Tuesday, April 28, 2009

A Beautiful Hadith

A Beautiful Hadith

Our Beloved Prophet Mohamed (Sallallahu alaihe wasallam) said: 'When a person dies and his relatives are busy in funeral, there stands an extremely handsome man by his head. When the dead body is shrouded, that man gets in between the shroud and the chest of the deceased.

When after the burial, the people return home, 2 angels, Munkar and Nakeer(names of two special Angels), come in the grave and try to separate this handsome man so that they may be able to interrogate the dead man in privacy about his faith. But the handsome man says, 'He is my companion, he is my friend. I will not leave him alone in any case. If you are appointed for interrogation, do your job. I cannot leave him until I get him admitted into Paradise '.

Thereafter he turns to his dead companion and says, 'I am the Qur'an, which you used to read, sometimes in a loud voice and sometimes in a low voice. Do not worry. After the interrogation of Munkar and Naker, you will have no grief.'

When the interrogation is over, the handsome man arranges for him from Al-Mala'ul A'laa (the angels in Heaven) silk bedding filled with musk.

Rasulullah (Sallallahu alaihe wasallam) said: 'On the Day of Judgement, before Allah, no other Intercessor will have a greater status than the Qur'an, neither a Prophet nor an angel.'

SAYINGS (HADITH) OF PROPHET MUHAMMAD (Sallallaahu alaihi wa sallam)

The one who disdains prayers (Salat) will receive Fifteen punishments from Allah..
Six punishments in this lifetime
Three while dying
Three in the grave &
Three on the Day of Judgment.

THE SIX PUNISHMENTS OF LIFE :

1. Allah takes away blessings from his age (makes his life misfortunate)
2. Allah does not accept his plea (Dua's)
3. Allah erases the features of good people from his face.
4. He will be detested by all creatures on earth.
5. Allah does not reward him for his good deeds. (No thawab)
6. He will not be included in the Dua's of good people.

THE THREE PUNISHMENTS WHILE DYING :

1. He dies humiliated.
2. He dies hungry.
3. He dies thirsty. Even if he drinks the water of all seas he will still be thirsty.

THE THREE PUNISHMENTS IN THE GRAVE :

1. Allah tightens his grave until his chest ribs come over each other.
2. Allah pours on him fire with embers.
3. Allah sets on him a snake called 'the brave', 'the bold' which hits him from
morning until afternoon for leaving Fajr prayer, from the afternoon until Asr for leaving Dhuhr prayer and so on. With each strike he sinks 70 yards under the ground.

THE THREE PUNISHMENTS ON THE DAY OF JUDGMENT :

1. Allah sends who would accompany him to hell pulling him on the face.
2. Allah gives him an angry look that makes the flesh of his face fall down.
3. Allah judges him strictly and orders him to be thrown in hell.

----------------------------------------------

THOSE WHO DO NOT SAY THEIR PRAYERS OF:

FAJR : the glow of their face is taken away.
ZUHR : the blessing of their income is taken away.
ASR : the strength of their body is taken away.
MAGHRIB : they are not benefited by their children.
ISHA : the peace of their sleep is taken away.
-------------------------------------------------

THE HOLY QUR'AN:

'Say Your Prayers Before Prayers For You Are Said'.
-------------------------------------------------

SIRAJUL MILLATH FORUM HONG KONG

("Communal amity with hearts" harmony, effective democracy through proper representation.")

Please visit Our Official Website of Tamilnadu Indian Union Muslim League for updated news http://www.muslimleaguetn.com

READ "MANICHUDAR" printed version availbale in INDIA (The first and only Muslim Tamil Daily Newspaper for more then a decade)

Monday, April 27, 2009

விடியலைத் தருவாய் இறைவா…

விடியலைத் தருவாய் இறைவா…


அமைதியைத் தருவாய் இறைவா! – மக்கள்
அகங்களில் நிறைந்திடும் தலைவா!
அமைதியைத் தருவாய் இறைவா!

இந்திய நாட்டின் தெற்கே; இலங்கிடும் இலங்கைத் தீவில்
வெந்திடும் மக்களின் வாழ்வில்; விடியலைத் தருவாய் இறைவா (அமைதி…)


ஆதித் தந்தை ஆதம்; அருளடி பதித்த மண்ணில்
நாதியில் லாத மாந்தர்; நல்வாழ் வெய்திடச் செய்வாய்!
(அமைதி…)

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் மார்க்கப்பணி செய்த நாட்டைக்
காப்பாய்காப்பாய் இறைவா;கருணை மழையைப் பொழிவாய்!
(அமைதி…)

ராத்திப் ஜலாலிய் யாவின் இன்குரல் ஒலித்த மண்ணின்
நேர்த்தி மிகுந்த மக்கள்; நிம்மதி பெறச் செய் இறைவா!
(அமைதி…)

நீர்வளம் நிலவளம் எழிலை நிறைவாய்ப் பெற்ற இலங்கை
சீர்வளம் மீண்டும் எய்த; சிந்தை இரங்கிடு இறைவா!
(அமைதி…)

வேட்டுச் சத்தம் ஒடுங்கி விரியும் மலர்தா லாட்டின்
பாட்டுச் சத்தம் ஒலிக்க; பரிந்தருள் வாயே இறைவா!
(அமைதி…)

ஆன்மீகத்தின் தென்றல் அழகாய்த் தவழ்ந்த இலங்கை
வான்புகழ் சாந்தி பெறவே; வல்லான் இறையே அருள்வாய்!
(அமைதி…)

நாட்டை வீட்டை இழந்தே நலிவால் வாடும் மக்கள்
வாட்டம் அகன்றிட உந்தன்; வாஞ்சை பொழிந்திடு இறைவா!
(அமைதி…)

எங்கள் தாய்த்திரு நாடாம் இந்தி யாவை உலகில்
திங்கள் போலத் துலங்கத்; திருவருள் புரிவாய் இறைவா!
(அமைதி…)

பாரத மண்ணில் அமைதி பல்வளம் ஒற்றுமை ஓங்க
சீராய் உன்னருள் பொழிவாய்; சிந்தையில் வாழும் இறைவா!
(அமைதி…)

-கவிஞர் தேங்கை ஷரபுத்தீன் மிஸ்பாஹி


ந‌ன்றி : ம‌ணிச்சுட‌ர் த‌மிழ் நாளித‌ழ்

Thursday, April 16, 2009

வேலூர் முஸ்லிம் லீக் வேட்பாள‌ர் எம்.அப்துல் ர‌குமானுக்கு வாழ்த்து

Thivan Mohideen
dateSat, Apr 11, 2009 at 8:14 AM
subjectRe: Great Pleasure to note


Salam,

It is our great pleasure to note the news..

Mr.Abdul Rahman is deserved in all respects and kindly let me know his e-mail ID and Mr.Liyakath E-mail ID please.I wish to extend my warm wishes.



Your's,

OA.Thivan Mohideen.

Monday, April 13, 2009

மண்ணடி தமுமுக தலைமை அலுவலகத்தில் ஒரு கூட்டணி பேச்சுவார்த்தை: ஒரு காமெடி ரிப்போர்ட்!

மண்ணடி தமுமுக தலைமை அலுவலகத்தில் ஒரு கூட்டணி பேச்சுவார்த்தை: ஒரு காமெடி ரிப்போர்ட்!

லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து தமுமுகவின் மம கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், கொங்கு வேளாளர் பேரவை மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளiடையே நடைபெற்று வரும் கற்பனை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தமுமுக மண்ணடி தலைமை அலுவலகத்தில் காலையிலேயே பெரும் பரபரப்பு, தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாவும், பொதுச் செயலர் ஹதர் அலி உப்பட்ட அனைத்து முக்கிய தலைவர்களும் ஆஜர், விசேஷ சுவீட்டோடு, காபி வாங்கி வந்த ஆபிஸ் பையன், கூட்டணி குறித்து பேசுறதுக்கு, பெரிய பெரிய தலைவர்கள்லாம் வர்றாங்களாம்ப்பா..என வாட்சி மேனிடம் சொல்லிவிட்டு சென்றார். சரத்துகுமார் வந்துட்டாரு..என ஹைதர் அலி வந்து சொன்னவுடன், ஜவாஹிருல்லா வாசலுக்கே வந்து, சரத்தையும் ராடன் டிவி இயக்குநர் நடிகை ரதிகாவையும் அழைத்து செல்கிறார். குசல விசாரிப்புகளுக்குப் பிறகு கூட்டணி பேச்சுவார்த்தை துவங்குகிறது.
ஹைதர் அலி: நம்மள, அதிமுக-திமுக ரெண்டு பேருமே கண்டுக்க மாட்டேங்கிறாங்க.. இந்த லோக்சபா தேர்தல்ல, நம் கூட்டணி, ஒரு தொகுதியிலயாவது ஜெயிச்சு, நாம யாருங்கறத அந்த கட்சிகளுக்கு காட்டணும்…

சரத்குமார்: அந்த அளவுக்கெல்லாம் எனக்கு பேராசை கிடையாதுங்க. போட்டியிடற தொகுதிகள்ல, தேமுதிமுக விட கூடதலா ஒட்டு வாங்கிட்டாலே போதும்னு பெருந்தமையா முடிவு பண்ணியிருக்கோம். இப்பதானே அரசியல் கட்சியாக வந்துள்ளோம். எங்களுக்கு 2011 தான் இலக்கு.

ஜவாஹிருல்லா: நீங்க முடிவு பண்ணது தப்புங்க, நாங்க எடுத்துவுடனேயே தேர்தலில் போட்டி போட்டி டெல்லி போய் தான் ஆக வேண்டும். இதை நம்பி தான் வாரிய பதவியை வேறு நம்ம ஹைதர் அலி விட்டு விட்டார். இந்த தேர்தலிfல் எப்படி சாணக்கியத்தனமா நடந்து வெற்றியே எங்களiன் லட்சியம்.

சரத்குமார்: சரி விடுங்க, கூட்டணியில எங்களுக்கு 15 இடங்கள் ஒதுக்கணும்.. இல்லைன்னா கூட்டணி பத்தி பேசுறதில பிரயோஜனமில்ல.

ஜவாஹிருல்லா: அதென்ன அப்படி சொல்லிட்டீங்க..நாங்களே 15 தொகுதியில தான் போட்டியிடறதா இருக்கோம். எங்களiன் 50 கோடி தான் இருக்கு. மிச்சம் 25ம் நீங்களே நில்லுங்க..அதுதான் கூட்டணி தர்மம்..

ராதிகா குறுகீட்டு: அப்ப எங்க கட்சி தொகுதியை விட உங்கள் கட்சி நிற்கும் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு வருகிறேன். உங்களiடம் தான் 50 கோடி இருக்கே எனக்கு ஒரு பத்து கோடி சன்மானம் தந்துடுங்க. நான் சுறாவளi சுற்றுபயணம் உங்கள் கட்சிக்காக செய்கிறேன்.
திடீரென நுழைந்த விஜய்.டி.ராஜந்தர்: அவமானம், எங்க கட்சியை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டுட்டு, எல்லா தொகுதியையும், சரத்குமாருக்கு கொடுத்துட்டா எப்படி? நாங்க ஆட்சிமைக்க வேண்டாமா?

ஹைதர் அலி: கோபப்படாதீங்க, உங்களை காணோம் ன்னு சொல்லிட்டாங்க அதனால் தான் நீங்க வருவீங்களோ மாட்டீfங்களோன்னு தெரியாம தப்பு நடத்துருச்சு மன்னிச்சுக்கோக்க..
சரத்குமார்@ அப்பாடா நல்ல வேளை எங்களுக்கு 15, மம கட்சிக்கு 15 போக மிச்சம் 10 தொகுதியிலயும் டி.ஆர் கட்சியே போட்டியிடட்டும் ஐ... ஜாலி! தான்

ஹைதர் அலி: கிருஷ்ணசாமியும் நம்ம கூட கூட்டணிக்கு ஒத்துக்கிட்டிருக்காரு..அவங்களுக்கு ஆறு தொகுதி கொடுக்கறதா சொல்லியிருக்கோம். அதனால் டி.ஆருக்கு ஆறு கொடுத்துடலாம்.

விஜய்.டி.ராஜந்தர்: சேச்சே..அவ்வளவெல்லாம் வேண்டாம். ரெண்டு தொகுதியில மட்டும் போட்டியிட்டே எங்க பலத்தை நிரூபிச்சுட முடியும்..தொகுதிக்கு 10 ஆயிரம் ரூபாய் டிபாசிட் கட்டணுமாமே..

ஜவாஹிருல்லா: நல்ல கணக்கா இருக்கே நாங்க கூடத்தான் 15 தொகுதியில டிபாசிட் கட்டப்போறோம். பலனை எதிர்பாத்தா, அரசியல் பண்ண முடியும்? எங்களுக்கு கவலை எதாவது ஒரு நிவாரணம் என்று நிதி வசுல் செய்து விடுவோம்.

விஜய்.டி.ராஜந்தர்: ரெண்டு தொகுதின்னா, ரெண்டு தான், அதுக்கு மேல போட்டி போடணும்ன்னு ரொம்ப வற்புறுத்துனீங்கன்னா, தனிச்சு போட்டியிட்டு, எங்க பலத்தை நரூபிக்க வேண்டி வந்துடும்.

சரத்குமார்: அவசரப்படாதீங்கள, தேர்தல் செலவுக்கு காசு வேணும்னாலும் வாங்கிக்கோங்க ஆறு தொகுதியில போட்டியிட்டுடுங்க

விஜய்.டி.ராஜந்தர்: ஆங்..அப்படி வாங்க வழிக்கு. ஆறு தொகுதிக்கு தலா 10 கோடின்னு 60 கோடி ரூபாய் கொடுத்துடுங்க..தென்மாவட்டங்கள்ல அத்தனை தொகுதியையும் அள்ளiடலாம்.

ஜவாஹிருல்லா: என்னது..60 கோடி ரூபாயா? சொக்கா மொத்த தமிழ்நாட்டுக்கே அவ்வளவு ஆகாதே, எதாவது குண்டு வெடிப்பு நடத்தால் அதை வைத்து எங்கள் வெளiநாட்டில் இருப்பவர்களiடம் ஒரு நிதி திரட்டி விடலாம் ஆனால் இப்போது அதற்கு அவகாசமில்லையே.
விஜய்.டி.ராஜந்தர்: ஒரு சுப்பர் ஐடியா. விஜயகாந்தை எதிர்த்து பிரசாரம் பண்றதுக்கு நம்ம கூட்டணியில வடிவேலுவையும் சேர்த்துப்போமா?

ஹைதர் அலி: அய்யய்யோ, வேண்டாம் அப்புறம் நம்ம 4 வது கூட்டணிய எல்லாரும் காமெடி கூட்டணி ன்னு சொல்லிடுவாங்க.

ராதிகா முணுமுணுக்கிறார்: ஆமா..இப்ப மட்டும் என்ன வாழுதாம்
அப்போது திஙரென கிருஷ்ணசாமியிடமிருந்து போன் வந்ததும், ஹைதர் அலி ஒடிப்போய் பேசிவிட்டு வருகிறார். ஜவாஹிருல்லா காதில் ஒதுகிறார். கிருஷ்ணசாமி கூட்டணிபேச்சு வார்த்தை பற்றி தான் அதிகமா கவலைப்படார் எப்படியாவது இந்தக் கூட்டணியை இறுதி பண்ணிடுங்க, இதையும் விட்டா, நம்ம கூட யார் கூட்டணிக்கு வருவா ன்னு கேட்டார். அப்புறம் எப்படி நம்ம 4வது அணியை பலப்படுத்துவது என்று வேறு கேட்டார் சொல்லுகிறார்.

ஜவாஹிருல்லா: ஆங் ! நம்ம கூட்டணிதலைவர்களiடமிருந்து நல்ல செய்தி வந்துடுச்சு, நம்ம கூட்டணி உறுதியாகிடுச்சு. இவ்ளோ வலுவான கூட்டணி நமக்கு அமைஞ்சுட்டதால திமுக, அதிமுக நிலைமை என்ன ஆகுமோன்னு தான் எனக்கு கவலையா இருக்கு..

-ஆடுதுறையான் (நன்றி தினமலர்)11/4/2009

Source from Dinamalar:

http://election.dinamalar.com/news/1466/கமலாலயத்தில்-ஒரு-கூட்டணி-பேச்சுவார்த்தை-:-ஒரு-.html

ஆடுதுறை காக்காவும், சுலைமானும்..(தேர்தல் ஜுரம் பகுதி-3)

ஆடுதுறை காக்காவும், சுலைமானும்..(தேர்தல் ஜுரம் பகுதி-3)

சுலைமான் பாய்: என்ன காக்கா மம கட்சி இப்போ 4வது அணிதொடங்கி உள்ளதமே!

ஆடுதுறை காக்கா: ஆமா பாய்! நானும் பார்த்தேன், தினமலரை தினமலம் என்றும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிரான பத்திரிகை, தினமலரை எந்த ஒரு இஸ்லாமியனும் வாங்க கூடாது என்று சொன்ன தமுமுக இப்போது மம கட்சியாக மாறிய பின் தினமலர் மட்டும் தான் இவர்களை பற்றி செய்தி போடுகிறது என்ற நன்றி கடனில் தினமலர் கட்டிங்கேயே எடுத்து தமுமுக வெப்ஸைட்டில் போடுகிறார்கள் இப்போ?
சுலைமான் பாய்: நானும் தினமலர் படித்தேன் அதில் தமுமுக அமைப்பு மம கட்சி என்ற அரசியல் கட்சியாக மாறியது என்று செய்தி போட்டுள்ளார்களே அப்போ தமுமுக அமைப்பு இப்ப இல்லையா காக்கா?

ஆடுதுறை காக்கா: தமுமுக அமைப்பு விதி 2- கொள்கை மற்றும் நோக்க விதிப்படி அரசியலில் எந்த தேர்தல்களiலும் பங்கு கொள்ள கூடாது. அத்துடன் தேர்தல் விதிகளiல் படி தமுமுக அமைப்பு தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள் நிர்வாகிகளாக பொறுப்பு வகிப்பவர்கள் அதாவது தமுமுக நிர்வாகிகள், அரசியல் கட்சி எதிலும் பொறுப்பு ஏற்றால் கழகத்தில் அவர் வகிக்கும் பொறுப்பு தானாக ரத்தாகிவிடும்.

சுலைமான் பாய்: அப்ப தமுமுக அமைப்பின் கொள்கைக்கு எதிராக அமைப்பு தலைவர் பொது செயலாளர் தேர்தலில் போட்டி போடுகிறார்களே, தமுமுக அமைப்பு தேர்தல் விதியின் படி தலைவர், பொது செயலாளர் பொறுப்பு தானாகவே ரத்தாகிவிடுமா?
ஆடுதுறை காக்கா: இந்த விதியை கருத்தில் கொண்டு தான் மம கட்சிக்கு தனிபொது செயலாளர் என்று அறிவித்தார்கள் அவருக்கு அன்று தொப்பி மாற்றி விட்டதோடு சரி அவரை எதுவும் கண்டு கொள்வதில்லை பாய், தமுமுக மாநில நிர்வாகிகளுக்கு பதவி ஆசை விடுமா என்ன? வாரிய பதவியும் போய்விட்டதே உடனே வெட்கமில்லாமல் தலைவரும், பொது செயலாளரும் தேர்தலில் நிற்கிறோம் என்று அவர்களாகவே அறிவித்துவிட்டார்கள் மம கட்சியின் பொது செயலாளர் சமது இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை பாவம் சமது. ஒருவேளை இந்த தேர்தலில் சும்ம போட்டி போடுவோம் நாம் நிச்சயம் வெற்றி பெற போவதில்லை. ஒருவேளை அடிமட்டத்தில் உள்ள ஒரு உஷாரான தொண்டனான கண்மணி அல்லது சொந்தம் தமுமுக அமைப்பு விதி கொள்கை பற்றி கேட்டால் நாம் நம்ம தான் தேர்தலில் போட்டி போட்டோம் எந்த பதவியும் தான் வரவில்லையே என்று சொல்லி எப்போதும் போல் மழுப்பல் பதில் தான் இவர்களiடமிருந்து வரும்.
சுலைமான் பாய்: என்ன காக்கா தமுமுக அமைப்பு விதி கூட்டுறவு சங்க பதவியில் கூட இருக்க கூடாது என்று சொல்லுது ஆனால் இத்தனை நாள் எப்படி தமுமுக பொது செயலாளர் வாரிய அரசு பதவியை வகித்தார்

ஆடுதுறை காக்கா: உங்களுக்கு எனக்கும் தான் இயக்க விதிகளiன் முழுமை தெரியும் அப்பாவி கண்மணிகளுக்கும், சொந்தங்களுக்கும் அடிப்படை விதி கொள்கை மற்ற எழவுகள் எல்லாம் தெரியாது மாநில நிர்வாகிகள் சொல்வது தான் சட்டம் விதி எல்லாம் இதை யார் கேட்பது கேட்டால் மறுநாள் தமுமுக பக்கம் தலை வைத்து படுக்க முடியாது

சுலைமான் பாய்: அப்ப தமுமுக நிர்வாகிகளுக்கு பதவி தான் முக்கியம் சமுதாய கவலை இல்லை என்று சொல்லுங்கள் காக்கா!

ஆடுதுறை காக்கா: என்ன பாய்! இதை நான் தான் சொல்லனுமா இது உலகம் அறிந்த உண்மை தானே, கோடி கணக்கில் பணம் சேர்த்து வங்கி இருப்பு பட்டியலை திமுக, அதிமுக என்று காட்டி வருகிறர்களே இந்த பணம் எல்லாம் அவர்களiன் குடும்ப சொத்தா என்ன? இல்லை பட்டான் முப்பாட்டன் சேர்த்து வைத்த சொத்தா? எல்லாம் நம்மை போன்றவர்களiடம் வசுல் வேட்டையில் கிடைத்த தொகை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி சேகரிக்கிறோம் என்று இவர்களiன் தொப்பையை நிரப்பி கொண்டார்கள்.

சுலைமான் பாய்: இவர்கள் எப்படி காக்கா சமுதாயத்திற்கு பலனை கொண்டு வர போகிறார்கள். வெட்கம் மானம் கேட்டவர்கள். பதவிக்கு இப்படி அலைகிறார்களே ஆனால் தன்மானம் என்று வேறு வரட்டு பேசுகளை பாருங்களேன்.

ஆடுதுறை காக்கா: அரசியேலே வேண்டாம், ஒரு சில சீட் வாங்கி தேர்தலில் வெற்றி பெற்று நம் சமுதாயத்திற்கு எந்த பலனும் வராது என்று வேதம் ஒதியவர் தான் இந்த தமுமுக தலைவர், பதவியே விரும்பதவர்கள் இவர்கள் ஆனால் சமுதாய கவலை இப்போது திடீர் என்று வந்துவிட்டது. ஏகத்துவம் பேசினார்கள் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்த பணத்தில் பங்கு பிரிப்பதில் வம்பு செய்து கொண்டார்கள், நிவார நிதி சேகரித்தார்கள் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை, இப்படியே மக்களை ஒருநிலையில் வழி தவற செய்து தங்கள் சுயநலத்தில் தான் பெரிய அக்கறையுடன் நடத்து கொண்டு வருகிறார்கள். இரண்டு சீட் கொடுத்தால் திமுகவிற்கு நல்ல சிறப்பான சான்றிதழ் கொடுப்பார்கள். ராமதாஸ் மதுவிலக்கு பேசியபோது இந்த தமுமுக மூச்சு விடவில்லை. காரணம் வாரிய பதவியை தக்கவைத்து கொள்ள திமுகவிற்கு ஜால்ரா அடித்து கொண்டு இருந்தார்கள். இப்போது சொல்லுகிறார்கள் ஒரு முஸ்லிம் கூட திமுக நிறுத்தவில்லை என்று ஒப்பாரி வைக்கிறார்கள். எத்தனை நாள் சிகப்பு விளக்கு காரியில் பவனிவந்த சமயத்தில் இது எல்லாம் தெரியாமல் போய்விட்டது

சுலைமான் பாய்: காக்கா நீங்கள் எல்லாம் தௌiவாக சொல்லுகிறீங்க ஆனால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம், தினமலர் செய்தியின் படி தமுமுக இப்போது இல்லை மம கட்சியாக மாறி விட்டது என்றால் தமுமுக இல்லை இப்போது மம கட்சி மட்டும் தான் சொல்ல வருகிறீங்களா?

ஆடுதுறை காக்கா: அப்படி தான் பாய், தமுமுக விதிப்படி அரசியல் பொது பதவியில் இருக்க கூடாது. மம கட்சி என்றால் எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம் அல்லவா?

-ஆடுதுறையான்

ஏப்ரல் 15 வேலூர் முஸ்லிம் லீக் வேட்பாளர் பிரச்சாரத்தை துவங்குகிறார்

ஏப்ரல் 15 வேலூர் முஸ்லிம் லீக் வேட்பாளர் பிரச்சாரத்தை துவங்குகிறார்



வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துர் ரஹ்மான் 15.4.09 புதன் கிழமை காலை 9 மணிக்கு தலைமை நிலையமான காயிதே மில்லத் மன்ஸிலில் இருந்து புறப்பட்டு திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜித் சென்று காயிதே மில்லத் அடக்கத்தலத்தில் ஜியாரத் செய்கிறார். தொடர்ந்து ராயப்பேட்டையில் சிராஜுல் மில்லத் அடக்கத்தலத்தில் ஜியாரத் செய்கிறார். காலை 10மணிக்கு வேலூர் புறப்பட்டு சென்று தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்.

அன்று மாலை 5 மணிக்கு வேலூரில் தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., அவர்கள் தலைமையில் நடை பெறும் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளின் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இந்நிகழ்ச்சிகளில் முஸ்லிம் லீக் மாநில-மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்குமாறு வேண்டுகிறோம்.

Sunday, April 12, 2009

முஹ‌ம்ம‌து தாஹா ம‌ற்றும் ஹ‌மீதுர் ர‌ஹ்மான்

முஹ‌ம்ம‌து தாஹா ம‌ற்றும் ஹ‌மீதுர் ர‌ஹ்மான்
அபுதாபி
10 ஏப்ரல் 2009


Saturday, April 11, 2009

வேலூர் நாடாளும‌ன்ற‌ தொகுதி வேட்பாள‌ராக‌ அப்துல் ர‌ஹ்மான் தேர்வு

kalam kadir
dateSat, Apr 11, 2009 at 7:58 PM
subjectFw: [AIMAN Times] FLASH NEWS : வேலூர் நாடாளும‌ன்ற‌ தொகுதி வேட்பாள‌ராக‌ அப்துல் ர‌ஹ்மான் தேர்வு

Salamun alaikkum

I am so glad to hear and see the news about My Dear Friend and my near by-town's
son of soil, Mr.Abdurrahman's selection to put up on Vellore in this year forthcoming election. Most recently we had had good friendship and he is one of fans for my KAVITHAI. Particularly the kavithai which I wrote on conference "muslim league" at tanjore. He admired me so much that I shall have never heard from anyone else. More over, he is also brother-in-law for my dearest friend Mr. Habibullath (muthupet) who is running 'TAMIL NADU UNAVAGAM' in Dubai. As soon as I saw him in the TV yesterday with Our CM,I was so happy and then I started to supplicate THE ALLAH for his big victory in the election competition. Insha Allah, he will win, I am sure.


"kavianban"KALAM
00*71-50-8351499

அரிதாரம் கலைத்து அரசியலுக்கு வந்த

Habib Ur. Rahman

dateSat, Apr 11, 2009 at 10:28 AM
subjectஅரிதாரம் கலைத்து அரசியலுக்கு வந்த அல்லாஹ்வின்மீது சத்...

தி.மு.க.வின் சிறுபான்மை பிரிவுபோல் இயங்கிவந்த த.மு.மு.க., அரசியல் அதிகாரத்தை அலங்கரிக்கும் நோக்கில், மனிதநேய மக்கள்கட்சி எனும் அரசியல் அரிதாரம் பூசினார்கள். அப்போது, த.மு.மு.க. வழக்கம்போல சமுதாய அமைப்பாக இருக்கும் அரசியலில் ஈடுபடாது. மனிதநேய மக்கள்கட்சி தேர்தலில் போட்டியிடும், த.மு.மு.க. வில் பொறுப்பில் உள்ளவர்கள் மனிதநேய மக்கள் கட்சியில் பொறுப்புக்கு வரமுடியாது என்றெல்லாம் கூறி, த.மு.மு.க நிர்வாகிகள் சிலரை புதிய கட்சிக்கு தத்து கொடுத்தார்கள்.

இந்நிலையில், மலைபோல் நம்பியிருந்த தி.மு.க. நட்டாற்றில் விட்டவுடன், நேற்றுவரை மோடியின் சகோதரி என்று வசைமாரி பொழிந்துகொண்டிருந்த ஜெயலலிதாவுடன் கூட்டணிக்கு முயற்சித்து அங்கும் கதவு சாத்தப்பட்டு இறுதியாக, புதிய தமிழகம் மற்றும் சரத்குமாருடன் பலமான கூட்டணி[?] அமைத்து மூன்று தொகுதியில் ம.ம.க. போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக,

மயிலாடுதுறையில் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மத்திய சென்னையில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, இராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ் கான் ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளனர்.

இதில் வேடிக்கை என்னவெனில், அரசியலில் போட்டியிடாத சமுதாய அமைப்பான த.மு.மு.க.வின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் அரசியலில் போட்டியிடுவது எப்படி? ஒன்று த.மு.மு.க.வில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ம.ம.க.வில் சேர்ந்தபின் போட்டியிட்டால் இத்தகைய கேள்வி எழாது. ஆனால், தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்றுசொல்லும் ஒரு அமைப்பின் தலைவரும் பொதுச்செயலாளரும் போட்டியிட த.மு.மு.க.வின் பைலா இடம் தருகிறதா என்பதை பாருங்கள்;


விதி : 2 கொள்கை மற்றும் நோக்கம்

பிரிவு 3: (அ) நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு சார்பு கூட்டுறவு சங்க அமைப்புகள் ஆகிய எந்தத் தேர்தல்களிலும் கழகம் போட்டியிடாது.

*அமைப்பின் கொள்கைக்கு எதிராக அமைப்பின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் போட்டியிடுவது எப்படி? விளக்குவார்களா?
விதி : 25 தேர்தல்

பிரிவு : 6 கழகத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று நிர்வாகிகளாக பொறுப்பு வகிப்பவர்கள், அரசியல் கட்சி எதிலும் பொறுப்பு ஏற்றால் கழகத்தில் அவர் வகிக்கும் பொறுப்பு தானாக ரத்தாகிவிடும். தலைமை நிர்வாகக் குழுவினால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கும் இது பெருந்தும்.

மேற்கண்ட விதியின்படி, அரசியல் கட்சியான ம.ம.க. வில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதால் சகோதரர் ஜவாகிருல்லாஹ், மற்றும் சகோதரர் ஹைதர் அலி ஆகிய இருவரின் பதவிகளும் தானாகவே த.மு.மு.க.வில் காலாவதியாகிவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாமா?

மேலும், சரத்குமார் கட்சியுடன் கூட்டணி என்று அறிவித்துள்ளார்கள். சரத்குமார் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார். பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்று சரத்குமார் அறிவிக்காத நிலையில் அவர்கள் போட்டியிடும் தொகுதியில் ஆதரிப்பது எப்படி என்பதையும் ம.ம.க. விளக்கவேண்டும்.

இறுதியாக, கலைஞரிடம் தொங்கி, ஜெயாவிடம் கெஞ்சி கடைசியில் தங்களைப்போலவே அடித்தளம் இல்லா இரு கட்சிகளுடன் கூட்டணி என்று அறிவித்ததுக்கு பதிலாக, முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தாத தி.மு.க, அண்ணா தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்டுகள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் [விஜயகாந்த் நிறுத்தியிருக்கும் இரு முஸ்லீம் வேட்பாளர்கள் மற்றும் முஸ்லிம்லீக் போட்டியிடும் வேலூர் தவிர்த்து ] தனித்து போட்டி என்று என்று அறிவித்திருந்தால் கவுரவமாக இருந்திருக்கும். .

சிராஜுல் மில்லத் அவர்களுக்கு கவிதைப் பூக்களால் பிரார்த்தனை

சிராஜுல் மில்லத் அவர்களுக்கு கவிதைப் பூக்களால் பிரார்த்தனை



தொகுப்பு - ஆலிமான் ஆர்.எம். ஜியாவுதீன்

எங்கள் அருமைத் தலைவரின் சமுதாயச் சேவையை
உழைப்பை - தொண்டூழியத்தை - கருணையோடு
அங்கீகரித்து இறைவா ஏற்றுக் கொள் பிழைகளைப்
பொறுத்து ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்
வாழ்வைக் கொடுத்தருள்!
-எழுத்தரசு ஏ.எம். ஹனீப்

சிறகில்லாமல் பறந்து போன
சிராஜுல் மில்லத் செம்மலே!
அறிவொளி பரப்பும் மணிச்சுடராக அன்பை வழங்கிய வள்ளலே!
கபருஸ்தானில் மறைந்தபோதிலும்
கல்புஸ்தானில் வாழுகிறார்.
காதர் மொகிதீன் தலைமையிலே - நம்
கட்டுப்பாட்டுக்கு வாழ்த்துகிறார்
- நாகூர் சலீம்

தலைவரே! உங்களின்
தெவிட்டாத செந்தமிழ்ப் பேச்சு
எங்கள் செவிகளில்
மரணித்துவிட வில்லை....
எங்களின்
அரசியல் பயணம்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது
ஆம்!
உங்களின் வழிகாட்டுதல்
மரணித்துவிட வில்லை.....
- கவிஞர் இஸட். ஜபருல்லாஹ்

வாழிய சிராஜுல் மில்லத்!
வாழிய அமீனுல் உம்மத்
வாழிய அப்துஸ் ஸமது
வல்லவன் அருளைக் கொண்டே
ஊழியம் செய்து (உ) வந்த
உன்னத நெஞ்சே வாழ்வில்
நாழிகை தோறும் செய்த
நன்மையுள் என்றும் வாழ்க!
- ஏம்பல் தஜம்முல் முஹம்மது

அன்புப் பெட்டகமே
அறிவுக் கருவ+லமே
சிராஜுல் மில்லத்தே
நும் நினைவில்
எம் பயணம்
என்றும் தொடரும்
- வடக்குகோட்டார் வ.மு. செய்யது அஹமது

சோபனச் சுரங்கமே! - எங்கள் சொப்பன அரங்கமே
சேமச் சிகரமே! சிராஜுல் மில்லத்தே!
இன்றைய அரசியலுக்கு நேற்றைய வழிகாட்டியே!
உங்கள் புகழ் நாரின் ப+க்களல்ல
நட்சத்திரப் ப+க்கள் என்றும் உதிராதவை உயர்ந்தவை!
- தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

பிழை சேரா நபிவழியைத் தொடர்ந்தவர்! - என்றும்
பிறைக்கொடியைப் புகழ்க் கொடியாய்
தலைநிமிர வைத்தார்

கலைநோக்கு கவிதைத் திறன் -
சொல்லாற்றல் மிக்கவர்! - அப்துஸ்
ஸமதெனம் சமுதாய விளக்கு! - இஸ்லாம்
அமுதக் கொள்கைகளே அன்னாரின் இலக்கு!
- கவிஞர் வழுத்தூர் ஒளியேந்தி

பல்வேறு சாதனைகள்
படைத்திட்ட சாதனையாளர்!
நல்லோர்கள் நாவினிலே
நாளும் வாழும் சிராஜுல் மில்லத்
- சீர்காழி இறையன்பன்

மதுப்புதுவை மாநிலத்தில்
பிறந்தபோதும்
மதுவிலக்கு கொள்கையிலே
பிடித்திருக்கும்!
எது புதுமை என்பதிலே
தெளிவிருக்கும்
என் தலைவரின் புகழென்றும்
நிலைத்திருக்கும்!
- கவிஞர் கிளியனூர் அஜீஸ்

என்னவென்று எழுத்தில் சொல்ல
எப்படிதான் அழுது சொல்ல
பொன்னுடலை அடக்கம் செய்தோம்
பொறுமையுடன் பிரார்த்திப்போம் நாம்!
- கவிரூர் இக்பால் ராஜா

வேலூர் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு சென்ற இடமெல்லாம் உற்சாக வரவேற்பு

வேலூர் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு சென்ற இடமெல்லாம் உற்சாக வரவேற்பு



வேலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமானுக்கு தொகுதி முழுவதும் உற்சாக வரவேற்பு கிடைத்து வருகிறது.

அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தேர்தல் பணி முழு வீச்சில் தொடங்கியுள்ளது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் வேலூர் தொகுதியில் தேர்தல் பணிகளை துவக்கினார்.

தமிழக அமைச்சர் துரைமுருகன் மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., வழக்கறிஞர் முஹம்மது சகி, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன், மாதனூர் சின்னச்சாமி எம்.எல்.எ., வாணியம்பாடி அப்துல் பாசித் எம்.எல்.ஏ., உள்ளிட் டோர் முழு வீச்சில் தேர்தல் பணிகளில் இறங்கி யுள்ளனர். வேலூர் தொகுதியின் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக அறி விக்கப்பட்டுள்ள எம். அப்துல் ரகுமான், முதல்வர் கலைஞர், தி.மு.க. பொரு ளாளர் தளபதி மு.க. ஸ்டா லின் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்ற பின் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., அவர்களின் ஆசி யுடன் தேர்தல் பயணத்தை தொடங்கினார்.

முதல் கடமையாக சென்னை பெரியமேட்டில் உள்ள ஜும்ஆ பள்ளியில் ஜும்ஆ தொழுகை முடிந்து துஆ செய்தபின் பைத்துல் ஹஜ்ஜாஜ் தலைவர் பிரபல தொழில் அதிபர் ஹாஷிம், எஸ். பீடி அதிபர் அஷ்ரப் மற்றும் மேல் விஷாரம், ஆம்ப+ர், குடியாத்தம், வாணியம்பாடி, உள்ளிட்ட ஊர்களின் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

வேலூர் மேற்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.டி. நிஸார் அஹமது, செயலாளர் ரஹமத்துல்லா, கிழக்கு மாவட்ட தலைவர் கே.ஏ. முஹம்மது ஹனீப், செய லாளர் ஜான் பாஷா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அவரை அழைத்துச் சென்றனர்.

பின்னர் வேலூர் தொகுதி சென்ற வேட்பாளர் அப்துல் ரகுமான் மாவட்ட தி.மு.க. செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., இல்லத்தில் தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தமிழக அமைச்சர் துரை முருகன், மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் முஹம்மது சகி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.

இன்று (11.04.09) காலை 6.30 மணிக்கு வேலூர் லதீபிய்யா அரபிக்கல்லூரி முதல்வர் மௌலானா சையது உஸ்மான் காதிரி, வேலூர் மாவட்ட தலைமை காஜி ஷாஹ் அன்வாருல்லா ஆகியோரை சந்தித்து துஆவை பெற்றார்.

அதன்பின் வேலூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரனை அவர்கள் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் அறி முக கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் முஹம்மது சகி தலைமை தாங்கி னார், மேயர் கார்த்திகே யன், துணை மேயர் சாதிக், நகர செயலாளர் ராம லிங்கம், துணைச் செயலாளர் நூருல்லா, பொருளாளர் சந்திரசேகரன், கருணா கரன், தங்கம், மாவட்ட பிரதிநிதிகள் மயில்வாகனன், முருகப் பெருமாள், கயல்ராஜா, நிஜலிங்கம், லோகநாதன், ரமேஷ், பொதுக் குழு உறுப்பினர்கள் எம்.சி.எஸ். பன்னீர் செல்வம் இதில் பங்கேற்றனர்.

அதன்பின்னர், வேலூர் காங்கிரஸ் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. ஞானசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார், அக்பர் பாஷா, கவுன்சிலர்கள் சீனிவாச காந்தி, பி.ஆர். ஜெய பிரகாஷ், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெய சங் கரன், சந்திர பிரகாஷ், மாவட்ட இளைஞர் காங் கிரஸ் தலைவர் பி.ஹெச். பழனி, கௌதமன், கவுன்சிலர்கள் கவிதா கிரி, மஞ்சுளா, பொற்செல்வி ஜெய சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பகல் 11.30 மணிக்கு அணைக்கட்டு தொகுதியில் உள்ள பள்ளிக் கொண்டாவில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. நகர செயலாளர் சி.செல் வம், மாவட்ட பிரதிநிதி ஜெய சீலன், ஜாகிர் கான், சிவராஜ், பிச்சாண்டி, முஸ்லிம் லீகின் வளர்பிறை அக்பர் பாஷா, தலைவர் ஷரீப், ஏ. அக்பர் ஷா எம்.சி., விடுதலைச் சிறுத் தைகள் ஒன்றிய செயலாளர் கே. சிவா, பொருளாளர் சத்திய நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து பேர்ணாம்பட்டு தொகுதியில் மாதனூரில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

சட்ட மன்ற உறுப்பினர் சின்னசாமி தலைமையில், ஒன்றிய செயலாளர் அறி மலை ஜெயராமன், அவைத் தலைவர் பஞ்சநா தன், ஒன்றிய செயலாளர் அய்யனூர் அசோகன், ஒன் றிய பொருளாளர் வென் கிளி கோவிந்த சாமி, மாதனூர் சேர்மன் பிரேமா சன்முகம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பி.எஸ். சுரேஷ் குமார், காங்கிரஸின் பிரகாசம், அமல் திருப்பதி, விடுத லைச் சிறுத்தைகள் தமிழ் செல்வன், ஓம் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து குடியாத்தம் தொகுதியில் வேட்பாளர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கல்லூர் கே.ரவி இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அவை தலைவர் குற்றாலப் பள்ளி சேகர், துணைச் செயலாளர் ஜெயவேலு, ஏ.சி. குருநாதன், சாவித்திரி மணி, அண்ணா துரை, ஜி.ஆர். கிருஷ்ண மூர்த்தி, மோகன், ராமச் சந்திரன், அசோகன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ப+ங்கப் பட்டி குமார், ரகு உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொண்டர்கள் முழு வீச்சில் தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர். பொதுமக்கள் மிகுந்த உற்சாத்தோடு முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அரபு மொழி பேசுவோரையும் தமிழ் படிக்க வைத்த பெருமை முஸ்லிம் லீகிற்கு உண்டு! தளபதி ஷபீகுர் ரஹ்மான்

அரபு மொழி பேசுவோரையும் தமிழ் படிக்க வைத்த பெருமை முஸ்லிம் லீகிற்கு உண்டு! தளபதி ஷபீகுர் ரஹ்மான்

இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் 13ஆம் ஆண்டுவிழா தஞ்சையில் நடைபெற்றது. ஆன்மீக அரங்கத்திற்கு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குநர் ஹாஜி 'மெஹர்' ப.யு.அய்யூப் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட அரசு காஜியார் அல்ஹாஜ் டி.சைய்யத் காதர் ஹுசைன் புகாரி ஆலிம் முன்னிலை வகித்தார்.

வவ்வாலடி 'அன்னை கதீஜா' இதழ் துணை ஆசிரியர் தமிழ்மாமணி ஹாஜி அ. ஹபீப் முஹம்மது இஸ்லாமியப் பாடல் இசைத்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான்
சிறப்புரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது :

இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் சார்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இஸ்லாமிய இலக்கியப் பெருவிழாவில் ஆண்டுதோறும் கலந்து கொள்ளும் வாய்ப்பினை எனக்கு நல்கிய உங்கள் அனைவருக்கும் முதலில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த நமது தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத், நீடூர் சயீத் ஆகியோருடன் இணைந்து இதற்கு முன்பு இலக்கிய மாநாடுகளில் நான் பங்கேற்றுள்ளேன்.

சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது அவர்கள் முஸ்லிம் லீக் பணிகளோடு, இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் உலக ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்று இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். அவரது மறைவை தொடர்ந்து தற்போது நமது முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., உலக ஒருங்கிணைப்பாளராக இருந்து இஸ்லாமிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சேவை புரிந்து வருகிறார்.

தமிழக முஸ்லிம்களை பொறுத்தவரை தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் பற்றும் - பாசமும் கொண்டிருக்கின்றனர். அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர்.

தமிழக ஆலிம் பெருமக்கள் பலர் மார்க்க சேவையோடு, தமிழ் சேவையையும் புரிந்துள்ளனர். மதரஸாக்களில் அரபி மொழி போதிக்கும் போதெல்லாம் தமிழ் மொழியின் சிறப்புக்களையும் எடுத்து விளக்கி வருகின்றனர். தமிழகத்தின் புகழ் பெற்ற ஆலிமாக திகழ்ந்த ஷெய்குல் மில்லத் அமானி ஹஸரத் அவர்கள் மதரஸாவில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும்போதெல்லாம் அரபி மொழி கற்றுக் கொடுக்கும்போதெல்லாம் தமிழ் மொழியின் சிறப்புக்களையும், இலக்கியத்தையும் எடுத்து விளக்குவார்.

அதேபோன்று கண்ணியத்துக்குரிய காயிதெ மில்லத் அவர்கள் இந்திய அரசியல் சபையிலே இந்தியாவில் ஆட்சி மொழியாக அறிவிக்கக்கூடிய தகுதியும், தொன்மையும் இலக்கிய - இலக்கண வளமையும் நிறைந்த மொழி தமிழ் ஒன்றுதான். தமிழையே இந்தியாவின் பொது மொழியாக அங்கீகரிக்க வேண்டும் - அறிவிக்க வேண்டும் என குரல் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்ல - மொராக்கோ நாட்டிலே நடைபெற்ற உலக முஸ்லிம் தலைவர்களின் மாநாட்டிலே இந்திய அரசின் பிரதிநிதியாக கலந்து கொள்ளும் வாய்ப்பு ஒருமுறை முஸ்லிம் லீகிற்கு கிடைத்தது.

முஸ்லிம் லீகின் சார்பாக, காயிதெ மில்லத் அவர்கள் அப்துஸ் ஸமதை இந்த மாநாட்டிற்கு அனுப்பி வைத்தார். அப்போது அப்துஸ் ஸமதிடம் சில புத்தகங்களை கொடுத்து இந்த புத்தகங்களை மொராக்கோ மாநாட்டில் கலந்துகொள்ளும் முஸ்லிம் கல்வியாளர்களிடம் கொடுத்து படிக்கச் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

காயிதெ மில்லத் அப்துஸ் ஸமதிடம் கொடுத்தனுப்பிய தப்ஸீர் ஜலாலைன், மிஷ்காத், பத்ஹுர் ரப்பானி, சிம்து ஸுபியான் போன்ற அரபு - தமிழ் நூல்களை மொராக்கோவில் நடைபெற்ற உலக முஸ்லிம் கல்வியாளர்கள் மாநாட்டிலே கலந்து கொண்ட அரேபியர்கள் பலரும் வாசிக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது அவர்கள் வாயிலிருந்து ஏராளமான தமிழ் சொற்கள் வெளிப்பட்டன. இத்தகைய ஒரு அதிசயம் அங்கு நிகழ்ந்தது.

மாநாட்டை முடித்து தமிழகம் திரும்பிய அப்துஸ் ஸமத் மாநாட்டு நிகழ்வுகள் தொடர்பாக ~மணிவிளக்கு ஏட்டிலே எழுதிய கட்டுரையில், அரபுகளையும் தமிழ் பேச வைத்த அற்புத தலைவர் காயிதெ மில்லத் அவர்களின் அந்த செயலினை வெகுவாக பாராட்டி புகழ்ந்துள்ளார்.
இந்த அளவுக்கு முஸ்லிம் பெருமக்கள் தமிழின் மீது தனியாத பற்றுக்கொண்டுள்ளனர். அரசியல் தலைவர்களாக மட்டுமல்லாமல் ஆன்மீகத் தலைவராகவும், திகழ்ந்து தமிழின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர்.

தமிழ் மொழிக்கும் - அரபு மொழிக்கும் இடையேயான ஒற்றுமைகளை ஆய்வு செய்து நூல்களை எழுதுபவர்களுக்கு ஆண்டுதோறும் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. அறிவித்துள்ளார்.

தமிழ் அறிஞர் பெருமக்களும், முஸ்லிம் ஆலிம்களும் இத்தகைய பணிகளில் ஈடுபடுவது இன்றைய காலத்தின் அவசியமாகும்.

முஸ்லிம்கள் தமிழை வளர்த்தார்கள். தமிழால் இஸ்லாம் வளர்ந்தது. தமிழ் மொழிக்காக முஸ்லிம் பெருமக்கள் இயற்றித் தந்துள்ள ஏராளமான இலக்கியங்கள் இன்னும் பொது மக்களின் கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை. அவற்றையெல்லாம் அனைத்து மக்களும் அறிந்து பயன்பெறும் வகையில் இதுபோன்ற இலக்கிய மாநாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

-இவ்வாறு தளபதி ஷபீகுர் ரஹ்மான் பேசினார். நிகழ்ச்சியில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழக துணைத்தலைவர் அதிரை அருட்கவி முஹம்மது தாஹா மதனீ, பாபநாசம் ராஜகிரி தாவூத் பாட்சா கலைக்கல்லூரி அரபி மொழிப் பேராசிரியர் ஆலிம் கவிஞர் தேங்கை ஷர்புதீன், ஆகியோர் உரையாற்றினர்.

Thursday, April 9, 2009

முஸ்லிம் லீக் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும்.

முஸ்லிம் லீக் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும்.

இன்றைய அரசியல் பிரிவுகளுக்கிடைய லீக் ஏணி சின்னத்தில் போட்டி போட்டால் நிச்சியம் எதிர்மறையாக போய்விடும். காரணம் அடிமட்ட மக்கள் ஏணி சின்னம் அவ்வளவு தெரியாது எனவே கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டி போடுவது தான் வெற்றிக்கு வழி வகுக்கும்.
லீக் போட்டி போடும் தொகுதில் 15 முதல் 20 சதவீதம் தான் முஸ்லிம்கள் உள்ளனர், 60 சதவீதம் சகோதர சமுதாய இந்து மக்களும், 20 சதவீதம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். தன்மானம் பேசி திரிபவர்களiன் விமர்சனத்திற்காக நாம் நமது வெற்றி வாய்ப்பை இழக்க கூடாது. இவர்கள் அரசியலில் இப்போது தான் குழந்தை பருவத்தில் உள்ளார்கள். அதனால் தான் சிறுபிள்ளை தனமாகவே அறிக்கைகளும், பேட்டியும் கொடுத்து 60 வருட கட்சி நடத்தும் முஸ்லிம் லீக் தனிசின்னத்தில் போட்டி போடவில்லை என்று ஒப்பாரி வைக்கிறார்கள். இவர்களiன் வாதம் எந்த அளவிற்கு தவறானது என்பது நாம் கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் புரியும் இன்றைய கால கட்டத்திற்கு சரியாக வாரது. தொகுதி என்ற அடிப்படையில் அனைத்து மக்களும் உள்ளனர் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் ஆனால் பெரிய அளவில் இல்லை.

நம்மிடம் உள்ள கயவர்கள் போட்ட வழக்கும் எந்த எதிர்ப்பும் கொடுக்கவில்லை, நீதிமன்ற தீர்ப்பும் லீக் கட்சிக்கு சார்பாகவே தான் வந்தது. எனவே இந்த தனிசின்னம் என்ற பேச்சு பிறகு சட்டசபை தேர்தல் போது வெள்ளோட்டம் பார்க்கலாம். பல பரிட்சை பார்க்க இதுவல்ல நேரம். ஏணிசின்னம் வேண்டுமானல் கேரளாவில் நன்றாக தெரியும் இங்கு தமிழகத்தில் அப்படி அல்ல. எனவே ஏணி சின்னம் என்று போட்டி போட்டால் அது சுயேச்சை வேட்பாளர் என மக்களுக்கு தோன்றும், இதை பிரபலப்படுத்துவது என்பது வெகு சிரமம். எனவே உதய சு>ரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்பது ஒவ்வொரு சமுதாய கவலை கொண்ட தொண்டர்களiன் கவலை.

--ஆடுதுறையான்

கடலூர் மாவட்ட முஸ்லிம் லீக் செயல் வீரர்கள் கூட்டம்

கடலூர் மாவட்ட முஸ்லிம் லீக் செயல் வீரர்கள் கூட்டம்



கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்வீரர்கள் கூட்டம் வரும் 12.4.09 ஞாயிற் றுக்கிழமை மாலை 4 மணிக்கு லால்பேட்டை ஜே.எம்.ஏ. திருமண மண்ட பத்தில் மாவட்ட தலைவர் எஸ்.ஏ. அப்துல் கப்பார் தலைமையில், மாநில மார்க்க அணிச் செயலாளர் தளபதி ஏ.ஷபீகுர்ரஹ்மான் முன்னிலையில் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் நடை பெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவது, இயக்க பணி, மற்றும் தலைவர் அனுமதியுடன் இதர முடிவுகள் எடுக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட செயலாளர் ஏ.சுக்கூர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Wednesday, April 8, 2009

கோரக்பூரின் கொடிய முகம் : ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

கோரக்பூரின் கொடிய முகம் : ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
திரு யோகி ஆதித்யநாத்.

உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள கோரக்பூர் நகர் கோரக்நாத் மடத்து தலைமைப் பூசாரி.

முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைச் சம்பவங்களைத் திட்டமிட்டு இப்பகுதியில் செய்து வரும் ஹிந்து யுவ வாஹினி என்ற வன்முறைக் கும்பலுக்கு உந்து சக்தியாகவும், பின்புலமாகவும் இயங்கி வருபவர் என்ற கூடுதல் தகுதியும் உண்டு.

2007 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் அப்பகுதியிலுள்ள முஸ்லிம் தர்ஹாவை இடித்ததற்காக சிறைவாசம் அனுபவித்தவர்.

இப்பகுதியிலுள்ள முஸ்லிம்களை, எப்போது வேண்டுமானாலும் வகுப்பு கலவரம் வரலாம் என்ற மனோதத்துவ ரீதியிலான பயத்தில், வைத்திருப்பதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.
தேர்தல் நெருங்கி விட்டால் இத்தகைய பயத்தை அதிகப்படுத்தி, தங்களது வெறியூட்டும் பேச்சுக்களால் சகோதர சமுதாயங்களுக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணி, அதை அகலப்படுத்தியும் , ஆழப்படுத்தியும் தங்களது பதவிப் பசியைத் தீர்த்துக் கொள்வோருக்குச் சிறந்த முன்மாதிரி இவர்.

14,32,002 வாக்காளர்களைக் கொண்ட கோரக்பூர் தொகுதியின் பிஜேபி நாடாளுமன்ற வேட்பாளரும் இவரே!

1989 முதல் 1996 வரை தொடர்ந்து மூன்று முறை இவர் சார்ந்துள்ள மடத்திலிருந்து தான் இத்தொகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய தகுதிகள் கொண்டவர்களைத் தான் பிஜேபி நாடெங்கிலும் தன்னுடைய வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவர்களெல்லாம் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தால் நாடு என்னவாகும் என்று நாட்டின் நலனில் அக்கறையுள்ள நன்மக்கள் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கின்றார்கள்.
இதனிடையில் சில தினங்களாக நாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக விவாதிக்கப்பட்டு வருகின்ற வருண் காந்தியின் விஷம் தோய்ந்த வகுப்பு வெறிப் பேச்சும், அதைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட அவரது நீதிமன்ற கைதும், அதை ஊதிப் பெரிதாக்கும் வண்ணம் நடந்தேறிய நாடகங்களும் நம் சமுதாயம் உற்று நோக்க வேண்டிய விஷயங்களாகும்.

பிஜேபியும், மாயாவதியின் பிஎஸ்பியும் பரஸ்பரம் கொண்டுள்ள அரசியல் புரிந்துணர்வு தான் வருண் காந்தி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் செய்யப்படுவதற்கு காரணம் என்ற உச்ச நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அவர்களின் கூற்று கவனிக்கப்படத்தக்கது.
வாக்காளர்களை மதரீதியாகப் பிரிப்பது ஒன்று தான் தங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று திட்டமிட்டு சங் பரிவாரம் செயலாற்றி வருவது கண் கூடு.
மேற்கொள்ளும் பிரச்சாரங்களும், தேர்ந்தெடுத்துள்ள வேட்பாளர்களும் அதற்கு கட்டியம் கூறுகின்றன.

இல்லாத பிரச்சினைகளை உருவாக்கி, அதை ஊதிப் பெருதாக்கி, மதச் சார்பற்ற அரசியல் கட்சிகளை பெரும்பான்மை சமுதாயத்தின் விரோதிகளாக உருவகப்படுத்துவதன் மூலம், மதரீதியில் மக்களைப் பிளக்கும் தங்களின் முயற்சியில் வெற்றி பெற்று, ஆட்சிக் கட்டிலில் அத்வானியை உட்கார வைக்கும் மாபெரும் சதித் திட்டத்தின் சிறு முடிச்சை, கபில் சிபல் அவர்கள் அவிழ்த்துக் காட்டியிருக்கின்றார்.

காங்கிரஸை பலவீனப்படுத்தி உத்தரப் பிரதேசத்தில் அதிக எம்பிக்களைப் பெற்றால் மாயாவதியின் பிரதமர் ஆசை பலிக்கக் கூடும்.

காங்கிரஸ் வீழ்ந்தது தன்னால் தான் என்று பிரகாஷ் காரத் அவர்கள் பெருமிதப்படக் கூடும்.
ஆனால் தேர்தல் முடிந்த பிறகு, மாயாவதி அவர்கள் பிஜேபிக்கு ஆதரவளிக்க மாட்டார் என்று அவர் உத்தரவாதம் அளிக்க முடியாது.

இதே போல் தான் கம்யூனிஸ்டு நண்பர்கள் தமிழகத்தில் அமைத்துள்ள கூட்டணியின் தலைவர் ஜெயலலிதாவும்!

காங்கிரஸுடன் கொண்ட அரசியல் வேற்றுமைகளை, சுய கவுரவப் பிரச்சினையாக எடுத்துக்
கொண்ட பிரகாஷ் காரத் போன்ற தலைவர்கள், நாடெங்கிலும் மதச் சார்பற்ற ஓட்டுகளை கூறு போட்டு வருகின்றனர்.

நாட்டின் ஸ்திரத் தன்மைக்கு அபாயச் சங்கு ஊதுகின்ற தலையாய பிரச்சினைகளைப் புறம் தள்ளி விட்டு, பிரதமர் நாற்காலியை மட்டும் பிரதானமாகக் கொண்டு, பல்வேறு மாநிலங்களில் வித விதமான தலைப்புகளில் கூட்டணிகள் உருவாகியுள்ளன.
அவற்றில் ஒன்று தான் தமிழகத்தில் அமைந்துள்ள அதிமுக தலைமையிலான கூட்டணி.
சமுதாயப் பெரியோர்களே! இளைஞர்களே!! தாய்மார்களே!!!

2009 பாராளுமன்றத் தேர்தலில் மத வெறி சக்திகள் மீள முடியாத தோல்வி அடைய வேண்டும்.

அதற்கு நம் வாக்குகள் முறையாக அளிக்கப்பட வேண்டும்.
மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற வட மாநிலங்களில் பிஜேபி கூடுதல் பலத்துடனிருப்பதை நாம் மறந்து விடலாகாது.

அங்கெல்லாம் அப்படி ஒரு அரசியல் விபத்து ஏற்பட்டு விடுமானால், அதைச் சமன் செய்யும் வல்லமை நம் தமிழகத்து வாக்குகளுக்கு உண்டு.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான அணிக்கு நாம் அளிக்கும் ஒவ்வோரு வாக்கும், யோகி ஆதித்ய நாத் போன்ற அரசியல் விஷ ஜந்துக்கள் பாராளுமன்றத்திலிருந்து விரட்டப்படுவதற்கு வைக்கப்படும் வேட்டாகும்.

மாநில மாச்சரியங்களை மறப்போம்! மத வாதத்தை வேரறுப்போம்!!

ஹமீதுர் ரஹ்மான், இணைச் செயலாளர், காயிதே மில்லத் பேரவை, யு.ஏ.இ.

IUML against ban on Tamil Nadu Muslim Munnetra Kazhagam

IUML against ban on Tamil Nadu Muslim Munnetra Kazhagam

( old news for information )

The Indian Union Muslim League is opposed to any ban on the Tamil Nadu Muslim Munnetra Kazhagam.

Stating this in Madras last night, IUML General Secretary K A Abdul Samad and National Secretary E Ahmed told reporters that banning the organisation was not the way to maintain social harmony and peace in the state.

The two leaders dismissed the suggestion that Muslim youths were joining extremist organisations. Just because a few youths had joined extremist organisations, it was unfair to make a generalisation, they said.

They said the IUML would celebrate its golden jubilee on March 9 and March 10 in the city.

The celebrations will begin at Rajaji Hall, where the party was founded 50 years ago.

The league will demand proportional representation in the legislatures, they said.
A massive procession will be taken out on the second day in which leaders from all over the country will participate, they said.

They added that Dravida Munnetra Kazhagam president and Tamil Nadu Chief Minister M Karunanidhi and Tamil Maanila Congress president G K Moopanar, among others, would address a public meeting on the concluding day.

UNI

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா

Idhuthaan Arasial said...

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பாதேர்தலில் ஒருபோதும் போட்டியிட மாட்டோம் என்று கூறி தமுமுகவுக்கு ஆள் சேர்த்த அதன் தலைவர்கள் தற்போது மாமா.கட்சி என்ற பெயால் கட்சி துவங்கி சீட்டுக்காக நாயாக அலைந்து கொண்டிருப்பது அனைவருக்கும் தொந்ததே! இந்த பேர்வழிகள் வழக்கமான அரசியல்வாதிகளை விட மிகக் கேவலமான அரசியல் நடத்துவதைக் கண்டு தமிழக மக்கள் காறித் துப்புவதும் அறிந்ததே! காங்கிரஸ் கூட்டணியில் ஒருபோதும் சேர மாட்டோம் என்று ஜவாஹிருல்லா அறிவித்த மூன்று நாட்களில் காங்கிரஸ் கூட்டணியான திமுகவிடம் போய் சீட் கேட்டு கெஞ்சத் துவங்கினார். அதிமுக திமுக கட்சிகளுடன் ஒரே சமயத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாக பிபிசி தமிழோசை நிருபாடம் கூறி கேவலப்பட்டுக் கொண்டார்.

8 தொகுதிகளில் போட்டி என்று சென்னையிலும்
6 தொகுதிகளில் போட்டி என்று நேல்லையிலும்
3 தொகுதிகள் தந்தால் தான் கூட்டணி என்று திருச்சியிலும்
2 தொகுதி தந்தால் தான் கூட்டணி என்று பி.பி.சி. திசையில் புலம்பித் தள்ளிக்
கொண்டிருக்கின்றனர். உயர்மட்டக்குழு கூடி முடிவெடுக்கும் என்று கூறி மூன்று நாட்களைக் கடத்தினர்.அதன் பிறகு உயர்மட்டக்குழு முடிவெடுத்து விட்டதாகவும் 4.4.09 செயற்குழுவில் அறிவிப்பதாகவும் அது தமிழக அரசியலில் திருப்புமுனையை (?) ஏற்படுத்தும் என்றும் பத்திகை அறிக்கை விட்டனர்.தற்போது 4.4.09 செயற்குழுவில் கூட்டணி குறித்து முடிவெடுக்க தலைமை நிர்வாகக் குழுவுக்கு அதிகாரம் வழங்கியுள்ளதாக பழையபடி ஆரம்பத்திலிருந்து துவக்குகின்றனா.அப்படியானால் இவ்வளவு நாளும் கூட்டணிக்காக தெருத்தெருவாக அலைந்ததற்கு யார் அதிகாரம் வழங்கினார்கள் என்றெல்லாம் கேட்கக்கூடாது. ஏனென்றால்அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா

Thanks http://adiraixpress.blogspot.com/2009/04/blog-post_7098.html?showComment=1239225600000

சமுதாயம் என்ற பெயரில் அரசியல் வியாபாரம்

Anonymous has left a new comment on your post "ஆடுதுறை காக்காவும், சுலைமானும்..பகுதி-2 தேர்தல் ஜு...":

ஆடுதுறை காக்கா, சுலைமான் பாய் உரையாடலும் வெகு அருமை.

விமர்சனங்கள் இப்படி தான் இருக்க வேண்டும். தமுமுக தலைமை மற்றும் அதன் வால் மமக இதற்கு தலைமை இல்லை என்பதால் இன்று வரை யாருடன் கூட்டணி வைப்பது என்று தினமும் ஒரு செய்தியை போட்டு சமுதாய இளைஞர்களை ஏமாற்றி வருகிறார்கள். இவர்களiன் நாற்றம் பி.பி.சி வரை தெரிந்து விட்டது. சமுதாயம் என்ற பெயரில் அரசியல் வியாபாரம் செய்ய இருக்கிறோம் என்று இவர்களே பட்டவர்த்தமாக டி.வி., ரேடியோ பத்திரிகை என்று முழக்க செய்கிறார்கள் ஆனால் கடைசியில் இந்த தன்மான சிங்கம் திராவிட கட்சிகளiடம் அசிங்கப்பட்டு சிகப்பு லைட் கார் வலம் வந்ததையும் இழந்து நிற்கிறது. இப்போது பி.ஜே,பி தான் பாக்கி இவர்கள் கூட்டணிபேசுவதற்கு…இப்படி ஒருவர் என்னிடம் சொன்னார் அதற்கு நான் தமுமுக நிச்சயம் பி.ஜே.பிக்கு போக வாய்ப்பு இல்லை காரணம் அதில் அவர்களை எதிர்த்து போராடும் பி.ஜே பெயர் இருப்பதால் நாளை கூட்டணிசேர்ந்து தேர்தல் பிராச்சாரத்தின் போது பி.ஜெ பி.ஜெ என்று சொல்ல தமுமுகவினர்களுக்கு மன்னிக்கவும் மமக க்கு கஷ்டமாக இருக்கும். எனவே நமக்கு தெரிந்த கட்சி இப்போது பாக்கி சுப்பிரமணிசாமி அல்லது மாயவதி கட்சிக்கு வேண்டும் என்றால் மமக கூட்டணிவைத்து தேர்தலை சந்திக்கும் பிறகு தேர்தலில் டெபாசிட் இழந்தவுடன் சமுதாய கண்மணிகளே நாம் சேர்ந்த கூட்டணி தமிழகத்திற்கு புதியவர்கள் எனவே அடுத்த தேர்தலில் சரியான கூட்டணியை பெற வேண்டும் என்று அறிக்கை விடுவார்கள். அவர்களுக்கு இருக்கவே இருக்கு மமக கொள்கை பரப்பு வாரஇதழ் மக்கள் உரிமை அத்துடன் தினமும் இணையத்தில் சுடச் சுட செய்தி அறிவித்து அப்பாவி சமுதாய இளைஞர்களை திசை மாற்றுவார்கள். தமுமுக வின் இந்த திருவிளையாடல் எல்லாம் இந்த தேர்தலுடன் மூடுவிழா தான் மீண்டும் அல்லாஹுfவின் மீது சத்தியம் செய்து விட்டு யாரும் கேட்டால் ஒன்று இரண்டு சீட்டு வந்தால் நம் சமுதாயத்திற்கு எந்த வித நன்மையும் இல்லை என்று ஒப்புக்கு சொல்லி சமாளiப்புஸ் செய்வார்கள். இவர்களுக்கு இது ஒன்றும் பழக்கப்படாத விசயம் அல்ல. வார்த்தை ஜலங்கள் மூலம் சமுதாயத்தை அழிவு பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றே காலத்தை கடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு அல்லாஹு தான் நல்ல புத்தியை கொடுக்கனும்.
Abu Mohammed Dubai



Posted by Anonymous to அமீரக காயிதெ மில்லத் பேரவை at April 8, 2009 7:31 PM

ஆடுதுறை காக்காவும், சுலைமானும்..பகுதி-2 தேர்தல் ஜுரம்

QMF UAE
dateWed, Apr 8, 2009 at 8:41 PM
subjectஆடுதுறை காக்காவும், சுலைமானும்..பகுதி-2 தேர்தல் ஜுரம் (8/4/2009@7.30pm IST)-Hot News From MMK


"அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-அதிமுக அணிகளுடன் கூட்டணி இல்லை என மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு. யாருடன் கூட்டணி என்று நாளை இன்ஷா அல்லாஹ் அறிவிக்கப்படும்." Source: TMMK web site

ஆடுதுறை காக்காவும், சுலைமானும்..பகுதி-2 தேர்தல் ஜுரம்
சுலைமான் பாய்: இத்தனைநாள் முறைமுக ஆலோசனை நடத்தி திராவிட கட்சிகள் கதவை மூடிவிட்டதால், ஒருவழியாக மனிதநேய மக்கள் கட்சி திமுக-அதிமுக அணிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவிப்பு வந்துட்டு காக்கா
ஆடுதுறை காக்கா: சந்தோசம் அப்ப 40 தொகுதியிலும் நீங்கள் சொன்ன மாதிரியே மமக போட்டி போட போறாங்க என்று சொல்லங்க பாய்? ததஜ வேறு எதிர் போட்டி போட்டு மக்களுக்கு தமுமுக(மமக) சமுதாயத்திற்கு செய்த துரோகங்களை வெளiக்காட்டுவோம் என்று பொதுக்குழு தீர்மானம் வேறு போட்டு இருக்கே?
சுலைமான் பாய்: நம்மை விட ததஜ-க்கு தான் தமுமுக பற்றி நல்ல தெரியும், அவர்கள் எப்படி எல்லாம் காசு பன்னுறாங்க என்று, எல்லாம் பங்காளi சண்டை தான் பாய், நீங்க, நான் தான் தேவையில்லாமல் கஷ்டப்படுறோம். அவர்களுக்கு என்ன அரசியலில் இன்றைய எதிரி நாளைய நண்பன். இதில் இவர்கள் என்ன விதிவிலக்கா?
ஆடுதுறை காக்கா: பாவம் தமுமுக பொது செயலாளருக்கு வாரிய பதவியை கடைசி வரை விட மனசு இல்ல, திமுக கொடுத்த ஒரு சீட்டை வாங்கி இருக்கலாம் என்று தலைவருடன் "டு" போட்டுவிட்டார், அத்துடன் சிகப்பு விளக்கு காரில் பவணிவருவது போகுதே என்ற டென்சன் வேறு ஆகிவிட்டார் பாய்.
சுலைமான் பாய்@ தன்மானம் காக்க வேண்டும் இல்லவா? சிகப்பு விளக்கு தானே மீண்டும் கிடைக்கும் 40 எம்.பி கிடைத்தும், பொது செயலாளரை அமைச்சராக ஆகிவிட்டால் போகுது.
ஆடுதுறை காக்கா: முஸ்லிம் இரண்டு எம்.பி கிடைக்க வேண்டியதை இவர்கள் போட்ட வரட்டு சண்டையால் ஒன்று என்ற நிலையாகி விட்டது. திமுக பட்டியலில் ஒரு முஸ்லிம் கூட இல்லை.
சுலைமான் பாய்: தமுமுக தலைவர் தான் முன்பு கொடுத்த பேட்டியில் பெரிய கட்சி கொடுக்கும் ஒரு சில சீட்டால் சமுதாயத்திற்கு எந்த பலன் இfல்லை என்று தௌiவாக சொல்லி இருக்கிறார் அல்லவா?
ஆடுதுறை காக்கா: ஆமா பாய் அவர் வரும் முன் காக்கும் தலைவர், இப்ப நடப்பதை அப்பவே சொல்லிவிட்டார்.
சுலைமான் பாய்: காக்கா நவீன முறையில் குறி சொல்ல பேராசிரியருக்கு சான்ஸ் இருக்குக்குனு சொல்லுங்க
ஆடுதுறை காக்கா: நம்மவர்களiல் படித்த முட்டாள்கள் நிறைய இருப்பதால், இவர்களுக்கு அரசியல் செய்ய நிறைய வாய்ப்பாக போய்விட்டது.
சுலைமான் பாய்: சரி சொன்னீங்க காக்கா, நம்ம பிள்ளைகளுக்கு இவர்கள் தான் கொம்பு சீவி விட்டுவிடுகிறார்கள், கடைசியில் பாதிப்பது நம் சமுதாயம் தான்.
ஆடுதுறை காக்கா: சரியா சொன்னீங்க, இப்பவது நம் சமுதாய மக்கள் அல்லாஹுHக்கு பயந்து இவர்களை போன்றவர்களுக்கு கொடி பிடிக்காமல் இருந்தால் சரி
சுலைமான் : நாம் தான் சமுதாய இளைஞர்களுக்கு நல்ல வழியை காட்ட வேண்டும்.

-ஆடுதுறையான்

Sunday, April 5, 2009

தன்மானமா?வாரியமா?தள்ளாடும் ம ம க...!

தன்மானமா?வாரியமா?தள்ளாடும் ம ம க...!

அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தையே மறந்து அரசியல் கட்சி ஆரம்பித்த அதே நாளில் ஆரம்பித்த வீர வசனம் தொடர்ந்து ஆறு சீட்டு கோரிக்கையாக உறுவெடுத்தது.எங்களை தேடி வந்து கூட்டணி பேச வேண்டும் என்று கோரியவர்களை கூப்பிட்டோர் யாருமில்லை,ஆறு நான்கானது மூன்று இரண்டாகி கடைசியில் ஒன்றாகவே வந்து நின்றது.வந்ததை வாங்குவதிலும் வீராப்பு,ஒரு வாரத்தில் அரசியல் அதிர்வை ஏற்படுத்தும் முடிவெடுப்போம் என்றார்கள்,பின்னர் செயற்குழு கூடி பேசுவோம் என்றார்கள் பாவம் இன்று உயர் நிலைக் கூடி சொல்லும் என்று தொண்டர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.இல்லை இல்லை வாரியமா தன்மானமா என்று தள்ளாடிக்கொண்டிருக்கிறர்கள்..காளி பெருங்காய டப்பாக்காரர்கள்...!

Friday, April 3, 2009

வக்பு வாரியமா? த.மு.மு.க கிளை அலுவலகமா?

வக்பு வாரியமா? த.மு.மு.க கிளை அலுவலகமா?
( ஏவி.எம். ஜாபர்தீன் )
( கௌரவ ஆசிரியர், சமநிலைச் சமுதாயம் )

சகோதரர் ஹைதர் அலி வக்பு வாரியத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டபோது ஒரு திறமையாளர் தலைமையில் வக்பு போர்டு என்ற ஊழல் மகா சமுத்திரம் புனித மடைந்து விடும். என்று மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன்.
ஆனால், அண்மையில் பள்ளிவாசல் நிர்வாகங்களில் வக்பு வாரியத்தின் தலையீட்டால் பல பள்ளிவாசல்கள் நிர்வாகக் கமிட்டி இன்று வக்பு வாரிய அதிகாரிகள் வசம் சென்று விட்டன. அவற்றில் கூத்தாநல்லூரில் உள்ள இரு பள்ளிவாசல்களில் நடைபெற்று வரும் அராஜகத்தை இங்கு முன்வைக்கின்றேன்.
கூத்தாநல்லூரில் பெரிய பள்ளிவாசல் என்பது அந்த மஹல்லா மக்கள் தொழுகைக்கு மட்டுமல்லாது அந்த ஊரின் முக்கிய நிர்வாகங்களையும் கவனித்து வந்தது.
திருமணத்திற்கான அனுமதி திருமணப்பதிவு, மரணப்பதிவு, விவாகரத்து மற்றும் விவாகரத்துக்கான நஷ்ட ஈடு ஆகியவைகளை பெரிய பள்ளிவாசலின் நிர்வாகம் கவனித்து வந்தது. 14 பள்ளிவாசல் களைக் கொண்ட அந்த ஊருக்கு பெரிய பள்ளிவாசல்தான் தலைமை நிலையமாகச் செயல்பட்டது.
சுமார் 30 வருடங்களுக்கு முன் பெரிய பள்ளிவாசலில் வேலை செய்து வந்த சிப்பந்திகளில் ஒருவர் கையாடல் செய்தார். என்ற காரணத்தைக் காட்டி வக்பு வாரியம் அப்பள்ளிவாசல் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டது.
அதன் பிறகு ஜனாப் ஏ.ஜே. அப்துல் ரசாக் தலைவராக இருந்தபோது 1978 இல் நிர்வாகத்தை உள்ளூர் ஜமாஅத்திடம் ஒப்படைக்கும் வண்ணம் 7 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை நியமித்து 7 பேர் கொண்ட குழு 15 பேராக முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டத் திட்டங்களையும் வகுத்தனர்.
அதன் பிறகு வக்பு போர்ட் தலைவராக வந்த அப்துல் லத்தீப் நிர்வாகம் சிறப்புற நடைபெறுவதால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவை மேலும் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு இருமுறை நீட்டித்தார். இரண்டாவது மூன்றாண்டுகள் முடியும்போது அப்துல் லத்தீப் வக்பு வாரியத்தலைவர் பதவியை விட்டு விலகினார்.
அப்போது இடைக்காலத்திற்கு இசைமுரசு நாகூர் அனீபாவை தமிழக அரசு வக்பு வாரியத் தலைவராக நியமித்தது. அவரது பதவி காலத்தில் மீண்டும் 3 ஆண்டுகள் பதவி கால நீட்டிப்புக்காக நிர்வாகக் குழுத் தலைவரும் நானும் அவரைச் சந்தித்தோம். 3 ஆண்டுகளுக்குப் பதிலாக அவர் முறைப்படி வாரியத்தைக் கூட்டி 5 ஆண்டுகள் நீட்டிப்புச் செய்து தந்தார். காரணம் நிர்வாகத்தில் எந்த முறைகேடும் இல்லாதபோது அனாவசியமாக மாறுதல் செய்ய வேண்டியதில்லை. என்று முடிவெடுத்தார்.
முன்பே கூறினேன், வாரியம் ஒரு ஊழல் மகா சமுத்திரம் என்று நாகூர் அனீபா அவர்கள் பதவி விலகும் சமயத்தில் அவர் அறியாமலேயே அவரிடம் ஒரு கடிதம் கையெழுத்து வாங்கப்பட்டது. அதில் 5 ஆண்டுகள் நீட்டிப்பை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக அறிவித்திருந்தார். இதனை பெரிய பள்ளி நிர்வாகஸ்தர்கள் நீதி மன்றத்திற்கு எடுத்துச் சென்றனர். உயர் நீதிமன்றம் நிர்வாகத்திற்கு சாதகமாக தீர்ப்பளித்தது. ட்ரிப்யூனல் மூலம் ஏனைய விவகாரங்களைத் தீர்த்துக் கொள்ள உத்தரவிட்டது. வக்பு வாரியத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
நாகப்பட்டினத்தில் உள்ள ட்ரிப்யூனல் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்து ஐந்து ஆண்டுகள் வரை தற்போதைய நிர்வாகம் எவ்வித இடையூறும் இன்றி தொடரலாம். ஐந்து ஆண்டுகள் முடிந்தவுடன் பள்ளிவாசல் சட்ட விதிகளுக்குட்பட்டு உறவின் முறை ஜமாஅத்தாரிலிருந்து புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். என்று தீர்ப்பளித்தது.
மாநில ஆட்சி மாறியது. திருமதி பத்ர் சயீத் வக்பு வாரியத் தலைவராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். சட்ட வல்லுனரான இவர் காலத்தில் பிரச்சினைகள் அதிகம் இல்லை என்றாலும் ஊழல் மகா சமுத்திரத்தை மாற்றி அமைக்கப் பெரும் போராட்டம் நடத்தினார். அலுவலர்களை நம்பாமல் முக்கியமான ஆவணங்களை தன்னுடனே வீட்டிற்கே எடுத்து வந்துவிடுவார்
திருமதி பத்ர் சயீத் இருந்தபோது தானே முன்னின்று தேர்தலை நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வசம் பள்ளிவாசல் நிர்வாகத்தை ஒப்படைப்பதாக உறுதி கூறினார். ஆனால் அவர் காலத்தில் ஏதும் முடியவில்லை. பிறகு புதிய தலைவராக ஹைதர் அலி பதவி ஏற்றார்.
நாகப்பட்டினம் ட்ரிப்யூனல் அளித்த தீர்ப்பை எதிர்த்து கூத்தா நல்லூரில் உள்ள சில விஷமிகள் தூண்டுதலால் வக்பு வாரியம் ‘ஸ்டே; வாங்கியது. ;ஸ்டே; வாங்கியவுடனேயே நிர்வாக அதிகாரி ஒருவர் அடாவடியாக பள்ளிவாசலினுள் புகுந்து அங்கிருந்த சிப்பந்திகளை மிரட்டி அலுவலகச் சாவி, வங்கி செக்குகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டனர். இது முறையாக பதவி வகித்து வரும் நிர்வாகிகளை அழைத்து அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதற்காக ரசீது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்
ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. நிர்வாகிகளும் ஏன் வம்பு என்று ஒதுங்கிக்கொண்டு விட்டனர். நிர்வாகத்திலோ அல்லது நிதி கையாண்டதிலோ எவ்வித முறைகேடும் இல்லாத பட்சத்தில் எவ்வித முகாந்திரமும் இன்றி நிர்வாகக் குழுவிடமிருந்து பொறுப்பை வக்பு வாரியம் கைப்பற்றியது. இதனால் மனம் வெறுத்துப்போன ஜமாஅத் பெரியவர்கள் நிர்வாகத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள்.
நிர்வாக அதிகாரி நிரந்தரமாக அங்கு இருப்பதில்லை. பல ஊர்களுக்கும் அவரேதான் நிர்வாக அதிகாரி அவர் எப்போது வருவார் என்ற விபரம் யாருக்கும் தெரியாது. அவர் வரும்போது அவரிடம் வாங்க வேண்டிய கையெழுத்துகளை சிப்பந்திகள் வாங்கிக் கொள்வர். இதில் முக்கியமான ஒன்று ஊர் உத்தரவு என்ற திருமண அனுமதி.
இது உள்ளூரில் உள்ள உறவின் முறை ஜமாஅத்தாரால் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று. யார் முதல் திருமணம் செய்கிறார்கள் என்றும் யார் இரண்டாவது முறையாகத் திருமணம் செய்கிறார்கள் என்றும் அவர்களுக்குத்தான் தெரியும்.
உறவின் முறை ஜமாஅத் என்ற பெயரிலேயே அவர்கள் அனைவரும் தூரத்து உறவினராகவாவது இருப்பார். இதனால் யாருக்கு ஊர் உத்தரவு கொடுக்கலாம் என்று அவர்கள் தீர்மானிப்பர்.. அவர்கள் உத்தரவு தந்தால்தான் திருமணத்தின்போது திருமணப்பதிவு புத்தகமும் திருமணம் செய்து வைக்க சமயப் பெரியவரும் திருமணம் நடக்கும் இடத்திற்குச் செல்வார். .
இப்போது என்ன நடைபெறுகிறது?
ஊர் உத்தரவு கேட்டு வரும் மனுவை பள்ளிவாசல் சிப்பந்தி ஒருவர் எடுத்துக்கொண்டு வெளியூரில் இருக்கும் நிர்வாக அதிகாரியைத் தேடிப் பிடித்து கையெழுத்து வாங்கி வருகிறார். இதில் திருமணமானவரா இல்லையா? மணவிலக்கு செய்தவரா இல்லையா என்பதை யாரும் கண்டுகொள்வதில்லை.
முன்பு நிர்வாகிகள் இருந்தபோது மணவிலக்கு செய்தவர். மணமகனாக இருந்தால் அவர் தனது முந்தைய மனைவிக்குச் சேர வேண்டியவைகளைக் கொடுத்து விட்டானா என்று தீர விசாரித்து அப்படி ஏதும் செலுத்தவில்லை என்றால் ஊர் உத்தரவு மறுக்கப்படும். வக்பு நிர்வாகத்தில் இதுவெல்லாம் கண்டு கொள்ளப்படுவதில்லை.
அதேபோல் விவாகரத்து சொத்துப் பிரச்சினை என்று யாரும் போலீஸ் பக்கமோ நீதிமன்றமோ செல்லாமலே நிர்வாகஸ்தர்களிடம் சென்று பஞ்சாயத்து செய்து வந்தனர். இவை அனைத்தும் இப்போது போலீசுக்கும் நீதிமன்றத்திற்கும் சென்றுவிட்டன.
வக்பு வாரியம் ஒரு நிர்வாக அதிகாரியை நியமித்தால் அவர் வக்புக்கான வரவு செலவு பள்ளிவாசலில் ஐவேளை தொழுகை நடைபெறுகிறதா என கண்காணிப்பது சிப்பந்திகள் சம்பளம் பெறுதல் பள்ளிவாசலின் வருமானத்தை முறையாகப் பெற்று அவைகளை வங்கியில் செலுத்துவது ஆகியவற்றைப் பார்ப்பதுதான் வழக்கமே தவிர திருமணத்திற்கான அனுமதி கொடுப்பது எந்த வக்பு சட்டத்தின் கீழ் வருகிறது? இப்படி கட்டமைப்பு கொண்ட ஒரு நிர்வாகத்தை வக்பு வாரியம் வந்து கெடுத்து குட்டிச் சுவராக்கிவிட்டது.
இதற்கிடையே இளைஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வக்பு வாரிய நிர்வாகத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று போராட ஆரம்பித்தனர். இதை அறிந்ததும் வக்பு வாரியம் தேர்தலை நடத்த முடிவு செய்தது.வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை நியமித்தது. அதில் ஏழு பேர் தேர்தல் இங்குள்ள நடை முறைக்கு சரிப்பட்டு வராது. எலக்‌ஷனுக்குப் பதில் செலக்‌ஷன் தான் வைக்க வேண்டும் என்று கூறி ஒத்துழைக்க மறுத்தனர். ஊரிலுள்ள உறவின் முறை ஜமாஅத்தினர் ஒரு கூட்டம் கூடி 50 பேர் கொண்ட குழுவை உருவாக்கி இவர்கள் மூலம் உறவின் முறை ஜமாஅத்தின் பட்டியல் தயாரிப்பது என்ற முடிவு எடுத்தனர்.
உறவின் முறை ஜமாஅத் என்றால் என்ன என்று பார்ப்போம்.
கூத்தாநல்லூர் ஆரம்ப காலத்தில் சுமார் 400 வருடங்களுக்கு முன் வாழ்ந்துவந்த 11 முஸ்லிம் குடும்பங்கள் கரை வழி என்றும் உள்ளூர் வாசிகள் என்றும் இரத்த சம்பந்தமான உறவு கொண்டவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இந்தக் குடும்பத்தினர்தான் திருமணம் வமிசாவழி விருத்தி ஆகியவை மூலம் இன்று பல குடும்பங்களாக இருக்கின்றனர். எந்தக் குடும்பத்தை எடுத்தாலும் ஆதியில் இருந்த 11 குடும்பத்தைச் சேர்ந்தவராகத்தான் இருப்பர். இவர்கள் பெரும் சொத்துக்களை வாங்கி பள்ளிவாசல்களைக் கட்டி மதரஸாக்களைத் துவக்கி இவைகளைப் பராமரிப்பதற்காக சொத்துக்களை வாங்கி வக்பு செய்தனர். பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்ட சொத்துகளை நிர்வகிக்க ஏற்படுத்திக்கொண்ட அமைப்பே கூத்தாநல்லூர் உறவின் முறை ஜமாஅத்.
இந்த உறவின் முறை ஜமாஅத் தான் காலங்காலமாக பள்ளிவாசல்கள் அனைத்தையும் நிர்வகித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் மட்டுமல்லாது சென்னை சிங்கப்பூர் போன்ற நகரங்களிலும் கூத்தாநல்லூர் உறவின் முறை ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் சொத்துகளை வாங்கி வக்பு செய்துள்ளனர்.
உறவின் முறை ஜமாஅத் பட்டியல் தயாரித்துக் கொண்டிருக்கும் போதே வக்பு வாரியத் தலைவர் ஹைதர் அலி இந்த உறவின் முறை ஜமாஅத் முறையை எதிர்த்தார். ஆனால் நீதிமன்ற தீர்ப்பிலேயே தேர்தலில் பள்ளிவாசலின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உறவின் முறை ஜமாஅத்தினரிடமிருந்துதான் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டியதும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இதற்கிடையில் கூத்தாநல்லூரிலேயே அன்வாரியா தெருவில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு வக்பு வாரியம் தேர்தல் அறிவிப்புச் செய்தது. அதற்கான வாக்காளர் பட்டியலையும் அவர்கள் தமுமுகவினரைக் கொண்டு தயாரித்துள்ளனர்.
அன்வாரியா தெருவில் வசிக்கும் அந்த மஹல்லாவைச் சேர்ந்தவர்களில் பெரும்பகுதியினரைத் தவிர்த்துவிட்டு உறவின் முறை என்ற வார்த்தைக்குப் பதில் உள்ளூர் வாசிகள் என்ற வார்த்தையை வைத்து வக்பு வாரிய அதிகாரிகள் 20 பேர் மட்டும் அன்வாரியா தெரு மஹல்லாவைச் சேர்ந்தவர்களையும் மீதி 130 பேர் வெளியூரிலிருந்து குடிவந்தவர்களையும் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இந்த 130 பேரில் பெரும்பான்மையோர் தமுமுக உறுப்பினர்கள் கூத்தாநல்லூரில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்றங்கள் இயங்காததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது.
சென்ற மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. என்னவோ பெரிய கலவரப் பிரதேசம் போல் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் வந்திருந்தனர். கூடவே ஒரு டி.ஐ.ஜியும் கூட்டத்தைக் கலைக்க பயன் படுத்தும் தண்ணீர் பீய்ச்சும் வஜ்ரா வாகனம் என்று பெரிய ஆர்ப்பாட்டத்தோடு ஆரம்பித்த தேர்தலில் உறவின் முறை ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு தமுமுகவின் மூக்கு உடைபட்டது.
தமுமுக ஆதரவு பெற்ற வெளியூரைச் சேர்ந்தவர்களில் மூவர் போலீஸால் தேடப்படும் குற்றவாளிகள். தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்கள் தேர்தல் களத்திற்கு வந்தால் போலீஸில் பிடித்துக் கொடுக்க ஊரே தயாராக இருந்தது.
இப்படி ஹைதர் அலியின் கனவு பலிக்கவில்லை. தமுமுகவினரால் ஊர் பிளவுபட்டது. குடும்பங்கள் பிரிந்தன. தந்தையும் தனையனும் தனித்தனியாக நிற்கின்றனர். தமுமுகவும் தெளஹீத் ஜமாஅத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இவர்களிடமிருந்து சுன்னத் ஜமாஅத்தைக் காப்பது இப்போது மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது.
ஹைதர் அலியின் ஒரே அஜெண்டா சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல்களைக் கைப்பற்றி அதனை தமுமுக கொள்கை கொண்டவர்களிடம் ஒப்படைப்பதுதான்.
ஏற்கெனவே இந்த இதழில் தமுமுக உறுப்பினர்கள் எப்படி ஒவ்வொரு ஊரிலும் அராஜகம் செய்கின்றனர் என்பதை பட்டியலிட்டோம். இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. போல் தமுமுகவினரே ஒவ்வொரு ஊரிலும் உள்ள சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல்களைக் கைப்பற்ற நடைபெறும் சதி இது.
மீண்டும் பெரிய பள்ளிவாயில் பற்றி பார்ப்போம். உறவின் முறை ஜமாஅத் கொண்ட பட்டியல் வக்பு வாரியத்திடம் ஒப்படைத்தும் அவர்கள் தேர்தல் நடத்த அறிவிப்பு செய்யவில்லை. ஆனால் அவசர அவசரமாக அன்வாரியா தெரு பள்ளிவாசலுக்கு தேர்தல் வைப்பதன் . .மூலம் அதே பாணியைப் பின்பற்றி பெரிய பள்ளிவாசலிலும் தேர்தல் நடத்தலாம்.என்று திட்டமிடுகிறார்கள் போலும்.
அன்வாரியா தெரு பள்ளிவாசல் வாக்காளர் பட்டியலில் உறவின் முறை ஜமாஅத்தினர் அல்லாதார் 130 பேர் இருக்கிறது என்று சுட்டிக் காட்டினால் வக்பு வாரிய தலைவர் இல்லை அவர்களும் உறவின் முறை ஜமாஅத்தார்தான் என்று சத்தியம் செய்கிறார்.
உறவின் முறை ஜமாஅத்தார் அல்லாதவர்கள் ஒன்றும் ஒதுக்கப்பட வில்லை. அவர்களில் பலர் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கூத்தாநல்லூர் முன்சிப்பல் தலைவரே உறவின் முறை ஜமாஅத்தைச் சாராதவர் தானே? பள்ளிவாசல் நிர்வாகத்தை தவிர அவர்களுக்கு எந்த உரிமையும் மறுக்கப்படவில்லை. இதனை முன்பின் தெரியாத வெளியூரிலிருந்து வந்து குடியேறியவர்களிடம் எப்படி ஒப்படைப்பது?
சில மாவட்டங்களில் இறந்தவர்களைக் கூட சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லுமாறும் உள்ளூர்வாசிகள் மட்டும் தான் இங்கு அடக்கம் செய்யமுடியும் என்றும் கூறுகின்றனர். கூத்தாநல்லூர் அவ்வாறு இல்லையே.
கூத்தாநல்லூரில் எந்த தொழிற்சாலையோ அல்லது வருமானம் தரக் கூடிய பெரிய தொழில்களோ கிடையாது. நகராட்சியாக உயர்வு பெற்றதற்கு காரணம் அவ்வூர் உறவின் முறை ஜமாஅத்தினர் வெளிநாடுகளுக்குச் சென்று உழைத்து பணம் ஈட்டி கூத்தாநல்லூரில் வளமாக வாழ்ந்தனர். பள்ளிவாசல்கள் மதரஸாக்களைப் போன்றவை களுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து பராமரிக்கிறார்கள். ஆனால் வெளியூரிலிருந்து வந்து குடியேறியவர்கள் இவ்வூர்களில் வேலை செய்தோ தொழில் செய்தோ தான் தங்கள் வருமானத்தை ஈட்டிக் கொண்டார்கள்.
இறுதியாக கூத்தாநல்லூர் சம்பவம் ஒரு உதாரணம். பள்ளிவாசல் நிர்வாகத்திற்குள் தமுமுக நிர்வாகத்தினரைத் திணிக்கும் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் தகவல்கள் கிடைக்கின்றன. அண்மையில் ஜூனியர் விகடனில் மேலை நாசர் என்பவர் இதேபோல் சில விபரங்களைக் கூறி குமுறியிருந்தார்.
இக்கட்டுரை மாண்புமிகு முதலமைச்சர் பார்வைக்குச் செல்லும் என்று நம்புகிறோம்.
தமுமுக இதே பாணியைக் கையாண்டால் அதனை தி.மு.கழகம் ஆதரித்து வந்தால் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் நாட்டிலுள்ள சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்களிடமிருந்து திமுக கூட்டணிக்கு ஒரு வாக்குகூட கிடைக்காது. மாண்புமிகு முதல்வர் ஆவன செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

( சமநிலை சமுதாயம் – மார்ச் 2009 இங்கும் அங்கும் பகுதியிலிருந்து )

SAMANILAI SAMUDHAYAM
NO 5 GREEMS ROAD
CANARA BANK BUILDING
IInd Floor
P O Box No. 6262
Thousand Lights
CHENNAI 600 006
Tel : 044 – 282 90 785
Fax : 044 – 24311229
Editor2samanilai@yahoo.co.in
Editor2samudhayam@yahoo.co.in

ஆடுதுறை காகாவும், சுலைமானும்...

சுலைமான் பாய்: த‌மிழக அரசியலின் போக்கை இன்று(4/4/2009) மாற்றியமைக்கும் என ம.ம.க.வின் உயர்நிலை குழு ஒரு வாரம இரவு பகல் சமுதாயத்திற்காக கண்விழித்து பேசி பேசி ஓரு வ்ழியா சமுதாய தன்மானம் காக்க இன்னைக்கு அறிவிப்பு வ்ந்துட்டு காகா !

ஆடுதுறை காகா: அப்படியா பாய்! தமிழக அரசியல் தலைவ்ர்களூக்கு ஆபத்துன்னு சொல்லுங்க!

சுலைமான் பாய்:ஆமா காகா ! 6+1 என்ற வீராப்பு அறிக்கை போய் 2+1 கதையாகி, சொந்தங்களே !
(இடைமறித்து ஆடுதுறை காகா)

ஆடுதுறை காகா:என்ன அது சொந்தங்களேவா?

சுலைமான் பாய்: கொஞ்சம் இருங்க காகா! விசயத்து வ‌ருரத்துகுள்ள! அதுவா நம்ம ஊர் திராவிட கட்சி தொண்டர்களை "உடன்பிறப்புகளே!" "ரத்தத்தின் ரத்தமே!" சொல்லுரமாரி நம்ம ம.ம.க தொண்டர்களை சொந்தங்களே ! என்று புது டாயலாக் சொல்லி பாசத்தை கொட்டுராங்க காகா! சரி விசயத்துக்கு வ்ரேன்.

எங்கே விட்டேன் ம்மஆ..2+1 கதையாகி 28.03.09 அன்று காலை தமுமுக தலைவருடன் ஆற்காடு வீராசாமியும், மாலையில் ஸ்டாலினும் தொலைபேசியில் பேசினர். எனினும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. திங்கட்கிழமை (எந்த திங்கட்கிழமை ???? )அடுத்த சுற்று பேச்சு வார்த்தை நடைபெறும். அது வரை பொறுமை காத்திருக்குமாறு கட்சி சொந்தங்களை மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகள் கேட்டுக் கொள்கிறார்கள் என்ப‌து அறிக்கை மேல் அறிக்கை வந்து வெளியாகி கொண்டே இருந்த‌து.

ஆடுதுறை காகா: இன்று (28.03.09) தான் தி.மு.க‌ கூட்டாணி ப‌ங்கீடு முடிந்து அறிவிப்பு வ‌ந்துடே பாய்?

சுலைமான் பாய்:தி.மு.க‌ க‌டைசி வ்ரை ஒன்றும் சொல்ல‌வில்லை என்ற‌ க‌டுப்பில் அ.தி.மு.க‌ / காங்கிர‌சஸ் என்று ம.ம.க தூது புறாக்க‌ள் அனுப்ப தொட‌ங்கிடுச்சி!
ஆடுதுறை காகா:அப்புற‌ம்மென்ன‌ ஆச்சி!

சுலைமான் பாய்:சுலைமான் பாய்:தொடர்ந்து ம.ம.க.வின் உயர்நிலை குழு ஒரு வாரம இரவு பகல் யோசித்து போர் அடிக்க‌வே ம.ம.க.வின் உயர்நிலை குழு த‌மிழக அரசியலை விட்டுவிட்டு கேரளா ப‌க்கம் போயிட்டாங்க‌! அத‌ற்கு பிற‌கு

இப்ப‌த்தான் 40+5 என்ற‌ க‌ண‌க்கில் அறிவிப்பு வ‌ர‌ போகுது இன்னைக்கு..

ஆடுதுறை காகா:அப்ப‌ 40 தொகுதியை ம‌.ம‌.க‌ கைப்ப‌ற்றி த‌மிழக அரசியல் த‌லைவர்களை எல்லாம் நாடு கட‌த்த‌ வேண்டும் என்று நாடாளும‌ன்ற‌த்தில் தீர்மான‌ம் கொண்டு வ‌ந்துடுவாங்க‌!
சுலைமான் பாய்: காகா இதுதான் ஆடுதுறை குஷ்ம்பா????

‍‍-ஆடுதுறையான்!

qmfuae@gmail.com

Wednesday, April 1, 2009

சன் டிவியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் தமுமுக தலைவர்(?) ஜவாஹிருல்லாஹு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் முஸ்லிம் லீக் பேரியக்கத்தை முட்டாள்தனமாக ஒப்பிட்டு.......

சன் டிவியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் தமுமுக தலைவர்(?) ஜவாஹிருல்லாஹு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் முஸ்லிம் லீக் பேரியக்கத்தை முட்டாள்தனமாக ஒப்பிட்டு புலம்பியுள்ளார்…


முஸ்லிம் லீக் எப்படி அனைத்து முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் படுத்தவில்லையோ அதைபோல் ஆர்எஸ்எஸ் அனைத்து இந்துகளையும் பிரதிநிதித்துவம் கூடிய அமைப்பு அல்ல.

இவர் என்ன சொல்ல வருகிறார். முஸ்லிம் லீக் என்ன ஆர்எஸ்எஸ் போல் மக்களை அழிக்கும் அல்லது உயிரை எடுக்கும் கொள்கையும் கோட்பாடுமா கொண்டுள்ளது. முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறேன் அதற்கான இயக்கத்திற்கு தலைவர் இவர்? அரசியலில் சமுதாயத்திற்கு உயர்ந்த பங்கு வேண்டும் என்று ஒவ்வொரு திராவிட கட்சிகளiன் அலுவலகத்திற்கு அலைந்து கொண்டு கடைசி நேரத்தில் நம்மை சாதுரியமாக கழற்றி விட்டு விட்டர்களே என்ற ஆதங்கத்தில் என்ன பேசுகிறோம் என்று புத்திசுவாதினம் அடைந்தது போல் புலம்புகிறார். முஸ்லிம் லீக் என்ற ஓர் இயக்கம் தான் அனைத்து தரப்பு மக்களiன் ஒற்றுமைக்கும், ஒருமைபாட்டிற்கும் ஒரு பாலமாக திகழ்கிறது. ஏதோ கோவை நிவாரண நிதி உலகம் முழுவதும் சேகரித்து குளiர் காய்ந்தவர்கள், பங்கீடுவதில் சண்டை பிடித்து தமிழகம், இந்தியா என்று தொடர்ச்சியாக சமுதாய பெயரில் இயக்கம் தொடங்கி சுகங்களை அனுபவத்து வருகிறார்கள். இப்போது மனிதநேயம் இல்லை என்று யாரோ தூக்கத்தில் சொன்னதை உடனே அதற்கு ஒரு கட்சி ஆரம்பித்து எங்களுக்கு 6 தொகுதி வேண்டும் என்று ஒப்பாரி வைத்து விட்டு, நாங்கள் தன்மான (அ)சிங்கம் ஒரு தொகுதி என்ற பேச்சுக்கே இடமில்லை. கடைசியாக 2 தொகுதி என்று நிமிடத்திற்கு நிமிடம் வார்த்தை மாற்றி கொண்டு அலைபவர்களா? நம் சமுதாயத்தின் தன்மானத்தை காப்பற்ற போகிறார்கள். பல ஆண்டு காலம் முஸ்லிம் மக்களுக்கு பல தியாகங்களை செய்த முஸ்லிம் லீக்கை ஒரு மதவெறிப்பிடித்த அமைப்போடு ஒப்பிட்டு பேச எப்படி இவருக்கு சாத்தியம் ஆகிறது என்றால் நிவாரண நிதியில் அல்லாஹுவை மறந்து சண்டை போட்டு கொண்டு தனிதனியாக சமுதாயத்தின் பெயரில் கட்சி,கழக, இயக்கம் ஆரம்பித்த கூட்டம் தானே இவர்கள். இவர்களiன் சுயநலத்திற்காக என்ன வேண்டும் என்றாலும் பேசுவார்கள். இவர்களுக்கு வேண்டும் பதவியும், பந்தாவும் தான் சமுதாய பற்றி அக்கறை என்பது இல்லை.

இவர்களுக்கு சமுதாயம் தான் பதில் சொல்ல வேண்டும். மறுமையில் அல்லாஹுவிடம் அவர்களுக்கு சரியான பாடம் அல்லாஹு கற்பிப்பான்.

-தோப்புத்துறை நூர்தீன்

மூன்றாவது அணி என்னும் பிணி

மூன்றாவது அணி என்னும் பிணி

காங்கிரஸ் கட்சியை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதையே மட்டும் வெறும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கம்யூனிஸ்டு நண்பர்கள், இன்னும் பிரதமர் ஆசையை கெட்டியாகப் பிடித்து வைத்துள்ள தேவகவுடா அவர்கள் துணையுடன், சில பல மாநில கட்சிகளைப் பிடித்து வைத்துக் கொண்டு 2009 பாராளுமன்ற தேர்தல் களம் கண்டுள்ளனர்.

மூன்றாம் அணி என்று அதற்கு நாமம் சூட்டப்பட்டுள்ளது.

அடைய வேண்டிய அரசியல் இலக்கிலே அவரவர்கள் தெளிவாக இருக்கின்றார்கள்.

அதற்கான பாதையை வலுவாக வகுத்துக் கொண்டு, தேர்தல் களத்திலே பணியாற்றவும், வெற்றிக்கனியைப் பறிக்கப் போராடவும், முனைந்து செயல்படத் துவங்கி விட்டார்கள்.

இருபது கோடி இந்திய இஸ்லாமிய சமுதாயத்திற்கு இத்தேர்தல் ஜீவமரணப் போராட்டமே என்பதில் சந்தேகமில்லை.

சிறுபான்மைச் சமுதாயத்திற்கு தனி அமைச்சகம், ராஜேந்தர் சச்சார் அறிக்கை, சமூக நல்லிணக்கம் பேணியது போன்ற நல்ல பல அம்சங்களோடு காங்கிரஸ் தலைமையிலான அணி ஒரு புறம்.

இந்திய நாட்டின் சமூக, கலாச்சார பன்முகத் தன்மைக்கு வேட்டு வைத்து, இந்தியத் திருநாட்டின் இறையாண்மைக்கு கேடுவிளைவிக்கும் மதவெறி அரசியலை வளர்த்து, அதில் மாயும் மக்களின் உயிர்களிலும், உடைமைகளிலும் தங்கள் பதவி சுகம் காணத் துடிக்கும் சங் பரிவாரங்களின் அரசியல் பிரிவான பிஜேபி தலைமையிலான அணி மற்றொரு புறம்.

இவ்விரு அணிகளுக்கு நடுவிலே தான் கம்யூனிஸ்டு நண்பர்கள், முடிந்த மட்டும் குட்டையை குழப்பி , அரசியல் ஆதாயம் பெருவதற்கு, தேர்தல் களத்திலே மூன்றாம் அணி கண்டுள்ளனர்.

தெளிவான கொள்கை இல்லாமலும், தனிப்பட்ட அரசியல் விரோதங்களுக்கு கணக்கு தீர்த்துக் கொள்வதற்காகவும், காங்கிரஸ் கட்சியை அரசியல் ரீதியாக பலகீனப்படுத்தவும் இவ்வாறு கம்யூனிஸ்டுகள் அரசியல் அரங்கிலே தனிக் களம் காண்பது ஒன்றும் புதிதல்ல.

1967ல் பீகாரிலே கர்பூரி தாகூர் அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதற்காக, எப்போது ஜனசங்கத்துடன் (அன்றைய பிஜேபி) கம்யூனிஸ்டுகள் தோளோடு தோள் நின்றார்களோ, அப்போது ஆரம்பித்த அரசியல் அநாகரீகம் இன்று புதுப் பரிணாமம் கண்டுள்ளது.

அத்தகைய அணி மாற்றங்களால் கம்யூனிஸ்டுகள் வேண்டுமானால் அரசியல் ரீதியாக பலனடைந்திருக்கலாம்.

அத்தகைய அரசியல் மாற்றங்கள் சிறுபான்மைச் சமுதாயத்திற்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பெரும் வினையாகவே முடிந்துள்ளதை நம் சமுதாய மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியத் திரு நாட்டிற்கே கேடு விளைவிக்கும் அத்தகைய அணிகள் உருவாகும் போதெல்லாம், சமுதாயச் தாய்ச் சபையாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர்கள் அதைச் சுட்டிக் காட்டி, அத்தகையவர்களைத் தேர்தலிலே தோற்கடித்து விரட்ட வேண்டியதன் அவசியத்தை நாடெங்கும் பிரச்சாரம் செய்து வந்துள்ளனர்.

கிடைக்கப்பெறும் சீட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சமுதாய நலனை மட்டுமே சிந்தனையில் கொண்டு, அரசியல் ராஜ தந்திரத்துடன் முஸ்லிம் லீக் தெளிவான அரசியல் பாதையை சமுதாயத்திற்கு அப்போதெல்லாம் வகுத்தளித்து வந்துள்ளதை வரலாறு குறித்து வைத்துள்ளது.

1991ல் காங்கிரஸிலிருந்து வெளியேறிய விபி சிங் அவர்கள், இதே கம்யூனிஸ்டு நண்பர்கள் துணையோடு மூன்றாவது அணி கண்ட போது, சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் அவர்கள் சொன்னார்கள்.

இது அணி அல்ல. நாட்டைப் பிடித்த பிணி என்றார்கள்.

முஸ்லிம் லீக் தலைவர்கள் மேல் கொண்ட அரசியல் மாச்சரியங்கள் காரணமாக, அப்போது சிராஜுல் மில்லத் அவர்களையும், முஸ்லிம் லீக்கையும் இதனால் விமர்சித்தவர்கள் ஏராளம்.

சமுதாய நலனில் அக்கரையில்லாமலும், அரசியல் தொலை நோக்கு இல்லாமலும் வந்த தரந் தாழ்ந்த விமர்சனங்கள் அவை.

சமுதாய சகோதரர்களே! சிந்தித்துப் பாருங்கள்!! என்னவானது?

தேர்தல் முடிந்தது.

பிஜேபியின் ஆசீர்வாதத்தோடும், கம்யூனிஸ்டுகளின் அரவணைப்போடும் விபி சிங் அரியணையில் அமர்ந்தார். அவரது நீண்ட நாளைய பிரதமர் கனவு நிறைவேறியது.

காங்கிரஸ் தேர்தலில் தோற்றது. கம்யூனிஸ்டுகளின் அரசியல் அபிலாஷை அரங்கேறியது.

2 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே அது வரை பெற்று வந்த பிஜேபி, 89 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நாடாளுமன்றத்திலே நுழைந்தது.

சமுதாயத்திற்குக் கிடைத்தது என்ன?

அன்று நாட்டைப் பிடித்த பிணி தான், இன்று சனியாக சதிராடுகின்றது!

எப்போதெல்லாம் மூன்றாவது அணி தலை எடுக்கின்றதோ, அப்போதெல்லாம் பிஜேபி அரசியல் லாபம் அடைகின்றது.

அன்று அவர்கள் பெற்ற அரசியல் ரீதியான பலம் பாபரி மஸ்ஜித் இடிப்பிலே துவங்கி, குஜராத் இனப் படுகொலை வரை நீண்டு, இப்போது கர்நாடகத்திலே மையம் கொண்டுள்ளது.

அங்கிருந்து தமிழகத்திலும் தலைதூக்குவதற்கான அரசியல் சதி இப்போது பின்னப்படுகின்றது.

மதவெறியின் உச்சத்திலே கோலோச்சிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடிக்குப் பூச்செண்டு கொடுப்பதற்காக சிறப்பு விமானம் ஏறிப் பறந்தவரின் தலைமையிலே, வறட்டுச் சித்தாந்தம் பேசுவோரும், சந்தர்ப்ப வாத அரசியல் செய்து தங்கள் வாழ்வை செழுமைப்படுத்திக் கொள்வோரும், தங்கள் தங்கள் சுயலாபத்திற்காக கூட்டணிப் பொங்கல் செய்து, தமிழக மக்களுக்குப் பரிமாற வருகின்றனர்.

தேர்தல் திருவிழா முடிந்தவுடன் இவர்கள் இணைந்தே இருப்பார்களா என்பது இப்போதே விவாதப் பொருளாகி விட்டது.

எதிர் முகாமுக்குத் தாவுவதும் இயல்பாகி விட்டது.

நம் கவலையெல்லாம் சமுதாய நலனும், சமூகங்களுக்கிடையேயான நல்லுறவும் தான்!

தேர்தல்கள் வரும்! போகும்!!

இன்று நாம் ஓரிடத்திலே வெற்றி பெற்றால், இன்ஷா அல்லாஹ், நாளைய நம் சந்ததியினர் செங்கோட்டையிலே கொடியேற்றுவர்.

2009 பாராளுமன்றத் தேர்தலிலே நமது இலக்கு தெளிவானது.

களத்திலே நாம் காணும் எதிரி அனைவருக்கும் பொதுவே.

மீசையை முறுக்குவதற்கும், தொடை தட்டி சுய பலம் பறை சாற்றுவதற்கும், தனித்து நின்று ஓட்டுகளைப் பிரித்து சட்டமன்றத் தேர்தல் சமயம் கூட்டணி பேரத்தில் கூடுதல் பலம் காட்டுவதற்கும் இது வல்ல நேரம்.

அதற்கெல்லாம் களங்கள் பல காத்திருக்கின்றன.

அகழ் யுத்தப் பாறைகள் ஒவ்வொன்றும் பிளக்கப்பட்ட போது, அகண்ட சாம்ராஜ்யங்களைக் கொண்டு அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸஹாபாப் பெருமக்களுக்கு நன்மாராயம் சொன்னார்கள்.

அந்த நன்மாராயங்கள் அப்பெருமக்களின் வழி வந்த நமக்கும் சேர்த்துத் தான்!

அவர்கள் போர்க் களம் கண்டார்கள்! நாம் தேர்தல் களத்திலே நிற்கின்றோம்!!

சில நூறு பேரோடு போனார்கள். பல ஆயிரம் பேரை வென்றார்கள்.

எண்ணிக்கை கொண்டு நாம் பலகீனமானவர்களல்ல.அது மட்டுமே நமது லட்சியமுமல்ல.

ஆப்ரஹாவை அழித்த அபாபீல் பறவைகள் அதைத் தான் நமக்கு சொல்லித் தருகின்றன.

கடந்த காலங்களில் பெற்ற பாடங்களின் அடிப்படையிலும், நிகழ்கால அரசியலின் நிதர்சன அளவுகோளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெளிவான அரசியல் பாதை அமைத்திருக்கின்றது.

மத சார்பற்ற கட்சிகளின் சுய கவுரவப் போராட்டம் , என்றுமே பாசிச சக்திகளுக்குக் கொண்டாட்டமாகும் என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து தேர்தல் பணியாற்ற வேண்டிய இன்றியமையாமை இன்றைய கால கட்டத்தில் ஏற்பட்டுள்ளது.

ஆகவே தான் ,திமுக , காங்கிரஸ் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , விடுதலை சிறுத்தைகள் இடம் பெற்றுள்ள அணி இறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணி நாற்பது தொகுதிகளிலும் வெற்றிக் கனி ஈட்ட பாடுபடுவோம்! மத பயங்கரவாத்தை வேரறுப்போம்!!தாய்த் திரு நாட்டின் இறையாண்மையைக் காப்போம்!!!

ஹமீதுர் ரஹ்மான், இணைச் செயலாளர், காயிதே மில்லத் பேரவை, யு.ஏ.இ.