Wednesday, December 31, 2008

காயல்பட்டணத்தில் நடந்த மாநில பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்கள்!

காயல்பட்டணத்தில் நடந்த மாநில பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்கள்!

http://www.muslimleaguetn.com/news.asp

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பொதுக்குழுக் கூட்டம், 27.12.2008 சனிக்கிழமை காலை 11 மணியளவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் நடைபெற்றது.

துவக்கமாக மவ்லவீ தளபதி ஷஃபீக்குர்ரஹ்மான் கிராஅத் ஓதினார்.

காயல்பட்டணத்தைச் சார்ந்த ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத், நஹ்வி எம்.எம்.முத்துவாப்பா ஆகியோர் அரபி கீதம் பாடினர்.

தொடர்ந்து தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வரவேற்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உரையாற்றினார். உரையின் துவக்கமாக, அண்மையில் மறைந்த முஸ்லிம் லீக் முக்கியஸ்தர்களின் பிழைபொறுப்புக்காக துஆ ஓதப்பட்டது. தளபதி ஷஃபீக்குர் ரஹ்மான் துஆ ஓதினார்.

பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:

அரசியல் தீர்மானம் 1 - மும்பை தாக்குதல்:-
மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கோழைத்தனமான இந்த தாக்குதலில் அநியாயமாக 184 பேர் உயிரிழந்தனர். இவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை உணர்த்துகிறோம்.

உயிரிழந்தவர்களில் 44 பேர் முஸ்லிம்கள் என்பதிலிருந்து தீவிரவாதத்திற்கு மதச்சாயம் பூசக்கூடாது என்ற உண்மை நிரூபணமாகியுள்ளது.

மும்பை சம்பவம் இந்திய மக்களை ஒன்றுபடச் செய்துள்ளது. இது தீவிரவாதிகளுக்கு கிடைத்த மாபெரும் தோல்வி.

தீவிரவாதம் எந்த உருவில் வந்தாலும் அதனை இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்களனைவரும் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு தனது வேண்டுகோளை வெளிப்படுத்துகிறது.

தீர்மானம் 2 - மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு - ஹேமந்த் கர்கரே மரணம்:-
நாட்டில் எங்கே வெடிகுண்டு சம்பவங்கள் நடந்தாலும், அவற்றுக்கெல்லாம் முஸ்லிம்களே காரணம் என பிரச்சாரம் செய்யப்பட்டது.

மாலேகான், அஜ்மீர், ஹைதராபாத் குண்டுவெடிப்பு சம்பவங்கள், டெல்லி ஜாமிஆ நகர் போலி என்கவுண்டர் உள்ளிட்ட விவகாரங்களில் முஸ்லிம்களின் மனவருத்தத்தைப் புரிந்துகொண்டு உண்மையைக் கண்டறிய நேர்மையான – முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகால் வைக்கப்பட்டது.

அதன் தேசிய தலைவர் மாண்புமிகு இ.அஹமது, தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் திருமதி சோனியாக காந்தியை சந்தித்து முறையிட்டனர். பாரதப் பிரதமரிடம் இதுபற்றி பேசி, உடனடி நடவடிக்கை எடுப்பதாக Nசுhனியாவும் உறுதியளித்தார்.

இதன்பின், மராட்டிய மாநில தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே தலைமையில் முறையான விசாரணை நடைபெற்றது.

மலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சாத்வி பிரக்யாசிங் தாகூர் என்ற இந்து பெண் துறவி, தயானந்த பாண்டே என்ற மடாதிபதி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளைச் சார்ந்தவர்களும்,

அபிநவ் பாரத், பஜ்ரங்தள், வி.எச்.பி. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளும், உபாத்யாயா போன்ற ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளும், ஸ்ரீகாந்த பிரசாத் புரோகித் போன்ற ராணுவ லெப்டினெண்ட் கர்னல்களும் கைது செய்யப்பட்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளுக்கும், தலைமை அதிகாரி கர்கரே-க்கும் கொலை மிரட்டல் வந்தது.

மலேகான் குண்டுவெடிப்பு உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்த நிலையில், மும்பை தீவிரவாத சம்பவத்தில் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டுவிட்டார்.

அவரது மரணம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. இந்தியர்கள் அனைவரின் இதயங்களில் இடம்பெற்றுவிட்ட அவரது தியாகத்தைப் போற்றிப் புகழ்கிறோம். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்துகிறோம்.

ஹேமந்த் கர்கரே மரணத்தோடு மலேகான் குண்டுவெடிப்பு விசாரணை கிடப்பிற்கு போய்விடக் கூடாது. தகுதியானவர்கள் கர்கரேயின் வழியைப் பின்தொடர்ந்து, விசாரணையை முடுக்கிவிட்டு, அதிலுள்ள முழு உண்மைகளையும் அம்பலப்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும். அநியாயமாக ஒரு சமுதாயத்தின் மீது சுமத்தப்பட்ட களங்கம் துடைக்கப்பட வேண்டும் என இப்பொதுக்குழு மத்திய மற்றும் மராட்டிய மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3 - தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு:-
நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் லட்சியம்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட, பல்வேறு இயக்கங்கள் அரசுக்குக் கோரிக்கை எழுப்பி வந்துள்ளன.

அண்மையில் தமிழக முதல்வர் கலைஞர், தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்@ அதற்கு முன்னோட்டமாக புதிதாக மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது@ மதுக்கடைகளின் விற்பனை நேரமும் ஒரு மணி நேரம் குறைக்கப்படும் என அறிவிப்புச் செய்துள்ளார். இதனை இப்பொதுக்குழு வரவேற்று, முதல்வர் கலைஞர் அவர்களைப் பாராட்டுவதோடு ஆட்சேபனைக்குரிய வகையில் பள்ளி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை அகற்ற உத்தரவிடவும் வேண்டுகோள் விடுக்கிறது.

தீர்மானம் 4 - திருமங்கலம் இடைத்தேர்தல்:-
நடைபெறவுள்ள திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றிபெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

டாக்டர் கலைஞர் தலைமையிலான நல்லாட்சி, அனைத்து தரப்பு மக்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற அரசாக உள்ளது.

இந்த நல்ல சேவைகளுக்கு நற்சான்று தருகின்ற வகையில் அமையப் போகின்ற திருமங்கலம் இடைத்தேர்தல் தி.மு.க. தலைமையில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை சந்திப்பதற்கு நல்ல அடித்தளத்தை அமைத்துத் தரும் என்ற நம்பிக்கை உண்டு.

இத்தேர்தலில் திரு.மு.க.அழகிரி தலைமையிலான தேர்தல் பணிக்குழுவின் வழிகாட்டுதலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பம்பரமாகச் சுழன்று தேர்தல் பணி செய்ய இப்பொதுக்குழு வேண்டுகிறது.

இயக்கத் தீர்மானம் 5 - முஸ்லிம் லீக் மாநாடுகள்:-
இந்திய முஸ்லிம்களின் அரசியல் பேரியக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய முஸ்லிம்களை அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கும் பணியினை மேற்கொண்டுள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தந்த மாநிலங்களில் முஸ்லிம்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த மாநாடுகள் நடைபெறுகின்றன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய மாநாடு உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் 2009 பிப்ரவரி 21,22இல் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து பெருமளவில் பங்கேற்க வேண்டும். இதற்காக தனி ரயில் ஏற்பாடு செய்யப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள் அனைத்தும் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மூன்று மண்டல மாநாடுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென்மண்டல மாநாடு ராமநாதபுரத்தில் ஜனவரி 24ஆம் தேதியும், மத்திய மண்டல மாநாடு தஞ்சாவூரில் பிப்ரவரி 14ஆம் தேதியும், வடமண்டல மாநாடு மார்ச் 14இல் வேலூரிலும் நடைபெறுகிறது.

இந்த மண்டல மாநாடுகள் பற்றி அனைத்து ஜமாஅத் மற்றும் ஊர்களிலும் பிரச்சாரம் செய்ய எல்லா ஊர்களிலும் முஸ்லிம் லீக் கிளைகளை அமைக்க வேண்டும்.

இஸ்லாத்தின் சிறப்புகளில் ஒன்றான மஹல்லா ஜமாஅத் கண்ணியத்தைக் காப்பாற்றவும், அதன் ஒற்றுமையைப் பேணவும், உரிமைகளை நிலைநாட்டவும் தமிழகம் தழுவிய அளவில் அனைத்து மஹல்லாக்களும், பள்ளிவாசல் இமாம்களும், முத்தவல்லிகளும், அறக்கட்டளை உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாகிகளும் பங்கேற்கின்ற மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டை, வரும் ஜனவரி 31ஆம் தேதி தலைநகர் சென்னையில் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் அனைத்து மஹல்லாக்களும், முத்தவல்லிகளும், இமாம்களும் பங்கேற்கச் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென அனைத்து மாவட்ட பிரைமரி அமைப்புகளையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 5 - வக்ஃப் வாரியத் தலைமை:-
தமிழ்நாட்டிலுள்ள 60 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்கள்.

இந்த கொள்கை மற்றும் நடைமுறைகளில் நம்பிக்கை இல்லாத ஒருவர் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைமைப் பொறுப்பில் இருப்பதால், ஜமாஅத் மற்றும் பள்ளிகளில் தேவையற்ற குழப்பங்களும், வீண் பிரச்சினைகளும் ஏற்படுத்துவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்தப் போக்கு மாறவில்லையெனில், வக்ஃப் வாரிய தலைவர் பதவியிலிருந்து தற்போதைய தலைவரை மாற்றக் கோரி முஸ்லிம் லீக் போராட்டத்தில் இறங்கும் என இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

தீர்மானம் 6 - காயிதெ மில்லத் பேரவை:-
கடல் கடந்த நாடுகளில் வாழும் இந்திய முஸ்லிம்களை ஒருங்கிணைத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பலப்படுத்த, இந்திய முஸ்லிம்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் காயிதெ மில்லத் பேரவைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் காயிதெ மில்லத் பேரவை மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. தற்போது சவூதி அரேபியாவில் அமைக்கப்பட்டுள்ளது. பேங்காக், கத்தார், குவைத் நாடுகளில் அமைப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதனை எல்லா நாடுகளிலும் அமைக்கவும், அந்த அமைப்புகளை ஒருங்கிணைக்கவும், அவற்றின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு முற்றிலும் கட்டுப்பட்ட அமைப்பாக இதைச் செயல்படச் செய்யும் காயிதெ மில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழுவாக அமீரக காயிதெ மில்லத் பேரவை நிர்வாகமும், அந்தக் குழுவின் தலைவராக முத்துப்பேட்டை எம்.அப்துர்ரஹ்மான் அவர்களும் செயல்பட இப்பொதுக்குழு அங்கீகாரமளிக்கிறது.

இயக்க தீர்மானம் 7:-
ஒன்றாக இருந்த கோவை மாவட்டம் பிரிக்கப்பட்டு, புதிய திருப்பூர் மாவட்டத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. எனவே, ஒன்றாக இருந்த கோவை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கோவை, திருப்பூர் என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திற்கு திருப்பூர் பி.எஸ்.ஹம்ஸா அவர்களும், கோவை மாவட்டத்திற்கு மேட்டுப்பாளையம் முகம்மது குட்டி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டும், கோவை நகரத்தில் உள்ள மாவட்ட முஸ்லிம் லீக் கட்டிடத்தை இரு மாவட்டங்களும் பிரித்துக் கொள்வதென்றும் 24.12.2008 அன்று நடைபெற்ற கோவை மாவட்ட செயற்குழு எடுத்த முடிவை இப்பொதுக்குழு அங்கீகரிக்கிறது.

தீர்மானம் 8 - கிழக்கு கடற்கரை சாலை:-
தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், தொலைதூரத்திலுள்ள இப்பகுதி மக்களின் நலனுக்காகவும், தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் ஏற்கனவே வாக்களித்த ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை காயல்பட்டணம் கடற்கரை வழியிலான கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றித் தர இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 9 - புதிய ரயில்பாதை திட்டம்:-
கன்னியாகுமரி - தூத்துக்குடியை கடற்கரை மார்க்கமாக இணைக்கும் வகையில் புதிய ரயில்பாதை திட்டத்தை அமைத்துத் தருமாறு மத்திய ரயில்வே அமைச்சகத்தை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tuesday, December 30, 2008

தமிழ் நாடு மாநில இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு தீர்மானங்கள்!



தமிழ் நாடு மாநில இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு தீர்மானங்கள்!


கடந்த 27-12-08 அன்று காயல்பட்டணம் வாவு வஜீஹா பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு தீர்மானங்கள்:

1. மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணை கிடப்பிற்கு போய்விடாமல் தொடர்ந்து விசாரணை நடத்திட வேண்டும். மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் வன்மையாக கண்டிக்கத் தக்கது. அதில் உயிரிழந்தவர்களில் 44 பேர் முஸ்லிம்கள். எனவே தீவிரவாதத்திற்கு மதச் சாயம் பூசக் கூடாது.

2. நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்திட வேண்டும்.

3. திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க.விற்காக தேர்தல் பணியாற்றுவது

4. ஜமாஅத் மற்றும் பள்ளிகளில் தேவையற்ற குழப்பங்கள் முற்றும் வீண் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. எனவே வக்பு வாரிய தலைவர் பதவியிலிருந்து தற்போதைய தலைவரை மாற்றக் கோரி முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போராட்டம் நடத்துவது

5. ராமேசுவரம்-கன்னியாக் குமரி வரை போடப்படும் கிழக்கு கடற்கரைச் சாலையை காயல்பட்டணம் வழியாக போட தமிழக அரசை வற்புறுத்துவது.

இக் கூட்டத்தில் அப்துல்பாசித் வாணியம்பாடி எம்.எல்.ஏ.,கலிலுற்றஹ்மான்-அரவக்
குறிச்சி எம்.எல்.ஏ., பொருளாளர் வடக்குக்கோட்டையார், மாநில மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.ஏம்அபுபக்கர், கமுதி பஷர், நெல்லை மஜித்,அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை அப்துற் றஹ்மான்,பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, செயலாளர் ஏ.முஹம்மது தாஹா, அமெரிக்க காயிதெமில்லத் பேரவை அமைப்பாளர் முஹமம்து நூர்தீன் உட்பட 483 பொதுக் குழு உறுப்பினர்கள் உட்பட சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

http://www.kayalpatnam.in/index.php?option=com_content&view=article&id=419:2008-12-28-131951&catid=1:latest-news&Itemid=246

Thursday, December 25, 2008

துபாயில் காயிதெமில்ல‌த் பேர‌வை நிர்வாகிக‌ள் கூட்ட‌ம்

துபாயில் காயிதெமில்ல‌த் பேர‌வை நிர்வாகிக‌ள் கூட்ட‌ம்

துபாயில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை (http://quaidemillathforumuae.blogspot.com ) நிர்வாகிக‌ள் கூட்ட‌ம் துபாய் தேரா த‌மிழ் உண‌(ர்)வ‌க‌த்தில் அமைய‌ப்பெற்ற‌ காயிதெமில்ல‌த் அர‌ங்கில் ச‌னிக்கிழ‌மை ந‌டைபெற்ற‌து.

கூட்ட‌த்திற்கு அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேரவை த‌லைவ‌ர் எம்.அப்துல் ர‌ஹ்மான் த‌லைமை வ‌கித்தார். பொதுச்செய‌லாள‌ர் ஏ. லியாக்க‌த் அலி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.

பேர‌வை த‌லைவ‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் க‌ட‌ந்த‌ தியாக‌த் திருநாளையொட்டி ரியாத் காயிதெமில்ல‌த் பேர‌வை ஏற்பாடு செய்திருந்த‌ நிக‌ழ்ச்சியில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் அகில‌ இந்திய‌ பொதுச்செய‌லாள‌ராக‌ பொறுப்பேற்ற‌ பின்ன‌ர் பேராசிரிய‌ர் கே.எம். காத‌ர் மொகிதீன் எம்.பி. அவ‌ர்க‌ள் ப‌ங்கேற்ற‌ முத‌ல் வெளிநாட்டு நிக‌ழ்ச்சியில் ப‌ங்கேற்ற‌ நினைவுக‌ளை நினைவு கூர்ந்தார். ரியாத்தில் காயிதெமில்ல‌த் பேரவையின‌ர் மிக‌வும் ஆர்வ‌த்துட‌ன் ஏற்பாடு செய்திருந்த‌ நிக‌ழ்ச்சியில் த‌மிழ‌க‌ப் பெரும‌க்க‌ள் ப‌ல‌ர் ப‌ங்கேற்றுச் சிற‌ப்பித்திருந்த‌ன‌ர். த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ம‌ட்டும‌ல்லாது கேர‌ள‌ மாநில‌ ச‌கோத‌ர‌ர்க‌ளும் பேராசிரிய‌ரின் வ‌ருகையினையொட்டி ப‌ல்வேறு சிற‌ப்பு நிக‌ழ்ச்சிக‌ளுக்கு ஏற்பாடு செய்திருந்த‌ன‌ர்.

ச‌வுதிக்கான‌ இந்திய‌ தூத‌ர் எம்.ஓ.எச். ஃபாரூக் ம‌ரைக்காய‌ர் அவ‌ர்க‌ளை ச‌ந்தித்து உரையாடிய‌து, தொழிலாள‌ர் முகாம்க‌ளுக்குச் சென்று உத‌விப்பொருட்க‌ள் வ‌ழ‌ங்கிய‌து, ம‌ருத்துவ‌ம‌னைக்குச் சென்று சிகிச்சை பெற்று வ‌ரும் இந்திய‌ ம‌க்க‌ளைச் ச‌ந்தித்த‌து உள்ளிட்ட‌ நிக‌ழ்வுக‌ளை விவ‌ரித்தார்.

மேலும் காய‌ல்ப‌ட்ட‌ண‌த்தில் ந‌டைபெறும் பொதுக்குழு குறித்தும், அதில் முஸ்லிம் லீக் வ‌ர‌லாற்று நூல் வெளியிட‌ப்ப‌ட இருப்ப‌து, ம‌ண்ட‌ல‌ மாநாடுக‌ள் குறித்தும் எடுத்துரைத்தார்.

ராம‌நாத‌புர‌த்தில் ந‌டைபெற்ற‌ முஸ்லிம் லீக் செய‌ற்குழுவில் ப‌ங்கேற்ற‌ ஹிதாய‌த்துல்லா அந்நிகழ்வு குறித்தும் ராம‌நாத‌புர‌த்தில் ம‌ண்ட‌ல‌ மாநாடு ந‌டைபெற‌ இருப்ப‌து குறித்தும் விவ‌ரித்தார்.

கூட்ட‌த்தில் செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, ம‌வ்ல‌வி ஜ‌ஹாங்கீர் அரூஸி, கோட்ட‌க்குப்ப‌ம் ர‌ஹ்ம‌த்துல்லா, ஹ‌மீதுர் ர‌ஹ்மான், ஹ‌ம்சா உள்ளிட்ட‌ நிர்வாகிக‌ள் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

காய‌ல்ப‌ட்ட‌ண‌த்தில் முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாற்று நூல் வெளியீடு

காய‌ல்ப‌ட்ட‌ண‌த்தில் முஸ்லிம் லீக் நூற்றாண்டு வ‌ர‌லாற்று நூல் வெளியீடு

தூத்துக்குடி மாவ‌ட்ட‌ம் காய‌ல்ப‌ட்ட‌ண‌த்தில் டிச‌ம்ப‌ர் 27 ஆம் தேதி ந‌டைபெற‌ இருக்கும் முஸ்லிம் லீக் பொதுக்குழுவினையொட்டி முஸ்லிம் லீக் மாநில‌ துணைத்த‌லைவ‌ர் எழுத்த‌ர‌சு ஏ. எம். ஹனீஃப் சாஹிப் அவ‌ர்க‌ள் எழுதியுள்ள‌ முஸ்லிம் லீக் வ‌ர‌லாறு முத‌ற்பாக‌ம் வெளியிட‌ப்ப‌ட‌ இருக்கிற‌து.

முஸ்லிம் லீக் ப‌திப்ப‌க‌த்தின் சார்பில் வெளியிட‌ப்ப‌ட‌ இருக்கும் இந்நூலினை இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் அகில‌ இந்திய‌ பொதுச்செய‌லாள‌ர் பேராசிரிய‌ர் கே.எம். காத‌ர் மொகிதீன் எம்.பி., அவ‌ர்க‌ளாள் வெளியிட‌ப்ப‌ட‌ இருக்கிற‌து.

முத‌ல் பிர‌தியினை இல‌ங்கையின் துறைமுக‌ம் ம‌ற்றும் க‌ப்ப‌ல் போக்குவ‌ர‌த்து துறை முன்னாள் அமைச்ச‌ரும், இல‌ங்கை முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ருமான‌ ர‌வூஃப் ஹ‌க்கிம் பெற‌ இருக்கிறார்.

இத்த‌க‌வ‌லை இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் த‌லைமை நிலைய‌ச் செய‌லாள‌ர் காய‌ல் கே.ஏ.எம். முஹ‌ம்ம‌து அபூப‌க்க‌ர் தெரிவித்தார்.

http://www.muslimleaguetn.com/hqreleases.asp?id=29

காயல்பட்டணத்தில் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் மற்றும் காயிதெமில்லத் காலனி திறப்புவிழா!

காயல்பட்டணத்தில் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் மற்றும் காயிதெமில்லத் காலனி திறப்புவிழா!



தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில பொதுக்குழுக் கூட்டம் வரும் 27.12.2008 அன்று காயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, வரும் ஜனவரி மாதத்தில், ராமநாதபுரத்தில் தென்மண்டல மாநாடும், சென்னையில், தமிழகம் தழுவிய அளவில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடும் நடைபெறவுள்ளன.

இம்மாநாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிப்பதற்காக காயல்பட்டணம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளை சார்பில் வரும் 26.12.2008 வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு காயல்பட்டணம் வள்ளல் சீதக்காதி திடலில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நகரத் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் தலைமையில் நடைபெறும் இப்பொதுக்கூட்டத்தில் நகர, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்கவும், உரையாற்றவும் உள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. மற்றும் தமிழ்நாடு மாநில செயலாளர் டாக்டர் ஹக்கீம் சையத் சத்தார், பொருளாளர் வடக்குகோட்டையார், அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, செயலாளர் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர்.

இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரச் செயலாளர் ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ் தலைமையில், மாவட்ட - நகர நிர்வாகிகள், மாணவர் அணியினர் செய்து வருகின்றனர்.

முன்னதாக, 26.12.2008 அன்று மாலை 5 மணியளவில் காயல்பட்டணம் சீதக்காதி நகரில் அமைந்துள்ள, காயல்பட்டணம் முஸ்லிம் லீகிற்குச் சொந்தமான காயிதெமில்லத் காலனி மற்றும் காயல்பட்டணத்தின் முதல் பட்டதாரி பி.ஏ.காக்கா, மாநில முன்னாள் பொருளாளர் எஸ்.எம்.கே.மஹ்மூது லெப்பை ஆகியோர் பெயரில் அமைந்துள்ள மன்ஜில்கள் திறப்பு மற்றும் தியாகி பி.ஹெச்.எம்.அப்துல் காதிர் பெயரில் அமையவுள்ள மன்ஜில் ஆகியவற்றை பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. திறந்து வைக்கிறார்.

ஈரோடு முஸ்லிம் லீக் நிர்வாகக் குழுக் கூட்டம்!

ஈரோடு முஸ்லிம் லீக் நிர்வாகக் குழுக் கூட்டம்!



ஈரோடு மாநகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நிர்வாகக் கூட்டம் மாவட்ட அமைப்புச் செயலாளர் எம்.ஏ. உமர் பாரூக் தலைமையில் மாவட்ட தலைமையகத்தில் 21.12.08 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் மாநகர தலைவர் எம். சிக்கந்தர், செயலாளர் ஏ. அக்பர் அலி, துணைத் தலைவர்கள் பி. அப்துல் ரஹ்மான், டி.ஷபியுல் லாஹ், துணைச் செயலாளர்கள் என்.ஷாநவாஸ்தீன், கே. முனாப், பொருளாளர் மௌலவி மூஸா தாவுதி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் என்.இனாயத்துல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக நகரத் தலைவர் வரவேற்றார் முடிவில் இனாயத்துல்லாஹ் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நடைபெறவுள்ள முஸ்லிம் லீக் மாநாடுகளை கருத்தில் கொண்டு தாய் சபை ஊழியர்கள் அதிக அளவில் பங்குபெற செய்கின்ற வகையில் மாவட்ட முஸ்லிம் லீகின் முழு ஒத்து ழைப்போடு ஈரோடு மாநகர பகுதியில் புதிய உறுப்பினர்களை சேர்த்து பிரைமரி கிளைகள் விரைவில் அமைப்பதென்றும் மாநாடு குறித்து விளம்பரங்கள், தெருமுனை பிரச்சாரங்கள், சுவரொட்டி, பேனர், நோட்டீஸ் போன்றவற்றை விளம்பரப்படுத்தி, மாநாட்டிற்கு வலிமை சேர்ப்பது என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.

வார்டு பிரைமரிகளை முறைப்படுத்துவதென்றும் செயல்படாத நிர்வாகிகளை மாற்றி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து இயக்க வளர்ச்சிக்கு வலிமை கூட்டுகின்ற நடவடிக் கையை மேற்கொள்ள மாநகர நிர்வாக குழுவின் முழு ஒத்துழைப்போடு மாநகர தலைவர் செயலாளர், செயல்பட இக்கூட்டம் அதிகாரம் அளிக்கிறது.

மாநகர முஸ்லிம் லீக் நிர்வாகத்தின் அனைத்து சட்ட திட்டங்கள் அறிவுரைகள், ஆலோசனைகள், செயல்திட்டங்கள் ஆகியவற்றிற்குகட்டுப்பட்டு செயல்படவேண்டும். அப்படி செயல்படாதவர்கள் மாநில, மாவட்ட மாநகர தலைமைக்குக் கட்டுப்படாதவர்கள் கட்சிக்குள் குழப்பத்தையும் இயக்க வளர்ச்சிக்கு விரோத செயல்களில் ஈடுபடுபவர்களையும் பற்றிய தகவல் வருமானால் கட்சியின் நலன் கருதி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள இக்கூட்டம் முடிவு செய்கிறது.

புதிய மாவட்ட நிர்வாகம் அமைக்கப்பட்டதற்கு பின் மிகவும் சிறப்பான செயல்பாட்டில் முன்னணியில் உள்ளது என்பதையும் ஒவ்வொரு பிரைமரிகளையும் தூண்டி பணி வாங்குவதிலும் முதன்மை மாவட்டமாக திகழும் ஈரோடு மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகத்திற்கு மாநகர முஸ்லிம் லீக் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கி ஆதரிக்கும் என்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.

ஒரு பிரைமரிக்கு 7 நிர்வாகிகள் 18 செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட வார்டு நிர்வாகமே முறையான அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகமாகும். இந்த நிலையில் அமைக்கப்படாத வார்டு நிர்வாகங்கள் தற்காலிக நிர்வாக குழு என்ற அளவிலேயே செயல்படும். அவர்களை முறைப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை ஏற்படுத்தும் வரை அங்கீகாரம் அளிக்கக் கூடாது என்று முடிவு செய்கிறது.

மாநகர நிர்வாகிகள் மாத சந்தா ரூ 100 செலுத்துவது என்று முடிவு செய்கிறது. மாநகர அளவில் ஒவ்வொரு சார்பு அணியில் 11 பேர் கொண்ட குழுவை அமைப்பது என்று முடிவு செய்கிறது.

உறுப்பினர் படிவத்தில் மாநகர தலைவர், செயலாளர் கைஒப்பம் இல்லாத படிவம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

பல காலமாக ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் தினசரி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதை கண்கூடாக காண முடிகிறது. அதற்கு மாற்றாக பழைய ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே கேட் பகுதியிலிருந்து கருங்கல்பாளையம் காவேரி ரோடு இணைப்பு வரை தொலை தூரம் அரை கிலோ மீட்டர் அளவில் வரும் புதிய புறவழிச் சாலையை ஏற்படுத்தித் தர மாநாகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

நீண்ட நாட்களாக நடைபெற்றுவரும் பெரும் பள்ளம், ஓடைபாலம் பணிகளை துரிதப்படுத்தி பொது மக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் திறந்து விட ஆவண செய்யுமாறு மாநாகராட்சி நிர்வாகத்தை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

மாநகரத்தில் நாய்களின் தொல்லைகள் குறைந்த பாடில்லை. இதனால் பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதைக் கவனத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை அப்புறப்படுத்த இக்கூட்டம் வலியுத்திக் கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள், நிறைவேற்றப்பட்டன.

தீவிரவாதத்தை எதிர்க்கும் இயக்கம் முஸ்லிம் லீக்! -கே.எம்.நிஜாமுதீன்

தீவிரவாதத்தை எதிர்க்கும் இயக்கம் முஸ்லிம் லீக்! -கே.எம்.நிஜாமுதீன்



சென்னை புளியந்தோப்பு தாதா ஷா மக்கானில் இந்திய ய+னியன் முஸ்லிம்லீக் - வட சென்னை சார்பாக பயங்கரவாத எதிர்ப்பு தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாநில இளைஞரணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன் கலந்து கொண்டு பேசியதாவது:-

இன்று உலகம் திகைத்துக் கொண்டிருக்கிறது. பதைபதைத்து கொண்டிருக்கிறது. எதனால் திகைக்கிறது? ஏன் பதைபதைக்கிறது?

தீவிரவாதச் செயல்கண்டு திகைக்கின்றோம். பயங்கரவாத அட்டூழியம் கண்டு பதை பதைக்கின்றோம்.

இன்று நாட்டில் எத்தனையோ இயக்கங்கள் இருக்கின்றன. ஆனால் நூற்றாண்டு வரலாறு உடைய ஒரே இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தான். இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் - முஸ்லிம் சமுதாய உரிமைகளுக்காகவும் - பிரச்சினைகளுக்காகவும் பாராளுமன்றத்தில் - சட்டமன்றத்திலும் குரல் கொடுத்து கொண்டிருக்கிறது. மக்கள் மன்றத்திலும் குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்., தீவிரவாதம் எங்கு தலைதூக்கினாலும் அதனை எதிர்க்கின்ற இயக்கம் முஸ்லிம் லீக்.

தீவிரவாதம் - பயங்கரவாதம் இரண்டுமே தடுக்கப்பட வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறவே இன்று இந்த தெருமுனை கூட்டம் தாதா ஷா மக்கா னில் இளைஞர் பட்டாளம் விடுமுறை நாளிலும் பெருவாரியாக கூடியிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். சமுதாயத்தின் சார்பாக நன்றியினை கூறிக்கொள்கிறேன்.

இம் மாத முதல் வாரத்தில் மும்பையில் நடைபெறும் பயங்கரவாத - தீவிரவாத செயல் கண்டு உலகமே திகைத்து போய் இருக்கிறது. அதேபோல் சில மாதங்களுக்கு முன்பாக மலேகானில் குண்டு வெடிப்பு கண்டு நாமெல்லாம் பதை பதைத்து போனோம்.

பார்த்தால் பசு போல அதிகாரியும் இன்னும் சிலரும் மலேகான் பள்ளிவாசல் ஒன்றில் குண்டு வெடிக்கச் செய்தனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலேகான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு மற்றும் சில தீவிரவாத செயல்கள் குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி ஹேமந்த கர்கரே, தீவிரவாத நோயை கண்டு பிடித்து - அந்த தீவிரவாத நோய்க்கு மருந்து கொடுக்க போகும் போது - மும்பை பயங்கரவாத அட்டூழியத்தால் அநியாயமாக கொல்லப்பட்டுவிட்டார்.

இந்த பயங்கரவாதிகள் செயலுக்கு காரணம் எது வென்றாலும் - நாடு விட்டு நாடு சென்று நடத்திய கொடுஞ்செயலாக இருந்தாலும் கண்டிக்கவே நமது இந்த பொதுக் கூட்டம்.

ஹேமந்த கர்கரே போன்ற உண்மையான அதிகாரிகள் லட்சத்தில் ஒருவர். அவருடைய உண்மையான உழைப்புக்கு, இந்திய மக்கள் அனைவரும் மரியாதை செலுத்துகிறார்கள். அவர் கொல்லப்பட்டதில் பலருக்கும் ஐயப்பாடுகள் உண்டு. நம்முடைய மும்பை முன்னாள் முதல் அமைச்சரும் - மத்திய அமைச்சருமான ஏ.ஆர். அந்துலே கூட பாராளு மன்றத்தில் இது குறித்து மும்பை பயங்கரவாதம் நடைபெற்று கொண்டு இருக்கும் போது - தாஜ் - ஓப்ராய் ஹோட்டலுக்கு செல்லாமல் - காமா ஓட்டலுக்கு கர்கரேயை போக சொன்னது யார்? இந்த கேள்வி மாண்புமிக மத்திய அமைச்சர் ஏ.அர். அந்துலே, பாராளுமன் றத்தில் வினா எழுப்பியது இன்றைக்கு நாட்டு மக்களுக்கு உள்ள ஐயப்பாடு களாகும். இதற்கு ப+ர்வாங்க நீதிவிசாரணை தேவை என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமா - நாகசாகி, ஆகிய நகரங்களின் மீது அமெரிக்க அணு குண்டை வீசியது உலகின் முதல்பெரு பயங்கரவாதம்.

இன்னும் ஈராக் நாட்டை அழித்தது - ஆப்கன் நாட்டை அடிமைப்படுத்தியது எல்லாம் அமெரிக்காவின் பயங்கரவாத செயலின் தொடர்ச்சியாகும்.

இந்தியாவில் 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் 400 ஆண்டு பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜிதை இடித்தது., இந்தியாவில் நடைபெற்ற முதல் பயங்கரவாதம்.

இதனை நடத்தியவர் கள்தான் பி.ஜே.பி. தலைவர் களான அத்வானி - முரளி மனோகர் ஜோஜி - உமா பாரதி ஆகியோர்.

பாபரி மஸ்ஜித் மீண்டும் அதே இடத்தில் மத்திய அரசு கட்டித்தர வேண்டும் என்பதுதான். இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலையாய கோரிக்கையாகும்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சட்டத்தை மதிக்கிறது. இந்திய இறையாண்மையை . தேசிய ஒருமைப்பாட்டை - சமய நல்லிணக்கத்தை - சமய ஒற்றுமையை ஆகிய வற்றை கருத்தில் கொண்டுதான் பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை ஏற்கத் தயார் என்று தனது நிலையை பாராளுமன்றத்திலும் - சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் ஆணித்தரமாக கூறி வருகின்றார்கள். எங்களது ஒப்பற்ற தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், கரத்தை பலப்படுத்தும்விதமாக இளைஞர்கள் அனைவரும் முஸ்லிம் லீகில் சங்கமித்து சமுதாய பணியாற்ற வாருங்கள் என அழைத்து புலந்தரீ ஸஃபா ஸே நஹி ஹீலா
கலந்தரீ ஸஃபா ஸே ஹீலா

என்ற அல்லாமா இக்பால் கூறியதை போல - இஸ்லாம் வாளால் பரப்பப் பட்டவில்லை - மாறாக அன்பு - அறம் - தர்மம் இவற்றால் வளர்ந்தது என்பதை தெரிவித்து எம்பெருமானான் ரசூல் கறீம் (ஸல்) அவர்களின் சுன்னத்தை பேணியவர்களாக எல்லோருடனும் சமய நல்லிணக்கத்தோடு வாழ்வோம் என கூறிக்கொள்கிறேன்.

இவ்வாறு மாநில இளைஞர் அணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன் பேசினார்.

வட சென்னையில் பயங்கரவாத எதிர்ப்பு பொதுக் கூட்டம்!

வட சென்னையில் பயங்கரவாத எதிர்ப்பு பொதுக் கூட்டம்!

சென்னை தாஷாமக்கானில் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை மாவட்ட 39வது வட்டம் சார்பில், தீவிர பயங்கரவாத எதிர்ப்பு தெருமுணைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்றது. இதில் சிறப் புரையாற்றிய, கோவை மாநகர முஸ்லிம் லீக் தலைவரும் மாநில விவசாய அணி அமைப்பாளரு மான நாவலர் கோவை நாஸர் எம்.சி., பேசும்போது குறிப்பிட்டதாவது:-

தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என சொல்கிறார்களே, தென்காசியில் ஒரு இடத்தில்-தொப்பியும்-கைப்பையும் வைத்துவிட்டு, யாரோ சென்றுவிட்டார்கள். பிறகு, வெடிவைப்பு நடக்கிறது. நடந்த வெடிவைப்பு சம்பவத்தை அந்தப் பகுதி போலீஸ் கமிஷனர் தலைமையில் உள்ள குழு முதன் முதலில் கண்டுபிடித்து, இந்த வெடி வைப்பு-சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் செய்த சதி என்று சொன்னாரே.

பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மக்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்துவிட்டு, பிறகு இந்தச் செயல்களை முஸ்லிம் மக்கள்தான் செய்தார்கள், என்று முஸ்லிம்கள் மேல் பழிசுமத்தி, தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துகிறீர்களா? இந்தச் செயல்களெல்லாம் நியாயம்தானா?

அரபிக் கல்லூரிகளில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது என்று நாட்டின் உயரிய மதிப்புமிக்க மன்றத்திலே சொன்னார்கள். இந்தியத் துணைக்கணடத்தில் உள்ள ஆயிரக் கணக்கான அரபிக் கல்லூரிகளை அரசு அதிகாரிகள் சோதனையிட்டதில் ஒரு கல்லூரியில்கூட தீவிரவாதம் போதிக்கப்படவில்லை என்று சோதனையிட்ட அதிகாரிகளே அறிக்கை வெளியிட்டார்களே இப்போது எங்கே தீவிரவாதம் இருக்கிறது தெரியுமா?

இன்று இந்தியாவிலே புகழ்பெற்ற மடங்களிலே அதன் மடாதிபதிகள் மடத்திலேயே தன் இனத்தைச் சேர்ந்தவர்களையே கொன்று குவித்து இன்று சிறைக்கூடங்களிலே-நீதி மன்றங்களிலே அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு பெண் சாமியார்கள் கூட விதிவிலக்கல்ல.

யார் என்ன செய்தாலும், அது முஸ்லிம்கள்தான் செய்கிறார்கள் என்று சொல்லக்கூடிய நிலை மாறிக்கொண்டிருக்கிறது. நியாய ரீதியாக உள்ள கோரிக்கைகளை நாம் நிச்சயம் யார் ஆட்சியாளராக இருந்தாலும் நாம் கேட்போம். எங்கு கேட்கப்படவேண்டுமோ அங்கு உரத்த குரலிலே கேட்போம். எந்த ஆட்சியிலே நாம் பங்கு கொண்டிருந்தாலும் ஆட்சியாளரிடம் கேட்போம். உதாரணமாக பாராளுமன்ற உரையிலே பி.ஜே.பி. உறுப்பினர் மல்ஹோத்ராவின் வாதத்திற்கு பாராளுமன்றத்திலேயே பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., இப்படியும் இருக்கிறதா? என்று மன்ற உறுப்பினர்கள் வியந்தனரே இது போன்ற காரியங்களை முஸ்லிம் லீக் ஒன்றுதான் செய்ய முடியும்.

இவ்வாறு கோவை நாசர் பேசினார்.

வட சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன் பேசும்போது கூறியதாவது:-

இன்று மும்பையில் நடைபெற்ற தீவிரவாத-பயங்கரவாதத் தாக்குதல் களினால் நாடே திணறிக்கொண்டிருக்கிறது. இதுகூட முஸ்லிம்கள்தான் செய்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அதற்கு முன்பு நடந்த மலேகான் குண்டு வெடிப்பு சம்பவம் முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்று அன்று எல்லோரும் ஒருமித்த கருத்திலே சொன்னார்கள் பத்திரிக்கைகளின் விஷமப் பிரச்சாரமும் அதுதான்.

இந்த விஷமப் பிரச்சாரத்தில் துளியளவும் முஸ்லிம்களுக்கு சம்பந்தமில்லை என்று, கண்டு பிடிக்க, மத்தியில் ஆட்சியில் பங்கு கொண்டிருந்த காரணத்தால் நமது பெருந்தலைவர் பேராசிரியர் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்டக் குழுவில் உறுப்பினராக இருந்த காரணத்தால் மலேகான் சம்பவம் விசாரிக்கப்பட வேண்டும் என்று சொன்ன காரணத்தால் விசாரணை மேற்கொண்டது.

விசாரணையில் சங்பரிவார், அமைப்புகள், பெண் துறவி பிரக்யாசிங் தாக்கூர், சாமியார் பாண்டே, போன்றவர்கள் மலேகான் நிகழ்வுக்கு காரணம் என்று மஹாராஷ்டிரா மாநில புலனாய்வுத்துறை உயரதிகாரி ஹேமந்த் கார்கரே, மற்றும் உயர் அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டு அவர்கள் அறிவித்தவுடன், ஒரு சம்பவத்தை நிகழ்த்தி மூன்று அதிகாரிகளையும் சம்பந்தமில்லாத இடத்திற்கு வரவழைத்து அவர்கள் மூன்று பேர்களும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கொல்லப்படுகிறார்கள் என்றால் என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே யோசனை செய்து பாருங்கள்.

இவ்வாறு வடசென்னை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன் பேசினார்.

முன்னதாக எஸ்.எம். கனி சிஷ்தி, எஸ்.கே. அப்துர் ரஹ்மான், ரப்பானி கே.ஏ. அப்துல் குத்தூஸ், இஸ்மாயில் மற்றும் பலர் பேசினர். முடிவில் ஜலால்தீன் கவிதை வாசிக்க, எஸ். சலீம்கான், நன்றி கூறினார்.

கவிதை: மது ஒழிப்பு!

கவிதை: மது ஒழிப்பு!

http://www.muslimleaguetn.com/news.asp?id=489

அடுப்படி வாழ, படிப்படி விலக்கு!
உருப்படியாக மக்கள் வாழ, படிப்படியாக மதுக்கடை குறைப்பு!

மதுவால் மக்கள் வாழ்வு போகும்
விலக்கால் அரசுக்கு வரிகள் போகும்!

வரி பறிபோனால் வழி பல உண்டு
வாழ்வு பறிபோனால், மறுவாழ்வு, உண்டோ?

மதுக்கடை கூட்டம் மனதில் பதைப்பு
பொதுக்கடை, ஆக்கியது பண்பாட்டு சிதைப்பு!

வெட்கம் இல்லாமல், வீதியில் திரிவது போல்
பக்கம் பாராமல் தெருவிலே குடிப்போர்கள்.

இளைய பாரதமே பாழ்பட்டு போகும் நிலை
இந்தியா முழுவதும் வரவேண்டும் விலக்கு நிலை!

தமிழர் நலனையே தன்னலமாய் கொண்ட
தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர்!

படிப்படியாக மதுவை விலக்கிடும் ஆரம்பம்
பூரணமாகும் நாள் தூரமாய் இருக்காது!

இறைவன் கூட மது விலக்கை
படிப்படையாகவே கட்டளையாக்கினான்!

கெடுபடியாகும் நாள்
அமுலுக்கு வரும் முன்னே ஒரேயடியாகவே
மதுவை ஒழிப்போம்!

மனிதனை மனிதன்
தீண்டாமை குற்றம்தான்!

மனதாலும் மதுவை
தீண்டாமை குற்றமல்ல!




-வடக்குகோட்டையார்
பொருளாள‌ர்
த‌மிழ் மாநில‌ இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக்
சென்னை

Wednesday, December 17, 2008

தீவிரவாதத்தை எந்த மதத்துடனும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது! -நாடாளுமன்றத்தில் பேராசிரியர்

December 17, 2008
தீவிரவாதத்தை எந்த மதத்துடனும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது! -நாடாளுமன்றத்தில் பேராசிரியர்

தீவிரவாதத்தை எந்த மதத்துடனும் இணைத்துப் பேசக்கூடாது. தீவிரவாதம் குறித்த வெள்ளை அறிக்கை, ஒன்றினை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என தலைவர் பேராசிரியர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

அஸ்ஸாம் மாநில வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே. எம். காதர்மொகிதீன் பேசியதாவது:-

அஸ்ஸாம் மாநில வெடிகுண்டு சம்பவம் தொடர்பான இந்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்க எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு முதலில் மகிழ்ச்சியை தெரிவித்துகொள்கிறேன்.

தீவிரவாதம் என்பது நமது இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவிலும், சர்வதேச அளவிலும் மிகப் பெரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது. மனித நேயத்திற்கு எதிரான, செயலாக அது இருந்து வருகிறது.

குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த அக்டோபரில் 4 மாவட்டங்களில் நடைபெற்ற கார் மற்றும் மோட்டார் வெடிகுண்டு தாக்குதலில் 80 பேர் பலியாகினர். நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்., இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்த இடத்திலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் உடனடியாக இந்த சம்பவத்திற்கு முஸ்லிம்களே காரணம் என முஸ்லிம் சமுதாயத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. இஸ்லாமிய பயங்கரவாதம், என்ற சொல்லாடல், கையாளப்பட்டது.

உண்மையில் பயங்கரவாதம் எந்த மதத்துடனும் தொடர்புடையதல்ல. பயங்கரவாதம் என்பதே ஒரு தனி மதமாகத்தான் இருந்து வருகிறது.

நாம் முஸ்லிம் பயங்கரவாதம் என்றோ அல்லது இந்து பயங்கரவாதம் என்றோ அல்லது கிறிஸ்தவ பயங்கரவாதம் என்றோ, சீக்கிய பயங்கரவாதம் என்றோ அழைக்கக் கூடாது. பயங்கரவாதம் என்பதை ஒரு தனி இனமாக - மதமாக அடையாளப்படுத்த வேண்டும்.,

பயங்கரவாதம் ஒரு குற்றம் சார்ந்த மதம். மனித நேயமற்ற மதம் மற்றும் அது ஷைத்தானுடைய மதம். அந்த பயங்கரவாத மதத்தை மற்ற எந்த மதங்களுடனோ அல்லது சமுதாயத்துடனோ ஒப்பிடக்கூடாது.

சமீபத்திலே மலேகான் குண்டுவெடிப்பு பயங்கரவாத தொடர்பான விசாரணையில் இந்து மத, துறவிகளும், பெண் துறவிகளும் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், நாம் அவர்களை இந்து பயங்கரவாதிகள் என்று அழைக்கவில்லை. அப்படி அழைப்பதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இந்து பயங்கரவாதம், முஸ்லிம் பயங்கரவாதம், கிறிஸ்துவ - சீக்கிய பயங்கரவாதம், இது போன்ற வார்த்தை பிரயோகங்களை ஆட்சேபிக்கிறேன்.

அஸ்ஸாம் மாநிலத்தில் நாம் கவனம் செலுத்தும்போது, சுமார் 1500 சம்பவங்கள் கடந்த ஆண்டுகளில் மாநிலத்தின் பல இடங்களில் நடைபெற்றுள்ளன. அதில் மிக முக்கியமானதாக இந்த தொடர் வெடிகுண்டு சம்பவம் அமைந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற இந்த சம்பவம்தான் மிகவும் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக சமீபத்தில் வெளியான மில்லி கெஜட் என்ற பேப்பரிலே குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளில் நமது நாட்டில் மட்டுமே 174 குழுக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு-கஷ்மீரில் 32ஆம், பஞ்சாபில் 12ஆம், மணிப்பூரில் 40ஆம், அஸ்ஸாமில் -36ஆம், திரிபுராவில் 30ஆம், நாக்பூரில் 3ஆம், மேகாலயாவில் 4ஆம் மிசோரமில் 2ஆம், அருணாச்சலப்பிரதேசத்தில் 1ஆம் பயங்கரவாத அமைப்புகளாக கண்டறியப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

நமது மேன்மை தங்கிய உள்துறை அமைச்சர் பயங்கரவாதம் குறித்த விவாதத்தின் போதெல்லாம், மனிதநேயத்தை நாம் வளர்க்க வேண்டும் (அப் லிஃப்ட் ஆப் ஆம் ஆத்மி) என்று குறிப்பிடுகிறார்.

ஆனால், இன்றைய முக்கியத் தேவை நாட்டிலிருந்து வெடிகுண்டு கலாசாரத்தை வேரோடு பிடுங்கி எறிவதே ஆகும். (அப்ரூட் தி ஷபாம் ஆத்மி).

பயங்கரவாதம் தொடர்பான விவாதத்தின்போதெல்லாம் நான் ஒவ்வொரு முறையும் வலியுறுத்தி கேட்கிறேன். நமது நாட்டிலுள்ள பயங்கரவாத குழுக்கள் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை அரசு தாக்கல் செய்யவேண்டும்.

அந்த பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் யார்? அவர்களின் கொள்கைகள் என்ன? அவர்கள் நமது நாட்டில் எங்கெல்லாம் உள்ளார்கள்? என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பது குறித்த அறிக்கையை மக்கள் முன் சமர்ப்பிக்க வேண்டும்., அப்போதுதான் மக்கள் அவர்கள் யார் மற்றும் எப்படிப்பட்டவர்கள் என்பதை அடையாளம் காண முடியும்.

அஸ்ஸாம் என்றால் அரபி மொழியின்படி ஷமரணம் என்று அர்த்தம். ஆனால், இன்று அஸ்ஸாம் பிணங்களின் குவியல் அறையாகவே மாறி காட்சியளிக்கிறது. அந்த மாநிலத்தில் நடைபெற்று வரும் தொடர் குண்டுவெடிப்புகளின் காரணங்களால் ஏராளமான பொது மக்கள் செத்து மடிந்துள்ளார்கள்.

இந்த வெடிகுண்டு தாக்குதலை நமது இந்திய மண்ணிலிருந்து வேரோடு, பிடுங்கி எறிந்தே ஆக வேண்டும்.,

நமது இந்திய தேசம் பல மொழி, இன, மத, கலாசாரங்களை உள்ளடக்கிய பன்மைத்துவ சமுதாயமாக திகழ்ந்து வருகிறது. அனைத்து, மதத்தைச் சேர்ந்தவரும், அனைத்து, இனத்தவரும் சங்கமித்து வாழும் தேசமாக உள்ளது.

இங்குள்ள ஒவ்வொருவரும் இந்தியாவுக்கு சொந்தமானவர்களே. அஸ்ஸாம் மாநிலத்தை பொறுத்தவரை அங்குள்ள முஸ்லிம்களை குறித்த ஒரு தவறான பிரச்சாரம் நெடுங் காலமாக பரப்பப்பட்டு வருகிறது., நாம் அந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

அஸ்ஸாம் முஸ்லிம்கள் பெங்காலி மொழி பேசுவதன் காரணமாக அவர்கள் வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர்கள் மற்றும் அந்நியர்கள் என குற்றம் சாட்டப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கு வந்த இந்த 4 ஆண்டு காலத்தில் பலமுறை அஸ்ஸாம் முஸ்லிம் பிரச்சினை தொடர்பாக உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.

இங்கே உள்ள அஸ்ஸாம் முஸ்லிம்கள், ஒவ்வொருவரும் இந்த தேசத்தை சார்ந்தவர்கள் தான். அவர்களை, நாம் நமது இந்திய குடிமக்களாகவே நடத்திட வேண்டும். அந்த மக்கள் வேற்று நாட்டினர் அல்ல. வெளியிலிருந்து அவர்கள் குடியேறவில்லை. அவர்களை அந்தியர்களாக சித்தரிப்பதும், அப்படி நடத்துவதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

நான் இன்னமும் உறுதியாக சொல்வேன். அந்த மக்கள் (அஸ்ஸாமியர்) நமது நாட்டின் மற்ற மக்களிடமிருந்து எந்த வகையிலும் வேறுபட்டவர்கள் இல்லை.

அஸ்ஸாம் முஸ்லிம்களில் ஒரு சிலர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது துணை போயிருக்கலாம். அவர்களை நாம் கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டுமே தவிர அதற்காக அஸ்ஸாம் முஸ்லிம்கள், அனைவரையுமே பயங்கரவாதிகள் என்றோ அல்லது பயங்கரவாதத்திற்கு துணை போகிறார்கள் என்றோ அல்லது அந்நியர்கள் என்றோ சித்தரிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நான் மிகவும் வலி யுறுத்தி கூறும் இந்த முக்கிய விஷயத்தை ஒவ்வொருவரும் சற்று உற்று கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நமது நாட்டில் உள்ள எந்த ஒரு நபரையும், எந்த ஒரு குடிமகனையும் அந்நியர்களாகவோ, வந்தேறிகளாகவோ நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நமது அரசுக்கு மிக முக்கியமான கடமை ஒன்று உண்டு. நமது நாட்டில் எவரெல்லாம் வெளிநாட்டினர், எவரெல்லாம் வந்தேறிகள் என்பதை கண்டறிந்து அடையாளப்படுத்த வேண்டும். நான் மறுபடியும் வலியுறுத்துகின்றேன். இது நமது அரசின் உரிமைசார்ந்த, முக்கியமான ஒன்றாகும்.

உலகில் உள்ள தேசங்களிலெல்லாம் மிகச்சிறந்த உன்னதமான தேசம் நமது இந்திய தேசம் என்று கூறி வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்து, எனது உரையை நிறைவு செய்கின்றேன்

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. பேசினார்.

பேராசிரியர், உரையாற்றிக் கொண்டிருக்கும்போது சுமார் 8 முறை எதிர்க்கட்சியினர் குறுக்கீடு செய்து இடையூறு விளைவித்தனர். ஆனாலும், பேராசிரியர், தொடர்ந்து தனது ஆணித்தரமான கருத்துக்களை பதிவு செய்தார்.

மத நல்லிணக்கம் வளர்க்க பல்கலைக்கழகம்! பாராளுமன்றத்தில் பேராசிரியர் கோரிக்கை!!

Wednesday, December 17, 2008
மத நல்லிணக்கம் வளர்க்க பல்கலைக்கழகம்! பாராளுமன்றத்தில் பேராசிரியர் கோரிக்கை!!

மதநல்லிணக்கத்தை உருவாக்கி வளர்க்கும் வகையில் மத்திய அரசு (ஹார்மனி இந்திய யூனிவர் சிட்டி) மதநல்லிணக்க இந்திய பல்கலைக்கழகம், ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

வெள்ளியன்று (12-ந் தேதி) நாடாளுமன்ற கேள்வி பதில் நேரத்திற்கு பின்னர் பூஜ்ஜிய நேரத்தில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது:-

நமது இந்தியத் திருநாட்டில் மதநல்லிணக்கத்தை நல்ல முறையில் வளர்க்கும் விதமாக மதநல்லிணக்க இந்திய பல்கலைக்கழகம் ஒன்றினை மத்திய அரசு அமைத்திட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

இப்படி அமையும் மத நல்லிணக்க இந்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து மதங்களிலும் உள்ள மத நல்லிணக்கம் அமைதி பற்றிய பொதுவான தத்துவங்கள் தொகுக்கப்பட்டு போதிக்கப்படவேண்டும்.

பகவத் கீதை, திருக்குர்ஆன், பைபிள் மற்றும் திருக்குறள் ஆகிய நூல்களில் அடங்கியுள்ள பொதுவான தத்துவங்கள் அனைத்தையும் பாடங்களாக பல்கலைக் கழகத்தில் கற்பிக்கப்பட வேண்டும்., இதன் மூலம் நமது நாட்டில் ஒரு மதத்தைச் சேர்ந்தவர் மற்றொரு மதத்தின் தத்துவங்களை - போதனைகளை நல்ல முறையில் புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் அன்பு செலுத்தவும் - மரியாதை செலுத்தவும் வாய்ப்பு அமையும்., இதன் மூலம் நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் தழைத்தோங்கும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.

டிச.20இல் இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் பொதுக்குழு மற்றும் ஊழியர் கூட்டம்!

டிச.20இல் இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் பொதுக்குழு மற்றும் ஊழியர் கூட்டம்!



வரும் 20ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் பொதுக் குழு மற்றும் ஊழியர்கள் கூட்டம் இராமநாதபுரம், வெளிப்பட்டணம், தெர்பசயனம் ரோட்டில் உள்ள பாசிப்பட்டரை தெரு, முஸ்லிம் ஜமாஅத்திற்கு சொந்தமான மதரஸாவில் மாவட்ட தலைவர் எம்.எஸ். சவுக்கத் அலி தலைமையில் நடைபெற இருக்கிறது.

இதில் மாவட்டத்தைச் சேர்ந்த, அனைத்து பிரைமரி, பகுதி இயக்க ஊழியர்கள் இளைஞர்களை அழைத்து வந்து ஆலோசனை வழங்க வேண்டும்.

1. இராமநாதபுரத்தில் நடத்த உள்ள தென் மண்டல மாநாடு சம்பந்தமாக ஆலோசனை. 2. தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள

; மாநில முஸ்லிம் லீக் அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீது சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tuesday, December 16, 2008

மும்பை பயங்கரவாத தாக்குதல் இந்தியர்களை உணர்வுப்பூர்வமாக இணைத்துள்ளது! -டெல்லியில் பேராசிரியர்

மும்பை பயங்கரவாத தாக்குதல் இந்தியர்களை உணர்வுப்பூர்வமாக இணைத்துள்ளது! -டெல்லியில் பேராசிரியர்



மும்பையில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் இந்தியர்களை உடல் ப+ர்வமாக இல்லாவிட்டாலும் உணவுப்ப+ர்வமாக இணைத்துள்ளது. பண்டித ஜவஹர்லால் நேரு கூறி வந்த அந்த உணர்வுப்ப+ர்வமான ஒருமைப்பாடு நிகழ்ந்துள்ளது என்று மும்பை பயங்கரவாத தாக்குதல் குறித்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் டெல்லியில் கருத்து தெரிவித்தார்.

நேற்று நடந்த முதல்நாள் பாராளுமன்ற கூட்டத்தில் மும்பை தாக்குதல் குறித்து அறிக்கை சமர்ப்பித்த உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொள்ள மத்திய அரசு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதன் மீது பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்பட பலர் பேசினார்கள்.

வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரும் பேசினார்கள். பின்னர் மும்பை வெடிகுண்டு தாக்குதலுக்கு பாகிஸ்தானை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல் நாள் நிகழ்ச்சி குறித்து பாராளுமன்ற தொலைக்காட்சித் துறையினர் பேராசிரியர் கே.எம்.கே.விடம் நேர்காணல் நிகழ்ச்சியை மேற்கொண்டார்கள்.



அப்போது அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து பேராசிரியர் கூறியதாவது:-

சமீபகாலமாக பாராளுமன்ற நிகழ்ச்சி இடைய+று இல்லாமல் நடைபெறவில்லை. எதிர்பார்த்த அளவு கூட்டம் முழுமையாக நடைபெற முடியாமல் அவை பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வுகளை கடந்தகால பாராளுமன்ற வரலாறு கண்டிருக்கிறது. ஆனால், இன்றையதினம் புதிய வரலாறு ஏற்பட்டிருக்கிறது அவை ஒரே குரலில் ஒலித்தது. இதுவரை, ஆயுத ராணுவம் (யசஅ யசஅல) பற்றி விவாதித்த அவை தற்போது வெடிகுண்டு படை (டிஅ யசஅல) பற்றி விவாதித்தது.

அவை ஒருமித்த குரலில் ஒலித்ததற்கு காரணம் பயங்கரவாத தாக்குதல் என்பது மனித சமுதாயத்தின் மீது ஏவப்படும் போர் ஆகும். அது முழுமையாக அகற்றப்பட வேண்டும். உலகில் எங்கிருந்தாலும் அது அகற்றப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. இதை அனைவரும் ஆதரிக்கிறார்கள் - ஏற்றுக்கொள்கிறார்கள்.

பாராளுமன்ற முதல் நாள் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி பயங்கரவாதத்திற்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தார் - பாராட்டினார். இதற்கு காரணம் அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. மேலும் அவை சரியான நடவடிக்கைகளாகும்.

பயங்கரவாதத்திற்கு இந்திய மண்ணில் இடமில்லை என்பதை பாராளுமன்றத்தின் முதல் நாள் கூட்டம் நிரூபித்துள்ளது.

இந்தியா ஒரு முழுமையடைந்த பாராளுமன்ற ஜனநாயக நாடு. எனவே, பயங்கரவாதம் தொடர்பாக மற்ற நாடுகளுடன் நாம் செயல்படும்போது முதுமையடைந்த ஜனநாயக முறைகளில் நாம் செயல்பட முடியும்.

ஆனால் பாகிஸ்தான் அப்படி அல்ல. அங்கே ஒரு நொண்டி ஜனநாயகம் நடைமுறையில் இருக்கிறது. அவர்கள் பேசுவது ஒன்றும், செயல்படுவது ஒன்றுமாக கடந்த காலத்தில் இருந்திருப்பதை வரலாறு கண்டிருக்கிறது.

எனவே, அப்படிப்பட்ட ஒரு நாட்டுடன் நாம் நேரிடையாக சில நடவடிக்கைகளை அறிவுறுத்த முடியாது. அதனால்தான் ஐ.நா. சபை மூலம் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கவும், நிர்ப்பந்தம் செய்யவும் தேவையான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளோம். நமது மத்திய அரசின் கொள்கையும் அதுதான்.



பயங்கரவாத தாக்குதல் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை ஏதோ எதிர்பாராமல் நடக்கக்கூடிய நிகழ்வல்ல. இன்றைய தினம்தான் இந்த இடத்தில்தான் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு இடத்தில் திடீர் என்று அது நடக்கும் என்று இந்திய மக்கள் அனுபவப்ப+ர்வமாக பழக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் மும்பையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலின்போது அனைத்து தரப்பினர்களிடமும் ஒற்றுமையும், பலமும், தைரியமும் காணப்பட்டது.

அதிரடிப்படையினர், காவல்துறையினர் மற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் திடமனதுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டார்கள். அது பயங்கரவாதத்திற்கு எதிராக, விடுக்கப்படும் ஒரு செய்தியாகும்.

மும்பை பயங்கரவாத தாக்குதல் ஜனநாயகத்தை வெற்றிகொள்ளச் செய்திருக்கிறது. ஜனநாயகத்தின் அடிப்படையே மக்களிடையே விழிப்புணர்வை வெளிப்படுத்துவதுதான். இந்த வெளிப்புணர்வு மும்பை தாக்குதலின்போது காணப்பட்டது, மும்பை தாக்குதல் இந்திய மக்களை ஒருங்கிணைத்திருக்கிறது. உடல்ப+ர்வமாக இல்லாவிட்டாலும், உணர்ச்சி ப+ர்வமாக இந்திய மக்களை அது ஒருங்கிணைத்திருக்கிறது. ஒரு உணர்வு ஒருமைப்பாடு உண்டாக்கியிருக்கிறது. காலஞ்சென்ற பண்டித ஜவஹர்லால் நேரு கனவு கண்ட உணவுப்ப+ர்வ ஒருமைப்பாடு மும்பை குண்டுவெடிப்பால் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியர்கள் அனைத்து பாகுபாடுகளையும் நீக்கிவிட்டு ஒற்றுமையையும், உணர்வுப்ப+ர்வமாக, ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தியிருக்கிறது.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. கூறினார்

ரியாத் காயிதெ மில்லத் பேரவை நடத்திய கருத்தரங்கம்





ரியாத் காயிதெ மில்லத் பேரவை நடத்திய கருத்தரங்கம்

ரியாத் காயிதெ மில்லத் பேரவை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் மையம் ஆகியவை இணைந்து மாபெரும் கருத்தரங்கத்தினை ரியாத் பத்தா கிளாசிக் ஆடிட்டோரியத்தில் 07-12-2008 ஞாயிறு மாலை நடத்தியது.

இக்கருத்தரங்கிற்கு ரியாத் காயிதெமில்லத் பேரவை தலைவர் எம்.டி. ஹஸ்புல்லாஹ் தலைமை வகித்தார். எஸ். அப்துர் ரஹ்மான், பி. முஸ்தபா கமால், பி.எம். ரஹ்மத்துல்லாஹ், காஜா நவாஸ், பண்ருட்டி எம். ஜக்கரிய்யா, வி.ஏ.எம். இக்பால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

லால்பேட்டை முஹம்மது நாஸர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம்.அப்துல் ரஹ்மான், குவைத் காயிதெமில்லத் பேரவை தலைவர் டாக்டர் அன்வர் பாஷா, ரியாத் கேரளா முஸ்லிம் கலாச்சார மைய பொதுச்செயலாலர் அஷ்ரப், ரியாத் மர்கஸ் இஸ்லாஹி செண்டர் செயலாளர் மௌலவி அப்துர் ரஸாக் பாகவி, எஸ்.வி. அர்ஷுல் அஹமது, எஸ்.ஏ. அப்துல் மாலிக், ஏ. இம்தியாஸ் அஹமத் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.

என்.டி. சதக்கத்துல்லாஹ் நன்றியுரை நிகழ்த்தினார்.

Friday, December 12, 2008

கட்டுரை: மலேகானும், மக்கள் தீர்ப்பும்! -வெ.ஜீவகிரிதரன்

கட்டுரை: மலேகானும், மக்கள் தீர்ப்பும்! -வெ.ஜீவகிரிதரன்


http://www.muslimleaguetn.com/news.asp?id=452


ஐந்து மாநில சட்டமன்றங்களின் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் அரசியல் தளத்தில் பல்வேறு உணர்வுகளை - அதிர்ச்சி, ஆனந்தம், எமாற்றம், வெற்றி, தோல்வி - என அனைத்து உணர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லி சட்டமன்றத்தை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளது. டெல்லி சட்டமன்றத்தை கைப்பற்றுவது, பாராளுமன்றத்தையே கைப்பற்றுவது போல் மிகவும் பெருமைக்குரிய ஒன்று. வழக்கமாக ஆளும் கட்சிக்கு எதிராகவே வாக்குகள் பதிவாகும். ஆனால் தொடர்ந்து 3-வது முறையாக காங்கிரஸ் கட்சியையே மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது மக்களின் உணர்வுகளை தெளிவாக காட்டுகிறது. டெல்லி மட்டுமல்லாமல் ராஜஸ்தான் சட்டமன்றத்தை பா.ஜ.க-விடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியிருப்பதுதான் சங்பரி வாரங்களுக்கு உச்சகட்ட அதிர்ச்சியாகும்.

கடந்த தேர்தலில் ராஜஸ்தான் சட்டமன்றத்தில் 56 இடங்களை மட்டுமே பெற்ற காங்கிரஸ் இம்முறை 96 இடங்களை கைப்பற்றியுள்ளது. மத்தியப்பிரதேசத்திலும் 2003 - தேர்தலில் 38 இடங்களை மட்டுமே பெற்றிருந்த காங்கிரஸ் இம்முறை ஏறக்குறைய இருமடங்காக 71 இடங்களை கைப்பற்றியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்திலும் கடந்த முறை 37 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் இம்முறை ஒன்று கூடுதலாகி 38 இடங்களை கைப்பற்றியுள்ளது. மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 இடங்களில் 32 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலேறுகிறது.

டெல்லி மற்றும் மிசோரம் தவிர மற்ற மாநிலங்கள் சென்ற முறை பா.ஜ.க.வின் ஆளுகையில் இருந்தவை. இவற்றில் மத்தியப்பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தாலும், அம்மாநிலங்களில் பா.ஜ.க. பெற்ற வாக்குகளின் சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. குறிப்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 31 சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. இழந்துள்ளது கவனிக்கத்தக்க ஒரு மாற்றம். வெற்றி பெற்றுவிடலாம் என்ற நப்பாசையுடன் இருந்த பா.ஜ.க. 42 சட்டமன்ற தொகுதிகளை இழந்து படுதோல்வியை சந்தித்துள்ளது.

இம்முறை தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க. முன்னிறுத்தியது நாடெங்கும் நடக்கும் தீவிரவாத - பயங்கரவாத தாக்குதல்களைத்தான். பயங்கரவாத செயல்களுக்கு முஸ்லிம் அமைப்புகள்தான் காரணம் என்றும், காங்கிரஸ் கட்சி தன்னுடைய ஓட்டு வங்கியை காப்பாற்றிக் கொள்வதற்காக தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை திறம்பட செய்யவில்லை என்றும், பொடா போன்ற சட்டங்களை மீண்டும் கடுமையான சட்ட ஷரத்துகளோடு கொண்டு வந்து தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் வேரறுக்க பா.ஜ.க-வால் மட்டுமே முடியுமென்றும் பசப்பியது. காங்கிரஸ் கட்சி கையாலாகாத கட்சி என்றும், தேச பாதுகாப்பு பற்றி காங்கிரஸ் கட்சிக்கு கவலையே இல்லையென்றும், பா.ஜ.க. மட்டுமே தேச நலனைப் பற்றி சிந்திக்கும் - பாடுபடும் தேசபக்தி மிக்க கட்சி என்றும் தம்பட்டமடித்தது.

ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் இந்த பசப்பு வார்த்தை காரர்களுக்கு புரியவைத்துவிட்டது. படுதோல்வி கண்ட ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜேயின் வார்த்தைகளில் கூறுவதென்றால், ~~மக்கள் எப்போதுமே அறிவாளிகள். அவர்களின் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களைத்தான் அறிவாளிகள் என்கிறார். அப்படியெனில் பா.ஜ.க-விற்கு வாக்களித்த வர்களை முட்டாள்கள் என சொல்லாமல் சொல்கிறாரா?

இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் தீவிரவாத - பயங்கரவாத எதிர்ப்பு முகமூடி மக்களைக் கவரவில்லை. காரணம், மலேகான் குண்டுவெடிப்பு சதிகளில் பா.ஜ.க.வின் நடவடிக்கை - அதன் தேசபக்த முகமூடியைக் கிழித்து, அதன் பயங்கரமான பாசிச முகத்தை - ரத்த வெறி கொண்ட சங்பரிவார முகத்தை - அழுகிப்போன இந்துத்துவா முகத்தை - மக்களுக்கு அடையாளம் காட்டிவிட்டது. மும்பை தாஜ் ஓட்டல் மீதான பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து நாடு முழுவதும் அனைத்து மக்களும், தங்களின் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை மறந்து இந்தியராக ஒன்றுபட்டு எழுந்து நின்று தீவிரவாதத்துக்கு எதிராக ஓங்கி குரல் கொடுத்த நேரத்தில், மும்பைத் தாக்குதலில் இறந்தவர்களின் பிணங்களை வைத்து அரசியல் நடத்த முயன்றது பா.ஜ.க. அதன் மலிவான தேர்தல் உத்தியை மக்கள் இனம் கண்டு நிராகரித்துவிட்டனர் என்பதுதான் பா.ஜ.க.வுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி.

மலேகான் சதிகாரர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. வக்காலத்து வாங்கி பேசியதுடன், புலனாய்வு அமைப்பின் தலைவர் ஹேமந்த் கர்கரேவை மிகவும் இழிவாகப் பேசியதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பா.ஜ.க.வின் உளுத்துப் போன ~இஸ்லாமிய தீவிரவாதம் என்ற ஊளையை, மலேகான் சதித்தனம் அடையாளம் காட்டி விட்து. பா.ஜ.க.வின் ஊசிப் போன தேசபக்தியை மக்கள் நம்பவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.

இனி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க., புதிய முகங்களையும், புதிது புதிதாக முகமூடிகளையும் மாட்டிக்கொண்டு வரும்போது மக்கள் அதன் சவப்பெட்டிக்கு கடைசி ஆணியை அறைய தயாராகிவிடுவார்கள்.

- வெ. ஜீவகிரிதரன்
மாநில அமைப்பாளர், வழக்கறிஞர் அணி,
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலில் இ.அஹ்மத் ஆற்றிய உரை!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலில் இ.அஹ்மத் ஆற்றிய உரை!

http://www.muslimleaguetn.com/news.asp

தீவிரவாத தாக்குதல் நடத்தி பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் பயங்கரவாத அமைப்புகளை குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா, மற்றும் ஜமாத்-யுத்-தாவா அமைப்புகளை சட்டவிரோதமான அமைப்புகள் என்று ஐ.நா. சபை அறிவிக்குமாறு இந்தியாவின் சார்பில் இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சரும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவருமான, இ.அஹமது கேட்டுக்கொண்டார்.



ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ~பயங்கரவாத தாக்குதலால் சர்வதேச அமைதிக்கும் - பாதுகாப்புக்கும் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் இந்த தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு அமைச்சர் இ. அஹமது இந்திய அரசாங்கத்தின் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

பேச்சின் தொடங்கத்தில் அவர் மும்பையில் கடந்த மாதம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் அதற்கு முன் ஜெய்ப்ப+ர், டெல்லி மற்றும் அஹமதாபாத் போன்ற நகரங்களில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விவரித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமான அனைவரும் நீதியின் பிடியின் கீழ் கொண்டு வரவேண்டும்., இந்தியா தொடர்ந்து நாட்டுக்கு வெளியே இருந்து வரும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆட்பட்டு வருகிறது.

ஒரு நாட்டினுடைய அரசியல் விருப்பங்களை பயங்கரவாத தாக்குதல் மூலம் நிறைவேற்ற முயலும் போது பயங்கரமான ஒரு இயந்திரம் உருவாக்கப்படுகிறது. இந்த பயங்கரவாத தாக்குதல்களால் உயிர்ச் சேதங்களும், பொருளாதார சேதங்களும் மிகப்பெரிய அளவில் ஏற்படுகிறது.



எனவே, இந்த மாதிரியான பயங்கரவாத அமைப்புகளை குறிப்பாக, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கரே இ தொய்பா மற்றும் ஜமாத் யுத் தாவா போன்ற அமைப்புகளை சட்ட விரோதமான தீவிரவாத அமைப்புகளாக ஐ.நா. சபை அறிவிக்க வேண்டும்.

ஜமாத் யுத் தாவா மற்றும் அதுபோன்ற, அமைப்புகள், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டு அவற்றிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்.

எந்த நாட்டில் தீவிரவாதம் முளைவிடுகிறதோ அந்த நாட்டில் அவை செயல்படுவதை வேகமான நடவடிக்கைகள் மூலம் தடை செய்ய வேண்டும்., தீவிரவாத தாக்குதல்களி லிருந்து இந்திய மக்களை பாதுகாக்கும் பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது., ஆனால், இதுவரை இந்தியா பொறுப்புணர்வோடும், சகிப்புத்தன்மையோடும் இந்த விஷயத்தில் நடந்துகொண்டிருக்கிறது., பயங்கரவாத தாக்குதலை நடத்த அமைப்புரீதியாக செயல்படுபவர்கள், நிதி உதவி வழங்குபவர்கள், விய+கம் வகுத்து கொடுப்பவர்கள் போன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் .

பயங்கரவாதம் என்ற, தீமையான நடவடிக்கைகளுக்கு கொள்கை ரீதியாக மற்றும் தார்மீக ரீதியாக உதவி செய்பவர்களும் நீதியின் பிடிக்குள் கொண்டுவர வேண்டும். பயங்கரவாத தாக்குதல் நடைபெறும் போதெல்லாம் உலகம் அதிர்ச்சிக் குள்ளாகிறது. அந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னால் உள்ள கட்டமைப்புகள், வெளிப்படையாக தெரிவதில்லை. பயங்கரவாத தாக்குதல்கள் எதேச்சையாக நிகழ்பவை அல்ல. அல்லது எப்போதோ நிகழ்வதும் அல்ல. அவற்றிற்கு முன்கூட்டியே திட்டமிடுகிறார்கள். போதிய பண உதவியும் வழங்குகிறார்கள்.

ஒரு பயங்கரவாத தாக்குதல்களுக்கு சரியான திட்டமிடுதல் தேவைப்படுகிறது. அதற்கு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன., பயங்கரவாதிகள் தங்குவதற்கு மறைவிடங்கள் தேவைப்படுகின்றன.

எனவே, சர்வதேசரீதியிலும், தேசிய அளவிலும் பயங்கரவாத தாக்குதல் என்ற கொடுமையை அடியோடு வேரறுக்க பயனளிக்கக் கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.



1996ஆம் ஆண்டில் பயங்கரவாதம் தொடர்பாக ஐ.நா. சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு சர்வதேச ரீதியில் சட்ட வரைவு கொடுக்கப்பட வேண்டும்., அந்த தீர்மானம் தீவிரவாதத்திற்கு சரியான விளக்கம் கொடுக்கப்படாத காரணத்தை காட்டி அதை கிடப்பில் போட்டுவிடக்கூடாது. ஏனென்றால் பயங்கரவாதம் தொடந்து அப்பாவிகளின் உயிரை பறித்து வருகிறார்கள்.

இவ்வாறு அமைச்சர் .இ.அஹமது தெரிவித்தார்.

ஐ.நா.சபை பாதுகாப்பு சபையில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. அதில் இந்தியா இடம் பெறவில்லை. ஆனாலும்கூட இந்தியா அழைக்கப்பட்டு, பேச பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனவே, இ.அஹமதின் பேச்சை ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பு நாட்டு பிரதிநிதிகள் மிகுந்த அக்கறையுடன், கேட்டார்கள்.

Thursday, December 11, 2008

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு அறிவிப்பு!

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு அறிவிப்பு!


தமிழ்நாடு மாநில, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக் குழுக்கூட்டம், 27-12-2008 சனிக்கிழமை, காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரில், கீழ்கண்ட முகவரியில், தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்கள் தலைமையில் நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல் :
1., அரசியல் நிலைமை
2. இயக்க நிதி சேகரிப்பு
3. மண்டல மாநாடுகள், முஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு பற்றி
4. லக்னோ அகில இந்திய மாநாட்டில் பங்குபெறுவது பற்றி
5. தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள்

கூட்டம் நடைபெறும் இடம் :
வாவு வஜிஹா மகளிர் கல்லூரி காயல்பட்டினம் -, திருச்செந்தூர் நெடுஞ்சாலை காயல்பட்டினம் - 628 204.

திருநெல்வேலி - தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு வருபவர்களை காயல்பட்டினம் அழைத்து வர தூத்துக்குடி மாவட்டம் சார்பாக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தொடர்புக்கு கீழ்கண்டவர்களில் ஒருவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம்:
1. வாவு நாஸர் (தூத்துக்குடி மாவட்ட செயலாளர்) - செல் : 9788131176
2. பி.எம்.எஸ்.அமானுல்லா (காயல் நகர செயலாளர்) - செல் : 9842199731
3. எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ (மாநில பதிப்பக குழு உறுப்பினர்) - செல் : 9443839401

http://www.muslimleaguetn.com/hqreleases.asp?id=27

கேட்பதாக இல்லை இனி....

கேட்பதாக இல்லை இனி....
ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,அபுதாபி.

வேறு என்ன இருக்கு...?

இஸ்லாமிய அடையாளத்தோடு
நாட்டிலே நாடமாட ஊறு ஏற்பட்டதே...
உலகரங்கமே பார்த்ததே நாட்டின்
நாடாளும் சபை கண் விழித்திருந்ததை...!

உங்கள் ஊரரியுமே,இன்றும்
நம் ஷரீஅத்தின் சுக வாழ்வை
சுவைக்கும் உரிமையை பெற்று தந்தவர்
மராட்டிய மாவீரர் பனாத்வாலா என்பதை...!

அப்புறம் ஏதாவது...?
ஆம்...இதோ ..!
அவசர ஊர்தி எனும் ஆம்புலன்ஸ் சேவையை
அறிமுகம் செய்து காட்டியது யார்...?
தஞ்சை மாவட்டத்து தாய்ச் சபை
சொந்தங்கள் தானே...!

அதற்க்கு ஒன்றும் நாங்கள் சலைத்தவர்கள்
அல்ல என்று
அன்று மறுமொழி பகன்ற இராமநாதபுரம் மாவட்ட
தாய்ச் சபையின் ஆம்புலன்ஸை மறக்க முடியுமா...?

ஏன் இதெல்லாம் இப்போ..?
பூனை கண் மூடினால் உலகம் இருட்டாம்...!
நாங்கள் கண்ணயர்ந்தால் குருடாம்?

நாட்டிற்க்கு புதிய சட்டம்...
திருமணத்தை பதியுங்கள் என்று...!
இல்லை..இல்லை..அது பதியாதவர்களுக்கு...
நாங்கள் பதிவை பல்லாண்டாக செய்து
காட்டிக் கொண்டிருப்பவர்கள்.

எங்களின் பதிவை
சட்டத்தின் பட்டமாக்குங்கள்!
என்று முழங்கி வரும் முனீருல் மில்லத்தின் முழக்கம்
தெருவில் அல்ல...நாட்டின் ஆட்சி மன்றத்தில்...!

வேற புதுசா...?
மதரசாக்களில் தீவிரவாதமென்று
அபாயக்குரல் பாராளுமன்ற்தில்...
எழுந்தது சமுதாயக்குரல்..,

அப்படியானால் நான்...?
அங்கிருந்து வந்தவன் தானே நானும்...?
அறநெறிகள் போதிக்கப்பட்டுத்தானே வளர்க்கப்பட்டேண்.
மதரஸா என்பது ஒழுக்க நெறிக்கூடம்
இது பேராசிரியரின் சொல் வீச்சு...!

அடுத்து என்ன..?
சன்மார்க்க மேதைகளான உலமாக்களின்
கோரிக்கை பேராசிரியர் முனீருல் மில்லத்திடம்...
மதரஸாக்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த
சிறப்பு விலைசிலிண்டர் தளர்த்தப்பட்டு விட்டது
திருப்பித்தர ஆவண செய்ய வேண்டும்!

அடுத்த சில வாரங்களில்
அந்த கோரிக்ககை பேராசிரியரால் பாராளுமன்றத்தில்,
எதையும் உரிய இடத்தில் சொல்லி செய்வதுதானே
முஸ்லிம் லீகின் பண்னெடுங்கால பண்பு!

இன்னும் வேண்டுமா..?
ஆம்...இருக்கிரது
இன்னும் பல நூறாண்டுகளுக்குப் பின்
சமுதாயத்திற்க்கு உள்ள
தேவைகளும்,சேவைகளும்,மணிவிழா மாநாட்டின்
பிரகடனத்தில் மணி மணியாய் இருக்கிரது..!

சிலதை சொல்ல முடியும்!
சிலதை சொல்ல முடியாது...!
ஆனால்...!ஒன்று-
சொல்லிக் காட்டத் தேவையில்லை
என்று சொல்லி வளர்த்த
எங்கள் தலைவர்களின் சொல்லை
கேட்பதாக இல்லை...!இனி!!!



Abdul rahman
ibnuthalabathi@yahoo.co.in

Thursday, December 4, 2008

ஓ டிசம்பர் ஆறே நீ அமைதி பெறு!!!

ஓ டிசம்பர் ஆறே நீ அமைதி பெறு!!!

ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,அபுதாபி.


இந்தியாவிற்க்கு ஏற்ப்பட்ட
தலை குனிவு...!
உலக வரலாற்றிர்க்கு ஒரு
கருப்பு நாள்!


இறை இல்லத்தையா
இடித்தார்கள்...?
இந்திய இஸ்லாமியர்களின்
இதயங்களை அல்லவா இடித்தார்கள்!


இடிந்த இதயங்கள்...
படபடத்துக் கொண்டே இருக்கிரது
ஒரு நாள் வியாபாரம் செய்ய
இயக்கம் ஆரம்பித்தவர்கள்...!


இன்னும் வியாபாரத்தை
முடித்தபாடில்லை...!
ஆம்!இதோ அடுத்த ஆண்டு
பள்ளி வாசலை கட்டி விட்டு வருகிறோம்..!


என்று புறப்பட்டவர்கள்
இன்னும் சொன்ன இடத்திலேயே
நிற்கிறார்கள் ஆனால்.. நம்மவர்கள்
இன்னும் ஏமாந்து நிற்கிறார்கள்!!!


முஸ்லிம் லீக் மட்டும்
டிசம்பர் 6 க்கு என்ன செய்யும்?

ஆக்கப்பூர்வமான பணிகளை
அரவமில்லாமல் செய்கிரதே...!
நாட்டை ஆளுபவர்களுக்கு எத்தனை
ஆயிரம் கடிதங்கள்,தந்திகள்..?


இடித்து விட்டு பாறாளுமன்றத்தில்
அமர்ந்திருந்த அத்வானி,ஜோஷி போன்ற
எதிரிக்களை நேரிலே
குற்றவாளிக்காளே வெளியேறுங்கள்
இன்று வீர கர்ஜனை செய்ததது
முஸ்லிம் லீக் தலைவர்கள் தானே?


எத்தனை சமய,சமூக நல்லிணக்க
கூட்டங்கள்...?
இடித்தப் பள்ளியை கட்டித் தாருங்கள்
என்று ச்கோதர சமுதாய தலைவர்களின்
வேண்டுகோளாக பேச வைத்தது...?


இன்றும் நாங்கள் சொல்லுவது!
ஆண்டவனின் நீதிமன்றத்தை
நம்பி நிற்பவற்கள் நாம்...,


இருந்தாலும்,இந்தியாவின்
இறையான்மைக்கு ஊறு வேண்டாம் என்று
இந்நாட்டின் நீதி மன்றத்தையும் நம்பி
நிற்கிறோம்...!


பள்ளி வாசல் நமக்கே என்ற
பக்குவமான உண்மை தீர்ப்பிர்க்காக!!!

சரி
இந்தியாவில் எத்த்னை மாநிலங்கள்
அங்குள்ள முஸ்லிம்கலெல்லாம்
டிஸம்பர் பிஸ்னஸ்
செய்வதில்லையே ஏன்..?


அவர்களும் நம்பி நிற்கிறார்கள்
நீதிமன்ற தீர்ப்பு நமக்கென்று...!
இனி நாமும் சொல்லுவோமே
டிஸம்பர் ஆறே அமைதி பெறு என்று!!!


டிஸம்பர் ஆறே உன்னை
மறக்கவே மாட்டோம்
மாண்டவர்கள் நங்கள் தானே..?
மருந்தாக தருவோம் மக்களுக்கு!


சமய நல்லிணக்க கூட்டங்கள்
வாயிலாக சகோதர வாஞ்சையோடு
சபதமெடுப்போம்
சத்தியம் பள்ளி வாசல் சமுதாயத்திற்க்குத் தான்!!!



Abdul rahman
ibnuthalabathi@yahoo.co.in

Wednesday, November 19, 2008

இராம‌நாத‌புர‌த்தில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாவ‌ட்ட‌ செயற்குழுக் கூட்ட‌ம்

இராம‌நாத‌புர‌த்தில் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் மாவ‌ட்ட‌ செயற்குழுக் கூட்ட‌ம்

இராம‌நாத‌புர‌த்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவ‌ட்ட‌ செய‌ற்குழுக் கூட்ட‌ம் மாவ‌ட்ட‌ த‌லைமை அலுவ‌ல‌க‌த்தில் 15 ந‌வ‌ம்ப‌ர் 2008 ச‌னிக்கிழ‌மை காலை ந‌டைபெற்ற‌து.
மாவ‌ட்ட‌ செய‌ற்குழுக் கூட்ட‌த்திற்கு இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாவ‌ட்ட‌ த‌லைவ‌ர் ஹாஜி எம்.எஸ். சௌக்க‌த் அலி த‌லைமை தாங்கினார். பேரையூர் ம‌வ்ல‌வி சாகுல் ஹ‌மீது அரூஸி இறைவ‌ச‌னங்க‌ளை ஓதினார்.

மாவ‌ட்ட‌ செய‌லாள‌ர் ஹாஜி எம்.எஸ்.ஏ. ஷாஜ‌ஹான் அனைவ‌ரையும் வ‌ர‌வேற்று தீர்மான‌ங்க‌ளை முன்மொழிந்தார். கூட்ட‌த்தில் ப‌ல்வேறு தீர்மான‌ங்க‌ள் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌. அவை வ‌ருமாறு :

மறைந்த‌ மாவ‌ட்ட‌ துணைத்த‌லைவ‌ர் ஹாஜி கே.கே.எஸ்.ஏ.ப‌க்ருதீன் ம‌றைவுக்கு தீர்மான‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌து. அன்னார‌து தியாக‌ மன‌ப்பான்மையை மாவ‌ட்ட‌ நிர்வாகிக‌ள் நினைவு கூர்ந்த‌ன‌ர். அவ‌ருக்காக‌ துஆ ஓத‌ப்ப‌ட்ட‌து.

இராம‌நாத‌புர‌ம், விருதுந‌க‌ர், சிவ‌கெங்கை,க‌ன்னியாகும‌ரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய‌ மாவ‌ட்ட‌ங்க‌ள் ப‌ங்கேற்கும் ம‌ண்ட‌ல மாநாட்டினை இராம‌நாத‌புர‌த்திலேயே ந‌ட‌த்த‌ மாநில த‌லைமையினை கேட்டுக் கொள்வ‌து என‌ தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து. இத‌ற்காக‌ 31 பேர் அட‌ங்கிய‌ குழு ஏற்ப‌டுத்தப்ப‌ட்டுள்ள‌து. இக்குழு பிற‌ மாவ‌ட்ட‌ நிர்வாகிக‌ளுட‌ன் க‌ல‌ந்துரையாட‌ல் செய்யும்.
டிச‌ம்ப‌ர் மாத‌ம் 26,27 ஆகிய‌ தேதிக‌ளில் உத்திர‌ பிர‌தேச‌ மாநில‌ம் ல‌க்ணோவில் ந‌ட‌க்கும் அகில‌ இந்திய‌ மாநாட்டில் மாவ‌ட்ட‌த்தில் இருந்து அதிக‌ அள‌வில் ப‌ங்கேற்ப‌து என‌ தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து.

மாலேகான் குண்டுவெடிப்பில் உண்மைக் குற்ற‌வாளியை க‌ண்டுபிடித்து ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ வேண்டும் என‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌ட்ட‌து.

இல‌ங்கைத் த‌மிழ‌ர் துய‌ர்துடைக்க‌ ஒத்துழைப்பு ந‌ல்கி வ‌ரும் அனைத்து அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளுக்கும் ந‌ன்றி தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து.

மேலும் இப்பிர‌ச்ச‌னையில் ஒரு குழுவை ஏற்ப‌டுத்த‌ பிர‌த‌ம‌ரை த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் கேட்டுக் கொள்ள‌வேண்டும் என‌வும், அக்குழு இல‌ங்கை சென்று பிர‌ச்ச‌னைக‌ளை ஆராய்ந்து ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ப்ப‌ட‌ வேண்டும் என‌வும் வேண்டுகோள் விடுக்க‌ப்ப‌ட்டது.
ராமேசுவ‌ர‌ம் தொட‌ர்வ‌ண்டிப்பாதை விரிவாக்க‌ப் ப‌ணி ந‌ட‌ந்த‌ பின்ன‌ர் அர‌சு அறிவித்த‌ப‌டி வ‌ட‌மாநில‌ங்க‌ளை இணைக்கும் வ‌ண்ண‌ம் தொட‌ர்வ‌ண்டிக‌ளை விட‌ அர‌சும், ர‌யில்வே நிர்வாக‌மும் ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ வேண்டும்.

மாநில‌ பொருளாள‌ர் நிதிநிலை குறித்து அனுப்பிய சுற்ற‌றிக்கை கூட்ட‌த்தில் வாசிக்க‌ப்ப‌ட்ட‌து.
ப‌யிற்சிப் பாச‌றைக‌ள் ந‌ட‌த்திய‌ ப‌னைக்குள‌ம், ம‌ண்ட‌ப‌ம், கீழ‌க்க‌ரை ந‌க‌ர‌ முஸ்லிம் லீக் கிளைக‌ளுக்கு பாராட்டு தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. இதே போல் மாவ‌ட்ட‌த்தின் இத‌ர‌ ப‌குதிக‌ளிலும் ப‌யிற்சிப் பாச‌றையினை விரைந்து ந‌ட‌த்தி முடிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌ட்ட‌து.

சென்னையில் ந‌டைபெற்ற‌ மாநில‌ மாநாட்டில் ஆர்வ‌த்துட‌ன் அதிக‌ அள‌வில் ப‌ங்கேற்ற‌ அனைவ‌ருக்கும் பார‌ட்டு தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. இம்மாநாட்டுக்காக‌ சீருடைக‌ளை தயாரித்து வ‌ழ‌ங்கிய‌ ப‌னைக்குள‌ம் ந‌க‌ர‌ முஸ்லிம் லிக்கிற்கு பாராட்டு தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. என்ப‌ன‌ உள்ளிட்ட‌ ப‌ல்வேறு தீர்மான‌ங்க‌ள் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌.

கூட்ட‌த்தில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை செய்தித் தொட‌ர்பாள‌ர் முதுவை ஹிதாய‌த், ப‌னைக்குள‌ம் அபு முஹ‌ம்ம‌து, கீழ‌க்க‌ரை வ‌ரிசை முஹ‌ம்ம‌து ஹாஜியார், கீழ‌க்க‌ரை லெப்பைத்த‌ம்பி, ஆர்.எஸ்.ம‌ங்க‌ல‌ம் அமானுல்லாஹ், தேவிப‌ட்டிண‌ம் சித்திக், ம‌ண்ட‌ப‌ம் லியாக்க‌த் அலி, வேதாளை அப்துல் ர‌ஷீத் ஆலிம், இராம‌நாத‌புர‌ம் சாதுல்லாஹ் கான், இராம‌நாத‌புர‌ம் ம‌ணிச்சுட‌ர் ஏஜெண்ட் யாக்கூப், முதுகுள‌த்தூர் அமானுல்லாஹ் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்றுச் சிற‌ப்பித்த‌ன‌ர்.

வேதாளை அப்துல் ர‌ஷீத் ஆலிம் துஆவுட‌ன் செய‌ற்குழுக் கூட்ட‌ம் நிறைவுற்ற‌து. கூட்ட‌த்திற்குப் பின்ன‌ர் மீன் பொறிய‌லுட‌ன் ம‌திய‌ உண‌வுக்கு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

செய்தி : முதுவை ஹிதாயத் ( எம்.என்.ஏ. )

குவியலாக மாறட்டும்....!

குவியலாக மாறட்டும்....!
ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,அபுதாபி.
தம்பி...!
உன்னைத் தான்...!!
காயிதே மில்லத்தும்,
சிராஜுல் மில்லத்தும்,
ஏன் நமது முனீருல் மில்லத்தும் கூட


அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை
தம்பி...!உன்னைத்தான்..!!
இந்த வார்த்தைகளை வைத்து
நம்மை நம் தலைவர்கள்
அறவழியில் நடத்துகின்றனர்..!


கருத்தரிந்த காலம் முதல்
கட்டாய வசூல் செய்ததில்லை
முஸ்லிம் லீக்!

கடமை என்று வந்து விட்டால்
கட்டாயம் அதில் முஸ்லிம் லீக்
பங்கும் படியாமல் இருந்ததில்லை..!

இன்று...!
முஸ்லிம் லீகிற்க்கு நிதி வேண்டும்
திரட்ட களத்தில் இறங்குங்கள்..!இது பொருளாளர்
வடக்கு கோட்டையாரின் வாஞ்சையான வேண்டுகோள்!!!


ஆம் சொந்தங்களே...!
இது வரை நம் தலைவர்கல் நம்மை
தம்பி என்று அழைத்து...
தர்பியத் செய்து வந்தார்கள்!


ஆனால்...!இன்று
தேங்கி அழைக்கிரார்கள்...!
அவர்களுக்கு பயம்,நம்மை
பாரத்தில் ஆழ்த்துகிரோமோ என்று..!


நாம் சொல்ல வேண்டாமா..?
வலது கைக்கு கொடுப்பது
இடது கைக்கு தெரியாமல் இறுக்கிறதென்று...!
இது தானே நாம் செய்து
வரும் பாரம்பரியம்...!


படம் பிடித்து...
புடம் போட்டு...
துண்டு விரித்தோமா..?


தூய எண்ணத்தை சொல்லி
கேட்டோமே மாண்டவர்களுக்கு
மீலாது ஊர்வலத்தில்...!அன்று!


அரவமில்லாமல் ஆதரவளித்தாரே
சுனாமியில் சிக்கியவர்களுக்கு
தாய்ச் சபையின் பெயரைச் சொல்லி பொதுச் செயலாளர்...!
அவைகளை சொல்லிக் காட்டவில்லையே நாம் இன்று...!


நாம் சொல்லிக் காட்டாததின்
விளைவு நிதி நெருக்கடி..!
இனி வரக் கூடாது அடிக்கடி...!


உரிமையோடு சமுதாயத்திடம்
சென்று உண்மை பேசுவோம்...!
உவப்புடன் தருவதை பெற்று
உள்ள்ம் பூரிப்போம்!


தாய்ச் சபையின் உரங்களாக...
விழுதுகளாக வீற்றிருக்கும்
பெரியவர்களின் அனுமதியோடு...
அவர்களை அசர வைக்க
புறப்படுவோமே...! பெருவதற்க்கு...!


வசூலை வேளையாக செய்து,
கொண்டிருப்பவர்களல்ல நாம்
வேளையின் தேவைக்காக,காலத்தின் வேகத்திற்க்காக
ஒரே ஒறு முறை உங்களிடம்!!


உரிமை பெற்றவர்கள் என்ற
உரிமையோடு...!சமுதாயத்தின்
உண்மையான உதிரத்தின் உணர்வோடு
கனிந்த இதயத்தோடு கைகுலுக்கும் உங்களை
கடமை உணர்வோடு கட்டித் தழுவுங்கள் எங்களை!!!


குருவிகளாக சேகரிப்போம்..!
குவியலாக மாறட்டும்..!
தாய்ச் சபையின் பணிகள் மிளிரட்டும்...!


Abdul rahman

ibnuthalabathi@yahoo.co.in

Wednesday, September 24, 2008

ஆசிரியர்கள் சமூகசேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்

ஆசிரியர்கள் சமூகசேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்
அப்துல்பாசித் எம்.எல்.ஏ. பேச்சு


ஆம்பூர்,செப்.25-

ஆசிரியர்கள் சமூகசேவை மனப்பான்மையுடன் செயலாற்ற வேண்டும் என்று அப்துல்பாசித் எம்.எல்.ஏ. பேசினார்.

பாராட்டு விழா

வேலூர் மாவட்ட தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகம் சார்பில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சி.குணசேகரன், கரும்பூர் இந்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் துரை.கருணாகரன், பாராஞ்சி சி.எஸ்.ஐ. நடுநிலைபள்ளி தலைமை ஆசிரியர் மதியழகன் ஆகியோர்களுக்கு பாராட்டு விழா ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்கள் ஜேபஸ்சந்திரசேகர், ராதாகிருஷ்ணன், கொர்னேலியஸ் திவாகரன், லட்சுமிபாய், ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் டி.மணிவண்ணன் வரவேற்று பேசினார். வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் எச்.அப்துல்பாசித் கலந்து கொண்டு விருது பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மாணவர்களின் மதிப்பு உயர்ந்துள்ளது

ஆசிரியர்களுக்கு சமுதாய நோக்கு அதிகமாக இருக்க வேண்டும். சமூகசேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும். நாட்டின் எதிர்காலம் மாணவர்களின் கையில் உள்ளது. மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்களின் கையில் உள்ளது என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். தற்போது கல்வியின் மதிப்பு உயர்ந்துள்ளது.

மாணவர்கள் தவறு செய்யும்போது அதை அவர்களின் பெற்றோருக்கு தெரியபடுத்த வேண்டும். தாய், தந்தை உறவைவிட புனிதமான உறவான ஆசிரியர், மாணவன் உறவை மேம்படுத்தும் பணி ஆசிரியர்கள் கையில் உள்ளது என்பதை புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பேரணாம்பட்டு எம்.எல்.ஏ.சின்னசாமி, ஆம்பூர் நகர தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம், நகரசபை துணை தலைவர் தமிழரசிலட்சுமிகாந்தன், பேரணாம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பத்மாவதிவில்வநாதன், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சிவாஜிராவ் நன்றி கூறினார்.

பெண் கல்வியால்தான் சமுதாயத்தின் எதிர்காலம் சிறக்கும்! -ஹாஜிரா மகளிர் கல்லூரியில் பேராசிரியர்

பெண் கல்வியால்தான் சமுதாயத்தின் எதிர்காலம் சிறக்கும்! -ஹாஜிரா மகளிர் கல்லூரியில் பேராசிரியர்

http://www.muslimleaguetn.com/news.asp

பெண் மக்களுக்கு கல்வி கொடுத்தால்தான் சிறப்பான கற்றுணர்ந்த தலைமுறையை எதிர்கால முஸ்லிம் சமுதாயம் பெறமுடியும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.



மேலப்பாளையம் ஹாஜரா மகளிர் கல்லூரியில் அளிக்கப்பட்ட வரவேற்பில் மாணவிகள் மற்றும் பெற்றோரிடையே பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு கல்லூரித் தலைவரும், சமுதாய ஒளிவிளக்கு பட்டம் பெற்றவருமான பொறியாளர் செய்யது அகமது தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற மாணவிகள் அனைவரும் கலந்துகொண்ட கூட்டத்தில் தலைவர் பேசியதாவது:-



பெண் மக்களுக்கு கல்வி கொடுத்தால்தான் சிறப்பான கற்றுணர்ந்த தலைமுறையை எதிர்கால முஸ்லிம் சமுதாயம் பெறமுடியும். ஒரு பெண் படித்தால் அவள் குடும்பம் மட்டுமல்லாது, அவள் சார்ந்த தலைமுறையே நன்றாக விளங்கும்.

நாட்டில் உள்ள சுய நிதிக்கல்லூரிகள் பலவற்றிற்கு சமூகத்தில் அதிகம் உதவி பெறுவதில் சற்று பின்னடைவு உள்ளது. அதுபோலத்தான் பள்ளிக்கூடங்களுக்கும், ஆசிரியப்பயிற்சி நிறுவனங்களுக்கும் உதவிகள் பெறுவதில் மிகவும் துன்பப்பட வேண்டியதுள்ளது.

சுயநிதிக்கல்லூரிகள் சிலவற்றில் மாணவச் செல்வங்களிடம் மிக அதிகமாக பணத்தைப் பெற்று கல்லூரியை நடத்த வேண்டியதிருக்கிறது. காரணம் அரசிடமிருந்து எவ்விதமான நிதி உதவியும் கிடைக்காததால் படிக்க வருபவர்களிடமிருந்துதான் பெறவேண்டியதுள்ளது. ஆனால் இந்தக் கல்லூரி அதில் விதிவிலக்கு போல் உள்ளது.

சகோதரர் என்ஜினியர் செய்யது அகமது அவர்களின் உழைப்பை மனதார பாராட்டுவதில் மிக்க மகிழ்வடைகிறேன். அவர் செய்த பணிக்கு பக்கபலமாக சமுதாய புரவலர்கள் மிகப் பெருந்தன்மையோடு வகுப்பறைகள் பல கட்டித் தந்துள்ளார்கள். இது அவர் மீதும், மற்றைய கமிட்டி உறுப்பினர்கள் மீதும் சமுதாயம் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

அதுபோல இந்தக் கல்லூரியின் முதல்வர் அவர்களும் மிக்க கடினமாக உழைத்துள்ளார். அதனாலேதான் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதலாவது செட் மாணவச் செல்வங்கள் வணிகவியலில் தங்கப் பதக்கத்தையும் மற்றும் 7க்கும் மேற்பட்ட தகுதி நிலைகளையும் பெற முடிந்துள்ளது.

மகளிர் கல்வியை மிகச்சிறப்பாகச் செய்யும் இந்தக் கல்லூரிக்கு ஆஸாத் பவுண்டேசன் போன்றவற்றில் நிதி பெறுவதில் உள்ள தடைகளை நீக்கிட என்னாலான அத்தனை நடவடிக்கைகளையும் செய்வேன். மனது மிக்க மகிழ்வாக உள்ளது.

பெண் மக்கள் கல்விப் பணிக்கு சிறப்பாகப் பணி செய்யும் இந்தக் கல்லூரி இன்னும் அதிகமான கல்விப்பிரிவுகள் பெற்று, தன்னாட்சிக் கல்லூரியாக மாறி பல்கலைக் கழகமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

செய்யது அகமது அவர்களுக்கு உறுதுணையாகப் பணியாற்றும் தலைவர் ஹ_தா முகம்மது, பொருளாளர் ஜாபர் சாதிக், சிறப்பான கல்வி வழங்க அயராது பாடுபடும் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் சிந்தியா ஜோன்ஸ் மற்றும் பேராசிரியர்களையும், கமிட்டி உறுப்பினர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இந்த்கல்லூரி தமிழகத்தின் தலைசிறந்த கல்லூரியாக மாறிட அல்லாஹ்வை வேண்டுகிறேன்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனதுரையில் குறிப்பிட்டார். உரைக்குப் பின் கல்லூரி மாணவியருக்கு விருதுகளை வழங்கினார்.

மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி விழாவில் மாணவிக்கு தலைவர் பேராசிரியர் விருது வழங்குகிறார். வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம், தாளளார் செய்யது அகமது, எல்.கே.எஸ். மீரான் முகைதீன் ஆகியோர் உடன் உள்ளனர்.

மேலும் இவ்விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் திருமதி சிந்தியா ஜோன்ஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.டி.சம்சுல் ஆலம், எல்.கே.எஸ்.மீரான் முகைதீன் ஆகியோர் உரையாற்றினர்.

Tuesday, September 23, 2008

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையத்தில் ஏழைகளுக்கு இலவச அரிசி

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையத்தில் ஏழைகளுக்கு இலவச அரிசி
காதர்மொய்தீன் எம்.பி. வழங்கினார்


மேலப்பாளையம், செப்.24-

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையத்தில் நேற்று காதர் மொய்தீன் எம்.பி. ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கினார்.

மேலப்பாளையத்தில் செயல்பட்டு வரும் "மேலப்பாளையம் பைத்துல் மால்" என்ற இஸ்லாமிய பொது நிதியத்தின் சார்பில் ஏழைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம், மருத்துவ செலவு, திருமண நிதி உதவி, மாணவ-மாணவிகளுக்கு படிப்புக்கான உதவித்தொகை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

இலவச "பித்ரா" அரிசி

அதன் அடிப்படையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழைகளுக்கு இலவசமாக "பித்ரா" அரிசி வழங்கும் நிகழ்ச்சி நேற்று கொட்டிகுளம் பஜாரில் பைத்துல்மால் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதற்காக பைத்துல்மால் உறுப்பினர்களது பிரதிநிதிகள் உள்பட 500 பேருக்கு டோக்கன்கள் முன்கூட்டியே வழங்கப்பட்டு இருந்தது.

அரிசி வழங்கும் நிகழ்ச்சிக்கு பைத்துல்மால் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.எஸ்.டி.சம்சுல் ஆலம் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.எம்.அப்துல் கபூர் வரவேற்று பேசினார். இந்திய ïனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய பொதுச் செயலாளரும், வேலூர் தொகுதி எம்.பி.யுமான பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் கலந்து கொண்டு 21/2 கிலோ அரிசி பைகளை முதற்கட்டமாக 20 பேருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

யார்-யார்?

நிகழ்ச்சியில் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்ட செயலாளர் எல்.கே.எஸ்.முகம்மது மீரான் மைதீன், நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் எம்.எஸ்.முகைதீன் அப்துல் காதர், முன்னாள் கவுன்சிலர்கள் எஸ்.எஸ்.அப்துல் ரகுமான், என்.எம்.எச்.அனீபா, ஓய்வு பெற்ற அரசு நூலகர் ஓ.எம்.சாகுல் அமீது, தொண்டர் அணித்தலைவர் பீமா இல்லியாஸ், பிரசாரக்குழு பொறுப்பாளர்கள் மில்லத் காஜா, எம்.ஜி.காஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவித்தலைமை ஆசிரியரும், மேலப்பாளையம் பைத்துல்மால் பொருளாளருமான பி.எம்.காஜா நஜிமுத்தீன் நன்றி கூறினார்.

Sunday, September 21, 2008

கடையநல்லூர் நகராட்சி வார்டு இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வெற்றி

கடையநல்லூர் நகராட்சி வார்டு இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வெற்றி

கடையநல்லூர், செப். 20: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி 14- வது வார்டிற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷாகுல்ஹமீது அதிமுக வேட்பாளர் ஷயிகுர்ரஹ்மானை விட 239 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த வார்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1467. இதில் ஆண் வாக்காளர்கள்-721. பெண் வாக்காளர்கள்-746.

கடந்த 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 915. இதில் பதிவான ஆண் வாக்குகள் 324. பெண் வாக்குகள் 591.

இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை காலை நடைபெற்றது. வாக்குப்பதிவு மின்னணு எந்திரத்தில் நடைபெற்ற காரணத்தால் சில நிமிஷங்களிலேயே முடிவுகளை நகராட்சி ஆணையர் அருணாசலம் அறிவித்தார்.

இதில் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் ஷாகுல்ஹமீது 577 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் ஷயிகுர்ரஹ்மான் 338 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இதையடுத்து வெற்றிபெற்ற வேட்பாளர் ஷாகுல்கமீதுவிற்கு சான்றிதழை ஆணையர் அருணாசலம் வழங்கினார்.

இதில் உதவி வாக்குபதிவு அலுவலர் கரீம், கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம், முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலர் செய்யது முகமது, நகர்மன்ற உறுப்பினர் அப்துல்காதர், நகரத் துணைச் செயலர் ஹைதர் அலி, திமுக நிர்வாகி முகமதுஅலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Monday, September 15, 2008

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய தேசிய நிர்வாகிகள்! டெல்லி செயற்குழுவில் ஒருமனதாகத் தேர்வு!!





இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய தேசிய நிர்வாகிகள்! டெல்லி செயற்குழுவில் ஒருமனதாகத் தேர்வு!!


http://www.muslimleaguetn.com/news.asp?

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவராக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அஹமது, பொதுச்செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, அகில இந்திய அளவில் முஸ்லிம் லீக் பணிகளை விரிவுபடுத்தவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

தேசிய செயற்குழு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டம் செப்டம்பர் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் புதுடெல்லியிலுள்ள ரஃபிமார்க் அரசியல் நிர்ணய மாடத்திலுள்ள சபாநாயகர் அரங்கில் நடைபெற்றது.



இக்கூட்டத்திற்கு பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் எம்.பி. தலைமை தாங்கினார். டெல்லி இமாம் மௌலானா ஹாபிஸ் அபுல் காசிம் கிராஅத் ஓதினார்.

மத்திய இணை அமைச்சர் இ.அஹமது அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் பானக்காடு செய்யது முஹம்மது அலி ஷிஹாப் தங்கள் துவக்க உரை நிகழ்த்தினார்.

பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக இருந்த குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் மற்றும் தலைவர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் ஒருங்கிணைந்த முறையில் தேசிய அளவில் ஒரே மாதிரியாக செயல்படுவதற்கு ஏற்ற வகையில் கட்சியின் சட்ட திட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு புதிய தேசிய நிர்வாகிகள் பின்வருமாறு தேர்வு செய்யப்பட்டனர்:

தேசிய நிர்வாகிகள்:
தலைவர்:
இ. அஹமது (கேரளா)

பொதுச் செயலாளர்:
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. (தமிழ்நாடு)

பொருளாளர்:
தஸ்தகீர் ஐ.ஆகா (கர்நாடகா)

துணைத் தலைவர்கள்:
வழக்கறிஞர் அஹமது பக்ஷ் (ராஜஸ்தான்),
வழக்கறிஞர் இக்பால் அஹமது (உத்தர பிரதேசம்)

இணைச் செயலாளர்கள்:
நயீம் அக்தார் (பீகார்),
முஹம்மது இஸ்மாயில் பனாத்வாலா (மஹாராஷ்டிரா),
ஷாஹின்ஷா ஜஹாங்கீர் (மேற்கு வங்காளம்),
அப்துஸ் ஸமத் சமதானி (கேரளா),
குர்ரம் அனீஸ் உமர் (டெல்லி).

மேற்கண்டவாறு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்நிர்வாகிகளை முஸ்லிம் லீகின் மூத்த தலைவர் பானக்காடு செய்யது முஹம்மது அலி ஷிஹாப் தங்கள் முன்மொழிந்தார்.



அகில இந்திய மாநாடு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய மாநாடு உத்தரபிரதேசத்தில் இரண்டு நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். இம்மாநாட்டில் அனைத்து மாநில நிர்வாகிகள் அந்தந்த மாநில அமைப்புப் பணிகள் பற்றி விளக்கும் வகையிலும், இளைஞர்கள் மாணவர்கள், தொழிலாளர்கள் பங்கேற்கும் வகையிலும் நிகழ்ச்சி நிரல் அமைக்கப்படும். அதற்குப் பின் ஒவ்வொரு மாநிலத்திலும் மண்டல மாநாடுகள் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.

சென்னையில் தலைமையகம்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய அலுவலகத்திற்கு புதுடெல்லியில் தனி இடம் வாங்கப்படும். அதுவரை அகில இந்திய அலுவலகமாக சென்னை மண்ணடி மரைக்கார் லெப்பைத் தெருவில் உள்ள தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதே மில்லத் மன்ஸிலே அகில இந்திய அலுவலகமாகவும் செயல்படும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தீர்மானங்கள்:
டெல்லி குண்டு வெடிப்பு, ஓரிஸ்ஸா கலவரம், பீகார் வெள்ளம், ரங்கனாத் மிஸ்ரா, கமிஷன் போன்ற தேசீய பிரச்சனைகள் பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் உரையாற்றியோர்:
செய்யது முஹம்மது அலி ஷிஹாப் தங்ஙள், இ.அஹமது, பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழ்நாட்டின் பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ.சையத் சத்தார், எச். அப்துல் பாஸித் எம்.எல்.ஏ., ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் எம்.அப்துர் ரஹ்மான், உத்தர பிரதேச தலைவர் கௌஸர் ஹயாத் கான். அஸ்ஸாம் தலைவர் முஹம்மது திலீர் கான், மேற்கு வங்க தலைவர் ஷஹீன் ஷா ஜஹாங்கீர், மகாராஷ்டிர தலைவர் ஷமீவுல்லா அன்ஸாரி, பொதுச் செயலாளர் ஹபீப் கான், கர்னாடக மூத்த தலைவர் முஹம்மது ஷம்ஷீர் இனாம்தார், ஆந்திரா தலைவர் ஷாஹித், பீகார் பொதுச்செயலாளர் செய்யது அய்னுல் ஆப்தீன், கேரள பொதுச் செயலாளர் குஞ்ஞாலி குட்டி ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியில் புதிய தலைவர் இ. அஹமது நன்றி கூறினார்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு தீர்மானங்கள்!


புதுடெல்லியில் 2008 செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் 1:
டெல்லி குண்டு வெடிப்புக்கு கண்டனம்:
டெல்லியில் நடைபெற்ற மனிதாபிமானமற்ற தேசவிரோத சக்திகள் மறைமுகமாக நடத்திய காட்டுமிராண்டித்தனமான குண்டுவெடிப்புகளை இச்செயற்குழுக் கூட்டம் கடுமையாக கண்டிக்கிறது. சமூக கட்டுப்பாட்டை சீர்குலைத்து, நாட்டின் அமைதியையும், நல்லிணக்கத்தையும் அழிக்கும் பேய்த்தனமான கொடிய நடவடிக்கையை எந்த நாகரீக மக்களும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.

இந்த கோழைத்தனமான செயலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும், இந்த பயங்கரவாத செயல்களைத் தடுத்து நிறுத்த மேலும் எச்சரிக்கையாக இருக்கவும் மத்திய அரசை நாம் வற்புறுத்துகிறோம்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நமது அழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மனிதநேயத்திற்கு புறம்பான ஷைத்தானிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 2:
கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை:
சமீபத்தில், ஒரிஸ்ஸா மாநிலத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளில், சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயத்தின் உயிர்கள், உடைமைகள், மற்ற அந்தஸ்துகளைக் காப்பாற்றுவதில் மாநில அரசின் தோல்விக்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த விரக்தியையும், ஏமாற்றத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

மாநில நிர்வாகத்தின் செயல்படாமை மற்றும் தாக்குதல் நோக்கம், பாசிச சக்திகள் சிறுபான்மையினருக்கு சொந்தமான வீடுகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தீ வைக்க இடமளித்துள்ளது.

சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதில் மாநில அரசின் ஒருதலைபட்சமான உள் நோக்கம் மிகவும் கண்டனத்திற்குரியது.

ஒரிஸ்ஸாவில் மதச் சிறுபான்மையினரைப் பாதுகாக்க அரசியல் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இக்கூட்டம் வற்புறுத்துகிறது.

உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கும் அரசு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இடம் பெயர்ந்தவர்கள் மீளக் குடியேற்றப்படவேண்டும் என்றும் இக்கூட்டம் வற்புறுத்துகிறது.

தீர்மானம் 3:
பீகார் வெள்ள நிலவரம்:
ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஏற்பட்ட எதிர்பாராத பிரளயத்தினால் 10 லட்சம் மக்கள் வீடிழந்தனர். பலர் உயிரையும், உடைமைகளையும் இழந்தனர். இந்த பேரழிவுக்கு செயற்குழு கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

பாதிக்கப்பட்ட பீகார் மக்களுக்கு மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் தகுந்த தருணத்தில் உதவி அளித்தமைக்காக நாங்கள் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம்.

30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 300 நிவாரண முகாம்களில் 3 லட்சம் மக்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர். இவர்களது நிவாரணம் மற்றும் புணர்வாழ்வுப் பணிகளுக்கு இந்திய மக்கள் தாராளமாக பெரிய மனதுடன் உதவ வேண்டும் என்று செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மற்ற மனிதாபிமானிகளுடன் இணைந்து நிவாரண மற்றும் புனர்வாழ்வு பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று இந்த கூட்டம் வற்புறுத்துகிறது.

இந்த நிவாரணப் பணிகளில் அனைவரும் தாராளமாக பங்கேற்க வேண்டும் என்று இந்த கூட்டம் அன்புடன் வேண்டுகிறது.

தீர்மானம் 4:
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு:
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டும் என்றும், நாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் செயற்குழு வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்டவாறு, புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜி.எம்.பனாத்வாலா மற்றும் உமர் பாபகி தங்ஙள் மறைவுக்கு இரங்கல்!

புதுடெல்லியில் செப்டம்பர் 14ஆம் தேதி கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற் குழுக் கூட்டத்தில் ஜி.எம்.பனாத்வாலா சாஹிப், சையத் உமர் பாபக்கி தங்ஙள் சாஹிப் மற்றும் சையத் உமர் ஷிஹாப் தங்ஙள் சாஹிப் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரங்கல் தீர்மானம் 1:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் அல்ஹாஜ் குலாம் மஹ்மூத் பனாத்வாலா சாஹிபின் திடீர் மறைவிற்கு செயற்குழு கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

பனாத்வாலா சாஹிப் ஒருமைப்பாடு, நேர்மை மற்றும் எளிமைமிக்க அரிய தலைவராகவும், தனி குணாதிசயம், சிறப்பான தகுதி, சிந்தனை மற்றும் பேச்சில் திறமை பெற்றவராகவும், மனித நேய உறவுகளில் மிகுந்த அக்கறை கொண்டவராகவும் விளங்கினார்.

முஸ்லிம் சமூகத்தில் உலகளாவிய சிறந்த நாடாளுமன்றவாதி@ ஒப்பற்ற அறிஞர் சிறப்பான ஆசிரியர்@ ஷரீஅத் சட்டம் மற்றும் முஸ்லிம் கலாச்சார அடையாளங்களை வெளிப்படுத்துவதில் சிறந்தவர்@ மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் பாதுகாவலர்@ சிறுபான்மை உரிமைகளுக்காக விட்டுக்கொடுக்காத போராளி@ அரசியல் சட்டத்தின் ஒவ்வொரு பகுதியையும் அறிந்தவர்@ இந்தியாவின் தலைசிறந்த குடிமகன்களில் ஒருவராக வாழ்ந்தவர் பனாத்வாலா சாஹிப் அவர்கள்.

செயல்மிக்க முயற்சியாலும், நோக்கத்தாலும் சமுதாயத்தின் பொதுச் சபைக்காகவும், நாட்டின் சேவைக்காகவும் அழகான முன்மாதிரியொன்றை பெருமளவில் நமக்கு வழங்கியுள்ளார்.

அல்லாஹ் - ரப்புல் - இஸ்ஸத் அவர்களை சுவனத்தில் உயர்பதவி அளிப்பானாக.

இரங்கல் தீர்மானம் 2:
சையத் உமர் பாபக்கி தங்ஙள் மறைவிற்கு செயற்குழு கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

முஸ்லிம் சமுதாயத்தின் நலன்களில் தலைசிறந்த மூத்த வழிகாட்டியாகவும், காப்பாளராகவும் அவர் திகழ்ந்தார். சமுதாயத்தின் தலைசிறந்த தலைவரான அவர் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் சேவை செய்ய முன்வருவோருக்கு கண்ணியமிக்க தூண்டுகோலாக விளங்கினார்.

இதயப்பூர்வமான அனுதாபங்களை செயற்குழு கூட்டம் தெரிவித்துக் கொள்வதோடு அவருடைய மஃபிரத்திற்காக பிரார்த்திக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டது., எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான சுவனபதியை தந்தருள்வானாக.

இரங்கல் தீர்மானம் 3:
சையத் உமர் அலி ஷிஹாப் தங்ஙள் திடீர் மறைவுக்கு கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

கேரள முஸ்லிம் சமுதாயத்திற்கு அவர் சிறந்த பாராட்டத்தக்க உந்துசக்தியாக விளங்கினார். அவருடைய மஃபிரத்திற்கு அனைவரும் பிரார்த்திப்போமாக.

மேற்கண்ட இரங்கல் தீர்மானங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதுடெல்லி செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

டாக்டர் சையத் சத்தார்

Saturday, September 13, 2008

இ.யூ.முஸ்லிம் லீக்தேசிய செயற்குழு டெல்லியில் நாளை கூடுகிறது! புதிய தேசியத் தலைவர் தேர்வு!!

இ.யூ.முஸ்லிம் லீக்தேசிய செயற்குழு டெல்லியில் நாளை கூடுகிறது! புதிய தேசியத் தலைவர் தேர்வு!!

http://www.muslimleaguetn.com/news.asp

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டம் செப்டம்பர் 14-ம் தேதி ஞாயிறு பிற்பகல் 3 மணிக்கு புதுடெல்லியிலுள்ள ரபிமார்க் அரசியல் நிர்ணய மாடத்திலுள்ள சபாநாயகர் அரங்கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

பனாத்வாலாவுக்கு இரங்கல்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய துணைத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தேசிய பொதுச் செயலாளர் இ.அகமது வரவேற்றுப் பேசுகிறார். கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் செய்யதலி ஷிஹாப் தங்ஙள் துவக்க உரை நிகழ்த்துகிறார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக இருந்த குலாம் மஹ்மூது பனாத்வாலா சாகிப்காலமானதற்குப் பின் முதன் முறையாகக் கூடும் தேசிய செயற்குழு கூட்டத்தில் பனாத்வாலாசாகிப் மறைவிற்கும்கேரள மாநில முஸ்லிம் லீக் பொருளாளர் செய்யது உமர் பாபக்கி தங்ஙள் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர்கள் மறுவுலக நல்வாழ்விற்கு துஆ செய்யப்படுகிறது.

தலைவர் தேர்வு:
பனாத்வாலா சாகிப் மறைவிற்குப் பின் காலியாக உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அகில இந்திய அளவில் முஸ்லிம் லீக் பணிகளை சிறப்பான முறையில் திட்டமிட்டு விரிவுபடுத்திட அமைப்பு பணிகள் பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன.

ஆலோசனை:
தேசிய அளவில் தலையாய பிரச்சணைகளாக உள்ள விஷயங்கள் குறித்து தேசிய செயற்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து பரிசிலிப்பதற்கான ஆலோ சனைக் கூட்டம் பொதுச் செயலாளர் இ.அஹமது இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய செயலாளர் நயீம் அக்தார், தேசிய பொருளாளர் தஸ்தகீர் ஆகா, ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம்.அப்துர் ரஹ்மான், பொதுச் செயலாளர் குத்தாலம் எம்.லியாகத்அலி, பீகார் மாநில பொதுச் செயலாளர் அய்னுல் ஆபிதீன், தமிழ்நாடு மாநில தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர், மாநில வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வி. ஜீவகிரிதரன், டெல்லி பிரதேச இளைஞர் அணி தலைவர் குர்ரம் உமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தலைவர்கள் வருகை:
தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து மாநில முஸ்லிம் லீக் நிர்வாகிகளும் டெல்லிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

கேரள மாநில தலைவர் செய்யதலி ஷிஹாப், தங்ஙள் பொதுச் செயலாளர் குஞ்ஞாலி குட்டி, செயலாளர்கள் இ.டி. பஷீர், டாக்டர் முனீர்கோயா, அகமது கபீர், கேரள முன்னாள் அமைச்சர்கள் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாட்டிலிருந்து தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், அரவககுறிச்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான், தலைமை நிலைய செயலாளர் கே.ஏ. எம்.முகம்மது அபூபக்கர், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வி. ஜீவகிரிதரன், ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத்பேரவை தலைவர் எம்.அப்துர் ரஹ்மான், பொதுச்செயலாளர் எம்.லியாகத் அலி, ராஜஸ்தான் மாநில தலைவர் அகமதுபக்ஷ், அஸ்ஸாம் மாநில தலைவர் முகம்மது திலீர்கான், மேற்கு வங்க தலைவர் ஷாஹின்ஷா ஜஹாங்கீர், கர்நாடக செயலாளர் இப்ராகீம் ஷம்ஷீர், அகில இந்திய பொருளாளர் தஸ்தகீர் ஆகா, தேசிய செயலாளர் நயீம் அக்தர், பீகார் பொதுச் செயலாளர் அய்னுல் ஆபிதீன், ஜார்கண்ட் மாநில தலைவர் அம்ஜத்அலி, பொதுச் செயலாளர் ஹபீஸ் அகமது, புதுச்சேரி மாநில தலைவர் சி.வி.சுலைமான் உள்ளிட்டோர் டெல்லி வந்துள்ளனர்.

தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் மற்றும் அனைத்து மாநில நிர்வாகிகள் நாளை காலை டெல்லி வருகின்றனர்.

இஃப்தார்:
டெல்லி வருகைதரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு உறுப்பினர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் இ.அஹமது நாளை இஃப்தார் விருந்தளிக்கிறார்.

தேசியசெயற்குழு கூட்ட ஏற்பாடுகளை டெல்லி பிரதேச தலைவர் மர்கூப் ஹ_சைன் இளைஞர் அணிதலைவர் குர்ரம் உமர், சந்திரிகா செய்தியாளர் முகம்மது குட்டி, பேராசிரியரின் டெல்லி உதவியாளர் நூர்ஷம்ஸ் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

செப்டம்பர் 14இல் டெல்லியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டம்! பொதுச் செயலாளர் இ.அஹமது அறிவிப்பு!!

செப்டம்பர் 14இல் டெல்லியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டம்! பொதுச் செயலாளர் இ.அஹமது அறிவிப்பு!!

http://www.muslimleaguetn.com/news.asp?id=219

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டம் 2008 செப்டம்பர் 14ஆம் தேதி மதியம் 3.00 மணிக்கு புதுடெல்லி, ரபிமார்க், அரசியல் நிர்ணய மாடத்திலுள்ள சபாநாயகர் அரங்கில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தை கேரள ராஜ்ய முஸ்லிம் லீக் தலைவர் செய்யிது முஹம்மத அலி ஷிஹாப் தங்ஙள் துவக்கி வைக்கிறார்.

இக்கூட்டத்தில் மறைந்த தேசிய தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிபிற்கு இரங்கல் தெரிவித்தல், புதிய தேசியத் தலைவர் தேர்வு, அமைப்புப் பணிகள் உள்ளிட்டவை நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ளன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அனைத்து மாநிலத் தலைவர்கள், செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு தனித்தனியே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சரும், முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளருமான இ.அஹமது தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் பங்கேற்க அமீரக காயிதெமில்லத் பேரவைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி டெல்லி சென்றுள்ளனர்.

Friday, September 12, 2008

ஹுசைன்கனியின் அவதூறுப் பிரச்சாரத்துக்கு விளக்கம்

Mohamed Siddique
tohussainghani@gmail.com
ccmuduvaihidayath@gmail.com,
tmmk-members@yahoogroups.com
dateFri, Sep 12, 2008 at 6:38 PM
subjectFwd: சாமியார் காலில் விழவில்லை காதர்மொய்தீன் அறிக்கை

Dear Hussaigani,

Salam bhai,
Don't unnecessarily post nasty message without checking properly.
Bro.Kathermohideen never fell under the leg of any person.
He himself cleared, why you people are so eager to defame the muslim- just basing
the news of dinamalam.Br. Kather mohideen himself explained about his stauts,
that is enough. Don't take the message as halawa and keep on passing during
the holy month of ramadan. Do we like to eat the flesh of dead bro.?

For you (TMMK) people, dargah is poison, but you people will take the wakf board
and manage the dargah property?????

Before posting any message, take care brother.

-Mohamed

Sunday, September 7, 2008

சென்னை ரயில்வே மீலாத் மன்ற இஃப்தார் நிகழ்ச்சி



தென்னக ரெயில்வே மீலாத் மன்றத்தின் சார்பில் சென்னை ஹஜ் ஹவுஸில் நடைபெற்ற இஃப்தார் (நோன்பு துறக்கும்) நிகழ்ச்சியில் ரெயில்வே துறை முதன்மை உயரதிகாரிகள் நூர் அஹ்மத் இஸ்மாயீல், சுல்தான் முஸத்திக், திருச்சி தப்லே ஆலம் பாதுஷா நத்தர் வலி தர்ஹா தலைமை ட்ரஸ்டி ஏ.பி.டி.பாதுஷாஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தென்சென்னை மாவட்ட தலைவர் அல்தாஜ் ஆபித் ஹ{ஸைன், மாநில செயலாளர் திருப்பூர் சத்தார், மாவட்ட நிர்வாகிகள் இக்ராம் பாஷா, ஹாஃபிழ் இப்றாஹீம், ஹாஷிம், மன்ற செயலாளர் முஹ்யித்தீன் ஷரீஃப் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

http://www.muslimleaguetn.com/news.asp?id=233

Friday, August 29, 2008

ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரி உருவாக வேண்டும்! -துபை அப்துர்ரஹ்மான

Thursday, August 28, 2008

ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரி உருவாக வேண்டும்! -துபை அப்துர்ரஹ்மான



இஸ்லாமிய சமுதாயத்தில் விழிப்புணர்வு எற்படவேண்டும் என்றால் முதலில் கல்வி விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பட்டதாரி உருவாக வேண்டும். பட்டதாரிகள் இல்லாத வீடே இல்லை என்ற நிலை நமது நாட்டில் நமது சமுதாயத்தில் ஏற்பட வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம்.அப்துர் ரஹ்மான் கூறினார்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் தைக்கால்தெரு சேக் சாஹிப் - தர்கா வளாகத்தில் இஸ்லாமிய நல்வாழ்வு சங்கம் நடத்திய இஸ்லாமிய பெண்கள் கல்வி மாநாட்டில் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது:-

உலக மக்கள் அனைவரும் ஒரே குலத்து சகோதரர்கள். இஸ்லாம் ஜாதி மத இன பேதம் பிரித்து பார்க்காத அனைவரையும் சகோதரத்துவ அன்புடன் பார்க்கும் மார்க்கமாகும்.

தனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியப் பெருமக்களுக்கு ஒவ்வொரு தொழுகையிலும் துஆ கேட்கிறோம். அந்த அளவுக்கு கல்விக்கு பெருமை தேடி தரும் மார்க்கம் இஸ்லாம்.

பள்ளி படிப்பு முடிக்கும் முன் நம் வீட்டு பிள்ளைகளும் பாஸ்போர்ட் எடுக்கும் பழக்கத்தை நாம் விட்டுவிட வேண்டும். படிக்காமல் நாம் அரபு நாடுகளுக்குச் சென்று நாம் வாங்கும் மூன்று மாத சம்பளத்தை படித்துவிட்டு வந்தவர்கள் ஒரே மாதத்தில் வாங்குவதை கண்கூடாக பார்க்கிறோம். பட்டப்படிப்பு முடிக்காமல் அயல்நாட்டு வேலைக்கு செல்லவே கூடாது.

ஒரு ஆண் கல்வி கற்றால் அவன் மட்டுமே பயன் பெறுகின்றான். ஆனால் ஒரு பெண் பயின்றால் அந்த குடும்பமே பயன் பெறும். அதனால்தான் இஸ்லாம் ஆண, பெண் இருபாலருக்கும் கல்வியை கட்டாய கடமையாக்கி இருக்கிறது.

ஆண்களில் 64 சதவீதம், பெண்களில் 72 சதவீதம் மக்கள் பள்ளிப் படிப்பை விட்டு தாண்ட மாட்டேன் என்கிறார்கள். சமீபத்திய கணக்கெடுப்பின்படி 101 முஸ்லிம்களுக்கு ஒரு பட்டதாரிதான் உருவாகிறார். இதே சகோதர சமுதாயத்தில் 101 பேருக்கு 31 பட்டதாரிகள் உள்ளார்கள். இந்த நிலை மாற வேண்டும். நாமும் இந்த நாட்டில் கவுரவமாக வாழ கல்வியில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாணவ - மாணவியரின் பேச்சுப் போட்டி வினாடி-வினா போட்டி நடைபெற்றது. நெல்லிக்குப்பத்தில் மேல்நிலை எஸ்.எஸ்.எல். சி. மெட்ரிக் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவி யருக்கு அப்துல் ரஹ்மான் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.

விழாவில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வகுப்பு கலவரங்களில் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்களே! டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது பேச்சு

வகுப்பு கலவரங்களில் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்களே! டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது பேச்சு



வகுப்புவாதத்தால் நடைபெறும் கலவரங்களில் அதிக இழப்புக்கு ஆளாவது முஸ்லிம்களே என்று காவல்துறை ஆய்வாளர் விப+தி நாராயணனின் ஆய்வு காட்டுகிறது என்று டாக்டர் ஹபீப் முஹம்மது கூறினார்.

இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சென்னை காமராசர் அரங்கில் இஸ்லாமிய எழுச்சி மாநாடு நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் ஹஸரத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.எம். செய்யது அப்துல் காதர், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாதிக், டெல்லி சிறுபான்மை ஆணையத் தலைவர் கமார் பரூகி, வக்ஃப் வாரிய உறுப்பினர் சிக்கந்தர், எஸ்.எம்.ஹிதாயதுல்லாஹ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய பவுண்டேசன் டிரஸ்டு இணைச் செயலாளர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது பேசியதாவது-

இன்று உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக கருதப்படும் பயங்கரவாதம் தோன்ற பல காரணங்கள் உள்ளன. ஜாதியவாதம், வகுப்புவாதம், ஏகாதிபத்தியம் போன்ற காரணங்களால்தான் பயங்கரவாதம் தலை தூக்குகின்றன. எந்த வடிவிலானாலும் பயங்கரவாதமும் தீவிரவாதமும் விஷ சக்கரம் போன்றது. அது என்றைக்காவது ஒரு நாள் ஏவுகணையை தாக்கி அழித்து விடும்.

நோய்க்கு மருந்து கொடுக்கலாம். ஆனால் அப்படி கொடுக்கும் மருந்தே உயிருக்கு ஆபத்தை விளைவித்து விடக்கூடாது.

பயங்கரவாதம் ஆபத்தான மருந்தாகும். அது நோயை தீர்ப்பதற்கு பதிலாக ஆளையே கொன்றுவிடும் என்பதில் கவனம் வேண்டும். இந்த நாட்டில் மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேயின் பிறந்த நாளை தியாகிகள் தினமாக கொண்டாட மத்திய - மாநில அரசுகள் அனுமதி வழங்குகின்றன. ஆனால் இந்த நாட்டிற்காக அணுஅணுவாக உழைத்த முஸ்லிம் சமுதாயம் சுதந்திரதின பேரணி நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. இதுபோன்ற பாகுபாடுகளை அரசுகள் கைவிட வேண்டும்.

வகுப்புவாதம் குறித்து விரிவான ஆய்வு ஒன்றினை விப+தி நாராயணன் என்ற காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தார். அந்த ஆய்விலே வகுப்புவாதத்தால் நடைபெறும் கலவரங்களில் அதிகமான இழப்புகளுக்கு ஆளாவவது முஸ்லிம் சமுதாயம் என்றும், அதிக அளவில் தாக்குதலுக்கு ஆளான முஸ்லிம் சமுதாயமே சிறைகளிலும் அதிக அளவில் அடைக்கப்படுவதாக அதிர்ச்சியான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சமுதாயத்துக்கு அரசுகள் ஆதரவு காட்டுவதற்கு பதிலாக அவர்களை குற்றவாளிகளாக சிறையில் அடைத்து தண்டிப்பது இந்தியாவில் நடைபெறுகிறது. ஏன் இத்தகைய அநீதியை அரசுகள் இழைக்கின்றன? ஊடகத் துறையிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பல அவதூறுகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

இன்றையச் சூழலில் முஸ்லிம் இளைஞர்கள் ஊடகத் துறையில் அதிக அளவில் ஈடுபட வேண்டும். அதனை கடமையாக கருத வேண்டும். ஊடகத்துறை மூலமே நம் மீது சுமத்தப்படும் களங்கத்தை துடைக்க முடியும்.

இவ்வாறு ஹபீப் முஹம்மது பேசினார்.

வன்முறையை தூண்டும் இந்தியா டுடே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! -காயல் மகபூப் கோரிக்கை

வன்முறையை தூண்டும் இந்தியா டுடே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! -காயல் மகப+ப் கோரிக்கை

http://www.muslimleaguetn.com/news.asp


ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்கள் மீது வன்முறையைத் தூண்டிவிட்டுள்ள இந்தியா டுடே பத்திரிக்கை மீது மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கை தாமதமானால் இந்திய உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து இதில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகப+ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம் புளியங்குடியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அணியின் சார்பில் நடைபெற்ற மாநில மாநாட்டு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றியபோது அவர் இந்த கோரிக்கை விடுத்தார். அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

இந்தியா மதசார்பற்ற ஜனநாயக நாடு என்று சொல்கிறார்கள். ஜனநாயகத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகளை சிலர் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு மனம் போன போக்கில் செயல்படுகின்றனர். ஆனால் இந்த நிலை ஏற்படும்போது ஒருசாராருக்கு எதிராக செயல்படுகின்ற சட்டமும் காவல்துறை - நீதிமன்ற நடவடிக்கைகளும் இன்னொரு சாராரை சீண்டிப் பார்ப்பது இல்லை இதை எப்படி நடுநிலை என்பது?

இந்தியா டுடே என்ற பெயரில் வெளிவரும் பத்திரிக்கை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல மொழிகளில் வெளிவருகிறது. அந்த பத்திரிக்கையின் இம்மாதம் 13ஆம் தேதி இதழில் 'சுரணையற்ற இந்தியா" என்ற அட்டைப்பட தலைப்பிட்டு அந்த இதழ் முழுவதும் விஷமத்தனமாக இந்திய முஸ்லிம் களுக்கு விரோதமாக கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

அந்த பத்திரிக்கை ஆசிரியர் எழுதிய தலையங்கமே இந்தியா பொறுத்தது போதும் பொங்கி எழுமா என்று தொடங்கி@ பொங்கி எழாவிட்டால் இந்தியா சுரணையற்ற தேசமாகும் என்பதில் சந்தேகமில்லை என்றுதான் முடிக்கப்பட்டுள்ளது.

பக்கத்துக்கு பக்கம் இஸ்லாமிய பயங்கரவாதம் என எழுதப்பட்டுள்ள விஷமத்தனமான கட்டுரைகள் முஸ்லிம்களுக்கெதிராக இந்துக்களை மட்டும் தூண்டிவிடவில்லை. வளரும் தீவிர மதவாதம் என்ற பெயரில் கட்டுரை எழுதி முஸ்லிம்களுக்குள்ளும் மோதலை உருவாக்கும் அயோக்கியத்தனமும் செய்யப்பட்டுள்ளது.

தேவ்பந்த் மௌலவிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்த இதழ் தொழுகைக்கு மட்டுமே முஸ்லிம்களை அழைப்பதோடு, எந்த அரசியல் சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபடாத தப்லீகர்களை மத தீவிரவாதிகள் என வர்ணித்து அவர்கள் தோற்றத்தைகூட அடையாளப்படுத்தி காட்டியுள்ளது. பரேலவிகளும் மற்றவர்களும் மோதிக்கொள்ள வேண்டுமென்ற நோக்கம் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலையில் முஸ்லிம்களுக்கெதிரான ஊடக பயங்கரவாதம் செயல்படுத்தப்பட்டதை அரசுகள் எப்படி பொறுத்துக் கொண்டிருக்கின்றன.

கஷ்மீர் முஸ்லிம் இளைஞர்களுக்கெதிராக அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை விமர்சித்து எழுதினார்கள் என்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்து மூன்று வருடங்களுக்கு மேல் அப்பத்திரிகை ஆசிரியர் வெளியீட்டாளர் அச்சிடுபவர் வினியோகித்தவர் என்று அனைவரையும் சிறையில் அடைத்தனர். இத்தனைக்கும் சில நூறு பிரதிகள் மட்டும்தான் அச்சாகும் பத்திரிக்கை அது. ஆனால் பல மொழிகளில் லட்சக்கணக்கில் விற்பனையாகும் இந்தியா டுடே மீது மட்டும் ஏன் இந்த சட்டம் பாயவில்லை?

மத்திய மாநில அரசுகள் இதில் நடவடிக்கை எடுக்க தயங்கினால் இந்திய உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நாட்டு நலனில் அக்கரை யுள்ள அனைவரின் விருப்பம்.

சுதந்திர தினம், குடியரசு தினம் அல்லது நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த நேரங்களிலெல்லம் முஸ்லிம்களுக்கு விரோதமாக விஷமப் பிரச்சாரங்களை தூண்டிவிடுவதும், முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதும் விசாரணை என்ற பெயரில் அன்றாடம் செய்திகள் வரவைப்பதும் இன்று வாடிக்கையாகிவிட்டது.

மீடியாக்களை திறந்தாலே சில நாளிதழ்கள் தலைப்புக்களை எழுதி வைத்துக்கொண்டு செய்திகளை தேடி அலைகின்றன என்பது தெரிகிறது. முஸ்லிம்கள் யாராவது விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டால்கூட முஸ்லிம் தீவிரவாதிகள் கைது குண்டு வைக்க சதித்திட்டமா என செய்தி போட்டு விடுகின்றனர்.

முஸ்லிம்கள் சிலரை கைது செய்கின்ற காவல்துறைகூட அவர்களின் வீடுகளில் சோதனை ஆவணங்கள் கைப்பற்றிப்பட்டன என்றெல்லாம் சொல்லும்போது கைப்பற்றப்பட்டது எவை என்ற பட்டியலை வெளியிட வேண்டாமா? குர்ஆன் விளக்க உரையையும் சில சி.டி.க்களையும் எடுத்து வைத்துக் கொண்டு பயங்கரவாதிகளாக சித்தரிக்கலாமா? இது ஒரு சமுதாயத்திற்கு எதிராக தொடுக்கப்படும் யுத்தம் இல்லையா?

ஒரு சம்பவத்தில் முஸ்லிம்கள் சிலர் ஈடுபட்டார்கள் என்றால் அந்த சம்பவத்தை மட்டுமே வைத்து வழக்குபதியட்டும். ஆனால் அதற்காக மதச்சாயம் பயங்கரவாதம் என்ற முத்திரைகளுக்கு வழிவகுக்காதீர்கள். வன்முறையை தடுக்கிறோம் என்ற பெயரால் நிரபராதிகளை தண்டிக்காதீர்கள்.

தென்காசி கலவர வழக்கு நிரபராதிகளுக்கு நீதி வேண்டும்
தென்காசியில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. ஆனால் இந்த சம்பவங்களுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத இன்னமும் சொல்லப்போனால் சமூக ஒற்றுமைக்கு காலமெல்லாம் பாடுபட்ட இந்து - கிறிஸ்தவ நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அள்ளிக் கொடுத்த முஸ்லிம் வணிக பிரமுகர்களான எஸ்.எம். கமால் முகைதீன் வி.டி.எஸ். ரஹ்மான் பாட்சா பொதிகை மெடிக்கல் சம்சுத்தீன் போன்றோர் கைது செய்யப்பட்டது எந்த வகையில் நியாயம்? கூட்டுச்சதி என்ற சட்டப்பிரிவு அவர்கள் மீதெல்லாம் போடப்படலாமா?

இப்படிச் சொல்வதால் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் குற்றவாளிகள் என்று அர்த்தம் இல்லை. தென்காசியின் உண்மை நிலவரம் ஆராயப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகத்தான் சி.பி. சி.ஐ.டி விசாரணையை இந்த மாவட்ட முஸ்லிம் லீக் கேட்டது. சமீபத்தில் தென் காசி வந்த தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்முகைதீன் எம்.பி அவர்கள் சி.பி. சி.ஐ.டி. விசாரணை தேவையில்லை. இந்த காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு என்றார்கள். அந்த நம்பிக் கையின் அடிப்படையில் கேட்கிறோம் நிரபராதிகளுக்கு நீதி கிடைக்கச் செய்யுங்கள்.

இதை ஏன் நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றால் எட்டு ஆண்டுகளுக்கு முன் பாளையங்கோட்டை கிரஸண்ட் நகர் பள்ளி வாசலில் புளியங்குடி அப்துல் ரசீத் கொலை செய்யப்பட் டார். கொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் உதவியும் அவரது வாரிசுக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அவரை கொலை செய்ததாக அவரது மகன் மைதீன் பிச்சையை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த அநியாயத்தை எல்லாருமே தட்டிக் கேட்டனர் நாங்கள் எல்லாம் சிறையில் சென்று சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினோம்.

அந்த கொலைக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்று அவரை விடுவித்து விட்டார்கள். ஆனால் இன்னமும் அரசு அறிவித்த உதவி தொகையும் அரசு வேலை வாய்ப்பும் அந்த குடும்பத்திற்கு கிடைக்க வில்லை. எட்டு ஆண்டுகளாக உண்மை குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை.

புளியங்குடி அப்துர் ரஷீத் கொலை வழக்கு போன்று தென்காசி கலவர வழக்கும் நிரபராதிகளுக்கு எதிராக குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆகிவிடக்கூடாது. என்பதால்தான் நாங்கள் இதில் அக்கறை காட்டுகிறோம்.

சிறுபான்மை முஸ்லிம்களின் நலன்களுக்கு எவ்வளவோ நன்மைகளை செய்யும் கலைஞர் அரசு இதில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் காவல்துறைக்கு நல்வழிகாட்ட வேண்டுகிறோம்.

-இவ்வாறு காயல் மகப+ப் பேசினார்

நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் பொருளாளர் ஏ. அப்துல் வகாப் தலைமையில், மாவட்டச் செயலாளர் கடையநல்லூர் த.அ.செய்யது அகமது மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பாம்புக்கோவில் சந்தை வி.ஏ.செய்யது இபுராஹிம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் மாநில தொழிலாளர் அணி அமைப்பாளர் கோவை எம்.எஸ்.முஹம்மது ரபீக் சங்கரன் கோவில் நகர தலைவர் எம்.எஸ்.திவான் மைதீன், மாவட்ட துணை தலைவர் ஏ.மைதீன் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஏ.ஹைதர் அலி ஆகியோர் உரையாற்றினார்.

எம்.முஹம்மது ய+சுப் பைஜி கிராஅத் ஓதினார். கடைய நல்லூர் நகர தலைவர் பி.எம்.ஏ.உசேன் இளைஞர் அணி தலைவர் டி.என்.ரஹ்மத்துல்லா சங்கரன் கோவில் செயலாளர் முஹம்மது சலீம் புளியங்குடி துணைச் செயலாளர்கள் கலீல் ரஹ்மான், கே.எம். அப்துல் காதர், பி.என்.எம். முஹம்மது உசேன், மணிச்சுடர் நிருபர் சாகுல் ஹமீது உள்ளிட்ட ஏராளமானோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

மாவட்ட தொழிலாளர் அணி இணைச் செயலாளர் பி.எம்.எம். காதர் முகைதீன் நன்றி கூறினார். ஜப்பான் உதுமான் மற்றும் முன்னணியினர் இக்கூட்டத்திற்கு மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.