நேர்மையான அரசியலுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்
சென்னை அரசியல் பயிலரங்கத்தில் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் பேச்சு
சென்னை, ஏப்.27-
சென்னை நேர்மை அரசியல் பயற்சிக் கல்லூரி சார்பில் அரசியல் தலைமைப் பண்பு மேம் பாட்டுப் பயிற்சி வகுப்பு சென்னை எழும்ப+ர் ஐ.சி.எஸ்.ஏ. சென்டரில் 24-4-2010 அன்று நடை பெற்றது. தமிழ்நாடு லஞ்சம் கொடாதோர் இயக்கத் தலைவர் ஜெகநாதன், செயலாளர் பொறியாளர் எஸ்.எம். அரசு, மனித உரிமை சட்ட ஆலோசகர் நபீஸ் அஹமது, பேராசி ரியர் ஜேம்ஸ் உள்ளிட் டோர் பங்கேற்று பயிற்சி அளித்தனர். சிறப்பு விருந் தினராக பங்கேற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் பேசியபோது குறிப்பிட்டதாவது-
இந்திய அரசியலமைப் புச் சட்டம், ஜனநாயகம், தேர்தல் முறை உள்ளிட்ட தலைப்புக்களில் இளை ஞர்களுக்கு பயிற்சியளிப் பது, அதிலும் நேர்மையான அரசியல் நெறிமுறைகளை கற்றுக் கொடுப்பது பாராட்டுக்குரிய விசயமா கும். இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை சேர்ந்த என்னையும் இங்கு அழைத் திருப்பது ஏதோ ஒரு வகையில் பொருத்தம் என்றே கருதுகிறேன். இந் திய அரசியலமைப்பு சட் டத்தை உருவாக்கிய டாக் டர் அம்பேத்கரை அன்று டெல்லி மேலவைக்கு அனுப்ப மகாராஷ்டிர காங்கிரஸ் மறுத்துவிட் டது. மேற்கு வங்க முஸ்லிம் லீக் உறுப்பினர்களின் ஆதரவோடு டாக்டர் அம் பேத்கரை தேர்வு செய்து இந்திய அரசியல் அமைப் புச் சட்டம் உருவாக காரணமாக இருந்த இயக்கம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.
சட்ட அவையில் காயிதெ மில்லத், பேக்கர் சாகிப், கேடி.எம். அஹமது, இப்ராஹீம் சாஹிப் உள் ளிட்ட முஸ்லிம் லீக் தலை வர்கள் இடம் பெற்று நம் நாட்டின் அடித்தளம் உருவாவதற்கு முக்கிய பணிகளாற்றி இருக்கின் றனர். இன்று செம் மொழி மாநாடு நடைபெற இருக் கின்றது. 1948-ம் ஆண்டே இலக்கண, இலக் கிய வளமும், தொன்மை யும் நிறைந்த தமிழ் மொழியே இந்தியாவின் ஆட்சி மொழியாக தகுதி உடை யது என அரசியல் நிர்ணய சபையில் முழங் கியவர் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத். அச் சபையில் தமிழகத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் இருந்த போதிலும் யாரும் தமிழுக்காக பேசவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை..
நேர்மை அரசியல் பயிற்சி வகுப்பு நடத்துவது இக் காலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கின்றது. லஞ்ச லாவண்ணியத்திலிருந்து சமூகத்தைக் காப்பாற்றுவ தென்று இன்று மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. இப்படியே சென்றால் என்னவாகும்? லஞ்சம் கொடாதோராக வும், வாங்காதவராகவும் நாம் இருக்க முடியுமா? என்பதும் மிகப் பெரிய சவால். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு வரும். எந்த ஒரு விசயமும் உச்சத்திற்கு சென்று விட்டு கீழே தான் வர வேண்டும். அதேபோல் லஞ்சமும் அடியோடு அழியும் நிலை வரத்தான் செய்யும். சிறு கூட்டமாக இன்று புறப்பட்டிருக்கக் கூடிய நேர்மை அரசியல் பயிற்சி மாணவர்களும், லஞ்சம் கொடாதோர் இயக்கத்தினரும் துணி வோடு பணிகளாற்றி வருவது பாராட்டுக்குரியது. எங்கள் தலைவர் காயிதெ மில்லத் முதல் இன்றைய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் வரை நேர்மை யான அரசியலுக்கு எடுத் துக்காட்டாக திகழ்ந்து எங்களுக்கு வழிகாட்டி வருகின்றனர்.
முஸ்லிம் லீக் சார்பி லும், இளைஞர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றோம். இந்திய அரசியலமைப்பு சட்டம், ஜனநாயக நடைமுறை, தேர்தல் விதிமுறைகள் மற்றும் எம்.பி.ஏ. போன்ற படிப்பு படித்த மாணவர் கள் தொழில்ரீதியாக பாராளுமன்ற - சட்டமன்ற தொகுதிகளின் முன்னேற் றத்திற்கு ஆய்வு செய்து பணியாற்றும் முறை குறித்தும் இங்கு வகுப்பு நடத்தப்பட்டது. இவ் வகுப்புகள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பிலும் நடத்தினால் மிகவும் பய னுள்ளதாக இருக்கும். அதற்காக முயற்சி மேற் கொள்வோம்.
இவ்வாறு பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அப+பக்கர் பேசினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label காயிதெமில்லத். Show all posts
Showing posts with label காயிதெமில்லத். Show all posts
Tuesday, April 27, 2010
Saturday, July 11, 2009
காயிதெ மில்லத் அவர்களைப் பற்றிய கருத்துப் பூச்சரங்கள்
காயிதெ மில்லத் அவர்களைப் பற்றிய கருத்துப் பூச்சரங்கள்
தொகுப்பு : ஆலிமான் R.M. ஜியாவுதீன்
தொன்மையும், இலக்கியச் செறிவும், இலக்கணப் பொலிவும் நிரம்பிய மொழி, நாடாண்ட மொழி தமிழ்தான் இந்தியப் பொது மொழியாக இருக்க வேண்டும் என்று கம்பீரமாகக் குரல் கொடுத்து அந்தத் தமிழ் மொழிதான் என் தாய் மொழி என்று அரசியல் நிர்ணய சபையில் பெருமிதத்துடன் பிரகடனம் செய்தவர் காயிதெ மில்லத்.
-சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத்
காயிதெ மில்லத் ஆழமான மத உணர்வுகளும், உறுதியான இறை நம்பிக்கையும் மிக்கவர். ஆனால் அவர் வகுப்புவாத உணர்வுகளைக் கொண்டிருக்கவில்லை. மத உணர்வுக்கும் – வகுப்புவாதத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அது வேறு இதுவேறு. தாம் சார்ந்துள்ள மதத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த அதே நேரத்தில் அனைத்து மதங்களின் மக்களையும் அவர் மதித்தார் – நேசித்தார் – சகோதர உணர்வுடன் பழகினார்.
-ஜி.எம். பனாத்வாலா
உணர்ச்சிகளை தூண்டும் அரசியல்போக்குகள் சமுதாயத்துக்கு நன்மை பயக்காது. காயிதெ மில்லத் காட்டிய அமைதி வழியே வெல்லும் வழியாகும்.
-பேராசிரியர் கே.எம்.கே
சிறுபான்மை பிரிவுக்கு மட்டுமின்றி இந்து பெரும்பான்மை சமூகம் என்று மாறுபாடு இன்றி சகோதர வாஞ்சையுடன் அனைத்துத் தலைவர்களுடனும் அரவணைத்துச் சென்றவர் காயிதெ மில்லத்.
-கி.வீரமணி
அரசியல் நிர்ணய சபை தேசியமொழி குறித்து ஆய்வு செய்தபோது முன்னை பழமைக்கும் பின்னை புதுமைக்கும் இலக்கிய இலக்கணத்திற்கும் உட்பட்டு என்றும் மாறாத தமிழ் மொழியை பரிந்துரை செய்தவர் காயிதெ மில்லத்.
-இலக்கியச் செல்வர் குமரி அனந்தன்
காயிதெ மில்லத் என்பதற்கு முஸ்லிம்களின் வழிகாட்டி என்று பொருள். நான் அவரை அறிந்த வரை அவர் முஸ்லிம் களுக்கு மட்டும் வழிகாட்டி அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்ந்தவர்.
-முன்னாள் சபாநாயகர் க. இராசாராம்
உலகத் தமிழ் மாநாட்டின் ஏழாம் நாள் கருத்தரங்கில் தமிழின் பொற்காலம் என்ற நிகழ்ச்சிக்கு கண்ணியத் திற்குரிய காயிதெ மில்லத் தலைமையேற்று பேசும் போது…
வேறு மொழிகளைப் போல் பெயர்ந்து வராமல், இருந்த இடத்திலிருந்தே தோன்றிய மொழி தமிழ். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதற்கு பொற்காலம் தோன்றி விட்டது என்று தமிழ்மொழியின் பெருமையையும் தமிழ் இலக்கியச் சிறப்புக்களையும் எடுத்துரைத்தார்.
-பேராசிரியை சா.நசீமா பானு
காயிதெ மில்லத்தைப் பொறுத்த அளவில் அவருடைய தலைமை மும்முகப்புகளுடன் இலங்கியது. அவர் தலை சிறந்த தேசியவாதி – அதே சமயம் நல்ல தமிழர் – அது போலவே உண்மையான முஸ்லிம். பாகிஸ்தான் பிரிந்த பிறகு முஸ்லிம் லீகை இந்தியர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தார்கள். அத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் முஸ்லிம் சமுதாயத்தை நெறிப்படுத்தி, இந்திய நீரோடையில் ஓர் அங்கமாக மாற்றிய பெருமை காயிதெ மில்லத்துக்கே உரியது. மதத்தால் முஸ்லிமாக இருந்தபோதிலும் உள்ளத்தால் இந்தியனாக வாழ வேண்டு மென்பதை வலியுறுத்தி வந்தவர் அவர்.
-’தினமணி’ தலையங்கத்திலிருந்து …..
தொகுப்பு : ஆலிமான் R.M. ஜியாவுதீன்
தொன்மையும், இலக்கியச் செறிவும், இலக்கணப் பொலிவும் நிரம்பிய மொழி, நாடாண்ட மொழி தமிழ்தான் இந்தியப் பொது மொழியாக இருக்க வேண்டும் என்று கம்பீரமாகக் குரல் கொடுத்து அந்தத் தமிழ் மொழிதான் என் தாய் மொழி என்று அரசியல் நிர்ணய சபையில் பெருமிதத்துடன் பிரகடனம் செய்தவர் காயிதெ மில்லத்.
-சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத்
காயிதெ மில்லத் ஆழமான மத உணர்வுகளும், உறுதியான இறை நம்பிக்கையும் மிக்கவர். ஆனால் அவர் வகுப்புவாத உணர்வுகளைக் கொண்டிருக்கவில்லை. மத உணர்வுக்கும் – வகுப்புவாதத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அது வேறு இதுவேறு. தாம் சார்ந்துள்ள மதத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த அதே நேரத்தில் அனைத்து மதங்களின் மக்களையும் அவர் மதித்தார் – நேசித்தார் – சகோதர உணர்வுடன் பழகினார்.
-ஜி.எம். பனாத்வாலா
உணர்ச்சிகளை தூண்டும் அரசியல்போக்குகள் சமுதாயத்துக்கு நன்மை பயக்காது. காயிதெ மில்லத் காட்டிய அமைதி வழியே வெல்லும் வழியாகும்.
-பேராசிரியர் கே.எம்.கே
சிறுபான்மை பிரிவுக்கு மட்டுமின்றி இந்து பெரும்பான்மை சமூகம் என்று மாறுபாடு இன்றி சகோதர வாஞ்சையுடன் அனைத்துத் தலைவர்களுடனும் அரவணைத்துச் சென்றவர் காயிதெ மில்லத்.
-கி.வீரமணி
அரசியல் நிர்ணய சபை தேசியமொழி குறித்து ஆய்வு செய்தபோது முன்னை பழமைக்கும் பின்னை புதுமைக்கும் இலக்கிய இலக்கணத்திற்கும் உட்பட்டு என்றும் மாறாத தமிழ் மொழியை பரிந்துரை செய்தவர் காயிதெ மில்லத்.
-இலக்கியச் செல்வர் குமரி அனந்தன்
காயிதெ மில்லத் என்பதற்கு முஸ்லிம்களின் வழிகாட்டி என்று பொருள். நான் அவரை அறிந்த வரை அவர் முஸ்லிம் களுக்கு மட்டும் வழிகாட்டி அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்ந்தவர்.
-முன்னாள் சபாநாயகர் க. இராசாராம்
உலகத் தமிழ் மாநாட்டின் ஏழாம் நாள் கருத்தரங்கில் தமிழின் பொற்காலம் என்ற நிகழ்ச்சிக்கு கண்ணியத் திற்குரிய காயிதெ மில்லத் தலைமையேற்று பேசும் போது…
வேறு மொழிகளைப் போல் பெயர்ந்து வராமல், இருந்த இடத்திலிருந்தே தோன்றிய மொழி தமிழ். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதற்கு பொற்காலம் தோன்றி விட்டது என்று தமிழ்மொழியின் பெருமையையும் தமிழ் இலக்கியச் சிறப்புக்களையும் எடுத்துரைத்தார்.
-பேராசிரியை சா.நசீமா பானு
காயிதெ மில்லத்தைப் பொறுத்த அளவில் அவருடைய தலைமை மும்முகப்புகளுடன் இலங்கியது. அவர் தலை சிறந்த தேசியவாதி – அதே சமயம் நல்ல தமிழர் – அது போலவே உண்மையான முஸ்லிம். பாகிஸ்தான் பிரிந்த பிறகு முஸ்லிம் லீகை இந்தியர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தார்கள். அத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் முஸ்லிம் சமுதாயத்தை நெறிப்படுத்தி, இந்திய நீரோடையில் ஓர் அங்கமாக மாற்றிய பெருமை காயிதெ மில்லத்துக்கே உரியது. மதத்தால் முஸ்லிமாக இருந்தபோதிலும் உள்ளத்தால் இந்தியனாக வாழ வேண்டு மென்பதை வலியுறுத்தி வந்தவர் அவர்.
-’தினமணி’ தலையங்கத்திலிருந்து …..
Wednesday, June 3, 2009
உயர்ந்தோன் நீ ...........
உயர்ந்தோன் நீ ...........
http://quaidemillathforumuae.blogspot.com/
சீலத்தால் உயர்ந்தோன் – நீ …
சேகரத்தால் உயர்ந்தோன் – நீ …
சித்திரம்போல் கோலத்தால்
உயர்ந்தோன் – நீ …
குணத்தாலே உயர்ந்தோன் – நீ
கொள்கையெனும் மூலத்தால்
உயர்ந்தோன் நீ
முயற்சியினால் உயர்ந்தோன் நீ …
மூவா – கீர்த்தி – காலத்தால் உயர்ந்தோன் நீ …
காயிதே மில்லத்தாய் கனிந்தாய் வாழ்க …
ஆக்கியவர் :
சௌந்தர்ய முத்திரை
கவிஞர் தண்ணன் முஹம்மது மூஸா
http://quaidemillathforumuae.blogspot.com/
சீலத்தால் உயர்ந்தோன் – நீ …
சேகரத்தால் உயர்ந்தோன் – நீ …
சித்திரம்போல் கோலத்தால்
உயர்ந்தோன் – நீ …
குணத்தாலே உயர்ந்தோன் – நீ
கொள்கையெனும் மூலத்தால்
உயர்ந்தோன் நீ
முயற்சியினால் உயர்ந்தோன் நீ …
மூவா – கீர்த்தி – காலத்தால் உயர்ந்தோன் நீ …
காயிதே மில்லத்தாய் கனிந்தாய் வாழ்க …
ஆக்கியவர் :
சௌந்தர்ய முத்திரை
கவிஞர் தண்ணன் முஹம்மது மூஸா
தன்சுடர் சந்திரனை..........
தன்சுடர் சந்திரனை – பச்சை
தளிர்மணி கொடி வைத்தாய் – மேலாம்
விண்பட உயர்த்தி வைத்தாய் – எம்திறன்
விதழுற உணர்த்தி வைத்தாய் – அருள்
தமிழே முதல்மொழி – தமிழே மதுமொழி
தாரணி பாரதம் தந்த பழமொழி
அமையும் பொதுமொழியாக விழைந்தாய்
அரசியல் நிர்ணயம் ஆக்கி அளித்தாய்
காந்தியும் நேருவும் அபுல்கலாம் ஆஸாதும்
காஞ்சி திருநகர் கண்ணனாம் அண்ணாவும்
தீந்தமிழ் சேலத்து ராஜாஜியும்
பகுத்தறிவு தந்தை பெரியாரும்
செங்கோல் சிவஞான கிராமணி காமராஜரும்
தோழராய் சூழ்ந்திட தொண்டனாய் நின்றாய்
தொப்பியும் செருவாணி சூடி திகந்தாய்
வீழசழக்குகள் வியூகம் அமைத்தாய்
தொடர் வெற்றி கனிபெற நற்றுணை யானாய்
சாந்தி தழைத்திட காவலாய் நின்றாய்
சங்கையாய் காயிதெ மில்லத்து மாணாய்
மாந்தர் நலம் பெறவே மாளாதுழைத்தாய்
மகமது இஸ்மாயில் நாமம் அணிந்தாய்
ஆக்கியவர்
சௌந்தர்ய முத்திரை
தண்ணன் முஹம்மது மூஸா
தளிர்மணி கொடி வைத்தாய் – மேலாம்
விண்பட உயர்த்தி வைத்தாய் – எம்திறன்
விதழுற உணர்த்தி வைத்தாய் – அருள்
தமிழே முதல்மொழி – தமிழே மதுமொழி
தாரணி பாரதம் தந்த பழமொழி
அமையும் பொதுமொழியாக விழைந்தாய்
அரசியல் நிர்ணயம் ஆக்கி அளித்தாய்
காந்தியும் நேருவும் அபுல்கலாம் ஆஸாதும்
காஞ்சி திருநகர் கண்ணனாம் அண்ணாவும்
தீந்தமிழ் சேலத்து ராஜாஜியும்
பகுத்தறிவு தந்தை பெரியாரும்
செங்கோல் சிவஞான கிராமணி காமராஜரும்
தோழராய் சூழ்ந்திட தொண்டனாய் நின்றாய்
தொப்பியும் செருவாணி சூடி திகந்தாய்
வீழசழக்குகள் வியூகம் அமைத்தாய்
தொடர் வெற்றி கனிபெற நற்றுணை யானாய்
சாந்தி தழைத்திட காவலாய் நின்றாய்
சங்கையாய் காயிதெ மில்லத்து மாணாய்
மாந்தர் நலம் பெறவே மாளாதுழைத்தாய்
மகமது இஸ்மாயில் நாமம் அணிந்தாய்
ஆக்கியவர்
சௌந்தர்ய முத்திரை
தண்ணன் முஹம்மது மூஸா
கண்ணியமிக்க ஒரு தலைவர்….
கண்ணியமிக்க ஒரு தலைவர்….
கண்ணியமிக்க ஒரு தலைவர்
காயிதெ மில்லத் இஸ்மாயில்
நுண்ணிய நெல்லை மாவட்டம்
நாட்டுக்களித்த பரிசெனலாம்
உறுதி படைத்த நெஞ்சமுடன்
உயரிய பண்புகள் பூண்டவராம்
இறுதிவரையில் நன்னெறியை
இறுகபிடித்த நல்லவராம்
தேன்போல் சுவைக்கும் தாய்மொழியாம்
தெவிட்டா வளமார் தமிழ்மொழியை
மாண்பார்நாட்டின் மொழியாக்க
மக்களவையில் மொழிந்தவராம்
கூட்டம் ஒன்றில் உரையாற்ற
கோழிக்கோடு நகருக்கு
நாட்டம் கொண்டு, சென்றாராம்
நண்பர் பலரை கண்டாராம்
மாசறுதலைவரை வரவேற்க்க மாளிகை பலவும் காத்திருக்க பாசமுடன் ஒரு விடுதிக்கு பரிவாய் சென்றே உறைந்தாராம் தனியறை ஒன்றில் தான்மட்டும் தங்கியிருந்தார் ராப்போது கனியும் தொண்டர் இரண்டொருவர்
காத்தே இருந்தனர் வெளியினிலே
இரவில் நடுநிசி நேரத்தில் – யாரோ அறையில் நடமாடும்
அரவம் கேட்ட ஒரு தொண்டர் ஆர்வத்துடனே – பார்த்தாராம்
தன்னுடை ஆடையை – தன்கைய்யால்
துவைத்து கழுவிய பெருந்தலைவர்
மின்னுறு விசிறி அடியினிலே
மெதுவாய் உலர்த்தி நின்றாராம்
மாண்புறு கூட்ட நிகழ்ச்சிக்கு
மாற்றும் ஆடையில்லாமல்
தான்பெறு எளிய ஆடையினை
தானே – துவைத்ததை அணிந்தாராம்
-மர்ஹூம் பேராசிரியர்
கா.அப்துல் கபூர் சாஹிப்
( இப்பாடல் துபையில் ஜுன் 5 ஆம் தேதி நடைபெறும் காயிதெமில்லத் 114 வது பிறந்த தின நினைவு கல்விக் கருத்தரங்கில் இசையருவி குமரி அபுபக்கர் அவர்களால் பாடப்படுகிறது )
கண்ணியமிக்க ஒரு தலைவர்
காயிதெ மில்லத் இஸ்மாயில்
நுண்ணிய நெல்லை மாவட்டம்
நாட்டுக்களித்த பரிசெனலாம்
உறுதி படைத்த நெஞ்சமுடன்
உயரிய பண்புகள் பூண்டவராம்
இறுதிவரையில் நன்னெறியை
இறுகபிடித்த நல்லவராம்
தேன்போல் சுவைக்கும் தாய்மொழியாம்
தெவிட்டா வளமார் தமிழ்மொழியை
மாண்பார்நாட்டின் மொழியாக்க
மக்களவையில் மொழிந்தவராம்
கூட்டம் ஒன்றில் உரையாற்ற
கோழிக்கோடு நகருக்கு
நாட்டம் கொண்டு, சென்றாராம்
நண்பர் பலரை கண்டாராம்
மாசறுதலைவரை வரவேற்க்க மாளிகை பலவும் காத்திருக்க பாசமுடன் ஒரு விடுதிக்கு பரிவாய் சென்றே உறைந்தாராம் தனியறை ஒன்றில் தான்மட்டும் தங்கியிருந்தார் ராப்போது கனியும் தொண்டர் இரண்டொருவர்
காத்தே இருந்தனர் வெளியினிலே
இரவில் நடுநிசி நேரத்தில் – யாரோ அறையில் நடமாடும்
அரவம் கேட்ட ஒரு தொண்டர் ஆர்வத்துடனே – பார்த்தாராம்
தன்னுடை ஆடையை – தன்கைய்யால்
துவைத்து கழுவிய பெருந்தலைவர்
மின்னுறு விசிறி அடியினிலே
மெதுவாய் உலர்த்தி நின்றாராம்
மாண்புறு கூட்ட நிகழ்ச்சிக்கு
மாற்றும் ஆடையில்லாமல்
தான்பெறு எளிய ஆடையினை
தானே – துவைத்ததை அணிந்தாராம்
-மர்ஹூம் பேராசிரியர்
கா.அப்துல் கபூர் சாஹிப்
( இப்பாடல் துபையில் ஜுன் 5 ஆம் தேதி நடைபெறும் காயிதெமில்லத் 114 வது பிறந்த தின நினைவு கல்விக் கருத்தரங்கில் இசையருவி குமரி அபுபக்கர் அவர்களால் பாடப்படுகிறது )
Thursday, February 19, 2009
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்
வானம் இடிந்து விழலாம்; பூமி வெடிக்கலாம்; ஆனால் –அல்லாஹ்வின் வாக்குறுதி என்றுமே பொய்யாவதில்லை !
தலைவர் காயிதே மில்லத் அவர்கள் உடல்நலக் குறைவாக இருந்தும் கூட அலிகர் முஸ்லிம்களின் ஆவலை நிறைவேற்று வதற்காக 5.5.1970ம் தேதி இரவு 11 மணியளவில் டில்லியிலிருந்து கார் மூலம் அலிகர் போய்ச் சேர்ந்தார்கள். கூட்டம் நள்ளிரவு ஒன்றரை மணிவரை நடந்தது தலைவர் அவர்களின் கருத்துச் செறிந்த சொற்பொழிவைக் கேட்ட மக்கள் ஆனந்தக் களிப்போடு "அல்லஹு அக்பர்" என விண்ணதிர முழங்கினர் அப்பொதுக் கூட்டத்தில் தலைவர் அவர்கள் பேசும்பொழுது கூறியதாவது
நாம் முஸ்லிம்களென்று நம்மைக் கூறிக்கொள்வதற்கு காரணம் நாம் இறைவனுடைய அடியார்களாக அவனது வேத கட்டளைகளுக்கு அடிபணிந்து நடப்பதுதான் நமக்கென்று தனி கலை கலாச்சாரம் ஆகிய வற்றைப் பேணிக் காத்து வருவதுதான் !
சிறுபான்மையினர் கடமைகள்
நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம் சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிகமிக அவசியம் பெரும்பானமை சமுதாயத்தினராக இருப்பவர்கள் எத்தனைக் கட்சிகளில் வேண்டு மானாலும் பிரிந்து பிரிந்து வாழலாம் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் பிரிந்து வாழ முடியாது; அவர்கள் சேர்ந்து வாழக் கடமைப்பட்டிருக்கிறார்கள் .
குர்ஆன் போதனை
நாம் ஒன்றுபட்டு வாழவேண்டுமென்பது நாமாகச் சொல்வதல்ல இது இறைவனின் கட்டளையாகும்
அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என இறைவனின் திருமறையாம் திருக்குர் ஆன் போதிக்கிறது நபி பெருமான் ( ஸல் ) அவர்களும் இதையே வலியுறுத்தியிருக்கிறார்கள் !
இறைவனின் போதனையை முஸ்லிம்கள் ஏற்று நடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்த காலம்வரை முஸ்லிம்கள் சிறப்பாகவே வாழ்ந்து வந்தனர் உலகத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களெல்லாம் அவர்களது காலடியில் வீழ்ந்தன முஸ்லிம்களின் கலையும் கலாச்சாரமும் உலகத்தில் மேலோங்கியே நின்றது இஸ்லாமிய மெய்ஞானம் உலகெல்லாம் சுடர்விட்டது
முஸ்லிம்களின் நிலை தாழ்ந்ததேன்?
எப்பொழுது முஸ்லிம்கள் இறைவனை மறந்தவர்களாய் இஸ்லாமிய போதனைகளை புறக்கணித்தவர்களாய் மாறுபட்டு நடந்தார்களோ அப்போதே முஸ்லிம்களின் நிலையும் தாழ்ந்தது தாழ்ந்த நிலையிலிருந்து மீண்டும் அவர்கள் மீட்சி பெற முடியவில்லை!
முஸ்லிம்களின் மகத்தான வளர்ச்சி
உலகத்தில் சாம்ராஜ்யங்கள் உருவாவதற்கும் வளர்வதற்கும் பல நூற்றாண்டுகள் பிடித்திருக்கின்றன ரோமானிய சாம்ராஜ்யமும்,கிரேக்க சாம்ராஜ்யமும் பல ஆயிரணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அமைந்திருக்கின்றன
ஆனால் இஸ்லாமிய சாம்ராஜ்யமோ நபி பெருமான் ( ஸல் ) அவர்களின் மறைவிற்குப் பிறகு பத்தே - ஆண்டு காலத்திற்குள் உலகில் நிலை பெற்றிருக்கிறது இதற்கெல்லாம் மூலகாரணம் முஸ்லிம்கள் இறைவனிடத்தில் கொண்டிருந்த பக்தியும் விசுவாசமுமேயாகும் அவர்கள் மார்க்க போதனைகளுக்கொப்ப தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டதனாலேயேயாகும் !
சிறப்படைவது எவ்வாறு?
நாம் ஏன் தாழ்ந்தோம்? ஏன் இந்நிலைக்கு ஆளானோம்? நமக்குள் ஏற்படும் வேற்றுமைகளை நீக்கிக்கொள்ள சக்தியற்றவர்களாகி விட்டோம்? நமது சிறிய அபிப்பிராய பேதங்களையெல்லாம் பெரிது படுத்திக்கொண்டதுதான் நமது ஒற்றுமை குலைந்ததற்குக் காரணங் களாகும் ! நமது வேற்றுமையையும் அபிப்பிராய பேதங்களையும் நாம் குர்பானி கொடுத்துவிட வேண்டும் சகோதர உணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும்
அல்லாஹ் வாக்குறுதியை காப்பாற்றுபவன் !
வானம் இடிந்து விழலாம்; பூமி வெடித்து விடலாம்; ஆனால் அல்லாஹ்வின் வாக்குறுதி பொய்த்துப் போவதில்லை அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றுபவன் !
அவன் நமக்கு அழகான வாக்குறுதிகளை அளித்திருக்கிறான் அதன் பயனை அடைவதற்கு நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒற்றுமையாக இருப்பதுதான் ஒன்றாக செயல்படுவதுதான் !
அரசியல் ரீதியாக ஒன்றுபடுவோம் !
நாம் எல்லாத் துறைகளிலும் ஒன்றுபட வேண்டியவர்களாக இருக்கிறோம் அரசியல் ரீதியாகவும் ஒன்றுபட வேண்டியவர்களாக இருக்கிறோம் நமக்கு எதற்கு அரசியல் என்று கேட்பவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்
அரசியலில் பங்கு பெறாமல் நாம் எப்படி வாழ முடியும்? பிற சமுதாயத்தினர்களுக்கு வேண்டுமானால் அரசியல் வேறு மதம் வேறு என்றிருக்கலாம் ஆனால் நமக்கோ மதமும் அரசியலும் ஒன்றாக இணைந்தே இருக்கின்றன நமது ஒவ்வொரு செய்கையிலும் இவ்விரண்டும் இணைந்தேயிருக்கின்றன !
இங்கு வாழும் மெஜாரிட்டி சமூகத்தாரில் சிலர் நாம் அரசியலில் மதத்தைப் புகுத்துவதாக நம் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள் ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? பாராளுமன்றத்தில் அரசியல் போர்வையின் கீழ் அவர்கள் கொண்டுவரும் ஒவ்வொரு சட்டமும் மதத்தில் தலையிடுவதாகவே இருக்கிறது அவர்கள் செய்வது தவறு எனக் கூறுவதற்குக் கூட நமக்கு உரிமையில்லையா?அவர்கள் செய்கின்ற தவறுகளையெல்லாம் திருத்துவதுதான் எப்படி? அரசியல் ரீதியாக நாம் ஒன்றுபடாவிடில் நமது உரிமைகளை நாம் எவ்வாறு பாதுகாக்க முடியும்? எனவே நாம் ஒன்றுபட்டே ஆக வேண்டும் ஒன்று பட்டிருக்கிறோம் என்று உலகிற்கு உணர்த்துவதற்காக நாம் ஸ்தாபன ரீதியாக இயங்க வேண்டும் !
முஸ்லிம்கள் வாழ முஸ்லிம் லீக் !
இந்திய சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் லீக் பணியைத் தொடர்ந்து செய்து வந்த மாநிலங்களில் முஸ்லிம்களின் நிலை எவ்வளவோ திருப்திகரமாக இருக்கிறது முஸ்லிம்கள் முறையாக ஸ்தாபன ரீதியில் இயங்காத மாநிலங்களில்தான் அவர்களது வாழ்வு அவலநிலை அடைந்துள்ளது மாற்றம் காண வேண்டுமானால் இறைவனின் போதனைப்படி நாம் ஒன்றுசேர வேண்டும்.
நாம் ஸ்தாபன ரீதியாக இயங்குகிறோம் என்பதற்கு அத்தாட்சியாக நாம் ஒரே அரசியல் ஸ்தாபனத்தில் ஈடுபட்டு செயல்படவேண்டும் அந்த நன்னாள் இப்போது வந்துவிட்டது நாம் ஒன்றுபட்டு இருக்கிறோமென்று அறிந்த பிறகே வேறுபல சமுதாயத்தவர்களும் நமது உதவியைத் தேடி வருகிறார்கள் நமது ஒற்றுமையை மென்மேலும் பலப்படுத்தினால் மேலும் சிறப்படைவோம் !
அந்த ஒற்றுமையைக் காப்பதின் மூலம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்குப்
பாத்திரமானவர்களாகிறோம் !
நமது தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்ய வல்லமையுடையவன் ஏக இறைவனாகிய அல்லாஹ்வேயாகும். அவனுடைய பொக்கிஷம் என்றுமே குறையாதது; நாம் அவனையே வணங்குவோம்; அவனையே பணிவோம்; அவனது கட்டளைகளின்படியே நடப்போம்; ஒற்றுமையாக இருந்து சிறப்படைவோமாக .
( கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள் - நாடாளுமன்ற – சட்டமன்ற – பத்திரிகை நேர்காணல் உரைகளின் தொகுப்பிலிருந்து )
தொகுப்பாளர் :
திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா ( குவைத் )
காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர்
குவைத்
00965 9786 2316
வெளியீடு :
மணிமேகலைப் பிரசுரம்
7 தணிகாசலம் சாலை
தியாயராய நகர்
சென்னை 600 017
தொலைபேசி : 2434 2926
விலை : ரூ. 70 ( எழுபது )
வானம் இடிந்து விழலாம்; பூமி வெடிக்கலாம்; ஆனால் –அல்லாஹ்வின் வாக்குறுதி என்றுமே பொய்யாவதில்லை !
தலைவர் காயிதே மில்லத் அவர்கள் உடல்நலக் குறைவாக இருந்தும் கூட அலிகர் முஸ்லிம்களின் ஆவலை நிறைவேற்று வதற்காக 5.5.1970ம் தேதி இரவு 11 மணியளவில் டில்லியிலிருந்து கார் மூலம் அலிகர் போய்ச் சேர்ந்தார்கள். கூட்டம் நள்ளிரவு ஒன்றரை மணிவரை நடந்தது தலைவர் அவர்களின் கருத்துச் செறிந்த சொற்பொழிவைக் கேட்ட மக்கள் ஆனந்தக் களிப்போடு "அல்லஹு அக்பர்" என விண்ணதிர முழங்கினர் அப்பொதுக் கூட்டத்தில் தலைவர் அவர்கள் பேசும்பொழுது கூறியதாவது
நாம் முஸ்லிம்களென்று நம்மைக் கூறிக்கொள்வதற்கு காரணம் நாம் இறைவனுடைய அடியார்களாக அவனது வேத கட்டளைகளுக்கு அடிபணிந்து நடப்பதுதான் நமக்கென்று தனி கலை கலாச்சாரம் ஆகிய வற்றைப் பேணிக் காத்து வருவதுதான் !
சிறுபான்மையினர் கடமைகள்
நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம் சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிகமிக அவசியம் பெரும்பானமை சமுதாயத்தினராக இருப்பவர்கள் எத்தனைக் கட்சிகளில் வேண்டு மானாலும் பிரிந்து பிரிந்து வாழலாம் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் பிரிந்து வாழ முடியாது; அவர்கள் சேர்ந்து வாழக் கடமைப்பட்டிருக்கிறார்கள் .
குர்ஆன் போதனை
நாம் ஒன்றுபட்டு வாழவேண்டுமென்பது நாமாகச் சொல்வதல்ல இது இறைவனின் கட்டளையாகும்
அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என இறைவனின் திருமறையாம் திருக்குர் ஆன் போதிக்கிறது நபி பெருமான் ( ஸல் ) அவர்களும் இதையே வலியுறுத்தியிருக்கிறார்கள் !
இறைவனின் போதனையை முஸ்லிம்கள் ஏற்று நடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்த காலம்வரை முஸ்லிம்கள் சிறப்பாகவே வாழ்ந்து வந்தனர் உலகத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களெல்லாம் அவர்களது காலடியில் வீழ்ந்தன முஸ்லிம்களின் கலையும் கலாச்சாரமும் உலகத்தில் மேலோங்கியே நின்றது இஸ்லாமிய மெய்ஞானம் உலகெல்லாம் சுடர்விட்டது
முஸ்லிம்களின் நிலை தாழ்ந்ததேன்?
எப்பொழுது முஸ்லிம்கள் இறைவனை மறந்தவர்களாய் இஸ்லாமிய போதனைகளை புறக்கணித்தவர்களாய் மாறுபட்டு நடந்தார்களோ அப்போதே முஸ்லிம்களின் நிலையும் தாழ்ந்தது தாழ்ந்த நிலையிலிருந்து மீண்டும் அவர்கள் மீட்சி பெற முடியவில்லை!
முஸ்லிம்களின் மகத்தான வளர்ச்சி
உலகத்தில் சாம்ராஜ்யங்கள் உருவாவதற்கும் வளர்வதற்கும் பல நூற்றாண்டுகள் பிடித்திருக்கின்றன ரோமானிய சாம்ராஜ்யமும்,கிரேக்க சாம்ராஜ்யமும் பல ஆயிரணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அமைந்திருக்கின்றன
ஆனால் இஸ்லாமிய சாம்ராஜ்யமோ நபி பெருமான் ( ஸல் ) அவர்களின் மறைவிற்குப் பிறகு பத்தே - ஆண்டு காலத்திற்குள் உலகில் நிலை பெற்றிருக்கிறது இதற்கெல்லாம் மூலகாரணம் முஸ்லிம்கள் இறைவனிடத்தில் கொண்டிருந்த பக்தியும் விசுவாசமுமேயாகும் அவர்கள் மார்க்க போதனைகளுக்கொப்ப தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டதனாலேயேயாகும் !
சிறப்படைவது எவ்வாறு?
நாம் ஏன் தாழ்ந்தோம்? ஏன் இந்நிலைக்கு ஆளானோம்? நமக்குள் ஏற்படும் வேற்றுமைகளை நீக்கிக்கொள்ள சக்தியற்றவர்களாகி விட்டோம்? நமது சிறிய அபிப்பிராய பேதங்களையெல்லாம் பெரிது படுத்திக்கொண்டதுதான் நமது ஒற்றுமை குலைந்ததற்குக் காரணங் களாகும் ! நமது வேற்றுமையையும் அபிப்பிராய பேதங்களையும் நாம் குர்பானி கொடுத்துவிட வேண்டும் சகோதர உணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும்
அல்லாஹ் வாக்குறுதியை காப்பாற்றுபவன் !
வானம் இடிந்து விழலாம்; பூமி வெடித்து விடலாம்; ஆனால் அல்லாஹ்வின் வாக்குறுதி பொய்த்துப் போவதில்லை அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றுபவன் !
அவன் நமக்கு அழகான வாக்குறுதிகளை அளித்திருக்கிறான் அதன் பயனை அடைவதற்கு நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒற்றுமையாக இருப்பதுதான் ஒன்றாக செயல்படுவதுதான் !
அரசியல் ரீதியாக ஒன்றுபடுவோம் !
நாம் எல்லாத் துறைகளிலும் ஒன்றுபட வேண்டியவர்களாக இருக்கிறோம் அரசியல் ரீதியாகவும் ஒன்றுபட வேண்டியவர்களாக இருக்கிறோம் நமக்கு எதற்கு அரசியல் என்று கேட்பவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்
அரசியலில் பங்கு பெறாமல் நாம் எப்படி வாழ முடியும்? பிற சமுதாயத்தினர்களுக்கு வேண்டுமானால் அரசியல் வேறு மதம் வேறு என்றிருக்கலாம் ஆனால் நமக்கோ மதமும் அரசியலும் ஒன்றாக இணைந்தே இருக்கின்றன நமது ஒவ்வொரு செய்கையிலும் இவ்விரண்டும் இணைந்தேயிருக்கின்றன !
இங்கு வாழும் மெஜாரிட்டி சமூகத்தாரில் சிலர் நாம் அரசியலில் மதத்தைப் புகுத்துவதாக நம் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள் ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? பாராளுமன்றத்தில் அரசியல் போர்வையின் கீழ் அவர்கள் கொண்டுவரும் ஒவ்வொரு சட்டமும் மதத்தில் தலையிடுவதாகவே இருக்கிறது அவர்கள் செய்வது தவறு எனக் கூறுவதற்குக் கூட நமக்கு உரிமையில்லையா?அவர்கள் செய்கின்ற தவறுகளையெல்லாம் திருத்துவதுதான் எப்படி? அரசியல் ரீதியாக நாம் ஒன்றுபடாவிடில் நமது உரிமைகளை நாம் எவ்வாறு பாதுகாக்க முடியும்? எனவே நாம் ஒன்றுபட்டே ஆக வேண்டும் ஒன்று பட்டிருக்கிறோம் என்று உலகிற்கு உணர்த்துவதற்காக நாம் ஸ்தாபன ரீதியாக இயங்க வேண்டும் !
முஸ்லிம்கள் வாழ முஸ்லிம் லீக் !
இந்திய சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் லீக் பணியைத் தொடர்ந்து செய்து வந்த மாநிலங்களில் முஸ்லிம்களின் நிலை எவ்வளவோ திருப்திகரமாக இருக்கிறது முஸ்லிம்கள் முறையாக ஸ்தாபன ரீதியில் இயங்காத மாநிலங்களில்தான் அவர்களது வாழ்வு அவலநிலை அடைந்துள்ளது மாற்றம் காண வேண்டுமானால் இறைவனின் போதனைப்படி நாம் ஒன்றுசேர வேண்டும்.
நாம் ஸ்தாபன ரீதியாக இயங்குகிறோம் என்பதற்கு அத்தாட்சியாக நாம் ஒரே அரசியல் ஸ்தாபனத்தில் ஈடுபட்டு செயல்படவேண்டும் அந்த நன்னாள் இப்போது வந்துவிட்டது நாம் ஒன்றுபட்டு இருக்கிறோமென்று அறிந்த பிறகே வேறுபல சமுதாயத்தவர்களும் நமது உதவியைத் தேடி வருகிறார்கள் நமது ஒற்றுமையை மென்மேலும் பலப்படுத்தினால் மேலும் சிறப்படைவோம் !
அந்த ஒற்றுமையைக் காப்பதின் மூலம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்குப்
பாத்திரமானவர்களாகிறோம் !
நமது தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்ய வல்லமையுடையவன் ஏக இறைவனாகிய அல்லாஹ்வேயாகும். அவனுடைய பொக்கிஷம் என்றுமே குறையாதது; நாம் அவனையே வணங்குவோம்; அவனையே பணிவோம்; அவனது கட்டளைகளின்படியே நடப்போம்; ஒற்றுமையாக இருந்து சிறப்படைவோமாக .
( கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள் - நாடாளுமன்ற – சட்டமன்ற – பத்திரிகை நேர்காணல் உரைகளின் தொகுப்பிலிருந்து )
தொகுப்பாளர் :
திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா ( குவைத் )
காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர்
குவைத்
00965 9786 2316
வெளியீடு :
மணிமேகலைப் பிரசுரம்
7 தணிகாசலம் சாலை
தியாயராய நகர்
சென்னை 600 017
தொலைபேசி : 2434 2926
விலை : ரூ. 70 ( எழுபது )
Thursday, June 26, 2008
துபாயில் முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிப் மறைவுக்கு இரங்கல் கூட்டம் / காயிப் ஜனாஸா தொழுகை
துபாயில் முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிப் மறைவுக்கு இரங்கல் கூட்டம் / காயிப் ஜனாஸா தொழுகை
அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் துபாய் தேரா தமிழ் பஜாரில் உள்ள குவைத் பள்ளியில் ( லூத்தா மஸ்ஜித் ) அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிப் அவர்களது மறைவுக்கு இரங்கல் கூட்டம் வெள்ளிக்கிழமை 27.06.2008 அன்று நடைபெற இருக்கிறது.
காலை 10 மணி : திருக்குர்ஆன் ஓதி துஆச் செய்தல்
ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர்
காயிப் ஜனாஸா தொழுகை நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடைபெறும்.
இதில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் மேலாண்மை இயக்குநரும், ஈமான் அமைப்பின் தலைவரும் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற முஸ்லிம் லீக் 60 ஆண்டு மணி விழா மாநாட்டில் சமூக நல்லிணக்க விருதுபெற்ற அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன், புரவலர்கள், உள்ளிட்ட பலர் பங்கேற்க இருக்கின்றனர்.
மேலதிக விபரம் பெற : 050 467 4399 / 050 644 04 15
மேற்கண்ட தகவலை அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்தார்
அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் துபாய் தேரா தமிழ் பஜாரில் உள்ள குவைத் பள்ளியில் ( லூத்தா மஸ்ஜித் ) அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா சாஹிப் அவர்களது மறைவுக்கு இரங்கல் கூட்டம் வெள்ளிக்கிழமை 27.06.2008 அன்று நடைபெற இருக்கிறது.
காலை 10 மணி : திருக்குர்ஆன் ஓதி துஆச் செய்தல்
ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர்
காயிப் ஜனாஸா தொழுகை நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடைபெறும்.
இதில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் மேலாண்மை இயக்குநரும், ஈமான் அமைப்பின் தலைவரும் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற முஸ்லிம் லீக் 60 ஆண்டு மணி விழா மாநாட்டில் சமூக நல்லிணக்க விருதுபெற்ற அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன், புரவலர்கள், உள்ளிட்ட பலர் பங்கேற்க இருக்கின்றனர்.
மேலதிக விபரம் பெற : 050 467 4399 / 050 644 04 15
மேற்கண்ட தகவலை அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்தார்
Subscribe to:
Posts (Atom)