பள்ளப்பட்டி ஹாஜி வி.எம்.அப்துல் ஜப்பார் மரணம்: முஸ்லிம் லீக் இரங்கல்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் பள்ளப்பட்டி ஹாஜி வி.எம். அப்துல் ஜப்பார் நேற்று (25-12-09) அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு இரங் கல் தெரிவித்து வழுத்தூ ரில் நடைபெற்ற முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டத் தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
அதில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது-
பள்ளப்பட்டி ஹாஜி வி.எம்.அப்துல் ஜப்பார் - தமிழக சட்டமன்ற முன் னாள் உறுப்பினர்:
சமுதாயத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் முக்கியப் பெருந் தகையுமான ஹாஜி வி.எம். அப்துல் ஜப்பார், 25.12.2009 பிற்பகல் 2.30 மணிக்கு காலமானார். தனது 84 வயதிலும், சமுதாய நல னில் பெரும் அக்கறை கொண்டவராகத் திகழ்ந்த அவர், 1971-76 ஆண்டு களில் அரவக்குறிச்சி சட்ட மன்றத் தொகுதியில், இந் திய ய+னியன் முஸ்லிம் லீக் உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டு, திறம்பட செயல்பட்டவர்.
அவரது காலத்தில் தான், உருது பேசுவோர் உள்ளிட்ட முஸ்லிம்கள் அனைவரும் பிற்பட் டோர் பட்டியலில் இடம் பெற்றனர். இதற்காக கடுமையாக உழைத்தவர் அவர்.
பள்ளப்பட்டி பேரூ ராட்சி மன்றத்தின் தலைவ ராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பணி யாற்றியவர். பள்ளப் பட்டி முஸ்லிம் கல்விச் சங்கம், பள்ளப்பட்டி பாவா ஃபக்ருத்தீன் தர்ஹா மற்றும் பள்ளி வாசல், சென்னை காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி உள் ளிட்ட பல அமைப்பு களில் பொறுப்புகளை ஏற்று, சிறப்பாக பணி செய்தவர்.
அன்னாரின் ஜனாஸா இன்று பிற்பகல் பள்ளப் பட்டியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவ ருக்கு மனைவியும், நான்கு ஆண் மக்களும் உள்ளனர். ஒரு மகள் காலமாகி விட் டார். இவரது மறைவு சமுதாயத்திற்கும், தாய்ச் சபைக்கும் பேரிழப்பாகும்.
எல்லாம் வல்ல இறை வன் அன்னாரின் பிழைக ளைப் பொறுத்து, நற்செ யல்களை பரிப+ரணமாக அங்கீகரித்து, மேலான சுவனபதியை வழங்க இச் செயற்குழு பிரார்த்திப் பதோடு, அன்னாரின் பிரி வால் வாடும் அவரது குடும் பத்தாருக்கும், பள்ளப் பட்டி நகர ஜமா அத்தா ருக்கும் இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறது
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label மரணம். Show all posts
Showing posts with label மரணம். Show all posts
Saturday, December 26, 2009
Wednesday, June 25, 2008
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பனாத்வாலா மரணம்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பனாத்வாலா மரணம்
புதன்கிழமை, ஜூன் 25, 2008
மும்பை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா இன்று மாலை மரணமடைந்தார்.
பனாத்வாலா 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம். பி.எட். பட்டப்படிப்பை முடித்தார். 1954 முதல் 1962 வரை அஞ்சுமனே இஸ்லாம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் காயிதெமில்லத்தைச் சந்தித்து முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார்.
மும்பை உமர்காடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1967 முதல் 1977 வரை மஹாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.
இக்காலகட்டத்தில் மஹாராஷ்டிர அரசு கருத்தடை சட்டம், பசுவதை சட்டம், வந்தேமாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தபோது அவற்றை எதிர்த்து கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட அறப்போராட்டங்கள் நடத்தி அவற்றில் வெற்றியும் பெற்றார்.
பாராளுமன்றத்திற்கு கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 முதல் 1991 வரையிலும் 1996 முதல் 2004 வரையிலும் உறுப்பினராக இருந்தார்.
சென்னை முஸ்லிம் அமைப்புகளால் 'சிறந்த சமூக சேவகர் தங்கப்பதக்க விருது பனாத்வாலாவுக்கு வழங்கபப்ட்டது. முதல்வர் கருணாநிதி இந்த விருதினை வழங்கினார்.
இப்றாஹீம் சுலைமான் சேட் மறைவுக்குப் பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராக பணியாற்றி வந்தார்.
முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக வரை பணியாற்றி வந்தார். அலிகர் சர்வ கலாசாலை ஆட்சிக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிலும் பொறுப்பு வகித்து வந்தார்.
கடந்த ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 60ஆம் ஆண்டு நிறைவு மணிவிழா மாநாட்டில் கலந்துகொண்டதே பனாத்வாலாவின் கடைசி நிகழ்ச்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
http://thatstamil.oneindia.in/news/2008/06/25/india-iuml-leader-banathwala-passes-away.html
புதன்கிழமை, ஜூன் 25, 2008
மும்பை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா இன்று மாலை மரணமடைந்தார்.
பனாத்வாலா 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம். பி.எட். பட்டப்படிப்பை முடித்தார். 1954 முதல் 1962 வரை அஞ்சுமனே இஸ்லாம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் காயிதெமில்லத்தைச் சந்தித்து முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார்.
மும்பை உமர்காடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1967 முதல் 1977 வரை மஹாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.
இக்காலகட்டத்தில் மஹாராஷ்டிர அரசு கருத்தடை சட்டம், பசுவதை சட்டம், வந்தேமாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தபோது அவற்றை எதிர்த்து கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட அறப்போராட்டங்கள் நடத்தி அவற்றில் வெற்றியும் பெற்றார்.
பாராளுமன்றத்திற்கு கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 முதல் 1991 வரையிலும் 1996 முதல் 2004 வரையிலும் உறுப்பினராக இருந்தார்.
சென்னை முஸ்லிம் அமைப்புகளால் 'சிறந்த சமூக சேவகர் தங்கப்பதக்க விருது பனாத்வாலாவுக்கு வழங்கபப்ட்டது. முதல்வர் கருணாநிதி இந்த விருதினை வழங்கினார்.
இப்றாஹீம் சுலைமான் சேட் மறைவுக்குப் பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராக பணியாற்றி வந்தார்.
முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக வரை பணியாற்றி வந்தார். அலிகர் சர்வ கலாசாலை ஆட்சிக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிலும் பொறுப்பு வகித்து வந்தார்.
கடந்த ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 60ஆம் ஆண்டு நிறைவு மணிவிழா மாநாட்டில் கலந்துகொண்டதே பனாத்வாலாவின் கடைசி நிகழ்ச்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
http://thatstamil.oneindia.in/news/2008/06/25/india-iuml-leader-banathwala-passes-away.html
Subscribe to:
Posts (Atom)