Showing posts with label இரங்கல். Show all posts
Showing posts with label இரங்கல். Show all posts

Saturday, December 26, 2009

பள்ளப்பட்டி ஹாஜி வி.எம்.அப்துல் ஜப்பார் மரணம்: முஸ்லிம் லீக் இரங்கல்

பள்ளப்பட்டி ஹாஜி வி.எம்.அப்துல் ஜப்பார் மரணம்: முஸ்லிம் லீக் இரங்கல்



இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் பள்ளப்பட்டி ஹாஜி வி.எம். அப்துல் ஜப்பார் நேற்று (25-12-09) அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு இரங் கல் தெரிவித்து வழுத்தூ ரில் நடைபெற்ற முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டத் தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

அதில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது-

பள்ளப்பட்டி ஹாஜி வி.எம்.அப்துல் ஜப்பார் - தமிழக சட்டமன்ற முன் னாள் உறுப்பினர்:

சமுதாயத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் முக்கியப் பெருந் தகையுமான ஹாஜி வி.எம். அப்துல் ஜப்பார், 25.12.2009 பிற்பகல் 2.30 மணிக்கு காலமானார். தனது 84 வயதிலும், சமுதாய நல னில் பெரும் அக்கறை கொண்டவராகத் திகழ்ந்த அவர், 1971-76 ஆண்டு களில் அரவக்குறிச்சி சட்ட மன்றத் தொகுதியில், இந் திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டு, திறம்பட செயல்பட்டவர்.

அவரது காலத்தில் தான், உருது பேசுவோர் உள்ளிட்ட முஸ்லிம்கள் அனைவரும் பிற்பட் டோர் பட்டியலில் இடம் பெற்றனர். இதற்காக கடுமையாக உழைத்தவர் அவர்.

பள்ளப்பட்டி பேரூ ராட்சி மன்றத்தின் தலைவ ராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பணி யாற்றியவர். பள்ளப் பட்டி முஸ்லிம் கல்விச் சங்கம், பள்ளப்பட்டி பாவா ஃபக்ருத்தீன் தர்ஹா மற்றும் பள்ளி வாசல், சென்னை காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி உள் ளிட்ட பல அமைப்பு களில் பொறுப்புகளை ஏற்று, சிறப்பாக பணி செய்தவர்.

அன்னாரின் ஜனாஸா இன்று பிற்பகல் பள்ளப் பட்டியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவ ருக்கு மனைவியும், நான்கு ஆண் மக்களும் உள்ளனர். ஒரு மகள் காலமாகி விட் டார். இவரது மறைவு சமுதாயத்திற்கும், தாய்ச் சபைக்கும் பேரிழப்பாகும்.

எல்லாம் வல்ல இறை வன் அன்னாரின் பிழைக ளைப் பொறுத்து, நற்செ யல்களை பரிப+ரணமாக அங்கீகரித்து, மேலான சுவனபதியை வழங்க இச் செயற்குழு பிரார்த்திப் பதோடு, அன்னாரின் பிரி வால் வாடும் அவரது குடும் பத்தாருக்கும், பள்ளப் பட்டி நகர ஜமா அத்தா ருக்கும் இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறது

Sunday, July 13, 2008

மலையாள சகோதரர்கள் பனாத்வாலா சாஹிப் மறைவுக்கு இரங்கல்

assalamu alaikkum...
am glad to see this work...
may ALLAH bless u and ur family...
please visit community in orkut for our beloved leader marhoom banatwala sahib(its in malayalam language)

http://www.orkut.co.in/Community.aspx?cmm=52748966

Friday, July 4, 2008

ஒரு தலைவருடைய எண்ணங்கள் பனாத்வாலாவைப் போல் இருக்கவேண்டும்:மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்


ஒரு தலைவருடைய எண்ணங்கள் எப்படியிருக்க வேண்டும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படியிருக்க வேண்டும் என என்னிடம் கேட்டால், பனாத்வாலாவைப் போல் இருக்கவேண்டும் என சொல்வேன் என மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் குலாம் மஹ்முது பனாத்வாலா அவர்களுக்கு இரங்கல் கூட்டம் புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் மணிமாடத்தில் அமைந்துள்ள அரசியல் சாசன அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பொதுச்செயலாளருமான இ.அகமது தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீல், மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் மோகன்தேவ், நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹித் சித்தீகி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சகாபுதீன், டெல்லி பத்தேப+ர் மஸ்ஜித் இமாம் மௌலானா முஃப்தி முகர்ரம், ஜமாஅத்தே இஸ்லாமி பொதுச் செயலாளர் மௌலானா ஷபீர் முனீஸ், அஹ்லே ஹதீஸ் ஜமாஅததி;ன் சார்பில் மௌலானா அப்துல் வஹாப் கில்ஜி, நாடாளுமன்ற மக்களவை செயலாளர் பி.டி.ஆச்சாரி, டெல்லி பிரதேஷ் முஸ்லிம் லீக் தலைவர் மர்கூப் ஹூசைன் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் சார்பில் பேராசிரியர் ரியாஸ் உமர், ~இக்னோ~ அமைப்பின் துணைவேந்தர் டாக்டர் பஷீர் அகமத்கான் ஆகியோர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய தலைவர்கள் அனைவரும் பனாத்வாலா ஸாஹிபின் தன்னலமற்ற சமூக சேவையையும், சிறுபான்மை சமூகத்திற்கு அவர் ஆற்றியுள்ள அரும்பணிகளையும், நாடாளுமன்றத்தில் அவரின் மகத்தான பங்களிப்பையும் நினைவு கூர்ந்தனர்.

மத்திய வெளியுறவு இணை அமைச்சர் இ.அகமது பேசும்போது, கடந்த ஒருவாரமாக நான் தனிமையில் வாடுவதாக உணருகிறேன்... மகத்தான தலைவர் பனாத்வாலா ஸாஹிப் என குறிப்பிட்டார்.

மத்தியகனரக தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் மோகன்தேவ், மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியான பனாத்வாலாவின் தியாகங்கள் போற்றத்தக்கவை என புகழஞ்சலி செலுத்தினார்.

மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பேசுகையில் குறிப்பிட்டதாவது:


பனாத்வாலா ஸாஹிப் என்னோடு கொண்டிருந்த தொடர்பு நீண்ட நாட்களுக்குரியது. மகாராஷ்டிர சட்டமன்றத்தில் நானும், அவரும் ஒரே சமயத்தில் உறுப்பினர்களாக இருந்து செயல்பட்டோம்... சட்டமன்றத்திலேயே அவரது செயல்பாடு சிறப்பானது.

அவர் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தபோது நான் சபாநாயகராக இருந்தேன். அவரை மதிப்பிற்குரிய ஒரு நாடாளுமன்றவாதியாகவே நான் பார்த்திருக்கிறேன்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படியிருக்க வேண்டும்@ ஒரு தலைவருடைய எண்ணங்கள் எப்படியிருக்க வேண்டும் என என்னிடம் யாராவது கேட்டால் தயக்கமின்றி பதில் சொல்வேன் பனாத்வாலாவைப் போல் இருக்க வேண்டுமென்று! அந்த அளவிற்கு உதாரண புருஷராக திகழ்ந்தவர் அவர்...

இவ்வாறு சிவராஜ் பாட்டீல் குறிப்பிட்டார்.
இறுதியில் மறைந்த மாபெரும் தலைவரின் மறு உலக நன்மைக்கு பிராத்தனை செய்யப்பட்டது.

http://www.muslimleaguetn.com/news.asp?id=84

http://wwwlalpetcom-deen.blogspot.com/2008/07/blog-post_04.html

Thursday, July 3, 2008

A Pillar of the Community has fallen” - Please pray for his Maghferat...

A Pillar of the Community has fallen” - Please pray for his Maghferat...




In Demise of Haji Gulam Mahmood Banatwala Sahib Ex
M.P.
(The President of Indian Union Muslim League),
“A Pillar of the Community has fallen”

Members of Indian Union Muslim League in Hong Kong,
Tributes to his Memory, Offers Condolences to his
Family, Followers and Admirers

Prays to Allah for his Maghferat

Hong Kong , 26 June 2008:

V.M.T.Mohamed Hasan & Pirabu Shuhaib on-behalf of the
members of Indian Union Muslim League in Hong Kong,
has issued the following Statement:

“We deeply mourn the sudden demise of our Great
National Leader Janab Haji Gulam Mahmood Banatwala
Sahib (President of Indian Union Muslim League), age
of 74 on 25th June 2008 at his Bombay Residence. As
an irreparable loss to the Community. Inna Lillahi Wa
Inna Ilaihi Razioon..

Honourable “Mujahida Millath” Banatwala Sahib, as he
was friendly called, played long role in the national
and Muslim politics. A member of Parliament for
decades, he was associated with every struggle of the
Muslim community for security and dignity, equality
and justice, whether it was the movement for the
defence of the Shariat against any interference by the
Executive, the Legislature or the Judiciary, the
movement for the restoration of the Babari Masjid, as
a member of the Babari Masjid Movement Coordination
Committee or the Movement for the Empowerment of
Muslim Indians. A spell-binding speaker in Urdu &
English, he had the entire country as his field of
action. In every sense of the term, he was a pillar of
the Muslim community.

A gifted parliamentarian & national face of the
minority community.

He had exceptionally clear perception on minority
politics. As an MP for seven terms, he outshone many
politicians in dealing with the minority issues at
national level. He could convert even a private bill
into a Parliamentary law; such was his caliber as a
parliamentarian.

Today that pillar has fallen; the stirring voice has
fallen silent.

We, members of the Indian Union Muslim League in Hong
Kong, pays its sincere tribute to him as one of the
greatest leaders of the Muslim community after
independence and prays to Allah to accept his services
to the community and grant him eternal peace and
offers its condolences to the members of the bereaved
family and his admirers and followers all over the
country.



NEWS ON THE ONLINE NEWSPAPERS & WEBSITES about our
beloved leader..

http://www.thehindu.com/2008/06/26/stories/2008062651570300.htm

http://www.hindu.com/2008/06/26/stories/2008062661051300.htm

http://www.deccanherald.com/Content/Jun252008/scroll2008062575294.asp?section=scrollingnews

http://www.indianmuslims.info/news/2008/jun/25/iuml_leader_g_m_banatwala_dead.html_0

http://news.oneindia.in/2008/06/25/gm-banatwala-passes-away.html

http://www.rediff.com/news/2008/jun/25league.htm

http://topics.ibnlive.com/G+M+Banatwala.html

http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=2784&cls=row3&ncat=IN

http://www.dailythanthi.com/article.asp?NewsID=421447&disdate=6/26/2008&advt=1



MOHAMED HASAN
HK 852-9262 4715
CHINA 86-13434311707

venamanzil@yahoo.com

குவைத்தில் பனாத்வாலா சாஹிப் மறைவுக்கு இரங்கல்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

குவைத்,
ஹிஜ்ரி 1429 ஜமாதுல் ஆஃகிர் பிறை 22
ஜூன் 26, 2008

கண்ணியத்திற்குரிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழ் மாநில தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி...
குவைத் தமிழ் இஸ்லாமிச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் செய்தி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதெ மில்லத் அல்ஹாஜ் குலாம் முஹம்மது பனாத்வாலா அவர்கள் வஃபாத்தான தகவலறிந்த குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) அதிர்ச்சியடைந்தது.

அவர்களின் மறைவு சமுதாயத்திற்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். குவைத் வாழ் இந்திய இஸ்லாமியர்கள் மிகவும் துக்கத்திற்குள்ளான அதிர்ச்சி நிகழ்வாகும். மனிதநேயத்திற்கும், சமய நல்லிணக்கத்திற்கும் முன்னுதாரணமாக வாழ்ந்த அவர்களின் மறைவு இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி, இந்தியத் திருநாட்டிற்கே பேரிழப்பாகும்.

தாய்ச்சபையின் பொன்விழாவில் அவர்கள் உதிர்த்த வாhத்தைகள் என் றென்றும் வரலாற்றில் பொறித்துவைக்கப்படும். அவர்கள் இஸ்லாமிய மக்களுக்காக மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்காகவும், சமய நல்லிணக்கத்திற்காகவும் அயராது பாடுபட்டவர். மிகச் சிறந்த தலைவர். பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் எழுப்பியவர்.

சமுதாய முன்னேறமடைய வேண்டும் என்று தீராத வேட்கை கொண்ட அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகைச் சேர்ந்த தோழர்களுக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பாவப் பிழைகளைப் பொறுத்து, அவர்களின் சமுதாயச் சேவைகளை ஏற்று, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்கிடவும் துஆ செய்கிறது.

தலைவர் - மவ்லவீ அல்ஹாஜ் டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத்
பொதுச்செயலாளர் - மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத்



குவைத்தில் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் மர்ஹும் குலாம் முஹம்மது பனாத்வாலா ஸாஹிப் அவர்களுக்கு பிரார்த்தனையும், இரங்கல் கூட்டமும் நடத்தப்பட்டது!



குவைத் 28.06.2008

நேற்று 27.06.2008 குவைத் ஹவல்லி அஷ்ஷைக்கா ஷபீக்கா பள்ளிவாசலில் (வாரந்தோறும் (K-Tic) குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சார்பாக ஹதீஸ் விளக்கவுரை வகுப்புகள் நடக்கும் பள்ளிவாசல்) ஜும்ஆ தொழுகைக்கு பின் சங்கத்தின் சார்பாக மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் மர்ஹும் குலாம் முஹம்மது பனாத்வாலா ஸாஹிப் அவர்களுக்கு மறுமை வாழ்வின் வெற்றிக்காக துஆ செய்யப்பட்டது.

சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை அரங்கத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ மறைந்த தலைவரின் சேவையை நினைவு கூர்ந்து உரையாற்றினார். சங்கத்தின் கொள்கை பரப்புக்குழு செயலாளர் மவ்லவீ எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ அண்னாரின் மஃக்பிரத்திற்க்காக துஆ செய்தார்கள். இந்நிகழ்வில் முஸ்லீம் லீக்கர்கள் உட்பட பலர் பங்கேற்று அண்னாரின் மறுவுலக வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.

---------------

குவைத் மிர்காப் மஸ்ஜித் பின் நப்ஹான் பள்ளிவாசலில் அஸர் தொழுகைக்கு பின் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை (TMCA) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புனித உம்ரா செயல்முறை வகுப்பு நிகழ்ச்சியிலும் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் மர்ஹும் குலாம் முஹம்மது பனாத்வாலா ஸாஹிப் அவர்களுக்கு மறுமை வாழ்வின் வெற்றிக்காக துஆ செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ, பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ, இணைப்பொருளாளர் அல்ஹாஜ் எம். முஹம்மது நாஸர், ஹவல்லி கிளை பொறுப்பாளர் ஏ. ஹஸன் முஹம்மது, லீகர் ஷாஹின் ஷா உட்பட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினர், முஸ்லீம் லீக்கர்கள் உட்பட பலர் பங்கேற்று அண்னாரின் மறுவுலக வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.

---------------

குவைத் அப்பாஸிய்யா யுனைடேட் இந்தியன் பள்ளிகூடத்தில் மக்ரிப் தொழுகைக்கு பின் குவைத் கேரளா முஸ்லிம் கலாச்சாரப் பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் குவைத் இந்தியன் முஸ்லிம் லீக் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா கலந்துகொண்டு மறைந்த தலைவரின் சேவையை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ, இணைப்பொருளாளர் அல்ஹாஜ் எம். முஹம்மது நாஸர், ஹவல்லி கிளை பொறுப்பாளர் ஏ. ஹஸன் முஹம்மது, லீகர் ஷாஹின் ஷா உட்பட முஸ்லீம் லீக்கர்களும், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினரும், நூற்றுக்கணக்கான கேரள முஸ்லிம் லீக்கர்களும் பங்கேற்று அண்னாரின் மறுவுலக வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.

செய்தி :
- பரங்கிப்பேட்டை 'அய்மான்',
குவைத் தமிழ்ச் செய்தி ஊடகம் (TNBK).

ktic.kuwait@gmail.com

Thursday, June 26, 2008

பனாத்வாலா மறைவுக்கு திருமாவளவன் இரங்கல்

பனாத்வாலா மறைவுக்கு திருமாவளவன் இரங்கல்
சென்னை, ஜூன், 27_


இந்திய யூனி'யன் முஸ்'லிம் லீக் கட்'சி'யின் தலை'வர் பனாத்'வாலா மறை'வுக்கு தொல்.திரு'மாவ'ள'வன் இரங்'கல் தெரி'வித்'துள்'ளார்.




இதுகு'றித்து விடு'தலை சிறுத்'தை'கள் கட்'சி'யின் தலை'வர் தொல்.திரு'மாவ'ள'வன் வெளி'யிட்'டுள்ள இரங்'கல் செய்தி வரு'மாறு:_




இந்திய யூனி'யன் முஸ்'லிம் லீக் கட்'சி'யின் தேசி'யத்'த'லை'வர் குலாம் முக'மது பனாத்'வாலா மர'ணம் அடைந்த செய்தி அதிர்ச்சி அளித்'தது. மிகச்'சி'றந்த பாராளு'மன்'ற'வாதி'யாக'வும், ஒடுக்'கப்'பட்ட முஸ்லீம்களின் குரலை ஓங்கி முழங்'கு'கின்ற போராளி'யாக'வும், `அறப்'போ'ராளி'க'ளின் தலை'வர்' என்று தமி'ழர்'க'ளால் கொடுக்'கப்'பட்ட பட்'டத்'திற்கு இலக்'க'ண'மாக'வும் வாழ்ந்'த'வர்.




கண்'ணி'யத்'த'மி'ழர் காயிதே மில்'லத்'தின் தலை'மையை ஏற்று மும்பை உமர்'காடி தொகு'தி'யில் சட்'ட'மன்ற உறுப்'பி'ன'ராக தேர்'தெ'டுக்'கப்'பட்டு `பசு'வதை தடைச் சட்'டம்' போன்ற பிற்'போக்'கான சட்'டம் கொண்'டு'வந்த போது அதனை எதிர்த்து அறப்'போ'ராட்'டம் நடத்தி போராட்'டங்'க'ளில் வெற்'றி'யும் கண்'ட'வர். பாபர் மசூதி இடிக்'கப்'பட்ட நிகழ்வு தொடர்'பாக இந்திய பாராளு'மன்'றத்'தில் இவர் ஆற்றிய சொற்'பொ'ழிவு பொன் எழுத்'துக்'க'ளால் பொறிக்'கப்பட வேண்'டி'யது.




கடந்த 20, 21_ம் தேதி'க'ளில் சென்னை தீவுத்'தி'ட'லில் நடை'பெற்ற முஸ்'லிம் லீக் மணி'விழா மாநாட்'டில் அவர் கலந்'து'கொண்டு பேசிய உரை, இஸ்லாமி'ய'ருக்கு மட்'டு'மன்றி அனைத்து ஒடுக்'கப்'பட்ட மக்'க'ளுக்'கும் எழுச்'சி'யூட்'டு'வதாக அமைந்'துள்'ளது. இத்த'கைய மாபெ'ரும் தலை'வரை இழந்'து'வாடும் அவரது குடும்'பத்'திற்'கும், இஸ்லாமிய பெருங்'குடி மக்'க'ளுக்'கும் இந்திய யூனி'யன் முஸ்'லிம் லீக் கட்'சி'யி'ன'ருக்'கும் எனது ஆழ்ந்த இரங்'க'லை'யும் ஆறுத'லை'யும் தெரி'வித்'துக்'கொள்'கி'றேன்.




இவ்வாறு அந்த இரங்'கல் செய்'தி'யில் தொல்.திரு'மாவ'ள'வன் தெரி'வித்'துள்'ளார்.

http://www.thinaboomi.com/2008/jun/27/politics/politics7.php

துபாயில் முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிப் மறைவுக்கு இரங்கல் கூட்டம் / காயிப் ஜனாஸா தொழுகை

துபாயில் முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிப் மறைவுக்கு இரங்கல் கூட்டம் / காயிப் ஜனாஸா தொழுகை

அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் துபாய் தேரா தமிழ் பஜாரில் உள்ள குவைத் பள்ளியில் ( லூத்தா மஸ்ஜித் ) அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிப் அவர்களது மறைவுக்கு இரங்கல் கூட்டம் வெள்ளிக்கிழமை 27.06.2008 அன்று நடைபெற இருக்கிறது.


காலை 10 மணி : திருக்குர்ஆன் ஓதி துஆச் செய்தல்

ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர்

காயிப் ஜனாஸா தொழுகை நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடைபெறும்.

இதில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் மேலாண்மை இயக்குநரும், ஈமான் அமைப்பின் தலைவரும் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற முஸ்லிம் லீக் 60 ஆண்டு மணி விழா மாநாட்டில் சமூக நல்லிணக்க விருதுபெற்ற அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன், புரவலர்கள், உள்ளிட்ட பலர் பங்கேற்க இருக்கின்றனர்.

மேலதிக விபரம் பெற : 050 467 4399 / 050 644 04 15

மேற்கண்ட தகவலை அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்தார்

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பனாத்வாலா மரணம் தமுமுக இரங்கல்!

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பனாத்வாலா மரணம் தமுமுக இரங்கல்!

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பனாத்வாலா மரணம்
தமுமுக தலைவர் வெளியிடும் இரங்கல் செய்தி

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் குலாம் முஹம்மது பனாத்வாலா அவர்கள் இன்று மரணமடைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறுபான்மை சமூகத்திற்காக உழைத்து துரும்பானவர். பனாத்வாலா அவர்கள். தொடர்ச்சியாக கேரளாவில் உள்ள பொன்னானி தொகுதியில் இருந்து 7 முறை 50 சதவிகிதத்திற்கும் குறைவில்லாமல் வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பனாத்வாலா சாஹிப் பலரும் வியக்கும் வகையில் தலைசிறந்த நாடாளுமன்றவாதியாக விளங்கினார். யாருக்கும் அஞ்சாமல் வீரத்துடன் கர்ஜனை செய்து தனது கருத்துகளை எடுத்துரைப்பதில் சாதனை படைத்தவர் பனாத்வாலா சாஹிப் அவர்கள். ஆங்கிலத்திலும் உருது மொழியிலும் தலைசிறந்த சொற்பொழிவாளராக பனாத்வாலா சாஹிப் விளங்கினார்.

டெல்லியில் கடந்த 2007 மார்ச் 7 அன்று நாடாளுமன்றம் நோக்கி தமுமுக நடத்திய பேரணியில் தனது சொந்த செலவில் வந்து பனாத்வாலா சாஹிப் அவர்கள் பங்கேற்றதை இத்தருணத்தில் நெகிழ்ச்சியுடன் நினைவுப்படுத்த கடமைப்பட்டுள்ளோம். பனாத்வாலா சாஹிப் அவர்களின் மரணம் இந்திய சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். சமூக போராளியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மறுஉலக வாழ்வில் அவருக்கு இறைவன் உயர்வான சுவனத்தை அüக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றது.

Source: www.tmmk.in