Thursday, June 26, 2008

துபாய் ஏகத்துவ மெய்ஞான சபையில் மறைந்த முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிபுக்கு துஆ

துபாய் ஏகத்துவ மெய்ஞான சபையில் மறைந்த முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிபுக்கு துஆ

துபாய் ஏகத்துவ மெய்ஞான சபையில் மறைந்த அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் முஜாஹிதெ மில்லத் பனாத்வாலா சாஹிபுக்கு 27.06.2008 வெள்ளிக்கிழமை காலை துஆச் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் ஏகத்துவ மெய்ஞான சபை தலைவர் அல்ஹாஜ் எம். ஜே. முஹம்மது இக்பால் பேசும் போது முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிப் அவர்களது பாராளுமன்ற பணி, சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள் உள்ளிட்டவற்றை உணர்ச்சிப்பூர்வமாக நினைவு கூர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து மறைந்த தலைவரின் மஃபிரத்துக்காக துஆச் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏகத்துவ மெய்ஞான சபை செயலாளர் சஹாபுதீன், எம். ஜே. அப்துல் ரவூஃப் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் தமிழ்மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பனாத்வாலா மறைவு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பனாத்வாலா மறைவு






சென்னை, ஜூன் 25: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் குலாம் முகமது பனாத்வாலா (75), மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் புதன்கிழமை காலமானார்.

இவர் 1933-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி மும்பையில் பிறந்தார். வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். காயிதே மில்லத்தால் ஈர்க்கப்பட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் சேர்ந்தார்.

மும்பை உமர்காடி தொகுதியிலிருந்து 1967-ம் ஆண்டு சட்டப் பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். 1971 முதல் 91 வரையும், 1996 முதல் 2004 வரையும் கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யட்டார்.

இப்ராஹிம் சுலைமான் சேட்டுக்குப் பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். "மார்க்கமும் அரசியலும்', "சுதந்திரத்துக்குப் பின் முஸ்லிம் லீக்' ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

"ஷரீ - அத்' சட்டத்துக்கு எதிராக வழக்கு நடைபெற்றபோது, தனி நபர் மசோதா மூலம் நாடாளுமன்றத்தில் அவர் எடுத்து வைத்த வாதம் மூலம் "ஷரீ-அத்' சட்டத்தில் முஸ்லிம் மகளிர் உரிமையைப் பாதுகாத்தவர் என்ற பெருமைக்குரியவர்.

சென்னை முஸ்லிம் அமைப்புகள் சார்பில் சிறந்த சமூக சேவகர் விருதும், பன்னாட்டு நண்பர்கள் சங்கம் சார்பில் விஜய் ஸ்ரீ விருது, குட்ச் சக்தீ சார்பில் சமாஜ் ரத்னா விருது, சிறந்த நாடாளுமன்ற வாதிக்கான மெüலானா பஜ்ருல் ஹக்கைராபாதி விருதுகளைப் பெற்றவர்.

இவரது மனைவி ஆயிஷா பேகம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

கடந்த சனிக்கிழமை (ஜூன் 21) சென்னைத் தீவுத் திடலில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டில் பங்கேற்றதே பனாத்வாலாவின் கடைசி பொது நிகழ்ச்சி.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080625132827&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=

பனாத்வாலா மறைவுக்கு திருமாவளவன் இரங்கல்

பனாத்வாலா மறைவுக்கு திருமாவளவன் இரங்கல்
சென்னை, ஜூன், 27_


இந்திய யூனி'யன் முஸ்'லிம் லீக் கட்'சி'யின் தலை'வர் பனாத்'வாலா மறை'வுக்கு தொல்.திரு'மாவ'ள'வன் இரங்'கல் தெரி'வித்'துள்'ளார்.




இதுகு'றித்து விடு'தலை சிறுத்'தை'கள் கட்'சி'யின் தலை'வர் தொல்.திரு'மாவ'ள'வன் வெளி'யிட்'டுள்ள இரங்'கல் செய்தி வரு'மாறு:_




இந்திய யூனி'யன் முஸ்'லிம் லீக் கட்'சி'யின் தேசி'யத்'த'லை'வர் குலாம் முக'மது பனாத்'வாலா மர'ணம் அடைந்த செய்தி அதிர்ச்சி அளித்'தது. மிகச்'சி'றந்த பாராளு'மன்'ற'வாதி'யாக'வும், ஒடுக்'கப்'பட்ட முஸ்லீம்களின் குரலை ஓங்கி முழங்'கு'கின்ற போராளி'யாக'வும், `அறப்'போ'ராளி'க'ளின் தலை'வர்' என்று தமி'ழர்'க'ளால் கொடுக்'கப்'பட்ட பட்'டத்'திற்கு இலக்'க'ண'மாக'வும் வாழ்ந்'த'வர்.




கண்'ணி'யத்'த'மி'ழர் காயிதே மில்'லத்'தின் தலை'மையை ஏற்று மும்பை உமர்'காடி தொகு'தி'யில் சட்'ட'மன்ற உறுப்'பி'ன'ராக தேர்'தெ'டுக்'கப்'பட்டு `பசு'வதை தடைச் சட்'டம்' போன்ற பிற்'போக்'கான சட்'டம் கொண்'டு'வந்த போது அதனை எதிர்த்து அறப்'போ'ராட்'டம் நடத்தி போராட்'டங்'க'ளில் வெற்'றி'யும் கண்'ட'வர். பாபர் மசூதி இடிக்'கப்'பட்ட நிகழ்வு தொடர்'பாக இந்திய பாராளு'மன்'றத்'தில் இவர் ஆற்றிய சொற்'பொ'ழிவு பொன் எழுத்'துக்'க'ளால் பொறிக்'கப்பட வேண்'டி'யது.




கடந்த 20, 21_ம் தேதி'க'ளில் சென்னை தீவுத்'தி'ட'லில் நடை'பெற்ற முஸ்'லிம் லீக் மணி'விழா மாநாட்'டில் அவர் கலந்'து'கொண்டு பேசிய உரை, இஸ்லாமி'ய'ருக்கு மட்'டு'மன்றி அனைத்து ஒடுக்'கப்'பட்ட மக்'க'ளுக்'கும் எழுச்'சி'யூட்'டு'வதாக அமைந்'துள்'ளது. இத்த'கைய மாபெ'ரும் தலை'வரை இழந்'து'வாடும் அவரது குடும்'பத்'திற்'கும், இஸ்லாமிய பெருங்'குடி மக்'க'ளுக்'கும் இந்திய யூனி'யன் முஸ்'லிம் லீக் கட்'சி'யி'ன'ருக்'கும் எனது ஆழ்ந்த இரங்'க'லை'யும் ஆறுத'லை'யும் தெரி'வித்'துக்'கொள்'கி'றேன்.




இவ்வாறு அந்த இரங்'கல் செய்'தி'யில் தொல்.திரு'மாவ'ள'வன் தெரி'வித்'துள்'ளார்.

http://www.thinaboomi.com/2008/jun/27/politics/politics7.php

பனாத்வாலா சாஹிப் மறைவு - தினத்தந்தி செய்தி

இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவு
முஸ்லிம் தலைவர்கள் இரங்கல்


மும்பை, ஜுன்.26-

இந்திய ïனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவர் பனாத்வாலா மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 75.

பனாத்வாலா

இந்திய ïனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் பனாத்வாலா, 1933-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் எம்.காம், பி.எட். படிபை முடித்து பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார்.

அந்த சமயத்தில் இந்திய ïனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்த பனாத்வாலா, மும்பை உமர்காடி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், கேரள மாநிலம் பொன்னானி தொகுதியில் இருந்து 1971 முதல் 1991 வரையிலும், 1996 முதல் 2004-ம் ஆண்டு வரையிலும் பாராளுமன்ற எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 7 முறை பாராளுமன்ற எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மரணம்

பனாத்வாலா தன்னுடைய மனைவி இறந்தவுடன், சகோதரர்களுடன் மும்பையில் வசித்து வந்தார். அவருக்கு குழந்தைகள் இல்லை. நேற்று மதியம் பனாத்வாலா சாப்பிட்டு விட்டு வீட்டில் இருந்தார். அப்போது `திடீரென' அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவருடைய உயிர் பிரிந்தது. அவர் உடல் அடக்கம் இன்று (வியாழக்கிழமை) மும்பையில் நடைபெறுகிறது.

பனாத்வாலா கடந்த சில சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த இந்திய ïனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரங்கல்

தமிழ்நாடு மாநில இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்திய முஸ்லிம்களின் ஏகப்பிரதிநிதித்துவ சபையாக முஸ்லிம் லீக்கின் ஒப்பந்த உன்னதமான தலைவராக திகழ்ந்தவர். மிகச்சிறந்த அரசியல் சட்ட நிபுணர். உலக நாடுகளை எல்லாம் சுற்றி வந்த பனாத்வாலா, இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் இதயங்களில் நீங்காத இடத்தை பெற்று வானத்தில் சுற்றி வரும் வளர்பிறை போல் விளங்கி கொண்டிருப்பவர்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

தேசிய லீக் தலைவர் பசீர் அகமது வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவரும், கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக நாடாளுமன்றத்தில் பணியாற்றி முஸ்லிம் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க பாடுபட்டவருமான பனாத்வாலாவின் மறைவு இந்தியா மற்றும் உலக முஸ்லிம்களுக்கு பேரிழப்பாகும். அவர் மறைவால் வாடும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்'' என்று கூறியிருக்கிறார்.

பேரிழப்பு

தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சிறந்த பேச்சாளராகவும், நாடாளுமன்றவாதியாகவும், முஸ்லிம்கள் உரிமைக்கு குரல் கொடுப்பவராகவும் திகழ்ந்த பனாத்வாலாவின் மறைவு பேரிழப்பு'' என்று தெரிவித்துள்ளார். இதே போல் தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக்தாவூத், சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை பொதுசெயலாளர் மேலைநாசர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பனாத்வாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் உரிமைகளுக்காக மட்டுமின்றி, மத நல்லிணக்கத்திற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அயராது பாடுபட்ட பனாத்வாலாவின் மறைவால் துயரமுற்றிருக்கும் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் பா.ம.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.

இதே போல் வக்புவாரிய தலைவர் ஹைதர் அலி, இந்திய ïனியன் முஸ்லிம் லீக் மகளிரணி மாநில அமைப்பாளர் ஏ.எஸ்.பாத்திமா முசப்பர் ஆகியோர் பனாத்வாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=421447&disdate=6/26/2008&advt=1

பனாத்வாலா சாஹிப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து லால்பேட்டையில் போஸ்டர்

துபாயில் முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிப் மறைவுக்கு இரங்கல் கூட்டம் / காயிப் ஜனாஸா தொழுகை

துபாயில் முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிப் மறைவுக்கு இரங்கல் கூட்டம் / காயிப் ஜனாஸா தொழுகை

அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் துபாய் தேரா தமிழ் பஜாரில் உள்ள குவைத் பள்ளியில் ( லூத்தா மஸ்ஜித் ) அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிப் அவர்களது மறைவுக்கு இரங்கல் கூட்டம் வெள்ளிக்கிழமை 27.06.2008 அன்று நடைபெற இருக்கிறது.


காலை 10 மணி : திருக்குர்ஆன் ஓதி துஆச் செய்தல்

ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர்

காயிப் ஜனாஸா தொழுகை நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடைபெறும்.

இதில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் மேலாண்மை இயக்குநரும், ஈமான் அமைப்பின் தலைவரும் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற முஸ்லிம் லீக் 60 ஆண்டு மணி விழா மாநாட்டில் சமூக நல்லிணக்க விருதுபெற்ற அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன், புரவலர்கள், உள்ளிட்ட பலர் பங்கேற்க இருக்கின்றனர்.

மேலதிக விபரம் பெற : 050 467 4399 / 050 644 04 15

மேற்கண்ட தகவலை அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்தார்

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பனாத்வாலா மரணம் தமுமுக இரங்கல்!

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பனாத்வாலா மரணம் தமுமுக இரங்கல்!

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பனாத்வாலா மரணம்
தமுமுக தலைவர் வெளியிடும் இரங்கல் செய்தி

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் குலாம் முஹம்மது பனாத்வாலா அவர்கள் இன்று மரணமடைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறுபான்மை சமூகத்திற்காக உழைத்து துரும்பானவர். பனாத்வாலா அவர்கள். தொடர்ச்சியாக கேரளாவில் உள்ள பொன்னானி தொகுதியில் இருந்து 7 முறை 50 சதவிகிதத்திற்கும் குறைவில்லாமல் வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பனாத்வாலா சாஹிப் பலரும் வியக்கும் வகையில் தலைசிறந்த நாடாளுமன்றவாதியாக விளங்கினார். யாருக்கும் அஞ்சாமல் வீரத்துடன் கர்ஜனை செய்து தனது கருத்துகளை எடுத்துரைப்பதில் சாதனை படைத்தவர் பனாத்வாலா சாஹிப் அவர்கள். ஆங்கிலத்திலும் உருது மொழியிலும் தலைசிறந்த சொற்பொழிவாளராக பனாத்வாலா சாஹிப் விளங்கினார்.

டெல்லியில் கடந்த 2007 மார்ச் 7 அன்று நாடாளுமன்றம் நோக்கி தமுமுக நடத்திய பேரணியில் தனது சொந்த செலவில் வந்து பனாத்வாலா சாஹிப் அவர்கள் பங்கேற்றதை இத்தருணத்தில் நெகிழ்ச்சியுடன் நினைவுப்படுத்த கடமைப்பட்டுள்ளோம். பனாத்வாலா சாஹிப் அவர்களின் மரணம் இந்திய சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். சமூக போராளியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மறுஉலக வாழ்வில் அவருக்கு இறைவன் உயர்வான சுவனத்தை அüக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றது.

Source: www.tmmk.in

பனாத்வாலா சாஹிப் மறைவுக்கு சென்னை தலைமை நிலையத்தில் துஆ

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

இன்ஷா அல்லாஹ் 27.08.2008 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின்னர் 6.30 மணிக்கு மறைந்த முஸ்லிம் லீக்கின் அகில இந்தியத் தலைவர் முஜாஹிதெ மில்லத் ஜி.எம். பனாத்வாலா அவர்களது மஃபிரத்துக்காக முஸ்லிம் லீக் தலைமை நிலையமாம் காயிதெமில்லத் மன்ஜிலில் ஃபாத்திஹா ஓதி துஆச் செய்யப்படும்.

இயக்கத் தொழர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


On Thu, Jun 26, 2008 at 6:06 PM, abdul rahman wrote:

Asslamualaikum,insha allah on 27.08.2008 evening after magrib 06:30 hrs fathihaa and dua for our beloved leader MUJAAHIDE MILLATH G.M.BANATHWALAs magfirath.at IUML Head office,plz pass message.


Abdul rahman

Wednesday, June 25, 2008

முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் இரங்கல்

முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் இரங்கல்




சென்னை, ஜூன் 25: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:

கடந்த சனிக்கிழமை சென்னை தீவுத் திடலில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநாட்டில் நானும், அவரும் கலந்து கொண்டு உரையாற்றியது என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.

அவரது உரையை சிங்கநாதம் என்றே விமர்சித்தோம். இவ்வளவு சீக்கிரத்தில் நம்மை விட்டுப் பிரிந்து செல்வார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. சிறந்த நாடாளுமன்ற வாதியாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களாலும் பெரிதும் மதித்துப் போற்றப்பட்ட பனாத்வாலா மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080625093101&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=

”முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப்பின் நினைவு கூறத்தக்க பணிகள்

"முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!":

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா சாஹிப் அவர்களின் மரணம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய முஸ்லிம்களுக்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது, இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும், ஷரீஅத் பற்றிய தெளிவுரையும், பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (Banatwala Bill) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகையே சாரும். பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபான்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல், அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை, அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்... முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்... வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தேசிய பாதுகாப்பு சட்டம், ஜாமிஆ மில்லியா, இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா, ராம்பூர் ரஜா நூலக மசோதா, மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா, வாரணாசி, பேர்ணாம்பட், ஜாம்ஷெட்பூர், முஜப்பூர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள், மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு, கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இந்திய முஸ்லிம்களுக்கு செய்த சேவை கணக்கில் அடங்காதவை. அதன் தகுதிமிக்க தலைவராக விளங்கிய ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்களின் சேவையும் போற்றத்தக்க சாதனையாகும். என்றும் இந்திய முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் நினைவு கூர்ந்து அவர்களின் அப்பழுக்கற்ற அரசியலை இந்திய முஸ்லிம் சமுதாயம் பின்பற்றவேண்டும். ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து அவர்களின் மறுமை வாழ்வை பிரகாசகமாக ஆக்கி அவர்களை உயர்ந்த இடத்தில் (சுவர்க்கலோகத்தில்) வைக்க அல்லாஹூ தஆலாவிடம் இறைஞ்சுவோம். ஆமீன்

B.சகதுல்லாஹ்.
வடக்கு மாங்குடி

Inna lillahi wa inna ilaihi rajioun. May Allah accept his services towards
society and nation admit him in paradise.

Akbar Batcha
MaxVision International FZ LLC.
108, Building 9, Dubai Media City,
P. O. Box 6727, Dubai
United Arab Emirates
Tel: +971 4 374 8213
abatcha@gmail.com

மணியன்
dateWed, Jun 25, 2008 at 5:51 PM
subjectRe: [சற்றுமுன்...] Comment: "��ுஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் மரணம்"

அவருடன் கேரளாவில் தொடர்வண்டியில் உரையாடியது நினைவிற்கு வருகிறது. ஒரு எளிமையான மனிதாபிமானமிக்க அரசியல் தலைவராக அவரைக் கண்டேன். அவரது மறைவிற்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலிகள்


அது பொதுவான உரையாடல்தான். குறிப்பிடும்படி எதுவும் இல்லை. நான் கேரளத்தில் தகவல் தொடர்பு திட்டங்களில் பணிபுரிந்த நேரத்தில் ஒருமுறை கோழிக்கோடிலிருந்து எர்ணாகுளம் வரும்போது எனது அடுத்த இருக்கையில் அவர் பயணித்தார். எனக்கு அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என தெரியாது. பொன்னானியில் அவர் தொடர்வண்டியில் ஏறியபோது எந்தவொரு கூட்டமோ பந்தாவோ இல்லாதிருந்தமையாலும் முன்னறிமுகம் இல்லாததாலும். எனது பணிகளைப் பற்றி கேட்கத்துவங்கிய பின்னரே நான் பதிலுக்கு அவரது அறிமுகத்தைக் கேட்க தாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என தெரிவித்தார். சற்றுநேரம் போதுவாக பேசிவிட்டு தாம் கொண்டுவந்திருந்த புத்தக வாசிப்பில் ஆழ்ந்துவிட்டார்.

அன்புடன்,
மணியன்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பனாத்வாலா மரணம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பனாத்வாலா மரணம்
புதன்கிழமை, ஜூன் 25, 2008


மும்பை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா இன்று மாலை மரணமடைந்தார்.

பனாத்வாலா 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம். பி.எட். பட்டப்படிப்பை முடித்தார். 1954 முதல் 1962 வரை அஞ்சுமனே இஸ்லாம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் காயிதெமில்லத்தைச் சந்தித்து முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மும்பை உமர்காடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1967 முதல் 1977 வரை மஹாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.

இக்காலகட்டத்தில் மஹாராஷ்டிர அரசு கருத்தடை சட்டம், பசுவதை சட்டம், வந்தேமாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தபோது அவற்றை எதிர்த்து கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட அறப்போராட்டங்கள் நடத்தி அவற்றில் வெற்றியும் பெற்றார்.

பாராளுமன்றத்திற்கு கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 முதல் 1991 வரையிலும் 1996 முதல் 2004 வரையிலும் உறுப்பினராக இருந்தார்.

சென்னை முஸ்லிம் அமைப்புகளால் 'சிறந்த சமூக சேவகர் தங்கப்பதக்க விருது பனாத்வாலாவுக்கு வழங்கபப்ட்டது. முதல்வர் கருணாநிதி இந்த விருதினை வழங்கினார்.

இப்றாஹீம் சுலைமான் சேட் மறைவுக்குப் பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராக பணியாற்றி வந்தார்.

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக வரை பணியாற்றி வந்தார். அலிகர் சர்வ கலாசாலை ஆட்சிக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிலும் பொறுப்பு வகித்து வந்தார்.

கடந்த ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 60ஆம் ஆண்டு நிறைவு மணிவிழா மாநாட்டில் கலந்துகொண்டதே பனாத்வாலாவின் கடைசி நிகழ்ச்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2008/06/25/india-iuml-leader-banathwala-passes-away.html

முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!

முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!




இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதேமில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் இன்று மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

http://muslimleaguetn.com/hqreleases.asp?id=10
http://kayalpatnam.com/shownews.asp?id=1898
www.muduvaihidayath.blogspot.com

அன்னாரது வாழ்க்கைக் குறிப்பு பின்வருமாறு:-

ஆசிரியர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மும்பையில் ஹாஜி நூர் முஹம்மது அவர்களின் மகனாகப் பிறந்தார்.
மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம். பி.எட். பட்டப்படிப்பை முடித்தார். 1954 முதல் 1962 வரை அஞ்சுமனே இஸ்லாம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களைச் சந்தித்து இந்திய யுனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சட்டமன்ற - பாராளுமன்ற பணிகள்:

மும்பை உமர்காடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1967 முதல் 1977 வரை மஹாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.

இக்காலகட்டத்தில் மஹாராஷ்டிர அரசு கருத்தடை சட்டம் பசுவதை சட்டம் வந்தேமாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தபோது அவற்றை எதிர்த்து கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட அறப்போராட்டங்கள் நடத்தி அவற்றில் வெற்றியும் பெற்றார்.

இந்திய பாராளுமன்றத்திற்கு கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 முதல் 1991 வரையிலும் 1996 முதல் 2004 வரையிலும் உறுப்பினராக இருந்தார்.

ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும் ஷரீஅத் பற்றிய தெளிவுரையும் பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (டீயயெவறயடய டீடைட) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யுனியன் முஸ்லிம் லீகையே சாரும்.

பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபுன்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல் அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்... முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்... வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு மகளிர் இடஒதுக்கீடு மசோதா தேசிய பாதுகாப்பு சட்டம் ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா ராம்புர் ரஜா நூலக மசோதா மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா வாரணாசி பேர்ணாம்பட் ஜாம்ஷெட்புர் முஜப்புர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள் மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை.

பாராட்டுகள்:

பெருந்தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபிற்கு சென்னை முஸ்லிம் அமைப்புகளால் 'சிறந்த சமூக சேவகர் தங்கப்பதக்க விருது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. பன்னாட்டு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் 'விஜய் ஸ்ரீ விருது குட்ச் சக்தீ சார்பில் 'சமாஜ்ரத்னா விருது சிறந்த பாராளுமன்றவாதிக்கான 'மவ்லானா பஜ்ருல் ஹக் கைராபாதி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியா டுடே இதழில் - சிறந்த பாராளுமன்றவாதிகளில் பத்தில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். 'பயானீர் இதழில் தேர்ந்த பாராளுமன்றவாதிகளில் 12 நபர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஷரீஅத் சட்ட மசோதா மீது விவாதம் நடந்தபோது தமிழக முஸ்லிம்களால் 'முஜாஹிதேமில்லத் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

பொறுப்புகள்:

காயிதெமில்லத் பாபகி தங்கள் இப்றாஹீம் சுலைமான் சேட் ஆகியோருக்குப் பின் இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராக இதுகாலம் வரை பணியாற்றி வந்தார். இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் அரசியல் கூட்டணியான மிலலி ஜம்ஹீரி மஹஜ் மஜ்லிஸே இத்திஹாதே முஸ்லிமீன் முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இன்று வரை பணியாற்றி வந்தார். அலிகர் சர்வ கலாசாலை ஆட்சிக்குழு இந்திய அரசின் பொன்விழாக் குழு மஹாராஷ்டிரா தேசிய ஒருமைப்பாட்டுக் குழு உள்ளிட்ட குழுக்களின் உறுப்பினராகவும் மும்பை அமைதிக்கான நீதித்துறையின் நீதிபதியாகவும் முஸ்லிம் ஆம்புலன்ஸ் சங்கத்தின் துணைத் தலைவராகவும் அஞ்சுமனே இஸ்லாம் பொருளாதாரப் பள்ளியின் தலைவராகவும் கச்சி மேமன் ஜமாஅத் மாணவர் வட்டத்தின் தலைவராகவும் மற்றும் பல்வேறு அறக்கட்டளைகளின் அறங்காவலராகவும் பணியாற்றி இருக்கிறார் - பணியாற்றியும் வருகிறார்.

வெளியீடுகள்:

'மார்க்கமும் - அரசியலும் 'சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் லீக் ஆகிய புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். கட்டுரைகள் பிரசுரங்கள் பல வெளியிட்டிருக்கிறார்.
பயணித்த நாடுகள்:

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியிருக்கிறார். இரண்டு முறை உம்றா செய்திருக்கிறார். அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் ரோம் ஜெர்மனி மால்டா துருக்கி சைப்ரஸ் ஆஸ்திரேலியா நார்வே பாகிஸ்தான் ஸவுதி அரபிய்யா ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு சமுதாயத்தின் பிரதிநிதியாக அவர் பயனித்திருக்கிறார்.

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் மஹாராஷ்டிரா சட்டமன்றத்திலும் இந்திய பாராளுமன்றத்திலும் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நூலாக இந்திய யுனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினமான மார்ச் 10ஆம் தேயன்று சென்னையில் வெளியிடப்பட்டது.

கடந்த ஜூன் 2021 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் 60ஆம் ஆண்டு நிறைவு மணிவிழா மாநாட்டில் கலந்துகொண்டதே அவரது கடைசி நிகழ்ச்சியாயிற்று.

எல்லாம்வல்ல அல்லாஹ் மறைந்த முஜாஹிதெமில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபின் நற்பணிகளை கபுல் செய்து அவர்களின் பிழைகளைப் பொறுத்து உயர்வான சுவனத்தைத் தந்தருள்வானாக ஆமீன்.

தாய்ச்சபையின் அனைத்து உறுப்பினர்களும் மர்ஹூம் அவர்களின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு இந்திய யுனியன் முஸ்லிம் லீகின் தலைமை நிலையம் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

Sunday, June 22, 2008

33% இட ஒதுக்கீடு: பெண்கள் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும் - கனிமொழி

33% இட ஒதுக்கீடு: பெண்கள் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும் - கனிமொழி



சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மகளிர் அணி மாநாட்டில், ஒரு பெண்ணுக்கு விருது வழங்குகின்றனர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், கவிஞர் கனிமொழி எம்பி,. உடன் (இடமிருந்து) இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மாநில அமைப்பாளர் பாத்திமா முஷாபர், சமூக நலத்துறை ஆணையத்தின் தலைவர் கவிஞர் சல்மா, காயத்திரி தேவி எம்எல்ஏ.


சென்னை, ஜூன் 21: பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பெண்கள் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, சென்னையில் சனிக்கிழமை நடந்த கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் அவர் பேசியது:

உடல் பலத்தை விட அறிவு பலம் தான் தற்போது முன்னிறுத்தப்படுகிறது. இந்த நிலையில் அறிவு பலத்தை பெருக்கவேண்டும். நாம் நம்பும் கொள்கைக்காகப் போராடி அதில் வெற்றிபெற நம் சக்தி முழுவதையும் முழுமையாக வெளிப்படுத்த வேண்டும்.

பெண்களுக்கு கல்வி அறிவை அதிகப்படுத்த வேண்டும். இதற்கு, பெண்களுக்கான 33 சத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவது மிக அவசியம். இதற்கு, பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும். இல்லையேல், 33 சத இட ஒதுக்கீடு பட்டிமன்றப் பொருள்களாகவே இருந்துவிடும்.

அரசியல், பொருளாதாரத் துறைகளில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் பெண்களின் பங்கும் மிக முக்கியம். அதற்கு, 33 சத இட ஒதுக்கீடு கட்டாயம் தேவை. நாட்டின் முக்கிய முடிவுகள் அனைத்தையும் பெண்களைக் கலந்தாலோசித்தே எடுக்கவேண்டும்.

பெண்களை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்படும் முடிவுகளை பெண்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது. பட்ஜெட்டில் பெரும் தொகை ராணுவத்துக்கு ஒதுக்கப்படுகிறது. சமூக மேம்பாடு, மருத்துவம், கல்வி ஆகியவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெயந்தி நடராஜன்: மகளிருக்கான 33 சத இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, பெண் உறுப்பினர்களை கீழே தள்ளிவிட்டு, மசோதாவை தாக்கல் செய்தவதை சில கட்சி உறுப்பினர்கள் தடுக்க முயன்றனர்.

இதைப் பார்க்கும்போது ஜனநாயக நாட்டில் தான் வசிக்கிறோமா? என எண்ணத் தோன்றுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள உரிமை வாக்களிக்க மட்டும் தானா? பெண்களுக்கு அரசியல் அதிகாரமும் உண்டு. நாடாளுமன்றத்திலேயே பெண்களை தாக்குகின்றனர் என்றால், கிராமங்களில் உள்ள பெண்களின் நிலை என்ன?

சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பின்னும் சமமான பிரதிநிதித்துவம் இல்லை என்றால் அங்கு ஜனநாயகம் நீடிக்காது. சமமான பிரதிநித்துவத்தைப் பெற கல்வி தான் ஒரே கருவி. நாட்டில் உள்ள மொத்த பெண்களில் 50 சதம் பேருக்கு கல்வி அறிவு இல்லை. 14 வயதுக்கு உட்பட்ட 5.5 கோடி பெண்கள் வீட்டு வேலைகளிலேயே முடக்கப்படுகிறார்கள்.

கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக்க வேண்டும். பெண்களின் முன்னேற்றத்துக்கு நாம் இணைந்து போராட வேண்டும் என்றார்.

மாநாட்டுக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மாநில அமைப்பாளர் பாத்திமா முஷாபர் தலைமை வகித்தார். திராவிடர் கழக செய்தித் தொடர்பாளர் ஏ.அருள்மொழி, சமூக நலவாரியத் தலைவர் சல்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமூக நல்லிணக்கம், கல்வி, ஊடகவியல், இலக்கியம், சமூக சேவை ஆகிய துறைகளில் சாதனை படைத்த இஸ்லாமிய பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.


http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080621121050&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=0

சிறுபான்மையோர் நல அமைச்சகம்: அரசுக்கு முஸ்லிம் லீக் கோரிக்கை

சிறுபான்மையோர் நல அமைச்சகம்: அரசுக்கு முஸ்லிம் லீக் கோரிக்கை



சென்னை, ஜூன் 21: சிறுபான்மையோர் நல அமைச்சகத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரியுள்ளது.

அக்கட்சியின் மணிவிழா மாநில மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்: தமிழகத்தில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடரும்.

மத்திய அரசில் உள்ளது போல தமிழக அரசிலும் சிறுபான்மையோர் நல அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். உலமா நல வாரியம் மற்றும் உருது ஆசிரியர் பயிற்சி கல்லூரியை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் அமைய உள்ள புதிய பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றுக்கு காயிதே மில்லத் பெயரைச் சூட்ட வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தினருக்கு அடக்கஸ்தலம் (கபரஸ்தான்) இல்லாத ஊர்களில் அந்த வசதியையும், பட்டாக்களையும் வழங்க வேண்டும். பட்டம் பெற்ற யுனானி மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஒரே விதமான சிவில் சட்டப் பிரிவு நீக்கப்பட வேண்டும். தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வேண்டும். சுயநிதிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு உதவி அளிக்க வேண்டும்.

இந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு கருணை அடிப்படையில் விடுதலை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080621135450&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=

சிறுபான்மையோர் நல அமைச்சகம்: அரசுக்கு முஸ்லிம் லீக் கோரிக்கை

சிறுபான்மையோர் நல அமைச்சகம்: அரசுக்கு முஸ்லிம் லீக் கோரிக்கை



சென்னை, ஜூன் 21: சிறுபான்மையோர் நல அமைச்சகத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரியுள்ளது.

அக்கட்சியின் மணிவிழா மாநில மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்: தமிழகத்தில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடரும்.

மத்திய அரசில் உள்ளது போல தமிழக அரசிலும் சிறுபான்மையோர் நல அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். உலமா நல வாரியம் மற்றும் உருது ஆசிரியர் பயிற்சி கல்லூரியை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் அமைய உள்ள புதிய பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றுக்கு காயிதே மில்லத் பெயரைச் சூட்ட வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தினருக்கு அடக்கஸ்தலம் (கபரஸ்தான்) இல்லாத ஊர்களில் அந்த வசதியையும், பட்டாக்களையும் வழங்க வேண்டும். பட்டம் பெற்ற யுனானி மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஒரே விதமான சிவில் சட்டப் பிரிவு நீக்கப்பட வேண்டும். தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வேண்டும். சுயநிதிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு உதவி அளிக்க வேண்டும்.

இந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு கருணை அடிப்படையில் விடுதலை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080621135450&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=

மதவாத சக்திகளை தடுத்திட, மத்தியில் ஒர் நல்லாட்சி ஏற்பட்டிட..........

மதவாத சக்திகளை தடுத்திட, மத்தியில் ஒர் நல்லாட்சி ஏற்பட்டிட..........
மதவாத சக்திகளை தடுத்திட, மத்தியில் ஒர் நல்லாட்சி ஏற்பட்டிட
சுயமரியாதைக் கொள்கை உறுதி கொண்ட இலட்சிய கூட்டணி இருக்க வேண்டும்
முஸ்லிம் லீக் மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் பேருரை

சென்னை, ஜூன் 22- இந்தியாவிலே ஒரு நல்ல அரசு உருவாக வேண்டுமானால், மதவாத சக்திகளுக்கு இடம் கொடுத்திடாத சுயமரியாதைக் கொள்கை உறுதி கொண்ட, இலட்சிய உறுதி கொண்ட கூட்டணி உருவானால்தான் தடுத்திட முடியும் என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நேற்று நடைபெற்ற முஸ்லீம் லீக் மாநாட்டில் எடுத்துக் கூறி விளக்கவுரை யாற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு நேற்று (21.6.2008) சென்னைத் தீவுத் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய நிறைவுரை வருமாறு: இந்த அருமையான மாநாட்டில் கலந்து கொண்டு - பெருமை மிகு தலைவர்களுடைய பேச்சுக்களையெல்லாம் கேட்கின்ற வாய்ப்பினைப் பெற்று - இந்த மாநாட்டிலே நிறைவேற்றியுள்ள தீர்மானங்களையெல்லாம் படித்துப் பார்த்து - அவற்றை நிறைவேற்றுகின்ற வாய்ப்பு கிடைக்குமேயானால் நிறைவேற்றி - உங்களுடைய நன்றிக்கு உரியவனாக ஆகின்ற நிலையில் இந்த மாநாட்டிலே நான் கலந்து கொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய அளவில் இந்த மாநாடு நடைபெறும் என்று நான் முதலில் எதிர்பார்க்கவில்லை. நம்முடைய மாநாட்டின் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் குறிப்பிட்டதைப் போல, எதிர்பார்த்ததை விட மேலான கூட்டம் - பேரணி - இவைகள் எல்லாம் இன்றைக்கு நடைபெற்று நானும் உங்களோடு இணைந்து மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் ஆழ்ந்திருக்கிறேன். (கைதட்டல்)

எங்களுடைய துணை எங்களைப்போல
வலுவாக, உரமாக இருக்கிறது

நம்முடைய பனத்வாலா அவர்கள்கூட இங்கே வரும்போது, பேரணியும், பொதுக்கூட்டமும், மாநாட்டுக் கூட்டமும் ஏதோ ஓரளவு - ஒரு மண்டபத்திலே நடைபெறும் கூட்டம் என்ற அளவிலேதான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டுதான் வந்திருப்பார். அவர் ஆற்றிய உரையை சிங்கநாதம் என்று தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் இங்கே வர்ணித்தார்கள். அவர் உரை, சிங்க நாதமாக மாறியதற்குக் காரணமே, இங்கே குழுமியிருக்கின்ற இந்தக் கூட்டத்தின் காட்சிதான் என்று சொன்னால் அது மிகையாகாது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இப்போது முஸ்லிம் லீக் கட்சிக்கு வளர்ச்சி இல்லை - அது குறுகி விட்டது - நாங்கள் பரந்து விரிந்து இங்கே எங்களுடைய கொடியை நாட்டியிருக்கிறோம் என்றெல்லாம் எண்ணி கர்ச்சனை புரிந்து கொண்டிருக்கின்ற மதச் சார்புடைய ஒரு கூட்டம் - மதவெறி கொண்ட ஒரு கூட்டம் - இங்கே முஸ்லிம்களுடைய இயக்கம் வலுவாக இல்லை என்று சொன்னதற்குக் காரணமே, களிப்படைவதற்குக் காரணமே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு துணையாக இருக்கின்ற முஸ்லிம் லீக் இளைத்துப் போய் விட்டது, எனவே தி.மு. கழகம் கம்பீரமாக நடமாட முடியாது என்ற அந்த நப்பாசையிலேதான் அவர்கள் இதைச் சொல்லி வருகிறார்கள், ஏடுகளில் சிலர் எழுதியும் வருகிறார்கள். நான் அவர்களுக்கெல்லாம் சொல்ல விரும்புகிறேன். எங்களுடைய துணை இளைத்துப் போக வில்லை. களைத்துப் போகவும் இல்லை. எங்களுடைய துணை எங்களைப் போலவே வலுவாக இருக்கிறது. எங்களைப் போலவே உரமாக இருக்கிறது. ஆகவே இதற்குத் தான் துணை என்று பெயர். ஒன்று இளைத்துப் போய் மற்றொன்று பலமாக இருந்தால், அது துணையாக இருக்க முடியாது, தொல் லையாகத்தான் இருக்கும். எனவே நாங்கள் சம பலத்தோடு இன் றைக்கு இருக்கிறோம். இந்த வார்த்தையை நம்முடைய காதர் மொகிதீன் அவர்கள் தேர்தல் நேரத்தில் இடங்களைப் பிரித்துக் கொள்கின்ற போது பயன்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை யோடு நான் இதைச் சொல்கிறேன். (பலத்த சிரிப்பு)

நான் இந்தக் கூட்டத்திலே அளவற்ற மகிழ்ச்சியோடு நீங்கள் எல்லாம் அமர்ந்திருக்கின்ற காட்சியினைக் கண்டு உள்ளபடியே மனம் பூரிக்கின்றேன். என்னுடைய இதயம் கனத்துப் போகிறது. ஏனென்றால் நம்முடைய அருமை நண்பர் நாகூர் அனீபா அவர்கள் இங்கே பாடும்போது எனக்கு பல நினைவுகள். அவரும் நானும் ஏறத்தாழ சம வயதினர். ஒன்றிரண்டு வயது ஏற்றத் தாழ்வு இருக்கலாம். அந்தக் காலத்தில் நீதிக் கட்சி தொடர்பு கொண்டு நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாடுகளில் - பிறைக் கொடி பறந்த அந்த மாநாடுகளில் - நம்முடைய வீரமணி அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல் - பிறைக் கொடியைப் பிடித்த கை இந்தக் கை, சிறுவனாக இருந்து பிறைக் கொடியை ஏந்திய கை இந்தக் கை. அந்தப் பிறைக் கொடியைப் பற்றி பாடியவர், அன்றைய மாணவராக, இளைஞராக இருந்த நம்முடைய நாகூர் அனீபா அவர்கள். அந்த இசை முரசின் நாதம் இதுவரையிலே அதே தொனியிலே ஒலித்துக் கொண்டி ருக்கின்ற காட்சியினை நீங்கள் காண்கிறீர்கள். சிறு களைப்பு ஏற்பட்டாலும்கூட அந்தக் குரல்வளம் கொஞ்சமும் குறையவில்லை. எப்படி நாகூர் அனீபா வின் குரல்வளம் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறதோ அதைப் போலத்தான் முஸ்லிம் லீக்கின் பலமும் குறையாமல் இருக்கிறது என்பதை நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்பு கிறேன்.

கொள்கைகளும் கூட்டணியும்

கூட்டணி பற்றி இங்கே பேசப்பட்டது. கூட்டணிக்கு, நம்முடைய பனத்வாலா அவர்கள் குறிப்பிட்டார்கள் - அதைத் தொட்டு நம்முடைய பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களும் சுட்டிக் காட்டினார்கள். தேர்தல் நேரம் தான் என்றில்லாமல், அதற்கு முன்பே கூட்டணியைப் பற்றியெல்லாம் ஒரு ஏற்பாட் டுக்கு வர வேண்டுமென்ற கருத்தைச் சொன்னார்கள். தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் யார் யார் கூட்டணி சேருவது என்ற அந்த முக்கியமான கருத்தை விட யார் யார் கூட்டணியிலே இருப்பது என்கின்ற முக்கியமான கருத்துக்கு இப்போது நேரம் வந்து விட்டது என்பதை நீங்கள் எல்லாம் மிக நன்றாக அறிவீர்கள். நான் இன்று நேற்றல்ல, எங்களையெல்லாம் ஆளாக் கிய அரசியல் மேதை - ஜனநாயக காவலர் அண்ணா அவர்கள் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதிலே ஆர்வம் உடைய வர்கள். மக்களாட்சித் தத்துவம் வெற்றி பெற வேண்டுமானால், அப்படி வெற்றி பெற்ற மக்களாட்சி நிலைக்க வேண்டுமேயானால் - அடிப்படை பலமாக இருக்க வேண்டும். அந்த அடிப் படையைப் பலப்படுத்திக் கொள்ள நேர்மையான, நியாயமான, வலுவுள்ள நம்முடைய இலட்சியங்களை எதிரொலிக்கக் கூடிய, நம்முடைய கொள்கைகளுக்கேற்ற கூட்டணி இருக்க வேண்டும். நான் இங்கே நம்முடைய பனத்வாலா அவர்களின் எதிரிலே ஒன்றைச் சொல்லிக் கொள்வேன். நாங்கள் இடையிலே இந்தக் கூட்டணிக் கொள்கை யில் சற்று விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது - அவருக்குத் தெரியும். ஏனென்றால் என்னைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்ற தேசிய தலைவர்களில் அவரும் ஒருவர். ஏன் விட்டுக் கொடுக்க வேண்டி யிருந்தது என்பதை அவர் அறிவார். தமிழ்நாட்டில் பா.ஜ.க. வோடு திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி வைக்க வேண் டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அப்படி ஏற்பட்ட போதும், நாங் கள் கொள்கையை புறம் வைத்து விட்டு, அந்தக் கூட்டணிக்குச் செல்லவில்லை. கொள்கையிலே உறுதியாகவே - கொள்கை யில் ஒரு துளியும் விட்டுக் கொடுக்காமல் அந்தக் கூட்டணியில் எங்களை நாங்கள் இணைத்துக் கொண்டோம். கூட்டணி உருவானபோதே டெல்லிப் பட்டணத்தில் நானும் தம்பி முரசொலி மாறன், இன்றைய ம.தி.மு.க. வின் பொதுச் செயலாளர் தம்பி கோபாலசாமி - எல்லோரும் படித்துப் பார்த்து, திருத்தம் சொல்லி இந்தக் கூட்டணியில் நாங்கள் இருப்பதென்றால், மதவெறியை நீங்கள் விட்டொழிக்க வேண்டும், ஒரு பொதுக் கொள்கையில் நாம் உடன்பாடு கொள்ள வேண்டும், மிக முக்கியமாக அயோத்தியிலே நீங்கள் ராமர் கோவில் கட்டுவ தற்காக பாபர் மசூதியை இடிக்கும் பணியிலே ஈடுபட்டிருக் கிறீர்களே, அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் கேட்டு அதற்கெல்லாம் அவர்கள் வளைந்து கொடுத்து, அதற் கெல்லாம் ஒப்புதல் சொன்ன பிறகுதான் அந்தக் கூட்டணிக்கு எங்கள் கையெழுத்தைப் பெற முடிந்தது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.

கூட்டணிக் கட்சிக்கான இலக்கணம்

பிறகு நாங்கள் அந்தக் கூட்டணியிலிருந்து விலகியதற்குக் காரணமும், எங்கள் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக முதலில் சொல்லி விட்டு, கொஞ்சம் கொஞ்சம் அதைத் தளர்த்திய காரணத்தால் அதிலிருந்து அவர்கள் விலகிய காரணத்தால் நாங்கள் கூட்டணியிலிருந்து விலகினோம். அமைச்சர்களாகவே இருந்து விலகினோம். அதற்குப் பிறகுதான் இனி இப்படி கொள் கையிலே உறுதியாக இருப்போம் என்று சொல்லி விட்டு, பின்னர் மாறி நடப்பவர்களுடைய நட்பு என்றைக்கும் வேண்டாம், சொன்ன சொல் தவறாத ஒரு கட்சி இருந்தால் தான், அந்தக் கட்சியோடு தான் இனி கூட்டணி, நன்றி உணர்வோடு இருக் கின்ற கட்சியோடு தான் இனி கூட்டணி என்று அன்றைக்கு எடுத்த அந்த உறுதிதான் நாங்கள் அடுத்த வேறொரு கூட்டணியை காங்கிரஸ் கட்சியின் தலைமை யில் அமைக்க வேண்டி வந்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளோடும் நம்முடைய தம்பி திருமாவளவன் கட்சியோடும், முஸ்லிம் லீக் கட்சியோடும் உடன்பாடு கொள்ள வேண்டிய நிலைமை யெல்லாம் ஏற்பட்டது.
இதிலே இடையிலே ஒரு கூட்டணி கட்சியை விட்டு விட்டாயே என்று நீங்கள் கேட்கலாம். பெயர் சொல்லத் தான் விட்டு விட்டேனே தவிர, விட்டு விடவில்லை, அவர்கள் என்ன செய்தால் போகச் சொல்வார்கள் என்று எண்ணிய காரணத்தால் போனவர்களே தவிர, நாங்களாக யாரையும் இழக்கவும் விரும்ப வில்லை, விரட்டவும் விரும்பவில்லை. ஏனென்றால் பனத்வாலா அவர்கள் இங்கே வந்திருக்கின்ற காரணத்தால், அவருக்கு இந்தச் செய்தியை வேறு யாராவது வேறு விதமாகச் சொன்னால் என்ன செய்வது என்பதற்காகத் தான் உண்மையான தகவலை அவருக்குச் சொன்னேன். நாங்கள் யாரையும் போ என்று விரட்ட வில்லை. ஆனால் நாங்கள் எவ்வளவு இழிவைத் தாங்கிக் கொண்டு, எவ்வளவு அவமானத்தைத் தாங்கிக் கொண்டு ஒரு அணியை நடத்துவது? நான்தான் அந்த அணிக்கு தலைவன் என்றாலுங்கூட, அந்த அணியைக் கட்டிக் காப்பது என்ற அந்தக் கேள்விக்கு கிடைத்த பதில் தான் எங்கள் அணியிலிருந்து ஒரு கட்சி இன்றைக்கு வெளி யேறியதற்குக் காரணம், இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இது என்றைக்கோ நடந்ததற்காக இன்றைக்கு இந்த காரியத்தை நீங்கள் செய்யலாமா என்று கேட்பவர்கள் உண்டு. எழுதுபவர்களும் உண்டு. வள்ளுவர் அப்போதே சொன்னார். தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே
நாவினால் சுட்ட வடு என்று ! அந்தத் திருக்குறளை வேண்டு மானால் எடுத்துக் கொளுத்தி விட்டு, என்றைக்கோ பேசிய தல்லவா என்று பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் என்றைக் கும் நாவினால் சுட்ட வடு மாறாது, ஆறாது. ஆகவே தான் நாம் சில முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியத்திற்கு வந்தோம். இன்றைக்கு இந்தக் கூட்டணியிலே இருந்து ஒரு கட்சி, விலகி யிருந்தாலுங்கூட, இதிலே இருக்க முடியாத சூழ்நிலை ஏற் பட்டாலுங்கூட, நாம் திராவிட முன்னேற்றக் கழகமாக, நம்மோடு இருக்கின்ற கட்சிகளோடு ஒரு அணியாக செயல்பட வேண்டிய சூழ்நிலை இருந்தாலுங்கூட நான் இந்த மாநாட்டிலே உறுதியாகத் தெரிவிக்கின்றேன். நிச்சயமாக, வருகின்ற தேர்தல் - அது பாராளுமன்றத் தேர்தலாக இருந் தாலும் - அடுத்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் நம்முடைய அணிதான் வெற்றி அணி - நாம் தான் வெற்றியடையப் போகின்ற அணி என்பதை உறுதிபட நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

ஏனென்றால் முஸ்லிம் லீக் என்பது ஒரு சந்தர்ப்ப வாத இயக்கம் அல்ல. அந்த இயக்கத்திலிருந்து எங்களை அரவணைத் துக் காத்து, அறிஞர் அண்ணாவுக்குத் தோழராய், பெரியாருக்கு நண்பராய், எங்களுக்கெல்லாம் தலைவராய் விளங்கிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் ஆனாலும் - அவர்களுக்கு அடுத்து இந்த இயக்கத்தை வளர்த்து எங்களோடு நட்பு கொண்டிருந்த என்னுடைய அருமை நண்பர் அப்துல் சமத் அவர்கள் ஆனாலும் - அவர்கள் எல்லாம் இந்த இயக்கத்தை, இந்தக் கூட்டணியை எப்படி நடத்திச் செல்ல துணை புரிந்தார்கள் என்பதை யெல்லாம் நான் மறந்து விடவில்லை. இடையிடையே ஆயிரம் கசப்பு உணர்வுகள் , ஆயிரம் கருத்து வேறுபாடுகள் எங்களிடையே ஏற்பட்டிருக்கலாம். அப்படி ஏற்பட்டாலுங் கூட, கண்ணியம் மறந்ததில்லை அவர். அதனால் தான் அவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று இன்றளவும் போற்றப்படுகிறார். கோபதாபங்கள் எனக்கும் அப் துல் சமத் அவர்களுக்கும் இடையிலே ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எந்த நேரத்திலும் வாய் தவறி கூட என் பெயரைச் சொல்லி, அருமை நண்பர் சமத் அவர்கள் அழைத்ததில்லை. அதனால் தான் இன்றைக்கு அவருடைய மகளான பாத்தி மாவை என்னுடைய அருமைச் செல்வி என்று என்னால் அரவ ணைக்க முடிகிறது. அந்த உறவு இன்றைக்கும் தொடருகிறது.
நான் இங்கே வந்ததும் என்னிடத்திலே வந்து பாத்திமா பேசினார். என்ன சொன்னார்? அவர் குடும்பத்தைப் பற்றியா? அல்லது என்னுடைய குடும்பத்தை பற்றியா விசா ரணை? இல்லை. கொள்கையைப் பற்றித் தான் பேசினார். இன்றைக்கு கனிமொழியைப் பார்த்தேன், அப்பா. நாங்கள் இருவரும் ஒரு சபதம் செய்திருக்கிறோம் என்றார். என்ன சபதம் என்றேன். இந்த மகளிர் இட ஒதுக்கீட்டை பெற்றே தீருவது, பெறுவதற்கான போராட்டத்திலே ஈடுபடுவது என்று சபதம் செய்திருக்கிறோம் என்றார். அப்போது தான் முஸ்லிம் லீக்கின் வலுவும், அவர்களு டைய மன உறுதியும் இந்தப் பெண்களை வளர்த்திருக்கின்ற தலைவர்களின் வைராக்கியமும், கொள்கைப்பற்றும் நிச்சயமாக வெற்றி பெறும் என்று நாம் நம்புகிறோம். நம்புவதற்கு வழி இருக்கிறது என்று உறுதிபடக் கூறுகிறேன்.
மதவாத சக்திகள் வென்றால் மீண்டும்
ராமர்கோயில் உருவாகும்
இன்று இந்தியாவின் நிலைமை என்ன? அவைகளை யெல்லாம் சாங்கோபாங்கமாக பேச வேண்டிய நேரம் தான் இது. அதைத் தான் இந்தியாவில் எல்லா இடங்களிலும் பேசிக் கொண் டிருக்கிறோம். ஒரு புறத்திலே ஏழை யெளிய மக்கள் வாடுகிற அளவிற்கு விலைவாசி ஏறுகிறது. தமிழகத்திலே அதைத் தடுக் கின்ற முயற்சியிலே ஈடுபடுகிறோம். முடிந்த வரையிலே தாங்கப் பார்க்கிறோம். முடிந்த வரையிலே தாங்கிக் கொண்டிருக் கிறோம். வேறு சில மாநிலங்களிலே அதற்கான வழி வகைகளை இன்னும் காணாமல் இருக்கிறார்கள். அகில இந்திய அளவிலே கூட அதற்குரிய காரண காரியங்களை அறிந்து அதைக் களைய வேண்டிய முயற்சிகளிலே ஈடுபடவில்லை. அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சினை
கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை இந்த நேரத்திலே அணுசக்தி விவகாரம். அதிலே நம்முடைய மதிப்பிற் குரிய தோழர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நண்பர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு. அதைத் தீர்க்க வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. நாளைக் குக் கூட கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சென்னைக்கு வருகிறார்கள். அவர்களோடு பேசவிருக்கிறேன். அதன் பிறகு நான் டெல்லிக்குச் செல்லவிருக்கிறேன். ஏனென்றால் தகவல்கள், புதுத் தகவல்கள் என்பதால் உங்களுக்கும் சொல்ல வேண்டு மென்பதற்காகச் சொல்கிறேன். அந்தத் தகவல்கள் பரிமாற்றம், அந்தச் சந்திப்பு அதன் மூலமாக ஏற்படுகின்ற விளைவுகள் இந்தி யாவைக் காப்பாற்றப் பயன்பட வேண்டும். கம்யூனிஸ்ட் கட் சியைக் காப்பாற்றவோ, காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றவோ பயன்பட வேண்டுமென்று சொல்வதற்குப் பதிலாக இருவரி டையே ஏற்படுகின்ற நல்ல எண்ணம், இந்தியாவைக் காப்பாற் றப் பயன்படும். இவர்களிடையே பிளவு ஏற்படுமேயானால், அது மத வாத சக்திகளுக்கு வெற்றியாக ஆகி விடும், மீண்டும் ஒரு அயோத்தி - மீண்டும் ஒரு ராமர் கோவில் பிரச்சினை - மீண்டும் ஒரு பாபர் மசூதி இடிப்பு என்றெல்லாம் ஏற்படும் என்பதற்காகத் தான் சொல்கிறேன். அவைகள் எல்லாம் வராமல் இருக்க சுமூகமான இந்தியா, அமைதியான இந்தியா அமைய வேண்டுமேயானால், என்ன நடக்க வேண்டும்? ஒரு வேளை விரைவிலே தேர்தல் வந்தாலும், அல்லது உரிய நேரத்திலே வந்தா லும் அந்தத் தேர்தலிலே ஏற்பட வேண்டிய முடிவு யார் ஜெயிப் பது, யார் தோற்பது என்பதல்ல. இந்தியா வாழ்வதா இல்லையா என்ற அந்தக் கேள்விக்கு கிடைக்கின்ற பதிலாகத் தான் அது இருக்கும்.
கட்சி நீடிக்க வேண்டும் -
பணம் வேண்டாம் என்றவர் காயிதே மில்லத்
உங்களுக்கு நான் நினைவுபடுத்துகின்றேன். பாகிஸ்தான் பிரிந்து - பாகிஸ்தானிலே முஸ்லிம் லீக் தலைவர்களின் கூட்டம் நடைபெற்று - அந்தக் கூட்டத்திற்கு நம்முடைய காயிதே மில்லத் அவர்கள் சென்று திரும்பும் போது என்ன பேசினார் தெரியுமா? அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்ட போது - அய்யா இஸ்மாயில் சாகிப் அவர்களே, இதுவரை ஒன்றாக இருந்த முஸ்லிம் லீக் கட்சிக்கான பணம் மொத்தம் 40 லட்ச ரூபாய் இருக்கிறது. தற்போது இரண்டு நாடுகளாக பிரிந்து விட்டதால் - இந்தியாவிலே அமையவுள்ள முஸ்லிம் லீக் கட்சியின் பங்காக 17 இலட்ச ரூபாயை நீங்கள் எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று சொன்ன போது, காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் சொன்னார் - எனக்கு பணம் பெரிதல்ல, நான் பணத்தைக் கேட்க இங்கே வரவில்லை, கராச்சிக்கு நான் வந்திருப்பது பணத்தைப் பெறுவதற்காக அல்ல, நாற்பது இலட்சம் அல்ல, 400 லட்சம் ஆனாலும் எனக்குத் தேவையில்லை. ஆனால் நான் விரும்புவது எங்களுடைய அமைப்பு இல்லாமல் போய் விடக் கூடாது. அந்த அமைப்பு அப்படியே இருக்க வேண்டும். எனவே அமைப்பை அப்படியே தாருங்கள் - முஸ்லிம் லீக் இந்தியாவிலே இருக்கும், அதை நாங்கள் கட்டிக் காப்போம், அதை நாங்கள் நடத்துவோம். முஸ்லிம் லீக் இருந்தால் போதும் எங்களுக்கு, உங்கள் பணம் வேண்டாம் என்று சொல்லி விட்டு திரும்பி வந்தவர் காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்கள்.
அங்கே சொன்னார்கள் - இதை எடுத்துச் செல்லுங்கள் என்று. ஆனால் வேண்டாம் என்று கொடுத்து விட்டு வரும் போது பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானைப் பார்த்து, இன்றையதினம் நாங்கள் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். நீங்கள் பாகிஸ்தான்காரர்கள். நாங்கள் வேறு நாடான இந்தியாவைச் சேர்ந்தவர்கள். எங்கள் பிரச்சினை களை இனிமேல் நாங்களே பார்த்துக் கொள்வோம். நீங்கள் அதிலே தலையிட முயற்சிக்கக் கூடாது. அதாவது பாகிஸ்தான் இந்தியாவின் பிரச்சினைகளிலே தலையிடக் கூடாது, அதை நாங்களே பார்த்துக் கொள்வோம். ஏனென்றால் இந்தியா எங்கள் நாடும் கூட என்று கூறிவிட்டு, நாங்கள் உங்களிடம் எதிர் பார்ப்பது ஒன்றே ஒன்று தான். உங் கள் நாட்டில் வாழும் சிறுபான்மையினரை நீங்கள் கௌரவ மாக நடத்துங்கள். அது ஒன்றே போதுமானது இங்கே உள்ள சிறுபான்மையினரை கௌரவமாக நடத்துங்கள் என்று இந் தியாவிலே இருக்கின்றவர்களைப் பார்த்து கேட்கின்ற உரிமைக் குரல் எப்படி முஸ்லிம் தலைவர்களுக்கு ஏற்படுகிறதோ, அதைப் போல பாகிஸ்தானிலே இருக்கின்ற சிறுபான்மையோரை கௌர வமாக நடத்துங்கள் என்று சொல்கிற அந்த வீரக் குரலை ஒலித்தவர் நம்முடைய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் என்பதற்காகத் தான் இதை நான் சுட்டிக் காட்டுகிறேன். ``இசுலாமியரை வெளியே போகச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை
நாடாளுமன்றத்தில் ஓர் விவாதத்தின் போது கே.டி.எம். அகமது இப்ராகிம் சாகிப் என்பவர் முஸ்லிம்களுக்காக வேகமாக வாதா டிக் கொண்டிருந்தாராம். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேலுக்கு கோபம் வந்து விட்டது. உடனே அவர் இப்ராகிம் சாகிப் அவர்களைப் பார்த்து, உங்களுக்கு இங்கிருக்கப் பிடிக்கா விட்டால் பாகிஸ்தானுக்கு போய் விடுவது தானே என்று வல்லபாய் படேல் கேட்டாராம். அப்போது அவையிலே இருந்த காயிதே மில்லத் விறுட்டென்று எழுந்து, அமைச்சர் பட்டேலைப் பார்த்து எங்களை பாகிஸ்தானுக்குப் போகச் சொல்ல நீங்கள் யார்? இந்த நாட்டில் பிறந்த யாரையும் வெளியே போ என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. இந்த நாட்டில் உள்ள ஈ, எறும்பு, கொசுக்களைக் கூட வெளியே போ என்று சொல்ல முடியாது என்று சொன்னாராம். அந்த அளவிற்கு இந்திய நாட்டுப் பற்றும், இந்த நாட்டை விட்டு வெளியேறு என்று சொல்கிறவர்களைக் கடிந்து கொள்கிற அந்த உணர்வும் பெற்றவராக காயிதே மில்லத் அவர்கள் அன்றைக்கு இருந்த காரணத்தால் தான் அந்த நாட்டுப் பற்று, அந்தத் தேசிய உணர்வு இன்றளவும் குமரி முனை வரையில் - இமயத்தின் முகடுகள் வரையில் பரவியிருக்கிறது, வளம் பெற்றிருக்கிறது. அப்படிப்பட்ட மாபெரும் தலைவர்களைப் பெற்ற இயக்கம் தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். அந்த இயக்கம் பெற்ற வெற்றிகள் ஒன்றிரண்டு அல்ல. இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போரிட்டு வெற்றிக் கொடி நாட்டி, சுதந்திரத்தைக் கொண் டாடுகின்ற உரிமையை வாங்கித் தந்த மக்கள் இந்திய மக்கள் என்றால், அந்த இந்திய மக்களிலே இஸ்லாமிய மக்களுக்கும் பங்கு உண்டு என்ற அந்த உணர்வோடு நாம் நம்மை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது. எனவேதான் இன்றைக்கும் இஸ்லாமியர்களுடைய உரிமைகள், முஸ்லிம் மக்களுடைய உரிமைகள், உணர்வுகள் இவைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களுடைய மசூதிகளை இடிப்போம், அவர் களை இங்கே வாழ விட மாட்டோம், நாங்கள் தான் இந்த நாட்டிற்காக அவதாரம் எடுத்தவர்கள் என்று யார் பேசினாலும், அவர்களுக்கு இந்தியாவிலே இனி வேலையில்லை என்று சொல்கின்ற அரசு தான் மத்தியிலே உருவாக வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அரசு உருவாக வேண்டுமேயானால் இங்கே வீற்றிருக்கின்ற நாமெல்லாம் அந்தக் கூட்டணியைப் பலப்படுத்த வேண்டும். அந்தக் கூட்டணி சுயமரியாதை கூட்டணி. மான உணர்வுள்ள கூட்டணி. அந்தக் கூட்டணி ஜனநாயகக் கூட் டணி. அந்தக் கூட்டணி மனிதனை மனிதனாக மதிக்கின்ற கூட் டணி. கண்ணியத்திற்குரிய கூட்டணி, நாகரிகமான கூட்டணி, அந்தக் கூட்டணி வெல்ல இந்த மாநாடு நிச்சயமாகப் பயன்படும், இந்த மாநாடு ஒரு பக்க பலமாக இருக்கும் என்ற நம்பிக் கையோடு என்னுடைய உரையை நிறைவு செய்து, வெற்றிகள் எல்லாம் நம் பக்கம் வந்து சேரட்டும், அதற்கு உங்களுடைய பணி தொடரட்டும் என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.



விடுதலை.காம்

www.viduthalai.com

திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்.

திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்.
கலைஞர் அவர்களுடைய ஆட்சியை சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் மணிவிழா மாநாட்டில் தமிழர் தலைவர் உணர்ச்சிப் பேருரை

சென்னை, ஜூன் 22- கலைஞர் அவர்களை சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். திராவிட இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழும் என்று இஸ்லாமியர்கள் மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்க வுரையாற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு 21-6-2008 அன்று இரவு 7 மணிக்கு சென்னை - தீவுத் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:

கலைஞர் ஆட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்புநம்முடைய தமிழகத்திலே கலைஞர் அவர்களுடைய பொற் கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அவருடைய ஆட்சியைக் பாதுகாக்க வேண்டிய தலையாய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள் பேசும்பொழுது, எங்களுக்குப் பாதுகாவலர்களாக இருப்பவர்கள் நீங்கள் என்று சொன்னார்.

திராவிட இயக்கம் என்றைக்கும் உங்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழும். இந்தியாவில் பாபர் மசூதியை இடித்த நேரத்தில், இந்தியாவில் அமைதிப் பூங்கவாகத் திகழ்ந்த மாநிலம் ஒன்று என்று சொன்னால் அது தமிழ்நாடுதான்.

திராவிட இயக்கம் அந்த அளவுக்கு இந்த மண்ணைப் பக்குவப்படுத்தி இருக்கிறது.பெரியார் பிறந்த மண்ணான இந்த மண்ணில் என்றைக்கும் சிறுபான்மை மக்களுக்கு இஸ்லாமிய மக்களுக்குப் பாதுகாப்பு உண்டு.

ஆனால், காந்தியார் பிறந்த மண்ணான குஜராத்தில் இன்றைக்கும் சிறுபான்மை மக்களான இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு கொடுமையான சூழ்நிலை இருக்கிறது.

மூன்றாவது தலைமுறையாக தொடரும் உறவு காயிதே மில்லத் அதற்கடுத்து சிராஜுல்மில்லத் அதற்கடுத்து இன்றைக்கு மூன்றாவது தலைமுறையாக இந்த உறவு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

மதத்தில் இஸ்லாமியர்களாக இருந்தாலும் நாம் திராவிடர்கள்.

நீங்கள் கைபர், போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் அல்ல.

இந்த மண்ணுக்கு தலைமுறை தலைமுறையாக, சொந்தக்காரர்கள் நீங்கள்.

திராவிட இயக்கம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது. நமது கலைஞர் அவர்களுடைய பொற்கால ஆட்சியில் நீங்கள் கோரிக்கைகளை வைத்து, கேட்டுத்தான் பெறவேண்டும் என்பதில்லை.

கலைஞர் அவர்களுடைய ஆட்சியிலே கேட்காமலேயே செய்யக்கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி இன்றைக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

1972-இல் சட்டமன்றத்திலே கலைஞர் சொன்னார்முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டைப் பற்றிச் சொன்னார்கள். 1972 லே சட்டமன்றத்திலே கலைஞர் அவர்கள் மிகத் தெளிவாக சொன்னார்கள். இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு சட்டத்தில் இடம் இருக்கிறதோ - இல்லையோ என்னுடைய இதயத்திலே இடமிருக்கிறது என்று சொன்னவர்தான் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள்.

கலைஞர் ஆட்சியை இந்தியாவே பின்பற்ற வேண்டும்பனத்வாலா அவர்கள் பேசும்போது கலைஞர் அவர்களுடைய ஆட்சி எப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை பெருமையோடு பாராட்டிச் சொன்னார்கள்.

இந்தியாவே கலைஞர் அவர்களுடைய ஆட்சித் திறனைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் சொன்னார். பனத்வாலா அவர்கள் சொன்னதிலே இட ஒதுக்கீடு அடங்கியிருக்கிறது. சமூகநீதி அடங்கியிருக்கிறது.

இனநலம் இருக்கிறது. சமூக பாதுகாப்பு இருக்கிறது. சமூக நல்லிணக்கம் அடங்கியிருக்கிறது என்று சொன்னார்கள். திராவிட இயக்கம் என்றென்றைக்கும் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கும்.

எங்களைப் பார்த்து சிலர் கேட்பதுண்டு. நீங்கள் எப்படி முஸ்லிம் லீக் மாநாட்டில் கலந்துகொள்ளலாம்? என்று.

முஸ்லிம் மதம் மட்டும்தான் இந்த நாட்டை ஆளவேண்டும், மற்ற மதத்தினர் ஆளக்கூடாது என்று சொல்பவர்கள் அல்ல அவர்கள்.

மற்ற மதத்துக்காரர்கள் மாள வேண்டும் என்று சொல்பவர்கள் அல்ல. பெரும்பான்மையினர் ஆள வேண்டும்; சிறுபான்மையினர் வாழ வேண்டும் என்று கருதுபவர்கள் அவர்கள்.

எல்லோருக்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம் என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் சொன்னார்கள். அப்படிப்பட்ட ஆட்சியை கலைஞர் அவர்கள் இங்கு நடத்திக் கொண்டு வருகின்றார்கள்.

அவருடைய ஆட்சியை சிக்கெனப் பிடித்துக்கொள்ளுங்கள். இஸ்லாமிய மக்களான உங்களுக்குப் பாதுகாப்பு கலைஞர் அவர்கள்தான். கலைஞர் அவர்களுடைய ஆட்சியை காப்பது உங்களுடைய கடமை. அவருடைய ஆட்சிக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பது உங்களுடைய கடமை.

நம்முடைய கடமை. இன மீட்புக்காக நடைபெறக்கூடிய கலைஞர் ஆட்சியை பாதுகாப்பது நம் எல்லோருடைய கடமை தலையாய கடமையாகும்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தன்னுடைய உரையிலே குறிப்பிட்டார்.

உரையாற்றியோர்இம்மாநாட்டில் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் சையத் சத்தார், பாத்திமா (அப்துல் சமது மகள்), இசைமுரசு நாகூர் அனிஃபா, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் அகில இந்திய தலைவர் பனாத்வாலா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி, தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் ஆகியோர் உரையாற்றினர்.

முன்னதாக மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றி, பல பொறுப் பாளர்கள் உரையாற்றினர். சென்னை மாவட்டச் செயலாளர் எம். ஜெய்னுல் ஆபுதீன், நிர்வாகிகள் கமுதி பஷீர், நிஜாமுதீன் ஆகியோர் மாநாட்டிற்கான பணியை முன்னின்று நடத்தினர். பல முக்கிய பிரமுகர்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தனர்.

பிற்பகல் 3 மணிக்கு இஸ்லாமியர்களின் பேரணி தொடங்கி மாலை 6.15 மணிக்கு மாநாடு நடைபெற்ற தீவுத் திடலை வந்தடைந்தது.தீவுத் திடலில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை இஸ்லாமிய மக்களின் கூட்டம் காணப்பட்டது.

http://viduthalai.com/20080622/news14.html

Thursday, June 19, 2008

மணிவிழா மாநாட்டில் விருது பெறுவோர் பட்டியல்!

மணிவிழா மாநாட்டில் விருது பெறுவோர் பட்டியல்!

www.muslimleaguetn.com


இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாட்டில் ஜூன் 21 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் காயிதெமில்லத் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் 50 ஆண்டுகள் உழைத்த முஸ்லிம் லீக் மூத்த ஊழியர்கள்-

காயிதெ மில்லத் விருது பெறுவோர்:

1. மவ்லவி அப்துல்ஹை நக்காவி - பள்ளபட்டி
2. மவ்லவி எம்.என். அப்துல் காதர் பாகவி - பெரம்பலூர்
3. எம். செய்யது இப்ராஹிம் - வேதாளை
4. ஹாஜி ஏ.கே. அப்துல்ஹலீம் - சென்னை
5. இசைமணி எம்.எம். ய+சுப் - சென்னை
6. ஹாஜி ஜம்ஜம் எஸ்.எம். பதுருத்தீன் - சென்னை
7. எழுத்தரசு ஏ.எம்.ஹனீப் - திருச்சி
8. எச்.ஏ. அப்பாஸ்(சுதந்திர போராட்ட வீரர்) - சென்னை
9. ஹாஜி பி.கே.இ. அப்துல்லா - வலங்கைமான்
10. ஹாஜி எம்.ஏ. குலாம்மொய்தீன் - அய்யம்பேட்டை
11. ஹாஜி என்.பி. முஹம்மது உசேன் - ராஜகிரி
12. மொய்தீன் பிச்சை - திருச்சி
13. எஸ்.டி.ஏ. முஹம்மது மீரான் - சென்னை
14. மவ்லவி ஆர்.கே.அப்துல்காதர் பாகவி - பள்ளபட்டி
15. ஹாஜி எம்.அப்துல் கனி - தூத்துக்குடி
16. எஸ்.எஸ்.இ. காழி அலாவுதீன் ஆலிம் - காயல்பட்டினம்
17. ஹாஜி வாவு அப+பக்கர் சித்தீக் - காயல்பட்டினம்
18. எஸ்.டி. நிஸார் அஹமது - வாணியம்பாடி
19. ஹாஜி வி.எம். அப்துல் ஜப்பார் - பள்ளபட்டி
20. மவ்லவி அப்துஸ்ஸமது நத்வி - கோட்டகுப்பம்
21. பி.கே. அப்துல் ஸலாம் - கோயமுத்தூர்
22. வி.எம். முஹம்மது காசீம் - கோயமுத்தூர்
23. அப்துல் ரஹ்மான் (ஏ) பிச்சை ஹாஜியார் - பள்ளபட்டி
24. ஹாஜி எம்.ஓ. செய்யதுஇஸ்மாயில் - சென்னை
25. ஹாஜி எஸ்.எம். கனிசிஷ்தி - சென்னை
26. பேராசிரியர் சாகுல் ஹமீது - குளச்சல்
27. டி.ஏ. அப்துல் மஜீது - குன்னூர்
28. அறமுரசு அப்துல் காதர் - நாகூர்
29. சாந்து முஹம்மது - இனாம்குளத்தூர்
30. முஹம்மது யாக்கூப் - கோயமுத்தூர்
31. புதுப்பேட்டை கே.எஸ்.ஆரிஃப் - சென்னை
32. ஹாஜி எம்.எம். மொகுதூம்கண் சாஹிப் - காயல்பட்டினம்
33. அரிக்கடை பி.எம். முஹம்மது சாலிஹ் - குளச்சல்
34. ஹாஜி எம். பஸ்லுத்தீன் - ஆயங்குடி
35. ஹாஜி மெக்கோ பக்கீர் முகைதீன் - சென்னை
36. ஆயிரம்விளக்கு ஏ.பி.அமானுல்லா - சென்னை
37. இளம் லீகன் ஏ.ஆர். செய்யது இப்ராஹிம் - புதுமடம்
38. கே.எஸ்.ஏ. அப்துல் ரஹ்மான் - அதிராம்பட்டினம்
39. எம். சேக்னா மரைக்காயர் - அதிராம்பட்டினம்
40. டாக்டர் ஏ.எம். ஜியாவுதீன் - அய்யம்பேட்டை
41. ஹாஜி என்.பி. அப்துல் வஹாப் - வழுத்தூர்
42. கே.ஏ. அப்துல் கலாம் - கோயமுத்தூர்
43. வி.பி.முஹம்மதலி - கோயமுத்தூர்
44. ஏ.எம். தெராவு ஷா சாஹிப் - கோயமுத்தூர்
45. சர்கார் முஹம்மது இஸ்மாயீல் - சென்னை
46. ஹாஜி எம்.எஸ். அப்துல் ரஹ்மான்நூரி - சங்கரன்கோவில்
47. டாக்டர் கே.எஸ்.டி. ஜமாலுத்தீன் - சேரன்மகாதேவி
48. கே.அப்துல் வஹாப் - சோழமாதேவி
49. என். அப்துல் காதர் - விக்கிரமசிங்கபுரம்
50. ஹாஜி செய்யது பட்டாணி - பாம்புக்கோவில்சந்தை
51. கவிஞர் வீரை எம். அப்துல் ரஹ்மான் - வீரவநல்லூர்
52. வெ.கா. உ.அ. முஹம்மது ஹனீபா - கடையநல்லூர்
53. எஸ். ஹபீபுல்லாஹ் - தென்காசி
54. வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம்(முன்னாள் எம்.எல்.ஏ) - மேலப்பாளையம்
55. ஏ.கே.எச்.அப்துர் ரசாக் - வரகனேரி
56. கே.இ.இப்ராஹிம் - திருச்சி
57. பி.ஆர்.எம். அப்துல் ஸலாம் - இனாம்குளத்தூர்
58. ஷாகுல் ஹமீது - திருச்சி
59. ஹாஜி ஏ.பி. மலுக்காமலி - பத்தமடை
60. ஹாஜி டி.ஜே. பக்கீர் முஹம்மது - லால்பேட்டை
61. அ.க.நெய்னா முஹம்மது - கீழக்கரை
62. ஹ{சைன் பீரான் - சேலம்
63. கே.எஸ். அப்துல்லா பாஷா - காஞ்சிபுரம்
64. ஏ.கே. செய்யது இப்ராஹிம் - எண்ணூர்
65. அல்ஹாஜ் அப்துல் ஹாதி - நெல்லிக்குப்பம்
66. எச்.எம். ஆலியா மரைக்காயர் - காரைக்கால்
67. ஒய். அப்துல் ரஷாக் - காரைக்கால்
68. ஹாஜி எஸ்.டி. வெள்ளைத்தம்பி - காயல்பட்டினம்
69. ஹாஜி ஏ.எம்.ஹனீபா - மங்கலம்பேட்டை
70. ஹாஜி எம்.எஸ். அஹ்மது பாஷா - குடியாத்தம்
71. ஹாஜி வி.எஸ். அமானுல்லாஹ் - கடையநல்லூர்
72. கே.இ. முஹம்மது இப்ராஹிம் - புளியங்குடி
73. மணிவாசகம் ய+சுப் - மதுரை
74. டாக்டர் கே.எம். ஜக்கரிய்யா - மேட்டுப்பாளையம்
75. ரங்கூன் சுலைமான் - சென்னை
76. எழுத்தாளர் ஷேக்கோ - இளையாங்குடி
77. த.உ. அப்துல் காதர் - கடையநல்லூர்
78. ஹாஜி. பி.எம். ஷேக் உதுமான் - கடையநல்லூர்
79. எம்.ஏ. ஷாஹ{ல் ஹமீது(மூப்பன்) - கடையநல்லூர்
80. ஹாஜி பி.எம். அப்துல் காதர் - கடையநல்லூர்
81. எஸ்.எம். காஸிம் - மேட்டுப்பாளையம்
82. எம்.கே.இப்றாஹீம் - அதிராம்பட்டினம்
83. ஹாஜி என்.எம்.முஹ்யித்தீன் அப்துல் காதர் - முத்துப்பேட்டை
84. எம்.எம்.ஷாஹ{ல் ஹமீது - வேதாளை
85. கே.சையது இப்றாம்ஷா - வேதாளை

சிராஜுல் மில்லத் நல்லிணக்க விருது பெறுவோர்:

1. செய்யது எம்.ஸலாஹ{த்தீன்
2. திரு. நல்லகண்ணு
3. மறைதிரு. வின்சென்ட் சின்னதுரை

கல்வி, மருத்துவம், மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட சமூகநலப் பணியாற்றுபவர்களுக்கான சமுதாய ஒளிவிளக்கு விருது பெறுவோர்:

1. அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. அப்துர் ரஹ்மான் - கல்வித்தந்தை
2. மேல்விஷாரம் அல்ஹாஜ் எம்.முஹம்மது ஹாஸிம் - மார்க்கப் பணியும் சமூக சேவையும்
3. அல்ஹாஜ் டாக்டர் எஸ்.எம். ஹாமித் அப்துல் காதர் - கல்வி நிறுவனம்
4. அல்ஹாஜ் டாக்டர் சேகு நூருத்தீன் - பத்திரிகை, கல்விக்கூடம்
5. அல்ஹாஜ் பரகத்அலி மாயின் அப+பக்கர் - பள்ளிவாசல்கள்
6. நோபுள் சாகுல் ஹமீது - ஜகாத் விநியோகத்தில் புதுமை
7. ஒயிட்ஹவுஸ் அல்ஹாஜ் அப்துல் பாரி - மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்புப் பணிகள்
8. ஹாஜி டி.எஸ். பத்ஹ{ர் ரப்பானி - கல்விக்கூடம்
9. ஹாஜி எஸ். அஹமது மீரான் - புரபஸனல் கூரியர் சர்வீஸ்
10. எஸ்.டி. கூரியர் கே. நவாஸ் கனி - கூரியர் சர்வீஸ்
11. ஹாஜி டாக்டர் செய்யது கலீபத்துல்லா - மருத்துவசேவை
12. ஆம்ப+ர் முஹம்மது சயீது - கல்வி வளர்ச்சி
13. அல்ஹாஜ்வாவு செய்யது அப்துர் ரஹ்மான் - மகளிர் கல்வி
14. அல்லாமா பிலாலிஷாஹ் ஜுஹ{ரி - கல்வி வளர்ச்சி
15. இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா - இசை மூலம் சமயப் பணி
16. அய்யம்பேட்டை மர்ஹபா ஏ.கே.பஷீர்அஹமது - கல்விப் பணி
17. கவிஞர் நாகூர் சலீம் - இலக்கியப் பணி
18. சென்னை ஆர். வரிசை முகம்மது - தொழில் நிறுவனங்கள் உருவாக்கி வேலைவாய்ப்பு, சமூகப் பணிகள்
19. திருப்ப+ர் குர்பானி அறக்கட்டளை - கல்வி மற்றும் மருத்துவப் பணி
20. கூத்தாநல்லூர் ஏ.வி.எம். ஜாபருத்தீன் - பத்திரிகை துறை, கல்வித்துறை
21. புதுக்கோட்டை அல்ஹாஜ் ஏ. ஷர்புதீன் - பள்ளிவாசல் கட்டுதல் மற்றும் கல்வி உதவி
23. புதுக்கோட்டை அல்ஹாஜ் எஸ்.எம். செய்யதுஇப்ராஹிம் - வேலை வாய்ப்பு மற்றும் பைத்துல்மால் பணி
24. நாகூர் அல்ஹாஜ் ஆலியா சேக்தாவ+து - கல்விப் பணி
25. கூத்தாநல்லூர் சேக்தாவ+து - நூல் வெளியீட்டில் உலக சாதனை
26. கே.எம்.டி. மருத்துவமனை காயல்பட்டினம் - மருத்துவசேவை
27. மேல்விஷாரம் ஹாஜி ஜியாவுதீன் - கல்விப்பணி
28. இரோடு டாக்டர் அமானுல்லா - மருத்துவம் கல்விப் பணி
29. கோவை கலீல் அஹமது - கல்விப் பணி
30.அழகன்குளம் முகம்மது ஆதம் - வேலைவாய்ப்பு மற்றும் கல்வி சமூகப் பணி
31. மேலப்பாளையம் இன்ஜினீயர் செய்யது அஹமது - மகளிர் கல்வி மேம்பாடு
32. தென்காசி ஹாஜி எம்.எஸ். துராப்ஷா - தொழில் கல்வி
33. அதிராம்பட்டினம் ஏ.ஜெ. இக்பால் - மதரஸே நிஸ்வான்
34. உடன்குடி எஸ்.ஜே.எம். ஜமாலுதீன் - கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுப் பணி
35. திருச்சி டாக்டர் அஷ்ரப் - இந்திய அளவில் மருத்தவ சேவை முன்னோடி
36. அய்மான் கவிஞர் ஷம்சுதீன் (அய்மான் கல்வி அறக்கட்டளை) - மகளிர் கல்வி மேம்பாடு
37. மெஜஸ்டிக் கே.வி.எம். அப்துல் கரீம் - ஷரீஅத் பஞ்சாயத்து நிர்மாணம் மற்றும் பள்ளிவாசல்
38. கோட்டாறு மாலிக் தினார் முஹல்லம் பைத்துல்மால் - முன்மாதிரி முஹல்லா ஜமாஅத் அமைப்பு
39. டாக்டர் அயாஸ் அக்பர் - அறுவை சிகிச்சை இல்லாத இருதய நோய் நிவாரணம்
40. டாக்டர் ஜமீர் பாஷா - லேப்ரோஸ் கோபிக் முறையில் மருத்துவ சிகிச்சை
41. திருச்சி ஹாஜி முஹம்மது ய+னுஸ் (எம்.ஐ.இ.டி.) - உயர்கல்விப் பணி
42. காயல்பட்டினம் எஸ். அக்பர்ஷா - வேலைவாய்ப்பு மற்றும் கல்விப் பணிகள்
43. சித்தார்கோட்டை எஸ். தஸ்தகீர் காக்கா - கல்வி நிறுவனங்கள்
44. அல்ஹாஜ் தைக்காலெப்பை - ஆன்மீக வழியில் சமூக அமைதிப்பணி
45. உத்தமபாளையம் ஹாஜி எம்.தர்வேஸ் முகைதீன் - கல்விப் பணி
46. கம்பம் ஹாஜி எம்.கே.முஹம்மது ஷரீப் - இஷாஅத் இஸ்லாம் பணி
47. பழனி முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம் - கல்வி திருமண உதவிகள்
48. திருச்சி டாக்டர் ஷேக்முஹம்மது - கணக்கு ஆய்வியல் இந்திய அளவில
; 49. இனாம்குளத்தூர் ஹாஜி சாகுல் ஹமீது - யுக காலண்டர் தயாரித்து சாதனை
50. துவாக்குடி முஹம்மது இல்யாஸ் - தொழில் கல்வி நிறுவனம் மற்றும் பள்ளி நிர்மாணித்தல்
51. திருச்சி பேராசிரியர் டி.சி. அப்துல் மஜீத் - முன்மாதிரி அனாதை நிலையம் மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனம்
52. திருநெல்வேலி ஹாஜி எம். ஜமால் முஹம்மது - கல்விப்பணி மற்றும் அநாதை நிலையம்
53. மேலப்பாளையம் வழக்கறிஞர் எல்.கே.எம்.அப்துல் ரஹ்மான் - கல்வி பணி
54. கூத்தாநல்லூர் வடக்கு கோட்டையார் முஹம்மது அப்துல்லா அறக்கட்டளை - சமய நல்லிணக்கப் பணிகள்
55. தஞ்சாவ+ர் ஹாஜி பி.எஸ். ஹமீது - மருத்துவம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை
56. ராஜகிரி ஹாஜி அப்துல் மாலிக் - கல்விப் பணி
57. மதுரை ஹாஜி ராஜா ஹஸன் - மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு
58. வி.எஸ். முஹம்மது முபாரக் (எ) சலீம், குன்னூர் - சமூக சேவைகள்
59. முஸல்மான் உருது பத்திரிக்கை - புகழ்பெற்ற உருது பத்திரிக்கை

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு ஜூன் 21, 2008 காலையில் ராஜாஜி ஹாலில் நடைபெறும் கல்வி மேம்பாடு விழிப்புணர்வு மகளிர் கருத்தரங்கில் சாதனைப் பெண்மணி விருது பெறுவோர்:

1. மினி கிருஷ்ணன் - சமய நல்லிணக்கம்
2. முனைவர் பேராசிரியை சா. நஸீமாபானு - கல்விப் பணி
3. எம். அனீஸ் ஃபாத்திமா - முதல் முஸ்லிம் பெண் பத்திரிகையாளர்
4. முனைவர் தா. ஜெய்புன்னிஸா - இலக்கியப் பணி
5. ஏ.எஸ்.குர்சித் பேகம் - சமூக சேவகி
6. கே. மாசா நஜீம் - இளம் வயது உலக சாதனையாளர்

சென்னைவாழ் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தினருடன் தலைவர் ஆலோசனை!

http://www.muslimleaguetn.com/news.asp

சென்னைவாழ் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தினருடன் தலைவர் ஆலோசனை!


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரள மாநில உறுப்பினர்களுடனான கலந்தாலோசனை இன்றிரவு 8.15 மணியளவில் காயிதெமில்லத் மன்ஸிலில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். சென்னைவாழ் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தின் தலைவர் குஞ்சுமோன், தளபதி ஷஃபீக்குர்ரஹ்மான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலீலுர்ரஹ்மான், அப்துல் பாஸித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாநாட்டு நிகழ்வுகளில், சென்னைவாழ் கேரள முஸ்லிம் லீகர்களின் பங்களிப்புகள் எப்படி அமைந்திட வேண்டும் என்பது குறித்து பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவுரைகள் வழங்கினார். அவர் தனதுரையில், வெளியில் இருந்துகொண்டு இந்த இயக்கம் பற்றி ஆயிரம் பேர் ஆயிரம் விமர்சனங்களைக் கூறலாம்... ஆனால், அவையெல்லாம் கதைக்குதவாது! சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் என அதிகாரங்களில் நமது முறையான பங்களிப்பு இருந்தால் மட்டுமே நமது குரலுக்கு உரிய பதில் கிடைக்கும். அந்த அடிப்படையில் தற்சமயம் தமிழகத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

உங்கள் கேரள மாநிலம்தான் எங்கள் செயல்பாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது. எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும், ஓர் ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ இருந்துகொண்டு, அவ்வப்போது சமுதாயத்தின் குரலை நீங்கள்தான் ஓங்கி ஒளித்துக் கொண்டிருக்கிறீர்கள்... நாங்கள் உங்களிடமிருந்து பல விஷயங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறோம். நீங்கள் எங்கள் வழிகாட்டிகள்... உங்களை ஒருங்கிணைத்தது இந்த முஸ்லிம் லீக்!

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டுள்ள - கேரளத்தின் வருங்கால எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் சமுதாயப் பிரமுகர்களை நான் உளமார வரவேற்கிறேன்... இந்த மாநாட்டிலும், பேரணியிலும் உங்கள் பங்களிப்பு நிறைவாக இருக்க வேண்டும் என நான் உங்கள் யாவரையும் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்... என்றார்.


தொடர்ந்து, சென்னைவாழ் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தின் தலைவர் குஞ்சுமோன், சென்னைவாழ் கேரள முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்) துணைத்தலைவர் அஃப்ஸீர் நூருத்தீன், செயலாளர் முஜீபுர்ரஹ்மான், துணைச் செயலாளர் முஹ்யித்தீன் மற்றும் மேடையில் முன்னிலை வகித்த அனைவரும் கருத்துரைகள் வழங்கினர்.

Wednesday, June 18, 2008

முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு ! இணையதளத்தில் !!

முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு ! இணையதளத்தில் !!


முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டு நிகழ்ச்சிகள் 21 ஜுன் 2008 மாலை 6 மணி முதல் இணையதளத்தில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டு நிகழ்வுகளைக் காண :

www.muslimleaguetn.com
www.easylive.tv

சென்னையில் முஸ்லிம் லீக் மாநாடு










சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு - ஜுன் 20 & 21 நடக்கிறது


இந்திய முஸ்லிம்களின் வரலாற்றுப் பேரியக்கமாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு ஜுன் 20 மற்றும் 21 தேதிகளில் சென்னையில் நடைபெற இருக்கிறது.

ஜுன் 20 வெள்ளிக்கிழமை

ஜுன் 20 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையினை சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜிதில் நிறைவேற்றியபின்னர் காயிதெ மில்லத் நினைவிடத்தில் ஜியாரத் ஃபாத்திஹா நடைபெறும் அதனைத் தொடர்ந்து சிராஜுல் மில்லத் நினைவிடத்துக்கு செல்லப்படும்.

துஆ மஜ்லிஸ்

சென்னை மண்ணடி மரைக்காயர் லெப்பை தெருவில் அமையப்பெற்றுள்ள தலைமை நிலையமாம் காயிதெமில்லத் மன்ஸிலில் அல்லாமா அஷ்ஷெய்க் தைக்கா ஷுஐபு ஆலிம் தலைமையில் துஆ மஜ்லிஸ் மாலை 5.00 மணிக்கு நடைபெறும்.

இந்நிகழ்விற்கு ஏ.கே. அப்துல் ஹலீம், ஆரூர் அப்துல் காலிக், எழுத்தரசு ஏ.எம். ஹனீஃப், எஸ்.எம். காதர் பாட்சா, எஸ்.எம். கோதர் முஹைதீன், பி.எஸ்.ஹம்ஸா, டாக்டர் இக்பால் பாஷா, வி.எஸ்.டி.ஷம்சுல் ஆல்ம், எஸ்.டி. நிசார் அஹ்மது, எம். ஜெய்னுல் ஆப்தீன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மாநாடு வரவேற்புக் குழு கூட்டம்

காயிதெ மில்லத் மன்ஸிலில் மாலை 7.00 மணிக்கு மாநாடு வரவேற்புக்குழு கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. தலைமையில் நடைபெறும்.

முஜாஹிதெ மில்லத் ஜி.எம். பனாத்வாலா, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹ்மது, செய்யிது முஹம்மதலி ஷிஹாப் தங்கள், பி.கே.குஞ்ஞாலிக் குட்டி, பி.வி.அப்துல் வஹாப் எம்.பி, வழக்கறிஞர் அஹ்மது பக்‌ஷ், நயீம் அக்தர் தஸ்தகீர் ஆகா உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. செய்யது சத்தார் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

ஜுன் 21 சனிக்கிழமை

காயிதெமில்லத், சமுதாய ஒளிவிளக்கு, சிராஜுல் மில்லத் விருதுகள் வழங்கும் விழா

காலை 9.30 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் விருது வழங்கும் விழாவிற்கு முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.

செய்யிது முஹம்மது அலி ஷிஹாப் தங்கள் துஆ ஓதுகிறார்.

அல்லாமா அஷ்ஷெய்க் தைக்கா ஷுஐபு ஆலிம், மவ்லானா எம்.எஸ். உமர் பாரூக் மவ்லானா, டி.ஜே.எம். ஸலாஹுத்தீன், எஸ்.எம்.சேகு நூர்தீன், டாக்டர் காஜா கே. மஜீத், ஏ.ஜே. அப்துல் ரஜ்ஜாக், காக்கா முஹம்மது ஜுபைர், முஹம்மது யூனுஸ் ( எம்.ஐ.இ.டி ) வி.எம். அப்துல் ஜப்பார், கே.பி. இஸ்மத் பாட்சா உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. செய்யது சத்தார் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

வி.எம். செய்யது அஹ்மது, ஏ.அப்துல் ஹக்கீம், திருப்பூர் எம்.ஏ. சத்தார், மவ்லவீ என். ஹாமித் பக்ரீ, அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் லியாக்கத் அலி, எஸ்.எம். கனி சிஷ்தீ, எம்.பி. காதர் ஹுசைன், கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது உள்ளிட்டோர் கருத்துரை வழங்குகின்றனர்.

சிறப்பு மலர் வெளியீடு

முஜாஹிதெ மில்லத் ஜி.எம். பனாத்வாலா முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு சிறப்பு மலர் வெளியிட மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஏ. ராசா முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார்.

காயிதெ மில்லத் விருது

முஸ்லிம் லீகில் ஐம்பதாண்டு காலம் உழைத்து வரும் தியாகிகளுக்கு காயிதெ மில்லத் விருது வழங்கி சிறப்புரையினை மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹ்மது நிகழ்த்துகிறார்.

தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், அப்துல் வஹ்ஹாப் எம்.பி, ஷைகுல் ஹதீஸ் மவ்லானா ஏ.இ.எம். அப்துல் ரஹ்மான், மெஜஸ்டிக் கே.வி.எம். அப்துல் கரீம், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச்செயலாளர் பேராசிரியர் முனைவர் சேமுமு முஹம்மது அலி உள்ளீட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

சமுதாய ஒளிவிளக்கு விருது

கல்வியாளர்கள் மார்க்க அறிஞர்கள் மற்றும் சமுதாய புரவலர்களுக்கு சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கி தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, வணிகவரித்துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபைதுல்லாஹ், விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன் கான், சிறுசேமிப்புத்துறை துணைத்தலைவர் இரகுமான்கான், சென்னை மேயர் மா.சுப்பிரமணியம், ஜே.எம். ஹாரூன் எம்.பி, உள்ளிட்டோர் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர்.

சிராஜுல் மில்லத் விருது

சமூக நல்லிணக்கத்திற்காக உழைத்து வரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணு, துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் செய்யது எம். ஸலாஹுத்தீன், சிறுபானமை நலத்துறையின் வின்சண்ட் சின்னதுரை உள்ளிட்ட பெருமக்களுக்கு சிராஜுல் மில்லத் விருது வழங்கி தமிழக கல்வி அமைச்சர் க. அன்பழகனார் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

தவத்திரு பொன்னம்பல அடிகளார், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி, கவிக்கோ அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயீல் நன்றியுரை நிகழ்த்துகிறார்.

கல்வி மேம்ப்பாடு, விழிப்புணர்வு, மகளிர் கருத்தரங்கம்

ஜுன் 21 சனிக்கிழமை காலை பத்து மணிக்கு ராஜாஜி மண்டபத்தில் நடைபெறும் மகளிர் கருத்தரங்கிற்கு மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். ஃபாத்திமா முஸஃப்பர் தலைமை தாங்குகிறார்.

கனிமொழி எம்.பி. ஜெயந்தி நடராஜன் எம்.பி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

கவிஞர் ருக்கையா சல்மா, வழக்கறிஞர் அருள்மொழி, கமருன்னிசா அன்வர், நூர்பீனா ரசீத், பேராசிரியை நசீமா பானு உள்ளிட்டோர் கருத்துரை வழங்குகின்றனர்.

மாபெரும் பிறைக்கொடி பேரணி

பிற்பகல் 3.30 மணிக்கு மாபெரும் பிறைக்கொடி பேரணி சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டு வாலஜா சாலை, அண்ணா சாலை, மன்றோ சிலை வழியாக தீவுத்திடலை அடைகிறது.

பேரணியை அப்துல் ரவூஃப் துவக்கி வைக்க ஹெச். அப்துல் பாஸித் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிரார்.

ஜி.எம். ஹாஷிம், கே.எம். நிஜாமுத்தீன், எம்.எஸ். முஹம்மது ரஃபீக், வி.ஆர். முஹம்மது இப்ராஹீம், கே.எஸ். ஷேக் தாவூத், மவ்லவீ ஏ.எஸ். அப்துல் ரஹ்மான், முஸஃப்பர் அஹ்மத், ஏ.ஏ. ரஷீத் கான் உள்ளிட்டோர் பேரணிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவர்.

இசையரங்கம்

மாலை 4 மணிக்கு தீவுத்திடலில் இசையரங்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முகவை சீனி முஹம்மது, கலைமாமணி இறையன்பன் குத்தூஸ் குழுவினர் இயக்கப் பாடல்கள் பாடுகின்றனர்.

மாநாடு நிறைவு விழா

மாலை 6.30 மணிக்கு தீவுத்திடலில் நிறைவு விழா கே.டி.எம். அஹ்மது இப்ராஹிம் நுழைவு வாயிலில், அப்துல் வஹ்ஹாப் ஜானி சாஹிப் அரங்கில் நடைபெறும்.

விழாவிற்கு முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.

பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. செய்யது சத்தார் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் எம்.எல்.ஏ. தீர்மானங்களை வாசிக்கிறார்.

முஜாஹிதெ மில்லத் ஜி.எம். பனாத்வாலா, மத்திய அமைச்சர் இ.அஹ்மது, தமிழக அமைச்சர் ஆற்காடு வீராசாமி, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், தா.பாண்டியன், தொல்.திருமாவளவன், பி.கே. குஞ்ஞாலிக்குட்டி, அஸத்துத்தீன் உவைஸி எம்.பி, கர்நாடக அமீரே ஷரீஅத் மவ்லானா அஷ்ரப் அலி உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

ஹெச்.அப்துல் பாசித் எம்.எல்.ஏ. அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம்.அப்துல் ரஹ்மான், எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், கவிஞர் ஜபருல்லாஹ், நெல்லை அப்துல் மஜீத், காயல் மகபூப், கமுதி பஷீர், வழக்கறிஞர் ஜீவகிரிநாதன் உள்ளிட்டோர் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர்.

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் நிறைவுப் பேருரை நிகழ்த்துகிறார்.

தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் நன்றி கூற மாநில மார்க்க அணி செயலாளர் மவ்லவீ தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான் துஆவுடன் மாநாடு நிறைவுறும்.

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ )

முஸ்லிம் லீக் மாநாடு - மகளிர் அணி நிகழ்ச்சிகள்


Friday, June 13, 2008

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி








இந்திய முஸ்லிம்களின் ஒரே அரசியல் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்களது பேட்டி 'வெளிச்சம் உங்கள் கையில்' ஜுன் 1-15 இதழில் வெளியாகியுள்ளது.