Monday, June 28, 2010

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் அறிஞர்கள் தமிழை வளர்த்தனர் செம்மொழி மாநாடு சமய கருத்தரங்கில் தலைவர் பேராசிரியர் பேச்சு

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் அறிஞர்கள் தமிழை வளர்த்தனர் செம்மொழி மாநாடு சமய கருத்தரங்கில் தலைவர் பேராசிரியர் பேச்சு

தமிழ் மொழியை - அதன் நெறியை உலகளாவிய அளவில் கொண்டு சேர்க் கும் வகையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திய பெருமை முதல்வர் கலைஞரையே சேரும் என்றும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் தமிழ றிஞர்கள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள் ளனர் - இன்றும் பாடுபட்டு வருகின்றனர் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் தெரிவித்தார். பேராசி ரியரின் பேச்சை முதல்வர் கலைஞர் கைதட்டி ரசித் தார்.
கோவையில் நடை பெற்று வரும் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று சமயம் வளர்த்த தமிழ்| என்ற தலைப்பில் கருத்தரங்கும் நடைபெற்றது. இதில் இஸ்லாம் வளர்த்த தமிழ்| என்ற தலைப்பில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசி ரியர் கே.எ. காதர் மொகி தீன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதா வது-
தமிழகத் தலைவர் முதல்வர் கலைஞர் அவர் கள் உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டை நடத் துவதன் மூலமாக உலக மொழிகள் எல்லாம் சேய் மொழிகள் தமிழ் மொழியே அனைத்துக்கும் தாய் மொழி என்ற சிந் தனை உலகளாவிய அள வில் எடுத்து செல்லப்பட் டுள்ளது.
உலக மொழிகளின் வரலாற்றில் ஒரு மொழிக் கென்று இவ்வளவு பெரிய விழா - அதுவும் செம் மொழித் தமிழுக்கு இப்படி யொரு விழா இதற்கு முன்பும் நடந்ததில்லை. இனியும் நடை பெறுவ தற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறும் அளவுக்கு டாக்டர் கலைஞர் அவர்கள் ஏற் பாடு செய்து நடத்துவதன் மூலமாக, இலங்கைத் தமிழறிஞர் சிவத்தம்பி அய்யா கூறியது போன்று உலகத் தமிழ் சமுதாயத்தின் தனிப்பெருந் தலைவராக முதல்வர் கலைஞர் உயர்ந் துள்ளார். அத்தகைய தலைவரின் வழிகாட்டு தலின்படி இந்த மாநாட் டின் ஒரு பகுதியாக சமயம் வளர்த்த தமிழ் என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்து அதில் ஹஇஸ்லாம் வளர்த்த தமிழ்| என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினை எனக்கு தந்த மைக்காக நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
தமிழகத்தில் இஸ்லாம்
தமிழகத்தை பொறுத்த அளவில் இஸ்லாமிய மார்க்கம் கடல் மார்க்க மாகவே வந்துள்ளது, வட இந்தியாவில் முகலாய மன்னர்கள் வந்த பிறகே இஸ்லாம் பரப்பப்பட்டுள் ளது. ஆனால், தென்னகத் தைப் பொறுத்த அளவில் கடல் மார்க்க மாக நீர் வழியாக இஸ்லாம் அறி முகமானது.
நபிகள் நாயகம் (ஸல்) பிறப்பதற்கு பல ஆண்டு களுக்கு முன்பாக தமிழகத் தோடு வாணிபத் தொடர்பு கொண்டிருந்த அரபிகள் சிலர் தமிழகத்திலேயே குடியேறி வாழ்ந்து வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) பிறந்து இஸ்லாமிய பிரச் சாரம் நடைபெற்ற காலத்தி லேயே அரபிய வணிகர்கள் மூலமாக தமிழக கடற் கரையோரங்களில் வாழ்ந்த அரபிகள் இஸ்லாம் மார்க் கத்தை ஏற்று முஸ்லிமாக மாறி வாழத் துவங்கி விட் டனர். அவர்கள் அந்த நெறியை தமிழகத்தின் பிற சமூக மக்களுக்கு எடுத்து ரைக்கும் வகையில் தமிழை கற்று கொண்டனர். இதன் காரணமாக ஹஅரபுத் தமிழ்| என்ற புதிய மொழி தமிழ கத்திற்கு அறிமுகமானது.
அரபுத் தமிழ் இலக்கியங்கள்
ஏறத்தாழ 150-க்கும் மேற்பட்ட அரபுத் தமிழ் இலக்கியங்களை முஸ்லிம் புலவர்கள் கீழக்கரை, காயல்பட்டினம் போன்ற ஊர்களில் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் படைத்து அளித்துள்ளனர்.
டாக்டர் அஜ்மல்கான் பேராசிரியர் சாயபு மரைக் காயர், அறிஞர் எம்.ஆர். எம். அப்துல் ரகீம் போன்ற பெருமக்களின் ஆய்வின் மூலமாக மூன்றாயிரத்திற் கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்களை தமிழ் முஸ்லிம் புலவர்கள் இயற்றி தந்துள்ளனர்.
புதிய வகை இலக்கியங்கள்
கிஸ்ஸா, நாமா, மஸ்அலா, நொண்டி நாடகம் போன்ற புதிய வகை இலக்கியங்கள் பல வற்றையும் தமிழுக்கு முஸ்லிம் பெருமக்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தமிழ் வளர்த்த இஸ்லாமும் இஸ்லாம் வளர்த்த தமிழும்
முஸ்லிம் புலவர்கள் தமிழை வளர்த்தனர். அதேபோல் தமிழால் இஸ்லாம் வளர்ந்தது என்ற கோணத்தை ஆராயும் போது தமிழ்நெறியே இஸ் லாமிய நெறியாக பரிண மித்துள்ளது.
இஸ்லாமிய நெறி ஏகத் துவ அருவ வழிபாட்டை அடிப்படையாக கொண் டது. இதில் எத்தகைய விட்டு கொடுத்தலையும் ஏற்று கொள்ளாத நெறி யாக நிலை கொண்டுள் ளது.
தமிழக சமய நெறிகளை நாம் ஆராய்கின்ற போது அருவ வழிபாடு - உருவ அருவ வழிபாடு - உருவ வழிபாடு என அமைந்தி ருப்பதை காண முடிகிறது.
இதில் அருவ வழிப் பாட்டை அடிப்படை யாக கொண்டே இஸ்லாம் அமைந்துள்ளது.
இறைவனை உருவமற்ற வனாக வழிபடுவதும், இலைமறை காயாக மறைந் திருக்கும். உண்மையை அருவம் என்றால் மறைந் திருப்பது - மறைந்திருக்கும் உண்மைகளை உளமாற ஏற்று பணிந்து உலகுக்கு அறிவிப்பதும், அதை நிலை நாட்டியதும் இஸ்லாமிய நெறியாகும்.
தமிழக இறை சிந்தனை
தொல்காப்பியம் காலம் முதல் இறை குறித்த சிந்தனை தமிழகத்தில் இருந்து வருகிறது. இறை வன் தானே சுயமாக உரு வாகி பற்றுக்கோடு எதுவும் இல்லாமல் தோன்றி தானே அருவமாகி மறைந்தி ருக்கும் தத்துவம் கடந்த பொருளுக்கு - ஹதந்தள| என்ற வார்த்தைக்கு நச்சி னார்க்கினியர் பொருள்.
இந்த இறைவனை ஆயிரக்கணக்கான பெயர் களில் போற்றுகின்ற பழக்க மும் தமிழகத்தில் இருக் கிறது.
திருவாசகத்துக்கு இஸ்லாமே விளக்கம்
ஒரு நாமம் - ஓருருவம் ஒன்றிலார்க்கு ஆயிரம் திருநாமம் கூறி தன் நிலை போன்றோரே - என்ற திருவாசகம் பாடுகின்ற பாடலின் உண்மையான பொருள் - இஸ்லாமிய நெறியை கொண்டே விளக்கமளிக்க முடியும். அப்படிப்பட்ட இஸ்லாமிய கோட் பாட்டை தமிழில் - தமிழ் இலக்கியங்களில் கொண்டு சென்று இலக்கியம் படைத்த பெருமை முஸ்லிம் புலவர்களுக்கு உண்டு.
அன்று முதல் இன்று வரை
இயல் தமிழ் - இசைத் தமிழ் - நாடகத் தமிழ் - சமயத் தமிழ் இன்னும் சொல்லப் போனால் அறிவியல் தமிழ். இன் றுள்ள கணினித் தமிழ் என அனைத்து துறைகளிலும் அன்று முதல் இன்று வரை தமிழின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் சேவையாற்றி கொண்டுள்ளனர்.
அன்றிலிருந்து இன்று வரை பார்க்கும் போது கவிக்கோ அப்துர் ரஹ்மானை எடுத்துக் கொண் டால் தமிழில் அவர் துறை சார்ந்த கவிஞர்களுக்கு புதுக்கவிதை| என்ற வடிவத்தை உருவாக்கி அதற்கு இலக்கணம் வகுத்து கொடுத்துள்ளார்.
3 ஆயிரம் இலக்கியங்கள்
அதுபோன்றே கிஸ்ஸா, முனாஜத், நொண்தி நாடகம் போன்ற புதுப் புது இலக்கிய வடிவங்களை தமிழுக்கு அறிமுகப்படுத் திய பெருமை முஸ்லிம் தமிழ் புலவர்களுக்கு உண்டு. இப்படி இஸ்லா மிய நெறியை ஏற்றுக் கொண்ட மூன்றாயிரத்திற் கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் தமிழின் மூலமாக இஸ்லாமிய நெறியை வளர்த்துள்ளனர்.
தமிழ் நெறியே காரணம்
இத்தகைய சிறப்புக் குரிய தமிழ் மொழி இன்று உலகளாவிய மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருக் கிறதென்றால் அதற்கு காரணம் தமிழ் மொழி யில் உள்ள நெறியே ஆகும்.
தமிழ் நெறியே காரணம் ஆகும்
இந்த மாநாட்டை ஏற் பாடு செய்துள்ள முதல்வர் கலைஞர் அவர்கள், மாநாட்டு மைய நோக்கு பாடலாக எழுதியுள்ள வரிகள் தமிழ் நெறியை உலகளாவிய அளவில் எடுத்து செல்லும் வரிகளாக அமைந்திருக்கின்றன.
அந்த பாடல் வரிகள் தான் தமிழ் நெறியின் உயிர் துடிப்பு. உலகெல்லாம் எடுத்து செல்லும் வாய்ப்பு இந்த மாநாட்டின் வாயி லாக அமைந்திருக்கிறது.
ஒன்றே குலம்@ ஒருவனே தேவன்@
யாதும் ஊரே@ யாவரும் கேளிர்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
என்ற அடிப்படையான தத்துவங்கள். அதோடு,
பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புக என்ற தத்துவம்,
நல்லார் ஒருவர் உளரேல்,
உண்டலமே இவ்வுலகம் - இதுபோன்ற தத்துவங் களை வாழ்வியல் கோட் பாடுகளை கொண்டது தான் தமிழ் நெறி. அந்த நெறிதான் செந்நெறி.
செந்நெறியில் ஒழுக செய்தல் மன்னன் கடமை
எந் நெறியாயினும் இறைவன் தன் மக்களை செந் நெறியின் மேல் இருந்து செய்ய வேண்டும் - என்ற பழமொழி இலக்கி யத்தின் பாடல். அது வலியுறுத்துகின்ற முறை யில் செந்நெறியாம் தமிழ் நெறியில் மக்களை இருக்க செய்யும் வகையில் நாட் டின் ஆட்சியாளராகிய முதல்வர் கலைஞர் அவர்கள் நாட்டு மக்களை தமிழ் நெறியின்பால் இருக்க செய்யும் வகையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளார்.
மதம் கடந்த - சாதி கடந்த உலகளாவிய தமிழ் நெறியை - செந்நெறியை - பொன்னெறியை - நன் னெறியை - இந்த ஒரே நெறியை உலகளாவிய அளவில் கொண்டு செல்ல இந்த மாநாட்டினை நடத் தியமைக்காக அவருக்கு நாமெல்லாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள் ளோம்.
தலைவர் வாழ்க@ காலமெல்லாம் வாழ்க@ நாளெல்லாம் வாழ்க@ அவர் வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் தமிழ் வளரும் நாளாகும் என்பதை தெரி விப்பதோடு,
சமயங்களுக்கிடையே வேறுபாடுகள் உண்டு! முரண்பாடுகள் உண்டு! அதேபோல் உடன்பாடு களும் உண்டு, வேறுபாடு களை மறந்து விட்டு முரண் பாடுகளை ஒதுக்கி விட்டு, உடன்பாடுகளையே நெறிப்படுத்துகின்ற மொழி யாக தமிழ் மொழி இருக் கிறது. தமிழ் நெறி இருக் கிறது.
அந்த நெறியை உலகளா விய அளவில் கொண்டு செல்வதன் மூலம் நன்மை கள் விளையும் என்பதை உணர்ந்து கலைஞர் காட்டு கின்ற வழியில் செல்வோம்! வெல்வோம்! என்று கூறி முடிக்கிறேன்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.
முதல்வர் கைதட்டி ரசித்தார்
தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் பேசிக் கொண்டி ருக்கும் போதும், பேசி முடித்த போதும் பார்வை யாளர்கள் கை தட்டி ரசித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதல்வர் கலைஞரும் மிகவும் ரசித்து கைதட்டி மகிழ்ந்தார்.
நிகழ்ச்சியில் முதல்வர் கலைஞர், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., மாநிலச் செயலாளர்கள் காயல் மகப+ப், கமுதி பஷீர், மில்லத் இஸ்மாயில், இப்ராஹீம் மக்கீ, மணிச்சுடர் ஹமீது, கோவை மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்ற னர்.

Saturday, June 26, 2010

இ.யூ.மு.லீக் தலைவர் பேராசிரியர் K.M.K. அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல் - வீடியோ

இ.யூ.மு.லீக் தலைவர் பேராசிரியர் K.M.K. அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல் - வீடியோ

"தமிழ்நாட்டில் முஸ்லீம்களின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முஸ்லீம் லீக் தான்"

"அரசியல் இலாபத்திற்காக தி.மு.க-வுடன் தோழமையாக இல்லை, தி.மு.க-வுடன் இருப்பது கொள்கை ரீதியிலான உறவு"
மேலும் பல பதில்களுடன்...



இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் K.M.K. அவர்கள் MYPNO இணையத்தளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி: தற்போது.... www.mypno.com

Friday, June 25, 2010

முனிருல் மில்லத் அவர்களின் செம்மொழி மாநாட்டு சொற்பொழிவு

முனிருல் மில்லத் அவர்களின் செம்மொழி மாநாட்டு சொற்பொழிவை தினமலரில் படிக்க ........


http://tamil.dinamalar.com/wctc_detail.asp?id=25709


அன்புடன்
பரங்கிபேட்டை
ரியாஸ் அஹ்மத்

தமிழ் - அரபி இடையே ஒற்றுமை : காதர்மொய்தீன் தகவல்
ஜூன் 24,2010,21:55கருத்துகள் (14)

கோவை : ""இறைத் தன்மை மற்றும் வழிபாடுகளில் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன,'' என்று, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத்தலைவர் காதர்மொய்தீன் தெரிவித்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆய்வரங்கத்தில் பங்கேற்க வந்த அவர் கூறியதாவது: "தமிழ்ச் செம்மொழியும், அரபியும் ஓர் ஒப்பாய்வு' என்ற தலைப்பிலான ஆய்வரங்கத்தில் பங்கேற்கிறேன். இறைவன் தன்மையில் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன. "அல் -இலாஹ்' என்பதே, "அல்லாஹ்' என மருவியது என்பவர். "அல்லாஹ்'வுக்குரிய மூலச் சொல் அல், இல், எல் என்பது, இஸ்லாமிய அறிஞர்களின் முடிவாகும். இச்சொற்கள், தமிழிலும் உள்ளன என்பதை, அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். "எல்லே இலக்கம்' என்பது தொல்காப்பிய சூத்திரம்; "எல்' என்றால், ஒளிக்கடவுள் என்ற பொருள் உண்டு. இதே போன்று, அரபி - தமிழ் இடையேயான ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான 2,000 வார்த்தைகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், திருமணம், வழிபாடு, சடங்கு போன்றவற்றிலும் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன. தமிழ்நெறியில், திருமணத்தின் போது பெண்கள் குலவையிடுவர். இதே போன்ற வழக்கம், இஸ்லாமிய நெறியிலும் பின்பற்றப்படுகிறது. கோவிலில் வலம் வந்து வழிபடுவதை போன்று, மெக்காவிலும் வலம் வந்து வழிபடும் முறையை இஸ்லாமியர் பின்பற்றுகின்றனர். இதே போன்று எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. இவற்றை முன்வைத்தே தமிழுக்கும், அரபிக்கும் உள்ள ஒற்றுமையை உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு, காதர்மொய்தீன் தெரிவித்தார்.

Tuesday, June 22, 2010

முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து செயல்படும் கலைஞர் அரசு நல்லது செய்யும்

முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து செயல்படும் கலைஞர் அரசு நல்லது செய்யும்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக கடந்த 2 தினங்களுக்கு முன் கோவைக்கு நான் சென்றிருந்தேன்.
கோவை சிறையில் பல்லாண்டுகளாக அடைபட்டுக் கிடக்கும் சிறைவாசிகளின் குடும்பத்தார் பெண்கள், முதியோர், குழந்தைகள் என ஏராளமானோர் என்னை வந்து சந்தித்தனர். தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வருவதாகவும், அவர்களை விடுவிக்க முதல்வர் கலைஞரிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து கண்ணீர் விட்டனர்.
இந்த இளைஞர்களெல் லாம் சிறையில் வாடுவதற்கு யார் காரணம்? ஏன் இத் தகைய நிலை ஏற்பட் டது? அவர்களுக்கு தவறாக வழிகாட்டியவர்கள் யார்? சிறை சென்றதால் என்ன பெருமை ஏற்பட்டு விட்டது? இதைப் பற்றியெல்லாம் சிறையில் இருப்பவர்களும், அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இந் நிலைமை இனி ஒருபோதும் ஏற்பட்டு விடக் கூடாது. முஸ்லிம் லீகைச் சார்ந்த எந்த ஒரு தொண்டர் மீது ஹநிய+சென்ஸ்| வழக்குகூட ஏற்பட்டு விடக் கூடாது என கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். அவர் காட்டிய வழியில் தான் நாங்களெல்லாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
குடும்பத்தின் ஆண்கள் சிறையில் இருப்பதால் அந்த குடும்பங்கள் படுகின்ற வேதனையும், இழப்புகளும் சொல்லிக் காட்ட இயலாதவை. அதனால் இந்த சமுதாயத்திற்கும் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு ஆயுள் சிறைவாசிளை விடுதலை செய்ய வேண்டும் என முதல்வர் கலைஞர் அவர்களையும், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களையும் நாங்கள் சந்தித்து கோரிக்கை வைத்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படக் கூடியவர்கள் அவர்கள். இதிலும் நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் நமக்கு உண்டு.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் எதையும் அமைதி வழியிலும், ஜனநாயகரீதியிலும் தான் செயல்படுத்தும். அந்த வழிதான் வெல்வதற்கு உண்டான வழி.
சமூகங்களிடையே இணக்கமாக வாழ்வதற்கு இந்த வழியைத்தான் இளைஞர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த வழியில் செல்வதற்கு முன் வருகின்ற இளைஞர்களை வாருங் கள் என வரவேற்கிறோம்.
(- சென்னை லாயிட்ஸ் சாலையில் ஜூன் 19-ம் தேதி நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆற்றிய உரையிலிருந்து......)

Monday, June 21, 2010

சிந்தனைக் களஞ்சியம்

சிந்தனைக் களஞ்சியம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய வரலாற்றுடன் இரண்டறக் கலந்து – இணைந்து செயல்பட்டு வரும் சிறுபான்மை சமுதாய அரசியல் இயக்கமாகவும், இந்திய அரசின் சட்டத்திற்கு உட்பட்டு நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, ஜனநாயகம், சமநீதி, சமூக நல்லிணக்கம், சிறுபான்மையினர் மத, கலாச்சார, அரசியல் உரிமை பாதுகாப்பு போன்றவற்றுக்காக பாடுபடும் அமைப்பாகவும் விளங்கி வருகிறது. சமுதாய மக்களின் பாதுகாப்பு அரணாகவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்பட்டு வருகிறது – வரும் !

-காயிதே மில்லத் (ரஹ்)

காயிதே மில்லத் புகழ் ஜிந்தாபாத் !

காயிதே மில்லத் புகழ் ஜிந்தாபாத் !
அல்லாஹ்வை தவிர எந்த சக்திக்கும் அஞ்சாமல் அறவழியில் ஒப்பிலா ஒழுக்க அரசியல் நடத்திய ஆன்மீக அரசியல்ஞானி !
நாம் ஒன்றுபடாதவரை நமக்கு வாழ்வு இல்லை. நாம் ஒன்றுபட்டு விட்டால் நமக்கு இணை யாருமில்லை என்று ‘ஒற்றுமை கீதம்’ இசைத்த ஒப்பற்ற தலைவர் !
இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ மட்டுமல்ல, ஆளவும் உரிமையுண்டு என்று முழக்கமிட்ட தீன்குலத்தலைவர் !
வீழ்த்தப்பட்ட சமுதாயத்தை தட்டி எழுப்பிய உரிமைக்குரல் முழங்கி, வீறுநடை போட வழித்தடம் அமைத்த மனிதப் புனிதர் !
ஈட்டிகள் கூட்டணியாக வந்து தாக்கியபோது ஈமான் என்ற கேடயம் ஏந்தி போரிட்ட சமுதாய தளபதி !
கனிவு, துணிவு, தெளிவு கொண்டு தூய்மையான எளிய வாழ்வு வாழ்ந்த ஏந்தல் !
கண்ணியம் என்ற சொல்லுக்கு புண்ணியம் சேர்த்து கவ்மின் கண்ணியம் காத்த கவ்மின் காவலர் !
அசைக்க முடியாத இறை நம்பிக்கை கொண்டு அரசியல் களத்தில் வீறு நடை போட்ட ஆன்மீகத் தலைவர் !
அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் கண்ணியத்திற்குரிய தலைவர் என்று போற்றப்பட்ட ஒரே ஒரு தலைவர் !
வாழ்ந்த காலத்தில் அரசியல் ஆதாயத்திற்காக எந்த தலைவர் வீட்டு கதவையும் தட்டாதவர். ஆனால் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் தனது வீட்டு கதவை தட்ட வைத்தவர் பெருந்தலைவர் !
தன் நாவசைத்தால் இந்த நாடசையும் என்பதை செயலில் காட்டிய தவச்சீலர் !
ஒன்றுபட்ட சமுதாயமாக முஸ்லிம்கள் அனைவரும் பிறைக்கொடியின் கீழ் உலாவர, தன் வாழ்வை தியாகம் செய்த முஜாஹித் !
நம் சமுதாயம் தலைநிமிர்ந்து வாழ வழித்தடம் அமைத்து தம் விழித்தடம் மூடிவிட்ட சமுதாயத் தந்தை !
இந்தியாவில் முஸ்லிம்களுக்கும், பிற சமுதாய மக்களுக்கும் இடையில் நல்லெண்ணமும், ஒற்றுமையும் ஓங்கச் செய்த சமூக நல்லிணக்க வரலாற்று நாயகர் !
மூச்சிருக்கும் வரை அந்த தலைவர் வழி நடப்போம் !
பேச்சிருக்கும் வரை அவர் புகழ்பாடுவோம் !
( குடியாத்தம் கவிஞர் வி.எஸ். முஹம்மத் பஸ்லுல்லா )

நன்றி : மணிச்சுடர் 5/6 ஜுன் 2010


Abdul Katheem
dateTue, Jun 22, 2010 at 4:13 AM
subjectRe: காயிதே மில்லத் புகழ் ஜிந்தாபாத் !


என்ன ஒரு புகழ் மாலை, மாஷா அல்லாஹ். எந்த ஒரு சொல்லும் உயர்வுநவிற்சி இல்லை. கண்ணியமிக்க தலைவருக்கு ஒரு கனமான பா மாலை.
கவிஞர் வி.எஸ். முஹம்மத் பஸ்லுல்லாவுக்கு மனமார்ந்த பாராட்டு!!

அன்புடன்
அப்துல் கதீம்

பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு கல்வி ஊக்கத்தொகையாக 25 ஆயிரம் ரூபாயை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழங்கியது

பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு கல்வி ஊக்கத்தொகையாக 25 ஆயிரம் ரூபாயை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழங்கியது


சென்னை:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழக அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு கல்வி ஊக்கத்தொகையாக 25 ஆயிரம் ரூபாயை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழங்கியது.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை மாவட்டம் சார்பில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்ற நெல்லையைச் சேர்ந்த மாணவி ஜாஸ்மினுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை பிரஸ் கிளப்பில் நடந்தது. முதலிடம் பெற்ற மாணவியின் மேற்கல்விக்கு பயன்படும் வகையில் ஊக்கத்தொகை 25 ஆயிரம் ரூபாயை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொருளாளர் சையது அகமது வழங்கினார்.மாநகராட்சி பள்ளியில் பயின்று சாதனை புரிந்த மாணவி ஜாஸ்மினையும், அவரது தந்தை ஷேக் தாவூத்தையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் காதர் மொகிதீன் பாராட்டினார். இந்நிகழ்ச்சியின் போது, மாநிலத் பொதுச் செயலர் அபுபக்கர், சென்னை மாவட்ட தலைவர் ஜெய்னுலாபுதீன் கலந்து கொண்டனர்.

\

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீகில் இணைந்து செயல்பட வாருங்கள்| இளைஞர்களுக்கு தலைவர் பேராசிரியர் அழைப்பு

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீகில் இணைந்து செயல்பட வாருங்கள்| இளைஞர்களுக்கு தலைவர் பேராசிரியர் அழைப்பு

சென்னை, ஜூன்.20-
இந்தியத் திருநாடும் - இஸ்லாமிய சமுதாயமும் முன்னேற அறவழியில் பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்து செயல்பட வாருங்கள் என இளைஞர் களுக்கு தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் அழைப்பு விடுத்தார்.
காயிதெ மில்லத்
பிறந்த தின விழா
கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்க ளின் 115-வது பிறந்த நாள் விழா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம் நேற்று (ஜூன் 19-ம் தேதி) தென் சென்னை மாவட்டம் அவ்வை சண் முகம் சாலை லாயிட்ஸ் ரோட்டில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப் பினர் கே.டி. கிஸர் முஹம் மது தலைமை தாங் கினார். தென் சென்னை மாவட்டத் தலைவர் கே.பி. இஸ்மத் பாஷா, மாவட்டச் செயலா ளர் ப+வை எம்.எஸ். முஸ் தபா, 94-வது வட்ட தலைவர் என். ஜாபர் உசைன், செயலாளர் கே.யு. இதாயத்துல்லா, பொரு ளாளர் ஜே. தமீமுன் அன் சாரி, மாவட்டப் பிரதிநிதி வி.ஏ. அமானுல்லா, துணைச் செயலாளர் எஸ்.கே. மொய்தீன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.
மாவட்டப் பிரதிநிதி எஸ்.ஒய். முஹம்மது தமீம் வரவேற்று பேசினார். என். நிஸார் அலி துவக்கவுரை யாற்றினார். இக் கூட்டத் தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவ ருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் சிறப் புரையாற்றும் போது தெரி வித்ததாவது-
கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் 115-வது பிறந்ததின விழாவை முன் னிட்டு தென் சென்னை மாவட்டம் லாயிட்ஸ் சாலையில் மிகச் சிறப்பான முறையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட் டத்தை ஏற்பாடு செய்த உங்களையெல்லாம் பாராட்ட கடமைப்பட் டுள்ளேன்.
தமிழகம் முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு 10 லட்சம் உறுப்பி னர்கள் சேர்க்கப்பட்டு பிரைமரிகளும் அமைக்கும் பணி நடைபெற்று வருகி றது.
சென்னை மாநகரைப் பொறுத்தவரை தென் சென்னை, வடசென்னை என இரு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு ஒவ் வொரு பகுதியிலும் உறுப் பினர் சேர்க்கப்பட்டு பிரை மரிகளும் அமைக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்தலும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தென் சென்னை 94.வது வட்டத் தில் பிரைமரி அமைக்கப் பட்டு நிர்வாகிகள் தேர்த லும் நடத்தப்பட்டு, அந்த நிர்வாகிகளின் முயற்சியில் இந்த கூட்டமும் சிறப்பாக நடைபெறுகிறது.
முஸ்லிம் லீகின்
3 லட்சியங்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்கள் காட்டித் தந்த வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இந்த இயக்கத்தின் முப்பெரும் லட்சியங்கள், சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, சிறுபான் மையினரின் கலாச்சார தனித்தன்மையை பாதுகாத் தல் என்பவைகளாகும்.
இன்று இந்த கூட்டத் திற்கு ஏராளமானோர் வந் துள்ளீர்கள். குறிப்பாக தாய்மார்கள் பர்தா அணிந்து கொண்டு வந்தி ருக்கிறீர்கள்.
இந்தியாவையும் பார்க் கிறோம். ஐரோப்பிய நாடு களையும் பார்க்கிறோம்.
பிரான்ஸ், ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, டென் மார்க், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளிலெல் லாம் பெண்கள் பர்தா அணிந்து செல்வதற்கு தடை விதிக்கிறார்கள். அப்படி அணிந்து வரும் பர்தாவை கிழித்துப் போடு கிறார்கள்.
ஆனால் இங்கு அப்படி அல்ல. பர்தா அணிந்தால் ஏன் என்று யாரும் கேட்ப தில்லை. இது நம்முடைய உரிமை, மார்க்கக் கடமை என அவர்களுக்கு தெரி கிறது. ஆகவே, அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
நம்முடைய கலாச்சார தனித்தன்மையை காப் பாற்ற சகோதர சமு தாய மக்கள் நம்மை கண்ணியப் படுத்துகிறார்கள். அந்நியப் படுத்தவில்லை. ஆனால், இந்த பண்பாடு, நாகரீகம் ஐரோப்பிய நாடுகளில் இல்லை. நம்மு டைய தனித்தன்மையை காப்பாற்றுவது என்பது நம்முடைய கடமை. அதே நேரத்தில் நாம் சமூக நல்லிணக்கத்தை, தேசிய ஒருமைப்பாட்டை காப் பாற்றுவதற்கும் கடமைப் பட்டவர்கள். மண்டல் கமிஷன் சுட்டிக் காட்டி யுள்ள 3647 வகுப்புகளுடன் நல்லிணக்கத்தை காப் பாற்ற வேண்டும்.
அறவழியில் சாதனை
ஆர்ப்பாட்டம் - போர்ப் பாட்டம் எதுவும் இல்லா மல் அமைதியான முறை யில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.
சிறுபான்மை சமுதாயத் திற்கு அவர்களின் கலாச் சாரத் தனித்தன்மைக்கு பாதகம் ஏற்படும் நிலை உருவானபோதெலலாம் அதற்காக துணிந்து குரல் கொடுத்த இயக்கம்.
சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் சமுதாயத்தின் உணர்வு களை எதிர்பார்ப்புகளை சரியாக உணர்த்திய இயக் கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அரசியலில் ஈடுபடுவது ஆட்சியைப் பிடிப்பதற்காகவோ, அர சாங்கத்தை நடத்துவதற் காகவே அல்ல. முகலாயப் பேரரசு மீண்டும் வர வேண்டும் என நாம் முயற்சி மேற்கொள்ளவில்லை.
சிறுபான்மையினர் களின் உணர்வுகளை - எண் ணங்களை எதிர்பார்ப்பு களை ஆட்சியாளர்களி டம் எடுத்துரைத்து அதனை சமுதாயத்திற்கு பெற்றுத் தரவே முஸ்லிம் லீக் அரசியல் களத்தில் இயங்கிக் கொண்டிருக் கிறது. இந்த இயக்கம் செயல் பட வழிமுறை களை அமைத்துத் தந்தவர் தான் காயிதெ மில்லத். நட்சத்திரம் பொறித்த பச்சிளம் பிறைக்கொடி இந்த இயக்கத்தின் கொடி.
அதிகார பீடத்தில் அமர்ந்து கொண்டு முஸ்லிம் லீகை கலைத்து விடுங்கள் என மிரட்டிய நேரத்திலும் இந்த இயக் கத்தை தொடர்ந்து வழி நடத்தியவர். அதனால்தான் இன்றைக்கு அதே அதிகார பீடத்தில் அமைச்சராக இருந்து முஸ்லிம் லீகை நிலைக்கச் செய்யுங்கள் என்று நம்முடைய தலை வர் இ. அஹமது சாஹிப் கர்ஜிக்க முடிகிறது.
முஸ்லிம் லீகின்
தனித்தன்மை
மற்ற கட்சிகளிலுள்ள
சட்டமன்ற - நாடாளு மன்ற முஸ்லிம் உறுப்பினர் களுக்கும், முஸ்லிம் லீகைச் சார்ந்த சட்டமன்ற -நாடாளுமன்ற உறுப்பி னர்களுக்கும் அடிப்படை யிலேயே வேறுபாடு உண்டு. சமுதாயத்தை பாதிக்கும் பிரச்சினைகள் வரும் போது அது குறித்து சட்ட மன்ற நாடாளுமன்றங்க ளில் குரல் கொடுப்பதற் காக மற்ற கட்சி உறுப்பி னர்கள் அவர்களின் தலைமையின் அனுமதிக் காக காத்திருக்க வேண்டும். அனுமதி கிடைத்தால்தான் அவர்கள் பேச முடியும். அனுமதி மறுக்கப்பட் டால் அவர்களால் எந்த கருத்தையும் எடுத்துரைக்க முடியாது. வாய் மூடி மவுனமாக இருக்கும் நிலை ஏற்படும்.
ஆனால், முஸ்லிம் லீகின் உறுப்பினர்கள் எவ ரது அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டிய தில்லை. சமுதாயப் பிரச் சினைகளில் உடனுக்கு டன் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்து உரிமை களுக்காக வாதாடும் நிலை இயல்பாகவே அமைந்து விடுகிறது.
முஸ்லிம் லீக் சார்பில் ஓரிருவர் உறுப்பினராக இருந்தாலும் இதனை சாதிக்க முடிகிறது.
அதனால்தான் முஸ்லிம் லீக் சார்பில் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்க ளில் போட்டியிடுகிறோம்.
ஷரீஅத் உரிமைகளை பாதுகாத்த இயக்கம்
கடந்த காலத்தில் நாடாளுமன்றத்திலே ஒரு பிரச் சினை ப+தாகரமாக எழுந் தது.
இறந்து போனவர்களை புதைப்பதன் காரணமாக நிறைய இட நெருக்கடி ஏற் படுகிறது. எனவே, இறந்த வர்களை புதைக்காமல் எரித்து விட வேண்டும் என்ற ஒரு சட்டத்தை நிறை வேற்ற முயற்சி மேற்கொள் ளப்பட்டது.
அப்போது நாடாளு மன்றத்தில் இந்த திட்டத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதை நிறைவேற விடாமல் செய்த இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மட்டுமேயாகும்.
விசேஷ திருமணச் சட் டம், ஷாபானு வழக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்ட போது சமுதா யத்தின் உரிமை களுக்காக வாதாடிய இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகே ஆகும்.
ஷாபானு வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சொன்ன கருத்தை நாம் ஏற்கவில்லை. உயர்ந்த பீடத்தில் உள்ள எந்த ஒரு நீதிபதியாலும் மார்க்கத்தை தீர்மானிக்க முடியாது என்பதில் நாம் உறுதியாக இருந்த காரணத்தினால் தான் ஷரீஅத் பாதுகாப்பு சட்டமே நாடாளுமன்றத் தில் கொண்டு வந்து நிறை வேற்றப்பட்டது.
இந்திய முஸ்லிம்களின்
கண்ணியம்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயல்பட் டுக் கொண்டிருப்பதன் காரணமாகவே இந்தியா வில் முஸ்லிம்கள் கண்ணி யத்துடனும், மரியாதையு டனும் இஸ்லாமிய அடை யாளத்துடனும் வாழ முடி கிறது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேர்தல் கூட்டணியும் இந்த அடிப் படையில்தான் ஏற்படு கிறது. முஸ்லிம்களின் உணர்வுகளை - எண்ணங் களை - எதிர்பார்ப்புகளை எவர்கள் புரிந்து நடக்கி றார்களோ அவர்களோடு தான் நாம் கூட்டணி சேர்ந்து வருகிறோம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை டாக்டர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கும் கூட்ட ணியில் நாம் தொடர்ந்து இடம் பெற்று வருகிறோம்.
சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கு நன்மை செய்வதில் மற்ற மாநிலங் களுக்கெல்லாம் முன் னோடியாக பல நல்ல திட் டங்களை செயல்படுத்தும் அரசாக திராவிட முன் னேற்றக் கழக அரசு திகழ்ந்து வருகிறது.
முதல்வர் கலைஞரின்
பெருந்தன்மை
சிறுபான்மை முஸ்லிம் களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கி யதுடன் இது போன்று மற்ற மாநிலங்களில் வழங்க வேண்டும். மத்திய அரசும் உரிய இடஒதுக் கீட்டினை முஸ்லிம் சமுதா யத்திற்கு அளித்திடும் வகை யில் நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டி அறிக்கை, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகளை செயல் படுத்த வேண்டும் என திராவிட முன் னேற்றக் கழகம் தீர்மானம் நிறை வேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த துடன் தொடர்ந்து இது குறித்து வலியுறுத்தி வரு கிறது. மற்ற எந்தவொரு கட்சியும் இதுபோன்று செய்ததில்லை.
இதனால்தான் முஸ்லிம் லீக் முதல்வர் கலைஞரை யும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தொடர்ந்து ஆதரிக்கிறது. அந்த ஆட் சியே மீண்டும் தொடர வேண்டும் என விரும்பு கிறது. அதற்காக பாடுபடு கிறது.
முதல்வர் கலைஞர் தலைமையேற்று நடத்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இதற்கு முன்பு எங்கும், எப்போதும், எந்த மொழிக்கும் நடந்திடாத ஒரு விழாவாக நடை பெறு கிறது.
ஹபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்|, ஹயாதும் ஊரே யாவரும் கேளிர், ஹஒன்றே குலம் ஒருவனே தேவன்| போன்ற உயர்ந்த நோக் கங்களை கொண்ட தமிழ் நெறி. இஸ்லாமிய நெறியும் அதுதான். தமிழ்ச் செம் மொழி மாநாட்டை முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச் சியுடன் வரவேற்கிறது. அதில் பங்கேற்று, சிறப் பிக்க உறுதி ப+ண்டுள்ளது.
இளைஞர்களுக்கு
அழைப்பு
இந்தப் பகுதியில் இந்த கூட்டத்தை இளைஞர்கள் முன்னின்று ஏற்பாடு செய் திருக்கிறார்கள். இதனை நான் பாராட்டுகிறேன்.
இந்த சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு ஓர் அன்பு வேண்டு கோளை விடுக்க விரும்பு கிறேன்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இளைஞர் அணியின் மாநாடு நாகப் பட்டினத்தில் விரைவில் நடைபெற உள்ளது. சமுதா யத்திற்கும், நாட்டிற்கும் சிறந்த சேவையாற்றி வரும் அறவழியில் செயல்படும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இளைஞர்கள் பெரு மளவில் இணைந்து பணி யாற்ற வேண்டும். வாருங் கள் இணைய வாருங்கள் இணைந்து செயல்பட வாருங்கள் என இளைஞர் களை உள்ளன்போடு அழைக்கிறேன்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், வேலூர் நாடா ளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், மாநில செயலாளர்கள் காயல் மஹப+ப், கமுதி பஷீர், இளைஞர் அணி மாநில அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன், மாவட்ட ஒருங்கியைப்பாளர் நத்தம் வி.ஏ. ஜஹாங்கீர், வழக்கறி ஞர் மவ்லவி முஹம்மது ரபி ஜமாலி, நெசப்பாக்கம் முபாரக், முகம்மதுபேக், உள்ளிட்டோர் உரையாற் றினர். இறையன்பன் குத்தூஸ் இன்னிசை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஆலந்தூர் எம். எஸ். அப்துல் வஹாப், கிண்டி கலீல், மேத்தப் பிள்ளை மரைக்காயர், பிறைமேடை இப்ராஹீம் மக்கீ, மணிச்சுடர் மொய் தீன், பனையூர் யூனுஸ், மடுவை பீர்முஹம்மது, சைதை கவுஸ்,ரியாஸ், அக்தர் அலி, சேப்பாக்கம் ஆலம்கான், அய்யூப்கான், கரீமுல்லா, ஹமீது, கபார் கான், சம்சுல் அஹமது, நிஷாத் ஃபாத்திமா, பாடகர் சாகுல் ஹமீது உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை 94- வது வட்டம் சென்னை மயிலைப் பகுதி பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ஏ. அப்துல் காதர், எஸ்.என். காஜா மொய்தீன், எஸ்.டி மொய்தீன் அப்துல் காதர், கே. நாகூர் கனி, முஹம்மது ய+னூஸ், ஏ.எம். ஒய். அப்துல் ரஹ்மான், இளைஞர் அணி எஸ்.என். கே அக்பர் அலி, தொழி லாளர் அணி ஏ.எம்.டி. முஹம்மது மொய்தீன், ஏ. பீர் முஹம்மது, மாணவர் அணி எம்.கே. முஹம்மது ரபி, மகளிரணி எம்.கே. மெஹ்ருன்னிசா, எம்.ஜே. அஜீஸ் பாத்திமா, நாகூர் மீரான், செய்யது லத்தீப், இப்ராஹீம், செய்யது துராப்தீன், சலீம், ராஜேஷ், இஸ்மாயில், எஸ். சலீம், சுபான், மதார், கவுஸ், என்.கே. மொய்தீன், அப் துல் ரஜாக், ஹாஜி பாஷா, எம்.எச். முஹம்மது ஜலால் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

கோழையை வீரனாக்கும் கொள்கைக் குன்று !

கோழையை வீரனாக்கும் கொள்கைக் குன்று !

நல்ல நெறியுடையான் ஞானக் கடலுடையான்
வெல்லத் தமிழில் மிகுபுலமை கொண்டவன்தான்
ஆங்கிலத்தில் பேசுகின்ற ஆற்றல் மிகப் பெற்ற
ஓங்கி வளரும் உயர் குலத்துத் தென்றல்.

சிறுபான்மை மக்களின் தேன் நிலவு; மேலும்
பொறுமைக்கோர் சின்னமவன் பொன்மனத்தார்
அம்மகனை
ஒச்சமற்ற முத்தென்பார் உள்ளத்தில் வைத்திடுவார்
பச்சை உள்ளத்தவனைப் பாட்டெல்லாம் வாழ்த்திவரும்
இச்சகம் பேசும் இயல்பில்லை; ஆட்சியிலே
நச்சு நிலவுவதை நன்றாகச் சாடும்

அறப்போர்த்தலைவனவன் ஆணழகன் நல்ல
திறம் வாய்ந்த போர் வீரன் சிங்கத்தின் சாயல்
மறச் செயலைக் கண்டவுடன் மார் காட்டி வந்து
பறை தட்டிக் கூப்பிடவே பல்லோரும் கூடிடுவர்

பொல்லாங்கு தீர்ந்து விடும் புன்னகையுமின்னிவிடும்
எல்லார்க்கும் நல்லவன் எனப்படும் அண்ணலவன்
அவ்வையார் ஆகி அருநீதி சொல்கின்ற
எவ்வுயிர்கும் அன்பன் எதிர்ப்பில் வளர்கின்றான்

தூற்றுவோரை நெஞ்சம் துதிபாடும் ஆனாலும்
கூற்றுவன்போல் ஆவான் கொடுங்கோல் பகைவர்க்கு
ஊழியரின் உள்ளத்தில் உத்தமனாய் வாழ்கின்றான்
கோழையை வீரனாக்கும் கொள்கைக்குணக் குன்று

கல்வி பெறச் செய்ய கல்லூரி தந்து வரும்
எல்லாரின் நல்லாசான்; இன்னும் அவன் சேவை
நாலரைக் கோடி நலிவுற்று வாழ்வதையும்
கோல முகத்தவனும் கூர்ந்து கவனித்தான்

அஞ்சாதே ! என்றவுடன் ஆர்த்தெழுந்துவிட்டார்கள்
பஞ்சை உளத்தானும் பாயும் புலியானான்
‘அல்லாஹு அக்பர் !’ அணி முரசம் கொட்டிவிட்டு
எல்லோரும் ஒன்றானார் ஆஹாஹா ! என் சொல்வேன்?

பச்சைப் பிறைக்கொடியைப் பாங்குடனே ஏந்தியதும்
இச் சகத்தில் வாழ்ந்திடுவோம் என்கின்றார் ஐயமில்லை
ஆட்சியினர் நன்குணர்ந்து ஆணவத்தை விட்டொழித்தால்

மாட்சி பெற மார்க்கமுண்டு, வான்புகழால் அன்று
தரணி அரசாண்டதார்வேந்தர்க் கூட்டம்
இரந்து வதைகின்ற ஏளனத்தைப் போக்கி விட
வீர முழக்கமிட்டு வீழ்ந்த சமுதாயம்

சீருடன் வாழ செயல்புரியும் தீரனவன்
இஸ்லாம் மணிவிளக்கு என்கின்ற இன்னவனை
இஸ்மாயீல் என்பார் இசைந்து !

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மீது ‘அறிஞர் மதனீ’
1955ல் மறுமலர்ச்சியில் எழுதிய கவிதை.
தருபவர்: ஏயெம்ஹெச்.

நன்றி : மணிச்சுடர்
5/6 ஜுன் 2010

Saturday, June 19, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஏ.ஷபிகுர் ரஹ்மான் அறிக்கை

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஏ.ஷபிகுர் ரஹ்மான் அறிக்கை

மொழிக்காக உலகில் இப்படியொரு மாநாடு யாரும் நடத்தியதில்லை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர்
ஏ.ஷபிகுர் ரஹ்மான் அறிக்கை


கொங்கு மண்டலத்தில் நடைப்பெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் வெற்றிச் செய்திகளை நாள் தோறும் கேட்டு மகிழ்கிறோம் முத்தமிழ் காவலர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைப்பெற இருக்கும் இந்த சிறப்பான உலகத் தமிழ் செம்மொழி மாநாடு போன்று உலகில் இது வரையில் யாரும் மாநாடு நடத்தவில்லை என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் சொல்லிக்காட்டி இருப்பது சரியான செய்தியாகும் உலகெங்குமிருந்தும் அறிஞர் பெருமக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள் அரபு நாடுகளிலிருந்தும் அறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்ப்பத்தின் மூலம் தமிழகத்துக்கும் -அரபகத்துக்குமுள்ள நெருக்கத்தையும் நேசத்தையும் காட்டுகிறது நம் நாட்டு அரசியல் நிர்ணயச் சபையில் என் தாய் மொழியான தமிழ் மொழியை இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக ஆக்குங்கள் தமிழ் மொழி இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக திகழ்வதற்கு எல்லாத் தகுதியையும் பெற்ற மொழியாக திகழ்கிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் கூறினார்கள்
இன்று நம் தாய் மொழியான தமிழ் மொழிக்கு உலகம் தழுவிய அளவில் மாநாடு நடத்தி தமிழ் மொழியின் சிறப்பை பற்றியும் அதன் இனிமையைப்பற்றியும் உலகெங்கும் அறியச்செய்த முத்தமிழ் காவலர் டாக்டர் கலைஞர் அவர்களின் பணி சிறப்பானதாகும்
இஸ்லாம் எங்கள் வழி இன்பத்தமிழ் எங்கள் மொழி என்று நாடெல்லாம் நறுமணம் வீசச்செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக பணியாற்றிய அப்துல் சமத் அவர்களின் சந்தனத்தமிழ் உரைகளை எண்ணி மகிழ்கிறோம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் வேண்டுகோள் ஏற்று நாடெங்குமுள்ள இஸ்லாமிய சமுதாயத்தினர் இந்த மாநாட்டில் அணி அணியாய் பங்கேற்ப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியாகும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்



இங்ஙனம்
ஏ.ஷபிகுர் ரஹ்மான்
மாநில செயலாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
36-காயிதே மில்லத் மன்ஜில்- மண்ணடி சென்னை- 01
அலைபேசி -9787280133

Sunday, June 13, 2010

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீகின் அரசியல் அணுகுமுறைகளையே சமுதாயம் அங்கீகரிக்கிறது

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீகின் அரசியல் அணுகுமுறைகளையே சமுதாயம் அங்கீகரிக்கிறது

கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் தலைவர் பேராசிரியர் பேச்சு


சென்னை, ஜூன்.11-

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களை உண்மையில் மதிக்கக் கூடியவர்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு எதிராக செயல்பட மாட்டார் கள், அப்படி செயல்படக் கூடியவர்களுக்கு காயிதெ மில்லத் அவர்கள் குறித்து பேசும் தகுதியும், உரிமையும் கிடையாது.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் எடுக்கும் அரசியல் அணுகுமுறை களையே சமுதாயம் அங் கீகரித்து வருகிறது என இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

கரூர் மாவட்டம் பள்ள பட்டியில் நடை பெற்ற ஹகல்வி விழிப்புணர்வு மாநாட்டில் தலைமை வகித்த பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசியதா வது-

காயிதெ மில்லத் பிறந்தநாள்

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களின் பிறந்த நாள் விழாவினை ஆண்டு தோறும் கல்வி உதவி வழங் கும் விழாவாக முஸ்லிம் லீக் நடத்தி வருகிறது. ஒவ்வோர் ஊரிலும் முஸ்லிம் லீக் பிரைமரிகள் சார்பில் அந்த தினத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவிகளும், இலவச நோட்டுப் புத்தகங்கள், கல்வி உதவித்தொகை போன்றவற்றை வழங்குவது வழக்கமாக நடந்து வரு கிறது.

இந்த ஆண்டு மாநில அளவில் இது ஹகல்வி விழிப்புணர்வு மாநாடாக| ஏற்பாடு செய்யப் பட்டு மிகச் சிறப்பாக நடை பெற்று கொண்டிருக்கி றது. மாநாட்டு வர வேற்பு குழுத் தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான நமது அருமைக்குரிய எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் அவர் களுடன் இணைந்து கரூர்மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அனைவ ரும் சிறப்பாக இம் மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறார் கள்.

முதல்வர் கலைஞர்,

துணை முதல்வர் வாழ்த்து

நமது மரியாதைக்குரிய தமிழக முதல்வர் கலைஞர், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் இந்த மாநாட்டிற்கு தங்க ளது வாழ்த்துச் செய்தி களை அனுப்பி வைத்து நம்மை யெல்லாம் பெருமைப் படுத்தியிருக் கிறார்கள். நமது தேசியத் தலைவர் இ.அஹமது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்நாள், முன் னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும், கல்வி யாளர்களும் பல மாவட் டங்களிலி ருந்தும் முஸ்லிம் லீகின் நிர்வாகிகளும், சாதனை படைத்த மாணவ - மாணவிகள், பெற்றோர் கள், ஆசிரியர்கள் என பலரும் கூடி சிறப்பித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர் களின் வாழ்க்கையானது இந்திய சிறுபான்மை சமு தாய மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமுதாய மக்க ளுக்கு வழிகாட்டுதலும், படிப்பினையும் நிறைந்த தாக அமைந்திருக்கிறது. காயிதெ மில்லத் அவர்கள் குறித்து பள்ளிக்கூட பாடப் புத்தகத்தில் பாட மாக இருந்தது. அதில் இடம் பெற்ற ஒரு சம்பவம் நம்மில் பலரும் படித்திருக் கலாம்.

ஒரு முறை காயிதெ மில்லத் அவர்கள் அவ ரது தாயார் இரவு உறங்கும் போது அவரது கால் மிகவும் வலிக்கிறது என் றும், சற்று நேரம் காலை பிடித்து விடுமாறும் காயிதெ மில்லத் அவர்களி டம் கூறியுள்ளார். தாயின் ஆணைப்படி காயிதெ மில்லத் அவர்கள் அவ ருக்கு பணிவிடை செய்துள் ளார். சற்று நேரத்தில் தாயார் உறங்கி விட்டார். ஆனாலும், காயிதெ மில்லத் அவர்கள் தாயா ரின் காலை பிடித்தபடியே இருந்திருக்கிறார். அதி காலை கண்விழித்தபோது காயிதெ மில்லத் உறங்கா மல் தனது காலை பிடித் துக் கொண்டிருப்பதைக் கண்ட அவரது தாயார் ஏன் மகனே நீ உறங்கவில் லையா? என்று கேட்டுள் ளார். அதற்கு காயிதெ மில்லத் அவர்கள், ஆமாம் அம்மா, தாங்கள் போதும் என்று சொல்லவில்லையே? அதனால்தான் நான் தாங்கள் இட்ட கட்ட ளையை தொடர்ந்து செய் தேன் என்று கூறினார். இந்த அளவுக்கு அவர் தாயாருக்கு பணிவிடை செய்தார் என்றால் நிச்சய மாக அவர் இறைவனுக்கு மிகவும் நேசமானவராக திகழ்ந்திருக்க வேண்டும்.

இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சம்பவத்தை மார்க்க அறிஞர்கள் நமக்கு சொல் லிக் காட்டியிருக்கிறார்கள். ஒருமுறை காட்டில் மழைக்காக ஒரு குகையில் ஒதுங்கிய 3 நபர்கள் குகை வாயில் மூடிக் கொள்ள சிக்கிக் கொண்டனர். அந்த குகையை ஒரு மிகப் பெரிய பாறை மூடிக் கொண்டு விட்டது. அந்த குகையி லிருந்து மீள்வதற்கான எந்த வழிவகையும் அவர்களுக்கு தென்படவில்லை

அப்போது அவர்கள் மூவரும் தாங்கள் கடந்த காலத்தில் இறைவனுக்கு அஞ்சி செய்த காரியங் களை நினைவுப்படுத்தி அதன் பொருட்டால் இறைவன் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்.

இறைவன் மீது அச்சம்

ஒரு நபர், ஹஇறைவா நான் வயது வந்த என் பெற்றோருக்கு பணி விடை செய்தது உனக்கு அஞ்சிய காரணத்தால் தான் ஏழையான நான் தின மும் ஆட்டுப் பாலை கறந்து வந்து அதனை பெற் றோருக்கு அருந்தக் கொடுத்தேன். பெற்றோர் அதனை அருந்திய பிறகே எனது மனைவி, பிள்ளைக ளுக்கு கொடுத்து பிறகு தானும் உண்பதை வழக்க மாக கொண்டேன். அப் படி ஒரு முறை பெற்றோருக்காக பால் கொண்டு வந்தபோது, அவர்கள் இருவரும் உறங்கி விட்டார்கள். அவர்கள் விழிக் கும் வரை காத்திருந்து அவர்கள் அருந்திய பிறகே நானும், எனது குடும்பமும் அருந் தினோம். இதற்கு காரணம் இறைவன் மீதான அச்ச உணர்வே என்று கூறி, இதன்பொருட்டால் தங் களை சூழ்ந்துள்ள ஆபத் திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த் தித்தார். வாயிலை அடைத் திருந்த பாறை கொஞ்சம் விலகியது.

அதேபோன்று இரண் டாம் நபர் தனது நெருங் கிய உறவுக்கார பெண்ணி டம் தனிமையில் இருந்த போது, எனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தினேன். அவள் மறுத்த போதும் நான் பலாத்காரத்திற்கு முற்பட்ட போது அந்த பெண் ஹஅல்லாஹ்வுக்கு அஞ்சி என்னை விட்டு விடு| என கூற, நானும் இறை வனின் அச்சத்தால் அந்த பாவகாரியத்தை செய்யா மல் விலகி விட்டேன் என்பதை கூறி அதன் பொருட்டால் தங்களை சூழ்ந்த ஆபத்திலிருந்து விடுவிக்கும்படி இறைவ னிடம் பிரார்த்தித்தார். பாறையும் இன்னும் அதிகம் விலகியது.

மூன்றாம் நபர், இறைவா, என்னிடம் ஒரு நபர் ஒரு ஆட்டைத் தந்து பின்னர் அதனை வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னார். அந்த ஒரு ஆடு பல ஆடுகளாக பெருகி பெரிய மந்தையாகி விட் டது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வந்து தான் கொடுத்த ஆட்டை கேட் டார். நான் அந்த மந் தையை காட்டி அது உன்னுடையது, எடுத்துக் கொள் என்றேன். நான் ஒரு ஆடுதானே தந்தேன் என்று அவர் சொன்ன நேரத்தில் அந்த ஒரு ஆட்டிலிருந்து பெருகியதுதான் இந்த மந்தை. அது உனக்கே சொந்தம் என்றேன். இறைவா உன் மீது உள்ள அச்சத்தின் காரணமாகத் தான் நான் இவ்வாறு சொன்னேன். அதன் பொருட்டால் இந்த ஆபத் திலிருந்து நீ எங்களை காப் பாற்று என்று பிரார்த்தித் தார்.

பாறை முழுவதுமாக விலகி மூவரும் குகையிலி ருந்து வெளிவர அல்லாஹ் உதவினான்.

நாம் செய்யக் கூடிய ஒவ் வொரு காரியமும் அல்லாஹ்வின் பொருத்தத் திற்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண் டும்.

சமுதாய வழிகாட்டி

காயிதெ மில்லத்தை இந்த சமுதாயம் ஏற்று போற்றுகிறதென்றால் அவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி செய்த காரியங்க ளால்தான்.

காயிதெ மில்லத் என்ற சொல்லுக்கு சமுதா யத்தின் வழிகாட்டி என் பது பொருள். காய்து என்றால் ஒட்டகத்தை வழி நடத்திச் செல்பவர் என்று பொருளாகும். சாய்து என்றாலும் அதுதான் பொருள். ஆனால் சாய்து என்னும்போது ஒட்டகத் தின் மீது ஏறி அதனை ஓட்டிச் செல்பவர் என்றும், காய்து என்றால் ஒட்ட கத்தின் மூங்கணாங்கயிறை பிடித்துக் கொண்டு கற் களும், முட்களும் படாத வகையில் கவனமாக வழி நடத்துபவர் என்றும் பொருள்படும் என்று மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் எங்களுக் கெல்லாம் சொல்லிக் காட்டியுள்ளார்கள்.

இந்திய சிறு பான்மை முஸ்லிம் சமுதாயத்தை எந்த துன்பமும், துயரமும் தாக்கிடா வண்ணம் கவன மாக இந்த சமு தாயத்தை வழி நடத்துபவர் என்ப தால்தான் காயிதெ மில்லத் என்ற பெயரால் அவரை அழைக்கிறோம்.

தகுதியும்-உரிமையும்

இன்று காயிதெ மில்லத் அவர்களை பற்றி அனைத் துக் கட்சியினரும் பேசு கின்றனர். நமது சமு தாயத்தில் பல அமைப்பு களும் காயிதெ மில்லத்தின் பெயரை, படத்தை பயன் படுத்துகின்றனர். காயிதெ மில்லத்திற்கு தாங்கள் மரியாதை செலுத்துவதாக சொல்லிக் கொள்கின்றனர். உண்மையில் காயிதெ மில் லத்தை மதிக்கக் கூடியவர் கள் அவரது கொள்கை களை, லட்சியங்களை கடைபிடிக்கக் கூடியவர்க ளாக அதனை பிரச்சாரம் செய்யக் கூடியவர்களாக அந்த லட்சியம் நிறைவேற பாடுபடக் கூடியவர்களாக இருப்பார்கள். சுருக்கமாக சொல்வதென்றால் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை பலப்படுத்தக்கூடியவர்களாக வளர்க்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு எதிராக செயல்படக்கூடியவர்கள், கேடுபாடுகள் விளைவிக்கக் கூடியவர்கள் அதன் பணிக்கு - பயணத்திற்கு, வளர்ச்சிக்கு இடைய+று செய்யக் கூடியவர்களுக்கு நிச்சயம் காயிதெ மில்லத் குறித்து பேசும் தகுதியோ, உரிமையோ இருக்க முடியாது

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அரசியல் நிலைபாடுகளைத் தான் இந்த சமுதாயம் ஏற்று அங்கீகரிக்கிறது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் முடிவுகளை - தீர்மானங் களை இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்கிறது. அப்படியிருக்க இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு எவரும் அரசியல் கற்றுத் தர வேண்டிய அவசிய மில்லை. எப்படி தீர்மானங் கள் எழுத வேண்டும் என்று எவரும் எங்களுக்கு சொல்லிக் காட்ட ஆசைப் படக் கூடாது.

இனி

பொறுக்க மாட்டோம்

முஸ்லிம் லீகின் குரலுக்கு எதிரான குரலை ஒலிப்பார்களானால் அதனை இனிமேல் அனும திக்க முடியாது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு எதிராக எவராவது கையை தூக்குவார்களானால் இனி மேல் அவ்வாறு தூக்கும் கையை இறக்கும் பணியை நாம் செய்தாக வேண்டும். இவ்வளவு நாட்களாக நாம் இந்த விஷயங்களில் பொறுமை காத்தோம். ஆனால், நமது பொறு மையை - சகிப்புத் தன் மையை நமது சமுதாயம் விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தி வருகிறார் கள். சமுதாய உணர்வுக்கு மதிப்பளித்து நாமும் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளோம்.

இந்த மாநாடு அதற் கான துவக்கமாக அமைந் திருக்கிறது. இங்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சிக்கு பல வகையி லும் பணியாற்றிய சான் றோர் பெருமக்களுக்கு காயிதெ மில்லத் பெயரால் விருதுகளும், பரிசளிப்புக ளும், சாதனை படைத்த மாணவ - மாணவிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டுச் சான் றிதழும், பரிசளிப்பும் செய் யப்பட்டு கவுரவிக்கப்பட் டுள்ளனர். இதன் மூலம் இன்னும் பலர் சமுதாய முன்னேற்ற காலங்களில் அக்கறை செலுத்த வேண் டும். ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் இவையெல்லாம் நடைபெறுகின்றன.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் பேசினார்.

Saturday, June 12, 2010

நாவலர் அல்ஹாஜ். ஏ.எம். யூசுப் சாஹிப்

நாவலர் அல்ஹாஜ். ஏ.எம். யூசுப் சாஹிப்


மாண்புமிகு மதினாவில் வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் தர்பாரில் நெஞ்சுருக ஸலாம் சொல்லி மகிழ்ந்த நாவலர் அல்ஹாஜ். ஏ.எம். யூசுப் சாஹிப்

( தளபதி ஏ. ஷபிகுர்ரஹ்மான் மன்பஈ )


நாடு விடுதலைக்கு முன்னர் மிகப்பெரும் சமுதாய அரசியல் இயக்க மாக முஸ்லிம்லீக் இருந்தது.

அந்த காலக்கட்டத்தில்

மிகப்பெரும் பணக்காரர்களும், தொழிலதிபர்களும், சிற்றரசர்களும் முஸ்லிம் லீக்கில் இருந்தார்கள்.

நாடு விடுதலைக்குப் பின்னர் முஸ்லிம் லீக்கின் சிறப்பான – தியாகமான செயல்பாடுகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பெயரால் கண்ணியமிகு காயிதெமில்லத் அவர்கள் செயல்படுத்த துவங்கியபோது சோதனையான காலக்கட்டம் ஏற்பட்டது. முஸ்லிம்லீக் செயல்படுவதற்கும் அதன் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவதற்கும் கடுமையான சோதனை ஏற்பட்டது. மிகப்பெரும் தலைவர்களெல்லாம் எதிர்த்தார்கள்.

அந்தக் காலக் கட்டத்தில் காயிதெமில்லத் அவர்களுக்கு ஆதரவாக இருந்து முஸ்லிம் லீக்கின் பணிகள் தமிழகத்திலும், கேரளத்திலும், ஆந்திரத்திலும் செயல்படுவதற்கும் பெரிதும் ஆதரவு வழங்கியவர் நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப் அவர்கள்.

மறுமலர்ச்சி வாரஇதழை துவக்கி தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் இந்திய யூனியன் முஸ்லிம்லீக்கின் உறுப்பினர்களைச் சேர்த்து முஸ்லிம் லீக்கின் கிளைகளை துவக்கி வைத்த தியாகச்சீலர் ஏ.எம். யூசுப் சாஹிப் அவர்களாகும்.

என்னுடைய 10 வயதிலிருந்து நாவலர் யூசுப் சாஹிப் அவர்களுடன் இயக்கப்பணியில் நல்ல நெருக்கம் உண்டு. நாவலர் அவர்களின் வீர மிகுந்த பேச்சை கேட்டு அதைப்பாடமிட்டு என்னுடைய 10 வயதிலிருந்து பேசிவருகிறேன்.

அச்சம் தயை தாட்சன்யமின்றி சமுதாயத்தின் உரிமைகளைப்பற்றி வாழ்வெல்லாம் பேசியவர்கள் நாவலர் அவர்களாம்.

மறுமலர்ச்சி வார இதழ் மூலமும் தன் நாவன்மையாலும் முஸ்லிம் லீக்கிற்கு எழுச்சியூட்டிய அரசியல்மேதையாம் .

இவர் புனித ஹஜ்ஜிற்கு வந்திருந்தபோது அவருடன் மக்கா முகர்ரமாவிலும், ஹஜ்ஜின் கேந்திரங்களான புனித மக்கா, மினா, அரஃபா, முஜ்தலிபா ஆகிய இடங்களில் அவருடன் அமல் செய்திருக்கிறேன் அப்போதெல்லாம் நெஞ்சுருக்கும் வகையில் அவரின் ஆர்வமான செயல்பாடுகள் அமைந்திருந்தது.

மாண்புமிகு மதினா ஜியாரத்துக்கு வள்ளல் நபிகள் பெருமானார் ரசூலே கறீம்,,ஸல்,, அவர்களின் தர்பாரில் ஸலாம் சொல்லிக் கொண்டிருந்தபோது தேம்பி தேம்பி அழுதார். நெஞ்சுருக துஆச் செய்தார் அப்போது இவர்.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாடெங்கும் வள்ளல் நபிகள் பெருமானார் ரசூலே கறீம் (ஸல்) அவர்களின் பிறந்த தின விழாக்களில் மீலாத் மாநாடுகளில் – ஷரீஅத் மாநாடுகளில், திருக்குர்ஆன் மாநாடுகளில், முஸ்லிம்லீக்கின் மாநாடுகளில், பொதுக் கூட்டங்களில் மணிமணியாக பேசி இருக்கிறேன் மணிக்கணக்கில் பேசி இருக்கிறேன் நாள்தோறும் 2 மணிநேரம் 3 மணிநேரம் பெருமானார் ரசூல் கறீம் ,,ஸல்,, அவர்களின் அழகிய வாழ்வினைப்பற்றி வாய் இனிக்க – நா மணக்க பேசி இருக்கிறேன் 50 ஆண்டுகளுக்கு மேலாக பெருமானார் அவர்களைப்பற்றி பேசிய பிறகுதான் –

இப்போது நேரில் வந்து அவர்களுக்கு ஸலாம் சொல்லுகிறேன். என் மனைவியுடன் வந்து ஸலாம் சொல்லும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். நான் 50 ஆண்டுகளுக்கு மேலாக எதைப்பற்றி சிந்தித்தேனோ எதைப்பற்றி மேடைகளில் முழங்கி வந்துள்ளேனோ அதை அப்படியே இங்கே பார்க்கிறேன்.

மக்கா முகர்ரமாவும், மதீனா முனவ்வராவும் இங்குள்ள சரித்திர பிரசித்திப் பெற்ற இடமும் அடியேன் பேசி வந்தது உண்மைதான். சத்தியம்தான் என்பதை எனக்கு உணர்த்துகிறது. அவர் சொன்னச் செய்தி இன்னமும் என் நெஞ்சை மகிழவைக்கிறது. இவரின் கப்ரை பிரகாசமாக்கி இவர்க்கு சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை அல்லாஹ் வழங்குவானாக என கருணையுள்ள ரஹ்மானிடம் கரமேந்தி பிரார்த்திக்கிறேன்.

கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் நடந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் தலைவர் பேராசிரியர் பேச்சு

கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் நடந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் தலைவர் பேராசிரியர் பேச்சு

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களை உண்மையில் மதிக்கக் கூடியவர்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு எதிராக செயல்பட மாட்டார்கள், அப்படி செயல்படக்கூடியவர்களுக்கு காயிதெ மில்லத் அவர்கள் குறித்து பேசும் தகுதியும், உரிமையும் கிடையாது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் எடுக்கும் அரசியல் அணுகுமுறை களையே சமுதாயம் அங் கீகரித்து வருகிறது என இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.
கரூர் மாவட்டம் பள்ள பட்டியில் நடை பெற்ற ஹகல்வி விழிப்புணர்வு மாநாட்டில் தலைமை வகித்த பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசியதா வது-
காயிதெ மில்லத் பிறந்தநாள்
கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களின் பிறந்த நாள் விழாவினை ஆண்டு தோறும் கல்வி உதவி வழங் கும் விழாவாக முஸ்லிம் லீக் நடத்தி வருகிறது. ஒவ்வோர் ஊரிலும் முஸ்லிம் லீக் பிரைமரிகள் சார்பில் அந்த தினத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவிகளும், இலவச நோட்டுப் புத்தகங்கள், கல்வி உதவித்தொகை போன்றவற்றை வழங்குவது வழக்கமாக நடந்து வரு கிறது.
இந்த ஆண்டு மாநில அளவில் இது ஹகல்வி விழிப்புணர்வு மாநாடாக| ஏற்பாடு செய்யப் பட்டு மிகச் சிறப்பாக நடை பெற்று கொண்டிருக்கி றது. மாநாட்டு வர வேற்பு குழுத் தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான நமது அருமைக்குரிய எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் அவர் களுடன் இணைந்து கரூர்மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அனைவ ரும் சிறப்பாக இம் மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறார் கள்.
முதல்வர் கலைஞர், துணை முதல்வர் வாழ்த்து
நமது மரியாதைக்குரிய தமிழக முதல்வர் கலைஞர், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் இந்த மாநாட்டிற்கு தங்க ளது வாழ்த்துச் செய்தி களை அனுப்பி வைத்து நம்மை யெல்லாம் பெருமைப் படுத்தியிருக் கிறார்கள். நமது தேசியத் தலைவர் இ.அஹமது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்நாள், முன் னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும், கல்வி யாளர்களும் பல மாவட் டங்களிலி ருந்தும் முஸ்லிம் லீகின் நிர்வாகிகளும், சாதனை படைத்த மாணவ - மாணவிகள், பெற்றோர் கள், ஆசிரியர்கள் என பலரும் கூடி சிறப்பித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர் களின் வாழ்க்கையானது இந்திய சிறுபான்மை சமு தாய மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமுதாய மக்க ளுக்கு வழிகாட்டுதலும், படிப்பினையும் நிறைந்த தாக அமைந்திருக்கிறது. காயிதெ மில்லத் அவர்கள் குறித்து பள்ளிக்கூட பாடப் புத்தகத்தில் பாட மாக இருந்தது. அதில் இடம் பெற்ற ஒரு சம்பவம் நம்மில் பலரும் படித்திருக் கலாம்.
ஒரு முறை காயிதெ மில்லத் அவர்கள் அவ ரது தாயார் இரவு உறங்கும் போது அவரது கால் மிகவும் வலிக்கிறது என் றும், சற்று நேரம் காலை பிடித்து விடுமாறும் காயிதெ மில்லத் அவர்களி டம் கூறியுள்ளார். தாயின் ஆணைப்படி காயிதெ மில்லத் அவர்கள் அவ ருக்கு பணிவிடை செய்துள் ளார். சற்று நேரத்தில் தாயார் உறங்கி விட்டார். ஆனாலும், காயிதெ மில்லத் அவர்கள் தாயா ரின் காலை பிடித்தபடியே இருந்திருக்கிறார். அதி காலை கண்விழித்தபோது காயிதெ மில்லத் உறங்கா மல் தனது காலை பிடித் துக் கொண்டிருப்பதைக் கண்ட அவரது தாயார் ஏன் மகனே நீ உறங்கவில் லையா? என்று கேட்டுள் ளார். அதற்கு காயிதெ மில்லத் அவர்கள், ஆமாம் அம்மா, தாங்கள் போதும் என்று சொல்லவில்லையே? அதனால்தான் நான் தாங்கள் இட்ட கட்ட ளையை தொடர்ந்து செய் தேன் என்று கூறினார். இந்த அளவுக்கு அவர் தாயாருக்கு பணிவிடை செய்தார் என்றால் நிச்சய மாக அவர் இறைவனுக்கு மிகவும் நேசமானவராக திகழ்ந்திருக்க வேண்டும்.
இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சம்பவத்தை மார்க்க அறிஞர்கள் நமக்கு சொல்லிக் காட்டியிருக்கிறார்கள். ஒருமுறை காட்டில் மழைக்காக ஒரு குகையில் ஒதுங்கிய 3 நபர்கள் குகை வாயில் மூடிக் கொள்ள சிக்கிக் கொண்டனர். அந்த குகையை ஒரு மிகப் பெரிய பாறை மூடிக் கொண்டு விட்டது. அந்த குகையி லிருந்து மீள்வதற்கான எந்த வழிவகையும் அவர்களுக்கு தென்படவில்லை அப்போது அவர்கள் மூவரும் தாங்கள் கடந்த காலத்தில் இறைவனுக்கு அஞ்சி செய்த காரியங் களை நினைவுப்படுத்தி அதன் பொருட்டால் இறைவன் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள்.
இறைவன் மீது அச்சம்
ஒரு நபர், இறைவா நான் வயது வந்த என் பெற்றோருக்கு பணி விடை செய்தது உனக்கு அஞ்சிய காரணத்தால் தான் ஏழையான நான் தின மும் ஆட்டுப் பாலை கறந்து வந்து அதனை பெற் றோருக்கு அருந்தக் கொடுத்தேன். பெற்றோர் அதனை அருந்திய பிறகே எனது மனைவி, பிள்ளைக ளுக்கு கொடுத்து பிறகு தானும் உண்பதை வழக்க மாக கொண்டேன். அப் படி ஒரு முறை பெற்றோருக்காக பால் கொண்டு வந்தபோது, அவர்கள் இருவரும் உறங்கி விட்டார்கள். அவர்கள் விழிக் கும் வரை காத்திருந்து அவர்கள் அருந்திய பிறகே நானும், எனது குடும்பமும் அருந் தினோம். இதற்கு காரணம் இறைவன் மீதான அச்ச உணர்வே என்று கூறி, இதன்பொருட்டால் தங் களை சூழ்ந்துள்ள ஆபத் திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த் தித்தார். வாயிலை அடைத் திருந்த பாறை கொஞ்சம் விலகியது.
அதேபோன்று இரண் டாம் நபர் தனது நெருங் கிய உறவுக்கார பெண்ணி டம் தனிமையில் இருந்த போது, எனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தினேன். அவள் மறுத்த போதும் நான் பலாத்காரத்திற்கு முற்பட்ட போது அந்த பெண் ஹஅல்லாஹ்வுக்கு அஞ்சி என்னை விட்டு விடு| என கூற, நானும் இறை வனின் அச்சத்தால் அந்த பாவகாரியத்தை செய்யா மல் விலகி விட்டேன் என்பதை கூறி அதன் பொருட்டால் தங்களை சூழ்ந்த ஆபத்திலிருந்து விடுவிக்கும்படி இறைவ னிடம் பிரார்த்தித்தார். பாறையும் இன்னும் அதிகம் விலகியது.
மூன்றாம் நபர், இறைவா, என்னிடம் ஒரு நபர் ஒரு ஆட்டைத் தந்து பின்னர் அதனை வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னார். அந்த ஒரு ஆடு பல ஆடுகளாக பெருகி பெரிய மந்தையாகி விட் டது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வந்து தான் கொடுத்த ஆட்டை கேட் டார். நான் அந்த மந் தையை காட்டி அது உன்னுடையது, எடுத்துக் கொள் என்றேன். நான் ஒரு ஆடுதானே தந்தேன் என்று அவர் சொன்ன நேரத்தில் அந்த ஒரு ஆட்டிலிருந்து பெருகியதுதான் இந்த மந்தை. அது உனக்கே சொந்தம் என்றேன். இறைவா உன் மீது உள்ள அச்சத்தின் காரணமாகத் தான் நான் இவ்வாறு சொன்னேன். அதன் பொருட்டால் இந்த ஆபத் திலிருந்து நீ எங்களை காப் பாற்று என்று பிரார்த்தித் தார்.
பாறை முழுவதுமாக விலகி மூவரும் குகையிலி ருந்து வெளிவர அல்லாஹ் உதவினான். நாம் செய்யக் கூடிய ஒவ் வொரு காரியமும் அல்லாஹ்வின் பொருத்தத் திற்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண் டும்.
சமுதாய வழிகாட்டி
காயிதெ மில்லத்தை இந்த சமுதாயம் ஏற்று போற்றுகிறதென்றால் அவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி செய்த காரியங்களால்தான்.
காயிதெ மில்லத் என்ற சொல்லுக்கு சமுதா யத்தின் வழிகாட்டி என் பது பொருள். காய்து என்றால் ஒட்டகத்தை வழி நடத்திச் செல்பவர் என்று பொருளாகும். சாய்து என்றாலும் அதுதான் பொருள். ஆனால் சாய்து என்னும்போது ஒட்டகத் தின் மீது ஏறி அதனை ஓட்டிச் செல்பவர் என்றும், காய்து என்றால் ஒட்ட கத்தின் மூங்கணாங்கயிறை பிடித்துக் கொண்டு கற் களும், முட்களும் படாத வகையில் கவனமாக வழி நடத்துபவர் என்றும் பொருள்படும் என்று மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் எங்களுக் கெல்லாம் சொல்லிக் காட்டியுள்ளார்கள்.
இந்திய சிறு பான்மை முஸ்லிம் சமுதாயத்தை எந்த துன்பமும், துயரமும் தாக்கிடா வண்ணம் கவன மாக இந்த சமு தாயத்தை வழி நடத்துபவர் என்ப தால்தான் காயிதெ மில்லத் என்ற பெயரால் அவரை அழைக்கிறோம்.
தகுதியும்-உரிமையும்
இன்று காயிதெ மில்லத் அவர்களை பற்றி அனைத்துக் கட்சியினரும் பேசுகின்றனர். நமது சமு தாயத்தில் பல அமைப்பு களும் காயிதெ மில்லத்தின் பெயரை, படத்தை பயன் படுத்துகின்றனர். காயிதெ மில்லத்திற்கு தாங்கள் மரியாதை செலுத்துவதாக சொல்லிக் கொள்கின்றனர். உண்மையில் காயிதெ மில் லத்தை மதிக்கக் கூடியவர் கள் அவரது கொள்கை களை, லட்சியங்களை கடைபிடிக்கக் கூடியவர்க ளாக அதனை பிரச்சாரம் செய்யக் கூடியவர்களாக அந்த லட்சியம் நிறைவேற பாடுபடக் கூடியவர்களாக இருப்பார்கள். சுருக்கமாக சொல்வதென்றால் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை பலப்படுத்தக்கூடியவர்களாக வளர்க்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு எதிராக செயல்படக்கூடியவர்கள், கேடுபாடுகள் விளைவிக்கக் கூடியவர்கள் அதன் பணிக்கு - பயணத்திற்கு, வளர்ச்சிக்கு இடைய+று செய்யக் கூடியவர்களுக்கு நிச்சயம் காயிதெ மில்லத் குறித்து பேசும் தகுதியோ, உரிமையோ இருக்க முடியாது இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அரசியல் நிலைபாடுகளைத் தான் இந்த சமுதாயம் ஏற்று அங்கீகரிக்கிறது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் முடிவுகளை - தீர்மானங் களை இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்கிறது. அப்படியிருக்க இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு எவரும் அரசியல் கற்றுத் தர வேண்டிய அவசிய மில்லை. எப்படி தீர்மானங் கள் எழுத வேண்டும் என்று எவரும் எங்களுக்கு சொல்லிக் காட்ட ஆசைப் படக் கூடாது.
இனி பொறுக்க மாட்டோம்
முஸ்லிம் லீகின் குரலுக்கு எதிரான குரலை ஒலிப்பார்களானால் அதனை இனிமேல் அனும திக்க முடியாது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு எதிராக எவராவது கையை தூக்குவார்களானால் இனி மேல் அவ்வாறு தூக்கும் கையை இறக்கும் பணியை நாம் செய்தாக வேண்டும். இவ்வளவு நாட்களாக நாம் இந்த விஷயங்களில் பொறுமை காத்தோம். ஆனால், நமது பொறு மையை - சகிப்புத் தன் மையை நமது சமுதாயம் விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தி வருகிறார் கள். சமுதாய உணர்வுக்கு மதிப்பளித்து நாமும் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளோம். இந்த மாநாடு அதற் கான துவக்கமாக அமைந் திருக்கிறது. இங்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சிக்கு பல வகையி லும் பணியாற்றிய சான் றோர் பெருமக்களுக்கு காயிதெ மில்லத் பெயரால் விருதுகளும், பரிசளிப்புக ளும், சாதனை படைத்த மாணவ - மாணவிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டுச் சான் றிதழும், பரிசளிப்பும் செய் யப்பட்டு கவுரவிக்கப்பட் டுள்ளனர். இதன் மூலம் இன்னும் பலர் சமுதாய முன்னேற்ற காலங்களில் அக்கறை செலுத்த வேண் டும். ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் இவையெல்லாம் நடைபெறுகின்றன.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் பேசினார்.

Monday, June 7, 2010

தமிழ்ச் சமுதாயத்தின் வழிகாட்டியாகத் திகழ்ந்த கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்

தமிழ்ச் சமுதாயத்தின் வழிகாட்டியாகத் திகழ்ந்த கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்

அது 1971-ம் ஆண்டு கால கட்டம். பாகிஸ்தான் இந்தியாவோடு போர் தொடுத்த சமயம். ஒட்டுமொத்த நாடும் உணர்ச்சி பிழம்பாக இருந்தது. இந்து - முஸ்லிம் என்ற பாகுபாடை காட்டி மதவெறி உணர்வுகளை தூண்டி வன்முறைக்கு வித்திட கயவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். சில இஸ்லாமிய தலைவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக வெளிப்படையாக கருத்து சொல்ல தயங்கி கொண்டிருந்தனர். அப்போது பாகிஸ்தானுக்கு எதிராகவும், தாய்நாட்டுக்கு ஆதரவாகவும் ஓங்கி குரல் கொடுத்தவர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் கண்ணியமிகு காயிதெமில்லத்.
ஹஇந்தியாதான் எங்கள் தாய்நாடு. பாகிஸ்தானுக்கு எதிராக போர்புரிய எனது ஒரே மகனை போர்க்களத்துக்கு அனுப்பத் தயார்| என்று உணர்ச்சி பிழம்பாக முழங்கினார். அவரது இந்த ஒரு அறிக்கை நாட்டின் அனைத்து இஸ்லாமியத் தலைவர்களையும் ஓர் அணியில் திரளச் செய்தது. இஸ்லாமியர்களின் ஒப்பற்றத் தலைவராக விளங்கிய நாடறிந்த பெருந்தகை கண்ணியமிகு காயிதெ மில்லத்துக்கு இன்று 115-வது பிறந்த நாள். அவர் பிறந்த நாளில் அவரை நாம் நினைவுகூறுவோம். ஹகாயிதெ மில்லத்| என்ற அரபி சொல்லுக்கு ஹமக்களின் வரிகாட்டி| என்பதே பொருள் ஆகும்.
இளமைப் பருவம்
காயிதெ மில்லத்திற்கு பெற்றோர் சூட்டிய பெயர் முஹம்மது இஸ்மாயில், தந்தை கே.டி. மியாகான் ராவுத்தர். திருநெல்வேலியில் உள்ள பேட்டையில் 1896-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி பிறந்தார்.
காயிதெ மில்லத்தின் தந்தை மதத் தலைவராகவும் (மவ்லவி) விளங்கினார். பெரும் வணிகராக இருந்த இவர் திருவாங்கூர் அரச குடும்பத்திற்கு துணிகள் விற்கும் அளவுக்கு புகழ் பெற்று விளங்கினார்.
காயிதெ மில்லத் சிறுவனாக இருந்தபோதே தந்தை மறைந்து விட்டார். பின்னர் தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்தார். தாயார் அரபு மொழியையும், மத நூல்களையும் கற்றுத் தந்தார்.
ஹவிளையும் பயிர் முளையிலேயே தெரியும்| என்பது போல் தனது 9-வது வயதிலேயே அதாவது 1909-ம் ஆண்டு தான் வசித்த பேட்டை பகுதியில் முஸ்லிம் இளைஞர் அமைப்பை தொடங்கி சமுதாய பணியில்
1920 கால கட்டத்தில் மகாத்மா காந்தி தலைமையில் வெள்ளையருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பள்ளிப்படிப்பை நெல்லை எம்.டி.டி. இந்துப் பள்ளியில் முடித்த காயிதெ மில்லத், திருச்சி ஜோசப் கல்லூரி மற்றும் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் கல்லூரி படிப்பை பயின்றார்.
அப்போது 1920-ம் ஆண்டு காலக்கட்டம். மகாத்மாகாந்தி தலைமையில், வெள்ளையருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நாடு முழுவதும் நடைபெற்று கொண்டிருந்தது. பட்டம் பெற 2 மாதங்களே இருந்த நிலையில் தாய்மண் மீது பாசம் கொண்டு காயிதெ மில்லத்தும் சுதந்திர போராட்டத்தில் குதித்தார். திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், ஹஒத்துழையாமை இயக்கத் தீர்மானம்| பலத்த எதிர்ப்புக்கு இடையே நிறைவேற உறுதுணையாக நின்றார்.
அரசியல் பணி
ஒன்றுபட்ட இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்களுக்காக 1906-ம் ஆண்டு அகில இந்திய முஸ்லிம் லீக்| என்ற கட்சி தொடங்கப்பட்டது. பின்னர் இன்றைய பாகிஸ்தானின் தந்தையாக போற்றப்படும் முஹம்மது அலி ஜின்னா இதன் தலைவர் ஆனார்.
1947 இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை தொடங்கி இதன் தலைவராக காயிதெ மில்லத் பொறுப்பேற்றார். அவருடன் போக்கர் சாஹிப், மகப+ப் அலி பெய்க் சாகிப், கே.டி.எம். அஹமது இப்ராஹீம் சாஹிப் உள்ளிட்ட தலைவர்கள் நிர்வாகிகளாக பொறுப்பேற்றனர்.
இக் கூட்டம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது.
திருமணம்
1923-ம் ஆண்டு நவம்பர் மாதம் காயிதெ மில்லத்தின் திருமணம் நடந்தது. மனைவி ஜமால் ஹமீதா பீவி. பின்னர் அரசியல் பணியுடன் தந்தை வழியில் தொழில் துறையிலும் காயிதெ மில்லத் கவனம் செலுத்தினார். சிறந்த தொழில் அதிபராகவும் உயர்ந்தார். 1946-ம் ஆண்டு பழைய சென்னை மாகாண சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் அவரது முஸ்லிம் லீக் கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
காயிதெ மில்லத்தும் வெற்றி பெற்று 52-ம் ஆண்டு வரை எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார். அவர் கட்சி 28 இடங்களில் வென்றதால் காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சியாக விளங்கியது.
பின்னர் 52-ம் ஆண்டு முதல் 58-ம் ஆண்டு வரை டெல்லி மேல்சபை உறுப்பினராக பணி யாற்றினார். சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணய சபையிலும் உறுப்பினராக இடம் பெற்றார்.
மாநிலங்களுக்கு அதிக ஆட்சி உரிமை வழங்கப்படுவது அவசியம் என்று அப்போதே ஓங்கி குரல் கொடுத்தார். மத்திய அரசில் அதிகாரங்கள் குவிந்து கிடப்பதால் மக்களுக்கு நன்மை குறைவு என்று வாதிட்டார். ஹஅதிகாரம் வழங்கப்படாத மாநிலங்கள் நகராட்சிகளுக்கு சமமானவை| என்று காட்டமாக எடுத்துரைத்தார். இதனால் மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வழங்கப்பட்டன.
இதேபோல நாட்டின் ஹதேசிய மொழி| ஆகும் தகுதி தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு என்றும், அதற்குரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் அரசியில் நிர்ணய சபையில் வலியுறுத்தினார். நெய்வேலியில் எடுக்கப்படும் நிலக்கரியில் மாநில அரசுக்கு உரிய பங்கை பெ ற்றுத் தந்தார்.
1956-ம் ஆண்டு காலக்கட்டத்தில் கேரள அரசியலில் அதிக கவனம் செலுத்தினார். அம் மாநில இஸ்லாமிய மக்களின் அன்புக்கு பாத்திரமானார். 1962-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கேரளாவில் உள்ள மஞ்சேரி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தொகுதிக்கு பிரசாரத்துக்கு செல்லாமலேயே வெற்றி பெறும் அளவுக்கு தொகுதி மக்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். பின்னர் 1967, 71 ஆகிய மக்களவை தேர்தலிகளிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இடையில் 1962-ம் ஆண்டு காயிதெ மில்லத்தின் மனைவி ஹமீதா பீவி காலமானார். இத் தம்பதியரின் ஒரே மகன் ஜமால் மியாகான். பின்னர் 1967-ம் ஆண்டு தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சியை கைப்பற்ற காயிதெ மில்லத் முக்கிய பங்காற்றினார். மத்தியிலும், மாநிலத்திலும் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் நட்பாக விளங்கினார்.
ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, லால்பகதூர் கட்சி சாஸ்திரி, ஜாகிர் உசேன், பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, இன்றைய முதல்வர் கலைஞர், நிதியமைச்சர் அன்பழகன், ராசாராம், மறைந்த எம்.ஜி.ஆர்., நெடுஞ் செழியன், சி.பா. ஆதித்தனார், என்.வி. நடராசன், அப்போதைய மேல் சபை தலைவர் சி.பி. சிற்றரசு. மபொ.சி. பொன்னப்ப நாடார், ராஜாராம் நாயுடு என அனைவருடனும் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார்.
அன்பு, அடக்கம், ஆற்றல் மற்றும் நற்பண்புகளின் ஒட்டுமொத்த உருவமாக காயிதெ மில்லத் விளங்கினார் என்றால் அது மிகையாகாது.
தொழில்துறை
அரசியலில் கவனம் செலுத்தியதோடு, தொழிற்துறையிலும் காயிதெ மில்லத் புகழ் பெற்று விளங்கினார். தோல் பொருட்கள் மற்றும் இறைச்சி ஏற்றுமதி மற்றும் விற்பனையில் கொடிகட்டி பறந்தார். தொழிற்துறையில் புகழ் பெற்றதால் சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், சென்னை வர்த்தகத் துறை, தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில், தொழில் திட்டக்குழு, சுங்கவரிக் கழகம், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை உட்பட ஏராளமான அமைப்புகளில் உறுப்பினராக விளங்கினார்.
சென்னை மாநில மட்டன் விற்பனையாளர்கள் சங்கத் தலைவராக 1946-ம் ஆண்டு முதல் 1972-ம் ஆண்டு வரை இருந்தார். மத்திய தோல் மற்றும் தோல் பொருட்கள் கமிட்டித் தலைவராகவும், தென்னிந்திய தோல் வியாபாரிகள் சங்க துணைத் தலைவராகவும் இருந்தார். தென்னிந்திய இஸ்லாமிய கழகத்தின் துணைத் தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழ் வளர்ச்சிக் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தார்.
அரசு அங்கீகாரம்
காயிதெ மில்லத்தை கவுரப்படுத்தும் வகையில் 1972-ம் அண்டு அவரது மறைவுக்குப் பிறகு தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஹநாகை காயிதெ மில்லத்| மாவட்டம் என பெயரிட்டது. பின்னர் 1997-ம் ஆண்டு சாதி, மதத்தின் பெயரால் வன்முறை தலையெடுத்ததையடுதது மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்து கழகங்களுக்கு சூட்டப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டன. அப்போது காயிதெ மில்லத் பெயரும் நீக்கப்பட்டது.
அவரது பணிகளை கவுரவப்படுத்தும் வகையில் தி.மு.க. அரசு காயிதெ மில்லத்திற்கு மணிமண்டபம் அமைக்க நிலம் ஒதுக்கி உத்தரவிட்டது.
மேலும், தமிழ்நாட்டில் பல கல்லூரிகளுக்கு காயிதெ மில்லத் பெயர் சூட்டப்பட்டது.
மறைவு
1972-ம் ஆண்டு மார்ச் மாதம் காயிதெ மில்லத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அவரைதிராவிடக் கழகத் தலைவர் பெரியார், அப்போதைய முதல்வர் கலைஞர், அமைச்சர் சாதிக் பாட்சா, தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் ஆகியோர் அவரை பார்த்தனர். 5-ம் தேதி அதிகாலை 1.15 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. மறைந்தபோது காயிதெ மில்லத்துக்கு 76 வயது ஆகும். பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் ராயப்பேட்டையில் உள்ள கல்லூரி கலையரங்கில் வைக்கப்பட்டது.
முதல்வர் கலைஞர், அமைச்சர் நெடுஞ்செழியின், என்.வி. நடராசன், சாதிக் பாட்சா, தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், மாதவன், சத்தியவாணிமுத்து, ராசாராம், மன்னை நாராயண சாமி, ராமச்சந்திரன், ஓ.பி. ராமன் மற்றும் ஏராளமான தலைவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் காமராஜர், மேல்சபை தலைவர் சிற்றரசு, மா.பொ. சிவஞானம், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், நீதிபதி இஸ்மாயில், ராஜாராம் நாயுடு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம் பெசன்ட் ரோடு வழியாக திருவல்லிக்கேணி சாலையில் உள்ள வாலாஜா மஸ்ஜிதை அடைந்தது. அங்கு இஸ்லாமிய முறைப்பட அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இஸ்லாமிய சமுதாயத்திற்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்திற்கும், மறக்க முடியாத தலைவராக விளங்கியவர் காயிதெ மில்லத் ஆவார்.
(நன்றி : மாலைமுரசு, சென்னை 05-06-2010)

Tuesday, June 1, 2010

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் வாணியம்பாடியில் ரூ.11 லட்சத்தில் இரு உயர் கோபுர மின்விளக்குகள் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., தொடங்கி வைத்தார்

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் வாணியம்பாடியில் ரூ.11 லட்சத்தில் இரு உயர் கோபுர மின்விளக்குகள் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., தொடங்கி வைத்தார்


வாணியம்பாடி, மே.25-

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் தனது தொகுதி பாராளுமன்ற நிதியிலி ருந்து வாணியம்பாடி நகரம் 23.வது வார்டுக்கு ரூபாய் 11 லட்சம் மதிப் பீட்டில் இரண்டு உயர் கோபுர மின் விளக்கு அமைத்து கொடுத்தார்.

இதன் திறப்பு விழா காதர்பேட்டை மஸ்ஜித் அருகிலும், ஜின்னா சாலை யும், பி.ஜே.என். சாலையும் (ஜின்னாபாலம்) இணையும் இடத்திலும் நடைபெற் றது.

இந்த விழாவில் வாணி யம்பாடி நகராட்சி தலைவர் சிவாஜி, வாணி யம்பாடி சட்டமன்ற உறுப்பினர் எச். அப்துல் பாசித், நகராட்சி துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி. பாருக், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் எஸ்.டி. நிசார் அஹமது மற்றும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா வில் கலந்து கொண்டவர் களை 23-வது வார்டு கவுன் சிலர் என். முஹம்மது நயீம் வரவேற்றார்.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துர் ரஹ்மான் விழாவில் பங் கேற்று இரண்டு உயர் கோபுர மின்விளக்குகளை யும் இயக்கி வைத்தார்.

மத்திய - மாநில அரசுகளின் சிறுபான்மை நலத்திட்டங்களை வலியுறுத்தி...........

மத்திய - மாநில அரசுகளின் சிறுபான்மை நலத்திட்டங்களை வலியுறுத்தி

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில்

விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்

பள்ளப்பட்டியில் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் பேட்டி


அரவக்குறிச்சி, மே 20-

காயிதே மில்லத் 115-வது பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்டம், பள்ள பட்டியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில், கல்வி விழிப்புணர்வு மாநாடு வருகிற ஜூன் மாதம் 9-ம் தேதி நடைபெற உள்ளது என்றார் அக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர்.

இந்த மாநாடு தொடர் பான ஆலோசனைக் கூட் டம் பள்ளபட்டியில் கட்சியின் மாவட்டத் தலைவர் டி.ஏ.எம்.முபாக் பாட்சா தலைமையில் புதன்கிழமை நடைபெற் றது.

ஆலோசனைக் கூட்டத் திற்குப் பிறகு முஹம்மது அப+பக்கர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி:

மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி யுடனும், மாநிலத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க. வுடனும் தோழமையுடன் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயல்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல் பட்டு வருகின்றன.

இதன் காரணமாக, சிறுபான்மையினர் நலத் திட்டங்களுக்காக கடந்த ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டிருந்தது. நிக ழாண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில், சிறுபான் மையினர் நலன் கருதி ரூ. 2600 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும்.

மேலும்,இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கட்சியின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு சிறுபான் மையினர் நல அமைச்சகம் ஏற்படுத்திக் கொடுத்துள் ளது பாராட்டக்குரியது.

இந்த அமைச்சகம் மூலம் சிறுபான்மையின ரின் நல்வாழ்வுக்காக கல்வி, பொருளாதாரம் என அனைத்து நிலைகளிலும் இஸ்லாமியர்கள் உயர் வான நிலை அடைய பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இஸ்லா மியர்களின் உணர்வு களுக்கு மதிப்பு அளித்து, சிறுபான்மையினர் நல ஆணையத்திற்கு அரசு சட்டப்ப+ர்வமான அங்கீ காரம் அளித்துள்ளது. சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு, தமிழ்நாட் டில் பொருளாதார மேம் பாட்டு கழகம் சார்பில், சிறுபான்மையின மக் களின் மேம்பாட்டுக்காக கல்விக்கான உதவிகள், சிறுதொழில், மகளிர் சுய உதவிக் குழு என பல்வேறு நிலைகளில் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத் திற்கு மத்திய, மாநில அரசுகள் உறுதுணையாக இருந்து வருகின்றன.

இதுபோன்ற திட்டங் கள் மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும் என்பதற்காக,இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில், விழிப் புணர்வுப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின் றன.

வருகிற ஜூன் 9-ம் தேதி இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனர் தலைவர் காயிதே மில்லத் தின் 115-வது பிறந்த நாளை, கல்வி விழிப்புணர்வு மாநாடாக பள்ளபட்டி யில் நடத்த உள்ளோம். இதில், கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய ரயில்வே இணை அமைச் சருமான இ. அஹமது, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மாநாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெறுகின்றது.

இந்த மாநாட்டில் சமச்சீர் கல்வி முறையால் சிறுபான்மை மக்களுக்கு ஏற்படும் ஐயப்பாடுகளை சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம். உருது, தெலுங்கு, மலை யாளம், கன்னடம் ஆகிய மொழிகளை கற்கும் சமு தாயத்தினரையும் பாதிக் காத வகையில் அரசை வலியுறுத்தினோம். கட்சி யின் கரூர் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் தேர்வு ஜூன் 9-ம் தேதி நடை பெறும். ஜூலை மாதம் மாநிலப் பொறுப்பாளர் கள் தேர்வு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, வருகிற அக்டோபர் மாதம் சென் னையில் கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் கலைஞர் கலந்து கொள்கிறார். அவருக்கு இந்த மாநாட்டில் நல்லி ணக்க நாயகர் விருது வழங்கப்பட உள்ளது.

மேலும், வருகிற சட்டப் பேரவை தேர்தலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கட்சி திமுக கூட்டணியில் தொடரும் என்றார் அவர்.

பேட்டியின் போது, அரவக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப் பினர் எம்.ஏ.கலீலுர் ரஹ் மான், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் டி.எம்.ஏ. முபாரக் பாட்சா, மாவட்டச் செயலாளர் மஹப+ப் அலி, தேனி மாவட்ட துணைச் செயலாளர் நசீர் அகமது, பள்ளபட்டி நகரத் தலை வர் கே.ஏ கமால் பாட்சா, செயலாளர் வி.ஏ. அபுதா ஹீர், மாவட்டப் பிரதிநிதி எஸ்.டி.எம். புர்கானுல் லாஹ், நகரத் துணைச் செயலாளர் வி.எம். முகம்மது இப்ராஹீம், என்.எஸ். லியாகத் அலி உள்ளிட்டோர் உடனிருந் தனர்.



கல்வி விழிப்புணர்வு மாநாடு வரவேற்பு குழு கூட்டம்

பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அப+பக்கர் பிறைக்கொடி ஏற்றி மாநாட்டு பணிகளை துவக்கி வைத்தார்


பள்ளப்பட்டி, மே.21-

இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் நடத்தும் கல்வி விழிப்புணர்வு மாநாடு வரவேற்புக் குழு கூட்டத் தில் கலந்து கொண்டு பச்சிளம் பிறைக்கொடியை ஏற்றி வைத்து மாநாட்டு பணிகளை துவக்கி வைத் தார் மாநில பொதுச் செய லாளர் கே.ஏ.எம். முஹம் மது அப+பக்கர்.

காயிதெ மில்லத் 115-வது பிறந்த நாள் விழா மற்றும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு வரும் ஜூன் 9ம் தேதி பள்ளப்பட்டி மக்கள் மன்ற திருமண கூடத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டுப் பணிகளின் துவக்க நிகழ்வாக கடந்த 19.5.2010 புதன் கிழமை காலை 10 மணிக்கு மாநாட்டு வரவேற்பு குழு தலைவரும் அரவை சட்ட மன்ற உறுப்பினருமான எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் முன்னிலையில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர் மாவட்டத் தலைமையகத் தில் பச்சிளம் பிறைக் கொடி ஏற்றி மாநாட்டுப் பணிகளை துவக்கி வைத் தார்.

பள்ளப்பட்டி ஹாஜி எஸ்.எம். அப்துல் ஜப்பார் இல்லத்தில் மாநாட்டு வரவேற்புக் குழு கூட்டம் நடைபெற்றது. வாங்கல் நக்காதி ஹஜ்ரத் கிராஅத் ஓதினார். கரூர் மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் மௌலவி டி.எம்.ஏ. முபாரக் பாஷா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.ஏ. மஹப+ப் அலி வர வேற்புரையாற்றினார். மாநாட்டு வரவேற்புகுழு தலைவர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் எம்.எல்.ஏ., கூட் டத்தின் நோக்கத்தை விரி வாகப் பேசி மாநாட்டின் நடைமுறைகளையும் விளக்கிப் பேசினார்.

மாநிலப் பொதுச் செய லாளர் கே.ஏ.எம். முஹம் மது அப+பக்கர் மாநாட்டை எப்படி நடத்த வேண்டும் என்ற விபரங் களையும் ஆலோசனை களையும் வழங்கி விரிவாக பேசினார். நிறைவாக மாநாட்டின் வேலைகளை பல குழுக்கள் அமைத்து வேலைகளை பகிர்ந்து கொள்வது என்று தீர்மா னிக்கப்பட்டது.

அமைக்கப்பட்ட

குழுக்களின் விபரம்

வரவேற்புகுழு, மாநாட்டு அரங்க அமைப்பு குழு, உணவு தயாரிப்பு மற்றும் பரிமா றும் குழு, காவல்துறை-அரசு துறை- மீடியா ஒருங் கிணைப்பு குழு, தகவல் தொடர்பு குழு, அண்டை மாவட்ட அழைப்பு குழு, நிதிக்குழு, தொண்டர் அணி ஒருங்கிணைப்புக் குழு, தலைவர்கள் உப சரிப்பு குழு, மகளிர் அணி ஒருங்கிணைப்புக் குழு ஆகிய குழுக்கள் அமைத்து தலைவர்கள், பொறுப்பா ளர்கள் நியமிக்கப்பட்ட னர்.

புதிதாக தேர்வு செய்யப் பட்ட பள்ளப்பட்டி, கேர்நகர், அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், கரூர், பெரியகுளத்துப் பாளை யம், வாங்கல், வெங்கமேடு, குருணிகுளத்துப்பட்டி, சிந்தாமணிப்பட்டி, மயி லம்பட்டி, தோகைமலை, நெய்தலூர், ஈசந்தம், ஜமீன் ஆத்தூர், குளித்தலை ஆகிய முஸ்லிம் லீக் பிரைமரி தலைவர்களும் செயலாளர் களும் மற்றும் மாநாட்டு வரவேற்பு குழு உறுப் பினர்களும் கலந்து கொண் டனர்.

சிறப்பு விருந்தினர் களாக திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் அல்தாப் உசேன், தேனி மாவட்ட துணைச் செய லாளர் அப்துல் நசீர் உள் ளிட்டோர் கலந்து கொண் டனர். திருச்சி மண்டல அமைப்பாளர் காஜா மைதீன் கூறினார்.



இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாபெரும் எழுச்சி

தேனி மாவட்ட சுற்றுப்பயணத்தில் பேராசிரியருக்கு உற்சாக வரவேற்பு



இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேனி மாவட்டத்தில் மாபெரும் எழுச்சி பெற்றுள்ளது. அம் மாவட்டத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஊர்கள்தோறும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

தேவதானப்பட்டி

6-ம் தேதி காலை தேவதானப்பட்டியில் நகர முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் லத்தீப் தலைமையில் முஸ்லிம் லீகர்களும், ஜமாஅத்தார்களும் வரவேற்றனர். பேராசிரியருடன் தென் சென்னை மாவட்டத் தலைவர் கே.பி. இஸ்மத் பாட்சா, தேனி மாவட்டத் தலைவர் எம். சாகுல் ஹமீது, செயலாளர் ஏ.எம். சாயபு, துணைத் தலைவர் எம். எஸ். மீரா மைதீன், பொருளாளர் எஸ். இமாம், துணைச்செயலாளர் ஆர்.எம். அப்துல் நஸீர், துணைச் செயலாளர் அப்துல் சமது, நகரத் துணைத் தலைவர் முஹம்மது அனீபா, பொருளாளர் அப்துல் காதர், மாணவர் அணி அமைப்பாளர் அப்துல் பாசித், இளைஞர் அணி அப்துல் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் லீகர்களும் உடன் சென்று பொம்மிநாயக்கன்பட்டி நகரத் தலைவர் சையது அபுதாஹிர், செயலாளர் பிச்சைக்கனி, பொருளாளர் மீரான் மைதீன், முன்னாள் தலைவர்கள் மைதீன் பிச்சை, முஹம்மது அனிபா, மூத்த முஸ்லிம் லீகர் அப்துல் லத்தீப் மற்றும் கூடிய ஜமாஅத்தார்களின் வரவேற்புடன் பிறைக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

உடன் நடைபெற்ற கூட்டத்தில் பேராசிரியர் பேசும்போது முஸ்லிம் லீக் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயங்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறது. மத்திய ஆட்சியில் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் அமைச்சராக பொறுப்பு வகிப்பதுடன் கூட்டணியில் நாம் இருப்பதால் சமுதாயத்தின் மேம் பாட்டுக்கு நீதியரசர் ராஜேந்திர சச்சார், நீதியரசர், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்கள் அமைக்கப்பட்டன. இடஒதுக்கீடும், கல்வி உதவித் தொகைகளும், சிறுபான்மை யினர்களுக்காக வழங்கப்படுவதற்கு வழிவகை செய்யப்பட்டது. ரோட்டுக்கும், கோர்ட்டுக்கும் போகாது முஸ்லிம் லீக் தமிழக கோட்டைக்கும, டெல்லி பாராளுமன்றத்திலும் கலந்து சமுதாய தேவைகளை பெற்றுத் தருவதில் ஒருபோதும் தயங்கியதும் இல்லை. சுணங்கியதும் இல்லை. சமுதாயத்தினர் ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபடுவதால் மேலும் சமுதாயம் பெரும் பயன்பெறும் என்பதில் சந்தேகமில்லை. முஸ்லிம் லீகை பலப்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆண்டிப்பட்டி

அடுத்ததாக ஆண்டிப்பட்டி ஜமாஅத் சார்பாக வரவேற்பும், பிறைக்கொடி ஏற்றமும் பள்ளிவாசல் முன்பாக நடைபெற்றது. ஜமாஅத் தலைவரும், முஸ்லிம் லீக் தலைவருமான மக்தூம், செயலாளர் நாகூர் மீரான், பொருளாளர் முஹம்மது அலி ஜின்னா, மாவட்டப் பிரதிநிதி ஹ{மாய+ன் கபீர், இளைஞர் அணி ஆகியோர்களுடன் பள்ளியில் கலந்துரையாடல் நடைபெற்றது.

நகரத் தலைவர் மக்தூம் பேசும்போது, எங்கள் ஜமாஅத்துக்கான கபரஸ்தான் இடம் மாவட்ட முஸ்லிம் லீகின் தொடர்முயற்சியால் அரசாங்கத்திடம் பெறப்பட்டு அதற்கு சுற்றுச்சுவர் கட்டிட ஜே.எம். ஹாரூண் எம்.பி.யிடமும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. மூன்று லட்சம் பெற்று ஜமாஅத்தும் ரூ. இரண்டு லட்சம் போட்டும், கட்டிட பணி நிறைவுபெற சுமார் ரூ. இரண்டு லட்சம் அளவிற்கு குறையுள்ளது. ஆகவே, தாங்கள் அதனை பார்வையிட வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதை ஏற்று அனைவரும் பார்வையிடச் சென்றோம்.

கட்டிடத்தை பார்வையிட்ட தலைவர் காண்டிராக்டர் சாகுல் ஹமீதுவை பாராட்டினார். மேலும் குறையுள்ள கட்டிடப் பணி தொடர்பான திட்ட மதிப்பை மாநிலத் தலைமைக்கு அனுப்பும்படி கூறினார். பின்னர் தேனி புதுப்பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் பொன்ராஜ் கொந்தாளம் தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்று ஜும் ஆ பேரூரை நிகழ்த்தி னார்.

தனது உரையில் முஸ்லிம் லீக் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. கண்ணியத்தென்றல் காயிதெ மில்லத் அவர்களின் காலம் தொட்டு வந்த தலைவர்களைப் பின்பற்றி, அவர்கள் காட்டி வந்த வழியில் அமைதியாக சக சமுதாயங்களுடன் சௌஜன்யமாக நமக்கென உள்ள ஷரீஅத் சட்டங்களுக்கு ஊறு ஏற்படாமல், ஜனநாயக நடை முறைகளை பின்பற்றி அறவழியில் அறப்பணி ஆற்றி வரும் பேரியக்கம் தான் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், அரசியலும் சமுதாயத்திற்கு மிகத் தேவையென்று ஜமாஅத் தலைவர் குறிப்பிட்டாலும் கூட அதுபற்றி திருக்குர்ஆனில் கூறப்பட் டுள்ளபடி யார் நற்செயல்கள் புரிந்து இறைப்பொருத்தத்தை பெற்றோர்களோ அவர்களே அழகிய முஸ்லிம் என்று கூறி, ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்றோ, எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டுமென்றோ செயல்பட்டு வரவில்லை. வாழ்க்கை முறையில் பேணப்பட்டு வரும் ஷரீஅத் சட்டங்களை தொடர்ந்து பின்பற்றி வருவதற்கு இடைய+று ஏற்படாவண்ணம் பாதுகாப்பது, சகோதர சமுதாயங்களுடன் இணக்கமாக இருப்பது, பாராளுமன்ற, சட்டமன்றங்களில் நமது பிரதிநிதிகள்தான் ஷரீஅத் பற்றியும், சமுதாயம் பற்றியும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

தாய்ச்சபையை மேலும் பலப்படுத்துவதால் கூடுதல் நன்மைகளை பெற முடியும். மேலும் 1150 மார்க்குகளுக்கு மேல் பெற்று கல்லூரிகளில் இடம் கிடைத்தும், படிக்க வசதி குறைந்தவர்கள் மாவட்ட முஸ்லிம் லீகை அணுகினால் அவர்களின் கல்விக்கு தாய்ச்சபை உதவி செய்யும் என்றார். தொழுகைக்குப் பின் தேனி நகர நிர்வாகிகள் தலைவர் திவான் மைதீன், செயலாளர் டாக்டர் பி.கே. ஜவஹர்தீன், பொருளாளர் கே.டி.சி. அப்துல் ரஹீம், முன்னாள் தலைவர் கே.எம். சம்சுதீன், செயலாளர் ஜம்கி பாட்சா, பொருளாளர் ஷர்புதீன், பி.சி. பட்டி நிர்வாகிகள் காஜா கமாலுதீன், முஹம்மது அப்துல் காதர், அப்பாஸ், சாகுல் ஹமீது, மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகளை பாராட்டி பேசி உங்களின் சேவைகளை சமுதாயம் பெரிதும் எதிர் பார்க்கிறது. மத்திய, மாநில அரசுகளின் உதவிகளை கல்வி உதவித் தொகை விபரங்களை தெரிவிப்பதுடன் அனைத்து உதவிகளையும் சமுதாயம் பெற்றிட பாடுபட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

சீலையம்பட்டி

இதன்பின் சீலையம்பட்டியில் முஸ்லிம் லீக் கொடியேற்றி வைத்து நகரத் தலைவர் நயினார் தலைமையில் ஜமாஅத் நிர்வாகிகள் வரவேற்று பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று காண்பித்து 4 வழிச் சாலையால் இருபுறமும் ஏராளமான வீடுகளும், பள்ளிவாசலின் முன்பகுதியும் பாதிக்கப்படுகிறது. இதற்கு மாற்று வழிப்பாதை வருவதற்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார்கள். தலைவரும் ஆவன செய்வதாக கூறினார். பின்னர் சின்னமனூரில் சாமிகுளம் பகுதி பள்ளிவாசலுக்கும் அன்னை கதீஜா (ரலி) அரபிப் பாடசாலையில் நடைபெற்ற சுன்னத் வைபவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அரசு மருத்துவர் டாக்டர் சையது சுல்தான் இப்ராஹீம், ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சாகுல் ஹமீது, மௌலவி முஹம்மது ஆதம், அன்வர்தீன், ஜமாஅத் கமிட்டி நிர்வாகிகள் சுல்தான் மைதீன், ஜாஹீர் உசைன், முஹம்மது பாருக், மஹப+ப் அலி, முஹம்மது ருக்மான் மற்றும் ஸ்கீம் கமிட்டி நிர்வாகிகளும் தலைவரை வரவேற்று உரையாற்றுமாறு கேட்டுக் கொண்டனர்.

தலைவர் பேசும்போது, இஸ்லாம் சுன்னத் ஆக்கிவைத்த இந்த சுன்னத் கல்யாணம் என்பது முஸ்லிம்கள் மட்டுமில்லாது, நமது நாட்டிலே தேவர் சமுதாயத்தினர்களும் செய்து வருகின்றனர். பிரபல பத்திரிகையாளர் குஷ்வந்சிங் கூட விஞ்ஞானரீதியாக இச் செயல் பால்வினை நோய்கள், புதுப்புது நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. இதை அனைவரும் செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார். சென்னையில் கூட முஸ்லிம் லீக் சார்பாக 200 குழந்தை களுக்கு செய்து வைக்கப்பட்டது. மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் லீகினரும் சுன்னத் வைபவங்களையும், கல்விப் பணிகளையும் செய்து வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பின்னர் உத்தமபாளையம் பைபாஸ் பள்ளிவாசல் முன்பாக தலைவர் கொடியேற்றி வைத்து பின்னர் க. புதுப்பட்டி ஜமாஅத் சார்பாக பள்ளிவாசல் தலைவர் எஸ். முஹம்மது நயினார் வரவேற்று உபசரித்தார்.

பாளையம் டி.ஆர். காலனியில் இயங்கி வரும் அல்ஹிக்மா பெண்கள் அரபிக் கல்லூரியும், ஆண்கள் மெட்ரிகுலேஷன் பள்ளியும் நடத்தி வரும் நாடறிந்த பேச்சாளர் கம்பம் பி.ஏ. பீர் முஹம்மது பாக்கவி அவர்களின் கல்லூரிக்கு தலைவரையும், உடன் சென்றவர்களையும் வருகை தரக் கேட்டுக் கொண்டதன்படி கலந்து கொண்டோம். வரவேற்று பேசிய பாக்கவி, நானும் பேராசிரியரும் ஏராளமான ஊர்களில் மீலாது விழாக்களில் கலந்துகொண்டதையும், பால்ய நினைவு களையும் விளக்கிப் பேசினார். தலைவர் பேசும் போhது பாக்கவி அவர்கள் இங்கு இருப்பார் என்றும் சந்திப்போம் என்றும் நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. இங்கே தான் இருக்கிறார் என்று மாவட்டத் தலைவர் சொன்னபோது கூட கல்லூரிக்கு வருவதற்காக சொல்கிறார் கள் என்று தான் நினைத்தேன். வெளிநாடுகளுக்கு சென்று வந்த நிலை மாறி இன்று வெளிநாட்டிலுள்ளவர்களையும் அழைக்கக் கூடியவர்களாக நாம் மாறிவிட்டோம். பாக்கவி அவர்களின் சிறப்பான கல்விச் சேவையை முழு மனதார பாராட்டுகிறேன் என்று பேசிய பின் நினைவுப் பரிசாக புத்தகங்களும், நறுமணமும் கொடுத்து, தேநீர் விருந்தும் கொடுத்தும் அனைவiயும் உபசரித்தார்.

கோம்பை

பின்னர் கோம்பை பள்ளிவாசலில் ஜமாஅத் தலைவர் முஹைதீன் அப்துல் காதர், செயலாளர் ஏ. அப்துல் ரஜாக் மற்றும் ஜமாஅத்தார்களின் வரவேற்பை ஏற்று மக்ரிப் தொழுது விட்டு தலைவர் பேசும் போது, ஆட்சியை பிடிப்பதற்காக முஸ்லிம் லீக் செயல்படவில்i. நமது ஷரீஅத்தை, தனித் தன்மையை பாதுகாக்கவே காயிதெ மில்லத் காலந்தொட்டு இணக்கமானவர்களுடன் கூட்டணி வைத்து நாமும், நமது உரிமைகளை பெற்று வருகிறோம். திருமணப் பதிவுச் சட்டம் வந்தபோது கூட ரோட்டிலே நின்று நாம் பேசவில்லை. உரியவர்களை உரிய முறையில் சந்தித்து எடுத்துக் கூறினோம். தமிழக முதல்வரும் ஏற்று உரிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்கள். அது போன்று சிறுபான்மை கமிஷனுக்கு சட்ட அந்தஸ்து வழங்கும்படி கேட்டுக் கொண்டோம். உடனடி அறிவிப்பை அரசாங்கம் வெளியிட் டுள்ளது. இது போன்று அகில இந்திய அளவிலும், தமிழகத் திலும் முஸ்லிம் லீக் அறப்பணி சிறப்பாக ஆற்றி வருகிறது. கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியில் இடம் கிடைத்து உண்மையிலேயே வசதி குறைந்தவர்கள் என ஜமாஅத் சான்றளிக்கும் பட்சத்தில் மாவட்ட முஸ்லிம் லீக் மூலமாக தெரிவித்தால் மாநில முஸ்லிம் லீக் தேவையான உதவிகளைச் செய்யும் என்றார்.

சுற்றுப்புற ஊர்களான தேவாரம் முஸ்லிம் லீக் தலைவர் அபுபக்கர், கரையான்பட்டி (எ) மல்லிங்காபுரம் அப்துல் ரஜாக், போடி காதர் ஒலி, கோம்பை பிரைமரி தலைவர் ஜெய்னுலாப் தீன் மற்றும் முஸ்லிம் லீகர்களும், ஜமாஅத்தார்களும் கலந்து கொண்டார்கள்.

கம்பம்

பின்னர் கம்பம் கல்வத்து நாயகம் தைக்கா அருகில் திரண்டிருந்த முஸ்லிம் லீகர்களும், ஜமாஅத்தார்களும் வரவேற்று ஊர்வலமாக சென்று புதுப்பள்ளிவாசல் அருகில் பிறைக்கொடியை ஏற்றி வைத்து உடனிருந்த நகரத் தலைவர் ஐ. முஹம்மது ஷரீப், செயலாளர் ஹனபி, இளைஞர் அணி ஜுனைது, அமானுல்லா, கமாலுதீன், மிர்ஜா இஸ்மாயில், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஷம்ஷ{ல் ஹ{தா, அப்துல் ரஜாக், அஜ்மல், ராஜிக் சேட், ஷாஜஹான், வர்த்தகர் அணி ஷேக் ஒலி, ஜமாஅத் தலைவர் கே.எம். அப்பாஸ், பொருளாளர் அப்பாஸ் மந்திரி, சாகுல் ஹமீது, சுரபி ஷெரீப், தரகு சாகுல் ஹமீது ஆகியோர்களுடன் உரையாடியபின் மாநில சிந்தனையாளர் அணி அமைப்பாளர் அப்துல் ரவ+ப் சாலிஹ் அவர்களின் அறக்கட்டளைக்கு சென்று உரையாடி விட்டு இறுதி நிகழ்ச்சியாக கூடலூர் சென்றார். கூடலூர் ஜமாஅத் தலைவர் ஷேக் அப்துல் காதர், முஸ்லிம் லீக் தலைவர் முஹம்மது ஹபீப், பொருளாளர் அமீர் அமானுல்லாஹ், செயலாளர் கே.எச். அமீர் சுல்தான் மற்றும் ஜமாஅத்தார்களும் வரவேற்று பள்ளிவாசல் அருகில் பிறைக்கொடி ஏற்றி வைத்து உடனிருந்தோரிடம் உரையாடி விடைபெற்ற முதல் நாளின் சூறாவளி சுற்றுப் பயண நிகழ்ச்சி முடிந்தது.

வைகை அணையில்...

மறுநாள் 8-ம் தேதி காலை 11.00 மணியளவில் வைகை அணையில் செயல்பட்டு வரும் ஜாமிஆவுல் அஷ்ரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு ஆலிம் பட்டமளிக்கும் விழாவும், பெரியகுளம் - மதுரை நெடுஞ்சாலை இ.புதுப்பட்டி அருகில் கல்லூரி கட்டிட அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. அரபிக் கல்லூரி பேராசிரியர் பி.எஸ்.பி. ஜெய்னுல் ஆபிதீன், முஹம்மதுகான் பாகவி, முன்னாள் அமைச்சர் ராஜா முஹம்மது, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம். ஹாரூண் ஆகியோர் கலந்து கொண்ட இந்த விழாவில் பேராசிரியர் வாழ்த்துரை வழங்கினார். பெரியகுளம் பெண்கள் அரபிக் கல்லூரியின் தாளாளரும், தேனி மாவட்ட முஸ்லிம் லீக் ஆலிம்களின் அணி அமைப்பாளருமான சையது முஹம்மது சாதிக் கல்லூரிக்கு வருகை தந்தார். அங்கு கல்வி பயிலும் மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து பெண்களின் கல்வி மிக அவசியம். தலைமுறை தலைமுறையாக உயர் கல்வி பெற பேருதவியாக இருக்கும் சட்டமன்ற உறுப்பின ராக பெண்களை முஸ்லிம் லீக் போட்டியிட வைக்குமா? என்ற கேள்விக்கு நிச்சயமாக கூடுதல் இடம் பெற திட்டமிட்டுள் ளோம். இன்ஷா அல்லாஹ் அதில் அவசியம் முஸ்லிம் பெண் இடம் பெறுவார் என உறுதியளித்தார்.

மாலை பெரியகுளம் வடகரை பள்ளிவாசல் அருகிலும், தென்கரை பள்ளிவாசல் அருகிலும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா நடைபெற்றது. இவ் விழாவிற்கு நகரத் தலைவர் எம். ஜான்பா தலைமை தாங்கினார். தலைவர் பேராசிரியரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கெங்குவார்பட்டி

பின்னர் கெங்குவார்பட்டியில் முஸ்லிம் லீக் கொடியேற்றி வைத்து மக்ரிப் தொழுகைக்குப் பின் உரையாற்றும் போது முஸ்லிம் லீக் தாய்ச்சபை என்பதை விளக்கும் போது போர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் செய்து ரோட்டுக்கும், கோர்ட்டுக்கும் சென்றவர்கள் பின் கைதிகளானவுடன் அவர்களை யாரும் கண்டு கொள்ளவில்லை. சிறைவாசி களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கியது டன் அவர்களை வெளிக் கொணர்வதில் தாய்ச்சபை தான் தொடர்ந்து முயற்சித்து ஏராளமானவர்களின் விடுதலைக்கு பாடுபட்டது முஸ்லிம் லீக் தான். மீதமுள்ள சிறைவாசிகளின் விடுதலைக்கும் தொடர்ந்து பாடுபடும். சமூக நல்லிணக்க விருதுகளை சகோதர சமுதாயத்திற்கு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. ஆகவே, சமுதாய வளர்ச்சிக்கும், மேம் பாட்டுக்கும் தாய்ச்சபையின் வளர்ச்சியுடன் வலுவும் உறு துணையாக அமையும்.

ஆகவே, அனைவரும் முஸ்லிம் லீகை பலப்படுத்த கேட்டுக் கொண்டார். நகரத் தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் ரஹ்மான் சேட், பொருளாளர் நாசர், ஜி. கல்லுப் பட்டி, தலைவர் இஸ்மாயில், இமாம் ஜாபர் சாதிக் ஆலிம் மற்றும் ஜமாஅத்தார்களிடம் விடைபெற்று 2-ம் நாள் சூறாவளி சுற்றுப் பயண நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இயக்கத்தின் வளர்ச்சியும், செயல்பாடும் திருப்தியாக இருக்கிறது என பேராசிரியர் பெருமிதம் அடைய, பிரியா விடையாக மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் நாரே தக்பீர், முஸ்லிம் லீக் ஜிந்தாபாத் முழக்கத்துடன் வழியனுப்பி வைத்தார்கள்.

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளோரை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் - எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., வேண்டுகோள்

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளோரை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் - எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., வேண்டுகோள்

கோவை உக்கடத்தில் உள்ள லாரிபேட்டை மைதானத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம் மாவட் டத் தலைவர் எஸ்.எம். காசிம் தலைமை யில் மாநிலத் துணைத் தலைவர் எல்.எம். அப்துல் ஜலீல் கோவை மண்டல இளை ஞர் அணி அமைப் பாளர் பி. முஹம்மது பஷீர், மாநகராட்சி உறுப்பினர் மெஹருன்னிசா சாகுல் ஹமீது ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது. மாநகரத் தலைவர் டி.ஏ. அப்துல் நாசர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை அப்துல் மஜீத், கோவை மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம். உசைன், செயலாளர் ஏ.என். அசன்பாபு, திருப்ப+ர் மாவட்டத் தலைவர் பி. ஹம்சா, செயலாளர் மங்களம் அக்பர் அலி ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியில் சிறப்புரையாற்றிய காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங் கிணைப்பாளர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., குறிப்பிட்டதாவது-

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

கோவையில் ஜூன் மாதம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மிகச் சிறப்பான முறையில் நடைபெற இருக்கிறது. இம் மாநாட்டை முஸ்லிம் சமுதாயம் வாழ்த்தி வர வேற்கிறது. இம் மாநாட்டிற்கான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கி வரும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இம் மாநாட்டில் சமுதாயத்தினர் பெருமளவில் பங்குபெற வேண்டுகோள் விடுத்து வருகிறது.
சரித்திரத்தில் மிகச் சிறந்த உலக மாநாடுகளில் ஒன்றாக நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிகழ்த்தப்பட உள்ளன. அந்த சிறப்புக்களில் ஒன்றாக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்து வரலாற்று அத்தியாயத்தை உருவாக்க வேண்டும் என தமிழக முதல்வர் முத்தமிழ் கலைஞரை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

யாரும் சிறை செல்வதற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் எந்த ஒரு கால கட்டத்திலும் காரணமாக இருந்ததில்லை. அதை ஊக்குவித்ததும் இல்லை. அப்படிப்பட்ட செயலை தூண்டிவிட்டதும் இல்லை. இன்று சிறையில் இருப்போர் யாருடைய தூண்டுதலால் அல்லது உணர்ச்சிவசத்துக்கு ஆளாகி சிறையில் இருக்கிறார்கள் என்பதை பார்க்காமல் அவர்களுடைய விடுதலைக்கு இன்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் குரல் கொடுக்கிறது அவசரப்பட்டு தூர நோக்கு பார்வையில்லாமல் எதிர்கால விளைவுகளை பற்றி சிந்திக்காமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று காரியங்களை செய்யக் கூடியவர்களின் அழைப்புகளில் தடுமாறி விழுந்து இன்று நிர்க்கதியாகி சிறைக் கொட்டடிகளில் தங்கள் காலக் கிரகத்தை அனுபவிப்பதோடு அவர்களுடைய குடும்பங்களையெல்லாம் சொல்லொணா துயரத்துக்கு ஆளாக்கிவிட்டார்கள்.
இந்த துன்பமும், துயரமும் தொடர் கதையாகிக் கொண்டே போகக்கூடாது என்பதற்காக சிறைவாசிகளுடைய விடுதலைக்கு தாய்ச்சபை குரல் கொடுத்தது. வரலாறு படைத்த இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாட்டில் கலைஞர் முன்னிலையில் நம் தலைவர் பேராசிரியர் முன்வைத்த கோரிக்கையின் காரணத்தால் ஆயிரத்து நானூறுக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் விடுதலை பெற்றனர். தற்போது 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆயுள் சிறைவாசிகளாக உள்ளனர். கருணையின் அடிப்படையில் அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக் கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
குணங்குடி ஹனீபா விடுதலை

13 ஆண்டு காலம் சிறையில் இருந்த குணங்குடி ஆர். ஹனீபா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட வேண்டும் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கோரிக்கை வைத்தது. தமிழக முதல்வர் கலைஞரையும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினையும், பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையிலான இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தூதுக்குழு சந்தித்தது. அவர்களும் சில சமிக்கைகளை தெரிவித்தார்கள். அந்த தகவல்கள் எல்லாம் குணங்குடி ஹனீபாவின் குடும்பத்தாருக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமையால் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்பு சில நாட்களில் வெளியாகும் குணங்குடி ஹனீபா உள்ளிட்டோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை எங்களைப் போல் தெரிந்து கொண்டவர்கள், தீர்ப்பு வெளியாகும் நாளுக்கு சில நாட்களுக்கு முன்னதாக நீதிமன்ற முற்றுகை என ஒரு போராட்டத்தை அறிவித்து விளம்பரத்தை தேடிக்கொண்டார்கள். விளம்பரத்தின் வெளிச்சமே இல்லாமல் அந்த விளம்பரத்தின் மூலம் சொந்த ஆதாயத்தை எதிர்பார்க்காமல் தாய்ச்சபை செயல் படுகின்ற போது விளம்பரத்தை மட்டுமே முன்னி லைப்படுத்தி வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் போராட்டத்தை நடத்துகிறார்கள் என்று சொன்னால் அதை என்ன சொல்வது?
நீதிமன்ற தீர்ப்பு கிடைப்பதற்கு நீதிமன்றம் முன்பு போராட்டம் நடத்துவது அர்த்தமற்ற ஒன்று என்று சாதாரண சாமானியர்கள் அறிவார்கள். அந்த ஆர்ப்பாட் டத்தை நடத்திய தலைவர்களுக்கும் இது தெரியும். ஆனால், மற்றவர்களை யெல்லாம் செயல்படா தவர்கள் என்றும், தாங்கள் மட்டும்தான் போராடக் கூடியவர்கள் என்றும் விளம்பரம் செய்வதற்காக இந்த விடுதலையை பயன் படுத்திக் கொண்டார்கள். எண்ணற்ற இளைஞர்கள் அநியாயமாக சிறை செல்வதற்கு யார் காரணம்? என்பதற்கும், அவர்கள் சிறை புகுந்ததால் யாருக்கு ஆதாயம் என்பதும் இந்த சமுதாயத்துக்கு நன்கு தெரிந்ததே.

சிறைவாசிகள் குடும்பம் சந்திப்பு

இன்று கோவை வந்த நான் சிறைவாசிகளுடைய குடும்பத்தாரை சந்தித்தேன். அவர்கள் கண்கலங்கிய காட்சி எங்கள் சகோதரன் வெளியின் வந்தால்தான் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என சிறை வாசிகளின் சகோதரிகள் செய்த உறுதி அவர்கள் படுகின்ற துயரங்கள் அனைத்தையும் நேரில் தெரிந்து கொண்டேன். அவர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு வந்தேன். ஆறுதல் கூறுவதுடன் எங்கள் பணி நின்று விடவில்லை. தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்து விட்ட வர்களின் நலனுக் கான இன்று நாங்கள் பாடுபடுகிறோம்.

ஆயுள் சிறைவாசியாக இருக்கும் இளைஞர் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து மிகுந்த சிரமத் தில் சிறையில் இருந்தார். அபுதாஹிர் என்று அந்த இளைஞருக்கு 3 பரோல் விடுப்புகளுக்கு நாங்கள் முயற்சி செய்தோம். பல சிறைவாசிகளுடைய பரோல் விடுப்புகளுக்கும் நாங்கள் முயற்சி செய்துள் ளோம். இவைகளையெல் லாம் சொல்லி விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சாதி அரசி யல் நடத்தக் கூடிய இயக் கம் அல்ல. இஸ்லாம் வழி நடத்துகின்ற மனித நேயம், சமூக நல்லிணக்கம், நம்மு டைய கலாச்சார தனித் தன்மை பாதுகாத்தல் இவைகளை லட்சியமாக கொண்டுதான் செயல்படு கிறது. மத துவேஷங்களை உருவாக்கக்கூடிய எதையும் நாங்கள் செய்வதில்லை. பேசுவதும் இல்லை. மத துவேஷத்தை வளர்க்கின்ற வகையில் முஸ்லிம்கள் கடையில் சாமான்கள் வாங்காதீர்கள் என்று ஒரு காலகட்டத்தில் சொல்லப் பட்டபோது கூட, அதற்கான பதிலை அவர்கள் பாணியில் சொல் லாமல் சகோதரத்துவத்தை வலியுறுத்தி நாம் பிரச்சாரம் செய்த காரணத்தால் அதனால் ஏற்பட்ட பலன் என்ன என்பது உங்களுக்குத் தெரியும்.

எனவே, உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் மனிதநேயத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கின்ற பணியில் நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை பலப்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு எம். அப்துர்ரஹ்மான் எம்.பி. உரையாற்றினார்.

ஆரம்பமாக குனிய முத்தூர் இமாம் அப்துல் ரஹ்மான் ஜமாலி இறை மறை ஓதினார். மாவட்ட துணைச் செயலாளர் ஏ.எம். இப்ராஹீம் நன்றி கூறினார்.