Sunday, January 31, 2010

எவரையும் எப்பொழுதும் இடித்துரைக்காத பேரியக்கம்

எவரையும் எப்பொழுதும் இடித்துரைக்காத பேரியக்கம்

இருந்த இடத்தில் இருப்பதைப் போன்று இருக்க வேண்டுமென்றால் இங்கு வந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

வந்த பின்பு இருந்தவர்களை பார்த்து "கிழட்டுப் பயலுக" என்று கமெண்ட் அடித்தால் இங்கு இருப்பவர்கள் பொ......கி பயலுக என்று பதிலுக்கு கமெண்ட் அடிக்க எவ்வளவு நேரமாகும்?

கூட்டத்தைக் கூட்டி கோவனத்தோடு முடிச்சுப் போட்டு பேசும் இயக்கத்தினருக்கும்,கண்ணியத்தோடு கட்டுப்பாடாக பேசும் முஸ்லிம் லீக்கினருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்!

எவரையும் எப்பொழுதும் இடித்துரைக்கக்கூட நினைக்காத பேரியக்கத்திற்க்கு வந்து விட்டு வழியில்லை என்று பிதுங்கி நின்றால் அவர்களை வழியனுப்பி வைப்பதுதானே முஸ்லிம் லீக்கின் மரபு?

அதைத்தான் எங்கள் இயக்கம் செய்திருக்கிறது.தாய்ச்சபை முஸ்லிம் லீக்கின் எந்த உண்மைத் தொண்டனும் எங்களை விட்டு பிரிந்துச் சென்றுவிடவில்லை என்பதை அனைவருக்கும் தெளிவுபடுத்துகிறோம்.

முன்னால் கொக்கி போட்டு பின்னால் பிஸ்னஸ் பேசும் மெயில்களுக்கு எங்கள் பதில் தொடரும்...

Monday, January 25, 2010

மேலும் வர வேண்டும்! தோளும் தர வேண்டும்! தத்துவக்கவிஞர் இ. பதுருத்தீன் ( 94442 72269 )

மேலும் வர வேண்டும்! தோளும் தர வேண்டும்! தத்துவக்கவிஞர் இ. பதுருத்தீன் ( 94442 72269 )

http://www.muslimleaguetn.com/news.asp?id=935

தாய்ச்சபை முஸ்லிம் லீக் குடிக்கக் குழாய் நீராகவும், குளிக்க குற்றால நீராகவும் சமுதாயத்திற்குப் பயன்பட்டு வருகிறது.
அதன் தோற்றம் கண்ணியமானது!
அதன் ஏற்றம் புண்ணியமானது!
தேர்தல் எனும் தீப்பந்தத்தை அது ஏந்தியது -
ஊர் வெளிச்சம் பெறவே அன்றி, பெயர் வெளிச்சம் பெற அல்ல!
அதன் மனிதநேயம் - தேர்தலுக்காகத் தீர்மானிக்கப் பட்டதல்ல-எந்தத் தேடலுக்காகவும் திடப்பட்டதல்ல.
அது, கல் தடுக்கி விழாமல் கைத்தாங்கும்
காருண்ய நோக்குடையது!
எனவே, அதன் பயணம், நேற்றும் தொடர்ந்தது- இன்னும் தொடர்கிறது-நாளையும் தொடரும்
எவருக்காகவும் அது நிற்காது-எதற்காகவும் அது தயங்காது!
நட்சத்திரத்தைப் பிடுங்கி பிறையை நட்டுப் பார்த்தார்கள் சிலர்!
பிறை, நட்சத்திரம் இரண்டையும் பிழை செய்து, கறுப்பு - வெள்ளை எனக் கர்வத்துடன் பார்த்தார்கள் வேறு சிலர்!
இந்தக் கண்மூடித் தனங்கள் மண்மூடிப் போயின. மூன்றாவதாக முளைத்தவர்கள் பச்சை நிறத்தைக் கூடச் சேர்த்துக் கொடி கண்டார்கள்.
எனினும் பச்சிளம் பிறைக் கொடியின் நிழலைக்கூட இவர்கள் நெருங்க முடியவில்லை....
நாலூரில் நின்றவர்கள் நடுத் தெருவில் நிற்க - வேலூரில் நின்ற முஸ்லிம் லீக் வெற்றியூரில் இன்னும் உலா வந்து கொண்டிருக்கிறது!
புத்துணர்வோடு இன்றும் என்றும் சமுதாயப் பூந்தோட்டக் காவல்காரனாக முஸ்லிம் லீக் தன்னைப் புதுப்பித்தே வருகிறது!
நோன்பைப் பிடிக்கவும் விடுக்கவும் பிறையைப் பார்க்கும் சன்மார்க்கம்!
நன்மையைக் கொடுக்கவும் - தீமையைத் தடுக்கவும் இளம்பிறைக் கொடியையே பார்க்கிறது சமுதாயம்.
அரிசிகள் பல. அரசியல் கட்சிகளும் பல. எனினும் பிரியாணி விருந்துக்கென்றே ஓர் அரிசி இருப்பது போல - இருந்து சிறப்பது போல - அரசியல் இயக்க முஸ்லிம் லீகே சமுதாயப் பசிக்கு விருந்தாகவும் - மருந்தாகவும் இருந்து வருகிறது.
காரணம் - இது கண்ணியகு காயிதெ மில்லத்தின் கால்வழி வந்தது; சிராஜுல் மில்லத்தின் தோள் வழி வந்தது; முனீருல் மில்லத்தின் கண் வழி, விழிப்புணர்வு டன் விளங்கி வருவதே!
எடுபிடிக்கும், அடிதடிக்கும் இளைய சமுதாயத்தை அழைக்காத முஸ்லிம் லீக்-
கெடுபிடிக்கும் பழிவழிக்கும் உட்படுத்தாத முஸ்லிம் லீக் - கடைப்பிடிக்கும் ஒரே வழி கண்ணியமே!
புதிய இளைய தலைமுறையினர், தாய்ச்சபை லீகைத் தாங்கவும், அதன் நெறி ஓங்கவும் கைகோர்க்க மேலும் வர வேண்டும்; தோளும் தர வேண்டும்!

Saturday, January 23, 2010

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரைமரி தேர்தல் அறிவிப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரைமரி தேர்தல் அறிவிப்பு

அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கிளையின் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி அனைத்து மாநிலங்களிலும் முறையாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு பிரைமரி, மாவட்ட, மாநில நிர்வாகிகளின் தேர்தல் நடத்திட வேண்டுமென பெங்களுரு தேசிய பிரதிநிதிகள் மாநாடு பிரகடனம் வலியுறுத்தி இருக்கின்றது.
தமிழகத்தில் திட்டமிட்டபடி 2010 பிப்ரவரி முதல் தேதியிலிருந்து 20-02-2010 தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் பிரைமரி தேர்தலை நடத்திட மாவட்ட தலைவர், செயலாளர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பிரைமரி தேர்தல் நடைபெற்ற விவரங்களை ப+ர்த்தி செய்ய வேண்டிய படிவம் மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிர்வாகத் தேர்தலில் பேணப்பட வேண்டிய குறிப்பு பின்வருமாறு...
1. குறைந்தபட்சம் நூறு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அந்த பிரைமரியில் தேர்தல் நடத்தலாம். பிரைமரி தேர்தல் பொதுக்குழுவில் மூன்றில் ஒரு பகுதியினர் கோரம் ஆவார்கள்.
2. பிரைமரி தேர்தல் நடைபெறும் இடம், தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கையை பிரைமரி தலைவர் பெயரில் விநியோகிக்க வேண்டும். மாவட்டத்தலைவர் ஃ மாவட்டச் செயலாளர் ஃ மாநில தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடைபெறும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும்.
3. தேர்தல் நடைபெறும் தேதியை பத்து நாட்களில் இருந்து ஆறு நாட்ளளுக்கு முன்னதாக அறிவிப்பு செய்யவேண்டும்.
4. பிரைமரி தேர்தல் பொதுக்குழு கூடியவுடன் அனைத்து உறுப்பினர்களின் கையெழுத்து மினிட் புத்தகத்தில் பெற வேண்டும். தேர்தல் முடிவுகளை விவரமாகப் பதிவு செய்திட வேண்டும்.
5. தேர்தலில் ஜனநாயக முறைப்படியாக மெஜாரிட்டி வாக்குகள் பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவர். இரு போட்டியாளர்களுக்கு இடையில் சரிசமமாக வாக்குகள் உள்ள நிலையில் பிரைமரி பொதுக்குழுக் கூட்டத் தலைவர் தனது வாக்குடன் தீர்வு வாக்கு ஒன்றும் அளிக்கலாம். முன்னிலை வகிப்பவர் வாக்கு அளிக்க கூடாது.
6. பிரைமரி நிர்வாகிகளாகப் பொதுவாக ஒரு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள் ஒரு செயலாளர், இரண்டு துணைச் செயலாளர்கள், ஒரு பொருளாளர். நிர்வாகக் குழுவுக்கு 5 ஃ 7 ஃ 9 ஃ 12 ஃ 15 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படலாம். அதிக பிரைமரி உறுப்பினர்கள் இருப்பின், துணைத் தலைவர் ஃ துணைச் செயலாளர்கள் எண்ணிக்கையை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.
7. பிரைமரி துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் பதவிகள் வார்டு அல்லது வட்டத்திற்கு ஒருவர் என்ற விகிதத்தில் பிரித்தளிக்க வேண்டும். துணைச் செயலாளர்கள் 45 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் நன்று. பிரைமரி, மாவட்டம், மாநிலம் ஆகிய நிர்வாகப் பொறுப்புக்களில், ஒருவருக்கு ஒரு பதவி என்றிருந்தால், மற்றும் சிலர் பணியாற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
8. ஓவ்வொரு பிரைமரியில் இருந்தும் பிரைமரி தலைவர், பிரைமரி செயலாளர் ஆகிய இருவருடன் நூறு உறுப்பினர்களுக்கு ஒருவர் என்ற ரீதியில் மாவட்ட பிரதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
9. உறுப்பினர் நான்காண்டு சந்தா ரூ5; ஃ- ( ரூபாய் ஐந்து மட்டும்) -ல் பிரைமரிக்கு ரூ.2ஃ- மாவட்டத்திற்கு ரூ1ஃ- மாநிலத்திற்கு 2ஃ- என்ற விகிதத்தில்
10. ஓவ்வொரு பிரைமரியிலும் சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விண்ணப்ப படிவங்களில் உள்ள எல்லா விவரங்களையும், பிரைமரி உறுப்பினர் பதிவு ஏடு ஒன்றில் பதிவு செய்திட வேண்டும். அந்த பதிவேட்டில் உள்ளபடிதான் மாநில முஸ்லிம் லீக் பதிவு ஏட்டில் பதிவு செய்யப்பட்டு, உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
11. பிரைமரி தேர்தல் மாநில தேர்தல் அதிகாரி, மாவட்ட தலைவர் - செயலாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும். இத்தேர்தலுக்கு முன்பாக பிரைமரி பொறுப்பாளர்கள், உறுப்பினர் படிவத்தையும், அதற்கான செயலாளர் இடம் வழங்க வேண்டும். பிரைமரி தேர்தல் நடைபெற்ற முழு விபரம் தலைமை நிலையத்திற்கு கிடைக்கப் பெற்றவுடன் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படும்.
12. பிரைமரி தேர்தல் அங்கீகாரச் சான்றிதழ்களில்;, அந்தந்த பிரைமரி - தலைவர், செயலாளர், பொருளாளர், ஆகியோரின் பெயர் மற்றும் முகவரி இடம் பெறும். இச்சான்றிதழ் வங்கி கணக்கு துவங்குதல், அரசு துறை காரியங்களுக்கு பயன் அளிக்கக் கூடியவைகளாகும்.
13. அகில இந்திய புதிய சட்ட விதிப்படி, இளைஞர் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எப்) சுதத்திர தொழிலாளர் ய+னியன் (எஸ்.டி.யு) , மகளிர் லீக் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அணிகளாகும். இந்த அணிகளின் அமைப்பாளர்கள் அனைத்து பிரைமரி;களிலும் தேர்வு செய்யப்பட வேண்டும்.
14. இளைஞர் லீக் அமைப்பாளர்களின் வயது வரம்பு 35 ஆகும், முஸ்லிம் மாணவர் பேரவை (எம். எஸ். எப்) அமைப்பாளர்களின் வயது வரம்பு 27 ஆகும், சுதந்திர தொழிலாளர் ய+னியன் (எஸ்.டி.யு) அமைப்பாளர்கள் தொழிலாளர்களுடன் தொடர்புடையவர்களாக இருத்தல் வேண்டும். மகளிர் லீக் அமைப்பாளர்களாக மகளிர் சுய உதவிக்குழு, கல்வி மற்றும் சமூக பணிகளாற்றும் பெண்களை தேர்வு செய்யவும்.
15. 2010 பிப்ரவரி மாதம் இறுதியில் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்பு தலைமை நிலையத்திலிருந்து வெளியிடப்படும். இத்தேர்தல் மாநில தலைவர், பொதுச் செயலாளர், பாராளுமன்ற - சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெறும் இத்தேர்தலுக்கு முன்பாக மாவட்ட தலைவர் - செயலாளர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரைமரிகளிலிருந்தும் பெறப்பட்ட உறுப்பினர் படிவத்தையும், அதற்கான
16. மாநில தலைமை நிலையத்தில் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் முழு விபரங்களையும் கணினியில் பதிவு செய்திட பிரத்தியேகமாக புதிதாக பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
17. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஊழியர்களின் முழு ஒத்துழைப்போடும் திட்டமிட்ட பணிகளாலும் தாய்ச்சபையை மேலும் வலிமை மிக்கதாக ஆக்கிடுவோம். நம் லட்சியப் பணிகளில் ஒற்றுமையுடனும், தியாக மனப்பான்மையுடனும் செயலாற்றி வெற்றிகள் பல கண்டிடுவோம். அல்லாஹ் அருள்வானாக வஸ்ஸலாம்.
- கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர்
மாநில பொதுச் செயலாளர்,
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்
(தமிழ்நாடு மாநிலம்)

முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநாடு இ.அஹமது சாஹிப், பேராசிரியர் கே.எம்.கே. பங்கேற்கின்றனர்

முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநாடு இ.அஹமது சாஹிப், பேராசிரியர் கே.எம்.கே. பங்கேற்கின்றனர்



இந்திய ய+னியன் முஸ் லிம் லீகின் மாணவர் அமைப்பான ஹமுஸ்லிம் மாணவர் பேரவை (எம். எஸ்.எஃப்) மாநாடு வரும் ஜனவரி 31ம் தேதி ஞாயிற் றுக்கிழமை சென்னை அண்ணாசாலை காயிதெ மில்லத் அரசினர் மகளிர் கல்லூரி பின்புறமுள்ள காயிதெ மில்லத் மணி மண்டபத்தில் நடைபெறுகிறது.
இத்திஹாதுல் உம்மத் ஹசமுதாய ஒற்றுமை| என்ற தலைப்பில் நடைபெறும் இந்த ஒரு நாள் மாநாட்டை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய ரயில்வே துறை இணை யமைச்சருமான இ.அஹமது சாஹிப் தொடங்கி வைக்கிறார்.

தேசிய பொதுச் செயலா ளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், கேரள மாநில முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில தலைவர் பி.கே. பைரோஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

சமுதாயப் பணிகளுக்கு மிகச் சிறப்பான பஙகளிப்பை செய்து வரும் முஸ்லிம் மாணவர் பேரவை, மதிக்கத் தக்க பண்முகத் தன்மை, சமூக நீதியை நிலை நாட்டுதல் ஆகியவற்றில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறது. தொடர்ந்து இப்பணி களில் இது அதிகமான கவனம் செலுத்தும்.
சென்னை மாநகரில் முஸ்லிம் மாணவர் பேர வையின் பணிகளை சிறப்பாக்குவதற்காகவும், விரிவு படுத்துவதற்காகவும் இம் மாநாடு வழி வகுக்கும்.

இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சென்னை எம்.எஸ்.எஃப் தலைவர் டி.கே. ஷாநாவாஸ் (90436 88959) பொதுச் செயலாளர் கே.கே. முஹம்மது நஸீர் (9043797856) பொருளாளார் சி.டி ஃபாரிஸ் (9043844248) உள்ளிட்ட நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்.

பேராசிரியர் வேண்டுகோள்

பெங்களளுருவில் ஜனவரி 15,16 தேதிகளில் நடை பெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் முஸ்லிம் லீக் மாணவர் பேரவையின் அமைப்புப் பணிகளை நாடு முழுவதும் உடனடியாக துவக்கி பணகளை முடிக்கி விட வேண்டுமென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டிற்கு பிறகு தமிழ்நாட்டில் நடை பெறும் முதல் நிகழ்ச்சி யான எம்.எஸ்.எஃப். மாநாட்டில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், தமிழகத்தின் பிற மாவட் டங்களில் உள்ள கல்லூரி, பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு ஒவ்வொரு ஊரிலும் எம். எஸ்.எஃப் துவக்குவதற் குண்டான முயற்சிகளை உருவாக்க வேண்டும் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அழைப்பு விடுத்துள்ளார்.

கமுதி காலவிருத்தி பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா

கமுதி காலவிருத்தி பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா

கமுதி,​​ ஜன.​ 22:​ ​ கமுதியில் பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் ஜமாத்தார் நிóர்வாகத்தில் உள்ள கலா விருத்தி துவக்கப் பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா,​​ விழா நினைவு புதிய கட்டடத் திறப்பு விழா,​​ கலாவிருத்தி மேனிலைப்பள்ளி துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை ​(ஜனவரி 24) நடைபெறுகிறது.

​ ​ ​ ​ ​ ​ துவக்க நிகழ்ச்சிக்கு பள்ளி கல்விக் குழு உறுப்பினர் எச்.​ அப்பாஸ் தலைமை வகிக்கிறார்.​ சென்னை-கமுதி முஸ்லிம் பொது நலச் சபை நிர்வாகிகள்

கமுதி ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

​ ​ ​ ​ ​ பள்ளி தாளாளர் கே.பி.எம்.​ முகம்மது அலி ஜின்னா வரவேற்கிறார்.​ ​

​ ​ ​ ​ மாலை 4.30 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சிக்கு கமுதி-சென்னை முஸ்லிம் பொது நலச் சபை தலைவர்,​​ வழக்கறிஞர் எஸ்.ஏ.அக்பர் தலைமை வகிக்கிறார்.

​ ​ ​ ​ ​ விழாவில் ரயில்வே இணை அமைச்சர் இ.​ அகம்மது,​​ எம்.பி.கள் ஜே.கே.​ ரித்தீஷ்,​​ இ.எம்.சுதர்சன நாச்சியப்பன்,​​ கே.​ முருகவேல் எம்.எல்.ஏ,​​ இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசீய பொதுச் செயலர் கே.எம்.​ காதர் முகைதீன்,​​ தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் டாக்டர் அப்துல் ரகுமான்,​​ இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச் செயலர் எம்.எம்.​ இதயத்துல்லா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

Friday, January 22, 2010

www.indianunionmuslimleague.in

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலமையின் அதிகாரப் பூர்வமான இணைய தளம்.அனைவரும் வருகை தந்து படியுங்கள் பரப்புங்கள்!இன்றைய செய்தி நாளைய வரலாறு! இந்திய முஸ்லிம்களின் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கும் சேவைகளுக்கும் தன் பணியை துவக்கியிருக்கிறது www.indianunionmuslimleague.in அகில இந்திய கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் அன்றாடம் தெரிந்து கொள்வோம்..!அனைவருக்கும் எடுத்துச் செல்வோம்..!

பயங்கரவாத எதிர்ப்பு, சமூக நல்லிணக்கம் வலியுறுத்தி குர்ஆன், ஷரீஅத் மாநாடுகள் மாநிலம் தோறும் நடத்த முடிவு

பயங்கரவாத எதிர்ப்பு, சமூக நல்லிணக்கம் வலியுறுத்தி குர்ஆன், ஷரீஅத் மாநாடுகள் மாநிலம் தோறும் நடத்த முடிவு

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் ஏழு செயல் திட்டங்கள் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவிப்பு



பெங்களூரு, ஜன,16-

பெங்களூருவில் நடை பெற்ற தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் தேசிய பொதுச்செயலாளர் பேரா சிரியர் கே.எம். காதர் மொகிதீன் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 7 செயல் திட்டங்களை வெளியிட் டார்.

அப்போது அவர் கூறிய தாவது:

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் என்பது இந்திய முஸ்லிம் உலமாக் களின் பரிசளிப்பாகும். தவிர, இந்திய சிறுபான் மையினரின் விவாத மேடையுமாகும்.

இந்திய வரலாற்றில் தேசிய ஒருமைப்பாடு, ஒற் றுமை, சமுதாய நல்லி ணக்கம், முஸ்லிம்களின் கலாச்சார அடையாளம் ஆகியவற்றை பாதுகாப்ப தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுதியான நிலைப்பாட்டை கொண்டு வந்திருக்கிறது.

முஸ்லிம்களின் தனிநபர் சொத்துக்களான மஸ்ஜித், மதரஸாக்கள், அடக்கத் தலங்கள், வக்ஃப் சொத்துக் கள் மற்றும் நமது ஷரீஅத் சட்டங்கள் ஆகியவற்றை காப்பாற்றி வருவதுபோல் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகையும் பாதுகாக்க நாம் கடமைப்பட்டிருக்கி றோம்.

ஏனென்றால், தேசிய சிறுபான்மையினரின் ஒரே பிரதிநிதித்துவ அரசியல் அமைப்பு அதுதான்.

தொண்டர்கள் மட்டத் தில் இருந்து இந்த ஸ்தா பனத்தை மேலும் வளர்க்க நமக்கு சரியான வழிகாட் டல் விதிகள் தேவை.

இந்த ஸ்தாபனத்தை வலுப்படுத்த சில செயல் திட்டங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

1-பயிற்சி முகாம்

ஒவ்வொரு மாநில தலைநகரத்திலும் முஸ்லிம் லீகின் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

35வயதிற்குட்பட்ட இளைஞர்களை பயிற்சிக் குட்படுத்த வேண்டும். நமது தேசியத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் அந்த முகாம்களில் பங்கேற்க வேண்டும்.

முஸ்லிம் லீக் பற்றிய வெளியீடுகள் பயிற்சி பெறுபவர்களுக்கு வழங்க வேண்டும்.

2- நிறுவனர் தினம்

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிறுவனர் தினத்தை (அதாவது மார்ச் 10-1948) ஒவ்வொரு மாநில முஸ்லிம் லீகும் கோலா கலமாக கொண்டாட வேண்டும். நமது கூட்ட ணிக் கட்சி தலைவர்களை யும் அதில் பங்கேற்கச் செய் யலாம்.

மத்திய மாநில அரசு களால் கவுரவிக்கப்பட்ட அறிஞர்களை வரவ ழைத்து இந்த நிறுவன நாள் விழாவில் பரிசுகள் வழங்க லாம்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் கவுரவிக்க லாம்.

3-காயிதெ மில்லத்

பிறந்த நாள்

ஒவ்வொரு மாநில முஸ்லிம் லீகும் ஜுன் 5-ம் தேதியை காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிபின் பிறந்த நாளை அனுசரிக்க வேண்டும்.

கட்சிக்காக உழைத்தவர் கள் தியாகம் செய்தவர் களை இந்த விழாவில் கவுரவிக்க வேண்டும்.

4. சமூக நல்லிணக்கம்

ஒவ்வொரு மாநில முஸ்லிம் லீகும் சமூக நல்லிணக்கத்திற்கான கருத்தரங்கு, மாநாடு ஆகியவற்றை நடத்த வேண்டும். இவற்றில் இஸ் லாமிய மார்க்க அறிஞர் கள், பிற மத அறிஞர்களை யும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

5. கமிட்டி அறிக்கைகள்

சச்சார் கமிட்டி அறிக்கை, மிஸ்ரா கமிட்டி அறிக்கை, லிபரான் கமிட்டி அறிக்கை, மத்திய மதரஸா கல்வி வாரிய மசோதா போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து விவா திக்க ஒவ்வொரு மாநில முஸ்லிம் லீகும் கூட்டங் கள் நடத்த வேண்டும். அந்த விஷயங்களில் நிபுணத்து வம் பெற்றவர் களை பங் கேற்கச் செய்ய வேண்டும்

6. குர்ஆன் -ஷரீஅத்

மாநாடுகள்

6. ஒவ்வொரு மாநில முஸ்லிம் லீகும் குர்ஆன் மாநில மாநாடு சீரத் மாநாடு, ஷரீஅத் மாநாடு போன்றவற்றை நடத்தி உல மாக்களையும், மஹல்லா ஜமாஅத் முத்தவல்லிகள் மற்றும் ஜமாஅத் பிரமுகர் கள் போன்றவர்களை பங் கேற்கச் செய்ய வேண்டும்.

7. பயங்கரவாத எதிர்ப்பு

தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டங்களையும் கருத்தரங்குகளையும் மாநாடுகளையும் ஒவ்வொரு மாநில முஸ்லிம் லீகும் நடத்த வேண்டும். அதில் சமூக இளைஞர் களை அதிக அளவில் ஈடு படுத்தச் செய்ய வேண்டும்.

இவைகள் தவிர சாதாரண மக்களின் பிரச்சினைகளுக்கான செயல் திட்டங்களையும் முஸ்லிம் லீகினர் மேற் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறினார்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: பொதுமக்களின் ஆதரவை திரட்டுவோம்

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: பொதுமக்களின் ஆதரவை திரட்டுவோம்
பெங்களூரு தேசிய பிரதிநிதிகள் மாநாட்டில் தேசிய தலைவர்இ.அஹமது முழக்கம்


பெங்களூரு, ஜன,16-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 2நாள் தேசிய பிரதி நிதிகள் மாநாடு கர்நாடக தலைநகர் பெங்களூருவில் சாதாப் மஹால் வளாகத்தில் நேற்று எழுச்சியுடன் துவங்கி யது.

நேற்று மாலை 4.30 மணி யளவில் துவங்கிய மாநாட்டில் பெங்களூரு சாதாப் பள்ளி வாசல் இமாம் மௌலானா முஹம்மது ரஹ்மத்துல்லா கிராஅத் ஓதினார்.

மறைந்த தலைவர்கள், குலாம் மஹ்மூத் பனாத் வாலா, பாலக்காடு ஷிஹாப் தங்ஙள் உள்ளிட்ட முஸ்லிம் லீகினரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சிறப்பு துஆ ஓதப்பட்டது.

கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் துஆ ஓதினார். தேசிய செயலாளர் தஸ்தகீர் ஆகா வரவேற்புரை யாற்றினார்.

தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமுhன பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிக்கை வாசித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய ரயில்வே இணை யமைச்சருமான இ.அஹமது பயங்கரவாத நடவடிக்கைகளில் எந்த முஸ்லிமும் பங்கேற்க முடி யாது என்றும், இஸ்லாமிய கொள்கைகள் நவீன தொழில் நுட்பத்திற்கு எதி ரானவை அல்ல என்றும் தெரிவித்தார்.

இ.அஹமது தனது உரையில் குறிப்பிட்டதா வது-

பாராளுமன்றம் தொடங்கிய காலத்திலி ருந்து நமது கட்சி அங்கே பிரதிநிதித்துவம் வகித்து வருகிறது. 1952லிருந்து 57 வரை காலஞ்சென்ற ஜனாப் பி. போக்கர் சாஹிப் பாராளுமன்றத்தில் ஏகப் பிரதிநிதியாக பணியாற்றி னார். அவர் ஒரு ஆளாக இருந்தாலும் மலபாரை சேர்ந்த அந்த பாரிஸ்டர் தனது மிருதுவான ஆனால் உறுதியான குரல் மூலம் தேசத்தின் முக்கியமான சட்டங்கள் நிறைவேற் றும் போது முக்கிய பணியாற்றி யிருக்கிறார். அதன் பிறகு மக்களவையில் காயிதெ மில்லத் முஹம்மது இஸ் மாயில் சாஹிப், இப்ரா ஹீம் சுலைமான் சேட் சாஹிப், சி.எச். முஹம்மது கோயா சாஹிப், எஸ்.எம்,. ஷரீப் சாஹிப், ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப், அபுதாலிப் சவுத்ரி, ஜி.எம். பனாத் வாலா, பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் போன்ற நமது தலைவர்கள் மக்கள வையில் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.

பாராளுமன்ற பிரதிநிதித்துவம்

அல்லாஹ்வின் அரு ளால் மக்களவைக்கு நான் 6 முறை தேர்ந்தெடுக்கப் பட்டி ருக்கிறேன். தற்போது மக்களவையில் எனது கூட் டாளிகளாக பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட இ.டி. முஹம்மது பஷீர், வேலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம். அப்துர் ரஹ்மான் ஆகி யோர் பணியாற்றி வருகி றார்கள்.

தற்போது மக்களவை யில் நாங்கள் 3 பேர் உறுப் பினர்களாக இருக்கிறோம்.

ராஜ்ய சபாவை பொறுத்தவரை காலஞ் சென்ற காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப், இப்ராஹீம் சுலைமான் சேட் சாஹிப். ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப், ஏ.கே. ரிபாயி சாஹிப், காஜா மொய்தீன், பி.வி. அப்துல் கோயா சாஹிப், ஹமீத் அலி ஸாம்நாத் சாஹிப், எம்.பி. கொரம்பயில் அஹமது ஹாஜி மற்றும் அப்துல் அலி சம்நாத் சாஹிப், எம்.பி. அப்துஸ் ஸமத் ஸமதானி போன்றோர் பல் வேறு கால கட்டங்களில் உறுப்பினர்களாக பணி யாற்றியிருக்கிறார்கள்.

தற்போது கேரளாவைச் சேர்ந்த பி.வி. அப்துல் வஹாப் சாஹிப் உறுப்பி னராக இருக்கிறார்.

தற்போதைய நிர்வாகிகள்

தற்போது இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் நிர்வாகிகளாக இருப்பவர் கள் வழக்கம்போல் சிறப் பாக பணியாற்றி வருகி றார்கள் என்பதை தேசியத் தலைவர் என்ற முறையில் நாம் மிகவும் நம்பிக்கை யோடு பார்க்கிறேன். நமது பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாஹிப், பொரு ளாளர் தஸ்தகீர் ஆகா, துணைத்தலைவர்கள் அஹமது பக்ஷ், இக்பால் அஹமது, செயலாளர்கள் அப்துல் ஸமத் ஸமதானி சாஹிப், நயீம் அக்தர், இஸ்மாயில் பனாத்வாலா, தாஹிம்ஷா ஜஹாங்கீர் மற்றும் குர்ரம் அனீஸ் உமர் ஆகியோர் அடங்கிய அணிக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

நமது மாநிலத் தலைவர் களுடன் இணைந்து நமது இயக்கத்தை எல்லா மட்டங்களிலும் உயர்த்த அல்லாஹ் அருள்பாலிப் பானாக.

கேரள மாநிலத்தில் ஹைதர் அலி சாஹிப் தங்ஙள் மற்றும் பி.கே.குஞ் ஞாலிக்குட்டி ஆகியோரின் தலைமையின் கீழ் இயக்கம் மிகப் பெரிய வாய்ப்பை பெற்று வருகிறது. அங்கே கம்ய+னிஸ்டு கட்சியின் புனிதமற்ற கூட்டணியின் செயல்களையும் மீறி 2 பாராளுமன்ற தொகுதி களை நாம் கைப்பற்றியி ருக்கிறோம். அங்கே மாநில சட்டப்பேரவைக்கும், ஊராட்சி மன்ற அமைப்பு களுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தனது வலுவை யு.டி. எஃப். கூட்டணிக்கு பல மாக அளித்திருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கே.எம். காதர் மொகிதீன் சாஹிப் மற்றும் இளமைத் துடிப் புள்ள கே.ஏ.எம். முஹம் மது அப+பக்கர் ஆகியோ ரின் தலைமையின் கீழ் கட்சி நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது. வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. துணை யுடன் நமது வேட்பாளர் அப்துர் ரஹ்மான் சாஹிப் வெற்றி பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நமது தமிழ்நாட்டு கிளை தஞ்சை யில் நடத்திய 3 நாள் பயிற்சி முகாம் மிக்க பயனை நல்கி யுள்ளது.

பி.ஜே.பி.

கடந்த தேர்தல்களில் பி.ஜே.பி. கட்சி கண்ட மோசமான பின்னடைவை நாம் கவனிக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான அவர்களது நிலைப்பாடு அவர்களுக்கு இனிமேல் உதவிகரமாக இருக்காது. பிராந்திய மத உணர்வு களை தூண்டி விட்டு நமது மக்களிடம் வெற்றி பெற முடியாது என்பது சமீ பத்திய உற்சாகமான பொது மக்களின் நிலைப்பாடா கும்.

2004-ல் நடைபெற்ற தேர்தலை வைத்து கணிக் கும் போது பி.ஜே.பி. 3.6 சதவீத வாக்குகளை இழந் திருக்கிறது. மத சிறு பான்மையினர்களை பொருத்தவரை இது மன ஊக்கத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு நிலையாகும். நமது நாட்டின் பன்முக கலாச்சாரத்தை அச்சுறுத் தக்கூடிய சங்பரிவாரின் தீவிர பாசிச மத நிலைப் பாட்டை நாம் தோலுரித் துக் காட்ட வேண்டும்.

சி.பி.எம்.

தங்களை ஏழை எளிய மக்களின் சாம்பியனாக தம்படடம் அடித்துக் கொள்ளும் இடதுசாரி கட்சிகள் குறிப்பாக சி.பி. எம். கட்சி உண்மையான நிலவரத்தை சமீபத்தில் சந்தித்துள்ளன. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மீது விஷத்தை உமிழ்ந்து நமது இயக்கத்தின் அடித் தளத்தை பலவீனப்படுத்த முயற்சித்த சி.பி.எம். மேற்கு வங்காளத்திலும், கேரளாவிலும் தோல்வி களை தழுவியது. அங்கெல் லாம் முஸ்லிம் வாக்குகளை கைப்பற்ற அவர்கள் மேற் கொண்ட நடவடிக்கைகள் பலனிக்கவில்லை. ஏழை எளிய மக்களுக்கும் அவர் கள் நன்மை செய்யவில்லை என்ற உண்மை நிலவரத்தை சச்சார் கமிட்டி வெளிப் படுத்தியுள்ளது.

மேற்குவங்காளத்தில் முஸ்லிம்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருக் கிறது. அவர்களின் துன்பங் களை துடைப்பதற்கு மாநில அரசிலும் எந்த செயல் திட்டமும் இல்லை.

கேரளாவில் கூட முஸ்லிம் லீக் வலுவாக இருந்தும் சி.பி.எம். தலை மையில் உள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசால் சிறுபான்மை யினர் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் திட்டங் களை நிறைவேற்ற முடிய வில்லை. சச்சார் கமிட்டி யின் பரிந்துரைகளின் மீது நடவடிக்கைகள் எடுப்ப தற்கு பதிலாக அவர்கள் பலோலி கமிட்டியை நியமித்தார்கள். இது அவர் கள் கட்சியிலும்கூட அதி ருப்தியை விளைவித்தது. சி.பி.எம். தலைவர்களின் உணர்வுப்ப+ர்வமற்ற நட வடிக்கைகளை வெளிப்ப டையாக காணலாம்.

பயங்கரவாதம்

நமது தேசம் மற்றும் நமது சமுதாய விவகாரங் கள் குறித்து ஆய்வு செய்ய இங்கே குழுமியிருக்கும் நாம் பல உண்மைகளை கவனிக்க வேண்டியுள்ளது. பயங்கரவாத நிகழ்வுகள் மற்றும் அது ஏற்படுத்திய சமூக மோதல்கள் நமது சமுதாயத்தை ஒரு மோச மான நிலையில் வைத் துள்ளது. ஒன்றுமறியாத அப்பாவி மக்களை கொல்லுகிற தீவிரவாத நடவடிக்கைகள் எதிலும் ஒரு முஸ்லிம் கூட பங் கேற்க முடியாது. ரத்தம் சிந் தும் வன்முறை தவிர்க்கப் பட வேண்டும்.

இஸ்லாம் அமைதியை யும், சமாதான சகவாழ் வையும் போதிக்கிறது. வாழ்க்கையை நிலை குலையச் செய்கிற எந்த முயற்சியும், நமது நம்பிக் கைக்கும், வாழ்க்கை முறைக்கும் எதிரானதாகும். நாம் ஜனநாயக வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டும். மக்களிடையே பிளவுகளையும், ப+சல் களையும் ஏற்படுத்தும் செயல்களில் நாம் பங்கேற்க முடியாது.

இந்திய முஸ்லிம்கள் என்பதில்

பெருமை கொள்வோம்

ஹநாம் முஸ்லிம்கள். அதேநேரத்தில் நாம் இந்தி யர்கள். நாம் நமது உன்னத மான நம்பிக்கையோடு ஒத்து போகும் வகையில் வாழ வேண்டியிருக்கிறது. அதேநேரத்தில், நாம் இந்த உன்னத தேசத்தின் மதிப்புக் குரிய குடிமக்களுமா வோம். நாம் பிரச்சினை களை தீர்க்க வேண்டிய நேரத்திலும் நெருக் கடிகளை தாண்ட வேண் டிய நேரத்திலும் அந்த நெருக்கடிகளையும் பிரச்சி னைகளையும் தீர்க்க முடி யாமல் செய்து அதிகரிக்கச் செய்கிற உத்திகளை கையா ளக் கூடாது.

உணர்ச்சிகளுக்கும், மனக் கொந்தளிப்புகளுக் கும் ஆட்பட்டு கிளர்ந் தெழுந்தால் அது கால ஓட்டத்தில் நம்மை பலவீ னப்படுத்தும். அதே நேரத்தில் முஸ்லிம்களின் மேன்மையை கெடுக்கும் முயற்சிகளுக்கும் சில பிற் போக்கு சக்திகள் நம்மை உலகின் கண்களில் சந்தே கப்படும் வகையில் மேற் கொள்ளும் நடவடிக்கை களை நாம் தடுத்தே ஆக வேண்டும்.

முஸ்லிம்களுக்கு எதி ராக பரப்பப்படும் தவறான பிரச்சாரங்கள் யாருக்கும் எந்த நன்மையும் செய்யாது.

கமிட்டிகளின் பரிந்துரைகள்

தற்போதைய தேசிய அரசியல் நிலவரத்தைப் பார்ப்போம். மதத் துவே ஷத்தை கிளப்பி பதவியை பிடிக்க சங்பரிவார் அமைப்புகளின் கொடிய விய+கங்களை லிபரான் கமிஷன் அறிக்கை வெளிப் படுத்தியதை நாம் அறி வோம். நான்கு நூற்றாண்டு களாக வழிபாட்டுத் தல மாக விளங்கிய பாபரி மஸ்ஜிதை இடித்த குற்ற வாளிகள் தண்டிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

தற்போது ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை மத்திய அரசிடம் உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி சிறுபான்மை மக்களுக்கும், வறுமைக்கோட்டுக் கீழே உள்ள மக்களுக்கும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று நம்புவோமாக.

நாடு முழுவதும்

பொதுமக்களின்

ஆதரவை திரட்டுவோம்

சச்சார் கமிட்டி மற்றும் ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை களின் பரிந்துரைகள் நிறைவேற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொது மக்களின் ஆதரவை திரட்ட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம், கட்டு மான மேம்பாட்டில் பங் கேற்பு போன்ற துறைகளில் முஸ்லிம்களும் மற்றும் பின்தங்கிய சமுதாயத்தின ரும் போதிய அளவில் கண்ணுக்குத் தெரியும் வகையில் வளர்ச்சியை அடைய அரசுகள் பொருத்தமான நிர்வாக நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வலியுறுத்துகிறது.

கல்வியில் முன்னேற்றம் அடையவும், சமூகரீதியில் வளர்ச்சியடையவும் முஸ்லிம் சமுதாயம் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு ஒரு முன்னேற்றமான மற் றும் துடிப்பான சமுதாய மாக விளங்க இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கடுமையாக உழைக்கிறது. பழைய பின்னடைவுகளிலி ருந்து விடுவித்துக் கொண்டு தனித்தன்மையுடன் விளங் கத் தொடங்கியிருக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நமது சமூகம் அரசியல் அழுத்தங் களை கொடுத்து கடந்த காலத்தை விட தன்னை மேன்மைபடுத்த வருகிறது.

ஒரு பக்கம் இந்துத் துவா அமைப்புகள் தொடர்ந்து நம் மீது எதிர்ப்பைக் காட்டு கின்றன. பல முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிராக சாட் டப்படும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் மத்தியி லே வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் ஒடுக்கப்பட்ட சமுதாய மான முஸ்லிம்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் உறுதியான நட வடிக்கைகள் காரணமாக அந்த இடர்ப்பாடுகளை முறியடிக்க நம்பிக்கையு டன் பார்க்கிறார்கள்.

மொத்தத்தில் ஒட்டு மொத்த நிலவரம் ஆரோக் கியமானதாக இல்லை. தொடர்ந்து நிகழ்ந்து வரும் பயங்கரவாதத்தால் நமது சமுதாயம் விளிம்புக்கு தள்ளப்பட்டிருக்கிறது. முஸ்லிமுக்கு எதிரான சக்தி கள் நம்மை ஆளுமையி லிருந்து விலக்க பாடுபடு கின்றன. இதை சில பகுதி களில் முஸ்லிம்க ளுக்கு வீடுகள் கொடுக்க மறுப்ப திலிருந்தும், நிறுவனங்கள் முஸ்லிம்களுக்கு வேலை கொடுக்க மறுப்பதிலி ருந்தும் தெரிந்து கொள்ள லாம்.

இந்த பரிதாப நிலைக்கு நமது சமுதாயத்துக்குள் இருக்கும் ஒரு சிறு குழுவினரே காரணம். அந்தப் பிரிவனர் முஸ்லிம் சமுதாயத்தினரை அரசியல் மற்றும் சமூகரீதியில் மேம் படுத்துவதற்கும் ஏழ்மையி லிருந்து விடுபடுத்திக் கொள்வதற்கும் அரசு மற்றும் வேலைவாய்ப்பில் மேம்படுத்திக் கொள்வதற் கான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அவர்கள் உணர்ச்சிப்ப+ர்வமான அல்லது சர்ச்சைக்குரிய விஷயங்களில் சுயலாபத் திற்காக ஈடுபடுகிறார்கள்.

முஸ்லிம்களுக்கு எதி ரான சக்திகள் பலப் படும் வகையில் தீவிரவாதிகள் தங்கள் பங்களிப்பை செய் கிறார்கள். அவர்களின் நட வடிக்கைகளை புனிதக் குர்ஆனின் கொள்கை களால் ஏற்றுக் கொள்ள முடியாது. புனிதக் குர்ஆன் அதிசயித்தக்க வகையில் ஆச்சரியமான, விசாலமான சகிப்புத்தன்மை மற்றும் பன்முகத்தன்மைக்கு துணை நிற்கிறது. மற்ற மத நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளாத ப+ஜ்ஜிய சகிப் புத்தன்மை உண்மையான கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்தாது. இப்படிப்பட்ட சூழ்நிலை உறுதியான அரசியல் நட வடிக்கைகள் மற்றும் மதச் சார்பற்ற சக்திகளின் துணை ஆகியவற்றின் மூலம் தான் தீர்க்க முடியும் என்று முஸ்லிம் லீக் உறுதியாக நம்புகிறது.

நிகழ்கால அரசியலில் நாம் முழுமையாக இணைத்துக் கொள்ள வேண்டும். சுதந்திரம டைந்து 60 ஆண்டுகள் ஆகியும் பெரிய சிறு பான்மை சமூகமான முஸ்லிம்களுக்கு முழு அளவில் அரசாங்கத்தில் பிரதி நித்துவம் கிடைக்க வில்லை என்பது அதிர்ச்சி தரக்கூடிய ஒரு உண்மை யாகும். குறிப்பாக, சச்சார் கமிட்டி அறிக்கையின் அறிக்கைகள் வெளியிட்ட பிறகு சிறுபான்மை முஸ் லிம் சமுதாயத்தின் சமூக மற்றும் அரசியல் அந் தஸ்து தேசிய ரீதியில் வேகமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விஷயமா கும்.

சச்சார் கமிட்டி தனது பரிந்துரைகளை வெளிப் படுத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனென் றால், இந்துத்துவத்தை அடிப்படையாக் கொண்ட சங்பரிவார் அமைப்புகள் அவற்றின் அரசியல் கரமான பி.ஜே.பி., தொடர்ந்து காங்கிரசை முஸ்லிம்களை தாஜா செய்யும் போக்கில் நடந்து கொள்கிறது என்று குற்றம் சாட்டி வருகின்றன. முஸ்லிம் சமுதாயம் அரசி யல்ரீதியிலும், சமூகரீதியி லும் தேச விரோதமானது என்று அவர்களுக்கு எதி ராக தொடர்ந்து பல பகுதி களிலிருந்து குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சச்சார் கமிட்டியின் பிரதான நோக்கம் முஸ்லிம்களின் அடையாளம், பாதுகாப்பு, மற்றும் சமவாய்ப்பு ஆகிய வற்றை ஆய்வு செய்யலாம். பிரதானமாக சமவாய்ப்பில் அதிக முக்கியத்துவம் காட் டப்படுகிறது. மேலே சொன்ன இரண்டு விஷயங் களை அதாவது அடையா ளம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு ஐக்கிய முற்போக்கு அரசு சிறப் பான நடவடிக்கை களை மேற்கொண்டிருக்கிறது. ஆனால், சமவாய்ப்பை பொறுத்தவரை இன்னும் அது ஒரு தடுப்பாகவே இருந்து வருகிறது. சம வாய்ப்பு சமுதாயத்தில் சமத்துவம் அல்லது சம வாய்ப்பு ஒரு முக்கியமான தூணாகும்.

ஒரு பன்முக சமுதா யத்தில் அனைத்து சமூகத் தினருக்கும் அரசிலும், வேலைவாய்ப்பிலும் சம வாய்ப்பை வழங்குவது அவசியமாகும். ஆனால், புள்ளி விவரங்கள் அப்ப டிப்பட்ட ஒரு இலக்கை தேசம் அடையவில்லை என்பதை காட்டுகிறது. பல்வேறு அறிக்கைகளின் மூலம் தேசத்தின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13.4 சதவீதம் என்பதை காட்டுகின்றன. ஆனால், அரசாங்கத்தில் அவர்களுக்கான வேலை வாய்ப்போ 4.9ஆகவே உள்ளது.

முஸ்லிம்கள் பெரிய அளவில் சிறுபான்மையின ராக இருக்கும் மாநிலங் களுக்குக்கூடி இந்த நிலை நீடிக்கிறது. மேற்கு வங்காள மக்கள் தொகை யில் 25.5 சதவீத மக்களாக இருக்கும் முஸ்லிம் சமு தாயம் தேசிய வேலை வாய்ப்பு அளவான 4.9ஐ விட குறைவாக உள்ளது.

நாடு முழுவதும்

சிறைகளில் வாடும்

அப்பாவி முஸ்லிம்கள்

நாம் அவசரமாக கவ னம் செலுத்த வேண்டிய இன்னொரு விஷயம் என்ன வென்றால் நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம் இளைஞர்கள் நியாயமற்ற முறையில் நெடுங்காலமாக சிறைகளில் வாடுவதாகும்.

மகாராஷ்டிர மாநிலத் தில் முஸ்லிம்களின் எண் ணிக்கை 10.6 சதவீதமாகும். ஆனால், அங்கே சிறைக ளில் வசிக்கும் மொத்த கைதிகளில் 32.4 பேர் முஸ்லிம்கள் ஆவர். நிகழ்த் தப்பட்டிருக்கும் குற்றங் களை நியாயமில்லை என்று நிரூபிக்கப்பட்ட பிறகு முஸ்லிம்கள் இந்த அளவுக்கு புள்ளி விவரம் ஏன் என்பதை ஆராய வேண்டும்.

குஜராத் மாநிலத்தின்

கொடூர சட்டங்கள்

குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரை முஸ்லிம் களிடையே குற்ற விகிதாச் சாரம்அதிகமாக இருப் பதற்கு பல கவலை அளிக் கும் காரணங்கள் இருந்தா லும் காவல் துறை மற்றும் புலனாய்வுத் துறை ஆகி யோருடன் உள்ள பாகு பாடு மனப்பான்மையும் காரணமாகும். குஜராத்தில் நடைமுறையில் உள்ள கொடுமையான சட்டங்க ளும், முஸ்லிம்களின் கைது எண்ணிக்கை அதிகரிப்ப தும் காரணமாகும். பெரும் பான்மையான முஸ்லிம் இளைஞர்களுக்கு தங் களை பாதுகாத்துக் கொள் வதற்கு நல்ல வழக்கறி ஞர்கள் கிடைப்பதில்லை. பல இளைஞர்கள் ஆண் டுக்கணக்கில் சிறையில் வாடுகிறார்கள். சித்திர வதை மற்றும் மனித உரிமை மீறல்கள் நடவ டிக்கைகள் மூலம் அவர் கள் வாழ்க்கை நரகமாக்கப் பட்டிருக்கிறது.

அப்பாவி சிறைவாசிகள்

விடுவிக்கப்பட வேண்டும்

இந்த நிலையில், முஸ்லிம் லீகின் கோரிக்கை என்னவென்றால் குற்றம் சாட்டப்பட்டுள்ள எல் லோருக்கும் நியாயமான விசாரணை கிடைக்க வேண்டும் என்பதும் எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் சிறைகளில் வாடுபவர் களை விடுவிப்பது என்பது தான்.

வன்முறை, சட்டமீறல், தேச விரோத நடவடிக் கைகள் ஆகியவற்றை முஸ்லிம் லீக் ஒருபோதும் ஆதரிப்பதும் இல்லை. ஆனால் அதேநேரத்தில் குற்ற சாட்டப்பட்டிருப்ப வர்களுக்கு நேர்மையான விசாரணை தாமதமின்றி வழங்கப்பட வேண்டும்.

சட்டத்துக்கு புறம்பாக நீண்ட காலமாக சிறைச் சாலைகளில் வைக்கப் பட்டிருக்கும் இளைஞர் களிடம் துவேஷ உணர்வு துளிர் விடுகிறது.

வளர்ச்சித் திட்டங் களை ஈடுபட முடியாமல் இருப்பது முஸ்லிம்கள் எதிர்நோக்கும் மிக மோச மான பிரச்சினையாகும். மேற்கு வங்கம், குஜராத் போன்ற மாநிலங்களில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் பெரும்பாலும் அரசு சார்பான திட்டங் களாகவே உள்ளன.

நவீன தொழில்நுட்பத் துக்கு முஸ்லிம் சமுதாயமும் அவர்களின் மதரீதியிலான கொள்கைகளும் ஏற்புடை யவை அல்ல என்று நீண்ட காலமாக ஒரு தவறான எண்ணம் முஸ்லிம் எதி ரான சக்திகளால் சொல்லப் படுகிறது. இது எந்த வகையிலும் உண்மையல்ல. வரலாற்றுரீதியாக பார்த் தால் நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கு அவர்கள் முன்னணியில் இருப்பதை கண்கூடாக பார்க்கலாம்.

நவீன தொழில்நுட் பத்தில் அவர்கள் தங்களை ஐக்கியப்படுத்தியிருப்பதை காணலாம் இந்த உண் மையை கேரளா, கர்நா டகா மற்றும் மகாராஷ்டி ராவில் வெளிப்படையாக காணலாம். ஆனால் வட நாட்டில் துரதிருஷ்டவச மாக இந்த நிலை இல்லை.

புதிய தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பத் தின் உலகளாவிய நிலை ஆகியவற்றில் முஸ்லிம்கள் எவ்வளவுக்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார் களோ அந்த அளவுக்கு அந்த சமூகத்தின் சக்தி மற்றும் ஆற்றல் வெளிப் படும்..

தொழில்நுட்பங்களில் வலிமை பெறுவதுதான் அதிகாரத்தில் பிரதிநித் துவம் அடைவதற்கு வழி வகுக்கும். புதிய தொழில் நுட்பத்தை நாம் கை கொள்ளாவிட்டால் பழமையான சமுதாயமா கவும், ஒதுக்கப்பட்ட சமு தாயமாகவும் தொடர்ந்து இருக்கக் கூடிய நிலமை ஏற்படும்.

புனித குர்ஆன் விரும்புவதுபோல் நமது சமுதாய மக்களுக்கு சரி யான பாதையை காட்டு வதும், சிறந்த சமுதாயமாக அவர்கள் விளங்குவதற்கு உதவி செய்வதும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மேலான கடமையாகும்.

இவ்வாறு இ.அஹமது தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜும்ஆ தினத்தில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜும்ஆ தினத்தில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்


திண்டுக்கல், ஜன.15-

திண்டுக்கல் மாவட்டத் தில் முஸ்லிம் லீக் உறுப் பினர் சேர்க்கும் பணி சிறப்பாக நடைபெறுகிறது.

ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் முக்கிய நகரங்களில் உறுப்பினர் சேர்க்கும் பணிக்காக மாவட்டத் தலைவர் கே.கே.சுலைமான் (மன்பஈ) தலைமையில் மாவட்டச் செயலாளர் எம்.ஏ. பாருக், மாவட்டப் பொருளாளர் அல்தாப் ஹ{சைன், மாவட்ட அமைப்பாளர் டாக்டர் சர்புதீன் மற்றும் இப்ராம்ஷா, இல்யாஸ் மவ்லானா, தௌபீக் உசேன், எஸ்.கே.பி. ஜெய் லான் உடன் சென்று ஜும்ஆ பயான் செய்த வுடன் உறுப்பினர் சேர்க் கும் பணி நடைபெறுகிறது.

பழனி பெரிய பள்ளி வாசல், பாலசமுத்திரம், நத்தம் மேலத் தெரு பள்ளிவாசல், கன்னிவாடி, தொட்டணம்பட்டி, வேம் பார்பட்டி, கோவிலூர், வேல்வார் கோட்டை, வேடசந்தூர், ஆத்தூர், சித்த யன்கோட்டை மற்று முள்ள ஊர்களில் உறுப் பினர் சேர்க்கும் பணி சிறப்பாக நடைபெறுகிறது.

மானூர், பிரிச்சிபாளை யம், கீரனூர், மேல்கரை பட்டி, கனையம்புத்தூர், பாம்பட்டி ஊர்களில் ஷர்புதீனும், புதுஆயக்குடி, பழைய ஆயக்குடி, ஒட்டன் சத்திரம், ஜவ்வாதுபட்டி ஊர்களில் பாருக்கும் கவ னித்து வருகின்றனர்.

பெரியகுளம் நகர் ஸ்டேட் பாங்க் காலனியில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

பெரியகுளம் நகர் ஸ்டேட் பாங்க் காலனியில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்


பெரியகுளம், ஜன.15-

பெரியகுளம் நகர் ஸ்டேட் பாங்க் காலனி பள்ளிவாசலில் 8-1-10 அன்று தேனி மாவட்ட முஸ்லிம் லீகின் ஆலிம்கள் அணி அமைப்பாளர் முஹம்மது சாதிக் ய+சுபி ஜும்ஆ பயான் செய்தார்.

ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன் உறுப்பினர் சேர்ப்புப் பணி துவங்கியது. அப்போது நகரச் செயலா ளர் நிஜாத் ரஹ்மான், மாவட்ட துணைச் செயலா ளர் அப்துல் நசீர், ஆர்.கே. அப்துல் காதர், ஆர்.எம். டி.சி. அப்துல் காதர், லியாகத் அலி, அசன் முஹம்மது, அப்பாஸ் ஆகிய முஸ்லிம் லீகினர் உறுப்பினர் சேர்ப்புப் பணியை துவக்கினர்.

பள்ளிவாசல் தலைவர் அப்துர் ரஹ்மான் உறு துணையாக இருந்தார். அப்போது ஜமாஅத்தார் கள் இப் பகுதிகளில் உள்ள மதுபானக்கடையை மாற்றம் செய்ய வேண்டும் என்னும கோரிக்கையை முஸ்லிம் லீகினர் ஏற்று மாவட்ட ஆட்சித் தலை வரைச் சந்தித்து ஆவண செய்வதாக உறுதியளித் தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தொகுதி வாரியாக முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் தொகுதி வாரியாக முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை


திருவள்ளூர், ஜன.15-

திருவள்ளூர் மாவட்டம் சட்டமன்ற தொகுதி, பொன்னேரி சட்டமன்ற தொகுதி, கும்மிடிப்ப+ண்டி சட்டமன்றத் தொகுதி, திருவெற்றிய+ர் சட்டமன்ற தொகுதிகளில் விடுபட்ட பகுதிகளில் 5-1-2010 செவ்வாய்க்கிழமையன்று மாவட்டத் தலைவர் ஏ.கே. செய்யது இப்ராஹீம் தலை மையில் மாவட்ட பொரு ளாளர் எஸ். குலாம் மைதீன், மாவட்ட வர்த்க அமைப்பாளர் எஸ். சிக்கந்தர், நகர பொறுப்பா ளர் எஸ். சேக் முஹம்மது ஆகியோர் முன்னிலையில் மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புழல் பகுதியில் முன்னாள் ஜமாஅத் தலைவர் முகைய் யதீன், சூரப்பட்டு கிராம லீக் தலைவர் அப+ஹ{ ரைரா, செயலாளர் லத்தீப் முன்னிலையில் முஸ்லிம் லீக் உறுப்பினர்களாக புழல் பகுதியிலும் சூரப் பட்டு கிராமப்பகுதியிலும் பதிவு செய்து கொண்டனர்.

அடுத்து காவாங்கரை ஜமாஅத் செயலாளர் எம். உசேன் மைதீன், முன்னாள் ஜமாஅத் தலைவர் காசிம், முன்னாள் பொருளாளர் முஸ்தபா முன்னிலையிலும், நகர லீக் தலைவர் எம். உசேன் மைதீன், செயலா ளர் ஏ. சயியுல்லா முன்னி லையிலும் முஸ்லிம் லீக் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர்.

செங்குன்றம் பகுதியில் ஆயிஷா பள்ளிவாசல் ஜமா அத் செயலாளர் முஹம்மது இஸ்மாயில், நகர முஸ்லிம் லீக் தலைவர் ஏ. முஹம்மது இஸ்மாயில், மூசா ஆகி யோர் முன்னிலையில் முஸ் லிம் லீக் உறுப்பினர்களாக பதிவுசெய்து கொண்டனர்.

இலவம்மேடு ஜமாஅத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன், புங்கமேடு ஜமா அத் தலைவர் ரகீம்பாய், நந்தியம்பாக்கம் தலைவர் ஜின்னா, இமாம் அஜ்ஸ் ஆகியோரின் முன்னிலை யிலும் லீக் உறுப்பினர்கள் பதிவு செய்து கொண்டனர்.

கும்மிடிப்ப+ண்டி சட்ட மன்ற தொகுதிக்கு உட் பட்ட எனாவ+ர் பள்ளி வாசல் தலைவர் இப்ரா ஹீம், நகர முஸ்லிம் லீக் செயாளர் முஜிபுர் ரஹ் மான் , இமாம் காசிம் முன்னிலையிலும், காரைக் காடு குப்பம் முன்னாள் ஜமாஅத் தலைவர் எஸ். அப்துல் முன்னா சாஹிப் முன்னிலையிலும் லீக் உறுப்பினர்கள் பதிவு செய்து கொண்டனர்.

திருவொற்றிய+ர் சட்ட மன்றத்துக்குட்பட்ட எண்ணூர் பகுதியில் ச.வ.மு. நகர் பள்ளிவாசல் பொரு ளாளர் ஏ.எம். செய்யது ஹமீத், இமா ஷாஹி ஆகியோர் முன்னிலையி லும், விம்கோ நகர் பள்ளி வாசல் தலைவர் ரஹீம், பள்ளிவாசல் செயலாளர் தப்லீக் செய்யது இப்ரா ஹீம், பொருளாளர் ரஹ் மத்துல்லா முன்னிலையி லும், சிங்கிலிமேடு ஜமா அத் தலைவர் சம்சுதுன் முன்னிலையிலும் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் பதிவு செய்து கொண்டனர்.

வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய வாய்ப்பு

வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய வாய்ப்பு


தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அனைத்து கிராமங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் பதிவுசெய்வதற்கும், ஏற்கனவே உள்ள விவரங்களில் திருத்தங்கள் செய்வதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி நிலை அலுவலர் (பி.எல்.ஓ.). அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தனது அடையாள அட்டையுடன் வர உள்ளார்.

வாக்காளர்களின் விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் மற்றும் புகைப்படத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் ஆகியவற்றை குறிப்பெடுப்பார்.

01-01-2009 அன்று 18 வயது நிரம்பியவர்கள் படிவம் 'பி'-யில் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரி கொண்டு வரும் படிவத்தில் கையொப்பமிட்டுக் கொடுக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு வயது மற்றும் இருப்பிடச் சான்றிதழை அவரிடம் அளிக்க வேண்டும்.

அந்த அலுவலர் வீடுகளுக்கு வருகை தந்ததற்கு அடையாளமாக அந்த வீட்டின் முகப்புக் கதவில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்.

சம்பந்தப்பட்ட அதிகாரி 22-1-2010க்குள் வராமல் இருப்பின் அது பற்றி மாவட்ட ஆட்சித் தலைவர், சென்னை மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் தெரிவிக்கலாம்.

இதுபற்றிய முழு விவரமும் www.ceotamilnadu.nic.in - என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

(இது பற்றிய விவரத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரைமரி மாவட்ட அமைப்புகள் அனைத்தும் அச்சிட்டு வீடுகளில் விநியோகிக்கவும், பள்ளிவாசல்களில் அறிவிக்கச் செய்யவும் வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது).

செய்தி: தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Indian Union Muslim League Website

Indian Union Muslim League Website

A new website on Indian Union Muslim League www.indianunionmuslimleague.in was launched today by Mr. E. Ahamed, President, Indian Union Muslim League and Minister of State for Railways in a simple function held at his residence. In a statement to the media persons Mr. Ahamed said, “this new and comprehensive website will provide complete details of party activities to its members and supporters all over world. The website will be updated regularly with relevant news from all over the country the website also contains Muslim League History from the very beginning.”

The website contains the details of party functionaries, from National and state level, and a brief history about its former and present leaders, as well as the links to important issues like the Librahan Commission Report, Justice Ranganathan Commission Report etc.

The website also contains the documents and papers that were presented and read at the National Delegates Conference held in Bangalore on 15-16 January 2010. More importantly the paper presented by Mr. E. Ahamed – “Vision 2020 and the Blue Print” for the future course of action by the party.

National Secretary Khorrum Omer welcomed the gathering.

Khorrum Omer
National Secretary

Khurshid backs Islamic banking concept of Kerala

Khurshid backs Islamic banking concept of Kerala
A.M. Jigeesh

New Delhi, January 19, 2010


The Centre has offered a helping hand to Kerala in revoking a stay order by the state high court against setting up of an Islamic bank.
Noting that the court order could hamper investment opportunities in the country, Union minority affairs minister Salman Khurshid said the Centre would coordinate with the state government in dealing with the issue legally.
Speaking at the editors' conference on social sector issues on Monday, Khurshid backed the concept of Islamic banking.
"A lot of other countries are snatching investment from Islamic countries," he said. The country is being deprived of such funds for the lack of an Islamic banking system, Khurshid added.
He said the high court would be informed of the Centre's stand on the matter. "I think the finance ministry will deal with the matter," he told the gathering. He said, if needed, the banking norms should be amended to comply with the Islamic banking system.
Two weeks ago, a division bench of the Kerala High Court had stayed "all further moves" by the state government-owned Kerala State Industrial Development Corporation (KSIDC) to set up an Islamic bank in the state. Former union minister Subramanian Swamy had approached the high court complaining that the proposed Islamic bank was against India's secular credentials and its banking norms.
The Kerala government cleared the project after a feasibility study found that Islamic bank was a viable proposition in Kerala. A company was also registered to take the process forward. The share capital of the proposed bank had been fixed at Rs 1,000 crore.
According to the Islamic banking concept, the bank will not pay any interest to customers. A Sharia board can decide what sort of investments the bank can make. The bank will also have Sharia-compliant banking products.
Profits made out of the investments will be distributed to shareholders.
Convener of National Committee on Islamic Banking H. Abdur Raqeeb had met Khurshid last June on the feasibility of interest- free Islamic banking in India.
"Islamic banking will be beneficial for the marginalised and the minorities in terms of microfinance. Major investment from the Gulf countries could also be attracted," Raqeeb said.
He said if London, Singapore, Tokyo and Hong Kong can become "hub and house of Islamic Finance & Banking", Mumbai and Kochi can also follow suit.
Khurshid also said the Centre preferred a cautious approach on the issue of reservation for minorities. "Our manifesto is clear on this. We will apply Karnataka- Tamil Nadu model, which says backward among Muslims should get reservation, according to their population," he said.

http://indiatoday.intoday.in/site/Story/79856/LATEST%20HEADLINES/Khurshid+backs+Islamic+banking+concept+of+Kerala.html

Wednesday, January 20, 2010

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய மாநாட்டில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறைகூவல்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய மாநாட்டில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறைகூவல்
http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=937

பெங்களுரு, ஜன.17-
மதச்சார்பற்ற ஜன நாயக கோட்பாடுகளே நமது லட்சியம். சிறு பான்மையினரின் உரிமை களை பாதுகாப்பதில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் என்றைக்கும் முன்ன ணியில் நிற்கும்|. அடிமட் டத்திலிருந்து இயக்கத்தை உருவாக்கும் பணியில் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறைகூவல் விடுத்துள் ளார்.
கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் இரண்டு நாள் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியப் பிரதிநிதிகள் மாநாட்டில் ஹஇயக்க வளர்ச் சியும் - எதிர்காலமும்| குறித்து தாக்கல் செய்த அறிக்கையில் அவர் குறிப் பிட்டுள்ளதாவது-
பார்வையும் - பயணமும்
நமது புனிதமான பய ணத்தை உறுதிப்படுத்துவ தற்கும், எதிர்காலத்தில் நமது செயல் திட்டத்தை வகுக்கவும், நமது கட்சியின் தேசிய மாநாட்டிற்காக இங்கே கூடியிருக்கிறோம். நமது முன்னே நமது கட்சியின் 60 ஆண்டு கால வரலாற்றுச் சிறப்பு உள்ளது. நமது பலமும், பலவீனமும் நமக்கு தெரிந் திருக்கிற நிலையில் தற் போதைய சூழ்நிலையை ஆய்வு செய்வதற்கும், எதிர் காலத்தில் நமது கட்சியை வலுப்படுத்தத் தேவையான உத்திகளை அமைப்பதற் கும் நாம் இங்கே குழுமியி ருக்கிறோம். எனது இந்த அறிக்கை தற்போதைய நிலவரத்தை வழிப்படுத்த பயன்படும். இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் சென்னையில் 1948-ம் ஆண்டு மார்ச் 10-ல் கீழ்க் கண்ட கொள்கை குறிக் கோளுடன் ஸ்தாபிக்கப் பட்டது.
அ) இந்திய விடுதலை இந்தியாவின் கவுரவம் மற்றும் இந்திய மக்களின் வளர்ந்து வரும் பலம், செழிப்பு மற்றும் மகிழ் வுக்கு பாடுபடவும் அவற்றை பேணவும், பாது காக்கவும், பராமரிக்கவும், உதவி செய்வதும்.
ஆ) நாட்டில் முஸ்லிம் கள் மற்றும் இதர சிறு பான்மையினரின் உரிமை கள், நலன்கள் ஆகிய வற்றை அடைவது மற்றும் பாதுகாப்பும்
இ) இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் மற்ற சமூகத்தினருக்கும் இடையே பரஸ்பர புரிந் துணர்வு, நல்லெண்ணம், சுமூகம், நட்புணர்வு, ஒற் றுமை, ஐக்கியம் ஆகிய வற்றை மேம்படுத்துவது மாகும்.
சோர்வடைந்த நேரங் களிலெல்லாம் இந்த சமு தாயத்தை சரியாக வழி காட்டிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் ஸ்தபாகர் காலஞ் சென்ற காயிதெ மில்லத் முஹம்மது இஸ் மாயில் சாஹிப் மற்றும் அவரது சகாக்களுக்கு நாம் நன்றி செலுத்துவோம்.
மதச்சார்பற்ற ஜன நாயகம் மற்றும் சமூகநீதி ஆகியவற்றிற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஆரம்பிக்கப்பட்ட காலங் களிலிருந்து பாடுபட்டு வரு கிறது. இந்திய முஸ்லிம் களின் கலாச்சாரத் தன் மையை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு அவர்களை தேசிய நிர்மா ணத்தில் பங்கு பெறவும், காலமாற்றத்தின்போது ஏற்படும் சவால்களை மதஅர்ப்பணிப்போடு - தேசியப்பார்வையோடு சந்திக்க அவர்களை தயார்ப்படுத்த முஸ்லிம் லீக் லட்சியமாக கொண் டுள்ளது.
1952-லிருந்து இன்று வரை பாராளுமன்றத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பிரதிநித்துவம் கொண் டுள்ளது. கேரளாவில் ஒரு கட்டத்தில் மந்திரி சபையை நடத்திச் செல் லும் மிகச் சிறந்த சரித்திரப் பதிவை கொண்டிருந்தது. 1979-ல் கட்சியின் மிகச் சிறந்த தலைவரான காலஞ் சென்ற சி.எச். முஹம்மது கோயா கேரளாவின் முதல மைச்சரானார். இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பிற மதச்சார்பற்ற கட்சி களுடன் ஐக்கிய ஜனநாயக கூட்டணி அமைத்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சிறப்பாக செயல்பட்டு வந்தது.
கேரளாவில் செய்யது அப்துர் ரஹ்மான் பாபக்கி தங்ஙள், கே.எம். சீதி சாஹிப், பானக்காடு பி.எம்.எஸ்.ஏ. ப+க்கோயா தங்ஙள் மற்றும் செய்யது முஹம்மது அலி ஷாஹிப் தங் ஙள் ஆகியோரின் சிறந்த தலைமையின் கீழ் அது ஒரு அரசியல் சக்தியாக விளங்கியதை யாராலும் மறக்க முடி யாது. கேரளா வில் பல் வேறு காலகட் டங்களில் கூட்டணி மந்திரி சபையில் அமைச்சர்கள் பங்கு பெற்று கல்வி, உள்துறை, தொழில்கள், பொதுப் பணி, உள்ளாட்சி, சமூக நலம், மீன்வளம் போன்ற பல்வேறு இலாக் காக் களை நிர்வகித்திருக் கிறார் கள்.
மேற்கு வங்கத்தில் 1970-ம் ஆண்டு ஆரம்ப கட்டத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அமைச்சர்கள் இருந்திருக் கிறார்கள். அஜாய் முகர்ஜி முதல்வராக இருந்த மந்திரி சபையில் ஏழு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு ஏ.கே.ஏ. ஹஸ னுஸ் ஸமான் அமைச்ச ராக பணியாற்றியிருக்கி றார். கேரளா மற்றும் மேற்கு வங்கத்திற்கு அப் பாற்பட்டு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு தமிழ் நாடு, பாண் டிச்சேரி, மகா ராஷ்டிரா, கர்நாடாக, உ.பி. அஸ்ஸாம் ஆகியவற்றில் எம்.எல்.ஏ.க் கள் இருந்திருக் கிறார்கள்.
டெல்லி மாநகராட்சியி லும் வேறு சில மாநகராட் சியிலும் முஸ்லிம் மேயர் கள் பணியாற்றியிருக்கி றார்கள்.
மதச்சார்பற்ற ஜனநாயக கோட்பாடுகளின் பின்னே இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுதியாக நிற்கிறது. மதச்சார்பற்ற சக்திகள் அமைக்கும் ஜனநாயக அமைப்புகளில்தான் முஸ்லிம்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என் பதை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உணர்ந்தி ருக்கிறது. மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்தால்தான் முஸ்லிம் களின் அடையாளம், சமூ கத்தின் பாதுகாப்பு ஆகிய வற்றை உறுதிப்படுத்த முடி யும் என்பதை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுதியாக நம்புகிறது. முற்போக்கு -மதச்சார்பற்ற சக்திகளுடன் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கூட்டணி வைப்பதானது தேசப்பற்றோடு கூடிய சிறந்த எதிர்காலத் திட்டம் என்பதை காலம் நிரு பித்திருக்கிறது.
சிறுபான்மையினர்களின் உரிமைகளை பாதுகாப்ப தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் எப்போதும் முன்னணியில் இருந்திருக்கி றது. இந்த தேசத்தின் சட்ட வடிவமைப்புகளில் முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகள் பிரதிபலிப்ப தற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் காரணமாக இருந்திருக்கிறது. வழி பாட்டுத் தலங்கள் பாது காப்பு சட்டம், விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு சட் டம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக சட்டம் ஆகியவை முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் செல்வாக்கை அறிந்து கொள்ள சில எடுத்துக்காட்டுகளாகும்.
தேசிய அரசியல் அரங்கில் இந்த புதிய நூற்றாண்டின் தொடக் கமே இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் முக்கியத் துவத்தை வெளிப்படுத்தி யுள்ளது. ஐக்கிய முற் போக்கு கூட்டணியில் ஒரு அங்கமாக இருந்தபடி சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் ஆத ரவை அந்த கூட்ட ணிக்கு திரட்டுவதில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பெரும் பங்கை அளித்தது. 2004 மற்றும் 2009-ல் ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசில் இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் பிரதி நிதித்துவம் வகித்தது. தற்போது மக்களவையில் அதற்கு 3 உறுப்பினர்களும், ராஜ்ய சபையில் ஒரு உறுப்பினரும் உள்ளார் கள்.
ஜி.எம். பனாத்வாலா சாஹிப் மறைவுக்குப் பிறகு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்ட இ. அஹமது தற்போது ரயில்வே துறையின் இணை யமைச்சராகி யிருக்கிறார். 2004-ல் அவர் வெளியுறவுத் துறை இணையமைச்சராக பணியாற்றியிருக்கிறார். இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசத்தின் மதச்சார் பின்மையை பலப்படுத்து வதில் ஒரு முக்கிய பங்காற்ற முடியும் என்பதை நிரூபிக் கும் வகையில் அதற்கான அங்கீகாரமாக இது அமைந்துள்ளது. பொது மக்களின் மென்மையான நடுநிலையுடன் கூடிய பார்வையை இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் பிரதி நிதித்துப்படுத்துகிறது.
தீவிரவாதம் மற்றும் வன்முறையை அது கடுமையாக எதிர்க்கிறது. மதவெறி அமைப்புகள், பிரிவினை சக்திகள் ஆகிய வற்றை அது கடுமையாக எதிர்க்கிறது. தேசத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக கட்டுமானத்தை வலுப் படுத்த சமுதாயத்தில் அரசின் விருப்பத்தை வலுப்படுத்துவதில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு சிறப்பான பணி இருக் கிறது.
சமூக நீதி, கூட்டணி ஆளுமை ஆகியவற்றுக் காகவும் பாடுபடுகிறது. அரசு பணிகளில் முஸ்லிம் களுக்கும் மற்ற நலிந்த பிரி வினர்களுக்கும் அவர் களின் மக்கள் தேவைக் கேற்ப இடங்களை ஒதுக் கீடு செய்ய அது போராடு கிறது. சச்சார் கமிட்டி அறிக்கையில் கண்டுள்ள படி மிகப் பரிதாப நிலையி லிருக்கும் முஸ்லிம் சமுதா யத்தினை மேன்மைப் படுத்த தேவையான திட் டங்களை அரசு நிறைவேற் றும் என்று நம்புகிறது. ஏழை மக்களுக்கு அரசின் அதிகாரத்தை அளிப்பதே இன்றைய தேவை என் பதை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உணர்ந் திருக் கிறது.
இயக்கத்தை வலுப் படுத்த சில வழிமுறைகள்:
1. சமூக அமைப்பை கலைக்க விரும்புகிற மற்றும் பெரும்பான்மை சமூகத்தின் மனதில் விஷத்தை தூவுகிற மத வெறி அமைப்புகளின் பேரபாயம். அவர்களின் காலம் கடந்து போன கோஷங்களான இந்தியமய மாக்குதல், கலாச்சார பண்பாடு, இந்துத்துவா போன்றவை பாசிச எண் ணத்தோடு மத சிறுபான்மையினரின் பாது காப்பு மற்றும் அடையா ளத்தை அச்சுறுத்துவ தாகும். நமது தேசத்தின் பன்முக கலாச்சாரத்தை மேலும் சிறப்பாக்கும் வகை யில் சமூக நல்லிணக்கம், உணர்வு ஒற்றுமை, பரஸ் பர இரக்கம், எல்லோர் மீதும் அன்பு காட்டுதல் ஆகியவற்றின் பின்னால் நாம் உறுதியாக இருக்கி றோம்.
2. சில தீவிரவாத குழுக் களின் தீய செயல்பாடுகள் சமூகத்தின் நன்மதிப்பை கெடுக்கின்றன. அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதி கள் அல்ல. ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம் கள்தான் என்ற ஒரு பொய்ப்பிரச்சாரம் முஸ்லிம்களை உலகத்தின் கண்களில் ஐயப்பாட்டு டன் பார்க்கக்கூடிய அபாயகரமான பிரச்சார மாகும். தன்னைத் தானே தீமை மிக்க மதம், காதல் ஜிஹாத் போன்ற திறமை யற்ற சொல் பிரயோகங்கள் ஊடகங்களில் பாகுபாட்டு நிலையைக் காட்டுகின்றன. இது சமுதாயத்தின் பல் வேறு பிரிவுகள் சமாதான சகவாழ்வுக்கு எதிரான தாகும். நமக்கு எதிராக தூண்டி விடப்படும் இந்த அவதூறுகளுக்கு எதிராக இஸ்லாம் காட்டும் அமைதி வழியை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
3. ஜனநாயக அரச மைப்பு முறை அடிமட்ட மக்களுக்கும் அதிகாரம் சென்றடையும் நோக்கத் தையும், வளர்ச்சியை பரவ லாக்கும் நோக்கத்தையும் கொண்டிருக்கிறது. எந்த அளவுக்கு அதிகாரப் பகிர்வு நிகழ்கிறதோ அந்த அளவுக்கு வளர்ச்சியும் - தன்மையும் - பரிணாமமும் அதிகரிக்கும். அரசியல் சட்டம் கொடுத்துள்ள அதிகாரத்தின்படி பல் வேறு வளர்ச்சித் திட்டங் களை நிறைவேற்றுவதில் உள்ளாட்சி அமைப்புகள் அதிகளவில் பங்கேற்க உரிமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உள் ளாட்சி மட்டத்திலும், ஊரக தலைவர்களின் செயல்பாடும் பெரிய அளவில் பங்கு வகிக்கின் றன. இதனால் அடிமட்டத் திலிருந்து திறமையான தலைமை உருவாக அவசியம் ஏற்பட்டுள்ளது.
4. ஒரு சமூகத்தின் வளர்ச்சியின் அளவு கோல் அது பெற்றிருக்கும் கல்வித் தகுதியைப் பொருத்தே இருக்கிறது. எனவே, சமுதாய மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கியுள்ள நிலையை மாற்ற கவனம் செலுத்த வேண்டும். மொத்த சமுதாயமும் கல்வி முன்னேற்றத்தை வலி யுறுத்த வேண்டும்.
5. சமூக தீமைகளுக்கு எதிராக தொய்வில்லா போராட்டம் நிகழ்த்தப்பட வேண்டும். சமூகத்தின் இளைஞர்களும், மாணவர் களும் மத நெறிமுறைகளை கடைப்பிடித்து கவர்ந்தி ழுக்கும் தீமைகளிலிருந்து விலகிக் கொள்ளும் பக்கு வத்தை அடைய வேண்டும். உலமாக்கள், கல்வியாளர் கள், இளைய தலைவர்கள் ஆகியோரின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏழைகள், தேவைப்படுவோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவும் கொடைத் தன்மை வாய்ந்த நடவடிக்கைகளை ஊக்கு விக்க வேண்டும்.
அடிமட்ட தொண்டர் கள் மட்டத்திலிருந்து இயக்கத்தை வலுப்படுத் தும் பணியில் இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். கடந்த காலங் களில் கிடைத்த சிறந்த அனுபவங்களின் அடிப்ப டையில் இதனை நாம் மேற்கொள்ள வேண்டும். பல்வேறு மாநிலங்களில் புதிய கமிட்டிகள் அமைக் கப்பட்டிருப்பது மகிழ்ச்சி யான விஷயமாகும். இயக் கத்துடன் அதிக அளவில் திறமைசாலிகளும், இளை ஞர்களும், கல்வியாளர் களும், சிந்தனையாளர் களும் இணைவது வர வேற்கத்தக்கது.
உண்மையான நிலையை அறிந்து கொள் ளவும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு செய்யக் கூடிய பணிகளை நிர்ணயம் செய்யவும் நாம் பல்வேறு விஷயங்கள் குறித்து விரி வான ஆலோசனை மேற் கொண்டு தகுந்த செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறியுள்ளார்.


உண்மையான மக்கள் சேவகர்
மூத்த அரசியல் அனுபவசாலி
ஜோதிபாசு மறைவுக்கு பேராசிரியர்
கே.எம். காதர் மொகிதீன் இரங்கல்

பொதுவுடமைக் கட்சியின் முதுபெரும் தலைவர் வங்கத்துச் சிங்கமெனப் பாராட்டப் பெற்ற ஜோதிபாசு அவர்களின் மறைவு, இந்திய மக்களுக்குப் பொதுவாக ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பாக அமையும்.
கம்ய+னிஸ்டு கொள்கை-தத்துவம்-போக்கு நோக்கு ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட ஜோதிபாசு என்றால் உயர்வாக மதித்துப் போற்றி வந்த ஒரு பாரம் பரியம் இந்திய ஜனநாயகத்துக்கு உரியதாகி விட்டது.
தொழிலாளர் வர்க்கத்தினர் ஏற்றம் பெற எண்ணியும் பலவித காரியங்கள் பண்ணியும் புதிய இடது சாரி சரித்திரத்தை இந்தியாவில் படைத்தவர்களில் ஜோதிபாசு தலையாயவர்.
எல்லாருடைய பிரச்சினைகளையும் தமது பிரச்சினை களாகக் கருதி அவற்றுக்குத் தீர்வு காண்பதில் மிகுந்த ஆர்வமும் தூர நோக்கும் உடையவராக விளங்கியவர். சிறுபான்மையினரின் முன்னேற்றத்துக்கு அவர் துவக்கி வைத்த திட்டங்கள் மேற்குவங்க அரசால் தொடர முடியாமல் போயிருக்கின்றன.
ஜோதிபாசு அவர்கள் இன்றைய அரசியல் அரங்கில் மூத்த அனுபவம் பெற்ற நிதானமான தலைவராக எல்லோராலும் போற்றப்பட்டு வந்தவர்.
அணுமின் சக்திக்கான ஒப்பந்தம் பற்றி மார்க்சீய கம்ய+னிஸ்டு கட்சி எடுத்த முடிவினால் சென்றமுறை மார்க்சீய கம்ய+னிஸ்டு கட்சி மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டபோது, அது அவசர மான முடிவு என்ற கருத்தைக் கொண்டிருந்தவர் ஜோதி பாசு அவர்கள்.
சில காலமாக உடல் நலம் குன்றி இருந்த அவர், இப்பொழுது இறுதி முடிவை எய்திவிட்டிருக்கிறார்.
கம்ய+னிஸ்டு இயக்கத் தோழர்களுக்கும், அவரது பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறது. இந்திய ஜனநாயகம் ஒரு சிறந்த அறிஞரை உண்மையான மக்கள் சேவகரை-மூத்த அரசி யல் அனுபவசாலியை இழந்து நிற்கிறது என்ற உணர்வில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அவரின் மறைவுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.
இவ்வாறு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய மாநாடு அனைத்து மாநிலப் பிரதிநிதிகள் பெங்களுருவில் குவிந்தனர்
தாரூல் உலூம் சபிலுர் ரஷாதில் தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு

பெங்களுர்,ஜனவரி 15-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு இன்றும் நாளையும் கர்நாடகா தலைநகர் பெங்களுருவில் நடை பெறுகிறது. இம்மாநாட் டில் பங்கேற்பதற்காக காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பிரதி நிதிகள் வருகை தந்துள் ளனர்.
மாநாட்டு ஏற்பாடு களை பார்வையிடுவதற்கும் பணிகளை முடிக்கிவிடுவ தற்கும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் இ.அஹமத் சாஹிப், தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் பெங்களுர் வருகை தந்துள்ளனர். அவர்களுக்குப் பிரபல மான தாருல் உலூம் சபிலுர் ரஷாத் அரபிக் கல்லூரியில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது.
தேசிய மாநாடு
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பிரதிநிகள் மாநாடு பெங் களுருவில் ஜனவரி 15,16-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந் தது. இம்மாநாட்டில் அனைத்து மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அமைப்புப் பணிகள் மற்றும் செயல்பாடுகளை பற்றி அந்தந்த மாநில தலைவர் அல்லது செயலா ளர்கள் அறிக்கை சமர்ப் பிக்கின்றனர். ஆதன்மீது விவாதம் நடைபெறும்.
""""இலக்கு 2020|| என்ற பொதுவான இலட்சனை யில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எதிர்காலம் திட்டம்பற்றி கருத்தரங்கு நடைபெறுகிறது. இம் மாநாட்டில் தேசிய நிர் வாகிகள் அனைத்து மாநில நிர்வாகிகள் மற்றும் பிரதி நிதிகள் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பெங்களுரு வருகை தந்துள்ளனர்.
வரவேற்பு
பெங்களுர் வருகை தந்துள்ள இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹமது, தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோருக்கு தாருல் உலூம் சபிலுர் ரஷாத் அரபிக் கல்லூரியில் நேற்று முன்தினம் மஹ்ரிப் தொழுகைக்குப்பின் உற்சாக வரவேற்பு அளிக் கப்பட்டது.
50 ஆண்டு பாரம்பரிய சிறப்புமிக்க இக் கல்லூரி யின் முதல்வர் கர்நாடக அமீரே ஷரிஅத் மவுலானா, முஃப்தி அஷ்ரப் அலி ரஷாதி அவர்கள் தலைமை யில் நடைபெற்ற இந்த வர வேற்பில் அக்கல்லூரியில் பயிலும் நூற்றுக்கணக் கான மாணவர்களும் ஆசிரியர்களும் அணி வகுத்து நின்று வரவேற் பளித்தனர்.
அமீரே ஷரிஅத்திற்கு தேசிய மாநாட்டில் பங் கேற்று வாழ்த்துரையாற்ற தாய்ச்சபை தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். அதனை பெருமிதத் துடன் ஏற்றுக்கொண்ட மௌலானா அஷ்ரப் அலி ஹஜ்ரத் சபிலுர் ரஷாதின் பட்டமளிப்பு விழாவிற்கு தாய்ச்சபை தலைவர்கள் கள் பங்கேற்க வேண்டு மென அழைப்பு விடுத்தார் அதை தலைவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். பின்னர் """"அல்லாஜு அக்பர், முஸ் லிம் லீக் ஜிந்தாபாத்|| என்ற முழக்கத்துடன் அந்த கல்லூரி மாணவர்கள் வழியனுப்பினார்கள்.
இந்த வரவேற்பு நிகழ்ச் சியில் தேசிய பொருளாளர் தஸ்தகீர் இப்ராஹம் ஆகா, தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் அரூர் காலக், பொதுச் செயலாளர் கே. ஏ.எம். முஹம்மது அப+ பக்கர், கர்நாடக மாநில நிர்வாகிகள் இனாம் தார், ஜாவிதுல்லாஹ், ஷபியுல் லாஹ், மற்றும் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட் டனை செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ் மாயில், நரி முஹம்மது நயீம், முஸ்தாக் உள்ளிட் டோர் கலந்து கொண்ட னர்.
சிறப்பான ஏற்பாடுகள்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாடு நடைபெரும் சாதாப் ஈத்கா வளாகத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. சுhதாப் ஈத்கா மைதானம் பெங்களுரில் பிரதான இடத்தில் அமைந் துள்ளது. 75 ஆண்டுகால வரலாற்று பெருமைமிக்க இந்த வளாகத்தில் ஈத்கா மைதானம் முஸ்லிம் அடக்கஸ்தலம், திருமண மண்டபம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த வளாகத்திற்குள் மஸ்ஜிதே சாதாப் என்ற பள்ளிவாச லும், மத்ரஸே சாதாப் என்ற அரபிக் கல்லூரியும் உள்ளன. இதில் பெண் களுக்கான தையல் பயிற்சி நிலையம், நடுநிலைப்பள்ளி ஆகியவையும் செயல்படு கின்றன.
பேங்களுரில் உள்ள மஸ்ஜிதே லபாபின், மஸ்ஜிதே பேபாரியானா, மஸ்ஜிதே காஜி மஹல்லா, மஸ்ஜிதே லால் என்ற ஜாமிஆ மஹ்ரூப் ஆகிய நான்கு பள்ளிவாசல்களின் சார்பில் கூட்டாக நிர்வகிக் கப்படும் இந்த வளாகம் ஈதாகாயே ஜதீத் அறக்கட் டளை என்ற பதிவு செய்யப்பட்டு அதன் தலைவராக எச். முஹம்மது இப்ராஹிம் சாஹிப் செயல்படுகிறார். இங்கு 40 ஊழியர்கள் பணியாற்று கின்றனர். இந்த அறக்கட் டளை சார்பில் மாணவர் கல்வி உதவித்தொகை ஏழை எளியவருர்களுக்கு மருத்துவ உதவித்தொகை, அநாதைகளுக்கு ஜனாஸா நல்லடக்கத்திற்காக பல் வேறு உதவிகள் செய்யப் பட்டு வருகின்றன.
இந்த சிறப்பிற்குரிய இடத்தில்தான் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுவது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாகும்.

IUML conference news

Our IUML conference news updated in the site.

http://www.muslimleaguetn.com/hqreleases.asp?id=163

-Kayal Muslim

Saturday, January 16, 2010

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க முயற்சி மேற்கொள்வோம் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் உறுதி

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க முயற்சி மேற்கொள்வோம் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் உறுதி

வாரம் 2 நாட்கள் மட் டுமே இயக்கப்படும் சென்னை - திருச்செந்தூர் ரயில் சேவையை தினமும் இயக்கும் வகையில் தேவை யான முயற்சிகளை செய் வேன்என்றும், வாரம் தோறும் வெள்ளிக்கிழமை யன்று ஜும்ஆ நேரத்தில் இயக்கப்பட்டு வரும் அந்த ரயிலின் நேரத்தை மாற்ற துரித நடவடிக்கை எடுப் பேன் என்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் உறுதியளித்தார்.

திருச்செந்தூர் சட்ட மன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சென்னைவாழ் திருச்செந் தூர் சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பில் பாராட்டு விழா ராயபுரம் பாருக் மஹாலில் நேற்று நடை பெற்றது. இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனின் சேவை களை பாராட்டி பேசினார்.

அப்போது அவர் குறிப் பிட்டதாவது.

திருச்செந்தூர் இடைத்தேர்தலில் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள அனிதா ராதா கிருஷ்ணன் அனைத்து சமுதாய மக்களிடமும் நற் பெயரையும், நல்ல மதிப் பையும், செல்வாக்கையும் பெற்றுள்ளார். குறிப்பாக சிறுபான்மை முஸ்லிம் சமுதாய மக்களுடன் நெருங்கிப் பழகி அவர் களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தேவை களை நிறைவேற்றித் தரக் கூடியவராக திகழ்கிறார்.

இடைத் தேர்தலின் போது திருச்செந்தூர் தொகுதியில் முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் காயல்பட்டினம், உடன் குடி, குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பல ஊர்களில் அவருக்காக நானும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநிலப் பொதுச்செயலாளர் அப+பக்கர், மாநில செய லாளர் காயல் மஹப+ப் மற்றும் திருப்ப+ர் சத்தார் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரம் மேற் கொண்டோம். நாங்கள் சென்ற இடங்களிலெல் லாம் அந்த பகுதி வாழ் மக்கள் அனிதா ராதா கிருஷ்ணனை தங்கள் குடும்பத்தின் ஒருவராகவே கருதி அன்பு பாராட்டி யதை நேரடியாக கண்டுணர்ந்தோம்.
தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாக காயல்பட்டி னத்திலே மிகப் பிரம்மாண் டமான பிறைக்கொடி பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணி அனிதா ராதாகிருஷ்ணனின் வெற்றியை அறிவிக்கும் விதமாக அமைந்தது. அவர் வெற்றி பெறுவார் என்பது உறுதியாக தெரிந்தாலும் வாக்கு வித்தியாசம் தான் தெரியாமல் இருந்தது. இன்று அதுவும் தெரிந்து இந்த பாராட்டு விழா நடைபெற்று அதில் நானும் பங்கேற்று வாழ்த் துகிறேன்.

இந்திய அரசியல் வரலாற்றிலேயே தேர்தலின் போது வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மட்டும் தொகுதி பக்கம் சென்று பிரச்சாரத்திற்காக மக்களை சந்திக்காமலேயே மக்களிடம் வாக்கு சேகரிக் கச் செல்லாமலேயே பல ஆயிரம் வாக்கு வித்தியாசத் தில் வெற்றிபெறக்கூடிய தலைவராக கண்ணியத்திற் குரிய காயிதெமில்லத் அவர் கள் திகழ்ந்தார்கள். வேட்பு மனு தாக்கல் செய்ய தொகுதிக்கு செல்லும் அவர்கள் பிறகு தேர்தல் முடிந்ததும் வெற்றியை தேடித் தந்த தொகுதி மக்களுக்கு நன்றி சொல் லத்தான் தொகுதிக்கு செல் வார்கள். அப்படிப்பட்ட மக்கள் செல்வாக்கு படைத்த காயிதெமில்லத் அவர்களுக்குப் பின்னால் அத்தகையதொரு மக்கள் செல்வாக்கு பெற்ற வேட் பாளராக அனிதா ராதா கிருஷ்ணன் திகழ்வதை காண முடிகிறது.

அவர் அனைத்து சமு தாய மக்களிடமும் நல்ல மதிப்பைப் பெற்றுள் ளார். தொகுதி மக்களுக்கு தேவையானவற்றை உடனுக்குடன் நிறைவேற் றித் தருவதில் அக்கறையு டன் காணப்படுகிறார். இங்கு என்னிடம் ஒரு கோரிக்கையை வைத்தார். மத்திய ரயில்வே இணைய மைச்சராக இருக்கும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் இ. அஹமது அவர்களிடம் ஒரு கோரிக்கையை வலியு றுத்தி உடனடியாக நிறைவேற்றித் தருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார்.

தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னை . திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் தினமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நான் நிச்சயமாக இந்த கோரிக்கையை உரிய முறையில் நிறைவேற்றித் தர என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய் வேன்.

தற்போது வாரம் 2 நாட்கள் இயக்கப்படும் சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ நேரத்தில் இயக்கப் படுவதால் முஸ்லிம் பயணி கள் ஜும்ஆ தொழுகையை இழக்க நேரிடுகிறது என்ற ஏக்கம், மனக்கவலை முஸ்லிம்கள் மத்தியில் நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. இந்த குறையை போக்க விரைந்து நடவ டிக்கை எடுப்பேன் என் பதை தெரிவித்துக் கொள் கிறேன். என்னைப் பொறுத் தவரையில் நான் துபையில் பணியாற்றிய காலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு துபையிலிருந்து இந்தியா வுக்கு இயக்கப்படும் ஏர்-இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் இயக்கப் பட்டதால் முஸ்லிம்கள் தொழுகையை இழக்கும் சூழல் நிலவியதால் துபையி லுள்ள இந்தியத் தூதரகத் தில் போராடி அந்த நேரத்தை மாற்றித் தந்த அனுபவம் எனக்கு இருப் பதால் இந்த ரயில் நேரத் தையும் மாற்றித் தருவதற் கான முயற்சி யிலும் வெற்றி பெறுவேன் என்ற நம் பிக்கை எனக்கு உள்ளது.

அதேபோன்று திருச் செந்தூர் எக்ஸ்பிரஸ் தினமும் இயக்கத் தேவை யான முயற்சிகளை செய் வேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்செந்தூர் தொகுதி யைப் பொறுத்தவரை உங்களுக்கென ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தாலும் என்னையும் உங்களது நாடாளுமன்ற உறுப்பினராகவே கருதி உங்கள் தொகுதிக்கு தேவை யானவற்றை என் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள என்னை எப்பொழுதும் பயன்படுத்திக் கொள்ள லாம். நான் உங்களுக்காக உழைக்க தயாராக இருக் கிறேன் என்பதை தெரிவித் துக் கொள்கிறேன். இவ்வாறு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசினார்.

Tuesday, January 12, 2010

காலமானார்

காலமானார்

மணிச்சுடர் நாளிதழ் அலுவலகப் பணியாளர் ஏ.ஆர். இக்பால் அஹமது தாயார் மஹ்மூதாபீ சென்னை ராயபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (10.01.2010) மாலை காலமானார். அவருக்கு வயது 70.

அன்னாரின் ஜனாஸா சென்னை ராயபுரம் பர்குந்தா மஸ்ஜிதில் இன்று பிற்பகல் ஜனாஸா தொழுகை நடத்தப் பட்டு திருவெற்றிய+ர் தாங்ஙள் மையவாடியில் நல்லடக் கம் செய்யப்பட்டது.

தகவலறிந்து தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகளும் மணிச்சுடர் நாளிதழ் பணியாளர்களும் நேரில் சென்று ஆறுதல் கூறி, அன்னாரின் மஃக்பிரத்திற்காக துஆ செய்தனர்.

ஈரோடு உமர்பாரூக் ஹஜ்ரத் இல்லத் திருமணத்தில் தலைவர் பேராசிரியர் பேச்சு

ஈரோடு உமர்பாரூக் ஹஜ்ரத் இல்லத் திருமணத்தில் தலைவர் பேராசிரியர் பேச்சு


ஈரோடு, ஜன, 11-

சங்கைக்குரிய ஆலிம் பெருமக்களை கண்ணியப் படுத்தும் இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.

இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திற்கு ஆபத்தில்லா மல் அதைப் பாதுகாப்பது எங்களின் உயிர் மூச்சான கொள்கை என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாள ரும், தமிழ்மாநில தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட் டார்.

ஈரோடு தாவ+திய்யா அரபிக் கல்லூரியின் முதல் வரும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கௌரவ ஆலோசக ருமான மௌலானா எம்.எஸ். உமர் ஃபாரூக் தாவ+தி ஹஜ்ரத் அவர்களு டைய இல்லத் திருமணத் தில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

இத்திருமணத்தில் பங்கேற்று வாழ்த்துகின்ற அருமையான வாய்ப்பை நான் பெற்றுள்ளேன்.

ஓரு ஆசிரியரின் இல்லத் திருமணத்தில் ஒரு மாண வன் கலந்துகொள்வதைப் போன்ற உணர்வோடுதான் நான் இங்கு கலந்து கொள் கிறேன்.

இந்த திருமணத்தில் கலந்து கொள்வது ஒரு பெரும் பாக்கியம். கார ணம், இந்த மார்க்கத்தை தாங்கி நிற்கும் தூண்க ளான சங்கைக் குரிய உலமாப் பெருமக்களில் பலர் இந்நிகழ்ச்சியிலே பங்கெடுத்துள்ளார்கள். மௌலானா நாஜிர் ஹஜ் ரத் டி.கே. நயினார் முகம் மது அவர்கள், மாவட்ட காஜி மௌலானா முஃப்தி கிஃபாயத்துல்லா, வேலூர் பாகியாத் சாலிஹாத் பேரா சிரியர் மௌலனா மஹ் மூதுல் ஹசன், மௌலானா சலீம் ரஷாதி உள்ளிட்ட மார்க்க மாமேதைகளெல் லாம் கலந்து கொண்டு வாழ்த்துகின்ற இந்த சங்கைக்குரிய மஜ்லிஸில் கலந்து கொள்வதே ஒரு பெரும் பாக்கியம்தான்.

ஆலிம்கள் கூடியிருக் கும் இந்த அவவையில் எங் களைப் போன்றவர்கள் வந்து பங்கெடுத்திருப்பது அவர்களிடத்திலிருந்து நாங்கள் பலவற்றை தெரிந்து கொள்வதற்காக கத்தான்.

முஸ்லிம் லீகிற்கு

துணை நிற்பவர்

ஈரோட்டைப் பொறுத் தவரையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை கட்டிக் காத்து வளர்த்த கே.கே. அப்துல் சமது அவர்களா கட்டும், அதற்குப்பின் ஷாகுல் ஹமீது அவர்களா கட்டும், முத்தவல்லி அலா வுதீன் அவர்களாகட்டும், காதர் சாகிப் அவர்களா கட்டும், அவர்களுக்குப் பின் இன்றைக்கு தலை மையேற்று நடத்துகின்ற கலீபுல்லா அவர்களாகட் டும் இந்த நீண்ட நெடிய பாரம்பரியத்தில் அனைவருடனும் நெருங்கி பழகி அவர்களுக்கெல் லாம் நல்ல ஆலோசனை களை வழங்கி தாய்ச் சபைக்கு வலு சேர்க்கின்ற ஒரு மாபெரும் பணியை உமர் பாரூக் ஹஜ்ரத் அவர் கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

அவர்கள் ஒரு சிறந்த ஆலிமாக மட்டுமன்றி, நல்ல சிந்தனைக்குரிய எழுத் தாளராக இருந்து பல் வேறு ஆக்கங்களை எழுதி வெளியிட்டு ஒரு நல்ல விழிப்புணர்ச்சியை ஏற் படுத்தியிருக்கிறார்கள். ஹஜ்ரத் எழுதிய சட்ட நுணுக்கங்கள், ஷரீஅத் சட்ட பாதுகாப்பு, விளக் கங்களே கிடைக்காமல் இருந்த பல விஷயங் களுக்கு விளக்கம் கிடைக் கின்ற வகையில் அவர்கள் எழுதிய ஆக்கங்கள் மிகப் பெரும் பயனளித்தன.

திருமணம், நபகா, மதாஃ, மஹர் போன்ற விஷ யங்களுக்கு கிடைத்த விளக்கத்தை வைத்துத் தான் இருட்டில் இருந்த நான் வெளிச்சத்திற்கு வந் திருக்கிறேன் என பாராட்டே கிடைத்தது.

இந்த விளக்கத்தின் அடிப்படையில்தான் நாடாளுமன்றத்தில் ஷரீ அத் சட்ட பாதுகாப்பு மசோதா கொண்டுவந்து நம்முடைய தேசியத் தலை வர் குலாம் மஹ்மூது பனாத்வாலா அவர்கள் ஆணித்தரமாக வாதம் புரிந்தார்கள்.

உலமாக்களின் பணி சமுதாயத்திற்கு தேவை

எனவே, உலமாக்களின் பங்கு இந்த சமுதாயத்திற்கு தேவை. தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஆலிம்களை கண்ணிப் படுத் தவறியதே இல்லை. மார்க்க விஷங்களில் ஆலிம்கள் தரக்கூடிய விளக்கங்களை ஏற்று அதன்படி தான் செயல்பட வேண்டும் என்பது இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடு.

மார்க்க விஷயங்களில் அரசாங்கமோ, நீதிமன்றங் களோ, பாராளுமன்ற, சட்டமன்றங்களோ தினிக்கின்ற கருத்துக்களை யெல்லாம் ஏற்க முடியாது. மார்க்க விஷயங்களில் ஆலிம்கள் தரும் விளக்கங் களை மட்டும்தான் ஏற்றுக் கொள்ளமுடியும். எனவே, உலமாக்களை மதித்துப் போற்றி கண்ணியப்படுத்து வதை முஸ்லிம்கள் தங்கள் கடமையமாக கருத வேண் டும்.

ஆலிம் பெருமக்களுக்கு ஈரோட்டில் தருகின்ற கண் ணியம் தனி முக்கியத்துவம் வாய்ந்தது. சமுதாயத்தில், முக்கியப் பிரமுகர்களாக விளங்குகின்றவர்களெல்லாம் இந்த கண்ணியத்தை வழங்கி வருகிறார்கள். பல பெரியவர்கள், பிரமுகர்கள் எந்த வேறுபாடுமில்லாமல் ஆலிம்பெருமக்களுக்கு இங்கே கண்ணியம் அளித்து வருகின்றனர். இதை எல்லோரும் பின் பற்ற வேண்டும்.

மார்க்கக் கல்வியோடு

உலகக் கல்வியும் தேவை

இந்த திருமணத்தில் மணமகனாக வீற்றிருக்கக் கூடிய அஷ்ரப் ஹ{சைன் ஆலிம், ஹாபிழ் பட்டங் களோடு எம்.ஏ., எம்ஃபில்., பட்டங்களையும் பெற் றுள்ளார். மணமகளாக வீற்றிருக்கக்கூடிய எம். முபீனா அவரும் ஒரு பட்டதாரி என்பது நமக் கெல்லாம் மகழ்ச்சியைத் தருகிறது.

இஸ்லாமிய மார்க்கம் உலகத்திற்கே எடுத்துக்காட் டான ஒன்று, அதை உலகத் திற்கு கொண்டு செல்ல வேண்டுமானால் அதற்கு கல்வி தேவை, ஆங்கிலம் மட்டுமல்லாமல் பல மொழிகளில் அறிவு தேவை, மதரஸாக்களில் மார்க்க கல்வியை பெறுவ தோடு மட்டுமன்றி ஆங்கி லம் உள்ளிட்ட பல மொழி களையும் நாம் கற்க வேண்டும்.

மார்க்கத்தை நாம் கற்று நமக்குள்ளேயே இஸ் லாத்தை போதிக்கின்ற காலம் போய், உலகத்தின் மனித சமுதாயத்திற்கு கற் றுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் மானுட சமுதாயம் இஸ்லாம் என் றால் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு ஆசைப்படு கின்றது, அதைப் பின்பற்ற முன் வருகின்றது. எனவே, மார்க்கத்தோடு உலகக் கல்வி என்பது அவசியமாகி விட்டது.

குர்ஆன் இல்லாமல்

உலகக் கல்வி இல்லை

இஸ்லாமிய அடிப் படை கொள்கைகளை தெரிந்திருக்காத எந்த உலகக் கல்வியும் நிலைத் திருக்காது. குர்ஆனின் அற்புத ஆற்றலை உணராத கல்வி அறிவு அஸ்திவாரம் இல்லாத படிப்பாக மட்டும்தான் இருக்கும்.

சமீபத்தில் நம் நாட்டில் ஒரு சர்வே எடுத்து அந்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தது. பத்து பேரில் ஐந்து பேர் மத பிடிமானம் உள்ளவர்கள் என்பதும், அடுத்த நான்கு பேர் அதிக மான மத நம்பிக்கையா ளர்கள் என்பதம் அந்த சர்வே மூலம் வெளிப் பட்டது.

அதாவது, பத்தில் ஒன்பது பேர் மதத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக, அதிகமான பிடிமானம் உள்ளவர்களாக இருக் கின்றனர். உண்மை என்ன வென்றால் மதத்தின் பக்கம் மக்கள் சென்றுகொண்டி ருக்கின்றார்கள். இந்த போக்கு நாட்டை மத அடிப்படையில்தான் கொண்டுபோய் சேர்க்கும்.

அப்படிப்பட்டவர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாகும்போது அவர்களின் பற்றும் விருப் பமும் அந்த மதத்தை பின் பற்றியதாகவே இருக்கும். எனவேதான், இப்படிப் பட்ட காலக்கட்டத்தில் மார்க்க அறிஞர்களின் வழிகாட்டுதலை ஏற்று அதைப் பின்பற்றி நடப் பதை நம்முடைய சமுதா யம் கடமையாக கொள் வது அவசியமாகிவிட்டது. இதைத்தான் இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் வலியு றுத்தி வருகிறது.

ஷரீஅத்தை பாதுகாப்பதே முஸ்லிம் லீக் லட்சியம்

ஷரீஅத் சட்டத்தை பாதுகாப்பது தாய்ச்சபை யின் உயிர் மூச்சான கொள்கை.

இந்திய விடுதலைக்கு முன்பு ஷரிஅத் சட்டப் பாதுகாப்பு, வக்ஃபு சட்டத் தினுடைய பாதுகாப்பு உள்ளிட்ட சமுதாய விஷ யங்களில் அதைக்காப்பாற் றுகின்ற கடமையை அகில இந்திய முஸ்லிம் லீக் சிரமேற்கொண்டு செய்து தந்தது.

இந்திய சுதந்திரத்திற்குப் பின் இந்த நாட்டில் பல் வேறு சட்டங்கள் அது சமுதாய சம்பந்தப்பட்ட எந்த விஷயமாக இருந்தா லும் ஷரீஅத்திற்கு ஆபத் தில்லாமல் அதைக்காப் பாற்றித் தந்தது இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்தான்.

நம்முடைய ஷரீஅத் சட்டத்திற்கு எந்த ஒரு ஆபத்தையும் நாம் நேற் றும் ஆதரிக்கவில்லை, இன் றும் ஆதரிக்கவில்லை, நாளைக்கும் ஆதரிக்க மாட்டோம். இதில் நாங் கள் உறுதியாகவும், தெளி வாகவும் இருக் கிறோம்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய மாநாடு

இந்திய ய+னியன் முஸ் லிம் லீகின் தேசிய பிரதிநிதி கள் மாநாடு வருகிற 15-16 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. நமது தனித் தன்மையை பாது காக்க எதன் மூலம் இடைஞ்சல் வந்தாலும் நம் தனித் தன்மையை நிலை நிறுத்திக் காட்ட வலிமை யோடு செயல்படுவோம் என்பதை லட்சியமாக கொண்டு, தென்னகத்தைப் போல் வட மாநிலங்களி லும் நம் தாய்ச்சபையை வலுப்படுத்த ஆக்கப்ப+ர்வ மான திட்டங்கள் அம் மாநாட்டில் எடுக்கப்பட உள்ளன.

எனவே, இந்த தாய்ச் சபையை சமுதாயம் ஆத ரிக்க வேண்டும். சங்ககைக் குரிய உலமா பெருமக்கள் அதற்கு பெரும் ஒத்து ழைப்பை அளிக்க வேண் டும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.

பங்கேற்றோர்

இத்திருமண விழாவில் மாநில துணைத் தலைவர் திருப்ப+ர் ஹம்சா, ஈரோடு மாவட்டத் தலைவர் ஏ.ஆர். கலீபுல்லா, மாவட்டச் செயலாளர் ஹசன் பாபு, மாவட்டப் பொருளாளர் ஹபீபுர் ரஹ்மான் மற்றும் மாநகரத் தலைவர் சிக்கந்தர், செயலாளர் அக்பர் அலி மற்றம் மாவட்ட, மாநகர நிர் வாகிகள் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, சுதந்திர தொழிலா ளர் ய+னியன் உள்ளிட்ட சார்பு அமைப்புக்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்ற னர்.

பெங்களுர் மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பிரதிநிதிகள் மாநாடு!

பெங்களுர் மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பிரதிநிதிகள் மாநாடு!


ஹிஜ்ரி 1431 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் முதல் வாரத்தில் மாண்புமிகு மதினா முனவ்வராச்சென்று புனிதமிகு மஸ்ஜிதுன் நபவியில் தொழுது மகிழ்ந்தோம். நமது உயிரினும் மேலான வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் புனித தர்பாரில் ஸலாம் சொல்லி ஆனந்தம் அடைந்தோம் சுவர்க்கத்தின் சோலைவனமான ரவ்ளா ஷரீபில் தொழுது துஆச்செய்து மகிழ்ந்தோம் அல்ஹம்துலில்லாஹ்!

வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் புனித தர்பாரில் ஸலாம் சொல்லி மகிழ்ந்து கொண்டிருந்த புனித தினங்களில் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் பயிற்சி முகாம் நடந்து கொண்டிருக்கும் செய்தியை நாள்தோறும் பலமுறை என் மகன் அஹமத் எனக்கு அலைப்பேசியில் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான். பன்னூற்றுக்கணக்கான இளைஞர்கள் வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் வாழ்க்கை நெறிகளையும் அவர்களின் அழகிய முன்மாதிரிகளையும் அணி அணியாக சொல்லத்தயாராகி விட்டார்கள்.

ஒரு நூற்நூண்டுக்கு மேலாக உள்ள முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் சரித்திரத்தையும் சாதனைகளையும் சொல்லத் தயாராகிவிட்டார்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்களின் அறிவார்ந்த- தியாகமிகுந்த தலைமையில் இளம் சொல்லாளர்கள் வழுத்தூர் என்னும் எழுத்தூரில் முஸ்லிம் லீக்கின் சரித்திரத்தை எழுதி தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சிக்கு எழுச்சிய+ட்டியுள்ளார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் மகிழ்ச்சிய+ட்டிக் கொண்டிருக்கிறது.

தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் வெற்றி முரசான இந்த இனிய இயக்கச்செய்திகளை கேட்டு மகிழ்ந்துகொண்டிருக்கும் போது. கர்நாடக மாநில தலைநகரான பெங்களுரில் புகழ்மிக்க சாதாப் அரங்கில் ஜனவரி 15,16 இரு தினங்களில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு நடைபெற இருக்கும் செய்தி நமக்கெல்லாம் மன நிறைவான மகிழ்வான செய்தியாகும் பிரதிநிதிகள் மாநாடு நடக்கும் இடத்தையும் பார்வையிட்டு அதற்கான சிறப்பான ஏற்பாடுகளையும் தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவரும் மத்திய அமைச்சருமான மாண்புமிகு இ. அஹமது சாஹிப் அவர்களும், தேசிய பொதுச்செயலாளரும் தமிழகத்தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்களும் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளும் மாநாட்டின் சிறப்பான பணிகளை பார்வையிட்டு வந்துள்ளனர்.

தமிழக பொதுச்செயலாளர் இயக்க இளவல் அல்ஹாஜ் முஹம்மது அபுபக்கர் அவர்களும் மாநாட்டின் வெற்றிக்கு பணியாற்றி விறுவிறுப்புடன் நாள்தோறும் சொல்லிவருகிறார் தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளும் இளைஞர் அணியினரும் அணி அணியாய் திரண்டுகொண்டிருக்கும் செய்தி கேட்டு செவியெல்லாம் ரீங்காரம் செய்கிறது.

தீரர் திப்புவின் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் இயக்க இளவல்கள் அல்லாஹ{ அக்பர் தக்பீர் முழங்கி செல்ல இருக்கும் செய்தி நாட்டுக்கும் நமக்கும் மகிழ்வைத்தருகிறது. இந்த இனிய செய்தியை எழுதும் போது என் உடல் சிலிர்க்கிறது.

1970 ஆம் ஆண்டில் பெங்களுர் மாநகரில் புகழ்மிக்க தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரி அருகில் கே.ஜி. ஹல்லி என்ற காடுகொண்டான் ஹல்லியில் தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரியின் நிறுவனரும் வட ஆற்காடு மாவட்ட முஸ்லிம் லீகின் முன்னாள் செயலாளருமான மார்க்க மேதை மௌலானா அமீரே ஷரீஅத் அபுஸ்ஸீஊத் அஹமத் ஹஜரத் அவர்களின் வழிகாட்டுதலில் கல்லூரியின் இன்றைய முதல்வர் அமீரே ஷரீஅத் மௌலானா முஃப்தி அஷ்ரப் அலி ஹஜரத் விரிஞ்சிபுரம் நகர முஸ்லிம் லீக்கின் முன்னாள் செயலாளரும் பெங்களுரின் தொழில் அதிபருமான பி.எம்.முஹம்மது அப்ஜல் சாஹிப், முஹம்மது சாதிக் சாஹிப், ஆகியோருடன் அடியேனும் சேர்ந்து வீடு வீடாகச்சென்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்த்து, பிரைமரி அமைத்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவர் காயிதெ மில்லத் அவர்களுக்கு பட்டியலை அனுப்பிவைத்து முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் தாங்கள் வருகை தர வேண்டும் என்று அழைத்தோம். அதன் பலனால் பெங்களுர் மாநகரில் காலையில் ஹோட்டல் ரயின்போவில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயற்குழுவும் மாலையில் கண்டோன்மெட்டில் மாபெரும் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கண்ணியமிகு காயிதெ மில்லத் அவர்களுடன் மஹ்ப+பே மில்லத் இப்ராஹிம் சுலைமான் சேட் சாஹிப், முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப், சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் சாஹிப், செய்யிதுனா பாபக்கி தங்கள், செய்யிதுனா ப+க்கோயா தங்கள், கேரளச்சிங்கம் சி.எச். முஹம்மது கோயா சாஹிப், இன்றைய தேசியத் தலைவர் இ.அஹமது சாஹிப், அன்றைய மேற்கு வங்க அமைச்சர் ஹஸனுஜ@ஜமான் மற்றும் நாடெங்குமிருந்தும் முஸ்லிம் லீகின் முன்னோடிகளெல்லாம் பங்கேற்றார்கள். இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைவதற்கு பெங்களுர் மாநகரின் பழம்பெரும் தலைவர் ரஷித் கான் சாஹிப், சபியுல்லா கல்யாணி, மௌலானா நய்யர் ரப்பானி ஆகியோரின் சேவையும் மகத்தானதாகும்.

அப்போது ஹோட்டல் ரயின்போவில் நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயற்குழுவில் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுடன் தொண்டாற்றும் தொண்டனாக சென்றிருந்தேன். இன்று முனிருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் தலைமையில் தொண்டாற்றும் தொண்டனாக செல்கிறேன் என்பதை எண்ணி பெருமகிழ்வடைகிறேன் அல்லஹம்துலில்லஹ்..

அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு சிறப்புடன் நடைபெற்று தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வளர்ச்சிக்கு சிறப்பு சேர்க்க இருக்கிறது. நாட்டுக்கும் நமக்கும் நன்மை பயக்க இருக்கிறது.

மாநாடு பிரகாசமாக நடைபெற்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி பிரகாசம் பெறுகிறது அல்ஹம்துலில்லாஹ்..!

-தளபதி ஏ. ஷபிகுர் ரஹ்மான் மன்பஈ

பெங்களுருவில் ; முஸ்லிம் லீக் தேசிய மாநாடு 20 மாநிலங்களிலிருந்து 2 ஆயிரம் பிரதிநிதிகள் ரயில் நிலையங்களில் வழிகாட்டும் தொண்டர்கள் வரவேற்பார்கள் என தலைவ

பெங்களுருவில் ; முஸ்லிம் லீக் தேசிய மாநாடு 20 மாநிலங்களிலிருந்து 2 ஆயிரம் பிரதிநிதிகள் ரயில் நிலையங்களில் வழிகாட்டும் தொண்டர்கள் வரவேற்பார்கள் என தலைவர் கே.எம்.கே. அறிக்கை

ஜனவரி 15 மற்றும் 16 தேதிகளில் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்க ளூருவில் நடைபெறும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய மாநாட்டில் இந்தியா முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களிலி ருந்து 2 ஆயிரத்திற்கும் அதிக மான பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக் கிறார்கள். அவர்களை பெங் களுரு ரயில் நிலையங்க ளில் வழிகாட்டும் தொண் டர்கள் வரவேற்று அழைத் துச் செல்வார்கள் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.

பெங்களுரு நகரில் டேனரி சாலையில் அமைந் துள்ள விசாலமான சாதாப் மஹால் வளாகத்தில் வருகிற 15, 16 வெள்ளி, சனி ஆகிய தினங்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற இருக் கிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு நிறைவு பெறும் தருவாயில் உள் ளன

மாநாட்டில் இந்தியா முழுவதிலுமிருந்து 20 மாநிலங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் உரிய கட்டணத்தை செலுத்தி கலந்து கொள்ளவிருக்கி றார்கள்.
கேரளாவிலும், தமிழ் நாட்டிலுமிருந்து கிட்டத் தட்ட ஆயிரம் பிரதிநிதி களுக்கு மேல் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிற மாநிலங்களிலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

வட மாநிலங்கள்

பஞ்சாப் மாநிலத்திலி ருந்து மக்சூது ஹக் உள் பட 15 பிரதிநிதிகளும், உத்தர காண்ட் மாநிலத்தி லிருந்து ஹபீத் முஹம்மது அஸ்கர் உட்பட 23 பிரதி நிதிகளும், மத்தியப் பிரதே சத்திலிருந்து சாஜித் அலி உட்பட பலரும், ராஜஸ் தானிலிருந்து இஸ்ஹாக் முஹம்மது மன்சூர் உள்பட 9 பிரதிநிதிகளும், ஜம்மு-கஷ்மீரிலிருந்து முதாஸிர் அஹமது பத் உட்பட 3 பேரும், பீகாரி லிருந்து ஹாஜி மசூது ஹசன் ஷாபு உட்பட 47 பிரதிநிதிகளும், கர்நாடக மாநிலத்திலிருந்து மீர் முஹம்மது எஸ். இனாம் தார் உட்பட 30 பிரதிதிக ளும், உத்தரப்பிர தேச மாநிலத்திலிருந்து முஹம் மது ஷபீர் உள்பட 2 பிரதி நிதிகளும், புதுச் சேரியிலி ருந்து சி.வி. சுலைமான் ஹாஜி உட்பட 14 பிரதிதி களும், ஜார்க்கண்ட் மாநி லத்திலிருந்து செய்யது அம்ஜத் அலி உள்பட 31 பிரதிநிதிகளும், மேற்கு வங்கத்திலிருந்து சலீம் மக்கர் உள்பட 14 பிரதி நிதிகளும் கலந்து கொள்ள இருப்பதாக இது வரை தகவல் வந்துள்ளது.
வெளிநாடுகள்

ஐக்கிய அரபு அமீரகத் திலிருந்து லியாகத் அலி, முஹம்மது தாஹா, ஹமீத் ரஹ்மான், முத்தலிப் நஜ் முதீன், ஏ.பி. முஹம்மது, யஹ்யா ஆக 6 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவிருக் கிறார்கள். மாநாட்டுக்கு வரும் பிரதிநிதிகள் வரும் பிரதி நிதிகளை வரவேற்று அழைத்துச் செல்வதற்கும், அவர்கள் தங்குவவதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச் செய லாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஓர் அறிக்கையில் கூறியிருப்ப தாவது-

மாநாடு நடைபெறும் சாதாப் மஹால் விஸ்தா ரமான வளாகம் ஆகும். இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வரலாற்றில் இந்த மாநாட்டுக்கு பங்கேற்க வரும் பிரதிநிதிகளின் மேலான வருகையினாலும் எடுக்கப்பட இருக்கும் முடிவுகளாலும் ஒரு வரலாற்று திருப்புமுனை நிகழவிருக்கிறது.

15-ம் தேதி காலை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தேசியத் தலைவர் மாண்புமிகு ஜனாப் இ.அஹமது சாஹிப் தலைமையில் அந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாடு தொடங்க இருக் கிறது. நமது தேசிய நிர் வாகிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற் றும் பல்வேறு மாநில மற் றும் ய+னியன் பிரதேச தலைவர்கள் 2 நாட்களும் கலந்து கொண்டு தங்கள் அரிய கருத்துக்களை வெளியிட இருக்கிறார்கள்.

அமர்வுகள்

மாநாட்டு துவக்கத் திற்குப் பிறகு சாதனை அமர்வு, விய+க அமர்வு, 2020 எதிர்நோக்கு நிகழ்வு ஆகியவை முடிந்த பிறகு நிறைவு அமர்வு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மிகுந்த அக்கறையோ டும், கவனத்தோடும் பிரதி நிதிகளை தங்க வைப்ப தற்கும், உணவு அளிப்பதற் கும் தக்க ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.

மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரும் பிரதிநிதிகள் அனைவரும் 15-ம் தேதி காலை மாநாட்டு முகப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். நாட்டின் தென் பகுதியிலிருந்து மாநாட் டுக்கு வரும் பிரதிநிதிகள் பெங்களூரு நகரில் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும். அங்கி ருந்து மாநாட்டு வழி காட்டுத் தொண்டர்கள் பிரதிநிதிகளை மாநாட்டு வளாகத்துக்கு அழைத்துச் செல்வார்கள். மாநாட்டுக்கு நாட்டின் வடக்குப் பகுதியிலிருந்து வரும் பிரதிநிதிகள் பெங்களூரு சந்திப்பு ரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்ள வேண் டும். அவர்களை அங்கே காத்திருக்கும் வரவேற்பு தொண்டர்கள் வரவேற்று மாநாட்டு வளாகத்துக்கு அழைத்துச் செல்வார்கள்.

சாதாப் மஹால் அமைவிடம்

மாநாடு நடைபெறும் ஹசாதாப் மஹால்| பெங்க ளூரு கன்டோன்மெட் ரயில் நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கன் டோன்ட் மென்ட் ரயில் நிலையத்திலிருந்து நேதாஜி ரோடு வழியாக பிரதிநிதி கள் பயணம் செய்தால் நேராக சதாப் மஹாலை அடைந்து விடலாம். பெங் களுரு சந்திப்பு ரயில் நிலையத்திற்கும், மாநாடு நடக்கும் சாதாப் மஹா லுக்கும் 8 கிலோ மீட்டர் தூரம் ஆகும். அங்கே தயா ராக இருக்கும் தொண் டர்கள் பிரதிநிதிகளை வரவேற்று அழைத்துச் செல்வர்.

மாநாட்டுக்கு வருகை தரும் பிரதிநிதிகளை வரவேற்க வரவேற்புக் குழு வினர் ஆர்வமுடன் காத்தி ருக்கிறார்கள். இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் அனைவரும் ஒன்றுபட்டு புதிய வரலாற்றைப் படைக்க அணி வகுப் போமாக.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனார்.
முகவரி

தேசிய மாநாட்டு நிர்வாக அலுவலகம் மற்றும் தொடர்பு தொலைபேசிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

28, டேனரி ரோடு, பெங்களுரு - 560 043.
தொடர்பாளர் :

முஹம்மது நயீம், செல் : 08147297795,

இக்பால், செல் : 08147310715

Sunday, January 10, 2010

திப்புவின் நகரான பெங்களுர் மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு! சோதனைகளை சாதனையாக்கும் மாநாடு!

திப்புவின் நகரான பெங்களுர் மாநகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு! சோதனைகளை சாதனையாக்கும் மாநாடு!

தளபதி ஏ. ஷபிகுர் ரஹ்மான் மன்பஈ



அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஹிஜ;ரி 1431 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் முதல் வாரத்தில் மாண்புமிகு மதினா முனவ்வராச்சென்று புனிதமிகு மஸ்ஜிதுன் நபவியில் தொழுது மகிழ்ந்தோம். நமது உயிரினும் மேலான வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் புனித தர்பாரில் ஸலாம் சொல்லி ஆனந்தம் அடைந்தோம் சுவர்க்கத்தின் சோலைவனமான ரவ்ளா ஷரீபில் தொழுது துஆச்செய்து மகிழ்ந்தோம் அல்ஹம்துலில்லாஹ்!

வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் புனித தர்பாரில் ஸலாம் சொல்லி மகிழ்ந்துக்கொண்டிருந்த புனித தினங்களில் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பேச்சாளர் பயிற்ச்சி முகாம் நடந்துக்கொண்டிருக்கும் செய்தியை நாள்தோறும் பலமுறை என் மகன் அஹமத் எனக்கு அலைப்பேசியில் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான். பன்னூற்றுக்கணக்கான இளைஞர்கள் வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் வாழ்க்கை நெறிகளையும் அவர்களின் அழகிய முன்மாதிரிகளையும் அணி அணியாக சொல்லத்தயாராகி விட்டார்கள்.

ஒரு நூற்நூண்டுக்கு மேலாக உள்ள முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் சரித்திரத்தையும் சாதணைகளையும் சொல்லத்தயாராகிவிட்டார்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழகத்தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்களின் அறிவார்ந்த- தியாகமிகுந்த தலைமையில் இளம் சொல்லாளர்கள் வழுத்தூர் என்னும் எழுத்தூரில் முஸ்லிம் லீக்கின் சரித்திரத்தை எழுதி தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சிக்கு எழுச்சியூட்டியுள்ளார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் மகிழ்ச்சியூட்டிக் கொண்டிருக்கிறது.

பெங்களுர் மாநகரில் எழுச்சியூட்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு

தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெற்றி முரசான இந்த இனிய இயக்கச்செய்திகளை கேட்டு மகிழ்ந்துக்கொண்டிருக்கும் போது. கர்நாடக மாநில தலைநகரான பெங்களுரில் புகழ்மிக்க சாதாப் அரங்கில் ஜனவரி 15,16 இரு தினங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு நடைப்பெற இருக்கும் செய்தி நமக்கெல்லாம் மன நிறைவான மகிழ்வான செய்தியாகும் பிரதிநிதிகள் மாநாடு நடக்கும் இடத்தையும் பார்வையிட்டு அதற்கான சிறப்பான ஏற்பாடுகளையும் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவரும் மத்திய அமைச்சருமான மாண்புமிகு இ. அஹமது சாஹிப் அவர்களும், தேசிய பொதுச்செயலாளரும் தமிழகத்தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்களும் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளும் மாநாட்டின் சிறப்பான பணிகளை பார்வையிட்டு வந்துள்ளனர். பெங்களுர் மாநகர பத்திரிகையாளர் சந்திப்பிலும் மாநாட்டின் சிறப்பு பற்றியும் மகாத்தான ஏற்பாடுகள் பற்றியும் நம் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பிலும் சிறப்பாக சொல்லியுள்ளார்.

தமிழக பொதுச்செயலாளர் இயக்க இளவல் அல்ஹாஜ் முஹம்மது அபுபக்கர் அவர்களும் மாநாட்டின் பணிப்பற்றி விறு விறுப்புடன் நாள்தோறும் சொல்லிவருகிறார் தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளும் இளைஞர் அணியினரும் அணி அணியாய் திரண்டுக்கொண்டிருக்கும் செய்திக்கேட்டு செவியெல்லாம் ரீங்காரம் செய்கிறது.

தீரர் திப்புவின் நகரில் நடைப்பெறும் இந்த மாநாட்டில் இயக்க இளவல்கள் அல்லாஹு அக்பர் தக்பீர் முழங்கி செல்ல இருக்கும் செய்தி நாட்டுக்கும் நமக்கும் மகிழ்வைத்தருகிறது. இந்த இனிய செய்தியை எழுதும் போது என் உடல் சிலிர்கிறது. அந்த செய்தியை இங்கே சொல்லிக்காட்ட விரும்புகிறேன்.

1970 ஆம் ஆண்டில் பெங்களுர் மாநகரில் புகழ்மிக்க தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரி அருகில் கே.ஜி. ஹல்லி என்ற காடுகொண்டான் ஹல்லியில் தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரியின் நிருவனரும் வடஆற்க்காடு மாவட்ட முஸ்லிம் லீக்கின் முன்னால் செயளாலருமான மார்க்க மேதை மௌலானா அமீரே ஷரீஅத் அபுஸ்ஸீஊத் அஹமத் ஹஜரத் அவர்களின் வழிகாட்டுதலில் தாருல் உலூம் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரியின் இன்றைய முதல்வர் அமீரே ஷரீஅத் மௌலானா முஃப்தி அஷ்ரப் அலி ஹஜரத் விரிஞ்சிபுரம் நகர முஸ்லிம் லீக்கின் முன்னாள் செயலாளரும் பெங்களுரின் தொழில் அதிபருமான பி.எம்.முஹம்மது அப்ஜல் சாஹிப், முஹம்மது சாதிக் சாஹிப், ஆகியோருடன் அடியேனும் சேர்ந்து வீடு வீடாகச்சென்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்த்து, பிரைமரி அமைத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவர் காயிதே மில்லத் அவர்களுக்கு பட்டியலை அனுப்பிவைத்து முஸ்லிம் லீக பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் தாங்கள் வருகை தர வேண்டும் என்று அழைத்தோம் அதன் பலனால் பெங்களுர் மாநகரில் காலையில் ஹோட்டல் ரயின்போவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயற்க்குழுவும் மாலையில் கண்டோன்மெட்டில் மாபெரும் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டமும் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் கண்ணிய மிகு காயிதே மில்லத் அவர்களுடன் மஹ்பூபே மில்லத் இப்ராஹிம் சுலைமான் சேட் சாஹிப், முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப், சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் சாஹிப், செய்யிதுனா பாபக்கி தங்கள், செய்யிதுனா பூக்கோயா தங்கள், கேரளச்சிங்கம் சி.எச். முஹம்மது கோயா சாஹிப், இன்றைய தேசிய தலைவர் இ.அஹமத் சாஹிப், அன்றைய மேற்க்கு வங்க அமைச்சர் ஹஸனுஜ;ஜமான் மற்றும் நாடங்கும்மிருந்தம் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகளெல்லாம் பங்கேற்றார்கள். இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைவதற்கு பெங்களுர் மாநகரின் பழம்பெறும் தலைவர் ரஷித் கான் சாஹிப், சபியுல்லா கல்யாணி, மௌலானா நய்யர் ரப்பானி ஆகியோரின் சேவையும் மகத்தானதாகும்.

அப்போது ஹோட்டல் ரயின்போவில் நடைப்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயற்க்குழுவில் கண்ணிய மிகு காயிதே மில்லத் அவர்களுடன் தொண்டாற்றும் தொண்டனாக சென்றிருந்தேன். இன்று முனிருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் தலைமையில் தொண்டாற்றும் தொண்டனாக செல்கிறேன் என்பதை எண்ணி பெருமகிழ்வடைகிறேன் அல்லஹம்துலில்லஹ்..

அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு சிறப்புடன் நடைப்பெற்று தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வளர்ச்சிக்கு சிறப்பு சேர்க்க இருக்கிறது. நாட்டுக்கும் நமக்கும் நண்மை பயக்க இருக்கிறது.

மாநாடு பிரகாசமாக நடைப்பெற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வளர்ச்சி பிரகாசம் பெறுகிறது அல்ஹம்துலில்லாஹ்..!

Thursday, January 7, 2010

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து வருகை தருவோர் கவனத்திற்கு....

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பிரதிநிதிகள் மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து வருகை தருவோர் கவனத்திற்கு....


2010 ஜனவரி 15, 16 தேதிகளில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியப் பிரதிநிதிகள் மாநாட்டிற்கு ரூ.750ஃ- கட்டணம் செலுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளவர் களுக்கான பயண விவரங்கள்-

1) பெங்களூரு மெயில் - ரயில் எண். 2657.

புறப்படும் இடம் சென்னை சென்ட்ரல்

புறப்படும் நேரம் 14-01-2010 இரவு 11.15 மணி

பெங்களுர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் சேரும் நேரம் 15-ம் தேதி காலை 4.35 மணி.

இந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டியோர் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களிலி ருந்து பதிவு செய்தோர். இவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி -

ப+வை முஸ்தபா - 9884227040

2) மைசூர் எக்ஸ்பிரஸ் - ரயில் எண். 6231.

புறப்படும் இடம் மற்றும் நேரம்

மயிலாடுதுறை 14-ம் தேதி மாலை 5.55 மணி.

கும்பகோணம் - மாலை 6.23

தஞ்சாவ+ர் - மாலை 7.10

திருச்சி - இரவு 8.30

கரூர் - இரவு 10.05

ஈரோடு - இரவு 11.35

சேலம் - இரவு 12.40

பெங்களுர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் சேரும் நேரம் 15-ம் தேதி காலை 5.05 மணி.

இந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டியோர் தஞ்சை, திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பதிவு செய்தவர்கள். இவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி -

வழுத்தூர் ஏ.பஷீர் அஹமது - 9443650790

விருத்தாசலம் சுக்கூர் - 9943375559

3) மைசூர் எக்ஸ்பிரஸ் - ரயில் எண். 6731.

புறப்படும் இடம் மற்றும் நேரம்

தூத்துக்குடி 14-ம் தேதி மாலை 4.35 மணி.

கோவில்பட்டி- மாலை 5.47

விருதுநகர் - மாலை 6.45

மதுரை - மாலை 7.45

திண்டுக்கல் - இரவு 9.20 மணி

பெங்களுர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் சேரும் நேரம் 15-ம் தேதி காலை 5.38 மணி.

இந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டியோர் தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பதிவு செய்தவர்கள்.

இவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி - வாவு சம்சுதீன் - 9965424518

மதுரை இக்பால் - 9894409381

4) பெங்களூரு எக்ஸ்பிரஸ் - ரயில் எண். 6525.

புறப்படும் இடம் மற்றும் நேரம்

கோவை 14-ம் தேதி இரவு 10.40 மணி

திருப்ப+ர் - இரவு 11.29

பெங்களுர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் சேரும் நேரம் 15-ம் தேதி காலை 6.20 மணி

இந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டியோர் கோவை, திருப்ப+ர் மாவட்டங்களைச் சேர்ந்த பதிவு செய்தவர்கள்.

இவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய

தொலைபேசி - கோவை பஷீர் - 9894147047

தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களிலிருந்து தனி வாகனங்களில் வருகின்றவர்களும் பெங்களுர் கன்டோன்மென்ட் வருகை தந்து சாதாப் மஹாலில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு அலுவலகத்தில் 15-ம் தேதி காலை 8 மணி முதல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏற்கனவே ரூ.300 செலுத்தியவர்களுக்கு அடையாள பேட்ஜ் மற்றும் டோக்கன்கள் வழங்கப்படும்.

தமிழ்நாட்டிலிருந்து செல்கின்றவர்கள் மாநாட்டில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண்கள் - வாணியம்பாடி நயீம் - 081472 97795

வாணிம்பாடி இக்பால் - 08147310715

மாநாட்டிற்கு வருகை தரும் அனைவருக்கும் தங்க வசதியும், உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டுத் திடல் மற்றும் தங்குமிடம் -

ஹசாதாப் மஹால்|.

இது பெங்களூரு நேதாஜி ரோடு வழியாக அம்பேத்கர் ரோட்டில் (டேனரி ரோடு) அமைந் துள்ளது)

பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆட்டோ கட்டணம் ரூ.20ஃ-

கலைஞர் வீட்டு வசதித் திட்டம் வரலாற்றில் உதயசூரியனைப் போல் ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஆளுநர் உரைக்கு பேராசிரியர் வரவேற்பு

கலைஞர் வீட்டு வசதித் திட்டம் வரலாற்றில் உதயசூரியனைப் போல் ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஆளுநர் உரைக்கு பேராசிரியர் வரவேற்பு

சென்னை, ஜன.7

ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள கலைஞரின் வீட்டு வசதித் திட்டம் உதயசூரியனைப் போல் என்றும் ஓளிர்ந்து கொண்டே இருக்கும் என்று இந்திய ய+னியன் முஸ்லீம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள் ளதாவது:-

தமிழக மக்களின் நலனுக்கும் வளமான வாழ்வுக்கும் வழி வகுக்கக் கூடிய உரையாக ஆளுநர் உரை அமைந்துள்ளது.

ஆளுநர் உரை என்ப தைவிட தமிழக மக்களின் வாழ்நர் உரை என்றால் அது மிகையாகாது. எல்லா தரப்பினருக்கும் வாழ்வு அளித்திடும் வகையில் கலைஞரின் பாரம்பரிய பழக்கப்படி தொடர்ந்து மக்களுக்கு ஆற்றி வரும் பணிகளுக்கு ஏற்ப மனமகி ழும் திட்டங்களை ஆளுநர் உரை மூலம் கலைஞர் தெரிவித்துள்ளார்.

21 லட்சம் மண் குடிசைகளை கான்கீரிட் வீடுகளாக மாற்றும் திட்டம் சோவியத் ரஷ்யாவிலோ, சீனாவிலோ கூட கற்பனை செய்துகூட பார்க்க முடியாத திட்டம்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம்போல் கலைஞர் வீட்டு வசதி திட்டமும் வரலாற்றில் உதயசூரியனைப்போல் ஒளிர்ந்துகொண்டே இருக்கும்.

எனவே, முதல்வர் கலைஞரின் ஒப்பற்ற திட்டங்களை தாங்கிய ஆளுநர் உரையை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் உவகையுடனும், பெருமிதத்துடனும் வரவேற்கிறேன்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிக்கையில் கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம்


திருவாரூர், ஜன.7-

திருவாரூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டமும், மாவட்ட சுன்னத்துல் ஜமாஅத் கூட்டமும், முத் துப் பேட்டை முகைதீன் பள்ளிவாசல் மதரஸா கட்டிடத்தில் முத்துப் பேட்டை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஒன்றிய செயலாளர் எம். முஹம் மது அலி தலைமையில் திருவாரூர் மாவட்டத் தலைவர் கே. முகைதீன் அடுமை, திருவாருர் மாவட்ட செயலாளர் எம். எம். ஜலாலுதீன், நகரத் தலைவர் கோல்டன் எம். தம்பி மரைக்காயர் ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் சிறப்புரையாற்றி அபிவை தாஜுதீன் இயற் றிய முஸ்லிம் லீக் பாடல் கள் உள்ள ஹசி.டி.|யை வெளியிட்டார்.

முகைதீன் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தலைவர் ஏ.எம். முஹம்மது ராவுத்தர் பெற்றுக் கொண்டார். நகரச் செயலாளர் எஸ். அபூஹனீபா நன்றி கூறி னார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்புப் பணி பேணப்பட வேண்டிய குறிப்புகள் சில....

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்புப் பணி பேணப்பட வேண்டிய குறிப்புகள் சில....

மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தருபவர்கள் முதலில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கட்டணம் செலுத்தி பணியை துவங்க வேண்டும்.
மாவட்ட பொதுக்குழுவில் உறுப்பினர் சேர்ப்பு பணி அனைத்து ஊர்களுக்கும் சென்று அடையக் கூடிய வகையில் பொருப்பாளர்கள் நியமனம் செய்து, படிவங்கள் வினியோகிக்கப்பட வேண்டும்.
உறுப்பினர் சேர்ப்புப் பணியை குடும்பத்திலிருந்து துவங்கி நண்பர்கள், மஹல்லா வாசிகள் என அனைவரையும் சேர்க்க வேண்டும்.
உறுப்பினர் சேர்ப்புப் பணியை வெற்றிகரமாக நடத்திடும் வகையில், ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளவர்களையும் கையொப்பமிடச் செய்து அதிக ஈடுபாடு கொள்ளச் செய்தல், பிற இயக்கங்களில் இருப்பவர்களை தாய்ச்சபையில் இணைய அழைத்தல் மற்றும் இதர சமுதாயங்களை சேர்ந்தவர்களுக்கும் செய்தியை எத்த வைத்தல் போன்ற காரியங்களின் கவனம் செலுத்திடல் வேண்டும்.
2009 டிசம்பர் முதல் வாரத்தில் மாவட்ட தலைவர்ஃசெயலாளர் அனைத்து ஊர்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து உறுப்பினர் சேர்ப்புப் பணியை தீவிரப் படுத்த வேண்டும்.
உறுப்பினர் நாண்கான்டு சந்தா ரூ5ஃ- ( ரூபாய் ஐந்து மட்டும்)யில் பிரைமரிக்கு ரூ.2ஃ- மாவட்டத்திற்கு ரூ1ஃ- மாநிலத்திற்கு 2ஃ- என்ற விகிதத்தில் ஈவுத் தொகை பிரித்தளிக்கப்பட வேண்டும்.
2010 ஜனவரி மாதத்தில் பிரைமரி நிர்வாக தேர்தல் அறிவிப்பு தலைமை நிலையத்திலிருந்து வெளியிடப்படும். இத்தேர்தல் மாநில தேர்தல் அதிகாரி, மாவட்ட தலைவர் - செயலாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும். இத்தேர்தலுக்கு முன்பாக பிரைமரி பொருப்பாளர்கள், உறுப்பினர் படிவத்தையும், அதற்கான ஈவுத் தொகையையும் மாவட்ட தலைவர் ஃ செயலாளர் இடம் வழங்க வேண்டும். பிரைமரி நிர்வாக தேர்தல் நடைபெற்ற முழு விபரம் தலைமை நிலையத்திற்கு கிடைக்கப் பெற்றவுடன் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படும்.
2010 பிப்ரவரி மாதத்தில் மாவட்ட நிர்வாக தேர்தல் அறிவிப்பு தலைமை நிலையத்திலிருந்து வெளியிடப்படும். இத்தேர்தல் மாநில தலைவர், பொதுச் செயலாளர், பாராளுமன்ற - சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெறும் இத்தேர்தலுக்கு முன்பாக மாவட்ட தலைவர் - செயலாளர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரைமரிகளிலிருந்தும் பெறப்பட்ட உறுப்பினர் படிவத்தையும், அதற்கான
-மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர், செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில கூட்டங்களில் அவசியம் பங்கேற்கக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும். பிரைமரி தலைவர், செயலாளரும் மாநில பொதுக்குழு உறுப்பினராக இருப்பதால், இவர்களையும் கூட்டத்தில் பங்கேற்கச் செய்தல் வேண்டும்.
-மாவட்ட துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் பதவிகள் சட்டமன்ற தொகுதி அல்லது ஒன்றியத்திற்கு ஒருவர் என்ற விகிதத்தில் பிரித்தளிக்க வேண்டும். துணைச் செயலாளர்கள் 45 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் நன்று. ழூபிரைமரி, மாவட்டம், மாநிலம் ஆகிய நிர்வாகப் பொருப்புக்களில், ஒருவருக்கு ஒரு பதவி என்றிருந்தால், மற்றும் சிலர் பணியாற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
-பிரைமரி மற்றும் மாவட்ட நிர்வாக தேர்தல் அங்கீகாரச் சான்றிதழ்களின், அந்தந்த பிரைமரி - மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், ஆகியோரின் பெயர் மற்றும் முகவரி இடம் பெறும். இச்சான்றிதழ் வங்கி கணக்கு துவங்குதல், அரசு துறை காரியங்களுக்கு பயன் அளிக்கக் கூடியவைகளாகும்.
அகில இந்திய புதிய சட்ட விதிப்படி, இளைஞர் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எப்) சுதத்திர தொழிலாளர் ய+னியன் (எஸ்.டி.யு) , மகளிர் லீக் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அணிகளாகும். இந்த அணிகளின் அமைப்பாளர்கள் அனைத்து பிரைமரி, மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட வேண்டும்.
இளைஞர் லீக் அமைப்பாளர்களின் வயது வரம்பு 35 ஆகும், முஸ்லிம் மாணவர் பேரவை (எம். எஸ். எப்) அமைப்பாளர்களின் வயது வரம்பு 27 ஆகும், சுதந்திர தொழிலாளர் ய+னியன் ( எஸ்.டி.யு) அமைப்பாளர்கள் தொழிலாளர்களுடன் தொடர்புடையவர்களாக இருத்தல் வேண்டும். மகளீர் லீக் அமைப்பாளர்களாக மகளீர் சுய உதவிக்குழு, கல்வி மற்றும் சமூக பணிகளாற்றும் பெண்களை தேர்வு செய்யவும்,
தற்போது வழங்கப்படும் உறுப்பினர் விண்ணப்ப வடிவத்தையே, அடையாள அட்டை பெறுவதற்கும் பயன்படுத்தவும். ப+ர்த்தி செய்த படிவத்தின் நகலையும், புகைப்படத்தையும் ரூ.20-வுடன் அனுப்பி தலைமை நிலையத்திலிருந்து உறுப்பினர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஊழியர்களின் முழு ஒத்துழைப்போடும் திட்டமிட்ட பணிகளாலும் தாய்ச்சபையை மேலும் வலிமை மிக்கதாக ஆக்கிடுவோம். நம் லட்சியப் பணிகளில் ஒற்றுமையுடனும், தியாக மனப்பான்மையுடனும் செயலாற்றி வெற்றிகள் பல கண்டிடுவோம்.
கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர்
மாநில பொதுச் செயலாளர்,
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்
(தமிழ்நாடு மாநிலம்)

Wednesday, January 6, 2010

கடையநல்லூரில் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

கடையநல்லூரில் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு


கடையநல்லூர், ஜன.6-

கடையநல்லூர் நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம் உதுமானியா சங்க ஹாலில் மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளரும், நகரச் செயலாளருமான டி.ஏ. செய்யது முஹம்மது தலைமையில் நடை பெற் றது.

மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட்டப் பொருளாளர் ஏ. அப்துல் வஹாப், மாவட்ட துணைச் செய லாளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, நகரத் தலைவர் இ.ஏ. முஹம்மது காசிம், மாவட்ட தி.ட்டக் குழு உறுப்பினர் பி.எம். அப்துல் காதர், எம்.கே. சாகுல் ஹமீது, நகர துணைத்தலைவர்கள் எம்.எஸ். முபாரக் அலி, பி.ஏ. செய்யது இஸ்மாயில், டி.என். ரஹமதுல்லா, கே.எம். லியாகத் அலி, எஸ்.ஏ. அப்துல்லா ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

நகரப் பொருளாளர் கே.என். அப்துல் லத்தீப் அனைவரையும் வரவேற் றார்.

மாநில அமைப்புச் செயலாளர்நெல்லை மஜீத் வாழ்த்துரை வழங்கினார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்லிம் லீக் கொடியேற்றி வைத்தார்

கூட்டத்தில் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் வி.ஏ.எஸ். செய்யது இப்ராஹீம், அணி செயலாளர் பாட் டப்பத்து மசூது, நகர துணைச் செயலாளர்கள் பி.ஏ. செய்யது மசூது, பி.பி. அய்ய+ப்கான், கே.கே. ஷேக், டி.கே. ஹாஜா, எம்.ஏ, இஸ்மாயில், நகராட்சி உறுப்பினர் எஸ்.எம். சாகுல் ஹமீது, எஸ்.கே. ஹபி புல்லா, புளியங்குடி எம். சாகுல் ஹமீது, டி.வி. அப்துல் காதர் உட்பட 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஏ. ஹைதர் அலி நன்றி கூறினார்.

திருநெல்வேலி டவுன் பாட்டப்பத்தில் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா

திருநெல்வேலி டவுன் பாட்டப்பத்தில் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா


திருநெல்வேலி, ஜன.6-

திருநெல்வேலி டவுன் பாட்டப்பத்து பள்ளி வாசல் அருகே இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா ஜமாஅத்தலைவர் ஜின்னா ரசூல் தலைமையில் நடந் தது.

மாவட்ட துணைச் செயலாளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, பட்டதாரி அணி செயலா ளர் மசூது, எம். கடாபி, மன்சூர் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீத், மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, பாடகர் அபுபக்கர் ஆகியோர் பேசி னர்.

இறுதியாக எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., முஸ்லிம் லீக் கொடி யேற்றி வைத்துப் பேசி னார்.

ஜமாஅத் செயலாளர் மஸ்தான் அனைவரையும் வரவேற்றார். முடிவில் அப்துல் காதர் நன்றி கூறி னார்.

எம். அப்துர் ரஹ்மான் எம்.பி.க்கு ஜமாஅத் கமிட்டி சார்பில் வரவேற்ப ளிக்கப்பட்டது.

மஹல்லா ஜமாஅத்களில் பதிவு செய்யப்படும் திருமண பதிவேடுகளை தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும்

மஹல்லா ஜமாஅத்களில் பதிவு செய்யப்படும் திருமண பதிவேடுகளை தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும்
செங்கோட்டை பொதுக் கூட்டத்தில் அப்துர் ரஹ்மான் எம்.பி. வேண்டுகோள்


செங்கோட்டை, ஜன.6-

செங்கோட்டை நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் எழுச்சி பொதுக் கூட் டம் காயிதெ மில்லத் திடலில் ஒன்றிய செய லாளர் மு. அப்துஸ் ஸலாம் தலைமையில் நடைபெற் றது.

மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட்டச் செயலாளர் டி.ஏ. செய்யது முஹம்மது, மாவட்டப் பொருளாளர் ஏ. அப்துல் வஹாப், மாவட்ட துணைச் செயலா ளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, மாவட்ட கல்வி மேம்பாட்டுச் செயலாள எச். அப்துல் ரஹ்மான், நகரத் தலைவர் எம்.எம்.எஸ். ஹமீது, நகரச் செயலாளர் என். மஹப+ப், நகர துணைத் தலைவர் எல். நசீர் அஹமது, நகரப் பொருளாளர் எஸ். எம். அக்பர் பாதுஷா, மாவட்ட தொண்டர் அணி அமைப் பாளர் வி.ஏ. எஸ். செய்யது இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலூர் பள்ளிவாசல் தலைமை இமாம் எஸ். கமருதீன் ஆலிம் அனைவ ரையும் வரவேற்றார்.

தென்காசி நகரப் பொருளாளர் கே.என்.எம். அப்துல் காதர், மாவட் துணைச் செயலாளர் வடகரை சுலைமான் சேட் ஆலிம், மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீத் ஆகியோரும் பேசினர்.

இறுதியாக வேலூர் முஸ்லிம் லீக் நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசிய தாவது-

தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றாலும் நாடாளுமன்றத்தில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சுதந்திரமாக செயல்படு கிறார். தி.மு.க. கூட்டணி யில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொடரும்.

திருமணங்களை கட்டா யமாக பதிவு செய்ய வேண் டும் என்று சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள் ளன.

எனவே, சமுதாயத்தில் உள்ள பெரியவர்கள் ஜமாஅத் தலைவர்கள், பள்ளிவாசல் முத்தவல்லி கள், சங்கைக்குரிய உலமாப் பெருமக்கள் ஆகியோரை அழைத்து தமிழக அரசு பேச வேண்டும். அதன் பிறகு இதனை செயல் படுத்துவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

தற்போது மஹல்லா ஜமாஅத்வசம் உள்ள திரு மணப்பதிவு புத்தகங்களில் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பல விசாரணைக்கு பின்னர் தான் பதிவு புத்தகங்களில் திருமணங்கள் பதிவு செய் யப்படுவதால் இதனையே அங்கீகரிக்கப்பட்ட பதி வாக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதுகுறித்து முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் ஆகியோரிடம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் விரிவாக எடுத்துரைக்கப்படும். இதற்கு நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்பு கிறோம்.

இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பேசினார்.

கூட்டத்தில் கடையநல் லூர் நகரத் தலைவர் இ.ஏ. முஹம்மது காசிம், புளியங் குடி நகரச் செயலாளர் எம். அப்துல் ரஹீம், தென்காசி நகரச் செயலாளர் எ. அப்துல் காதர் நகராட்சி துணைத் தலைவர் பி. இப்ராம், மாவட்ட துணைச்செயலாளர்கள் எஸ்.ஏ. ஹைதர் அலி, தென் காசி எம். முஹம்மது உசேன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் எம். முஹம்மது அலி, முதலியார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் எம். பஸ் லுர் ரஹ்மான், புளியங்குடி எம். சாகுல் ஹமீது ஆகி யோர் கலந்து கொண்டனர்.