Sunday, November 28, 2010

பராக்.... பராக்.... (ஒ) பாமா விஜயம்..........-வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்

பராக்.... பராக்.... (ஒ) பாமா விஜயம்..........-வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்


வரவு எட்டணா! செலவு பத்தணா! அதிகம் இரண்டணா! கடைசியில் துந்தணா! என்ற பாடல் அறுபதுகளில் தமிழகத்தில் மிக பிரபல்யமாக இருந்தது. அது இன்றளவும்கூட ஊதாரித்தனமான செலவினங்களை குறிக்க மக்களால் பாடப்படுகிறது. `பாமா விஜயம்’ என்ற திரைப்படப் பாடல் அது. அந்த திரைப்படத்திலே ஒரு சாதாரண நடுத்தர குடும்பம் தான் கதையின் நாயகன். தங்களின் சொற்ப வருமானத்திலே, திட்டமிட்ட சிக்கனமான செலவுகளால், நிம்மதியான-அமைதியான வாழ்க்கையை ருசித்துக் கொண்டிருந்த அந்த குடும்பம், தங்கள் வீட்டின் பக்கத்து பங்களாவில் குடிவந்த பாமா என்ற திரைப்பட நடிகையுடன் நட்பு பேணுவதற்காக தங்களின் குடும்ப நிலையை கருத்தில் கொள்ளாமல், ஊதாரித்தனமாக ஆடம்பர செலவுகள் செய்து, அதனால் கடன்படுவதும், சொந்த சகோதரர் களும், குடும்பத் தலைவரும் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொள்வதும், வன்மம் பாராட்டவதும், உறவுகள் சிதைவும் மிக அற்புதமாக காட்டப்பட்ட திரைப்படம் தான் பாமா விஜயம். தெளிந்த நீரோடை போல் அமைதியாக சலசலத்து ஓடிக்கொண்டிருந்த குடும்பத்தை அந்த `பாமா விஜயம்’ - நாசமாக்கி சாக்கடையாக்கி விடும். இன்று அதேபோல நம் நாட்டின் `பாமா விஜயம்’ ….- ஆம், ….ஒபாமா விஜயம் நடந்து முடிந்துள்ளது. 3 நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கஅதிபர் பராக் ஒபாமா அவர்கள் இந்தியா வந்து சென்றுள்ளார். அவரின் வருகை உலகமெங்கம் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இதுவரை அமெரிக்க ஜனாதிபதிகள் எவருக்குமே செய்யப்படாத வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் அவரின் வருகையை ஒட்டி செய்யப்பட்டது. பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளான மும்பை தாஜ் ஓட்டலில் ஒபாமா தங்கினார். குழந்தைகளுடன் நடன மாடினார். பெருமுதலாளிகளுடன் கலந்துரையாடினார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். பறந்து சென்று விட்டார். அமெரிக்க அதிபரின் வருகைக்கு ஒருநாள் பாதுகாப்பு செலவு எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ.900 கோடி. 3 நாட்களுக்கான பாதுகாப்பு செலவு சுமார் ரூ.2,700 கோடி எனப்படுகிறது. இவர் வருவதற்கு ஒரு வாரம் முன்பாகவே வெள்ளை மாளிகை அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் என ஒரு பiயே மும்பை வந்திறங்கி விட்டது. அவர்கள் அனைத்து நவீன சாதனங் களும் பொருத்தப்பட்ட 13 நடுத்தர விமானங்கள், 3 அதி நவீன ஹெலிகாப்டர்கள், ஒரு கப்பல், 30 மோப்ப நாய்கள், ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் அதிநவீன கருவிகளை தம்முடன் கொண்டு வந்தனர். ஒபாமா தங்கும் மும்பை தாஜ் ஓட்டல் மற்றும் டெல்லி மவுரியா ஓட்டல்களை சுற்றியுள்ள அனைத்து கட்டிடங்களிலும் பாதுகாப்பு சோதனைகள் மிகத் தீவிர மாக நடத்தப்பட்டன. கட்டிடங்களின் கூரைகளில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டனர். வான்வழி தாக்குதல் ஏதும் நடந்தால் அதை முறியடிக்கத் தேவை யான நவீன கருவிகள் இக் கட்டிடங்களில் நிறுத்தப் பட்டன. சாட்டிலைட் கண்காணிப்பு மற்றும் அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறைகள் மும்பையிலும், டெல்லியிலும் நிறுவப்பட் டன. ஒபாமா சனிக்கிழமையன்று மும்பை வந்திறங்கிய போது அவருடன் சுமார் 3 ஆயிரம் பேர் வந்தனர். இவர்களில் வெள்ளை மாளிகை அதிகாரிகள், புலனாய்வு பிரிவினர், பாதுகாப்பு படையினர், பத்திரிகையாளர்கள், அமெரிக்க கம்பெனி அதிபர்கள் ஆகியோரும் அடங்குவர். ஒபாமா அவர்கள் அமெரிக்க வான்படை யின் ஏர்போர்ஸ் - 1 என்ற விமானத்தில் 40 விமானங்கள் புடைசூழ வந்திறங்கினார். இத்துடன் அதிநவீன கருவிகள் பொருந்திய இரண்டு ஜெட் விமானங்களும் வந்தன. குண்டு துளைக்காத கார்கள் ஆறும், ஒபாமாவின் உபயோகத்துக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு காரும் அவருடன் வந்திறங்கியது. அந்த காரில் இருந்தபடியே வெள்ளை மாளிகையுடன் உடனுக்குடன் தொடர்பு கொள்ளலாம். அமெரிக்காவின் அணு ஆயுதங்களை அதிபர் இயக்கக் கூடிய பொத்தானும் அந்த காரிலே வடிவமைக்கப்பட்டிருந்தது.அதிபரும் அவருடன் வந்தவர்களும் தங்க தாஜ் ஓட்டலிலும், மற்ற ஓட்டல்களிலும் 800 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.ஒபாமா குழுவினரின் வருகைக்கு அரை மணி நேரம் முன்னமே மும்பை வான் வழி மூடப்பட்டது. வேறு எந்த விமானமும் பறந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்திய கடற்படையும், விமானப்படையும் மும்பை கடல் பகுதியையும், வான் பகுதியையும் வலம் வந்தன. 34 போர்க் கப்பல்களும், ஒரு விமானம் தாங்கிக் கப்பலும் கடலோர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டன. அமெரிக்க அதிபரின் சிறப்பு பாதுகாப்பு படையினர், நம் நாட்டின் மிக உயர்ந்த பாதுகாப்பு பிரிவான என்.எஸ்.ஜி. கமாண்டோகள், துணை ராணுவப் படையினர், மாநில காவல் படை என நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டது. இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியிலே அதிபர் ஒபாமா முன்னிலையிலே அமெரிக்க முதலாளிகள். இந்திய அரசுடனும், இந்திய முதலாளிகளுடனும் பல்வேறு வியாபார ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டனர். இதுதான் ஒபாமா விஜயத்தின் முக்கிய நோக்கமே.இந்த வியாபார ஒப்பந்தங்களில் மிக முக்கியமான சிலவற்றை பார்ப்போம்.இந்திய விமானப் படைக்கு அமெரிக்க போயிங் நிறுவனம் போர் விமானங்களை விற்க 410 கோடி டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் அமெரிக்க போயிங் தொழிற்சாலையில் 22,160 அமெரிக்கர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகியுள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இந்தியன் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சிக்கு தேவையான தேஜாஸ் என்ற இலகு ரக போர் விமானத்தில் பொருத்தக்கூடிய எப்.414 என்னும் என்ஜின்கள் 107 வாங்க அமெரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனியிடம் ஒப்பதமாகியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 82 கோடி டாலர்கள். ஆகும். இதன் மூலம் சுமார் 4440 அமெரிக்கர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகும். இந்திய ரயில்வே துறைக்கு 1000 ரயில் என்ஜின்களை விற்க அமெரிக்காவின் ஜி.இ. ட்ரான்ஸ்போர்டேஷன் அண்டு எலக்ட்ரோமோடிவ் டீசல் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளது. இதன் மதிப்பு 100 கோடி டாலருக்கும் அதிகம் என சொல்லப்படுகிறது. இந்தியாவிலுள்ள ஸ்பைஸ்ஜெட் என்ற தனியார் விமான நிறுவனம் அமெரிக்க போயிங் நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தப்படி பி-737-800 போயிங் விமானங்கள் -30 இந்திய நிறுவனத்திற்கு சப்ளை செய்யப் படும். இதன் மதிப்பு 300 கோடி டாலர்கள் இருக்கும் எனப்படுகிறது. இதன் மூலம் 12,970 அமெரிக்கர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாகும் என கணக்கிடப்பட் டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரான அம்பானியின் நிறுவனங்கள் ஏறத்தாழ 700 கோடி டாலர்களுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி ரிலையன்ஸ் பவர் என்ற நிறுவனத்தின் 2,500 மெகாவாட் மின் உற்பத்தி நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான அதி நவீன டர்பைன்கள் 6-ம், நீராவி டர்பைன்கள் 3-ம் விற்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கர்கள் 2,650 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகிறது. அமெரிக்க எக்ஸ்போர்ட் - இம்போர்ட் வங்கி இந்த ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கு 500 கோடி டாலர்கள் நிதி உதவி செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் தாகியுள்ளது. ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் துணை நிறுவனமான சாசன் பவர் நிறுவனத்துக்கு தேவையான சுரங்க தளவாடங்களை அமெரிக்க புசிரெஸ் இண்டர் நேஷனல் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கான நிதி உதவியான சுமார் 641 மில்லியன் டாலர்களையும் இந்த வங்கி வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. ஏறக்குறைய 20 ஒப்பந்தங்கள் சுமார் 1500 கோடி டாலர்கள் (ரூ.67,200 கோடி) மதிப்பில் கையெழுத்தாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்க தொழில் நிறுவனங்களில் சுமார் 50 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.ஒபாமாவின் வருகைக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அவருடைய டெமாக்ரடிக் கட்சி தேர்தலிலே படுதோல்வியினை சந்தித்திருந்தது. அமெரிக்காவிலே பொருளாதார சிக்கல்கள், வேலையின்மை போன்றவை பெருகிவிட்ட தால், மக்களின் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் ஒபாமா, இந்திய வருகையின் மூலம் அமெரிக்க தொழிலதிபர்களுக்கு 1500 கோடி டாலர்கள் - இந்திய மதிப்பில் ரூ.67,200 கோடி வியாபாரமும், அமெரிக்க மக்கள் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பையும் ஏற் படுத்தி கொடுத்துள்ளனர். அவர் தன்னுடைய உரையின் போது அமெரிக்க ஏற்றுமதி வர்த்தகத்தில் 2 சதவீதம் மட்டுமே இந்தியாவுடன் செய்யப்படுவதாகவும், அதை பெருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். உலகின் இரண்டாவது மிகப் பெரிய சந்தையான இந்திய சந்தையை கைப்பற்றி விழுங்க அமெரிக்க பெரு முதலாளிகள் திமிங்கலத்தைப் போல அலைகின்றனர். இந்த வியாபார ஒப்பந்தங்கள் மூலம் தங்கள் கருவூலங்களை நிரப்பிக் கொள்வதிலும், தங்கள் நாட்டில் niலை வாய்ப்புகளைப் பெருக்குவதிலும் குறியாக இருக்கின்ற னர்.ஆனால், பல ஆயிரம் கோடி ரூபாய்கள் பாதுகாப்புக்கு செலவழித்து அமெரிக்கஅதிபர் இந்தியாவுடன் நல்லுறவும், நட்பும் பேணுவதற்கு வந்துபோவதாக ஊடகங்கள் ஊதுகின்றன.

Friday, November 19, 2010

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நிகழ்ச்சி ஏற்பாடு குழுக்கள் விபரம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நிகழ்ச்சி ஏற்பாடு குழுக்கள் விபரம்


தாம்பரம் அலுவலகம் எண்.4, பள்ளிவாசல் கட்டிடம் (முதல் மாடி), சண்முகம் ரோடு, மேற்கு தாம்பரம், சென்னை - 600 045, தொலைபேசி : 044 - 222 66666

அலுவலகத் தொடர்பு....
பி.கே.எம். செய்யது அலி ராஜா (செல்: 9444499901)

எஸ்.எம். முஸ்தபா (செல்: 9787845684)

காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர்:
ஆலந்தூர் எம்.எஸ். அப்துல் வஹாப் (9444055649)

மாவட்டச் செயலாளர்: இ. அப்துல் ரஷீத் (9840999757)

மாவட்டப் பொருளாளர்: ஐ. அசதுல்லாஹ் (9659938786)

காஞ்சிபுரம் மாவட்ட நிதிக்குழு:
ஆலந்தூர் எம்.எஸ். அப்துல் வஹாப், தாம்பரம் ஐ அப்துல் ரசீத், மதுராந்தகம் அஜ்மத்துல்லாஹ், ஆலந்தூர் கே.எம்.ஓ. நாகூர் மீரான், கிண்டி கேப்டன் கலீல் ரஹ்மான், பல்லாவரம் முஹம்மது பேக், தாம்பரம் பி.கே.எம். செய்யது அலி ராஜா, மதுராந்தகம் ஏஜாஸ் திருமண மண்டபம் மற்றும் வாகன நிறுத்தம்

தலைமை நிலைய பொறுப்பாளர்கள் :
கமுதி பஷீர், திருப்பூர் எம்.ஏ. சத்தார்

காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர்கள்:
பல்லாவரம் கே. கமால் பாஷா, மாடம்பாக்கம் எஸ். அப்துல் ஹலீம், காட்டாங்குளத்தூர் எச். இப்ராஹீம், தாம்பரம் எஸ்.எம். முஸ்தபா, பி.கே.எம். செய்யது அலி ராஜா, பள்ளிக்கரணை கே. அப்துல் ரஹ்மான் சேட்.

ஜமாஅத்தினர் சந்திப்பு மற்றும் சென்னை வாழ் உறவினர் முறை சங்கத்தினர் அழைப்பு:

தலைமை நிலையப் பொறுப்பாளர்கள்:
மவ்லவி என். ஹாமித் பக்ரீ, ஆப்பனூர் கே. பீர் முஹம்மது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள்:
ரப்பானி கே.ஏ. அப்துல் குத்தூஸ், காயல் அஹமது சாலிஹ், மீஞ்சூர் சிக்கந்தர் பாஷா, பல்லாவரம் முஹம்மது பேக், பேராசிரியர் கே.டி. கிஜர் முஹம்மது, ஹிமாயத்துல்லாஹ், பொழிச்சலூர் செய்யது பாருக்.

அண்ணா விளையாட்டு அரங்கம்:
தலைமை நிலைய பொறுப்பாளர்கள்:

கமுதி பஷீர், திருப்பூர் எம்.ஏ. சத்தார்,

காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர்:
சேலையூர் அப்துல் காதர், சீர்காழி எஸ்.எம் யூசுப், பள்ளிக்கரணை அப்துல் ரஹ்மான், செம்பாக்கம் காஜா முகைதீன் கொடி தோரணங்கள்:
தலைமை நிலையப் பொறுப்பாளர்கள் - கே.பி. இஸ்மத் பாட்சா, கே.எம். நிஜாமுதீன், பூவை எம்.எஸ். முஸ்தபா, சேப்பாக்கம் எஸ்.எம். ஆலம்கான்

காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் -
கிழக்கு கடற்கரை சாலை - கல்பாக்கம் எஸ். ஜாகிப், பனையூர் எச். முஹம்மது யூனூஸ்,

சோழிங்கநல்லூர் - செம்பாக்கம் காஜா முகைதீன் சேலையூர் அப்துல் காதர்,

கத்திப்பாரா சந்திப்பு - எம்.எஸ். அப்துல் வஹாப், ஆலந்தூர் கே.எம்.ஓ. நாகூர் மீரான்

செங்கல்பட்டு - ஏ. சர்தார் பாஷா, எச். இப்ராஹீம் (காட்டாங்குளத்தூர்), டி.டி.கே. சாகுல் ஹமீது (திருக்கழுக்குன்றம்).

பூந்தமல்லி - ஏ. செய்யது ஆஜம் (காஞ்சிபுரம்), அஸ்லம் பாஷா (காஞ்சிபுரம்), ஏ.கே. அஹ்மது (குன்றத்தூர்), அமானுல்லாஹ் (நந்தம்பாக்கம்)

பேரணி ஒருங்கிணைப்பு
தலைமை நிலையப் பொறுப்பாளர்கள்:

கே.எம். நிஜாமுதீன், திருச்சி எம்.கே.எஸ். ஜமால், டி.கே. ஷாநவாஸ், செய்யது பட்டாணி காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் :
கிண்டி - கேப்டன் கலீல் ரஹ்மான்,

மதுராந்தகம் ஏஜாஸ், பல்லாவரம் பாருக், ஆலந்தூர் சஹாபுதீன், மதுராந்தகம் கௌஸ் பாஷா, ஜாபர் ரயில்வே மைதானம்

தலைமை நிலையப் பொறுப்பாளர்:
எம் ஜெய்னுல் ஆபிதீன், ஏ.எச்.எம். இஸ்மாயில், கேப்டன் பஷீர் அஹமது,

காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர்கள்:
ஐ. அப்துல் ரஷீத், பல்லாவரம் முஹம்மது பேக், பொழிச்சலூர் செய்யது பாருக் விருது, சால்வை, வரவேற்புக்குழு பரிசு:

ஏ.ஹெச்.எம். இஸ்மாயில், மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில்

தொலைக்காட்சி, பத்திரிகை விளம்பரம்

மற்றும் செய்தியாளர்கள்:
காயல் மகபூப், எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கீ

இணைய தளம் மூலம் நேரடி ஒளிபரப்பு:

குத்தாலம் ஏ.லியாகத் அலி (அமீரக காயிதெ மில்லத் பேரவைத் தலைவர்)

தோப்புத்துறை நூர்தீன் (அமெரிக்கா, காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர்)

(இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு மற்ற குழுக்களின் விபரம் விரைவில் வெளியிடப்படும்.)

இந்த அறிவிப்பு தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் ஒப்புதலுடன் வெளியிடப்படுகின்றது.


கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர்,
காயிதெ மில்லத் மன்ஸில் மாநிலப்பொதுச் செயலாளர்,

சென்னை 15-11-2010 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் http://muslimleaguetn.com/news.asp?id=2003

Sunday, November 14, 2010

சமுதாய ஒற்றுமை மற்றும் முன்னேற்ற பதைக்கு வழிவாக்கும் மாநில மாநாடு - குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, தலைவர் அமீரக காயிதே மில்லத் பேரவை

சமுதாய ஒற்றுமை மற்றும் முன்னேற்ற பதைக்கு வழிவாக்கும் மாநில மாநாடு - குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, தலைவர் அமீரக காயிதே மில்லத் பேரவை



அன்று முதல் இன்று வரை தொடர்ந்து இஸ்லாமிய சமுதாயத்தின் ஒற்றுமை, சமய நல்லிணக்கத்தை வேண்டி மார்க்கத்திற்காகவும், பண்பாடு, கலாச்சாரத்திற்காகவும், தூய்மையான அரசியலுக்காகவும் ஒரே குடையின் கீழ் இயக்கும் சமுதாய பேரியக்கம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஒன்று மட்டுமே.

இந்தியாவில் குக்கிராமம் முதல் பெரிய நகரங்கள் வரை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நோக்கங்களை பறைசாட்டும் விதமாக முஸ்லிம் லீகின் பிறைக் கொடி சமாதனம், நல்லிணக்கத்தை வலியுறுத்தி பறக்கிறது. இந்த பிறைக் கொடியை தூக்கி பிடிப்பவர்கள் எந்த வித சந்தேகமற்ற நிலையில் பொதுமக்கள் மூலம் அனுகப்படுவார்கள். இந்த பச்சை கொடியில் தன்னை ஐயக்கியப்படுத்தி கொண்ட ஒருவர் அடுத்தவர்களுக்கு நன்மை தவிர வேறு எதுவும் தவறாக பாவங்களை செய்யமாட்டார், இந்த சத்தியசீலர்கள், தனக்கும் இந்த சமுதாயத்திற்கும் ஒரு முன்மாதிரியான, அதுவும் அமைதியின் வழிகாட்டியாக ஒவ்வொரு லீக்கர்களும் திகழ்ந்து, அனைத்து மக்களின் பாசத்தையும், அன்பையும் பெற்றுள்ளார்கள். அரசு முதல் அதன் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் வரை முஸ்லிம் லீக்கர்களை மதிப்பும், மாரியாதையுடன் தொடர்பு கொண்டு செயல்படும் விதம் என்றும் தொடர்ந்து கொண்டு தான் இருகிறது.

"மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாவும், நல்லதைக் கொண்டு மக்களை ஏவுபவர்களாவும், தீயதிலிருந்த மக்களை விலக்குபவர்களாகவும் உங்களின் ஒரு கூட்டத்தார் இருக்கட்டும், இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்" என்ற அல்லாஹ்வின் திருவசனத்திற்கு ஏற்ப எத்தனையோ சமுதாய பணிகளை எந்த வித சுயவிளம்பரம் இன்றி அல்லாஹ்வின் திருப்பொருத்தம் வேண்டியே இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் செய்து அல்லாஹ் கூறிய வெற்றியாளர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னிலையாக இருந்து வருகிறது.

சமுதாயத்தின் பெயரில் எத்தனையோ விளம்பர இயக்கங்கள், கழகங்கள், ஜமாஅத்கள் என்று தினமும் ஒரு பெயரில் வந்தாலும் பராபரியமிக்க இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் சமூக சமுதாய நல்லிணக்கமிக்க கொள்கையின் முன்பாக இதுபோன்ற கொள்கை அற்ற இயக்கங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும் கதை தான் நாம் இன்றைய அளவில் கண்டுவருகிறோம். இது போன்ற சுயநலமிக்க இயக்கங்கள் நமது சமுதாய இளைஞர்களை அவர்களின் சமுதாய கவலையை வேறு வகையில் பயன்படுத்தி கொண்டததுடன், அவர்கள் மட்டும் தங்கள் அளவில் வளப்படுத்தி கொண்டார்கள், ஆனால் பயன்படுத்தி கொண்ட இளைஞர்களை நடுதெருவில் விட்ட நிகழ்வுகள் தான் தமிழகத்தில் நடந்து கொண்டு இருந்தது. இதுபோன்ற எண்ணற்ற பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சமுதாயத்திற்கு என்றும் குரல் கொடுக்கும், அதுவும் பொதுவில் சமுதாயத்திற்கு என்று அங்கீகாரமிக்க ஒரே அரசியல் இயக்கம் முஸ்லிம் லீக் தான் என்று தன்னை தாய் சபையில் தொடர்ந்து இணைந்து கொண்டு வரும் செய்தி உங்கள் அனைவர்களுக்கும் தெரிந்த விசயம்.

இளைஞர்களுக்கு சமுதாய பணிகளை எந்த விதத்தில் அமைதியான, ஆர்பாட்டமற்ற வழியில் செய்து சாதிப்பது போன்ற அறவழிகளை முஸ்லிம் லீக் போதிப்பதுடன் இதன் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் வழி தவறி சென்றவர்களை அவர்களின் சமுதாய வேட்கையை நன்கு உணர்ந்து இளைஞர்களின் வேகத்தை விவேகமான முறையில் சிறப்பான சிந்தனைகளை கொடுத்து ஒரு பண்பட்டவர்களின் பட்டியலில் இந்த இளைஞர்களை சேர்ந்து வருதுடன், மற்றவர்கள் மதித்து போற்றும் விதமாக செய்து வரும் முஸ்லிம் லீக்கின் செயல் தான் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களின் பாராட்டுகளை என்றும் பெற்று பெருமையுடன் முஸ்லீம் லீக் இருந்து வருகிறது.

தன்னக்கும், தன் குடும்பத்திற்கும், தன் ஊருக்கும் எந்த வித அவபெரும் வராமல் இருக்கவும், சமுதாயத்திற்கு பணியாற்ற வரும் அல்லது செய்ய நினைக்கும் இளைஞர்கள் தொடர்ந்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கில் தன்னை இணைத்து சமுதாயத்திற்கும், மார்க்கத்திற்கும் அறப்பணிகளை சிறப்புடன் செய்வதுடன், இம்மைக்கும், மறுமைக்கும் ஓர் உயர்ந்த இடத்தை பெற வேண்டும், இப்படி கவலை கொண்ட இளைஞர்களை முஸ்லிம் தலைமையகம் என்றும் கதவை திறந்து வைத்து காத்திருக்கிறது. பாதை தெரியாமல் அலைந்து திரிந்து எத்தனையோ இளைஞர்கள் இன்று கடைசியில் தாய் சபையில் தன்னை இணைத்து இன்று சிறந்து விளங்குகிறார்கள். சமுதாய சிறக்க பாடுபடுகிறார்கள்.

வரும் டிசம்பர் 11, 2010 அன்று வரலாறு படைக்கவுள்ள முஸ்லிம் லீக் மாநில மாநாடு ஒர் உயர்வான எண்ண பிரதிபலிப்புடன் இம்மாநாட்டின் இலட்சியமாக சமய "நல்லிணக்கம் தழைக்கட்டும், சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்" என்று இந்த தமிழ் பேசும் உலகத்திற்கு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தன்னளவில் நடந்தி காட்டி ஒவ்வொரு சமுதாய கவலை கொண்ட இளைஞர்கள் பாடுபட வேண்டும். பல்வேறு சமய, சமுதாயத்தின் மத்தில் வாழும் நாம் அவர்களுடன் எப்படி நல்லிணக்கமாக வாழ்வதுடன், நம் சமுதாயத்தில் பின்தள்ளப்பட்ட ஒற்றுமையை மீண்டும் முன் நிலை நிறுத்தி மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக முஸ்லிம் சமுதாயம் சிறந்து வாழ வேண்டும்.

ஊர் மஹல்லா ஜமாஅத் என்றால் முஸ்லிம் லீக், முஸ்லிம் லீக் என்றால் மஹல்லா ஜமாஅத் என்ற நிலை காலம் காலமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஊர் ஜமாஅத் விசேஷங்களில் நிகழ்ச்சியின் முன்பாக பிறைக்கொடியை ஏற்றி உயர பறக்கவிட்டு தான் அந்த நிகழ்ச்சியை தொடங்கும் வழிமுறைகள் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் மஹல்லா ஜமா அத் ஒருங்கிணப்பு மற்றும் சமுதாய ஒற்றுமை என்று மாநாடு நடக்கும் தினத்தில் காலை அமர்வாக தனியாக ஒரு கருத்தரங்கம் முஸ்லிம் லீக் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது. கடந்த சில வருடங்களாக பல்வேறு காரணங்களால் மார்க்கம், அரசியல் பெயரில் சமுதாய ஒற்றுமையை சீர்குலைத்து பல்வேறு இன்னல்களை இந்த சமுதாய ஜமாத் அத்தார்கள் பெற்று காவல்நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் தேவையற்ற வகையில் அலை வேண்டியதாகிவிட்டது. நம்மை படைத்து பரிபாலனம் செய்யும் வல்ல அல்லாஹ் நம் சமுதாயத்தில் எதில் கவனமாக இருக்க சொல்லி இருந்தானோ அந்த ஒற்றுமையை விட்டு நம்மிடையே விரோத போக்கை சில கூட்டங்களின் தூண்டுகோலின் காரணமாக சீர்குலைந்து போய்விட்டது. ஒற்றுமையாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர்கள் என்று அடிதடி, கொலை என்று மனிதர்கள் வெறுக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். இந்த மார்க்க விரோத செயல்கள் அனைத்தையும் கலைந்து சமுதாய ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டி இந்த மாநில மாநாடு கருந்தரங்கம் வலிவகுக்கும். அத்துடன் ஒவ்வொரு ஊரின் ஜமாஅத் நிர்வாகத்தின் மூலமாக ஊரின் வளர்ச்சி திட்டப்பணிகளை சொந்தமாகவே, அதுவும் எந்தவித அரசு உதவி இல்லாமல் சுயமாகவே ஊரில் பைத்துல் மால், வட்டியில்லா கடன் உதவி, கல்வி விழிப்புணர்வு மற்றும் கல்வி உதவி தொகை, ஏழைகுமர் மற்றும் முதியோர்களுக்கு உதவி என்பன போன்ற நலப்பணிகளில் சிறப்பாக செய்து தமிழக ஜமாஅத் நிர்வாகங்களுக்கு முன்மாதிரியாக செயல்படும் ஜமாஅத்களை இனம் கண்டு இந்த மாநில மாநாடு விழாவில் முன்மாதிரி ஜமாஅத் என்ற விருதுகளை முஸ்லிம் லீக் வழங்கி அந்த ஜமாஅத்களை கவுரவிக்க உள்ளது. இதன் மூலம் மற்ற ஊர் ஜமாஅத் நிர்வாகங்களும் தங்கள் ஊரில் மேற்கண்ட அறப்பணிகளை செய்ய வழிகாட்டியாக இருக்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற சிறப்புமிக்க விருதுகளை அவர்களும் பெற முடியும்.

மொத்தத்தில் இந்த டிசம்பர் 11 மாநில மாநாடு சமுகநல்லிணக்கதையும், வல்ல அல்லாஹ்வின் உதவியுடன். சமுதாய ஒற்றுமை மற்றும் முன்னேற்ற பாதைகளுக்கு பல வகையில் வழிகாட்டும்

மாநாடு ஆரம்ப ஏற்பாடுகளை தலைமையகம் சிறப்பாக தொடங்கி மாநாடு அழைப்பிதழ், சுவர் விளம்பரம் முதல் டிஜட்டல், ஸ்டிக்கர் விளம்பரம் வரை சிறப்பாக செய்து வருகிறது. மாநாடு சிறப்பாக நடைபெற ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பை அமீரக காயிதே மில்லத் பேரவை முதல் தமிழகம், இந்தியா மற்றும் உலகங்கும் இருக்கும் காயிதே மில்லத் பேரவை மேலும் சமுதாய புரவலர்கள் செய்து வருகிறார்கள்.

சர்வசேத காயிதே மில்லத் பேரவை ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி அவர்கள் அமீரகத்திற்கு நேரடியாக வருகை புரிந்து, டிசம்பர் 11 மாநில மாநாடு பற்றிய விளக்க பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு நம் அனைவர்களுக்கும் அழைப்பு கொடுத்தார்கள். அத்துடன் அமீரகத்தில் வாழும் சமுதாய புரவலர்கள், ஆதரவார்களை நேரடியாக சந்திந்து அழைப்பு கொடுத்ததுடன் மற்ற வளைகுடா நாடுகளில் உள்ள காயிதே மில்லத் பேரவைகளின் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அழைத்தார்கள். இதன் அடிப்படையில் அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் சவுதி, கத்தார், குவைத், அமெரிக்கா, ஹாங்ஹாங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா மற்றும் உலகெங்கும் உள்ள காயிதே மில்லத் பேரவையினரை தொடர்பு கொண்டு மாநாட்டில் கூட்டாக கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கையுடன் அழைப்பு கொடுக்கப்பட்டது, அழைப்பை ஏற்று கொண்ட அவர்களும் திரளாக மாநில மாநாட்டில் கலந்து கொள்ள முன்ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியை தருகிறது. மேலும் அமீரகத்தில் பேரவை பொதுச் செயலாளர் முகம்மது தாஹா, பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான், ஊடகத்துறை முதுவை ஹிதாயத் மற்றும் பேரவையினர்கள் அமீரகத்தில் உள்ள சமுதாய மக்களை சந்தித்து மாநாடு நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டி அழைப்பிதழ் கொடுத்ததுடன், ஆதரவுகளை பெற்று அமீரகத்திலிருந்து ஒரு இளைஞர் பட்டாளத்தையே திரட்டி மாநில மாநாட்டில் கலந்து கொள்ள களப்பணியாற்றி வருகிறார்கள். இதுபோன்ற களப்பணிகளை மற்ற நாடுகளில் உள்ள காயிதே மில்லத் பேரவையும் செய்ய வேண்டுகிறேன். அத்துடன் மாநாடு நிகழ்ச்சிகளை உலகத்தில் இருக்கும் அனைவர்களும் இருந்த இடத்திலிருந்து நேரடியாக காண முஸ்லிம் லீக் இணையதளத்தின் மூலம் காண அமீரக மற்றும் அமெரிக்கா காயிதே மில்லத் பேரவை சார்பாக மாநாடு நேரடி ஒளிப்பரப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

அல்லாஹ்விடம் பிரார்த்னை செய்யுங்கள் சமுதாய நலம் வேண்டி.. மாநில மாநாடு சிறக்க�

வாருங்கள் அனைத்து சமுதாய மக்களும்..

ஒற்றுமைக்கு முன்மாதிரியான சமுதாயம் என்று உலகிற்கு அறிவிக்க..

சமுதாய இளைஞர்கள் அதிக அளவில் ஒன்று கூடும் மாநில மாநாடு�

மீண்டும் உலகம் முழுவதும் எத்திவைப்போம்..

சமய நல்லிணக்கம் தழைக்கட்டும்�

சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்�

ஒற்றுமையே பிரச்னைகளுக்கான ஒரே தீர்வு

Assalamualaikum Wara....

Pls check this link:

http://satyamargam.com/1568

"ஒற்றுமையே பிரச்னைகளுக்கான ஒரே தீர்வு" - அப்துர் ரஹ்மான் M.P யுடன் ஒரு நேர்காணல்!"

Thank you


Kind Regards,

Siddiq Ahmed Abdul Rahman
+91 95000 73786
siddiqar@yahoo.com

இணையதள மூலம் நேரடி ஒளிப்பரப்பு (Live Webcast )

இணையதள மூலம் நேரடி ஒளிப்பரப்பு (Live Webcast )

அமீரகம் மற்றும் அமெரிக்கா காயிதே மில்லத் பேரவை ஏற்பாட்டின் மூலம் டிசம்பர் 11 மாநில மாநாடு முழு நிகழ்ச்சிகளையும் http://muslimleaguetn.com இணையதள மூலம் நேரடி ஒளிப்பரப்பை உலக முழுவதும் பார்க்கலாம்.
-மாநில மாநாடு வரவேற்புக் குழு
______________________________

Monday, November 1, 2010

IUML STATE CONFERENCE NEWS

IUML STATE CONFERENCE NEWS

http://www.twocircles.net/2010oct13/tamil_nadu_muslim_league_hold_state_conference_december_11.html

Khorrum Omer
National Secretary-IUML

IUML becomes third biggest party in Kerala

IUML becomes third biggest party in Kerala
By IANS,

Thiruvananthapuram: With an excellent performance in the Kerala local body polls, Congress ally Indian Union Muslim League (IUML) Saturday edged out the Communist Party of India (CPI) to become the third biggest party in the state.

"We have proved that we are a truly secular party by winning seats across the state. The CPI-M (Communist Party of India-Marxist) has time and again been levelling baseless allegations and even questioning our secular nature," said senior IUML leader P.K. Kunhalikutty.
"On one hand, they blame us for being communal but in the recent polls it became quite clear that it was the CPI-M who joined hands with parties like PDP, SDPI (formerly Popular Front of India) and Jamaat-i-Islami," he said.

IUML won 1,443 seats in the village panchayats, 190 at the block level, 32 at the district level, 234 in the municipalities and five in the four corporations and their tally is all set to increase as counting in one of their strongholds - Kozhikode district - is to be taken up Sunday.
The CPI, which was earlier at the third position, has got only 979 seats in the village panchayats.

"Our presence now spans across the state and we are a dominant force all over. We have hugely improved our position in districts like Wayanad, Palakkad, Trissur and Ernakulam. The only place we did not do as expected was here (Thiruvananthapuram)," said Kunhalikutty.

"This election also proved that the minority community does not see the CPI-M as their saviour as always claimed by them," said Kunhalikutty.