சிந்தித்தால் தெளிவு பிறக்கும்! - மோதீன் கே.ஏ. அப்துல் நசீர் (அய்யம்பேட்டை)
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் நடைபெற்றபோது ஆரம்பம் முதலே அருகில் இருந்து அனைத்து அமர்வுகளையும் மனதினுள்ளே வாங்க வேண்டும் என்றெண்ணி இயக்கத்தின் தலைவர்களுடன் பயிற்சி முகாம் நடைபெறும் வழுத்தூர் என்ற சாதனை புரிந்து சிற்றூருக்குள் நுழைகின்றோம்.
திரண்டிருந்த மக்கள் கூட்டம் தலைவர் பேராசிரியரையும் மற்றவர்களையும் வரவேற்க தலைவர் பேராசிரியர் இளம் பிறைக் கொடியை ஏற்றி பயிற்சி முகாமின் முதல் அமர்வு தொடங்கப்படுகிறது. தமிழகம் முழுவதிலுமிருந்து மிகுதியான இளைஞர்கள் வந்திருந்தாலும் சிறு சத்தம்கூட இல்லாமல் அமைதியாக அமர்ந்து நிகழ்வுகளை உன்னிப்புடன் கவனித்து கொண்டிருந்தார்கள்.
தலைவர் பேராசிரியர் துவக்கஉரையாற்றினார். எளிமையான விழாக் கோலம் - கண் சிமிட்டாமல் காது கொடுத்து கேட்டுக்கொண் டிருக்கின்றேன். பேரியக்கத்தின் இளைஞர்கள் ஆர்வமிகுதியில் தலைவர்கள் உரை யாற்றும் போது கைதட்டும்போதெல்லாம் மாநில பொதுச்செயலாளர் இளவல் அப+பக்கர் எழுந்து மைக்கை எடுத்து கைதட்டுவது கூடாது என்று அன்புடன் கேட்டுக்கொண்டார்கள். என்ன இது - புதிராக இருக்கிறதே? பெரும் சாதனைகளை சப்தமில்லாமல் செய்த இப்பேரியக்கத்தின் பயிற்சியரங்கம் எளிமையாக நடைபெறுகின்றது. வாண வேடிக்கைகளை விரும்பும் அரசியல் அரங்கில் என்ன புதுமை இது.
தலைவர்களை சாதார ணமாக சந்தித்து அளவளா வும் தொண்டர்கள் - எளிமையின் சின்னமா அமர்ந்திருக்கும் தலைவர்கள். அவரவருக்கு பயிற்சியரங்கப் பணிகளை பொறுப் பெடுத்து கொண்டதைப் போல் பம்பரமாய் சுற்றி உழைக் கும் நேர்த்தி, பேரியக்கத்தின் சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளு மன்ற உறுப்பினரும் தமக்கிடப்பட்ட அரசியல் பணிகளை மிக நேர்த்தியாக எடுத்துரைப்பதும், தங்களது உரைகளிலே கண்ணியத்தையும் கண்டபோது புத்தம் புதிராக இருந்தது.
நாட்டு நடப்புகளை, சமுதாயப் பிரச்சிகைளை அழகான கண்ணியமான முறைகளில் எடுத்துரைக் கும் தலைவர்கள், தொண் டர்களை தூண்டி விடாத தலைவர்கள் - விந்தையிலும் விந்தையாக இருந்தது..
இப்பேரியக்கத்தின் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத், சிராஜுல் மில்லத் போன்ற மாபெரும் தலைவர்களால் வழிநடத்தப்பட்டு இப்போதைய தலைவர் பேராசிரியர் அவர்களால் எப்படி சத்தமில்லாமல் சாதனைகளை தொடர்ந்து செய்ய முடிகின்றது. எப்படி அரசியல் அரங்கிலே இந்த பேரியக்கம் பல கட்சி கூட்டணிகளில் இடம் பெற முடிகின்றது?
பயிற்சிரங்கத்தின் மறுநாள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேரத்தால் அமர்வுகள் அனைத்தும் தொழுகைக்கு பிறகு தொடரும் என அறிவிக் கப்பட்டு தலைவர்கள் முதல் அனைவரும் ஜும்ஆ தொழுகைக்கு புறப்படுகின் றோம். வழுத்தூர் அய்யம்பேட்டை மற்றும் சக்கராப்பள்ளி ஊர்களில் உள்ள ஒவ்வொரு ஜும்ஆ பள்ளிகளையும் தேர்ந்தெடுத்து அழகான முறையில் அறிவிப்பு செய்து இயக்கத்தின் ஒவ்வொரு தலைவரும் ஜும்ஆ பிரசங்கம் செய்தபோது வியப்பின் விளிம்புக்கே சென்றுவிட்டேன்.
எளிமையான அரசியல் இயக்கமாக இரண்டு நாட்களாக அடையாளம் கண்ட எனக்கு தலைவர்களின் ஜும்ஆ பிரசங்கம் புதிராக இருந்தது. இஸ்லாமியப் பெரியார்களிடத் திலே இந்த இயக்கத்திற்கும், அதன் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஏற்பட்டுள்ள மரியாதையும், கண்ணியத்தையும் நேரிடையாகக் காண முடிந்தது. ஜும்ஆ தொழுகை முடிந்து பள்ளிவாசலை விட்டு வெளியே வந்தபோது சிறு தெளிவு ஏற்பட்டது.
ஆம். இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் என்ற இந்த பேரியக்கம் அமைதியாக இஸ்லாமிய சமுதாயத்திற்கான சேவைகளை எப்படி சாதிக்க முடிகிறது என்பது புரிந்தது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் என்ற இந்த பேரியக்கத்தில் இஸ்லாமிய சகோதரர்கள் எப்படி நெருக்கமாக இருக்கின் றார்கள் என்பதை நேரில் காண முடிந்தது. இந்திய இஸ்லாமிய சமு தாயத்திற்கு சேவை செய்வதாக கூறிக் கொண்டு எத்தனையோ இயக்கங்கள், அமைப்புகள் அலம்பலாய் விளம்பரப் படுத்திக் கொண்டு வந்து வந்த வழிச்சுவடே தெரியாமல் மறைந்து போனது. அறிவிப்பு விளம்பரங்களில் தம்மைப் பிர பலப்படுத்திக் கொண்ட அந்த இயக்க அமைப்பு தலைவர்களெல்லாம் விலாசமில்லாமல் கொஞ்ச நாளில் மறைந்து போனார்கள்.
பொய்யான புகழுக்கு ஆசைப்பட்டவர்களெல்லாம் தொண்டர்களாலேயே குறை, குற்றங்கள் சுமத்தப்பட்டு விலக்கி வைக்கப்பட்டார்கள். விபரீத வழிகளை அரசியல் உலகில் தேர்ந்தெடுத்த தலைவர் களெல்லாம் ஒருநாள் வீசியெறியப்பட்டார்கள்.
ஏன் என்ன காரணம்?
புகழுக்கு ஆசைப்பட்டவர்களாக இருந்த அவர்கள் இஸ்லாமிய சகோதரர்களிடையே ஒழுங்குற பழகி அவர்களின் தேவைகளை அறியாதவர்களாக இருந்தார்கள். கட்டுக்கடங்காத அரசியல் புகழாசையில் கண்ணியமாக அரசியல் செய்ய மறந்தார்கள்.
இப்போது தெளிவாக விளங்கிவிட்டது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மட்டுமே கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய இஸ்லாமிய சமுதாயத்திற்கு தொடர்ந்து சேவையாற்றுவதன் ரகசியம் புரிந்து விட்டது.
எந்த இஸ்லாமிய அமைப்பு- இயக்கம் சார்ந்த தலைவர்கள் ஜும்ஆ பிரசங்கம் செய்ய ஜும்ஆ பள்ளிவாசல்களில் அனுமதிக்கப்பட்டார்கள்?
இஸ்லாமிய சமுதாயத்துடன் நெருக்கமான நட்புறவுடன் கொள்கை அளவில் இந்திய ய+னியன்
முஸ்லிம் லீக் மட்டுமே இருந்தது, இருந்து வருகின் றது என்பதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டு இது ஒன்று போதுமே. அதன் வெளிப்பாடுதான் ஜும்ஆ பிரசங்கங்கள். இஸ்லாமிய கோட்பாடுகளையும், வரைமுறகளையும் எல்லைத் தாண்டாத ஒரே அரசியல் கட்சி இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மட்டுமே.
தற்கால அரசியலிலே வழி மாறி, இஸ்லாமிய வாழ்வு முறையிலி ருந்து விலகிச் சென்று இஸ்லாமிய விரோதக் கொள் கைகளுக்கு அடிமையாகி புகழையும், செல்வத்தையும் நாடியவர்களாக தன் வாழ்க்கைப் பயணத்தை மாற்றிக்கொள்கிறார்கள்.
ஆனால், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்டுள்ள இஸ்லாமிய இளைஞர்கள் கண்ணியமான முறையில் அரசியல் செய்யவும் இஸ்லாமிய வரைமுறைகளுக்குட்பட்டு தங்களது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் ஆர்ப்பாட்டமான அரசியல் கிடையாது. தன் கருத்துக்களை ஜனநாயக முறையிலே எடுத்துச் சொல்லி சாணக்கியத்தனமாய் நிறைவேற்றிக்கொள்ளும் சாதுர்யம் உள்ளது. இந்திய அரசியல் அரங்கிலே இந்தப் பேரியக்கத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நட்பு றவாய் நல்ல நண்பனாக இருந்து தோழமையுடன் தன் தனித்துவத்தை நிரூபித்து வருகின்றது.
இந்த பேரியக்கம்போல் எந்த இஸ்லாமிய இயக்கம் ஃ அமைப்புகளோ அரசியல் அரங்கிலே நிரந்தரமாக இருந்தது கிடையாது. நிரந்தரமான அரசியல் அங்கீகாரம் பெற்றதும் கிடையாது.
தான்தோன்றித்தனமாக அறிக்கைகள், போராட்டங்கள் இந்தப் பேரியக்கத்தில் கிடையாது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற நிலைப்பாடும் கிடையாது. தெளிவான கொள்கைகளுடன் மிதமான வேகத்தால் அரசியல் அரங்கிலே முன்னேறி வரும் பேரியக்கம் இது.
அனைத்து அரசியல் கட்சி களுடனும், வேறுபாடில்லாமல் நட்புறவுடன் இருக்கக்கூடிய இஸ்லாமிய இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மட்டுமே. இவை அனைத்துமே இரண்டு நாள் பயிற்சி முகாமில் புரிந்தது. இந்த இயக்கத்தில் என்னை அர்ப்பணித்து சேவையாற்ற முடிவெடுத்தேன். எனதருமை இளைய சமுதாயமே நீங்களும் கண்ணியமான அரசியல் காண சமுதாய சேவையாற்றிட இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
- மோதீன் கே.ஏ. அப்துல் நசீர்
அய்யம்பேட்டை