Friday, June 26, 2009

Tuesday, June 23, 2009

சமுதாயச் சேவையே என்னுயிர் மூச்சு ! - எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பேட்டி!




சமுதாயச் சேவையே என்னுயிர் மூச்சு ! - எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பேட்டி!

வந்தார் ! நின்றார் ! ஜெயித்தார் ! என எல்லோராலும் வியந்து பாராட்டும்படியாக மாபெரும் வெற்றிதனை வேலூரில் நிலைக்க வைத்தவர் முத்துப்பேட்டை எம். அப்துர் ரஹ்மான். காலமெலாம் சமுதாயத்திற்கு வெளியேயே சுற்றி விட்டுக் காலம் போன கடைசியில் சமுதாயத்தைத் திரும்பிப் பார்க்கும் சிலருக்குத்தான் அப்துர் ரஹ்மான் ‘இறக்குமதி’ செய்யப்பட்டவராகத் தெரியும். சமுதாயச் சேவையிலேயே ஊறித் திளைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அரபு மண்ணில் அலுவல் பார்த்தாலும் பிறந்த மண்ணில் சமுதாயம் மேம்பாடு காண அவர் அயராது ஆற்றி வந்த அரும்பணிகள் தெரிந்தே இருக்கும். உதட்டில் உதிர்க்கும் வார்த்தைகளில் மட்டும் அல்ல…. உள்ளத்தில் ஊற்றெடுக்கும் அவரது உணர்ச்சிகளிலும் இணைந்து கலந்தது இந்திய யூனியன் முஸ்லிம்லீக்.

வெற்றிவீர்ராகச் சென்னை திரும்பிய எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி. ‘இனிய திசைகள்’ இதழுக்கு அளித்த பிரத்யேகமான பேட்டி இதோ:

? தங்கள் வெற்றியின் இரகசியம்?

! சமுதாயக் கண்ணியம் காக்கப்பட – சமுதாயத்தினரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அரசியல் இயக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேலூரில் வெற்றிபெற்றே ஆக வேண்டுமென ஆன்றோர்கள், சான்றோர்கள், சங்கைமிகு உலமாக்கள், நடுநிலையாளர்கள், அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்ட நல்லெண்ணம் கொண்டவர்கள் என நல்லோர் பலரும் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சிக் கேட்ட துஆ – தஹஜ்ஜத்துத் தொழுகை தொழுது அழுது கேட்ட துஆ – ஹாஜத்து நோன்பு வைத்துக் கண்ணீர் பெருகக் கேட்ட துஆ இவற்றையெல்லாம் கபூல் செய்து அல்லாஹ் அளித்த தீர்ப்பு தான் இந்த வெற்றி!


? தேர்தலில் தாங்கள் சந்தித்த சங்கடம் என்ன? சந்தோஷம் என்ன?

! ‘உருது பேசத் தெரியாதவர்’ மண்ணின் மைந்தர் அல்லர்’ எனப் பரப்பப்பட்ட துவேஷமே சங்கடம், பல்வேறு ஜமாஅத் கூட்டங்களிலும், சந்திப்புகளிலும் உருதுமொழி பேசி அவர்கள் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டதும் அந்தப் பகுதி மக்களோடு பன்னெடுங்காலமாக நான் கொண்ட நெருங்கிய தொடர்பும் அப்பகுதியில் ஆற்றிய சமுதாயப் பணியும் தெரியவர இன்னும் அதிகமாக அப்துர்ரஹ்மான் இன்ஷா அல்லாஹ் சமுதாயப் பணியாற்றுவாரென்று எல்லோர் மத்தியிலும் ஏற்பட்ட நம்பிக்கை சங்கடத்திற்குப் பிறகு கிடைத்த சந்தோஷம் சமுதாயச் சேவையே என்னுயிர் மூச்சு என்பதை மக்கள் உணர்ந்து கொண்டதே மிகப்பெரும் சந்தோஷம்.


? இலட்சத்திற்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோமென எதிர்பார்த்தீர்களா?

தொடக்கத்தில் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பிரச்சார முடிவில் எதிர்பார்த்தேன். ஒவ்வோர் ஊரிலுள்ள பெரியவர்கள் முக்கிய பிரமுகர்கள் ஒருங்கிணைந்து குழு அமைத்து ஜமாஅத் வாரியாகப் பணி புரிந்ததும் குறிப்பாக முஸ்லிம் பெண்களே குழுவாகச் சேர்ந்து ஜமாஅத் ஜமாஅத்தாக வாக்குகள் சேகரிக்க முனைந்ததும் பெருவாரியான வித்தியாசத்தில் இறையருளால் வெற்றி பெறுவோமென்ற நம்பிக்கையைத் தந்தது.


? வெற்றிக்கு முக்கிய காரணம்?

தமிழக முதல்வர் நாட்டு மக்களுக்குக் கடந்த மூன்றாண்டு களாக ஆற்றி வரும் சாதனைகளும் சமயச் சார்பற்ற மத நல்லிணக்கத்தை நிலைப்படுத்தும் நடுவண் அரசின் சாதனை களும் மக்களை வெகுவாக ஈர்த்திருந்தமையே முக்கிய காரணமெனலாம்.

தொகுதி முழுவதும் பயணம் செய்து பல தரப்பட்ட மக்களையும் சந்தித்தேன். மன்மோகன் அரசின் சாதனை களையும் கலைஞரின் சாதனைகளையும் நாம் சொல்ல முற்படும்போதே அவர்களே நன்றியுணர்வோடு சொல்லுகிற காட்சியை அனுபவித்தேன். வசதி படைத்தோர் முதல் பாமரர் வரை எல்லாத் தரப்பினரிடமும் இத்தகைய உணர்ச்சி இந்தத் தேர்தலில் பிரதிபலித்ததைப் போல வேறெந்தத் தேர்தலிலும் பிரதிபலிக்கவில்லையென்றே கூறலாம்.


?எம்.பி ஆகியுள்ளீர்களே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வளர்ச்சி இனி எப்படி இருக்கும்?

! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அருமைத்தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் தலைமையில் சிறப்பாக வளர்ந்தே வந்திருக்கிறது. இந்த வளர்ச்சி மேலும் தொடரும். அந்த வளர்ச்சிக்கு இந்த எம்.பி. வாய்ப்பு மேலும் வலிமை சேர்க்கும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இறைவன் பெயரால் முற்றிலும் சமுதாயத்திற்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட இறையடியார்களால் தோற்றம் பெற்ற இயக்கமாகும். எனவே இந்த இயக்கத்தை – இதன் தத்துவத்தை – எவராலும் அழிக்க முடியாது. இயக்கச் செயல்பாடுகளில் அவ்வப்போது தொய்வு ஏற்படுவது இயல்பானதேயாகும். அதனைச் சரிசெய்து சரியான திசையில் மேலும் வீறுகொண்டு வலிவோடும் பொலிவோடும் செலுத்த வேண்டிய பொறுப்பு இப்போது எனக்கு இன்னும் அதிகமாகியுள்ளதென்றே கருதுகிறேன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சியென்பது சமுதாயத்தின் உயிரோடும் உணர்வோடும் இரண்டறக் கலந்ததென்பதால் நிச்சயமாக வளர்ச்சி மேலும் தொடரு மென்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு.


? முஸ்லிம் லீகில் இளைஞர்கள் இல்லையென ஒரு குறை நிலவுகிறதே?

! அது உண்மை இல்லை. இளைஞர்கள் கணிசமாக முஸ்லிம் லீகில் இருக்கவே செய்கிறார்கள். ஆர்ப்பாட்ட மின்றி ஆரவாரமின்றி அமைதியாகக் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் காட்டிய நெறியில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் தலைமையில் அவர்கள் செயல்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.

சூழ்நிலைக் கைதிகளாக ஆங்காங்கே வேறுவேறு அமைப்புகளில் சிக்கிக் கிடந்த இளைஞர்களும் இப்போது மீண்டு வருகிறார்கள். இஸ்லாமியப் பண்பாட்டு வழிமுறையை இஸ்லாமிய ஒழுக்க நெறியோடு பேணி வரும் ஒரே இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான் என்பதை அவர்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள். இதனால் பல்வேறு அமைப்புகளில் இருந்த இளைஞர்கள் இன்றைக்கு அணி அணியாக முஸ்லிம் லீகில் இணைந்த வண்ணம் உள்ளார்கள்.


? அரசியலில் சமுதாய ஒற்றுமை ஏற்பட என்ன செய்யலாம்?

! சமுதாய உரிமைகளைப் பேணிக் காத்து நமக்கே உரிய கண்ணியத்தையும் மரியாதையையும் எல்லாத் துறை களிலும் பெற்று நாம் வாழ்ந்திட சமுதாய மக்களால் அங்கீகரிக்கப்பட்ட தாய்ச் சபையான இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் அனைவரும் இணைவதே அரசியலில் நாம் வலிமை பெற உதவும். இந்தியத் திருநாட்டின் ஒருமைப் பாட்டையும் இறையாண்மையையும் காத்து எல்லாரும் எல்லாமும் பெற்று மனிதநேயம் மதக் காழ்ப்பின்மை மிளிர அனைவரும் ஒன்று பட்டுப் பச்சிளம் பிறைக் கொடியின் கீழ் ஒருங்கிணைந்து ஒற்றுமை உணர்வு கொண்டு வாழ்வோம் … புத்தெழுச்சி பெறுவோம்.

அப்துர் ரஹ்மான் அவர்களுடைய கண்களின் மலர்ச்சியும் கருத்துகளின் தெளிவும் செயல்பாட்டில் முனையும் உறுதியும் ஆற்றலில் தெரியும் விவேகமும் இந்த நாடாளு மன்ற உறுப்பினர் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் நிறைய சாதிப்பாரென்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. துஆ செய்வோம்!


-பேட்டி ‘சேயோன்’


நன்றி : இனிய திசைகள்
ஜுன் 2009

Saturday, June 20, 2009

தெளிவும் பிறந்தது வழியும் திறந்தது -தளபதி எ.ஷபிகுர்ரஹ்மான்


தெளிவும் பிறந்தது வழியும் திறந்தது -தளபதி எ.ஷபிகுர்ரஹ்மான்

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நலம் நலனுக்கு கருணையுள்ள ரஹ்மான் அருள்புரிவானாக !

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச்செயலாளர் எங்களின் இனியத்தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்கள் தெளிவு பிறந்தது வழி திறக்க வேண்டுமென்று தனது கவலையையும் அவர்கள் செய்த சிறப்பான செயல்பாடுகளையும் நினைவுபடுத்தி மணிச்சுடரில் எழுதி இருந்த வாசகம் ஏன் நெஞ்சை நெகிழ வைத்தது

காலையில் பஜ்ர் தொழுகைக்கு பின் ஏன் மகன் முஹம்மத் இஸ்மாயில் என்னை மகிழ்ச்சியோடு அழைத்து இன்றைய மணிச்சுடர் நாளிதழில் தலைவர் பேராசிரியர் அற்புதமாக எழுதியுள்ளார்கள் உடன் படித்து பாருங்கள் என்று சொன்ன உடன் விட்டிற்கு வந்து மணிச்சுடரை படித்தேன் தலைவரின் வாசகம் என்னை மகிழ்ச்சியிலும் சிந்தனையிலும் ஆழ்த்தியது

நம் தாய் நாட்டின் தலைநகர் டெல்லிபட்டிணத்தில் சாஜகான் பாத்திலுள்ள பிரசித்திபெற்ற ஜாமிஆ மஸ்ஜித் எதிரிலுள்ள நாடு விடுதலைக்கு முன்பிலிருந்து தாய்ச்சபை முஸ்லிம் லீக்கின் அலுவலகமாக இருந்து அங்கு முஸ்லிம் லீக்கின் பிறை நட்சத்திரக்கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டிருந்த முஸ்லிம் லீக்கின் அலுவலகம் பற்றிய செய்தியை இனிமையாக எழுதி இருந்தார்கள் பல்லாண்டுகளாக தொடர்ந்து பறந்து கொண்டிருந்த பிறை நட்சத்திரக்கொடியின் அலுவலகம் நமக்கு சொந்தமாக்கி -சொந்தக்கட்டிடமாக்கும் முயற்சி செய்து வருகிறோம் என்று எழுதியது நமக்கு மகிழ்வை தருகிறது அல்ஹம்துலில்லாஹ்

வட மாநிலங்களில் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சிப்பற்றியும் குறிப்பாக உத்ரகாண்டம் மாநிலத்தின் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சிப்பணிப்பற்றியும் அங்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் பங்கேற்பதுபற்றியும் தலைவர் பேராசிரியர் கே.எம்.கே.எழுதியுள்ளச்செய்தி நமக்கும் நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் நன்மையுள்ள செய்தியாகும் அல்ஹம்துலில்லாஹ்

தெளிவும் பிறந்தது வழியும் திறந்தது
தாய்ச்சபையின் தலைவர் பேராசிரியர் அவர்களின் கட்டளையை ஏற்று எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறோம் தலைவர் அவர்களே கவலைப்படதிர்கள் முஸ்லிம் லீக்கின் புனித ஸ்தாபனத்தை தமிழகத்திலும் நாடெங்கும் பலப்படுத்திட தயாராக இருக்கிறோம் இதற்க்கு எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக
வஸ்ஸலாம்

அவரை நான் பாராட்டவில்லை

அவரை நான் பாராட்டவில்லை

ஜமால்
நல்ல மாணவர்களை மட்டுமல்ல
சமூகத்துக்கு
முக்கியமானவர்களை தந்திருக்கிறது !

பி.காம். பி.எஸ்ஸி
மட்டுமல்ல
பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸுகளை
தந்திருக்கிறது !
எம்.காம். எம்.பி.ஏ
மட்டுமல்ல
பல எம்.பி எம்.எல்.ஏக்களையும்
தந்திருக்கிறது !

முனைவர்
பட்டத்திற்காக மட்டும்
ஆராயும் நவீன உலகில்
சமூக துயரங்களுக்கும்
தீர்வு காண
முனைபவர்களை
அளித்திருக்கிறது !

தங்கப் பதக்கத்திற்கு
மட்டும்
முக்கியத்துவம் கொடுக்கும்
கல்வி உலகில்
தனி மனித ஒழுக்கத்திற்கும்
முக்கியத்துவம்
கொடுத்திருக்கிறது !
ஜமால்
அதனுடைய சுவர்களில்
சாயம் இருக்கலாம் !
ஆனால்
அதில்
அதனை
உருவாக்கியவர்களின்
தியாகமும் இருக்கிறது !

கல் மண்
கலவையில்தான்
அது கட்டப்பட்டது !
ஆனால்
அது நல்மனம் படைத்தோரின்
கவலையால்
எழுப்பப்பட்டது !

அங்கு படித்த போது
மாணவர்கள்
மகிழ்ச்சியடைகிறார்கள் !
அவர்கள் சாதிக்கும் போது,
ஜமால்
மகிழ்ச்சியடைகிறது !

அரை நூற்றாண்டிற்கு
முன்,
கல்விக்கு
தங்கள் செல்வத்தை அளித்த
கொடையெழு வள்ளல்கள்
ஜமால் முஹம்மது
காஜாமியான் ராவுத்தரின்
”ஜமால் முஹம்மது கல்லூரி”
இன்று
சமூகத்துக்கு பல கல்வியாளர்களை அளித்து
வருகிறது !

நேர்மையான
தூய்மையான
அந்நன்மக்களின் கனவு – இன்று
பலிக்க ஆரம்பித்திருக்கிறது !

ஆம்
“அப்துர் ரஹ்மான் எம்பி”
போன்றோரை
சமூகத்துக்கு அளித்து
அதனை
பிரதிபலிக்கச் செய்திருக்கிறது !

அப்துர் ரஹ்மானை
பாராட்ட
எனக்கு தகுதி இல்லை !
ஏனென்றால்
அவரைவிட
அகவையிலும்
அறிவிலும்
அனுபவத்திலும்
நான் மிகுதி இல்லை !

சிறியவன்
நான் – அவரை
பாராட்டவில்லை !
அவரை
படிக்கிறேன் !

முத்துப்பேட்டை
அவரை
பெற்றுத்தந்தது !

மலைக்கோட்டை ஜமால்
அவருக்கு கற்றுத்தந்தது !

வேலூர் கோட்டை – அவருக்கு
வெற்றித் தந்தது !

துபை இஸ்லாமிய வங்கியில்
அவர்
பணிபுரிந்தார் !

எனினும்
கல்லூரியின் மீது
மிகுந்த பற்று வைத்திருந்தார் !

வரையறாப் பொறுப்புக்கள்
நிறைய அவருக்கு
இருந்தாலும்
கல்லூரி சமூக நிகழ்ச்சிகளில்
அவரின்
தவறாத வரவு இருக்கும் !

நாடு கடந்து
தூரத்தில் இருந்தாலும்
ஜமாலில் படித்தோருடன் – என்றும்
அவரின் உறவு இருக்கும் !

சமூகத்தில்
மனிதர் படும் துயரங்களை
அவர் கூறியதை கேட்டு
நான்
மிகுந்த கண்ணீர் வடித்திருக்கிறேன் !

மற்றவர்களை புண்படுத்தாத
மரியாதையான
அவரின் பேச்சை
ஆழ்ந்து கவனித்திருக்கிறேன் !

நீண்ட நேரம்
உருக்கமாக
பேசும் எவ்வளவோ பெரிய மனிதர்கள்
நெருக்கமாக இருந்து
மக்களுடன்
செயலாற்ற இருக்க மாட்டார்கள்
அதற்கு
இவர் விதிவிலக்கு !

மனித நேயம் என்ற
தலைப்பில்
அழகாக பேசும்
எவ்வளவோ மனிதர்களின் இதயம்,
மனிதர்கள்
உதவி வந்து கேட்டால்
இளகுவதில்லை
இவர் – அப்படியல்ல
உதவுவதுதான்
இவரின் இலக்கு !

முதுகலை
பொருளாதாரத்தில்
தங்கப் பதக்கம்
பெற்ற அவர்,
சமுதாயம்
முன்னேற
சங்கம் பல துவக்க
காரணமானார் !

தங்கள்
தேவையை மட்டுமே
நோக்கி ஓடும்
அவசர உலகில்
சமூக சேவையில்
தன்னை அர்ப்பணித்தார் !

எம்பியாகி
இருக்கும் இவர் – மன்றத்தில்
மக்கள் பிரச்சினைகளை
எடுத்தியம்பி வருவார் !

துபையில் இருந்து
தில்லியை நோக்கிய
அவரது சேவை பயணம்

பல பயன்களை
சமூகத்துக்கு
கொண்டு வரணும் !


-திருச்சி A. முஹம்மது அபுதாஹிர்

Monday, June 8, 2009

Why not have one party throughout India

anver maricar
dateSun, Jun 7, 2009 at 12:05 PM
subjectRe: Deficit in Muslim representation to Parliament: 43 MPs less than the FAIR share


As long as Muslims in India remain divided, egoistic, self centred, selfish to the core and totally devoid of community feeling, we can never have fair representation or fair share in anything. Has any one given a thought as to why we should have so Muslims from one party pitting agaisnt another Muslim from another party and in the process divide the Muslim vote? Why not have one party, throughout India to represent ALL Muslims in India? Is it not possible? It certainly is. However what is apparently not possible is for Muslims to unite and work for a single goal. Unfortunate but that is the current reality.

Can we expect a major change in our outlook and thereby a change in our fortune?

Allah knows best.

http://www.biharanjuman.org/bakhabar_news/bakhabar609.html#part6

SAD DEMISE OF HAJI A.H.SHAHUL HAMEED

SIRAJUL MILLATH FORUM HONG KONG
millathforum@gmail.com
dateMon, Jun 8, 2009 at 1:36 PM
subjectOUR CONDOLENCE FOR THE DEATH OF JANAB HAJI A.H.SHAHUL HAMEED - INNA LILLAHI WA INNA ILAIHI RAZIOON...

DATE : 08-JUNE-2009

DEAR BROTHERS.

ASSALAMU ALAIKUM,

WE, SIRAJUL MILLATH FORUM HONG KONG SADDENED TO HEAR THE DEATH OF ALHAJI A.H.SHAHUL HAMEED PASSED AWAY TODAY (8th June 2009 Monday) AT HIS RESIDENCE IN CHENNAI.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON


MARHOOM HAS ALWAYS GIVEN HIS FULL SUPPORT FOR OUR INDIAN UNION MUSLIM LEAGUE ACTIVITIES AND HE HAS VERY CLOSE RELATIONSHIP WITH OUR BELOVED LEADERS MARHOOM SIRAJUL MILLATH AND OUR CURRENT TAMILNADU PRESIDENT MUNEERUL MILLATH PROF.K.M.KADER MOHIDEEN SAHIB.

OUR LEADER MUNEERUL MILLATH DESCRIBED HIM AS " SOOFI AND A PIOUS PERSON" , ITS A GREAT LOSS FOR OUR LEAGUE.

MAY ALLAH FORGIVE HIS SINS AND PLACE HIM IN JANNATHUL FIRDOUS.AMEEN.

WE PRAY ALMIGHTY ALLAH TO GIVE STRENGTH TO THEIR FAMILES TO BEAR THIS SUDDEN LOSS.

WE REQUEST ALL OUR BROTHERS & SISTERS TO PRAY FOR HIS MAHFIRATH.

WASSALAM

SIRAJUL MILLATH FORUM HONG KONG

("Communal amity with hearts" harmony, effective democracy through proper representation.")

Please visit Our Official Website of Tamilnadu Indian Union Muslim League for updated news http://www.muslimleaguetn.com

READ "MANICHUDAR" printed version availbale in INDIA (The first and only Muslim Tamil Daily Newspaper for more then a decade)


Noohu
millathforum@gmail.com
muduvaihidayath@gmail.com
dateMon, Jun 8, 2009 at 5:17 PM
subjectSAD DEMISE OF HAJI A.H.SHAHUL HAMEED


Attn: HAJI V.M.THASSAN
CONVENOR
SIRAJUL MILLATH FORUM
HONG KONG

Dear Brother,
Assalamu Alaikkum.I deeply regretted and saddened the sudden demise of HAJI A.H.SHAHUL HAMEED, a Philanthrophist, patron and key member of INDIAN UNION MUSLIM LEAGUE who reached eternal heaven at his residence, today 8th June, 2009, at Anna Nagar, Chennai. INNA LILLAHI WA INNA ILAIHI RAJIOON.

It is a great loss for our party, community and our town of Kayalpatnam. May Allah forgives all his sins and provide him the highest place in the Jannathul Firdous.
Convey my heartfelt condolences and Salams to the bereaved family. May Allah gives them courage and saboor to the relatives and family to tolerate the unbearable loss of Marhoom HAJI A.H.SHAHUL HAMEED.AAMEEN.

Wassalam.
Brotherly,
NOOHU SAHIB-KAYALPATNAM
VICE PRESIDENT-QUAIDE MILLATH FORUM,
DUBAI.U.A.E.
ADVISORY BOARD MEMBER
KAYAL WELFARE ASSOCIATION-DUBAI-U.A.E.

Sunday, June 7, 2009

சமுதாய மேம்பாட்டிற்காக........

Akbar Batcha
dateSat, Jun 6, 2009 at 1:05 PM
subjectRe: துபாயில் வேலூர் எம்.பி. அப்துல் ர‌ஹ்மானுக்கு சிற‌ப்பான‌ வ‌ர‌வேற்பு


இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி சமுதாய மேம்பாட்டிற்காக உழைப்பதற்கு சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு அருள் செய்ய எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திப்போம்.

அன்புடன்.

Akbar Batcha
MaxVision International FZ LLC.
108, Building 9, Dubai Media City,
P. O. Box 6727, Dubai
United Arab Emirates
Tel: +971 4 374 8213

Saudi Business Center
P. O. Box 5791
Jeddah 21432
Saudi Arabia
Tel: +966 2 657 2420, 657 4417
E mail: abatcha@gmail.com
Website: www.maxvision-international.com

கல்விக் கருத்தரங்கம்

அஸ்ஸலமு அலைக்கும்

நேற்றைய தினம் ( 05 ஜுன் 2009 - வெள்ளிக்கிழமை ) அமீர‌க‌ காயிதே மில்லத் பேர‌வை எற்பாடு செய்திருந்த " கல்விக் கருத்தரங்கம்" மிகவும் சிறப்பாகும் , பயனுள்ளதாகவும் இருந்தது.

கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் 114 வது பிறந்த நாளில் அவர்களின் தியாக வரலற்றை சிறப்பு பேச்சாளர்கள் நினைவுகூர்ந்தது என்னை மெய்சிலிர்க்கச் செய்தது.

இந்த சிறப்புமிக்க விழாவினை நல்ல முறையில் ஏற்பாடு செய்ததற்கு என் மனமார்த நன்றி.இதுப்போன்ற சிறந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று சமுதாய சகோதரர்கள் பயன்பெற வேண்டும்.

அன்புடன்
S.ரியாஸ் அஹ்மத்
riyazpno@gmail.com

வெற்றி வெகு தூரத்தில் இல்லை

வெற்றி வெகு தூரத்தில் இல்லை

திருச்சி – A. முஹம்மது அபூதாஹிர்

“அல்லாஹ்வின் கயிற்றை
பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் (குர்ஆன்)
ஆம்
வேலூரில் ஒற்றுமையால்
முஸ்லிம்களுக்கு
வெற்றி கிடைத்தது
அது நன்மையால் ஆனது !
“நீங்கள் பிரிந்தால்
உங்கள் வலிமை குன்றி விடும்” (குர்ஆன்)

நாம்
வேறு இடங்களில் பிரிந்து நின்றதால்
தோல்வி கிடைத்தது
ஆம்
அல்லாஹ்வின் வாக்கு
என்றுமே உண்மையானது !
வேறு கட்சியினர்
தோற்றது
ஓட்டு வித்தியாசத்தால்தான் !
நம்மவர்கள்
தோற்றதெல்லாம்
வேறுபாட்டு வித்தியாசத்தால்தான் !
உதய சூரியனுக்கு
ஓட்டுப் போடப்பட்டது
இளம் பிறை உதித்தது !
சின்னம்
வேறாக இருந்தாலும்
நல்லெண்ணத்தால்தான்
வெற்றிக் கிடைத்தது !
வேலூர் சிப்பாய் புரட்சி
சுதந்திரத்திற்கு
குரல் கொடுத்தது !
துபாய் ஈமானின் எழுச்சி
சுதந்திர இந்தியாவில்
முஸ்லிம்களின்
உரிமைக்கு குரல் கொடுக்கிறது
நாடு கடந்து
தொலை தூரத்தில்
சமூகத்துக்கு
உதவிய, உரிமை குரல் கொடுத்த ஈமான்
இப்போது
நாட்டின் தலைநகரத்திலும்
குரல் கொடுக்கப் போகிறது

நமக்கு கிடைத்த
“வெகுமானம்” என்று
ஈமானை சொல்லலாம்
எம்பிக்களுக்கு
இவர் நல் உவமானமாய் இருப்பார் என்று
அப்துர் ரஹ்மானை சொல்லலாம்
எம்பி என்றாலே
நடையில் மிடுக்கமும்
மற்றவரை நடுக்கமும்
ஏற்பட செய்வதுதான்
அதுதான்
அவர்களின் சிம்பள் !
அடக்கமான குணமும்
அனைவரையும்
அரவணைக்கும் மனமும்
கொண்டவர்தான்
அப்துர் ரஹ்மான்
இவர் மிகவும் சிம்பிள்
பேருக்கு
அறிக்கை விடும்
நூறு எம்பிக்கள்
நமக்கு தேவையில்லை !
சமூகத்தின் கோரிக்கையை
மன்றத்தில் வைக்கும்
இவர் போன்று
ஒரு எம்பி இருந்தாலும்
நமக்கு பிரச்சினையில்லை !
முடிந்து போன காலங்களை
நினைத்து கவலைப் படுவதால்
அவை திரும்ப போவதில்லை !
முடிவெடுங்கள்
வருங்காலத்தில்
நாம் அனைத்து நிலைகளிலும்
அனைவரும் ஒன்றுபட்டால்
வெற்றி மிக தூரத்தில் இல்லை !
ஈட்டியதை எண்ணிக் கொண்டிருக்கும்
செல்வந்தர்களிடையே
சமுதாயம் ஈட்டியது என்ன?
என – சிந்திக்கும் ஈ.டி.ஏ ஸலாஹுத்தீன் காக்காவின்
அர்ப்பணிப்பு மேலானது
அவரது தலைமையில்
துபையில் ஒலித்துக் கொண்டிருக்கும்
ஈமான்
இப்போது புதுடெல்லியிலும்
ஜொலிக்கப் போகிறது !

ஈமான் பலமாகட்டும் ,
முஸ்லிம்கள் லீக்கில் ஒன்றாகட்டும் !
முஸ்லிம் சமூகம்
தலை நிமிர்ந்து நிற்கும்
அத்தியாயம் தொடங்கட்டும் !
அதில்
ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட
சமூகங்கள்
நிலைமாறி
நீதி நியாயம் கிடைக்கட்டும் !
நம்பிக்கையோடு
நாம் கால்களை
எடுத்து வைப்போம் !
நாளை
வரலாற்று தாள்களில்
வரும் தலைமுறைக்கு
சவால்களை
சமாளிக்க முன்மாதிரி வைப்போம் !
அல்லாஹ்வை வேண்டுகிறோம் !
பதவியாளர்கள்
அனைவருக்கும்
அவன்தான் உதவியாளன் !
ஆட்சிக்கு அதிபதியான
அவன்தான்
மறுமையின் நீதிபதி !
அல்லாஹ்வே ! வளத்தோடு
நலத்தோடு எங்களை
வாழ செய் !
நிறைவான முஸ்லீமாய்
உறுதியான
ஈமானோடு மரிக்க செய்
நபியின் துஆதான்
எங்களின் அவாவும் ஆகும் !

Saturday, June 6, 2009

துபாயில் காயிதேமில்ல‌த் பிற‌ந்தநாள் நினைவு க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்க‌ம்






















































துபாயில் காயிதேமில்ல‌த் பிற‌ந்தநாள் நினைவு க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்க‌ம்