Tuesday, August 3, 2010

ஆகஸ்ட் 1-ல் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டம் அனைத்து மாநில தலைவர்கள் சென்னை வருகை மிகச் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள்

ஆகஸ்ட் 1-ல் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டம் அனைத்து மாநில தலைவர்கள் சென்னை வருகை மிகச் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள்

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழுக் கூட்டம் சென் னையில் ஆகஸ்ட் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடை பெறுகிறது.
இக்கூட்டத்தில் பங் கேற்க இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாகிகள், அனைத்து மாநில தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பனர்கள் சென்னை வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு ஏற் பாடுகளை இந்திய ய+னி யன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில தலைமை யகம் செய்ள்ளது.
தேசிய செயற்குழு
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி (நாளை) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை எழும்ப+ரிலுள்ள ஃபைஜ் மஹாலில் நடைபெறு கிறது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய ரயில்வே இணை அமைச் சருமான இ.அஹமது தலைமையில் நடை பெறும் இக்கூட்டத்தில் அனைவரையும் வரவேற்று தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் விளக்க உரை யாற்றுகிறார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நடவடிக் கைகளை தேசிய அளவில் ஒரே மாதிரியாக நடை முறைப்படுத்த சட்டத் திருத்தங்கள் செய்வது பற்றி இக்கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
இளைஞர் அணி மாநாடு
அரசியல் விழிப்புணர் வுடன் இளைஞர்களை ஒருமுகப்படுத்தவும், தீவிரவாதத்தின் வலையில் எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் வீழ்ந்து விடா மல் பொதுநலப் பணியாற் றவும் உரிய வழிகாட்டு தலைச் செய்ய இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இளைஞர் அணி மாநாட்டை தேசிய அள வில் நடத்துவது பற்றி இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட உள்ளன.
நிர்வாகிகள் வருகை
தேசிய செயற்குழுவில் பங்கேற்பதற்காக இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவர் இ.அஹமது நேற்று (ஜூலை30) மாலை 7 மணிக்கு டெல்லியிலிருந்து விமானம் மூலம் வருகை தந்தார்.
தேசிய பொருளாளர் தஸ்தகீர் இப்ராஹிம் ஆகா, தேசிய செயலாளர்கள் டெல்லி குர்ரம் அனீஸ் உமர், பீகார் நயீம் அக்தர் ஆகியோரும் சென்னை வந்துள்ளனர்.
அனைத்து மாநிலங்களி லிருந்தும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் செய லாளர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
அவர்களின் விவரம் வருமாறு:
கர்நாடக மாநிலத்திலி ருந்து எம்.எஸ். இனாம் தார், மஹாராஷ்ரா மாநிலத் திலிருந்து சமீம் சாதிக், மேற்கு வங்காளத்திலிருந்து சலீம் மக்கர், ஆந்திர மாநி லத்திலிருந்து காலித் ஜிபைரி, ஆஸம் மொய்னு தீன், உத்திரபிர தேசத்தி லிருந்து கவுசர் ஹயாத் கான், முக்தர் ராணா, ஜார்கண்ட் மாநிலத்திலி ருந்து அம்ஜத் அலி, உத்தி ரகாண்ட்டிலிருந்து காஃலிப் ஹசன், அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து முஹம்மது திலீர் கான், கேரளத்திலிருந்து ஹாமித் அலி சாம்நாட், ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து அம்ஜத் அலி, அட்வகேட் எம்.கே. ஹபீப் ஆகியோர் சென்னை வருகை தந்துள்ளனர், இன்னும் பல்வேறு மாநி லத்திலிருந்து வருகை தர உள்ளனர். கேரள மாநில நிர்வாகிகள் அனைவரும் ஆகஸ்ட் 1-ம் தேதி காலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருகை தருகின்றனர்.
வரவேற்பு ஏற்பாடுகள்
செயற்குழுவிற்கு வருகை தரும் தேசிய நிர்வாகி களையும், அனைத்து மாநில தலைவர்களையும் வரவேற்று உபசரிக்கும் பணி மும்முரமாக நடை பெற்று வருகிறது.
இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வழிகாட்டுதலில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர் இப்பணிகளை ஒருங் கிணைத்து வருகிறார்.
மாநில நிர்வாகிகள் அணிகளின் அமைப்பா ளர்கள் ஒத்துழைப்புடன் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் மீனம் பாக்கம் விமான நிலை யத்தில் இருந்தும், சென்னை சென்ட்ரல், எழும்ப+ர் ரயில் நிலைய பகுதிகளிலிருந்தும், அண்ணாசாலை உள் ளிட்ட முக்கிய இடங்களி லிருந்தும் பச்சிளம் பிறைக் கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டு வருகின்றன. வரவேற்பு பதாகைகளும் வைக்கப்படுகின்றன.
இப்பணிகளில் வட சென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அமைப்புகள் ஈடுபட் டுள்ளன.
முஸ்லிம் மாணவர் பேரவை
வரவேற்பு பணிகளை முஸ்லிம் மாணவர் பேரவையை சேர்ந்த டி.கே. ஷா நவாஷ், வி.ஏ. செய்யது பட்டாணி , வி. ஏ. செய்யது அபுதாஹிர், அப்துல் ரஹிம், இஸ்ஸத் மக்கி, அபுல் காசிம், எம்.அன்வர் உசேன், முஹம்மது உஸ்மான், ஏ.கே. முஹம் மது ரபி, அப்துல் ஹக், இம்ரான் கான், எம்.எஸ். காதர் உள்ளிட்டோர் சிறப்புற செய்து வருகின் றனர்.