Saturday, March 12, 2011

நம் தாய்ச்சபை!

நம் தாய்ச்சபை!

இலட்சோப லட்சம் கரங்களால் எழுப்பப்பட்ட மாளிகை.இதில் கோட்டான்களின் அலறலுக்கு இடமில்லை!

இது லட்சோப லட்சம் வியர்வைத்துளிகளால் உருவாக்கப்பட்ட கடல்.இதில் திமிங்கலங்கள் நீந்த தடை விதிப்போம்!

இது இலட்சோப லட்சம் மரங்களால் உருவாக்கப்பட்ட வனம்.இதில் குள்ளநரிகள் நாட்டாண்மை செய்ய அனுமதியோம்!

இது இலட்சோப லட்சம் பாறைகளால் உருவாக்கப்பட்ட மலை.சுண்டெலிகள் இதை சுரண்டுவது சாத்தியமில்லை!

செங்குருதி சிந்தி-இன்னுயிர் ஈந்து இலட்சோப லட்சம் தியாகிகள் உருவாக்கிய இயக்கம் இது.இதன் புனிதம் காப்போம்!

வல்லூறுகளின் சிறகுகள் இந்த வானத்தில் விரியாது-ஷைத்தானின் ஜம்பம் பலிக்காது!
ஒன்றுபட்டு நிற்போம்!

உரத்த குரலில் முழங்குவோம்!

முஸ்லிம் லீக் ஜிந்தாபாத்! -வழக்கறிஞர் வெ.ஜீவகிரிதரன்


நன்றி மணிச்சுடர் நாளிதழ்
12/13/03/2011