Sunday, April 5, 2009

தன்மானமா?வாரியமா?தள்ளாடும் ம ம க...!

தன்மானமா?வாரியமா?தள்ளாடும் ம ம க...!

அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தையே மறந்து அரசியல் கட்சி ஆரம்பித்த அதே நாளில் ஆரம்பித்த வீர வசனம் தொடர்ந்து ஆறு சீட்டு கோரிக்கையாக உறுவெடுத்தது.எங்களை தேடி வந்து கூட்டணி பேச வேண்டும் என்று கோரியவர்களை கூப்பிட்டோர் யாருமில்லை,ஆறு நான்கானது மூன்று இரண்டாகி கடைசியில் ஒன்றாகவே வந்து நின்றது.வந்ததை வாங்குவதிலும் வீராப்பு,ஒரு வாரத்தில் அரசியல் அதிர்வை ஏற்படுத்தும் முடிவெடுப்போம் என்றார்கள்,பின்னர் செயற்குழு கூடி பேசுவோம் என்றார்கள் பாவம் இன்று உயர் நிலைக் கூடி சொல்லும் என்று தொண்டர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.இல்லை இல்லை வாரியமா தன்மானமா என்று தள்ளாடிக்கொண்டிருக்கிறர்கள்..காளி பெருங்காய டப்பாக்காரர்கள்...!