Government in order to revoke the policy of Samacheer Kalvi. On behalf of these groups, IUML leaders including Prof

Khader Mohideen, the State President of IUML and M. Abdul Rahman, Lok Sabha Member of the party from Vellore,
had given several presentations before the concerned authorities.

Thursday, December 9, 2010

டிசம்பர் 11 ல் வரலாறு படைக்கிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு !

டிசம்பர் 11 ல் வரலாறு படைக்கிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு !

மஹல்லா ஜமாஅத்தின் ஒருங்கிணைப்பிற்கு கருத்தரங்கு

சமுதாயத்தின் வலிமைக்கு இலக்கு 2020 பிரகடனம்

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு ‘நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்’ விருது

http://www.muslimleaguetn.com
http://mudukulathur.com


நூற்றாண்டு காலத்திற்கு மேல் இந்திய முஸ்லிம்களின் வாழ்வோடும் வரலாற்றோடும் பின்னிப் பிணைந்து விட்ட தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்த சமுதாயத்திற்கு எண்ணற்ற உரிமைகளை பெற்றுத் தந்தது.

இந்திய முஸ்லிம்கள் மானத்தோடும் மரியாதையோடும் வாழ்வதற்கு அளப்பரிய தியாகங்களைச் செய்தது.

இந்திய விடுதலைக்குப் பின் ஏற்பட்ட சோதனையான கால கட்டத்தில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் உள்ளிட்ட தாய்ச்சபையின் தலைவர்கள் செய்த மகத்தான சாதனை இந்த சமுதாயத்தை தலை நிமிர செய்தது.

பச்சிளம் பிறைக் கொடிகள் எங்கெல்லாம் பட்டொளி வீசி பறந்தனவோ அந்த ஊர்களெல்லாம் அமைதியின் இருப்பிடங்களாக சிறப்பைப் பெற்றன.

ஆனால் இன்று சமுதாய ஒற்றுமை கேள்விக் குறியாகவும், மார்க்க கடமைகள் கேலிப் பொருளாகவும் ஆக்கப்பட்டு விட்டன.

மஹல்லா ஜமாத் கட்டுக்கோப்பு சீர்குலைக்கப்பட்டு வருகிறது.

தேவையற்ற வாதங்களும், விதண்டாவாதங்களும் பிற சமய மக்களை கூட முகம் சுளிக்க வைக்கிறது.

மனநிறைவையும், மகிழ்வையும் கொண்டு வரும் ரமளான், பக்ரீத் பெருநாட்கள் கூட ஆளுக்கொரு நாள் என்று அறிவிப்புச் செய்து கொண்டாடப்படுவதால் கேலியாக்கப்பட்டுவிட்டன.

பாங்கு சத்தம் ஒலிக்கும் பள்ளிவாசல்களில் வேட்டுச் சத்தங்கள்.

குழப்பங்களும், குதர்க்கங்களும் ஒற்றுமையை மட்டும் சீர்குலைக்க வில்லை - சமுதாய வளர்ச்சியையும் தடுத்து நிறுத்துகின்றன.

இந்த நிலைமை இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் தொடருவது?

எனவேதான் இவைகளை முடிவிற்கு கொண்டு வர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு கருத்தரங்கம் காலை அமர்வாக நடத்தப்படுகிறது.

சங்கைக்குரிய உலமா பெருமக்கள், பல துறைகளின் அறிஞர்கள், சமுதாய புரவலர்கள், மஹல்லா ஜமாஅத் தலைவர்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.

பிற்பகலில் பிரமாண்டமான பிறைக்கொடி பேரணி சீருடை அணிந்த இளைஞர்களின் கண்கவர் அணிவகுப்பாக நடைபெறுகிறது.

மாலையில், தாம்பரம் ரயில்வே மைதானத்தில் மாநாட்டின் நிறைவு விழா.

கல்வி வேலை வாய்ப்பில் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு உயர்த்தித் தர வேண்டும். நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட உள்ளன.

அதனைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இலக்கு 2020 பிரகடணம் நம் தேசிய தலைவர் மாண்புமிகு இ.அஹ்மது அவர்களால் வெளியிடப்பட இருக்கிறது.

கடந்த கால அனுபவங்களையும், நிகழ்கால சம்பவங்களையும், எதிர் காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களையும் மனதில் கொண்டு, வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்ட இலக்கு 2020 உருவாக்கப்பட்டுள்ளது.

இது சமுதாயத்தின் வழிகாட்டும் ஒளிவிளக்கு, நாம் பின்பற்ற வேண்டிய மணிவிளக்கு !

இலக்கு 2020 பிரகடணத்தை பெற்றுக் கொண்டு தமிழக துணை முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் பானக்காடு சையது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், கேரள மாநில பொதுச் செயலாளர் பி.கே. குஞ்சாலி குட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அதனைத் தொடர்ந்து

இளமையில் ஒரு கையில் பச்சிளம் பிறைக்கொடியை பிடித்த காலம் தொட்டு, இன்று வரையிலும் நம் சமுதாயத்திற்கு உற்ற உயிர் தோழராக இருந்து இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்த மாண்பிமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர் விருது வழங்கப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பளித்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றிய E.T.A. குழுமத்தின் நிர்வாக இயக்குனர் செய்யது எம். சலாஹுதீன் உள்ளிட்ட புரவலர்கள் இந்த விருதினை வழங்குகின்றனர்.

சமுதாய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியப் பெருந்தகை கே.எம். காதர் மொகிதீன் இம்மாநாட்டிற்கு தலைமை ஏற்கிறார்.

உள்நாட்டு மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்து ஆர்வத் துடிப்போடு சமுதாய பெருந்தகைகள் இம்மாநாட்டில் சங்கமிக்கின்றனர்.

டிசம்பர் – 11 தாம்பரத்தில் நடப்பது கூடிக் கலையும் மாநாடல்ல !

கொள்கை லட்சிய வாதிகளின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் மாநாடு !

சமுதாய வலிமைக்கு

திட்டம் தீட்டித் தரப்போகும் மாநாடு !

இம்மாநாட்டில் …

சமூகத்தை சீர்குலைப்பவர்களை

அடையாளம் காட்டுவோம் !

சமுதாயத்தை வளப்படுத்தும் செயல் திட்டங்களை ஆவணப்படுத்துவோம் !

இம்மாநாடு

வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்

இதில் பங்கேற்பது கிடைத்தற்கரிய பாக்கியம் !

Sunday, November 28, 2010

பராக்.... பராக்.... (ஒ) பாமா விஜயம்..........-வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்

பராக்.... பராக்.... (ஒ) பாமா விஜயம்..........-வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்


வரவு எட்டணா! செலவு பத்தணா! அதிகம் இரண்டணா! கடைசியில் துந்தணா! என்ற பாடல் அறுபதுகளில் தமிழகத்தில் மிக பிரபல்யமாக இருந்தது. அது இன்றளவும்கூட ஊதாரித்தனமான செலவினங்களை குறிக்க மக்களால் பாடப்படுகிறது. `பாமா விஜயம்’ என்ற திரைப்படப் பாடல் அது. அந்த திரைப்படத்திலே ஒரு சாதாரண நடுத்தர குடும்பம் தான் கதையின் நாயகன். தங்களின் சொற்ப வருமானத்திலே, திட்டமிட்ட சிக்கனமான செலவுகளால், நிம்மதியான-அமைதியான வாழ்க்கையை ருசித்துக் கொண்டிருந்த அந்த குடும்பம், தங்கள் வீட்டின் பக்கத்து பங்களாவில் குடிவந்த பாமா என்ற திரைப்பட நடிகையுடன் நட்பு பேணுவதற்காக தங்களின் குடும்ப நிலையை கருத்தில் கொள்ளாமல், ஊதாரித்தனமாக ஆடம்பர செலவுகள் செய்து, அதனால் கடன்படுவதும், சொந்த சகோதரர் களும், குடும்பத் தலைவரும் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொள்வதும், வன்மம் பாராட்டவதும், உறவுகள் சிதைவும் மிக அற்புதமாக காட்டப்பட்ட திரைப்படம் தான் பாமா விஜயம். தெளிந்த நீரோடை போல் அமைதியாக சலசலத்து ஓடிக்கொண்டிருந்த குடும்பத்தை அந்த `பாமா விஜயம்’ - நாசமாக்கி சாக்கடையாக்கி விடும். இன்று அதேபோல நம் நாட்டின் `பாமா விஜயம்’ ….- ஆம், ….ஒபாமா விஜயம் நடந்து முடிந்துள்ளது. 3 நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கஅதிபர் பராக் ஒபாமா அவர்கள் இந்தியா வந்து சென்றுள்ளார். அவரின் வருகை உலகமெங்கம் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இதுவரை அமெரிக்க ஜனாதிபதிகள் எவருக்குமே செய்யப்படாத வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் அவரின் வருகையை ஒட்டி செய்யப்பட்டது. பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளான மும்பை தாஜ் ஓட்டலில் ஒபாமா தங்கினார். குழந்தைகளுடன் நடன மாடினார். பெருமுதலாளிகளுடன் கலந்துரையாடினார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். பறந்து சென்று விட்டார். அமெரிக்க அதிபரின் வருகைக்கு ஒருநாள் பாதுகாப்பு செலவு எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ.900 கோடி. 3 நாட்களுக்கான பாதுகாப்பு செலவு சுமார் ரூ.2,700 கோடி எனப்படுகிறது. இவர் வருவதற்கு ஒரு வாரம் முன்பாகவே வெள்ளை மாளிகை அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் என ஒரு பiயே மும்பை வந்திறங்கி விட்டது. அவர்கள் அனைத்து நவீன சாதனங் களும் பொருத்தப்பட்ட 13 நடுத்தர விமானங்கள், 3 அதி நவீன ஹெலிகாப்டர்கள், ஒரு கப்பல், 30 மோப்ப நாய்கள், ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் அதிநவீன கருவிகளை தம்முடன் கொண்டு வந்தனர். ஒபாமா தங்கும் மும்பை தாஜ் ஓட்டல் மற்றும் டெல்லி மவுரியா ஓட்டல்களை சுற்றியுள்ள அனைத்து கட்டிடங்களிலும் பாதுகாப்பு சோதனைகள் மிகத் தீவிர மாக நடத்தப்பட்டன. கட்டிடங்களின் கூரைகளில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டனர். வான்வழி தாக்குதல் ஏதும் நடந்தால் அதை முறியடிக்கத் தேவை யான நவீன கருவிகள் இக் கட்டிடங்களில் நிறுத்தப் பட்டன. சாட்டிலைட் கண்காணிப்பு மற்றும் அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறைகள் மும்பையிலும், டெல்லியிலும் நிறுவப்பட் டன. ஒபாமா சனிக்கிழமையன்று மும்பை வந்திறங்கிய போது அவருடன் சுமார் 3 ஆயிரம் பேர் வந்தனர். இவர்களில் வெள்ளை மாளிகை அதிகாரிகள், புலனாய்வு பிரிவினர், பாதுகாப்பு படையினர், பத்திரிகையாளர்கள், அமெரிக்க கம்பெனி அதிபர்கள் ஆகியோரும் அடங்குவர். ஒபாமா அவர்கள் அமெரிக்க வான்படை யின் ஏர்போர்ஸ் - 1 என்ற விமானத்தில் 40 விமானங்கள் புடைசூழ வந்திறங்கினார். இத்துடன் அதிநவீன கருவிகள் பொருந்திய இரண்டு ஜெட் விமானங்களும் வந்தன. குண்டு துளைக்காத கார்கள் ஆறும், ஒபாமாவின் உபயோகத்துக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு காரும் அவருடன் வந்திறங்கியது. அந்த காரில் இருந்தபடியே வெள்ளை மாளிகையுடன் உடனுக்குடன் தொடர்பு கொள்ளலாம். அமெரிக்காவின் அணு ஆயுதங்களை அதிபர் இயக்கக் கூடிய பொத்தானும் அந்த காரிலே வடிவமைக்கப்பட்டிருந்தது.அதிபரும் அவருடன் வந்தவர்களும் தங்க தாஜ் ஓட்டலிலும், மற்ற ஓட்டல்களிலும் 800 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.ஒபாமா குழுவினரின் வருகைக்கு அரை மணி நேரம் முன்னமே மும்பை வான் வழி மூடப்பட்டது. வேறு எந்த விமானமும் பறந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்திய கடற்படையும், விமானப்படையும் மும்பை கடல் பகுதியையும், வான் பகுதியையும் வலம் வந்தன. 34 போர்க் கப்பல்களும், ஒரு விமானம் தாங்கிக் கப்பலும் கடலோர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டன. அமெரிக்க அதிபரின் சிறப்பு பாதுகாப்பு படையினர், நம் நாட்டின் மிக உயர்ந்த பாதுகாப்பு பிரிவான என்.எஸ்.ஜி. கமாண்டோகள், துணை ராணுவப் படையினர், மாநில காவல் படை என நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டது. இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியிலே அதிபர் ஒபாமா முன்னிலையிலே அமெரிக்க முதலாளிகள். இந்திய அரசுடனும், இந்திய முதலாளிகளுடனும் பல்வேறு வியாபார ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டனர். இதுதான் ஒபாமா விஜயத்தின் முக்கிய நோக்கமே.இந்த வியாபார ஒப்பந்தங்களில் மிக முக்கியமான சிலவற்றை பார்ப்போம்.இந்திய விமானப் படைக்கு அமெரிக்க போயிங் நிறுவனம் போர் விமானங்களை விற்க 410 கோடி டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் அமெரிக்க போயிங் தொழிற்சாலையில் 22,160 அமெரிக்கர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகியுள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இந்தியன் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சிக்கு தேவையான தேஜாஸ் என்ற இலகு ரக போர் விமானத்தில் பொருத்தக்கூடிய எப்.414 என்னும் என்ஜின்கள் 107 வாங்க அமெரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனியிடம் ஒப்பதமாகியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 82 கோடி டாலர்கள். ஆகும். இதன் மூலம் சுமார் 4440 அமெரிக்கர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகும். இந்திய ரயில்வே துறைக்கு 1000 ரயில் என்ஜின்களை விற்க அமெரிக்காவின் ஜி.இ. ட்ரான்ஸ்போர்டேஷன் அண்டு எலக்ட்ரோமோடிவ் டீசல் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளது. இதன் மதிப்பு 100 கோடி டாலருக்கும் அதிகம் என சொல்லப்படுகிறது. இந்தியாவிலுள்ள ஸ்பைஸ்ஜெட் என்ற தனியார் விமான நிறுவனம் அமெரிக்க போயிங் நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தப்படி பி-737-800 போயிங் விமானங்கள் -30 இந்திய நிறுவனத்திற்கு சப்ளை செய்யப் படும். இதன் மதிப்பு 300 கோடி டாலர்கள் இருக்கும் எனப்படுகிறது. இதன் மூலம் 12,970 அமெரிக்கர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாகும் என கணக்கிடப்பட் டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரான அம்பானியின் நிறுவனங்கள் ஏறத்தாழ 700 கோடி டாலர்களுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி ரிலையன்ஸ் பவர் என்ற நிறுவனத்தின் 2,500 மெகாவாட் மின் உற்பத்தி நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான அதி நவீன டர்பைன்கள் 6-ம், நீராவி டர்பைன்கள் 3-ம் விற்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கர்கள் 2,650 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகிறது. அமெரிக்க எக்ஸ்போர்ட் - இம்போர்ட் வங்கி இந்த ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கு 500 கோடி டாலர்கள் நிதி உதவி செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் தாகியுள்ளது. ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் துணை நிறுவனமான சாசன் பவர் நிறுவனத்துக்கு தேவையான சுரங்க தளவாடங்களை அமெரிக்க புசிரெஸ் இண்டர் நேஷனல் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கான நிதி உதவியான சுமார் 641 மில்லியன் டாலர்களையும் இந்த வங்கி வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. ஏறக்குறைய 20 ஒப்பந்தங்கள் சுமார் 1500 கோடி டாலர்கள் (ரூ.67,200 கோடி) மதிப்பில் கையெழுத்தாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்க தொழில் நிறுவனங்களில் சுமார் 50 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.ஒபாமாவின் வருகைக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அவருடைய டெமாக்ரடிக் கட்சி தேர்தலிலே படுதோல்வியினை சந்தித்திருந்தது. அமெரிக்காவிலே பொருளாதார சிக்கல்கள், வேலையின்மை போன்றவை பெருகிவிட்ட தால், மக்களின் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் ஒபாமா, இந்திய வருகையின் மூலம் அமெரிக்க தொழிலதிபர்களுக்கு 1500 கோடி டாலர்கள் - இந்திய மதிப்பில் ரூ.67,200 கோடி வியாபாரமும், அமெரிக்க மக்கள் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பையும் ஏற் படுத்தி கொடுத்துள்ளனர். அவர் தன்னுடைய உரையின் போது அமெரிக்க ஏற்றுமதி வர்த்தகத்தில் 2 சதவீதம் மட்டுமே இந்தியாவுடன் செய்யப்படுவதாகவும், அதை பெருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். உலகின் இரண்டாவது மிகப் பெரிய சந்தையான இந்திய சந்தையை கைப்பற்றி விழுங்க அமெரிக்க பெரு முதலாளிகள் திமிங்கலத்தைப் போல அலைகின்றனர். இந்த வியாபார ஒப்பந்தங்கள் மூலம் தங்கள் கருவூலங்களை நிரப்பிக் கொள்வதிலும், தங்கள் நாட்டில் niலை வாய்ப்புகளைப் பெருக்குவதிலும் குறியாக இருக்கின்ற னர்.ஆனால், பல ஆயிரம் கோடி ரூபாய்கள் பாதுகாப்புக்கு செலவழித்து அமெரிக்கஅதிபர் இந்தியாவுடன் நல்லுறவும், நட்பும் பேணுவதற்கு வந்துபோவதாக ஊடகங்கள் ஊதுகின்றன.

Friday, November 19, 2010

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நிகழ்ச்சி ஏற்பாடு குழுக்கள் விபரம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நிகழ்ச்சி ஏற்பாடு குழுக்கள் விபரம்


தாம்பரம் அலுவலகம் எண்.4, பள்ளிவாசல் கட்டிடம் (முதல் மாடி), சண்முகம் ரோடு, மேற்கு தாம்பரம், சென்னை - 600 045, தொலைபேசி : 044 - 222 66666

அலுவலகத் தொடர்பு....
பி.கே.எம். செய்யது அலி ராஜா (செல்: 9444499901)

எஸ்.எம். முஸ்தபா (செல்: 9787845684)

காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர்:
ஆலந்தூர் எம்.எஸ். அப்துல் வஹாப் (9444055649)

மாவட்டச் செயலாளர்: இ. அப்துல் ரஷீத் (9840999757)

மாவட்டப் பொருளாளர்: ஐ. அசதுல்லாஹ் (9659938786)

காஞ்சிபுரம் மாவட்ட நிதிக்குழு:
ஆலந்தூர் எம்.எஸ். அப்துல் வஹாப், தாம்பரம் ஐ அப்துல் ரசீத், மதுராந்தகம் அஜ்மத்துல்லாஹ், ஆலந்தூர் கே.எம்.ஓ. நாகூர் மீரான், கிண்டி கேப்டன் கலீல் ரஹ்மான், பல்லாவரம் முஹம்மது பேக், தாம்பரம் பி.கே.எம். செய்யது அலி ராஜா, மதுராந்தகம் ஏஜாஸ் திருமண மண்டபம் மற்றும் வாகன நிறுத்தம்

தலைமை நிலைய பொறுப்பாளர்கள் :
கமுதி பஷீர், திருப்பூர் எம்.ஏ. சத்தார்

காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர்கள்:
பல்லாவரம் கே. கமால் பாஷா, மாடம்பாக்கம் எஸ். அப்துல் ஹலீம், காட்டாங்குளத்தூர் எச். இப்ராஹீம், தாம்பரம் எஸ்.எம். முஸ்தபா, பி.கே.எம். செய்யது அலி ராஜா, பள்ளிக்கரணை கே. அப்துல் ரஹ்மான் சேட்.

ஜமாஅத்தினர் சந்திப்பு மற்றும் சென்னை வாழ் உறவினர் முறை சங்கத்தினர் அழைப்பு:

தலைமை நிலையப் பொறுப்பாளர்கள்:
மவ்லவி என். ஹாமித் பக்ரீ, ஆப்பனூர் கே. பீர் முஹம்மது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள்:
ரப்பானி கே.ஏ. அப்துல் குத்தூஸ், காயல் அஹமது சாலிஹ், மீஞ்சூர் சிக்கந்தர் பாஷா, பல்லாவரம் முஹம்மது பேக், பேராசிரியர் கே.டி. கிஜர் முஹம்மது, ஹிமாயத்துல்லாஹ், பொழிச்சலூர் செய்யது பாருக்.

அண்ணா விளையாட்டு அரங்கம்:
தலைமை நிலைய பொறுப்பாளர்கள்:

கமுதி பஷீர், திருப்பூர் எம்.ஏ. சத்தார்,

காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர்:
சேலையூர் அப்துல் காதர், சீர்காழி எஸ்.எம் யூசுப், பள்ளிக்கரணை அப்துல் ரஹ்மான், செம்பாக்கம் காஜா முகைதீன் கொடி தோரணங்கள்:
தலைமை நிலையப் பொறுப்பாளர்கள் - கே.பி. இஸ்மத் பாட்சா, கே.எம். நிஜாமுதீன், பூவை எம்.எஸ். முஸ்தபா, சேப்பாக்கம் எஸ்.எம். ஆலம்கான்

காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் -
கிழக்கு கடற்கரை சாலை - கல்பாக்கம் எஸ். ஜாகிப், பனையூர் எச். முஹம்மது யூனூஸ்,

சோழிங்கநல்லூர் - செம்பாக்கம் காஜா முகைதீன் சேலையூர் அப்துல் காதர்,

கத்திப்பாரா சந்திப்பு - எம்.எஸ். அப்துல் வஹாப், ஆலந்தூர் கே.எம்.ஓ. நாகூர் மீரான்

செங்கல்பட்டு - ஏ. சர்தார் பாஷா, எச். இப்ராஹீம் (காட்டாங்குளத்தூர்), டி.டி.கே. சாகுல் ஹமீது (திருக்கழுக்குன்றம்).

பூந்தமல்லி - ஏ. செய்யது ஆஜம் (காஞ்சிபுரம்), அஸ்லம் பாஷா (காஞ்சிபுரம்), ஏ.கே. அஹ்மது (குன்றத்தூர்), அமானுல்லாஹ் (நந்தம்பாக்கம்)

பேரணி ஒருங்கிணைப்பு
தலைமை நிலையப் பொறுப்பாளர்கள்:

கே.எம். நிஜாமுதீன், திருச்சி எம்.கே.எஸ். ஜமால், டி.கே. ஷாநவாஸ், செய்யது பட்டாணி காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் :
கிண்டி - கேப்டன் கலீல் ரஹ்மான்,

மதுராந்தகம் ஏஜாஸ், பல்லாவரம் பாருக், ஆலந்தூர் சஹாபுதீன், மதுராந்தகம் கௌஸ் பாஷா, ஜாபர் ரயில்வே மைதானம்

தலைமை நிலையப் பொறுப்பாளர்:
எம் ஜெய்னுல் ஆபிதீன், ஏ.எச்.எம். இஸ்மாயில், கேப்டன் பஷீர் அஹமது,

காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர்கள்:
ஐ. அப்துல் ரஷீத், பல்லாவரம் முஹம்மது பேக், பொழிச்சலூர் செய்யது பாருக் விருது, சால்வை, வரவேற்புக்குழு பரிசு:

ஏ.ஹெச்.எம். இஸ்மாயில், மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில்

தொலைக்காட்சி, பத்திரிகை விளம்பரம்

மற்றும் செய்தியாளர்கள்:
காயல் மகபூப், எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கீ

இணைய தளம் மூலம் நேரடி ஒளிபரப்பு:

குத்தாலம் ஏ.லியாகத் அலி (அமீரக காயிதெ மில்லத் பேரவைத் தலைவர்)

தோப்புத்துறை நூர்தீன் (அமெரிக்கா, காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர்)

(இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு மற்ற குழுக்களின் விபரம் விரைவில் வெளியிடப்படும்.)

இந்த அறிவிப்பு தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் ஒப்புதலுடன் வெளியிடப்படுகின்றது.


கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர்,
காயிதெ மில்லத் மன்ஸில் மாநிலப்பொதுச் செயலாளர்,

சென்னை 15-11-2010 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் http://muslimleaguetn.com/news.asp?id=2003

Sunday, November 14, 2010

சமுதாய ஒற்றுமை மற்றும் முன்னேற்ற பதைக்கு வழிவாக்கும் மாநில மாநாடு - குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, தலைவர் அமீரக காயிதே மில்லத் பேரவை

சமுதாய ஒற்றுமை மற்றும் முன்னேற்ற பதைக்கு வழிவாக்கும் மாநில மாநாடு - குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, தலைவர் அமீரக காயிதே மில்லத் பேரவை



அன்று முதல் இன்று வரை தொடர்ந்து இஸ்லாமிய சமுதாயத்தின் ஒற்றுமை, சமய நல்லிணக்கத்தை வேண்டி மார்க்கத்திற்காகவும், பண்பாடு, கலாச்சாரத்திற்காகவும், தூய்மையான அரசியலுக்காகவும் ஒரே குடையின் கீழ் இயக்கும் சமுதாய பேரியக்கம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஒன்று மட்டுமே.

இந்தியாவில் குக்கிராமம் முதல் பெரிய நகரங்கள் வரை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நோக்கங்களை பறைசாட்டும் விதமாக முஸ்லிம் லீகின் பிறைக் கொடி சமாதனம், நல்லிணக்கத்தை வலியுறுத்தி பறக்கிறது. இந்த பிறைக் கொடியை தூக்கி பிடிப்பவர்கள் எந்த வித சந்தேகமற்ற நிலையில் பொதுமக்கள் மூலம் அனுகப்படுவார்கள். இந்த பச்சை கொடியில் தன்னை ஐயக்கியப்படுத்தி கொண்ட ஒருவர் அடுத்தவர்களுக்கு நன்மை தவிர வேறு எதுவும் தவறாக பாவங்களை செய்யமாட்டார், இந்த சத்தியசீலர்கள், தனக்கும் இந்த சமுதாயத்திற்கும் ஒரு முன்மாதிரியான, அதுவும் அமைதியின் வழிகாட்டியாக ஒவ்வொரு லீக்கர்களும் திகழ்ந்து, அனைத்து மக்களின் பாசத்தையும், அன்பையும் பெற்றுள்ளார்கள். அரசு முதல் அதன் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் வரை முஸ்லிம் லீக்கர்களை மதிப்பும், மாரியாதையுடன் தொடர்பு கொண்டு செயல்படும் விதம் என்றும் தொடர்ந்து கொண்டு தான் இருகிறது.

"மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாவும், நல்லதைக் கொண்டு மக்களை ஏவுபவர்களாவும், தீயதிலிருந்த மக்களை விலக்குபவர்களாகவும் உங்களின் ஒரு கூட்டத்தார் இருக்கட்டும், இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்" என்ற அல்லாஹ்வின் திருவசனத்திற்கு ஏற்ப எத்தனையோ சமுதாய பணிகளை எந்த வித சுயவிளம்பரம் இன்றி அல்லாஹ்வின் திருப்பொருத்தம் வேண்டியே இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் செய்து அல்லாஹ் கூறிய வெற்றியாளர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னிலையாக இருந்து வருகிறது.

சமுதாயத்தின் பெயரில் எத்தனையோ விளம்பர இயக்கங்கள், கழகங்கள், ஜமாஅத்கள் என்று தினமும் ஒரு பெயரில் வந்தாலும் பராபரியமிக்க இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் சமூக சமுதாய நல்லிணக்கமிக்க கொள்கையின் முன்பாக இதுபோன்ற கொள்கை அற்ற இயக்கங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும் கதை தான் நாம் இன்றைய அளவில் கண்டுவருகிறோம். இது போன்ற சுயநலமிக்க இயக்கங்கள் நமது சமுதாய இளைஞர்களை அவர்களின் சமுதாய கவலையை வேறு வகையில் பயன்படுத்தி கொண்டததுடன், அவர்கள் மட்டும் தங்கள் அளவில் வளப்படுத்தி கொண்டார்கள், ஆனால் பயன்படுத்தி கொண்ட இளைஞர்களை நடுதெருவில் விட்ட நிகழ்வுகள் தான் தமிழகத்தில் நடந்து கொண்டு இருந்தது. இதுபோன்ற எண்ணற்ற பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சமுதாயத்திற்கு என்றும் குரல் கொடுக்கும், அதுவும் பொதுவில் சமுதாயத்திற்கு என்று அங்கீகாரமிக்க ஒரே அரசியல் இயக்கம் முஸ்லிம் லீக் தான் என்று தன்னை தாய் சபையில் தொடர்ந்து இணைந்து கொண்டு வரும் செய்தி உங்கள் அனைவர்களுக்கும் தெரிந்த விசயம்.

இளைஞர்களுக்கு சமுதாய பணிகளை எந்த விதத்தில் அமைதியான, ஆர்பாட்டமற்ற வழியில் செய்து சாதிப்பது போன்ற அறவழிகளை முஸ்லிம் லீக் போதிப்பதுடன் இதன் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் வழி தவறி சென்றவர்களை அவர்களின் சமுதாய வேட்கையை நன்கு உணர்ந்து இளைஞர்களின் வேகத்தை விவேகமான முறையில் சிறப்பான சிந்தனைகளை கொடுத்து ஒரு பண்பட்டவர்களின் பட்டியலில் இந்த இளைஞர்களை சேர்ந்து வருதுடன், மற்றவர்கள் மதித்து போற்றும் விதமாக செய்து வரும் முஸ்லிம் லீக்கின் செயல் தான் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களின் பாராட்டுகளை என்றும் பெற்று பெருமையுடன் முஸ்லீம் லீக் இருந்து வருகிறது.

தன்னக்கும், தன் குடும்பத்திற்கும், தன் ஊருக்கும் எந்த வித அவபெரும் வராமல் இருக்கவும், சமுதாயத்திற்கு பணியாற்ற வரும் அல்லது செய்ய நினைக்கும் இளைஞர்கள் தொடர்ந்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கில் தன்னை இணைத்து சமுதாயத்திற்கும், மார்க்கத்திற்கும் அறப்பணிகளை சிறப்புடன் செய்வதுடன், இம்மைக்கும், மறுமைக்கும் ஓர் உயர்ந்த இடத்தை பெற வேண்டும், இப்படி கவலை கொண்ட இளைஞர்களை முஸ்லிம் தலைமையகம் என்றும் கதவை திறந்து வைத்து காத்திருக்கிறது. பாதை தெரியாமல் அலைந்து திரிந்து எத்தனையோ இளைஞர்கள் இன்று கடைசியில் தாய் சபையில் தன்னை இணைத்து இன்று சிறந்து விளங்குகிறார்கள். சமுதாய சிறக்க பாடுபடுகிறார்கள்.

வரும் டிசம்பர் 11, 2010 அன்று வரலாறு படைக்கவுள்ள முஸ்லிம் லீக் மாநில மாநாடு ஒர் உயர்வான எண்ண பிரதிபலிப்புடன் இம்மாநாட்டின் இலட்சியமாக சமய "நல்லிணக்கம் தழைக்கட்டும், சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்" என்று இந்த தமிழ் பேசும் உலகத்திற்கு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தன்னளவில் நடந்தி காட்டி ஒவ்வொரு சமுதாய கவலை கொண்ட இளைஞர்கள் பாடுபட வேண்டும். பல்வேறு சமய, சமுதாயத்தின் மத்தில் வாழும் நாம் அவர்களுடன் எப்படி நல்லிணக்கமாக வாழ்வதுடன், நம் சமுதாயத்தில் பின்தள்ளப்பட்ட ஒற்றுமையை மீண்டும் முன் நிலை நிறுத்தி மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக முஸ்லிம் சமுதாயம் சிறந்து வாழ வேண்டும்.

ஊர் மஹல்லா ஜமாஅத் என்றால் முஸ்லிம் லீக், முஸ்லிம் லீக் என்றால் மஹல்லா ஜமாஅத் என்ற நிலை காலம் காலமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஊர் ஜமாஅத் விசேஷங்களில் நிகழ்ச்சியின் முன்பாக பிறைக்கொடியை ஏற்றி உயர பறக்கவிட்டு தான் அந்த நிகழ்ச்சியை தொடங்கும் வழிமுறைகள் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் மஹல்லா ஜமா அத் ஒருங்கிணப்பு மற்றும் சமுதாய ஒற்றுமை என்று மாநாடு நடக்கும் தினத்தில் காலை அமர்வாக தனியாக ஒரு கருத்தரங்கம் முஸ்லிம் லீக் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது. கடந்த சில வருடங்களாக பல்வேறு காரணங்களால் மார்க்கம், அரசியல் பெயரில் சமுதாய ஒற்றுமையை சீர்குலைத்து பல்வேறு இன்னல்களை இந்த சமுதாய ஜமாத் அத்தார்கள் பெற்று காவல்நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் தேவையற்ற வகையில் அலை வேண்டியதாகிவிட்டது. நம்மை படைத்து பரிபாலனம் செய்யும் வல்ல அல்லாஹ் நம் சமுதாயத்தில் எதில் கவனமாக இருக்க சொல்லி இருந்தானோ அந்த ஒற்றுமையை விட்டு நம்மிடையே விரோத போக்கை சில கூட்டங்களின் தூண்டுகோலின் காரணமாக சீர்குலைந்து போய்விட்டது. ஒற்றுமையாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர்கள் என்று அடிதடி, கொலை என்று மனிதர்கள் வெறுக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். இந்த மார்க்க விரோத செயல்கள் அனைத்தையும் கலைந்து சமுதாய ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டி இந்த மாநில மாநாடு கருந்தரங்கம் வலிவகுக்கும். அத்துடன் ஒவ்வொரு ஊரின் ஜமாஅத் நிர்வாகத்தின் மூலமாக ஊரின் வளர்ச்சி திட்டப்பணிகளை சொந்தமாகவே, அதுவும் எந்தவித அரசு உதவி இல்லாமல் சுயமாகவே ஊரில் பைத்துல் மால், வட்டியில்லா கடன் உதவி, கல்வி விழிப்புணர்வு மற்றும் கல்வி உதவி தொகை, ஏழைகுமர் மற்றும் முதியோர்களுக்கு உதவி என்பன போன்ற நலப்பணிகளில் சிறப்பாக செய்து தமிழக ஜமாஅத் நிர்வாகங்களுக்கு முன்மாதிரியாக செயல்படும் ஜமாஅத்களை இனம் கண்டு இந்த மாநில மாநாடு விழாவில் முன்மாதிரி ஜமாஅத் என்ற விருதுகளை முஸ்லிம் லீக் வழங்கி அந்த ஜமாஅத்களை கவுரவிக்க உள்ளது. இதன் மூலம் மற்ற ஊர் ஜமாஅத் நிர்வாகங்களும் தங்கள் ஊரில் மேற்கண்ட அறப்பணிகளை செய்ய வழிகாட்டியாக இருக்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற சிறப்புமிக்க விருதுகளை அவர்களும் பெற முடியும்.

மொத்தத்தில் இந்த டிசம்பர் 11 மாநில மாநாடு சமுகநல்லிணக்கதையும், வல்ல அல்லாஹ்வின் உதவியுடன். சமுதாய ஒற்றுமை மற்றும் முன்னேற்ற பாதைகளுக்கு பல வகையில் வழிகாட்டும்

மாநாடு ஆரம்ப ஏற்பாடுகளை தலைமையகம் சிறப்பாக தொடங்கி மாநாடு அழைப்பிதழ், சுவர் விளம்பரம் முதல் டிஜட்டல், ஸ்டிக்கர் விளம்பரம் வரை சிறப்பாக செய்து வருகிறது. மாநாடு சிறப்பாக நடைபெற ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பை அமீரக காயிதே மில்லத் பேரவை முதல் தமிழகம், இந்தியா மற்றும் உலகங்கும் இருக்கும் காயிதே மில்லத் பேரவை மேலும் சமுதாய புரவலர்கள் செய்து வருகிறார்கள்.

சர்வசேத காயிதே மில்லத் பேரவை ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி அவர்கள் அமீரகத்திற்கு நேரடியாக வருகை புரிந்து, டிசம்பர் 11 மாநில மாநாடு பற்றிய விளக்க பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு நம் அனைவர்களுக்கும் அழைப்பு கொடுத்தார்கள். அத்துடன் அமீரகத்தில் வாழும் சமுதாய புரவலர்கள், ஆதரவார்களை நேரடியாக சந்திந்து அழைப்பு கொடுத்ததுடன் மற்ற வளைகுடா நாடுகளில் உள்ள காயிதே மில்லத் பேரவைகளின் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அழைத்தார்கள். இதன் அடிப்படையில் அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் சவுதி, கத்தார், குவைத், அமெரிக்கா, ஹாங்ஹாங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா மற்றும் உலகெங்கும் உள்ள காயிதே மில்லத் பேரவையினரை தொடர்பு கொண்டு மாநாட்டில் கூட்டாக கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கையுடன் அழைப்பு கொடுக்கப்பட்டது, அழைப்பை ஏற்று கொண்ட அவர்களும் திரளாக மாநில மாநாட்டில் கலந்து கொள்ள முன்ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியை தருகிறது. மேலும் அமீரகத்தில் பேரவை பொதுச் செயலாளர் முகம்மது தாஹா, பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான், ஊடகத்துறை முதுவை ஹிதாயத் மற்றும் பேரவையினர்கள் அமீரகத்தில் உள்ள சமுதாய மக்களை சந்தித்து மாநாடு நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டி அழைப்பிதழ் கொடுத்ததுடன், ஆதரவுகளை பெற்று அமீரகத்திலிருந்து ஒரு இளைஞர் பட்டாளத்தையே திரட்டி மாநில மாநாட்டில் கலந்து கொள்ள களப்பணியாற்றி வருகிறார்கள். இதுபோன்ற களப்பணிகளை மற்ற நாடுகளில் உள்ள காயிதே மில்லத் பேரவையும் செய்ய வேண்டுகிறேன். அத்துடன் மாநாடு நிகழ்ச்சிகளை உலகத்தில் இருக்கும் அனைவர்களும் இருந்த இடத்திலிருந்து நேரடியாக காண முஸ்லிம் லீக் இணையதளத்தின் மூலம் காண அமீரக மற்றும் அமெரிக்கா காயிதே மில்லத் பேரவை சார்பாக மாநாடு நேரடி ஒளிப்பரப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

அல்லாஹ்விடம் பிரார்த்னை செய்யுங்கள் சமுதாய நலம் வேண்டி.. மாநில மாநாடு சிறக்க�

வாருங்கள் அனைத்து சமுதாய மக்களும்..

ஒற்றுமைக்கு முன்மாதிரியான சமுதாயம் என்று உலகிற்கு அறிவிக்க..

சமுதாய இளைஞர்கள் அதிக அளவில் ஒன்று கூடும் மாநில மாநாடு�

மீண்டும் உலகம் முழுவதும் எத்திவைப்போம்..

சமய நல்லிணக்கம் தழைக்கட்டும்�

சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்�

ஒற்றுமையே பிரச்னைகளுக்கான ஒரே தீர்வு

Assalamualaikum Wara....

Pls check this link:

http://satyamargam.com/1568

"ஒற்றுமையே பிரச்னைகளுக்கான ஒரே தீர்வு" - அப்துர் ரஹ்மான் M.P யுடன் ஒரு நேர்காணல்!"

Thank you


Kind Regards,

Siddiq Ahmed Abdul Rahman
+91 95000 73786
siddiqar@yahoo.com

இணையதள மூலம் நேரடி ஒளிப்பரப்பு (Live Webcast )

இணையதள மூலம் நேரடி ஒளிப்பரப்பு (Live Webcast )

அமீரகம் மற்றும் அமெரிக்கா காயிதே மில்லத் பேரவை ஏற்பாட்டின் மூலம் டிசம்பர் 11 மாநில மாநாடு முழு நிகழ்ச்சிகளையும் http://muslimleaguetn.com இணையதள மூலம் நேரடி ஒளிப்பரப்பை உலக முழுவதும் பார்க்கலாம்.
-மாநில மாநாடு வரவேற்புக் குழு
______________________________

Monday, November 1, 2010

IUML STATE CONFERENCE NEWS

IUML STATE CONFERENCE NEWS

http://www.twocircles.net/2010oct13/tamil_nadu_muslim_league_hold_state_conference_december_11.html

Khorrum Omer
National Secretary-IUML

IUML becomes third biggest party in Kerala

IUML becomes third biggest party in Kerala
By IANS,

Thiruvananthapuram: With an excellent performance in the Kerala local body polls, Congress ally Indian Union Muslim League (IUML) Saturday edged out the Communist Party of India (CPI) to become the third biggest party in the state.

"We have proved that we are a truly secular party by winning seats across the state. The CPI-M (Communist Party of India-Marxist) has time and again been levelling baseless allegations and even questioning our secular nature," said senior IUML leader P.K. Kunhalikutty.
"On one hand, they blame us for being communal but in the recent polls it became quite clear that it was the CPI-M who joined hands with parties like PDP, SDPI (formerly Popular Front of India) and Jamaat-i-Islami," he said.

IUML won 1,443 seats in the village panchayats, 190 at the block level, 32 at the district level, 234 in the municipalities and five in the four corporations and their tally is all set to increase as counting in one of their strongholds - Kozhikode district - is to be taken up Sunday.
The CPI, which was earlier at the third position, has got only 979 seats in the village panchayats.

"Our presence now spans across the state and we are a dominant force all over. We have hugely improved our position in districts like Wayanad, Palakkad, Trissur and Ernakulam. The only place we did not do as expected was here (Thiruvananthapuram)," said Kunhalikutty.

"This election also proved that the minority community does not see the CPI-M as their saviour as always claimed by them," said Kunhalikutty.

Sunday, October 24, 2010

சாதனை படைத்த "காயிதே மில்லத்" தொகுதிக்கு போகாமலேயே தேர்தல்களில் வென்றவர்

சாதனை படைத்த "காயிதே மில்லத்" தொகுதிக்கு போகாமலேயே தேர்தல்களில் வென்றவர்

Chennai சனிக்கிழமை, மே 08, 10:45 AM IST

இஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் `காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப். நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர்.

அன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக திகழ்ந்தவர். தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்.

அனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.

இத்தகைய பெருமைக்குரிய இஸ்மாயில் சாகிப், திருநெல்வேலியை அடுத்த பேட்டை என்ற ஊரில் 1896_ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முஸ்லிம் மத தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இஸ்மாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார்தான் அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார்.

திருநெல்வேலியில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் படிப்பு முடிந்ததும் திருச்சி ஜோசப் கல்லூரியிலும், பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார்.

பட்டம் பெற 2 மாதம் இருந்தபோது, காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1920_ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். அந்த ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றினார்.

1936_ம் ஆண்டு இஸ்மாயில் சாகிபு, முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். 1945_ம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948_ம் ஆண்டு இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

1946 முதல் 52_ம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1952_ம் ஆண்டு முதல் 58_ம் ஆண்டு வரை டெல்லி மேல்_சபை உறுப்பினராக பதவி வகித்தார்.

1962_ம் ஆண்டில் கேரளாவில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன் பின் 1967, 1971 தேர்தல்களிலும் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.

தொகுதிக்கு செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெற்றவர் இஸ்மாயில் சாகிப் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு தூரம் தொகுதி மக்களின் செல்வாக்கை பெற்றவர்.

இஸ்மாயில் சாகிப்பின் மனைவி பெயர் அமீதா பீவி. இவர் 1962_ம் ஆண்டில் காலமானார். இஸ்மாயில் சாகிப்பின் ஒரே மகன் மியாகான்.

"காயிதே மில்லத்" இஸ்மாயில் சாகிபுக்கு 1972 மார்ச் 25_ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

குடல் புண் (அல்சர்) நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர் யு.முகமது தலைமையில் 15 டாக்டர் கள் கொண்ட குழு சிகிச்சை அளித்தார்கள். 31_ந்தேதி காலை அவர் ரத்த வாந்தி எடுத்தார். கல்லீரலும் சரிவர வேலை செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து உணர்வு இழந்தார். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. டாக்டர்கள் இரவு பகலாக அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

ஏப்ரல் 4_ந்தேதி சிறுநீரகம் சரிவர இயங்கவில்லை. அதை சீராக்க ஒரு மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. ஆயினும் அவர் உடல் நிலை தேறவில்லை. தொடர்ந்து மோசம் அடைந்தது.

முதல்_அமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா. பெரியார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை பார்த்தனர். முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற, பாராளு மன்ற உறுப்பினர்களும், பிரமுகர்களும் ஆஸ்பத்திரியிலேயே இருந்தனர்.

அன்றைய தினம் (4_4_1972) இரவு 10 மணி அளவில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது. உறவினர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து "குர்ஆன்" ஓதினார்கள்.

நள்ளிரவு 1_15 மணிக்கு இஸ்மாயில் சாகிப் மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது, அவருடைய மகன் மியாகான், மருமகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அருகில் இருந்தனர்.

இஸ்மாயில் சாகிப் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள அவர் வீட்டுக்கு காரில் கொண்டு போகப்பட்டது. மரணம் அடைந்தபோது காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபுக்கு வயது 76.

மறுநாள் (5_ந்தேதி) காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. கல்லூரியின் கலை அரங்கின் மத்தியில் ஒரு மேடை அமைத்து அதில் இஸ்மாயில் சாகிப் உடல் வைக்கப்பட்டது. உடல், முஸ்லிம் லீக் கொடியால் போர்த்தப்பட்டு இருந்தது. காலையில் இருந்தே மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து, இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

முதல்_அமைச்சர் கருணாநிதி, காலை 8_25 மணிக்கு வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மற்றும் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், மாதவன், ப.உ.சண்முகம், சத்தியவாணிமுத்து அம்மையார், சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், ராசாராம், மன்னை நாராயணசாமி, ராமச்சந்திரன், ஓ.பி.ராமன், கண்ணப்பன் ஆகியோரும் மலர் மாலை வைத்தனர்.

பிற்பகலில் திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். இஸ்மாயில் சாகிப்பின் மகன் மியாகானுக்கு ஆறுதல் கூறினார்.

பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், சபாநாயகர் மதியழகன், மேல்_சபை தலைவர் சி.பி.சிற்றரசு, தமிழரசு கழக தலைவர் ம.பொ.சிவஞானம், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், நீதிபதி இஸ்மாயில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பொன்னப்ப நாடார், ராஜாராம் நாயுடு ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர்.

பின்னர் புதுக்கல்லூரியில் உள்ள மசூதிக்கு இஸ்மாயில் சாகிப் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தொழுகை நடைபெற்றது. பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் புறப்படுவதற்கு முன் முதல்_அமைச்சர் கருணாநிதியும், மற்ற அமைச்சர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

ஊர்வலத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம் முதலிய வெளி மாநிலங்களில் இருந்து வந்த முஸ்லிம் லீக் பிரமுகர்கள் நடந்து சென்றனர்.

தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆரும் நடந்து போனார். ஊர்வலத்தில் போனவர்கள் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் கேரள கல்வி மந்திரி முகமது கோயா, ஊராட்சி மந்திரி அவுக்காதல் குட்டிநகா, பொதுப்பணி மந்திரி திவாகரன், ரெவினிï மந்திரி பேபி ஜான், சபாநாயகர் மொகிதீன் குட்டி, புதுச்சேரி மந்திரி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரத்தில், அண்ணாவை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் "காயிதே மில்லத்" கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிக்கொண்டிருப்பது அப்துல் சமது (1962). ஊர்வலம் பீட்டர்ஸ் ரோடு, பெசன்ட் ரோடு வழியாக, திருவல்லிக்கேணி ஐரோட்டில் உள்ள வாலாஜா மசூதியை அடைந்தது. அங்கு இஸ்மாயில் சாகிப் உடல், முஸ்லிம் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் நடந்தபோது கூடி இருந்தவர்கள் "அல்லாஹ் _ அக்பர்" என்று குரல் எழுப்பினார்கள்.

இஸ்மாயில் சாகிப் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. அதில் கருணாநிதி பேசுகையில் கூறியதாவது:-

"தனது 50 ஆண்டு கால வாழ்வில் 8 கோடி முஸ்லிம்களுக்காக உழைத்து பொற்கால மாக்கித் தந்தார். தமிழர்களுக்கு மட்டும் அல்ல _ இந்தியர்களுக்கும் அவர் மறைவு மாபெரும் இழப்பு. இஸ்மாயில் சாகிப் மனிதருள் மாமணி. அடக்கம், அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடம். இஸ்மாயில் சமூகத்துக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நீண்ட நெடுங்கால தொடர்பு இருந்து வருகிறது.

எங்கள் அண்ணன் மறைவுக்கு பிறகு இஸ்மாயில் சாகிப் அண்ணனுக்கு அண்ணனாக திகழ்ந்தார். அவர் மறைந்து விட வில்லை. நெஞ்சத்தில் உறைந்து விட்டார். அவர் நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் இருக்கிறார்."

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

கூட்டத்தில் கேரள அமைச்சர்கள் முகமது கோயா, திவாகரன், பாண்டிச்சேரி அமைச்சர் ராமசாமி, சபாநாயகர் மதியழகன், தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆர்., கேரள முஸ்லிம் லீக் தலைவர் தங்கல், இந்திய முஸ்லிம் லீக் செயலாளர் இப்ராகிம் சுலைமான் சேட், அப்துல் சமது, பீர்முகமது, திருப்பூர் மொய்தீன் மற்றும் பலர் பேசினார்கள்.

இஸ்மாயில் சாகிப் மறைவுக்கு ஜனாதிபதி வி.வி.கிரி, தமிழக கவர்னர் கே.கே.ஷா, திராவிட கழக தலைவர் பெரியார், சுதந்திரா கட்சி தலைவர் ராஜாஜி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், கேரள முதல்_மந்திரி அச்சுதமேனன் உள்பட ஏராளமான தலைவர்கள் அனுதாப செய்தி வெளியிட்டார்கள்.

டெல்லி பாராளுமன்றத்திலும், தமிழ்நாடு சட்டசபையிலும் அனுதாப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லா உறுப்பினர் களும் ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்.

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் லீக் !

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் லீக் !

இந்திய திருநாட்டை 800 ஆண்டு காலம் ஆண்டது இஸ்லாமிய சமுதாயம். அதே நேரத்தில் அடிமை இந்தியாவை சுதந்திர இந்தி யாவாக மாற்றியது இஸ்லாமியர்கள். நம்மவர்கள் இந்நாட்டை ஆண்டார்கள் என்பதற்கு சான்றாக ‘இந்நாளும் எந்நாளும் தாஜ்மஹால் சாட்சி சொல்லும் அதுவன்றி குதுப்மினார் சின்னமுண்டு’ இந்த சுதந்திரத்தை அடைவதற்காக நமது தேசத் தலைவர்கள், முஸ்லிம் லீக் தலைவர்கள், உலமாக்கள், பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மற்றும் தலைவர்கள் இன்னும் ஏனைய சமுதாயத்தினர் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த நாட்டிற்காக சுதந்திர வேட்கையால் பல முஸ்லிம் லீக் தலைவர்கள், உலமாக்கள், பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், முஸ்லிம் தலைவர்கள் தங்களுடைய உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் தியாகம் செய்த வரலாற்று சம்பவங்களை இந்த நாடு மறந்து விட்டதா ?

காங்கிரஸ் புகழாரம்

இந்நாட்டில் எந்த இயக்கம் தோன்றவில்லை என்றால் சுதந்திரம் இல்லையே என்று வரலாற்றில் வர்ணிக்கப்படுகிறதோ அந்த காங்கிரஸ் அதன் தலைவர் இவ்வாறு கூறுகிறார். இந்திய முஸ்லிம் லீக் தலைமையில் 1923- ஆம் ஆண்டு ஜனவரி 23 – ம்தேதி சென்னை சவுக்கார்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் சுயசரிதை வெளியிடுதல் மற்றும் மனிதருள் மாணிக்கம் மெளலானா முஹம்மது அலியின் சுயசரிதை வெளியீடு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறுகிறார். இவ்வாறு எங்களுக்கு கிலாபத் இயக்கத்தினை தோற்றுவித்ததின் தாக்கம்தான் இந்நாட்டில் எங்களுக்கு சுதந்திர கிளர்ச்சியையும், உணர்ச்சியையும், புரட்சியையும், சுதந்திர தாகத்தையும் எங்களுக்கு ஏற்படுத்தியது என்று தனது உரையில் கூறினார். இங்கு கவனிக்கப்பட வேண்டியது எது என்றால் வெள்ளையர் களால் சூளுரைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப்போர் ‘சிப்பாய் கலகம்’ 1857 –ம் ஆண்டு ஏற்படுத்திய நிகழ்ச்சியின் எழுச்சியைக் குறிப்பிடுவதுண்டு. ஆனால், அது வடநாடு சம்பந்தப்பட்ட ஒரு எழுச்சியாகவே முடிந்தது. ஆனால் இமயம் முதல் குமரி வரை உள்ள இந்தியப் பெருமக்களின் இதயங்களினால் சுதந்திர உணர்ச்சியை தேசிய உணர்ச்சியாக கனன்றெழுந்தது – ‘கிலாபத்’ இயக்கத்தின்போது தான். ஆக அகில இந்திய அளவிலும், அரசியல் எழுச்சியையும், உணர்ச்சியையும் ஊட்டியது முஸ்லிம் லீக் தலைவர்கள் தோற்றுவித்த ‘கிலாபத் இயக்கம்’

இந்திய தேசிய ராணுவம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ‘இந்திய தேசிய ராணுவத்தை’ உருவாக்கி நம் மண், பொன் மீது வெறி கொண்ட வெள்ளை அரசை தூங்க விடாமல் துளைத்தெடுக்கவும், துரத்தி அடிக்கவும் செய்தார். அந்த நேரத்தில் நேதாஜியின் படையில் பல்வேறு சமுதாயத்தினர் இருந்தாலும் அதில் பல முஸ்லிம் ஜெனரல்கள், கர்னல், லெப்டினென்ட் கர்னல்கள், முஸ்லிம் சிப்பாய்கள் பல பேர் இருந்தனர். இதில் நேதாஜியுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் முஸ்லிம் லீகை சேர்ந்த பள்ளப்பட்டி மணிமொழி மெளலானா எம்.ஜி. கலீல் ரஹ்மான் பாகவி அவர்கள். நேதாஜி அவர்களுடன் இந்திய நாட்டு விடுதலைக்காக 1941 முதல்1945 வரை வெளிநாட்டிலே பெரும்பாலும் குறிப்பாக இந்தோ – சீனாவில் இருந்து செயலாற்றிய பெருமைக்குரியவர். சைக்கோன் ரேடியோவில் மூன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நேதாஜி அவ்வப்போது பேசி வந்துள்ளார். அந்த பேச்சுக்களை தமிழ் மூலம் மணிமொழி மெளலானா எம்.ஜி. கலீல் ரஹ்மான் பாகவி பிரச்சாரம் செய்து வந்துள்ளார். இது இந்திய தமிழ் வாலிபர்களுக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் எழுச்சியையும் தந்தது.

வட்ட மேஜை மாநாட்டில் முஸ்லிம் லீக் பங்களிப்பு

முதல் வட்ட மேஜை மாநாடு (1930-32) லண்டனில் நடந்தது. இந்த மாநாட்டில் கிலாபத் இயக்கத்தின் தலைவரும், முஸ்லிம் லீக் தலைவரான மெளலானா முஹம்மது அலி பங்கேற்றார்.

உணர்ச்சியுடன் பேசினால் உயிருக்கே ஆபத்து நேரிடும் என்று மருத்துவர்கள் தடுத்துங்கூட மெளலானா அவர்கள் ‘என் உள்ளத்திலுள்ளதை வெளியிடாமல் இருப்பதை விட வெளியிட்டு இறந்து விடுகிறேன். இல்லையேல் சுதந்திரம் பெற்ற இந்நாட்டிலே ஒரு புதைகுழியைக் கொடுங்கள்’ என விடுதலை தாகத்தை வெளியிட்டார். எனவே, மெளலானாவின் தேசப்பற்றையும், விடுதலை வேட்கையும், மெய்சிலிர்க்க வைக்கிறது.

நம்நாடு விடுதலையான அந்த நேரத்தில் அந்த நடுநிசியில், அதாவது நிசப்தம் நிலவிய வேளையில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15 ஆம் தேதி அந்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் மத்திய மண்டபத்தில் அரசியல் நிர்ணய சபையின் அத்தனை உறுப்பினர்களுடன் கூடி இருந்த நிசப்தம் நிலவிய வேளையில் அந்த நேரத்தில் இந்தியா விடுதலை பிறந்தது என்பதற்காக அறிகுறியாக பன்னிரெண்டு மணி அடித்து ஓய்ந்த அந்த வேளையில் கணீரென ஒலித்த சுதந்திர கீதம் நாம் தற்போது பாடக்கூடிய தேசிய கீதம் ‘ஜனகனமண’ அல்ல: தேசிய கீதமாக ஒலித்தது முஸ்லிம் லீக் தலைமையேற்று வழிநடத்திய தலைவரான அமரகவி அல்லாமா இக்பாலின்

’ஸாரே ஜஹான்ஸே அச்சா
ஹிந்துஸ்தான் ஹமாரா ‘

எனவே, இந்நாட்டில் முதல் தேசிய கீதமாக இந்த பாடல்தான் பாடப்பட்டது. ஆக இந்த கீதத்தை தான் தேசிய கீதமாக இந்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், இந்த கீதத்தைத்தான் இன்று நம் முப்படையின் வீரர்கள் அணி வகுக்கும் போது எடுப்பான குரலில் இசையுடன் பாடுகிறார்கள்.

சங்கைக்குரிய உலமா பெருமக்களே !
முஸ்லிம் சமுதாய சான்றோர்களே !
தங்க நிகர் சமுதாயத்தின் சிங்கநிகர்
இளைஞர் பட்டாளமே !
மாணவச் செல்வங்களே !

இந்திய விடுதலையின்
முஸ்லிம் லீகின் தியாக வரலாறு
உலகெங்கும் ஒலிக்கட்டும் !
-எம் அப்துல் பாஸித், தேவதானப்பட்டி

நன்றி : பிறைமேடை மாதமிருமுறை இதழ்

Friday, October 22, 2010

2010 டிசம்பர் 11 முஸ்லிம் லீக் மாநில மாநாடு

2010 டிசம்பர் 11 முஸ்லிம் லீக் மாநில மாநாடு எழுச்சியின் தொடர்ச்சி -
தோப்புத்துறை அ.முகம்மது நூர்தீன்
தலைவர், அமெரிக்க காயிதே மில்லத் பேரவை


டிசம்பர் மாதம் என்றால் நம் சமுதாய மக்களிடம் பீதியும், தேவையில்லாத பதட்டமும் தான் இத்தனை காலமாக இருந்து வந்தது. அயோத்தி பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை காட்டி சமுதாயத்தின் பெயரில் ஆதாயத்திற்கு என்றே வீடுகளில் அடைந்து கிடந்தவர்களை எல்லாம் வீதியில் வந்து போராட செய்தோம் என்று பெருமை பேசி வந்தவர்கள் நம் சமுதாயத்தின் இளைஞர்களை நீதிமன்றங்களுக்கும், சிறைச்சாலைகளுக்கும் தொடர்ந்து அனுப்பி கொண்டு இருந்தார்கள்.

பல்வேறு மத, இன வேறுபாடுகளை புறம்தள்ளி சகோதரத்துவத்துடன் வாழ்ந்த காலத்தை வீண் செய்து நம் சமுதாய குடும்பங்களில் நிம்மதி அற்ற தன்மையை பெறச் செய்தார்கள். ஒருவருக்கு ஒருவர் விரோதியாக இருக்கும் நிலைக்கு ஆளாக்கினார்கள். ஆனால், தங்களை மட்டும் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார்கள்.

இவர்களின் வீவேகமற்ற வழிகாட்டு தலில் எண்ணற்ற குடும்பங்கள் சீரழிந்து போய்விட்டன என்பதை யாரும் மறுக்க முடியாது. டிசம்பர் போராட்டங்களால் சாதித்தது என்ன என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

அன்று முதல் இன்று வரை சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற்றத்திற்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் பேரியக்கம் ஒன்று மட்டுமே பல்நோக்கு பார்வையுடன் மார்க்க நெறிக்கும், அரசியல் நாகரிகத்திற்கும் சமூக சமய நல்லிணக்கத்திற்கும் செயலாற்றி மற்றவர் களுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது என்பதை ஒவ்வொருவரும் தன் மனசாட்சிக்கும் இறை பயபக்திக்கும் உகந்த வகையில் சான்று தருவார்கள்.

இதோ அடுத்தவர்களின் மன உணர்வுகளையும் ஏக் கத்தையும் அறிந்து, நாளை வல்ல அல்லாஹ்விடம் திருப்பொருத்ததை பெற வேண்டும் என்ற உயர்வான நோக்கத்தில் எத்தனையோ இன்னல்களை சமுதாயத் திற்காகவும், அல்லாஹ்விற்காகவும் பொறுமையுடன் சந்தித்த ஆற்றல்மிக்க பாராம்பரியத்திற்கு சொந்தகாரர்கள் முஸ்லிம் லீகர்கள்.

இந்த தியாக சீலர்களான இந்திய யூனியன் முஸ்லிம் லீகர்களின் பேச்சும் செயலும் வரும் டிசம்பர்-11ஐ முன்நிறுத்தி நமது தலைவர்கள் வழிகாட்டிய வழியில் சமய நல்லிணக்கம் தழைக்கட்டும்! சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்!�� என்ற மாநில மாநாட்டின் நோக்கத்தை உலகிற்கு பறைசாட்டுவதுடன்நம்முடைய குரல் எத்திசையி லும் எதிரோலிக்க செய்ய வேண்டும். கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்களின் வழியில் சிராஜுல் மில்லத், மூனீருல் மில்லத் என்ற தன்னலமற்ற தலைவர்களின் வழிகாட்டுதல் தான் நம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் மூலதனம்.

முஸ்லிம் லீக் என்றால் இளைஞர்களே இல்லை என்று பிரச்சாரம் செய்தவர்களுக்கு பெரும் அடியாக மணிவிழா மாநில மாநாட்டில் தமிழகம் முழுவதும் இளைஞர்களின் பட்டாளம் வந்து சென்னை மாநகரத்தையே திகைக்க வைத்தது.

இன்றைய தமிழக முதல்வர் அவர்கள் மணிவிழா மாநாட்டு மேடையிலேயே எங்கள் கட்சிக்கு நிகரான கட்சி இது, சமுதாய மக்களின் பலத்தை முஸ்லிம் லீக் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் பெற்றுள்ளார்கள் என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

டிசம்பர் 11-ல் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு உலகம் முழுவதும் இருந்தும் முஸ்லிம் லீகர்கள் திரளாக வருவதற்கு இப்போதே திட்டம் வகுத்து செயல் படுகிறார்கள் என்று அறியும்போது மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்படுகிறது.

தமிழகம் முழுவதும் மாநில மாநாட்டுக்கு வர அழைப்பும் ஏற்பாடுகளையும் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் ஊர் பிரைமரிகள் செய்ய தொடங்கி விட்டன என்ற செய்தி மாநில தலைமைக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது.

டிசம்பர் 11-ல் நடக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நேரடி ஒளிப்பரப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்க காயிதே மில்லத் பேரவை கூட்டாக முஸ்லிம் லீக் இணையதளம் மூலம் ஒளிப்பரப்ப இருக்கிறது.

இம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற வேண்டுகோளை உலகம் முழுவதும் உள்ள தமிழக முஸ்லிம்கள் தங்களின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கும் பணியை வெளிநாடு வாழ் தமிழக முஸ்லிம்கள் செய்ய தொடங்கி உள்ளனர்.

வல்ல அல்லாஹ்வின் திருவேதத்தையும், இறுதி தூதர் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிகளையும் என்றும் சமுதாய அரசியல் பொது வாழ்வில் பேணிநடக்கும் இயக்கமாக இருக்கிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

இந்த இயக்கம் யாருக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல-ஒவ்வொரு முஸ்லிமின் உரிமைமிக்க இயக்கம்.

அதனால் தான் அதனை தாய்ச் சபை"" என்று எல்லோரும் போற்றி பேணி அன்பு காட்டி அழைக்கிறோம்.

மாநில மாநாடு சிறக்க வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து ஒற்றுமையுடன் களப்பணியாற்றி மாநாடு வெற்றி பெற செய்வோம். இந்த மாநாட்டின் மூலம் நம் சமுதாயத்திற்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கட்டும்.

முனைப்புடன் செயல்படுவோம்-மாநாடு வெற்றிக்கு முழு மூச்சுடன் பாடுபடுவோம்.

சமுதாயம் தாம்பரத்தில் சங்கமம் ஆகட்டும்!
http://muslimleaguetn.com/news.asp?id=1935

Wednesday, October 6, 2010

முஸ்லிம் லீக் அகில இந்திய செயலாளருக்கு வரவேற்பு நிகழ்ச்சி

முஸ்லிம் லீக் அகில இந்திய செயலாளருக்கு வரவேற்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயலாளர் ஜனாப் குர்ரம் அனீஸ் உமர் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 03.10.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணிக்கு ஸ்டார் மெட்ரோ தேரா ஹோட்டல் அபார்ட்மெண்டில் நடைபெற இருக்கிறது.

நிகழ்விற்கு அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தலைமை தாங்குகிறார்.

பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் அல்ஹாஜ் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

இந்நிகழ்வில் வேலூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினரும், பிறைமேடை மாதமிருமுறை ஆசிரியருமான எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்கள் வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.

மேலும் அமீரக காயிதெமில்லத் நிர்வாகிகள் பலர் கருத்துரை வழங்குகின்றனர்.

இந்நிகழ்வில் அமீரக காயிதெமில்லத் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக விபரங்களுக்கு : 050 467 4399 / 050 51 96 433

முஸ்லிம் லீக் இணையத்தளங்கள் :
http://www.indianunionmuslimleague.in
http://muslimleaguetn.com

Monday, October 4, 2010

அயோத்தி தீர்ப்பு: பேராசிரியர் காதர் மொகிதீன் அறிக்கை.

அயோத்தி தீர்ப்பு: பேராசிரியர் காதர் மொகிதீன் அறிக்கை.
அயோத்தி தீர்ப்பு சம்மந்தமாக இந்திய யூனியன்முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளராரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் விடுத்துள்ள அறிக்கை:

30-09-2010 வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியள வில் பாபரி மஸ்ஜித் - ராமஜென்மபூமி சம்பந்தப்பட்ட ஒரு சில வழக்குகளின் தீர்ப்பை அலகாபாத்தில் உள்ள உயர்நீதிமன்ற லக்னோ சிறப்பு மன்றம் வழங்கியுள்ளது.

1992 டிசம்பர் 6-இல் பாபரி மஸ்ஜிது என்று கூறப்பட்டு வந்த கட்டடம் இடித்துத் தள்ளப்பட்டது. அதனால் நாட்டில் பல இடங்களில் கலவரங்கள் மூண்டன; மக்கள் மாண்டனர்; அரசுகளின் போக்குகளும் - நோக்குகளும் நாட்டு மக்களுக்கு வெளிச்சமாயின. அன்றிலிருந்து நேற்றுவரை டிசம்பர் 6 ஒரு சரித்திர சம்பவ நாளாக அனுசரிக்கப்ட்டு வநதுள்ளது.

இனி, அந்த நாள் நினைவில் இருந்து மறைந்து 30-09-2010-ஆம் நாள் பற்றி பேசும்படியான ஒரு தீர்ப்பை நாடு பெற்றிருக்கிறது. மூன்று நீதிபதிகளில் இருவர் கருத்தையும், மூன்றாவது நீதிபதியின் ஒரு சில கருத்தையும் இணைத்துப் பார்க்கும் போது, அயோத்தி பிரச்சினைக்கு அலகாபாத் உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது தீர்ப்பு என்று கூறுவதைவிட, சிலரின் நம்பிக்கையை நிலைநாட்டும் நீதிமன்ற அறிவிப்பு என்பதே பொருத்தமானதாக அமையும் எனலாம்.

இந்தத் தீர்ப்பை - அறிவிப்பை, வழக்குத் தொடுத்தவர் கள் முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள் எனில், அதைப் பற்றி வெளியில் உள்ளவர்கள் கருத்துக் கூறுவது தேவையற்றதாகி விடும்.

வழக்குத் தொடுத்தவர்கள், வந்த தீர்ப்பை முழுமையாக ஏற்க இயலாத நிலை ஏற்படும் போது, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பும் அதில் வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்யப்படும் போது, அதைப் பற்றி வெளியில் உள்ளவர்கள் எது கூறினாலும் அதனால் நீதிமன்றத் தீர்ப்பில் எவ்வித மாற்றத்தையும் செய்து விட முடியாது.

இந்த எதார்த்த நிலைமையைச் சரியாகப் புரிந்து 1989 முதலே இந்த அயோத்தி விவகாரம் பற்றிய ஒரு தெளிவான - தீர்க்கமான - தூரநோக்குடன் ஆன அணுகுமுறையை வகுத்தளித்த பெருமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களுக்கே உண்டு.

பாபரி மஸ்ஜித் விவகாரம், ராமஜென்ம பூமி பிரச்சினை என்று மாற்றப்பட்டு மக்கள் மத்தியில் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு, ஒரு மதப் பிரச்சினை யாகவும், பின்னர் இந்து - முஸ்லிம் பிரச்சினையாகவும் படிப்படியாக வளர்க்கப்பட்டு, கலவரங்களுக்கு வழி காட்டப்பட்டு வந்த நேரத்தில் முஜாஹிதே மில்லத் ஜி.எம். பனாத்வாலா கூறினார்:

``பாபரி மஸ்ஜித் - ராமஜென்ம பூமி பிரச்சினையை கோர்ட்டில் தீர்த்துக் கொள்ள வேண்டும்; ரோட்டில் தீர்க்க முடியாது. ரோட்டுக்கு இந்தப் பிரச்சினையை கொண்டு செல்கிறவர்கள் நாட்டுக்கு நன்மை செய்ய வில்லை; முஸ்லிம் சமுதாயத்துக்கும் நலன் கருத வில்லை’’ என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்தார் பனாத்வாலா.

அன்றிலிருந்து இன்றுவரை அவர் வகுத்தளித்த வழியைப் பின்பற்றியே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது கருத்தைத் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளது.

இன்னும் ஒருபடி மேலே சென்று, அவர் கூறினார்:

``பாபரி மஸ்ஜிது - ராமஜென்ம பூமி சம்பந்தப்பட்ட வழக்குகள் பல கோர்ட்டுகளில் 88 உள்ளன. எல்லா வழக்குகளையும் ஒருசேர, உச்சநீதிமன்றத்தில் கொண்டு செல்லப்பட்டு, அனைத்து வழக்குகளையும் ஒருசேர விசாரித்துத் தீர்ப்பு வழங்கட்டும். அந்தத் தீர்ப்பு எதுவா னாலும் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல. நாட்டில் உள்ள சமுதாயங்கள் அனைத்துமே அந்தத் தீர்ப்பை ஏற்றாக வேண்டும். இந்த நிலையை உருவாக்க வேண்டு மானால் இந்திய அரசு அரசியல் சட்டத்தில் உள்ள 143(2) பிரிவின்படி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும்’’ என்றெல்லாம் விளக்கம் அளித்தார்.

இன்றைக்கு தீர்ப்பு பற்றிப் பல்வேறு இயக்கங்களும், கட்சிகளும் கூறிவரும் கருத்தைப் படிக்கும் போது, பனாத்வாலா எத்தகைய தூர நோக்குடையவராகத் திகழ்ந்துள்ளார் என்பதை உணர முடிகிறது. நீதிமன்றத் தீர்ப்பை எல்லோரும் மதிக்க வேண்டும் என்று இப் பொழுது எல்லோருமே பேசுகின்றனர்.

அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றிக் கூறிய தவான் என்னும் அறிஞர், இது நாட்டுப்புறப் பஞ்சாயத் தார் அளித்துள்ள தீர்ப்பு போன்று இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

எது எப்படி கூறப்பட்டாலும் நீதிமன்றம் கூறுவது தான் ஏற்கப்பட வேண்டிய ஒன்றாகி விடுகிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து எல்லாத் தரப்பினரும் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரையும் திருப்திப் படுத்தும் நீதிமன்ற முயற்சிதான் இந்தத் தீர்ப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திருப்தி ஆகிறார்களா? இல்லையா? என்பது போகப் போகத் தெரியும்.

ஆனால், ஒரு பெரும் உண்மை எதுவெனில், இந்திய நாட்டு மக்கள் இந்தத் தீர்ப்பால் எவ்வித ஆர்ப்பாட்டம் - போர்ப்பாட்டமும் நிகழவில்லை என்பதை உணர்ந்து திருப்தி அடைந்துள்ளனர் என்பதே.

நாட்டு மக்கள் மத்தியில் அமைதியும், சுமூகமும், நட்பும், நேசமும், நல்லிணக்கமும் ஓங்குவதற்கு எல்லோரும் உறுதி ஏற்க வேண்டும் என்பதே இந்தத் தீர்ப்பின் தாக்கமாகி யிருக்கிறது.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிறைமேடை தலையங்கம் - சமுதாயம் தலைநிமிரட்டும்! தனிச் சிறப்பு தழைத்தோங்கட்டும்!!

பிறைமேடை தலையங்கம் - சமுதாயம் தலைநிமிரட்டும்! தனிச் சிறப்பு தழைத்தோங்கட்டும்!!


பிரியமுள்ள பிறை நெஞ்சுக்கு!

வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின் மீதும் இலங்கட்டுமாக!

அக்டோபர் திங்கள் 4 ஆம் நாள்;

வல்ல இறைவனை வணங்கி வாழ்வோம்
இல்லாதார்க்கு வழங்கி வாழ்வோம்

எல்லோருடனும் இணங்கி வாழ்வோம், இந்த அழகிய மனிதநேய முழக்கத்தை செயல்வடிவமாக்கி வாழ்வதே இஸ்லாத்தின் விழுமிய இலக்கணம் என்று மாற்றார்க்கும் மருவிலா மாண்புதனை எடுத்துரைத்த நம் சிந்தனையெல்லாம் நிறைந்து நிற்கும் சந்தனத் தமிழ்ப் பேச்சாளர், மத நல்லிணக்க மாண்பாளர், மதங்களைத் தாண்டி மனங்களை வென்ற மறைந்த நம் மாபெரும் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் இந்த மண்ணுலகில் மலர்ந்த நாள்.

தன் சுய வாழ்வின் சுகத்தை மட்டும், கொஞ்சமே பார்த்திருந்தாலும்கூட பலதரப்பட்ட பதவிகளும் வந்து கொஞ்சும் காட்சியைக் கண்டிருக்க முடியும்; கண் இமை ‘ஆம்’ என்று மட்டும் சாடை காட்டியிருந்தால் கவர்னர் பதவிகூட வீட்டு வாசலுக்கே வந்து காத்துக் கிடந்திருக்கும்; வல்லரசு நாடுகளே வியப்புக்கண் கொண்டு பார்த்த நம் பாரதப் பெருந்தலைவி இந்திரா அம்மையாரை எந்த முன் அனுமதியும் பெறாமல் பார்க்க இயலும் என்றிருந்த ஒரே முஸ்லிம் அரசியல் வித்தகர் அல்லவா தரணியெல்லாம் வலம் வந்த தகைமைசால் நம் தலைவர் அவர்கள்!

புறக்காட்சியிலே அழகு; அகக்காட்சியிலே ஆன்மீகம்; பேசினால் அழகு தமிழ், எழுதினால் எழில் மிகு இலக்கியம்; எதை விடுத்து எதை எழுத? வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் வாழுகின்ற தலைமுறைக்கும், வாழவிருக்கிற தலைமுறைக்கும் பாடமாக்கி மறைந்த தலைவர் அல்லவா நம் தலைவர்!

சந்தனத் தமிழே! உங்கள் வதனத்தில் வளர்ந்த தமிழ் வார்த்தைகள் சில உங்களால் மட்டுமே உச்சரிக்க முடியும் என்ற விந்தையைத் தந்த வரலாறல்லவா நீங்கள்.

‘மனித நேயத்தின் தென்னகத்துத் திருத்தூதர் மறைந்தார்’ என்று உங்கள் மரணத்தை மனக்கலக்கத்தோடு எழுதியதே ‘தினமணி’ நாளேடு; வேறு யாருக்குக் கிட்டியது இந்த உயரிய தகைமை?

ஆம்; வல்ல அல்லாஹ்வின் அருள் மறையைத் தமிழ் எனும் தாய்மொழியால் உணர வைக்க, தன் விரல் கொண்டே விடிய, விடிய விழித்தும், நெடிய பொழுதைக் கழித்தும் எழுதி முடித்த பாக்கியம் நிறைந்த நீங்கள் இவ்வுலகிலும் மறுஉலகிலும் ஏற்றமிகும் சிறப்பைப் பெற்றுவிட்டீர்கள் என்பது இறைவன்புறத்து நீங்கள் பெற்றப் பேரருள். அந்தப் பேரருளை எண்ணி, எண்ணி மகிழ்கிறோம்; வல்ல இறைவனைப் புகழ்கிறோம்.

இத்தகைய தூய தலைமைதான் நம் பேரியக்கம் முஸ்லிம் லீக் பெற்றிருக்கும்பேறு கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்கள் தொடங்கி இன்றைய நம் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் வரை சொல்லாலும் செயலாலும் சிந்தனையாலும் அரசியல் பிரதேசத்தில் தூய்மையையும், வாய்மையையும் காட்டி வழி நடத்திய, வழி நடத்துகிற தலைமையல்லவா நம் தாய்ச் சபையின் தலைமை என் பிரியமுள்ள பிறை நெஞ்சே! இந்த அக்டோர் 4 ஆம் நாள் என்று மட்டுமல்ல; எந்த நாளிலும் நம் சமுதாயத்தின் பாரம்பரிய பெருமையை நிலைநாட்டி, எல்லா உரிமைகளையும் பெற்று நிலையான நிம்மதியுடன் வாழ நம் இயக்கத்தின் வளர்ச்சியும், அதன் அரசியல் வலிமையும் மேலோங்கச் செய்ய வேண்டும் என்கிற சீரிய சிந்தனை என்றென்றும் இருக்க இந்த நாளில் சபதம் ஏற்க வேண்டும்.

இந்த நாளை அடையாளப்படுத்திதான் ஆண்டுதோறும் தமிழகத்தில் மாநாடு நடத்தி மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விருதுகளைப் பலதரப்பட்ட சமூகச் சான்றோர்களுக்கு வழங்குவது வழக்கம். ஆனால், இவ்வாண்டு ஒரே விருதாக அனைத்து சமூகத்தாரும் போற்றும் வகையில் ஏற்றத்தாழ்வுக்கிடமின்றி அனைவரையும் அரவணைத்து ஆதரவு நல்கி வரும் நம் தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களுக்கு ‘நல்லிணக்க நாயகர்’ விருது வழங்க நம் தாய்ச்சபை முடிவெடுத்து வருகிற டிசம்பர் திங்கள் 11 ஆம் நாள் அந்த மாநாடு சென்னையில் நடைபெறவிருக்கிறது.

இது வெறுமனே சாதாரண அரசியல் மாநாடா? அல்ல, அல்ல. நம் உணர்வும் உரிமையும் இரண்டறக் கலந்து நம் சமுதாயத்தின் இறையாண்மைப் பிரகடனத்தை ஓங்கி ஒலிக்கச் செய்யயும் மாநாடு. காலையில் கருத்தரங்கம், பகல் பொழுதில் பிறைக் கொடிப் பேரணி, மாலையில் மாநாட்டு நிகழ்வு என்று மிகப் பிரம்மாண்ட ஏற்பாடுகளை நம் தாய்ச்சபை மாநிலத் தலைமை முடுக்கிவிட்டிருக்கிறது.

இதில் என் பங்கு என்ன? என நீ கேட்பது எனக்குப் புரிகிறது. மாநாட்டின் வெற்றிக்கு உன்னால் இயன்ற பணிகள் அத்தனையும் நீ ஆற்றிட வேண்டும்; தமிழகமெங்கிலும் மாநாட்டுச் செய்தி பரவிட வேண்டும்; ஜமாஅத் பெருந்தகைகளை நேரில் சென்று சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்; எந்த அமைப்பில் இருக்கிறார்கள்? என்று யாரையும் பிரித்துப் பாராமல் அனைவரையும் அழைக்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் அச்சிடப்பட்ட பிரசுரங்கள் மூலமாகவும், சுவர் விளம்பரங்கள் மூலமாகவும் சமூக மக்களுக்கு மாநாட்டு விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்; எத்தனை அதிக எண்ணிக்கையில் வாகனங்களை ஏற்பாடு செய்து அதிகமானோர் கலந்து கொள்ளும் வகையில் திட்டமிட இயலுமோ, அதனைச் செய்து காட்ட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, மாநாட்டு ஏற்பாடுகளை முன்னின்று செயல்படுத்தும் தலைமை நிலையத்திற்கு நிதி திரட்டித் தரவேண்டும். இத்தனையும் எதற்கு? தனி நபர் வளத்திற்கா? சுயவிளம்பரம் தேடும் தன்னல பேராசைக்கா? இல்லை; இல்லை; இவை வேண்டுமானால் வசூலையே நாளெல்லாம் குறிக்கோளாகக் கொண்ட மற்ற சில அமைப்புகளுக்கு இருக்கலாம்; நமக்கல்ல. நம்முடைய கவலையெல்லாம் அரசியல் களத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்; நமக்கென உரித்தான தனிச்சிறப்பு தழைத்தோங்கி மிளிர வேண்டும்; நமது உரிமைகள் பறிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்;

அன்பு நெஞ்சே!

புறப்படு இன்றே புயலென ஆர்ப்பரிக்கும் வேகத்தில்; திறம்பட பணியாற்றும் உன் உத்வேகமும் உற்சாகமும் தாய்ச்சபை வரலாற்றில் இன்னும் ஒரு மகுடம் சூட்டட்டும்; இதுவே உன் பணி என பறைசாற்றிப் பணிபுரி; அதுவே சரி என அல்லாஹ்வும் ஏற்கட்டும்; ஆமீன்.

அன்புடன்,
மு. அப்துல் ரஹ்மான்
ஆசிரியர்

http://muslimleaguetn.com/news.asp?id=1901

அலகாபாத் தீர்ப்பு- நல்லிணக்கம் போற்றும் சமுதாயத்திற்கு ஏமாற்றம்..!

அலகாபாத் தீர்ப்பு- நல்லிணக்கம் போற்றும் சமுதாயத்திற்கு ஏமாற்றம்..!

-M.அப்துல் ரஹ்மான் எம்.பி.



"அயோத்தியில் பாபரி மஸ்ஜிது இடிக்கப்பட்டது ஓர் அநியாயச் செயல்;அக்கிரமச் சம்பவம்;இந் நிகழ்வுக்குக் காரணமாகவும்,பின்புலமாகவும் இருந்தவர்கள் மிகப்பெரும் அளவில் தண்டிக்கப்படவேண்டியவர்கள்."என்று லிபரான் கமிஷன் அறிக்கை மிகத் தெளிவாகக் கண்டித்திருக்கிறது.
சமய சார்பற்ற நிலையில் நல்லுள்ளம் கொண்டோர் அனைவரும் வரவேற்றனர் இந்தத் தீர்ப்பை.



பாரத நாட்டின் பாரம்பரியமிக்க பாராளுமன்றம் லிபரான் கமிஷனின் இந்த பார்போற்றும் தீர்ப்பைப் பாராட்டியதோடு,அறிக்கையில் பட்டியலிடப்பட்ட குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும் என்ற பலதரப்பட்ட குரல்களையும் இந்திய அரசின் கவனத்திற்குப் பதிவு செய்தது.
மஸ்ஜிது இருந்த அந்த இடத்தின் உரிமையை சட்டப்பூர்வமாக நிலை நிறுத்தும் வழக்கின் தீர்ப்பு இப்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.

" நீதி மன்றத்தின் தீர்ப்பு எதுவானாலும் அது மதிக்கப்பட வேண்டியது"என்பதில் நமக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
ஆனால் அநியாயமாகவும்,அக்கிரமமாகவும் வெறிச்செயலில் ஈடுபட்டுத் தகர்க்கப்பட்ட மஸ்ஜிது இருந்த இடத்தில் "ராமர் பிறந்த இடம்"என்று வம்பு செய்து அத்துமீறி சிலைகள் வைக்கப்பட்ட காரணத்தால் சட்டப்பூர்வமான எந்த பின்னணியும் இல்லாமல் மத நம்பிக்கையின் அடிப்படையிலேயே அந்த இடம் ராமர் பிறந்ததாகச் சொல்லுகிறது இந்த தீர்ப்பு.மேலும் அந்தக் குறிப்பிட்ட இடமே ராமர் கோயில் கட்டத்தகுந்த இடம் என்றும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுத் தீர்ப்பு வெளியாகியிருப்பது ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி விட்டதோ?என்கிற ஐயப்பாடு நாட்டில் நிலவுவதை மறுக்கவியலாது.
நீதிமன்றத் தீர்ப்பு என்பது ஆவணங்களின் அடிப்படையில் சட்டப்படியானத் தீர்வாகத்தான் இருக்க முடியும்.ஆவணங்கள் இல்லாத நிலையில் நிலத்தின் பயன்பாட்டுக் காலத்தையே பெரிதும் கவனத்திற்குரியதாக எடுத்துக் கொள்ளப்பட்டுத் தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருவதைப் பரவலாகக் காண்கிறோம்.
ஆனால் இந்த அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு,பாதிக்கப்பட்ட உள்ளங்களின் நியாயமான எதிர்பார்ப்பை முழுமைப் படுத்துவதாக இல்லை என்பது பெருத்த ஏமாற்றம்தான்.



இது இப்போது மேல் முறையீடு என்ற உரிமையில் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லுகிறது."காலம் நீட்டிக்கப்பட்டாலும் எதிர்பார்க்கப்படும் நியாயமான தீர்ப்பு இறுதியில் வெளிச்சத்துடன் வெளிவரும்"என்பது மனசாட்சியுள்ளோர் அனைவரும்,இந்தியாவின் இறையாண்மையில் நம்பிக்கை கொண்டோர் அனைவரும், நீதிமன்றங்களில் சத்தியம் நிலை நிறுத்தப்படும் என்று நம்புவோர்கள் அனைவரும் மதம் கடந்து மனித நேயம் போற்றும் சான்றோர் யாவரும் எதிர்பார்க்கும் யதார்த்த நிலை.


தர்மத்தினை சூது கவ்வலாம்,ஆனால் இறுதியில் தர்மம் வெல்லுவதுதானே நியாயம்?அதுவே ஒரு நல்ல நிறைவான தீர்வாக அமையும்!.இந்த நல்ல நம்பிக்கையுடன் காத்திருப்போம்.!

Tuesday, September 28, 2010

அமைதி காப்போம்! அன்புமலர் பூக்கச் செய்வோம்! -கே.எம்.கே..

அமைதி காப்போம்! அன்புமலர் பூக்கச் செய்வோம்! -கே.எம்.கே..


பாபரி மஸ்ஜித் பிரச்சினை இன்று நேற்றல்ல, நூறாண்டுகளுக்கு மேலாகவே இருந்து வந்துள்ளது.

1992 டிசம்பர் 6-க்குப் பிறகு முந்தைய வழக்குகள் - வாதங்கள் - வரலாறுகள் யாவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பாபரி மஸ்ஜிது இடிப்பு விவகாரமே புதிய வரலாறாகவும், புதுப்புது பூகம்பங்கள் தோற்றுவிக்கும் பூதமாகவும் மாறி விட்டது. பாபரி மஸ்ஜித் - ராமஜென்ம பூமி விவகாரம் என்றாலே நாட்டு மக்கள் உள்ளுக்குள் வெறுப்படை கிறார்கள். இதைப் பற்றிப் பேசினாலே நகரப் புறத்தவர் மட்டுமல்ல, இன்றைக்கு நாட்டுப்புறத்து மக்களும் எரிச்சல்படுகிறார்கள்.

கோர்ட்டில் தீர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு வழக்கை ரோட்டுக்கு கொண்டு வந்து, மக்களை அவதிக்கு உள்ளாக்கும் சக்திகளை நாட்டு மக்கள் வெறுத்து ஒதுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பண்பட்ட இந்த பாரத நாட்டு மக்களில் பெரும்பாலான நல்லுள்ளங்கள், நீதிமன்ற வழக்குகள் நீதிமன்ற வளாகத்துக்குள் பேசப்படவும் விவாதிக்கப் படவும் வேண்டுமே தவிர, அவற்றைப் பற்றி பொது மக்கள் மத்தியில் விவாதிப்பது கூடத் தேவையற்ற ஒன்று என்றே கருதுகின்றன.

இத்தகைய உணர்வும், போக்கும், அணுகுமுறையும் எல்லா மதங்களிலும் உள்ள நன்மக்களிடம் தொடர்ந்து நிலவி வருகிறது. ஆனால், தங்களின் சுயநலத்துக்காக ஏதாவது ஒரு பிரச்சினை கிடைக்காதா? அதை ஊதிப் பெரிதாக்கி மக்கள் மத்தியில் விரோத குரோதங்களை உருவாக்க முடியாதா? என்று காத்துக் கொண்டிருக்கும் ஷைத்தானிய சக்திகள் எல்லா சமுதாயங்களிலும் இன்றைக்கு உருவாகியுள்ளன.

அவர்களின் அத்துமீறிய செயல்களுக்கு நாளை வரவிருக்கும் பாபரி மஸ்ஜிது தீர்ப்பு ஒரு காரணமாகி விடக் கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளன. முன்னெச்சரிக்கையாக அனைத்து வழிகளிலும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

நாட்டு மக்கள் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக் கும் முழு ஒத்துழைப்பு தருவது கட்டாயக் கடமையாகும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொறுத்தவரை யில் 1989-ம் ஆண்டு முதல் பாபரி மஸ்ஜிது பிரச்சினை குறித்துத் தெரிவித்து வரும் கருத்து இதுதான்.

பாபரி மஸ்ஜித் விவகாரம் சிவில் வழக்கு சம்பந்தப்பட்டது, சொத்துரிமை சம்பந்தப்பட்டது. இந்த வழக்குகளை சமுதாயங்களுக்கு இடையிலான வழக்கு என்றோ, சமயங்களுக்கு இடையிலான வழக்கு என்றோ கருதுவது மாபெரிய தவறாகும். வழக்குகள் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளன. நீதிமன்றத் தீர்ப்பு எதுவோ அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். தீர்ப்பை ஏற்க மறுப்பவர்கள் நீதிமன்றம் ஏன் சென்றார்கள்? ஆக, சிவில் வழக்கு சம்பந்தப்பட்ட கோர்ட்டு தீர்ப்பை அனைத்து தரப்பாரையும் கட்டுப் படுத்தும் தீர்ப்பாகும் என மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

தீர்ப்பை எதிர்த்தோ, ஆதரித்தோ ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டங்கள் எதுவும் பிரச்சினைனைத் தீர்க்காது. கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் ஏற்போம் - அமைதி காப்போம் - இவ்வாறுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து கூறி வந்துள்ளது. அதைத்தான் இப்பொழுதும் கூறுகிறோம்.

கோர்ட்டு தீர்ப்பை மதிப்போம், அனைவரும் அந்தத் தீர்ப்பை ஏற்க அரசுகளின் முயற்சிக்கு ஒத்துழைப்போம்.

தமிழகம் என்றும் அமைதிப் பூங்கா என்பதை ஒவ்வொரு தருணத்திலும் நிரூபிப்போம்.

செப்டம்பர் 30 - அருமையான தருணம். நாட்டுக்குப் பெருமை சேர்க்கக் கிடைத்துள்ள நல்ல தருணம்.

அமைதி காப்போம்! அன்புமலர் பூக்கச் செய்வோம்!

Friday, September 24, 2010

வடக்கு மாங்குடியில் முஸ்லிம் லீக் கொள்கை விளக்க கூட்டம்

வடக்கு மாங்குடியில் முஸ்லிம் லீக் கொள்கை விளக்க கூட்டம்

தஞ்சை மாவட்டம் வஞ்சுவழி & வடக்கு மாங்குடி ஜும்ஆ பள்ளிவாசல் முன்புறம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கை விளக்க கூட்டம் 26.09.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

சிறப்பு விருந்தினர்களாக வேலூர் இந்திய யூனியன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் M.அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி G.M.ஹாசிம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்

முஸ்லிம் லீக் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

தகவல் உதவி :

வடக்கு மாங்குடி பி. சகதுல்லா

shahadullah@yahoo.com

மருந்து தான் என்ன ?

மருந்து தான் என்ன ?
(திட்டச்சேரி கவிஞர் அன்வர் எம்.ஏ.,
தாய்ச்சபை இலக்கிய அணி, நாகப்பட்டினம்)
எந்திர விந்தைக ளாயிரம் கற்றோம்
என்னென்ன வோபல புதுமைகள் பெற்றோம்..
சந்திரன் செவ்வாய் மண்டலத் தோடும்
சங்கதி பேச வழிகளைத் தேடும்
அந்தமில் லாபல சக்திகள் உற்றும்
அடிதடி சண்டையை விட்டிட மட்டும்
தந்திரம் ஒன்று படித்திட வில்லை
தாய்வழிச் சோதரர் தவிப்பது உண்மை !

ஒன்றெனக் காணும் உயரிய மனமும்
உயிர் நலன் பேணும் ஒழுக்கக் குணமும்
இன்றுநேற் றல்ல இப்புவி தொடங்கும்
இனியநாள் முதலாய் இருக்கலா யிற்று
பன்றியின் குணமும் பருந்துப் பார்வையும்
பாசியாய்ப் படிந்து உள்மனத் துறைந்து
நின்றிடும் நிலையை நினைக்கும் தோறும்
நிம்மதி யழிந்த நிலைதான் மிச்சம் !

இத்தனைத் தீமைக்கும் ஏற்ற மருந்து
இஸ்லாம் தந்த இனிய மருந்து
உத்தம நபிகள் உவக்கும் மருந்து
உலகினில் துன்பம் ஒழிக்கும் மருந்து
சத்தியம் சாந்தம் இரண்டு சரக்கைச்
சமனிட அன்பெனும் தேனில் குழைத்துப்
பத்தியம் தெய்வ நினைப்போடு உண்டால்
பாருக்குள் போருக்கும் பங்கிலை கண்டாய் !

( மணிச்சுடர் ரமளான் சிறப்பு மலர் ஹிஜ்ரி 1431 – 2010 லிருந்து )

Wednesday, September 22, 2010

கோடானு கோடி கரங்கள் உயரட்டும்

கோடானு கோடி கரங்கள் உயரட்டும்
( சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது )
ஓர் அற்புதமான பயிற்சிக்காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது.
ரமலான் மாதத்தின் மிகப் புனித நாட்கள் ஒவ்வொன்றாக நகர்ந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை அடிவானத்தில் தன் ஒளிக்கீற்றைக் காட்ட தலைப்பட்ட உடன் அன்று பெருநாள் என்ற மகிழ்ச்சி பூரிப்பில் திழைத்து மகிழ்ந்து அந்த மகிழ்வை உற்றார் உறவினரோடும் பகிர்ந்து கொண்டாடுவது உலகெங்கும் உள்ள முஸ்லிம்களின் வாடிக்கை.
இல்லாமையால் பசித்து இருப்பது என்பது வேறு – இருந்தும் அல்லாஹ்வுக்காக அவன் கட்டளை என்பதற்காக உணவையும் நீர் அருந்துவதையும் கூட ஒதுக்கி வைத்துவிட்டு பசித்திருப்பதென்பது அறவழி பண்பாட்டில் வந்த ஓர் அற்புதமான பயிற்சியாகும்.
ரமலான் மாதத்தில் இயற்கையான வாழ்க்கை முறையிலேயே கூட அழுத்தமான ஓர் மாற்றம் ஏற்படுகிறது.
உழைப்பினை நல்கி வருவாயைத் தேடி உண்டு மகிழ்ந்திட பகலையும், உறங்கி களைப்பாறி இன்பந் துய்த்திட இரவையும் இயற்கையாக பெற்றுள்ள முஸ்லிம்கள் பகலை பசித்திருக்கவும் இரவை விழித்திருந்து அவனை வணங்கி இசைப்பாடி துதித்து கழித்திருக்கவுமாக மாற்றிக் கொள்கிறார்கள்.
ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழிக்காத இடும்பை கூர் வயிற்றை ஒரு மாத காலம் பகற்போதுகளில் பட்டினி கிடக்கச் செய்கிறார்கள். இது ஓர் அற்புத சாதனை அல்லவா ?
இஸ்லாமிய நெறியில் இந்தப் பயிற்சி இன்றியமையாத ஒரு கடமையானாலும், வாழும் மனித சமுதாயத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்களாக வறுமைக் கோட்டின் கீழே வாழுபவர்களின் உணர்வுகளையும், வேதனைகளையும் புரிந்து, அவர்கள் மீது கழி விரக்கம் கொண்டு, தம்மிடம் உள்ளதைத் தேவைப்பட்ட மற்றவர் களுக்கும் பகிர்ந்து உண்ணும் பண்பை இந்தக் கடமை ஏற்படுத்துகிறது.
எனவே இந்த அறநெறிப் பண்பு உலகெலாம் தழைக்க மற்றவர்களும் இந்த பயிற்சியை கடைபிடிக்க வேண்டுமென்று சொல்லும் அதிகாரம் யாருக்காவது கிடைக்குமானால், அது வரவேற்கத்தக்கதே .
நோன்புப் பெருநாள் ஒரு கடுமையான பயிற்சியை, தானே மனமுவந்து – அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக மேற்கொண்ட விசுவாசிகளுக்கு – அற்புத சாதனையாளர்களுக்கு பெருங்கருணையாளனாகிய அல்லாஹ் வழங்கும் ஒரு சன்மானமாகும்.
மனிதர்களாக இருந்து கொண்டே அறவாழ்வின் அடிப்படையில் புனிதர்களாகத் தம்மை உயர்த்திக் கொண்ட அந்தத் திருவாளர்கள் அடையும் சன்மானம், பெருநாளின் மகிழ்ச்சியில் உலக மக்களும் பங்கு கொள்கிறார்கள்.
நம்மிடம் ஆயுதம் ஏந்தும் கரங்கள் உண்டு. ஆனாலும், அப்பாவி மக்களுக்கு ஆதரவாக இயங்கும் ஆயுதங்கள் இல்லை.
எனவே, நம்முடைய கோடானு கோடி கரங்களை அந்தக் கருணையாளனின் நினைவில் உயர்த்துவோம்.
“இறைவனே ! உன்னுடைய வலிமை யாராலும் தடுக்க முடியாதது. அந்த வலிமையால் கொடுமைகள் இழைக்கப்பட்ட அனைவருக்கும் உன்னுடைய கருணையால் – அபயம் தந்தருள்வாயாக ! கொடு மனம் கொண்ட கயவர்களால் சூழப்பட்ட அனைவருக்கும் பாதுகாப்பு நல்குவாயாக !
“உலகெங்கும் அமைதியை நிலை பெறச் செய்வாயாக ! சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் மனிதர்களிடையே நிலை நாட்டுவாயாக ! உன்னுடைய அளப்பரிய கொடையாலே மனித சமுதாயம் செழித்து சுபிட்சமுடன் வாழச் செய்வாயாக.
“கருணை மிக்கவனே ! உன் கட்டளைக்கேற்ப நோன்பு நோற்ற புண்ணியவான்களின் சாதனையை முன்னிலைப்படுத்தி உன் திருத்தூதர் காட்டிச் சென்ற வழிமுறைக்கொப்ப இரவெல்லாம் உன்னைப் புகழ்ந்தேத்தி – வணங்கி, வாழ்த்திய அந்த மனிதப் புனிதர்களின் தவநிலையின் அடிப்படையில் உன்னிடம் உளந்திறந்து பணிவோடு பிரார்த்திக்கின்றோம். எங்கள் வேண்டுகோளை ஏற்றருள்வாயாக. ஆமீன் ! ஈத் முபாரக் !!
( நன்றி – ‘மணி விளக்கு’ ஜுலை 1982 )

( மணிச்சுடர் ரமலான் சிறப்பு மலர் 2010 ன் மறுபிரசுரத்திலிருந்து )

Saturday, September 18, 2010

கொலைக்களம் குவாண்டனாமோ!

கொலைக்களம் குவாண்டனாமோ!
- வெ. ஜீவகிரிதரன்


அமெரிக்க நாட்டின் பொருளாதார இதயமான நியூயார்க் நகரின் இரட்டை கோபுரங்கள் 2001 செப்டம்பர் 11-ல்தான் தகர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உலக அளவிலே ஹஹபயங்கரவாதத்திற்கு எதிரான போர்��-பிரகடணத்தை அமெரிக்கா அறிவித்து களத்தில் இறங்கியதை நாம் அறிவோம். ஆனால், எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் பேராசைக்கு இது இன்னொரு காரணம் மட்டுமே என்பதை வெளி உலகம் அறியாது.

அரபு நாடுகள் அனைத்தும் முஸ்லிம் நாடுகளாக இருப்பதால், முதலில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து-அவர்களை ஒடுக்குவதாக கூறி அந்நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து-அதன் பின் அங்குள்ள எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்கிறது அமெரிக்கா. ஈராக் பேரழிவு ஆயுதங்களை குவித்து வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டி, அதன் மீது ஹஹபயங்கரவாதத்திற்கு எதிரான போர்�� தொடுத்து, அதிபர் சதாம் உசேனையும் அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் அனைவரையும் கொன்றொழித்தது. ஆனால், பேரழிவு ஆயுதம் ஒன்றைக் கூட ஈராக் மண்ணில் இருந்து கைப்பற்றி உலகுக்கு காட்ட இயலவில்லை. இன்று ஈராக் என்ணெய் வளம் முழுவதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது.

இப்படியான ஆக்கிரமிப்புப் போர்களின் போது பல்லாயிரம் அப்பாவி மக்களைக் கொல்வதுடன் பல நூறு பேரை கைதிகளாக பிடித்து, விசாரணை என்ற பெயரிலே கொடும் சித்ரவதை செய்வது அமெரிக்காவின் வாடிக்கை. ஈராக் மீதான ஆக்ரமிப்புப் போரின் போது ஈராக் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலிருந்தும் பல ஆயிரம் பேரை கைது செய்தது அமெரிக்க ராணுவம். அக்கைதிகளை அடைத்து வைக்க கியூபா நாட்டின் குவாண்டனாமோ வளைகுடாவில் சிறைச்சாலையையும் அமைத்தது. இது சிறைச்சாலையாக இல்லாமல் கொடும் சித்ரவதைச் சாலையாகவே இருந்தது. பல நூறு கைதிகள் இங்கு பிணமாக்கப்பட்டனர்.

இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நாள் முதல் 9.7.2004 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டுமே 24,000 கைதிகள் இந்த சிறையிலே விசாரணை என்ற பெயரிலே இது மனிதாபிமானமற்ற, மிருகத்தனமான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இது வெளி உலகின் குற்றச்சாட்டு அல்ல. அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலே உள் விசாரணை ஒன்றை நடத்தியது. இந்த மூன்று வருட காலங்களில் குவாண்டனாமோ சிறையில் பணி புரிந்த சுமார் 493-எப்.பி.ஐ. அதிகாரிகளுக்கு அதன் தலைமையகம் ஈமெயில் ஒன்றை அனுப்பியது. அதில் சிறைக் கைதிகளிடம் இராணுவ அதிகாரிகள் யாரேனும் வரம்புமீறி, அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பற்றி தெரியுமா? அப்படி ஏதும் நடந்திருந்தால் அதில் சம்பந்தப்பட் அதிகாரிகள் யார்? போன்ற விவரங்களை தலையகத்துக்கு தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டது. மொத்தம் 493 அதிகாரிகளில் 434பேர் இதற்கு பதிலனுப்பினர்.

தங்கள் பதிலில் தாங்கள் பணிபுரிந்த பொழுது சிறையில் நடந்த கொடுஞ் செயல்கள், சித்ரவதைகள், மேலும் அதைச் செய்த அதி காரிகளின் விவரங்கள் ஆகியவற்றை அளித்திருந்தனர். இச்செய்தி எப்.பிஐ. தலைமையகத்தால் டிசம்பர் 2004ல் அரசுக்கு அளிக்கப்பட்டது.

மனித உரிமை மீறல்கள், ஐ.நா.வின் ஜெனிவா ஒப்பந்த மீறல் போன்ற கொடுஞ் செயல்களில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டது அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பாலேயே வெளிப்பட்டதால், ஒரு உள் விசாரணை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு அமெரிக்க இராணுவம் தள்ளப்பட்டது. 2004-டிசம்பரில் தென் பிராந்திய கமாண்டர். பண்டஸ் ஜே.கிரட்டாக் இராணுவ புலன் விசாரணைக்கு உத்தரவிட்டார். பிரிகேடியர் ஜெனரல் ஜான். டி. பர்லோ விசாரணை

அதிகாரியாக நியமிக்கப்பட்டார். முதலில் 2 மாதம் விசாரணை நடத்திய ஜான். டி.பர்லோ, தன்னை விட மூத்த அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டிய நிலை இருப்பதை தலைமையகத்துக்கு தெரியப்படுத்தினார். அதனால் 28.2.2005 அன்று இந்த விசாரணைக் குழுவில் லெப்டினன்ட் ஜெனரல் ரேன்ட்ஸ் எம்.ஷ்மித் மற்றும் அமெரிக்க வான்படையின் தென்பிராந்திய கமாண்டர் டேவிட் மோன்தான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த புலன் விசாரணைக்குழு 24.3.2005 வரை விசாரணை நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட அமெரிக்க தென் பிராந்திய இராணுவ அதிகாரிகள், 30க்கும் மேற்பட்ட எப்.பி.ஐ. அதிகாரிகள், ஜாய்ன்ட் டாஸ்க் போர்ஸ் எனப்படும் கூட்டு நடவடிக்கைப் படை பிரிவு 160,170 மற்றும் குவாண்டனாமோ அதிகாரிகள், அமெரிக்க இராணுவ உளவுப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.

விசாரணையின் போது பல்வேறு குற்றச் செயல்களில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்ட தகவல்கள் புற்றீசல்களாய் வெளிவந்தன. இந்த புதிய தகவல்களையும் சேர்த்து புலன் விசாரணை செய்யுமாறு 5.5.2005ல் இராணுவ தலைமையகம் மீண்டும் உத்தரவிட்டது.

சித்ரவதைகள்
இந்த புலன் விசாரணைக் குழு விசாரிக்க வேண்டியதாக கூறப்பட்ட ஒழுங்கீனங்கள் என்ன தெரியுமா? இராணுவ விதிகளிலே கூறப்பட்டுள்ள விசாரணை உத்திகளை மீறி வேறு வகையான உத்திகளை விசாரணையின் போது கையாண்டது என்பதுhன். அவை யாவை?

1. விசாரணைக் கைதிகளின் மீது இராணுவ நடவடிக்கையில் உபயோகப்படுத்தப்படும் நாய்களை ஏவி விட்டு பயங்கரமாக குரைக்க வைப்பது. கடிக்க விடுவது போல பயமுறுத்துவது (இந்த உத்தி 12.11.2002க்கு பிறகு அங்கீகரிக்கப்பட் உத்தியாக மாற்றப்பட்டது)

2. கைதிகள் குர்ஆனின் ஆயத்துகளை தொடர்ந்து முணுமுணுப்பதாகக் கூறி அவர்களின் வாய்களை சுற்றி ஒட்டும் நாடாவைக் கொண்டு இறுக்கிக் கட்டி வைத்தது.

3. கைதிகளை விசாரணை செய்யும் போது தான் இராணுவ அதிகாரி என்பதை மறைத்து, எப்.பி.ஐ. அதிகாரி எனப் பொய் சொல்லி அவர்களை மிரட்டியது.

4. எப்.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் பணிகளை செய்ய விடாமல் இராணுவ அதிகாரிகள் தடுத்தது.

5. வக்கிரமான பாடல் இசைகளை பயங்கர சத்தத்துடன் நீண்ட நேரம் அலறச் செய்து கைதிகளை சித்ரவதை செய்தது.

6. ஒரு நாளைக்கு 18 முதல் 20மணி நேரம் விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து 48 முதல் 54-நாட்கள் கைதிகளை தூங்கவே விடாமல் விசாரணை செய்தது. தொடர்ந்து 10 அல்லது 15 நிமிடங்களுக்கு மேல் தூங்க அனுமதிக்காதது. (இந்த உத்தி 2.12.2005க்கு பிறகு அங்கீகரிக்கப்பட்ட உத்தியாக மாற்றப்பட்டது).

7. தரையிலே சிறு வளையம் பொறுத்தி அதிலே கைதியின் இரு கைகளையும் மணிக் கட்டுவரை நுழைத்து பூட்டி விடுவது இதன் மூலம் எப்போதும் கைதி குறுகிய நிலையில் குனிந்தே இருக்க வேண்டும்.

8.அளவுக்கு அதிகமான வெப்பத்தையும், அளவுக்கு அதிகமான குளிரையும் மாறி மாறி கைதிகள் மேல் செலுத்தியது (2.12.2005க்கு பின்னர் இந்த உத்தி அங்கீகரிக்கப்பட்டுவிட்டது)

9. ஆண் கைதிகளின் தொடை மீது அமர்ந்து பெண் இராணுவ அதிகாரிகள் ஹஹலேப் டான்ஸ்�� எனப்படும் பாலியல் வக்கிர நடனம் ஆடியது.

10. பெண் இராணுவ அதிகாரி ஆண் கைதி முகத்தின் மீது மாதவிலக்கில் வெளிப்பட்ட இரத்தத்தை பூசியது (விசாரணையில் அது வெறும் சிவப்பு மைதான் என கூறப்பட்டது)-

11. கைதிகளிடமிருந்து குர்ஆன் நூலை பிடுங்கி எறிவது.

12. பெண் இராணுவ அதிகாரிகள் தங்களின் உடைகளைக் களைந்து விட்டு ஆண் கைதிகளின் உடலோடு உரசுவது, அவர்களின் தலை மயிரில் விரல்விட்டு கோதுவது, அவர்களின் மர்ம உறுப்புகளை தொடுவது போன்ற பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது. (இந்த உத்தி இராணுவ விசாரணையின்போது கைதியின் மன உறுதியை குலைக்கச் செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட உத்திதான் என விசாரணையின்போது விளக்கம் தரப்பட்டது).

13. கைதிகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை தராமல் சித்ரவை செய்தது.

14. குர்ஆனை தரையிலே கிடத்தி விட்டு அதன் மேல் ஏறி உட்கார சொல்வது.

15. கைதிகளின் மன உறுதியைக் குலைப்பதற்காக அவர்களின் குடும்பமே தற்போது சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொய் சொன்னது.

இவையல்லாம் கடுமையான உடல் ரீதியான சித்ரவதைகளுக்கும் மேலாக செய்யப்பட்ட மன ரீதியான சித்ரவதைகள்தான். உடல் ரீதியான சித்ரவதைகளுக்கு அளவே இல்லை.

அமெரிக்க இராணுவத்தின் புலன் விசாரணையின்போது கைதிகளிடம் கையாள வேண்டிய விசாரணை உத்திகளில், கைதிகளின் மன உறுதியைக் குலைப்பதற்கென சில உத்திகள் கையாளப்படுகின்றன. இராணுவ விதிகள் எப்.எம்.34-52 விதிகள் எனப்படும் அவை என்ன தெரியுமா?

1. ஆண் கைதிகளுக்கு பெண்களின் உள்ளாடைகளை மட்டும் அணிவிப்பது.

2. கைதியின் தாயும், சகோதரியும் விபச்சாரிகளாக மாறிவிட்டதாக பொய் தகவல் தருவது.

3. கைதி ஒரு ஓரின சேர்க்கையாளன் என முத்திரை குத்துவது. ஓரின சேர்க்கை மூலம் வன் புணர்ச்சிக்குள்ளாக்கப் போவதாக மிரட்டுவது.

4. நாய்க்கு கழுத்திலே கட்டும் பட்டையைப் போல கைதியின் கழுத்திலே கட்டி சிறு கயிறு அதிலே இணைத்து நாள் முழுவதும் நாயைப் போல அறையை சுற்றி, சுற்றி வரச் செய்வது.

5. வக்கிரமான பாடல்களை அலறவிட்டு அந்த இசைக்கு ஏற்ப விசாரணை அதிகாரியுடன் நடனமாட வேண்டும் என கொடுமைப் படுத்துவது.

6. கைதியை முழு நிர்வாணமாக்கி விட்டு பெண் அதிகாரிகளின் மத்தியிலே நிற்கச் செய்வது.

7. தொழுகை நடத்த முயலும் போது தடுப்பது.

8. கைதியில் தலை மீது அடிக்கடி நீரைக் கொட்டுவது.

இந்த உதிகளின் மூலம் ஒரு கைதி தொடர்ந்து 160 நாட்கள் தனிமைச் சிறையிலேயே, ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் விசாரிக்கப்பட்டதாக விசாரணைக் கோப்புகளில் இருந்ததை மேற்சொன்ன இராணுவ புலன் விசாரணைக் குழு காண முடிந்தது. அக்கிரமங்கள் மூடி மறைப்பு!

இந்த கொடும் செயல்கள் எல்லாம் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும், ஐ.நா.வின் ஜெனிவா ஒப்பந்த விதிகளை மீறுவதாகவும், மனித குல நாகரிகத்துக்கு எதிரானதாகவும் இருந்த போதும், விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழு அத்துனை அக்கிரமங்களையும் மூடி மறைத்தது. கைதிகள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ன.

1. இராணுவ விதிகளில் அங்கீகரிக்கப்பட்ட விசாரணை உத்திகள்.

2. இராணுவ விதிகளால் பிற்பாடு அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட விசாரணை உத்திகள்.

3. அங்கீகரிக்கப்படாத விசாரணை உத்திகள்.

இவற்றில் பெரும்பான்மையான குற்றச்சாட்டுகள் முதல் இரண்டு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன. மூன்றாவது வகை குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களை எச்சரித்து விட்டு விடலாம் எனப் பரிந்துரை செய்யப்பட்டது.

சர்வதேச நெருக்கடி காரணமாக சமீபத்தில் குவாண்டனாமோ சிறையை படிப்படியாக மூடிவிடுவது எனவும், அங்குள்ள கைதிகளை அமெரிக்காவின் சாதாரண சிறைகளுக்கு மாற்றி விடுவது என்றும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

2002ம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த உமர் காதிர் என்ற 15-வயது சிறுவன் அல்-காயிதா அமைப்பை சேர்ந்தவன் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டான்.

இன்றுவரை அச்சிறையின் அனைத்து சித்ரவதைகளையும் சந்தித்தும் உயிரோடு உள்ளான். அவன் மீதான வழக்கு விசாரணை 13.8.2010ல் தொடங்குவதாக அமெரிக்க ராணுவ நீதிமன்றம் அறிவித்துள்ளது. விசாரிக்கப்போகும் நீதிபதிகள் யார் தெரியுமா? அதே கொடுங்கோல் இராணுவத்தின் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுதான். இங்கு கொலைக் களமே நீதிமன்றம்... கொலைகாரர்களே நீதிபதிகள்!!



Wednesday, September 15, 2010

இப்னு தளபதி

இப்னு தளபதி


http://ibnuthalabathi.wordpres.us/2010/04/in.html

Monday, September 13, 2010

இறையருள் எல்லோருக்கும் நிறைக! புதிய சரித்திரம் படைப்போம்! - கே.எம்.கே

இறையருள் எல்லோருக்கும் நிறைக! புதிய சரித்திரம் படைப்போம்! - கே.எம்.கே

நோன்புப் பெருநாள் நிறைவுற்று, புதிய வாழ்க்கை துவங்குகிறது நோன்பின் மாண்பால் புவனம் முழுவதிலும் சுவன சுகமும் இன்பமும் பெருகிட வேண்டும் என்றே நோன்பாளிகள் வேண்டினர். எதையும் மறந்து எண்ணங்களைத்துறந்து இதயம் திறந்து இறைவனிடம் முறையிடும் போது அதற்குரிய பலனும் பயனும் நிச்சயமாகவே கிடைக்கவே செய்கிறது.
நோன்பாளிகள் வாழ்த்துக்கு உரியவர்கள். இதனை கவிஞர் தா. ஜெய்புன்னிஷா தனது கவிதையில் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இகபர சுகமெலாம் ஈந்திடும் நோன்பினை
இனிதுற நோற்பவர் நுழைவர்நல் சுவனமே
செகமிதில் எண்ணம் சொல் செயல்பாடுயாவிலும்
சேர்ந்திடும் நன்மையால் சிறப்புறும் புவனமே||
புவனத்தைப் புனிதப்படுத்தும் நோன்பிருந்து எங்களுக்கும் வாழ்த்துக்களை வாரி வழங்கிய அத்துணை நன்னெஞ்சங்களுக்கும் நமது இதய வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்தாம் எத்தனை வகை? அடடா, இப்படி யெல்லாம் வாழ்த்து கூற முடியுமா? என்று வியப்புற்று அதிசயிக்கச் செய்யும் அற்புத வாசகங்கள்! அடுக்கு மொழிகள்! உள்ளத்தைத் தொட்டிழுக்கும் கவிதை வரிகள்! அவை யாவும் சொற்செண்டுகள் மட்டுமா? தெவிட்டாத கற்கண்டுகள்!
இறையருள் எல்லோருக்கும் நிறைக!
தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த வாழ்த்துக்களுக்கு ஈடாக, ஏன், கொஞ்சம் அதிகமாகவே பிற மாநிலங்களில் இருந்தும் வந்து குவிந்துள்ளன. எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கடிதம் எழுத வேண்டும் என்னும் வேணவா ஏற்பட்டதன் விளைவே இந்தக் கட்டுரை.
இதைக் கட்டுரை என்று கூறுவதைவிட, எங்களின் கல்பில் - இதயத்தில் ஊறிய நன்றிப் பெருக்கின் வெளிப்பாடாகவே கருத வேண்டும்.
வாழ்த்துச் செய்திகளில் வந்த வைர வரிகளைப் பார்த்தபோது, அவற்றில் தலை சிறந்தவற்றுக்கு விருதும், பரிசும் வழங்கி வரிசைப்படுத்தினால் என்ன என்னும் சிந்தனை கூடப் பிறந்தது. இந்திய மாநிலங்களில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அமைப்புகள் தினம் தினம் ப+த்த வண்ணமாக உள்ளன. புதிய புதிய தலைவர்கள் - நிர்வாகிகளாகப் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்.
கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் மட்டுமே இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயல்பட்டுக் கொண்டிருக் கிறது என்று எழுதுவோரும், ஏகடியம் பேசுவோரும் எங்கும் உள்ளனர். ஆனால், இந்த அந்த விமர்சனக்காரர்கள் பெரும் வியப்படைந்தவர்களாக மாறி விடுவார்கள்.
நோன்பு மனதுக்கு இதம் சேர்த்தது@ உடலுக்கு புதிய தெம்பைத் தந்தது@ சமூகத்திற்குப் புதிய சிந்தனையைத் தந்தது@ தேசத்துக்கு புதிய உறவுப் பாதையை வழங் கியது@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு இதுவரை இல்லாத தொரு புதிய வரலாற்றையே இந்த ஆண்டு ரமளான் தந்திருக்கிறது.
வார்த்தைகளில் வந்த வாழ்த்துச் செய்திகளே!
நாளைக்கு செயல்பாடுகளால் வந்த வெற்றிகளாக
மாறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!
வாழ்த்தாக வந்ததை வெற்றிக்கு இறைவன் தந்த விதையாக ஏற்போம்! புதிய சரித்திரம் படைப்போம்!

http://www.muslimleaguetn.com/news.asp?id=1843

Thursday, September 9, 2010

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சியில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேச்சு

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சியில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேச்சு

இஸ்லாமிய கொள்கை என்பது புதிதாக வந்த ஒன்றல்ல ஆதியில் இருந்தே இருந்து வரும் கொள்கை யாகும் இன்று உலகில் உள்ள பல்வேறு மதங் களின் அடிப்படை தத்து வம் ஏகத்துவமே. ஆனால், அதனை மற்றவர்கள் மறந்து விட்டார்கள். இன் னும் சிலர் அந்த தத்து வத்தை மறைத்துவிட்டார் கள். அதனை நினைவ+ட்டி ஏகத்துவ கொள்கையை உறுதியாக வெளிப்படுத்து வது இஸ்லாம் மார்க்கம்.
இதனை அனைத்து மக் களுக்கும் தெரியப்படுத் துவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை. அது இன் றைய அவசிய தேவையாக வும் இருக்கிறது என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
இந்திய தவ்ஹீத் ஜமா அத் தலைமை அலுவல கத்தில் 2.9.2010 அன்று நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராக பங்கேற்ற பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் சிறப்புரையாற்றும் போது குறிப்பிட்டதாவது
இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் என்பது இந்தியா வில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் இன் னும் சொல்லப்போனால் அனைத்து மக்களுக்கும் பொதுவான ஓர் இயக்க மாகும். இந்த இயக்கத்தின் அடிப்படை தத்துவமாக அமைந்திருப்பது தேசிய ஒருமைப்பாடு, சமூக நல் லிணக்கம், சிறுபான்மையி னரின் குறிப்பாக முஸ்லிம் களின் கலாச்சார தனித் தன்மை பாதுகாப்பு என் பதே ஆகும்.
இந்த கொள்கைகளை எவரெல்லாம் ஏற்று அதனை மேலோங்க செய்ய யாரெல்லாம் பாடு படுகிறார்களோ அவர்க ளெல்லாம் முஸ்லிம் லீகி னர்தான். அந்த வகையில் நமது சமுதாயத்தில் இன்று பல்வேறு அமைப்புகள் பல நல்ல காரியங்களை ஆற் றிக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் லீகை பொறுத் தவரை எந்த சமுதாய அமைப்பையும் நாங்கள் எதிர்ப்பது கிடையாது. எல் லோரையும் அரவணைத்து சமுதாய முன்னேற்றத்திற்கு நல்ல முறையில் பயன்படுத் தவே விரும்புகின்றோம். நாங்கள் எல்லோரையும் ஊக்குவித்து வளர்க்க செய்ய விரும்புகின்றோமே தவிர எவரையும் அழிப்ப தற்கு விரும்பியதில்லை.
என்னிடம் பலமுறை பத்திரிகையாளர்கள் கேட்டகேள்வி இன்றும் கூட கேட்டுக் கொண்டி ருக்கும் கேள்வி எதுவென் றால் சிறுபான்மை சமுதா யமான உங்கள் சமுதாயத் தில் நிறைய அமைப்புகள் உள்ளனவே? இதனால் உங்களின் முன்னேற்றம் பாதிக்கப்படாதா? என்பது தான். நான் அவர்களுக்கு அளிக்கக் கூடிய பதில், ஹஹஎங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஏதோ ஒரு சில காரணத்தால் கருத்து வேறுபாடு கொண்டவர் களாக, தனித்தனியாக புது புது அமைப்புகளை தொடங்கி நடத்துவது அவர்களின் சமுதாய ஆர் வத்தையும், ஏதோ ஒரு வகையில் இந்த சமுதாயத் திற்கு சேவையாற்ற வேண்டும் என்ற அவர் களின் விருப்பத்தையுமே வெளிப்படுத்துகிறது.
அவர்கள், மற்ற சில அரசியல் கட்சிகளில் சேர்ந்து அதனோடு கரைந்து போகாமல் தாங் கள் பிறந்த, வளர்ந்த சமு தாயத்திற்கு சேவையாற் றும் நோக்கத்துடன் சமு தாய அமைப்புகளை தொடங்குவது பாராட்டுக் குரியதுதான். எல்லோரும் ஓர்நாள் ஒன்றிணைந்து செயல்படும்நாள் வரத்தான் செய்யும். அப்போது அத னால் விளையும் பயன்கள் அதிகமாக இருக்கும்|| என்று பதிலளித்தேன்.
எங்களைப் பொறுத்த வரையில், சமுதாய அமைப்புகள் குறித்த எண்ண ஓட்டம் இவ்வாறு தான் இருக்கிறது. அந்த வகையில்தான், நீங்கள் அழைத்த இஃப்தார் நிகழ்ச் சியிலும் கலந்துகொள்ள வந்துள்ளேன்.
இன்று, இஸ்லாமிய சமு தாயம் அதிலும் இந்தியா வில் உள்ள முஸ்லிம்கள் மூன்று அடிப்படையான விஷயங்களைசெய்ய வேண் டிய நிலையில் உள்ளனர்.
ஒன்று, அவர்கள் தங்கள் மார்க்கம் குறித்த தெளி வான புரிதலை உடைய வர்களாக ஆக வேண்டும்.
இரண்டாவது, தங்களின் மார்க்கத்தை, அதன் தனித் தன்மை, கலாச்சார அடை யாளங்களை அன்றாட வாழ்வில் பின்பற்றி வாழ வேண்டும்.
மூன்றாவது, தங்களின் மார்க்கம் குறித்து, அதன் சிறப்புகள் குறித்து தங் களை சுற்றியுள்ள சமுதாய மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
இஸ்லாம் மார்க்கத்தை பொறுத்தவரை அது பிரச்சாரம் செய்யக்கூடிய மார்க்கமாக அமைந்துள் ளது. திருக்குர்ஆனும், திருத் தூதர் நபி (ஸல்) அவர் களின் வாழ்வும் அனைத்து மக்களுக்கும் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். அதன்பால், மக்களை அழைக்க வேண்டும் என் பதை அடிப்படைநோக்க மாக கொண்ட மார்க்கம் இஸ்லாம்.
இதில், எந்த சமரசத்திற் கும், விட்டுக் கொடுத்தலுக் கும் இடமே இல்லை. இந் தியாவை பொறுத்தளவில் இன்று இந்தப் பணி மிகவும் தேவையாக இருக்கிறது. நாம் அந்தப் பணியை சரி யாக, முறையாக செய்யாத நிலையிலும் கூட ஏராள மான மக்கள் இஸ்லாத்தால் கவரப்பட்டு தங்களை முஸ்லிம்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இன்னும் சில ஆண்டு களில் மொத்த இந்தியாவும் முஸ்லிம் மயமாகிவிடும் என்ற அச்சம் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்பு களால் பரப்பப்படுகின்றன. அதன்காரணமாக, அவர்கள் இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் பல பொய்யான தகவல்களை, உண்மையல் லாத நிகழ்வுகளை வெறுப் ப+ட்டும் செய்திகளை வேக மாக பரப்பிக் கொண்டிருக் கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப் பைச் சேர்ந்த கங்காதர் நந்தா என்பவர் எழுதி யுள்ள ஒரு புத்தகத்தில், இந்தியா இன்னும் 25 ஆண்டுகளில் இஸ்லாம் மயமாகிவிடும் என குறிப் பிட்டுள்ளார். அந்த நூலைத் தொடர்ந்து வெளிவந்த பல நூல்களும் இவ்வாறான செய்திகளை கொண்டிருக்கின்றன. அவர்களின் அச்சம் தேவையில்லத ஒன்றாகும்.
இஸ்லாம் என்பது ஏதோ புதிதாக வந்த கொள்கை போன்றும், அது எங்கோ இருந்து இங்கு இறக்குமதி செய்வது போன்றும் அவர்களின் பிரச்சாரங்கள் அமைந் திருக்கின்றன.
ஆனால், இஸ்லாம் அவர்கள் நம்பும் வேதங் களில் உள்ள உண்மை தத்துவங்களை அவர்கள் மறந்துவிட்ட செய்திகளை இன்னும் சொல்லப் போனால் அவர்களில் சிலர் வேண்டுமென்றே மறைத் துவைத்த வேதங்களின் உண்மை தத்துவங்களை நினைவ+ட்டி வெளிப் படுத்தி அதன்பால் செயல் பட தூண்டுவே இஸ்லாம் மார்க்கமாகும்.
உலகில் உள்ள அனைத்து மதங்களின் அடிப்படை தத்துவமாக அமைந்திருப்பது ஏகத்துவ கொள்கையாகும். இந்த கொள்கையை உறுதியாக எந்தவித விட்டுக்கொடுத் தலுக்கும் இடமில்லாமல், சமரசம் செய்துகொள்ளா மல் ஏற்றுக் கொண்டவர் கள் முஸ்லிம்களாக உள்ள னர். இஸ்லாம் எந்த ஒரு மதத்தையும், கலாச்சாரத் தையும் அழிப்பதற்காக வந்த மார்க்கம் அல்ல. அவர்களின் மதங்களில் கலாச்சாரங்களிலும் ஒளிந்து கிடக்கும் புதையல் களை தேடிக்கண்ட டைந்துகொள்ள வழி காட் டும் மார்க்கமாகவே இஸ் லாம் அமைந்துள்ளது. இந்த செய்தியினை எல் லாம் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் தௌ;ளத்தெளிவாக எடுத் துச் சொல்ல வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமுக்கு இன்று அவசர-அவசிய தேவையாக இருக்கிறது. இதன்பால், செயல்படுபவர் களை நாங்கள் ஊக்குவிக் கிறோம்-பாராட்டுகிறோம்-வரவேற்கிறோம்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.
பேராசிரியர் கே.எம்.கே.வின் சிறப்பான பணி
முன்னதாக நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத தலைவர் எஸ்.எம். பாக்கர் தலைமை உரை யாற்றுகையில்,
இந்திய முஸ்லிம்களுக்கு தாய்ச்சபையாக திகழும் முழு தகுதிபடைத்தது இந் திய ய+னியன் முஸ்லிம் லீக்தான் என்றும், சிராஜுல் மில்லத் அப்துல் ஸமத் சாஹிப் அவர்களின் மறை விற்குப் பிறகு தமிழகத்தில் முஸ்லிம் லீகிற்கு எதிர் காலம் இருக்காது. அந்த இயக்கம் அழிந்து போய் விடும் என்று பலரும் கருதிய நிலையில் மிகவும் இக் கட்டான சூழ்நிலை யில் அந்த இயக்கத்திற்கு தலைமை பொறுப்பை ஏற்ற பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் பல் வேறு நெருக்கடிகள், சிரமங்களுக்கு மத்தியிலும் அந்த இயக்கத்தின் பாரம் பரிய பெருமைகளை தொடர்ந்து காத்துவருவது டன், இன்று அந்த இயக் கம் நல்ல வளர்ச்சியை காணவும் வழிவகை செய்து மிகவும் எளிய தலைவராக, எல்லோருக்கும் வழிகாட் டும் தலைவராக அமைந் துள்ளார் என குறிப்பிட் டார்.
நூல் வெளியீடு
பேராசிரியரின் உரையை தொடர்ந்து ஸாஜிதா பதிப்பகத்தின் ஹஹகலீஃபாக் கள் வரலாறு|| என்ற நூலினை பேராசிரியர் கே.எம்.கே. அவர்களுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைத் தலைவர் முஹம் மது முனீர் வழங்கினார். நூல் வெளியிட்டாளர் முஹம்மது ஜகரிய்யா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஏ.எம். நிஜாமுதீன், ஜலால், அன் வர், முஹம்மது ரபி, ஷெரீப், மணிச்சுடர் ஹமீது உள்ளிட்டஏராள மானோர் கலந்து கொண்டனர்.


--

பிரிந்தால் சரியாச்சொல்..?

பிரிந்தால் சரியாச்சொல்..?


எத்தனை எத்தனை மாண்புதனை
நித்தமும் நிதமும் சுமந்துவந்தாய்
பக்தனை பக்குவப் படுத்திடவே
பாரினில் நீதான் பிறந்துவந்தாய்

சாந்தியும் தூய்மையும் நீயேஏந்தி வந்தாய்
சரித்திர பத்ரையும் நீயேபெற்றுக் கொண்டாய்
ஆண்டுகள் யாவும்நீயே ஆகியிருக்கக் கூடாதோ
அகிலத்தை அருளில்நீயே அமிழ்த்திநிற்கக் கூடாதோ


பள்ளிகள்யாவும் நிறைந்திருக்கும் காட்சிகள் தருவாய்
நல்லஉள்ளத் தோடேதர்மமீயும் மாட்சிகள் சொறிந்தாய்
மீட்சிப்பெறவே தெளபாவேற்று மலர்ச்சி அருள்வாய்
மகிழ்ச்சிசூழ் சொர்க்கப்பூங்கா வாங்கியுந் தருவாய்


இறையவன் நினைவினில் இகத்தவர் ஆழ்கிறாய்
இராப்பகல் எங்கிலும் இபாதத்து செய்கிறார்
பெரியவன் தூதராம் பெருமான் நபிகளை
நிறைம னமாகவே நேரமும் புகழ்கின்றார்

விலங்குதனை சைத்தானுக்கு உன்னில் இட்டாய்
விலங்குகுணம் மனிதனிலே அகற்றி விட்டாய்
அமரகுணம் மனிதன் தன்னில் மிளிரவைத்தாய்
அமரத்துவம் எய்திடவே அழைத்தும் நின்றாய்

வானினில் வதிந்திடும் பிறையிற் கெல்லாம்
உன்னைப் போல்மவுசுக் கிடைத்தது மில்லை
வாழ்வினில் வந்திடும் மாதங்க ளெல்லாம்
உன்னைப் போல்மகத்துவம் தந்தது மில்லை

நேற்றுவந்து நேசம்கொண்டு இன்று பிரிந்தால் சரியாச்சொல்..?
நேயன்மனதை நெகிழச்செய்து விலகிப் போவதும் முறையாச்சொல்..?
மீண்டும்மீண்டும் வாழ்வினிலே வந்தே பூத்திடு ரமலானே..!
வேண்டும்நலன் கள்யாவையுமே நீதான் சேர்த்திடு ரமலானே..!

கவியாக்கம்- ஜே.எம்.பாட்ஷா

பலஸ்தீனம் - பயாஸ்கோப்பு....

பலஸ்தீனம் - பயாஸ்கோப்பு....
ஈரான் - ஆக்கிரமிப்பு.....
- வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்

http://www.muslimleaguetn.com/news.asp

http://mudukulathur.com/?p=1951

உலகெங்கும் உள்ள ஊடகங்களில் மிக அதிகமாக கையாளப்பட்ட செய்தி “இஸ்ரேல்-பலஸ்தீன பேச்சு வார்த்தை தான். செப்டம்பர் 2-ம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்த பேச்சுவார்த்தை துவக்கப்பட்டது. அமெரிக்கா, ஐ.நா. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யா ஆகியவை இணைந்து மேற்கொண்ட முடிவின் படி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹும், பலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸ் -ம் அப்பம் பங்கிட்ட குரங்காக அமெரிக்காவை நடுவராக வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தைகளை துவக்கி விட்டன. இது சுமார் ஒரு வருடம் நீடிக்கும் என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. ஒரு சுதந்திரமான, ஜனநாயக, குடியரசாக பலஸ்தீனம் இப்பேச்சு வார்த்தையின் முடிவில் மலர்ந்து விடும் என ஜிகினாக்கள் தூவப்பட்டுள்ளன.

பல ஆண்டு காலமாக மத்திய கிழக்கு பகுதியிலே இருந்து வந்த மிகப் பெரிய சவாலை இஸ்ரேல் - பலஸ்தீன பதட்டங்களை தணிக்க அமெரிக்கா முன் நின்றுள்ளதாக சில அரபு நாடுகளும் பெருமை கொள்கின்றன. காரணம் அமெரிக்காவுக்கும் இந்த அரபு நாடுகளுக்கும் உள்ள நெருக்கம் நியாயப்படுத்தப்பட வேண்டிய நிலை தற்போது உள்ளது என்பதுதான்.
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கை எடுக்கும் முன்னர் அமெரிக்கா தன்னை ஒரு சமாதான விரும்பியாக, சமாதானத்துக்கான நேர்மையான தூதுவனாக காட்டிக் கொள்ளவே இந்த நாடகம் ஆரம்பமாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த உண்மை தன்மையும் இல்லை. கிழக்கு ஜெருசலேமில் ய+தர்களை குடியேற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறையவில்லை. மேற்குக் கரையிலும், கிழக்கு ஜெருசலேமிலும் புதிய யூத குடியிருப்புகளை நிறுவுகின்ற இஸ்ரேலின் நடவடிக்கைகளை நிறுத்தாமல் பேச்சு வார்த்தை துவங்க முடியாத என பலஸ்தீனம் அறிவித்தது.
ஆனால், கடந்த மார்ச் மாதம் மேலும் 1,600 யூத குடியிருப்புகளை கட்டுவதற்கான திட்டத்தை இஸ்ரேல் அறிவித்தது. பேச்சுவார்த்தைக்கான அடிப்படை சூழல் கூட இல்லாத நிலையில் பலஸ்தீனத்தின் கழுத்திலே கை வைத்து தள்ளி கொண்டு வந்து பேச உட்கார வைத்துள்ளது அமெரிக்கா. தன்னை ஒரு பக்கம் ஜனநாயகவாதியாக காட்டிக் கொண்டே, இன்னொரு பக்கம் ஈரானை விழுங்குவதுதான் அமெரிக்காவின் சதித்தனம். இதில் அரபு நாடுகளில் சிலவற்றையும் தன்னுடன் இணைத்து கொள்வதே அதன் நரித்தனம். இதற்கு சுன்னத்தி-ஷியா அரசியலை பகடைக்காயாக உருட்டுகிறது.
ஈரான் மீது ராணுவ தாக்குதல் தொடுக்க வேண்டிய அவசியத்தை இஸ்ரேல் பல ஆண்டுகளாகவே வலியுறுத்துகிறது. அதற்கு அரபு நாடுகளின் துணையும தேவை என்பதை உணர்ந்தே உள்ளது. சன்னி முஸ்லிம் அரபு நாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஷியா முஸ்லிம் நாடான ஈரானுக்கு எதிராக களத்தில் இறக்க அமெரிக்கா அனைத்து ஆயத்தங்களையும் செய்துள்ளது. அதற்காக அந்நாடுகளிலெல்லாம் அபரிமிதமாக ஆயுதங்களை சப்ளை செய்துள்ளது.

சவூதி அரேபியாவுடன் 60 பில்லியன் டாலர் பெறுமான ஆயுத பேரத்தை முடித்துள்ளது அமெரிக்கா. இந்த வருடம் மட்டும் ரேடார் மற்றும் ஏபுகணை எதிர்ப்பு வசதிகளுடன் உள்ள 84 நவீன எஃப்.-15 ஜெட் விமானங்கள், 70 யூ.எச்.-60 பிளாக்ஹாக் ஹெலிகாப்டர்கள், 60 லாஸ்பௌ அபாச்சே ஹெலிகாப்டர்கள், 2742 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியவற்றுடன் பல்வேறு உபகரணங்களையும் சவ+திக்கு அமெரிக்கா விற்றுள்ளது.
சென்ற ஒரு வருடத்தில் மட்டும் ஜோர்டான் நாட்டுக்கு 220 மில்லியன் டாலர்கள் பெறுமான 80 நவீன ரக ராக்கெட் லாஞ்சர்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 338 மில்லியன் டாலர்கள் பெறுமான 1808 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், இருட்டிலும் இயங்கக் கூடிய 162 லாஞ்சர்கள் ஆகியவற்றையும் விற்றுள்ளது.

அமீரகத்துடன் 290 மில்லியன் டாலர் பெறுமான ஆயுத விற்பனைக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் முலம் 1600 லேசர் வெடிகுண்டுகள், 800 ஒரு டன் எடை கொண்ட வெடிகுண்டுகள், 400 பதுங்கு குழி வெடிகுண்டுகள் ஆகியவை சப்ளை செய்யப்படும்.

எகிப்துடன் இந்த வருட ஆரம்பத்தில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி 3.2 பில்லியன்
டாலர்கள் பெறுமான 24 எஃப்.16 ஜெட் விமானங்கள், போர்க்கப்பல்களை தகர்க்கும் அதிநவீன ஹார்ப்ப+ன் பிளாக் -2 ஏவுகணைகள், ஏவுகணைகளை தாங்கி அதிவேகமாக செல்லும் 4 நவீன படகுகள், 450 டாங்கி எதிர்ப்பு ஏவுகணை களையும மற்றும் 750 மில்லியன் டாலர் பெறுமான எஃப்.16 ஜெட் விமானங்களுக்கான 156 ஜெட் என்ஜின்களும் விற்கப்பட்டுள்ளன. சூயஸ் கால்வாய் வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்கள் எகிப்து அனுமதி இருநதால் மட்டுமே செல்ல முடியும். கடந்த ஜூன் மாதம் ஒரு இஸ்ரேலிய போர்க்கப்பலும், 11 அமெரிக்க போர்க் கப்பல்களும் சூயஸ் கால்வாய் வழியாக செல்ல எகிப்து அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஈரானுக்கு வைக்கப்பட்டுள்ள குறி என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு அரபு நாடுகளுக்கு நவீன ஆயுதங்கள் வழங்குவது குறித்து அமெரிக்க ராணுவ தலைமை அமெரிக்க காங்கிரசில் அறிக்கை தாக்கல் செய்யும் போது “இது மத்திய கிழக்கு பகுதியிலே வலுவான தளத்தை ஈரானுக்கு எதிராக உருவாக்க அவசியமான ஒன்று"- என தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அரபு நாடுகளுக்கான ஆயுத பேரங்களை எதிர்த்துள்ளது. தன்னை விட ராணுவ ரீதியில் பலமான மத்திய கிழக்கு பகுதியிலே இன்னொரு நாடு உருவாகி விடக் கூடாது என்பதிலே அது உறுதியாக உள்ளது. இதனால் அமெரிக்கா இஸ்ரேலை சமாதானப்டுத்தும் முகமாக அரபு நாடுகளுக்கு விற்கப்பட்ட ஆயுதங்களை விடவும் நவீன ஆயுதங்களை இஸ்ரேலுக்கு வழங்கியுள்ளது. உலக பேட்டை ரவுடி அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதியின் பேட்டை ரவுடியாக இஸ்ரேல் நீடிக்க தேவையான உறுதியை இஸ்ரேலுக்கு தந்துள்ளது.
சவூதி அரேபியாவுக்கு விற்கப்பட்ட எஃப்-15 போர் விமானத்தில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளோ, மற்ற நவீன ஆயுதங்களோ கிடையாது. ஆனால் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டுள்ள எஃப்-35 என்ற மிக நவீன போர் விமானம் ரோடர் கண்களிலேயே மண்ணைத் தூவி, விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் ஏமாற்றி விட்டு இலக்கு நோக்கி சென்று திரும்பும் வசதிகள் கொண்டதாக உள்ளது. இது மட்டுமல்லாது இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் நிறுவனமும், போயிங் நிறுவனமும் இணைந்து உருவாக்கி வரும் ஏரோ-3 ஏவுகணை எதிர்ப்பு குறுக்கீட்டு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 100 மில்லியன் டாலர்கள் நிதியுதவி அளித்துள்ளது. ராக்கெட் எதிர்ப்பு ஏவுகணை உருவாககும் இஸ்ரேலின் அயர்ன் டோம்-க்கு 205 மில்லியன் டாலர்கள் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 12-06-2010 அன்று லண்டனில் இருந்து வெளியாகும் டைம்ஸ் செய்தி இதழ் அமெரிக்க ராணுவ அதிகாரி அளித்துள்ள செய்தி ஒன்றினை வெளியிட்டுளளது. அதில் ரியாத் - தன் நில எல்லை மீது இஸ்ரேல் போர் விமானங்கள், வெடிகுண்டு வீச்சு விமானங்கள் பறந்து செல்ல அனுமதி அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஈரானின் அணு உலை நிலைகளின் மீது குண்டு வீச இஸ்ரேலுக்கு இந்த அனுமதி ரியாத்தால் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அமெரிக்காவின் ஒப்புதல் பெற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
‘ஈரான் ஆக்கிரமிப்பு| என்பது அமெரிக்காவின் திடீர் திட்டமல்ல. உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகளில் ஈரான் 3-வது இடத்தில் உள்ளது. இதை விழுங்க அமெரிக்கா 1995-லேயே திட்டம் தீட்டி விட்டது. அமெரிக்க ராணுவத்தின் மத்திய படைப் பிரிவின் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி 1995லேயே முதலில் ஈராக் பின்னர் ஈரான் என ஆக்கிரமிப்புகள் திட்டமிடப்பட்டு விட்டன. முதலில் குறிப்பிட்ட பிராந்தியத்தில் ஒரு பதட்டத்தை - ராணுவரீதியிலான பதட்டத்தை - உருவாக்கி, பின்னர் ராணுவ துருப்புகளை குவித்து ராணுவ தீர்வே வழி எனக் கூறி உள்ளே நுழைவது அமெரிக்காவின் திட்டம். முதலில் ஈராக் பின்னர் ஈரான் அதைத் தொடர்ந்து சிரியா மற்றும் லெபனான் அதனுடைய உடனடி இலக்குகள், வட கொரியா, சீனா, கிய+பா மற்றும் ரஷ்யா ஆகியவை அமெரிக்காவின் நீண்ட கால இலக்குகள்.
2005-ம் ஆம் வருடத்திலிருந்தே அமெரிக்கா, நேட்டோ நாடுகள் மற்றும் இஸ்ரேல் ஆகியவை மிக நவீன ஆயுதங்களை குவிப்பதும், இவை வான் வழி பாதுகாப்பிலே ஒருங்கிணைந்து செயல்படுவதும் நடந்து கொண்டிருக்கிறது. நேட்டோ நாடுகளுடன் நட்புறவுடன் உள்ள அரபு நாடுகள் ஜப்பான், தென்கொரியா, இந்தோனேஷியா, சிங்கப்ப+ர், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகியவையும் இதில் பங்கு பெறுகின்றன.
சூயஸ் கால்வாய் வழியாக போர்க் கப்பல்களின் நடமாட்டத்தை எகிப்து கவனித்துக் கொள்கிறது. பெர்சிய வளைகுடாவின் தென்மேற்கு கரைப்பகுதி, ஓமன் வளைகுடா பகுதிகளை சவூதி அரேபியாவும், மற்ற அரபு நாடுகளும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளன. ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர் - என்ற பெயரிலே அரபு நாடுகளில் மிக நவீன ஆயுதங்கள் அமெரிக்காவால் குவிக்கப்பட்டு விட்டன.
கடந்த ஜூன் மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஈரான் நாட்டுக்கு எதிராக பல்வேறு தடைகளை - கடுமையான பொருளாதார தடைகள் உட்பட- விதித்துள்ளது. காசாவுக்கு நிவாரணப் பொருள் கொண்டு சென்ற படகை சர்வதேச கடல் எல்லையில் தாக்கி அதில் சென்ற சமூக ஆர்வலர்களை கொலை செய்த இஸ்ரேலை கண்டித்து தீர்மானம் இயற்ற மறுத்த சில நாட்களுக்குள்ளாகவே ‘ஈரானுக்கு எதிரான பொருளாதார தடைகள்’ தீர்மானத்தை இக் கவுன்சில் நிறைவேற்றியுள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதன் மூலம் ஈரான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போருக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பச்சைக் கொடி காட்டியுள்ளது.
எந்த ஒரு ஆக்கிரமிப்பு போரில் அமெரிக்கா ஈடுபட்டாலும், அமெரிக்க மக்கள் அரசுக்கு எதிரான மிகப் பெரிய போராட்டங்களை முன்னெடுப்பது வழக்கம். வியட்நாம் போர், ஆப்கன் போர், ஈராக் போர் என அனைத்து போர்களையும் அமெரிக்க மக்கள் எதிர்த்தே வந்துள்ளனர். 2006-ல் எடுத்த கணக்கெடுப்பின்படி ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்க மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் கருத்து தெரிவித்தனர் - எதிர்ப்பு தெரிவித்தனர். அமெரிக்க அரசு ஊடகங்களின் மூலம் தொடர்ந்து ஈரான் பற்றிய விஷமப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டது. ஈரானின் அணு ஆயுதங்களால் சராசரி அமெரிக்காவின் வாழ்வு பறிபோகப் போவதாக தன் மக்களை நம்ப வைத்தது. ராணுவ தீர்வு ஒன்றே வழி என கருத்து திணிப்பை நடத்தியது. அதன் பலனாக கடந்த பிப்ரவரி மாதம் ராய்ட்டர் - ஜோக்பி நடத்திய கருத்துக் கணிப்பில் 56 சதவிகிதம் அமெரிக்கர்கள் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இணைந்து ராணுவ தாக்குதல் நடத்த வேண்டும் என கருத்து தெரிவிததுள்ளனர். ஈராக், ஜப்பான் ஆக்கிரமிப்பு களுக்கெதிராக குரல் கொடுத்தவர்கள் இன்று ஈரான் விஷயத்தில் நழுவுகின்றனர். யுத்த எதிர்ப்பு இயக்கங்களும் கூட அமெரிக்க அரசின் பொய் பிரச்சாரத்துக்கு பலியாகி விட்டன.
ஈரான் ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. இஸ்ரேல் - பலஸ்தீன பேச்சுவார்த்தைக்கு தரகனாக தன்னை முன்னிறுத்தி சமாதான தூதுவனாக அரிதாரமிடுவது மட்டுமல்லாமல், ஈரானை தாக்குவதற்கு அரபு நாடுகளையே தயார் செய்து வைத்துள்ளது அமெரிக்கா. உலகத்தின் ஊடகங்கள் எல்லாம் அமைதி தவழும் பூங்காவாக பலஸ்தீனம் மலரப் போகிறது என பயாஸ் கோப்பு காட்டிக் கொண்டிக்கும் வேளையில் சத்தமில்லாமல் மொத்தமாக ஈரானை விழுங்கப் போகிறது அமெரிக்கா. இந்த ஏகாதிபத்தியத்தின் யானைப் பசிக்கு ஈரான் ஒரு சோளப் பொறி மட்டுமே. இன்று ஈரான்......நாளை ....????


Thanks : Manisudar Tamil Daily




அன்பார்ந்த சகோதரர் அவர்களுக்கு,

நலம்.... நலத்திற்கு இறைஞ்சுகிறோம்...
வலைதளத்தில் உலா வரும்
தங்கள் கட்டுரைகள்...
அறிவுமுத்துகளை நாடி
முக்குளிப்பவர்களுக்கு நல்லதோர்
பொக்கிஷமாகக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு கட்டுரையிலும்
தங்கள் உழைப்பின் வியர்வைப்
பனித் துளிகள் மின்னுகின்றன.
சக மனிதனுக்காகப் போராடும்
தங்கள் கருத்துகள் உணர்ச்சிப்
பிழம்பாகப் பீறிடுகின்ற வகை
மிகவும் பாராட்டுதலுக்குரியது.
மனம் நிறைந்தும் இசைந்தும்
தங்களை வாழ்த்தி மகிழ்கிறோம்..
தங்கள் பணி மென்மேலும்
தொடரவும் உரிய பயன் அளிக்கவும்
வாழ்த்துகிறோம்.....
வாழ்க...... வளர்க...
நன்றி,

அன்பு,
சேமுமு.

prof_semumu@yahoo.com

Thursday, August 26, 2010

நாடாளுமன்றத்தின் முன்மாதிரி உறுப்பினர்



நாடாளுமன்றத்தின் முன்மாதிரி உறுப்பினர்

நடப்பு நாடாளுமன்றத்தில் முப்பது முஸ்லிம் எம்.பி.,க்கள் இருக்கின்றனர். இவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு வகிப்பவர்கள் ஆவர். பொதுவாக நாட்டிலுள்ள எல்லா எம்.பி.க்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதி Member of Parliament Local Development Fund (MPLADS) Fund ( MQLADS) என்று அழைக்கப்படுகிறது.

2009-10ம் நிதியாண்டில் நாட்டிலுள்ள முஸ்லிம் எம்.பி.க்களின் 30 லோக்சபா தொகுதிகளுக்காக மட்டும் 67கோடி ரூபாய் அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், 11.3கோடி ரூபாய் மட்டுமே அதாவது 16.89 சதவீத தொகை மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் புள்ளி விவர அமைச்சகம், கொள்கை வகுப்பதற்கான அமைச் சகம் ஆகியவையே தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கி, அது செலவிடப்படுவதைக் கண்காணிக்கும் அதிகாரம் பெற்றவை ஆகும். இந்த அமைச்சகங்களில் கிடைக்கக் கூடிய புள்ளி விவரங்களின் அடிப்டையிலேயே இந்த விவரங்களை தருகிறேன்.

தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலுள்ள எல்லா எம்.பி.க்களும் ஆண்டுதோறும் தத்தமது தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை கூறக்கூடிய அதிகாரம் பெற்றவர்கள் ஆவர்.
ஒரு எம்.பி.யின் ஆலோசனையின் பேரில் ஒரு தொகுதிக்கு அதிக பட்சம் இரண்டு கோடி ரூபாய் வரை ஆண்டுதோறும் செலவிடலாம். இந்த திட்டம் 1993-ஆம் ஆண்டு ஒவ்வொரு எம்.பி.க்கும் ஐந்து லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யலாம் என்ற முடிவுடன் தொடங்கப் பட்டது. பின்னர் இது 1994-95ம் நிதியாண்டு முதல் 1997-98ம் நிதியாண்டுவரை ரூபாய் ஒரு கோடியாக உயர்த்தப் பட்டது. 1998-99ம் நிதியாண்டு முதல் இந்த நிதி இரண்டு கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமுதாய கட்டமைப்பு பணிகள், குடிநீர் வழிக்கான ஏற்பாடுகள், பொது சுகாதாரம், சாலை அமைத்தல் முதலிய பணிகளுக்கும் கூட இந்த நிதி எம்.பி.யின் அறிவுரையின் பேரில் ஒதுக்கப்பட வேண்டும். இவை மட்டுமல்ல-வெள்ளம், புயல், நில நடுக்கம், வறட்சி, ஆழிப்பேரலை முதலியவற்றில் மக்களுக்கு ஏற்படும் துன்ப துயரங்களை நீக்கி நிவாரணம் தரவும் இந்த நிதியைப் பயன்படுத்தலாம்.
இப்போது ஒரு ஹஹமில்லியன் டாலர்|| கேள்வி எழுகிறது. நம்முடைய எம்.பி.க்களுக்கு அவரவர்களுடைய தொகுதிகளில் மேற்கண்ட இனங்களில் இந்த நிதியைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதா? இல்லையா?-என்பதுதான் அந்தக் கேள்வி. ஏனென்றால், முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான நாடாளுமன்றத் தொகுதிகள் எத்தனையோ உள்ளூர்த் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் உள்ளூர் நிர்வாகத்தால் உதாசீனப்படுத்தப்பட்டு வருகின்றன. தொகுதி மேம்பாட்டு நிதியும் பல இடங்களில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

இது குறித்து ஒவ்வொரு எம்.பி.யினுடைய செயல்பாடுகள் குறித்து கவனித்தபோது 30 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் (இவர்கள் எல்லாக் கட்சியையும் சேர்ந்தவர்கள்) ஒன்பதுபேர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு ரூபாயைக் கூடச் செலவிடவில்லை என்பது தெரியவருகிறது (2009-2010). இவர்களில் கடந்த மூன்று நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பெரும் ஈடுபாடுகாட்டிப் பெயரும் புகழும் பெற்ற ஒருவரும் அடக்கம் என்பதுதான் வேதனை.

எனினும், நாமெல்லாம் பெருமிதம் கொள்ளத்தக்க வகையிலே இந்த விஷயத்தில் ஒருவர் நனிசிறந்த நாடாளு மன்ற உறுப்பினராக விளங்குகிறார், தம்முடைய தொகுதிக்காக அரசு ஒதுக்கிய மூன்று கோடி ரூபாயில் அதிகபட்சமாக 2.40 கோடி ரூபாயைத் தொகுதியின் நலத்திட்டப் பணிகளுக்காகச் செலவிடப் பரிந்து ரைத்துள்ளார், அதற்கேற்ப இதுவரை 2.21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதில் 1.75 கோடி ரூபாய் (அதாவது 58.33 சதவீத) செலவில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1.75 கோடி ரூபாய் அடுத்தடுத்து இந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந் துரைப்படி செலவிடப் படுவதற்காக மாவட்ட நிர்வாகத்தில் ஆயத்தமாக உள்ளது, இந்த வகையில் இன்று இவரே நாட்டின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்-முதன்மையாகத் திகழ்பவர்- (The best Performer of all 30 Muslim MPs ) என்றெல்லாம் கூறினால், அவர் யார்? என்று அறிய ஆர்வம் கொள்வது அனைவருக்கும் இயல்பே.

எல்லாப் புகழும் இறைவனுக்கே! தாய்ச்சபையாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சகோதரர்களே! உங்கள் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்! அவர்தாம் முனீருல்மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் இனம் காட்டிய இன்முகச் சகோதரர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள்!
-ஏம்பல் தஜம்முல் முகம்மது