Wednesday, September 30, 2009

தாய்த்திரு இந்திய நாட்டின் சுதந்திர தின மணி விழாவை ..............

தாய்த்திரு இந்திய நாட்டின் சுதந்திர தின மணி விழாவை நாடெங்கிலுமுள்ள
நூறு கோடி இந்திய மக்கள் உவகை பொங்க கோலாகலமாக கொண்டாடி வரும்
மகிழ்ச்சியான வேளையில்-

பா.ஜ.க. மூத்தத் தலைவர் – முன்னாள் வெளியுறவு அமைச்சர்
திருமிகு.ஜஸ்வந்த்சிங் அவர்களால் எழுதப்பட்ட “ஜின்னா-இந்தியப் பிரிவினை-
சுதந்திரம்” என்ற நூலை 17-08-2009 ந்தேதி டெல்லியில் வெளியிடப்பட்டது.
நூல் வெளியீட்டு விழா நிறைவுகூட பெற்றிருக்காது, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க
பாசிஸ்டு கூடாரங்களில் இந்நூல் பூகம்பத்தை ஏற்படுத்திவிட்டது.

நாற்பது ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க வுக்கு தொண்டாற்றியதால் மூத்தத்
தலைவராக மதிக்கப் பட்டு வந்த ஜஸ்வந்த்சிங் நொடிப்பொழுதில் கட்சிக்கு
துரோகம் செய்தார்- கட்டுப்பாட்டை மீறினார்- கட்சியின் லட்சியத்தை
சிதைத்துவிட்டார் என்று குற்றம் சுமத்துப்பட்டு, அவரை கட்சியிலிருந்து
நீக்கியதற்கு, பா.ஜ.க கூறியிருக்கும் காரணம், “முகம்மது அலி ஜின்னாவை
அளவுக்கு மீறி பாராட்டி தனது நூலில் ஜஸ்வந்த்சிங் எழுதிவிட்டார்
என்பதுதான்.

முகம்மது அலி ஜின்னாவை தான் பெரிதும் மதிக்கிறேன் இந்திய
சுத்ந்திரத்திற்காக போராடிஅ விடுதலை வீரர், இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு
அரும்பாடுபட்டவர், முகம்மது அலி ஜின்னா போற்றுதலுக்குறிய இந்தியக்
குடிமகன் என்று காந்திஜியால் புகழப்பட்டவர். இந்திய முஸ்லீம்களின்
அரசியல் சாசன உரிமைகளை மீட்டுத்தரும் போராட்டத்தில் பெரும் பங்கு
வகித்தவர். இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு பாடுபட்ட மதச்சார்பற்ற தலைவர்
முகம்மது அலி ஜின்னா, பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா மட்டும்
காரணமில்லை, நேருஜியும்- சர்தார் வல்லபாய் படேலும்தான் முதல்
முக்கியமானவர்கள். ஆனால் ஜின்னாவை மோசமானவர்- பிரிவினைவாதியாக
இந்தியாவில் சித்தரித்து காட்டிவிட்டார்கள். ஜஸ்வந்த்சிங் தனது நூலில்
ஜின்னா குறித்து எழுதியிருக்கும் கருத்துக்கள், அளவுக்கு மீறிய பாராட்டு
என்றோ, புகழாறம் என்றோ யாரும் கூறிடமாட்டார்.

பா.ஜ.க நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி 2005ம் ஆண்டு
பாகிஸ்தானுக்கு- தான் பிறந்த சொந்த ஊரை பார்ப்பதற்காக ஆர்வமாக சிந்து
மாநிலத்திற்கு சென்றபோது முதலில் கராச்சியில் இருக்கும் “காயிதே ஆஜம்”
முகம்மதலி ஜின்னா சமாதிக்கு சென்று நமஸ்காரம் செய்து, மலர்வளையம் சூட்டி
மரியாதை செய்த பிறகுதான் சிந்து மாநில பயணம் மேற்கொண்டார். உலகறிய
ஜின்னாவை பாராட்டிப் புகழ்ந்து பேசினார்.

“முகம்மதலி ஜின்னா ஒரு மதச்சார்பற்ற தலைவர், தான் கொண்ட லட்சியத்தில்
வெற்றிவாகை சூடி, தனக்கென புகழ்வ வரலாற்றை உருவாக்கிக்கொண்ட மாபெரும்
தலைவராவார்” என எல்.கே.அத்வானி பாராட்டியதை விட ஜஸ்வந்த்சிங் ஒன்றும்
அதிகம் பாராட்டவில்லை. மாறாக ஜின்னா அரசியலில் எடுத்த தவறான முடிவுகளை
கண்டித்தும் எழுதியிருப்பது நூலை முழுமையாக படிக்கும்போது புரிந்துகொள்ள
முடியும்.

கடந்த அறுபதாண்டுகளில் பாகிஸ்தானின் பிரிவினைக் குறித்து
வரலாற்றாசிரியர்கள், அரசியல் ஆய்வாளர்கள், நூற்றுக்கணக்கில் நூல்கள்
எழுதியிருக்கிறார்கள்.பாகிஸ்தான் பிரிவினைக்கு நேருஜியும், வல்லபாய்
படேலும், காங்கிரஸ் கட்சியின் பிடிவாத அணுகுமுறையும்தான் ஜின்னாவை
பாகிஸ்தான் பிரிவினையின் பக்கம் தள்ளிவிட்டது என்று சாட்சி
பகர்ந்துள்ளார்கள்.

பாகிஸ்தான் பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சி ஒப்புதல் தரக் கூடாது என்று
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த மவுலானா அபுல்கலாம்
ஆசாத் அரும்பாடுபட்டார். காந்திஜி, படேல், நேருஜி பாகிஸ்தான் பிரித்துதர
கடைசிவரை பிடிவாதமாகவே இருந்தார்கள். இதை தெள்ளத்தெளிவாக “இந்தியா
சுதந்திரம் அடைகிறது” என்ற தனது நூலில் மவுலானா அபுல்கலாம் ஆசாத்
குறிப்பிடும் போது, காந்திஜி நாட்டின் பிரிவினைக்கு கடும் எதிர்ப்பு
காட்டி வந்தார். என் பிணத்தின் மீதுதான் பாகிஸ்தான் பிரிக்க வேண்டும்
என்று கூறிவந்த காந்திஜியை வல்லபாய் படேல் எப்படித்தான் நாடு பிரிக்க
ஒப்புக்கொள்ளச்செய்தார். இது எனக்கு வியப்பாகவும், வேதனையாகவும்
இருந்தது. பாகிஸ்தான் பிரிவினைக்கு கடும் எதிர்ப்பு காட்டிவந்த
நேருஜியும் பிரிவினைக்கு ஒப்புக்கொண்டார். நேருஜியை ஒப்புக்கொள்ளச்
செய்ததில் பிரிட்டிஷ் ராணி எலிசபெத்திற்க்கு பெரும்பங்கு இருந்ததாக
விரிவாக குறிப்பிடுகிறார்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க வுக்கு ஜஸ்வந்த்சிங் ஜின்னாவை பாராட்டியது குற்றமாக
தெரிந்துவிட்டது. பாகிஸ்தான் சென்று வானளாவ ஜின்னாவை புகழ்ந்துவிட்டு
வந்த அத்வானி ஏன்? குற்றமாக கருதவில்லை, ஜஸ்வந்த்சிங் மீது மட்டும் ஏன்?
இந்த பாய்ச்சல், கட்சியிலிருந்து நீக்கம், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்,
நூலுக்கு தடை கோரிக்கை ஏன்?. இத்தனை கடும் எதிர்ப்புக்கு ஜஸ்வந்த்சிங்
செய்த தவறு என்ன? முஸ்லீம்களுக்கு ஆதரவாக தனது நூலில்
எழுதியிருப்பதுதான். ஜஸ்வந்த்சிங் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க வுக்கு செய்த
பெருங்குற்றம். அதனால்தான் அவர் துரோகியாக மாறிவிட்டார்.

நாடு சுதந்திரம் பெற்ற அகஸ்டு 15 ந்தேதியிலிருந்து இன்று நரேந்திரமோடி
முதல்வராக இருக்கும் பா.ஜ.க ஆட்சி செய்யும் குஜராத் வரை முஸ்லீம்களுக்கு
எதிராக தூண்டிவிடப்பட்ட தொடர் கலவரங்கள், முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட
கொடுமைகள் குறித்து பொத்தாம் பொதுவாக விமர்சித்து முஸ்லீம்களுக்கு ஆதரவு
காட்டுவதுபோல் ஜஸ்வந்த்சிங் தனது நூலில் எழுதியிருந்தால் ஆர்.எஸ்.எஸ்-
பா.ஜ.க வின் எதிர்தாக்குதல் அவர்மீது இந்த அளவுக்கு இருந்திருக்காது.

பெரும்பான்மை சகோதர இந்து மக்களிடையே முஸ்லீம்களுக்கெதிராக
வெறுப்புணர்ச்சியைத் தூண்ட ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பயன்படுத்தும் விஷ ஆயுதம்
பாகிஸ்தான் பிரிவினையைக் கருவாகவும், ஜின்னாவை மையமாகவும் வைத்து நூல்
எழுதியதுதான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க வுக்கு கடுங்கோபமும், ஆவேசமும்
ஏற்பட்டுவிட்டது. ஜஸ்வந்த்சிங் துரோகியாக மாறிவிட்டார். இராவணனாக
காட்சித்தருகிறார்.

பாகிஸ்தான் பிரிவினையை முகம்மதலி ஜின்னா மீது திணித்தவர்கள் யார்?
அதற்கு காரணமாக இருந்தவர்கள் யார்? என்று புதைக்கப்பட்டுவிட்ட உண்மைகளை
தோண்டி எடுத்து வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டாலொழிய, இந்திய
முஸ்லீம்களின் கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வுக்கான வழி பிறக்காது என்று
ஜஸ்வந்த்சிங் எண்ணியிருக்கக்கூடும். அதனால்தான் பிரிவினைக்கு யார்..
யார்? காரணம் என்பதை வரலாற்றுச் சான்றுகளோடு உண்மைகளை இந்திய மக்கள் முன்
தனது நூலின் மூலமாக எடுத்து வைத்துள்ளார்.

நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து குஜராத் கலவரம் வரை கடந்த
அறுபதாண்டுகளில் லட்சக்கணக்கில் முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டு
வந்ததும், கோடானுகோடி உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டு, தீக்கிரையானதும்,
பாபர் மசூதி உள்பட நூற்றுக்கணக்கில் மசூதிகள் தரைமட்டமாக்கப்பட்டதும்,
இரண்டாம்தர குடிமக்களாக கடைகோடிக்குத் தள்ளப்பட்டதும், பாகிஸ்தான்
பிரிவினைக்கு காரணமானவர்கள் என்றும் வீண்பழி சுமத்தி ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க
நடத்திவரும் நாசகார பாசிஸ்டுகளின் தூண்டுதல்தான் முக்கியக் காரணம்
என்பதை-

பாகிஸ்தான் பிரிவினைக்காக இந்திய முஸ்லீம்கள் தங்களது வாழ்க்கையை
இன்றுவரை விலையாக கொடுத்து வருகிறார்கள். என்று கோடிட்டு காட்டி, இந்திய
முஸ்லீம்களை மாற்றுலக மனிதர்களாகக் கருதி நடத்தி வருகிறார்கள்.
என்பதையும் முஸ்லீம்களின் கல்வி, பொருளாதார நிலை படுபாதாளத்தில்
தள்ளப்பட்டு, இரண்டாம்தர மூன்றாம்தர பிரஜைகளாக்கப்பட்ட அவலத்தை
எடுத்துக்காட்டியிருக்கிறார் ஜஸ்வந்த்சிங்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்திய முஸ்லீம்கள் சிறுபான்மையினராக
இருந்தும் – பெரும்பான்மை சகோதர சமுதாயத்திற்கு சரிநிகராக அளப்பரிய
தியாகங்கள் செய்த வரலற்றை இருட்டடிப்பு செய்து சகோதர சமுதாய மக்களின்
உள்ளங்களில் வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தும்- பாகிஸ்தான் ஏஜெண்டுகள் என்று
பழித்துக்கூறும் கோஷங்களை எழுப்பி – முஸ்லீம்களை நம்பிக்கையற்றவர்களாக –
தீவிரவாதிகளாக சித்தரித்து காட்டும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க வின் முஸ்லீம்
எதிர்ப்பு பிரச்சாரம் இன்றுவரை தொய்வில்லாமல் தொடர்ந்தே வருகிறது. இதற்கு
பக்கபலமாக விலைபோன ஒருசில செய்தி ஊடகங்களும் இயங்கி வருகின்றன.

அறுபதாண்டுகளாக முஸ்லீம்களுக்கு எதிராக தொடரும் பழிச்சொற்கள்,
அபாண்டங்கள்-அநியாயங்கள்-சுமத்தப்பட்டு வரும் துரோக குற்றச்சாட்டுகள்
ஏற்படுத்திவிட்ட வெதனைகளால்-வெந்தபுண்ணாக மாறிவிட்ட முஸ்லீம்களின் இதயக்
காயங்களை படம்பிடித்துக்காட்டி “இந்திய முஸ்லீம்களின் கண்களை
உற்றுப்பாருங்கள், இந்திய துரோகிகள் என்று சுமத்தப்பட்டு வரும் வீண்
பழியின் வேதனைகளை நீங்கள் காண்பீர்கள்” என்று கோடானு கோடி இந்திய மக்களை
சிந்திக்க வைத்து- நெஞ்சங்களை நெகிழச்செய்து, இந்தி- இந்துத்துவா ஆரிய இன
பாசிஸ்டுகளை தோலுரித்துக்காட்டி இருக்கிறார். தனது நூலில் ஜஸ்வந்த்சிங்
அவர்கள், அரசியலில் விழிப்புணர்வின்றி மாநிலத்திற்கு மாநிலம்
ஒற்றுமையற்று சிதறிக் கிடக்கும் முஸ்லீம் சமுதாயத்தைக் குட்டுவதுபோல்
சிறப்புமிக்க இந்திய முஸ்லீம் சமுதாயம் பாகிஸ்தான் பிரிவினையால் இரண்டாக
பிளவுபட்டது. அதன்பிறகு பங்களாதேஷ் பிரிவினையால் மூன்றாக பிளவுபட்டு
சிதறியது.பாகிஸ்தான் பிரிவினை மட்டும் ஏற்படாமல் இருந்திருந்தால் இந்திய
முஸ்லீம்கள் உள்பட அனைத்து இந்திய மக்களும், அனைத்து வளங்களும் பெற்று
இருப்பார்கள். இன்று உலகத்திலேயே இந்திய நாடு வலிமைபெற்ற நாடாக
உயர்ந்திருக்கும் என்று வேதனையை வெளிப்படுத்தி, இந்து-முஸ்லீம்
ஒற்றுமையையும்- வளமான வாழ்வுக்கும்-வல்லரசு நாடு என்ற புகழுக்கும்
முட்டுக்கட்டை ஏற்படுத்திவிட்டதை சுட்டிக்காட்டி ஒற்றுமையின் அவசியத்தை
இந்திய முஸ்லீம்களுக்கு உணர்த்தி சிந்திக்க வைத்துள்ளார் ஜஸ்வந்த்சிங்
அவர்கள்.

“வேற்றுமையில் ஒற்றுமை காண்பது” “விட்டு கொடுத்து வாழ்வது” என்ற
உயரிய இந்திய பண்பாட்டு மரபுகளை கடைப்பிடிப்பதன் வாயிலாக “இந்திய மக்கள்
தேசிய சக்தியாக” உயர்ந்து நிற்க முடியும் என்பதை-

“உண்மையில் நம்முடைய கடந்த காலம், கடந்த காலத்திற்குள் போகவில்லை.
நம்முடைய கடந்த காலம் நமக்குமுன்னே தொடர்ந்து காட்சிதர வந்துபோகிறது.
நம்முடைய கடந்த காலம் நம்முன் தவிப்போடு காட்சித்தருகிறது. இதன் மூலம்
நாம் அனைவரும் படிப்பினை பெற வேண்டும். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்,
இந்துக்கள், முஸ்லீம்கள், காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க – நாம் அனைவரும்
உலகத்திலேயே பழமையான, உயர்ந்த பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள்.” என்று
தொடக்க உரை எழுதி, பன்முக, இன மொழி, மதக் கலாச்சாரம் பேணும் இந்திய
சமூகங்களிடையே ஒற்றுமைக்கான சிந்தனைப் புரட்சியை தொடங்கி
வைத்திருக்கிறார். “ஜின்னா-இந்தியப் பிரிவினை, சுதந்திரம்” என்ற தனது
நூலின் வாயிலாக திரு.ஜஸ்வந்த்சிங் அவர்கள்.

அக்னி ஆயுதமான ஜஸ்வந்த்சிங் நூல் எங்கே தங்களை சுட்டெரித்துவிடும்
என்று கதிகலங்கிப்போன பாசிஸ்டு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கூடாரம் அவரை
கேவலப்படுத்தி கட்சியிலிருந்து நீக்கியது. அதன் மூலம் அவரை தனிமைப்
படுத்தி, அவர் வெளியிட்டக் கருத்துக்களை மூடி மறைத்துவிடலாம் என்று
போட்டக் கணக்கு “கிண்று வெட்ட பூதம் கிளம்பியது போன்று ஆகிவிட்டது.

ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் சுதர்சனம்,.
எல்.கே.அத்வானியின் அரசியல் ஆலோசகர்
சுதீந்திர குல்கர்னி,
முன்னால் மத்திய அமைச்சர் யஸ்வந்த்சின்கா,
பிரபல பத்திரிகையாளர் அருண்ஷோரி,
பிரபல பத்திரிகையாளர் டாக்டர்.வேத் பிரதாப் வேதிக்,
என்று வரிசையாக பாசிஸ்டு கூடாரத்திலிருந்து ஜஸ்வந்த்சிங்க்கு ஆதரவான
குரல்கள் ஒளிக்கத் தொடங்கிவிட்டது மட்டுமல்ல, நேற்றுவரை முகம்மதலி
ஜின்னாவை பிரிவினைவாதி- இந்தியாவை கூறுபோட்ட விரோதி என்றெல்லாம்
தூற்றினார்கள். இன்று விடுதலை வீரர், இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு
பாடுபட்டவர், இந்தியாவின் தேசியத்தலைவராக போற்றிப் புகழவும்
ஆரம்பித்துவிட்டார்கள்.

உடலெல்லாம் முஸ்லீம் எதிர்ப்புக் கொண்ட ஜனசங்கத் தலைவர் பால்ராஜ் மதோக்
எழுதிய “தீனதயாள் உபாத்தியாயா முதல் இந்திராகாந்தி வரை” என்ற நூலையும்,
பாசிஸ்டு ஆர்.எஸ்.எஸ். பழம்பெரும் தலைவர் எச்.வி.ஷேஷாத்ரி எழுதிய
“டிராஜிடி ஆப் பாகிஸ்தான்” என்ற நூல்களில் பாகிஸ்தான் பிரிவினைக்கு
ஜின்னா முக்கியக் காரணம்மல்ல என்பதையும், சர்தார் வல்லபாய் படேலும்
முக்கியக் காரணம் என்ற தகவல்கள் சான்றாக எடுத்துக்காட்டி
ஜஸ்வந்த்சிங்குக்கு பக்கபலம் சேர்த்து வருகிறார்கள். ராஜஸ்தான் முன்னாள்
முதல்வர் ஷெகவத்தும் அவருக்கு பேராதரவு தந்துள்ளார்.

அதுமட்டுமல்ல சிம்லாவில் கூடிய பா.ஜ.க தேசிய செயற்குழுவில் பா.ஜ.க
ஆட்சி செய்யும் குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், போன்ற பா.ஜ.க
அரசுகள் நூலை தடை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்திற்கு குஜராத் மாநில
அரசு மட்டும்தான் நூலை தடை செய்தது. ஆனால் கர்நாடகா, ம.பிரதேசம் போன்ற
அரசுகள் நூலுக்கு தடைவிதிக்க மாட்டோம் என்று மறுத்துவிட்டன. தற்போது
நூலுக்கு குஜராத் அரசு விதித்த தடை செல்லாது என்று உச்ச நீதி மன்றமும்
தீர்ப்பு சொல்லிவிட்டதால், நெருப்பை அள்ளி தன் தலையில்
கொட்டிக்கொண்டதுபோல் தவித்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. “வினை விதைத்தவன்
வினை அறுப்பான்.”
-சின்ன ஷிப்லி

Saturday, September 5, 2009

ஹஜ் யாத்திரைகளுக்கு சாதனை புரிந்தவரை பழிசுமத்தலாமா? கே.எம்.கே

ஹஜ் யாத்திரைகளுக்கு சாதனை புரிந்தவரை பழிசுமத்தலாமா? கே.எம்.கே

சென்ற வருடம் புனிதஹாஜிகள் அனுப்பியதில் ஊழல் நடந்து விட்டது என்றும், அன்றைய அமைச்சர் இ. அஹமது அவர்கள் இதில் சம்மந்தப்பட்டுள்ளார் என்றும் ஒரு பொய்யான குற்றச்சாட்டைத் திரும்பத்திரும்பக் கூறுவதன் மூலம் உரிமையை மறைத்து விடலாம் என்னும் நப்பாசையில் தமிழகத்தில் சில சமுதாய புல்லுருவிகள் ஈடுபட்டுவருகிறார்கள்.
சென்ற ஆண்டு வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி, அவருக்குக் கீழ் வெளிவிவகார இணை அமைச்சராகப் பணிபுரிந்தவர் இ. அஹமது அவர்கள்.
சென்ற ஐந்து ஆண்டுகளில் வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள், குறிப்பாக இ. அஹமது அவர்கள் நாடும் ஏடும் நானிலமும் போற்றும் வகையில் செயல்பட்டு வந்தார் என்பது வரலாற்று உண்மையாகும்.

இந்தியாவுக்கும் முஸ்லிம் உலகிற்கும், குறிப்பாக அரபுலகத்துக்கும் ஒரு பாசப்பிணைப்பிலான நெருக்கத்தை உருவாக்கி, இந்தியாவின் பேருக்கும் புகழுக்கும் பெருமை சேர்த்துள்ளவர் அமைச்சர் இ. அஹமது என்று பிரதமர் மன்மோகன் சிங், திருமதி சோனியா காந்தி மட்டுமன்றி, எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறப்பாகப் பாராட்டியிருக்கிறார்கள்.
இ. அஹமது அவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதால் இந்தியா முழுவதிலும், குறிப்பாக முஸ்லிம் உலகத்திலும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பேரும் செயல்பாடும் மிகவும் பரவலாகப் புகழப்படுகிறது. இந்தியாவில் எங்கோ உள்ள ஒரு குக்கிராமத்தில் கூட இன்றைக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது மத்திய மந்திரியாக இருக்கிறார் என்று பெருமையோடு பேசுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

முஸ்லிம் லீகிற்கு ஏற்பட்டுள்ள இந்த சிறப்பான எழுச்சியையும் ஏற்றத்தையும் கண்டு மனம் புழுங்கும் சிலர், இ. அஹமது அவர்களைப் பற்றி குறை பேசத் துவங்கியுள்ளனர். முஸ்லிம் லீக் என்னும் பெயரைக் கேட்டாலே சீறிப்பாயும் சிலர் இன்னும் இருக்கிறார் கள். முஸ்லிம் லீக் தலைவர் இ. அஹமது அவர்களின் பெயர் இத்தகையவர்களுக்கு அவர்களின் காதுகளில் நாராசமாகக் கேட்கிறது. இதனால் இல்லாததும் பொல்லாததும் சொல்லி புலம்பித் திரிகிறார்கள். அதற்குத் தமிழகத்தில் சிலர் எடுபிடி வேலை செய்ய இறங்கியிருக்கிறார்கள்.
சுதந்திர இந்தியாவில் புனித ஹஜ் பணிகள் மிகவும் அதிகமாகக் செல்வதற்கு வழிவகை கண்டவர் இ. அஹமதுதான்! சவ+தி மன்னருடனும் அமைச்சர்களு டனும் நேரில் பேசி, இந்தியாவின் கோட்டாவை அதிகரிக்கச் செய்து ஒரு லட்சம் அறுபது ஆயிரம் பேர் புனிதப் பயணம் செய்வதற்கு வழி ஏற்படுத்தியவர் இ. அஹமதுதான்.
சவ+தி அரசின் ஒப்பந்தப்படி 4ல் ஒரு பங்கினர் தனியார் நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற் கொள்ளலாம், 4ல் மூன்று பங்கினர் அரசாங்க ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செல்வர்.

மாநிலங்களுக்கு ஹஜ் கோட்டா என்பது அந்தந்த மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கிற்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகும். இதை பிரணாப் முகர்ஜியோ, இ. அஹமதுவோ செய்வ தில்லை. மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அறிவிப்பு செய்கிறது. அதற்கேற்ப கோட்டா வழங்கப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள் அனுப்பும் ஹாஜி கோட்டாகளும் மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரைப் படியேதான் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் விருப்பத்துக்கு எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் அதிகமான ஹாஜி கோட்டா வழங்கிவிட முடியாது. உண்மை இவ்வாறிருக்க ஏதோ இ. அஹமது தான் எல்லா ஹாஜிகளையும் அனுப்பியுள்ளதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எழுதுவதும் பேசுவதும் பித்தலாட்டமான பிரச்சாரமாகும்.
சென்ற ஆண்டில் உத்திர பிரதேசத்திற்கு 1440 ஹாஜிகள் மட்டுமே கோட்டா வழங்கியதாக புழுகுகிறார்கள். ஆனால். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உ.பி. ஹாஜிகள் பயணம் செய்துள்ளனர்.
சென்ற ஆண்டு இ. அஹமது அவர்களின் தனிச் செல்வாக்கினால் பத்தாயிரம் ஹாஜிகள் அதிகம் கிடைத்தனர். இந்த கூடுதலான ஹாஜிகளை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்துக் கொடுப்பதில் கூட அரசாங்கம் நிர்ணயித்த கோட்டாபடியேதான் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. அதன்படி உ.பி.க்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட ஹாஜிகள்தாம் 1440 இந்த விவரம் புரியாமல் இ. அஹமது அவர்கள் மீது பழிபோட முனைவதும் கோயபல்ஸ் முறையைப் பின்பற்றி பொய்யும் புனைந்துரையும் எழுதி பிரசுரிப்பதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
கூடுதலாகப் பெற்ற அந்த ஹாஜிகளில் சற்றொப்ப அறுநூறு பேருக்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்தது. மகாராஸ்ட்ராவுக்கு 1200 பேருக்குக் கிடைத்தது. கேரளாவுக்கு 900 பேருக்குக் கிடைத்தது.

ஹஜ் பயணிகளுக்கு எல்லாவித வசதிகளையும் பெருக்கித்தருவதற்கும், இந்தியாவில் இருந்து அதிக ஹாஜிகளை ஒவ்வோர் ஆண்டும் அனுப்புவதற்கும் பல சிரமங்களை மேற்கொண்டு சாதனை புரிந்த இ. அஹமது அவர்கள் மீது ஊழல் புகார் கூறுவதும் பொறாமையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.

பாராட்ட வேண்டிய சாதனைகள் புரிந்துவருப வரை, பழிபோட்டுக் களம்படுத்தி விடலாம் என்று நினைப்போரும் எழுதுவோரும் இ. அஹமதுவுக்கு எதிராகச் செய்யவில்லை@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி இந்தியா முழுவதிலும் ஏற்படுவதைத் தடுத்திடும் சாத்தானிய நோக்கத்தில்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்திய அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எழுச்சியையும் வளர்ச்சியையும் இத்தகைய பொறாமைத் தீயால் தடுத்துவிட முடியாது.!

பொறாமைப்படுவோரே பொறாமைத் தீக்கு எரிபொருள் ஆவர் என்பது சரித்திரம்!
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேசிய பொதுச்செயலாளர்

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கிற்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகும். இதை பிரணாப் முகர்ஜியோ, இ. அஹமதுவோ செய்வ தில்லை. மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அறிவிப்பு செய்கிறது. அதற்கேற்ப கோட்டா வழங்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் அனுப்பும் ஹாஜி கோட்டாகளும் மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரைப் படியேதான் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் விருப்பத்துக்கு எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் அதிகமான ஹாஜி கோட்டா வழங்கிவிட முடியாது. உண்மை இவ்வாறிருக்க ஏதோ இ. அஹமது தான் எல்லா ஹாஜிகளையும் அனுப்பியுள்ளதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எழுதுவதும் பேசுவதும் பித்தலாட்டமான பிரச்சாரமாகும்.
சென்ற ஆண்டில் உத்திர பிரதேசத்திற்கு 1440 ஹாஜிகள் மட்டுமே கோட்டா வழங்கியதாக புழுகுகிறார்கள். ஆனால். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உ.பி. ஹாஜிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்ற ஆண்டு இ. அஹமது அவர்களின் தனிச் செல்வாக்கினால் பத்தாயிரம் ஹாஜிகள் அதிகம் கிடைத்தனர். இந்த கூடுதலான ஹாஜிகளை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்துக் கொடுப்பதில் கூட அரசாங்கம் நிர்ணயித்த கோட்டாபடியேதான் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. அதன்படி உ.பி.க்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட ஹாஜிகள்தாம் 1440 இந்த விவரம் புரியாமல் இ. அஹமது அவர்கள் மீது பழிபோட முனைவதும் கோயபல்ஸ் முறையைப் பின்பற்றி பொய்யும் புனைந்துரையும் எழுதி பிரசுரிப்பதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
கூடுதலாகப் பெற்ற அந்த ஹாஜிகளில் சற்றொப்ப அறுநூறு பேருக்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்தது. மகாராஸ்ட்ராவுக்கு 1200 பேருக்குக் கிடைத்தது. கேரளாவுக்கு 900 பேருக்குக் கிடைத்தது.

ஹஜ் பயணிகளுக்கு எல்லாவித வசதிகளையும் பெருக்கித்தருவதற்கும், இந்தியாவில் இருந்து அதிக ஹாஜிகளை ஒவ்வோர் ஆண்டும் அனுப்புவதற்கும் பல சிரமங்களை மேற்கொண்டு சாதனை புரிந்த இ. அஹமது அவர்கள் மீது ஊழல் புகார் கூறுவதும் பொறாமையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.

பாராட்ட வேண்டிய சாதனைகள் புரிந்துவருப வரை, பழிபோட்டுக் களம்படுத்தி விடலாம் என்று நினைப்போரும் எழுதுவோரும் இ. அஹமதுவுக்கு எதிராகச் செய்யவில்லை@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி இந்தியா முழுவதிலும் ஏற்படுவதைத் தடுத்திடும் சாத்தானிய நோக்கத்தில்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்திய அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எழுச்சியையும் வளர்ச்சியையும் இத்தகைய பொறாமைத் தீயால் தடுத்துவிட முடியாது.!

பொறாமைப்படுவோரே பொறாமைத் தீக்கு எரிபொருள் ஆவர் என்பது சரித்திரம்!

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
தேசிய பொதுச்செயலாளர்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் - அமைப்புச் செயலாளர் - நெல்லை மஜீத் ஆகியோருக்கு ...........

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் - அமைப்புச் செயலாளர் - நெல்லை மஜீத் ஆகியோருக்கு ரியாதில் உற்சாக வரவேற்பு
காயிதெ மில்லத் பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்

ரியாத், டிச.1-
சவ+தி அரேபியா சென் றுள்ள இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீத் ஆகியோருக்கு தலைநகர் ரியாதில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரியாத் காயிதெ மில்லத் பேரவை, ரியாத் கோழிக் கோடு நகர கே.எம்.சி.சி., காயல் பைத்துல்மால் உள் ளிட்ட அமைப்புகள் நடத் திய நிகழ்ச்சிகளில் அவர் கள் பங்கேற்றனர்.
சவ+தி அரேபியா ரியாத் நகரில் உள்ள காயிதெ மில்லத் பேரவை அழைப் பின் பேரில் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அபுபக்கர், அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீத் சவ+தி சென் றுள்ளனர்.
விமான நிலையத்தில்
வரவேற்பு
28-ம் தேதி சனிக்கிழமை ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முடிந்து சென்னை விமான நிலையத் திலிருந்து புறப்பட்ட அவர் கள் இருவரும் அன்றிரவு ரியாத் சென்றடைந்தனர். விமான நிலையத்தில் காயிதெ மில்லத் பேரவை யின் நிர்வாகிகள் கடைய நல்லூர் ஹிஸ்புல்லா, லால் பேட்டை நாசர், பண் ருட்டி ஜகரிய்யா, உளுந் தூர்பேட்டை பஷீர், ராமேஸ்வரம் நஜ்முதீன், கடையநல்லூர் முஹம்மது அலி, சாகுல் ஹமீது, செய் யது மஸ்ஊது, கேரள முஸ்லிம் கலாச்சார மைய நிர்வாகிகளான அர்ஷ{ல் அஹமது, ஷாஜஹான், ஜலீல் உள்ளிட்டோர் வர வேற்றனர்.
29-ம் தேதி ஞாயிற் றுக்கிழமை மஃரிபு தொழு கைக்குப் பின் ரியாதில் உள்ள காயல்பட்டினம் பைத்துல்மால் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட் டது. எஸ்.ஏ.கே. மஹ்மூது சுல்தான் இல்லத் தில் நடை பெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஹாபிழ் செய்து அஹமது ஆலிம் கிராஅத் ஓதினார். எம்.இ. எல். நுஸ்கி வரவேற்று பேசினார்.
பாராட்டுரை வழங்கிய என்.டி. சதகத்துல்லா, பொதுச் செய லாளர் பதவி யினை கே.ஏ. எம். முஹம் மது அப+பக்கருக்கு வழங் கிய தாய்ச்சபை நிர்வாகி களுக்கு நன்றி தெரிவித்த தோடு வரலாற்றுப் பாரம்ப ரியம் மிக்க காயல்பட்டி னம் வரலாற்றில் இவரது உழைப்பும், உயர்ந்த பொறுப்பும் பதிவாகும் என குறிப்பிட்டார். நெல்லை மஜீத், கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
அதனைத் தொடர்ந்து சவ+தி ரியாதில் உள்ள கேரள முஸ்லிம் கலாச்சார கூட்டத்தில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட் டது.
ஓட்டல் ஹாஃப் மூன் ஆடிட்டோரியத்தில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் கே.எம்.சி.சி. கள்ளிக் கோட்டை கிளை தலைவர் செய்யது அப்துல் ரஹ் மான் பாகவி தங்ஙள் தலைமையேற்றார். தாமரைச்சேரி பஷீர் கிராஅத் ஓதினார். செயலா ளர் சுக்கூர் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் அர்சுல் அஹமத் துவக்கவு ரையாற்றினார். நெல்லை மஜீத், கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் ஆகியோர் சிறப்பரையாற்றினர்.
செய்தியாளர்களிடம்
சந்திப்பு
30-ம் தேதி திங்கட் கிழமை பகல் 1.30 மணிக்கு ஷிபா அல்-ஜஸீரா மருத் துவமனை ஆடிட்டோரி யத்தில் செய்தியாளர் சந் திப்பு நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+ பக்கர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அன்று மஃரிபு தொழு கைக்குப் பின் ஓட்டல் ஹாஃப் மூன் ஆடிட்டோ ரியத்தில் சவுதி காயிதெ மில்லத் பேரவை மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் மையம் இணைந்து நடத் திய கருத்தாய்வு அரங்கம் நடைபெற்றது.
தலைவர் ஹிஸ்புல்லா தலைமை தாங்கினார். ஆடிட்டர் டி.எம். சாகுல் ஹமீது வரவேற்று பேசி னார். பொருளாளர் காயல் என்.டி. சதக்கத்துல்லா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மவ்லவி ஜாபர் அலி மன்பஈ, எஸ்.கே. அப்துர் ரஹ்மான், டி.எம். ரஹமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யது அஷரப் தங்ஙள், வயங்காட்டு அஷ்ரஃப் அர்சுல் அஹமது, எம்.இ. எல். நுஸ்கி, பொன்மலா அப்துர் ரஹ்மான், குன்னு மல் கோயா, வி.கே. முஹம் மது, அல்கஸீம் காயிதெ மில்லத் பேரவை அமைப் பாளர் வி.ஏ.எம். இக்பால், எஸ். ஹபீபுல்லாஹ், எம்.ஐ. அஹமது மீராதம்பி ஃபைசல், ரியாத் சனாயா காயிதெ மில்லத் பேரவை அப்துல் சுப்ஹான், டி.எம். ஷாகுல் ஹமீது, திருப்ப+ர் அப்துல் சத்தார், தென்காசி காதர் மைதீன், ஒருங்கி ணைப்பாளர் புதுக் கோட்டை யாகூப், காயல் எம்எம். ஹாஜா நவாஸ் ஆகியோர் கருத் துரை வழங்கினர். ரியாத் காயிதெ மில்லத் பேரவை செயலா ளர் லால்பேட்டை முஹம் மது நாசர், செயலாளர் முஹம்மது அலி, விளக்க வுரையாற்றினர். துணைத் தலைவர் பண்ருட்டி சுக ரிய்யா நன்றி கூறினார்.
ரியாதில் உள்ள தமிழக முஸ்லிம்கள் இந்நிகழ்ச் சிக்கு வருகை தந்திருந்தனர். நெல்லை மஜீத், கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் ஆகியோர் சிறப்புரையாற்றி னர்.
இன்று புனித மக்கா, மதீனா சென்றுள்ள அவர் கள் ஜித்தாவில் நடை பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு 4-ம் தேதி சென்னை திரும் புகின்றனர்.

Wednesday, September 2, 2009

சமுதாயத்தின் குரல் / MP அப்துர்ரஹ்மான் பேச்சு

சமுதாயத்தின் குரல் / MP அப்துர்ரஹ்மான் பேச்சு

அப்துர் ரஹ்மான் (M.P. - முஸ்லிம் லீக்)

http://www.tamilislamicaudio.com/audio.asp?catID=3&authID=77

திருக்குர்ஆன் விளக்கவுரை 200 வது வார நெகிழ்வு விழாவில் ஆற்றிய உரை.

நமது சமுதாயம் எண்ணிடம் எதிர் பார்ப்பது என்ன?

எனது செயல்கள் மற்றும் சவால்கள். நமது சமுதாய மக்களுக்கு எனது வாக்குறுதி.

http://www.tamilislamicaudio.com/audio.asp?catID=3&authID=77

பசியும் மருந்தாகும்

பசியும் மருந்தாகும்

( டாக்டர் பீ. ஹாமிது அப்துல் ஹை )

மனிதனின் நலத்திற்கும் வளத்திற்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்வன இஸ்லாமியக் கொள்கைகள். அனைத்தையுமறிந்த அல்லாஹ் வினால் வழங்கப்பட்ட இறை கொள்கைகள். குறுகிய இவ்வுலக வாழ்விற்கும் முடிவற்ற மறுமை வாழ்விற்கும் உதவுவதாக அமைக்கப் பட்டுள்ளன. மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த வாழ்வாக இவ்வுலக வாழ்வும் எக்கண்ணும் கண்டிராத, எச்செவியும் கேட்டிராத இன்ப வாழ்வாக மறுமை வாழ்வும் ஒவ்வொரு மனிதனுக்கும் அமைந்திடல் வேண்டும். இக்குறிக்கோளை அடைய விழைவதே மனிதனின் கடமை யாகும். இதற்கு உதவும் ஒரே நெறி அல் – இஸ்லாம் மட்டுமே. ஏனெனில் மனிதன் பின்பற்றுவதற்கு எளிதாகவும் ஏற்றம் மிகுந்ததாக வும் அதன் கொள்கைகள் மிளிர்கின்றன. முரண்பாடற்ற தன்மையைக் கொண்டவையாகத் திகழ்கின்றன.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான ஐம்பெருங்கடமைகள் – கலிமா, தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் – மனிதகுலத்தின் ஒருமைப் பாடு, சமத்துவம், சகோதரத்துவம், உலக அமைதி, பொருளாதாரப் பங்கீடு ஆகியவற்றின் திறவுகோலாக உள்ளன.

’இறைவன் ஒருவனே, அவனே வணங்குவதற்குரியவன்’ என ஏற்கும் பொழுது பிறப்பு, தோல், நிறம், பேசும் மொழி, வாழுமிடம் ஆகிய வற்றால் தோற்றுவிக்கப்படும் வேற்றுமைகள் மறைந்து விடுகின்றன. ஐவேளை கூட்டுத்தொழுகை, உயர்வு, தாழ்வு, செல்வந்தர், வறியவர் என்ற வேறுபாட்டை நீக்கி விடுகிறது. ரமளான் நோன்பு பசியை உணர வைத்து, சக மனிதர்களின் சிரமத்தை உணர்த்தி விடுகிறது. ஸகாத் என்ற ஏழைவரி (வருமானத்தில் ஆகுமான செலவு போக மீதமுள்ள பணத்தில் ) செல்வம் ஓரிடத்தில் தங்காமல் பகிர்ந்து கொள்ளும் நிலையைத் தோற்றுவிக்கிறது. ஹஜ் மனித சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும், அமைதியையும் உலகுக்கு எடுத்துக்காட்டி விடுகிறது.

மறுமை வாழ்வு, நீதித் திருநாள், கேள்வி கணக்கு சுவனம் என்பன பற்றி மனிதனுக்கு அறிவுறுத்தி நல்வழிப்படுத்துவதற்கு உதவுவதாக திருமறையும், திருநபி (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் அமைந் துள்ளன. இவற்றில் மூன்றாவது கடமையான ரமளான் நோன்பு பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரமளான் என்ற சொல் கரித்தல், சுட்டெரித்தல் என்ற பொருள் கொண்டது. விறகை தீ எரிப்பது போல நோன்பு பாவங்களை எரித்து விடுகிறது என்பதால் நோன்பு கடமையாக்கப்பட்ட இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது மாதம் ரமளான் என்றழைக்கப்படுகிறது. இம் மாதத்தை அல்லாஹ்வின் மாதம், பொறுமையின் மாதம், ஈகையின் மாதம் என நபி (ஸல்) அவர்கள் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.

முந்திய சமுதாயத்தவர்களுக்கு விதிக்கப்பட்டது போல, நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தினருக்கு நோன்பு விதிக்கப்பட்டு, ரமளான் மாதம் பகற்பொழுதில் நோன்பு நோற்பதைக் கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பரிசுத்தவான்களாகலாம் (2:183,185) என வான்மறை விளக்குகிறது.

நபிமார்களுக்கு வழங்கப்பட்ட ’ஸுஹுபுகள்’ என்ற வேதக்கட்டளை களும், தவ்ராத், ஸபூர், இன்ஜீல், திருக்குர்ஆன் ஆகிய நான்கு வேதங் களும் வழங்கப்பட்ட புனித மாதமாக ரமளான் அமைந்துள்ளது. மனிதர் களுக்கு நேர்வழியைக் காட்டி நன்மை, தீமைகளைப் பிரித்தறிவிக்கும் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாக ரமளான் இருப்பதால், அம்மாதத்தை கடமையான நோன்பு நோற்கும் காலமாக அல்லாஹ் அறிவித்துள்ளான். (2:185) ஹிஜ்ரி 2ம் வருடம் முதல் ரமளான் நோன்பு கட்டாயக் கடமையாக்கப்பட்டது.

உணவு, தண்ணீர், உடல் இச்சை ஆகியவற்றை பகற்காலங்களில் தவிர்ப்பது என்பது மட்டும் நோன்பின் நோக்கமல்ல. நோன்பு நோற்றிருக்கும் போது பொய், புறம் பேசுவது, தீய பார்வை, தீயன கேட்டல், தீய உணர்வுகள் ஆகியவற்றை விலக்கி வைப்பதும் கட்டாய மாகும். இதனைத் தவிர்க்காமல் உணவையும் பானத்தையும் விட்டிருப் பதால் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தேவையுமில்லை என நபி (ஸல்) அவர்களி கூறியுள்ளார்கள்.

ஒரு மாத நோன்பு, உடற்கழிவுகளை நீக்கி, இரைப்பை, குடல் முதலியனவற்றைப் புதுப்பிக்கிறது. அவற்றின் பணிகள் சிறக்க உதவு கின்றன. உடல் பருமன் குறைவதற்கு வழியேற்பட்டு இரத்தக்கொதிப்பு, இதய நோய்கள் போன்றவை தாக்காமல் உடல் காக்கப்படுகிறது,

உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு மிருக உணர்வுகள் களைந்தெறியப் படுகின்றன. உணவு, பானம், உறக்கம் ஆகியவற்றில் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் தோற்றுவிக்கிறது. நோன்பு நோற்பவரின் உள்ளத்தில் உயர்ந்த இறையுணர்வைத் தூண்டுகிறது. அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுத் தருகிறது.

வீண்பேச்சு, பொய், புறங்கூறல், சண்டை – சச்சரவு, காமப் பார்வை முதலியனவற்றைத் தடுத்து, ஒழுக்க உணர்வுகளைப் பரிணமிக்க செய்வதால் நோன்பு ஒரு கேடயம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ’பசித்திருத்தல் ஓர் அருமருந்து’ (லங்கனம் பரம ஒளஷதம்) என்பது முதுமொழி.

தனித்திருப்பதும் பசித்திருப்பதும் விழித்திருப்பதும் ஆன்மீக உயர் வுக்கு வழிகாட்ட வல்லன. பிராணிகள் நோயுற்றால் இறை தின்ன மறுத்து விடுகின்றன. விரைவாக நலம் பெற அது உதவுகிறது. மனிதனுக்கும் அது பொருந்தும். ஏனெனில் வயிறு ஒரு கெட்ட பாத்திரம். உடல் நோய்களுக்கு அதுவே காரணமாகி விடுகிறது.

‘வயிறு நலமுடன் பேணப்பட்டால் உடல் நலமும் பேணப்படுகிறது’ என்பது நபிமொழியாகும்.(பைஹகீ) “ நம்பிக்கையாளர் ஒரு வயிற்றில் உண்ணுகிறார். இறைமறுப்பாளர் ஏழு வயிற்றில் உண்ணுகிறார்” என்பதும் நபிமொழி (திர்மிதீ) அதாவது அளவுக்கதிகமாக உண்ணுகிறார் என்பது கருத்து.

“உண்ணும்பொழுது வயிற்றில் மூன்றில் ஒரு பகுதி உணவுக்கும். மற்றொரு பகுதி தண்ணீருக்கும், இன்னொரு பகுதி காலியாகவும் இருக்கட்டும்” என்பது நபிமொழியாகும் (திர்மிதீ) அதுவே உணவின் அளவாகும்.

“உண்ணுங்கள், பருகுங்கள், மிதமிஞ்சி விடாதீர்கள் (குர்ஆன் 7:31) என்ற மாமறையின் வழியைப் பின்பற்றி வாழ்ந்த வழிகாட்டிகளான பெரு நபித்தோழர்கள் நோயற்றவர்களாக வாழ்ந்திருந்தனர் என வரலாறு பதித்திருக்கிறது. அளவின்றி உணவுண்டு, உடல் பருத்து விடுவதே பெரும்பாலான நோய்களுக்குக் காரணமாகி விடுகிறது.

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு – திருக்குறள் (943)

எனவே பசித்திருப்பதும் பசித்த பின்பே உண்ணுவதும் நலம் தரும் செயற்களாகும். ஏனெனில் நோன்பு என்ற நற்செயல் உடலுக்கு மிகுந்த நலனை வழங்குகிறது.

“நோயுற்றவரிடமிருந்து உணவை நீக்கி விடுங்கள். இப்பொழுது பட்டினி கிடப்பது நோயுற்றவர் அல்ல; அவருடைய நோயே” என அமெரிக்க மருத்துவர் டியூவே கூறுகிறார்.

மற்றொரு அமெரிக்க மருத்துவர் டாக்டர் எல்ஸன் எம். ஹாஸ் என்பவர் கூறுகிறார் (நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குநர்)

“நோன்பு மிகச்சிறந்த இயற்கை மருத்துவம். மிகத் தொன்மையான உலகளாவிய நோய் நிவாரணி. 15 வருடங்களுக்கு முன்பு நான் நோயுற்ற பொழுது உணவைத் தவிர்த்திருந்ததே என் உடல் நலம் தேற உதவியது எனக் கண்டுபிடித்தேன். புதிய சக்தி உடலில் பாய்வதை உணர்ந்தேன். உடலியக்கத்தில் ஓர் உத்வேகம் பளிச்சிடுவதையும் உணர்ந்து கொண்டேன். நலம் தரும் நோன்பு பல நோய்களைத் தடுக்கிறது” மேலும் கூறுகிறார்.

“அமெரிக்கார்களின் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் உணவுக் கட்டுப்பாடு இல்லாததேயாகும். நோன்பு என்பதே அவர்களுக்குத் தெரியாத ஒன்றாகும். உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரை நோய் முதலியன தோன்றுவதற்கு உணவுக் கட்டுப்பாடின்மையே காரணமாகும். நோன்பு இவற்றைத் தடுக்கும் கருவியாக உள்ளது.”

“நோன்பு உடல் கழிவுகளை நீக்க உதவுகிறது. தசைகளுக்கு வலுவூட்டுகிறது. உடலியக்கத்தை சமநிலைப்படுத்துகிறது.”

“பல மணிநேரம் பசித்திருப்பதன் மூலம் உடற் செல்கள் புத்துணர்வு பெறுகின்றன. சிதைவுகள் சீர் செய்யப்படுகின்றன. ஆகவே தான் மனித குலம் தோன்றியதிலிருந்து ஏதாவதொரு வகையில் நோன்பு நோற்பது பின்பற்றப்பட்டு வந்துள்ளது.”

அனைத்தையும் அறிந்த அல்லாஹ், ரமளான் மாதத்தில் ஒரு மாத காலம் நோன்பு நோற்பதைக் கடமையாக்கி, நம் உடல் நலம் பேண உதவி செய்துள்ளான் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நற்செயல்களுக்கு நன்மை வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பாளிக்கு அல்லாஹ்வே நன்மை வழங்குகிறான். “நோன்பு எனக்காக நோற்கப் படுகிறது அதற்கு நானே கூலி வழங்குகிறேன்” என அல்லாஹ் கூறுகிறான் ‘ரய்யான்’ என்ற தனி சுவனமே நோன்பாளிகளுக்கு மட்டும் காத்திருக்கிறது.

உடல் நலத்தை வழங்கி, நீண்ட ஆயுளையும் தந்து, அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுத் தரும் ரமளான் நோன்பு அல்லாஹ் நமக்கு வழங்கி யுள்ள மிகப்பெரும் நற்பேறே !

“ரமளான் மாதத்தை கண்ணியப்படுத்திக் கொண்டிருக்கும் வரை என் சமூகத்தார் இழிவுபடுத்தப்பட மாட்டார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறிய சொற்களை நினைவில் கொள்வோம்.

நன்றி : சிந்தனை சரம் ( நவம்பர் 2005 )