Friday, August 29, 2008

ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரி உருவாக வேண்டும்! -துபை அப்துர்ரஹ்மான

Thursday, August 28, 2008

ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரி உருவாக வேண்டும்! -துபை அப்துர்ரஹ்மான



இஸ்லாமிய சமுதாயத்தில் விழிப்புணர்வு எற்படவேண்டும் என்றால் முதலில் கல்வி விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பட்டதாரி உருவாக வேண்டும். பட்டதாரிகள் இல்லாத வீடே இல்லை என்ற நிலை நமது நாட்டில் நமது சமுதாயத்தில் ஏற்பட வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம்.அப்துர் ரஹ்மான் கூறினார்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் தைக்கால்தெரு சேக் சாஹிப் - தர்கா வளாகத்தில் இஸ்லாமிய நல்வாழ்வு சங்கம் நடத்திய இஸ்லாமிய பெண்கள் கல்வி மாநாட்டில் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது:-

உலக மக்கள் அனைவரும் ஒரே குலத்து சகோதரர்கள். இஸ்லாம் ஜாதி மத இன பேதம் பிரித்து பார்க்காத அனைவரையும் சகோதரத்துவ அன்புடன் பார்க்கும் மார்க்கமாகும்.

தனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியப் பெருமக்களுக்கு ஒவ்வொரு தொழுகையிலும் துஆ கேட்கிறோம். அந்த அளவுக்கு கல்விக்கு பெருமை தேடி தரும் மார்க்கம் இஸ்லாம்.

பள்ளி படிப்பு முடிக்கும் முன் நம் வீட்டு பிள்ளைகளும் பாஸ்போர்ட் எடுக்கும் பழக்கத்தை நாம் விட்டுவிட வேண்டும். படிக்காமல் நாம் அரபு நாடுகளுக்குச் சென்று நாம் வாங்கும் மூன்று மாத சம்பளத்தை படித்துவிட்டு வந்தவர்கள் ஒரே மாதத்தில் வாங்குவதை கண்கூடாக பார்க்கிறோம். பட்டப்படிப்பு முடிக்காமல் அயல்நாட்டு வேலைக்கு செல்லவே கூடாது.

ஒரு ஆண் கல்வி கற்றால் அவன் மட்டுமே பயன் பெறுகின்றான். ஆனால் ஒரு பெண் பயின்றால் அந்த குடும்பமே பயன் பெறும். அதனால்தான் இஸ்லாம் ஆண, பெண் இருபாலருக்கும் கல்வியை கட்டாய கடமையாக்கி இருக்கிறது.

ஆண்களில் 64 சதவீதம், பெண்களில் 72 சதவீதம் மக்கள் பள்ளிப் படிப்பை விட்டு தாண்ட மாட்டேன் என்கிறார்கள். சமீபத்திய கணக்கெடுப்பின்படி 101 முஸ்லிம்களுக்கு ஒரு பட்டதாரிதான் உருவாகிறார். இதே சகோதர சமுதாயத்தில் 101 பேருக்கு 31 பட்டதாரிகள் உள்ளார்கள். இந்த நிலை மாற வேண்டும். நாமும் இந்த நாட்டில் கவுரவமாக வாழ கல்வியில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாணவ - மாணவியரின் பேச்சுப் போட்டி வினாடி-வினா போட்டி நடைபெற்றது. நெல்லிக்குப்பத்தில் மேல்நிலை எஸ்.எஸ்.எல். சி. மெட்ரிக் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவி யருக்கு அப்துல் ரஹ்மான் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.

விழாவில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வகுப்பு கலவரங்களில் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்களே! டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது பேச்சு

வகுப்பு கலவரங்களில் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்களே! டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது பேச்சு



வகுப்புவாதத்தால் நடைபெறும் கலவரங்களில் அதிக இழப்புக்கு ஆளாவது முஸ்லிம்களே என்று காவல்துறை ஆய்வாளர் விப+தி நாராயணனின் ஆய்வு காட்டுகிறது என்று டாக்டர் ஹபீப் முஹம்மது கூறினார்.

இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சென்னை காமராசர் அரங்கில் இஸ்லாமிய எழுச்சி மாநாடு நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் ஹஸரத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.எம். செய்யது அப்துல் காதர், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாதிக், டெல்லி சிறுபான்மை ஆணையத் தலைவர் கமார் பரூகி, வக்ஃப் வாரிய உறுப்பினர் சிக்கந்தர், எஸ்.எம்.ஹிதாயதுல்லாஹ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய பவுண்டேசன் டிரஸ்டு இணைச் செயலாளர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது பேசியதாவது-

இன்று உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக கருதப்படும் பயங்கரவாதம் தோன்ற பல காரணங்கள் உள்ளன. ஜாதியவாதம், வகுப்புவாதம், ஏகாதிபத்தியம் போன்ற காரணங்களால்தான் பயங்கரவாதம் தலை தூக்குகின்றன. எந்த வடிவிலானாலும் பயங்கரவாதமும் தீவிரவாதமும் விஷ சக்கரம் போன்றது. அது என்றைக்காவது ஒரு நாள் ஏவுகணையை தாக்கி அழித்து விடும்.

நோய்க்கு மருந்து கொடுக்கலாம். ஆனால் அப்படி கொடுக்கும் மருந்தே உயிருக்கு ஆபத்தை விளைவித்து விடக்கூடாது.

பயங்கரவாதம் ஆபத்தான மருந்தாகும். அது நோயை தீர்ப்பதற்கு பதிலாக ஆளையே கொன்றுவிடும் என்பதில் கவனம் வேண்டும். இந்த நாட்டில் மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேயின் பிறந்த நாளை தியாகிகள் தினமாக கொண்டாட மத்திய - மாநில அரசுகள் அனுமதி வழங்குகின்றன. ஆனால் இந்த நாட்டிற்காக அணுஅணுவாக உழைத்த முஸ்லிம் சமுதாயம் சுதந்திரதின பேரணி நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. இதுபோன்ற பாகுபாடுகளை அரசுகள் கைவிட வேண்டும்.

வகுப்புவாதம் குறித்து விரிவான ஆய்வு ஒன்றினை விப+தி நாராயணன் என்ற காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தார். அந்த ஆய்விலே வகுப்புவாதத்தால் நடைபெறும் கலவரங்களில் அதிகமான இழப்புகளுக்கு ஆளாவவது முஸ்லிம் சமுதாயம் என்றும், அதிக அளவில் தாக்குதலுக்கு ஆளான முஸ்லிம் சமுதாயமே சிறைகளிலும் அதிக அளவில் அடைக்கப்படுவதாக அதிர்ச்சியான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சமுதாயத்துக்கு அரசுகள் ஆதரவு காட்டுவதற்கு பதிலாக அவர்களை குற்றவாளிகளாக சிறையில் அடைத்து தண்டிப்பது இந்தியாவில் நடைபெறுகிறது. ஏன் இத்தகைய அநீதியை அரசுகள் இழைக்கின்றன? ஊடகத் துறையிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பல அவதூறுகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

இன்றையச் சூழலில் முஸ்லிம் இளைஞர்கள் ஊடகத் துறையில் அதிக அளவில் ஈடுபட வேண்டும். அதனை கடமையாக கருத வேண்டும். ஊடகத்துறை மூலமே நம் மீது சுமத்தப்படும் களங்கத்தை துடைக்க முடியும்.

இவ்வாறு ஹபீப் முஹம்மது பேசினார்.

வன்முறையை தூண்டும் இந்தியா டுடே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! -காயல் மகபூப் கோரிக்கை

வன்முறையை தூண்டும் இந்தியா டுடே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! -காயல் மகப+ப் கோரிக்கை

http://www.muslimleaguetn.com/news.asp


ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்கள் மீது வன்முறையைத் தூண்டிவிட்டுள்ள இந்தியா டுடே பத்திரிக்கை மீது மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கை தாமதமானால் இந்திய உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து இதில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகப+ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம் புளியங்குடியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொழிலாளர் அணியின் சார்பில் நடைபெற்ற மாநில மாநாட்டு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றியபோது அவர் இந்த கோரிக்கை விடுத்தார். அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

இந்தியா மதசார்பற்ற ஜனநாயக நாடு என்று சொல்கிறார்கள். ஜனநாயகத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகளை சிலர் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு மனம் போன போக்கில் செயல்படுகின்றனர். ஆனால் இந்த நிலை ஏற்படும்போது ஒருசாராருக்கு எதிராக செயல்படுகின்ற சட்டமும் காவல்துறை - நீதிமன்ற நடவடிக்கைகளும் இன்னொரு சாராரை சீண்டிப் பார்ப்பது இல்லை இதை எப்படி நடுநிலை என்பது?

இந்தியா டுடே என்ற பெயரில் வெளிவரும் பத்திரிக்கை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல மொழிகளில் வெளிவருகிறது. அந்த பத்திரிக்கையின் இம்மாதம் 13ஆம் தேதி இதழில் 'சுரணையற்ற இந்தியா" என்ற அட்டைப்பட தலைப்பிட்டு அந்த இதழ் முழுவதும் விஷமத்தனமாக இந்திய முஸ்லிம் களுக்கு விரோதமாக கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

அந்த பத்திரிக்கை ஆசிரியர் எழுதிய தலையங்கமே இந்தியா பொறுத்தது போதும் பொங்கி எழுமா என்று தொடங்கி@ பொங்கி எழாவிட்டால் இந்தியா சுரணையற்ற தேசமாகும் என்பதில் சந்தேகமில்லை என்றுதான் முடிக்கப்பட்டுள்ளது.

பக்கத்துக்கு பக்கம் இஸ்லாமிய பயங்கரவாதம் என எழுதப்பட்டுள்ள விஷமத்தனமான கட்டுரைகள் முஸ்லிம்களுக்கெதிராக இந்துக்களை மட்டும் தூண்டிவிடவில்லை. வளரும் தீவிர மதவாதம் என்ற பெயரில் கட்டுரை எழுதி முஸ்லிம்களுக்குள்ளும் மோதலை உருவாக்கும் அயோக்கியத்தனமும் செய்யப்பட்டுள்ளது.

தேவ்பந்த் மௌலவிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் இந்த இதழ் தொழுகைக்கு மட்டுமே முஸ்லிம்களை அழைப்பதோடு, எந்த அரசியல் சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபடாத தப்லீகர்களை மத தீவிரவாதிகள் என வர்ணித்து அவர்கள் தோற்றத்தைகூட அடையாளப்படுத்தி காட்டியுள்ளது. பரேலவிகளும் மற்றவர்களும் மோதிக்கொள்ள வேண்டுமென்ற நோக்கம் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலையில் முஸ்லிம்களுக்கெதிரான ஊடக பயங்கரவாதம் செயல்படுத்தப்பட்டதை அரசுகள் எப்படி பொறுத்துக் கொண்டிருக்கின்றன.

கஷ்மீர் முஸ்லிம் இளைஞர்களுக்கெதிராக அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை விமர்சித்து எழுதினார்கள் என்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்து மூன்று வருடங்களுக்கு மேல் அப்பத்திரிகை ஆசிரியர் வெளியீட்டாளர் அச்சிடுபவர் வினியோகித்தவர் என்று அனைவரையும் சிறையில் அடைத்தனர். இத்தனைக்கும் சில நூறு பிரதிகள் மட்டும்தான் அச்சாகும் பத்திரிக்கை அது. ஆனால் பல மொழிகளில் லட்சக்கணக்கில் விற்பனையாகும் இந்தியா டுடே மீது மட்டும் ஏன் இந்த சட்டம் பாயவில்லை?

மத்திய மாநில அரசுகள் இதில் நடவடிக்கை எடுக்க தயங்கினால் இந்திய உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நாட்டு நலனில் அக்கரை யுள்ள அனைவரின் விருப்பம்.

சுதந்திர தினம், குடியரசு தினம் அல்லது நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த நேரங்களிலெல்லம் முஸ்லிம்களுக்கு விரோதமாக விஷமப் பிரச்சாரங்களை தூண்டிவிடுவதும், முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதும் விசாரணை என்ற பெயரில் அன்றாடம் செய்திகள் வரவைப்பதும் இன்று வாடிக்கையாகிவிட்டது.

மீடியாக்களை திறந்தாலே சில நாளிதழ்கள் தலைப்புக்களை எழுதி வைத்துக்கொண்டு செய்திகளை தேடி அலைகின்றன என்பது தெரிகிறது. முஸ்லிம்கள் யாராவது விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டால்கூட முஸ்லிம் தீவிரவாதிகள் கைது குண்டு வைக்க சதித்திட்டமா என செய்தி போட்டு விடுகின்றனர்.

முஸ்லிம்கள் சிலரை கைது செய்கின்ற காவல்துறைகூட அவர்களின் வீடுகளில் சோதனை ஆவணங்கள் கைப்பற்றிப்பட்டன என்றெல்லாம் சொல்லும்போது கைப்பற்றப்பட்டது எவை என்ற பட்டியலை வெளியிட வேண்டாமா? குர்ஆன் விளக்க உரையையும் சில சி.டி.க்களையும் எடுத்து வைத்துக் கொண்டு பயங்கரவாதிகளாக சித்தரிக்கலாமா? இது ஒரு சமுதாயத்திற்கு எதிராக தொடுக்கப்படும் யுத்தம் இல்லையா?

ஒரு சம்பவத்தில் முஸ்லிம்கள் சிலர் ஈடுபட்டார்கள் என்றால் அந்த சம்பவத்தை மட்டுமே வைத்து வழக்குபதியட்டும். ஆனால் அதற்காக மதச்சாயம் பயங்கரவாதம் என்ற முத்திரைகளுக்கு வழிவகுக்காதீர்கள். வன்முறையை தடுக்கிறோம் என்ற பெயரால் நிரபராதிகளை தண்டிக்காதீர்கள்.

தென்காசி கலவர வழக்கு நிரபராதிகளுக்கு நீதி வேண்டும்
தென்காசியில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. ஆனால் இந்த சம்பவங்களுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத இன்னமும் சொல்லப்போனால் சமூக ஒற்றுமைக்கு காலமெல்லாம் பாடுபட்ட இந்து - கிறிஸ்தவ நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அள்ளிக் கொடுத்த முஸ்லிம் வணிக பிரமுகர்களான எஸ்.எம். கமால் முகைதீன் வி.டி.எஸ். ரஹ்மான் பாட்சா பொதிகை மெடிக்கல் சம்சுத்தீன் போன்றோர் கைது செய்யப்பட்டது எந்த வகையில் நியாயம்? கூட்டுச்சதி என்ற சட்டப்பிரிவு அவர்கள் மீதெல்லாம் போடப்படலாமா?

இப்படிச் சொல்வதால் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் குற்றவாளிகள் என்று அர்த்தம் இல்லை. தென்காசியின் உண்மை நிலவரம் ஆராயப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகத்தான் சி.பி. சி.ஐ.டி விசாரணையை இந்த மாவட்ட முஸ்லிம் லீக் கேட்டது. சமீபத்தில் தென் காசி வந்த தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்முகைதீன் எம்.பி அவர்கள் சி.பி. சி.ஐ.டி. விசாரணை தேவையில்லை. இந்த காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு என்றார்கள். அந்த நம்பிக் கையின் அடிப்படையில் கேட்கிறோம் நிரபராதிகளுக்கு நீதி கிடைக்கச் செய்யுங்கள்.

இதை ஏன் நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றால் எட்டு ஆண்டுகளுக்கு முன் பாளையங்கோட்டை கிரஸண்ட் நகர் பள்ளி வாசலில் புளியங்குடி அப்துல் ரசீத் கொலை செய்யப்பட் டார். கொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் உதவியும் அவரது வாரிசுக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அவரை கொலை செய்ததாக அவரது மகன் மைதீன் பிச்சையை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த அநியாயத்தை எல்லாருமே தட்டிக் கேட்டனர் நாங்கள் எல்லாம் சிறையில் சென்று சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினோம்.

அந்த கொலைக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்று அவரை விடுவித்து விட்டார்கள். ஆனால் இன்னமும் அரசு அறிவித்த உதவி தொகையும் அரசு வேலை வாய்ப்பும் அந்த குடும்பத்திற்கு கிடைக்க வில்லை. எட்டு ஆண்டுகளாக உண்மை குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை.

புளியங்குடி அப்துர் ரஷீத் கொலை வழக்கு போன்று தென்காசி கலவர வழக்கும் நிரபராதிகளுக்கு எதிராக குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆகிவிடக்கூடாது. என்பதால்தான் நாங்கள் இதில் அக்கறை காட்டுகிறோம்.

சிறுபான்மை முஸ்லிம்களின் நலன்களுக்கு எவ்வளவோ நன்மைகளை செய்யும் கலைஞர் அரசு இதில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் காவல்துறைக்கு நல்வழிகாட்ட வேண்டுகிறோம்.

-இவ்வாறு காயல் மகப+ப் பேசினார்

நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் பொருளாளர் ஏ. அப்துல் வகாப் தலைமையில், மாவட்டச் செயலாளர் கடையநல்லூர் த.அ.செய்யது அகமது மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பாம்புக்கோவில் சந்தை வி.ஏ.செய்யது இபுராஹிம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் மாநில தொழிலாளர் அணி அமைப்பாளர் கோவை எம்.எஸ்.முஹம்மது ரபீக் சங்கரன் கோவில் நகர தலைவர் எம்.எஸ்.திவான் மைதீன், மாவட்ட துணை தலைவர் ஏ.மைதீன் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஏ.ஹைதர் அலி ஆகியோர் உரையாற்றினார்.

எம்.முஹம்மது ய+சுப் பைஜி கிராஅத் ஓதினார். கடைய நல்லூர் நகர தலைவர் பி.எம்.ஏ.உசேன் இளைஞர் அணி தலைவர் டி.என்.ரஹ்மத்துல்லா சங்கரன் கோவில் செயலாளர் முஹம்மது சலீம் புளியங்குடி துணைச் செயலாளர்கள் கலீல் ரஹ்மான், கே.எம். அப்துல் காதர், பி.என்.எம். முஹம்மது உசேன், மணிச்சுடர் நிருபர் சாகுல் ஹமீது உள்ளிட்ட ஏராளமானோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

மாவட்ட தொழிலாளர் அணி இணைச் செயலாளர் பி.எம்.எம். காதர் முகைதீன் நன்றி கூறினார். ஜப்பான் உதுமான் மற்றும் முன்னணியினர் இக்கூட்டத்திற்கு மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Friday, August 22, 2008

அந்நிய ஆட்சியாளர்களை வெளியேற்ற அரிய தியாகங்கள் செய்தவர்கள் உலமாக்கள்! -தளபதி ஷபீகுர் ரஹ்மான்

அந்நிய ஆட்சியாளர்களை வெளியேற்ற அரிய தியாகங்கள் செய்தவர்கள் உலமாக்கள்! -தளபதி ஷபீகுர் ரஹ்மான்



அந்நிய ஆட்சியாளர்களை வெளியேற்ற அரிய தியாகங்கள் பல செய்தவர்கள் உலமா பெருமக்கள். அந்த தியாகங்கள் நன்றியுடன் நினைவுபடுத்தப்பட வேண்டும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளர் மௌலவி தளபதி ஷபீகுர் ரஹ்மான் கூறினார்.

பரங்கிப்பேட்டை நகரில் ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மவ்லானா எம்.எஸ்.காஜா முயீனுத்தீன் மிஸ்பாஹி தலைமை வகித்தார்.

மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை துணைச் செயலாளர் மவ்லானா அப்துஸ் ஸமத்ரஸாதி திருக்குர்ஆன் வசனம் ஓதினார். மவ்லானா ஏ.மஃசூக் ரஹ்மான் தாவ+தி தேசிய கீதம் பாடினார். மவ்லானா முஹம்மது ஃபாரூக் பாகவி வரவேற்றுப் பேசினார். மவ்லானா முஹம்மது ஷேக் ஆதம் மலாஹிரி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.ய+னுஸ், பரங்கிப்பேட்டை மஹ்மூதிய்யா மத்ரஸா ஆசிரியர் மவ்லானா சீத்தீக் அலி பாகவி, பரங்கிப்பேட்டை மூனா ஆஸ்திரேலியன் பள்ளியின் முதல்வர் எம்.பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்கின் மாநில மார்க்க அணிச் செயலாளர் மவ்லானா தளபதி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

நம் இந்திய திருநாட்டின் 61ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் அனைத்து மக்களாலும் சிறப்புடன் கொண்டாடப் படுகிறது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களாலும் உலகெங்கும் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.

பரங்கிப்பேட்டையில் ஜமாஅத்துல் உலமா சபையினரால் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்துவது நமக்கெல்லாம் மகிழ்ச்சியாகும்.

நம் இந்திய திருநாட்டில் 200 ஆண்டுகாலம் ஆதிக்கம் செலுத்தி நம்மை அடிமைபடுத்திக் கொண்டிருந்த வெள்ளையர்களின் ஆட்சியை எதிர்த்து வெள்ளையர்கள் நம் தாய் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், வெளியேற்றப்பட வேண்டும் என்று நம் நாட்டிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தினரும் ஹிந்து சமுதாயத்தினரும் கிறிஸ்துவ-சீக்கிய சமுதாயத்தினரும் ஒன்றுபட்டு போராடிப் பெற்ற சுதந்திரத்தை விழாவாக இன்று கொண்டாடி வருகிறோம்.

வெள்ளையர்களைப் போன்று இந்தியர்களுக்கும் சலுகைகள் வேண்டுமென்று நம் நாட்டு தலைவர்கள் கேட்ட போது, சலுகைகள் மட்டுமல்ல@ வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டே வெளியேற வேண்டும். வெளியேற்றபட வேண்மென்று முழங்கியவர்கள் நம் நாட்டு தலைவர்கள்.

வெள்ளையர்களை வெளியேற்றப்பட வேண்டும் என்று மார்க்க தீர்ப்பு வழங்கியதற்காக நம் நாட்டு உலமாக்கள் சிறை பிடிக்கப்பட்டார்கள்... செத்து மடிந்தார்கள். சிறையில் அடைத்து கொடுமைபடுத்தப் பட்டார்கள். அத்தனை கொடுமைகளையும் சகித்து வெள்ளையர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறும் வரை போராடியவர்கள் நம் உலமாக்கள்.

உ.பி.யிலுள்ள தேவ்பந்த் தாருல் உலூம் இஸ்லாமிய மார்க்க பல்கலைகழகத்தின் நிறுவனர் மவ்லானா காஸிம் நானூத்தவி அவர்களையும் அறிவுலக மேதை, ஆன்மீகத்தென்றல் மவ்லானா ஹீஸைன் அஹ்மத் மதனீ, மவ்லானா இப்ராஹிம் கங்கோஹி, மவ்லானா ரஷீத் அஹ்மத் தஹ்லவி, மவ்லானா இம்தாதுல்லா மஹாஜீர் மக்கி இத்தகைய உலமாக்களின் சேவை மகத்தானதாகும். பிரிட்டிஷாரின் கொடுமைகளுக்கும், கொடுங்கோள் தனத்துக்கும், தண்டனைக்கும் கொஞ்சமேனும் அஞ்சாமல் விடுதலைக்காக போராடியவர்கள் நம் நாட்டு உலமாக்களாகும்.

இத்தகைய மூத்த உலமாக்கள், தியாகச்சீலர்கள் டெல்லி பட்டணத்திலும் தேவ்பந்திலும், லக்னோவிலும் வயது முதிர்ந்த நிலையில் கையில் ஊன்றிச் சென்ற கைத்தடி பிரம்புகளுக்கு வெள்ளை சிப்பாய்களின் துப்பாக்கி தோட்டாக்கள் அஞ்சி நடு நடுங்கியது.

மவ்லானா முஹம்மது அலி ஜவ்ஹர் அவர்கள் புனித, கஃபத்துல்லாஹ்வில், கருந்திரையை பிடித்து, யா-அல்லாஹ் என்தாய் நாட்டுக்கு சுதந்திரம் கொடு என்று நெஞ்சுருக பிராத்தனைச் செய்தவர்கள்.

திருக்குர்ஆன் ஷரீபுக்கு அற்புதமான விரிவுரை எழுதிய மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் மாபெரும் விடுதலைப் போராட்ட வீரராவார். சுதந்திரம் பெற்ற இந்திய நாட்டின் முதலாவது கல்வி அமைச்சராக பணியாற்றிய மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தின் பெருந்தலைவராகவும், இந்தியாவின் முதலவாது பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அரசியல் குருவாகவும் திகழ்ந்த மாபெரும் விடுதலை போராட்ட வீரராவார்.

அண்ணல் காந்திஜீ அவர்களின் தலைமையில் நம் உலமாக்கள் செய்த தியாகத்தை காந்திஜீ அவர்களே பெரிதும் பாராட்டியுள்ளார்கள். தேவ்பந்து தாருல் உலூம் இஸ்லாமிய மார்க்க பல்கலைகழகத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய நம்நாட்டு பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், விடுதலைப் போராட்டத்தில் தேவ்பந்து உலமாக்கள் ஆந்நியதியாகத்தை போற்றிப் பாராட்டியுள்ளார்கள்.

நம் நாட்டின் சுதந்திர தின விழாவை நாடெங்கும் நம் நாட்டு உலமாக்கள் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, பேசினார்.

நகர ஜமாஅத்துல் உலமா செயலாளர் மவ்லானா லியாகத்அலி மன்பஈ நன்றி கூறினார்.

நோன்புக்கஞ்சிக்கான அரிசியை, சிக்கலின்றி வழங்க வேண்டும்! தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் வேண்டுகோள்!!

நோன்புக்கஞ்சிக்கான அரிசியை, சிக்கலின்றி வழங்க வேண்டும்! தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் வேண்டுகோள்!!



ரமளான் நோன்பு காலத்தில் நோன்பு திறக்கும்போது அருந்தும் கஞ்சியை தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு மலிவு விலை அரிசியை தமிழக அரசு வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் இந்த அரிசியை பெற முயற்சிக்கும்போது பள்ளிவாசல் நிர்வாகிகளால் நிரப்ப முடியாத கேள்விகள் அடங்கிய, தணிக்கை படிவம் வழங்கப்பட்டுள்ளது. அதில் பல கேள்விகள் வருவாய்த்துறை அதிகாரிகளால் நிரப்பப்பட வேண்டியதாகும்.

விண்ணப்பிக்கும் பள்ளிவாசலின் நிர்வாகம் வக்ஃப் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதற்கு ஆதாரம் வழங்கவும் கோரப்படுகிறதாம். இந்த கேள்விகளால் பள்ளிவாசல்களால் அரிசி வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தென்காசியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.ம்.காதர் மொகிதீன் எம்.பி., பள்ளிவாசல்களுக்கான நோன்புக் கஞ்சி அரிசியை இம்மாத இறுதிக்குள் வழங்கும்படி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த ஆண்டு ரமளான் நோன்பு தொடங்க பத்து தினங்கள் மட்டுமே இருப்பதால், பள்ளிவாசலுக்கான நோன்புக் கஞ்சிக்குரிய மலிவு விலை அரிசி சென்ற ஆண்டைப் போல் சிக்கலின்றி விரைவாக வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கேட்டுக்கொள்கிறது.

-இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய ஒற்றுமையை பாதுகாக்க தியாகம் செய்வதே எங்கள் கடமை! துக்ளக் வார இதழுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் பேட்டி

தேசிய ஒற்றுமையை பாதுகாக்க தியாகம் செய்வதே எங்கள் கடமை! துக்ளக் வார இதழுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. பேட்டி
http://www.muslimleaguetn.com/news.asp?id=178

போராட்ட அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அமைதியான சக வாழ்வையே நாங்கள் விரும்புகிறோம். தீவிரவாதத்ததை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. தேசிய ஒற்றுமையை பாதுகாக்கவும் அதற்காக தியாகம் செய்வது எங்கள் கடமை என்று நாங்கள் கருதுகிறோம் என்று பேராசிரியர் ஆகஸ்ட் 27ஆம் தேதி துக்ளக் வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். பேட்டி விபரம் பின்வருமாறு:-

கேள்வி:
இந்திய முஸ்லிம் லீக், முன்பு மத்தியிலும், மாநிலத்திலும் வலுவாகவும், செல்வாக்கான கட்சியாகவும் இருந்தது. இப்போது வேறு கட்சிகளைப் பெரிதும் சார்ந்திருக்கும் நிலையில் உள்ளது. இந்த நிலைக்கு என்ன காரணம்?

பதில்:
தமிழகத்தில் முஸ்லிம் லீக் முன்பை விட, தற்போது பலம் கூடியதாகவே உள்ளது. தற்போது முஸ்லிம்கள் மத்தியில் 58 இயக்கங்கள் உள்ளன. அவற்றுள் பல லெட்டர் பேட் அமைப்புகள்தான்.

60 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், இப்போதுதான் முதன்முறையாக முஸ்லிம் லீகைச் சேர்ந்த ஒருவர், மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராவதற்கான (இ.அஹமது) வாய்ப்பை பெற்றுள்ளார். இதன் மூலம் தேசிய அளவிலும், உலக அளவிலும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. பெரும்பாலான முஸ்லிம் மக்கள், எங்கள் இயக்கத்தை ஆதரிக்கிறார்கள்.

எங்கள் அமைப்பின் கூட்டங்களுக்கு ஆட்கள் குறைவாக வரலாம்... போராட்ட அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அமைதியான சகவாழ்வை நாங்கள் விரும்புகிறோம். முஸ்லிம் லீகைச் சேர்ந்தவர்கள், ஒரு நிய+ஸென்ஸ் கேஸில் கூட சம்பந்தப்படக்கூடாது என்று காயிதெமில்லத் சொன்னார். அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். முஸ்லிம் லீகின் மணி விழாவை ஒட்டிய மாநில மாநாட்டில் மூன்று லட்சம் பேர் பங்கேற்றார்கள். நாங்கள் சரியான பாதையில் செயல்படுகிறோம்.

கேள்வி:
த.மு.மு.க., தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புகளின் பக்கம், முஸ்லிம் இளைஞர்கள் போவதற்கு என்ன காரணம்?

பதில்:
எதையுமே தீவிரமாகப் பேசக்கூடியவர்களாகவும், அணுகக்கூடியவர்களாகவும் ஒரு சாரார் இருக்கிறார்கள் லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்பினர், சமுதாயத்தில் இவர்கள் ஒரு மிகச்சிறிய குழுதான்.

அடுத்ததாக, இஸ்லாமியக் கொள்கைகளை, மதக்கோட்பாடுகளை தாங்களும் தவறாக புரிந்து கொண்டு, இளைஞர்களையும் குழப்புகிறவர்கள் நீங்கள் குறிப்பிட்ட அமைப்புகள். உலகம் முழுவதும் இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் - ஜனநாயகம், தேசியம் . இதெல்லாம் தேவையில்லை என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி இவர்கள் இயங்குகிறார்கள்.

மூன்றாவது பிரிவு, இந்திய ய+னியன் முஸ்லிம் லீக். இஸ்லாம் - ஒரு உயர்ந்த மார்க்கம். அதைப் பின்பற்றும் மக்கள் உலகத்தின் பல பகுதிகளில் வாழ்கிறார்கள். அந்தந்த நாட்டின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அவர்கள் வாழ வேண்டும். ஜனநாயகம் என்பது இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமானது அல்ல. சொல்லப் போனால் நபிகள் நாயகத்தின் போதனைகள், ஜனநாயக மரபுகளை ஒட்டியவைதான். தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பதும், அதற்கான தியாகம் செய்வதும் எங்கள் கடமை என்று நாங்கள் கருதுகிறோம்.

முஸ்லிம்களின் வேதமான குர்ஆன், நபிகளுடைய வாக்கு மற்றும் வழிமுறைகள் என்று சொல்லக்கூடிய ஹதீஸ் மற்றும் 1400 ஆண்டுகளாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும், இஸ்லாமிய இலக்கியங்களும் வலியுறுத்திய கருத்துக்கள்தான் - இஸ்லாமியர்களுடைய வாழ்க்கை முறைக்கு வழி காட்டியாக இருக்க முடியும். இவற்றில் சொல்லப்பட்ட கருத்துக்கள், ஜனநாயகத்தின்பாற்பட்ட கருத்துக்கள்தானே தவிர, வேறு வழிமுறைகளை மார்க்கம் போதிக்கவில்லை.

ஆகவே, நாங்கள் தேசியத்தை நம்புகிறோம். 95 சதவிகித இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். தேசியப் பண்புகளை வளர்ப்பதோடு, பன்முகத்தன்மை கொண்ட இந்திய சமூகத்தில் ஒருவரை ஒருவர் மதித்து, சமூக நல்லிணக்கத்திற்குப் பாடுபடுவதை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், தனது கடமையாகக் கொண்டுள்ளது.

பள்ளிவாசல்களைச் சுற்றியுள்ள முஸ்லிம் குடும்பங்களை மார்க்கரீதியாக இணைக்கின்ற வகையில், தமிழகத்தில் 11 ஆயிரம் மஹல்லா ஜமாஅத்கள் இயங்கி வருகின்றன. நபிகள் நாயகம் கூறிய போதனைகளின் அடிப்படையில் இயங்கும் அமைப்புகள் இவை. தற்போது இதற்கு எதிராகப் போட்டி பள்ளிவாசல்களை த.மு.மு.க., தவ்ஹீத் அமைப்புகள் ஆங்காங்கு உருவாக்கியுள்ளன. அப்படி சுமார் 50 பள்ளிவாசல்கள் இருக்கும். பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வரும் வழக்கங்கள் சிலவற்றை இந்த அமைப்பினர் கடைப்பிடிப்பதில்லை.

உதாரணமாக, பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக போகும்போது தொப்பி அணிய மாட்டார்கள். ஜெயிலுக்குப் போகும்போது மட்டும் தொப்பியை எடுத்து மாட்டிக் கொண்டு, கையை ஆட்டுகிறார்கள். இது என்ன பெருமையான செயலா? இளைஞர்கள் தவறான பாதையில் திசை திருப்பப்படக்கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம்.

கேள்வி:
குண்டு வெடிப்புச் சம்பவங்கள், சதிகள் தொடர்பாக இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைது என்று செய்தி வெளியாகும்போது, அதைக் கண்டிக்கிறீர்கள். ஆனால், மதத்தின் பெயரால் இப்படி தீவிரவாதச் செயல்கள் நடைபெறுவதை எதிர்த்து ஒரு தொடர் இயக்கமோ, பிரச்சாரமோ நீங்கள் செய்வதில்லையே?

பதில்:
கடந்த 3 மாதங்களில் நான் சுமார் 200 கூட்டங்களில் இது பற்றிப் பேசியிருக்கிறேன். விளம்பரப்படுத்தி, அறிவித்துவிட்டு யாத்திரை மாதிரி செய்ய வேண்டும் என்கிறீர்கள். அப்படிச் செய்யவில்லைதான். ஆனால், எல்லா பள்ளிவாசல்களிலும், வன்முறையை மார்க்கம் ஏற்கவில்லை என்று எடுத்துச் சொல்லும்படி நாங்கள் கேட்டுக் கொண்டு, அவர்களும் (இமாம்கள், ஆலிம்கள்) தொழுகை முடிந்தவுடன், குத்பா பிரச்சாரத்தின்போது, இதுபற்றிப் பேசுகிறார்கள். அமைதியையும், பிற மனிதர்களுடன் ஒற்றுமையையும்தான் இஸ்லாம் வலியுறுத்துகிறதே தவிர, தீவிரவாதத்தை இஸ்லாமிய மார்க்கம் ஆதரிக்கவில்லை.

அதேசமயம் எல்லா வன்முறைச் சம்பவங்களையும் முஸ்லிம் கண்ணோட்டத்துடனேயே போலீசும், மீடியாவும் அணுகக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். காரணம், தமிழகத்தில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள், மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள்... என பல குழுக்கள் இயங்கி வருகின்றன.

கேள்வி:
மதம் வன்முறையைப் போதிக்கவில்லை என்கிறீர்கள். ஆனால், தீவிரவாதிகள் ஜிஹாத் என்றும், இறைவனின் கட்டளை என்றும் பேசுகிறார்கள்.

பதில்:
மதத்தின் போதனையை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு, தவறான காரியத்தில் ஈடுபடுகிறார்கள். தீவிரவாதத்தில் ஈடுபடுகிறவர்கள் இஸ்லாம் மார்க்கத்திற்கு இழுக்குத் தேடித்தரு கிறார்கள்.

கேள்வி:
சிமி மீதான தடை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:
ஆதாரங்கள் இல்லாமலா அரசு தடை செய்திருக்கும்? பல பெயர்களில் செயல்படும் இஸ்லாமிய அமைப்புகள் பற்றி, புலனாய்வு அமைப்புகளை கொண்டு ஆராய்ந்து, விரிவான ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று நான் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். காரணம், என்னென்னமோ சொல்கிறார்கள். இறைவன் ஒருவனே என்ற பெயரில் ஒரு இயக்கமாம். நான் மட்டும் என்ன, இறைவன் என்பது இரண்டு, மூன்று பேர் என்றா சொல்கிறேன்? அடுத்து இஸ்லாமியப் பாதுகாப்பு இயக்கம் என்றொரு அமைப்பு. நானும் இஸ்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

ஒரு சிலரால், மார்க்கத்துக்கே கெட்ட பெயர் வரக் கூடாது. ஆகவே, எந்தெந்த, அமைப்பு எப்படிப்பட்டது என்று தமிழக அரசு ஆராய்ந்து அறிவித்தால் நான் வரவேற்பேன். வன்முறையைத் தூண்டுபவர்கள், மதத்தின் பெயரால் துவேஷத்தைப் பரப்புகிறவர்கள், எந்த மதத்தவராயினும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதாரணமாக அமர்நாத் பிரச்சினை - அந்த மாநிலத்தில் பேசி தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதற்காக இங்கே சிலர் ஆர்ப்பாட்டம் என்று ஏன் நடத்த வேண்டும்? இங்கே கும்பகோணம் மகாமகத்தின்போது, முஸ்லிகள் தண்ணீர்ப்பந்தல் வைப்பதுண்டு. பிரகதீஸ்வரர் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டபோது, நாங்கள் 2 ஆம்புலன்சுகளை அனுப்பி, சுமார் 250 பேர் காப்பாற்றப்பட உதவினோம். இந்தப் பரஸ்பர நல்லுறவு நீடிக்க வேண்டும். அரசியலுக்காக மத உணர்ச்சிகளைத் தூண்டி விடுபவர்களால் அமைதி குலையும். எந்தத் தரப்பினர் இதைச் செய்தாலும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேள்வி:
சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு, முஸ்லிம்களுக்குப் பயனளிப்பதாக இல்லை என்று உங்கள் சமூகத்திலேயே ஒரு சாரார் கூறியுள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:
பயனே இல்லை என்று சொல்லி விட முடியாது. இதுவரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 147 பிரிவுகளோடு முஸ்லிம்களும் சேர்க்கப்பட்டிருந்தனர். அது கடலில் கரைந்த பெருங்காயம் மாதிரி. இப்போது முஸ்லிம்களுக்கு தனியாக 3.5 சதவிகிதம் எனும்போது, மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் பல இடங்கள் கிடைப்பது நிச்சயம் என்பது ஒரு பலன்தானே? முதலில் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களில் மட்டும்தான் முஸ்லிம்களுக்கு இடம் என்றிருந்தது போய், பிற கல்லூரிகளிலும் இடம் கிடைப்பதற்கு உத்தரவாதம் வந்துள்ளது. இதனால் பாதிப்பு முஸ்லிம் கல்வி நிறுவனங்களுக்குத்தான். இந்த ஒதுக்கீடு போதும் என்று சொல்வி விட முடியாது. ஆனால் பயன் அளிப்பதுதான்.

கேள்வி:
இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு ஒருவர் மாறினால், அவருடைய ஜாதி இழிவு நீங்கி விடுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், முஸ்லிம்களிலும் பின் தங்கியவர்கள் என்று சொல்லிச் சலுகை கோரப்படுகிறது. இது முரண்பாடு இல்லையா?

பதில்:
இஸ்லாம் மார்க்கத்தில் ஜாதி என்ற அமைப்பு இல்லை. வட மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்குள் ஜாதி அமைப்பு உள்ளது. தமிழகத்தில் இல்லை. ராவுத்தர், தக்னி, மரைக்காயர், லப்பை போன்ற பல பெயர்களில் முஸ்லிம்கள் இருப்பதாக, பெயர்க்காரணங்கள் உண்டு. குதிரை வியாபாரம் செய்தவர்கள் ராவுத்தர்கள்., மரக்கலங்களைச் செலுத்தி கரையோரம் வசித்தவர்கள், மரக்காயர்கள் - இப்படி பெயர்கள் வந்தன. இதை ஜாதியாக்கியது அரசியலும், இடஒதுக்கீடும்தான்.

பள்ளிவாசல்களில் வேலை செய்பவர்கள் லெவை எனப்படுவோர். ஆரம்பத்தில் அவர்களுக்கு மட்டும்தான் இடஒதுக்கீடு இருந்தது. பிறகு லப்பைகளுக்கும், மற்றவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு விட்டது.

கேள்வி:
முஸ்லிம்கள் நடத்துகிற ரமளான் நிகழ்ச்சியில், இந்துக்கள் விரதம் இருப்பதை முதல்வர் கலைஞர் கேலி பேசுகிறார். இந்து கடவுள்களை விமர்சிக்கிறார். இத்தகைய பேச்சுக்களை உங்களைப் போன்றோர், கண்டனம் செய்தால், மத நல்லிணக்கத்திற்கு உதவும் அல்லவா?

பதில்:
நாங்கள் ரமளான் நோன்பு திறப்பு நடத்தவில்லை. எங்களது எந்த நிகழ்ச்சியிலும் அவர் இந்து மதத்தைக் கிண்டல் செய்யவில்லை. சேது சமுத்திரத் திட்டம் பற்றிப் பேசும்போது, ராமரைப் பற்றி சில கருத்துக்கள் கூறினார். ஆனால், எங்களைப் பொருத்த வரை, பிற மதத்தினரின் நம்பிக்கைகளை மதிக்கிறோம். அதைக் குறை சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை. ராமரைப் பற்றி, முஹம்மது இக்பால் என்ற கவிஞர், இமாம் ஏ ஹிந்த் . அதாவது ~இந்தியாவின் ஆன்மீக குரு என்று புகழ்ந்து பாடி இருக்கிறார். இதை நான், பேராசிரியர் அன்பழகன் உட்கார்ந்திருந்த மேடையிலேயே எடுத்துக் கூறிப் பேசினேன்.

கேள்வி:
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம், முஸ்லிம்களுக்கு எதிரானது என்று மாயாவதியும், இன்னும் சிலரும் பிரச்சாரம் செய்தது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:
இது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒரு அரசு, இன்னொரு நாட்டு அரசுடன் செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்தத்தை, மதத்துடன் தொடர்பு படுத்திக் கொச்சைப் படுத்தக் கூடாது. இந்த ஒப்பந்தம் குறித்த எங்களது சில ஐயங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, திருப்தி அளிக்கும் வகையில் விளக்கங்கள் தந்தார். இந்த ஒப்பந்தத்தால், நமது அணு ஆயுத சுதந்திரம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது.

அமெரிக்க ஆதிக்கம் என்கிறார்கள். அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் இப்போது இல்லை. சீனா, பிரேசில், மெக்ஸிகோ போன்ற பல நாடுகள் வலுவடைந்து வருகின்றன. இன்னும் 10 ஆண்டுகளில் நாம் சீனாவை முந்தி விடுவோம் என்று ஜெர்மானிய பத்திரிகை ஒன்று கணிக்கிறது. ஆகவே, அமெரிக்காவின் ஆதிக்கம் என்பதே அர்த்தமற்றது.

கேள்வி:
தமிழகத்தில் தி.மு.க.வுடன் இடதுசாரிகள் நீடிப்பது சந்தேகமாகி விட்டது. இடதுசாரிகளுடன் முஸ்லிம் லீகிற்கு நல்லுறவு உண்டு. முஸ்லிம் லீக் தி.மு.க. அணியில் தொடருமா? மூன்றாவது அணி பற்றிப் பரிசீலிக்குமா?

பதில்:
தமிழகத்தில் கலைஞர் தலைமையிலான, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியிலும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அணியிலும் - இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொடரும். மூன்றாவது அணி வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்பதே எங்கள் கருத்து.

-இவ்வாறு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் பேட்டியில் கூறியுள்ளார்.

பேட்டி: எஸ்.ரமேஷ்
நன்றி: துக்ளக்

கருத்து

கருத்து


Tamil Nadu State Indian Union Muslim League
dateMon, Aug 25, 2008 at 12:46 PM
subjectRe: http://quaidemillathforumuae.blogspot.com/

Dear Hidayath,
Visited the web site,nice updations,also you can add the office bearers list.
Regards,
Abu

abdul rahman
to"Ali, Liyakath" ,
skshameed@yahoo.com,
dateFri, Aug 29, 2008 at 8:29 PM
subjectRe: http://quaidemillathforumuae.blogspot.com/

Thambi Hidayath,
Excellent effort.
Very nice collection of photos and information.
You have put your good effort in maitaining the site so effective.
Please keep it up.
Thanks.

Abdul Rahman

Thursday, August 21, 2008

அமர்நாத்: அத்வானிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்

அமர்நாத்: அத்வானிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்


தென்காசி, ஆக. 20: அமர்நாத் நில விவகாரத்தை மதப் பிரச்னையாக்க வேண்டாம் என, அத்வானிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் கே. எம். காதர்மொய்தீன் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இம் மாதம் 30-ம் தேதி சேலத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. கடந்த மாதம் 21-ம் தேதி நடைபெற்ற மணிவிழா மாநாட்டின் தீர்மானங்களை நடைமுறைபடுத்துவது குறித்து இக் கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

அமர்நாத் நில விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி பிரசாரம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். இது அந்த மாநிலப் பிரச்னை.

தேர்தலுக்காக அமைதியைக் கெடுத்துவிடக் கூடாது. இது மக்களைப் பாதிக்கும். மதப் பிரச்னையாக உருவெடுத்துவிடும் என்றார் அவர்.

புதுப்பட்டினம் சம்பவம்: ஜாதி மோதல் அல்ல: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விளக்கம்

புதுப்பட்டினம் சம்பவம்: ஜாதி மோதல் அல்ல: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விளக்கம்


சென்னை, ஆக. 20: புதுப்பட்டினத்தில் நடந்த சம்பவம் போதையில் வந்தவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறே தவிர ஜாதி மோதல் அல்ல என்று தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அதன் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பு செயலாளர் புதுப்பட்டினம் எஸ்.ஜாகீர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள், புதுப்பட்டினத்தில் இற ங்கி அங்குள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடு க்க மறுத்ததால் தகராறு ஏற்பட்டது.

உணவக உரிமையாளர் பாஷா உள்பட 5 பேர் ஆயுதங்களால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தனர். முஸ்லிம்கள் நடத்தும் 15 கடைகள் தாக்குதலில் பாதிக்கப்பட்டன.

உடனடியாக காவல்துறையினர் விரைந்து வந்து கலவரம் செய்தவர்களை விரட்டி, நிலைமையைக் கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தனர். உடைமைகள் காப்பாற்றப்பட்டன.

இதுபற்றி அறிந்த தலைவர் கே.எம்.காதர் முகைதின் என்னிடம் நிலைமையைக் கேட்டறிந்தார்.

இச்சம்பவம் போதையில் வந்தவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே தவிர சாதி மோதல் அல்ல. இதைத் தெளிவுபடுத்திய வியாபாரிகள் சங்கத் தலைவர் வெள்ளையன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோருக்கு நன்றி.

பாதிக்கப்பட்ட வியாபாரிகள், படுகாயமடைந்தவர்கள் அனைவருக்கும் முதல்வர் உதவ வேண்டும் என்றும் ஜாகீர் கோரியுள்ளார்.

Saturday, August 16, 2008

அமீரக காயிதெ மில்லத் பேரவை நிகழ்வில் மு.க.ஸ்டாலின்




அய்மான் வெள்ளி விழாவில் பங்கேற்க வருகை புரிந்த திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அமீரக காயிதெமில்லத் பேரவை ஹோட்டல் ரெனைசன்ஸில் ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்வின் புகைப்படங்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.