Wednesday, March 31, 2010

இன்று தவறாக விமர்சிப்பவர்கள்,நாளை மாறுவர்

இன்று தவறாக விமர்சிப்பவர்கள்,நாளை மாறுவர்


பேராசிரியர் முனீருல் மில்லத் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர்


முஸ்லிம் லீக்கைப் பொறுத்தவரை எந்த சமுதாய அமைப்பினையும் விமர்சிப்பதில்லை. அப் பழக்கமும் நம்மிடையே இல்லை. இன்று தவறாக விமர்சிப்பவர்கள், எழுது பவர்கள் நாளை மாறுவர். நமது பாணி அரவணைக்கும் பாணி.

Tuesday, March 23, 2010

~பிறைமேடை| க்கு தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வாழ்த்து

~பிறைமேடை| க்கு தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வாழ்த்து

பிறைமேடை- மாத இருமுறை ஏடு வெளிவருகிறது! இது நமக்கு மிகுந்த இன்பம் தருகிறது!
தமிழகத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் ஆரம்பக் காலக் கட்டத்தில் முஸ்லிம் லீகின் சார்பு பத்திரிகைகள் பல வெளிவந்துள்ளன. வார ஏடு, மாதமிருமுறை ஏடு, மாத ஏடு என்று முஸ்லிம் லீக் முன்னோடிகள் பலரும் இதழ்களை நடத்தி முஸ்லிம் லீக் இயக்கத்தை வலிமையுறச் செய்துள்ளனர். இன்றைக்கு முஸ்லிம் சமுதாயத்தில் வாரஇதழ்களும், மாத இதழ்களும் பிரசுரிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றிரண்டைத் தவிர மிகுதமானவை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை விரோதியாகச் சித்தரிக்கும் போக்கும் நோக்கும் உடையவையாக அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

முஸ்லிம் லீகின் அடிப்படைக் கொள்கைகளான-இந்திய தேசிய ஒற்றுமை ஒருமைப்பாட்டை நிலை நிறுத் துவது இந்திய சமுதாயங்கள்-சமயங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்குவது, சிறுபான்மையினர், குறிப் பாக முஸ்லிம்கள் தங்களின் கலாச்சாரத் தனித்தன்மையைப் பேணிப் பாதுகாப்பதற்கு முஸ்லிம் லீகின் கொடியின் அடியில் கூடி வருவது போன்றவற்றை கேலியும் கிண்டலும் செய்யும் ஏடுகளும் உள்ளன. முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் முன்னோடிகளைப் பற்றிக் கற்பனை மூட்டைகளையும், கட்டுக்கதைகளையும், பொய்களையும் புனைந்துரைகளையும் தொடர்ந்து எழுதி வருவதன் மூலம் தங்களின் சிறப்பம்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவரும் ஏடுகளும் இன்றைக்கு சமுதாயத்துக்குள் வலம் வரவே செய்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில் முஸ்லிம் லீகின் ஏடுகள் பலவும் வெளிவரவேண்டும் என்று இயக்கத்தில் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் நடந்து வந்திருக்கிறது. திருச்சி பொதுக்குழுவில் பத்திரிகை பலம் பற்றி பல செய்திகளும் முஸ்லிம் லீகர்கள் மத்தியில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

~மணிச்சுடர்| நாளேடு முஸ்லிம் லீகின் மூல பலம் மட்டுமல்ல@ மூளை பலமுமாக இருந்து வருகிறது என்பதை சிராஜுல் மில்லத் காலம் தொட்டு உணர்ந்து வருகிறோம். மணிச்சுடர் பணிக்கு இன்னும் வலிவும் பொலிவும் சேர்க்கும் வகையில் இந்தப் புதிய ஏடு-பிறைமேடை-
புறப்பட்டிருக்கிறது.

நமது நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப் எம். அப்துர் ரஹ்மான் எம்.ஏ., இந்த ஏட்டின் வெளியீட்டாளராகவும், ஆசிரியராகவும் பொறுப்பேற்று பிறைமேடை சமுதாயத்துக்குள் பிரவேசிக்கிறது. முஸ்லிம் லீக் குடும்பத்தில் பிறந்து, முஸ்லிம் லீக் பாரம்பரியத்தில் வளர்ந்து, இன்றைக்கு முஸ்லிம் சமுதாயச் சேவையளராகப் பரிமாணம் பெற்றுள்ள பிறைமேடை ஆசிரியர்-தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் அரசியல் ரீதியான ஒற்றுமையை உருவாக்க வேண்டும்@ மார்க்கத்தில் தெளிவும் ஆழமான ஞானமும் வேண்டும்@ இன்றைய சமுதாயத்தவர் மத்தியில் புதிய எழுச்சியும் ஆக்க சக்தியோடு ஆகர்ஷண சக்தியும் வளர வேண்டும், என்று உழைப்பவர்சகோதரர் அப்துர் ரஹ்மான். இவரின் எழுத்து வண்ணத்தில் பிறைமேடை புதிய ஒளிவட்டங்களை உருவாக்கும் என்ற நம்பிக்கைநிறையவே உண்டு.
பிறைமேடையின் பொறுப் பாசிரியராக சகோதரர் ஜே. மீராமைதீன் பணியேற்றிருக்கிறார். மணிச்சுடரில் சமுதாயச் செய்திகளும் முஸ்லிம் லீக்செய்திகளும் இவரின் பொறுப்பில் வெளிவந்த வரலாறு உள்ளது. பொறுப்பானவர்@ மிகுந்த பொறுமையுள்ளவர். இவரின் பணியில் பிறை மேடை புதிய தோர் எழுச்சிக்கு வித்திடும் என்று நம்புகிறேன். பிறைமேடை, முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை சார்பில் வெளியிடவிருக்கும் தினசரி, வார, மாதமிருமுறை, மாத இதழ்கள் வரிசையில் இணைய இருக்கிறது என்பதை யும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். பிறைமேடை, பிறைப்படையாக வலம் வரவும் சமுதாயத்துக்கு நலம் தரவும் வாழ்த்துகிறேன்.

- பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்
தலைவர், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்
தமிழ்நாடு

Monday, March 22, 2010

ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! பேராசிரியர் கே.எம்.கே.

ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்! பேராசிரியர் கே.எம்.கே.

- நன்றி மணிச்சுடர் 17-10-2008


பயணம் என்பதே சிரமங்கள் நிறைந்ததுதான். இதை அரபி பழமொழி கூறுவதாக ஆலிம்கள் கூறியுள்ளனர்., ‘ஸஃபரு என்னும் அரபிச் சொல்லுக்குப் பயணம் எனப் பொருள் கூறப்படுகிறது. இந்தச் சொல்லில் இருந்துதான் ஆங்கிலச் சொல்லான ளரககநச வந்தது எனக் கூறுவோரும் உள்ளனர். இதற்குச் சிரமப்படுதல் என்று பொருளாகும்.

ஆனால், சிரமம் வரும் என்று நினைத்து எவரும் வாழ்க்கையை நடத்துவது இல்லை. பயணம் போகிறோம், எல்லாமும் நன்மையாகவே அமையும் என்று நம்பிக் கொண்டுதான் செல்கிறோம். காரில் பயணம் செய்ய ஆரம்பித்தவுடன் வழியில் எந்த விபத்து வரப் போகிறதோ என்று எண்ணிக் கொண்டு யாரும் பயணம் மேற்கொள்வ தில்லை.

பயணம் செய்கிறோம், பல நேரங்களில் தெரிந்த பாதைகளில் போகிறோம்., சில நேரங்களில் பாதை தெரியாமல் தெரிந்தவர்களிடத்தில் கேட்டுத் தெரிந்து கொண்டு பயணம் தொடர்கிறோம். சில நேரங்களில் பாதை காட்டுவதற்கு எவரும் கண்ணில் படாத போது, நமது அறிவுக்கேற்ற முறையில் அனுமானித்துக் கொண்டும் பயணிக்கிறோம்.

பிறப்பதற்கு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒவ்வொருவருடைய மரணமும் இரணமும் நிர் ணயிக்கப்பட்டு விடுவதாக மார்க்க அறிஞர்கள் தெரிவிக் கின்றனர். எல்லாமும் அல்லாஹ் - இறைவன் வகுத்த வழியில்தான் நடக்கிறது என்றும், ஒவ்வொரு மனித வாழ்வும் அப்படித்தான் என்றும் இதன் மூலம் அறிகிறோம்.

ஆக, வாழ்க்கைப் பயணத்தில் என்ன வரும்? எது இன்பம் தரும்? எதனால் இன்னல் - இடைஞ்சல் - துன்பம் வரும்? என்பதையெல்லாம் அறிந்து கொண்டு பயணம் போக முடியாது என்பதுதான் உண்மை.

வரும் துன்பங்களை ஏற்றுத்தான் ஆக வேண்டும்! இன்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு நாம் தயங்குவதில்லை! துன்பம் வரும் போது மயங்குவதில் அருத்தமில்லை!

சங்க காலப் புறநானூற்றில் கணியன் பூங்குன்றன் என்னும் புலவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்க்கைப் பயணம் பற்றிய உயரிய தத்துவத்தை உரைத்துச் சென்றிருக்கிறார்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றேர்; வாழ்தல
; இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆறாது
கல்பொழுது இரங்கும் மல்லற் பேர்யாறு
நீர்வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
(புறநானூறு - பாடல் 192)

தமிழ் இலக்கியத்தில் மனிதனின் வாழ்க்கைத் தத்துவம் பற்றிய இந்தப் பாடல் மிகமிக அற்புதமானது. இதற்கு விளக்கமும் - விரிவுரையும் எழுதிப் பலப்பல நூற்கள் படைக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய வாழ்க்கை நெறியையும், இந்தத் தமிழ் நெறியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டுக்கும் உள்ள இயல்பான உறவுகளும், தொடர்பும் வெளிப்படும். அறிஞர் பெருமக்கள் இந்த ஒப்புநோக்கு ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்.

இந்தப் பாடலுக்கு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தமது ‘சங்கத் தமிழ் என்னும் நூலில் அருமையான விளக்கம் எழுதியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்த நூலைப் படிக்கும் வாய்ப்பு கிட்டி யது.

1951இல் முதன் முதலில் இந்தப் பாடலை பற்றிக் கேட்டதை இப்போது நினைக்கும்போது, ஒரு வியப்பு தோன்றுகிறது.

திருச்சி புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் 6-வது வகுப்பு மாணவன் - பீமநகர் பென்ஷனர் தெரு வீட்டில் இருந்து பாலக்கரை வழியாக பள்ளிக்கு நடந்து செல்லும் பழக்கம்; பாலக்கரையில் தி.மு.க.வில் உள்ள ஷரீப் என்பவர் பீடித் தொழிலாளர்களுக்குப் படிப்பகம் நடத்தி வந்தார்; அங்கே ‘முரசொலி பத்திரிகையைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்; என் காதுகளில் விழுகிறது; ஒருவர் படிக்கிறார்.

‘‘யாது மூரே யாவரும் கேளீர்

இதைக் கேட்கும் மற்றொருவர் கேட்கிறார் ‘‘மூரே கத்தோ கியாரே (மூரே என்றால் என்ன?) இந்த உரையாடல் வழிப்போக்கனாகிய என் காதுகளில் படுகிறது!

சங்கப் பாடலின் இந்த வரியை முதன் முதலில் ஒரு பீடித் தொழிலாளி படிக்கக் கேட்ட எனக்கு, பிற்காலத்தில் அந்தப் பாடலை பற்றி ஆய்வு செய்வதற்கு அதுவே காரணமாக அமைந்தது.

கலைஞரின் பத்திரிகை மூலமாகத் தெரிந்துகொண்ட சங்கப் பாடலுக்கு, இன்றைய தினம் கலைஞர் கூறும் விளக்கத்தோடு, இஸ்லாமிய விளக்கத்தையும் அதற்கு இணைத்துக் கூறும் ஒரு சந்தர்ப்பம் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்டிருக்கிறது. இதை நான் கற்பனை செய்யவில்லை. எனது வாழ்க்கைப் பயணத்தில் இந்த சம்பவம் எப்படி வந்தது? ஏன் வந்தது? எதற்கு வந்தது? இப்படிச் சிந்திப்பதற்கு ஒவ்வொரு நிகழ்வும் பயன்படு கிறது.

வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொன்றிலும் எத்துணை அளவு கருத்துக்கள் மறைந்து கிடக்கின்றன என்பதைச் சிந்திக்கும் போது இறைவனின் பேராற்றல் நமக்குப் புலப்படுகிறது. இறை நம்பிக்கை பலப்படுகிறது.!

ஓர் அணுவுக்குள் எத்தனை அண்டங்கள்! ஆகா, இறைவனின் அற்புதம் என்னே!

இஸ்லாமிய மார்க்கம் தரும் விளக்கத்தின்படி ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முன்னதாக நிர்ண யிக்கப்பட்டபடி ஒவ்வொரு நிகழ்வும் நடந்து கொண்டி ருக்கிறது என்று நம்புகிறோம்.

இந்த வாழ்க்கைப் பயண நிர்ணயம் என்பது இறைவனின் கட்டளையில் உள்ளது என்கிறது இஸ்லாம்.

‘‘தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதன் மூலம், மனித வாழ்வில் நிகழ்வது யாவும் அவரவர் வாழ்வில் பிணைக்கப் பட்டிருக்கிறது என்று தமிழ்நெறி கூறுகிறது.

மனிதன், இறைவனின் படைப்பு. படைப்பில் இயல்பாக எது இணைக்கப்பட்டும், பிணைக்கப்பட்டும் உள்ளதோ, அதுவும் இறைவனின் படைப்பே ஆகும்.

இஸ்லாமிய நெறியை இன்பத் தமிழ்நெறி முன்னறிவிப்புச் செய்திருக்கிறது இன்பத் தமிழை இஸ்லாம் உலகப் பொதுவுடைமை ஆக்கியிருக்கிறது.

இதனை எண்ணி எண்ணி இறும்பூது எய்தக் கூடிய அறிஞர்கள் கூட்டம் அகிலமெங்கும் பரவியிருக்கிறது.

இதைப் படிக்கிற தோழர்கள், நான் ஏன் இந்தப் பீடிகை போடுகிறேன் என்று கருதுவர்.

வாழ்க்கைப் பயணத்தில் - அதுவும் பொதுவாழ்வுப் பயணத்தில் சந்திக்கும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஏதோ ஒருவகையில் எங்கோ ஒரு காரணம் மறைந்து கிடக்கிறது.

வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வேலூர் அருகில் உள்ள அரியூர் ஸ்ரீ நாராயணி பீடம் சக்தி அம்மா அறக்கட்டளை சார்பில் நூறு படுக்கை உள்ள மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. எம்.பி., என்ற முறையில் அதில் பங்கேற்றேன். என்னோடு முன்னாள் எம்.பி. முஹம்மது சகி, வேலூர் கிழக்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் முஹம்மது ஹனீப், செயலாளர் சாந்த் பாஷா, சகோதரர் தமீம், தாசில்தார் ஷம்சு அலியார் என்று இருபதுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். சாமியாரைப் பாராட்டிப் பொன்னாடை அணிவித் தோம். மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் ஆயிரக்கணக்கில் வந்திருந்தனர். ஸ்ரீநாராயணி பீடம் சக்தி அம்மா சாமியார் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர்., பொன்னாடை வழங்கிவிட்டு விடைபெற்றுச் செல்ல முயன்ற எங்களை வற்புறுத்தி, அவருக்கு அருகில் அமரச் செய்தார். காலை உணவு அருந்திவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார். எல்லோரும் அவர் அருகில் அமர்ந்தோம். சிறிது நேரத்தில் காலைச் சிற்றுண்டிக்கான ஏற்பாடு களை செய்து விட்டு எங்களை அழைத்தனர். அப்பொழுது முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் மற்றும் பலர் அங்கே வந்தவர்கள், சாமியார் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். அதற்குப் பிறகு உட்கார்ந்திருந்த நாங்கள் எழுந்தோம்.

எனது பழக்கம் ஒன்று உண்டு. தரையில் உட்காரும் போது தொழுகையில் இருப்பு இருப்பதுபோல அமர்வது எனது இளமை தொட்டுவரும் வழக்கம். இருப்பில் இருந்ததைப் போல எல்லாருடனும் நானும் எழுந்தேன். கால்கள் வலி இருந்ததால் இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி எழுந்தேன். எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ‘தினமலர் போட்டோகிராபர் எங்களையும் படம் எடுத்துள்ளார். அடுத்த நாள் மந்திரி காலில் விழுந்து வணங்குவதையும், நான் கையை ஊன்றி எழுவதையும் தினமலர் வெளியிட் டது. அதில் சாமியார் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர் என்று என்னையும் சேர்த்து எழுதி படத்தை யும் பிரசுரித்து இருந்தனர். பல நண்பர்கள் பத்திரிகையை பார்த்து என்னிடமே தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். இதுபற்றி சக்தி அம்மா கோயில் நிர்வாகத் துக்குத் தொடர்பு கொண்ட போது, தினமலர் பத்திரிகை யையும், நிருபரையும் சாமியார் மிகவும் கடுமையாக கடிந்து கொண்டுள்ளார். எம்.பி.யை. முஸ்லிமை இப்படிப் பிரசுரிக்கலாமா? என்று கடுமையாகப் பேசினார். அதற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்., நீங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்தத் தவறுக்கு நாங்கள் மிகவும் வேதனைப்படுகிறோம் என்று தெரிவித் தனர். அதற்கு மேல் அந்தப் பிரச்சினையை நான் பெரிது படுத்தவில்லை. அதோடு விட்டுவிட்டேன்.

ஒரு வாரம் கழித்து குமுதம், ரிப்போர்ட்டரில் என் மீது தேர்தல் வழக்குத் தொடுத்துள்ள இக்பால் என்பவர் அவதூறு பரப்பும் நோக்கத்தில் முஸ்லிம் லீக் தலைவர் சாமியார் காலில் விழலாமா? என்று கேள்வி எழுப்பி தினமலர் வெளியிட்ட படத்தை வெளியிடக் கூறியுள் ளார். வேலூர் குமுதம் ரிப்போர்ட்டர் என்னுடன் தொடர்பு கொண்டு அந்தப் படம் பற்றியும், சம்பவம் பற்றியும் கேட்டனர். எனது விளக்கத்தை வெளியிட்ட னர். அத்துடன் வேலூரில் இந்த விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

அதன்பின்னர் சட்டமன்றத் தேர்தல் வந்தது. அதனை ஒட்டி தினமலர் பத்திரிகை படத்தையும், என்னைப் பற்றிய அவதூறுச் செய்தியையும் பல லட்சம் அச்சிட்டு தமிழகம் எங்கும் அனுப்பும் காரியத்தை முஸ்லிம் அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் செய்தனர். முஸ்லிம் லீகில் உள்ளே இருந்து குழுபறிக்க நினைத்து தூக்கி எறியப்பட்டவர்கள் இதற்கு மிகமிக உடந்தையாக இருந்தனர். அதோடு ஊடகங்களிலும், வெளிநாடுகளிலும் குறிப்பாக கேரளா விலும் இதனைப் பரப்பினார்கள்.

இதற்கெல்லாம் நாம் பதில் சொல்லவும் விளக்கம் சொல்லவும் விரும்பியதில்லை. ஏனெனில், சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் அவர்கள் எங்களுக்கு கூறியதை நினைவுபடுத்திக் கொள்வோம்.

முஸ்லிம் லீகைப் பற்றி நமது பிரச்சாரம் போதிய அளவில் இல்லை. அதனை ஈடுகட்ட லீகின் எதிரிகள் இப்படி அவதூறுகள் புரிந்து லீகிற்கு வலிமை சேர்ப்பார்கள் என்று அடிக்கடி கூறுவார். அதைத்தான் நாம் நினைத்துக் கொள்கிறோம்.

வாழ்க்கைப் பயணத்தில் - அதுவும் பொதுவாழ்வுப் பயணத்தில்...கே.எம்.கே

வாழ்க்கைப் பயணத்தில் - அதுவும் பொதுவாழ்வுப் பயணத்தில்...கே.எம்.கே

இந்த வாழ்க்கைப் பயண நிர்ணயம் என்பது இறைவனின் கட்டளையில் உள்ளது என்கிறது இஸ்லாம்.

‘‘தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதன் மூலம், மனித வாழ்வில் நிகழ்வது யாவும் அவரவர் வாழ்வில் பிணைக்கப் பட்டிருக்கிறது என்று தமிழ்நெறி கூறுகிறது.

மனிதன், இறைவனின் படைப்பு. படைப்பில் இயல்பாக எது இணைக்கப்பட்டும், பிணைக்கப்பட்டும் உள்ளதோ, அதுவும் இறைவனின் படைப்பே ஆகும்.

இஸ்லாமிய நெறியை இன்பத் தமிழ்நெறி முன்னறிவிப்புச் செய்திருக்கிறது இன்பத் தமிழை இஸ்லாம் உலகப் பொதுவுடைமை ஆக்கியிருக்கிறது.

இதனை எண்ணி எண்ணி இறும்பூது எய்தக் கூடிய அறிஞர்கள் கூட்டம் அகிலமெங்கும் பரவியிருக்கிறது.

இதைப் படிக்கிற தோழர்கள், நான் ஏன் இந்தப் பீடிகை போடுகிறேன் என்று கருதுவர்.

வாழ்க்கைப் பயணத்தில் - அதுவும் பொதுவாழ்வுப் பயணத்தில் சந்திக்கும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் ஏதோ ஒருவகையில் எங்கோ ஒரு காரணம் மறைந்து கிடக்கிறது.

வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வேலூர் அருகில் உள்ள அரியூர் ஸ்ரீ நாராயணி பீடம் சக்தி அம்மா அறக்கட்டளை சார்பில் நூறு படுக்கை உள்ள மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. எம்.பி., என்ற முறையில் அதில் பங்கேற்றேன். என்னோடு முன்னாள் எம்.பி. முஹம்மது சகி, வேலூர் கிழக்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் முஹம்மது ஹனீப், செயலாளர் சாந்த் பாஷா, சகோதரர் தமீம், தாசில்தார் ஷம்சு அலியார் என்று இருபதுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். சாமியாரைப் பாராட்டிப் பொன்னாடை அணிவித் தோம். மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் ஆயிரக்கணக்கில் வந்திருந்தனர். ஸ்ரீநாராயணி பீடம் சக்தி அம்மா சாமியார் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர்., பொன்னாடை வழங்கிவிட்டு விடைபெற்றுச் செல்ல முயன்ற எங்களை வற்புறுத்தி, அவருக்கு அருகில் அமரச் செய்தார். காலை உணவு அருந்திவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார். எல்லோரும் அவர் அருகில் அமர்ந்தோம். சிறிது நேரத்தில் காலைச் சிற்றுண்டிக்கான ஏற்பாடு களை செய்து விட்டு எங்களை அழைத்தனர். அப்பொழுது முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் மற்றும் பலர் அங்கே வந்தவர்கள், சாமியார் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். அதற்குப் பிறகு உட்கார்ந்திருந்த நாங்கள் எழுந்தோம்.

எனது பழக்கம் ஒன்று உண்டு. தரையில் உட்காரும் போது தொழுகையில் இருப்பு இருப்பதுபோல அமர்வது எனது இளமை தொட்டுவரும் வழக்கம். இருப்பில் இருந்ததைப் போல எல்லாருடனும் நானும் எழுந்தேன். கால்கள் வலி இருந்ததால் இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி எழுந்தேன். எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ‘தினமலர் போட்டோகிராபர் எங்களையும் படம் எடுத்துள்ளார். அடுத்த நாள் மந்திரி காலில் விழுந்து வணங்குவதையும், நான் கையை ஊன்றி எழுவதையும் தினமலர் வெளியிட் டது. அதில் சாமியார் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர் என்று என்னையும் சேர்த்து எழுதி படத்தை யும் பிரசுரித்து இருந்தனர். பல நண்பர்கள் பத்திரிகையை பார்த்து என்னிடமே தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். இதுபற்றி சக்தி அம்மா கோயில் நிர்வாகத் துக்குத் தொடர்பு கொண்ட போது, தினமலர் பத்திரிகை யையும், நிருபரையும் சாமியார் மிகவும் கடுமையாக கடிந்து கொண்டுள்ளார். எம்.பி.யை. முஸ்லிமை இப்படிப் பிரசுரிக்கலாமா? என்று கடுமையாகப் பேசினார். அதற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்., நீங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்தத் தவறுக்கு நாங்கள் மிகவும் வேதனைப்படுகிறோம் என்று தெரிவித் தனர். அதற்கு மேல் அந்தப் பிரச்சினையை நான் பெரிது படுத்தவில்லை. அதோடு விட்டுவிட்டேன்.

ஒரு வாரம் கழித்து குமுதம், ரிப்போர்ட்டரில் என் மீது தேர்தல் வழக்குத் தொடுத்துள்ள இக்பால் என்பவர் அவதூறு பரப்பும் நோக்கத்தில் முஸ்லிம் லீக் தலைவர் சாமியார் காலில் விழலாமா? என்று கேள்வி எழுப்பி தினமலர் வெளியிட்ட படத்தை வெளியிடக் கூறியுள் ளார். வேலூர் குமுதம் ரிப்போர்ட்டர் என்னுடன் தொடர்பு கொண்டு அந்தப் படம் பற்றியும், சம்பவம் பற்றியும் கேட்டனர். எனது விளக்கத்தை வெளியிட்ட னர். அத்துடன் வேலூரில் இந்த விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

அதன்பின்னர் சட்டமன்றத் தேர்தல் வந்தது. அதனை ஒட்டி தினமலர் பத்திரிகை படத்தையும், என்னைப் பற்றிய அவதூறுச் செய்தியையும் பல லட்சம் அச்சிட்டு தமிழகம் எங்கும் அனுப்பும் காரியத்தை முஸ்லிம் அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் செய்தனர். முஸ்லிம் லீகில் உள்ளே இருந்து குழுபறிக்க நினைத்து தூக்கி எறியப்பட்டவர்கள் இதற்கு மிகமிக உடந்தையாக இருந்தனர். அதோடு ஊடகங்களிலும், வெளிநாடுகளிலும் குறிப்பாக கேரளா விலும் இதனைப் பரப்பினார்கள்.

இதற்கெல்லாம் நாம் பதில் சொல்லவும் விளக்கம் சொல்லவும் விரும்பியதில்லை. ஏனெனில், சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் அவர்கள் எங்களுக்கு கூறியதை நினைவுபடுத்திக் கொள்வோம்.

முஸ்லிம் லீகைப் பற்றி நமது பிரச்சாரம் போதிய அளவில் இல்லை. அதனை ஈடுகட்ட லீகின் எதிரிகள் இப்படி அவதூறுகள் புரிந்து லீகிற்கு வலிமை சேர்ப்பார்கள் என்று அடிக்கடி கூறுவார். அதைத்தான் நாம் நினைத்துக் கொள்கிறோம்.

Sunday, March 21, 2010

மதுரை புறநகரில் வரலாற்றுச் சாதனை: 91 பிரைமரிகள் உதயம்

மதுரை புறநகரில் வரலாற்றுச் சாதனை: 91 பிரைமரிகள் உதயம்

பச்சிளம்பிறைக்கொடி பாசறையில் பத்து இலட்சம் உறுப்பினர்! இது லட்சியம்! இது நடப்பது நிச்சயம்! இதற்கு அத்தாட்சியாக காஞ்சியையும், மதுரை மாநகரையும் எடுத்துக் காட்டியிருக்கிறேன்.
இன்றைக்கு மதுரை புறநகர் பிரைமரி தேர்தல் பட்டியலைப் பார்த்ததும், மெய்சிலிர்த்தோம். புதிதான வரவு டாக்டர் மொகிதீன். இவருக்கு மதுரை புறநகர் பகுதிகளில் உறுப்பினர் சேர்த்துப் பிரைமரிகளை உருவாக்கும் பொறுப்பை வழங்கினோம். இவருடன் இணைந்து செயல்பட தென் மண்டல இளைஞர் அணி அமைப்பாளர் ஜாகிர் உசேனை நியமித்தோம். மறைந்த மதுரை மாவட்ட முஸ்லிம் லீகின் செயலாளர் அலி அக்பரின் அருமைப்புதல்வர் இவர். இருவரும் ஒருங்கிணைந்து இதுவரை மதுரை புறநகரில் 91 பிரைமரிகளை உருவாக்கி பல்லாயிரம் பேரை பிறைக்கொடி பாசறைக்குள் கொண்டு வந்துள்ளனர்.
டாக்டர் மொகிதீன் - அந்தப் பேரில் ஒளிந்திருக்கும் உண்மையை - மார்க்கத்தில் உள்ளவர்களை உயிர்த்துடிப்பு மிக்கவர்களாக்கும் பணியை ஜாகிர் ஹ{சேனுடன் சேர்ந்து செய்திருக்கிறார்.
இந்திய சுதந்திரப் போராட்டத் தளகர்த்தர் மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர் எழுதிய கவிதை வரி இது:
கத்லே ஹ{சேன்! அஸல்மே மர்கயே யஜீத் இஸ்லாம் ஜிந்தா ஹோத்தாஹை ஹர் கர்பலா கே பகத்
ஹ{சைனைக் கொன்று விட்டனர்! ஆனால் உண்மையில் மரணமுற்றவர் யஜீத்தான் ஒவ்வொரு கர்பலா நிகழ்ச்சிக்குப் பிறகும் இஸ்லாம் புத்துயிர் பெற்று எழுந்து கொண்டே இருக்கிறது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இன்றைக்குப் புத்தெழுச்சி பெற்றுப் புதுவெள்ளமென புதிய தலைமுறை புறப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கர்பலா நமக்குத் தேவை இல்லை@ நாம் களத்தில் இறங்க வேண்டும்@ களப்பணி புரிய வேண்டும்@ முஸ்லிம் லீகின் கொள்கையும் - கொடியும் - கோட்பாடும் ஒவ்வொருவருக்கும் தெரிய வேண்டும்@ அதை செய்வதற்கே உறுப்பினர் சேர்ப்பும் - பிரைமரி உருவாக்கலும் நடைபெற வேண்டும் என்கிறோம்.
இதுவரை தலைமை நிலையத்துக்கு வந்த தகவல்களில் மதுரை புறநகர் செய்திதான் தலைப்புச் செய்தி. அதிகப் பிரைமரிகளை அமைத்துள்ள பெருமையும், பேரும் டாக்டர் மொகிதீனுக்கும், தம்பி ஜாகிர் உசேனுக்கும் சேருகிறது. தூரந்தொலைவில் இருந்து இந்த நற்செய்தியைப் பார்ப்போரும், படிப்போரும் புறநகர் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவிப்பார்கள்.
தங்கத் தமிழ் வளர்த்த சங்கம் கண்டது மதுரைச் சீமை. தமிழில் யாத்து வெளியிடப்படும் நூற்கள் யாவும் சங்க காலத்தில் மதுரை சங்கப் பலகைக்கு வர வேண்டும். சங்கத்து தலைப்புலவர்கள் அப்புதிய நூற்களுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்றிருந்தது அந்தக் காலம். அத்தகைய மாமதுரை தென்னிந்தியாவின் தலைமைப்பீடமாக இருந்த காலத்தில் எல்லாம் முஸ்லிம் லீகின் செல்வாக்கும் - சொல்வாக்கும் மிகுந்திருக்கிறது.
சுதந்திர இந்தியாவில் சின்னகாஜியார் முஸ்லிம் லீகின் முன்னணித் தலைவராக ஒளிர்ந்தார். நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். ஷரீப் சாஹிப், மதுரை ய+சுப் சாஹிப், பிற்காலத்தில் ஹாஜி எஸ். கமாலுதீன், டாக்டர் அப்துல் வஹாப், டார்பிடோ ஏ.கே. பாஷா பாய் போன்ற லீகின் தளபதிகள் வாழ்ந்து சிறந்த மாவட்டம் மதுரை. பெரியகுளம் ஆர்.எம். முஸ்தபா அண்ணன் அவர்கள் மாவட்டச் செயலாளராக இருந்தபோதும், ஹாஜி எஸ். கமாலுதீன் ஹாஜியார் தலைவராக இருந்த போதும் மதுரை மாவட்டத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கொடி பறக்காத இடமே இல்லை என்கிற அளவுக்கு இயக்க வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆண்டுதோறும் மாமதுரை வீதிகளில் மீலாது பேரணியும், தமுக்கம் மைதானத்தில் பல்லாயிரம் பேருக்கு இலவச சேவைகள் வழங்கு விழாவும் நடைபெற்று வந்த நாட்கள் இன்றும் நம் மனக்கண் முன் நிற்கின்றன.
புறநகரிலும், மாநகரிலும் இப்பொழுது முஸ்லிம் லீகின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் பொறுப்பாளர்கள் பணிபுரிகின்றனர்.
இதுவே சிறந்த பணி! நாளைய சமுதாய வாழ்வுக்கு இதுதான் அணி! எங்கெங்கும் எழுச்சிதான் இனி!
-கே.எம்.கே.

Thursday, March 18, 2010

GAWAH URDU WEEKLY

GAWAH URDU WEEKLY

special edition on Moulana Aqil Husssami

www.gawahweekly.com

டி.என்.டி.ஜே. அவதூறு செய்திக்கு மறுப்பு

டி.என்.டி.ஜே. அவதூறு செய்திக்கு மறுப்பு

பேராசிரியர் ஆசி வாங்கவா சென்றார்?
ஆன்மீக உண்மையை உணர்த்தவே சென்றார்!

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் குறித்து, அவதூறு பரப்பும் வகையில் அவரது நற்பண்புகளையும் நற்குணங்களையும் சரிவர உணராத நிலையில் ~விமர்சனம்| என்ற பெயரில் விஷமத்தனமான தகவல்களை டி.என்.டி. ஜே.நெட் என்ற இணைய தளம் மூலம் பரப்பிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தினரின் தரங்கெட்ட - தறுதலைத்தனமான செயல்பாடுகளைக் கண்டு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகினரும், தன்னலமின்றி சமுதாய தொண்டு புரிகிற தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் மீது அன்பும், மதிப்பும் கொண்டவர்களும் வேதனை அடைந்துள்ளதுடன் கடும் கண்டனங்களை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்திற்கு தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் பரபரப்பாக பேசப்படும் ~நித்யானந்தா| என்பவருடன் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டு ~போலி சாமியாரையும் விட்டு வைக்கவில்லை காதர் மொகிதீன்| என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில், ~எங்கெல்லாம் சாமியார்கள் உள்ளார்களோ அங்கெல்லாம் அவர்களை தேடி சென்று ~ஆசி| வாங்குவதை வழக்கமாக கொண்டிருக்கும் காதர் மொகிதீன் நித்தியானந்தரையும் விட்டு வைக்கவில்லை| என்றும், முஸ்லிம் லீக் என்ற பெயரில் கட்சி நடத்தும் இவர்கள் இந்து மத சாமியார்களிடம் என்ன வேலை?| என்ற ரீதியில் சில கேள்விகளை எழுப்பியுள்ளது அந்த அமைப்பின் ஊடகங்கள்.

எதற்கெடுத்தாலும் குர்ஆன், ஹதீஸ் என்று பேசும் அந்த அமைப்பினர் குர்ஆனில் ஆதாரம் இருக்கிறதா? ஹதீஸில் ஆதாரம் என்று கேட்கக் கூடியவர்கள் தங்கள் விஷயத்தில் இவ்வாறு கேட்க மறப்பது அல்லது மறுப்பது ஏன்? ஒரு செய்தியை எழுதுவதற்கு முன்பாக - அதனை வெளியிடுவதற்கு முன்பாக பலரும் அறியும் வண்ணம் பரப்புவதற்கு முன்பாக குர்ஆனும் - ஹதீசும் கடைப்பிடிக்க சொல்லும் வழிகாட்டல்களை - நெறிமுறைகளை அவர்கள் கடைப்பிடித்தார்களா என்று பார்த்தால் கடுகின் நுனியளவும் அதனை கடைப்பிடிக்க வில்லை என்பதுடன் அதுபற்றி கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. ~தீயவன் ஒருவன் உங்களிடம் ஒரு செய்தியை கொண்டு வந்தால் அதனை ஆராயாமல் பரப்பாதீர்கள். அதன் மூலம் நீங்கள் ஒரு சமுதாயத்திற்கு தீங்கிழைத்து விடக்கூடும்? என்றும் (திருக்குர்ஆன்).

~எவனேனும், யாதொரு குற்றத்தையோ அல்லது பாபத்தையோ செய்து (அதனைத்தான் செய்யவில்லை என்று மறைத்து) குற்றமற்ற (மற்றொரு)வர் மீது அதனை சுமத்தினால், நிச்சயமாக அவன் அபாண்டமான பொய்யை யும், பகிரங்கமான பாபத்தையுமே சுமந்து கொள்கிறான். (திருக்குர்ஆன்).

இதுபோன்று பல்வேறு வசனங்களில் அவதூறு செய்யக்கூடாது என்றும், எந்த ஒரு செய்தியையும் தீர விசாரித்து உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் இறைவன் வலியுறுத்தியிருக்கிறான். அப்படியிருக்க இறைவனின் கட்டளைகள் குறித்து கொஞ்சமும் கவலைப்படாமல் சிறிதளவு இறையச்சம் கூட இல்லாமல் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறித்து அடிப்படையற்ற செய்திகளை தவறான முறையில் அவதூறு பரப்பும் வகையில் எழுதுபவர்கள் எப்படி திருக்குர்ஆனையும், ஹதீஸையும் பின்பற்றக்கூடியவர்களாக தங்களை தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்?

சாமியார்கள் எங்கெல்லாம் உள்ளார்களோ - அங்கெல்லாம் தேடிச் சென்று ~ஆசி| வாங்குகிறார் காதர் மொகிதீன் என அபாண்டமான முறையில் அந்த இயக்கம் எழுதியுள்ளது. ஆனால் உண்மை என்ன தெரியுமா? பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் இந்து மத சாமியார்கள் மத்தியில் மட்டுமல்லாது கிறிஸ்தவ மற்றும் பல மத அறிஞர்கள், ஏன் நாத்திகர்கள் மத்தியிலும்கூட அவர்கள் நடத்தும் விழாக்களில் கலந்து கொண்டு இஸ்லாத்தின் சிறப்புகளை இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகளை எடுத்து விளக்கி, ஆன்மீகத்தின் உண்மை நிலையை உணர்த்தி அழகிய முறையில் அழைப்புப் பணி செய்வதை பல ஆண்டு காலமாக ஏறக்குறைய 40, 45 ஆண்டு காலமாக தொடர்ந்து செய்து வருகிறார். பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் கருத்தாழம்மிக்க இஸ்லாமிய பிரச்சாரத்தினால் எத்தனையோ மதவாதிகள் மனம் திருந்தியுள்ளனர். இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் தாங்கள் கொண்டிருந்த தவறான கருத்துக்களை திருத்திக் கொண்டுள்ளனர்.

ஆனால், இவற்றையெல்லாம் உணராத அல்லது உணர்ந்தும் அவதூறு செய்யும் நோக்கத்தில் தவ்ஹீது ஜமாஅத்தினர் செயல்படுவது கண்டனத்திற்குரியது.

பிற மத துறவிகளையோ - அறிஞர்களையோ முஸ்லிம்கள் சந்திக்கக் கூடாது. அவர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்கு திருக்குர்ஆனிலிருந்தோ - ஹதீஸ்களிலிருந்தோ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரால் ஆதாரம் காட்ட முடியுமா?
உங்களில் சிலரை கொண்டு சிலரை தடுக்காதிருந்தால் உலகில் கிறிஸ்தவ மத மடங்களோ, தேவாலயங்களோ இறைவனை துதிக்கும் பள்ளிவாசல்களோ இல்லாமல் ஆகியிருக்கும் (திருக்குர்ஆன்) என்று கூறுகிறானே? அதன் பொருள்தான் என்ன? அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ய+த, கிறிஸ்தவ (பிறமத) அறிஞர்களிடமும், துறவிகளிடமும் மிகுந்த கண்ணியத் துடன் நடந்து கொண்டதுடன் முஸ்லிம்கள் அனைவரும் பிற மதத்தினருடன் மரியாதையுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் என வலியுறுத்தி யுள்ளார்கள்.
அப்படியிருக்க இந்து மத சாமியார்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை எப்படி தவறாக கொள்ள முடியும்?

அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அந்த சாமியார்களிடம் ஆசி வாங்குவதற்காக கலந்து கொள்ள வில்லை. மாறாக, ஆன்மீக உண்மையை - சத்திய இஸ்லாத்தின் போதனைகளை தெளிவாக எடுத்துரைக்கவே சென்றார். அவர் கலந்து கொண்ட இந்து மத - கிறிஸ்தவ மத நிகழ்ச்சிகள் அனைத்திலும் இஸ்லாத்தின் போதனைகளை தௌ;ளத்தெளிவாக உள்ளது உள்ளபடி திருக்குர்ஆனையும், ஹதீசையும் மேற்கோள் காட்டி இஸ்லாத்தின் செய்திகளை எடுத்துக் கூற ஒருபோதும் தவறியதும் இல்லை - தயங்கியதும் இல்லை.

பேராசிரியரின் இந்தப் பண்புக்காகவே இந்து மத சாமியார்களும், கிறிஸ்தவ மத அறிஞர்களும் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் அவசியம் கலந்து கொண்டு இஸ்லாத்தின் செய்திகளை எடுத்துக்கூறுங்கள் என அழைப்பு விடுக்கின்றனர்.

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்து வரும் இஸ்லாமிய அழைப்புப் பணியை விளம்பரம் செய்து அதை சி.டி.யாகவும், புத்தமாகவும் ஆக்கி காசு பார்க்கும் குறுகிய நோக்கம் இல்லாததால் அந்தப் பணி இறைவனுக்கான பணி. இறைவனின் பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பணி என்று கருதுவதால் அதனை அவர் விளம்பரம் செய்து கொள்வதில்லை.

அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை குறித்து செய்தி வெளியிடும் பத்திரிகைகள் அவர்கள் பாணியில் தரும் செய்திக் குறிப்புகளையும், வாசகங்களையும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு கே.எம். காதர் மொகிதீன் ஆசி வாங்கினார் என இவர்களும் அப்படியே கூறித் திரிவது அதனை அவ்வாறே பிரச்சாரம் செய்வது இவர்கள் திருக்குர்ஆன், ஹதீஸ் வழி நடப்பவர்களா? அல்லது பத்திரிகைகள் தரும் நாலாந்தர செய்தி வாசகங்களை ஏற்று பின்பற்றக் கூடியவர்களா? என்பதை அவர்களே சிந்தித்துப் பார்க்கட்டும். ஒரு பத்திரிகையில் இடம் பெற்றுள்ள செய்தி உண்மைதானா? அதன் பின்னணி என்ன? என்பது குறித்து சிந்திக்காமல் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரிக்காமல் உண்மையை அறிந்து கொள்ள முயற்சி செய்யாமல் அவதூறு பரப்புவது நியாயமா? இதுதான் குர்ஆன், ஹதீஸை பின்பற்றுகிறோம் என்று கூறுபவர்களின் பண்பா?

சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, சிறுபான்மையினரின் குறிப்பாக முஸ்லிம்களின் தனித்தன்மை பாதுகாப்பு இதுவே இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் லட்சியம். அதனைப் பேணும் வகையிலேயே முஸ்லிம் லீகின் செயல்பாடுகள் அமையும்.
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எப்பொழுதுமே எவரிடமும் ஆசி வாங்கச் செல்வதில்லை. ஆன்மீக உண்மைகளை உணர்த்தவே செல்கிறார். இன்ஷா அல்லாஹ் இனிமேலும் செல்வார் என்பது அவரை நன்கு அறிந்தவர்களின் கருத்தாகும்.

-இரா.ச.மு. ஹமீது

முஸ்லிம் லீக் பிரைமரி தேர்தல்களை விரைவாக முடித்திட தலைவர் பேராhசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள்

முஸ்லிம் லீக் பிரைமரி தேர்தல்களை விரைவாக முடித்திட தலைவர் பேராhசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள்

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் ஒவ்வொரு ஆண்டுக்கான சேவைத் திட்டங்கள் வகுத்தளிக்கப்பட்டதன் அடிப்படையில் 2010 ஆம் ஆண்டில் முஸ்லிம் லீக் பயிற்சி முகாம் தஞ்சை வழுத்தூரிலும் கிருஷ்ணகிரி ஒசூரிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இளைஞர்கள் பல நூற்றுக்கணக்கில் பங்கேற்று, முஸ்லிம் லீக் கொள்கை கோட்பாடுகளில் பயிற்றி பெற்று, சமுதாய சன்மார்க்க தேசிய சேவையில் இப்பொழுது முனைந்து ஈடுபட்டும் பாடுபட்டும் வருகின்றனர்.
எதிர் பார்த்ததைவிடப் பலமடங்கு இதயத்துக்கு நிறைவு தரும் வகையில் இந்தப் பயிற்சி முகாம்களும், அவற்றின் பயன்பாடுகளும் அமைந்திருக்கின்றன.
அடுத்த திட்டமாக, மார்ச் 10 ஆம் நாள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிறுவன தினவிழா நெல்லைச் சீமையில் மேலப்பளையத்தில் மிகமிக விமரிசையாக நடைபெற் றிருக்கிறது. மகளிர் அரங்கும், பிறைக் கொடி பேரணியும் விழாவுக்குப் பெருமை சேர்த்துள்ளன. மத்திய அமைச்சர் மாண்புமிகு மு.க. அழகிரி அவர்களும், மாநில அமைச்சர் மாண்புமிகு மொய்தீன்கான் அவர்களும், மாண்புமிகு ப+ங்கோதை அருணா அவர்களும் நிறைவு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். துராப்ஷா அவர்கள் தலைமையிலான விழாக்குழுவினர் மார்ச் 10ஆம் நாள் விழா தமிழக அரசியல் அரங்கில் அனைத்துக் கட்சிகளின் கவனத்தையும்
விழாவில் ~~இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் - இலட்சியப் பயணத்தில் இராஜாஜி ஹால் முதல் சாதாப் மஹால் வரை|| என்னும் சிறிய நூலும் வெளியிடப்பட்டது. முஸ்லிம் லீக் வரலாற்று ஆசிரியர் எழுத்தரசு ஏ.எம். ஹனீப் அவர்கள் 1948 மார்ச் 10 முதல் ஜனவரி 16, 2010 வரையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை இந்தக் குறுநூலில் கோர்வை செய்திருக்கிறார். அந்த நூலில் கேரள மாநிலத்தில் முஸ்லிம் லீக் எத்துணை பலமாக உள்ளது என்பதை எடுத்துக் காட்டும்விதமாக, அங்கே பன்னிரண் டாயிரம் பிரைமரிகளுக்கு மேல் உள்ளன என்பதை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அதாவது ஒரு கோடி இருபது இலட்சம் உறுப்பினர்களுக்கு மேலாக கேரளாவில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் சேர்ந்திருக்கின்றனர் என்பதே அந்த உண்மையாகும். கேரளாவில் முஸ்லிம்கள் மட்டுமன்றி, தலித் இன மக்களும் முஸ்லிம் லீகில் ஏராளமான இணைந்துள்ளனர். இதே நிலையைத் தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்ற பேரவாவின் அடிப்படையில்தான் பத்து இலட்சம் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
மகிழ்ச்சிய+ட்டும் செய்தி என்னவெனில், தமிழகத்தில் சுதந்திரத்துக்கு முன்னரும் அதன் பின்னரும் முஸ்லிம் லீக் நுழையாத பல ஊர்களில் இன்றைய தினம் நட்சத்திரம் பொறித்த பச்சிளம் பிறைக் கொடி பறக்கிறது@ ஆர்வத் துடிப்போடு அங்கெல்லாம் இளைஞர்கள் முஸ்லிம் லீகில் இணைந்து வருகின்றனர்@ புதிய பிரைமரிகள் உருவாக் கப்பட்டு வருகின்றன.
எந்த மாவட்டத்தில் உறுப்பினர் சேர்ப்பும் பிரைமரி தேர்தலும் நிறைவு பெற்றுள்ளதோ, அந்த மாவட்டத் தலைவரும் மாவட்டச் செயலாளரும் மாவட்டம் முழுவதிலும் உள்ள உறுப்பினர் படிவங்களை மாநில முஸ்லிம் லீக் தலைமையகத்தில் சேர்ப்பித்திட வேண்டும். அதோடு, ஒவ்வொரு பிரைமரிவாரியாக மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை பிரைமரி தேர்தல் விவரங்கள் மற்றும் உறுப்பினர் கட்டண மாநில அந்த மாவட்ட முஸ்லிம் லீக் தேர்தல் தேதியும் மற்ற விவரமும் அறிவிக்கப்பட விருக்கின்றது. சில மாவட்டங்களில் ஐம்பது ஆயிரத்துக்குப் மேலாக உறுப்பினர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் @ சில மாவட்டங் களில் சில ஆயிரம் பேர் மட்டுமே சேர்ந்திருக்கிறார்கள். இத்தகைய மாவட்டங்களில் உறுப்பினர் சேர்ப்புக்கு என்றும் பிரைமரி தேர்தலுக்கு என்றும் நாட்களைக் குறித்து அறிவித்து இப்பணிகளை மாவட்ட நிர்வாகிகள் முடித்திட வேண்டும்.
நாம் அறிவித்த தேதிகள் கடந்துள்ள நிலையிலும் சில இடங்களில் இந்தப் பணிகள் முழுமை பெறவில்லை என்னும் செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வலிமையான அடித்தளம் அமைக்கும் பணியில் அனைவரின் பங்களிப்பும் சிறப்பாக இருந்திடல் மிக மிக அவசியம்.
இன்றைக்குப் பாடுபட்டால்தான் நாளைக்குப் பலனை எதிர் பார்க்க முடியும்.

Sunday, March 14, 2010

இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறை: எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பேச்சு

இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறை: எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பேச்சு

இஸ்லாமிய வங்கி முறை மிகச் சிறந்தது. பொருளாதார மேம்பாட்டிற்கு மிகவும் ஏற்றது. இந்தியாவில் அதை நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்ற மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அறிவிப்பு செயல்வடிவம் பெற நாமும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார்.
சென்னை மண்ணடி மஸ்ஜித் மாமூரில் வாரந் தோறும் ஞாயிற்றுக் கிழமை மாலை திருக்குர் ஆன் விரிவுரை நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அதன் 150-வது வார நிறைவு விழா கடந்த 7-2-2010 அன்று நடைபெற்றது. மவ்லவி ஓ.எஸ்.எம். முஹம்மது இலியாஸ் காஸிமி தலைமை தாங்கினார். மவ்லவி ஆஸிகுர் ரஹ்மான் காசிபி கிராஅத் ஓதினார். மவ்லானா மவ்லவி எம். அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் வரவேற்புரையாற்றினார்.
அல்லாமா ஷெய்கல் தப்ஸீர் அல்ஹாஜ் பி.எஸ். பி. ஜெய்னுல் ஆபிதீன் ஹஜ்ரத், மவ்லவி கே.ஏ. நிஜாமுதீன் மன்பஈ ஹஜரத் சிறப்புரையாற்றினர்.
இந் நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அங்கு அவர் ஆற்றிய உரை வருமாறு-
இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று வாரந்தோறும் திருக்குர்ஆன் விளக்கவுரையாற்றிய ஆலிம் பெருமக்களுக்கும், பங்கேற்று சிறப்பிக்கும் சமுதாய மக்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு என்ன வேலை? என்ற எண்ணம் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். மற்ற அரசியல் கட்சிகளைப் போன்று கட்சிகளின் சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போன்று முஸ்லிம் லீகின் உறுப்பினர்களை யாரும் கருதிவிடக்கூடாது. சமு தாயத்தின் உணர்வோடு ஒன்றரக் கலந்தவர்கள் முஸ்லிம் லீகினர்.
சமுதாயத்தின் உணர்வு களை - தேவை களை - கருத் துக்களை - சட்டமன்ற, நாடாளுமளகளில் எடுத் துரைக்கத்தான் நாங்கள் அரசியலில் இருக்கிறோமே தவிர அரசியலை வைத்து பதவி, பட்டங்களைப் பெறுவதற்காக அல்ல. கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்கள் எங்களுக்கு அதனைத்தான் வழிகாட்டித் தந்துள்ளார் கள்.
ஒரு நல்ல முஸ்லிம் எந்த நேரத்திலும் அல்லாஹ் வின் சட்டத்திற்கும் - நபி கள் நாயகம் (ஸல்) அவர்க ளின் வழிமுறைகளுக்கும் மாற்றமாக நடக்க மாட் டார்கள். நான் வேலூர் தொகுதியின் வேட்பா ளராக போட்டியிட்ட போது, பல சமுதாய மக்க ளிடமும் வாக்கு சேகரிக்க வேண்டியிருந்தது. முஸ்லிம் அல்லாத மக்கள் பல சாதிகளாக - சமூகங்களாக இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது சமுதாயத் தலைவர்களுக்கு ஆங்காங்கே சிலைகளை வைத்துள்ளார்கள். அது தவிர, பல்வேறு அரசியல் தலைவர்களின் சிலைகள் வேட்பாளராகிய நான் அந்த சிலைகளுக்கெல் லாம் மாலை அணிவிக்க வேண் டும். மரியாதை செலுத்த வேண்டும். அதன்மூலம் தான் அந்த சமுதாய மக்களின் வாக்குகளைப் பெற முடியும் என்ற சூழ் நிலை இருந்தது.
அரசியலுக்காகத்தானே - தேர்தலுக்காகத்தானே ஒரு மாதம் மட்டும் தானே சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செய்வதால் ஒன்றும் தவறில்லை என்று சிலர் என்னிடம் கூறவும் செய்தார்கள். ஆனால், அல்லாஹ்வின் சட்டங்க ளையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி முறைகளையும் நல்ல முறை யில் அறிந்து கொண்ட ஒரு முஸ்லிம். எந்தச் சூழ்நிலை யிலும் இதுபோன்ற செயல் களை இணைவைப்பது போன்ற ஒரு காரியத்தை ஒருபோதும் செய்ய மாட் டார். அல்லாஹ் நெருக்கடி யான அந்த சூழ்நிலையை விட்டு தப்பிக்கும் வகையில் எனது
தேர்தல் பிரச்சார காலத்தில் அனைத்து வேட் பாளர்களையும் ஒன்றாக அழைத்து தொகுதி மக்க ளுக்கு எவ்வாறெல்லாம் பணியாற்றுவீர்கள்? என்று நேர்காணல் தொகுதி மக்களால் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்திலே என் னைப் பார்த்து கேள்வி கேட்கப்பட்டது. நீங்கள் சமுதாயத்தின் பிரதிநிதி யாக முஸ்லிம் லீகின் சார்பிலே தேர்தலிலே நிற்கிறீர்கள். தேர்தலிலே நீங்கள் வெற்றி பெற்று கூட்டணியிலே ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உங்கள் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி ஒருவேளை மதவாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்க நேரிட்டால் உங்களது செயல் பாடு எப்படி அமையும்? என்று கேட்கப்பட்டது. நான் முஸ்லிம் லீகின் சார்பிலே தி.மு.க.வின் உதயசூரியன்| சின்னத்தில் வேட்பாளராக நின்ற அந்த வேளையில் என்னைச் சுற்றி தி.மு.க.வின் முன் னணித் தலைவர்களெல் லாம் இருந்தவேளையில் சமுதாய மக்களிடம் தௌ;ளத்தெளிவாக கூறினேன்.
சமுதாயத்திற்கும் - மார்க்கத்திற்கும் மாற்ற மான - பாதகமான சூழ்நிலை ஏற்படுமானால் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பேனே தவிர, ஒருபோதும் சமுதாயத் திற்கு குந்தகம் ஏற்பட துணையாக இருக்க மாட் டேன் என்று கூறினேன். பலரும் என்னைக் கேட் டார்கள். எப்படி இப்படி பாளர்களையும் ஒன்றாக அழைத்து தொகுதி மக்களுக்கு எவ்வாறெல்லாம் பணியாற்றுவீர்கள்? என்று நேர்காணல் தொகுதி மக்க ளால் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்திலே என்னைப் பார்த்து கேள்வி கேட்கப்பட்டது. நீங்கள் சமுதாயத்தின் பிரதிநிதி யாக முஸ்லிம் லீகின் சார் பிலே தேர்தலிலே நிற்கி றீர்கள். தேர்தலிலே நீங்கள் வெற்றி பெற்று கூட்ட ணியிலே ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உங்கள் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி ஒருவேளை மதவாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்க நேரிட் டால் உங்களது செயல்பாடு எப்படி அமையும்? என்று கேட்கப்பட்டது. நான் முஸ்லிம் லீகின் சார்பிலே தி.மு.க.வின் உதயசூரியன்| சின்னத்தில் வேட்பாளராக நின்ற அந்த வேளையில் என்னைச் சுற்றி தி.மு.க.வின் முன்னணித் தலைவர்க ளெல்லாம் இருந்தவேளை யில் சமுதாய மக்களிடம் தௌ;ளத்தெளிவாக கூறினேன்.
சமுதாயத்திற்கும் - மார்க்கத்திற்கும் மாற்ற மான - பாதகமான சூழ் நிலை ஏற்படுமானால் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப் பேனே தவிர, ஒருபோதும் சமுதாயத்திற்கு குந்தகம் ஏற்பட துணையாக இருக்க மாட்டேன் என்று கூறி னேன். பலரும் என்னைக் கேட்டார்கள். எப்படி இப்படி துணிச்சலாக கூறுகிறீர்கள்? இதன் மூலம் உங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் கவலை இல்லையா? என்றார்கள். நான் கூறினேன்,
ஹஅரசியலில் வெற்றி யையும், தோல்வியையும் தீர்மானிப்பது இறைவனின் புறத்திலானது| இறைவன் நாடியவர்களுக்கு வெற்றி யைத் தருகின்றான். அவன் நாடியவர்களுக்கு தோல்வி யைத் தருகிறான். நான் வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படுவதை விட இறைவனின் கட்ட ளைக்கு மாறு செய்யாமல் இருக்கி றேனா என்பது பற்றித்தான் கவலை. எங்களது தலைவர் கண்ணியத்திற் குரிய காயிதெ மில்லத் அவர்கள் எங்களுக்கு இப் படித்தான் அரசியல் பயிற்சியளித்துள் ளார்கள். அவர்கள் தேர்த லிலே போட்டியிட்டு தொகுதிக்கு செல்லாமலேயே மக்களிடம் வாக்கு கேட்காமலேயே மாபெரும் வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றார்கள்.
முதன் முதலில் அவர்கள் நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு முன்பாக பத்திரி கையாளர்கள் காயிதெ மில்லத்தை வழிமறித்து நீங்கள் தொகுதிக்கு சென்று மக்களிடம் வாக்கு கேட்கவில்லையே? நாடாளுமன்றத்தில் சரியாக பணியாற்றா விட்டால் தொகுதி மக்க ளுக்கு பதில் கூற வேண்டும் என்ற பயம் இல்லையா உங்களுக்கு? என்று கேட்டனர். அதற்கு காயிதெ மில்லத் அவர்கள் கூறினார் கள். தொகுதி மக்களுக்கு பதில் சொல்ல வேண்டுமோ இல்லையோ? என்னைப் படைத்த இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சம் எனக்கு உள்ளது. அந்த இறைச்சம் என்னை சரியான முறை யில் வழிநடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக் கிறது என்று கூறினார்கள்
.இதனை கேட்டு அந்தப் பத்திரிகையாளர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். மற்றொரு முறை நாடாளுமன்றத்தில் உங்கள் பணி எப்படி இருக்க வேண்டுமென விரும்புகிறீர்கள்? என்று காயிதெமில்லத்திடம் கேட்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் மட்டு மல்ல, எப்பொழுதுமே எனது ஒவ்வொரு செயலும் அமலில் சாலிஹாத் என்ற இறைவனுக்கு உவப்பான நற்செயலாக இருக்க வேண்டும் என விரும்பு கிறேன் என்று பதில் அளித் தார். இதைத்தான் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் ஒவ் வொருவரும் பின்பற்றி வருகிறார்கள். அந்த முறை யில்தான் நாடாளுமன்றத் தில் எனது பணிகள் அமைந்து வருகின்றன. நான் நாடாளுமன்றத் தில் முதன் முறையில் ஆற்றிய உரையில் இவற்றை தெளி வாக பதிவு செய்துள்ளேன்.
இன்று இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையை நடைமுறைப் படுத்த பல்வேறு முயற்சி கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் பேசினேன்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வட்டி யில்லாத பொருளாதார முறையை நடைமுறைப் படுத்துவது குறித்து திருக் குர்ஆனிலிருந்து சுருக்க மான ஒரு மேற் கோளை தர முடியுமா? என்று கேட் டார். நான் அவருக்கு கூறி னேன். திருக்குர்ஆனி லிருந்து நிறைய மேற் கோளை காட்ட முடியும். என்றாலும், அல்லாஹ் ஒரு வசனத்தில் தௌ;ளத் தெளி வாக கூறியிருக்கின்றான். உங்களுக்கு வியாபாரத்தை ஹலாலாக்கி வட்டியை ஹரமாக்கி விட்டேன் என்று கூறியுள்ளான் என்று நான் கூறியதும், இது போதும், இதுபோதும் என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட நிதியமைச்சரும், அவரின் செயலாளர் களும் அது குறித்து ஆராய்ந்து ஒரு நல்ல அறி விப்பினை தெரியப்படுத்தியுள்ளார்கள்.
இந்தியாவில் இஸ்லா மிய வங்கி முறை விரைவில் நடைமுறைப்படுத்தப் படும் என்ற நல்ல செய்தி வந்துள்ளது. இஸ்லாமிய வங்கி முறை மிகச் சிறந்தது. பொருளாதார மேம்பாட் டிற்கு மிகவும் ஏற்றது. இந்தியாவில் அதை நடைமுறைப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்ற மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அறி விப்பு செயல்வடிவம் பெற நாமும் முழு ஒத்துழைப்பு அளிப்போம். அதேபோன்று இன்று தமிழக முஸ்லிம்களிடம் குறிப்பாக உலமா பெரு மக்களிடமும் தமிழக அரசின் திருமணப் பதிவுச் சட்டம் தொடர்பாக எழுந்துள்ள ஐயங்களைப் போக்குவதற்கு முஸ்லிம் மஹல்லா ஜமாஅத்து களில் காலம்காலமாக பதிவு செய்யப்பட்டு வரும் திருமணப்பதிவு ஆவணங் களை அரசு ஆவணங்க ளாக ஏற்று அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக் கையை முதல் அமைச்சர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.
சமுதாயம் மகிழத்தக்க வகையில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும்.
இவ்வாறு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசினார்.

அமீரக காயிதெமில்லத் பேரவை

அமீரக காயிதெமில்லத் பேரவை

ஐக்கிய அரபு அமீரகத்தில் அமீரக காயிதெமில்லத் பேரவை மிகுந்த உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது.
கடந்த 04.02.2010 வியாழ‌க்கிழ‌மை மாலை த‌மிழ் உண‌(ர்)வ‌க‌ காயிதெமில்ல‌த் அர‌ங்கில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிக‌ழ்வில் காயிதெமில்ல‌த் பேர‌வையின் ச‌ர்வ‌தேச‌ ஒருங்கிணைப்பாள‌ரும், வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ருமான‌ எம். அப்துல் ர‌ஹ்மான் அவ‌ர்க‌ள் த‌லைமை வ‌கித்தார்.

புதிய‌ நிர்வாகிக‌ளாக‌ தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் விப‌ர‌ம் வ‌ருமாறு :

த‌லைவ‌ர் : குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி

துணைத்த‌லைவ‌ர்க‌ள் :

க‌ள‌ம‌ருதூர் ச‌ம்சுதீன் ஹாஜியார்
காய‌ல் நூஹு சாஹிப்
முதுவை எஸ். ச‌ம்சுதீன்

பொதுச்செய‌லாள‌ர் : கும்ப‌கோண‌ம் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா

பொருளாள‌ர் : கீழ‌க்க‌ரை ஹ‌மீதுர் ர‌ஹ்மான்

துணைச்செய‌லாள‌ர்க‌ள் :

அய்ய‌ம்பேட்டை ராஜாஜி,
முத்துப்பேட்டை அப்துஸ் ஸ‌லாம்
கீழ‌க்க‌ரை ஹ‌மீது யாசின்
காய‌ல் ய‌ஹ்யா முஹ்யித்தீன்

ஜ‌மாஅத் ஒருங்கிணைப்பு செய‌லாள‌ர் : கோட்ட‌க்குப்ப‌ம் ர‌ஹ்ம‌த்துல்லா
ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் : ப‌ர‌ங்கிப்பேட்டை ரியாஸ் அஹ‌ம‌து
ஊட‌க‌த்துறை செய‌லாள‌ர் : முதுவை ஹிதாய‌த்
ஊட‌க‌த்துறை ஒருங்கிணைப்பாள‌ர் : பாஷா க‌னி

அமீர‌க‌ ப‌குதி செய‌லாள‌ர்க‌ள் :

துபாய் : அய்ய‌ம்பேட்டை முஹ‌ம்ம‌து சுலைமான்
சோனாப்பூர் : முதுவை ஏ. அஹம‌த் இம்தாதுல்லாஹ்
அபுதாபி : லால்பேட்டை அப்துல் ர‌ஹ்மான்
அபுதாபி துணைச்செய‌லாள‌ர் : லால்பேட்டை முஜிபுர் ர‌ஹ்மான்

தணிக்கையாள‌ர் : ராஜகிரி அப்துல் க‌த்தீம்

புதிய‌ நிர்வாகிக‌ளுக்கு அப்துல் ர‌ஹ்மான் எம்.பி. வாழ்த்து தெரிவித்து காயிதெமில்ல‌த் பேர‌வை அமீர‌க‌த்தில் முனைப்புட‌ன் செய‌ல்ப‌ட்டு கட்சியின் வ‌ள‌ர்ச்சிக்கு பாடுப‌ட‌ கேட்டுக் கொண்டார்.

விரைவில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காயிதெமில்லத் பேரவையின் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன

Saturday, March 13, 2010

இருகூராக பிரிந்து செயல்பட்ட ஜமாஅத்தினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பெரும் முயற்சியால் ஒரே ஜமாஅத்தாக ஒன்றுபட்டனர்

இருகூராக பிரிந்து செயல்பட்ட ஜமாஅத்தினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பெரும் முயற்சியால் ஒரே ஜமாஅத்தாக ஒன்றுபட்டனர்


திருவள்ளுர், மார்ச்.13-

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்ப+ண்டி வட்டம் மாநெல்லூர் கிராமம். இங்கு சுமார் 45 முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வரு கிறார்கள். இந்த ஊரில் மஸ்ஜிதெ இலாஹி ஆஷர் கானா, கமிட்டி என்று தமிழ் நாடு வக்ஃபு வாரியத்தால் ஜி.எஸ். நெ.153ஃ1958-சி, சி.ஜி.டி அங்கீகரிக்கப்பட்டு கமிட்டியின் தலைவராக ஷேக் அன்சம்பாஷா, செய லாளர் இ.எ. நசீர் உசேன் மற்றும் கமிட்டி உறுப்பி னர்கள் செயல்பட்டு வந் தார்கள்.

ரமளான் மாதம் முடிந்ததும் கணக்கு கேட்டு இருக்கிறார்கள். மேற்படி அன்சர் பாஷா வரவு செலவு கணக்கு கொடுக்காததி னால் ஜமாஅத்தில் பிரச் சினை பிணக்கு ஏற்பட்டி ருக்கிறது.இதனால் ஊத் துக்கோட்டை ஜமாஅத், மாதர்பாக்கம் ஜமாஅத் கும்மிடிப+ண்டி ஜாஅத் பழவேற்காடு, செம்பாசி பள்ளி ஜமாஅத், பொன் னேரி ஒருங்கிணைப்பு கமிட்டி ஆகியவர்கள் வந்து சமாதானம் செய்தும் முடிவு ஏற்படவில்லை.

மேற்படி அன்சார்பாய் அவர்களைச் சேர்ந்த வர்கள் தனியாக ஐவேளை தொழுகை ஜும்ஆ போன் றவை நடத்தி வந்தார்கள். நசீர் உசேன், அவரைச் சேர்ந்தவர்கள் மஸ்ஜிதெ இலாஹியில் தொழுகை நடத்தி வந்தார்கள் இரு ஜமாஅத்தார்களுக்கும் அடிக்கடிமோதல் ஏற்பட்டு காவல் நிலையத்தில் புகார், பஞ்சாயத்து என்று கடந்த 8 மாதமாக இருந்து வந் துள்து அனைத்து ஜமா அத்து ஜமாத்தும் முயன் றும் தீவு கிடைத்காததால் சமுதாயத்தின் தாய்ச்சபை தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்களுக்கு அவ்வ+ர் ஜமாஅத்தினர் கடிதம் மூலம் தெரிவித்த தினால் இவ்வ+ர் பிரச்சினை குறித்து விசாரித்து விபரம் தெரிவிக்கும்படி தாய்ச்சபை பொதுச் செய லாளர் கே.எம். அப+பக்கர் அவர்கள் கடிதம் மூலம் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் காயல் அஹ மது சாலிஹ் ஆலோசனை வழங்கப்பட்டது.

தலைவர் அவர்களின் மேலான ஆலோசனைப் படி திரவள்ளூர் மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் திருவள்ளூர் மாவட்ட தப்லீக் அமீர்சாப், டி.எஸ். யாக்கூப் ஆகியோர் 09-3-10 அன்று காலை மாதர் பாக்கம் பள்ளிவாசலில் இருந்து கொண்டு மாநெல் லூர் இருஜமாஅத்தார்க ளையும் அழைத்து லுஹர், அஸர், மக்ரிப் ஆகிய வந்துகளில் 3சுற்று பேச்சு வார்த்தை நடத்தி இரு வரின் கருத்துகளை கேட்டு இஷா தொழு கைக்கு பின் ஒருமித்த கருத்தோடு இரண்டு ஜமாத்துகளை ஒரு ஜமாஅத்தாக ஒன்றி ணைத்து 10-3-10 அன்று முதல் சுப்ஹ{ தொழுகை யில் இருந்து ஒரே ஜமாஅத்தாக மஸ்ஜிதெ இலாஹில்தான் தொழ வேண்டும் என்றும், இருதரப்பில இருந்து மூவர், மூவர் என்று 6 மாதம் வரை மஸ்ஜித் பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என்றும், எழுத்துப்ப+ர்வமாக எழு தப்பட்டு- இருதரப்பினர் களும் கையொப்பம் இட்டு பகைமையை மறந்து விரோதத்தை துறந்து இரு ஜமாஅத்தார்களும் ஒரே ஜமாஅத்தாக இணைந்து ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து முஸாபா, மானகா செய்து கொண் டனர்.

மாதர்பாக்கம் ஜமாஅத் தலைவர் காசிம் சாஹிப், செயலாள்ர கபீர் சாஹிப், கும்மிடிப்ப+ண்டி அ.தி.முக. கவுன்சிலர் சிராஜுதீன், ஊத்துக்கோட்டை தி.மு.க. கவுன்சிலர் சம்சுதீன், தப்லீக் அமீர் பாபு பாய், முஸ்லிம் லீக் இளைஞரணி அமைப் பாளர் ஜமாலுதீன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஜலீல்கான் ஆகியோர் கலந்துகொண்டு இணைந்த ஜமாஅத்திற்காக துஆ செய்தனர். முஸ்லிம் லீகின் முயற்சிக்கு வெற்றி கிடைத் தைதைப் பாராட்டினர்.

தகவல்:

காயல் அஹமது சாலிஹ்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைமுன்னிட்டு அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைமுன்னிட்டு அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 62வது நிறுவன தின மாநாட்டில்

பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் கோரிக்கை


மேலப்பாளையம், மார்ச் 13:

உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாடு நடைபெற இருப்பதையொட்டி பல் லாண்டு காலமாக விசாரணை கைதிகளாக கோவை உள் ளிட்ட பல சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி களை கருணை அடிப்படை யில் விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு மாநி லப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் வேண்டுகோள் விடுத்துள் ளார்.

இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் 62வது நிறுவன தினம் கடந்த 10ம் தேதி திருநெல்வேலி மேலப்பா ளையத்தில் சமுதாய மறு மலர்ச்சி மாநாடாக நடை பெற்றது. இதில் தமிழ்நாடு மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் பேசும்போது குறிப்பிடடதாவது:

கண்ணியத்துக்குரிய காயிதெ மில்லத் அவர் களால் 1948ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி சென்னை ராஜாஜி ஹாலில் துவக்கப் பட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இங்கு தனது 62வது நிறுவன தினத்தை சிறப்பான மாநாடாக கொண்டாடிக்கொண்டி ருக்கிறது.

காயிதெ மில்லத் அவர் கள் அமானிதமாக ஒப் படைத்துச் சென்ற இந்த இயக்கத்தை கட்டிக்காப் பாற்ற வேண்டியது சமு தாய மக்கள் அனைவரின் கடமையாகும்.

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத், சிறப்புக் குரிய ஜானிபாய், சிராஜுல் மில்லத் அப்துல் சமது ஆகி யோரின் சிறப்பான தலை மையின் கீழ் பல சாதனை களை நிகழ்த்திய இந்த இயக்கம் முனீருல்மில்லத் பேராசிரியர் அவர்கள் தலைமையில் சீரோடும் சிறப்போடும் செயல்பட்டு சமுதாயத்துக்கு ஆக்கப்ப+ர் வமாக பணியாற்றி வருகி றது.

இந்த நல்ல நாளில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்காக, சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக தங் கள் வாழ்வை அப்பணித் தவர்களை நினைவு கூற கடமை பட்டுள்ளோம். எந்த எதிர்பார்ப்பும் இன்றி தங்கள் வாழ்க்கையை தியா கம் செய்த தூய்மையான ஊழியர்கள். அனைவர் களுக்காகவும் துஆ செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

இன்று சமுதாயத்தில் எத்தனையோ இயக்கங்கள் அரசியல் ரீதியாக செயல் பட்டாலும் இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் போன்று வரலாற்று பாரம்பரியமோ-சரித்திர சாதனைகளோ அவர்களிடம் இல்லை.

நமது இயக்கத்தின் ஆலிம்கள் அணி அமைப் பாளர் ஹாமித் பக்ரி முன்பு பல் வேறு அமைப்புகளில் செயல்பட்டவர். அவர் எந்த அமைப்புகளுக்காக கடுமையாக உழைத்தாரோ அந்த அமைப்புகளாளே அவருக்கு பிரச்சினை வந் தது. அவரை கண்டு கொள்ளவில்லை.

ஹாமித் பக்ரீயை பயங் கரவாதியாக சித்தரித்துக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டபோது முஸ்லிம் லீக்தான் அவருக் காக குரல் கொடுத்தது. சேலத்தில் நடந்த இ.ய+. முஸ்லிம் லீக் மாநாட்டில் பனாத்வாலா சாஹிபு குரல் கொடுத்தார். தலைவர் பேராசிரியர் காயல்பட்டி னத்திற்கே வந்து தீர விசா ரித்து ஹாமித் பக்ரி விடு தலைக்கு முயற்சி மேற் கொண்டார்.

இப்படி பாதிக்கப்பட்ட வர்கள்-அநியாயமாக தண்டிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர் களுக்காக முதல் குரல் கொடுக்கக் கூடிய இயக் கம் இந்திய ய+னியன் முஸ் லிம் லீக்தான்.

தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் பல்லாண்டு காலமாக விசாரணைக் கைதிகளாக அடைக்கப் பட்டிருக்கும் நூற்றுக் கணக்கான அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகி றோம்.

சிறையில் உள்ள பலர் பல நோய்களாலும் பாதிக் கப்பட்டு உள்ளனர். ஒரு வருக்கு இரண்டு கிட்னி களும் பாதிக்கப்பட்டுள் ளது. மருத்துவ சிகிச்சை பெற வேண்டி உள்ளது. இப்படி பலவித பாதிப்பு கள் உள்ளன.

உலகத் தமிழ்ச்செம் மொழி மாநாடு நடை பெறும் இந்த சூழலை ஒட்டியாவது கோவை உள்ளிட்ட பல சிறைகளில் உள்ள அப்பாவிகள் விடு தலை செய்ய வேண்டும் என மத்திய மாநில அர சுகளை கேட்டுக்கொள்கி றோம்.

முஸ்லிம் லீகின் 62வது நிறுவன தினம் நடைபெற் றுக் கொண்டிருக்கும் இந் நாளில் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் பிறந்து வளர்ந்த இந்த மண்ணில் நாம் அனைவரும் ஒரு உறுதியினை எடுத்துக் கொள்வோம்.

சமுதாய மக்கள் அனை வரையும், தாய்ச்சபையான இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கவும், முஸ்லிம் லீகிற்கு 10லட்சம் உறுப்பினர் சேர்க்கும் திட் டத்தை விரைந்து முடித்து வெற்றி காணவும் ஒவ் வொரு மாவட்ட நிர்வாகி களும் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள் வோமாக.

இவ்வாறு பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் பேசினார்.

Friday, March 12, 2010

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பணிகளால் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பணிகளால் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது

62-வது நிறுவன தினம்: மேலப்பாளையம் மாநாட்டில்

தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு


மேலப்பாளையம், மார்ச்.12-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பணிக ளால் சமுதாயத்தில் எழுச்சி யும், மறுமலர்ச்சியும் ஏற் பட்டுள்ளதாகவும், மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய முதல்வர் கலைஞருக்கும், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கும் நன்றி தெரி வித்துக் கொள்வதுடன் பென்னாகரம் இடைத் தேர்தலில் திமு.க. வெற்றிக் காக முஸ்லிம் லீகினர் தீவிர மாக பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்தார்.

மேலப்பாளையம் மாநாட்டில் நிறைவுரை யாற்றிய போது அவர் குறிப் பிட்டதாவது-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62-வது நினைவு தினம் சமுதாய மறுமலர்ச்சி மாநாடாக மிக எழுச்சியுடன் இன்று காலை யிலிருந்து தொடர்ந்து நடைபெற்று நிறைவுக்கு வந்துள்ளது. மாநாடு நடைபெறும் இந்த திருநெல்வேலி மாவட்டம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகோடு அதன் வர லாற்றோடு பின்னிப் பிணைந்த மாவட்டமாகும். இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வரலாற்றை எழுதும் போது திருநெல்வேலி மாவட்டத்தை தவிர்த்து எழுத முடியாத அளவிற்கு அதன் ஒவ்வொரு சாதனை யிலும் இந்த மாவட்டத் திற்கு பங்கு இருக்கிறது.

காயிதெ மில்லத் பிறந்த மண்

நமது இயக்கத்தின் நிறுவனத்தலைவர் கண்ணி யத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்களை தந்த மாவட்டம் இந்த மாவட் டம் அவர்கள் பிறந்து வளர்ந்து சமுதாயத்திற்கு பல சேவைகளை செய் வதற்கு அடித்தளமிட்ட மாவட்டம் இந்த மாவட் டம்.

முஸ்லிம் லீக்

சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள்

முஸ்லிம் லீகிற்கு ஏராள மான எம்.எல்.ஏக்களை (சட்டமன்ற உறுப்பினர் களை) தொடர்ந்து தந்து வந்த மாவட்டம் இந்த மாவட்டம். வேலூர் தொகுதி முஸ்லிம் லீகிற்கு நாடாளுமன்ற உறுப்பி னரை தொடர்ந்து தருவது போல் தொடர்ந்து நாடா ளுமன்ற உறுப்பினர்களை யும், சட்டமன்றத்திற்கு பல உறுப்பினர்களை தொடர்ந்து தந்துள்ளது திருநெல்வேலி மாவட்டம்.

கடையநல்லூரிலிருந்து சாகுல் ஹமீதையும், பாளையங் கோட்டையிலி ருந்து ரவணசமுத்திரம் பீர் முஹம்மதுவையும், கோதர் முகைதீன், சம்சுல் ஆலம் போன்ற பல முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் சமுதாயத்திற்கு நிறைந்த சேவை புரிந்துள்ளனர்.

அதேபோன்று கண்ணி யத்திற்குரிய காயிதெ மில்லத், கே.டி.எம். அஹமது இப்ராஹீம், ஏ.கே. ரிபாயி சாஹிப் ஆகி யோர் நாடாளுமன்ற உறுப் பினர்களாக இருந்து சமு தாயத்திற்கு சேவையாற்றி யுள்ளனர்.

நெசவோடு சேர்த்து

திருக்குர்ஆன் மனனம்

அரசியலில் மட்டும் அல்லாமல் ஆன்மீகத்தி லும் இந்த மாவட்டம் குறிப்பாக மேலப்பாளை யம் மார்க்கக் கோட்டை யாக திகழ்ந்து வந்துள்ளது. பல இறைநேசச் செல்வர் கள் இந்த மண்ணிலிருந்து மார்க்க சேவை புரிந் துள்ளனர். இங்குள்ள முஸ்லிம்களில் பெரும் பாலானோர் நெசவுத் தொழில் மேற்கொள்ளக் கூடியவர்களாக திகழ்ந்த போதிலும், நெசவுக்காக துணியை நெய்யும்போது கூடவே திருக்குர்ஆன் வச னங்களையும் தங்கள் நெஞ்சங்களில் நெய்யக் கூடியவர்களாக திகழ்ந்து வந்த காரணத்தால் இந்த மாவட்டத்திலிருந்து ஏராளமான ஹாபிஸ்கள் திருக்குர்ஆனை மனனம் செய்தவர்கள் நாட்டில் பல பகுதிகளுக்கும் சென்று மார்க்க சேவை புரிந்துள் ளனர்.

தமிழகத்திலே இரண்டு பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை சமுதாயம் பெற்ற ஒரே மாவட்டம் இந்த மாவட்டம்தான். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் கனி சாஹிப் கோழிக்கோடு பல் கலைக் கழகத்தில் துணை வேந்தராக பொறுப்பேற்று சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கோழிக் கோட்டிலே பல்கலைக் கழகம் அமைக்கப்பட்ட தும் அதன் துணைவேந் தராக பொறுப்பேற்க தகுதி யான ஒருவரை நாட்டின் பல பகுதிகளிலும் தேடி அலைந்து கடைசியில் மேலப்பாளையத்தில் சம்சு கனியை கண்டு பிடித்து அழைத்துச் சென்றார் கேரள மாநில கல்வி அமைச்சராக இருந்த சி.எச். கோயாசாஹிப் அவர்கள்

அதேபோன்று சென்னை பல்கலைக்கழகத் தின் துணைவேந்தராக பணியாற்றிய சாதிக் அவர்கள் இந்த மாவட் டத்தைச் சேர்ந்தவர்தான். இதுவரை முஸ்லிம் சமுதா யத்திலிருந்து நான்கு பேர் வேளாண் துறைக்கு ஒரு வரும், மருத்துவப் பல் கலைக்கழகத்திற்கு டாக்டர் மீர் முஸ்தபா உசேனும் பதவி வகித்திருந் தாலும் ஒரே மாவட்டத் திலிருந்து இரண்டு பேர் வந்த பெருமை திரு நெல்வேலிக்கு சேரும்.

இப்படி கல்வியிலும் , மார்க்க சேவையிலும் குர்ஆன் மனனத்திலும் மற்ற பல மாவட்டங்க ளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் திருநெல்வேலி மாவட்டம் மேலப் பாளையத்தில் நடை பெறும் இந்த சமுதாய எழுச்சி மாநாடு நிச்சயம் சமுதாயத்தில் ஒரு மலர்ச்சியை உருவாக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

சமுதாயத்தின்

மறுமலர்ச்சி

1948 மார்ச் 10-ம் தேதி இந்த இயக்கம் துவங்கப் பட்டபோது இந்த இயக் கத்தில் இணையக் கூடிய நிலையில் அன்றைய சமுதாய மக்கள் இல்லை. இந்த இயக்கத்தில் இருந்த பல பேர் வெளியேறி செல்லக்கூடிய சூழ்நிலை தான் அன்று இருந்தது. முஸ்லிம் லீக் என்று சொல்லவே பயந்த நிலையி லேயே பலரும் இருந்துள் ளனர். அப்படிப்பட்ட சூழ் நிலையில்தான் எவர் வந்தா லும், வராவிட்டாலும் நான் ஒருவன் உயிருடன் இருக் கும் வரையிலாவது இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இந்த மண்ணில் இருந்தே தீரும் என்று கண்ணியத்தென்றல் காயிதெ மில்லத் பிரகட னப்படுத்தினார். அவ்வாறே பிரசாரங்களை மேற் கொண்டார். அதன் விளை வாக சமுதாயத்தில் மெல்ல மெல்ல மாற்றம் ஏற்பட் டது.

இயக்கம்தொடங்கப்பட்டு சுமார் 15 ஆண்டு காலத் திற்கு பின்னர் 1962-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போதுதான் இயக்கத்திற்கான முழுமை யான அங்கீகாரம் சமுதாய மக்களிடமிருந்து கிடைக் கத் துவங்கியது. அதன் பின்னரே பலரும் முஸ்லிம் லீகில் தங்களை இணைத் துக் கொள்ளவும் இயக்கம் குறித்து வெளிப்படையாக பேசவும் துவங்கினர். அது மெல்ல மெல்ல வளர்ந்து இன்று மிக எழுச்சியுடன் காணப்படுகிறது.

ஆண்டுதோறும்

ஐந்து நிகழ்ச்சிகள்

முஸ்லிம் லீகின் பணிகளை விரிவான முறை யில் எடுத்துச் சொல்லவும், ஒட்டு மொத்த சமுதாய மக்களும் இந்த இயக் கத்தின் பின்னால் அணி வகுக்க செய்யும் நோக்கிலும் சீரிய திட் டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரு கின்றன. ஆர்ப்பாட்டம் - போராட்டத்தின் மூலம் நாம் கட்சியை வளர்க்க வில்i ல. ஆக்கப்ப+ர்வ மான வழிமுறைகளில்தான் நாம் கட்சியை வளர்ப்ப தோடு சமுதாயத்திற்கு நன்மை களை பெற்றுத் தர முடியும் என்பதை உணர்ந்து மத்திய - மாநில அரசுகளோடு நல்லுறவு பேணும் வகையிலேயே முஸ்லிம் லீகின் செயல் பாடுகள் அமைந்துள்ளன. நாம் வகுத்த சீரிய திட்டத் தின்படி - எடுத்த தீர்மா னத்தின்படி ஆண்டுக்கு ஐந்து நிகழ்ச்சிகளை மாநில அளவில் மேற்கொள்ள முடிவு செய்த தன்படி முதல் நிகழ்ச்சியாக முஸ்லிம் லீக்பேச்சாளர் பயிற்சி முகாமை தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.

இரண்டாவதாக முஸ்லிம் லீக் நிறுவன தினத்தை ஆண்டுதோறும் மாநிலம் தழுவிய மாநாடாக நடத்த முடிவு செய்ததன்படி இன்று இந்த மறுமலர்ச்சி மாநாடு இங்கு நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.

மூன்றாவதாக காயிதெ மில்லத் அவர்கள் பிறந்த தினமான ஜூன் 5-ஐ கல்வி விழிப்புணர்வு மாநாடாக கொண்டாட முடிவு செய்யப்பட்டதன்படி அந்த நிகழ்ச்சியும்,

நான்காவதாக சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது பிறந்த அக்டோபர் 4-ஐ சமூக நல்லிணக்க மாநாடா கவும் சமுதாய மக்களை மஹல்லா ஜமாஅத்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஆண்டுக்கொரு முறை மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடும் நடத்தும் வகையில் ஏற்பா டுகள் செய்யப்பட்டு, அது தொடர்பான பணிகள் நடைபெற உள்ளன.

இப்படி இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை ஆக்கப்ப+ர்வமான வகை யில் வளர்க்கவும் சமுதாய மக்களுக்கு அதிகமான நன்மைகள் பெற்றுத்தரவும் நாம் அனைவரும் முயற்சி களில் பங்களிப்புச் செய்ய வேண்டும்.

பென்னாகரத்தில்

தீவிரப் பிரச்சாரம்

நடைபெற உள்ள பென்னாகரம் இடைத் தேர்தலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தனது ஆதரவை தெரிவித் துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது. அதேபோன்று மத்தியில் ஐக்கிய முற் போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை பிரச் சாரம் செய்யவும், சமுதா யத்திற்கு உரிய நன்மை களை பெற்றுத் தரவும் முஸ்லிம் லீகினர் ஒவ்வொ ருவரும் பங்களிப்பு செய்ய வேண்டும். இன்றைய சமு தாய மறுமலர்ச்சி மாநாட் டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அமைச் சர் மு.க. அழகிரி அவர்க ளுக்கும் அவர் பங்கேற்கும் வகையில் அனுமதி வழங்கி யும் மாநாடு சிறக்க வாழ்த் துச் செய்தி அனுப்பியும் நம்மைப் பெருமைப்படுத் திய முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் இம் மாநாடு சிறக்க பல வகையி லும் உற்ற துணையாக இருந்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் நமது நன்றியையும் தெரி வித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தமது நிறைவு உரையில் குறிப்பிட்டார்.



முஸ்லிம் லீக் மாநாட்டில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பேச்சு

கலைஞர் வழியில் முஸ்லிம்களுடன் நட்பைத் தொடருவேன்



மேலப்பாளையம், மார்ச்.12-

கலைஞர் வழியில் இஸ்லாமிய மக்களுடன் நட்பை தொடருவேன் என்று மத்திய மந்திரி மு.க.அழகிரி கூறினார்.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஜின்னா திடலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. மாநாடு நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. முதலில் முஸ்லிம் பெண்கள் விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் நடந் தன. மாலை 4 மணிக்கு மேலப்பாளையம் வி.எஸ். டி. சந்தை முக்கில் சமூக நல்லிணக்க பேரணி தொடங்கி, ஜின்னா திடலை அடைந்தது.

அதைத் தொடர்ந்து சமுதாய மறுமலர்ச்சி மாநாடு தொடங்கியது. கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழக தலைவருமான பேராசிரி யர் கே.எம். காதர் முகை தீன் தலைமை தாங்கினார். மாநாட்டுக் குழு தலைவர் துராப்ஷா மாநாட்டை தொடங்கி வைத்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் வாழ்த்திப் பேசினார்.

மத்திய உரம் மற்றும் இரசாயனத்துறை மந்திரி மு.க.அழகிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப் போது அவர் கூறியதா வது:-

வாக்காளர்களுக்கு நன்றி

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலப் பாளையம் நகருக்குள் நுழையும் போது மனதில் ஒரு நினைவு தோன்றியது. கடந்த 2006-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதி பாளைங்கோட்டை தொகுதி என்ற பெருமை மனதில் வந்தது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட டி.பி.எம். மைதீன்கான் இன்று அமைச்சரவை யிலும் இடம் பெற்று உள்ளார்.

இந்த மாநாடு மூலம் பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கி றேன்.

வாக்குறுதிதான் முக்கியம்

பாராளுமன்றத்தில் முக் கியமான மசோதாவான மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப் பட்டு உள்ளது. மாநிலங் களவையில் வெற்றி பெற்று விட்டதால் மக்களவை யிலும் வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் விமான நிலையத்துக்கு புறப்பட்டேன்.

அப்போது சகோதரி கனிமொழியும், தயாநிதி மாறனும் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மக்களவையில் மசோதா நிறைவேறும் போதும் நான் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். என்னுடைய ஒரு ஓட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர்களிடம் கூறினேன். அதனால் என்னுடைய பதவி பறிபோனால் கூட பரவா யில்லை. எனக்கு மக்கள் நலன்தான் முக்கியம், முஸ்லிம் லீக் நண்பர்க ளுக்கு கொடுத்த வாக்கு தான் முக்கியம் என்று புறப் பட்டு வந்தேன்.

கலைஞர் வழியில் நட்பு

என்னுடைய தந்தை கலைஞர் உங்களோடு எந்த அளவுக்கு அன்பை பகிர்ந்து கொண்டாரோ, அதே போல் நானும் உங்களோடு நட்பை, அன்பை பகிர்ந்து கொள் வேன். என்னுடைய தந்தை வழியில் இஸ்லாமிய மக்களுடன் நட்பைத் தொடருவேன்.

1948-ம் ஆண்டு முஸ்லிம் லீக் கட்சி தொடங்கப் பட்டபோது காயிதெ மில்லத் அவர்களை சிறு வயதில் 3 முறை பார்த்து உள்ளேன். அண்ணா, கலைஞர், காயிதெ மில்லத் ஆகியோர் ஒன்றாக உட் கார்ந்து பேசியது என்னு டைய நினைவில் உள்ளது.

காயிதே மில்லத்தின் பேரன் அப்துல் ஹக், நான் படித்த கிறிஸ்தவ பள்ளி யில் படித்தார். நான் 8-ம் வகுப்பு படித்த போது என்னுடைய தம்பி ஸ்டா லினும், அப்துல் ஹக்கும் 7-ம் வகுப்பில் ஒன்றாகப் படித்தனர். படிப்பை முடித்த பிறகும் எங்க ளுடைய நட்பு தொடர்ந் தது.

காயல்பட்டின மக்கள்

திருச்செந்தூர் இடைத் தேர்தலின் போது மற்ற இடங்களில் இருந்ததை விட காயல்பட்டினத்தில் அதிக வரவேற்பு இருந்தது. அதற்கு இஸ்லாமிய மக் களுக்கும் கலைஞருக்கும் உள்ள நட்புதான் காரணம். அவர் நீதி கேட்டு நடை பயணம் மேற்கொண்ட போது நானும் உடன் சென்று இருக்கிறேன். கலைஞர் காயல்பட்டினத் தில் காலடி எடுத்து வைத்தபோது, பெண்கள் மலர் தூவி வரவேற்றதை நான் இன்னமும் மறக்கவே இல்லை.

திருச்செந்தூர் தொகுதி யில் 45 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில், காயல்பட்டி னத்தில் மட்டும் 12 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாகக் கிடைத்தது. ஆனால் அந்த ஊரில் 70 சதவீதம் மட்டுமே ஓட்டு பதிவு ஆகியது, சற்று கோபம் தான். அதிக ஓட்டுப் பதிவாகி இருந்தால் கூடு தல் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி அமைந்திருக்கும்.

கலைஞர் மீதும், தி.மு.க. மீதும், என் மீதும், இஸ் லாமிய மக்கள் வைத்து இருக்கும் அன்பு கலைஞரை 100 ஆண்டு காலம் வாழச் செய்யும். அவரை தொடர்ந்து முதல்-அமைச்சராகவே இருக்கச் செய்யும். உங்களுக்காக தொடர்ந்து நல்ல பணியை செய்து கொண்டே இருப்பார்.

தி.மு.க. செய்த நன்மைகள்

இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் கலைஞரும், தி.மு.க.வும் செய்த சலுகை களை கூறுகிறேன். 1947 முதல் 62 வரை தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த வர் அமைச்சராக இல்லாத நிலை யில் அண்ணா தனது முயற்சியில் கடையநல்லூர் மஜீத்தை அமைச்சரவை யில் இடம் பெறச் செய் தார். அப்துஸ் சமதை திமுக தான் மாநிலங்களவை எம். பி.யாக்கியது.

தென்காசி இடைத் தேர்தலில் நெல்லை கதிரவனை வெற்றி பெறச் செய்தது, கவுஸ் பாட்சா, பெரியகுளம் மேத்தாவை எம்எல்ஏ ஆக்கியது, ஜின்னாவை மாநிலங் களவை உறுப்பினராக்கி யது, ரகுமான்கானை சிறு சேமிப்பு துறை தலைவ ராக்கியது, சாதிக் பாட் ஷாவை அமைச்சராக்கி யது, சல் மாவை சமூக நலத்துறை தலைவியாக்கி யது. இவை அனைத்தும் திமுக தான் செய்தது. தற்போது மைதீன் கானை அமைச்சராக்கியுள்ளோம்.

மிலாது நபிக்கு விடு முறை அறிவித்தது தி.மு.க. தான். அடுத்து வந்த அரசு அதை ரத்து செய்த போதும் மீண்டும் விடு முறை அறிவித்தோம். சென்னை மகளிர் கல்லூ ரிக்கு காயிதே மில்லத் பெயரை சூட்டினோம். வக்பு வாரிய கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கியதோடு சொத் துக்களை பராமரிக்க ரூ.40 லட்சமும் ஒதுக்கினோம்.

குலுக்கல் முறையில் ஹஜ் பயணத்திற்கு அனுப் பியதை கைவிட்டு விண் ணப்பித்த அனைவரையும் திமுக அரசு அனுப்பியது. உருது அகடமி, காயிதே மில்லத் மணி மண்டபம், உமறுப்புலவர் மணிமண்ட பம் ஆகியவை அமைக்க ஏற்பாடு செய்தது திமுக. உலமா நல வாரியம் தந்த தும் கலைஞர் ஆட்சி தான். எனவே தமிழக முதல்வ ருக்கு முஸ்லிம்கள் என்றும் ஆதரவாக இருக்க வேண் டும்.

மீண்டும் உங்களை சந்திக்க வாய்ப்பு வரும். அப்போது சந்திக்க நிச்சயம் வருவேன்.

இவ்வாறு மத்திய மந்திரி மு.க.அழகிரி பேசினார்.

மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ப+ங்கோதை, மேயர் ஏ.எல்.சுப்பிரமணி யன், தி.மு.க. மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ., அப்பாவு எம்.எல்.ஏ. டாக் டர் எம்.கே.எம்.முகமது ஷாபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் செய்யது முகம்மது நன்றி கூறினார்.


From: Anbudan Usman


Best Regards
A.Usman
9944741315

Thursday, March 11, 2010

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தின சமுதாய மறுமலர்ச்சி மாநாடு: மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கினார்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தின சமுதாய மறுமலர்ச்சி மாநாடு: மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கினார்

பிரமாண்டமான பிறைக்கொடி பேரணி

தாய்மார்கள் வரவேற்ற கண்கொள்ளாக் காட்சி


மேலப்பாளையம், மார்ச்.11-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தின சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டை யொட்டி சமூக நல்லிணக்க பேரணி மேலப்பாளையத் தில் 10-3-2010 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. சமுதாய அறிஞர்கள் 6 பேருக்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஹசமுதாய ஒளிவிளக்கு விருது|களை வழங்கி சிறப்பித்தார்.

மாலை 4 மணிக்கு மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் அருகில் மக்கள் வெள்ளம் குவியத் தொடங்கியது. எங்கு நோக்கினும் பச்சிளம் பிறைக்கொடிகளின் பசுமைக்காடாக காட்சி யளித்தது. சமுதாயத்தின் சன்மார்க்க ஊழியர்கள் வாகனங்கள் மூலம் பச்சிளம்பிறைக் கொடிக ளுடன் தக்பீர் முழங்கிய வாறு சாரிசாரியாக வரத் தொடங்கினர்.

மாலை 5 மணிக்கு மாநில உலமாக்கள் அணி அமைப்பாளர் எச். ஹாமீத் பக்ரீ ஆலிம் தலைமையில் மாநாட்டு நிதிக் குழு தலைவர் ஷிபா எம்.கே.எம். முஹம்மது ஷாபி கொடி யசைத்து பேரணியை துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர், எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட் டச் செயலாளர் எல்.கே. எஸ். மீரான் முகைதீன், டி.ஏ. செய்யது முஹம்மது, மாவட்டப் பொருளாளர் ஏ. அப்துல் வஹாப்,

நெல்லை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் டி.ஜே.எம். ஸலா ஹ{த்தீன் ரியாஜி, மாவட் டச் செயலாளர் பி.ஏ.கே. அப்துல் ரஹீம் ஆலிம், ஏம்எ. முஹம்மது இப்ரா ஹீம் ஆலிம், தென்காசி ரப்பானியா அரபிக் கல்லூரி முதல்வர் எம்.எச். ஷம்சுத்தீன் ஹஜ்ரத், வடகரை சுலைமான் சேட் ஆலிம், தென்காசி ஏ. அப்துல் ரஹ்மான் ஷிப்லி ஆகியோர் பேரணியின் முன்னிலையாளர்களாக பங்கேற்று வந்தனர்.

புளியங்குடி நகராட்சி துணைத் தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில், மாவட்ட துணைச் செய லாளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் வி.ஏ.எஸ். செய்யது இப்ராஹீம், மாவட்ட துணைச் செய லாளர்கள் வி.கே.புரம் கானகத்தி மீரான், தென் காசி எம்.எஸ். முஹம்மது உசேன், கடையநல்லூர் எஸ்.ஏ. ஹைதர் அலி முதலியார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் எம். பஸ்லுர் ரஹ்மான், தென் காசி நகராட்சி துணைத் தலைவர் பி. இப்ராஹீம், புளியங்குடி நகரச் செய லாளர் எம். அப்துல் ரஹீம், துணைத் தலைவர் பி.என்.எம். காதர் முகைதீன், பாளை மகப+ப் அலி, பத்தமடை சிராஜ்தீன், சங்க ரன்கோவில் சேகனா, மேலப்பாளையம் நகரச் செயலாளர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர், இளைஞர் அணி தலைவர் எம்.ஏ. நாகூர் கனி செயலா ளர் பி.எம். முகைதீன் அப் துல் ஜப்பார் ஆகியோர் பேரணியை ஒழுங்குபடுத்தி வந்தனர்.

நகரின் முக்கிய வீதிக ளில் தக்பீர் முழங்கி வரும் போது பார்வையா ளர்களாக நின்று கொண் டிருந்த ஆயிரக்கணக்கான தாய்மார்கள் முகமலர்ச்சி யுடன் பேரணியை வர வேற்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி, திருவாரூர், சென்னை ஆகிய மாவட் டங்களில் இருந்து வந்த ஏராளமான ஊழியர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

மாநில தொண்டர் அணி அமப்பாளர் திருச்சி ஜிஎம். ஹாஷிம் ஆள்உயர பச்சிளம் பிறைக்கொடியை பிடித்து வந்தார். திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் கே.எம்.கே. ஹபி புர் ரஹ்மான், தேனி மாவட்டத் தலைவர் கம்பம் எம் ஷாகுல் ஹமீது, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வாவு நாசர், விருதுநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஏ. இப்ரா ஹீம் ஷா, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் புது ஆயக்குடி பாரூக், காயல் பட்டினம் நகரச் செய லாளர் அமானுல்லா, எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கி ஆகியோரும் பேரணியில் வந்தனர்.

பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாலை 6 மணிக்கு ஜின்னா திடல் மாநாட்டுப் பந்தலை வந்தடைந்தது.

பின்னர் நடைபெற்ற சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் தலைமை வகித்தார்.

எச். ஹாமித் பக்ரீ ஆலிம் கிராஅத் ஓதினார். மாவட்டச் செயலாளர் எல். கே.எஸ். மீரான் முகைதீன் அனைவரையும் வரவேற் றார்.

மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா மாநாட்டு அரங்கை திறந்து வைத்தார். மதுரை மாவட் டத் தலைவர் பி.கே.எம். அப்துல் காதர் ஆலிம் மாநாட்டு திடலில் பச்சி ளம் பிறைக்கொடி ஏற்றி வைத்தார்.

தமிழக வக்ஃபு வாரிய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர், மாநிலச் செயலாளர்கள் காயல் மஹப+ப், கமுதி பஷீர், நெல்லை மஜீத், நாகூர் கவிஞர்இஜட். ஜப ருல்லாஹ், திருப்ப+ர் எம்.ஏ. சத்தார், ஏ. அப்துல் ரவ+ப், நெல்லை மாவட்ட ஜமா அத்துல் உலமா சபைத் தலைவர் டி.ஜே.எம். சலா ஹ{த்தீன் ரியாஜி ஆகி யோர் பேசினர்.

மாநாட்டில் சிறந்த கல்வியாளர் கீழக்கரை சீனாதானா செய்யது அப்துல் காதர், சிறந்த சமூக சேவையாளர் ஷிபா டாக் டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, சிறந்த இலக்கியவாதி கவிஞர் வீரவநல்லூர் ரஹ்மான் ஆகியோருக்கு ஹசமுதாய ஒளி விளக்கு விருது|களையும், மாவட்ட துணைச் செயலாளர் பாட்டப்பத்து எம். முஹம் மது அலி, எம்.என்.எம். முஹம்மது இல்யாஸ் ஆலிம், சிலம்பு வித்வான் மணியாச்சி ஹாஜா முகைதீன் ஆகியோருக்கு மாவட்ட முஸ்லிம் லீகின் விருதுகளையும் மத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி வழங்கினார்.

ஹபிறைமேடை| மாதமிரு முறை, ஹமணிச்சுடர் மாநாட்டு சிறப்பு மலர்|, ஏ.எம். ஹனீப் எழுதிய ஹசென்னை ராஜாஜி ஹாலிலிருந்து பெங்களூர் சாதாப் மைதானம் வரை| என்ற நூலையும் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வெளியிட்டு சிறப்புரையாற் றினார்.

மாநாட்டில் தமிழக அமைச்சர் டாக்டர் ப+ங் கோதை, மாவட்ட திமு.க. செயலாளர் வி. கருப்பசாமி பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு. அப்பாவு, என். மாலை ராஜா, நெல்லை மாநக ராட்சி மேயர் ஏ.எல். சுப்பிரமணியன், துணை மேயர் கா. முத்துராம லிங்கம், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம், மாநில துணைத் தலைவர்கள் கோவை எல்.எம். ஜலீல் ஹாஜியார், திருப்ப+ர் ஹம்ஸா, திருச்சி ஏ.எம். ஹனீப், மாவட்டத் துணைத்தலைவர்கள் பாம்புக்கோவில் வி.ஏ. செய்யது பட்டாணி, புளியங்குடி ஏ. மைதீன் பிச்சை, நெல்லை பேட்டை வீ.ம. திவான் மைதீன், கடைய நல்லூர் ஏ.இ. அப்துல் காதர், மேலப் பாளையம் ஜே. ஷாகுல் ஹமீது, ஏர்வாடி தீன் இப்ராஹீம், மாவட்டச் செய்தி தொடர் பாளர் எஸ். பீர் முகைதீன், தொழிலதி பர்கள் எம்.கே. எம். கபீர், எம்.கே.எம். ஹமீது உட்பட பல்லாயிரக் கணக்கானோர் மாநாட் டில் பங்கேற்றனர்.

முடிவில் மாவட்டச் செயலாளர் த.அ. செய்யது முஹம்மது நன்றி கூறினார்.

தொகுப்பு - புளியங்குடி ஷாகுல் ஹமீது



மேலப்பாளையம் மாநாட்டுத் தீர்மானங்கள்


மேலப்பாளையம், மார்ச்.11-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தினத்தை முன்னிட்டு 2010 மார்ச் 10 புதன்கிழமை மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்ட முயற்சியின் பலனாக அமைக்கப்பட்ட நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் கல்வி வேலைவாய்ப்பில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரையை ஏற்று உடனடியாக அமல்படுத்த மத்திய அரசை இம் மாநாடு வலியுறுத்துகிறது.

திருமண கட்டாயப் பதிவுச் சட்டம்

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அண்மை யில் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட திருமண கட்டாயப் பதிவு சட்டம் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் தலையிடுவதாக அமைந்து விடுமோ என்ற ஐயப்பாடு முஸ்லிம்கள் மத்தியில் எழுந்தது. இச் சட்ட மசோதா முன்வடிவாக கொண்டு வரப்பட்ட உடனேயே அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்தி முஸ்லிம்களின் அச்சம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து மேற் கொண்ட முயற்சியின் விளைவாக முஸ்லிம்களின் ஐயப் பாட்டை நீக்க தமிழக அரசு முன் வந்துள்ளதற்கு இம் மாநாடு நன்றி தெரி வித்துக் கொள்கிறது.

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை

அறிஞர் அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றினோம். அறிஞர் அண்ணா நூற்றாண்டு துவக்க விழா மற்றும் நிறைவு விழாக்களில் சுமார் 1500 ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர்.

தற்போது கோவை சம்பவங்களில் தண்டிக்கப்பட்ட 18 பேர் உள்ளிட்ட 51 பேர் ஆயுள் சிறைவாசிகளாக உள்ளனர். இதில் கோவை மத்திய சிறையில் மட்டும் 32 பேர் உள்ளனர்.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி 10 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய முத்தமிழ் அறிஞர் முதல் அமைச்சர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

வெளிநாடு செல்லும் முஸ்லிம் இளைஞர்களுக்கு

பாஸ்போர்ட் வழங்க வேண்டுதல்

மேலப்பாளையத்தில் முஸ்லிம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி வெளிநாடு செல்ல விரும்பினால் அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் காவல் துறை தடையில்லா சான்று தர மறுப்பது உள் ளிட்ட பல்வேறு நெருக் கடிகள் அளிக்கப்படுவதாக நீண்ட காலமாக புகார் சொல்லப்படுகிறது.

உள்நாட்டில் வேலை இல்லாத இந்த இளைஞர்கள் வெளிநாட்டில வேலைவாய்ப்பு பெற அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க ஆவன செய்ய மத்திய - மாநில அரசுகளின் சம்பந்தப்பட்ட துறைகளை இம் மாநாடு வலியு றுத்தி கேட்டுக் கொள்கி றது.

சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம்

தமிழ்நாட்டில் சிறு பான்மையினரால் நடத்தப்படும் ஆரம்ப நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஓரியண்டல் அரபி சுயநிதி கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கடந்த 19 ஆண்டு காலமாக அரசு சம்பளம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு அரசு ஊதியம் வழங்கி உதவ தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுதல்

அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங் களில் காலிப்பணியி டங்களை விரைவாக நிரப்பிட தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

கடையநல்லூர் வரிவிதிப்பு பிரச்சினை

கடையநல்லூர் நகராட்சியில் முஸ்லிம்கள் நிறைந்த ஐந்து வார்டுகளில் மட்டும் 533 வீடுகளுக்கு 1000 சதவீதத்திகு மேல் வரி விதிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி முதல்வர் கலைஞரின் கவனத்திற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நேரில் கொண்டு சென்றார். முதல்வரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதனை பரிசீலிக்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகி யோர் தமிழ்நாடு நகராட் சிகளின் நிர்வாக இயக்கு நரை சந்தித்து பேசிய போது, இந்த வரிவிதிப்பு பெரும் அநீதி இது மறுபரிசீலனை செய்யப்படும் என உறுதி தரப்பட்டதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு இந்த வரி குறைப்பை விரைந்து நிறைவேற்றித் தர இம் மாநாடு வலியுறுத்துகிறது.

தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம்

தென் மாவட்ட வளர்ச்சி, தொழில் வளம், மக்கள் பயன்பாடு இவைகளை கருத்தில் கொண்டு தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்தி அதிக விமானங்கள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலை

தூத்துக்குடி - திருநெல்வேலி இரு மாநகரங்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்க தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே நான்கு வழிச்சாலை அமைக்க தமிழ்நாடு அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கி றது.

செங்கோட்டை மார்க்கத்தில் அதிக ரயில்கள்

செங்கோட்டை - சென்னை வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகத்தை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மேலப்பாளையம் ரயில் நிலைய அபிவிருத்தி

மேலப்பாளையம் ரயில்வே நிலையம் கடந்த 29 வருடங்களாக எந்த அபிவிருத்தி பணிகளும் நடைபெறாமல் உள்ளது. இந்த ரயில் நிலையத்தை புதுப்பித்து, ரிஸர்வேஷன் கவுண்டர், சுகாதார வசதிகள் உள்ளிட்ட வைகள் செய்து தருவதோடு ரயில்கள் இங்கு நின்று செல்லவும் உத்தரவிட மத்திய ரயில்வே அமைச்சகத்தை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

பேட்டை நூற்பாலை திறக்க வேண்டுதல்

திருநெல்வேலி பேட்டை தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை கடந்த 10 வருடங்களாக மூடப்பட்டு கிடப்பதால் இங்கு பணிபுரிந்த மூன்றாயிரம் பேர் வேலையின்றி அவர்கள் குடும்பங்கள் சிரமப்படுகின்றன.

இந்த நூற்பாலை நவீனப்படுத்தப்பட்டு திறக்கப்பட்டால் 5 ஆயிரம் பேருக்கு மேல் வேலை கிடைக்கும். எனவே, இந்த நூற்பாலையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முஸ்லிம் லீக் 62-வது நிறுவனதின சமுதாய மறுமலர்ச்சி மாநாடு

முஸ்லிம் லீக் 62-வது நிறுவனதின சமுதாய மறுமலர்ச்சி மாநாடு

விழிப்புணர்வு கருத்தரங்கில் மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் உரை


மேலப்பாளையம், மார்ச்.10-

மகளிர் முன்னேற்றத் திற்கு ஹஇஸ்லாம்| மார்க்கம் எப்போதுமே தடையாக இருந்ததில்லை என்று மகளிர் விழிப்புணர்வு மாநாட்டைத் தொடங்கி வைத்து தலைமை உரை யாற்றிய மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் கூறி னார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினம் சமுதாய மறுமலர்ச்சி மாநாடாக திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் எழுச்சியோடு இன்று தொடங்கியது.

மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக மகளிர் விழிப் புணர்வு மாநாடு காலை 10.30 மணிக்கு தொடங் கியது. நிகழ்ச்சிக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் தலைமை தாங்கினார். ரஹ்மத் அப்துல் ரஹ்மான், ய+சுப் சுலைஹா மீரான் மைதீன், சைபுன்னிசா, ஜமீலா ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

குடும்ப விழிப்புணர்வு என்ற தலைப்பில் பேராசி ரியை ஏ. ரபீக்கா, மருத்துவ விழிப்புணர்வு என்ற தலைப்பில் டாக்டர் எல். என். ராதா, கல்வி விழிப் புணர்வு என்ற தலைப்பில் பேராசிரியை தஸ்ரீக் ஜஹான் ஆகியோர் கருத் துரை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற ஃபாத்திமா முஸப்பர் உரையாற்றும் போது குறிப் பிட்டதாவது-

தாய்ச்சபையாம் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினம் இன்று சமுதாய மறுமலர்ச்சி மாநா டாக ஏற்பாடு செய்துள்ள தென் மண்டல மாவட்டங் களின் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அனைவருக் கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றி யையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலப்பாளையம் கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதெ மில்லத் பிறந்து வளர்ந்து அவர் காலடி பட்ட பகுதியில் இந்த மாநாடு நடைபெறு வதில் பெருமிதம் கொள் கிறோம். இந்தியப் பெண்க ளின் பல்லாண்டு கால கோரிக்கையான 33 சதவீத இடஒதுக்கீடு நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்யப் பட்டு விவாதம் நடை பெற்று கொண்டிருக்கிற இக் காலகட்டத்தில் முஸ்லிம் லீகின் துவக்க நிகழ்ச்சியாக மகளிர் விழிப்புணர்வு மாநாடாக நடத்திக் கொண்டிருக் கிறோம்.ஹ இதற்கு முழு முதல் காரணமாக இருந்த ஐக்கிய முற்போக்கு கூட் டணியின் தலைவர் சோனியாகாந் திக்கும், இதே கோரிக் கையை மகளிர் சார்பாக வலியுறுத்தி வந்த தமிழக முதல்வர் கலைஞர் அவர் களுக்கும் நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறோம்.

இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு சகலவித மான உரிமைகளையும் வழங்கியுள்ளது. மகளிர் முன்னேற்றத்துக்கு இஸ் லாம் மார்க்கம் எவ்வித மான தடையாகவும் இருந் ததில்லை. கல்வி கற்பதை ஆண் - பெண் அனைவருக் கும் கட்டாய கடமையாக் கியுள்ளது இஸ்லாம் மார்க்கம். அப்படியிருந் தும் இந்திய முஸ்லிம்கள் கல்வியிலும், பொருளா தாரத்திலும், அரசியலிலும் மிகவும் பின்தங்கியுள்ளனர். நீதிபதி சச்சார் கமிட்டி அறிக்கையும், ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையும் இந் திய முஸ்லிம்களின் அவல நிலைகளை விரிவாக ஆய்வு செய்து அறிவித் துள்ளன.

நாட்டின் பல பாகங்க ளிலும் 80 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் அடிப்படை கல்வி கூட இல்லாமல் உள்ளனர். ஆண்கள் நிலையும் அவ் வாறுதான் உள்ளது. தாழ்த் தப்பட்ட தலித் மக்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் முஸ்லிம் சமுதாயம் உள்ளது என் பதை அந்த அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன.

இறைத்தூதர் முஹம் மது நபி (ஸல்) அவர்கள் குகையில் பசித்திருந்தும், தனித்திருந்தும், விழித்திருந் தும் இறைவனை துதி செய்த போது முதலில் இறங்கிய திருக்குர்ஆன் வசனம், ஹஓதுவீராக|. உம்மைப்படைத்த இறைவ னின் திருப்பெயரைச் சொல்லி ஹஓதுவீராக|. அவனே உங்களை ஹஅலக்கு| என்னும் நீர்த்துளியி லிருந்து படைத்தான். நீங்கள் அறியாத பல விஷயங்களை அறிவித்துக் கொடுத்தான். எழுது கோலை கொண்டு எழுத கற்பித்தான். இந்த இறை வசனம்தான் முதலில் இறங்கியது.

1400 ஆண்டுகளுக்கு முன்பாக படிக்கவும், எழுத வும் இறைவனால் கட் டளையிடப்பட்ட போதும் முஸ்லிம் பெண்கள் இன்றும் கையெழுத்துப் போடக் கூட தெரியாமல் இருப்பது வெட்கப் படவேண்டியது மட்டு மல்லாமல் வேதனைக்கும் உரியதாகும்.

இந்த நிலைமைகளை உடனடியாக மாற்றியாக வேண்டும். பெண்கள் கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு சமுதாயமே கல்வி கற்ற தற்கு ஒப்பாகும். ஆண் கல்வி கற்றால் அவனுக்கு மட் டும்தான் பயன்படும். பெண் படித்தால் புதிய உல கத்தையே உருவாக்க முடியும். ஒவ்வொரு குழந் தைக்கும் தாயின் மடிதான் முதல் பள்ளியாக திகழ்கி றது.

கல்வி பயில்வதையும், கற்பிப்பதையும் இஸ்லாம் மார்க்கம் இறை வணக்க மாக்கியுள்ளது. கல்விக்காக பாடுபடுவது தர்ம காரிய மாகும். பெண்கள் கல்வி பெறுவதன் மூலமே பொரு ளாதாரம், மருத்துவம், சமுதாயம் என அனைத்து துறைகளிலும் முன்னேற முடியும். அதற்கான பணியை தொடங்கும்முக மாகவே இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் இந்த சமுதா யத்தின் முன்னேற்றத்திற்கு தங்களுடைய பங்களிப் பைச் செய்ய முன் வர வேண் டும்.

இவ்வாறு ஃபாத்திமா முஸப்பர் பேசினார்.

சமுதாய மறுமலர்ச்சி மாநாடு இ.யூ. முஸ்லிம் லீக் வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்கும்

சமுதாய மறுமலர்ச்சி மாநாடு இ.யூ. முஸ்லிம் லீக் வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்கும்

பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அப+பக்கர் பேட்டி



காயல்பட்டினம், மார்ச் 9-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தினத்தை முன் னிட்டு மேலப்பாளை யத்தில் நடைபெறும் சமு தாய மறுமலர்ச்சி மாநாடு தாய்ச்சபையின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை படைக்கும் என மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர் தெரிவித்தார்.

மாநாடு நடைபெறும் இடத்தையும், பந்தலையும் பார்வையிட்டு பின்னர் நடைபெற்ற மாநாட்டு ஆலோசனை கூட்டத்தி லும் பங்கேற்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-

சமுதாய மறுமலர்ச்சி மாநாடு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும்.

இம் மாநாட்டின் ஒரு அங்கமாக முஸ்லிம் பெண் கள் விழிப்புணர்வு கருத்த ரங்கம் நடைபெறுகிறது. முஸ்லிம் லீக் லட்சியங் களில் ஒன்றான சமூக நல்லிணக்கத்தை வலியு றுத்துகின்ற வகையில் நடைபெறுகிறது. அத னைத் தொடர்ந்து சமுதாய மறு மலர்ச்சி மாநாடு நடை பெறுகின்றது.

இம் மாநாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென் மாவட்டத் தொண் டர்கள் பங்கேற் கின்றனர்.

தமிழ்நாட்டின் 42 மாவட்டங்களில் முஸ்லிம் லீகிற்கு 10 லட்சம் உறுப்பி னர்கள் சேர்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான கிளை கள் உருவாக்கப்பட இருக் கின்றன. மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி ஆகியவை நாடு தழுவிய அளவில் அமைக்கப்பட இருக்கின்றன. அவைகளுக் கெல்லாம் இம் மாநாடு ஒரு சிறந்த அடித்தளத்தை அமைக்கும்.

இவ்வாறு பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் கூறினார்.

மேலப்பாளையத்தில் நடைபெறும் சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட இருப்பவை

மேலப்பாளையத்தில் நடைபெறும் சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட இருப்பவை


பிறைமேடை மாதமிருறை ஏடு

முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை சார்பில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் மாதமிருமுறை ஏடான ஹஹபிறைமேடை|| இதழை தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட த.இ.செ. நெய்னா முஹம்மது, எம்.கே.எம். கபீர், வி.ஏ. செய்யது பட்டாணி, பேராசிரியர் அ. சாகுல் ஹமீது ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.

இ.ய+.முஸ்லிம் லீக் 62வது நிறுவன தின

சமுதாய மறுமலர்ச்சி மாநாடு

மணிச்சுடர் நாளிதழ் சிறப்பு மலர்

இந்திய ய+னியன் முஸ்லிம் வரலாற்றுச் செய்திகள், சன்மார்க்க கட்டுரைகள், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான சிறப்புக் கட்டுரைகள் என பல்வேறு அரிய விஷயங்களை தாங்கி ஹ-4 அளவில் 144 பக்கங்களில் அழகாக உரு வாக்கப்பட்டுள்ள மணிச்சுடர் நாளிதழ் சிறப்பு மலரை மாண்புமிகு மத்தியஅமைச்சர் அஞ்சாநெஞ்சர் மு.க.அழகிரி வெளியிட தமிழக அமைச்சர் மாண்புமிகு டி.பி.எம். மைதீன்கான் பெற்றுக் கொள்கிறார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் லட்சியப்பயணத்தில்

இராஜாஜி ஹால் முதல்

சாதாப் மஹால் வரை

முஸ்லிம் லீக் வரலாறாகவே வாழ்ந்துக் கொண் டிருக்கின்ற எழுத்தரசு ஏ.எம். ஹனீப் எழுதிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் லட்சியப் பயணத்தில் இராஜாஜி ஹால் முதல் சாதாப் மஹால் வரை என்ற இந்நூல் 1+8 அளவில் 90 பக்கங்களுடன் தமிழிலும், உருதுவிலும் தனித் தனி புத்தகங்களாக உருவாக்கப் பட்டுள்ளது.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.கோதர் மொகிதீன் வெளியிட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம் பெற்றுக் கொள்கிறார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62வது நிறுவன தின சிறப்பு மலர்

அய்யம்பேட்டை ஆலிமான் ஆர்.எம். ஜியா வுதீன் தொகுத்துள்ளஆயிஷா பதிப்பக வெளியீடான இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62வது நிறுவன தின சிறப்பு மலர் 1+8 அளவில் 32 பக்கங்களுடன் இம்மாநாட்டில் வெளியிடப்படுகிறது.

2010 மார்ச் 10 இ.யூ.முஸ்லிம் லீக் 62வது நிறுவன தின """"சமுதாய மறுமலர்ச்சி மாநாடு||

2010 மார்ச் 10 இ.யூ.முஸ்லிம் லீக் 62வது நிறுவன தின """"சமுதாய மறுமலர்ச்சி மாநாடு||

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உதயம் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்

""""கவுரவத்துடன் வாழ உறுதியேற்போம்|| தேசியத் தலைவர் இ.அஹமது வாழ்த்து


சென்னை, மார்ச் 9:

2010மார்ச் 10 இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62வது நிறுவனதினமாகும்.

இந்நாளையொட்டி திரு நெல்வேலி மாவட்டம் மேலப் பாளையத்தில் ஹசமுதாய மறு மலர்ச்சி மாநாடு| மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை யில் நடை பெறுகிறது.

இம்மாநாட்டிற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவரும் மத்திய ரயில்வே இணையமைச்சரு மான இ.அஹமது சாஹிப் வாழ்த்துச் செய்தி அனுப்பி யுள்ளார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உதயம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும், அது துவக்கப்பட்ட நன்னாளில் இந்திய முஸ்லிம்கள் அனை வரும் கவுரவத்துடன் வாழ உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு:

இ.ய+.நிறுவன தினம்

2010 மார்ச் 10 அன்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமது 62 வது நிறுவன தினத்தை கொண்டாடுவது பெருமைக்குரிய விசய மாகும்.

இந்நாளையொட்டி திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் ஹசமுதாய மறுமலர்ச்சி மாநாடு| நடைபெறுவது மகிழ்வுக்குரியது.

இந்திய முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில்-இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உதயம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.

காயிதெமில்லத்

அறை கூவல்

இந்திய முஸ்லிம்கள் கவுரவத்துடன வாழ ஒரு அமைப்பு தேவை என நமது தாய்ச்சபையின் நிறு வனரும் பெரும் தலைவரு மான காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாஹிப் அவர்கள் அறை கூவல் விடுத்தார்.

இந்திய முஸ்லிம்களின் வரலாற்று ஏட்டில் இது ஒரு புதிய சகாப்தத்தை துவக்கியது. இந்திய நாட் டின் ஒற்றுமைக்கும், பேராண்மைக்கும் முஸ்லிம் லீகின் ஒவ்வொரு உறுப் பினரும் தங்களை அர்ப் பணித்துக்கொண்டது இந்திய முஸ்லிம்கள் தங்களது தனித்தன்மையை வெளிக்காட்டும் முகமாக அமைந்தது.

முஸ்லிம் லீக் சமுதாய ரீதியான ஒற்றுமையையும், மத ரீதியான நல்லிணக் கத்தையும் முன்னிறுத்தி பலசார் சமுதாயத்தில் அனைவரும் அமைதியு டன் ஒற்றுமையாக வாழ பாடுபட்டது.

இந்திய அரசியல் சாச னத்தில் கொடுக்கப்பட் டுள்ள உரிமைகளை நிலை நாட்டவும், தேசிய புனர் நிர்மான பணிகளில் ஆர் வத்துடன் பங்கேற்பதும், இஸ்லாமிய கலாச்சார மற் றும் மார்க்கத்தை விட்டுக் கொடுக்காமல் தேசிய நீரோட்டத்தில் கலப்பது இந்திய நாடு தனது அடிப் படையாக கொண்டுள்ள மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக கொள்கைகளை பாது காக்கவும், அவை களை பரப்பவும் பாடுபடு வது போன்ற லட்சியங் களை நமது கட்சியின் தெளிவான சித்தாந்தங் களாக கொண்டுள்ளது.

குறிக்கோள் 2020

இந்தியாவின் சிறு பான்மை இனத்தவரில் பெருவாரியான மக்க ளின் பிரதிநிதியாக உயி ரோட்டத்துடன் செயல் படும் அரசியல் அமைப்பே இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.

நாட்டின் சிறுபான்மை யினருக்கும், பிறப்டுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப் பட்டவருக்கும் சமூக நீதி மற்றும் உரிமைகள் பெற் றுத்தர வேண்டிய பணியில் முஸ்லிம் லீகின் பங்கு மிகவும் முக்கியமானது.

பெங்களூரில் நடந்த அகில இந்திய பிரதிநிதிகள் மாநாட்டில் வரையறுக் கப்பட்ட குறிக்கோள் 2020 நமது சமுதாயம் மற்றும் நமது நாடு வளர்ச்சிக்கு நமது கட்சியின் உறுதியான சமர்ப்பனமாகும். அது காயிதெ மில்லத் அவர் களின் லட்சிய வழித்தோன் றலே.

இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் மக்களுக்கும், நாட்டுக்கும் சேவையாற் றும் உயரிய கொள்கையுட னும், தனது குறிக்கோளை மையாககொண்டு முன் னேற்றப் பாதையில் நடை போடும் என நான் உறுதி யாக நம்புகிறேன்.

பிரார்த்தனை

மறைந்த நமது தலைவர் கள் அனைவரின் மறுஉலக நல்வாழ்விற்கு இந்நேரத்தில் இறைவனிடம் மனமுருகி பிரார்த்திப்போம்.

நம்முடைய தாய்ச் சபைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருள் பரிப+ரணமாக கிடைக்க துஆ செய்வோமாக!

இவ்வாறு தேசியத் தலை வர் இ.அஹமது தமது வாழ்த்துச் செய்தியில் குறிப் பிட்டுள்ளார்.

யினருக்கும், பிறப்டுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப் பட்டவருக்கும் சமூக நீதி மற்றும் உரிமைகள் பெற் றுத்தர வேண்டிய பணியில் முஸ்லிம் லீகின் பங்கு மிகவும் முக்கியமானது.

பெங்களூரில் நடந்த அகில இந்திய பிரதிநிதிகள் மாநாட்டில் வரையறுக் கப்பட்ட குறிக்கோள் 2020 நமது சமுதாயம் மற்றும் நமது நாடு வளர்ச்சிக்கு நமது கட்சியின் உறுதியான சமர்ப்பனமாகும். அது காயிதெ மில்லத் அவர் களின் லட்சிய வழித்தோன் றலே.

இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் மக்களுக்கும், நாட்டுக்கும் சேவையாற் றும் உயரிய கொள்கையுட னும், தனது குறிக்கோளை மையாககொண்டு முன் னேற்றப் பாதையில் நடை போடும் என நான் உறுதி யாக நம்புகிறேன்.

பிரார்த்தனை

மறைந்த நமது தலைவர் கள் அனைவரின் மறுஉலக நல்வாழ்விற்கு இந்நேரத்தில் இறைவனிடம் மனமுருகி பிரார்த்திப்போம்.

நம்முடைய தாய்ச் சபைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருள் பரிப+ரணமாக கிடைக்க துஆ செய்வோமாக!

இவ்வாறு தேசியத் தலை வர் இ.அஹமது தமது வாழ்த்துச் செய்தியில் குறிப் பிட்டுள்ளார்.

மத உணர்வு இருப்பதில் தவறில்லை

மத உணர்வு இருப்பதில் தவறில்லை

கே.எம்.காதர் மொகிதீன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-


காயல்பட்டினம் நகர மக்கள் ஒன்றுகூடி, உங்கள் பகுதி மக்களுக்காக ஓர் அமைப்பையும் நிறுவி, சேவைகள் பல ஆற்றி வருவது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பார்கள். இந்த சங்கம் அப்படி பல சேவைகளைச் செய்து வருவது மகிழ்ச்சிக்குரியது. இன்னும் பல சேவைகளை செய்ய அது காத்திருக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சியில் காயல்பட்டினத்தின் பங்கு மகத்தானது. தளபதி ஷஃபீக்குர்ரஹ்மான் அவர்கள் சொன்னதைப் போல, தற்போது முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளராக இருக்கும் ஆற்றல் மிக்க தம்பி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் காயல்பட்டினத்திலிருந்து முஸ்லிம் லீகிற்கு கிடைத்த சொத்து.

அதுபோல, முஸ்லிம் லீகின் அதிகாரப்பூர்வ தினசரி நாளிதழான மணிச்சுடரின் செய்தி ஆசிரியராக உங்கள் ஊரைச் சார்ந்த காயல் மகபூப் திறம்பட பணியாற்றி வருகிறார்.
இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளைக் குறிப்பெடுத்து செய்தியாக்கிக் கொண்டிருக்கும் தம்பி ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் மணிச்சுடர் நாளிதழின் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளராக உள்ளார்.
பாங்காக்கிலிருந்து வாவு ஷம்சுத்தீன் ஹாஜியார், அபூதபியிலிருந்து ஷாஹ{ல் ஹமீத், ஹாங்காங்கிலிருந்து தம்பி ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன், இலங்கையிலிருந்து சகோதரர் ஹாஜி பி.எம்.ரஃபீக் உள்ளிட்ட உங்கள் ஊரைச் சார்ந்த ஆற்றல் மிக்க பல நல்லவர்கள் இந்த தாய்ச்சபைக்கு என்றும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

தமிழக முஸ்லிம்களின் வளர்ச்சி வரலாற்றில் காயல்பட்டினத்திற்கென்று தனியோர் இடம் எப்பொழுதும் உள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி உருவாக்கப்படும்போது, அதன் அஸ்திவாரத்திற்கு தங்கள் பணம், உழைப்பு, ஒத்துழைப்புகளை நிறைவாக வழங்கியவர்கள் காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்கள்.

சென்னையிலுள்ள காயிதெமில்லத் கலைக் கல்லூரியின் உருவாக்கத்திற்கும் உங்கள் ஊரைச் சார்ந்த பெருமக்கள் நிறைவான பங்களிப்புகளைச் செய்துள்ளனர். வெளியூர்களில் இவ்வளவும் செய்த இம்மக்கள் தங்கள் சொந்த ஊரில் கல்லூரி ஆரம்பித்ததோ சில ஆண்டுகளுக்கு முன்புதான். நமது தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த - பாரம்பரியமிக்க வாவு குடும்பத்தினர், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி என்ற பெயரில், இந்தக் கல்லூரியை உருவாக்கியுள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு அவர்கள் காலங்காலமாக செய்து வரும் ஒத்துழைப்புகள் என்றும் மறக்க முடியாதவை.
இவற்றுக்கெல்லாம் காரணம், இந்நகர மக்கள் என்றுமே இஸ்லாமிய வழிமுறைகளை முறைப்படி பேணி ஒழுகி வந்ததுதான்.

1986ஆம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய மாபெரும் மாநாட்டில், முஸ்லிம்கள் நிறைவாக வாழும் பகுதிகளில் பைத்துல்மால் நிதியம் நிறுவப்பட வேண்டும் என்பது ஒரு முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில காலங்களிலேயே இந்த காயல்பட்டினத்தில்தான் துவக்கமாக பைத்துல்மால் உருவாக்கப்பட்டது.
அன்று பசியோடிருந்த மக்களுக்கு கலீஃபா உமர் ரழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் தமது தோளில் மாவு சுமந்து வந்து, அம்மக்களின் பசியைப் போக்கினார்கள். அந்த வழியைப் பின்பற்றி காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்கள் செய்த அறப்பணிகள் காரணமாக இன்று அங்கு பசியோடு ஒருவரும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

தெற்கு ஆத்தூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்குள்ள குடிமக்களின் வீடுகள் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்ட நேரத்தில், உங்கள் காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்கள் 200 வீடுகளைக் கட்டிக் கொடுத்தனர். இவ்வளவு செய்தும் இவற்றையெல்லாம் அவர்கள் வெளியில் பேசாத - பேச விரும்பாத காரணத்தால், வெளி உலகுக்கு அவை தெரியாமலே இருந்து வருகிறது. இம்மக்களிடம் இருந்து வரும் மார்க்க உணர்வுகளே இவர்களை இவ்வாறு செயல்படச் செய்கிறது.
காயிதெமில்லத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் காலத்திலிருந்தே, பொது சிவில் சட்டத்திற்கெதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போராடி வருகிறது. அக்காலத்தில், இச்சட்டத்திற்கெதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டபோது, உச்ச நீதிமன்றத்திலிருந்து வெளியிடப்பட்ட தீர்ப்பில், காயல்பட்டினம் முஸ்லிம்கள் அனுப்பிய மஹஜர் இது... அதனடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்படுகிறது என்று, அப்போது காயல்பட்டினம் மக்கள் எழுதியனுப்பிய ஒரு சொற்றொடரை மேற்கோள் காட்டி குறிப்பிடப்பட்டிருந்தது மறக்க முடியாத வரலாறு.

காயல்பட்டினத்தின் உலமாக்கள் அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அரபு நாட்டு மக்களுக்கு அரபு மொழி இலக்கணம் படித்துக் கொடுத்தது பெருமைக்குரிய வரலாறு. மார்க்கத்தை அறிதல், பேணுதல், பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்களில் காயல்பட்டினத்து மக்கள் எப்போதும் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

ஊலக அறிவையும் கற்ற ஹாஃபிழ்கள் ஏராளமாக உருவாகி வெளிவருவதும் இந்தக் காயல்பட்டினத்திலிருந்துதான். காரணம் அரபு நாட்டின் ஆதிகால தொடர்புதான். 10ஆம், 11ஆம் நூற்றாண்டில் பக்தாதிலிருந்து கப்பலில் இங்கு வந்திறங்கிய ஆண்-பெண்கள் இங்கு வந்து தங்கி, வணிகம் செய்து, குடும்ப உறவுகளையும் ஏற்படுத்திக்கொண்டனர்.

காயல்பட்டினம் நகர மக்களிடம் அரபியர்களின் கலாச்சாரங்கள் வெகுவாக மேலோங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே ஏதாவது மகிழ்ச்சிக்குரிய நிகழ்வுகள் நடைபெற்றால் அரபியில் கீதம் பாடுவார்கள். காயல்பட்டினத்திலும் அது பாரம்பரியமாக இருந்து வருகிறது.

அண்மையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான இ.அஹ்மத் ஸாஹிப் அவர்கள் காயல்பட்டினம் வந்தபோது, அங்குள்ள இளம் மாணவர்கள் அரபி கீதங்களைப் பாடி அவர்களை வரவேற்று மகிழ்வித்தார்கள். இந்நிகழ்வை இ.அஹ்மத் ஸாஹிப் அவர்கள் அரபு நாட்டு கலாச்சாரம் என்று மகிழ்ச்சியுடன் போற்றிக் கூறினார்கள். இதுபோன்ற கலாச்சாரங்கள் வளர்க்கப்பட வேண்டும்.

1973ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஒரு மீலாத் விழாவில் உரையாற்றுவதற்காக நான் இலங்கை வந்த பிறகு, அடுத்ததாக இப்போதுதான் வந்துள்ளேன். இப்போதும், இலங்கை நாட்டின் வெலிகமை என்ற ஊரில், அத்தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ள மீலாத் விழாவில் உரையாற்றுவதற்காகவே நான் வருகை புரிந்துள்ளேன்.
இதுபோன்ற மீலாத் விழாக்களை நடத்துவது, இறைத்தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இவர்களுக்குள்ள இஷ்க் - பற்று, பாசத்தைக் காண்பிப்பதாக உள்ளது.

வெளிநாட்டவர்களுக்காக இந்நாட்டில் தரப்படும் இரட்டைக் குடியுரிமை போன்ற சலுகைகளை நம் மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காலம் கடந்து யோசிப்பதை விட, உரிய காலத்திலேயே அவற்றைப் பயன்படுத்திக்கொள்வது சிறப்பிற்குரியது.

இந்தியாவில், மத ரீதியாக மக்களின் மனோநிலை என்ன என்பது குறித்த புள்ளிவிபரம் ஒன்றை ஹிந்து நாளிதழ் அதன் முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அந்த புள்ளிவிபரப்படி, இந்தியர்கள் 10 பேரில் 5 பேர் மத உணர்வுடையவர்களாகவும், 10 பேரில் 4 பேர் அதிக மத உணர்வுடையவர்களாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லா மதத்தினரிடையேயும் இந்தப் போக்கு அதிகமாகக் காணப்படுகிறது.

மத உணர்வாக இருக்கும் இது மதவெறியாக மாறிவிடக் கூடாது. நமது கவலையெல்லாம், மத உணர்வு இருப்பதில் தவறில்லை. மதவெறியை உருவாக்க சிலர் முயற்சித்துக் கொண்டிருப்பதுதான் மிகுந்த கவலையளிக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் இந்தியாவின் வருங்காலம் கேள்விக்குறியாகி விடும்.
பொதுவான இந்து மக்கள் இந்து மத உணர்வோடு வாழ்ந்து வருகின்றனர். அது சரியானதே. அதே நேரத்தில் அவர்களில் சிலர் இந்துத்துவா, இந்து ராஜ்ஜியம் என்ற பெயரில் மதவெறியூட்டப்படுகின்றனர். இந்து மத உணர்வை மதிக்கின்ற அதே வேளையில் இந்து மத வெறியை நாம் அனுமதிக்க முடியாது. இதுபோல்தான் எல்லா மதத்தினருக்கும்.

படிப்பினைக்காக கதை ஒன்றைச் சொல்கிறேன். சன்னியாசிகள் பதினைந்து பேர் தங்கள் பயணத்திற்கிடையே ஒரு காட்டில் தங்கினராம்... அவர்களுள் நான்கு இளம் சன்னியாசிகள் புறாக்களை வேட்டையாடிக் கொண்டு வந்தார்களாம். இதனைக் கண்ணுற்ற புறாக்கூட்டத் தலைவர், சன்னியாசிகளின் தலைவரைச் சந்தித்து, ஐயா, எங்கள் கூட்டத்திலுள்ள புறாக்களை தங்கள் சன்னியாசிகள் நால்வர் வேட்டையாடிச் சென்றுவிட்டனர். இது என்ன நியாயம்? வந்தவர்கள் வேதாந்திகள் என்பதால்தானே நாங்கள் எங்களைத் தற்காத்துக்கொள்ளத் தேவையில்லை என்றிருந்தோம்...? வந்தவர்கள் வேதாந்திகளல்ல@ வேதாந்திகள் வேடத்திலுள்ள வேட்டைக்காரர்கள் என்று தெரிந்திருந்தால் நாங்கள் எங்களைத் தற்காத்துக் கொண்டிருப்போமே...? என்று கேட்டதாம்.

முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாமிய நெறிப்படி வாழ வேண்டும். முஸ்லிம்களைப் பார்த்து இஸ்லாம் பிறரால் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
இன்று உலகின் பல நாடுகளில் மிக வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம்தான். அதற்குக் காரணம், முஸ்லிம்கள் வேதாந்திகாளகச் சென்று, தமது சொல் - செயல் - எண்ணத்தால் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை முழுமையாகப் பேணி வாழ்ந்தமைதான். அதனால்தான், பார்த்த மாத்திரத்தில் மொழி தெரியாத நிலையிலும் கூட அவர்களால் இஸ்லாம் ஏற்கப்பட்டது. இன்றைய தேவை இந்த நல்ல செயல்பாடுதான்.
நிராகரிப்பாளர்கள் விரும்பாத நிலையிலும், மற்றெல்லா மார்க்கங்களை விடவும் மேம்படுத்திக் காண்பிப்பதற்காக அவனே அவனது தூதரை நேர்வழியைக் கொண்டும், சத்திய மார்க்க நெறியைக் கொண்டும் அனுப்பிவைத்தான் என்று திருமறை குர்ஆனில் ஒரு வசனம் உள்ளது. இவ்வசனத்தை தவறாகப் புரிந்துகொண்ட சிலர் - இஸ்லாம் எல்லா மதங்களையும் அழித்து விட்டு அது மட்டும் வாழ வேண்டும் என்ற சிந்தனையைத் தூண்டுவதாக கருத்து தெரிவிக்கின்றனர். உண்மையில் இதன் கருத்து, இஸ்லாம் தனது உள்ளடக்கத்தை வெளிப்படுத்துவதன் மூலம் மற்ற மதங்களில் இல்லாத தனது தனித்தன்மையை உலகிற்கு உணர்த்தும் என்பதுதான்.
அண்மையில், வேளாங்கன்னியில் சமயங்களுக்கிடையேயான ஐக்கியத்தை மேம்படுத்தும் வகையில் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. அதில், இந்துக்கள் சார்பில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களும், கிறிஸ்துவர்கள் சார்பில் பிஷப் ஒருவரும், கம்யூனிஸ சிந்தனையாளர்கள் சார்பில் தா.பாண்டியன் அவர்களும், முஸ்லிம்கள் சார்பில் நானும் அழைக்கப்பட்டிருந்தோம்.
அப்போது, முஸ்லிம் தீவிரவாதம் பற்றி உங்கள் கருத்தென்ன என்று என்னிடம் கேட்கப்பட்டது. அவர்களுக்கு நான் விடை தருகையில், குண்டு வைக்கக்கூடிய யாரோ இருவரின் செயல்களை வைத்து இஸ்லாமைப் புரிந்துகொள்ளக் கூடாது. ஆதாரப்பூர்வ சான்றுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த இஸ்லாமிய வாழ்வியல் நெறியை அதன் மூலத்திலிருந்தும், அந்த நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி வாழ்ந்த ஞானிகள், கற்றறிந்த குருமார்களின் செயல்பாடுகளிலிருந்தும்தான் பார்க்க வேண்டும் என்று கூறினேன்.
கிறிஸ்துவர்களால் கடவுளாக மதிக்கப்படும் இயேசுவை இறைத்தூதராக நம்பாமல் ஒருவர் முஸ்லிமாக இருக்க முடியாது. அதே நேரத்தில், முஹம்மத் நபியை நம்பாமலேயே ஒருவர் கிறிஸ்துவராக இருக்கலாம். அப்படி இருக்கையில் மத தீவிரவாதம் இஸ்லாம் மார்க்கத்தில் எங்கிருந்து முளைக்கும்...? என்று நான் தெரிவித்தேன்.

அதற்குப் பின் பேசிய கிறிஸ்துவ பிஷப் அவர்கள், பேராசிரியர் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகச் சரியானவையே... முஸ்லிம்களையும், இஸ்லாமையும் புரிந்துகொள்வதில் நமது அணுகுமுறைகள் மாற்றப்பட வேண்டும் என்றார்.

நுpறைவாக, இந்த இலங்கை காயல் நல மன்றத்தின் நற்பணிகள் தொடரப்பட வேண்டும். முயுறுயுடுயுNமுயு - காவாலங்கா என்று இந்த அமைப்புக்குப் பெயர். இந்த அமைப்பு தனது செயல்பாடுகளால் இலங்கையைப் பாதுகாக்கும் காரணியாக இருக்கும் என்பதால் நான் அதை காவல் லங்கா என்று வாசிக்க ஆசைப்படுகிறேன். இதன் மக்கள் நலப் பணிகள் என்றென்றும் தொடரவும், சிறக்கவும், அவற்றுக்கான முழு நற்பலன்களும் இம்மையிலும், மறுமையிலும் இதன் கீழ் செயல்படுவோருக்குக் கிடைக்கவும் நான் அல்லாஹ்வைப் பிரார்த்தித்து நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனதுரையில் தெரிவித்தார்.

பேராசிரியரின் உரையைத் தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கமளித்தார். கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் கல்விப் பணிப்பாளர் அன்வர்தீன் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, தமது கல்லூரிக்கு இந்தியாவின் புகழ்பெற்ற முஸ்லிம் பல்கலைக்கழகங்களில் ஒன்றின் அஃபிலியேஷன் வேண்டும் எனவும், அதற்கு பேராசிரியர் உதவ வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

அவரது கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டறிந்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தாம் இந்தியா திரும்பிய பின், இது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த உயரதிகாரிகளிடம் தேவையான விளக்கங்களைப் பெற்று, இயன்றளவு விரைவாக ஆவன செய்து தருவதாக தெரிவித்தார்.









தகவல்:
ஓ.எல்.எம்.ஆரிஃப்,
செயற்குழு உறுப்பினர்,
காயல் நல மன்றம்,
கொழும்பு, இலங்கை.

Monday, March 8, 2010

மார்ச் 10: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினம்

மார்ச் 10: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினம்

மேலப்பாளையத்தில் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு

பந்தல் அமைக்கும் பணியை

நிர்வாகிகள் பார்வையிட்டனர்


நெல்லை, மார்ச்.8-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தின சமுதாய மறு மலர்ச்சி மாநாடு வருகிற 10-3-2010 அன்று மேலப் பாளையம் ஜின்னா திடலில் நடைபெறுகிறது.

அன்று காலை 10 மணிக்கு முஸ்லிம் லீக் மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் தலைமையில் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெறுகிறது.

மாலை 4 மணிக்கு மாபெரும் பிறைக்கொடி பட்டாளத்தின் சமூக நல்லி ணக்க பேரணி நடைபெறு கிறது.

மாலை 6 மணிக்கு சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நடைபெறுகிறது. நெல்லை மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா மாநாட்டுப் பந்தலை திறந்து வைக் கிறார். மதுரை மாவட்டத் தலைவர் அப்துல் காதர் ஆலிம், மாநாட்டுத் திட லில் முஸ்லிம் லீக் கொடி யேற்றி வைக்கிறார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மாநாட்டு நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.

மாவட்டச் செயலாளர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் அனைவரையும் வரவேற்றுப் பேசுகிறார்.

மு.க. அழகிரி

மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி, தமிழக அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், மாநிலப் பொரு ளாளர் வடக்குகோட்டை யார் வ.மு. செய்யது அஹ மது, கேரள முன்னாள் கல்வியமைச்சர் இ.டி. பஷீர் அஹமது எம்.பி., நாடாளு மன்ற உறுப்பினர்கள் எம். அப்துர் ரஹ்மான், எஸ். எஸ். ராமசுப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் வி. கருப்ப சாமி பாண்டியன், என். மாலைராஜா, எம்.ஏ. கலீல் ரஹ்மான், எச். அப்துல் பாசித்,

முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர்கள் தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான், எம்.எஸ்.எ. ஷாஜஹான், நாகூர் ஜபருல்லா, நெல்லை மஜீத், காயல் மஹப+ப், கமுதி பஷீர்,

அணிகளின் அமைப் பாளர்கள் திருப்ப+ர் சத்தார், கே.எம். நிஜாமுதீன், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், ஹாமீத் பக்ரீ ஆலிம்,

முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் எஸ்.எம். கோதர் முகைதீன், வி.எஸ். டி. சம்சுல் ஆலம் உள்பட அனைத்து மாவட்ட நிர் வாகிகள் கலந்து கொள் கிறார்கள்.

சமுதாய

ஒளிவிளக்கு மாநாடு

இம் மாநாட்டில் கல்வி, இலக்கியம், சமூக சேவை களில் சிறந்து விளங்கும் சிறந்த கல்வியாளர் கீழக் கரை சீனாதானா, செய்யது அப்துல் காதர் சிறந்த இலக் கியவாதி கவிஞர் வீரை ரஹ்மான், சிறந்த சமூக சேவகர் ஷிபா டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, சிறந்த பெண் கல்வியாளர், மதுரை தஸ்ரீப் ஜஹான் ஆகிய நான்கு பேருக்கு சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கப்படுகிறது.

பந்தல் அமைக்கும்

பணி தீவிரம்

மேலப்பாளையம் ஜின்னா திடலில் மாநாட் டுப் பந்தல் அமைக் கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது.

மாநாட்டுப் பந்தல் அமைக்கும் பணியை மாநிலப் பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எம். எஸ். துராப்ஷா, மாவட்டச் செயலாளர் எல். கே.எஸ். மீரான் முகைதீன், மாநாட்டு நிதிக்குழு தலைவர் ஷிபா, எம்.கே.எம். முஹம்மது ஷாபி, மாவட்ட துணைச் செயலா ளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, மாவட்ட துணைத் தலைவர்கள் வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம், ஜே. ஷாகுல் ஹமீது, மாவட்ட தொண்டர் அணி செயலாளர் வி.ஏ. எஸ். செய்யது இப்ராஹீம், பட்டதாரி அணி செயலா ளர் எஸ். மசூது, செய்தித் தொடர்பாளர் எஸ். பீர் முகைதீன், மேலப்பாளை யம் நகரச் செயலாளர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர், மறு மலர்ச்சி புளியங்குடி எம். ஷாகுல் ஹமீது, இளைஞர் அணி தலைவர் எம்.ஏ. நாகூர் கனி, செயலாளர் அப்துல் ஜப்பார் ஆகி யோர் பார்வையிட்டார் கள்.

பல்லாணிரக் கணக்கானோர்

பங்கறெ;கின்றனர்

மாநாட்டுப் பந்தலில் மாநாட்டு நிதிக்கழு தவைர் ஷிபா எம்.கே.எம். முஹம் மது ஷாபி நிருபர்களிடம் கூறியதாவது-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62-வது ஆண்டு நிறுவன தின சமுதாய மறுமலர்ச்சி மாநாடு வருகிற 10-3-2010 அன்று மேலப்பாளையம் ஜின்னா திடலில் மிகச் சிறப்பாக நடைபெற இருக் கிறது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வாக னங்களில் பல்லாயிரக் கணக்கானோர் முஸ்லிம் லீக் ஊழியர்கள் மாநாட் டில் வந்து கலந்து கொள்கி றார்கள்.

இம் மாநாடு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வர லாற்றில் ஒரு புதிய அத்தி யாயத்தைப் படைப்ப தோடு சமுதாயத்தின் மறு மலர்ச்சியை ஏற்படுத்தும்.

இவ்வாறு ஷிபா எம்.கே.எம். முஹம்மது ஷாபி கூறினார்.

ஆலோசனை

கூட்டம்

இன்று மேலப்பாளை யம் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் பள்ளியில் மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இதில் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் மற்றும் நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர் . மாநாட்டுப் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன.