Tuesday, November 24, 2009

மணிச்சுடர் முஸ்லிம் லீகின் ஒளிச்சுடர்! - கே.எம்.கே

மணிச்சுடர் முஸ்லிம் லீகின் ஒளிச்சுடர்! - கே.எம்.கே






மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்னும் பெயரில் நிறுவனம் உருவாக்கி, அதன் சார்பில் மணிச்சுடர்| நாளிதழை தலைவர் சிராஜுல் மீல்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமது சாஹிப் தொடர்ந்து நடத்தி வந்து, அதனை தமிழக இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பிரச்சார ஏடாகப் பரிணமிக்கச் செய்துள்ளார்கள்.


1987-ல் ஆரம்பமான மணிச்சுடர்| இத்தனை காலமாகப் பலப்பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிராஜுல் மில்லத் அவர்களின் கனவை தமிழக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நனவாக்கிக் கொண்டிருக்கிறது.


அப+ர்வ சகோதரர்கள் என்று வர்ணிக்கப்பட்ட டாக்டர் ஷேகு நூருத்தீன், ஹ{சைன் அப்துல் காதர், ஆலிம் செல்வன் ஷம்சுதீன் ஆகிய மூவரும் அவர்கள்தம் அருமைக் குடும்பத்தினரும், மறைந்த தேவிப்பட்டினம் பாருக் சாஹிப் போன்றவர்களும் மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருந்து உதவி வந்துள்ளனர்.


நிறுவனமும், மணிச்சுடரும் காலப்போக்கில் பல்வேறு சோதனைகளுக்கு ஆட்பட்டபோது, பங்குதாரர்களும், இயக்குநர்களும் 1996-ல் கூடி நிறுவனத்தையும், மணிச்சுடர் நாளேட்டையும் தலைவர் சிராஜுல் மில்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப், அன்றைய தமிழக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகிய இருவரிடத்தில் மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் மணிச்சுடர் சம்பந்தப்பட்ட அனைத்து முந்திய பிந்திய கொடுக்கல் வாங்கலுக்கும் இருவர் பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானித்து ஒப்படைத்தனர்.


தலைவர் சிராஜுல் மில்லத் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவரின் புதல்வரும், நிறுவன ஸ்தாபகர்களில் ஒருவருமாக இருந்த ஜனாப் ஏ. அப்துல் ஹக்கீம் அவர்களுடைய ஒத்துழைப்போடு இதுகாறும் நிறுவனமும், மணிச்சுடரும் தொடர்ந்து வரப் பாடுபட்டு வந்துள்ளோம். முஸ்லிம் லீகர்களின் முழு ஒத்துழைப்போடும், சமுதாயப் பிரமுகர்களின் ஆதரவோடும் மணிச்சுடர் நாளேடு இதுகாறும் நடந்து வந்திருக்கிறது.


ஜனாப் அப்துல் ஹக்கீம் அவர்கள் திடீரென மரணமெய்திய பிறகு நிறுவனத்தையும், மணிச்சுடரையும் தொடர்ந்து நடத்துவதற்கு புதிய இயக்குநர் குழுமம் உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே, பங்குதாரர்கள் மற்றும் இயக்குநர்கள் பொதுக்குழு கடந்த 6-11-09-ல் மூத்த இயக்குநரும், சமுதாயப் புரவலருமாகிய டாக்டர் ஷேகு நூருதீன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பழைய இயக்குநர்கள் குழுமம் முற்றிலுமாகக் கலைக்கப்பட்டு புதிய குழுமம் அமைத்துத் தீர்மானிக்கப்பட்டது. மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனப் பங்குதாரர்கள் யாவரும் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளைக்குத் தங்களின் பங்கு பத்திரங்களை நன்கொடையாக மாற்றிக் கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மலையாள நாளிதழ் ~சந்திரிகா|, கேரள மாநில முஸ்லிம் லீக் சார்பில் நடத்துவது போல மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தையும், மணிச்சுடர் நாளேட்டையும் முஸ்லிம் லீகர்களே ஏற்று நடத்துவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.. அதன் அடிப் படையில் புதிய இயக்குநர்கள் குழுமம் உருவாக்கப்பட்டிருக்கிறது.


மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை இயக்கும் இயக்குநர் குழுவில் கீழ்க்கண்டவர்கள் புதிய பொறுப்புக்களுடன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.


புதிய இயக்குநர்கள் குழுமத்தின் தலைவர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., மணிச்சுடர் நாளேட்டின் அச்சிட்டு வெளியிடுபவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், மணிச்சுடர் ஆசிரியர், முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், முஸ்லிம் லீக் பொருளாளர் வடக்குக் கோட்டையார் வி.எம். சைஃயது அஹமது, யு.ஏ.இ. காயிதெ மில்லத் பேரவைத் தலைவர் எம். லியாகத் அலி, மகளிர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். பாத்திமா முஸப்பர், முஸ்லிம் லீக் முன்னாள் பொதுச் செயலாளர் டாக்டர் எஸ்.ஏ. ஹக்கீம் சையத் சத்தார் ஆகியோர் இயக்குநர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.


முழுமையாக முஸ்லிம் லீக் சார்பில் பொறுப் பேற்றுள்ள இந்த புதிய இயக்குநர்கள் குழுமம் மணிச்சுடரை பிரபல்யமான பத்திரிகையாக உயர்த்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.


தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பிரைமரி முஸ்லிம் லீகிலும் மணிச்சுடர்| சென்றிட வேண்டும். தமிழகத்தல் உள்ள பதினோராயிரம் மஹல்லா ஜமாஅத்துகள் ஒவ் வொன்றுக்கும் மணிச்சுடர் செல்ல வேண்டும். தமிழகத்தில் உள்ள கல்விச் சாலைகள், அரபி கல்லூரிகள் மற்றும் சமுதாய நிறுவனங்கள் அனைத்திற்கும் மணிச்சுடர் சென்றிட வேண்டும்.


இதற்கு உங்களின் ஒத்துழைப்பும், உதவியும், ஆதரவு மிகமிகத் தேவை

Saturday, November 21, 2009

டாக்ட‌ர் ஹிமானா சைய‌த் வாழ்த்து

டாக்ட‌ர் ஹிமானா சைய‌த் வாழ்த்து

Syed Ibrahim
dateSat, Nov 21, 2009 at 11:54 AM

Dhua salam thambi.

It is heartening to note, your sincere efforts have paid dividents and many brothers and sisters had the opportunity for Hajj this year. May Allah SWT Bless all your efforts -Himanasyed

முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கைக்கு வெற்றி மத்திய ஹஜ் கமிட்டியிடம் அப்துர் ரஹ்மான் எம்.பி. போராடி அனுமதி பெற்றார்




ஹஜ் புனிதப் பயணத் திற்கு விண்ணப்பித்து கடைசி நேரத்தில் அனுமதி பெறப்பட்ட புனிதப் பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாத நிலையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மேற்கொண்ட நேரடி நடவடிக்கையால் நாளை புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர். புனித ஹஜ் பயணம் செல்வதற்கு இந்தியாவிலி ருந்து லட்சக்கணக்கானவர் கள் விண்ணப்பித்தும் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.


தமிழகத்தைப் பொறுத்தவரையில் 34 லட்சத்து 78 ஆயிரத்து 40 பேர் மட்டுமே முஸ்லிம் களின் எண்ணிக்கை என கணக்கிட்டு அவர்களில் 1,319-துக்கு ஒருவர் வீதம் என கோட்டா நிர்ணயிக் கப்பட்டு, 2612 பேர் மட் டுமே ஒதுக்கீடு செய்யப் பட்டனர். மற்ற மாநிலங்க ளிலிருந்து கிடைத்த இடத்தையும் சேர்த்து அரசின் மூலம் சுமார் 4 ஆயிரம் பேர் இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் செல்கின்றனர்.


இதுதவிர, மத்திய அரசு தன்வசம் வைத்துள்ள கோட்டாவில் இருந்து வாய்ப்பு பெறுவதற்கு புனிதப்பயணிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதில் ஏராளமான முறை கேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதுபற்றி அறிந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அடுத்த ஆண்டு முதல் ஹஜ் பயணத்தில் எத்தகைய குற்றச்சாட் டிற்கும் இடமில்லாத வகையில் நடைமுறைகள் மாற்றியமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.


பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள்
இதனிடையே, இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து புனிதப் பயணத்திற்கு விண்ணப்பித்தும் வாய்ப்பு கிடைக்காதவர்களில் பலர் இந்த கோட்டாவில் இடம் இருப்பதை அறிந்து அதில் வாய்ப்பு பெறுவதற்காக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமையை அணுகி னர். இவர்களுக்கு புனிதப் பயணம் செல்லும் வாய்ப்பை பெற்றுக் கொடுக்குமாறு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலா ளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகி தீன் வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மானை கேட்டுக் கொண்டார்.


இதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை நேரடியாக சந்தித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் புனித ஹஜ் பயணம் செல்ல அனுமதி பெற்று வந்தார்.


தாமதமாக கிடைத்தா லும் இந்த வாய்ப்பு வீணாகி விடக்கூடாது என உணர்ந்த இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமை இதற்கான முயற்சிகளை முஸ்லிம் லீக் அலுவலகத்திலிருந்தே செய்து விசா பெறுவதற்காக மாநில காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் திருப்ப+ர் சத்தாரை நேரடியாக மும்பைக்கு அனுப்பி வைத்தது. அவர் கடுiமான முயற்சி மேற் கொண்டும் மத்திய ஹஜ் கமிட்டி இந்தப் பயணி களின் புனிதப் பயணத் துக்கு அனுமதி வழங்கவில்லை.


மும்பையில் அப்துர் ரஹ்மான் எம்.பி.,
இதையடுத்து எம். அப்துர் ரஹ்மான் மும்பை விரைந்து சென்றார். மத்திய ஹஜ் கமிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி முஹம்மது உவைஸியை சந்தித்துப் பேசினார். காலம் கடந்து விட்டதால் விசா நடைமுறைகள் செய்வதற்கோ, விமான ஏற்பாடு செய்வதற்கோ வாய்ப்பு இல்லை என சொல்லி அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்.


நேரடியாக களம் இறங்கிய எம். அப்துர் ரஹ்மான் இந்தியாவிற்கான சவ+தி அரேபிய நாட்டின் தூதர் மற்றும் துணைத்தூதர் ஆகியோருடன் நேரடியாக பேசி விசா வழங்குவதற்கான அனுமதியை பெற்றார்.


பின்னர் மும்பை விமான நிலைய அதிகாரி களுடன் நேரடியாக பேசி விமானத்திற்கான அனு மதியைப் பெற்றுக் கொடுத்து அதன் பின்னர், புனிதப் பயணிகளின் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யு மாறு மத்திய ஹஜ் கமிட்டி யின் தலைமை நிர்வாக அதிகாரியை வலியுறுத்தினார்.


இந்த அதிரடி நடவ டிக்கைகளை தொடர்ந்து ஹஜ் புனிதப்பயணிகள் 49 பேர் பயணம் செய்வதற் கான வாய்ப்பு கிடைத்து அவர்கள் அனைவரும் வரும் 20-ம் தேதி வெள்ளிக் கிழமை 3.15 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மும்பை சென்று இரவு 9.35 மணிக்கு மும்பையிலிருந்து ஜித்தா புறப்படுகின்றனர்.


வாழ்த்தும் - வரவேற்பும்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இந்த முயற்சிக்கு புனித ஹஜ் பயணிகளும், அவர்கள் குடும்பத்தாரும் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கும், அதன் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


இந்தப் பணிகளுக்காக மும்பை வந்த வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மானுக்கு மும்பையி லுள்ள தமிழ்நாடு ஹஜ் சர்வீசில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹஜ் கமிட்டியின் நிர்வாகிகள் எஸ்.கே. அமீன், குல்ஸார் அஹமது, இனாயத்துல்லாஹ் உள் ளிட்டோர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.


பிற்பகல் 3 மணிக்கு மும்பை வாழ் கேரள முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் ஜக்கரியா வீதியில் உள்ள அலுவலகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைவர் மாணிகோட் உன்னி ஹாஜி, செயலாளர் எம். எம்.கே. உமரி ஆகியோர் இந்த வரவேற்பு நிகழ்ச் சியை ஏற்பாடு செய்தனர்.


இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மானுடன் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியச் செயலாளர் முஹம்மது இஸ்மாயில் பனாத்வாலா, மும்பை முஸ்லிம் லீக் செயலாளர் சி.எச். அப்துர் ரஹ்மான், திருப்ப+ர் எம்.ஏ. சத்தார் ஆகியோரும் பங்கேற்றனர்.


மும்பை வாழ் காயல்வாசிகள் வரவேற்பு
மும்பை பென்டிபஜாரில் உள்ள ஹோட்டல் ஷாலிமாரில் மும்பைவாழ் காயல்வாசிகள் சார்பில் அப்துர் ரஹ்மான் எம்.பி .க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. எச்.எம். முஹம்மது கியாது தலைமை வகித்தார். மவ்லவி முஹம்மது கல்ஜி ஆலிம் கிராஅத் ஓதினார். எம்.எல். சாகுல் ஹமீது எஸ்.கே. வரவேற்றுப் பேசினார்.


இந் நிகழ்ச்சியில் பேசிய எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அவசியத்தை எடுத்துச் சொல்லி ஒவ்வொரு சமுதாயப் பிரச்சினையிலும் அது எப்படி அணுகுகிறது? தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அதை வழிநடத்துகின்ற விதத்தையும் எடுத்துக்கூறி தாய்ச்சபையையை பலப்படுத்தக் கேட்டுக் கொண்டார்.


நிகழ்ச்சியில் வி.ஐ. புகாரி, ஓரியண்ட் பெயிண்ட் ரபீக், பல்லாக் கம்பெனி தய்ய+ப், மன்சூர், ஸ்டார் கம்பெனி எம்.ஏ. மீரா சாஹிப், எம்.எம். புகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மாநில காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் திருப்ப+ர் எம்.ஏ. சத்தார் நன்றி தெரிவித்துப் பேசினார். வேலூர் கிழக்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் கே.எல். முஹம்மது ஹனீப் துஆ ஓதினார்.

Monday, November 16, 2009

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய பேச்சாளர்கள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய பேச்சாளர்கள்

1. பேரா.கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. 09868180563
3. வி.எம்.செய்யது அஹமது 9940041157

4. எம்.பி. காதர் ஹுசைன் 9344557770

5. பி.எஸ். ஹம்ஸா 9381188878

6. மெளலவி தளபதி ஷபீகுர் ரஹ்மான் 9787280133

7. ஹாஜி எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் 9443180830

8. கவிஞர் இஸட் ஜபருல்லாஹ் 9842394119

9. நெல்லை அப்துல் மஜீது 9842888670

10. காயல் மகபூப் 9790740787

11. கமுதி பஷீர் 9840622809

12. கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் 9486990045

13. ஏ.எம். அப்துல் காதர் 9345610740

14. எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் எம்.எல்.ஏ., 9940426876

15. ஹெச். அப்துல் பாசித் எம்.எல்.ஏ., 9443347578

16. ஏ.எஸ். பாத்திமா முஸப்பர் 93810531984

17. வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் 9444114208

18. மெளலவி என். ஹாமித் பக்ரி 9840626306

19. எஸ்.ஏ.எச். உமர் பாரூக் மழாஹிரி 9443591753

20. கோவை டி.ஏ. அப்துல் நாசர் எம்.சி. 9345541877

21. எம்.எஸ்.முஹம்மது ரஃபீக் 9363102322

22. கவிஞர் ஹுசைன் தாசன் 9486057096

23. கே.எம். நிஜாமுதீன் 9444132458

24. ஏ. பஷீர் அஹமது 9443650790

25. ஜி.எம். ஹாஷிம் 9843015767

26. எல்.கே.எஸ். மீரான் முகைதீன் 9843064664

27. கவிஞர் கிளியனூர் அப்துல் அஜீஸ் 9443559330

28. வி.எம். பாரூக் 9443411295

29. கே.ஏ. அப்துல் ரவூஃப் 9443585359

30. எஸ்.எம். கனி சிஷ்தி 9444071127

31. எம்.ஏ. மஹபூப் அலி 9443031304

32. முஹம்மது நயீம் 9894147681

33. எம். ஜெய்னுல் ஆபிதீன் 9840816786

34. சல்மான் பாரீஸ் 9790418844

35. கே.கே.ஓ.எம். சுலைமான் மன்பஈ 9865467618

36. மெளலவி பி.கே.என். அப்துல் காதிர் 9842158543

37. வி.கே. அப்துல் நாசர் 9943650142

38. மன்னர் ஏ.ஆர். பாதுல் அஷ்ஹப் 9842790176

39. ஏம்பல் தஜம்முல் முஹம்மது 9994405644

40. கே. இக்பால் அஹமது எம்.சி., 9894145051

41. எஸ். கவுஸ் மொய்தீன் 9788536261

42. கே.இஸட். இனாயத்துல்லாஹ் 9360506100

43. அப்துர் ரஹ்மான் ஷிப்லி 9790540940

44. மவ்லவி சுலைமான் சேட் 9842738720

45. ஏ.ஏ. ரஷீது ஜான் 9940908865

46. ஏ.கே.ஏ. அப்துல் காதர் மிஸ்பாஹி 9940279878

47. பி.ஏ. சகாபுதீன் 9443304519

48. வி.ஏ.எஸ். சையது இப்ராஹீம் 9442999186

49. அதிரை நசுருத்தீன் 9786109744

50. இ. முஹம்மது அலி 9443214428



நன்றி : மணிச்சுடர் 13/14 ஏப்ரல் 2009.

Tuesday, November 3, 2009

சர்வதேச அளவில் காயிதே மில்லத் பேரவைப் பணிகள் தீவிரம்!!!

சர்வதேச அளவில் காயிதே மில்லத் பேரவைப் பணிகள் தீவிரம்!!!



இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அங்கீகாரம் பெற்ற பேரமைப்பான காயிதே மில்லத் பேரவை சர்வதேச அளவில் சிறப்பான தன் பணியை துவக்கி இருக்கிறது.

தகுதி மிக்க இதன் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி அவர்கள் பொறுப்பேற்ற பின் தன் சீரிய முயற்ச்சியால் பல நாடுகளுக்கு காயிதே மில்லத் பேரவையின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டார்கள்.

எஞ்சிய சில நாடுகளில் இந்த இயக்கப்பணி விரிவாகவும்.வேகமாகவும் நடப்பது அறிந்து அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள் .இன்ஷா-அல்லாஹ் விரைவில் இந்த ஒருங்கிணைப்பு தமிழகத்திலும் நடைபெற வாய்ப்பிருக்கிறது அரசியல் ரீதியாக அனைவரையும் தாய்ச்சபை முஸ்லிம் லீகால் மட்டுமே ஒருங்கிணைக்க முடியும் என்பதற்க்கு இது ஒரு சிறந்த முன்னுதாரணமாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இத்தகைய அரும் பணிக்காகத் தான் சமுதாயத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்கள் தன் வாழ்வின் லட்சியமாகக் கருதி செயலாற்றி வருகிறார்கள்.இந்தப் பணி தொய்வின்றி நடைபெற்று வெற்றி பெற அனைவரின் ஒத்துழப்பும் சிறப்பாக இருக்குமென்று சமுதாயம் எதிர்பார்க்கிறது.