Saturday, August 7, 2010

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்:ரயில்வே இணை அமைச்சர் இ.அகமது

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்:ரயில்வே இணை அமைச்சர் இ.அகமது

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் இ.அகமது தெரிவித்தார்.

இது குறித்து மாநிலங்களவையில் அவர் கூறியதாவது,

2009 10 ஆம் ஆண்டில் முன்பதிவுள்ள ரயில் பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் 9.84 லட்சம் பேர் சலுகை கட்டணத்தில் பயணம் செய்துள்ளனர்.

சக்கர நாற்காலி பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக கழிப்பறை வசதியுடன்கூடிய பிரத்யேக ரயில் பெட்டிகளை ரயில்வே தயாரித்து வருகிறது.

ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக சக்கர நாற்காலிகள் வைக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கிய ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோருக்காக இலவச பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்காக பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

மாற்றுத் திறனாளிகள் நடைமேடையில் ஏறி, இறங்கவும், நடைமேடை மாறுவதற்கும் வசதியாக நடைமேடையின் இரு புறமும் சரிவுப்பாதை உள்ளது என்றார்.