Friday, August 6, 2010

சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபட்டவர் ஷிஹாப் தங்ஙள்

சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபட்டவர் ஷிஹாப் தங்ஙள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது புகழாரம்

புதுடெல்லி, ஆக.5-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் செய்யது முஹம் மதலி ஷிஹாப் தங்ஙள், சமூக நல்லிணக்கத்துக்கும் - மதச்சார்பற்ற ஒற்றுமைக் கும் பாடுபட்டவர் என்று அவரது தபால் தலை வெளியீட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய ரயில்வே துறை இணைய மைச்சரும், இந் திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியத்தலைவருமான இ.அஹமுது புகழாரம் சூட்டி னார்.

தபால் தலை வெளியீடு
சையது முஹம்மதலி ஷிஹாப் தங்ஙளின் தபால் தலை வெளியீட்டு விழா புதுடெல்லியில் ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி நடை பெற்றது. தபால் தலையை பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரவேற்புரை நிகழ்த்திய இ. அஹமது கூறியதாவது-

மறைந்த தலைவர் செய்யது முஹம் மதலி அலி ஷிஹாப் தங்ஙள் அவர்களின் நினைவு தபால் தலையை வெளியிட முடிவெடுத்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நான் எனது சார்பாகவும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பாகவும் இதயங் கனிந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

எப்போதெல்லாம் நான் பிரதமரை சந்திக்கின் றேனோ அப்போதெல் லாம் அவர் ஷிஹாப் தங் ஙள் அவர்களுக்கு அவரது நல்வாழ்த்துக்களையும், பெருமதிப்பையும் தெரி வித்துக் கொள்ளும்படி கூறுவார். அவரது இந்த பெருந்தன்மைக்கு நன்றி கூறுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. எங் களது மறைந்த தலைவரின் பால் சோனியாகாந்தி கொண்டிருந்த பற்றிற்கும், பரிவிற்கும் நான் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இ.ய+. முஸ்லிம் லீக் -
காங்கிரஸ் உறவு

மறைந்த தங்ஙள் சாஹிப் அன்னை சோனியா காந்தியை சந்தித்த போது அவர் காங்கிரசுக்கும், முஸ்லிம் லீகுக்கும் பல ஆண்டுகளாக தொடர்பு நீடித்து வருகிறது என்றும், அதை அவரது மாமியார் இந்திரா காந்தியும் தங்ஙள் அவர் களின் மாமனார் செய்யது அப்துர் ரஹ்மான் பாபாக்கி தங்ஙள் ஆகியோ ரும் தொடங்கி வைத்தார் கள் என்றும் அதனை நான் எதிர்காலத்தில் தொடர்ந்து கொண்டு செல்ல வேண் டும் என்று கூறியதையும் நான் இங்கு நினைவுகூரு கிறேன்.

ஷிஹாப் தங்ஙள் அவர் கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தின் வழிவந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். 1936 மே மாதம் 4-ம் தேதி மலப்புரத்தில் பிறந்த தங்ஙள் பானக்காடு சையத் அஹமது ப+க் கோயா தங்ஙள் அவர்க ளின் மூத்த மகனாவார்.
முஸ்லிம் லீகின்

ஒப்பற்றத் தலைவர்

தங்ஙள் சாஹிப் உயர்நிலைக் கல்வியையும், ஆரம்ப மதக் கல்வியையும் முடித்த பிறகு எகிப்து சென்று அங்கே அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத் தில் அரபி மொழியில் மேற்பட்டப்படிப்பை முடித்தார். 1975-ல் அவர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் கேரள மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டார். அந்த பொறுப்பில் 2009-ல் அவர் மறையும்வரை இருந்தார். தங்ஙள் சாஹிப் கேரளா வில் முஸ்லிம் சமூகத்தில் ஒப்பற்றத் தலைவராக விளங்கினார்.

நூற்றுக்கணக்கான மஹல்லாக்களில் காஜி யாக இருந்திருக்கிறார். கேரளாவிலும் மற்ற தென் னிந்திய பகுதிகளிலும் ஏராளமான கல்வி, சமூக இவற்றின் கலாச்சார நிறுவ னங்களின் பாதுகாவலராக இருந்திருக்கிறார் அவரி டம் வாழ்த்துக்களையும், வழிகாட்டல்களையும் பெறுவதற்கு ஏராளமான பேர் கூடும் யாத்ரீகர்கள் ஸ்தலம்போல் அவர் வீடு விளங்கியது.

கல்வி வளர்ச்சிக்கு
பாடுபட்டவர்

மலபார் பகுதியில் பின் தங்கிய ஊர்களில் தரமான கல்வியை வழங்குவதற்கு அவர் பல கல்வி நிறுவனங் களை ஏற்படுத்தினார்.

அவரது மறைவால் கேரளா ஒரு உன்னதமான பெருமகனை இழந்து விட்டது. தங்ஙள் சாஹிப் வளைகுடா நாடுகளிலும் பிரபலமடைந்திருந்தார். அரபு நாடுகளின் அரச குடும்பத்தினருடனும், மற்ற தலைவர்களுடனும் அவர் நேரடி தொடர்பு வைத்திருந்தார். இந்திய - அரபு நாடுகளின் உறவுக்கு அவர் ஒரு நல்லெண்த் தூதராக விளங்கினார்.
அவர் சமூக நல்லிணக் கம், மதச்சார்பற்ற ஒற் றுமை ஆகியவற்றுக்காக தொடர்ந்து பாடுபட்டார். அனைத்து வகையான வன்முறைகளையும் கைவிட வேண்டும் என்று மக்களை அவர் வற்புறுத் தினார்.

மத நல்லிணக்கத்துக்கு
உழைத்தவர்

1992-ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது, அவர் மக்களை அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தார். அவரது அழைப்பு கேரளாவில் அதிசயத்தை ஏற்படுத்தி யது. இந் நிகழ்வு ஷிஹாப் தங்ஙளுக்கு மக்கள் மத்தி யில் உள்ள செல்வாக்கை காட்டுகிறது.

அவருடன் அரசியல் ரீதியில் கருத்து மாறு பாடுகள் கொண்டிருந்தவர் கள்கூட அவரிடம் மதிப்பு காட்டினார்கள். தங்ஙள் சாஹிப் 2009 ஆகஸ்டு 1-ம் தேதி மறைந்து விட்டார். அப்போது அவரது இல்லத்திற்கு சாரிசாரியாக இறுதி மரியாதை செலுத்த வந்த மக்கள் கூட்டம் அவர் மீது கொண்டிருந்த பாசம், நேசம், நன்மதிப்பு ஆகிய வற்றை உணர்த்தியது.
இந்த தேசத்தின் மிக உன்னதமான தலைவர் களில் ஒருவராக அவரை வரலாறு அங்கீகரித்து நினைவ+ட்டுகிறது. அல்லாஹ் அவர்களின் நற் செயல்களை அங்கீகரித்து நல்லடியார்கள் கூட்டத் தில் சேர்த்தருள்வானாக.

இவ்வாறு இ.அஹமது குறிப்பிட்டார்.