Tuesday, May 19, 2009

Greetings

Abdul Jabbar
dateSun, May 17, 2009 at 9:54 AM
subjectRe: {TAFAREG-Jeddah} வேலூர் �. அப்துல்


அஸ்ஸலாமு அலைக்கும்,

ச்கோதரர் அப்துல் ரகுமான் அவர்களுக்கு என் வாழ்த்தச் சொல்லுங்கள்.

அல்லது, அவரது மின்னஞ்சல் முகவர் தாருங்கள். நானே தெரிவிக்கிறேன்.

வஸ்ஸலாம். ஹுதா ஹாஃபிழ் - அன்புடன் சாஹ்.அப்துல் ஜப்பார்.

முத்துப்பேட்டை தந்த முத்து

முத்துப்பேட்டை தந்த முத்து
முஸ்லிம் லீக் பெற்றிருக்கும் சொத்து
அமீரக காயிதே மில்லத் பேரவையின் வித்து

விளம்பரத்தின் வெளிச்சமின்றி
ஒளிந்திருந்த நிலாவே
உன்னை உயர்த்திவிட்டது ஆம்!

இணைப்பால் அல்ல பிறப்பால்
முஸ்லிம் லீகன் என்றாயே
அப்பழுகற்ற உன் தாய்ச் சபை வெறி
உயர்த்தி விட்டது உன்னை
முஸ்லிம் லீகனின் நெஞ்சங்களில்
முதல்வராக காட்சியளிக்கிறாய்
ஆம்!இருக்க மாட்டாயா?
சிராஜுல் மில்லத்தின் கரத்தால்
சிறப்பு விருது பெற்ற சிற்பியே
முனீருல் மில்லத்தின் முழு மனதே
உன்னைத் தெரிய வேண்டி
நின்றோர் சிலர்! இன்று
அறிந்து கொண்டோர் பலர்

ஆக்கப்பூர்வமான பணிகளை
அசத்தலாக செய்யப் போகும்
உன் பணிகளால் தாய்ச் சபை
மேலும் வளரும்,மிளிரும்

அடக்கத்தின் உறவிடமே
அனைத்துப் புகழும் அல்லாஹூக்குத்தான்
அருகதையுள்ள உன்னை அரியனை
ஏற வைத்த ஏக வல்லவனுக்கே!
"எல்லாப் புகழும் இறைவனுக்கே"

உங்கள் தலமையில் மிளிரும்
ஐக்கிய அரபு அமீரக
காயிதே மில்லத் பேரவையின்
கவிப்பா இது!
இஹ்லாசோடு சமர்ப்பிக்கின்றோம்
இன்முகத்தோடு ஏற்றுக் கொள்வீராக!!!

-இப்னு ஷஃபீக்-

CONGRATULATIONS FOR THE NEWLY ELECTED MEMBER OF PARLIMENT MEMBER

SIRAJUL MILLATH FORUM HONG KONG
Tamil Nadu State Indian Union Muslim League
dateMon, May 18, 2009 at 11:45 AM
subjectCONGRATULATIONS FOR THE NEWLY ELECTED MEMBER OF PARLIMENT...

Honorable President Professor HAJI K.M.Kader Mohideen Sahib MA MP

Assalamu Alaikum.
Al-Hamdulillah fine and hope the same.

Hope this finds you and all our beloved Muslim League family members while enjoying best of health and high Islamic Spirit...

Indeed we are very very happy to hear the Victory of our Party 3 MPs n the parliment election and accordingl on we are congratulating them on their victory... this is the Victory for the TRUTH and ALLAH has shower HIS blessings towards us... Sukrun Lillah.

Hope we will get the WAKF Board in Tamil Nadu and also an Raj Sabha MP for us...

Hopefully we will be having a cabinet minister as before, Insha Allah..

We will be in touch and Please do add us at your prayers...
Wassalam

VMT Mohamed Hasan
Organizer
SIRAJUL MILLATH FORUM HONG KONG

("Communal amity with hearts" harmony, effective democracy through proper representation.")

Please visit Our Official Website of Tamilnadu Indian Union Muslim League for updated news http://www.muslimleaguetn.com

READ "MANICHUDAR" printed version availbale in INDIA (The first and only Muslim Tamil Daily Newspaper for more then a decade)

Sunday, May 17, 2009

சமுதாயத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்கும்

சமுதாயத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்கும்
தனிப்பட்ட அப்துல் ரஹ்மானுக்கு அல்ல@
தாய்ச்சபைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி


வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான்

தாய்ச்சபையினருக்கு நன்றி தெரிவித்து உணர்ச்சிகரமான உரை


சென்னை, மே.17-

வேலூரில் வெற்றி மாலை சூடிய அப்துல் ரஹ்மானுக்கு தாய்ச்சபை யாம் இந்திய ய
+னியன் முஸ்லிம் லீகின் மாநில தலைமை அலுவலகமான காயிதெ மில்லத் மன்ஸிலில்
சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட்டது.

முஸ்லிம் லீகின் மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும் மற்றும்
ஊழியர்களும், தலைமை நிலைய அலுவலர்களும், மணிச்சுடர் நாளிதழ்
செய்திப்பிரிவு - அச்சகப் பிரிவு ஊழியர்களும் பொன்னாடை அணி வித்தும்
கைகுலுக்கியும் தங்களது வரவேற்பையும், வாழ்த்துக் களையும் தெரிவித்துக்
கொண்டனர்.

வரவேற்பையும், வாழ்த் தையும் ஏற்றுக் கொண்ட வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்
எம். அப்துல் ரஹ்மான் தனது வெற்றிக் காக பாடுபட்ட தாய்ச்சபை
யினருக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவித்து உணர்ச்சிகர மான
உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறிய தாவது-

தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் அமைந்த ஜனநாயக முற்போக்கு கூட்டணியில்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு வேலூர் தொகுதி ஒதுக்கப் பட்டு அதன்
வேட்பாள ராக போட்டியிடும் வாய்ப் பினை வழங்கிய இறைவ னுக்கு முதலில் என்
நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

எனது இளமைக்காலத் திலிருந்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் ஊழியனா கவே
பணியாற்றி பழக்கப் பட்டவன். முஸ்லிம் லீக் காரனாகவே வாழ்க்கையை நடத்திச்
செல்லும் அளவுக்கு தாய்ச்சபை தலைவர்கள் என்னை பக்கு
வப்படுத்தியுள்ளார்கள் - வழிகாட்டிக் கொண்டிருக் கிறார்கள்.

தாய்ச்சபை தலைவர்கள் வழியிலிருந்து சிறிதளவும் பிசகாமல் நடப்பதன்
காரணமாகவே எந்தவித தவறுக்கும் இடமளிக்காத வண்ணம் எனது வாழ்க் கையை
நடத்திச் செல்ல முடிகிறது. பதவியை - பட் டங்களை - அதிகாரங் களை விரும்பி
நான் தாய்ச் சபைக்கு வந்தவன் அல்ல.

நான் பிறவியிலேயே முஸ்லிம் லீக் காரன். பதவி கள் எனக்கு பெரிதல்ல. சமு
தாயத்தின் மானம் - மரி யாதை - கண்ணியம் ஆகி யவைதான் எனக்கு முக்கிய
மானவையாகும்.

தாய்ச்சபை காட்டிய வழியிலிருந்து எந்த நிலை யிலும் நான் தவறி விட
மாட்டேன் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட் டுள்ளேன்.

இலக்கியங்களிலே சொல்லப்படுவதைப் போல எள் அளவும் எள்ளின் முனை அளவும்,
முனையின் நுனி அளவும், நுனியின் அணு அளவும் தாய்ச்சபையின் கண்ணி யத்தை
குறைக்கும் வகை யில் எனது செயல்பாடுகள் அமைந்து விடாது என் பதையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.

வேலூர் நாடாளு மன்ற தொகுதியின் வேட்பாள ராக அறிவிக்கப்பட்டு, அந்த
தொகுதியில் கால் வைத்தது முதல் வெற்றி பெற்று இன்று உங்களை யெல்லாம்
மகிழ்ச்சியுடன் சந்திக்கும் இந்த நொடி வரையிலும் எனது வெற்றிக்காக பலரும்
பல விதங்களில் சிறப்பாக பணி யாற்றியுள்ளார்கள். அவர் களையெல்லாம் நன்றி
பெருக்குடன் நினைத்துப் பார்க்க கடமைப்பட்டுள் ளேன்.

நான் வேலூர் வேட்பா ளராக நிறுத்தப்பட்டேன் என்றால் தனிப்பட்ட அப்துல்
ரஹ்மான் நிற்கிறார் என்று கருதாமல் தாய்ச்சபையின் ஊழியர் நிற்கிறார்.
சமுதாயத்தின் கண்ணியம் காக்க உரிமை களை வென்றெடுக்க தாய்ச் சபை நிற்கிறது
என்ற உணர்வுடன் ஒவ்வொருவ ரும் தாங்களே வேட்பாள ராக நிற்பது போல் எண்ணி
தங்கள் வெற்றிக்கு எப்படி யெல்லாம் பாடுபடுவோர் களோ, எவ்வாறெல்லாம்
உழைப்பார்களோ அவ்வ ளவு தீவிரமாக களப் பணி யாற்றி வெற்றியை ஈட்டித்
தந்துள்ளீர்கள். தாய்ச்சபை யின் கண்ணியத்தை - மரியாதையை பாதுகாத்
துள்ளீர்கள்.

குறிப்பாக வேலூர் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.டி. நிஸார் சாஹிப், ஹனீப், ஜான்
பாஷா, குல்ஸர், அய்ய+ப், வாணியம் பாடி சட்டமன்ற உறுப்பி னர் அப்துல்
பாஸித், பாரூக் ஹாஜியார் இன்னும் ஏராளமானோர் பாடுபட்டுள்ளீர்கள்.

தலைமை நிலையச் செயலாளர் அபுபக்கர், இப்ராஹீம் மக்கி, காயல் மஹப+ப், கமுதி
பஷீர், ஹமீதுர் ரஹ்மான், மில்லத் இஸ்மாயில், திருச்சி ஹாஷிம், முஸ்லிம்
லீக் பாடகர் சீனி முஹம்மது உள்ளிட்ட ஏராளமா னோர் வேலூரிலே முகா மிட்டு
எனது வெற்றிக்காக பிரசாரம் செய்துள்ளார் கள். கடமையாக உழைத்
துள்ளார்கள்.

உள் நாட்டில் மட்டும் அல்லாமல் அயல் நாட்டில் நான் பணிபுரிந்த போதும்
தாய்ச்சபையின் பணிகளில் - வளர்ச்சியில் பங்கெடுத்து வந்துள்ளேன்.
என்னுடன் சர்வதேச காயிதெ மில்லத் பேரவையின் பணிகளில் பங்கேற்று உழைத்த
லியா கத் அலியும் வேலூரில் எனது வெற்றிக்காக உழைத்துள்ளார்கள். அவர் தான்
சட்டமன்றம், நாடாளுமன்றம் உள் ளிட்ட மக்கள் மன்றத்தில் என்னுடைய பணி
அமைய வேண்டும் என பெரிதும் ஆர்வம் கொண்டு ஊக்கப் படுத்தி வந்தார்.

நான் வெற்றி பெற்ற வேலூர் தொகுதி நமது தாய்ச்சபை தலைவர் சிந்தனைச்
செல்வர் சிராஜுல் மில்லத் நின்ற தொகுதி - வென்ற தொகுதி. அந்த
தொகுதியில் நானும் ஒருவனாக போட்டியிடும் வாய்ப்பினை பெற்றதும்
பிரசாரத்திற்காக அந்த தொகுதியின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் போது
சிராஜுல் மில்லத் அவர்கள் குறித்த பாராட் டுரைகளையும், சிறப்பான
விமர்சனங்களையும் நினை வ+ட்டல்களையும் பெற முடிந்தது.

அதேபோன்று நம்மை வழிநடத்திக்கொண்டிருக் கும் தாய்ச்சபையின் தற் போதைய
தலைவர் முனீருல் மில்லத் பேராசிரி யர் நின்ற தொகுதி - வென்ற தொகுதி. இந்த
தொகுதியில் மீண்டும் தாய்ச்சபை வென் றுள்ளது.

தொகுதி வேட்பாள ராக பிரசாரத்திற்கு நான் சென்ற போது வாணியம் பாடி
தொகுதியின் முக்கிய தொழில் அதிபர்கள், வணி கர்கள், பிரமுகர்கள் எல்
லோரும் ஒரே இடத்தில் கூடி தொகுதிக்கு நான் என்னவெல்லாம் செய்யப்
போகின்றேன் என்பது குறித்து அறிந்து கொள்ள ஒரு கூட்டத்தை ஏற்பாடு
செய்தார்கள்.

அதில் கலந்து கொண்டு நான் உரையாற்றும் போது ஒன்றை குறிப்பிட்டேன்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் சார்பில் போட்டியிடும் நான் உதய சூரியன்
சின்னத்தில் போட்டியிடுவதை சிலர் விமர்சித்துக் கொண்டிருக் கின்றனர்.
அதுகுறித்து தவறான தகவல்களை - வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
அவற்றிற்கெல்லாம் விடை சொல்லும் வகையில் நான் முஸ்லிம் லீக் காரன்தான்.
எனது அனைத்து செயல் களும் முஸ்லிம் லீகின் கொள்கைகளுக்கும், நடை
முறைக்கும் தக்கபடிதான் அமையும்.

எந்த நேரத்திலும் எத்தகைய சூழ்நிலையிலும் முஸ்லிம் லீகை மறந்து எனது
செயல்பாடு அமை யாது என்று நான் அழுத் தந் திருத்தமாக அவர்கள் மத்தியில்
தெரிவித்தேன்.

என்னிடம் ஒரு கேள்வியை கேட்டார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடு
வதன் காரணமாக வெற்றி பெற்று நாடாளுமன்ற சென்று சமுதாயத்திற்கும்,
தாய்ச்சபைக்கும் மரியாதை யை பெற்றுத் தருவீர்கள் என்பதில் எங்களுக்கு
அசைக்க முடியாத நம் பிக்கையிருக்கிறது.

ஒருவேளை தேர்தலுக்கு பின் பி.ஜே.பி.யுடன் இணைந்து ஆட்சி அமைக் கும்
நிலையை தி.மு.க. மேற் கொண்டால் அப்போது உங்களின் நிலை என்ன வாக
இருக்கும்? என்று கேட்டார்கள்.

நான் அவர்களிடம் அழுத்தந் திருத்தமாக கூறினேன். ஹபதவியோ - பட்டமோ -
அந்தஸ்தோ - இஸ்லாத்திற்கும் - முஸ்லிம் சமுதாயத்திற்கும் சேவை யாற்றும்
வகையில் இருக்க வேண்டும் என்பதுதான் தாய்ச்சபையின் கொள்கை. தாய்ச்சபையின்
லட்சியத் திற்கு மாறாக நடக்கும் நிலை ஏற்பட்டால் பதவி களையும், பட்டங்களை
யும் தூக்கி எறிவேனே தவிர தாய்ச்சபையின் கொள்கை களை அல்ல.

சமுதாயத்திற்கு சேவை யாற்றத் தான் - சமுதாயத் தின் குரலை ஒலிக்கத் தான்
கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந் தித்து நாடாளுமன்றத் துக்கு
செல்கின்றோமே தவிர சமுதாயத்திற்கும், மார்க்கத்திற்கும் விரோத மான
செயல்களை ஆதரிப் பதற்காக அல்ல. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நான்
தாய்ச்சபை தலைவர் கள் காட்டித் தந்த வழியில் முஸ்லிம் லீகின் ஊழிய னாக
இருப்பதைத்தான் விரும்புவேனே தவிர, பதவி - பட்டத்திற்காக மாறி போய் விட
மாட்டேன் என்பதை அவர்கள் மத்தி யில் எடுத்துரைத்தேன்.

அதனையே உங்களுக் கும் கூறிக் கொள்கின்றேன். தாய்ச்சபையின் ஊழியனா கிய
எனது வெற்றி தனிப் பட்ட அப்துல் ரஹ்மா னின் வெற்றி அல்ல. அந்த வெற்றியில்
தாய்ச்சபை ஊழியர் ஒவ்வொருவருக் கும் பங்கு இருக்கிறது.

தாய்ச்சபையின் கொள்கைக்கு உட்பட்டு சமுதாயத்தின் மானம், மரியாதை காக்கும்
வகை யில் எனது செயல்பாடுகள் அமையும் வண்ணம் உங்களது ஆலோசனை களையும்,
கருத்துக்களை யும் தெரிவியுங்கள்.

ஒருவேளை நான் தவ றிழைக்க நேர்ந்தால் ஏதே னும் குற்றம் குறைகள்
காணப்பட்டால் அதனை தைரியமாக சுட்டிக்காட்டி என்னை திருத்துங்கள். அந்த
உரிமை உங்கள் ஒவ் வொருவருக்கும் உண்டு.

எனது வெற்றிக்காக பாடுபட்ட தாய்ச்சபையின் அனைத்து ஊழியர்களுக் கும்,
சமுதாய மக்களுக்கும் கூட்டணி கட்சியினருக்கும் எனது நன்றியையும், நல்
வாழ்த்துக்களையும் தெரி வித்துக் கொள்கிறேன்.

தாய்ச்சபை ஊழியனாக - சமுதாயத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் எனது குரல்
ஒலிக்கும் பணிகள் அமையும் என்ற உறுதி கூறி விடைபெறுகின்றேன்.

இவ்வாறு அப்துல் ரஹ்மான் பேசினார்.

வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ருக்கு குவியும் வாழ்த்துக்க‌ள்

வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ருக்கு குவியும் வாழ்த்துக்க‌ள்

Ayub Musthafa
dateSun, May 17, 2009 at 10:48 PM
subjectவேட்பாள‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் வெற்றி


JAI HO

To congradulate Mr. Abdul Rahman Do you have any No.
In the right time, in the right symbol, for the right person made victory.He is deserved for the post.

May Allah bless him for his future journey.
With best regards,
M.B.Ayub.
ஷார்ஜா

கேரள முஸ்லிம் லீகும், தமிழக முஸ்லிம் லீகும்

கேரள முஸ்லிம் லீகும், தமிழக முஸ்லிம் லீகும்

http://asifmeeran.blogspot.com/2009/05/blog-post_17.html

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் செங்கொடித் தோழ்ர்களுக்குக் கிடைத்த மரண அடியில் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள் அவர்கள் - கேரளத்தில் மார்க்ஸிஸ்ட் கட்சிக்குள்ளேயே நடந்த குடுமிப்பிடி சண்டை , தோழமை கட்சிகளுக்கிடையேயான தகராறு, தோழர்களின் அராஜகப் போக்குகள் எல்லாமாகச் சேர்ந்து எதிர்பார்த்த முடிவுகளையே தந்திருக்கிறது. கேரளமாவது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் மேற்கு வங்கத்தில் மகா கூட்டணிக்கு முன்னால் மார்க்சிஸ்டுகள் சிதறு தேங்காய் போலச் சிதறிப் போவோமென்று தோழர்கள் கருதவேயில்லை.

யாருக்கு எப்படியோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீகைப் பொறுத்தவரை கேரளத்தில் இந்தத் தேர்தல் வாழ்வா சாவா மரணப் போராட்டமாக இருந்தது.


மதானி மார்க்ஸிஸ்டுகளோடு கைகோர்த்துக் கொண்டு முஸ்லீம் லீகை கடுமையாக விமர்சிக்க, மதவாதிகளோடு கைகோர்த்துக் கொண்டதாக காங்கிரஸ் மார்க்ஸிஸ்டுகளைச் சாட இம்முறை மதானியின் உணர்ச்சிமிக்க உரைகள் முஸ்லீம் லீகின் கோட்டைகளான பொன்னானி மற்றும் மலப்புரம் தொகுதிகளை உடைத்து விட்டுத்தான் மறுவேலை செய்யப் போகிறதென்று ஊகங்கள் உலா வந்தன.

'சிவப்பணிகிறது மலப்புரம்' என்று செங்கொடித் தோழர்கள் உற்சாக முழக்கமிட கடந்த தேர்தலில் ஒரே ஒரு இடத்தோடு தேங்கி நின்றதைப் போல இம்முறை நிகழ்ந்து விடக் கூடாதென்பதில் முஸ்லீம் லீக் உறுதியாக இருந்தது. அதன் தலைமை அதற்கான தீவிரப் பணிகளை முடுக்கி விட்டது. கட்சியின் அடிமட்டம் வரை நிர்வாகங்க்ள் தேவைக்கேற்ப மாற்றப்பட்டன. அதிருப்தியாளர்களை மீண்டும் கட்சியை நோக்கி இழுக்கும் முயற்சிகளை தலைமையே நேரடியாக மேற்கொண்டது. மலப்புரம் 'சிகப்பணியாமல்' பச்சை போர்த்திக் கொண்டேயாக வேண்டுமென்ற உறுதியோடு மிகத் தீவிரமாக தொண்டர்கள் இயங்கினார்கள்.


'இம்முறை கேரளத் தேர்தலில் மிக கடுமையாக உழைத்தவர்கள் முஸ்லீம் லீகைச் சேர்ந்தவர்கள்தாம்' என்று செஞ்சட்டைத் தோழர்களே தயக்கமின்றி ஒப்புக் கொள்ளுமளவிற்கு இழந்ததைத் திரும்பப் பெறும் கனவோடு மிகக் கடுமையான உழைப்பை முஸ்லீம் லீக் மேற்கொண்டது.

கேரளத்தைப் பொறுத்தவரை வடக்கு கேரளமான மலப்புரம் இசுலாமியர்கள் அதிகம் வாழும் இடம். எங்கே எந்த அலை வீசினாலும் மஞ்சேரி, பொன்னானி போன்ற இடங்களில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் லீக் வேட்பாளர்கள் ஜெயிப்பதென்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது

குறிப்பாக பொன்னானி 77இல் இருந்து தொடர்ந்து முஸ்லீம் லீக் வேட்பாளர்களையே தேர்வு செய்து வந்திருக்கிறது. பனாத்வாலா தொடர்ந்து இந்தத் தொகுதியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறார்.

ஆனால், லீக் பணக்கார இசுலாமியர்களின் அரசியல் புகலிடம் என்ற கடுமையான குற்றச்சாட்டுடன் லீகைச் சேர்ந்தவர்களே வெளியேறியதும், லீக் இரண்டாகப் பிளவுபட்டதும், ஜமாத் தே இஸ்லாமி போன்ற அமைப்புகளும் இயங்கத் துவங்கியதும் முஸ்லீம் லீகைப் பலவீனப்படுத்தின என்றாலும் மஞ்சேரி (இப்போது மலப்புரம்) அசைக்க முடியாத பெருங்கோட்டையாகவே இருந்து வந்தது சென்ற தேர்தல் வரைக்கும்.

ஆனால், கடந்த நாடாளும்ன்றத் தேர்தலில் சுழன்றடித்த செங்காற்றின் முன்னால் பச்சைக் கொடி பதறிப் போனது. வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்த ஈ.அகமது மட்டுமே பொன்னானி தொகுதியில் அசையாமல் நிற்க முடிந்தது. - கடந்த தேர்தலில் மஞ்சேரி தொகுதியில் லீக் தோல்வியடைந்தது அவர்களுக்கு மிகப் பெரும் அதிர்ச்சியை அளித்திருந்தது.
அந்தத் தேர்தலில் இரண்டு இடங்களில் இருந்தும் 7,33,228 வாக்குக்ளை மட்டுமே பெற்றிருந்த லீக் இம்முறை கடுமையாக உழைத்து தனது மலபார் (மஞ்சேரி), பொன்னானி என்ற தனது இரண்டு தொகுதிகளையும் மீண்டும் தக்க வைத்துக் கொண்டதென்பதோடு இம்முறை கடந்த முறையை விட சுமார் 80,000 வாக்குகள் அதிகம் பெற்றுக் கொண்டதென்பதும் குறிப்பிடத் தகுந்தது.


கடந்த முறை பொன்னானி தொகுதியில் லீகின் சார்பில் வெற்றி பெற்ற ஈ.அகமது இம்முறை மலபாரில் போட்டியிடத் தீர்மானித்ததும், அவர் பயந்து ஓடுவதாக செந்தோழர்கள் பரிகசித்தார்கள். ஆனால், பொன்னானி லீகின் கோட்டை என்பதால் இழந்து விட்ட மலபார் தொகுதியை மீட்பதற்காகவே ஈ.அகமது போன்ற சக்திவாய்ந்த வேட்பாளரை அங்கே நிறுத்துவதாக லீக் சொன்னது. சொன்னதைப் போலவே பொன்னானியை நிலை நிறுத்தியதோடு, இழந்து போன மலபார் தொகுதியையும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் லீக் நிலைநிறுத்திக் கொண்டது கம்யூனிஸ்டுகளை பெரும் கவலைக்குள்ளாக்கி யிருக்கிறது.


அதோடு மட்டுமல்லாமல் சமீப தொகுதிகளான கோழிக்கோடு, வயநாடு, வடகரை, கண்ணூர் போன்ற தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறவும் முஸ்லீம் லீகின் உழைப்பும் ஆதரவும் பெரும்பங்கு வகித்திருக்கிறதென்று காங்கிரஸ்காரர்கள் சொல்வதில் இருக்கும் உண்மையை அரசியல் வல்லுனர்கள் ஆமோதிக்கிறார்கள். இதுதான் செஞ்சட்டைத் தோழர்களுக்குப் பெரும் தலைவலியாகவும் தொடங்கியிருக்கிறது.


இந்தக் கதைகளைச் சொல்வதற்கு நான் முஸ்லீம் லீக் ஆதரவாளன் என்பது காரணமில்லை. கேரளத்தில் இசுலாமியர்களுக்கென்று பாரம்பரியமான தொகுதிகளும் அதில் உறுதியான வெற்றி வாய்ப்புகளும் தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் நிலை அவ்வாறில்லை. ஏதேனும் திராவிடக் கட்சிகளின் சார்பில் ஒரு இடத்தைக் கேட்டு பெறுவதே கூட முஸ்லீம் லீக்கின் பெரும் சாதனையாக இருக்கிறது.

இந்த நிலையில் துபாயில் இஸ்லாமிய வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றி வரும் அப்துல் ரஹமான், வேலூர் தொகுதியில் தொகுதிக்குப் புதியவ்ரென்றாலும் முஸ்லீம் லீக் சார்பாகப் போட்டியிட்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது.
பெரும் காங்கிரஸ்தலைகளே உருண்டு விட்ட நிலையில், வென்றவர்கள் கூட குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தலை தப்பியிருக்கிறார்கள் என்ற சூழலிலும் பதிவான வாக்குகளில் 50 சதவீத வாக்குகளுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதன் மூலம் மிக உறுதியான வெற்றியைப் பெற்றிருக்கும் சகோதரர் அப்துல் ரஹ்மானுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!!


நேற்று தொடங்கிய கட்சிகளெல்லாம் தங்களது சொந்தச் சின்னத்தில் தேர்தலை மேற்கொள்ளும்போது பாரம்பரியம் மிக்க கட்சியாக தன்னை முன்னிறுத்தும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தமிழகத்தில் நடைபெறும் அடுத்த தேர்தலிலாவது தனது சொந்தச் சின்னத்தில் நின்று வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் போன்றவர்களின் விருப்பம்.

Saturday, May 16, 2009

மௌலானா தளபதி ஷபிகுர் ரஹ்மானின் நல் துவாவும் வாழ்த்தும்

மௌலானா தளபதி ஷபிகுர் ரஹ்மானின் நல் துவாவும் வாழ்த்தும்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில மார்க்க அணி செயலாளர் மௌலானா தளபதி ஷபிகுர்ரஹ்மான் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி பெற்றதையடுத்து வேலூர் தொகுதி வெற்றி வீரர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் விவகாரகுழு உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மானுக்கு அலைபேசி மூலம் வாழ்த்தும் நல் துவாவும் தெரிவித்ததோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் முனிருல்மில்லத் பேராசிரியர் கே.எம்.கே.அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துள்ள அவர் கேரளாவில் வெற்றி பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் ஈ.அஹ்மத் மற்றும் ஈ.டி.பசிர் ஆகியோருக்கு நல் துவாவும் வாழ்த்தும் தெரிவித்து தந்தி அனுப்பியுள்ளார்

வேலூர் நாடாளும‌ன்ற‌த் தொகுதியில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் வேட்பாள‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் வெற்றி


வேலூர் நாடாளும‌ன்ற‌த் தொகுதியில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் வேட்பாள‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் வெற்றி

வேலூர் நாடாளும‌ன்ற‌த் தொகுதியில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் வேட்பாள‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் சுமார் 1,05,393 வாக்குக‌ள் வித்தியாச‌த்தில் த‌ன்னை எதிர்த்துப் போட்டியிட்ட‌ அதிமுக‌ வேட்பாள‌ரை விட‌ அதிக‌ வாக்குக‌ள் வித்தியாச‌த்தில் வெற்றி பெற்றார். ( அல்ஹ‌ம்துலில்லாஹ் )

மொத்த‌ வாக்க‌ளார்க‌ள் : 7,23,529

எம். அப்துல் ர‌ஹ்மான் ( முஸ்லிம் லீக் ) பெற்ற‌ வாக்குக‌ள் 3,60,474

அதிமுக‌ வேட்பாள‌ர் பெற்ற‌ வாக்குக‌ள் 2,53,081

சுமார் 50 ச‌த‌வீத‌த்திற்கும் அதிக‌மான‌ வாக்குக‌ள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் எம். அப்துல் ர‌ஹ்மான்.

வேலூர் தொகுதியில் முன்பு இடம் பெற்றிருந்த சட்டசபைத் தொகுதிகள் - காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு (தனி), ஆணைக்கட்டு, வேலூர், ஆரணி.

தற்போதைய தொகுதிகள் - வேலூர், அனைக்கட்டு, கீழவைத்தான்குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர்.

கடந்த தேர்தலி்லும் முஸ்லிம் லீக் வேட்பாள‌ர் பேராசிரிய‌ர் கே.எம். காத‌ர் மொகிதீன் இத்தொகுதியில் வென்றார்.

கடந்த தேர்தல் நிலவரம்

காதர் மொஹைதீன் (முஸ்லிம் லீக்) - 4,36,642.
சந்தானம் (அதிமுக) - 2,58,032.
வெற்றி வித்தியாசம் - 1,78,610 வாக்குகள்.

இதுவரை எம்.பியாக இருந்தவர்கள்

1951 - ராமச்சந்தர் - சிடபிள்யூஎல்.
1951 - முத்துக்கிருஷ்ணன் - காங்கிரஸ்.
1957 - முத்துக்கிருஷ்ணன் - காங்கிரஸ்.
1957 - என்.ஆர்.முனியசாமி - காங்கிரஸ்.
1962 - அப்துல் வாஹித் - காங்கிரஸ்.
1967 - குசேலர் - திமுக.
1971 - உலகநம்பி - திமுக.
1977 - தண்டாயுதபாணி - என்.சி.ஓ.
1980 - ஏ.கே.ஏ. அப்துல் சமது ‍ முஸ்லிம் லீக்
1984 - ஏ.சி.சண்முகம் - அதிமுக.
1989 - ஏ.கே.ஏ.அப்துல் சமது - முஸ்லிம் லீக்
1991 - அக்பர் பாஷா - காங்கிரஸ்.
1996 - பி.சண்முகம் - திமுக.
1998 - என்.டி.சண்முகம் - பாமக.
1999 - என்.டி.சண்முகம் - பாமக.
2004 - காதர் மொஹைதீன் ‍ முஸ்லிம் லீக்

முதல் தேர்தல்
நடந்த ஆண்டு - 1951.
வென்றவர் - ராமச்சந்தர் (சிடபிள்யூஎல்)

இத்த‌கைய‌ வெற்றிக்காக‌ பாடுப‌ட்ட‌ அனைவ‌ருக்கும் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் சார்பில் ந‌ன்றியினைத் தெரித்துக் கொள்கிறோம்.

எல்லாப் புக‌ழும் இறைவ‌னுக்கே !

List of Muslim candidates who made it to Lok Sabha this year

http://khabrein.info/index.php?option=com_content&task=view&id=22322&Itemid=88

List of Muslim candidates who made it to Lok Sabha this year

By Khabrein.Info Correspondent,

New Delhi, May 16, 2009: Following is the list of Muslim candidates
who have made it to Lok Sabha this year by winning their respective
seats.

We will continue to add to the list as the results continue to come.
We are sure that by evening we will have most of the results

1-Muhammed Hamdulla Sayeed A.B, Congress, Lakshdweep

2-E Ahmad, Indian Union Muslim League, Mallapuram

3- Mehboob Baig, Jammu Kashmir National Conference, Anantnag

4-Farooq Abdullah, Jammu Kashmir National Conference, Srinagar

5-Mohammad Azharuddin, Congress party, Moradabad

6-Badruddin Ajmal, AUDF, Dhubri

7-Shahnawaz Hussain, BJP, Bhagalpur

8-Shareifuddin Shariq, Jammu Kashmir National Conference, Baramulla

9- M.I. Shahnawaz, Congress party, Wayanad

10- Abu Hasem Khan Choudhury, Congress Party, Malda Dakshin

11-Hassan Khan, Independent, Laddakh

12-Abdulrahman, DMK, Vellore

13-JM Aaron Rashid, Congress Party, Theni

14- SK Saeedul Haq, , CPM, Burdwan

15- Kadir Rana, BSP, Muzaffarnagar

16-Qaisar Jahan, BSP, Sitapur

17-Tabassum Begum, BSP, Kairana

18-Dr. Shafiqur Rahman Barq, BSP, Sambhal

19- E.T. Muhammed Basheer, Ponnani, Muslim League

20-Asaduddin Owaisi, Majlis Ittehadul Muslimeed, Hyderabad

21 M Abdul Rahman, IUML Vellore Tamilnadu

will be updated more..............Inshah Alah

கலைகட்டும் காயிதே மில்லத் மன்ஸில்...!

கலைகட்டும் காயிதே மில்லத் மன்ஸில்...!

சென்னையில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலமை நிலையமான காயிதே மில்லத் மன்ஸிலில் முஸ்லிம் லீகின் மாநில,மாவட்ட நிர்வாகிகளும்,தொண்டர்களும் குவியத் தொடங்கி விட்டனர்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழக முஸ்லிம்களின் தேசிய பிரதிநிதியுமாகிய அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் வெற்றி பெற்று முஸ்லிம் லீக் தலமை நிலையத்தில் சமுதாயத் தலைவர் முனீருல் மில்லத்,மாநில நிர்வாகிகள்,மற்றும் தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொள்ள வருகை தர இருக்கும் அவரை வரவேற்க்க ஏராளமான முஸ்லிம் லீக் தொண்டர்கள் குவியத் தொடங்கியுள் ளனர். கலைகட்டும் காயிதே மில்லத் மன்ஸில்...!

சென்னையில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலமை நிலையமான காயிதே மில்லத் மன்ஸிலில் முஸ்லிம் லீகின் மாநில,மாவட்ட நிர்வாகிகளும்,தொண்டர்களும் குவியத் தொடங்கி விட்டனர்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழக முஸ்லிம்களின் தேசிய பிரதிநிதியுமாகிய அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் வெற்றி பெற்று முஸ்லிம் லீக் தலமை நிலையத்தில் சமுதாயத் தலைவர் முனீருல் மில்லத்,மாநில நிர்வாகிகள்,மற்றும் தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொள்ள வருகை தர இருக்கும் அவரை வரவேற்க்க ஏராளமான முஸ்லிம் லீக் தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.

இப்னு ஷஃபீக்

முஸ்லிம் லீக் தலைவர்களின் லட்சியங்களை பின்பற்றுவேன் வேலூரில் செய்தியாளர்களிடம் எம். அப்துல் ரகுமான் உறுதி

முஸ்லிம் லீக் தலைவர்களின் லட்சியங்களை பின்பற்றுவேன் வேலூரில் செய்தியாளர்களிடம் எம். அப்துல் ரகுமான் உறுதி



இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் காலம் காலமாக கட்டி காப்பாற்றிய கொள்கை களை - லட்சியங் களை நான் பின்பற்றுவேன். தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் மாணவன் நான் என்பதை பெருமை யடைகிறேன் என வேலூரில் போட்டியிடும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் செய்தி யாளர்களிடம் உறுதியுடன் குறிப்பிட்டார்.

வேலூர் தொகுதியில் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக போட் டியிடும் எம். அப்துல் ரகுமான் பிரசார நிறைவு நாளான நேற்று 6 சட்ட மன்ற தொகுதிகளுக் கும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்தார்.

தனக்கு ஆதரவாக பணி செய்து கொண்டிருக்கும் தி.மு.க., காங்கிரஸ், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், விடுதலைச்சிறுத்தைகள், புரட்சி பாரதம் மற்றும் தோழமை அமைப்புகளின் ஊழியர்களை சந்தித்தும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பணிமனைகளுக்கு விஜயம் செய்தும் உற்சாகப் படுத்தி னார்.

பின்னர் வேலூரில் செய்தியாளர்களை சந்தித் தார்.

அப்போது அவர் கூறிய தாவது-

சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் அங்கீகரிக் கப்பட்ட அரசியல் இயக் கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக். ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இந்த இயக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள வேலூர் தொகுதியில் நான் போட்டி யிடுகின்ற வாய்ப்பை பெற்றதற்காக மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

முஸ்லிம் லீக் தலைவர்களின்முன்மாதிரி...

அண்மையில், தமிழக உள்ளாட்சி துறை அமைச் சரும், தி.மு.க. பொருளா ளருமான தளபதி மு.க. ஸ்டாலின் வேலூர் கோட்டை மைதானத்தில் எனக்காக தேர்தல் பிரசா ரம் செய்தார். அவர் முன்னி லையில் அப்போது நான் ஒன்றை குறிப்பிட்டேன்.

ஹநான் முஸ்லிம் லீகில் சேர்ந்தவனல்ல. அதில் பிறந்தவன்| முஸ்லிம் லீகின் தலைவர்கள் சமய நல்லி ணக்கம், தேசிய ஒருமைப் பாடு, சகோதரத்துவ ஒற் றுமை, மனிதநேயம் ஆகிய வற்றை காலம் காலமாக கட்டி காப்பாற்றி வந்துள் ளனர். அவர்களின் வழி காட்டுதலில் வளர்க்கப் பட்ட நான் அதனை பின் பற்றி இந்த தொகுதியில் அந்த உயர்ந்த லட்சியங் களையெல்லாம் நிறை வேற்றக்கூடியவனாக வலம் வருவேன் என உறுதி கூறினேன். அதைத்தான் செய்தியாளர்களாகிய உங்கள் முன்னிலையிலும் மீண்டும் உறுதியாக தெரி விக்க விரும்புகிறேன்.

நான் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., அவர் களுடைய மாணவன் என்ப தில் நான் பெருமையடை கின்றவன். என்னை வேட் பாளராக தேர்ந்தெடுத்த வுடன் பேராசிரியர் கலைஞரிடத்தில் அழைத்து சென்றார்.

கஞைர் - தளபதிவாழ்த்து

கலைஞருடைய வாழ்த் துக்களை பெற்று அவர் களுடைய அன்பு புதல் வரும், இளைய தலை முறையினரின் நம்பிக்கை நட்சத்திரமுமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களு டைய ஆதரவோடு நம்மு டைய பொதுப்பணித் துறை அமைச்சர் மாண்பு மிகு துரைமுருகன் அவர் களுடைய ஒத்துழைப் போடு நான் இங்கே போட்டியிடுகிறேன்.

தொகுதி முழுவதும் நான் சுற்றுப் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெற்றேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் அனைத்து தரப்பு மக்க ளும் மிகவும் மகிழ்ச்சியாக கலைஞரின் நலத்திட்டங் களை - சலுகைகளை அவைகள் மிகச் சரியாக போய் சேர்ந்த காரணத்தி னால் அவைகளை அனுப வித்து அவர்களே ஜன நாயக முற்போக்கு கூட்ட ணியின் வேட்பாளரை வெற்றி பெறச் செய்கின்ற உறுதி மேற்கொண்டுள்ள காட்சியை என்னால் காண முடிந்தது.

பெரும்பான்மை வாக்கு கள் வித்தியாசத்தில் இந்த தொகுதியில் மக்கள் எனக்கு வெற்றி தேடித் தருவார்கள் என்ற நம் பிக்கை எனக்கு உண்டு.

தொகுதிக்கு நலப்பணிகள்

இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பின ராக நான் தேர்ந்தெடுக்கப் பட்டால் இந்த தொகுதி யிலேயே தங்கியிருந்த மக்களுக்கு தேவையான காரியங்களை நிறைவேற்று வதற்கு பாடுபடுவேன் என உறுதி கூறுகிறேன்.

இந்த தொகுதியின் மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். நல்ல சுகாதார வசதி, கலைஅறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி கள் நிறுவப்பட வேண்டும்.

நெசவாளர்கள், பீடித் தொழிலாளர்கள், ஏழைத் தொழிலாளர்கள் மேம் பாட்டு நலனுக்கு பாடுபடு வோம்.

தோல் பதனிடும் தொழில் நடத்துவோரும், அதில்
இப் பகுதியின் பிரதான பிரச்சனையான மருத்து மனை, குடிநீர் வசதிகள், நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்குதல், சாலை மற்றும் சுகாதார வசதிகள், கழிவு நீர் சுத்திகரிப்பு, சி.எம்.சி. முதல் பை-பாஸ் வரை உள்ள பாலம் போன்ற அத்தியாவசிய மான பணிகள் விரைவாக நிறைவேறுவதற்கு உறு துணை புரிவேன்.

உழைத்தவர்களுக்கு நன்றி

மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் மனித நேய மதச்சார்பற்ற நல்லரசு அமைவதற்கு தமிழக மக்கள் 40 தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் களை வெற்றிபெறச் செய் வார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற் காக இரவு -பகலாக பாடு படுகின்ற தி.மு.க.., காங்கி ரஸ், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், புரட்சி பார தம் உள்ளிட்ட கட்சி களின் ஊழியர்களுக்கு மனம் நிறைந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

கொங்கு வேளாளர் சமு தாயம் ஒட்டுமொத்தமாக என்னை ஆதரிக்க முடிவு செய்து அதனுடைய தலைவர் கொங்குசாமி நாயுடு எனக்காக பிரச்சா ரம் செய்தார்.

அதேபோன்று பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்களும், பிரமுகர் களும் எனக்காக உழைத் தார்கள். அவர்களுக்கெல் லாம் நன்றி. என்னை பற்றிய உண்மையான விஷயங் களை மக்களுக்கு மத்தியில் எடுத்துச் சொன்ன பத்திரி கையாளர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவிப்பதோடு எதிர் காலத்திலும் நான் நல்ல பணிகள் செய்வதற்கு நல்ல ஆலோசகர்களாக - நண்பர் களாக நீங்கள் விளங்க வேண்டும் என்ற வேண்டு கோளையும் வெளிப்படுத் துகிறேன்.

இவ்வாறு வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Tuesday, May 12, 2009

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பார்ந்த சகோதரர்களே!

அவதூறு யார் மீது பரப்பப்பட்டாலும் அது மிகப் பெரிய அநீதி. வன்மையான கண்டனத்திற்குரியது. உண்மை தான் இறைவனை அஞ்சி வாழும் நல்லடியார்கள் இவ்வாறான ஈனச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

சிறுமதியாளர்களின் ஈனச்செயல்களால் வேதனக்குள்ளான மரியாதைக்குரிய பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கும் அவரது இயக்க தொண்டர்களுக்கும் எனது அனுதாபமும் ஆதரவும்.

அதே வேளையில், காலத்தை சிறிது பின்னோக்கி ஓட்டிப் பார்க்கிறேன். தனது வேலூர் தொகுதிக்குட்பட்ட ஒரு ஊரில் ஒரு சாமியாரை சந்தித்துவிட்டு அந்த இடத்தை விட்டு எழுந்திருக்கும் போது, தன் கையை தரையில் ஊன்றி எழுந்திருக்கிறார் 70 வயது நிரம்பிய முனீருல்மில்லத் பேராசிரிய்ர் காதர் மொகிதீன் அவர்கள். போட்டோவும் எடுக்கப்படுகிறது.

இது தான் வேளை என்று, அந்த போட்டோவை பயன்படுத்தி அரசியல் பழி தீர்க்க காத்துக் கொண்டிருந்த அன்றைய தமுமுக-வாகிய இன்றைய ம்மக-வினர், பேராசியர் காதர் மொகிதீன் அவர்கள் சாமியாரின் காலில் விழுந்து ஆசி பெற்றார் என்று, நா கூசாமல், அவர்களது இணையதளத்தில் 'கப்சா, அடித்து பேரா. காதர் மொகிதீன் அவர்களை பொய்யுரைத்து கேவலப்படுத்தினீர்களே!

அப்போது, நீங்கள் இன்று பேசும் பவ்வியமாகப் பேசும் 'இறையச்சம்', உங்களை விட்டு வாக்கிங்கா போயிருந்தது. தன்னைப் பற்றி தமுமுக/மமக பரப்பிய பொய் செய்தியை படித்து பேரா.காதர் மொகிதீன் எத்தனை மன வேதனை அடைந்திருப்பார். காலம் கடுமையான ஆசிரியன். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். எனினும், இரண்டு அவதூறு சம்பவங்களும் மிகுந்த கண்டனத்துக்குறியவை.

மாட்சிமை பொருந்திய அல்லாஹ் தவறிழைக்கும் மனிதர்களாகிய நம் அனைவரயும் மன்னிக்கப் போதுமானவன்

அன்புடன்

அபூ நஜ்மி

குறிப்பு: நான் ததஜ/முஸ்லிம் லீக் தொண்டனல்ல.
abunazmi@gmail.com

Saturday, May 9, 2009

இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தவர் கருணாநிதி: மத்திய அமைச்சர் அஹமத் பேச்சு

இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தவர் கருணாநிதி: மத்திய அமைச்சர் அஹமத் பேச்சு


ஆம்பூர், மே 8: இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி என மத்திய வெளிவிவகாரத் துறை இணை அமைச்சரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவருமான அஹமத் கூறினார்.

வேலூர் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பார் எம்.அப்துல் ரகுமானை ஆதரித்து, ஆம்பூரில் வியாழக்கிழமை இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது:

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணியாகும். இஸ்லாமியர்களை மதிக்கக் கூடியவர் முதல்வர் கருணாநிதி. அதனால்தான் அவரது ஆட்சிக்காலத்தில் இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைத்தது.

முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கிறது.

திமுகவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் வைத்திருக்கும் உறவு காயிதே மில்லத், அறிஞர் அண்ணா காலத்து உறவாகும்.

சிறுபான்மையினருக்கு என தனியாக அமைச்சரை மத்திய அரசு நியமித்தது. சச்சார், மிஸ்ரா கமிஷன் அமைக்கப்பட்டு அவைகள் அளித்த பரிந்துரைகளைச் செயல்படுத்த மத்திய அரசு சுமார் ரூ.1400 கோடி செலவிட்டுள்ளது என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், எம்எல்ஏ ஹெச்.அப்துல்பாசித், நகரத் தலைவர் கே. இக்பால் அஹமத், திமுக நிர்வாகி எம்.ஆர்.ஆறுமுகம், நகர்மன்றத் தலைவர் வாவூர் நஜீர் அஹமத், காங்கிரஸ் குப்புசாமி, சுரேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திமுக அணிக்கு தேசிய லீக் தலைவர் வாக்கு சேகரிப்பு

திமுக அணிக்கு தேசிய லீக் தலைவர் வாக்கு சேகரிப்பு


குடியாத்தம், மே 8: வேலூர் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் எம்.அப்துல் ரஹ்மானுக்கு ஆதரவாக தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் பஷீர் அஹமத் குடியாத்தம் பகுதியில் வியாழக்கிழமை இரவு வாக்கு சேகரித்தார்.

ஜோதி மடம், பீரான் நகர், தரணம்பேட்டை, சித்தூர்கேட், தாழையாத்தம் ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

அவருடன் திமுக நகரச் செயலர் மா.விவேகானந்தன், மாணவர் அணி அமைப்பாளர் ம. மனோஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் சிவ.செல்லபாண்டியன் உள்ளிட்டோர் சென்றனர்.

ஜமாஅத்துல் உலமா சபை: திமுகவுக்கு ஆதரவு

ஜமாஅத்துல் உலமா சபை: திமுகவுக்கு ஆதரவு

ராமநாதபுரம், மே 8: ராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையினர் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

சபையின் நிர்வாக குழுக் கூட்டத் தலைவர் ஏ. வலியுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் அப்துல் ரகுமான் முன்னிலை வகித்தார். அப்துல் சலாம் வரவேற்றார்.

இக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அ. ரகுமான்கான், கவிஞர் அமீர் அப்பாஸ் ஆகியோர் திமுகவுக்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டார். எம். முகம்மது ரியாசுதீன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார். முகம்மது ஜரீத் நன்றி கூறினார்.

Thursday, May 7, 2009

உரிமைகளை பெற்று தந்து பெருமை பெற்ற முஸ்லிம் லீக்!!

உரிமைகளை பெற்று தந்து பெருமை பெற்ற முஸ்லிம் லீக்!!

இந்நாட்டில் ஷரீஅத் சட்டம் பின்பற்றப்படக்கூடாது,அனைவரும் ஒரே பொது சிவில் சட்டத்தைத் தான் பின்பற்ற வேண்டும் என்ற அபாயக் குரல் எழுந்த போது,முடியாது முடியவேமுடியாது எங்கள் மூச்சுள்ளவரை ஷரீஅத் சட்டத்தை தான் பேணுவோம் என்று பொது சிவில் சட்டத்தை அறுத்தெரிந்த இயக்கம் முஸ்லிம் லீக்!

பள்ளிவாசல்களில் பாங்கோசையை தடை செய்யப்பட்ட போதும் அதை தகர்த்தெரிந்து பள்ளிகளில் சொல்லப்படும் பாங்குக்கு வந்த பங்கத்தையும் போக்கிய பேரியக்கம் முஸ்லிம் லீக்!

ஷஃபானு வழக்கில் விடிய விடிய பாராளுமன்றத்தை நடத்த வைத்து வெற்றி கண்ட இயக்கமும் முஸ்லில் லீக்!

பள்ளிவாசல்களில் காய்ச்சப்படும் நோன்புக் கஞ்சிக்கு அரிசியை மானிய விலையில் பெற்றுத்தந்த பேரியக்கம் முஸ்லிம் லீக்!

ஐம்பது ஆண்டுகாலமாக கோரிவந்த இடஒதுக்கீட்டின் இறுதிக் கட்டமாக 1998ம் ஆண்டு சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற முஸ்லிம் லீக் பொன்விழா மாநாட்டில் பங்கேற்க வந்த அன்றைய,இன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களிடம் "கண்டிப்பாக இட ஒதுக்கீடு தருவேன்" என்ற உறுதிமொழியை பெற்று 2008ம் ஆண்டில் அந்த இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் பெருமையை பெற்றுத் தந்த பேரியக்கம் முஸ்லிம் லீக்!

1967ம் ஆண்டு அன்றைய தமிழக சட்டமன்றத்தில் முஸ்லிம் லீக் உறுப்பினர் செங்கம் ஜப்பார் அவர்களால் வைக்கப்பட்ட"உலமா நலவாரியம் தேவை" என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி,இதே ஆண்டு பிப்ரவரியில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முஸ்லிம் லீக் நடத்திய ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்களிடம் வலியுறுத்தப் பட்ட போது அதே மேடையில் கண்டிப்பாக உலமா நல வாரியம் அமைத்துத் தருவோம் என்ற உறுதிமொழியை பெற்ற ஒருசில வாரங்களிலேயே உலமாக்களுக்கு தனி நல வாரியம் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு அடிப்படையில் மட்டுமல்ல,அன்று முதல் இன்று வரை காரணமாக இருந்த இயக்கம் முஸ்லிம் லீக் !

அரபி மதரஸாக்களில் வழங்கப்படும் சான்றிதழ்களை (ஸனதுகளை) பல்கலைக்கழகங்களுக்கு நிகரான சான்றாக ஏற்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிசெய்யும் வாய்ப்பை உறுவாக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் இயக்கம் முஸ்லிம் லீக்!

தமிழகத்திலிருந்து ஏன் இந்தியா முழுவதிலிமிருந்தும் அதிகமான எண்ணிக்கையில் ஹாஜிகள் புனிதக் கடமைகளை நிறைவேற்ற உறுதுணை புரிந்த பேரியக்கம் முஸ்லிம் லீக்!

இப்பொழுது நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள் முஸ்லிம் லீக் என்ன செய வில்லை என்று?

அரசியலில் பொது நலபலன்கள் உள்ளன ஒன்று பதவிகளை பயன்படுத்தி சமுதாயத்திற்க்கும்,மக்களுக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுத்தருவது,மற்றொன்று சுயநலப் பயன்கள் உள்ளன தனது குடும்பத்துக்கும்,வாரிசுக்கும் வளமான வாழ்வுக்கு வழி செய்துக் கொள்வது.இதில் முஸ்லிம் லீக் தலைவர்கள் இரண்டில் எதை செய்திருக்கிறார்கள்? என்று ஒவ்வொரு ஈமானிய உணர்வுள்ள முஸ்லிமும் தனது நெஞ்சுக்குள்ளே கேள்வியை எழுப்பி பதிலையும் பெற்றுக் கொள்ளட்டும்.

சமுதாயத்திற்க்கு முஸ்லிம் லீக் என்ன செய்தது என்ற கேள்விகளை சிலர் சவாலாக கேட்கிறார்கள்!முஸ்லிம் லீக் செய்த,செய்துக் கொண்டிருக்கின்ற காரியங்களை பட்டியலிட முடியாது,விளம்பரப் படுத்திக் கொள்ளவும் கூடாது இதேகொள்கையை(விளம்பரமே வேண்டாம் என்ற கொள்கையை) கண்டிப்புடன் கடைபிடித்து வந்ததால் கயவர்களின் கடைக்கண் பார்வை முஸ்லிம் லீக் மீது பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒன்றை தெளிவாக புரிந்துக் கொள்ளட்டும் முஸ்லிம் லீக் என்பது ஃபீனிங்ஸ் பறவை போன்றது அமைதியாகத்தான் இருக்கும்,ஏன் சில சமயங்களில் இந்த இயக்கம் இருப்பதாகக் கூடத்தெரியாது.

சமுதாயத்திற்க்குத் தேவையானவற்றை கூடு கட்டிக் கொண்டு வந்து சேர்க்கும் வல்லமை வாய்ந்தது என்பது வரலாற்று உண்மை!!!


இப்னு ஷஃபீக்


Abdul rahman

அமீரகத் தாய்ச் சபையின் தளபதி..!

அமீரகத் தாய்ச் சபையின் தளபதி..!

லட்சத்தி சொச்சம் வாக்கு
வித்தியாசத்தில் வெற்றி பெற்று
கோடிக்கணக்கான
மக்கள் மனதில் நிலைப் பெற்று
நாடாளும் சபையில் இடம் பெற
துணை புரிந்த வல்ல ரஹ்மானுக்கே
எல்லாப் புகழும்..!

வேலூர் நாடாளு மன்ற தொகுதியின்
வெற்றிச் செல்வரைப் பற்றி
சில வரிகள்...சிலருக்காக...!

நெஞ்சம் இருக்கும் வரை
நினைத்துக் கோண்டிருக்கும்
வரலாற்றுக்குச் சொந்தக்காரர்
சந்தனத்மிழ் அறிஞர்
சிராஜுல் மில்லத்தின் அன்புத் தம்பி..!

மணிவிழாவின் முழு நிலா
முனீருல் மில்லத்தின் மாணவராக,
முழு மனதாக வளம் வரும்
அமீரகத் தாய்ச் சபையின் தளபதி..!

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினர்
காயிதே மில்லத் பேரவையின்
அனைத்துலக அமைப்பாளர்..!

ஐக்கிய அரபு அமீரக
காயிதேமில்லத் பேரவையின்
தனிப் பெரும் தலைவர்..!

அறிவுச் சுடர்
இயக்க இளவல்
முஸ்லிம் லீகின்
முத்துப்பேட்டை நகரின்
முதுபெரும் தலைவராகவும்
தப்லீகின் அமீர்களில்
ஒருவராகவும் திகழும்
நெ.மு.ஹாஜியார் பெற்றெடுத்த
பெருமகனாரே..!

தங்களுக்கு வந்த விமர்ச்சனங்கள்
எங்களை நோக்கித்தானே..?

சத்தமில்லாமல் சமுதாயப்பணி
செய்வதை வாழ்த்துவதா..?

விளம்பரத்தின் வெளிச்சமின்றி
வாரி வழங்குவதை வாழ்த்துவதா..?

நான் முஸ்லிம் லீகில் இணைந்தவனல்ல..
அதில் பிறந்தவன் என்று பிரகடனப்படுத்தினீரே
அதை வாழ்த்துவதா..?

இமாலாய வெற்றியடைந்து
இந்தியாவை மதவாத சக்திகள்
ஆள துணை போக நேரிட்டால்...?

என்ற கேள்வியை எதிர் கொண்டதும்
அடுத்த நொடியே தூக்கியெரிவேன்
என சூளுரைத்த-இஹ்லாசான
ஈமானை வாழ்த்துவதா..?

தேர்தலில் நின்று வெற்றி வாகை
சூடியதை வாழ்த்துவதா..?

தாய்ச் சபைத் தலைவர்களின்
லட்சியப் பாதையில் பயணிப்பேன்
என்ற சபதத்தை வாழ்த்துவதா..?

வாழ்த்துக்கள் என்ற பெயரால்
வார்த்தைக்களைச் சொல்லி
முடித்துக் கொள்ள விரும்பவில்லை
தங்கள் தம்பிமார்கள்..!

தங்கள் சாதனைகள்
சமுதாயத்தின் சீதனமாக
மாறப் போவது உண்மை..!

தங்கள் வெற்றிப் பணிக்கு
உரமிட்ட வாக்காளர்களுக்கும்,
உன்னதமான சமுதாயத்தின்
ஒத்துழைப்பிற்க்கும் வாழ்த்துக்கள்..!

தாங்கள் பங்கெடுத்த நிகழ்வுகளில்
பதிய வைக்காமல் இருந்ததில்லை
பசுங் கொடித் தோழன் என்ற பெருமையை..!

தாய்ச்சபைத் தம்பிமார்களின்
தாழ்மையான வேண்டுகோள் தங்களுக்கு
அதை நிறைவேற்றித் தர வேண்டும் எங்களுக்கு..!

பிறை மேடை பிரகாசிக்க
பெரும் காரணமாயிருந்த
பெருமகனே..!

மீண்டும் வேண்டும்
கடல் கடந்த கண்மணிகளும்
காண வேண்டும்..!

ஆம்!பிறை மேடை
தொடர்ந்து பிரகாசிக்க வேண்டும்..!

வாய்ப்புக்கு வாழ்த்துக் கூறி
அய்மானுக்கு நன்றி கூறி
விடை பெருகிறேன்...!

குறிப்பு: அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் நடைபெற்ற வாழ்த்தரங்கில்,முஸ்லிம் லீக் பதிப்பகக் குழு உருப்பினர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் வாசித்த கவிதைத் தொகுப்பு.

ibnuthalabathi@yahoo.co.in

Monday, May 4, 2009

அறுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றின் அப்பட்டமான உண்மை!!!

அறுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றின் அப்பட்டமான உண்மை!!!


* ராஜேந்திர சச்சார் கமிட்டி அமைத்து இந்தியா முழுவதிலுமுள்ள முஸ்லிம்களின் இன்றைய பொருளாதார நிலையை வெளியில் கொண்டு வர முதல் முக்கிய காரணமாக இருந்தவர்,

* மத்தியில் சிருபான்மையினருக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தி வெற்றி கண்டவர்,

* மத்ரஸாக்களில் தீவிர வாதம் போதிக்கப் படுவதில்லை என்று வீர கர்ஜணை செய்ததுடன் நானும் அங்கிருந்து வந்தவன் தான் என்பதை பாராளுமன்றத்தில் பதிவு செய்தவர்,

* இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதை அதே இடத்தில் நிர்மானிக்கப்பட்டு திறக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை ஆணித்தரமாக நடப்பு பாராளுமன்றத்திலேயே வைத்தவர்,

* மத்ரஸாக்களுக்கு சலுகை விலையில் வழங்கப்பட்டு வந்த சமையல் எரிவாயுவை அதிக விலையாக மாற்றியதை கலைந்து உடனே அதே சலுகையை தர வேண்டும் என்று பாராளூமன்றத்தில் வாதிட்டவர்,

* பள்ளிவாசல்களில் கடைபிடிக்கப்படும் திருமண நிக்காஹ் (தஃப்தர்) பதிவேட்டை அரசுப் பதிவாக அங்கீகரிக்க வேண்டும்,இதை அரசின் சட்டமாக இயற்றுங்கள் என்ற வாதத்தை பாராளுமன்றத்தில் பதிய வைத்தவர்,

உதயசூரியன் சின்னத்தில் நின்றுதான்இவ்வளவு காரியங்களையும் விளம்பரத்தின் வெளிச்சமின்றி செய்து முடித்த சமுதாயத்தின் ஒப்ப்ற்றத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர்,கே.எம்.காதர் மொஹிதீனஅவர்கள்.அவரின்் ் மாணவராகவும்,அப்பழுகற்றத் தொண்டராகவும் திகழக்கூடிய சகோதரர் அல்ஹாஜ்.எம்.அப்துல் ரஹ்மான் அவர்களின் வெற்றி சமுதாயத்தில் மிகப் பெரிய எதிர் பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது மட்டுமின்றி,பெருமக்களின் துஆவும் பெருகியிருக்கிறது.அல்ஹம்துலில்லாஹ்,இதே பிரார்த்தனை இல்லங்கள் தோறும் ஒளித்துக் கொண்டிருக்கிரது.இந்த இனிய தகவளின்படி கடல் கடந்து வாழும் சமுதாய பந்தங்களும்,தாய்ச் சபை சொந்தங்களும்,தங்களின் பங்களிப்பாக துஆவோடு மட்டும் நின்று விடாமல்,தங்கள் அருகாமையில் பணிசெய்யக் கூடிய வேலூர் தொகுதியை சேர்ந்த பெருமக்கள் இருப்பார்களேயானால் அவர்களிடமும் நமது வேட்பாளரின் சார்பில் அவர்களின் குடும்ப வாக்குகளை பெற முயற்சிக்கவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

அறுபது ஆண்டு கால அரசியல் வரலாற்றில் சமுதாயத்தின் சங்க நாதமாக ஒலிப்பது தாய்ச் சபை முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் தான் என்பது அப்பட்டமான உண்மை!

எல்லாவற்றையும் விவரிக்க இங்கு இடமுமில்லை அதற்க்குரிய நேரமும் இதுவல்ல என்பதனால் இன்றைய தாச் சபை எம்.பி யின் சேவையில் சிலவற்றை மட்டும் உங்கள் கவனத்திற்க்கு காண்பித்தோமே தவிர இது விளம்பரத்திற்காக அல்ல!

சின்னம் என்பது முஸ்லிம் லீக் பணிகளில் சிரமமாகவே இருந்ததில்லை என்பதை சிரஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப்,ஷம்ஷீரே மில்லத் அப்துல் லத்தீப் சாஹிப் போன்ற தலைவர்கள் நிரூபித்துச் சென்றதை இன்று முனீருல் மில்லத் பேராசிரியர் நடைமுறை படுத்திக் கட்டியிருக்கிரார் என்பதை விளங்கிக் கொள்வது அவசியம்.

இதைக் கூட சொல்ல வேண்டிய நிர்பந்தம் தான்! கவனித்துக் கொண்டிருப்பவர்களின் கவனத்திற்க்காகத்தான் !!!
இப்னு ஷஃபீக்

பரங்கிப்பேட்டையில் திருமாவளவனை ஆதரித்து பிரசாரம்

பரங்கிப்பேட்டையில் திருமாவளவனை ஆதரித்து பிரசாரம்

சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் வி.சி., வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி., காதர் மொய்தீன் பிரசாரம் பரங்கிப்பேட்டையில் பிரசாரம் செய்தார்.

முத்துப்பெருமாள் தலைமை தாங்கினார். தி.மு.க., நகர செயலாளர் பாண்டியன், பேரூராட்சி தலைவர் முகம்மது யூனுஸ் முன்னிலை வகித்தனர்.


சின்னக்கடை தெரு, பெரியத்தெரு இடங்களில் எம்.பி., காதர் மொய்தீன் பிரசாரம் செய்தார்.

தி.மு.க., இளைஞரணி முனவர் உசேன், பிரதிநிதி காண்டீபன், காங்., ஜெகநாதன், இளையபெருமாள், செய்யது அலி, கிஷார், பஷீர் அகமது பங்கேற்றனர்.


சுகத்தை அனுபவித்துவிட்டு ஓடியவர் ராமதாஸ் - காதர் மொய்தீன் கடும் தாக்கு!

உள்ள 11 ஆயிரம் ஜமாத்தில் உள்ள முஸ்லிம்கள் தி.மு.க கூட்டணிக்கு ஓட்டுப் போட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேசினார்.

மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆயங்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனை ஆதரித்து பொதுக் கூட்டம் நடந்தது.

அலி தலைமை தாங்கினார். அப்துல் வதூது, முகமது ஹனீப், முகம்மது ஷரீப் முன்னிலை வகித்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன் பங்கேற்று பேசுகையில்,

தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் ஜமாத் முஸ்லிம்கள் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். நமது கட்சியில் ஐந்து வால் நட்சத்திரம் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியிலும் ஐந்துவால் நட்சத்திரம் உள்ளது. விரல்களை விரித்தால் சூரியன் சின்னம். சேர்த்தால் கை சின்னம். ஆகவே நாம் இயற்கை கூட்டணியாகும். சேது சமுத்திர திட்டம் நமது மூதாதையர் திட்டமாகும். அதனை நாம் நிறைவேற்ற துணை நிற்க வேண்டும். ராமதாஸ் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு ஓடியவர். ஆகவே தி.மு.க கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்றார்.

இம்முறை தமிழகத்தைச் சேர்ந்த 15 பேர் கேபினட் அமைச்சர்கள் - மொய்தீன் மிகுந்த ஆசை!

தமிழகத்தை சேர்ந்த 15 பேர் மத்திய கேபினட் அமைச்சர் ஆகவுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் கூறினார்.

நெல்லிக்குப்பத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர தலைவர் அப்துல் ஷாதி தலைமை தாங்கினார். முகமது இப்ராஹிம் முன்னிலை வகித்தார். ராஜா ரஷிமுல்லா வரவேற்றார். மாநில தலைவர் எம்.பி., காதர்மொய்தீன் சிறப்புரை ஆற்றினார்.

தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன், காங்கிரஸ் நகர தலைவர் திலகர், சேர்மன் கெய்க்வாட்பாபு, விடுதலை சிறுத்தை முல்லைவேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





எம்.பி., காதர்மொய்தீன் பேசியதாவது:

, ஐரோபிய நாடுகள் பொருளாதார சிக்கலில் உள்ளன. பிரதமர் மன்மோகன்சிங் திறமையால் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது.

ஒதுக்கப் பட்ட ஜெ., அரசியல் நாகரீகம் தெரியாதவர். வயதுக்கு கூட மரியாதை தராமல் கருணாநிதியை பற்றி தரம் தாழ்ந்து பேசுகிறார். பிறரை மதிக்க வேண்டுமென்ற பண்பாடுகூட தெரியவில்லை.

மக்கள் தான் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். நாற்பது தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். இம்முறை தமிழகத்தை சேர்ந்த 15 பேர் மத்திய கேபினட் அமைச்சர் ஆவர். தமிழகம் முன்னேற தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டுமென கூறினார்.

Source: தினமலர்


சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் வி.சி., வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி., காதர் மொய்தீன் பிரசாரம் பரங்கிப்பேட்டையில் பிரசாரம் செய்தார்.




முத்துப்பெருமாள் தலைமை தாங்கினார். தி.மு.க., நகர செயலாளர் பாண்டியன், பேரூராட்சி தலைவர் முகம்மது யூனுஸ் முன்னிலை வகித்தனர்.









தெரு, சின்னக்கடை தெரு, பெரியத்தெரு இடங்களில் எம்.பி., காதர் மொய்தீன் பிரசாரம் செய்தார்.











.மு.க., இளைஞரணி முனவர் உசேன், பிரதிநிதி காண்டீபன், காங்., ஜெகநாதன், இளையபெருமாள், செய்யது அலி, கிஷார், பஷீர் அகமது பங்கேற்றனர்.









சுகத்தை அனுபவித்துவிட்டு ஓடியவர் ராமதாஸ் - காதர் மொய்தீன் கடும் தாக்கு!




உள்ள 11 ஆயிரம் ஜமாத்தில் உள்ள முஸ்லிம்கள் தி.மு.க கூட்டணிக்கு ஓட்டுப் போட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேசினார்.




மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆயங்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனை ஆதரித்து பொதுக் கூட்டம் நடந்தது.









அலி தலைமை தாங்கினார். அப்துல் வதூது, முகமது ஹனீப், முகம்மது ஷரீப் முன்னிலை வகித்தனர்.





யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன் பங்கேற்று பேசுகையில்,

தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் ஜமாத் முஸ்லிம்கள் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். நமது கட்சியில் ஐந்து வால் நட்சத்திரம் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியிலும் ஐந்துவால் நட்சத்திரம் உள்ளது. விரல்களை விரித்தால் சூரியன் சின்னம். சேர்த்தால் கை சின்னம். ஆகவே நாம் இயற்கை கூட்டணியாகும். சேது சமுத்திர திட்டம் நமது மூதாதையர் திட்டமாகும். அதனை நாம் நிறைவேற்ற துணை நிற்க வேண்டும். ராமதாஸ் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு ஓடியவர். ஆகவே தி.மு.க கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்றார்.

இம்முறை தமிழகத்தைச் சேர்ந்த 15 பேர் கேபினட் அமைச்சர்கள் - மொய்தீன் மிகுந்த ஆசை!



தமிழகத்தை சேர்ந்த 15 பேர் மத்திய கேபினட் அமைச்சர் ஆகவுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் கூறினார்.
நெல்லிக்குப்பத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர தலைவர் அப்துல் ஷாதி தலைமை தாங்கினார். முகமது இப்ராஹிம் முன்னிலை வகித்தார். ராஜா ரஷிமுல்லா வரவேற்றார். மாநில தலைவர் எம்.பி., காதர்மொய்தீன் சிறப்புரை ஆற்றினார்.





.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன், காங்கிரஸ் நகர தலைவர் திலகர், சேர்மன் கெய்க்வாட்பாபு, விடுதலை சிறுத்தை முல்லைவேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





எம்.பி., காதர்மொய்தீன் பேசியதாவது:





, ஐரோபிய நாடுகள் பொருளாதார சிக்கலில் உள்ளன. பிரதமர் மன்மோகன்சிங் திறமையால் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது.





ஒதுக்கப் பட்ட ஜெ., அரசியல் நாகரீகம் தெரியாதவர். வயதுக்கு கூட மரியாதை தராமல் கருணாநிதியை பற்றி தரம் தாழ்ந்து பேசுகிறார். பிறரை மதிக்க வேண்டுமென்ற பண்பாடுகூட தெரியவில்லை.





மக்கள் தான் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். நாற்பது தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். இம்முறை தமிழகத்தை சேர்ந்த 15 பேர் மத்திய கேபினட் அமைச்சர் ஆவர். தமிழகம் முன்னேற தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டுமென கூறினார்.

Saturday, May 2, 2009

தேர்தலில் குழப்பம் இல்லை பிரதமர் யார் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள்

தேர்தலில் குழப்பம் இல்லை பிரதமர் யார் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள்
சிவகாசியில் பேராசிரியர் காதர்மொய்தீன் பேச்சு


சிவகாசி, மே.3-

பிரதமர் யார் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர் என சிவகாசியில் நடந்த தேர் தல் பிரசார கூட்டத்தின் போது காதர் மொய் தீன் பேசினார்.

பிரசார கூட்டம்

ஐக்கிய ஜனநாயக முற் போக்கு கூட்டணி சார்பில் சிவகாசி பாவடித்தோப்பு திடலில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய ïனியன் முஸ்லிம் லீக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் காதர்மொய்தீன் பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த முறை நடந்த பாராளுமன்ற தேர்த லில் 40 இடங்களில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோல் இந்த முறையும் 40 தொகுதிகளிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்து நாட்டிற்கு வர இருக் கும் பேராபத்தை விரட்டி அடிப்போம். பெரிய குழப் பத்தை உருவாக்கி மதங்க ளுக்கு இடையே மோதலை உருவாக்க சிலர் முயற்சித்து வருகிறார்கள். பள்ளிவாசலை இடித்து அங்கு தான் ராமர் பிறந்தார். அங்கு தான் கோவிலை கட்டுவோம் என்றால் என்ன நியாயம்? 428 ஆண்டுகள் அங்கு தொழுகை நடந்தது என்பது உண்மை யானால் அங்கு மீண்டும் பள்ளிவாசல் வந்து தான் தீரும். அங்கு தொழுகை நடந்துதான் தீரும். குஜராத்தில் கலவரம் தூண்டப்பட்டு தற்போது அங்கு லட்சக்கணக்கான முஸ் லிம்கள் அகதிகளாக இருக்கிறார்கள். அங்கு இருந்த 699 முஸ்லிம் கிராமங்கள் தற் போது இல்லை. அப்படிப் பட்ட கலவரத்தை நடத்திய மோடிக்கு 64 வகை உணவு டன் விருந்துவைத்தவர் தான் ஜெயலலிதா.

யாருக்கு ஓட்டு

உங்கள் கூட்டணியில் யார் பிரதமர்? நீங்கள் யாருக்கு ஓட்டு கேட்கிறீர்கள். இந்தியா வின் பிரதமர் வைகோ என்று யாராவது எழுதி கொடுத்து விட்டார்களா? இலங்கையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாக திரிகிறார்கள். நாங்கள் தமிழ் இனத்தை அழித்து வரும் ராஜபக்சே அரசை ஆதரிக்க வில்லை. இலங்கையில் அப் பாவி தமிழர்கள் கொல்லப்ப டுவதை தடுக்கத் தான் நாங் கள் அங்கே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகி றோம். இலங்கை பிரச்சினை பற்றி முழுவதும் தெரிந்தவர் கருணாநிதி மட்டும் தான். வைகோவுக்கு எதுவும் தெரி யாது. முஸ்லிம் சமுதாயத் துக்கு நீங்கள் செய்த நன்மை கள் என்ன? தமிழ் மக்கள் மத்தியில் குழப்பம் இல்லை.

330 திட்டங்கள்

யார் பிரதமர் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கி றார்கள். மன்மோகன் சிங் இந்தியாவின் பொருளாதா ரத்தை நிலை நிறுத்தியவர். அதனால் தான் அவரை சோனியா பிரதமராக அறி வித்தார். அமெரிக்க பொரு ளாதாரம் ஆட்டம் கண்டு கொண்டு இருக்கிறது.இதில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாட்டின் பொரு ளாதாரத்தில் எந்தவித பிரச் சினையும் இல்லாமல் இருக் கிறது. அதற்கு மன்மோகன் சிங்தான் காரணம். நாம் பிரதமரை தேர்ந்தெடுத்து விட்டோம். அதற்கு இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மாணிக் தாகூரை வெற்றி பெற செய்யவேண்டும். சென்ற முறை தமிழகத்தை சேர்ந்தவர்கள் 13 பேர் அமைச்சர்களாக இருந்த னர் இந்த முறை 15-க்கும் மேற் பட்டவர் அமைச்சராக உட் கார போகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 330 திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். இந்த தொகுதியில் கை சின் னத்தை தவிர வேறு யாருக்கு வாக்க ளித்தாலும் அது செல்லாத வாக்காக மாறும். தமிழகத் தில் கருணாநிதி செயல் படுத்தி வரும் திட்டங்களை மற்ற மாநிலங்கள் தற்போது பின்பற்றி வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசி னார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நடந்து முடிந்த தேர்தலும், முஸ்லிம்களின் நிலைபாடும்!

நடந்து முடிந்த தேர்தலும், முஸ்லிம்களின் நிலைபாடும்!
மரியாதைக்குரிய சிந்தனை சிற்பிகளான இளைஞர்களே ! இம்மடல் காணும் உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் …)!
இம்மடலை பொறுமையுடன் படித்து நடுநிலையோடு சிந்தித்து நல்லதொரு முடிவுக்கு வருவீர்களானால் … இன்ஷா அல்லாஹ் நாளைய வெற்றி நமது சமுதாயத்திற்கே! நமது நாட்டின் 15வது மக்களவை தேர்தல் சிலருக்கு வெற்றியும் பலருக்கு தோல்வியுமாய் முடிந்து விட்டது. தமிழகத்தைப் பொருத்தவரைக்கும் முஸ்லிம் லீக்கின் சார்பில் சகோதரர் N.M.அப்துல் ரஹ்மான் அவர்களும் காங்கிரஸ் சார்பில் J.M.ஹாரூன் அவர்களும் வெற்றி பெற்று தமிழக முஸ்லிம்களின் சார்பில் பாராளு மன்றத்தில் இடம் பிடித்து விட்டனர் அல்ஹம்துலில்லாஹ்!
தமிழகத்தில் செயல்படும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களிடையே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மட்டுமே ஒருவர் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றுள்ளார். மற்றவைகளுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் கிடைத்த அங்கீகாரத்தையும் பயன்படுத்த தவறிய தமுமுகவின் மனித நேய மக்கள் கட்சியை நினைத்து நெஞ்சம் வேதனைப்படுகிறது. தற்போதைய அரசியலில் வேகத்தை மட்டும் வைத்து களமிறங்காமல் விவேகத்தையும் பயன்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதுதான் கண் கூடான உண்மை!
இந்த வாய்ப்பைத்தான் முஸ்லிம் லீக் சமயோசிதமாய் செயல் படுத்தி ஒதுக்கப்பட்டது ஒரு தொகுதியானாலும் அதில் வெற்றி வாகை சூடி விட்டது. ஆனால் நேற்று கட்சி ஆரம்பித்து தங்களின் முழுமையான பலம் என்னவென்பதை (4 தொகுதியில் போட்டியிட்டு மொத்தமே 66 ஆயிரம் வாக்குகள் மட்டுமே ம.ம.கட்சி பெற்றிருந்தது) தெரிந்து கொள்ளாமலேயே எடுத்தேன், கவிழ்த்தேன் என தகுதிக்கு மீறிய வகையில் சீட் பேரம் நடத்தி முடிவில் கிடைக்க விருந்த ஒரு தொகுதியையும் இழந்தது மட்டுமல்லாமல் கையில் இருந்த வக்ஃபு வாரியத்தையும் பறி கொடுத்து விட்டு,தேர்தல் நாளன்று ஆளும் கட்சியினரோடு வன்முறை யிலும் ஈடுபட்டு அதில் நமது சகோதரர்கள் 6 பேர் இரத்தம் சிந்தியது, இந்த வன்முறையை கண்டித்து தமிழகத்தில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தி அதில் ஆளும் கட்சியினரை அநாகரீகமாக வசை பாடியதன் மூலம் இராமநாதபுரத்தில் மட்டுமே 100-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸ் வழக்குபதிவு செய்து தற்போது தேடப்படும் குற்றவாளிகளாக ஓடி ஒளிந்து வரும் நிலையை தொண்டர் களுக்கு ஏற்படுத்தியது போன்ற தமுமுகவின் அரசியல் செயல்பாடு அறிவுடையதா? அல்லது எந்த வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் கிடைத்த ஒரு இடத்தையும் யாரையும் வசைபாடாமல் கண்ணியமான முறையில் பிரச்சாரம் செய்து லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ள முஸ்லிம் லீக்கின் அரசியல் செயல்பாடு அறிவுடையதா? என்பதை உங்களின் மனச்சாட்சிக்கே விட்டு விடுகிறேன், நல்ல தீர்ப்பு வழங்குங்கள் !
பிற கட்சி சின்னத்தில் போட்டியிடுவதால் முஸ்லிம் லீக் தனது கெளரவத்தை இழந்து விடும் என நினைப்பது எவ்வகையில் நியாயம்? 100 ஆண்டு கண்ட நமது தாய்ச்சபை முஸ்லிம் லீக் இன்று வரைக்கும் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாமல் போனதற்கு யார் காரணம்? கேரளாவில் மட்டும் அன்றிலிருந்து இன்று வரை தனிச் சின்னத்தில் போட்டியிட்டு 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள், இரண்டு எம்.பிக்கள் என முஸ்லிம் லீக் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு யார் காரணம்? எல்லாம் உங்களை போன்ற இளைஞர்கள் தான்! காரணம்!! கேரளாவில் இயக்கங்கள் பல இருந்தாலும் அரசியல் என்று வரும்போது முஸ்லிம் லீக்கின் தலைமையில் அம்மக்கள் ஒன்று திரண்டு விடுகின்றனர், வெற்றியும் பெறுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக முஸ்லிம் லீக்கில் ஒன்றிணையாமல் ஆளுக்கொரு கட்சி ஆரம்பித்து ஆளுக்கொரு கூட்டணியில் சேர்ந்து கொள்கின்றனர். இந்நிலை நீடித்தால் இன்னும் 100 ஆண்டு களானாலும் முஸ்லிம் லீக் மட்டுமல்ல எந்த இயக்கமும் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு எந்த வெற்றியையும் பெற முடியாது!
தமிழக முஸ்லிம்களிடம் குறிப்பாக இளைஞர் களிடம் நான் மிகவும் பணிவோடு கேட்பதெல்லாம் நீங்கள் எந்த இயக்கத்திலும் இருந்து கொள்ளுங்கள். அதன்மூலம் சமுதாய பொது சேவையாற்றுங்கள். வரவேற்கிறோம்! ஆனால் தேர்தல் அரசியல் என்ற நிலை வரும்போது மட்டும் கேரளாவைப் போல இயக்கத்திற்கப்பால் முஸ்லிம் லீக் என்னும் ஒரே குடைக்குள் நுழைந்து விடுங்கள். பின்னர் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சியை பாருங்கள். தமிழகத்தின் அனைத்து அமைப்புகளின் சகோதரர்களும் அரசியல் ரீதியாக முஸ்லிம் லீக்குடன் இணைந்து செயல்பட்டால் போதும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்துடன் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றியையும் பெற்று விடலாம்!
சகோதர சமுதாயத்தின் நிலையை பாருங்கள், R.S.S, விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முண்ணனி, பஜ்ரங்தளம், சிவசேனை போன்ற பல இயக்கங்களாய் செயல்பட்டாலும் தேர்தல் வரும் போதெல்லாம் ஒன்று திரண்டு பி.ஜே.பிக்கு ஆதரவு கொடுப்பதால் தான் இரண்டு முறை மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தாமரையாய் ஜொலித்தார்கள். இதைப் பார்த்தாவது நமது சமுதாயம் திருந்தாதா? இன்ஷா அல்லாஹ் திருந்தும் என்ற நம்பிக்கையோடு தான் இம்மடலை எழுதியுள்ளேன். படியுங்கள், சிந்தியுங்கள், தமிழக முஸ்லிம்களின் ஒரே அரசியல் களமாக முஸ்லிம் லீக் மட்டுமே இருக்கட்டும். எல்லோரும் முஸ்லிம் லீக்கில் இணைந்து ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம்! நாளைய விடியல் தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் வெற்றியாக இருக்கட்டும். நமது சமுதாயத்தின் அரசியல் உயர்வையும், உரிமையையும் அடைவதற்காக “ஏணி” காத்திருக்கிறது. முஸ்லிம் லீக் என்னும் ஏணியில் ஏறி சிகரத்தை வெல்வோம். வாருங்கள் தாய்ச்சபைக்கு, இணையுங்கள் தாய்ச்சபை சகோதரர்களோடு இன்ஷா அல்லாஹ் நாளைய ஆட்சியும் அதிகாரமும் நம்முடையதாகட்டும்! ஆமின்!!


சமுதாயக் கவலையுடன்

மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி

துபை

தொடர்புக்கு; Cell: 050-7959960

Friday, May 1, 2009



Candidate introduced to DMK alliance workers


Candidate introduced to DMK alliance workers



To stay in Chennai but work full-time for the constituency

Abdul Rahman, the IUML candidate for the Vellore constituency, at the workers’ meeting in the DMK office in Vellore on Saturday.

VELLORE: Abdul Rahman of the Indian Union Muslim League, candidate of the Dravida Munnetra Kazhagam-led alliance for the Vellore Lok Sabha constituency, has said that he would work for the development of the constituency on the education, health and economic fronts, if elected as MP.

Mr. Rahman (49) told reporters at the party office on Saturday that if elected, he would stay in Chennai but work full-time for the development of the constituency.

Office, residence at Vellore

On whether people would have to go all the way to Chennai to meet him if he gets elected, Mr. Rahman said that he would have an office and residence in Vellore to help the public to meet him.

When asked about the allegation that the sitting MP, K.M. Khader Mohideen, had not done much for the constituency, Mr. Rahman said that Mr. Mohideen had done whatever he could as an MP.

Earlier, Mr. Rahman was introduced to workers of alliance parties at a meeting held at the DMK office under the presidentship of T.A. Mohammed Saqhy, Vellore district presidium chairman of the DMK. P. Karthikeyan, Mayor of Vellore, T.A. Mohammed Sadique, Deputy Mayor, and A.M. Ramalingam, secretary of the Vellore Corporation committee of the DMK, were present.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு தொகுதி முழுவதும் வரவேற்பு

வேலூர் நாடாளுமன்ற தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு தொகுதி முழுவதும் வரவேற்பு

http://www.muslimleaguetn.com/news.asp?id=829

வேலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் வாக்காளர்கள் மிகுந்த எழுச்சியுடன் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. பொருளாளரும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் வேலூர் கோட்டை மைதானத்தில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ.அஹமது வேலூர் தொகுதிக்கு வருகை தர இருக்கிறார்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க தலைமையி லான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு வேலூர் தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது.

அத்தொகுதியில் போட் டியிடும் எம். அப்துல் ரகுமான் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாட்றாம்பள்ளி ஒன்றியத்திலும், 27ம் தேதி திங்கள் கிழமை ஆலங்காயம் ஒன்றியம், உதயேந்திரம், பேரூர், பேர்ணாம்பட்டு ஒன்றியம் ஆகிய இடங்களிலும் வாக்கு சேகரித்தார்.

அன்று இரவு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்டமான தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் தி.மு.க பொருளாளரும் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.

மத்திய மாநில அரசுகள் இதுவரை செய்துள்ள சாதனைகளையும் அ.இ.அ. தி.மு.க. கூட்டணி இலங்கை தமிழர் பிரச்சி னையில் நடத்துகின்ற நாடகத்தையும் சுட்டிக் காட்டி உரையாற்றிய மு.க.ஸ்டாலின் அப்துல் ரகுமானை வெற்றி பெற செய்யுமாறு வாக்காள பெருமக்களை கேட்டுக் கொண்டார். 28ம் தேதி வேலூர் நகர் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வேட்பாளர் அப்துல் ரகுமான் வாக்கு சேகரித்தார். பொது மக்கள் இல்லங்களிலிருந்து வெளி யில் வந்து மிகுந்த உற்சாகத் துடன் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அவருடன் வேலூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் முஹம்மது சகி, மேயர் கார்த்திகேயன், துணை மேயர் சாதிக், நகரச் செயலாளர் ராமலிங்கம், நகர அவைத் தலைவர் விஜய சங்கர், பொருளாளர் சந்துரு, காங்கிரஸ் கட்சி யின் சந்திர பிரகாஷ், சீனி வாசன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்.

வேலூர் கிழக்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் கே.எல். முஹம் மது ஹனீப், செயலாளர் கே. சான் பாஷா, பொருளா ளர் அப்துல் அஜீஸ். வேலூர் மாநகர முஸ்லிம் லீக் தலைவர் அய்யூப் பாஷா, செயலாளர் குல்சார், பொருளாளர் பாபு மற்றும் மாமன்ற முஸ்லிம் லீக் உறுப்பினர் கள், நிர்வாகிகள், இளஞர் அணி, மாணவர் அணியின் பொருப்பாளர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

துரைமுருகன் தலைமையில் கே.வி. குப்பத்தில் வாக்கு சேகரிப்பு

29ம் தேதி புதன் கிழமை கே.வி.குப்பம் தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் உடன் சென்று தொகுதி முழுவதும் அவ ருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.

30.4.09 குடியாத்தம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார். மே 1ம் தேதி வேலூர் ஒன்றியத்திலும், 2ம் தேதி ஆலங்காயம் ஒன்றியத்திலும் பேரூர் பகுதியிலும், 3ம் தேதி திருப்பத்தூர் ஒன்றியத்திலும், 4ம் தேதி மாதனூர் ஒன்றியத்திலும், 5ம் தேதி அணைக் கட்டு ஒன்றியத்திலும், 6ம் தேதி ஒடுக்கத்தூர், பள்ளி கொண்டா, பேரூர், கணியம்பாடி பகுதியிலும் வாக்கு சேகரிக்கிறார்.

5 மற்றும் 6 தேதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ. அஹமது வேலூர் தொகுதிக்கு வருகை தந்து அப்துல் ரகுமானுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்கிறார்.