குவைத் காயிதே மில்லத் பேரவை ஏற்பாடு செய்த சிறப்புக் கருத்தரங்கம்.
கடந்த 30/04/2010 வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணியளவில் குவைத் மிர்காப் பகுதியிலுள்ள முபாரக்கியா தர்பார் (பழைய தஞ்சை) உணவகம் மர்ஹும் தளபதி திருப்பூர் மொய்தீன் நினைவரங்கில், சமுதாய பிரச்சினைகளும் - முஸ்லிம் லீக்கின் அணுகுமுறையும் " அன்றும்! இன்றும்! என்னும் தலைப்பில் சிறப்புக்கருத்தரங்கம் நடைபெற்றது.
முகம்மது பந்தர் ஆர்.எம்.பாருக் (டி.எம்.சி.ஏ), முஸ்லிம் லீக் முன்னோடி, தலைமை வகிக்க வடக்கு மாங்குடி எஸ்.எச்.அப்துல்கரீம் கிராத் ஓதினார். பேரவை அமைப்புக்குழு உறுப்பினர்கள் வடக்கு மாங்குடி ஹாஜி.முத்தலிப், கூனிமேடு ஹபிபூர் ர்ஹ்மான், சென்னை ஷகின்ஷாகான், டிம்.எம்.சி.ஏ துணை பொதுச் செயலாளர் அப்துல் ரசாக் அல் பானி, பேரவை செய்தி தொடர்பாளர் ஆரிப் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகிக்க, பேரவை அமைப்புக்குழு உறுப்பினர் ஹசன் முகம்மது வரவேற்புரையாற்றினார், பேரவை அமைப்புக்குழு உறுப்பினரும், டி.எம்.சி.ஏ காப்பாளர் குழு அய்யம்பேட்டை கம்பளி பஷிர் நிகழச்சியை தொகுத்து வழங்க, சிறப்புக்கருத்தரங்கம் இனிதே
துவங்கியது. --
பெரம்பலூர் மெளலவி முகம்மது ஷரிப் மன்பயீ ஹஸரத் (பேரவை உலமாக்கள் பிரிவு பொருப்பாளர்), ஹாஜி நாஸர் ரப்பாணி (அல் அமி9இன் உம்ரா சர்வீஸ்) பேரவை உலமாக்கள் பிரிவு, வல்லம் ஷேக் ஆதம் (தலைவர்.முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றம்) , புத்தாநத்தம் ஹாஜி.நாஸர் (பேரவை அமைப்புக்குழு உறுப்பினர், சிறப்புரையாற்றினார்கள்.
இறுதியாக குவைத் காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ்.அன்வர்பாட்சா அவர்கள் "இந்திய அரசியலில் தாய்ச்சபை முஸ்லிம் லீக்கின் வரலாற்று சிறப்பு மிக்க செயல்பாடுகளை விளக்கியும், முஸ்லிம் லீக்கின் அணியில் சமுதாயம் ஒன்றுபடுவதன் அவசியத்தையும் - கண்ணியத்திற்குறிய காயிதே மில்லத் அவர்களின் அளப்பறிய அரசியல் வழிகாட்டுதல்களையும், அதைத் தொடர்ந்து முஸ்லிம் லீகை வழிநடத்த இன்று தமிழக முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள முனிருல் மில்லத் பேராசிரியரின் அமைதியான தலைமை குறித்தும், அரசியல் ராஜதந்திர அணுகுமுறைகளை விளக்கியும், சிறப்பாக வரலாற்று ரீதியான நிறைவுரையாற்றினார். சமுதாய பாடகர்கள் தச்சன் குறிச்சி ஏ.கலிபுல்லா, அருப்புக்கோட்டை இராவுத்தர் கனி சமுதாய எழுச்சி பாடல்கலை பாடினார்கள். அய்யப்பேட்டை கம்பளி பஷீர் துஆ ஓதினார். பேரவை அமைப்புக்குழு உறுப்பினர் விருத்தாசலம் ஏ.நிஜாமுதீன் எம்.ஏ நன்றி கூற இரவு உணவோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. கருத்தரங்கத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி ஜமாத் செயலாளர் ஆவூர் பஷீர், ஒர்ங்கிணைப்பாளர் தம்பிதுரை என்கிற அப்துல் முகம்மது, திசா அன்வர், டி.எம்.சி.ஏ பொருளாளர்.சாமிமலை ஜாகிர், குவைத் தமிழோசை கவிஞர்.சிவக்குமார், கவிஞர்.சிவமணி, புதுவை கவிஞர் முபாரக், பெரம்பலூர் கவிஞர் பஷீர் அகமது, மஹாராஜா டெக்ஸ்டைல்ஸ் அப்துல்ரசாக், மரைக்காயர் அப்துல் ஜப்பார், ஹபீப் ராஜா மற்றும் தோழமை இயக்க நிர்வாகிகளும், ஆன்றோர்களும், சான்றோர்களும், உலமா பெருமக்களும் பெருந்திரளாக கலந்துகொணடனர். டாக்டர்.கே.எஸ்.அன்வர்பாட்சா
குவைத் காயிதே மில்லத் பேரவை
அமைப்பாளர் & அமைப்புக்குழு
00965-97862316,
http://iumlkuwait.blogspot.com,
http://qmfkuwait.blogspot.com.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label குவைத். Show all posts
Showing posts with label குவைத். Show all posts
Thursday, May 20, 2010
Tuesday, February 23, 2010
காயிதே மில்லத் பேரவை- குவைத்
காயிதே மில்லத் பேரவை- குவைத்
டாக்டர்.கே.எஸ்.அன்வர்பாட்சா
குவைத் காயிதே மில்லத் பேரவை
அமைப்பாளர் & அமைப்புக்குழு
00965-97862316, 66641434
http://iumlkuwait.blogspot.com
http://qmfkuwait.blogspot.com
டாக்டர்.கே.எஸ்.அன்வர்பாட்சா
குவைத் காயிதே மில்லத் பேரவை
அமைப்பாளர் & அமைப்புக்குழு
00965-97862316, 66641434
http://iumlkuwait.blogspot.com
http://qmfkuwait.blogspot.com
காயிதே மில்லத் பேரவை- குவைத்
காயிதே மில்லத் பேரவை- குவைத்
டாக்டர்.கே.எஸ்.அன்வர்பாட்சா
குவைத் காயிதே மில்லத் பேரவை
அமைப்பாளர் & அமைப்புக்குழு
00965-97862316, 66641434
http://iumlkuwait.blogspot.com
http://qmfkuwait.blogspot.com
டாக்டர்.கே.எஸ்.அன்வர்பாட்சா
குவைத் காயிதே மில்லத் பேரவை
அமைப்பாளர் & அமைப்புக்குழு
00965-97862316, 66641434
http://iumlkuwait.blogspot.com
http://qmfkuwait.blogspot.com
Thursday, February 19, 2009
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்
வானம் இடிந்து விழலாம்; பூமி வெடிக்கலாம்; ஆனால் –அல்லாஹ்வின் வாக்குறுதி என்றுமே பொய்யாவதில்லை !
தலைவர் காயிதே மில்லத் அவர்கள் உடல்நலக் குறைவாக இருந்தும் கூட அலிகர் முஸ்லிம்களின் ஆவலை நிறைவேற்று வதற்காக 5.5.1970ம் தேதி இரவு 11 மணியளவில் டில்லியிலிருந்து கார் மூலம் அலிகர் போய்ச் சேர்ந்தார்கள். கூட்டம் நள்ளிரவு ஒன்றரை மணிவரை நடந்தது தலைவர் அவர்களின் கருத்துச் செறிந்த சொற்பொழிவைக் கேட்ட மக்கள் ஆனந்தக் களிப்போடு "அல்லஹு அக்பர்" என விண்ணதிர முழங்கினர் அப்பொதுக் கூட்டத்தில் தலைவர் அவர்கள் பேசும்பொழுது கூறியதாவது
நாம் முஸ்லிம்களென்று நம்மைக் கூறிக்கொள்வதற்கு காரணம் நாம் இறைவனுடைய அடியார்களாக அவனது வேத கட்டளைகளுக்கு அடிபணிந்து நடப்பதுதான் நமக்கென்று தனி கலை கலாச்சாரம் ஆகிய வற்றைப் பேணிக் காத்து வருவதுதான் !
சிறுபான்மையினர் கடமைகள்
நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம் சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிகமிக அவசியம் பெரும்பானமை சமுதாயத்தினராக இருப்பவர்கள் எத்தனைக் கட்சிகளில் வேண்டு மானாலும் பிரிந்து பிரிந்து வாழலாம் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் பிரிந்து வாழ முடியாது; அவர்கள் சேர்ந்து வாழக் கடமைப்பட்டிருக்கிறார்கள் .
குர்ஆன் போதனை
நாம் ஒன்றுபட்டு வாழவேண்டுமென்பது நாமாகச் சொல்வதல்ல இது இறைவனின் கட்டளையாகும்
அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என இறைவனின் திருமறையாம் திருக்குர் ஆன் போதிக்கிறது நபி பெருமான் ( ஸல் ) அவர்களும் இதையே வலியுறுத்தியிருக்கிறார்கள் !
இறைவனின் போதனையை முஸ்லிம்கள் ஏற்று நடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்த காலம்வரை முஸ்லிம்கள் சிறப்பாகவே வாழ்ந்து வந்தனர் உலகத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களெல்லாம் அவர்களது காலடியில் வீழ்ந்தன முஸ்லிம்களின் கலையும் கலாச்சாரமும் உலகத்தில் மேலோங்கியே நின்றது இஸ்லாமிய மெய்ஞானம் உலகெல்லாம் சுடர்விட்டது
முஸ்லிம்களின் நிலை தாழ்ந்ததேன்?
எப்பொழுது முஸ்லிம்கள் இறைவனை மறந்தவர்களாய் இஸ்லாமிய போதனைகளை புறக்கணித்தவர்களாய் மாறுபட்டு நடந்தார்களோ அப்போதே முஸ்லிம்களின் நிலையும் தாழ்ந்தது தாழ்ந்த நிலையிலிருந்து மீண்டும் அவர்கள் மீட்சி பெற முடியவில்லை!
முஸ்லிம்களின் மகத்தான வளர்ச்சி
உலகத்தில் சாம்ராஜ்யங்கள் உருவாவதற்கும் வளர்வதற்கும் பல நூற்றாண்டுகள் பிடித்திருக்கின்றன ரோமானிய சாம்ராஜ்யமும்,கிரேக்க சாம்ராஜ்யமும் பல ஆயிரணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அமைந்திருக்கின்றன
ஆனால் இஸ்லாமிய சாம்ராஜ்யமோ நபி பெருமான் ( ஸல் ) அவர்களின் மறைவிற்குப் பிறகு பத்தே - ஆண்டு காலத்திற்குள் உலகில் நிலை பெற்றிருக்கிறது இதற்கெல்லாம் மூலகாரணம் முஸ்லிம்கள் இறைவனிடத்தில் கொண்டிருந்த பக்தியும் விசுவாசமுமேயாகும் அவர்கள் மார்க்க போதனைகளுக்கொப்ப தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டதனாலேயேயாகும் !
சிறப்படைவது எவ்வாறு?
நாம் ஏன் தாழ்ந்தோம்? ஏன் இந்நிலைக்கு ஆளானோம்? நமக்குள் ஏற்படும் வேற்றுமைகளை நீக்கிக்கொள்ள சக்தியற்றவர்களாகி விட்டோம்? நமது சிறிய அபிப்பிராய பேதங்களையெல்லாம் பெரிது படுத்திக்கொண்டதுதான் நமது ஒற்றுமை குலைந்ததற்குக் காரணங் களாகும் ! நமது வேற்றுமையையும் அபிப்பிராய பேதங்களையும் நாம் குர்பானி கொடுத்துவிட வேண்டும் சகோதர உணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும்
அல்லாஹ் வாக்குறுதியை காப்பாற்றுபவன் !
வானம் இடிந்து விழலாம்; பூமி வெடித்து விடலாம்; ஆனால் அல்லாஹ்வின் வாக்குறுதி பொய்த்துப் போவதில்லை அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றுபவன் !
அவன் நமக்கு அழகான வாக்குறுதிகளை அளித்திருக்கிறான் அதன் பயனை அடைவதற்கு நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒற்றுமையாக இருப்பதுதான் ஒன்றாக செயல்படுவதுதான் !
அரசியல் ரீதியாக ஒன்றுபடுவோம் !
நாம் எல்லாத் துறைகளிலும் ஒன்றுபட வேண்டியவர்களாக இருக்கிறோம் அரசியல் ரீதியாகவும் ஒன்றுபட வேண்டியவர்களாக இருக்கிறோம் நமக்கு எதற்கு அரசியல் என்று கேட்பவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்
அரசியலில் பங்கு பெறாமல் நாம் எப்படி வாழ முடியும்? பிற சமுதாயத்தினர்களுக்கு வேண்டுமானால் அரசியல் வேறு மதம் வேறு என்றிருக்கலாம் ஆனால் நமக்கோ மதமும் அரசியலும் ஒன்றாக இணைந்தே இருக்கின்றன நமது ஒவ்வொரு செய்கையிலும் இவ்விரண்டும் இணைந்தேயிருக்கின்றன !
இங்கு வாழும் மெஜாரிட்டி சமூகத்தாரில் சிலர் நாம் அரசியலில் மதத்தைப் புகுத்துவதாக நம் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள் ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? பாராளுமன்றத்தில் அரசியல் போர்வையின் கீழ் அவர்கள் கொண்டுவரும் ஒவ்வொரு சட்டமும் மதத்தில் தலையிடுவதாகவே இருக்கிறது அவர்கள் செய்வது தவறு எனக் கூறுவதற்குக் கூட நமக்கு உரிமையில்லையா?அவர்கள் செய்கின்ற தவறுகளையெல்லாம் திருத்துவதுதான் எப்படி? அரசியல் ரீதியாக நாம் ஒன்றுபடாவிடில் நமது உரிமைகளை நாம் எவ்வாறு பாதுகாக்க முடியும்? எனவே நாம் ஒன்றுபட்டே ஆக வேண்டும் ஒன்று பட்டிருக்கிறோம் என்று உலகிற்கு உணர்த்துவதற்காக நாம் ஸ்தாபன ரீதியாக இயங்க வேண்டும் !
முஸ்லிம்கள் வாழ முஸ்லிம் லீக் !
இந்திய சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் லீக் பணியைத் தொடர்ந்து செய்து வந்த மாநிலங்களில் முஸ்லிம்களின் நிலை எவ்வளவோ திருப்திகரமாக இருக்கிறது முஸ்லிம்கள் முறையாக ஸ்தாபன ரீதியில் இயங்காத மாநிலங்களில்தான் அவர்களது வாழ்வு அவலநிலை அடைந்துள்ளது மாற்றம் காண வேண்டுமானால் இறைவனின் போதனைப்படி நாம் ஒன்றுசேர வேண்டும்.
நாம் ஸ்தாபன ரீதியாக இயங்குகிறோம் என்பதற்கு அத்தாட்சியாக நாம் ஒரே அரசியல் ஸ்தாபனத்தில் ஈடுபட்டு செயல்படவேண்டும் அந்த நன்னாள் இப்போது வந்துவிட்டது நாம் ஒன்றுபட்டு இருக்கிறோமென்று அறிந்த பிறகே வேறுபல சமுதாயத்தவர்களும் நமது உதவியைத் தேடி வருகிறார்கள் நமது ஒற்றுமையை மென்மேலும் பலப்படுத்தினால் மேலும் சிறப்படைவோம் !
அந்த ஒற்றுமையைக் காப்பதின் மூலம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்குப்
பாத்திரமானவர்களாகிறோம் !
நமது தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்ய வல்லமையுடையவன் ஏக இறைவனாகிய அல்லாஹ்வேயாகும். அவனுடைய பொக்கிஷம் என்றுமே குறையாதது; நாம் அவனையே வணங்குவோம்; அவனையே பணிவோம்; அவனது கட்டளைகளின்படியே நடப்போம்; ஒற்றுமையாக இருந்து சிறப்படைவோமாக .
( கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள் - நாடாளுமன்ற – சட்டமன்ற – பத்திரிகை நேர்காணல் உரைகளின் தொகுப்பிலிருந்து )
தொகுப்பாளர் :
திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா ( குவைத் )
காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர்
குவைத்
00965 9786 2316
வெளியீடு :
மணிமேகலைப் பிரசுரம்
7 தணிகாசலம் சாலை
தியாயராய நகர்
சென்னை 600 017
தொலைபேசி : 2434 2926
விலை : ரூ. 70 ( எழுபது )
வானம் இடிந்து விழலாம்; பூமி வெடிக்கலாம்; ஆனால் –அல்லாஹ்வின் வாக்குறுதி என்றுமே பொய்யாவதில்லை !
தலைவர் காயிதே மில்லத் அவர்கள் உடல்நலக் குறைவாக இருந்தும் கூட அலிகர் முஸ்லிம்களின் ஆவலை நிறைவேற்று வதற்காக 5.5.1970ம் தேதி இரவு 11 மணியளவில் டில்லியிலிருந்து கார் மூலம் அலிகர் போய்ச் சேர்ந்தார்கள். கூட்டம் நள்ளிரவு ஒன்றரை மணிவரை நடந்தது தலைவர் அவர்களின் கருத்துச் செறிந்த சொற்பொழிவைக் கேட்ட மக்கள் ஆனந்தக் களிப்போடு "அல்லஹு அக்பர்" என விண்ணதிர முழங்கினர் அப்பொதுக் கூட்டத்தில் தலைவர் அவர்கள் பேசும்பொழுது கூறியதாவது
நாம் முஸ்லிம்களென்று நம்மைக் கூறிக்கொள்வதற்கு காரணம் நாம் இறைவனுடைய அடியார்களாக அவனது வேத கட்டளைகளுக்கு அடிபணிந்து நடப்பதுதான் நமக்கென்று தனி கலை கலாச்சாரம் ஆகிய வற்றைப் பேணிக் காத்து வருவதுதான் !
சிறுபான்மையினர் கடமைகள்
நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம் சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிகமிக அவசியம் பெரும்பானமை சமுதாயத்தினராக இருப்பவர்கள் எத்தனைக் கட்சிகளில் வேண்டு மானாலும் பிரிந்து பிரிந்து வாழலாம் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் பிரிந்து வாழ முடியாது; அவர்கள் சேர்ந்து வாழக் கடமைப்பட்டிருக்கிறார்கள் .
குர்ஆன் போதனை
நாம் ஒன்றுபட்டு வாழவேண்டுமென்பது நாமாகச் சொல்வதல்ல இது இறைவனின் கட்டளையாகும்
அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என இறைவனின் திருமறையாம் திருக்குர் ஆன் போதிக்கிறது நபி பெருமான் ( ஸல் ) அவர்களும் இதையே வலியுறுத்தியிருக்கிறார்கள் !
இறைவனின் போதனையை முஸ்லிம்கள் ஏற்று நடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்த காலம்வரை முஸ்லிம்கள் சிறப்பாகவே வாழ்ந்து வந்தனர் உலகத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களெல்லாம் அவர்களது காலடியில் வீழ்ந்தன முஸ்லிம்களின் கலையும் கலாச்சாரமும் உலகத்தில் மேலோங்கியே நின்றது இஸ்லாமிய மெய்ஞானம் உலகெல்லாம் சுடர்விட்டது
முஸ்லிம்களின் நிலை தாழ்ந்ததேன்?
எப்பொழுது முஸ்லிம்கள் இறைவனை மறந்தவர்களாய் இஸ்லாமிய போதனைகளை புறக்கணித்தவர்களாய் மாறுபட்டு நடந்தார்களோ அப்போதே முஸ்லிம்களின் நிலையும் தாழ்ந்தது தாழ்ந்த நிலையிலிருந்து மீண்டும் அவர்கள் மீட்சி பெற முடியவில்லை!
முஸ்லிம்களின் மகத்தான வளர்ச்சி
உலகத்தில் சாம்ராஜ்யங்கள் உருவாவதற்கும் வளர்வதற்கும் பல நூற்றாண்டுகள் பிடித்திருக்கின்றன ரோமானிய சாம்ராஜ்யமும்,கிரேக்க சாம்ராஜ்யமும் பல ஆயிரணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அமைந்திருக்கின்றன
ஆனால் இஸ்லாமிய சாம்ராஜ்யமோ நபி பெருமான் ( ஸல் ) அவர்களின் மறைவிற்குப் பிறகு பத்தே - ஆண்டு காலத்திற்குள் உலகில் நிலை பெற்றிருக்கிறது இதற்கெல்லாம் மூலகாரணம் முஸ்லிம்கள் இறைவனிடத்தில் கொண்டிருந்த பக்தியும் விசுவாசமுமேயாகும் அவர்கள் மார்க்க போதனைகளுக்கொப்ப தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டதனாலேயேயாகும் !
சிறப்படைவது எவ்வாறு?
நாம் ஏன் தாழ்ந்தோம்? ஏன் இந்நிலைக்கு ஆளானோம்? நமக்குள் ஏற்படும் வேற்றுமைகளை நீக்கிக்கொள்ள சக்தியற்றவர்களாகி விட்டோம்? நமது சிறிய அபிப்பிராய பேதங்களையெல்லாம் பெரிது படுத்திக்கொண்டதுதான் நமது ஒற்றுமை குலைந்ததற்குக் காரணங் களாகும் ! நமது வேற்றுமையையும் அபிப்பிராய பேதங்களையும் நாம் குர்பானி கொடுத்துவிட வேண்டும் சகோதர உணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும்
அல்லாஹ் வாக்குறுதியை காப்பாற்றுபவன் !
வானம் இடிந்து விழலாம்; பூமி வெடித்து விடலாம்; ஆனால் அல்லாஹ்வின் வாக்குறுதி பொய்த்துப் போவதில்லை அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றுபவன் !
அவன் நமக்கு அழகான வாக்குறுதிகளை அளித்திருக்கிறான் அதன் பயனை அடைவதற்கு நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒற்றுமையாக இருப்பதுதான் ஒன்றாக செயல்படுவதுதான் !
அரசியல் ரீதியாக ஒன்றுபடுவோம் !
நாம் எல்லாத் துறைகளிலும் ஒன்றுபட வேண்டியவர்களாக இருக்கிறோம் அரசியல் ரீதியாகவும் ஒன்றுபட வேண்டியவர்களாக இருக்கிறோம் நமக்கு எதற்கு அரசியல் என்று கேட்பவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்
அரசியலில் பங்கு பெறாமல் நாம் எப்படி வாழ முடியும்? பிற சமுதாயத்தினர்களுக்கு வேண்டுமானால் அரசியல் வேறு மதம் வேறு என்றிருக்கலாம் ஆனால் நமக்கோ மதமும் அரசியலும் ஒன்றாக இணைந்தே இருக்கின்றன நமது ஒவ்வொரு செய்கையிலும் இவ்விரண்டும் இணைந்தேயிருக்கின்றன !
இங்கு வாழும் மெஜாரிட்டி சமூகத்தாரில் சிலர் நாம் அரசியலில் மதத்தைப் புகுத்துவதாக நம் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள் ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? பாராளுமன்றத்தில் அரசியல் போர்வையின் கீழ் அவர்கள் கொண்டுவரும் ஒவ்வொரு சட்டமும் மதத்தில் தலையிடுவதாகவே இருக்கிறது அவர்கள் செய்வது தவறு எனக் கூறுவதற்குக் கூட நமக்கு உரிமையில்லையா?அவர்கள் செய்கின்ற தவறுகளையெல்லாம் திருத்துவதுதான் எப்படி? அரசியல் ரீதியாக நாம் ஒன்றுபடாவிடில் நமது உரிமைகளை நாம் எவ்வாறு பாதுகாக்க முடியும்? எனவே நாம் ஒன்றுபட்டே ஆக வேண்டும் ஒன்று பட்டிருக்கிறோம் என்று உலகிற்கு உணர்த்துவதற்காக நாம் ஸ்தாபன ரீதியாக இயங்க வேண்டும் !
முஸ்லிம்கள் வாழ முஸ்லிம் லீக் !
இந்திய சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் லீக் பணியைத் தொடர்ந்து செய்து வந்த மாநிலங்களில் முஸ்லிம்களின் நிலை எவ்வளவோ திருப்திகரமாக இருக்கிறது முஸ்லிம்கள் முறையாக ஸ்தாபன ரீதியில் இயங்காத மாநிலங்களில்தான் அவர்களது வாழ்வு அவலநிலை அடைந்துள்ளது மாற்றம் காண வேண்டுமானால் இறைவனின் போதனைப்படி நாம் ஒன்றுசேர வேண்டும்.
நாம் ஸ்தாபன ரீதியாக இயங்குகிறோம் என்பதற்கு அத்தாட்சியாக நாம் ஒரே அரசியல் ஸ்தாபனத்தில் ஈடுபட்டு செயல்படவேண்டும் அந்த நன்னாள் இப்போது வந்துவிட்டது நாம் ஒன்றுபட்டு இருக்கிறோமென்று அறிந்த பிறகே வேறுபல சமுதாயத்தவர்களும் நமது உதவியைத் தேடி வருகிறார்கள் நமது ஒற்றுமையை மென்மேலும் பலப்படுத்தினால் மேலும் சிறப்படைவோம் !
அந்த ஒற்றுமையைக் காப்பதின் மூலம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்குப்
பாத்திரமானவர்களாகிறோம் !
நமது தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்ய வல்லமையுடையவன் ஏக இறைவனாகிய அல்லாஹ்வேயாகும். அவனுடைய பொக்கிஷம் என்றுமே குறையாதது; நாம் அவனையே வணங்குவோம்; அவனையே பணிவோம்; அவனது கட்டளைகளின்படியே நடப்போம்; ஒற்றுமையாக இருந்து சிறப்படைவோமாக .
( கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள் - நாடாளுமன்ற – சட்டமன்ற – பத்திரிகை நேர்காணல் உரைகளின் தொகுப்பிலிருந்து )
தொகுப்பாளர் :
திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா ( குவைத் )
காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர்
குவைத்
00965 9786 2316
வெளியீடு :
மணிமேகலைப் பிரசுரம்
7 தணிகாசலம் சாலை
தியாயராய நகர்
சென்னை 600 017
தொலைபேசி : 2434 2926
விலை : ரூ. 70 ( எழுபது )
Thursday, July 3, 2008
குவைத்தில் பனாத்வாலா சாஹிப் மறைவுக்கு இரங்கல்
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...
குவைத்,
ஹிஜ்ரி 1429 ஜமாதுல் ஆஃகிர் பிறை 22
ஜூன் 26, 2008
கண்ணியத்திற்குரிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழ் மாநில தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி...
குவைத் தமிழ் இஸ்லாமிச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் செய்தி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதெ மில்லத் அல்ஹாஜ் குலாம் முஹம்மது பனாத்வாலா அவர்கள் வஃபாத்தான தகவலறிந்த குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) அதிர்ச்சியடைந்தது.
அவர்களின் மறைவு சமுதாயத்திற்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். குவைத் வாழ் இந்திய இஸ்லாமியர்கள் மிகவும் துக்கத்திற்குள்ளான அதிர்ச்சி நிகழ்வாகும். மனிதநேயத்திற்கும், சமய நல்லிணக்கத்திற்கும் முன்னுதாரணமாக வாழ்ந்த அவர்களின் மறைவு இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி, இந்தியத் திருநாட்டிற்கே பேரிழப்பாகும்.
தாய்ச்சபையின் பொன்விழாவில் அவர்கள் உதிர்த்த வாhத்தைகள் என் றென்றும் வரலாற்றில் பொறித்துவைக்கப்படும். அவர்கள் இஸ்லாமிய மக்களுக்காக மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்காகவும், சமய நல்லிணக்கத்திற்காகவும் அயராது பாடுபட்டவர். மிகச் சிறந்த தலைவர். பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் எழுப்பியவர்.
சமுதாய முன்னேறமடைய வேண்டும் என்று தீராத வேட்கை கொண்ட அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகைச் சேர்ந்த தோழர்களுக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பாவப் பிழைகளைப் பொறுத்து, அவர்களின் சமுதாயச் சேவைகளை ஏற்று, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்கிடவும் துஆ செய்கிறது.
தலைவர் - மவ்லவீ அல்ஹாஜ் டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத்
பொதுச்செயலாளர் - மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத்
குவைத்தில் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் மர்ஹும் குலாம் முஹம்மது பனாத்வாலா ஸாஹிப் அவர்களுக்கு பிரார்த்தனையும், இரங்கல் கூட்டமும் நடத்தப்பட்டது!
குவைத் 28.06.2008
நேற்று 27.06.2008 குவைத் ஹவல்லி அஷ்ஷைக்கா ஷபீக்கா பள்ளிவாசலில் (வாரந்தோறும் (K-Tic) குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சார்பாக ஹதீஸ் விளக்கவுரை வகுப்புகள் நடக்கும் பள்ளிவாசல்) ஜும்ஆ தொழுகைக்கு பின் சங்கத்தின் சார்பாக மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் மர்ஹும் குலாம் முஹம்மது பனாத்வாலா ஸாஹிப் அவர்களுக்கு மறுமை வாழ்வின் வெற்றிக்காக துஆ செய்யப்பட்டது.
சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை அரங்கத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ மறைந்த தலைவரின் சேவையை நினைவு கூர்ந்து உரையாற்றினார். சங்கத்தின் கொள்கை பரப்புக்குழு செயலாளர் மவ்லவீ எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ அண்னாரின் மஃக்பிரத்திற்க்காக துஆ செய்தார்கள். இந்நிகழ்வில் முஸ்லீம் லீக்கர்கள் உட்பட பலர் பங்கேற்று அண்னாரின் மறுவுலக வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.
---------------
குவைத் மிர்காப் மஸ்ஜித் பின் நப்ஹான் பள்ளிவாசலில் அஸர் தொழுகைக்கு பின் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை (TMCA) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புனித உம்ரா செயல்முறை வகுப்பு நிகழ்ச்சியிலும் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் மர்ஹும் குலாம் முஹம்மது பனாத்வாலா ஸாஹிப் அவர்களுக்கு மறுமை வாழ்வின் வெற்றிக்காக துஆ செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ, பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ, இணைப்பொருளாளர் அல்ஹாஜ் எம். முஹம்மது நாஸர், ஹவல்லி கிளை பொறுப்பாளர் ஏ. ஹஸன் முஹம்மது, லீகர் ஷாஹின் ஷா உட்பட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினர், முஸ்லீம் லீக்கர்கள் உட்பட பலர் பங்கேற்று அண்னாரின் மறுவுலக வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.
---------------
குவைத் அப்பாஸிய்யா யுனைடேட் இந்தியன் பள்ளிகூடத்தில் மக்ரிப் தொழுகைக்கு பின் குவைத் கேரளா முஸ்லிம் கலாச்சாரப் பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் குவைத் இந்தியன் முஸ்லிம் லீக் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா கலந்துகொண்டு மறைந்த தலைவரின் சேவையை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ, இணைப்பொருளாளர் அல்ஹாஜ் எம். முஹம்மது நாஸர், ஹவல்லி கிளை பொறுப்பாளர் ஏ. ஹஸன் முஹம்மது, லீகர் ஷாஹின் ஷா உட்பட முஸ்லீம் லீக்கர்களும், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினரும், நூற்றுக்கணக்கான கேரள முஸ்லிம் லீக்கர்களும் பங்கேற்று அண்னாரின் மறுவுலக வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.
செய்தி :
- பரங்கிப்பேட்டை 'அய்மான்',
குவைத் தமிழ்ச் செய்தி ஊடகம் (TNBK).
ktic.kuwait@gmail.com
குவைத்,
ஹிஜ்ரி 1429 ஜமாதுல் ஆஃகிர் பிறை 22
ஜூன் 26, 2008
கண்ணியத்திற்குரிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழ் மாநில தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி...
குவைத் தமிழ் இஸ்லாமிச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் செய்தி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதெ மில்லத் அல்ஹாஜ் குலாம் முஹம்மது பனாத்வாலா அவர்கள் வஃபாத்தான தகவலறிந்த குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) அதிர்ச்சியடைந்தது.
அவர்களின் மறைவு சமுதாயத்திற்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். குவைத் வாழ் இந்திய இஸ்லாமியர்கள் மிகவும் துக்கத்திற்குள்ளான அதிர்ச்சி நிகழ்வாகும். மனிதநேயத்திற்கும், சமய நல்லிணக்கத்திற்கும் முன்னுதாரணமாக வாழ்ந்த அவர்களின் மறைவு இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி, இந்தியத் திருநாட்டிற்கே பேரிழப்பாகும்.
தாய்ச்சபையின் பொன்விழாவில் அவர்கள் உதிர்த்த வாhத்தைகள் என் றென்றும் வரலாற்றில் பொறித்துவைக்கப்படும். அவர்கள் இஸ்லாமிய மக்களுக்காக மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்காகவும், சமய நல்லிணக்கத்திற்காகவும் அயராது பாடுபட்டவர். மிகச் சிறந்த தலைவர். பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் எழுப்பியவர்.
சமுதாய முன்னேறமடைய வேண்டும் என்று தீராத வேட்கை கொண்ட அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகைச் சேர்ந்த தோழர்களுக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பாவப் பிழைகளைப் பொறுத்து, அவர்களின் சமுதாயச் சேவைகளை ஏற்று, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்கிடவும் துஆ செய்கிறது.
தலைவர் - மவ்லவீ அல்ஹாஜ் டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத்
பொதுச்செயலாளர் - மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத்
குவைத்தில் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் மர்ஹும் குலாம் முஹம்மது பனாத்வாலா ஸாஹிப் அவர்களுக்கு பிரார்த்தனையும், இரங்கல் கூட்டமும் நடத்தப்பட்டது!
குவைத் 28.06.2008
நேற்று 27.06.2008 குவைத் ஹவல்லி அஷ்ஷைக்கா ஷபீக்கா பள்ளிவாசலில் (வாரந்தோறும் (K-Tic) குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சார்பாக ஹதீஸ் விளக்கவுரை வகுப்புகள் நடக்கும் பள்ளிவாசல்) ஜும்ஆ தொழுகைக்கு பின் சங்கத்தின் சார்பாக மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் மர்ஹும் குலாம் முஹம்மது பனாத்வாலா ஸாஹிப் அவர்களுக்கு மறுமை வாழ்வின் வெற்றிக்காக துஆ செய்யப்பட்டது.
சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை அரங்கத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ மறைந்த தலைவரின் சேவையை நினைவு கூர்ந்து உரையாற்றினார். சங்கத்தின் கொள்கை பரப்புக்குழு செயலாளர் மவ்லவீ எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ அண்னாரின் மஃக்பிரத்திற்க்காக துஆ செய்தார்கள். இந்நிகழ்வில் முஸ்லீம் லீக்கர்கள் உட்பட பலர் பங்கேற்று அண்னாரின் மறுவுலக வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.
---------------
குவைத் மிர்காப் மஸ்ஜித் பின் நப்ஹான் பள்ளிவாசலில் அஸர் தொழுகைக்கு பின் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை (TMCA) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புனித உம்ரா செயல்முறை வகுப்பு நிகழ்ச்சியிலும் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் மர்ஹும் குலாம் முஹம்மது பனாத்வாலா ஸாஹிப் அவர்களுக்கு மறுமை வாழ்வின் வெற்றிக்காக துஆ செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ, பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ, இணைப்பொருளாளர் அல்ஹாஜ் எம். முஹம்மது நாஸர், ஹவல்லி கிளை பொறுப்பாளர் ஏ. ஹஸன் முஹம்மது, லீகர் ஷாஹின் ஷா உட்பட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினர், முஸ்லீம் லீக்கர்கள் உட்பட பலர் பங்கேற்று அண்னாரின் மறுவுலக வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.
---------------
குவைத் அப்பாஸிய்யா யுனைடேட் இந்தியன் பள்ளிகூடத்தில் மக்ரிப் தொழுகைக்கு பின் குவைத் கேரளா முஸ்லிம் கலாச்சாரப் பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் குவைத் இந்தியன் முஸ்லிம் லீக் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா கலந்துகொண்டு மறைந்த தலைவரின் சேவையை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ, இணைப்பொருளாளர் அல்ஹாஜ் எம். முஹம்மது நாஸர், ஹவல்லி கிளை பொறுப்பாளர் ஏ. ஹஸன் முஹம்மது, லீகர் ஷாஹின் ஷா உட்பட முஸ்லீம் லீக்கர்களும், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினரும், நூற்றுக்கணக்கான கேரள முஸ்லிம் லீக்கர்களும் பங்கேற்று அண்னாரின் மறுவுலக வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள்.
செய்தி :
- பரங்கிப்பேட்டை 'அய்மான்',
குவைத் தமிழ்ச் செய்தி ஊடகம் (TNBK).
ktic.kuwait@gmail.com
Subscribe to:
Posts (Atom)