Thursday, August 26, 2010

திருநெல்வேலி ஜங்ஷன் ஜும்ஆ பள்ளி இ.யூ. முஸ்லிம் லீக் இணைந்து நடத்திய இஃப்தார்



திருநெல்வேலி ஜங்ஷன் ஜும்ஆ பள்ளி இ.யூ. முஸ்லிம் லீக் இணைந்து நடத்திய இஃப்தார்
சமுதாயப் பிரமுகர்கள் பங்கேற்றனர்

திருநெல்வேலி, ஆக.26‍

திருநெல்வேலி மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், நெல்லை ஜங்ஷன் ஜும்ஆ பள்ளி ஆகியவை இணைந்து இஃப்தார் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தின. இதில் சமுதாயப் பிரமுகர்கள் ஏராளமா னோர் பங்கேற்றனர்.

திருநெல்வேலி சந்திப்பு ஜும்ஆ பள்ளியில் நடை பெற்ற இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரமுகரும், ஷிபா மருத்துவமனை அதிபரு மான டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி தலைமை தாங்கினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் எஸ். கோதர் முகைதீன், மாவட்ட துணைத் தலை வர் வி.எஸ். டி. சம்சுல் ஆலம், மாவட்ட துணைச் செயலாளர் பாட்டப்பத்து முஹம்மது அலி, முஸ்லிம் அனாதை நிலைய செய லாளர் எம். கே.எம். கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

நெல்லை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். துராப்ஷா வரவேற்றுப் பேசினார். மாநில அமைப் புச் செயலாளர் நெல்லை அப்துல் மஜீத், மாநில மாணவர் அணியின் அமைப்பாளரும், மாவட் டச் செயலாளருமான எல். கே.எஸ். மீரான் முகைதீன், மேலப்பாளையம் உஸ்மா னியா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லானா பி.ஏ. ஹாஜா மொய்தீன் ஹஸ ரத், எஸ்.எம்.எஸ். ஹபீப் ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் நெல்லை லாட்ஜ் அச துல்லா, கோஸ் கனி, கலீல், எம்.கே.எம். முஹம்மது நாசர், அப்துல் கரீம், மஹபூப் அலி, மாவட்டச்செயலாளர் கடையநல்லூர் டி.ஏ. செய்யது முஹம்மது, மாவட்ட அமைப்புச் செயலாளர் கவிஞர் வீரை ரஹ்மான், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஏ. ஹைதர் அலி, மேலப்பாளையம் நகரச் செயலாளர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர் எம்.சி., அம்பை அமா னுல்லா, சாகுல் ஹமீது உள்ளிட்ட ஏராளமான சமுதாயப் பிரமுகர்கள் பல நூற்றுக்கணக்கான ஜமா அத்தார்கள், முஸ்லிம் லீக் நிர்வாகிகள், திருநெல் வேலி சுற்று வட்டார பிரை மரிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நெல்லை சந்திப்பு ஜும்ஆ பள்ளி இமாம் முஹம்மது இப்ரா ஹீம் ஹஸரத் கிராஅத் ஓதினார். பள்ளிவாசல் செயலாளர் வரிசைமைதீன் நன்றி கூறினார்.