Thursday, December 31, 2009

மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன் வேலூர் எம்.பி.(முத்துப்பேட்டை) அப்துல் ரகுமான் பேட்டி

அஸ்ஸலாமு அலைக்கும்..(வரஹ்)

மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன் வேலூர் எம்.பி.(முத்துப்பேட்டை) அப்துல் ரகுமான் பேட்டி http://mttnews.blogspot.com/



thanks & regards

Administrator

Plz visit our native website

www.muthupet.org

சமுதாயத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்கும்

சமுதாயத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்கும்

தனிப்பட்ட அப்துல் ரஹ்மானுக்கு அல்ல@

தாய்ச்சபைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி


வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான்

தாய்ச்சபையினருக்கு நன்றி தெரிவித்து உணர்ச்சிகரமான உரை


சென்னை, மே.17-

வேலூரில் வெற்றி மாலை சூடிய அப்துல் ரஹ்மானுக்கு தாய்ச்சபை யாம் இந்திய ய
+னியன் முஸ்லிம் லீகின் மாநில தலைமை அலுவலகமான காயிதெ மில்லத் மன்ஸிலில்
சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட்டது.

முஸ்லிம் லீகின் மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும் மற்றும்
ஊழியர்களும், தலைமை நிலைய அலுவலர்களும், மணிச்சுடர் நாளிதழ்
செய்திப்பிரிவு - அச்சகப் பிரிவு ஊழியர்களும் பொன்னாடை அணி வித்தும்
கைகுலுக்கியும் தங்களது வரவேற்பையும், வாழ்த்துக் களையும் தெரிவித்துக்
கொண்டனர்.

வரவேற்பையும், வாழ்த் தையும் ஏற்றுக் கொண்ட வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்
எம். அப்துல் ரஹ்மான் தனது வெற்றிக் காக பாடுபட்ட தாய்ச்சபை
யினருக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவித்து உணர்ச்சிகர மான
உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறிய தாவது-

தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் அமைந்த ஜனநாயக முற்போக்கு கூட்டணியில்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு வேலூர் தொகுதி ஒதுக்கப் பட்டு அதன்
வேட்பாள ராக போட்டியிடும் வாய்ப் பினை வழங்கிய இறைவ னுக்கு முதலில் என்
நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

எனது இளமைக்காலத் திலிருந்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் ஊழியனா கவே
பணியாற்றி பழக்கப் பட்டவன். முஸ்லிம் லீக் காரனாகவே வாழ்க்கையை நடத்திச்
செல்லும் அளவுக்கு தாய்ச்சபை தலைவர்கள் என்னை பக்கு
வப்படுத்தியுள்ளார்கள் - வழிகாட்டிக் கொண்டிருக் கிறார்கள்.

தாய்ச்சபை தலைவர்கள் வழியிலிருந்து சிறிதளவும் பிசகாமல் நடப்பதன்
காரணமாகவே எந்தவித தவறுக்கும் இடமளிக்காத வண்ணம் எனது வாழ்க் கையை
நடத்திச் செல்ல முடிகிறது. பதவியை - பட் டங்களை - அதிகாரங் களை விரும்பி
நான் தாய்ச் சபைக்கு வந்தவன் அல்ல.

நான் பிறவியிலேயே முஸ்லிம் லீக் காரன். பதவி கள் எனக்கு பெரிதல்ல. சமு
தாயத்தின் மானம் - மரி யாதை - கண்ணியம் ஆகி யவைதான் எனக்கு முக்கிய
மானவையாகும்.

தாய்ச்சபை காட்டிய வழியிலிருந்து எந்த நிலை யிலும் நான் தவறி விட
மாட்டேன் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட் டுள்ளேன்.

இலக்கியங்களிலே சொல்லப்படுவதைப் போல எள் அளவும் எள்ளின் முனை அளவும்,
முனையின் நுனி அளவும், நுனியின் அணு அளவும் தாய்ச்சபையின் கண்ணி யத்தை
குறைக்கும் வகை யில் எனது செயல்பாடுகள் அமைந்து விடாது என் பதையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.

வேலூர் நாடாளு மன்ற தொகுதியின் வேட்பாள ராக அறிவிக்கப்பட்டு, அந்த
தொகுதியில் கால் வைத்தது முதல் வெற்றி பெற்று இன்று உங்களை யெல்லாம்
மகிழ்ச்சியுடன் சந்திக்கும் இந்த நொடி வரையிலும் எனது வெற்றிக்காக பலரும்
பல விதங்களில் சிறப்பாக பணி யாற்றியுள்ளார்கள். அவர் களையெல்லாம் நன்றி
பெருக்குடன் நினைத்துப் பார்க்க கடமைப்பட்டுள் ளேன்.

நான் வேலூர் வேட்பா ளராக நிறுத்தப்பட்டேன் என்றால் தனிப்பட்ட அப்துல்
ரஹ்மான் நிற்கிறார் என்று கருதாமல் தாய்ச்சபையின் ஊழியர் நிற்கிறார்.
சமுதாயத்தின் கண்ணியம் காக்க உரிமை களை வென்றெடுக்க தாய்ச் சபை நிற்கிறது
என்ற உணர்வுடன் ஒவ்வொருவ ரும் தாங்களே வேட்பாள ராக நிற்பது போல் எண்ணி
தங்கள் வெற்றிக்கு எப்படி யெல்லாம் பாடுபடுவோர் களோ, எவ்வாறெல்லாம்
உழைப்பார்களோ அவ்வ ளவு தீவிரமாக களப் பணி யாற்றி வெற்றியை ஈட்டித்
தந்துள்ளீர்கள். தாய்ச்சபை யின் கண்ணியத்தை - மரியாதையை பாதுகாத்
துள்ளீர்கள்.

குறிப்பாக வேலூர் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.டி. நிஸார் சாஹிப், ஹனீப், ஜான்
பாஷா, குல்ஸர், அய்ய+ப், வாணியம் பாடி சட்டமன்ற உறுப்பி னர் அப்துல்
பாஸித், பாரூக் ஹாஜியார் இன்னும் ஏராளமானோர் பாடுபட்டுள்ளீர்கள்.

தலைமை நிலையச் செயலாளர் அபுபக்கர், இப்ராஹீம் மக்கி, காயல் மஹப+ப், கமுதி
பஷீர், ஹமீதுர் ரஹ்மான், மில்லத் இஸ்மாயில், திருச்சி ஹாஷிம், முஸ்லிம்
லீக் பாடகர் சீனி முஹம்மது உள்ளிட்ட ஏராளமா னோர் வேலூரிலே முகா மிட்டு
எனது வெற்றிக்காக பிரசாரம் செய்துள்ளார் கள். கடமையாக உழைத்
துள்ளார்கள்.

உள் நாட்டில் மட்டும் அல்லாமல் அயல் நாட்டில் நான் பணிபுரிந்த போதும்
தாய்ச்சபையின் பணிகளில் - வளர்ச்சியில் பங்கெடுத்து வந்துள்ளேன்.
என்னுடன் சர்வதேச காயிதெ மில்லத் பேரவையின் பணிகளில் பங்கேற்று உழைத்த
லியா கத் அலியும் வேலூரில் எனது வெற்றிக்காக உழைத்துள்ளார்கள். அவர் தான்
சட்டமன்றம், நாடாளுமன்றம் உள் ளிட்ட மக்கள் மன்றத்தில் என்னுடைய பணி
அமைய வேண்டும் என பெரிதும் ஆர்வம் கொண்டு ஊக்கப் படுத்தி வந்தார்.

நான் வெற்றி பெற்ற வேலூர் தொகுதி நமது தாய்ச்சபை தலைவர் சிந்தனைச்
செல்வர் சிராஜுல் மில்லத் நின்ற தொகுதி - வென்ற தொகுதி. அந்த
தொகுதியில் நானும் ஒருவனாக போட்டியிடும் வாய்ப்பினை பெற்றதும்
பிரசாரத்திற்காக அந்த தொகுதியின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் போது
சிராஜுல் மில்லத் அவர்கள் குறித்த பாராட் டுரைகளையும், சிறப்பான
விமர்சனங்களையும் நினை வ+ட்டல்களையும் பெற முடிந்தது.

அதேபோன்று நம்மை வழிநடத்திக்கொண்டிருக் கும் தாய்ச்சபையின் தற் போதைய
தலைவர் முனீருல் மில்லத் பேராசிரி யர் நின்ற தொகுதி - வென்ற தொகுதி. இந்த
தொகுதியில் மீண்டும் தாய்ச்சபை வென் றுள்ளது.

தொகுதி வேட்பாள ராக பிரசாரத்திற்கு நான் சென்ற போது வாணியம் பாடி
தொகுதியின் முக்கிய தொழில் அதிபர்கள், வணி கர்கள், பிரமுகர்கள் எல்
லோரும் ஒரே இடத்தில் கூடி தொகுதிக்கு நான் என்னவெல்லாம் செய்யப்
போகின்றேன் என்பது குறித்து அறிந்து கொள்ள ஒரு கூட்டத்தை ஏற்பாடு
செய்தார்கள்.

அதில் கலந்து கொண்டு நான் உரையாற்றும் போது ஒன்றை குறிப்பிட்டேன்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் சார்பில் போட்டியிடும் நான் உதய சூரியன்
சின்னத்தில் போட்டியிடுவதை சிலர் விமர்சித்துக் கொண்டிருக் கின்றனர்.
அதுகுறித்து தவறான தகவல்களை - வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
அவற்றிற்கெல்லாம் விடை சொல்லும் வகையில் நான் முஸ்லிம் லீக் காரன்தான்.
எனது அனைத்து செயல் களும் முஸ்லிம் லீகின் கொள்கைகளுக்கும், நடை
முறைக்கும் தக்கபடிதான் அமையும்.

எந்த நேரத்திலும் எத்தகைய சூழ்நிலையிலும் முஸ்லிம் லீகை மறந்து எனது
செயல்பாடு அமை யாது என்று நான் அழுத் தந் திருத்தமாக அவர்கள் மத்தியில்
தெரிவித்தேன்.

என்னிடம் ஒரு கேள்வியை கேட்டார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடு
வதன் காரணமாக வெற்றி பெற்று நாடாளுமன்ற சென்று சமுதாயத்திற்கும்,
தாய்ச்சபைக்கும் மரியாதை யை பெற்றுத் தருவீர்கள் என்பதில் எங்களுக்கு
அசைக்க முடியாத நம் பிக்கையிருக்கிறது.

ஒருவேளை தேர்தலுக்கு பின் பி.ஜே.பி.யுடன் இணைந்து ஆட்சி அமைக் கும்
நிலையை தி.மு.க. மேற் கொண்டால் அப்போது உங்களின் நிலை என்ன வாக
இருக்கும்? என்று கேட்டார்கள்.

நான் அவர்களிடம் அழுத்தந் திருத்தமாக கூறினேன். ஹபதவியோ - பட்டமோ -
அந்தஸ்தோ - இஸ்லாத்திற்கும் - முஸ்லிம் சமுதாயத்திற்கும் சேவை யாற்றும்
வகையில் இருக்க வேண்டும் என்பதுதான் தாய்ச்சபையின் கொள்கை. தாய்ச்சபையின்
லட்சியத் திற்கு மாறாக நடக்கும் நிலை ஏற்பட்டால் பதவி களையும், பட்டங்களை
யும் தூக்கி எறிவேனே தவிர தாய்ச்சபையின் கொள்கை களை அல்ல.

சமுதாயத்திற்கு சேவை யாற்றத் தான் - சமுதாயத் தின் குரலை ஒலிக்கத் தான்
கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந் தித்து நாடாளுமன்றத் துக்கு
செல்கின்றோமே தவிர சமுதாயத்திற்கும், மார்க்கத்திற்கும் விரோத மான
செயல்களை ஆதரிப் பதற்காக அல்ல. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நான்
தாய்ச்சபை தலைவர் கள் காட்டித் தந்த வழியில் முஸ்லிம் லீகின் ஊழிய னாக
இருப்பதைத்தான் விரும்புவேனே தவிர, பதவி - பட்டத்திற்காக மாறி போய் விட
மாட்டேன் என்பதை அவர்கள் மத்தி யில் எடுத்துரைத்தேன்.

அதனையே உங்களுக் கும் கூறிக் கொள்கின்றேன். தாய்ச்சபையின் ஊழியனா கிய
எனது வெற்றி தனிப் பட்ட அப்துல் ரஹ்மா னின் வெற்றி அல்ல. அந்த வெற்றியில்
தாய்ச்சபை ஊழியர் ஒவ்வொருவருக் கும் பங்கு இருக்கிறது.

தாய்ச்சபையின் கொள்கைக்கு உட்பட்டு சமுதாயத்தின் மானம், மரியாதை காக்கும்
வகை யில் எனது செயல்பாடுகள் அமையும் வண்ணம் உங்களது ஆலோசனை களையும்,
கருத்துக்களை யும் தெரிவியுங்கள்.

ஒருவேளை நான் தவ றிழைக்க நேர்ந்தால் ஏதே னும் குற்றம் குறைகள்
காணப்பட்டால் அதனை தைரியமாக சுட்டிக்காட்டி என்னை திருத்துங்கள். அந்த
உரிமை உங்கள் ஒவ் வொருவருக்கும் உண்டு.

எனது வெற்றிக்காக பாடுபட்ட தாய்ச்சபையின் அனைத்து ஊழியர்களுக் கும்,
சமுதாய மக்களுக்கும் கூட்டணி கட்சியினருக்கும் எனது நன்றியையும், நல்
வாழ்த்துக்களையும் தெரி வித்துக் கொள்கிறேன்.

தாய்ச்சபை ஊழியனாக - சமுதாயத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் எனது குரல்
ஒலிக்கும் பணிகள் அமையும் என்ற உறுதி கூறி விடைபெறுகின்றேன்.

இவ்வாறு அப்துல் ரஹ்மான் பேசினார்

பதவிகள் எனக்கு பெரிதல்ல. சமுதாயத்தின் மானம் - மரியாதை - கண்ணியம் ஆகியவைதான் எனக்கு முக்கியமானவை!

பதவிகள் எனக்கு பெரிதல்ல. சமுதாயத்தின் மானம் - மரியாதை - கண்ணியம் ஆகியவைதான் எனக்கு முக்கியமானவை!

Assalaamu Alaikum Warahma....

Please click the following..............

http://www.mypno.com/index.php?option=com_content&view=article&id=119:2009-05-19-05-11-47&catid=38:mystate&Itemid=78

Thanks and best regards

Wassalaam
--
என்றும் மாறா அன்புடன்...

குவைத்திலிருந்து...

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் அவையில் இடம் பெற்றிருப்பது வெட்கக்கேடு

பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் அவையில் இடம் பெற்றிருப்பது வெட்கக்கேடு

லிபரான் கமிஷன் விவாதத்தில் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. ஆவேசம்


பாபரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் இந்த அவை யில் இடம் பெற்றிருப்பது மிகவும் அவமானகரமானது - வெட்கக்கேடானது என்று வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் ஆவேசமாக பேசினார்.
பாபரி மஸ்ஜித் இடிக் கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த அமைக் கப்பட்ட மாண்பமை நீதி பதி லிபரான் குழு நீண்ட விசாரணைக்கு பிறகு தனது அறிக்கைகளை மத்திய அரசுக்கு சமர்ப்பித்துள் ளது.

இந்த அறிக்கை மீதான விவாதம் நேற்று (7-10-2009) அன்று மக்களவையில் நடை பெற்றது. இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர் ரஹ்மான் கலந்து கொண்டு உரை யாற்றினார்.

அப்போது அவர் தெரி வித்ததாவது-

பாபரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் வாய்ப் பினை எனக்கு அளித்த மைக்கு நன்றி தெரி வித்துக் கொள்கின்றேன்.
மாண்பமை நீதிபதி லிபரான் தனது அறிக்கை யில் பல விவரங்களை மிக தெளிவாக பதிவு செய்துள் ளார்.
மஸ்ஜிதை இடித்தவர் கள் யார்? தூண்டியது யார்? துணை போனது யார் என்பதையெல்லாம் தெளிவாக தெரிவித்துள் ளார்.

இடிக்கப்பட்டது (மஸ்ஜித்)வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல. இந்தியா வின் இறையாண்மையும் தான். தகர்க்கப்பட்டது இந்தியாவின் தேச ஒற் றுமை, கோடிக்கக்கான மக்களின் உணர்வுகள் என்பதை லிபரான் பதிவு செய்துள்ளார்.

தேச ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், வேற்றுமை யில் ஒற்றுமை என்ற நமது தேசத்தின் தனிப் பண்பாடு போன்றவையெல்லாம் தகர்க்கப்பட்டன என்பதை தெளிவாக அவர் தெரிவித் துள்ளார்
மஸ்ஜிதை இடித்ததன் மூலம் நமது தேசத்திற்கு நீங்காத அவமானம் ஏற்பட்டுள்ளது.

மஸ்ஜித் இடிப்பு என்பது தற்செயலாக நடந் தது அல்ல. திட்டமிட்ட முறையிலே ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பஜ்ரங் தளம், சிவ சேனா மற்றும் பி.ஜே.பி.யை சேர்ந்தவர்கள் அரங்கேற்றி யது என்பதை அவர் பதிவு செய்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை உ.பி. மாநில பா.ஜ.க. அரசு மீறியது

பாபரி மஸ்ஜித் இடிக் கப்பட்ட சமயத்திலே உத்த ரப்பிரதேச மாநிலத்திலே பா.ஜ.க.தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. பா.ஜ.க.வை சேர்ந்தவர் கல்யாண்சிங்தான் முதல் அமைச்சராக இருந்தார்.

பாபரி மஸ்ஜித் வளா கத்திலே கரசேவை நடத்து வதற்கு மாநில அரசு அனுமதி அளித்ததுடன் உச்சநீதிமன்றத்திலேயும் வாக்குறுதி அளித்தது. பாபரி மஸ்ஜிதுக்கு எந்தக் கெடுதலும் இல்லாத வகை யிலே கரசேவை நடக்கும் என்பதற்கு மாநில அரசு பொறுப்பேற்றுக் கொள் வதாக உறுதி தெரிவித்தது. ஆனால், உறுதிமொழியை மீறி விட்டு சட்டவிரோத மான செயல்களை அரங் கேற்றினார்கள்.

பா.ஜ.க.வும், அதன் சகோதர அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த வர்கள் வன்முறை செயல் களில் ஈடுபட்ட போது அரசு எந்திரம் ஸ்தம்பித்து போய் இருந்தது.

அரசு உயர் மற்றும்காவல் துறை அதிகாரிகளின் மெத்தனம்

காவல் துறை அதிகாரி கள் அந்த அக்கிரமங்களை தடுக்க முயற்சி எடுக்காமல் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தனர். அரசு உயர் பொறுப்பில் இருந்த வர்களும் அந்த அக்கிரமங் களுக்கு துணைபோய் சீருடை அணிந்த கரசேவ கர்களாக செயல்பட்டதாக மாண்பமை நீதிபதி லிபரான் சுட்டிக்காட்டியி ருக்கிறார்.

பாபரி மஸ்ஜித் இடிக் கப்பட்ட அன்று அயோத் தியிலும், சுற்றியுள்ள பகுதி யிலும் சிறுபான்மை மக்கள் குறி வைத்து தாக்கப் பட்டனர். பலர் உயி ரிழந்தனர். சட்டம் - ஒழுங்கு சீர்கெட்ட போது அதனை சீர்படுத்த அரசு எந்திரம் எந்த முயற்சியும் செய்யவில்லை.

ஊடகவியலாளர்களுக்கு தடை

அயோத்தியில் நடந்த சம்பவங்கள் குறித்து வீடியோ ஆதாரங்கள் சாட்சி ஆவணங்களாக உள்ளன என்பதையும் லிபரான் அறிக்கை தெரி யப்படுத்தியுள்ளது.

அயோத்தியில் நடந்த சம்பவங்கள் குறித்த செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகத் துறையினர் தடுத்து நிறுத்த பட்டுள்ளனர் என்பதையும் அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்படு வதற்கு முன்பாக அத்வானி நாடு முழுவதும் ரத யாத்திரை ஒன்றை நடத் தினார்.

அத்வானியின் ரத்த யாத்திரை
1990-ம் ஆண்டில் நடத்தப்பட்ட அந்த யாத் திரையின் விளைவாக நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மதக் கலவ ரங்கள் ஏற்பட்டன. ஆயி ரக்கணக்கானோர் இறந்த னர். இறந்தனர் என்று சொல்ல முடியாது. அநி யாயமாக கொல்லப்பட்ட னர். ஆமாம். அவர்கள் எல்லாம் படுகொலைதான் செய்யப்பட்டார்கள்.

அந்த சம்பவம் குறித்து ஹடைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகை தனது தலை யங்கத்திலே அத்வானி நடத்தியது ரத யாத்திரை அல்ல. ரத்த யாத்திரை என்று எழுதியது. அந்த அளவுக்கு நாடு முழுவதும் கலவரங்களால் அப்பாவி கள் ரத்தம் ஆறாக ஓடியது.

மறைந்த வி.பி.சிங்கிற்கு நன்றியும் - பாராட்டும்

அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தியவர் அன்றைய பிரதமர் வி.பி.சிங்தான். அவரது துணிச்சலான நடவடிக்கையால் வன் முறை கட்டுப்படுத்தப் பட் டது. அதனால் பா.ஜ.க. வினர் அவரது ஆட்சியை கவிழ்த்தனர். பிரதமர் பதவியை இழந்தார். என்றாலும், நாட்டு மக்களிடம் மிக உயர்ந்த மதிப்பைப் பெற்ற அந்த மறைந்த தலைவருக்கு எனது மரியாதையையும், நன்றியையும் இந்த அவை யில் தெரிவித்துக் கொள்கி றேன்.

அயோத்தியில் வன் முறையில் ஈடுபட்டவர்கள் மீதும், மஸ்ஜிது இடிப்பில் தொடர்புடையவர்கள் மீதும் குற்ற வழக்குகள் பதிவு செய்து கடுமையான தண்டடை அளிக்கப்பட வேண்டும். ஆனால், அப்படி இதுவரை நடை பெறாதது வருத்தத்துக் குரியது.

இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி மற்றும் பலர் இந்த அவை யிலே இடம் பெற்றிருப்பது மிகவும் அவமானகரமானது - வெட்கக்கேடானது. பாபரி மஸ்ஜித் விவகாரம் குறித்து அத்வானி நேரத்திற்கு தகுந்தாற்போல் பல கருத் துக்களை தெரியப்படுத்தி யுள்ளார்.

மஸ்ஜித் இடிக்கப்பட்ட தும் தனக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டதாக தெரிவித்தார். சில நாட்க ளில் பாபரி மஸ்ஜித் இடிக் கப்பட்டதன் காரணமா கவே பி.ஜே.பி. வளர முடிந் தது என்று தெரிவித்தார்.
இப்படி பல நேரங் களில் அவர் பல நிலைப் பாடுகளை தெரிவித்துள் ளார்.

பாபரி மஸ்ஜித் தொடர் பான அனைத்து வழக்கு களையும் ஒன்றுசேர்க்கப் பட்டு விரைந்து விசாரித்து வழக்குகள் முடிக்கப்பட வேண்டும்.

நாட்டைப்பற்றி அல்ல ஓட்டப்பற்றியே பா.ஜ.க.வின் கவலை

வாக்கு வங்கிக்காக - அரசியல் ஆதாயத்திற்காக இந்தப் பிரச்சினையை பா.ஜ.க.வினர் கையாண்டு வருகின்றனர். ஓட்டு பற்றி கவலைப்படும் அவர்கள் நாட்டைப் பற்றியும் அக்கறை செலுத்த வேண் டும்.
பாஜக ஆட்சி காலத் திலே உண்மையில் ஆர். எஸ்.எஸ்.தான் ஆட்சியா ளர்களோ என்று எண்ணத் தக்க வகையில் தனி அர சாங்கமே நடத்தப்பட்டது.

ராமருக்கு கோவில் கட்டுகிறோம் என்ற பெயரிலேயே வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் கோடிக் கணக்கான ரூபாய் நிதி திரட்டியது. அந்த பணம் எப்படி வந்தது? யார் யார் கொடுத்தது? அந்த பணம் எதற்காக செலவிடப் பட்டது என்ற விவரங் களை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தேசப்பற்றுக்கும், மதசகிப்புத் தன்மைக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் பாடுபட்ட - உழைத்த தலை வர்களை கொண்டது நமது நாடு.

அனைத்து மதங்களுமே மக்களுக்கிடையே சகோ தரத்துவத்தையும், நல்லி ணக்கத்தையுமே வலியுறுத் துகின்றன. ஒற்றுமையை யும் - ஒழுக்கத்தையும் போதிப்பதே அனைத்து மதங்களின் சாராம்சமாக உள்ளது.

மதநல்லிணக்கத்திற்கு காயிதெ மில்லத் காட்டிய முன்னுதாரணம்

நமது தேசம் அனைத்து மதங்களையும் மதிக்கக் கூடியது. நமது நாட்டின் அரசியலமைப்பு அனைத்து மதங்களுக்கும் முழு சுதந்திரம் வழங்கி யுள்ளது. அப்படியிருக்க பிற மத வழிபாட்டுத்தலங் களை இடிப்பதை - அனு மதிக்க முடியாது.

இந்த அவையில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறேன்.

நமது நாடு சுதந்திர போராட்டத்திற்கு பின் நாடு இந்தியா என்றும், பாகிஸ்தான் என்றும் பிரிந்தபின், நாட்டுப் பிரி வினையின் காரணமாக பல பகுதிகளிலும் கலவரம் ஏற்பட்டது. அப்படி ஒரு கலவரத்தில் கேரளாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளாயினர். அந்த சமயத்தில் பாகிஸ்தா னிலிருந்து முஹம்மது அலி ஜின்னா ஒரு தகவலினை அனுப்பினார்.

சிறுபான்மை முஸ்லிம் களை பாதுகாக்க தேவைப் பட்டால் பாகிஸ்தான் உதவத் தயாராக இருப்ப தாக தெரிவித்தார். அப் போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த தலைவர் கண்ணியமிகு காயிதெ மில்லத் முஹம் மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள், ஜின்னாவுக்கு பதில் அளித்தார். அதில், ஜின்னா அவர்களே இப் பொழுது நீங்கள் இந்தியர் அல்ல. வேறொரு நாட் டைச் சேர்ந்தவர். நீங்கள் இந்திய குடிமகனோ, குடி யுரிமை பெற்றவரோ இல்லாதபோது இந்திய நாட்டின் உள் விவகாரங் களில் தலையிடுவதை நாங் கள் ஒருபோதும் அனு மதிக்க மாட்டோம். நாங்கள் இந்தியாவின் சிறுபான்மையினராக இருந்தாலும் எங்களது பிரச்சினையை தீர்த்துக் கொள்ள எங்களுக்குத் தெரியும். நீங்கள் சிறு பான்மை மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் இருந்தால் உங்கள் பாகிஸ் தானில் உள்ள சிறு பான்மை மக்களாகிய இந்துக்களையும், சீக்கிய, கிறிஸ்தவர்களையும் முழு மத சுதந்திரத்துடனும், பாதுகாப்புடனும், சகல உரிமைகளுடனும் வாழ் வதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். அதை விட்டு விட்டு, இந்திய முஸ்லிம் கள் விவகாரத்தில் கவனம் செலுத்துவதை கைவிடுங் கள் என்று மிக உறுதியு டனும், தெளிவாகவும் காயிதெ மில்லத் அவர்கள் தெரியப்படுத்தினார்கள்.

மதச்சார்பற்ற நமது அரசாங்கம் மஸ்ஜிதை கட்டித் தருவதில் தயங்க வேண்டியதில்லை

இதனை நான் ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், நமது நாட்டின் தலைவர்கள் எவ்வளவு உயர்ந்த சிந்தனையுடை யவர் களாகவும், தேசப் பற்று மிக்கவர்களாகவும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தக்கூடியவர் களாகவும் இருந்தார்கள் என்பதை சுட்டிக்காட்டத் தான்.

அப்படிப்பட்ட பெரு மைக்குரிய நமது தேசத்தில் மதத்தின் பெயரால் சண்டை, சச்சரவுகள், வகுப்பு மோதல்கள் ஏற்படு வதை நினைத்து வருந்த வேண்டும். நான் இங்கு இன்னொரு விஷயத்தை யும் சுட்டிக் காட்டுகிறேன்.
அயோத்திலே பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அந்த சமயத்திலே பாகிஸ் தானிலே இந்து மத ஆலயங்கள் சிலவற்றை அங்குள்ள சில மதவாதிகள் சேதப்படுத்தினார்கள். அப்படி சேதப்படுத்தப் பட்ட அந்த கோவில்களை பாகிஸ்தான் அரசாங்கம் தனது சொந்த நிதியை செலவிட்டு புனரமைத்து கொடுத்தது. அந்த கோவில் கள் திறப்பு விழாவுக்கு பா.ஜ.க.வின் தலைவர் எல்.கே. அத்வானியை அழைத்து அவரது கரங்க ளாலேயே திறந்து வைத் தது.

பாகிஸ்தான் அரசியல மைப்புப்படி அது ஒரு மதம் சார்ந்த நாடாகும். அதிகாரப்பூர்வமாக அது ஒரு முஸ்லிம் நாடு. அப் படியிருந்தும் அது பிற மதங்கள், அதுவும் சிறு பான்மை மதத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்ப ளித்து பெருந்தன்மையாக நடந்துள்ளது. (பா.ஜ.க. வினர் கூச்சல், குழப்பம்).

நமது தேசம் அரசிய லமைப்புப்படி மதச்சார் பற்ற நாடு. செக்யூலர் கண்ட்ரி. நமது அரசு எந்த மதத்தையும் சார்ந்ததல்ல. எல்லோருக்கும் பொது வான அரசாங்க முறை கொண்டது. அப்படிப் பட்ட தேசத்தில் இடிக்கப் பட்ட மஸ்ஜிதை மீண்டும் கட்டித் தருவதில் அரசுக்கு தயக்கம் இருக்கக் கூடாது. அப்படி கட்டித் தருவது தான் நமது அரசுக்கு பெருமை சேர்க்கக்கூடிய தாக அமையும்.

இந்தியாவின் கலாச்சார பெருமையை உலகுக்கு உணர்த்துவோம்

இதற்காக அனைவரும், இங்குள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப் புத் தரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உலக அரங்கில் நமது இந்தியா வின் பெருமையை நிலை நாட்டும் வகையில் நமது இந்திய கலாச்சா ரத்தை - அனைத்து சமயங் களையும் மதித்து போற் றும் பண்பாட்டை மறு படியும் நிலைநாட்டும் முயற்சியில் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதற் கான வாய்ப்பினை உரு வாக்கித் தர வேண்டும் என கேட்டு உரையினை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசினார்.

அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான் எம்.பி.

அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான் எம்.பி.அவர்களின் உறையை காண இந்த வீடியோ தொடர்பை கிளிக் செய்யவும்

http://www.youtube.com/results?search_query=igms+lalpet&search_type=&aq=f



http://lalpetnews.blogspot.com/2009/12/ffff.html

Congratulations !!!

sayed m khalanthar
dateMon, Jun 8, 2009 at 12:03 PM
subjectFwd: Congratulations !!!

Dear Mr Abdurrahman,

Assalamualaikkum.

It was a wonderful time I spent with you in your office yesterday. Please look at the picture attached which will keep our memories always green as that of the colour of the shawl.

The inside story of your victory at the Vellore constituency was an inspiring account worth writing as a book. It is indeed a great achievement that the fragmented Muslim Jamaths got united in propelling your victory.

Warm regards,


---------- Forwarded message ----------
From: sayed m khalanthar
Date: Mon, May 18, 2009 at 3:00 PM
Subject: Congratulations !!!
To: rahmanexec@yahoo.com



Dear Mr Abdur Rahman,

Assalamualikkum.

It's something like a dream because you didn't alert people like me to come and do the campaign for you as we did for Prof. Kader Mohideen when he contested first time from Trichy.

Alhamdulillah," All is well that ends well "- I'd rather reword the saying as " All is well that begins well ".

My prayers and best wishes for you to scale new heights and reach the summit of achievement in your new career as an enthusistic, honest Member of Parliament.

Congratulations and warm regards,



Sayed M Khalanthar
Director-Education,
ETA-Star Education
Phone:00971 4 2888404
Fax :00971 4 2880505
e-mail:khalanthar@gmail.com
khalanthar@etaascon.com





--
Sayed M Khalanthar
Director-Education,
ETA-Star Education
Phone:00971 4 2888404
Fax :00971 4 2880505
e-mail:khalanthar@gmail.com
khalanthar@etaascon.com

இஸ்லாமியத் தலைவர்கள் -மார்க்க அறிஞர்களின் தமிழ் வளர்ச்சிப் பணிகள்

இஸ்லாமியத் தலைவர்கள் -மார்க்க அறிஞர்களின் தமிழ் வளர்ச்சிப் பணிகள்



மெளலானா தளபதி. A.­ஷஃபீகுர் ரஹ்மான், மன்பஈ.
(மாநில செயலாளர். தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,சென்னை)


சென்னையில் 13.12.2009 அன்று நடைப்பெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 2 ஆம் ஆண்டு மாநில மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கோவை : பக்கம் -173

சந்தனத் தமிழில் திருக்குர் ஆனின் விரிவுரை, வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் அறிவார்ந்த வாழ்வியல் முறைகளைப் பற்றி நமது தலைவர்களும் உலமாக்களும் நமக்கு இனிமையாகக் கூரியது மட்டுமல்லாமல் அரபுலகத் தலைவர்களையும் தமிழ் பேச வைத்த சிறப்பு நமது தலைவர்களுக்கு உண்டு .இந்தச் செய்திகளைத் தொகுத்துக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும் .


கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்
தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவராகவும், அரசியல் நிர்ணயச் சபை உறுப்பினராகவும்,
பணியாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் னி.இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய சேவைகள் பற்றி சுட்டிக் காட்டுவதில் மகிழ்கிறேன்.

மொழி வளமும், வரலாறும் படைத்த என் தாய்மொழியான தமிழ்மொழியை இந்திய நாட்டின்
ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமென்று நம் நாட்டின் அரசியல் நிர்ணயச் சபையில் எடுத்துரைத்த
காயிதே மில்லத் அவர்கள் உலக மன்றத்திலும், மக்கள் இடத்திலும், தமிழ்மொழியின் இனிமையைப்
பற்றி அருமையாக சொல்லிக் காட்டியுள்ளார்கள். மொரோக்கோவின் தலைநகர் ராபத்தில் நடைப்பெற அனைத்துலக முஸ்லிம் கல்வி மாநாட்டில் நமது இந்திய அரசின் பிரதிநிதியாக முஸ்லிம் கல்வியாளர்களின்
பிரதிநிதியாக சிராஜுல்மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் பங்கேற்றிட சென்றிருந்தார். அப்துஸ்
ஸமத் சாஹிப் அவர்களிடத்தில் காயிதே மில்லத் அவர்கள் ஸிம்து சுப்பான், ஃபத்ஹுர்ரப்பானி, தப்ஸீருல்
குர்ஆன், மிஸ்காத்துல் மஸாபீஹ் ஆகிய அரபுத் தமிழ் கிதாப்களை (புத்தகங்களை) அப்துஸ் ஸமத் சாஹிப்
அவர்களிடம் கொடுத்து மொரோக்கோ கல்வி மாநாட்டின் அரங்கில் பார்வையாளர் பகுதியில் வைக்கச்
செய்யுங்கள் என்று கொடுத்தனுப்பினார்கள். இதை இன்முகத்துடன் பெற்றுக் கொண்ட அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் மாநாட்டின் பார்வையாளர்கள் பகுதியில் இடம்பெறச்செய்தார்கள். மாநாட்டிற்கு வருகைத் தந்திருந்த
அரபுலக தலைவர்கள் அரபுத் தமிழ் கிதாப்களை வாசித்தப்போது அரபுலக தலைவர்களின் நாவிலிருந்து
உதட்டிலிருந்து இனிய
தமிழின் இன்பத் தமிழ்வார்த்தைகள் வெளியானதைப் பற்றி அரபுலக தலைவர்கள் தமிழ் பேசியதுப் பற்றி மணிவிளக்கு மாதஇதழில் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் எழுதி எல்லோரையும் மகிழ்வடையச் செய்தார்.

அன்றைய காலகட்டத்தில் சென்னை புதுக் கல்லூரி தலைவராகவும், சென்னை மாவட்ட இந்திய யூனியன்
முஸ்லிம் லீக் தலைவராகவும், அப்துஸ் ஸமத் சாஹிப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அரபுலக தலைவர்களை தமிழ் பேச வைத்த படிக்க வைத்த காயிதே மில்லத் அவர்களின் சேவை மகத்தானதாகும்
என்பதை எண்ணி மகிழ்வடைகிறோம். மொரோக்கோ முஸ்லிம் கல்வியாளர்கள் மாநாட்டில் இடம்பெறுவதற்காக காயிதே மில்லத் அவர்கள் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களிடம் அரபுத் தமிழ் கிதாப்களை கொடுத்த போது
அடியேனும் இருந்தேன் என்பதை சுட்டிக் காட்டுவதில் மகிழ்கிறேன்.
அல்லாமா அமானி ஹஜ்ரத்
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி முதல்வராகவும் தமிழ்நாடு மாநில்
ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவராகவும், நீண்ட காலங்கள் பணியாற்றிய அறிவுலக மேதை அல்லாமா ஜியாவுத்தின் அஹமத் அமானி ஹஜ்ரத் தமிழ், அரபு, ஃபார்ஸி, உருது, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும்
நல்லப் பாண்டித்துவம் பெற்றவராக திகழ்ந்தார். குல்ஜாரே ஃபாத்திமா என்ற பெயரில் அரபுத் தமிழிலும் ஃபாத்திமா நாயகியின் ஜீவசரித்திரம் என்ற பெயரில் இனிய தமிழிலும் இருநூல்கள் எழுதி வெளியிட்டுயிருக்கிறார்கள். இந்த இருநூல்களும் சமுதாய மக்களிடத்தில் நல்ல
வரவேற்பை பெற்றிருந்தது. உருதுவிலும், ஃபார்ஸியிலும் நூல்கள் எழுதியுள்ள இவர் ஃபார்ஸி மொழியில் எழுச்சியூட்டும் கவிதைகளும் உள்ளார். குல்­னே சீரத் என்ற பெயரில் உருதுவில் நபிகள் பெருமானார் (ஸல்..)
அவர்களைப் பற்றி கவிதையாகப் பாடியுள்ளார். காலம் காட்டு இடைநிலை என்ற பெயரில் 1956ஆம் ஆண்டில் இவர் எழுதிய தமிழின் சிறப்பு பற்றிய நூல் தமிழறிஞர்களின் பாராட்டுதலையும், வாழ்த்தையும் பெற்றது. 1958ஆம் ஆண்டிலிருந்து 1966ஆம் ஆண்டு வரை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின்
தமிழ்துறையின் தலைவர்களும், பேராசிரியர்களும் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்
கல்லூரிக்கு வந்திருந்து அமானி ஹஜ்ரத் அவர்களை சந்தித்து தமிழ்மொழியின் மீது அவர் கொண்டுள்ள பற்று, பாசம் வரலாற்று செய்திகளையும் தமிழ்மொழிப் பற்றிய ஆய்வுகளையும் கண்டு ஹஜ்ரத் அவர்களின்
திறமையை பெரிதும் பாராட்டிச் சென்றுள்ளார்கள். மதராசாவில் எங்களுக்கு பாடங்கள் நடத்திய காலங்களிலும் அரபி, உருது, ஃபார்ஸி நூல்களிலுருந்து தமிழில் மொழிபெயர்த்து சொல்லி தமிழின் இனிமைகளைப் பற்றி
எங்களுக்கு போதிப்பார்கள்.
மெளலானா அப்துர் ரஹ்மான் நக்ஸபந்தீ
லால்பேட்டை மெளலானா அப்துர் ரஹ்மான் நக்ஸபந்தீ இவர் 1895 ஆம் ஆண்டிலிருந்து 1917ஆம்
ஆண்டு வரை புனித மிகு மக்காவிலுள்ள மத்ரஸா ஃபக்ரிய்யா உஸ்மானிய்யாவில் பேராசிரியாராகப்
பணியாற்றியுள்ளார்கள். அன்றைய காலக்கட்டத்தில் புனித ஹஜ்ஜுக்கா தமிழகத்திலிருந்தும் இலங்கை, பர்மா ஆகிய பகுதிகளிலிருந்து ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகளுக்கு மத்தியில் புனித ஹரம் ­ரீபில் வைத்து தமிழில் ஹஜ், உம்ரா, மதீனா ஜியாரத், திருக்குர் ஆனின் சிறப்பு அதன் விளக்கம் பற்றியும் நபிகள் பெருமானார்
அவர்களின் அழகிய வாழ்வியல் பற்றியும் தமிழில் உரையாற்றியுள்ளார்கள். இவர்களின் எழுச்சி மிகு இனிய
தமிழ் உரையின் நடையினை அரபுகளும் கேட்டு மகிழ்ந்துள்ளார்கள். அரபுகளையும் தமிழ் பேச
வைத்துள்ளார்கள் என்ற இனியத் தகவலை தெரிவிப்பதில் மகிழ்கிறேன். இவர்கள் என் பாட்டனார் என்பதையும் தெரிவிப்பதில் பூரிப்படைகிறேன்.
இஸ்லாமியத் தலைவர்களும் மார்க்க அறிஞர்களும் தமிழ் மொழிக்கு ஆற்றியுள்ள பங்களிப்புகள் ஏராளம் இக்கட்டுரை அது குறித்த சில விசயங்களை கோடிட்டுக் கட்டுகிறது .இதுபோன்று இன்னும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது இஸ்லாத்திற்கும், இன்பத்தமிழ் மொழிக்கும் இடையிலான உறவை முன்னெடுத்து செல்வதாக அமையும்.

“Quaide Millath Forum - Kuwait” organizing "Special Seminar" in Tamil

“Quaide Millath Forum - Kuwait” organizing "Special Seminar" in Tamil

Dear Brothers and Sisters in Islam! As-Salaamu Alaikum Warahma…
Quaide Millath Forum - Kuwait (official organization of Tamilnadu state Indian Union Muslim League), has Insha Allah planned a Special Seminar in Tamil on various topics related on the benefit of the Kuwait residing Tamil speaking Indians.
Date: Insha Allah December 25, 2009 Friday @ 6:30 pm (Immediate after Ishaa Prayer).
Venue: Marhoom G.M. Banathwala Sahib Memorial Hall, Trichy Flower Restaurant, Mirqab, Kuwait City.
Tamil Islamic scholars, famous intellectuals, socio-welfare organization leaders, poets and fellow organizational executive members shall contribute their lectures.
QMF-Kuwait cordially invites all Tamil speaking brothers to participate in this useful seminar with their brothers and friends. Also, please pass this information to all Tamil speaking community in Kuwait and take part in this program.
For further details, please contact the organizing head Dr. K.S. Anwar Batcha on (+965) 9786 2316 / 6664 1434 or thru emails: qmfkuwait11@gmail.com / iumlkuwait11@gmail.com and for more our forum activities… please visit our official blogspots: www.iumlkuwait.blogspot.com / www.qmfkuwait.blogspot.com.
குவைத் காயிதே மில்லத் பேரவை ஏற்பாடு செய்யும் சிறப்பு கருத்தரங்கம்!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25.12.2009 வெள்ளிக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத், மிர்காப் பகுதியிலுள்ள 'திருச்சி உணவகம், மர்ஹூம் ஜி.எம். பனாத்வாலா நினைவரங்கில்' தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அதிகாரப்பூர்வ அமைப்பான 'குவைத் காயிதெ மில்லத் பேரவை' ஏற்பாடு செய்யும் 'சிறப்பு கருத்தரங்கம்' கீழ்க்கண்ட தலைப்புகளில் நடைபெற இருக்கின்றன.
v பாபர் மஸ்ஜித் நினைவு
v நீதிபதி லிபரான் கழிஷன் அறிக்கை
v இந்திய அரசின் நடவடிக்கை
v இந்திய முஸ்லிம்களின் அணுகுமுறை

இச்சிறப்பு கருத்தரங்கில் குவைத் வாழ் தமிழக உலமா (இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்) பெருமக்கள், சான்றோர்கள், சமுதாய சிந்தனையாளர்கள், தமிழ் முஸ்லிம் பொது நல, மார்க்க அமைப்புகளின் தலைவர்கள், சகோதர சமுதாய அனைத்து தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் கவிஞர்கள் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.
இச்சிறப்பு கருத்தரங்கில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து / களைந்து தங்கள் சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் காயிதே மில்லத் பேரவையின் அமைப்பாளர் மருத்துவர் கே.எஸ். அன்வர் பாட்சா மற்றும் அமைப்புக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.
பேரவையின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கு (+965) 97862316 / 66641434 என்ற எண்களின் தொடர்பு கொள்ளுமாறும், பேரவையின் அதிகாரப்பூர்வ www.iumlkuwait.blogspot.com / www.qmfkuwait.blogspot.com என்ற வலைப்பூக்களை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை iumlkuwait11@gmail.com / qmfkuwait11@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும் பேரவையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.

http://moulanathalabathy.blogspot.com/

assalamualaikkum brothers,this

http://moulanathalabathy.blogspot.com/

new blogspot for my great father & your thalabathy sahib.plz visit send us your opinion to ibnuthalabathi@yahoo.co.in & hajiasa.lpt@gmail.com

http://moulanathalabathy.blogspot.com/

Abdul Rahman
Secretary, AIMAN Sangam
Member of Muslim League Publication committee
Abu Dhabi,
U.A.E
Mob: +971502821852

காயல்பட்டினம் இரயில்வே நிலைய விரிவாக்கம்!

காயல்பட்டினம் இரயில்வே நிலைய விரிவாக்கம்!

நகர்மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றார் இ.அஹ்மத்!!


காயல்பட்டினம். டிச.30

காயல்பட்டினம் வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், மத்திய இரயில்வே துறை இணையமைச்சருமான இ.அஹ்மத் ஸாஹிப், முதல் நிகழ்ச்சியாக காயல்பட்டினம் இரயில்வே நிலையத்தைப் பார்வையிட்டார். அங்குள்ள குறைபாடுகளையும், செய்யப்பட வேண்டிய பணிகளையும் மக்களிடம் கேட்டறிந்தார்.

முன்னதாக, கடந்த 15ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், காயல்பட்டினம் இரயில்வே நிலையத்தை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து முழுமையாகக் கேட்டறிந்திருந்தார். அதனடிப்படையில், நேற்று காயல்பட்டினம் நிகழ்ச்சியில் நகர்மக்கள் சார்பாக இ.அஹ்மத் ஸாஹிபிடம் கோரிக்கைகளை அவர் விளக்கிச் சொன்னார்.

பின்னர் உரையாற்றிய மத்திய அமைச்சர் இ.அஹ்மத் இக்கோரிக்கைகள் குறித்து பேசுகையில், காயல்பட்டினம் மிகப்பெரிய ஊர்@ மிகச் சிறந்த மக்கள்@ ஆனால் மிகச் சிறிய இரயில்வே ஸ்டேஷன்... எனவே உங்கள் கோரிக்கைகள் நியாயமானவையே! உங்கள் கோரிக்கைகளில் ஒன்றான, காயல்பட்டினம் இரயில் நிலையத்தில் கணணி மயமாக்கப்பட்ட முன்பதிவு மையம் மற்றும் உடனடி பயணச்சீட்டு மையம் விரைவில் திறக்கப்படும் என்றும், 18 இரயில் பெட்டிகள் நிறுத்துவதற்கு வசதியாக, இந்நிலையத்திலுள்ள நடைமேடை விரிவுபடுத்தப்படும்... பயணியர் வசதிக்காக, காயல்பட்டினம் இரயில் நிலையத்தில் மேற்கூரை விரைவில் அமைக்கப்படும் என்று கூறிய அவர், திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி வரையிலுள்ள இரயில் நிலையங்களில் நடைமேடை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது@ இது விரைவில் முடிக்கப்பட்டு, செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயிலை தினசரி இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில், சி.லெ.சாகுல் ஹமீது, எஸ்.ஏ.முஹம்மத் அலீ, அ.குலாம் ஹஸன், எஸ்.டி.வெள்ளைத்தம்பி, எஸ்.எம்.மிஸ்கீன் சாஹிப் ஃபாஸீ, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், சொளுக்கு எஸ்.எம்.கபீர், எஸ்.செய்யித் அஹ்மத், எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, பிரபு சுல்தான், வாவு நாஸர், பி.எம்.எஸ்.அமானுல்லாஹ் ஆகிய நகரப் பிரமுகர்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட – நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி நன்றி கூறினார். தூத்துக்குடி மாவட்ட காழீ மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ ஃபைஜீ மஹ்ழரீ துஆ ஓதினார்.

தூத்துக்குடி மாவட்ட கல்வி மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மதுரை இரயில்வே கோட்ட மேலாளர் அனில் சிங்கால், காயல்பட்டினம் இரயில் நிலைய அதிகாரி முஹம்மத் இப்றாஹீம் உள்ளிட்ட இரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர்.

LALPET TO BANGALORE IUML CONFERENCE

1 -moulavi thalabathy
A.SHAPEEQUR RAHMAN AGE-- 63
RELIGIOUS WING SECRETARY INDIAN UNION MUSLIM LEAUGE (TAMILNADU)
4/93-UHADU STREET
LALPET

2- S.A.ABDUL GAFFAR AGE-- 75
CUDDALORE DIST-IUML PRESIDENT
60.MAIN ROAD
LALPET

3- K.A.G.MOHAMED AGE-- 69
LALPET TOWN -IUML PRESIDENT
67-MAINROAD
LALPET

4- K.A.AMANULLAH AGE-- 48
DIST-VICE -SECRETARY IUML
MELA STREET
LALPET

5- P.M.J.MASOOD AHAMED AGE-- 40
6/19-NEW STREET
LALPET

6- M.O.ABDUL ALI AGE--50
HIGH SCHOOL BACK SIDE
LALPET

7-A.R.ABDUL RASHEED AGE--50
92- SULAIMAN SAIT VEETHI
LALPET

9- A.R.SABIULLAH AGE--55
SULAIMAN SAIT VEETHI
LALPET

10- P.M.MUHAMED THAIYUB AGE--45
36-SIRAJUL MILLATH STREET
LALPET

11- T.S.NIZAM MOHAMED AGE--55
NEW MOSQUE STREET
LALPET

12- S.A.HIDAYATHULLAH AGE--50
34-JINNA STREET
LALPET

13- MOULAVI S.M.JAMAL AHAMED AGE-- 40
UHADU STREET
LALPET

14- MOULAVI A.R. ABUL FAISAL AGE-- 45
NORTH STREET -LALPET

15- MOULAVI. A. MUHAMMED AGE--45
NORTH STREET - LALPET

16- MOULAVI .A.H.NOORUL AMEEN AGE-- 29
53-MAIN ROAD - LALPET

17- U.SALMAN FARIS AGE--23
NEW STREET - LALPET

18- A.S. AHAMED. AGE-- 23
4/93 UHADU STREET - LALPET

19- O.MOHAMED SALIM AGE-- 38
13. QAIDE MILLATH SALAI - LALPET

20- A.M.MOHAMED SIDDIQ AGE-- 55
MOULANA VEETHI - LALPET

21- MOULAVI JAFAR ALI AGE-- 35
107/8.KOTHAVAL STREET - LALPET

22- M.MOHAMMED AGE-- 38
MOULANA VEETHI - LALPET

23- M.I.SHAHUL HAMEED AGE-- 47
8. MELA STREET - LALPET

24- LIYAKATH ALI AGE-- 41
16. MOULANA VEETHI - LALPET

25- H FAROOK AGE-- 53
38 MUBARAK VEETHI - LALPET

26- A.R.JAFAR ALI AGE-- 50
MUBARAK VEETHI - LALPET

27- M.A.ABDUL RAWOOF AGE-- 54
48- SINGARA STREET - LALPET

29- B.MUMEEN AGE-- 48
RAHMATH NAGAR V- KULAKKUDI
K.M.KOIL

30- MUBARAK AGE-- 45
RAMZAN THAIKKAL - K.M.KOIL

31- SHEIK DAWOOD AGE-- 45
CDM - MAIN ROAD - LALPET

32- A.HABIBUR RAHMAN AGE-- 55
102/55- NORTH STREET - LALPET

33- S.MOHAMED HAJA AGE-- 48
47- SOUTH STREET -- LALPET

34- S.A.ABDUL MAJEED AGE-- 42
108 - HIGH SCHOOL BACK SIDE - LALPET

35- M.K.NAJBUDEEN AGE-- 45
LALPET

36- T.J.VAJIYULLAH AGE-- 46
MAIN ROAD - LALPET

Wednesday, December 30, 2009

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இலட்சியம்இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இலட்சியம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இலட்சியம்

இந்திய முஸ்லிம்களை கண்ணியத்துடன் வாழச் செய்வதே!

காயல்பட்டினம் நகர மக்கள் வரவேற்பில், தேசிய தலைவர் இ.அஹ்மத் முழக்கம்!!


காயல்பட்டினம். டிச.30

இந்திய முஸ்லிம்களை கண்ணியத்துடன் வாழச் செய்வதே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இலட்சியம் என தேசிய தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், மத்திய இரயில்வே துறை இணையமைச்சருமான இ.அஹ்மத் ஸாஹிப், தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் நேற்று காயல்பட்டினம் வருகை தந்தனர். காயல்பட்டினம் இரயில்வே நிலையத்தைப் பார்வையிட்டுவிட்டு, வருகை தந்த அவர்களுக்கு பாங்காக் காயிதெமில்லத் பேரவையின் அமைப்பாளர் வாவு ஷம்சுத்தீன் இல்லத்திலிருந்து கருத்தம்பி மரைக்காயர் தெரு, பிரதான வீதி, ஆறாம்பள்ளித் தெரு, சதுக்கைத் தெரு வழியாக அவர்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர், ஜலாலிய்யாஹ் திருமண மஹாலில், நகர மக்களின் சார்பிலும், அனைத்து மஹல்லா ஜமாஅத்துகளின் சார்பிலும் எழுச்சிமயமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமையில், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் வாவு செய்யது அப்துர்ரஹ்மான் உள்ளிட்ட பிரமுகர்களின் முன்னிலையுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப், ஐக்கியப் பேரவை கவுரவ ஆலோசனைக்குழு உறுப்பினர் எம்.எல்.ஷாஹ{ல் ஹமீத் (எஸ்.கே.) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், இ.அஹ்மத் ஸாஹிப் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

காயல்பட்டினத்திற்கு வந்த என்னை சிறப்பான முறையில் வரவேற்றமைக்கு எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனக்களிக்கப்பட்ட இந்த வரவேற்பு நான் அமைச்சர் என்பதற்காக அல்ல! காயிதெமில்லத் அவர்களின் ஊழியன் என்ற முறையிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தொண்டன் என்ற முறையிலும்தான் எனக்கு இந்த வரவேற்பு தரப்பட்டிருக்கிறது.

பாரம்பரியமிக்க கேரள இஸ்லாமிய கலாச்சாரத்தோடு, அரபிப்பாடல் இசைத்து, பெண்களும் - ஆண்களும் ஸலாம் கூறி எங்களை வரவேற்ற காட்சி எனக்கு அப்படியே கேரளாவை நினைவூட்டுகிறது. மலபார் பகுதிக்கும் காயல்பட்டினத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதை இது நிரூபித்துவிட்டது.

காயல்பட்டினம் நகர மக்கள் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் பரவிக் கிடக்கின்றனர். கெய்ரோவிலும் கூட நான் சென்றிருக்கையில், இந்த நகராட்சியின் தலைவரின் மகனார் என்னை வரவேற்றார். இப்படிப்பட்ட சர்வதேச தொடர்புள்ளவர்களை ஓரிடத்தில் சந்திக்கின்ற அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு அளிக்கப்பட்ட இந்த மகத்தான வரவேற்பின் மூலமாக, கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத்தின் கொள்கைகளையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் லட்சியங்களையும் இன்னமும் அதிகமாக செயல்படுத்துவதற்கான ஓர் உறுதியை ஏற்கவேண்டிய நிலையை எனக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விடுதலைக்குப் பின், முஸ்லிம் லீகை இன்னமும் ஏன் தொடர்ந்து நடத்துகிறீர்கள் என்று காயிதெமில்லத்திடம் கேட்கப்பட்டபோது, இந்திய முஸ்லிம்களை கண்ணியத்துடன் வாழச் செய்வதற்காகத்தான் முஸ்லிம் லீகை நான் தொடர்ந்து நடத்துகிறேன் என்று காயிதெமில்லத் அவர்கள் சொன்னார்கள். மக்கள் மன்றத்தில் மட்டுமல்லாது நாடாளுமன்றத்திலும், அரசியல் நிர்ணய சபையிலும் அவர்கள் அதை உறுதியுடன் கூறினார்கள். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். அது மட்டுமின்றி, அவர்கள் சொன்ன அந்தப் பாதையில்தான் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம்.

கண்ணியத்துடன் வாழ்வது என்பதை வெறும் வார்த்தைகளாக மட்டுமின்றி, நாடு தழுவிய அளவில் முஸ்லிம்களுக்கு அதிகமான கல்வி நிலையங்கள், சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகள், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அணுகுமுறை, அனாதை இல்லங்கள், சமூக சேவை அமைப்புகள் என ஏராளமாக உருவாவதற்கு நாங்கள் காரணமாக இருந்துள்ளோம்.

இந்த சமுதாயத்தின் பெயரால் சில இயக்கங்கள் ஆங்காங்கே சமுதாய மக்களுக்கு தவறான வழிகாட்டுதலைக் காட்டி பிரச்சினையை ஏற்படுத்திவிட்டனர். ஆனால் நாங்களோ அல்லாமா இக்பால் அவர்கள் சொன்னதைப் போன்று, சத்திய இஸ்லாமியப் பாதையில் எங்கள் சமுதாய மக்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்த நாட்டைப் பொருத்த வரையில், முஸ்லிம்களை இரண்டாந்தர பிரஜைகளாக ஆக்க முயற்சித்தபோது, அவர்கள் கண்ணியத்தோடும், மானம் - மரியாதையுடனும் வாழ்ந்து, இந்த நாட்டிலேயே மடிவதற்கு எல்லா வகையான வழிமுறைகளையும் நாங்கள் செய்து தந்தோம். வன்முறை வழிகாட்டுதலை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. சாந்தி - சமாதானம் - நல்லொழுக்கம் போன்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றித்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்பட்டு வருகிறது.

காயிதெமில்லத் காட்டித்தந்த வழியில் உறுதியுடன் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிற காரணத்தினால்தான், 15ஆவது நாடாளுமன்றத்திலும் நாங்கள் தொடர்ந்து இடம்பெறக்கூடிய வாய்ப்பும், மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இது இந்த சமுதாயமும், நம் நாடும் நமது தாய்ச்சபைக்குக் கொடுத்த அங்கீகாரம்.

இந்திய அரசில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கம் வகிக்கின்ற காரணத்தினால்தான், முஸ்லிம்களின் கல்வி உதவிக்காக வேண்டி 3000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்ற வாரம் கூட, பாரதப் பிரதமரை நான் உள்ளிட்ட 12 முஸ்லிம் எம்.பி.க்கள் சந்தித்து, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, அரை மணி நேரம் கலந்து பேசினோம். நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான கமிஷன் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டும்@ குறிப்பாக, சிறுபான்மையினருக்கு 15 சதவிகிதம் - அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம் என்ற பரிந்துரை உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளோம்.

இப்படிப்பட்ட இயக்கம் இந்த நாட்டில் வளர வேண்டுமா, வேண்டாமா? இதில் நீங்களெல்லாம் அங்கம் பெற வேண்டுமா, வேண்டாமா? ஆகவேதான் நாடு முழுவதும் இந்த இயக்கத்தை வளர்ப்பதற்காக நானும், எனதருமை நண்பரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களும் அயராது பாடுபடுகிறோம். வரும் ஜனவரி 15ஆம் தேதி, பெங்களுருவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு நடைபெறவிருக்கிறது. அந்த மாநாட்டிற்கு அனைவரும் வருகை தாருங்கள் என அன்போடு அழைக்கிறேன்.

இவ்வாறு இ.அஹ்மத் ஸாஹிப் பேசினார்.

பாளையங்கோட்டை ரஹ்மத் நகர் பள்ளிவாசலில் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம்

பாளையங்கோட்டை ரஹ்மத் நகர் பள்ளிவாசலில் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம்


பாளையங்கோட்டை, டிச.30-

பாளையங்கோட்டை ரஹ்மத்நகர், கிரஸண்ட் நகர் பகுதிகளின் முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டம் ரஹ்மத் நகர் பள்ளிவாசலில் நெல்லை ஷிபா மருத் துவமனை நிர்வாக இயக்கு நர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி தலைமையில் நடை பெற்றது.

எம்.கே.எம். ஜுவல்லர்ஸ் அதிபர் எம்.கே.எம். கபீர் முன்னிலை வகித்தார். ரஹ்மத் நகர் பள்ளிவாசல் பொருளாளர் எம். சாகுல் ஹமீது அனைவரையும் வரவேற்றார்.

நெல்லை மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். துராப்ஷா முஸ்லிம் லீக் அவசியம் பற்றியும், சமு தாய ஒற்றுமை பற்றியும் விரிவாகப் பேசினார்.

பாளையங்கோட்டை ரஹ்மத் நகர், பரக்கத் மாநகரம், கிரஸண்ட் நகர் பகுதிகளில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மிய்யா கான், கே.என்.எம். மஹப+ப் அலி, ஹாஜா முகைதீன் ஆலிம், எம்.எஸ்.எஸ். செய் யது இப்ராஹீம், ஷாகுல் ஷிப்லி உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.

முடிவில் ரஹ்மத் நகர் பள்ளிவாசல் செயலாளர் எம். வருசை மியாபிள்ளை நன்றி கூறினார்

தென்சென்னை-தாண்டர் நகரில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை : மாநில பொருளாளர் முன்னிலையில் ஏராளமானோர் இணைந்தனர்

தென்சென்னை-தாண்டர் நகரில் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கை : மாநில பொருளாளர் முன்னிலையில் ஏராளமானோர் இணைந்தனர்


சென்னை, டிச.30-

தென்சென்னை மாவட் டம் சைதை பகுதி தாண் டர் நகர் அரசு குடியிருப் பில் அமைந்துள்ள முஸ் லிம் தொழுகை கூடத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு உறுப்பினர் சேர்க் கைப் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. மாநிலப் பொருளாளர் வடக்கு கோட்டையார் முன்னிலை யில் ஏராளமானோர் முஸ்லிம் லீகில் தங்களை இணைத்துக் கொண்டனர்

25.12.09 வெள்ளிக் கிழமை ஜும்ஆவிற்குப் பிறகு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம். செய்யது அஹமது தலை மையில் தென் சென்னை மாவட்ட தலைவர் கே.பி. இஸ்மத் பாட்சா, தென் சென்னை மாவட்ட செய லாளர் ப+வை. எம்.எஸ். முஸ்தபா, சைதை பகுதி தலைவர் போகளூர் கே. அப்துல் கதீம். செயலாளர் சாத்தை எம். மீரான் முகைதீன், தி.நகர் சர்க்கார் இஸ்மாயில், சேப்பாக்கம் பகுதி ஆலம்கான், சைதை ஏ. இஸ்மாயில் இளைஞர் அணி அமைப்பாளர் எம். முகம்மது ரியாஸ், எம். முகம்மது அலி, ஷேக், அப்பாஸ் ஆகியோர் முன்னிலையில் உறுப்பினர் சேர்ப்புப் பணி நடை பெற்றது.

தாண்டர் நகர் அரசினர் குடியிருப்பு வளாகத்தி லுள்ள தொழுகைக் கூட தலைவர் செய்யது ஜவ் வாது, துணைத் தலைவர் முனீர் அஹ்மத், எம். எஸ். முஹம்மது ரபி, முனீர் பாஷா, செயலாளர் சாந் துனி செய்யது, பொருளா ளர் எஸ். உமர் ஆகியோர் முயற்சியின் காரணமாக அப்பகுதியிலுள்ள இஸ்லாமிய மக்கள் அனை வரும் ஆர்வத்துடன் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களை முஸ் லிம் லீகில் உறுப்பினர் களாக இணைத்துக் கொண்டனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் ப+வை. காதர், தென் சென்னை மாவட்ட அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித் தார்கள்.

முன்னதாக இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம். செய்யது அஹமது ஜமா அத்தார் முன்னிலையில் உரையாற்றினார். ஜும்மா பேரூரை மௌலான அப்துல் அஜீஸ் பைஜி பையாஜி உரையாற்றினார், மௌலவி நூர் முஹம்மது நன்றி கூறினார்.

காயல்பட்டினம் நகர மக்கள்வரவேற்பில், தேசிய தலைவர் இ.அஹமது முழக்கம்

காயல்பட்டினம் நகர மக்கள்வரவேற்பில், தேசிய தலைவர் இ.அஹமது முழக்கம்


காயல்பட்டினம். டிச.30

இந்திய முஸ்லிம்களை கண்ணியத்துடன் வாழச் செய்வதே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இலட்சியம் என தேசிய தலைவர் இ.அஹ்மது ஸாஹிப் பெரு மிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், மத்திய இரயில்வே துறை இணை யமைச்சருமான இ.அஹ் மத் ஸாஹிப், தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மாநில தலை வருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் நேற்று (29.12.09) காயல் பட்டினம் வருகை தந்தனர்.

காயல்பட்டினம் இரயில்வே நிலையத்தைப் பார்வையிட்டுவிட்டு, வருகை தந்த அவர்களுக்கு பாங்காக் காயிதெமில்லத் பேரவையின் அமைப்பா ளர் வாவு ஷம்சுத்தீன் இல்லத்திலிருந்து கருத் தம்பி மரைக்காயர் தெரு, பிரதான வீதி, ஆறாம் பள்ளித் தெரு, சதுக்கைத் தெரு வழியாக ஊர்வல மாக அழைத்துச்செல்லப் பட்டனர்.


பின்னர், ஜலாலிய்யாஹ் திருமண மஹாலில், நகர மக்களின் சார்பிலும், அனைத்து மஹல்லா ஜமா அத்துகளின் சார்பிலும் எழுச்சிமயமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமையில், காயல்பட்டி னம் நகராட்சி தலைவர் வாவு செய்யது அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட பிர முகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில், எம்.ஏ.செய்யித் முஹம் மத் அலீ வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரி யர் கே.எம்.காதர் மொகி தீன், மாநில பொதுச் செய லாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செய லாளர் காயல் மகப+ப், ஐக்கியப் பேரவை கவுரவ ஆலோசனைக்குழு உறுப் பினர் எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், இ.அஹ்மத் ஸாஹிப் பேசு கையில் குறிப்பிட்டதா வது:-

காயல்பட்டினத்திற்கு வந்த என்னை சிறப்பான முறையில் வரவேற்ற மைக்கு எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனக் களிக்கப்பட்ட இந்த வரவேற்பு நான் அமைச்சர் என்பதற்காக அல்ல! காயி தெமில்லத் அவர்களின் ஊழியன் என்ற முறையி லும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தொண் டன் என்ற முறையிலும் தான் எனக்கு இந்த வர வேற்பு தரப்பட்டிருக்கிறது.

பாரம்பரியமிக்க கேரள இஸ்லாமிய கலாச்சாரத் தோடு, அரபிப்பாடல் இசைத்து, பெண்களும் - ஆண்களும் ஸலாம் கூறி எங்களை வரவேற்ற காட்சி எனக்கு அப்படியே கேரளாவை நினைவூட்டியது. மலபார் பகுதிக்கும் காயல் பட்டினத்திற்கும் நெருங் கிய தொடர்புண்டு என் பதை இது நிரூபித்து விட்டது.

காயல்பட்டினம் நகர மக்கள் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் பரவி இருக்கின்றார்கள். கெய்ரோவிலும் கூட நான் சென்றிருக்கையில், இந்த நகராட்சியின் தலைவரின் மகனார் என்னை வரவேற் றார். இப்படிப்பட்ட சர் வதேச தொடர்புள்ளவர் களை ஓரிடத்தில் சந்திக்கின்ற அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த மாநில பொதுச் செய லாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செய லாளர் காயல் மகபூப் ஆகி யோருக்கு எனது மன மார்ந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

இங்கு அளிக்கப்பட்ட இந்த மகத்தான வரவேற் பின் மூலமாக, கண்ணியத் திற்குரிய காயிதெமில்லத் தின் கொள்கைகளையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் லட்சியங்களையும் இன்னமும் அதிகமாக செயல்படுத்துவதற்கான ஓர் உறுதியை ஏற்கவேண்டிய நிலையை எனக்கு ஏற் படுத்தியுள்ளது.

இந்திய விடுதலைக்குப் பின், முஸ்லிம் லீகை இன்ன மும் ஏன் தொடர்ந்து நடத்துகிறீர்கள் என்று காயிதெமில்லத்திடம் கேட்கப்பட்டபோது, இந்திய முஸ்லிம்களை கண்ணியத்துடன் வாழச் செய்வதற்காகத்தான் முஸ்லிம் லீகை நான் தொடர்ந்து நடத்துகிறேன் என்று காயிதெமில்லத் அவர்கள் சொன்னார்கள். மக்கள் மன்றத்தில் மட்டு மல்லாது நாடாளுமன்றத் திலும், அரசியல் நிர்ணய சபையிலும் அவர்கள் அதை உறுதியுடன் கூறி னார்கள். அதைத்தான் நாங் களும் சொல்கிறோம். அது மட்டுமின்றி, அவர்கள் சொன்ன அந்தப் பாதை யில்தான் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம்.

கண்ணியத்துடன் வாழ் வது என்பதை வெறும் வார்த்தைகளாக மட்டு மின்றி, நாடு தழுவிய அள வில் முஸ்லிம்களுக்கு அதி கமான கல்வி நிலையங்கள், சர்வதேச அளவில் வேலை வாய்ப்புகள், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அணுகுமுறை, அனாதை இல்லங்கள், சமூக சேவை அமைப்புகள் என ஏராளமாக உருவாவ தற்கு நாங்கள் காரணமாக இருந்துள்ளோம்.

இந்த சமுதாயத்தின் பெயரால் சில இயக்கங்கள் ஆங்காங்கே சமுதாய மக் களுக்கு தவறான வழி காட்டுதலைக் காட்டி பிரச்சினையை ஏற்படுத்தி விட்டனர். ஆனால் நாங் களோ அல்லாமா இக்பால் அவர்கள் சொன்னதைப் போன்று, சத்திய இஸ்லா மியப் பாதையில் எங்கள் சமுதாய மக்களை வழி நடத்திக் கொண்டிருக்கி றோம்.

இந்த நாட்டைப் பொருத்த வரையில், முஸ்லிம்களை இரண்டாந் தர பிரஜைகளாக ஆக்க முயற்சித்தபோது, அவர்கள் கண்ணியத்தோடும், மானம் -மரியாதையுடனும் வாழ்ந்து, இந்த நாட்டி லேயே மடிவதற்கு எல்லா வகையான வழிமுறை களையும் நாங்கள் செய்து தந்தோம். வன்முறை வழிகாட்டுதலை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. சாந்தி - சமாதானம் - நல்லொழுக் கம் போன்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை களைப் பின்பற்றித்தான் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயல்பட்டு வருகிறது.

காயிதெமில்லத் காட் டித்தந்த வழியில் உறுதியு டன் நாங்கள் செயல் பட்டுக் கொண்டிருக்கிற காரணத்தினால்தான், 15ஆவது நாடாளுமன்றத்தி லும் நாங்கள் தொடர்ந்து இடம்பெறக்கூடிய வாய்ப் பும், மத்திய அமைச்சரவை யில் அங்கம் வகிக்கின்ற வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இது இந்த சமுதாயமும், நம் நாடும் நமது தாய்ச்சபைக் குக் கொடுத்த அங்கீகாரம்.

இந்திய அரசில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அங்கம் வகிக்கின்ற கார ணத்தினால்தான், முஸ்லிம் களின் கல்வி உதவிக்காக வேண்டி 3000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கி றது. சென்ற வாரம் கூட, பாரதப் பிரதமரை நான் உள்ளிட்ட 12 முஸ்லிம் எம்.பி.க்கள் சந்தித்து, பல கோரிக்கைகளை வலியு றுத்தி, அரை மணி நேரம் கலந்து பேசினோம். நீதியர சர் ரங்கநாத் மிஸ்ரா தலை மையிலான கமிஷன் பரிந் துரைகள் அமுல்படுத்தப் பட வேண்டும். குறிப்பாக, சிறுபான்மையினருக்கு 15 சதவிகிதம் இட ஒதுக்கீடு அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம் என்ற பரிந்துரை உடனடியாக அமுல்படுத் தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளோம்.

இப்படிப்பட்ட இயக் கம் இந்த நாட்டில் வளர வேண்டுமா, வேண்டாமா? இதில் நீங்களெல்லாம் அங் கம் பெற வேண்டுமா, வேண்டாமா? ஆகவேதான் நாடு முழுவதும் இந்த இயக்கத்தை வளர்ப்பதற் காக நானும், எனதருமை நண்பரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களும் அயராது பாடுபடுகிறோம். வரும் ஜனவரி 15ஆம் தேதி, பெங்களுருவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு நடைபெறவிருக் கிறது. அந்த மாநாட்டிற்கு அனைவரும் வருகை தாருங்கள் என அன்போடு அழைக்கிறேன்.

இவ்வாறு இ.அஹ்மது பேசினார்

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது சாஹிபுக்கு எழுச்சிமிகு வரவேற்பு

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இ.யூ. முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது சாஹிபுக்கு எழுச்சிமிகு வரவேற்பு


திருநெல்வேலி, டிச.29-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலை வரும் மத்திய ரயில்வே இணையமைச்சருமான இ.அஹமது காயல்பட்டி னம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று (29.12.09) காலை 7.40மணியளவில் திருநெல் வேலி வருகை தந்தார்.

ரயில் நிலையத்தில் தலைவர் இ.அஹமதுவை தேசிய பொதுச் செயலாள ரும் தமிழ் மாநிலத் தலை வருமான பேராசிரியர் கே.எம். காதர் முகைதீன், மாநில பொதுச்செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், நெல்லை எம்.பி., ராமசுப்பு, மதுரை கோட்ட ரயில்வே மேலா ளர் அகர்வால் சிங், மாநிலச் செயலாளர்கள் காயல் மகபூப், நெல்லை மஜீத், நெல்லை மாவட்ட தலைவர் எம்.எஸ். துராப் ஷா, நெல்லை ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, நெல்லை மாவட்ட செயலாளர்கள் எல்.கே.எஸ். மீரான் மைதீன், டி.ஏ. செய்யது முகம்மது, பொருளாளர் அப்துல் வஹாப், மாவட்ட துணைச் செயலாளர் பாட்டபத்து எம். முகம் மது அலி, கானகத்தி மீரான், மாவட்ட துணைத் தலைவர்கள் வி.எல்.டி. சம்சுல் ஆலம், வி.ஏ. செய்யது பட்டாணி, வீ.மா. திவான் மைதீன், மேலப்பா ளையம் ஜெ. சாகுல் ஹமீது, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வாவு நாசர், எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கீ, காயல்பட்டினம் நகரச் செயலாளர் அமானுல்லா, கடையநல்லூர் நகரத் தலைவர் இ.ஏ. முஹம்மது காசிம், தென்காசி முஹிப்புல்லா ஷா, பத்த மடை சிராஜுதீன், மாவட்ட மணிச்சுடர் செய்தித் தொடர்பாளர் புளியங்குடி ஷாகுல் ஹமீது, அப்துல் காதர், பட்டதாரி அணி செயலா ளர் பாட்ட பத்து மசூது, அப்துர் ரஹ்மான், மாவட்ட தொண்டரணி அமைப் பாளர் இ.ஏ.எஸ். செய்யது இப்ராஹீம், பாம்பு கோவில் நகர தலைவர் முகைதீன் பட்டாணி, காயல்பட்டினம் எஸ்.டி. கமால், கவிஞர் அபுசாலி, அப்துல் வாஹித், பாளை மஹபூப் அலி, நெல்லை எம்.ஏ. முஹம்மது இப்ரா ஹீம் ஆலிம், யு.எம். ரஹ்மத் துல்லா உட்பட ஆயிரக் கணக்கான முஸ்லிம் லீக் தொண்டர்கள் தக்பீர் முழக்கத்துடன் தேசியத் தலைவரை உற்சாகமாக வரவேற்றனர்

அனைவரும் செல்வோம்! அய்மானின் தலைவரை அகமகிழ வழியனுப்புவோம்!!!

அனைவரும் செல்வோம்! அய்மானின் தலைவரை அகமகிழ வழியனுப்புவோம்!!!

கீழக்கரையில் கீர்த்திப் பெற்ற குடும்பத்தில் பிறந்தவர்,பொருளீட்ட வந்தவர்களை எல்லாம் அல்லாஹ்வின் அருளையும் ஈட்ட வைத்த பெருமைக்குரியவர்,அய்மானின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்தவர்களில் ஒருவர்.அனைவர்களின் உள்ளத்திலும் பசுமரத்தாணிபோல் பதிந்திருப்பவர்.

ஆம்! அய்மானின் பெயரைக் கேட்டாலே அடுத்த வினாடி நம் கல்பிலே நிற்பவர் மரியாதைக்குரிய கீழக்கரை டவுன் காஜி .."ஹாதிமுஷ் ஷரீஆ" அல்ஹாஜ் ஏ.எம்.எம்.காதர் பக் ஷ் ஹுஸைன் ஸித்தீகி அவர்கள்தான்!

தனது முப்பத்தைந்தாண்டுகால அமீரகப் பணியில் அசராமல் சமுதாயப் பணியாற்றியவர்.அனைத்து தரப்பினரையும் அரவணைக்கும் ஆற்றல் பெற்றவர்.இவைகளை எல்லாம் பெருமைக்காகச் சொல்லவில்லை.அவரின் ஒப்பற்ற சமுதாய சேவை அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்க்காகவே இவைகளை பதிய வைக்கின்றோம்.காஜி ஏ.எம்.எம்.காதர் பக் ஷ் ஹுஸைன் ஸித்தீகி அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் இனிய நிகழ்ச்சி அமீரக தலைநகர் அபுதாபியில் உள்ள ஹம்தான் ரோட்டில் அமைந்திருக்கு ருசி ரெஸ்டாரண்ட் ஹாலில் நிகழ இருக்கின்றது.நமது அய்மானின் இன்றைய தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீத் அவர்கள் தலைமையில் நடைபெறும்விழாவிற்க்கு நோபிள் மரைன் அல்ஹாஜ் ஷாஹுல் ஹமீத் அவர்கள் முன்னிலை வகிக்க இசைந்துள்ளார்கள்.இவ்விழாவில் பங்கேற்ப்பதற்க்காக அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் எம்.லியாகத் அலி அவர்களும், துபை ஈமான் சங்கத்தின் நிர்வாகிகளும்,சங்கைக்குரிய ஆலிம் பெருந்தகைகளும் மற்றும் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிக்களும் பங்கேற்று உறையாற்ற இருக்கிறார்கள்.."ஹாதிமுஷ் ஷரீஆ" தாயகத்திலும் தன் பணியை தொடர்ந்திட வாழ்த்தி வழியனுப்புவோம் வாரீர்!!

Monday, December 28, 2009

Sunday, December 27, 2009

முஸ்லிம் லீக்

சகோதரர் அப்துல் காதர் அவர்களே..


என்ன பதில் கொடுத்துள்ளIர்கள். வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்லிம் லீக் சார்பாக திமுக கூட்டணியில் அதுவும் திமுக சின்னத்தில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர் இது எல்லோருக்கும் தெரியும்.


அது என்ன இவரை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் திமுக உறுப்பினர் என்று தான் அழைப்பார் அதுதான் உண்மையும் கூட இதில் மாற்ற எப்படி செய்ய முடியும். உங்கள் அறிவுமிக்க கருத்துடன் தனிசின்னத்தில் இந்த தமிழக அரசியலில் புயல், கடல், எழுச்சி என்றும், நாளை அரசியல் என்றால் இந்த தெருவில் வந்து தான் நிர்ணயம் செய்ய வேண்டும் எல்லாம் பகல் கனவு கண்டு இந்த சமுதாயமும் ஏன் நீங்கள் அவர்களுக்கு என்ன செய்தீர்கள் எந்த அளவில் சமுதாயத்திற்கு என்று பலகதவுகளை திட்டு அனைத்தும் முடிய பின் தனிசின்னத்தில் நின்று கடைசியில் என்ன ஆகியது?


சரி திமுக சின்னத்தில் வெற்றி பெற்று சென்றாலும் சமுதாயத்திற்காக குரல் கொடுக்கவும், சமுதாய எதிர்பார்ப்புகளை நாடாளுமன்றத்தில் பதிவு செய்ய முழு உரிமை இந்த முஸ்லிம் லீக் சார்பாக நிறுத்தி பெரும் அளவில் வெற்றி பெற்றவருக்கு திமுக கூட்டணிக்கட்சி என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை இவர் பட்டவர்த்தமாக பத்திரிகை மற்றும் கூட்டத்தில் அறிவித்துவிட்டார்.

நமக்கு தனிசின்னத்தில் நின்று வெற்றி பெற அனைத்து சமுதாய கவலை கொண்டவர்களுக்கு ஆர்வமும் ஆசையும் இல்லை என்று சொல்லவில்லை. இது தற்போது உள்ள சமுதாய மக்கள் தொகையில் அதுவும் பல பிரிவு அமைப்பு, இயக்கம், கழக, ஜமாத் என்று இருக்கும் சமுதாயத்தில் சாதிக்க முடியுமா? என்று அறிவு பு>ர்வமாக கருத்து சொல்லுங்கள் சகோரர்களே. ஏதோ நமக்கு ஒரு வேலை முஸ்லீம் லீக், தமுமுக, அல்லது பல்வேறு சமுதாய அமைப்புளை விமர்சனம் செய்வது என்று இருக்க வேண்டாம்.

அல்லாஹவிற்கு பயந்து திமுகவிற்கு ஜால்ரா தட்டாமல் நம் சமுதாய பற்றி வரும் பிரச்சனையில் குறைந்த பட்சம் தன் சக்திக்கு உட்பட்டு நாடாளுமன்றத்தில் இந்த உறுப்பினராவது எடுத்து பேசுகிறே என்று பெருமையும் சந்தோசமும் படுங்கள். சும்ம மடமையான நினைவில் கிடைக்கும் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் உங்களை போன்றவர்கள் வெட்டி பேச்சும், விவாதமும் செய்வதால் தான் சமுதாயத்தில் கொஞ்சம் கவலையுடன் செயல்படுபவர்களும் வருத்தப்படுகிறார்கள். எனவே உங்களால் முடிந்தால் ஊக்கம் செய்யுங்கள் இல்லை என்றால் சும்ம இருங்கள் ஒருவர் அதுவும் நம் சமுதாய சகோதரர் நம் சமுதாயத்திற்கு குரல் கொடுக்கிறார் என்றால் அல்லாஹுfவிடம் அவருக்காக துஆ செய்யுங்கள். ஒருவேளை இது சம்பந்தமாக எதுவும் பேசாமல் மற்றவர்கள் மேசையை தட்டி கொண்டு இருப்பது போல் செய்ய வேண்டும் என்று முட்டாள் தனமான கருத்தை தயவு செய்து நமது சமுதாய மக்களiடம் எடுத்து வரவேண்டாம்.


திமுக நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லீம் லீக் கூட்டணிகட்சி பெயர் பட்டியலில் முஸ்லீம் உள்ளது அது வேலூர் தொகுதி என்று இன்று கூட திமுக இணையதளத்தில் போட்டு வைத்துள்ளார்கள். வேலுர் திமுக உறுப்பினர் என்று சொல்லவில்லை கூட்டணிகட்சியான முஸ்லிம் லீக் தொகுதி பங்கீடு என்ற வகையில் வேலூர் தொகுதி என்று உள்ளது.


நீங்கள் சொல்லுவது போல் தனிசின்னத்தில் முஸ்லிம் லீக் நிற்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த குழுமத்தில் பதிவு செய்யுங்கள். அப்படி செய்ய என்ன என்ன செய்ய வேண்டும். ஒரு தொகுதியில் அது சட்டமன்றம் அல்லது நாடாளுமன்ற தொகுதியாக இருந்தால் ஒரு முஸ்லிம் கட்சி நின்று எந்த தொகுதியை வெற்றி கொள்ள முடியும் என்று சரியாக கணக்கெடுப்புடன் இந்த குழுமத்தில் வையுங்கள். இந்த சமுதாய கவலை கொண்ட எத்தனையோ நடுநிலையாளர்கள் உள்ளார்கள் அவர்களiன் உங்களiன் கருத்தை ஆய்வுக்கு உட்படுத்துவோம். உங்கள் தனிசின்னத்தில் நிற்கும் ஆவல் எந்த விதத்தில் சாத்தியம் என்று அல்லாஹவிற்கு பயந்து விவாதிப்போம். சும்ம இயக்க வெறி அல்லது தனிமனித வழிபாடு இல்லாமல் உண்மையாக சமுதாய கவலையில் செய்வோம் எனவே நீங்கள் சொல்லுங்கள் எந்த தொகுதியில் முஸ்லிம் சார்பு கட்சி நின்று அதுவும் தனிசின்னத்தில் நின்று வெற்றி பெறலாம். நீங்கள் குறிப்பிடும் தொகுதியில் நம் சமுதாய மக்களiன் மக்கள் தொகை என்ன? மற்ற சகோதர இனமக்களiன் மக்கள் தொகை என்ன? அவர்கள் நம் சமுதாயத்தவர்கள் தேர்தலில் நின்றால் நமக்கு ஒட்டு போட்டு வெற்றி பெற செய்வார்களா? என்று உண்மையான ஆய்வு செய்து இந்த குழுமத்தில் வையுங்கள்.

அன்புடன்
எஸ்.முஹும்மது அலி சார்ஜா
smalli786@gmail.com




2009/12/25 Abdul Kader Silingi

நண்பரே

எல்லாம் சரிதான். வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரை பேச அழைத்த போது சபாநாயகர் என்ன சொல்லி அழைத்தார். தி.மு.க உறுப்பினர் எனறு, முதலில் இந்தக் குறீயீட்டை தடுத்து நிறுத்துங்கள் அப்புறமாக நீங்கள் முஸ்லிம் லீக் ஜிந்தாபாத் சொல்லலாம் முஸ்லீம் லீக் அடையாளத்தில் நின்று வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் முழக்கமிடுங்கள் அப்போது பார்க்கலாம்



2009/12/9 QMF UAE


//வழக்கம் போல இந்திய யூனிய்ன் முஸ்லீம் லீக் ஆப்செண்டா ? //

சகோதரர் அவர்களே முஸ்லிம் லீக் வழக்கம் போல் ஆப்செண்டா? என்று எழுதியிருந்தீர்கள் தயவு செய்து இதை படித்து பாருங்கள். அவர்கள் மக்கள் சபையில் சரியான நேரத்தில் சரியானதை பதிவு செய்து வருகிறார்கள். சுயவிளம்பரம் தேடி சமுதாயத்தின் பெயரில் தொழில் செய்யவில்லை. எனவே முஸ்லிம் லீக் காரர்கள் அமைதியுடன் அல்லாஹுவிடம் துஆ கேட்டு போராடி வருகிறார்கள். அல்லாஹு நமக்கு நிச்சியம் ஒரு நாள் சரியான தீர்பை தருவான். இந்த விசயத்தில் யார் யாரேல்லாம் அவர்களiன் சொந்த பாணியில் போராட்டம் செய்கிறோர்களோ அனைவர்களை அல்லாஹுஅறிவான். உண்மையை அறிவதில் அல்லாஹுவை விட யாரும் சக்தி மிக்கவர்கள் இல்லை.

சும்ம எதற்கு எடுத்தாலும் விமர்சனம் செய்வதை விடுங்கள். நல்லதை ஏவுங்கள்

Saturday, December 26, 2009

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் இணையதளத்தின் வாயிலாக பதிலளிக்கிறார்.

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் இணையதளத்தின் வாயிலாக பதிலளிக்கிறார்.

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)....

முத்துப்பேட்டை அன்பார்ந்த வாசகர்களே,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) .

சமுதாய தலைவர்களிடம் ஒற்றுமையை உருவாக்கும் நோக்கில் தமிழ் முஸ்லிம் தலைவரிகளை நேர்முகம் கானல் பகுதி துவங்கப்பட்டது உலகின் பல்வேறு பகுதிகளில்
வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் தங்கள் மனதில் இருக்கும் கேள்விகளை தங்கள்
சமுதாய தலைவரிடம் கேட்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் தமிழக முஸ்லிம்களின் தேசிய
பிரதிநிதியும்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அரசியல் ஆலோசனைக் குழு
உறுப்பினரும்,இந்தியாவில் வட்டியில்லா வங்கிமுறை வேண்டும் என்று முதன்
முதலில் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தவருமான வேலூர் பாராளுமன்ற
உறுப்பினர் அறிவுச் சுடர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள்
இணையதளத்தின் வாயிலாக பதிலளிக்கிறார்.

உங்களுடைய கேள்விகள் பாராளுமன்றத்தில் ஒலிக்கவேண்டுமா!!!!!

உங்களுடைய சார்ந்த சமுதாய பிரச்சினை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமா ??

வாசகர்களே ஆயத்தமாகுங்கள், உங்கள் கேள்விகளை ask@muthupet.org என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

www.muthupet.org

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது - தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் டிசம்பர் 29-ல் காயல்பட்டினம் வருகை தருகின்றனர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது - தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் டிசம்பர் 29-ல் காயல்பட்டினம் வருகை தருகின்றனர்

பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது


சென்னை, டிச.24-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய ரயில்வே துணை இணைய மைச்சருமான இ.அஹமது சாஹிப், தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர் வரும் டிசம்பர் 29-ம் தேதி செவ்வாய்கிழமை காயல் பட்டினம் வருகை தரு கின்றனர். அவர்களுக்கான வரவேற்பு ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடை பெறுகின்றன.

நெல்லை ரயில் நிலையத்தில் வரவேற்பு

டிசம்பர் 29.ம்தேதி செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு குருவாய+ர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் வருகை தரும் தலைவர்க ளுக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

மாநில பொதுச் செய லாளர் கே.ஏ.எம். முஹம் மது அப+பக்கர் தலைமை யில் நடைபெறும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர்கள் நெல்லை மஜீத், காயல் மஹப+ப், நெல்லை மாவட் டத் தலைவர் தென்காசி எம்.எஸ். துராப்ஷா, செய லாளர்கள் மேலப்பாளை யம் எல்.கே.எஸ். மீரான் மைதீன், கடையநல்லூர் டி.ஏ. செய்யது முஹம்மது, பொருளாளர் புளியங்குடி அப்துல் வஹாப், மாநில ஆலிம்கள் அணி அமைப் பாளர் ஹாமித் பக்ரீ, ஷிபா பாலிகிளினிக் அதிபர் டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, தூத்துக் குடி மாவட்டத் தலைவர் ஹாஜி குலாம் ஹசன், துணைத் தலைவர் எம். அப்துல் கனி, செயலாளர் வாவு முஹம்மது நாசர், தூத்துக்குடி மாநகர தலைவர் ஷிஹாபுதீன், நெல்லை மண்டல இளைஞர் அணி அமைப் பாளர் உவைஸ் ஆகியோர் முன்னிலையில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடை பெறுகிறது.

பொதுமக்கள்

வரவேற்பு

காலை 9 மணிக்கு காயல்பட்டினம் ரயில் நிலையத்தை தலைவர்கள் பார்வையிட்டு குறைபாடுக ளை கேட்டறிகின்றனர். காலை 10 மணிக்கு ஜலா லியா திருமண மண்டபத் தில் காயல்பட்டினம் ஊர் மக்கள் சார்பில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்படு கிறது.

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைத் தலைவர் ஹாஜி எம்.எம். உவைஸ் தலைமை யில் நடைபெறும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நகரின் அனைத்து ஜமா அத், அனைத்து பள்ளி வாசல்கள், அனைத்து அரபிக் கல்லூரிகள், அனைத்து கல்வி நிலை யங்கள் மற்றும் அனைத்து பொதுநல ஸ்தபானங் களின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பங்கேற் கின்றனர்.

பிற்பகல் 12.30 மணிக்கு காயல்பட்டினம் நகராட் சித் தலைவர் வாவு எஸ். சையது அப்துர் ரஹ்மான் இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. பின்னர் பேங்காக் காயிதெ மில்லத் அமைப்பாளர் வாவு எம்.எம். சம்சுதீன் இல்லத்தில் தங்குகிறார்.

கே.எம்.டி. மருத்துவமனை

விழா

மாலை 4.30 மணிக்கு பேங்காக் காயல் நற்பணி மன்றம் சார்பில் காயல் பட்டினம் மருத்துவ அறக் கட்டளை மருத்துவ மனைக்கு கட்டிக் கொடுக் கப்பட்டுள்ள லேபர் பிளாக்கை பேராசிரியர் முன்னிலையில் இ.அஹ மது சாஹிப் திறந்து வைக் கிறார்.

இவ் விழாவுக்கான ஏற் பாடுகளை கே.எம்.டி. மருத்துவமனை நிர்வாகி கள் செய்து வருகின்றனர்.

மாலை 5 மணிக்கு முஸ்லிம் லீகின் மூத்த தலை வரும், நகரின் முக்கியப் பிரமுகருமான ஹாஜி எஸ்.டி. வெள்ளைத் தம்பி இல்லத் திருமண வரவேற் பில் தலைவர்கள் பங்கு பெறுகின்றனர்.

மாலை 5.30 மணிக்கு வள்ளல் சீதக்காதி திடலில் நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் பச்சிளம் பிறைக்கொடி ஏற்றுவிழா நடைபெறு கிறது.

மேலப்பாளையம்

வரவேற்பு

மாலை 6.30 மணிக்கு மேலப்பாளையத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7.50 மணிக்கு திருநெல் வேலியிலிருந்து புறப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தலைவர்கள் சென்னை திரும்புகின்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை காயல்பட்டினம் நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம். பாசுல் அஸ்ஹப் ஆலோசனையின் பேரில் நகரச் செயலாளர் பி.எம்.எஸ். அமானுல்லா, இப்ராஹீம் மக்கீ, மன்னர் பாதுல் அஸ்ஹப், அப்துல் வாஹித், எஎல்.எஸ். அபு சாலிஹ், ஏ.கே. முஹம்மது சுலைமான், மஹ்மூதல் ஹசன், சுஹைல் உள்ளிட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி, முஸ்லிம் மாணவர் பேரவை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைகள் சட்டங்கள் மூலம் அமல் படுத்தப்பட வேண்டும்

ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைகள் சட்டங்கள் மூலம் அமல் படுத்தப்பட வேண்டும்
பிரதமருக்கு பேராசிரியர் கே.எம்.கே. கோரிக்கை


சென்னை, டிச. 24:

சிறுபான்மையினர் குறித்து ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் செய்துள்ள பரிந் துரைகளை சட்டங்கள் மூலம் அமல் படுத்த வேண் டும் என்று சிறுபான்மை யின மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வேண்டுகோள் விடுத்து பிரதமர் மன்மோ கன்சிங்கிற்கு இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிர தமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது:

மத மற்றும் மொழி சிறுபான்மையினரின் மேம்பாட்டிற்கு ஒரு கமிஷன் அமைக்கப்படும் என்றும் அதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யின் தேசிய செயல் திட்டத் தில் சேர்த்ததற்கும் அதற் காக நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனை அமைத் ததற்கும் அவர் அறிக் கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வோம் என்று கூறி, தாக்கல் செய்ததற்கும், இந்தியாவின் சிறுபான்மை சமூகம் தங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறது.

உண்மையிலேயே சுதந்திரம் அடைந்தபிறகு சிறுபான்மையின மக் களுக்கு இது ஒரு திருப்பு முனையாகும். அதற்கு சிறுபான்மையின மக்கள் நன்றி தெரிவிக்கிறார்கள். தாங்கள் ஐ.நா. சபை மூலம் இந்தியா அமைதி, ஒற் றுமை, சக வாழ்வு மற்றும் மேம்பாடு இவற்றின் மூலம் ஒரு புதிய உலகை ஏற்படுத் தும் என்று உலகத்திற்கு தாங்கள் உணர்த்தியதை நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது எனது பாராளு மன்ற உரைகளில் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.தாங்கள் கூறியபடி அந்த நான்கு தூண்களும்தான் புதிய இந் தியாவை உருவாக்கும் ஊற் றுக் கண்களாகும். தங்க ளது பொன்மயமான கொள்கைகளை மிஸ்ரா கமிஷன் தனது ஆக்கப் ப+ர்வமான அறிக்கையில் வலியுறுத்தியிருக்கிறது.

நீதிபதி மிஸ்ரா கமிஷ னின் பரிந்துரைகள் சட்டத் தின் மூலம் அமலாக்கப் படும் பிரகாசமான நாளை இந்திய சிறுபான்மையின சமூகத்தினர் பார்க்க ஆவ லுடன் காத்திருக்கிறார் கள். அந்த நாள் விரைவில் வந்திட நாங்கள் ஆவலு டன்எதிர்பார்த்துக் கொண் டிருக்கிறோம்.

இவ்வாறு பேராசிரியர் தனது கடிதத்தில் குறிப்பிட் டிருக்கிறார்.

அனைத்துக் கட்சி முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதமருடன் சந்திப்பு உரிய நடவடிக்கை எடுக்க மன்மோகன்சிங் உறுதியளித்திருப்பதாக இ.அஹமது தகவல்

அனைத்துக் கட்சி முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதமருடன் சந்திப்பு உரிய நடவடிக்கை எடுக்க மன்மோகன்சிங் உறுதியளித்திருப்பதாக இ.அஹமது தகவல்


புதுடெல்லி, டிச.24-

நாடு முழுவதும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும், நீண்ட காலமாக சிறையில் உள்ளோர் விடு விக்கப்பட வேண்டும் உள் ளிட்ட 14 கோரிக்கைகளு டன் அனைத்துக் கட்சி முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்தனர்.

அக்கோரிக்கைகள் பரி சீலிக்கப்பட்டு உரிய நட வடிக்கைகள் எடுக்க மன் மோகன்சிங் உறுதியளித்த தாக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், ரயில்வே இணையமைச்சருமான இ. அஹமது செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அனைத் துக் கட்சி முஸ்லிம் உறுப் பினர்களான மத்திய இணையமைச்சர் இ. அஹமது, நாடாளு மன்ற மேலவைத் தலைவர் ரஹ் மான்கான், திருமதி மொஹ்சினா கித்வாய், மஹ்மூத் மதனீ, தாரிக் அன்வர், அஸாஸ{தீன் உவைஸி, முஹம்மது அதீப், அஹமது சயீது மலேகாபாடி, ஷபீர் அலி, டாக்டர் இஜாஸ் அலி, ஷபீகுர் ரஹ்மான் பர்க், முஹம்மது ஷபி ஆகிய எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து 14 முக்கிய பிரச் சினைகளை நிறை வேற்றும்படி கோரிக்கை விடுத்தார்கள்.

அவை வருமாறு-

1. வக்ஃபுசொத்துக்கள் தொடர்பாக ஜே.பி.சி. அறிக்கையை நிறைவேற்ற வும், வக்ஃபு சட்டத்தை திருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. ஹஜ் பயணம் தொடர்பாக போதிய சீர் தி ருத்தங்களை கொண்டு வர ஏற்கனவே ஒரு அமைச் சரவை குழுபரிந்துரை செய்தது. ஆனால், அவை நிறைவேற்றப்படவில்லை.

3. முஸ்லிம் சிறு பான்மையினருக்கான இடஒதுக்கீடு தொடர் பான கோரிக்கை நீண்ட நாளாக நிலுவையில் உள் ளது. அவை தொடர்பாக காங்கிரஸ் தேர்தல் அறிக் கையில் குறிப்பிடப் பட் டுள்ளது. கேரளா, தமிழ் நாடு, கர்நாடக மாநிலங் களில் முஸ்லிம் களுக்கு அனுமதிக்கப்பட் டிருக் கும் ஒதுக்கீட்டின் அடிப் படையில் இட ஒதுக்கீடு பிரச்சினை தீர்க்க நட வடிக்கை எடுக்க வேண் டும்.

4. ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைகளை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

5. சச்சார் கமிட்டி அறிக் கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் தாம தம் ஏற்பட்டுள்ளது. பரிந் துரைகள் அமுல்படுத்து வதை கண்காணிக்க ஒரு மேற்பார்வை குழுவை அமைக்க வேண்டும்.

6. முஸ்லிம் சிறு பான்மையினருக்கும் மற்றவர்களுக்கும் கல்வி வழங்குவதில் மத்திய அரசு தீவிரமாக இருந்தாலும் சிறுபான்மை கல்வி நிறு வனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதில் நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளன. அங்கீகாரம் வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும்.

7. இஸ்லாமிய வங்கி முறையை அமுல்படுத்த நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டுள் ளது. அந்த முறை வங்கித் துறைக்கு பெரிய முத லீட்டையும் முஸ்லிம்கள் மத்தியில் சேமிப்பு பழக் கத்தையும் ஏற்படுத்தும்.

8. பிரதமரால் அறிவிக் கப்பட்ட 15 அம்ச திட்டம் நிறைவேறுவதை கண் காணிப்பது வலுப்படுத்தப் பட வேண்டும்.

9. பயங்கரவாத தொடர்பு ஐயப்பாடு கார ணமாக ஏராளமானவர்கள் எந்தவித விசாரணையு மின்றி நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட் டிருக்கிறார்கள். அவர்கள் மீதுள்ள வழக்குகள் முடிக்கப்படவோ அல்லது அவர்கள் விடுதலை செய் யப்படவோ வேண்டும்.

10. உத்தேசிக்கப்பட் டுள்ள மதரஸா வாரியத்தை அமைப்பதற்கு முன் முஸ்லிம் உலமாக்கள், மார்க்க அறிஞர்கள், தலை வர்கள் ஆகியோரை அரசு கலந்தாலோசிக்க வேண்டும்.

11. முஸ்லிம்கள் தொடர்பான அமைப்பு களுக்கு வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதில் கட்டுப்பாடுகளும், தாமதமும் ஏற்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும்.

12. மத வன்முறை தடுப்புச் சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.

13. மற்ற தேசிய கமிஷன்களுக்கு கொடுக் கப்பட்டிருக்கும் அரசியல் சட்ட அந்தஸ்தை சிறு பான்மை கமிஷனுக்கும் கொடுக்க வேண்டும்.

14. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் ஜாமிஆ மில்லியா இஸ் லாமிய பல்கலைக்கழகங் களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க வேண் டும்.

மேற்கண்ட கோரிக் கைகளை விரைவில் நிறை வேற்றித் தரும்படி வேண்டு கோள் விடுத்த எம்.பி.க்கள் சிறுபான்மை விவகாரத் துக்காக தனி அமைச்சரகம் அமைத்ததற்கும் நன்றி தெரிவித்தார்கள்.

பிரதமர் உறுதி

மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மன் மோகன்சிங் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து போதிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பது குறித்து முடிவு செய்ய தேசிய அளவில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண் டியுள்ளது. இதுகுறித்து விரைவில் நல்ல முடிவு காணப்படும் என்று தெரி வித்தார்.

வக்ஃபு சொத்துக்களை மேம்படுத்துவது குறித்தும் அது தொடர்பாக சட்டம் இயற்றுவது குறித்தும் பிரதமர் குறிப்பாக தனது விருப்பத்தை வெளியிட் டார். அந்த சட்டம் அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் கொண்டு வரப்படும் என் றார்.

ஹஜ் பயணம் தொடர் பான சீர்திருத்தங்கள் விரைவில் அமல்படுத்தப் படும் என்றும் பிரதமர் கூறினார்.

வட்டியில்லாத வங்கித் தொழில் துறை குறித்து நிதியமைச்சருடன் கலந்தாலோசிப்பதாக பிரதமர் அறிவித்தார். நீண்டகாலமாக சட்ட விரோதமாக சிறையில் வாடுபவர்கள் குறித்து மிக விரைவில் நீதி நிலை நாட்டப்படும் என்றும் பிரதமர் சொன்னார்.

சிறுபான்மை விவகாரம் கண்காணிக்க நியமிக்கப் பட்டிருக்கும் நிலைக்குழு தலைவர்களுடன் பேசி கண்காணிப்பு வேலை களை வலுப்படுத்தும் படியும் தீவிரப்படுத்தப் படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினைகளை தனது கவனத்திற்கு கொண்டு வந்த தூதுக்குழு உறுப் பினர்களுக்கு பிரதமர் நன்றியை தெரிவித்துக் கொண்டதாகவும் மத்திய ரயில் இணையமைச்சரும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவருமான இ.அஹமது செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு

திருநெல்வேலியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு


தமிழ் நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் அவர்கள் மாவட்ட முஸ்லிம் லீக் தலைமை நிலையத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்அப்போது அவர் கூறியதாவது


வருகிற 19 ஆம் தேதி நடைபெறஇருக்கிற வந்தவாசி மற்றும் திருச் செந்தார் தொகுதிகளில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்குக்கூட்டணி வேட்பாளர்களான தம்பிகள் கமலக்கண்ணன், அனிதா ராதா கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் வாக்குகள் கேட்டுவிட்டு இன்று நெல்லையில் பத்திரிக்கையாளர் முன் நிற்கிறேன். நாங்கள் பிரச்சாரம் செய்த வகையில் பார்க்கும் போது தி;.மு.கழக வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெறுவர்கள் என்று அறிவித்துக் கொள்கிறேன்.

நான் மட்டுமல்லாமல் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் சட்டமன்ற உறுப்பினர்களான அப்துல் பாசித்,கலீலுர் ரஹ்மான் போன்றவர்களும் முஸ்லிம் லீக் இயக்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட இயக்க முன்னோடிகளும் மாவட்ட நிர்வாகிகளும் இதற்காக அரும் பணியாற்றி வருகிறார்கள்.

வாக்காளர்கள் தி;மு;கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் நல்லாட்சியை ஏற்றுக் கொண்டு, கலைஞரின் சாதனைகளைப் புரிந்து கொண்டு தி.மு.க.விற்கே வாக்களிப்பார்கள்.அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தத் தேர்தலில் நாட்டுமக்கள், சிறுபான்மையினர் அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் கலைஞரை பல்வேறு காரணங்களுக்காக நன்றியுடன் ஆதரிப்பார்கள். அதற்குக் காரணம் தமிழ் நாட்டில் முஸ்லிம் களுக்கு வழங்கப்படுகிற 3.5 சதவீத இடஒதுக்கீடுஅதற்கடுத்து நமது நீண்டநாள் கோரிக்கையான உலமாக்கள் நல வாரியம் அமைத்துக் கொடுத்தது சிறுபான்மை முஸ்லிம் சமுதாய மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவது போன்ற பல்வேறு காரியங்களில் அன்றாடம் தம்மை ஈடுபடுத்தி அர்ப்பணிப்பு உயர்வுடன் செயல் பட்டு வருவதாகும்.

தமிழகத்தில் சலுகைகள் வழங்குவது போல் அகில இந்திய அளவிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடுகள் மற்றும் சலுகைகள் கொடுக்கப்படவேண்டும் எனக் குரல் கொடுத்துவருபவர் கலைஞர் தான்.அதுவும் அவர்களது தீர்மான வடிவிலே. பொதுக்குழு செயற்குழு தீர்மான வடிவிலே.

சிறுபான்மை இன மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது மிக அவசியம் என்பதை முதல்வர் கலைஞர் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்.அதை எங்களைப் பொருத்தவரை மிகப் பெரிய ஆதரவு சக்தியாகக் கருதுகிறோம். நடைபெற்று வருகிற நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலே பாரதப் பிரதமர் அவர்கள் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிடும் நீதியரசர் ரங்க நாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகள் அவையில் வைக்கப்படும் நிலைமை வருவதற்கு முன் வந்தவராக அறிவிப்புச் செய்திருக்கிறார். எங்களுக்காக சிபாரிசு செய்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான.;

கல்வி வேலைவாய்ப்பு எங்களுக்கு கிடைக்க .பாராளுமன்றத்திலே தி.மு.க உறுப்பினர்கள் எங்களுக்காக குரல் கொடுத்தார்கள். தேர்தல் அறிக்கையிலே சொன்னார்கள். இதற்காக நாங்கள் நன்றி சொல்கிறோம். நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். ரங்க நாத் மஸ்ரா கமிஷன் சிபாரிசுகள் கூடிய விரைவில் சட்டமாக்கப்படும் நிலைமை வரவேண்டுமென விரும்புகிறோம். பிரதமரே அதை அறிவிக்கிறார். அதை செய்யத் தூண்டியது கலைஞர் தான்.

இரண்டாவதாக தமிழ்நாட்டிலுள்ள மற்ற சமுக மக்களும் கலைஞரை ஏற்று ஆதரிக்கும் தன்மையிலே வாழ்த்தவும் கடமைப்பட்டுள்ளார்கள்.;. இதை உயர்வ நவிற்சியாகவோ புகழுக்காகவோ நான் சொல்லவில்லை. தமிழக வரலாற்றில் பெரியார் அண்ணா காமராஜர் வரிசையில் இன்று இருக்கிற ஒரே தலைவர் கலைஞர்; என்று சொல்வது அரசியல் பார்வை. சமூக நல்லிணக்கத்தை பேணக்கூடிய அளவில் கலைஞரைப் அறிவுப்ப+ர்வமாக பார்க்கக்கூடியவர்கள்

தொல்;காப்பியர் திருமூலர் வள்ளலார் திருவள்ளுவர் போன்றவர்கள் வரிசையில் வைத்து வாழ்த்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள். கதைகள், கவிதைகள் கட்டுரைகள் அரசியல் நடவடிக்கைகள், ஆட்சி, திட்டங்கள் ஆகிய அனைத்தும் அனைத்தும் அவரிடத்தில் இயற்கையாகவே அமைந்துள்ளன.

.மூன்றாவதாக தமிழக அரசியல் அரங்கில் அவருக்கு ஈடாக இணையாக, ஒப்பாக, நிகராக, வேறு அரசியல் தலைவர் யாரும் இல்லை. இது தெளிவான உண்மை. ஆக அறிவில் சிறந்த அனுபவத்தில் முதிர்ந்த அரசில் பகுத்தறிவு சிந்தனையாளர் அவர் நீடு வாழ வேண்டு மென மக்கள் யாவரும் அவரை வாழ்த்துகிறார்கள்.

அண்மையில் மத்திய அரசு ஆந்திர மாநிலத்தைப்பிரிக்கும் அளவிற்கு கொள்கை முடிவொன்றை அறிவித்துள்ளது. இது சரியானதா? இப்படிப்பட்ட மிகப் பெரிய அரசியல் முடிவுகள் எட்டப்படும் போது கூட்டணி கட்சித்தலைவர்களிடம் ஆலோசனை பெறப்பட்டதா? என்று கூட அறிவிக்கப்படவில்லை. யாரோ உண்ணாவிரதம் இருக்கிறார்கள் அல்லது இருப்பார்கள் என்று மிரட்டினால் மத்திய அரசு அடங்கிப்போவது எந்த விதத்தில் நியாயம்? இப்படி ஆளாளுக்கு இந்தியாவைக்கூறு போட்டால் நாடு என்னாகும்?

உண்ணாவிரதம் காந்திய பாதை தான்.அதில் சந்தேகம் வேண்டாம். ஆனால் உண்ணாவிரதத்தைக் கையில் எடுத்தவர்கள் காரணத்தால் இருநூற்றுக்கும் அதிகமான பொதுச் சொத்துக்கள் வண்டி வாகனங்கள் தீ வைத்துக் கொழுத்தப்பட்டதே, இதுவா காந்திய வழி?

இந்த நாட்டில் ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும் இது போன்ற மிரட்டல் அரசியல் நாடகங்கள், உண்ணாவிரதங்கள் நடத்தப்படக்கூடாது என்று தடுக்கப்படவேண்டும். இல்லையென்றால் நாட்டின் ஸ்திரத்தன்மையே பாதிக்கும் அபாயம் வந்து விடும்.

ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைப்பது சம்பந்தமாக கூட்டணித் தலைவர்களிடம் இதற்கான ஆலோசனை பெறப்பட்டதாகவோ அல்லது குறிப்பாக தமிழக முதல்வர் கலைஞர் அவர்களிடம் யோசனை கோரப்பட்டதாவோ தெரிய வில்லை.

இதுவெல்லாம் சாதாரணப் பிரச்னையில்லையே.இப்படி ஆளாளுக்கு தனி மாநிலம் கேட்டால் நாடு என்னாவது? வடமாநிலங்களில் கூர்க்காலாந்து கேட்கிறான்,விதர்பா கேட்கிறான்.இப்படி தமிழ் நாட்டை யாரும் கேட்க அனுமதிக்க முடியாது மொழி,நெறி,உணர்வு மனித நேசப்பண்பில் ஒன்றாக இருப்பவர்கள் தமிழக மக்கள். தமிழகத்தைப்பிரிக்க வேண்டுமென யாராவது கூறினால் அது அரசியல் கூத்தாகத் தான் இருக்க முடியும். அது தமிழகத்தின் தனித்தன்மையை சிதைப்பதற்கு சமமானது. தமிழக மக்கள் இதை ஏற்க மாட்டார்கள். தமிழக அரசியல் தலைவர்கள் இதில் ஒன்று பட்டு நிற்கிறார்கள்.

டாக்டர் ராமதாஸ் நாங்கள் கேட்கவில்லை என்று கூறி விட்டது நிம்மதி.தான். அவர்களுக்கு அதைவிட முக்கியபணிகள் உள்ளதாகச் சொல்லி இருப்பது சரி தான்.

மத்திய அரசு ஸ்டேட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ரீபார்ம்ஸ் கமிஷன் உருவாக்க வேண்டும்.பிரச்னைக்குரிய மாநிலங்களில் புதிய மாவட்டங்களை உருவாக்கி நிர்வாகத்தில் திறமை காட்டுவதன் மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.

தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் இம்மாதம் 25,26,27 ஆம் தேதிகளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலுள்ள 300 இளைஞர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது.முஸ்லிம் லீக் வரலாறு,இந்திய அரசியல் சட்டம்,மத நல்லிணக்கம்,தீவிர வாத ஒழிப்பு குறித்து பயிற்சி அளிக்க உள்ளோம்.

கர்நாடக மாநிலம் பெங்கள+ரில் 2010 ஜனவரி மாதம் 15,16 தேதிகளில் தேசிய பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது.நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் கடைய நல்லூரில் கலந்தர் மஸ்தான் தெரு அட்டைக்குளம் தெரு பெரிய தெரு புதுத் தெரு பரசு ராமபுரம் தெரு போன்ற தெருக்களில் ஐநூற்றிற்கும் மேற்பட்ட முஸ்லிம் வீடுகளுக்கு கணக்கற்ற முறையில் வீட்டுவரி விதிக்கப்பட்டுள்ளது. நகராட்சித்தரப்பில் கேட்டால் சரியான பதில் தருவது இல்லை.இது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும்.

திருமணப்பதிவ சட்டத்தை வரவேற்கிறோம். அதே நேரத்தில் அவரவர் மத ஆச்சாரப்படி நடக்கும் திருமணங்களை பதிவாளர்கள் எவ்விதமான திருத்தமும் இன்றி அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மாநிலத் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது திருநெல்வேலி மாவட்டத் தலைவர் துராப்ஷா, மாநில அமைப்புச் செலாளர் அப்துல் மஜீத் மாவட்டச் செயலாளாரும் மாநில மாணவர் பேரவை அமைப்பாளருமான எல்.கே.எஸ்.மீரான் முகைதீன், மாவட்டச் செயலாளர் செய்யது முஹம்மது,ஷிபா குரூப் நிர்வாக இயக்குநர் டாக்டர் முஹம்மது ஷாபி,தென்காசி முஹிப்பில்லாஷா,பேட்டை திவான் முகைதீன், கடையநல்லூர் ஹபீபுல்லா,மேலப்பாளையம் மாமன்ற உறுப்பினர் ஹாபிஸ்.முகைதீன் அப்துல் காதர் மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மஅலி, பேட்டை பீர் முகைதீன் மேலப்பாளையம் பீடித் தொழிலாளர் அணித் தலைவர் மில்லத் காஜா முகைதீன்,புளியங்குடி காதர் முகைதீன் ,எம்.ஜி.காஜா முகைதீன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

பெங்களுரு தேசிய பிரதிநிதிகள் மாநாட்டுக்கு தமிழகத்தில் இருந்து ரயில் பயணம் ஏற்பாடு மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் அறிக்கை

பெங்களுரு தேசிய பிரதிநிதிகள் மாநாட்டுக்கு தமிழகத்தில் இருந்து ரயில் பயணம் ஏற்பாடு மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் அறிக்கை

http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=813

வருகிற ஜனவரி 15, 16 தேதிகளில் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களளுருவில் நடைபெறும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பிரதிநிதி கள் மாநாட்டில் கலந்து கொள்ளும், தமிழகப் பிரதிநிதிகள் பெங்களுருவுக்கு பயணிக்க ரயில்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரத்தை மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அளித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பிரதி நிதிகள் மாநாடு எதிர்வரும் 2010 ஜனவரி 15, 16 வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்கள் பெங்களூரு நகரில் புதிய ஈத்கா வளாகம் டேனரி சாலையில் அமைந் துள்ள சாதாப் அரங்கில் நடைபெறுகின்றது.

இந்திய இஸ்லாமியர்கள் அரசியலில் விழிப்புணர்வடைந்து கல்வி மற்றும் பொருளாதார‌த்துறைகளில் முன்னேற்றம் காண இம்மாநாடு வழி வகை ஏற்படுத்த இருக்கின்றது. இதற்கான அனைத்து ஏற்பாடு களையும் தேசியத் தலைவர் இ. அஹமது சாஹிப், தேசிய பொதுச் செயலாளர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் ஆகியோர் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றனர்.

இம்மாநாடு தாய்ச்சபை வர லாற்றில் புதிய சரித்திரம் படைக்கும்.

தமிழகத்திலிருந்து தேசிய மாநாட்டில் பிரதிநிதிகளாக பங்கேற்க விரும்புபவர்கள் மாநாடு பிரதிநிதி கட்டணம் போக்குவரத்து (ரயில்), உணவு மற்றும் தங்கும் வசதிகளுக்காக கட்டண மாக ரூ.750 மட்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள விபரப்படி, பெங்களுருவுக்கு தூத்துக்குடி, மயிலாடுதுறை, கோயமுத்தூர் மற்றும் சென்னை ஆகிய நகரங்களிலிருந்து புறப்படும் ரயில் வண்டியில் சென்று வர ஏற்பாடு செய்து வருகின்றோம்.

இவ் வழித்தடங்களில் உள்ள வர்கள் அந்தந்த ஊரிலிருந்தே பயணிக்கலாம். இப்புகை வண்டிகள் செல்லாத மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு வந்து புறப்பட வேண்டும்.

ஏற்பாடு செய்ய இருக்கும் ரயில்களின் விபரம்

1. மைசூர் விரைவு வண்டி (எண்.6731) - தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல்

2. மைசூர் விரைவு வண்டி (எண்.6231) - மயிலாடுதுறை, தஞ்சாவூர், கரூர், ஈரோடு, சேலம்

3. பெங்களுர் மெயில் (எண்.2657) - சென்னை, காட்பாடி, ஜோலார் பேட்டை

4. கோவை, பெங்களளுர் வண்டி (எண்.6525) - கோய முத்தூர், திருப்பூர்

அனைத்து மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திலிருந்து தேசிய மாநாட்டில் பங்கேற்க விரும்பும் பிரதிநிதிகளின் விபரத்தை அடியிற்கண்ட மாதிரி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து ரூ.750- செலுத்தி 31-12-2009க்குள் தலைமை நிலையத்திற்கு அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தமிழ் நாடு மாநில பொதுச் செய லாளர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

செய்தி : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

பள்ளப்பட்டி ஹாஜி வி.எம்.அப்துல் ஜப்பார் மரணம்: முஸ்லிம் லீக் இரங்கல்

பள்ளப்பட்டி ஹாஜி வி.எம்.அப்துல் ஜப்பார் மரணம்: முஸ்லிம் லீக் இரங்கல்



இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் பள்ளப்பட்டி ஹாஜி வி.எம். அப்துல் ஜப்பார் நேற்று (25-12-09) அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு இரங் கல் தெரிவித்து வழுத்தூ ரில் நடைபெற்ற முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டத் தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

அதில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது-

பள்ளப்பட்டி ஹாஜி வி.எம்.அப்துல் ஜப்பார் - தமிழக சட்டமன்ற முன் னாள் உறுப்பினர்:

சமுதாயத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் முக்கியப் பெருந் தகையுமான ஹாஜி வி.எம். அப்துல் ஜப்பார், 25.12.2009 பிற்பகல் 2.30 மணிக்கு காலமானார். தனது 84 வயதிலும், சமுதாய நல னில் பெரும் அக்கறை கொண்டவராகத் திகழ்ந்த அவர், 1971-76 ஆண்டு களில் அரவக்குறிச்சி சட்ட மன்றத் தொகுதியில், இந் திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டு, திறம்பட செயல்பட்டவர்.

அவரது காலத்தில் தான், உருது பேசுவோர் உள்ளிட்ட முஸ்லிம்கள் அனைவரும் பிற்பட் டோர் பட்டியலில் இடம் பெற்றனர். இதற்காக கடுமையாக உழைத்தவர் அவர்.

பள்ளப்பட்டி பேரூ ராட்சி மன்றத்தின் தலைவ ராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பணி யாற்றியவர். பள்ளப் பட்டி முஸ்லிம் கல்விச் சங்கம், பள்ளப்பட்டி பாவா ஃபக்ருத்தீன் தர்ஹா மற்றும் பள்ளி வாசல், சென்னை காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி உள் ளிட்ட பல அமைப்பு களில் பொறுப்புகளை ஏற்று, சிறப்பாக பணி செய்தவர்.

அன்னாரின் ஜனாஸா இன்று பிற்பகல் பள்ளப் பட்டியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவ ருக்கு மனைவியும், நான்கு ஆண் மக்களும் உள்ளனர். ஒரு மகள் காலமாகி விட் டார். இவரது மறைவு சமுதாயத்திற்கும், தாய்ச் சபைக்கும் பேரிழப்பாகும்.

எல்லாம் வல்ல இறை வன் அன்னாரின் பிழைக ளைப் பொறுத்து, நற்செ யல்களை பரிப+ரணமாக அங்கீகரித்து, மேலான சுவனபதியை வழங்க இச் செயற்குழு பிரார்த்திப் பதோடு, அன்னாரின் பிரி வால் வாடும் அவரது குடும் பத்தாருக்கும், பள்ளப் பட்டி நகர ஜமா அத்தா ருக்கும் இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறது

அரசு யுனானி மருத்துவக் கல்லூரி மாணவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்

அரசு யுனானி மருத்துவக் கல்லூரி மாணவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்

மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு பேராசிரியர் கே.எம்.கே. கோரிக்கை


சென்னை, டிச. 26-

சென்னையில் உள்ள தமிழக அரசு யுனானி மருத்துவக் கல்லூரி மாண வர்களை 2010 பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆஸாதுக்கு வேண்டுகோள் விடுத்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செய லாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு யுனானி மருத்துவக் கல்லூரியில் 2008ம் ஆண்டு சேர்ந்து படித்து வருகிற 21 மாண வர்கள் 2010 பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் தேர்வை எழுத முடியாத படி மத்திய ஆயுர்வேத யுனானி சித்த வைத்தியத் துறை அனுமதி மறுத்துள் ளது. இதன் காரணமாக அந்த மாணவர்கள் அதிர்ச் சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் நான் தங் களை விரும்பிக் கேட்டுக் கொள்வது என்னவென் றால், தாங்கள் அந்தத் துறையில் தலையிட்டு 2008ம் ஆண்டில் சேர்ந்து படித்துவரும் 21 மாணவர் களை 2010 பிப்ரவரியில் நடக்க இருக்கும் தேர்வு களை எழுதி அவர்களது பி.யு.எம்.எஸ்., கல்வியை முற்றுப் பெற செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்த துறை சென்னை யுனானி வைத்தி யக் கல்லூரியில் சில குறைபாடுகளை சுட்டிக் காட்டி அந்த மாணவர்கள் தேர்வு எழுத முடியாதபடி அனுமதி மறுத்துள்ளது. அந்த உத்தரவு கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், யு.ஜி. படிப்புக் காக தமிழக அரசு தேர்வுக் குழு ஆகஸ்ட் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளிலேயே அந்த மாணவர்களை இந் திய முறை வைத்தியக் கல் லூரியில் மேற்படிப்புக்குச் சேர தேர்வு செய்துவிட்டது.

அரசு யுனானி வைத்தி யக்கல்லூரி தொடர்பாக ஆயுர்வேதம், யுனானி மற்றும் சித்தா வைத்தியத் துறை 2008ல் சுட்டிக் காட்டியுள்ள குறைபாடு களை தமிழக அரசு அந்த ஆண்டே சரி செய்துவிட் டது.

2009ம் ஆண்டில் கல்லூ ரிக்கு வந்த ஆயுர்வேத சித்தத்துறை குழு அந்த குறைபாடுகள் சரி செய்யப் பட்டிருப்பதை கருத்தில் கொண்டு 2009ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் ஒரு பாவமும் அறியாத மாண வர்களின் கல்வி கெட்டு விடக்கூடாது என்பதை மனத்தில் கொண்டு அந்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண் டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனது கடிதத்தில் கூறியுள் ளார்.

பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
தலைவர் பேராசிரியர் கே.எம்.கே. கலந்து கொள்கிறார்

சென்னை, டிச.26-

பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர்கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் பி.இன்பசேகரன் போட்டி யிடுவார் என்று முதல்வர் கலைஞர் அறிவித்துள் ளார்.

இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பென்னாகரம் தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறி முக செயல்வீரர்கள் கூட்டம், பென்னாகரத்தில் உள்ள அண்ணா திடலில் காலை 9 மணிக்கு நடை பெறுகிறது.

இந்த கூட்டத்துக்கு தர்மபுரி வடக்கு மாவட்ட அவைத் தலைவர் தன கோடி தலைமை தாங்கு கிறார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு சிறப் புரை ஆற்றுகிறார். மற்றும் வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தமிழ்நாடு காங்கிரஸ் சட்ட மன்றக் கட்சித் தலைவர் டி.சுதர்சனம் எம்.எல்.ஏ., இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் துரை ரவிக்குமார் எம். எல்.ஏ., விவசாய தொழி லாளர் சங்க நிறுவனத் தலைவர் பொன் குமார், அருந்ததியர் மக்கள் கட் சித்தலைவர் வலசை ரவிச் சந்திரன், தர்மபுரி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வ.முல்லைவேந்தன் எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் டி.செங்குட்டுவன் எம்.எல். ஏ., எம்.பி.க்கள் இ.ஜி. சுகவனம், ஆர்.தாமரைச் செல்வன் ஆகியோர் பேசு கிறார்கள்.

மேற்கண்ட தகவல் தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

Wednesday, December 23, 2009

அந்தோ பாவம்...என்ன செய்வார்கள்?

அந்தோ பாவம்...என்ன செய்வார்கள்?

ரங்காநாத் மிஸ்ரா அறிக்கை தாக்கல் எங்களுக்கு கிடைத்த வெற்றி என்று வழக்கம் போல் தடுமாறிகள் சொல்லத்துவங்கியது மட்டுமின்றி தங்களின் இணைய தளத்திலும் தம்பட்டம் அடித்துள்ளனர்.அதோடு விட்டார்களா?சம்மந்தமே இல்லாத சிலரின் குரலாலும் வந்தது என்று சொல்லி ,சொல்ல மறந்த கதையாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் ஒப்பற்ற தலைவர்கள் எந்த வித பிரதிபலனையும் பாராமல்,எவருடைய ஓட்டுக்ககவும் எந்தப்பெயரையும் வைக்கத் துணியாதவர்களாக வலம் வந்த சமுதாய பீரங்கிகளின் சங்கநாதத்தையும் இருட்டடிப்பு செய்தது யாருக்காகவும் அல்ல! இன்று பாராளுமன்றத்தில் இஸ்லாமிய சமுதாயத்தின் பிரச்சினைக்களை எடுத்து வைப்பதில் சிம்ம சொப்பனமாக திகழும் அறிவுச்சுடர் அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான் அவர்களின் வீரமிக்க உறையை கண்டுதான்!!

இவர்களின் வார்த்தை ஜாலங்களை கேட்டு ஏமந்தது ஒரு காலம் ,இனி அந்தக் காலம் அவர்களுக்கு பொல்லாத காலம் என்பதை மட்டும் சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் சரி!

Sunday, December 20, 2009

இதோ முழங்குகிறார்! தெருவில் அல்ல நாட்டின் அரியணையில்!

இதோ முழங்குகிறார்! தெருவில் அல்ல நாட்டின் அரியணையில்!

http://www.youtube.com/watch?v=0Pje5JSVDjw

முஸ்லிம் லீக் வேட்பாளர் உதய சூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று சென்றால் சமுதாயப் பிரச்சினைகளை பேசவே முடியாது என்று ஏளனம் செய்து பிரச்சாரம் செய்தவர்களின் முகத்தில் கறியை பூச எங்கள் தாய்ச்சபை தங்கம் இதோ முழங்குகிறார்! தெருவில் அல்ல நாட்டின் அரியணையில்....அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, December 9, 2009

தேசப்பற்றுக்கு எடுத்துக்காட்டு தலைவர் காயிதெ மில்லத்! லிபரான் அறிக்கை விவாதத்தில் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. எழுச்சி உரை!

தேசப்பற்றுக்கு எடுத்துக்காட்டு தலைவர் காயிதெ மில்லத்! லிபரான் அறிக்கை விவாதத்தில் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. எழுச்சி உரை!

லிபரான் அறிக்கையின் மீதான விவாதத்தில் பங்கெடுத்து எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்கள் 07-12-2009 அன்று மக்களவையில் ஆற்றிய எழுச்சி மிகு உரை!

அவைத் தலைவர் அவர்களே!
பாபர் மஸ்ஜித் தகர்ப்பு குறித்து விசாரணைக் கமிஷன் தாக்கல் செய்துள்ள அறிக்கை மீதான விவாதத்தில் பங்கெடுக்க எனக்கு வாய்ப்பு தந்தமைக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1992 டிசம்பர் 6ம் தேதி பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது மிகவும் கொடிய
செயலாகும். இக்குற்றச் செயலைக் செய்தவர்கள் ஒரு வழிபாட்டுத் தலத்தை மட்டும் தகர்க்கவில்லை, மாறாக அரசியல் சாசனத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மதச் சார்பின்மை, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்ற கொள்கைகளையும் சேர்த்தே தகர்த்துள்ளனர். இந்த அவமானகரமான சம்பவத்தை ஏற்றுக் கொள்ளாமல் வேதனையுடன் புறந்தள்ளிய பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வுகளுக்கு இக்கொடிய குற்றவாளி கூட்டத்தினர் பங்கம் இழைத்துள்ளனர்.
மஸ்ஜித் தகர்ப்பு சங் பரிவாரங்களும் அதன் துணை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ். வி.எச்.பி, பஜ்ரங் தன், பி.ஜே.பி, ஆகியவற்றால் மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்ட சதிச் செயல்தான் என்பதை விபரான் கமிஷன் அறிக்கை வெளிக் கொணர்ந்துள்ளது. அது தானாகவோ, திடீரெனவோ நடந்தது அல்ல. மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்ட ஒன்று,. இந்த அறிக்கை 68 நபர்களின் தனிப்பட்ட குற்றச் செயல்களை வரையறுத்துள்ளது. இந்த அறிக்கை குற்றம் சுமத்தியுள்ள 68 நபர்களின் மீது என்ன வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். இந்திய வரலாற்றிலே இது மிகவும் அவமானகரமான ஒரு செயலாகும்.
1995ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலே சொல்லப்பட்ட ஒன்றை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தேசிய ஜனநாயக முன்னனி ஆட்சியிலிருந்த போது அப்போதைய மத்திய உள்துறை அமைச்சரும் இன்றைய எதிர்க்கட்சி தலைவருமான நபரை குறிப்பிட்டு பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பிற்க்கு கண்டனம் தெரிவிக்கப்பட்ட தீர்ப்பாகும். அதிலே தெளிவாக குறிப்பிட்டுள்ளதாவது,
"" இந்த செயல் ஒரு தேச அவமானம். தகர்க்கப்பட்டது ஒரு புரதான கட்டிடம் மட்டுமல்ல நீதியின் மீதும், பெரும்பான்மையினரின் நியாயமான நடவடிக்கைகள் மீதும் சிறுபான்மையினர் கொண்டிருந்த நம்பிக்கையும் தான். சட்டத்தின் ஆட்சி மீதும், அரசியல் சாசன நடைமுறைகளின் மீதும் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை அது குலைத்துவிட்டது||. இதுதான் உச்சநீதிமன்றம் கூறிய வார்த்தைகள்.
பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நேரத்திலே உத்திர பிரதேச மாநிலம் பி.ஜே.பி. யால் ஆளப்பட்டு வந்தது. அதன் துணை அமைப்பான ஆர்.எஸ்.எஸ். ன் முழு உதவியுடன் தான் தகர்ப்பு நிகழ்த்தப்பட்டது. அது தனியாக ஒரு இணை அரசை நடத்தியது என்பது லிபரான் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகர்ப்பு செயலுக்கு மிக முக்கியமான சக்தியாக அது பயன்படுத்தப்பட்டது. பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு குறித்தும், சிறுபான்மையினர், அப்பாவிகள் மீதான தாக்குதல்கள் குறித்தும் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் கூட, அப்பாவி மக்களை பாதுகாக்க காவல்துறைக்கு எந்த வித ஆணையையும் அவர் வழங்கவில்லை. இதன் பயனாக அனைத்து காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும், ஒட்டு மொத்த அரசு எந்திரமும் பாதுகாவலர்களாக இல்லாமல் சீருடை தரித்த " கரசேவகர்களாக|| பணியாற்றினர்.
ரகசிய கேமராக்களும், வெடி பொருள் கண்டுபிடிக்கும் கருவிகளும் அரசு நிர்வாகத்தால் செயலிழக்கச் செய்யப்பட்டன. இந்த நிகழ்வுகள் வீடியோ காமிராவில் பதிவு செய்யப்பட வில்லை.
அரசு முறைப்படி செய்யும் வீடியோ பதிவுகள் நிறுத்தப்பட்டன. ஊடகங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. லிபரான் அறிக்கையின்படி ஊடக வியலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு மிகச் சிறிய இடத்திலே அடைத்து வைக்கப்பட்டனர்.
மானபங்கப்படுத்தப்பட்டனர். இது மிகவும் அவமானகரமான செயலாகும். இந்த நாட்டிற்க்கும் அதன் வரலாற்றுக்கும் துரோகமிழைக்கப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு நபர் இந்த நாட்டின் மிக உயரிய ஜனநாயக நிறுவனமான இந்த அவையின் உறுப்பினராக உள்ளார் ............ ( அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.)
இந்த செயலின் தளகர்த்தாவாக இருந்தவர் திரு. எல்.கே.அத்வானி. 1990ல் அவர் சோம்நாத்திலிருந்து அயோத்தியாவிற்கு நடத்திய ரத யாத்திரை நாடு முழுவதும் 3000 கலவரங்களை தோற்றுவித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்னனர். "" டைம்ஸ் ஆப் இந்தியா|| தன் தலையங்கத்திலே இது ரதயாத்திரை அல்ல "" ரத்த யாத்திரை|| எனக் குறிப்பிட்டது. அப்படிப்பட்ட ஒரு அவமானகரமான நிகழ்ச்சி இந்த நாட்டிலே நடந்தது. பி.ஜே.பின் ஆதரவுடன் ஆட்சியிலிருந்தாலும் அன்றைய பிரதமர் திரு. வி.பி.சிங் அவர்கள் தன் அரசை காப்பாற்றிக் கொள்வதற்காக ரத யாத்திரையை ஆதரித்து விடவில்லை என்பதை நான் நினைவு கூர்கிறேன். அப்படிப்பட்ட ஒரு கிரிமினல் செயலை அவர் ஆதரிக்காததால் அவர் தன் அரசாட்சியை இழக்க வேண்டியிருந்தது. அதை எதிர் கொள்ள அவர் சிறிதும் தயங்கவில்லை. வி.பி.சிங் அவர்களின் வீரத்தை இந்த நேரத்திலே நான் மெச்சுகிறேன்.
லிபரான் கமிஷன் முன்பும், மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எல்.கே. அத்வானி அவர்கள் முரன்படும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். ஒரு சமயம் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு தன் வாழ்நாளிலே மிகுந்த துயரமளித்த சம்பவம் என்றார். மற்றொரு சமயம் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு தன்னுடைய கட்சியின் ஓட்டு வங்கியை பெரிதாக்கியுள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். மற்றொரு சமயம் நாமர் கோவில் இயக்கம் இந்துக்களின் பெருமையை பறை சாற்றுகிறது என்றார். இந்து மத உணர்வுகளில் நஞ்சு கலக்கும் அவர் செயலை இந்து சமுதாயம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அவர் உணர வேண்டும்.
இந்த நாட்டின் அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை குலைப்பதற்காகவே ஆர்.எஸ்.எஸ் வி.எச்.பி, பி.ஜே.பி மற்றும் அதன் சார்பு அமைப்புகளின் வங்கிக் கணக்குகளில் மிகச் பெரும் தொகையில் பண பரிவர்த்தனை நடக்கிறது. பல்வேறு சமயங்களில் அவர்களின் கணக்குகளில் பல கோடி ரூபாய்கள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த பணம் எங்கிருந்து வந்தது? இப்படிப்பட்ட ஒரு கொடுங் குற்றச் செயலை நிறைவேற்ற வேண்டி கோடி கோடியாய் பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளில் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பெருந்தொகை எப்படி பரிமாற்றம் செய்யப்பட்டது? யார் இதை உபயோகப்படுத்தியது? எப்படி உபயோகப்படுத்தப்பட்டது? இந்த எல்லா உண்மைகளும் இந்த தேசத்துக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு குறித்த அனைத்து வழக்குகளும் ஒருமுகப்படுத்தப்பட்டு ஒரே நீதிமன்றத்தில் விரைவாக முடிக்கப்பட வேண்டும்.
இந்த நேரத்திலே நான் என் உரையை முடிக்கு முன்னர் தேசத் தலைவர் ஒருவர் சமூக நல்லிணகத்தை எப்படி மதித்தார், எப்படி நடந்து கொண்டார் தேசப்பற்றை எப்படி வெளிப்படுத்தினார் என்பதை நினைவு கூர விரும்புகிறேன்.
சுதந்திரத்தின் போது நாடு பிரிவினைக்கு உட்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் உருவான பின்னர் பாகிஸ்தான் முஸ்லிம் லீகின் தலைவர் முஹம்மது அலி ஜின்னா இந்தியாவில் உள்ள சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை காப்பாற்ற குரலெழுப்பினார். அந்த நேரத்தில் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் முஹம்மது அலி ஜின்னா விடம் "நீங்கள் வெளிநாட்டவர் . நீங்கள் இந்தியாவின் மைந்தன் அல்ல. இந்திய குடிமகனும் அல்ல. நாங்கள் இந்திய குடிமக்கள் . நாங்கள் இந்திய நாட்டின் மைந்தர்கள். சிறுபான்மையினர் விவகாரத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம்.
சிறுபான்மையினர் பிரச்சினைகளை எப்படி அனுகுவது என்பது எங்களுக்கு தெரியும். நீங்கள் அயல் நாட்டிலே இருக்கிறீர்கள் நீங்கள் இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகத்தை குறித்து பேச வேண்டாம். அப்படி சிறுபான்மையினர் குறித்து பேச வேண்டியது நியாயமே என கருதினால் உங்கள் நாட்டில் வாழும் இந்துக்கள், கிருஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினர் பற்றி யோசியுங்கள். நீங்கள் உங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் பிரச்னைகளை குறித்து கவலைப்படுங்கள். இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் அல்லது முஸ்லிம் சமூகம் குறித்து ஏதும் பேச வேண்டாம். எங்கள் தாய்நாட்டிலே ஏற்படும் எந்த பிரச்னையையும் எதிர்நோக்கும் துணிவு எங்களுக்கு உள்ளது|| என்றார். இதுதான் தேசப்பற்று - இதுதான் தேசியம் - இதுதான் சமூக நல்லிணக்கம் - இதுதான் இந்த நாட்டின் தலைவர்கள் காட்டிய சமூக ஒற்றுமை. இங்கே உள்ள அமைப்புகளின் தலைவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட நடத்தையை பார்த்து பாடம் கற்றக்கொள்ள வேண்டும்.
நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் ஒரு மதத்தாரின் வழிபாட்டுத் தலத்தை உருவாக்குவதற்காக மற்றொரு சாராரின் வழிபாட்டுத் தலங்கள் தகர்க்கப்படுவதில்லை. நம் இந்திய மக்களிடம் இத்தகைய கலாச்சாரம் இல்லை. இந்தியா சமயச் சார்பற்ற நாடு - எந்த மதமும் இன்னொரு மதத்திற்கு எதிரானது அல்ல - ஒரு மதத்தின் நெறிகளுக்கு எதிராக இன்னொரு மதம் நெறியற்ற முறையை தருவதில்லை. எல்லா மதங்களுமே அறநெறிகளையே போதிக்கின்றன. நாம் மதங்களின் பெயரால் வேறுபடலாம். ஆனால் அறநெறிகளின்படி நாம் எல்லோரும் சகோதர, சகோதரிகள் .
நான் ஒரே ஒரு கருத்தை உங்களின் பரிசீலனைக்கு வைத்து முடிக்க விரும்புகிறேன். பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு காரணமாக பாகிஸ்தானில் உள்ள சில நபர்களின் கோபத்தின் வெளிப்பாடாக சில கோவில்கள் அங்கே சிதைக்கப்பட்டன.................... ( குறுக்கீடுகள்) ....... உடனடியாக அவற்றை சரி செய்து விடுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.................... ( குறுக்கீடுகள்) ....... இந்தியா மதச்சார்பற்ற நாடு ஆனால் பாகிஸ்தான் அப்படி அல்ல என்பதை நாம் நன்றாக அறிவோம். இருந்தபோதும் பாகிஸ்தான் அரசு சிதைக்கப்பட்ட கோவில்களை உடனடியாக புணரமைக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டது................... ( குறுக்கீடுகள்) ....... கோவில்களை புணரமைத்தது மட்டும் அல்ல, அவற்றை மீண்டும் இந்து சமூகத்தினரிடம் ஒப்படைக்கும் போது நம்முடைய எதிர்க்கட்சி தலைவர் திரு அத்வானி அவர்களும் சென்றிருந்தார். ................... ( குறுக்கீடுகள்) ....... புணரமைக்கப்பட்ட கோவில்களின் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார். நம்முடைய நாடு சமய சார்பற்ற நாடாக இருப்பதால் அதே போல தகர்க்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித்தும் அதே இடத்திலே மக்களால் மீண்டும் நிறுவப்பட வேண்டும் என இந்த மேலான அவையிலே வேண்டுகோள் வைக்கிறேன். அதற்கு அத்வானி அவர்கள் தலைமை ஏற்றால் அவர் பின்னால் அணிவகுத்து நிற்க நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம். இந்திய வரலாற்றிலே இப்படிப்பட்ட சமயச் சார்பின்மை - இப்படிப்பட்ட சமூக நல்லிணக்கம் - இப்படிப்பட்ட சமூக ஒற்றுமை நிறுவப்பட வேண்டும். இது அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு புதிய சகாப்தமாக இருக்கும். உலக நாடுகளின் முன்னால் நம் ஒவ்வொரு இந்தியனுக்கும் இது மிகவும் பெருமை தருவதாக இருக்கும்.
இந்த சந்தர்ப்பத்திலே நான் மக்கள் அனைவரையும் வேண்டுகிறேன். மதத்தின் பெயரால் மத வழிபாட்டு முறையின் பெயரால் மக்களிள் சகோதரத்துவத்தை மாறுபடுத்தாதீர்கள்.................... ( குறுக்கீடுகள்) ....... எல்லா மதங்களும் அறநெறிகளையே போதிக்கின்றன. எல்லா மதங்களும் மக்களை சகோதர சகோதரிகளாக வாழவே பயிற்று விக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு தத்துவத்தை கொள்கையை மாநில பேதமின்றி - கட்சிபேதமின்றி நம் உறுப்பினர்கள் அனைவரும் கைக்கொள்ள வேண்டும்.
இந்த விவாதத்தில் என்னுடைய கருத்துக்களை எடுத்து வைக்க வாய்ப்பு அளித்தமைக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
- தமிழில் வெ. ஜீவகிரிதரன்

Sunday, December 6, 2009

மத்திய அரசு முழு உதவியும் செய்திட வேண்டும் நாடாளுமன்றத்தில் எம். அப்துர் ரஹ்மான் கோரிக்கை

மத்திய அரசு முழு உதவியும் செய்திட வேண்டும் நாடாளுமன்றத்தில் எம். அப்துர் ரஹ்மான் கோரிக்கை

http://www.mudukulathur.com/mudseithiview.asp?id=770


இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழகத் திற்கு மத்திய அரசு முழு உதவிகளையும் செய்திட வேண்டும் என நாடாளு மன்றத்தில்வேலூர் தொகுதி உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் கோரிக்கை வைத்தார்.

இயற்கைப் பேரரிடர் நிகழ்வுகள் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பங்கேற்று பேசுகை யில் எம். அப்துர் ரஹ்மான் குறிப்பிட்டதாவது-

அண்மையில் தமிழ் நாட்டின் நீலகிரியில் மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு 400 மீட்டர் தொலைவிற்கும் அதிக மான தொலைப்பரப்பில் பெரும் மழையால் நிலச் சரிவு ஏற்பட்டு, 3 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் பெரும் பாதிப்புக்களை இழப்புக்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உரு வானது.

நீலகிரி பகுதியில் சாலை கள் துண்டிக்கப்பட்டு, மக்களுக்கு அன்றாடத் தேவைகளுக்கான பொருட் களும், உணவு வகைகளும் சென்றடைய முடியாத நிலையால் மக்கள் தவித் தனர். போக்கு வரத்து வசதியும், தொலைத் தொடர்பு வசதியும் கூட முற்றிலும் துண்டிக்கப்பட் டன.

தமிழக அரசு துரித நடவடிக்கை

இந்த நிலை அறிந்த உடனேயே தமிழக முதல் வர் கலைஞர் அமைச்சர் களையும், அதிகாரிகளை யும் பாதிக்கப்பட்ட பகுதி களுக்கு விரைந்து அனுப்பி போர்க் கால அடிப்படை யில் உடனடி நிவாரண நடவ டிக்கைகளை மேற் கொண்டார்.

நீலகிரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பின ராக உள்ள ராசா தலைமை யில் குழு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண நடவடிக் கைகளை மேற்கொண்ட னர். உயிரிழந்த சடலங் களை மீட்பதற்கு மிகப் பெரிய இடையூறுகள் இருந்தும் ஆச்சரியப்படத் தக்க வகையில் மின்னல் வேகத்தில் பணிகள் நடைபெற்றன. பாதிக்கப் பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் மட்டுமின்றி உணவு,நிவாரணப் பொருட் களும், உதவித் தொகையும் அளிக்கப்பட்டன.

1800-க்கும் மேற்பட் டோர் வீடுகளை இழந்த நிலையில், அவர்களுக்கு தனித்தனியாக புதிய வீடு கள் கட்டித்தரப்படும் என தமிழக முதல்வர் கலைஞர் அறிவித்த அறிவிப்பு பாதிக் கப்பட்டவர்களுக்கு ஆறு தலை தந்தது. இந்த வீடுகள் கட்டப்பட குறைந்தபட்சம் 6 மாதங்களாவது ஆகலாம் என்ற நிலை இருந்த போதும் அவர்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன. உயிரி ழந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயை முதல்வர் வழங்கினார்.

உதகமண்டலம் என்று அழைக்கப்படுகின்ற இந்த சுற்றுலா மலைப்பகுதி உலக பிரசித்திப்பெற்றது. இந்திய மாநிலங்கள் மட்டு மின்றி உலகின் பல்வேறு நாடுகளி லிருந்தும் இங்கு சுற்றுலாப் பயணிகள் வருவதால் மத்திய - மாநில பொருளா தார வளர்ச்சிக்கு பெரு மளவில் பங்கு பணி யாற்றி வருகிறது.

எனவே, இந்தப் பகுதி யைக் கவனத்தில் கொண்டு மத்திய அரசு தமிழக அரசுக்கு முழு அளவிலான உதவிகளையும் செய்வதற்கு கடமைப்பட்டிருக்கிறது.

ஆம்பூர் வௌ;ளச்சேதம்

என்னுடைய வேலூர் நாடாளுமன்ற தொகுதிக் குட்பட்ட ஆம்பூரில் சில மாதங்களுக்கு முன் தொடர் மழையால் திடீர் வௌ;ளம் ஏற்பட்டு ஆற்றோரப் பகுதிகளில் உள்ள குடிசை கள் வௌ;ளத்தால் அடித் துச் செல்லப்பட்டு ஐவர் உயிரிழந்தனர். தமிழக அரசு உடனடியாக நிவா ரணப் பணிகளை முடுக்கி விட்டு உயிரிழந்தவர் களுக்கு தலா 1 லட்ச ரூபாயை முதல்வர் வழங் கினார்.

வசதியற்றவர்கள் வசிக்க வாழ்விடம் தேடி இது போன்ற பாதுகாப்பில்லாத இடங்களில் குடியேறி விடுகின்றனர். மத்திய அரசு என்.சி.சி.எஃப். என்ற தேசிய இயற்கைப் பேரிடர் முன் னெச்சரிக்கை நிதி குழுமத் திலிருந்து மாநில அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பாதுகாப்பு முன்னெச் சரிக்கைளை முழுமையாக செய்திட வேண்டும்.

இத்தகைய இயற்கைச் சீற்றங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு தமிழக அரசு போர்க்கால அடிப் படையில் நிவாரண உதவி கள் செய்வதை நாம் மனமுவந்து பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். அதேசமயம் இத்தகைய இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட தாமாக முன்வந்து உதவிகள் செய்ய மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது. குறிப்பாக, இயற்கை பேரி டரால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு முழுமை யான சீரமைப்புப் பணிகள் நிறைவேற மத்திய அரசு தாராளமாக உதவிகள் செய்ய வேண்டும் என இந்த மாமன்றத்தின் மூலம் வேண்டுகோள் வைக்கி றேன்.
இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., பேசினார்.



தகவல் உதவி :


A.Usman
9944741315

www.muslimleaguetn.com