Thursday, February 25, 2010

அறிவிப்பு

அறிவிப்பு

கட்டாய திருமண பதிவுச் சட்டம் சம்பந்தமாக முஸ்லிம் சமுதாயத்திற்கு உள்ள ஐயப்பாடுகளை தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை சந்தித்து தெரிவிப்பதற்கு முன்பாக உரிய திருத்தங்கள் பற்றி அரசு அதிகாரிகளிடம் ஆலோசிப் பதற்காக கீழ்க்காணும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

1. பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்
2. பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்.
3. மௌலவி டாக்டர் அன்வர் பாதுஷா உலவி
4. எம். பஷீர் அஹமது
5. மௌலவி இல்யாஸ் ரியாஜி
6. வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்
7. முஹம்மது ஹனீபா

17.2.2010 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளதகா தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலானா அ.இ. முஹம்மது அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் அறிவித்துள்ளார்.

Tuesday, February 23, 2010

சொந்த ஊரின் இணைய தளத்தின் வாயிலாக பதிலளித்துள்ளார்

சொந்த ஊரின் இணைய தளத்தின் வாயிலாக பதிலளித்துள்ளார்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினரும்,சர்வதேச காயிதே மில்லத் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமான அறிவுச் சுடர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து குவிந்த கேள்விக் கணைகளுக்கு தனது சொந்த ஊரின் இணைய தளத்தின் வாயிலாக பதிலளித்துள்ளார். www.muthupet.com

www.muthupet.org

சிந்தித்தால் தெளிவு பிறக்கும்! - மோதீன் கே.ஏ. அப்துல் நசீர் (அய்யம்பேட்டை)

சிந்தித்தால் தெளிவு பிறக்கும்! - மோதீன் கே.ஏ. அப்துல் நசீர் (அய்யம்பேட்டை)

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் நடைபெற்றபோது ஆரம்பம் முதலே அருகில் இருந்து அனைத்து அமர்வுகளையும் மனதினுள்ளே வாங்க வேண்டும் என்றெண்ணி இயக்கத்தின் தலைவர்களுடன் பயிற்சி முகாம் நடைபெறும் வழுத்தூர் என்ற சாதனை புரிந்து சிற்றூருக்குள் நுழைகின்றோம்.
திரண்டிருந்த மக்கள் கூட்டம் தலைவர் பேராசிரியரையும் மற்றவர்களையும் வரவேற்க தலைவர் பேராசிரியர் இளம் பிறைக் கொடியை ஏற்றி பயிற்சி முகாமின் முதல் அமர்வு தொடங்கப்படுகிறது. தமிழகம் முழுவதிலுமிருந்து மிகுதியான இளைஞர்கள் வந்திருந்தாலும் சிறு சத்தம்கூட இல்லாமல் அமைதியாக அமர்ந்து நிகழ்வுகளை உன்னிப்புடன் கவனித்து கொண்டிருந்தார்கள்.

தலைவர் பேராசிரியர் துவக்கஉரையாற்றினார். எளிமையான விழாக் கோலம் - கண் சிமிட்டாமல் காது கொடுத்து கேட்டுக்கொண் டிருக்கின்றேன். பேரியக்கத்தின் இளைஞர்கள் ஆர்வமிகுதியில் தலைவர்கள் உரை யாற்றும் போது கைதட்டும்போதெல்லாம் மாநில பொதுச்செயலாளர் இளவல் அப+பக்கர் எழுந்து மைக்கை எடுத்து கைதட்டுவது கூடாது என்று அன்புடன் கேட்டுக்கொண்டார்கள். என்ன இது - புதிராக இருக்கிறதே? பெரும் சாதனைகளை சப்தமில்லாமல் செய்த இப்பேரியக்கத்தின் பயிற்சியரங்கம் எளிமையாக நடைபெறுகின்றது. வாண வேடிக்கைகளை விரும்பும் அரசியல் அரங்கில் என்ன புதுமை இது.

தலைவர்களை சாதார ணமாக சந்தித்து அளவளா வும் தொண்டர்கள் - எளிமையின் சின்னமா அமர்ந்திருக்கும் தலைவர்கள். அவரவருக்கு பயிற்சியரங்கப் பணிகளை பொறுப் பெடுத்து கொண்டதைப் போல் பம்பரமாய் சுற்றி உழைக் கும் நேர்த்தி, பேரியக்கத்தின் சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளு மன்ற உறுப்பினரும் தமக்கிடப்பட்ட அரசியல் பணிகளை மிக நேர்த்தியாக எடுத்துரைப்பதும், தங்களது உரைகளிலே கண்ணியத்தையும் கண்டபோது புத்தம் புதிராக இருந்தது.

நாட்டு நடப்புகளை, சமுதாயப் பிரச்சிகைளை அழகான கண்ணியமான முறைகளில் எடுத்துரைக் கும் தலைவர்கள், தொண் டர்களை தூண்டி விடாத தலைவர்கள் - விந்தையிலும் விந்தையாக இருந்தது..

இப்பேரியக்கத்தின் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத், சிராஜுல் மில்லத் போன்ற மாபெரும் தலைவர்களால் வழிநடத்தப்பட்டு இப்போதைய தலைவர் பேராசிரியர் அவர்களால் எப்படி சத்தமில்லாமல் சாதனைகளை தொடர்ந்து செய்ய முடிகின்றது. எப்படி அரசியல் அரங்கிலே இந்த பேரியக்கம் பல கட்சி கூட்டணிகளில் இடம் பெற முடிகின்றது?
பயிற்சிரங்கத்தின் மறுநாள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேரத்தால் அமர்வுகள் அனைத்தும் தொழுகைக்கு பிறகு தொடரும் என அறிவிக் கப்பட்டு தலைவர்கள் முதல் அனைவரும் ஜும்ஆ தொழுகைக்கு புறப்படுகின் றோம். வழுத்தூர் அய்யம்பேட்டை மற்றும் சக்கராப்பள்ளி ஊர்களில் உள்ள ஒவ்வொரு ஜும்ஆ பள்ளிகளையும் தேர்ந்தெடுத்து அழகான முறையில் அறிவிப்பு செய்து இயக்கத்தின் ஒவ்வொரு தலைவரும் ஜும்ஆ பிரசங்கம் செய்தபோது வியப்பின் விளிம்புக்கே சென்றுவிட்டேன்.

எளிமையான அரசியல் இயக்கமாக இரண்டு நாட்களாக அடையாளம் கண்ட எனக்கு தலைவர்களின் ஜும்ஆ பிரசங்கம் புதிராக இருந்தது. இஸ்லாமியப் பெரியார்களிடத் திலே இந்த இயக்கத்திற்கும், அதன் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஏற்பட்டுள்ள மரியாதையும், கண்ணியத்தையும் நேரிடையாகக் காண முடிந்தது. ஜும்ஆ தொழுகை முடிந்து பள்ளிவாசலை விட்டு வெளியே வந்தபோது சிறு தெளிவு ஏற்பட்டது.
ஆம். இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் என்ற இந்த பேரியக்கம் அமைதியாக இஸ்லாமிய சமுதாயத்திற்கான சேவைகளை எப்படி சாதிக்க முடிகிறது என்பது புரிந்தது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் என்ற இந்த பேரியக்கத்தில் இஸ்லாமிய சகோதரர்கள் எப்படி நெருக்கமாக இருக்கின் றார்கள் என்பதை நேரில் காண முடிந்தது. இந்திய இஸ்லாமிய சமு தாயத்திற்கு சேவை செய்வதாக கூறிக் கொண்டு எத்தனையோ இயக்கங்கள், அமைப்புகள் அலம்பலாய் விளம்பரப் படுத்திக் கொண்டு வந்து வந்த வழிச்சுவடே தெரியாமல் மறைந்து போனது. அறிவிப்பு விளம்பரங்களில் தம்மைப் பிர பலப்படுத்திக் கொண்ட அந்த இயக்க அமைப்பு தலைவர்களெல்லாம் விலாசமில்லாமல் கொஞ்ச நாளில் மறைந்து போனார்கள்.
பொய்யான புகழுக்கு ஆசைப்பட்டவர்களெல்லாம் தொண்டர்களாலேயே குறை, குற்றங்கள் சுமத்தப்பட்டு விலக்கி வைக்கப்பட்டார்கள். விபரீத வழிகளை அரசியல் உலகில் தேர்ந்தெடுத்த தலைவர் களெல்லாம் ஒருநாள் வீசியெறியப்பட்டார்கள்.

ஏன் என்ன காரணம்?

புகழுக்கு ஆசைப்பட்டவர்களாக இருந்த அவர்கள் இஸ்லாமிய சகோதரர்களிடையே ஒழுங்குற பழகி அவர்களின் தேவைகளை அறியாதவர்களாக இருந்தார்கள். கட்டுக்கடங்காத அரசியல் புகழாசையில் கண்ணியமாக அரசியல் செய்ய மறந்தார்கள்.

இப்போது தெளிவாக விளங்கிவிட்டது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மட்டுமே கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய இஸ்லாமிய சமுதாயத்திற்கு தொடர்ந்து சேவையாற்றுவதன் ரகசியம் புரிந்து விட்டது.

எந்த இஸ்லாமிய அமைப்பு- இயக்கம் சார்ந்த தலைவர்கள் ஜும்ஆ பிரசங்கம் செய்ய ஜும்ஆ பள்ளிவாசல்களில் அனுமதிக்கப்பட்டார்கள்?

இஸ்லாமிய சமுதாயத்துடன் நெருக்கமான நட்புறவுடன் கொள்கை அளவில் இந்திய ய+னியன்
முஸ்லிம் லீக் மட்டுமே இருந்தது, இருந்து வருகின் றது என்பதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டு இது ஒன்று போதுமே. அதன் வெளிப்பாடுதான் ஜும்ஆ பிரசங்கங்கள். இஸ்லாமிய கோட்பாடுகளையும், வரைமுறகளையும் எல்லைத் தாண்டாத ஒரே அரசியல் கட்சி இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மட்டுமே.

தற்கால அரசியலிலே வழி மாறி, இஸ்லாமிய வாழ்வு முறையிலி ருந்து விலகிச் சென்று இஸ்லாமிய விரோதக் கொள் கைகளுக்கு அடிமையாகி புகழையும், செல்வத்தையும் நாடியவர்களாக தன் வாழ்க்கைப் பயணத்தை மாற்றிக்கொள்கிறார்கள்.

ஆனால், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்டுள்ள இஸ்லாமிய இளைஞர்கள் கண்ணியமான முறையில் அரசியல் செய்யவும் இஸ்லாமிய வரைமுறைகளுக்குட்பட்டு தங்களது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் ஆர்ப்பாட்டமான அரசியல் கிடையாது. தன் கருத்துக்களை ஜனநாயக முறையிலே எடுத்துச் சொல்லி சாணக்கியத்தனமாய் நிறைவேற்றிக்கொள்ளும் சாதுர்யம் உள்ளது. இந்திய அரசியல் அரங்கிலே இந்தப் பேரியக்கத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நட்பு றவாய் நல்ல நண்பனாக இருந்து தோழமையுடன் தன் தனித்துவத்தை நிரூபித்து வருகின்றது.

இந்த பேரியக்கம்போல் எந்த இஸ்லாமிய இயக்கம் ஃ அமைப்புகளோ அரசியல் அரங்கிலே நிரந்தரமாக இருந்தது கிடையாது. நிரந்தரமான அரசியல் அங்கீகாரம் பெற்றதும் கிடையாது.
தான்தோன்றித்தனமாக அறிக்கைகள், போராட்டங்கள் இந்தப் பேரியக்கத்தில் கிடையாது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற நிலைப்பாடும் கிடையாது. தெளிவான கொள்கைகளுடன் மிதமான வேகத்தால் அரசியல் அரங்கிலே முன்னேறி வரும் பேரியக்கம் இது.
அனைத்து அரசியல் கட்சி களுடனும், வேறுபாடில்லாமல் நட்புறவுடன் இருக்கக்கூடிய இஸ்லாமிய இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மட்டுமே. இவை அனைத்துமே இரண்டு நாள் பயிற்சி முகாமில் புரிந்தது. இந்த இயக்கத்தில் என்னை அர்ப்பணித்து சேவையாற்ற முடிவெடுத்தேன். எனதருமை இளைய சமுதாயமே நீங்களும் கண்ணியமான அரசியல் காண சமுதாய சேவையாற்றிட இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

- மோதீன் கே.ஏ. அப்துல் நசீர்
அய்யம்பேட்டை

காயிதே மில்லத் பேரவை- குவைத்

காயிதே மில்லத் பேரவை- குவைத்

டாக்டர்.கே.எஸ்.அன்வர்பாட்சா
குவைத் காயிதே மில்லத் பேரவை
அமைப்பாளர் & அமைப்புக்குழு
00965-97862316, 66641434
http://iumlkuwait.blogspot.com
http://qmfkuwait.blogspot.com

காயிதே மில்லத் பேரவை- குவைத்

காயிதே மில்லத் பேரவை- குவைத்

டாக்டர்.கே.எஸ்.அன்வர்பாட்சா
குவைத் காயிதே மில்லத் பேரவை
அமைப்பாளர் & அமைப்புக்குழு
00965-97862316, 66641434
http://iumlkuwait.blogspot.com
http://qmfkuwait.blogspot.com

தலைவர் பேராசிரியர் நிகழ்ச்சிகள்

தலைவர் பேராசிரியர் நிகழ்ச்சிகள்

பிப்.21 - கள்ளிக்கோட்டை

- முஸ்லிம் லீக் இளைஞர் அணி தேசிய மாநாடு

பிப்.22 - நீலகிரி மாவட்டம் - கூடலூர்

காலை 11.மணி தேவாலா

பகல் 12.30 - அத்திக்குன்னு, 2.00 மணி - பந்தலூர் மாலை 4.00 மணி சேரம்பாடி, 5 மணி - எருமாடு, 7.00 மணி பாட்டவயல், 8.00 மணி - பிதர்க்காடு

பிப்.23 - காலை, கூடலூர் - வக்ஃபு வாரிய கூட்டம்

மாலை 4.00 மணி பாடந்துறை,

5.00 மணி - நிலாக்கோட்டை,

7.00 மணி - தேவர்சோலை

பிப்.24 - காலை, கூடலூர் - வக்ஃபு வாரிய கூட்டம்

மாலை 4.00 மணி - கூடலூர் காந்தி திடலில்

முஸ்லிம் லீக் கூட்டம்

பிப்.25 - காலை, கூடலூர் - வக்ஃபு வாரிய கூட்டம்

பிப்.26 - சென்னை

பிப்.27, 28

மார்ச் 1, 2 - இலங்கை - மீலாது விழாக்கள்

மார்ச் 3, 4, 5 - சென்னை

மார்ச் 6 - இராமநாதபுரம் - எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் இல்லத் திருமண வரவேற்பு

மார்ச் 7 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர்

பி.ஏ. சிக்கந்தர் பாட்சா இல்லத் திருமண நிகழ்ச்சி

மார்ச் 8, 9 - சென்னை

மார்ச் 10 - மேலப்பாளையம்

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்

62-வது நிறுவன தின மாநாடு

தலைவர் பேராசிரியருடன் தேசியச் செயலாளர் டெல்லி குர்ரம் அனீஸ் உமர் கேரள சுற்றுப் பயணத்திலும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில விவசாய அணி அமைப்பாளர் கோவை நாசர் எம்.சி., நீலகிரி மாவட்ட சுற்றுப் பயணத்திலும் பங்கேற்கின

தொடங்கும் ஒவ்வொன்றும் வளரும்- வளரக்கூடிய ஒவ்வொன்றும் ஒரு நாள் முடிவடையும்||

தொடங்கும் ஒவ்வொன்றும் வளரும்- வளரக்கூடிய ஒவ்வொன்றும் ஒரு நாள் முடிவடையும்||
இறைவனின் நியதி குறித்து தலைவர் பேராசிரியர் உரை


தொடங்கக் கூடிய ஒவ்வொன்றும் வளரும், வளரக்கூடிய ஒவ்வொன் றும் முடியும். இதுதான் இறைவனின் நியதி. இறைத் தூதர்களின் துவக்கமும் முஹம்மது (ஸல்) அவர் களே இறுதித் தூதர் என்ப தும் இதைத்தான் காட்டுகி றது. என தலைவர் பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் தெரிவித்தார்.

வடக்குகோட்டையார் முஹம்மது அப்துல்லா அறக்கட்டளை சார்பில் சிந்தைக்கினிய சீறாப் புராணம் வரலாறு பாடலும் விளக்கமும் என்ற நிகழ்ச்சியில் கடந்த 19.2.2010 தலைமையுரை யாற்றிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசும்போது குறிப்பிட்ட தாவது:

இன்றைய நிகழ்ச்சியில், சகோதரர் லியாகத் அலிகான் சிறப்பான முறை யில் நம்மையெல்லாம் சிந்திக்க வைக்கக் கூடிய வகையில் இந்து மத அறிஞர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்களை யெல்லாம் மேற்கோள் காட்டி உரையாற்றினார்.

இறைவன் தனது இறுதி வேதமாம் திருக்குர்ஆனில் முன்னுள்ள வேதங்களைக் குறித்தும், இறைத்தூதர்கள் குறித்தும் விவரித்துள் ளான். வேதக்காரர்கள் என இறைவன் குறிப்பிடுவது கிறிஸ்தவர்களையும், ய+தர் களையும் குறிப்பிடுகிறது. அதேபோன்று சூரியன் சந்திரன் போன்றவற்றை வழிபடக் கூடியவர்களை ஸாபியீன்கள் என்று இறை வன் குறிப்பிடுகின்றான்.

இந்த ஸாபியீன்கள் என்பது நமது இந்திய நாட்டில் உள்ள சூரியன் சந்திரனை வணங்கக் கூடிய வர்களையும், உருவ வழி பாடு செய்யக் கூடியவர் களையும் குறிக்கிறது என விளக்கங்கள் கூறப்படுகின் றன.

அதே சமயம், 1929ம் ஆண்டிலே நமது இந்தியா வில் உலமா பெருமக்க ளெல்லாம் நடத்திய மாநாட்டிலே வேதக்காரர் கள் என இறைவன் குறிப் பிடுவது ய+தர்கள், கிறிஸ்த வர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள முஸ்லி மல்லாத மக்களையும் குறிக் கும் என்பதாக தீர்மா னித்து அறிவித்துள்ளனர்.

காரணம், இந்தியாவில் பல வேதங்கள் ரிக், யஜூர், ஷாம அதர்வனம் போன் றவை பன்னெடுங் கால மாக வேதங்களகாக மதித்து போற்றப்பட்டு வரு கின்றன. இவற்றையெல் லாம் ஒப்பிட்டு அவற்றில் கூறப்பட்டுள்ள இறுதி நபி குறித்த தகவல்களை ஆய்வு செய்து அது முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் தான் குறிக்கிறது என்பதாக இந்து மத அறிஞர்களே ஆய்வு செய்து அறிவித் துள்ளனர்.

30 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியிலே உலக சமய மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து பல சமயங்களில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்றனர். அந்த மாநாட்டிலே முஸ்லிம்களின் சார்பாக உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் இஸ்லாம் மார்க்கத்தின் சிறப்புக்களை எடுத் துரைத்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள்தான் இறு தித் தூதர் என்பதையும், திருக்குர்ஆன்தான் இறுதி வேதம் என்பதையும் விளக் கிக் கூறினேன்.

இதனை செவியேற்ற இந்து சமய அறிஞர் சித் பவானந்தா சுவாமி என்ப வர் என்னிடம் ஒரு வினாவை தொடுத்தார். உங்களது இந்த கருத்து இறைவனின் தன்மையை குறைத்து விடக் கூடியதாக இருக்கிறதே? திருக்குர் ஆன்தான் இறுதி வேதம் என்றும், முஹம்மது நபி (ஸல்) தான் இறுதித் தூதர் என்றும் நீங்கள் குறிப்பிடுவ தால் இறைவன் இனி வேதங்களையோ, தூதர் களையோ படைக்கமாட் டான் என அர்த்தமாகிறது.

இறைவனின் படைக் கும் ஆற்றலை குறைவு படுத் துவதாக இது அமைந் துள்ளதே எனக் கேட்டார். அந்த சமயத்தில் எனக்கு தோன்றிய விடையை அவர்கள் மத்தியில் கூறி னேன். இறைவன் உலகில் எதையெல்லாம் படைக் கிறானோ அவையெல்லாம் ஒரு நாள் முடிவுக்கு வந்து விடும். எது ஒன்றுக்கு துவக் கம் இருக்கிறதோ அது வளரும், வளரக்கூடியது ஒரு நாள் முடிவடையும்.

இறைத்தூது என்பது ஆதி மனிதர் ஆதம் (அலை) மூலமாக இறை வன் துவக்கினான். அது வளர்ந்து , பெருகி இஸ் லாமிய அறிஞர்களின் கருத்துப்படி 1லட்சத்து 24ஆயிரமாக வளர்ந்துள் ளது. அதன் முடிவாக முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதித் தூதராக அமைந் துள்ளார்கள். அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர் ஆனே இறுதி வேதமாகவும் அமைந்துள்ளது. இதுதான் இறைவனின் நியதி என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தேன்.

இவற்றையெல்லாம் இங்கு குறிப்பிடுவதற்கு காரணம், நாம் இஸ்லாம் மார்க்கம் குறித்தும், முஹம் மது நபி (ஸல்) அவர்கள் குறித்தும், முஸ்லிம் அல் லாதவர்களுக்கு எடுத் துரைக்கும்போது அவர் கள் இறைவன் குறித்தும், இறைவேதங்கள் குறித்தும், இறைத் தூதர்கள் குறித்தும் எத்தகைய கருத்துக்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து அவற்றையொட்டி நமது விளக்கங்களை கூறும் போது அவர்கள் சிந்திக்க வும், உண்மையை ஏற்றுக் கொள்ளவும் வாய்ப்பு ஏற் படும். அத்தகைய ஒரு சூழலை ஏற்படுத்த இது போன்ற மீலாது நபி விழாக்களை நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பாடு செய்து நடத்த வேண்டும்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

தி.மு.க.பொதுக் குழு தீர்மானம்: முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் வரவேற்கிறது

தி.மு.க.பொதுக் குழு தீர்மானம்: முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் வரவேற்கிறது


தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர்அவர்களின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க., பொதுக் குழுவில் முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கைக்கு உரிய மதிப்பு அளித்து, திருமணச் சட்டத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ஏற்பட் டுள்ள ஐயப்பாடுகளைக் களைவதற்கு உறுதி அளிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை நன்றியோடு வரவேற்கிறோம்.

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை, இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஏகக் குரலில் சமுதாயத்தின் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றன.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

எனும் திருக்குறள் மந்திரத்துக்கு ஏற்ப, தி.மு.க., தனது பொதுக் குழு தீர்மானத்தின் மூலம் மத்திய மாநில அரசு பிரதிநிதிகள் முஸ்லிம் சமுதாயப் பிரதிநிதிகளைச் சந்தித்து, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயப்பாடுகளை நீக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.

முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் சமுதாயப் பெருமக் களும் இந்தத் தீர்மானத்தை நன்றியோடு வரவேற்பர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

திருமணப் பதிவுச் சட்டத்தில் முஸ்லிம் தனியார் சட்டத் துக்கு பாதிப்பு ஏற்படும் என்று முஸ்லிம் சமுதாயம் ஐயப் பாட்டைத் தெரிவித்தவுடன் தி.மு.கழகம் தனது பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றி முஸ்லிம்களின் உணர்வு களுக்கு உரிய மதிப்பளிப்பதையும் பார்க்கிறோம்.

அதே சமயத்தில் பத்தாண்டுகளுக்கு முன்னே நாட்டில் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி தொடர் பிரச்சாரம் மேற்கொண்டபோது அதை முஸ்லிம் சமு தாயம் கடுமையாக எதிர்த்தது.

தமிழகம் எங்கும் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பெற்று பொதுச்சிவில் சட்டத்தை எதிர்ப்பதாக முஸ்லிம் சமுதாயம் தனது உணர்வை வெளிப்படுத்தியது.

அன்று முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா, தனது அ.இ.அ.தி.மு.க., பொதுக் குழுவைக் கூட்டினார். நாட்டில் பொது சிவில் சட்டம் வந்தே ஆக வேண்டும்@ மத்திய அரசு அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றினார். அடுத்த நாள் காலை நாளிதழின் முதல் பக்கத்தில் எட்டுக்காலம் செய்தியாக கொட்டை எழுத்தில் அது வெளிவந்தது.

அதையும் நினைக்கிறோம்@ இன்று தி.மு.க., நிறை வேற்றியுள்ள இதையும் நினைக்கிறோம். தமிழக முதல்வர் கலைஞருக்கு முஸ்லிம் சமுதாயம் காட்டும் நன்றிப்பெருக்கு இரட்டிப்பாகிறது.

திருமணச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் வரும்போது, ஒட்டுமொத்த சமுதாயத்தின் உள்ளம் ப+ரித்து நன்றி தெரிவித்து மகிழும்.

-பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன்

தலைவர், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்

தமிழ்நாடு மாநிலம்

Friday, February 5, 2010

தமிழக அரசின் திருமண கட்டாய பதிவுச் சட்டம்: சிறுபான்மையின தலைவர்களுடன் ஆலோசித்து தீர்வு காணப்படும் முதல்வர் கலைஞர் அறிவிப்பு

தமிழக அரசின் திருமண கட்டாய பதிவுச் சட்டம்: சிறுபான்மையின தலைவர்களுடன் ஆலோசித்து தீர்வு காணப்படும் முதல்வர் கலைஞர் அறிவிப்பு


தமிழக அரசு கொண்டு வந்துள்ள திருமண கட்டாயப் பதிவுச் சட்டம் பற்றி முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சம் போக்க அச்சமுதாயத்தின் தலைவர்களுடன் ஆலோசித்துத் தீர்வு காணப்படும் என தமிழ்நாடு முதல்வர் கலைஞர் அறிவித்துள்ளார்.
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, ஹமணிச்சுடர்| நாளிதழ் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கை யில் அவர் இதனை தெரிவித்தார். நாடு முழுவதும் நடை பெறும் திருமணங்கள் அனைத்தும் கட்டாயப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு திருமண கட்டாயப் பதிவுச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கான சட்ட முன் வடிவு அறிமுகப்படுத்தப்பட்ட போதே உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 2009-ம் ஆண்டு ஜுலை 7-ம் தேதி சென்னை பிரசிடென்ட் ஓட்டலில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டத்தை நடத்தியது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசி ரியர் கே.எம். காதர் மொகிதீன் முன்னிலையில் தமிழ் நாடு வக்ஃபு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் தலைமையில் இக்கூட்டத்தை நடத்தி, கட்டாய திருமணப் பதிவு சட்டம் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு பாதகம் ஏற்படுத்தி விடுமோ? என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. உரிய கவனத்துடன் வேண்டிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற விவாதம்
அதன் பின்னர், தமிழ் நாடு சட்டமன்றத்தில் இந்த மசோதா 2009 ஜுலை 21-ம் தேதி விவாதத்திற்கு வந்தபோது அரவாக் குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாஸித் ஆகிய இருவரும் சந்தேகங் கள் தெரிவித்து வெட்டுத் தீர்மானங்களை முன் மொழிந்தனர்.
எந்தவொரு சூழ்நிலையி லும் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இந்த சட்டம் தொடர்பாக உரிய திருத்தங்கள் செய்ய இரண்டு வருட கால அவகாசம் அளிக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் சட்ட அமைச்சர் தனது பதிலுரையில் உறுதியளித்தார்.
இதனால் வெட்டுத் தீர்மானங்கள் திரும்பப் பெறப்பட்டன. இந்த விவாதத்தில் உரையாற்றிய எச். அப்துல் பாசித் எம். எல்.ஏ., முஸ்லிம் தனியார் சட்ட வாரிய ஆலிம் பெரு மக்கள் தரக் கூடிய பரிந்து ரைகளை ஏற்று உரியத் திருத்தங்களை இந்த சட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இச் சட்டம் நடை முறைக்கு வந்ததற்கு பிறகு சார்பாதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யும் போது வயது மற்றும் இருப்பிட சான்றுகளுக்கு ஆவணங்கள் கேட்கப்ப டுவது உள்ளிட்ட பிரச்சி னைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் முஸ்லிம் ஷரீஅத் சட்டத்திற்கு பாதகம் ஏற்பட்டு விடும். ஜமா அத் கட்டுப்பாடுகள் சீர் குலைந்துவிடும் என்ற அச்சம் முஸ்லிம் சமுதா யத்திற்கு மத்தியில் ஏற்பட்டது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற் குழு கூட்டம் தஞ்சை மாவட்டத்தில் கூடி தமிழ் நாடு அரசின் திருமண கட்டாயப் பதிவு சட்டம் தொடர்பாக முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்குவதற்காக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா மற்றும் முத்தவல்லிகள், மதரஸா நிர்வாகிகள், பிரதிநிதிகளை முதல்வர் சந்தித்து விவாதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தது.
தமிழக அரசின் சார்பில் முஸ்லிம் லீகின் தீர்மானம் முதல்வரின் பரிசீலனையில் இருப்பதாக தமிழ்நாடு பதிவுத் துறை தலைவரி டமிருந்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமை யகத்துக்கு தகவல் தரப்பட்டது. கடந்த ஜனவரி 31-ம் தேதி பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தோர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இணைந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், திருமண கட்டாயப் பதிவுச் சட்டம் தொடர்பாக முஸ்லிம் சமுதாயத்தின் ஐயப்பாடு களை முதல்வர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து எடுத்துச் சொல்லி, பள்ளி வாசல்களில் காலம் காலமாக பதிவு செய்யப் பட்டு பராமரிக்கப்படும் பதிவேடுகளை அப்படியே அங்கீகரித்து பதிவு செய்ய வேண்டும் என கோருவோம் என குறிப்பிட்டிருந் தார். இந்த செய்தி பிரபல நாளிதழ்களில் வெளிவந்திருந்தது.
முதல்வர் கலைஞர் அறிவிப்பு
இன்று முதல்வர் கலைஞர் அண்ணா அறி வாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, ~மணிச்சுடர்| நாளிதழின் செய்தியாளர் இது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
~தமிழக அரசின் கட்டாய திருமணம் பதிவு சட்டம் சிறுபான்மையின மக்களின் தனியார் சட்டத் திற்கு குறிப்பாக முஸ்லிம் களின் ஷரீஅத் சட்டத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள தாகவும், அதில் தேவையான திருத்தங்கள் செய்ய வேண்டும் எனவும், முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்தள்ளன. எனவே இது குறித்து உங்கள் கருத்து என்ன?| என கேட்டபோது,
~தமிழக அரசின் திருமண கட்டாயப் பதிவு சட்டம் சிறுபான்மையினருக்கு பாதகங்களை ஏற்படுத்தக் கூடியதா? என் பதை குறித்து ஆராய சிறு பான்மை சமூக தலைவர்களுடன் விரைவில் ஆலோ சனை நடத்த உள்ளேன். அதில் தீர்வு காணப்படும்.| என முதல்வர் கலைஞர் அறிவித்தார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சி களுக்கு பலன் கிடைத் துள்ளது. முஸ்லிம் சமுதாயத்தின் தலைவர்களை முதல்வர் கலைஞர் விரைவில் சந்திப்பார். அதன் மூலம் திருமண கட்டாயப் பதிவு சட்டம் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

Monday, February 1, 2010

முஸ்லிம் லீக் சாதிக்காத எதையும் வேறு யார் சாதித்திருக்கிறார்கள்? தாய்ச்சபையில் இணைந்தவர்களை வரவேற்று பேராசிரியர் எழுச்சி உரை

முஸ்லிம் லீக் சாதிக்காத எதையும் வேறு யார் சாதித்திருக்கிறார்கள்? தாய்ச்சபையில் இணைந்தவர்களை வரவேற்று பேராசிரியர் எழுச்சி உரை

சென்னை, பிப். 1:
நீதியரசர் ரஜேந்திர சச்சார், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பெற்றுத் தந்த சாதனைகள்!.
நாங்கள் சாதிக்காத எதையும் வேறு யாராவது சாதித்திருக்கிறார்களா? என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேரா சிரியர் கே.எம்.காதர் மொகி தீன் கேள்வி எழுப்பினார்.
இந்திய தேசிய லீக், தேசிய லீக் உள்ளிட்ட அமைப்புக்களைச் சார்ந்த கடலூர், வேலூர், சென்னை மாவட்டங்களின் நிர்வாகிகள், ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் அவற்றிலிருந்து விலகி இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இணைந்தனர்.
அவர்களை வரவேற்று பேசுகையில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டதாவது-
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இணைந்த உங்களையெல்லாம் மன தார வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
தாய்ச்சபையில் இணைவதற்காக தலைமை நிலையமான காயிதெ மில்லத் மன்ஜில் கூட்ட அரங்கிற்கு வந்தபோது இந்த அரங்கம் சிறியதாக இருக்கிறதே, இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஒரு பெரிய அரங்கம் தேவை என கூறினேன். உடனடியாக அந்த துஆ இறைவனால் ஏற்கப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கானோரை உட்கார வைக்கக் கூடிய இந்த அருமையான அரங்கத்தை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிகழ்ச்சிகளுக்கு எப் போதும் தரத் தயார் என இங்கே அறிவித்த சென்னை ஹஹபைஜி மஹால் ஏ.எம். புகாரி ஆடிட் டோரியத்தின் உரிமையா ளர் சகோதரர் ருமைசுத்தீன் பைஜி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள் கிறேன்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை திருச்சியில்தான் நடத்துவது வழக்கம். அதற்கு காரணம் அங்கே எல்.கே.எஸ். மஹாலை முஸ்லிம் லீகிற்காக தந்து விடுவார்கள். நினைத்த நேரத்தில் எந்த நிகழ்ச்சி யையும் நடத்தக் கூடிய ஒரு வாய்ப்பை அன்றுமுதல் இன்றுவரை அவர்கள் செய்து வருகிறார்கள். இந்த எல்.கே.எஸ். மஹால் பெயரை சர்வதேச அள விற்கு கொண்டு சென்ற பெருமை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகையே சாரும்.
அதே போன்று சென்னை எழும்ப+ர் பைஜி மஹாலின் புகாரி ஆடிட் டோரியத்தின் பெருமை யும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நிகழ்ச்சி களால் சர்வதேச அளவில் சென்றடையும். முஸ்லிம் லீகிற்கு உதவி செய்தவர்கள் இறைவனுடைய உதவியை பெறுவார்கள். நல்ல உள் ளத்தோடு அறிவித்த ருமைசுத்தீன் பைஜி அவர் களுக்கு இறைவன் எல்லா உதவிகளையும் செய்ய பிரார்த்திப்போம்.
ஆன்மீகப் பெரியார்களின் துஆக்கள்
அல்ஹாஜ் மௌலானா பைஜி ஷாஹ் நூரி ஹஜ்ரத் அவர்கள் அன்மை காலத் தில் வாழ்ந்து மறைந்த பெரியார். ஷெய்குமார்கள், ஆன்மீக பெரியவர்கள், சங்கைக்குரிய ஆலிம் பெரு மக்கள் எங்கே இருந்தா லும் அவர்களிடத்தில் துஆவை பெறவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன் நான். பெரியார்களுடைய துஆக்கள்தான் எனக்கு ஒரு வலிமையை தந்துள்ளது.
ஆன்மீகப் பெரியார்கள் செய்யும் துஆக்கள் உரிய இடத்தில் கப+லைப் பெற் றுத் தரும். நல்லவர்கள் வாழுகின்ற காரணத்தால் தான் துஆக்கள் கப+லாகின் றன. உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கக் கூடிய ஆன்மீகச் செல்வர்களை நாம் நாடிச் செல்கிறோம் என்றால் தேன் இருக்கு மிடத்தில் வண்டுகள் நாடிச் செல்வதைப்போலத்தான். இந்த இணைப்பு விழா அப்படிப்பட்ட ஆன்மீகப் பெரியார்களுடைய, ஆலிம் பெருமக்களுடைய துஆக்களோடு இன்று நடைபெற்றுக் கொண் டிருக்கிறது.
இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் எல்லா கட்சி களையும்போல் ஒரு கட்சி என்று நினைத்தால் அது தவறாகும். சுதந்திரத்திற்கு முன்பு முஸ்லிம் லீகில் இல் லாத முஸ்லிம்களே இல்லை என்ற நிலை இருந் தது. சுதந்திரத்திற்கு பின்பு முஸ்லிம் லீகில் இருந்தால் அவர்கள் முஸ்லிம்களே இல்லை என்று சொல்லப் பட்டு இருந்தவர்கள் எல்லாம் வெளியேறிக்கொண் டிருந்த ஒரு காலமாக இருந்தது. அதை தனி ஆளாக நின்று தடுத்து நிறுத்தி முஸ்லிம் லீகில் இருந்தால்தான் முஸ்லிம் களுக்கு பெருமை|| என்ற நிலையை ஏற்படுத்திக் காட்டியவர் கண்ணியத் திற்குரிய காயிதெமில்லத்.
இன்று முஸ்லிம்கள் பல் வேறு கட்சிகளில் இணைந்து செயல்படு கிறார்கள். முஸ்லிம்களுக் காகவே பல கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. முஸ்லிம் லீக் என்ற பெய ரைக்கூட வைத்துக் கொள் கிறார்கள். ஏன், 58 முஸ்லிம் அமைப்புக்கள் இன்று தமிழ்நாட்டிலேயே இருக்கின்றன. ஆனால், இன்று ஒரு திருப்புமுனை ஏற்பட்டு அவர்கள் எல்லாம் வெளியேறி இன்று தாய்ச்சபையில் இணைந்த வண்ணம் உள்ளனர். புதிய புதிய அமைப்புக்கள் தோன்றும் போதெல்லாம் இருக்கின்ற அமைப்பு போதாதா என்று சமுதாயம் கேட்கத் தொடங்கி விட்டது.
முஸ்லிம் லீக் நமக்கும் தேவை + நாட்டுக்கும் தேவை
60ஆண்டுகால இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வரலாற்றை அலசிப் பார்த் தவர்கள் தாய்ச்சபையின் பக்கம் இன்று திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நமக்கும் தேவை நாட்டுக்கும் தேவை என்ற உணர தலைப்பட்டிருக் கிறார்கள். முஸ்லிம்கள் மட்டுமன்றி முஸ்லிம் அல்லாதவர்களும் இதில் இணைந்து வருகிறார்கள். எதிர்காலம் பற்றி அவர் களுக்கும் ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. முஸ்லிம் லீகின் பாதையை பார்த்துவிட்டு அதனால் ஏற்படும் பலனை தெரிந்து கொண்டே இங்கே இணை கிறார்கள்.
நாம் சத்தியத்தை எடுத் துச் சொல்கிறோம். ஆனால், இஸ்லாத்தை போதிக் கிறோம் என்ற பெயரால் தீவிரவாதத்தை போதிப் பதையும், பிரச்சா ரம் என்ற பெயரால் வசை பாடுவ தையும் சிலர் வழக்க மாகிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முடிவே கிடை யாதா? என யோசித்தால் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்தான் அதற்கு முடிவா கத்தெரியும். எனவே, இதை பலப்படுத்துவது, வளர்ப் பது கட்டாயக் கடமையா கும். உங்களுடைய ஒத்து ழைப்பாலும், உதவியாலும் தான் இதை சாதிக்க முடியும்.
இங்கே வரவேற்புரை என்கின்ற பெயரால் ஒரு வாழ்த்துரையையே வழங்கிய மௌலானா நூருல்லா பைஜி ஹஜ்ரத் முஸ்லிம் ஓட்டுக்களெல் லாம் ஒரு முகமாக நிற்க வேண்டும் என்ற கருத்தை இங்கே எடுத்துச் சொன் னார்கள். ஒரு ஓட்டு என் பது ஆட்சியை மட்டுமல்ல சரித்திரத்தையே மாற்றி விடும்.
முஸ்லிம்களின் ஓட்டு வலிமை
இந்திய அரசியல் நிர்ணய சபையில் இந்தியா வின் ஆட்சி மொழி எது என்ற பிரச்சினை வந்த போது பாபு ராஜேந்திர பிர சாத்தின் ஒரு ஓட்டால்தான் இந்திய ஆட்சி மொழி யானது. ஜனநாயகத்தில் ஒரு ஓட்டு என்பது மிக முக்கியமானது. அதே போன்றுதான் ஹஜ்ரத் அவர்கள் சுட்டிக் காட்டிய நம் சமுதாய ஓட்டும்.
சில தினங்களுக்கு முன் னால் நம்முடைய மணிச் சுடர் நாளிதழில் தம்பி காயல் மகப+ப் ஒரு செய் தியை வெளியிட்டிருந்தார். பாரதீய ஜனதா கட்சியின் தற்போதைய தலைவர் மிதின் கட்காரி செய்தியா ளர்களிடம் பேசுகையில், ஹஹபாரதீய ஜனதா கட்சிக் கும்-காங்கிரசுக்கும் பத்து சதவீத வாக்குகள்தான் வித்தியாசம், அந்த வாக்கு வித்தியாசத்தில்தான் நாங்கள் ஆட்சியை இழந் திருக்கிறோம்|| அந்த வாக்குகளை நாங்கள் பெறுவது எப்படி என்பது தான் இப்போது எங்கள் முன்னுள்ள ஒரே பிரச் சினை என குறிப்பிட்டிருந் தார்.
நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா 10 சதவீதம் முஸ் லிம்களுக்கு தனி இட ஒதுக் கீடு வேண்டும் என தன் பரிந்துரையில் குறிப்பிட் டுள்ளார். அந்த 10 சதவீத முஸ்லிம் வாக்குகள்தான் இன்று பாரதீய ஜனதாவை சிந்திக்க வைத்திருக்கின்றன. அதை பெறுவது எப்படி என நிதின் கட்காரி யோசிக் கின்றார். புலி தன் வரியை மாற்றட்டும், வரிக்குதிரை யின் வரிகளெல்லாம் நீக் கப்பட்டு குதிரைவெள்ளை யாகட்டும். இது நடந்தால் பாரதீய ஜனதா தன் போக்கை மாற்றும்.
ஆனால், அது முக்கிய மல்ல. நம் வாக்கு வங்கியின் வலிமையை அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள். இந்த வாக்கு வங்கியை ஒருமுகப் படுத்தக் கூடிய பணியை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இன்று செய்து வருகிறது. சமுதா யத்தை ஒற்றுமைப் படுத்தி அதன் பலனை நாம் வழங்க வேண்டியவர்களுக்கு வழங்கி அதன் மூலம் முழு பலனும் நம் சமுதாயத் திற்கு கிடைக்க வேண்டும்.
முஸ்லிம் லீகின்
சாதனை
சுயநலத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் இயக்கங்கள் நடத்துவது சமுதாயத்தை பிளவுபடுத்து வது புத்திசாலித்தனமானது அல்ல. இன்று 58 இயக்கங் கள் எதற்கு? புதிய புதிய இயக்கங்கள் தோன்றுவ தால் யாருக்கு லாபம். இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செய்யாத ஒன்றை யார் செய்து விட்டார்கள். முஸ்லிம் லீக் சொல்லதா எதையும் இவர்கள் புதிதாக சொல்லி விட்டார்களா? நாங்கள் எழுதாத ஒரு தீர் மானத்தை இவர்களால் எழுந்த முடிந்ததா? நாங் கள் எழுதிய தீர்மானத் தைக் கூட இவர்கள் திருத்தி எழுதும்போது தப்பும் தவறுமாகத்தானே எழுதி வெளியிட்டார்கள்.
இட ஒதுக்கீடு யாருடைய சிந்தனையில் தோன்றியது? அதற்கு முதல் வடிவம் கொடுத்தவர்கள் யார்? சச்சார் கமிஷனுக்கும், மிஸ்ரா கமிஷனுக்கும் இன்று யார் யாரோ விளம் பரம் செய்துகொண்டிருக் கிறார்கள். வீதிக்கு வந்து வீராப்பு பேசுகிறார்கள். கூரை மீது ஏறி நின்று கொண்டு கூப்பாடு போடு கின்றார்கள். வானத்திற்குச் சென்று வாய்ப்பந்தல் போடுகின்றார்கள்.
ஆனால், உண்மை உங்களுக்குத் தெரியுமா? இன்று நாட்டை ஆளு கின்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சென்ற முறை ஆட்சி அமைத்தபோது அதில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பங்கேற்றது. அதில் இடம்பெற்ற கட்சிக ளெல்லாம் குறைந்த பட்ச செயல் திட்டங்களை அளித்திருந்தன.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் இந்த குறைந்த பட்ச செயல் திட்டத்திற்கு நாங்கள் 13 திட்டங்களை முன்வைத் தோம். அதில் ஐக்கிய முற் போக்குக் கூட்டணி 6 திட் டங்களை ஏற்றுக் கொண் டது. அதில் ஒன்று கல்வி வேலை வாய்ப்பில் 10 சதவீதம் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு பரிந் துரை பெறப்பட வேண்டும் என்பது.
முஸ்லிம்களின் பொருளாதார, வாழ்வா தார நிலமைகளை அறிய ஒரு கமிஷன் நியமிக்கப் பட வேண்டும் என்பது இந்தியாவின் பட்ஜெட் டில் 15 சதவீதத்தை முஸ்லிம் களுக்காக ஒதுக்கி அவர் களின் வாழ்வா தாரத்தை முன்னேற்ற செய்வது. உருதுக் கல்விக்கு முன் னுரிமை அளிப்பது சிறு பான்மை கல்வி நிலை யங்களுக்கு உதவி அளிக் கும் ஆஸாத் பவுண்டேஷ னுக்கு அளிக்கப்படும் மானியத்தை அதிகப்படுத் துவது. இந்த கோரிக்கை களெல்லாம் ஐக்கிய முற் போக்குக் கூட்டணியால் ஏற்கப்பட் டன. இன்னமும் சொல்லப் போனால் இந்த கூட்டணி அரசாங்கத்திற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்று பெயரைச் சூட்டியதும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்தான்.
நாங்கள் அளித்த குறைந்த பட்ச செயல்திட் டத்தால் கிடைத்ததுதான் நீதியரசர் ராஜேந்திர சச்சார் கமிஷனும், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷ னும் என்பதை நன்றியுள்ள எவரும் மறந்துவிடக் கூடாது.
இன்று மத்தியில் திருமதி சோனியா காந்தி யின் வழிகாட்டுதலில் முதல்வர் கலைஞரின் ஒத் துழைப்பில் பிரதமர் மன் மோகன் சிங் சிறுபான்மை முஸ்லிம்கள் முன்னேற்றத்திற்கு ஆக்கப் ப+ர்வமான காரியங்களை செய்து வருகிறார்.
சச்சார் கமிஷன் பரிந் துரையின் அடிப்படையில் முஸ்லிம்கள் நிறைந்த 90 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகளுக்கு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அது போதாது முஸ்லிம்கள் கணிசமாக வாழும் நகரங்களையும் இணைக்கப்பட வேண் டும் எனச்சொல்லி 497 நகராட் சிகள் இணைக்கப்பட்டு காரியங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இந்த சாதனைகள் யாருக் காவது தெரியுமா? இது போன்ற ஒரு சாதனையை யாவது யாராவது செய் திருக்க முடியுமா?
தாய்ச்சபையை
ஆதரிப்பீர்
எனவே, இந்த இயக்கம் வளர வேண்டுமா? வேண்டாமா? பெரியவர் களும் இளைஞர்களும் இந்த இயக்கத்தில் இணைய வேண்டுமா? வேண்டாமா? இந்த சமுதாயம் மானத் தோடும் மரியாதையோடும் வாழ்வதற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுதியோடு செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது.
இந்த இயக்கத்தை வளப் படுத்தவும், பலப்படுத்தவும் இளைஞர்களே முன் வாருங்கள், பெரியவர்களே ஆதரவைத் தாருங்கள், அறிஞர் பெருமக்களே துஆ செய்யுங்கள், எல்லோ ரும் ஒன்று சேர்ந்து உழைப் போம். இந்த இயக்கத்தை வளர்ப்போம், சமுதா யத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வோம் என கூறி தாய்ச்சபையில் இணைந் துள்ள அனைவரையும் அன்போடு வருக வருக என வரவேற்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.





--
QUAID-E-MILLATH FORUM-HONG KONG

Affiliated to Indian Union Muslim League-Tamil Nadu State

("Communal amity with hearts" harmony, effective democracy through proper representation.")

Please visit Our Official Website for updated news http://www.muslimleaguetn.com

READ "MANICHUDAR" printed version availbale in INDIA

ஈரோடு சூரம்பட்டி முஸ்லிம் லீக் சார்பில் குடியரசு தின விழா

ஈரோடு சூரம்பட்டி முஸ்லிம் லீக் சார்பில் குடியரசு தின விழா


ஈரோடு, பிப். 1:

ஈரோடு சூரம்பட்டி நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் 61வது குடியரசு தின விழா நடைபெற்றது.

சூரம்பட்டி நகர இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயலாளர் மௌலவி ஏ.ஜாபர் அலி கிராஅத் ஓதினார், நகரத் தலைவர் எம். நூர் சேட் தலைமை தாங்கி சிறப்புரையாற்றி தேசிய கொடி ஏற்றிவைத் தார்.

சூரம்பட்டி நகர பொரு ளாளர் எஸ். ஏ. காதர், துணைத் தலைவர்கள் எம். முஹம்மது ய+சுப், ஏ. முஹம்மது ஜின்னா ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர். விழாவில் நகர மாணவர் அணி அமைப் பாளர் என். மன்சூர் அலி, துணை அமைப்பாளர் எம். சபீர் ரஹ்மான், கே. முஹம்மது ஜியாவுதீன், பி. நிஜாம் மற்றும் ஏ. இர்ஷாத், என். முஹம்மது ஹாரிஸ், ஜி.காதர் ஷரீப், எஸ். அலாவுதீன், ஜெ. இலியாஸ், சாகுல், சாதிக், என். முஹம் மது யார் அரபாத், அஸ்ரப், சேட், இஷாக், ஜாகீர், ரிபாய் ஆசிக் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய் திருந்தனர். பகுதி மக்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சூரம் பட்டி நகர துணைச் செய லாளர் பி. முஸ்தபா நன்றி கூறினார்.

காய்கனி மார்க்கெட்

ஈரோடு கனிமார்க்கெட் வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நடை பெற்றது.

ஈரோடு கனிமார்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம். என்.நூர் சேட் கொடி ஏற்றினார்.

இவ்விழாவில் செயலா ளர் ஆர். ராஜா, பொருளா ளர் வி.எம். சேகர், துணைத் தலைவர் எஸ்.பி. பெரு மாள், துணைச் செயலாளர் எஸ். தனபால், இணைச் செயலாளர்கள் கே.செல் வராஜ், ஏ. மதேஸ்வரன், கே. முருகேசன், சங்க ஆலோச கர் பி. நடேசன், நாச்சி முத்து, கௌரவத் தலைவர் கே.எல். ரமணி உட்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும், வியா பாரிகளும், பொது மக் களும் கலந்து கொண்டனர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு சேலம் முஸ்லிம் லீக் சார்பில் மருத்துவ முகாம்

குடியரசு தினத்தை முன்னிட்டு சேலம் முஸ்லிம் லீக் சார்பில் மருத்துவ முகாம்



சேலம், பிப். 1:

61வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சேலம் மாநகர 35வது கோட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாபெரும் மருத்துவ முகாமை நடத்தி யது.

24ம் தேதி ஞாயிற்றுக் கிழமை சேலம் பொன் னம்மா பேட்டை தம்பி காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஜே.பி. ஸ்கூலில் நடைபெற்ற இம் முகாமிற்கு 35வது கோட்ட முஸ்லிம் லீக் தலைவர் எஸ். முஹம்மது இசாக் தலைமை தாங்கினார், ஏ. ஷாகுல் ஹமீது ஹெச்.எம். அபுதாஹிர், எஸ். முஹம் மது ஹனீப் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கே. முஹம்மது பாபு வரவேற்று பேசினார்.

சேலம் மாநகர மேயர் ரேகா பிரியதர்ஷினி முகாமை துவக்கி வைத் தார், இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவ ரும் மாவட்ட தலைவரு மான எம்.பி., காதர் ஹ{சைன், மாவட்டச் செய லாளர் கே.எம். முஹம்மது ரபீக், மாநகரத் தலைவரும் மண்டல முஸ்லிம் லீக் அமைப்புச் செயலாளரு மான ஏ. அன்சர் பாஷா, மாநகரச் செயலாளர் எம். நசீர் பாஷா, மாமன்ற உறுப்பினர் எஸ். சாஜிதா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சாதிக் பாட்சா (எ) அன்னு, மாநகர இணைச் செயலா ளர் வி.ஏ. ஷிகாபுதீன், மாநகர இளைஞர் அணி தலைவர் முஹம்மது நுஃமான், வர்த்தக அணி யின் ஜாகிர், வழக்கறிஞர் அணியின் நஜீர் அஹ்மது, மகளிர் அணியின் உமய்யா பானு, காயிதெ மில்லத் பேரவை யின் லியாகத் அலிகான் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.

சென்னை அகர்வால் கண் மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆப் சேலம் மிட்டவுன், சேலம் ரத்த வங்கி ஆகியவை இணைந்து கண் பரிசோ தனை, ரத்தப் பரிசோதனை மற்றும் ரத்ததான முகாம் களை நடத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற் பாடுகளை கோட்டச் செய லாளர் முஹம்மது ஹ{சேன், டி.சர்புதீன், ஏ. மஹதீர், ஐ. சதாம் உசேன், சலீம், முஸ்தபா, ஜானி பாஷா, ஹெச்.எம். மௌ லானா, ஹெச்.எம். இலி யாஸ், ஏ. அஸ்கர் அலி, ஏ.குதுப் அலி, ஏ. பர்கத் அலி, டபிள்யு. அப்சல் அஹமது உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

இந்திய தேசிய லீக், தேசிய லீக் அமைப்புக்களிலிருந்து விலகி ஆயிரக்கணக்கானோர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இணைந்தனர்

இந்திய தேசிய லீக், தேசிய லீக் அமைப்புக்களிலிருந்து விலகி ஆயிரக்கணக்கானோர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இணைந்தனர் - தலைமை நிலையத்தில் பேராசிரியர் முன்னிலையில் எழுச்சிமிகு விழா


சென்னை, பிப். 1:

இந்திய தேசிய லீக், தேசிய லீக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களி லிருந்து விலகி ஆயிரக் கணக்கானோர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இணைந்தனர்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமை யகமான காயிதெ மில்லத் மன்ஜிலில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் முன்னிலையில் இதற்கான எழுச்சி மிக்க விழா நடைபெற்றது.

லால்பேட்டை தேசிய லீக் முன்னாள் செயலாளர் ஏ. முஹம்மது தையிப், காட்டுமன்னார் கோவில் தொகுதிச் செயலாளர் ஏ. அன்வர், ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபிக் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.ஜே. முஹம்மது பாரூக், முத்தவல்லி ஜெய்னுல் ஆபிதீன், முஹம்மது ஹபீப், ஜன்னத்துன் நயீம் பள்ளி முத்தவல்லி மௌலவி அபுல் பைசல், மௌலவி அப்துஸ் ஸமது, மௌலவி ஹாலித், எம் லுத்புல்லாஹ், ஏ. குத்ரத்துல் லாஹ். ஆயங்குடி மௌ லானா நூருஸ்ஸலாம் ஹஜ்ரத்.

லால்பேட்டை மௌ லானா அல்லாமா பைஜீ ஷாஹ் நூரி ஹஜ்ரத் அவர்களின் புதல்வர்க ளான மௌலானா ஏ.பி.எப். அப்துல்லா பைஜி, மௌ லானா ஏ.பி.எப். ரஹ்மத் துல்லா பைஜி, மௌ லானா ஏ.பி.எப். நூருல்லா பைஜி.

சென்னையைச் சேர்ந்த மௌலவி உபைதுர் ரஹ் மான் ஆமிரி சிராஜி, மௌ லவி கே.கே. முஹ்யித்தீன் ஆமிரி ஜமாலி, மௌலவி காஜா முயீனுத்தீன் ஆமிரி ஜமாலி, மௌலவி ஷாஹ{ல் ஹமீது பைஜி, பையாஜி, மௌலவி கரீம் பைஜி, பையாஜி, மௌ லவி ய+சுப் பைஜி, பையாஜி, மௌலவி ஆஷிக் ஆமிரி பிலாலி, மௌலவி இஸ்ஹாக் பைஜி பிலாலி, உள்ளிட்ட ஆயிரக்கணக் கானோர் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வ.மு.செய்யது அஹமது, மாநில துணைத் தலைவர் கள் ஏ.கே. அப்துல் ஹலீம் ஹாஜியார், சேலம் எம்.பி. காதர் ஹ{சைன், திருப்ப+ர் ஹம்சா, மாநிலச் செயலா ளர்கள் தளபதி ஷபீகுர் ரஹ்மான், நெல்லை அப்துல் மஜீத், காயல் மகப+ப், கமுதி பஷீர், மாநில அணிகளின் அமைப்பா ளர்கள் திருப்ப+ர் சத்தார், கே.எம். நிஜாமுத்தீன், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், ரஷீத்ஜான், பதிப்பக அறக் கட்டளை பொதுச் செய லாளர் மில்லத் இஸ்மா யில், மேலாளர் இப்ராஹீம் மக்கீ, கவிஞர் ஹ{சைன் தாசன், விழுப்புரம் ஷேக் தாவ+த், கவிஞர் கிளியனூர் அஜீஸ், கவிஞர் ஷேக் மதார்,

மாவட்டங்களின் நிர்வா கிகளான திருநெல்வேலி எம்.எஸ். துராப்ஷா, கடலூர் எஸ்.ஏ. அப்துல் கப்பார், ஏ.சுக்கூர், வட சென்னை எம். ஜெய்னுல் ஆபிதீன், ஏ.ஹெச். முஹம் மது இஸ்மாயீல், தென் சென்னை ப+வை. எம்.எஸ். முஸ்தபா, திருவள்ளூர் ஏ.கே. சையது இப்ராஹீம், எஸ். குலாம் மைதீன், காஞ்சிபுரம் கே.எஸ். தாவ+த், விழுப்புரம் அன்வர் பாட்சா, திருவண்ணா மலை டி.எம். பீர் முஹம் மது, திண்டுக்கல் அல்தாப் ஹ{சைன், தேனி ஏ.எம். சாஹிபு மற்றும் வாணியம் பாடி நரி நயீம் எம்.சி., கடலூர் மாவட்டதுணைச் செயலாளர் அமானுல்லா, பி.முட்லூர் அப்துல் கப்பார், லால்பேட்டை நகரத் தலைவர் கே.ஏ. முஹம்மது, பேரூராட்சி தலைவர் ஏ.ஆர். ஷபீ யுல்லா, மசூத் அஹமது, பாரத் ரத்னா ஏ.ஆர். அப்துர் ரஷீத், பேரூராட்சி உறுப்பினர் ஹிதாயத் துல்லா, மக்சூத் அஹ்மது, மாநில பேச்சா ளர் சல்மான் பாரிஸ், ஏ.எஸ். அஹமது, காயல் அமானுல்லா, மௌலவி ரஹ்மத்துல்லா ஜமாலி உள்ளிட்ட ஏராள மா னோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து சென்னை எழும்ப+ர் பைஜி மஹாலில் இதற்கான வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திருமண கட்டாய பதிவுச் சட்டம் முதல்வரை சந்தித்து முஸ்லிம்களின் ஐயப்பாடுகளை எடுத்துச் சொல்வோம்

திருமண கட்டாய பதிவுச் சட்டம் முதல்வரை சந்தித்து முஸ்லிம்களின் ஐயப்பாடுகளை எடுத்துச் சொல்வோம்
தலைவர் பேராசிரியர் அறிவிப்பு


இந்திய தேசிய லீக், தேசிய லீக் உள்ளிட்ட இயக்கங் களிலிருந்து விலகி இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் ஆயிரக்கணக்கானோர் இணைந்த நிகழ்ச்சியில் அவர்களை வரவேற்று பேசுகையில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டதாவது:

இன்று திருமண கட்டாயப் பதிவுச் சட்டத்தை வைத்து சிலர் அரசியல் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். முஸ்லிம் சமுதாயத் திற்கும், தமிழக அரசிற்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்த சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள்.

நான் ஒன்றை தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். இரண்டு வருட காலமாகவும் நாங்கள் இதைத்தான் சொல்லி வருகிறோம். இஸ்லாமிய திருமணங்கள் காலம் காலமாக பள்ளிவாசல் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டு பத்திரமாக பராமரிக்கப் படுகின்றன.

அரசு இதை அப்படியே ஏற்க வேண்டும் என்பதுதான் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடு. திருமணங்கள் காஜிகளாலும், அவரது சார்பிலான நாயிப் காஜிகளாலும் நடத்தப்படுகின்றன. இந்த முறைகளால் ஜமாஅத்துக்களிடையே கட்டுப்பாடும், ஒழுக்க முறைகளும் பின்பற்றப்படுகின்றன.

தற்போது, திருமண கட்டாயப் பதிவுச் சட்டம் கொண்டு வரப்பட்டு சர்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என சொல்லப்படுகின்ற நேரத்தில் அந்த பதிவிற்காக சில சான்றாவணங்கள் இணைக்கப்படும் விஷயத்தில் முஸ்லிம் சமுதாயம் சந்தேகங்களை கொண்டுள்ளது. இது ஷரீஅத் சட்டத்திற்கு பாதகத்தை ஏற்படுத்திவிடுமோ? என்ற ஐயப்பாடு உள்ளது.

எனவே, இதுபற்றி தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை சந்தித்து முஸ்லிம் சமுதாயத்தின் ஐயப்பாடுகளை எடுத்துச் சொல்லி பள்ளிவாசல்களில் பதிவு செய்யப் பட்டு பராமரிக்கப்படும் அந்த பதிவேட்டை அரசு அப்படியே அங்கீகரித்து பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தவுள்ளோம். இதில் யாரும் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

ஷரீஅத் சட்டத்திற்கு பாதகம் வரக்கூடிய எந்தவொரு செயலையும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொறுத் துக்கொள்ளாது. அதனுடைய நூற்றாண்டுக்கால வரலாறே இதற்கு சாட்சி.

1937லேயே வக்ஃபு சட்டத்தை கொண்டுவந்தவர் முஹம்மதலி ஜின்னா, ஷரீஅத் சட்டத்திற்காக அரசியல் நிர்ணய சபையில் வாதாடியவர் காயிதெ மில்லத், ஷரீஅத் சட்டம் காப்பாற்றப்பட நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா. இவர்களெல்லாம் முஸ்லிம் லீகுடைய தலைவர்கள்.

புதிதாக புறப்படுகின்றவர்கள் வரலாறு தெரியாமல் முஸ்லிம் லீகைப்பற்றி புறம் பேசி அலைகிறார்கள்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை பொறுத்தவரையில் மார்க்க விஷயங்களில் ஆலிம்கள் பேச்சை இந்த சமுதாயம் கண்ணை மூடிக்கொண்டு கேட்க வேண்டும் என்று சொல்லிவரக் கூடியவர்கள். காரணம், 1400 ஆண்டுகளாக குர்ஆன் வழியில், நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத் தந்த நடைமுறையில் உரிய வழிகாட்டுதலை செய்து வரக் கூடியவர்கள் சங்கைக்குரிய உலமா பெருமக்கள்.

மார்க்க விஷயங்களில் உலமா பெருமக்கள் சொல்வது தான் சரியானது. தெருவில் மேடைபோட்டு வியாக்கியானம் செய்வதை இது விஷயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, மார்க்கம் என்று வருகிறபோது உலமாக்கள் சொல்வதை கேளுங்கள். அரசியல் என்று வருகிறபோது இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சொல்வதை கேளுங்கள்.

அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் எடுத்து வைக்கக் கூடிய ஒவ்வொரு செயல்பாடும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் நன்மைக்காகவே இருக்கும்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார்.