Thursday, November 24, 2011

எல்லாப் புகழும் இறைவனுக்கே !!!!

எல்லாப் புகழும் இறைவனுக்கே !!!! தற்காலங்களில் அடைமொழியுடன் தற்குறிப்பேற்ற அணியை தன்னகத்தே கொண்டு ஒரு தலைப்பில் புகைப்படத்துடன் கூடிய தகவல் ஒன்று மின்னஞ்சல் வழியே வலம் வந்து கொண்டிருக்கின்றது. அது என்ன ?? யாரைப் பற்றிய தகவல் அது ?? வலம் வரும் தலைப்பு : அருமையான தலைவர் யாரைப்பற்றிய தலைப்பு அது : முன்னாள் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களைப் பற்றியது. அதாவது குறிப்பிட்ட பத்திரிக்கை ஒன்று புகைப்படங்களுடன் கூடிய செய்திகளை தனக்கே உரித்தான தமிழில் 22.04.2006 அன்று வெளியிட்டிருந்தது. அதில் வேலூர் எம்.பி. காதர் மொகிதீன் அவர்கள் சக்தி அம்மா அவர்களிடம் ஆசி பெற்றார் என்றும் சக்தி அம்மா அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றார் என்றும் குறிப்பிட்டிருந்த்து. இச்செய்தி குறித்து அறிந்ததும் முன்னாள் வேலூர் எம்.பி. அவர்களால் மறுப்புச் செய்திகளும் அப்போதே தினசரிகள் மற்றும் வாராந்திரிகளில் வெளிவந்திருந்தன. ஆனால் தற்போதும் குறிப்பிட்ட தினசரியின் புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் மின்னஞ்சலில் பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அறிந்து கொள்ள மார்க்-குரூப் ( www.mark-group.info ) 28.03.2010 அன்று துபையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் வேலூர் எம்.பி. அவர்களை சந்தித்து சில விடயங்களை கேட்டறிந்தது. அதன் முழு விபரம் வருமாறு : ( Please click the link below ) www.mark-group.info and then click interview with Ex-MP Prof. K.M.K. ( தொடர்ச்சி உள் செய்தி ) காலை உணவு நேரம். உணவைப் பற்றி பொருள் கொள்ளாமல் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு செய்முறை விளக்கத்துடன் எமக்கு விடையம் அளித்தார். முகமன் : அஸ்ஸலாமு அலைக்கும் பதில் : வ அலைக்கும் சலாம் கேள்வி : தாங்கள் சக்தி அம்மாவிடம் 22.04.2006 அன்று ஆசி பெற்றதாக கூறப்படுகிறதே ? அது பற்றி ……….. பதில் : சக்தி அம்மா என்பவர் 30 முதல் 33 வயது அனுமானிக்கத்தக்க இளம் வயது ஹிந்து ஆன்மீகப் பேச்சாளர். தங்கத்தினால் ஆன மஹாலஷ்மி கோவில் ஒன்றை திருமலைக்கோடி என்ற ஊரில் நிர்மாணித்துக் கொண்டிருந்தார். இந்தப் பகுதி நான் பாராளுமன்ற உறுப்பினராக வேலூர் தொகுதிக்குட்பட்டதாகும். கோவில் கட்டுமாணப் பணியை பார்வையிடுவதற்காக வேலூர் எம்.பி. என்ற முறையில் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். நானும் அவருடைய அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தேன். நல்ல முறையில் வரவேற்றார். அவர்கள் முறைப்படி அவருக்கு முகமண் கூறினேன். ( அது தவறுதலாக ஒரு குறிப்பிட்ட மக்கள் மத்தியில் பொருள் கொள்ளப்பட்டிருக்கலாம் ) இருவரும் ஆன்மீக சிந்தனைகளை பறிமாறிக் கொண்டோம். கடவுள் கொள்கை பற்றிய சித்தாந்தங்களை கூறினார். இருவரும் ஓரிறை கொள்கை பற்றிய சித்தாந்தங்களை பரிமாறிக் கொண்டோம். நான் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் எம்.பியாக இருந்ததில்லை. வேலூர் தொகுதியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் எம்.பியாக இருந்து வந்தேன். கேள்வி : சக்தி அம்மாவின் காலில் விழுந்து ஆசி பெற்றதாக குறிப்பிட்ட பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கின்றதே ? அது பற்றி ……… பதில் : படைத்த இறைவனுக்கே புகழனைத்தும். காலில் விழுதல் என்பது கல்லாமையின் வெளிப்பாடு. சிரம் சாய்த்தல், விழுந்து வணங்குதல் என்பது படைத்த இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டியது. மற்ற எவரின் காலில் விழுதல் என்பது ஓரிறை கொள்கைக்கு புறம்பானது. பொதுவாக தரையில் உட்காரும் போது நமது இஸ்லாமிய மக்கள் தொழுகையில் உடகாரும் அத்தஹிய்யாத்து இருப்பில் இருப்பது போன்று உட்காருவது வழக்கம். அவ்வாறு உட்கார்ந்து கொண்டுதான் சக்தி அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அவருடன் பேசுவதற்காக மக்கள் கூட்டம் வந்தபடி இருந்தன. இறுதியாக சக்தி அம்மாவிடம் ஒரு கேள்வியை கேட்டேன். அதாவது ஏகப்பட்ட செலவில் தங்கத்தினால் ஆன கோவிலை கட்டிதான் கடவுளை வணங்க வேண்டுமா என்று கேட்ட போது ‘கடவுள் இங்கு தான் இருக்கின்றார் என்றில்லை, இது மக்களைக் கவர்வதற்கான ஒரு வழி’. மேலும் சக்தி அம்மா கூறுகையில் ’தங்கத்தினால் ஆன கோவிலை பார்க்க ஏகப்பட்ட மக்கள் வருவார்கள். அப்படியாவது மக்களுக்கு கடவுள் கொள்கையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையுமே என்று தான் இக்கோயிலை இவ்வளவு செலவில் கட்டுவதாக அவர் கூறினார். சக்தி அம்மாவின் கருத்தை ‘இது அவருடைய கருத்து’ என்று கூறி நம்மிடம் முன்னள் எம்.பி. அவர்கள் பேட்டியை தொடர்ந்தார். ’காலில் விழுந்து ஆசி பெற்றதாக கூறப்படுகிறதே ! அது குறிப்பிட்ட பத்திரிக்கையால் திரிக்கப்பட்ட செய்தி. சக்தி அம்மாவிடம் பேச்சை முடித்துக் கொண்டு, அடுத்த பணிக்குச் செல்ல தயாரான சமயம் அனைவரும் சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று சக்தி அம்மா கேட்டுக் கொண்டார். நானும் சிரித்துக் கொண்டே…….. அத்தஹிய்யாத்து இருப்பில் இருந்தபடி இரு கால்களில் ஏற்பட்ட வேதனை தாங்காமல் என் இரண்டு கைகளையும் ஊன்றிக் கொண்டு எழுந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட குறிப்பிட்ட பத்திரிக்கை படம் எடுத்து, காலில் விழுந்து ஆசி பெற்றார் என்று செய்தி வெளியிட்டு விட்டது. இது அந்த பத்திரிகைக்கே உரித்தான style. சம்பந்தப்பட்ட பத்திரிகை நிருபரை சக்தி அம்மா அவர்களே கண்டித்து விட்ட்தால் நாம் அப்பத்திரிக்கைக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது சம்பந்தமாக ஏற்கனவே மறுப்பு வெளியிட்டுள்ளோம். மீண்டும் இச்செய்தி குறிப்பிட சில அமைப்புகள் மற்றும் சகோதரர்களால் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருவதாக சொல்கின்றீர்கள். இதை அப்படியே விட்டுவிடுங்கள். மக்களில் ஒரு சிலர் இதுபோன்ற அப்பட்டமான செய்திகளை பரப்பிக் கொண்டுதான் இருப்பார்கள். ( சாப்பாடு காத்துக் கொண்டிருந்தது, இருந்தும் எங்களின் கேள்விகளுக்கு முனைப்புடன் பதில் சொல்வதிலேயே முன்னாள் எம்.பி. அவர்கள் இருந்தார்கள் ) வேறு ஏதாவது கேள்வி இருக்கா என முன்னாள் எம்.பி. அவர்கள் வினவினார். இப்போது நீங்கள் சாப்பிட செல்லுங்கள். பிறகு பேட்டியைத் தொடரலாம் என்று மார்க்-குரூப் கூறியது. இல்லை முதலில் பேட்டியை முடித்துக் கொள்வோம் பிறகு சாப்பிடச் செல்கின்றேன் என்று பேட்டியைத் தொடர்ந்தார். கேள்வி : தற்போது பிரபல்யமாக பேசப்பட்டு வரும் ஒரு சாமியாரிடமிருந்து டிவிடி மற்றும் புத்தகங்கள் வாங்குவது போன்ற காட்சி குறித்து …… பதில் : உண்மை தான். தற்போது பிரபலமாக பேசப்பட்டு வரும் சாமியாரின் பேச்சுக்களை உள்ளடக்கிய டிவிடி மற்றும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வேலூர் எம்.பி. என்ற முறையில் என்னை அழைத்திருந்தார்கள். நான் அவ்வாறே சென்று விழாவில் கலந்து அவர்கள் வெளியிட்ட டிவிடி மற்றும் புத்தகங்களை பெற்று வந்தேன். இதில் தவறு ஏதும் இருக்கின்றதா ? இந்திய ஜனநாயக முறைப்படி பாராளுமன்றத் தொகுதி வேலூர் மக்கள் அனைவருக்கும் தான் நான் எம்.பியாக இருந்து வந்தேன். நாம் சாப்பாட்டுக்காக காத்திருக்கலாம். ஆனால் நமக்காக சாப்பாடு காத்திருக்கக் கூடாது என்ற அடிப்படையில் நாம் பேட்டியை முடித்துக் கொண்டோம். முன்னாள் எம்.பி. அவர்கள் எங்களிடம் நடந்து கொண்ட விதம், பண்பு, எங்களையும் சாப்பிடும்படி செய்த உபசரிப்பு, பேட்டியின் போது இடையிடையே செய்முறை விளக்கத்துடன் கூடிய பேச்சு, அன்பு மற்றும் நடந்து கொள்ளும் விதம் இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கையில் மக்கள் அவருக்கு தந்திருக்கக்கூடிய ‘அருமையான தலைவர்’ என்ற பட்டம் பொருத்தமான ஒன்று தான். அரசியல் வாழ்க்கையில் பலதுண்டு. அதே நேரத்தில் தமது தனிப்பட்ட கொள்கைகளை விட்டுக் கொடுக்கமுடியாது. கால/நேரம் வாய்க்கும் போது உண்மைக் கொள்கையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது நமது கடமை. இப்படிக்கு நிர்வாகம் http://www.mark-group.info/int_km.html http://www.mark-group.info/ www.mark-group.info

தியாகத் தழும்புகளும் சத்திய முழக்கங்களும்�� - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி

தியாகத் தழும்புகளும் சத்திய முழக்கங்களும்�� - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி பிறைமேடை தலையங்கம்


பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!

வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!

மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை நகரத்தை இருப்பிடமாய்க் கொண்டு, ஒரு சாதாரண ஆசிரியப் பணியில் வாழ்க்கையின் தொடக்கத்தைக் கண்டு, நாடே வியக்கும் வண்ணம் நாடாளுமன்றத்தில் பலமுறை கர்ஜனை செய்து சிறுபான்மை சமூகத்திற்காகப் போராடிய மாபெரும் தலைவர் நம் பேரியக்கம் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் மர்ஹூம் குலாம் மஹ்மூது பனாத்வாலா சாஹிப் அவர்கள்.

2008 ஆம் ஆண்டு சென்னையில் முஸ்லிம் லீகின் மணிவிழா மாநாடு நடைபெற்றபோது அவர் ஆற்றிய அற்புதமான அந்தப் பேருரைதான் அவருடைய கடைசி உரை என்பதை அப்போது நாம் உணரவில்லை. மாநாடு முடிந்து சென்னையிலிருந்து மும்பை நகர் சென்ற மறுநாளே அவருடைய மறைவுச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முஸ்லிம் லீகின் அங்கீகார அமைப்பாக அமீரகத்தில் மிகச் சிறப்பாக சமூகப் பணியாற்றிவரும் காயிதெ மில்லத் பேரவைக்கு மாவட்ட அந்தஸ்துடன் பிரதிநிதித்துவம் பெறும் உரிமை வழங்கப்பட்டு இன்றளவிலும் அது நடைமுறையில் இருப்பதையும் நாம் அறிவோம். அதன் தலைவர் என்கிற பொறுப்புடன் நானும், பொதுச் செயலாளர் லியாக்கத் அலி அவர்களுடன் மற்ற நிர்வாக உறுப்பினர்களும் மணிவிழா மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு மறுநாளே துபாய் திரும்பினோம். அடுத்த மூன்றே நாட்களில் பனாத்வாலா சாஹிப் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு துபாயிலிருந்து மும்பை நகரத்துக்கு விரைந்து வந்து அவரின் நல்லடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தால் பெற்றேன். தமிழ்நாட்டிலிருந்து நமது தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் தலைமையில் பெருந்திரளான ஒரு குழுவே மும்பை நகர் வந்து கலந்து கொண்டதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

அதே நேரத்தில் கேரளாவிலிருந்து மறைந்த கேரள மாநிலத் தலைவர் முகம்மது அலி ஷிஹாப் தங்ஙள் அவர்களின் தலைமையிலும், மற்ற பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்து குழுமியிருந்த காட்சிக்கு நடுவே மும்பை நகரத்தின் பிரமுகர்கள், வணிகர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் என்று ஆர்வத்துடன் ஜனாஸா நிகழ்வில் கலந்து கொண்டபோதுதான் பனாத்வாலா சாஹிப் அவர்களின் அன்புக்கு அடைக்கலமானோரின் அற்புதம் விளங்கியது.

அன்னாரின் மறைவு செய்தி கேட்டு நாட்டின் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தார்கள் என்றாலும் பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், முன்னாள் உள்துறை அமைச்சரும், இந்நாள் மஹாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநருமான மேதகு சிவராஜ் பாட்டீல் தமது இரங்கல் செய்தியில் ஒரு செய்தியைச் சொன்னார்.

��இந்த பாரத நாட்டின் மிக உயர்ந்த சட்டம் இயற்றும் மன்றமான பாராளுமன்றத்தில் ஒருவர் எப்படி செயலாற்ற வேண்டும்; எப்படி பேச வேண்டும்; எப்படி விவாதம் புரிய வேண்டும் என்பதற்கு எனக்குத் தெரிந்த வரையிலும் பனாத்வாலா அவர்கள்தான் முதன்மையான எடுத்துக் காட்டாக விளங்கினார்�� என்பதுதான் அந்த இரங்கல் செய்தி.

இத்தகைய வரலாற்றுப் பெருமையைக் கொண்டவராக வாழ்ந்து மறைந்த முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப் அவர்களின் நினைவாக அன்னாரின் பெயரையே மும்பை நகரின் பிரசித்தி பெற்ற ஒரு மிகப் பெரிய சாலைக்கு பெயர் சூட்டும் விழா மும்பை நகரில் சென்ற 16.10.2011 அன்று நடைபெற்றது. தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக அந்த விழாவில் கலந்து கொள்ள நமது மாநிலத் தலைவர் பேராசிரியர் அவர்கள் என்னைப் பணித்தார்கள். சென்று, அந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியும், கலந்து கொண்ட அனைத்து பிரமுகர்களிடம் உரையாடியும் சென்னைக்குத் திரும்பினேன். அந்த விழாவில் நம் தேசியத் தலைவரும் மத்திய வெளிவிவகாரத்துறை இணை அமைச்சருமான மாண்புமிகு இ.அஹமது அவர்கள் தலைமையேற்க முக்கிய விருந்தினராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய பெட்ரோலியத் துறை முன்னாள் அமைச்சர் திரு.முரளி தியோரா கலந்து கொண்டு பனாத்வாலா சாஹிப் அவர்களின் அருமை பெருமைகளைத் தொகுத்து, சிறுவயதிலிருந்தே அவருடன் மும்பை நகர வீதியில் உலா வந்த நிகழ்வுகளையெல்லாம் நினைவுகூர்ந்து பேசினார். அவருடன் தனியாக உரையாடியபோது பனாத்வாலா சாஹிப் அவர்களுடனான நட்பினை விவரித்து நெகிழ்ந்து போனார் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படியெல்லாம் சிறப்புகளைப் பெற்றவராகத் திகழ்ந்த முஜாஹிதே மில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா அவர்களின் பெயரால்தான் இன்றைக்கு மும்பை நகரத்தின் பரபரப்பான சாலை அழைக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற இந்த அகண்ட பாரதத்தில் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் பெயர் ஒரு மாநிலத்தின் மிகப் பெரிய நகரின் சாலைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது நமக்குக் கிடைத்திருக்கிற ஒரு வரலாற்றுப் பெருமைதான். இந்த நிகழ்வை இக்காலத் தலைமுறையினருக்குப் பதிவு செய்யவே இதனை விளக்கியிருக்கிறேன்.

நிகழ்ச்சிக்கு முதல் நாளன்று மும்பை பெருநகரின் ஒரு வணிக வீதியில் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் நான் உரையாற்ற வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில முஸ்லிம் லீக் தலைமையிலிருந்து சகோதரர் சி.ஹெச். அப்துல் ரஹ்மான் அழைப்பு விடுத்திருந்தார். எனவே முதல் நாளே மும்பைக்குச் சென்ற நான் அந்த பொதுக் கூட்டத்தில் பேசினேன். சமுதாய உணர்வால் ததும்பி மிளிரும் ஆர்வ அலைகளில் மக்கள் வெள்ளம் திரண்டிருந்த அந்த காட்சி மறக்க முடியாத ஒன்று. நான் பேசியபோது பாராளுமன்றத்தில் சங்கைமிகு உலமாக்களைக் கண்ணியக் குறைவாகப் பேசிய சிவசேனா உறுப்பினர் சந்திரகாந்த் கேரேயிடம் குறுக்கிட்டு வாதாடி அவருடைய பேச்சையே அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதற்கு சபாநாயகர் உத்தரவிடும் வரை நான் பிடிவாதமாக இருந்து குரல் கொடுத்த நிகழ்வைச் சொல்லிக் காட்டியபோது உணர்ச்சிப் பொங்க தக்பீர் முழக்கம் விண்ணை முட்டிய விந்தையைப் பார்த்து ஆச்சரியப்படாதவர்களே இருக்க முடியாது. பாராளுமன்றத்தில் மற்ற கட்சிகளைச் சார்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தாலும் உணர்வுப் பாங்காக அன்றைக்கு சிவசேனாவின் விஷமக் கருத்தை யார் எதிர்க்க முடிந்தது? முஸ்லிம் லீகின் உணர்வால் வளர்க்கப்பட்ட ஒரு உறுப்பினன் என்கிற வகையில் நாம்தானே உரக்கச் சொல்ல முடிந்தது. ��எனவேதான் முஸ்லிம் லீக் வலிமை பெற நீங்கள் அனைவரும் உழைக்க வேண்டும்�� என்றும், ��அப்படி இயக்கம் வலிமை பெற்றால்தான் நீங்கள் வலிமை பெறுவீர்கள்�� என்றும் உணர்த்தியபோது அப்படியே ஏற்றுக் கொண்ட அந்தத் திருக்கூட்டம் இன்றைக்கு முஸ்லிம் லீக் பிரைமரிகள் அமைப்பதிலும், அதன் கொள்கைகளை எடுத்துச் சொல்வதிலும், அதைக் கொண்டு உறுப்பினர்கள் சேர்ப்பதிலும் முனைப்புடன் செயல்படும் செய்திகள் நமக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த வேகம் தொடருமானால் முஸ்லிம் லீகின் அரசியல் கட்டமைப்பு பலமான ஒன்றாக உருவெடுத்து, முன்னொரு காலத்தில் மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தில் முஸ்லிம் லீகின் உறுப்பினர்கள் இடம் பெற்று சாதனைப் படைத்தார்களே அந்த அத்தியாயம் புதுப்பிக்கப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

பிறை நெஞ்சே!
எண்ணிப்பார். தமிழகத்தின் பல பகுதிகளிலும் நம் தாய்ச்சபையின் அமைப்பு ரீதியான வலிமையை நாம் எந்த அளவில் வைத்திருக்கிறோம்? மாவட்ட நிர்வாகத்தை செம்மையாகச் செயல்படுத்துகிறோமா? அல்லது செயல்பட வைக்கிறோமா? நமக்குள் உருவாகும் கருத்து வேறுபாடுகளை ஆரோக்கிய வட்டத்திற்குள் வைத்து ��இயக்கம்தான் பெரிது; நமக்குள் ஏற்படும் சிறு சிறு கசப்புகள் பெரிதல்ல�� என்று எண்ணுகிறோமா? எல்லோரையும் அரவணைத்துச் சென்று தாய்ச் சபை முஸ்லிம் லீக்தான் சமுதாயத்தின் அங்கீகாரம் கொண்ட பேரியக்கம் என்று நிரூபணம் செய்கிறோமா? எந்த வகையில் நமது பங்களிப்பு பயனுள்ளதாக இருக்கிறது என்பதைச் சிந்தித்துச் செயல்படும் தருணம் இது.

வளர்ந்து வரும் இளைய தலைமுறை தட்டுத் தடுமாறி எந்த திசையின் பக்கம் செல்வது? என்று வழி தெரியாமல் திகைத்து நிற்கும் இக்காலச் சூழலில் முஸ்லிம் லீகின் தியாகத் தழும்புகளையும், சத்திய முழக்கங்களையும், நியாய நடைமுறைகளையும், எடுத்துச் சொல்லி இயக்கத்தின் வலிமையைப் பறைசாற்றும் கடமை உணர்வை நமது மூச்சாகக் கொள்ள வேண்டும் என்று புதிதாக உனக்குச் சொல்லத் தேவையில்லை; நினைவுபடுத்துதல் கடமை என்று எழுதிக் காட்டியிருக்கிறேன்.

இனிமேலும் தளர்ச்சி வேண்டாம் நமது செயல்பாட்டில்;

வளர்ச்சி வேண்டும் நமது இயக்கத்தில்;
முயற்சி வேண்டும் நமது குறிக்கோளில்;
உணர்ச்சி வேண்டும் நமது உத்வேகத்தில்.

Thursday, June 16, 2011

பொது வாழ்வில் பொன்விழா காணும் மௌலானா தளபதிக்கு காயிதெமில்லத் விருது!

அன்றைய முஸ்லிம் லீக் தலைவர்கள் முதற்கொண்டு இன்றைய முஸ்லிம் லீக் கடைசி தொண்டன் வரை மௌலானா தளபதி அல்ஹாஜ் ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் அவர்களை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது .

நாடு விடுதலைக்கு முன்னர் முஸ்லிம் லீக் பேரியக்கத்தில் நவாப்களும்(சிற்றரசுகள் ) ,பொருளாதார மேதைகளும் , உலக வணிகப் பிரமுகர்களும் ,அறிவுலக மேதைகளும் முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் தலைவர்களாகவும் ,நிர்வாகிகளாகவும் பொறுப்பேற்றிருந்தனர்.நாடு விடுதலைக்கு பின்னர் "முஸ்லிம் லீக் என்ற பெயரில் அரசியல் இயக்கம் நடத்தலாமா? முஸ்லிம் லீக் என்ற பெயரில் செயல்படலாமா " என்ற சோதனையான காலக்கட்டத்தில் "முஸ்லிம் லீக் இயக்கத்தை கலைத்து விடலாம் "என்றும் மௌலானா மொஹானி போன்ற முஸ்லிம் லீக்கின் பெருந்தலைவர்களே சொல்லி வந்தார்கள் .அன்றைய ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து முஸ்லிம் லீக் கலைக்கப்பட வேண்டும் என்று கருத்துச் சொன்னபோது " ஈமான் உள்ள ஒரே ஒரு முஸ்லிம் இருக்கின்ற வரையில் முஸ்லிம் லீக் இருந்தே தீரும் " என்று ஈமானின் குரலில் முழக்கமிட்டவர்கள் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களாகும் .முஸ்லிம் லீக் இயக்கத்தை நடத்தியே தீர வேண்டும்.அதற்க்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று காயிதே மில்லத் அவர்கள் நாடெங்கும் பட்டிதொட்டிகளிலெல்லாம் தன் சகாக்களுடன் சுற்றுப்பயணம் செய்து முஸ்லிம் லீக் கொடியேற்றி வைத்து முஸ்லிம் லீக் கிளைகளை துவக்கிவைத்தார்கள்.
அன்றைய காலகட்டத்தில் 1958 ஜனவரியில் திருச்சி மாநகரில் மாநிலம் தழுவிய மாபெரும் முஸ்லிம் லீக் ஊழியர் மாநாடு நடைப்பெற்றது.
1958 ஜூன் மாதத்தில் லால்பேட்டையில்(தெற்குத் தோப்பு -புதுநகரில்) திப்பு நகர் என்று பெயரிட்டு மாபெரும் தெ.ஆ.மாவட்ட முஸ்லிம் லீக் ஊழியர் மாநாடு நடைப்பெற்றது அந்த மாநாட்டிற்கு பெருந்ததலைவர் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் ,மார்க்க மேதை ஷைகுல் மில்லத் அல்லாமா அமானி ஹஜ்ரத் மற்றும் நாடெங்குமுள்ள முஸ்லிம் லீக் தலைவர்கள் பலரும் பங்கேற்றார்கள் இந்த மாநாட்டில் தொண்டராய் இருந்து பணியாற்றியவர் மௌலானா தளபதி.ஷஃபீகுர் ரஹ்மான் அவர்கள் .


இந்த இரு மாநாடுகளும் இந்திய அரசியலில் முஸ்லிம் லீக் என்ற இயக்கம் செயல்பட்டே ஆக வேண்டும் -என்ற ஒரு உறுதிப்பாட்டை முஸ்லிம்களிடையே ஏற்ப்படுத்தியது .அப்பொழுது லால்பேட்டையில் 10 வயது 11 ,12 வயது சிறுவர்களையெல்லாம் ஒன்றுசேர்த்து லால்பேட்டை நகரிலும்,ஆயங்குடியிலும் தெ.ஆ.மாவட்ட முஸ்லிம் லீக் சிறுவர் மாநாட்டை நடத்திய பெருமை மௌலானா தளபதி.ஷஃபீகுர் ரஹ்மான் அவர்களை சாரும்.
சிறுவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து அதிகாலையில் பைத்துகளை ஓதி தெருவெல்லாம் சென்று தொழுகைக்காக அழைத்த சிறப்பும் இவரைச்சாரும் .


10 வயதிலிருந்தே அத்தகைய அரசியல்-மார்க்க சேவையாற்றிய மௌலானா தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் அவர்களை முஸ்லிம் லீக் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் " தளபதி " என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தார் அதுமுதல் அறிவுலக மேதை அல்லாமா அமானி ஹஜ்ரத் அவர்களும்,அன்றைய லால்பேட்டை நகர முஸ்லிம் லீக் தலைவர் முத்தவல்லி மௌலவி .அப்துல் பாஸித் அவர்களும் " தளபதி " என்று இவரை அன்புடன் அழைக்கத்துவங்கினர்.


லால்பேட்டை நகரிலும்,மற்றும் தமிழகத்தின் பல ஊர்களிலும் நடைபெற்றுவந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு மற்றும் பொதுக் கூட்டங்களிலும் இவரை " தளபதி " என்று அழைத்து காயிதே மில்லத் அவர்கள் பேச வைத்தார்கள் அந்த துஆவின் பரக்கத்தால் எல்லோரும் இன்று வரை தளபதி என்றே அன்போடு அழைத்து வருகின்றனர்.


கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் தொண்டராகவும் ,முஸ்லிம் லீக்கின் தமிழக தலைவர்களான திருச்சி அப்துல் வஹாப் ஜானி பாய் ,சிராஜுல் மில்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ.அப்துஸ்ஸமத் சாஹிப் ஆகியோர்களை தொடர்ந்து பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் தலைமையின் கீழ் சிறப்பாக செயலாற்றி வருகிறார் .


ஒடுக்கப்பட்ட இஸ்லாமியர்களின் வாழ்வாதாரங்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகவும் ,ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் விடிவெள்ளியாகவும், இந்திய விடுதலையில் பங்கேற்ற மாபெரும் இயக்கமாகவும் திகழ்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் ஒப்பற்ற தலைவர்களாய் திகழ்ந்த காயிதே மில்லத் ,இப்ராஹிம் சுலைமான் சேட் ,குலாம் முஹமத் பனாத்வாலா சாஹிப் போன்றோர்களின் தன்னலம் கருதா சமுதாய தொண்டுகளால் இன உணர்வு பெற்று அரசியல் வாழ்வில் தன்னை அர்பணித்துக் கொண்டவர்
மௌலானா தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் அவர்கள்.


முஸ்லிம் சமுதாய மக்களுக்காக மட்டுமல்லாமல்,சகோதர சமுதாய மக்களின் பிரச்சனைகளுக்காகவும் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த முஸ்லிம் லீக் தலைவர்களின் சமத்துவ உணர்வால் உந்தப்பட்டு உன்னதமான இயக்கத்தில் தன்னை ஈடுப்படுத்திக் கொள்வதில் உளம் மகிழ்ந்தார் .
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் மாநிலத் தலைவராக சிராஜுல் மில்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ.அப்துஸ்ஸமத் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டபின்னர் ,அவரது பேச்சாற்றலாலும் ,எழுத்தாற்றலாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டு தளபதி அவர்கள் முழு நேர அரசியலில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார் .


சாமானிய மனிதர்களையும் சிந்திக்கத்தூண்டும் சிராஜுல் மில்லத் அவர்களின் வலக்கரமாகவே வலம் வர ஆரம்பித்தார்.


லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியில் மார்க்க கல்வி பயின்று மௌலவி ஆலிம் பட்டம் பெற்று முஸ்லிம் சமுதாய மக்கள் நலனுக்காகவே இயங்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் தலைவர் சிராஜுல் மில்லத் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அரசியல் வானில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம்வரத் துவங்கினார் .


முஸ்லிம் சமுதாய பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு ஏற்பட வேண்டும் -என்ற நோக்கோடு மணிச்சுடர் நாளிதழை சிராஜுல் மில்லத் அவர்கள் துவக்கியபோது அதன் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டிருக்கிறார்.ஆயிரக்கணக்கான முஸ்லிம் சகோதரர்களை மணிச்சுடர் வாசகராக்கினார்


அரசியல் கட்சி என்றல் ஊருக்கு ஒரு கொடிபறக்கும் தளபதி அவர்கள் இளைஞர்களை ஊக்குவித்து வீதிக்கு ஒரு கொடியை பறக்க வைத்தார் .ஒருமித்த கருத்துக்கொண்ட ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாய மக்களையும் ஒருங்கிணைக்கும் திறன்படைத்திருக்கும் இவர் தூய உள்ளமும், தொண்டு உள்ளமும் அனைவரையும் அரவணைத்துச்செல்லும் தாய் உள்ளமும் ஒருங்கே பெற்றிருக்கும் தளபதி அவர்கள் அயராத உழைப்பும் ,தளராத முயற்சியும் எண்ணியதை முடிக்கும் திண்ணிய உள்ளமும் அனைவரையும் மதிக்கும் அன்புணர்வும் இன்சொல் பேசும் இயல்பும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் அவர்கள் இன்று வரை கொள்கை ரீதியாக எந்த மாறுதலுக்கும் ஆட்படாமல் ஒரே கொடியின் கீழ் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்திலிருந்து சற்றும் பின்வாங்காமல் அவ்வியக்கத்திற்காக இன்னும் அதிகமாக உழைக்கும் மாண்பாளர் .


இஸ்லாமிய அறிவை ஊட்டுவது மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களுக்கு இன உணர்வையும் ஊட்டி வந்த முஸ்லிம் லீக் இயக்கம் நடமாடும் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்து வந்தது
மாற்றம் ஒன்றே மாறாதது-என்பது பரிணாமவியல் தத்துவம் .தளபதி அவர்களின் பரிணாம வியலில் மாற்றம் என்பது "செயல்"ஆகும் செயல் அதுவே முஸ்லிம் லீக் நிலைப்பாடு.செயலின்றி ஒரு நாழிகை இவர் நில்லார் இன்று ஓரிடம் ,நாளை வேறிடம்,எங்கு சென்றாலும் அது முஸ்லிம் லீக் இயக்கம் சம்பந்தமானதாக மட்டுமே இருக்கும் .
ஒன்றை தேடி மற்றொன்றை நழுவவிடும் உலகத்தில் நன்றை தேடும் வானுயர் நாட்டம் கொண்டவர். நல்ல தலைவர்களை காண்பதும் அவரின் நயம்மிக்க சொற்களை செவிமடுத்துக் கேட்பதும் இவரின் சிறந்த குணங்கள்.நல்லோரோடு இணங்கி இருப்பதும்,நல்லவற்றிற்கு வுதவுவதும்,நல்லவைகளை காப்பதும் இவர் வளர்த்துக்கொண்ட பண்பாடு .


ஒழுக்க சீலராக-நல்லதை பாராட்டும் பேருள்ளத்தவராக பலர் சூழச் செல்லும் பான்மை பெற்றவராக - சொல்ல வரும் கருத்துக்களை முறையாக சிந்தித்து அச்சமின்றி எடுத்துச் சொல்லும் நெஞ்சுருதிமிக்கவராக தளபதி திகழ்ந்துக்கொண்டிருக்கிறார் என்றல் அதற்க்கு காரணம் சமுதாய தொண்டுள்ளம் மட்டும் தான்


எடுப்பான தோற்றம் ,விரைவான நடை ,வெள்ளை உடை மடியாத செயல் வேகம் ,சாதனை புரிய துடிக்கும் உள்ளம் மேகத்திர்க்கிடையே ஒரு மின்னல் கீற்றெனத் தோன்றும் சிரிப்பு இவரின் அடையாளமாகத் திகழ்ந்தாலும் வாழ்வின் செயல்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் அடிப்படையாக அமைவது அன்பு என்ற ஒன்று இவரிடம் இயல்பாக அமைந்துவிட்டதால் மாற்றுக் கருத்துடையவர்கள் கூட அன்பு கலந்த மரியாதையை இவருக்கு அளிக்க தவறுவதில்லை .


இவர் சிறுவராய் திகழ்ந்த போது முஸ்லிம் லீக் சிறுவர் அணி செயலாளராகவும் ,லால்பேட்டை நகர இளைஞர் அணி செயலாளராகவும் திகழ்ந்து மாநில துனைப் பொதுச் செயலாளராக பணியாற்றி தற்போது மாநில செயலாளர்களில் ஒருவராக திகழ்ந்துக்கொண்டிருக்கிறார் .லால்பேட்டை ஜமாத்துல் உலமா செயலாளர் ,மாவட்ட ஜமாத்துல் உலமா கௌரவ செயலாளர் ,மாநில ஜமாத்துல் உலமா துணைச் செயலாளர் போன்ற பொறுப்புகளை வகித்த இவர் .லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி நிர்வாக சபை உறுப்பினராகவும்,தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபை பொதுக்குழு உறுப்பினராகவும்,திகழ்ந்து தற்போது லால்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினராகவும் திகழ்ந்துக்கொண்டு இருக்கிறார் .ஹஜ் சம்பந்தப்பட்ட பல்வேறு சேவை அமைப்புகளிலும் பணியாற்றி தொடர்ந்து 37 ஆண்டுகளுக்கு மேலாக புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகிறார் .
அன்புக்கு ஓர் இலக்கணமாய்-அரவணைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழும் இவருக்கு எதிரிகள் என யாரும் இருக்க முடியாது.பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோரிடமும் கண்ணியத்தோடும்,அவர்களுக்கே உரிய தனி மரியாதையுடனும் இவர் நடந்துக்கொள்வதால் எல்லோராலும் விரும்பத்தக்கவராக திகழ்ந்துக்கொண்டிருக்கிறார்.


அரசியல் பற்று-மார்க்கப் பற்று இரண்டையும் தன் இருக் கண்களாக பாவித்து செயலாற்றும் இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாளராகவும் திகழ்கிறார்.
பொது வாழ்வில் தூய்மையுடன் ஈடுபட்டு,பொதுத் தொண்டில் பொன்விழா கண்ட தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் அவர்கள்,முஸ்லிம் சமுதாயத்திற்க்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்- என்றால் அது ஒவ்வொரு முஸ்லிமிற்கும் அமைந்த பெரும் பாக்கியம்.


இந்த சேவையாளருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் விருது வழங்க இருக்கும் செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தளபதியாரை உள்ளன்போடு வாழ்த்தி,அவரின் சமுதாய சேவை தொடர்ந்து சமுதாயத்திற்க்கு கிடைத்துக் கொண்டிருக்க நீடித்த ஆயுளுக்காகவும் வல்ல இறைவனிடத்தில் பிரார்த்திக்கின்றோம்.


இவரின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் தாய்ச் சபை முஸ்லிம் லீக் தலைமையின் சார்பில் காயிதெமில்லத் விருது வழங்கி கெளரவிப்பதற்கு எங்களின் நெஞ்சம் கனிந்த நன்றியை சமர்ப்பிக்கின்றோம்.
வஸ்ஸலாம்..!

சமுதாய புரவலர் எஸ்.எம்.ஷேக் நூர்தீன் காகா மறைவு

சமுதாய புரவலர் எஸ்.எம்.ஷேக் நூர்தீன் காகா அவர்களின் மறைவுக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் எம்.லியாகத் அலி அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:


இன்று காலை சென்னையில் மரணமடைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கௌரவ ஆலோசகரும் ஏ.எம்.எஸ்.கல்லூரியின் தாளாளர் சமுதயபுரவலர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஷேக் நூர்தீன் காகா அவர்களின் மறைவு செய்தி அறிந்து அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் எம்.லியாகத் அலி,பொதுச் செயலாளர் ஏ.முஹமத் தஹா ஆகியோர் கூட்டக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்


அல்ஹாஜ் எஸ்.எம்.ஷேக் நூர்தீன் காகா அவர்களின் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம் அனைத்துத் தரப்பு மக்களின் இதயங்களிலும் இடம் பிடித்திருக்கும் காகா அவர்கள் சமுதாய நலனில் மிகுந்த அக்கறையுடையவராக திகழ்ந்தார் ,தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீதும் அதன் தலைவர்கள் மீதும் தனிப்பெரும் பாசம் கொண்டிருந்த காகா அவர்கள் மணிச்சுடர் நாளிதழ் இயக்குநராக பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .ஷேக் நூர்தீன் காகா அவர்களின் மறைவை ஈடு செய்ய முடியாமல் தவிக்கும் அவர்தம் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கும் மற்றும் நிறுவனத்தினருக்கும் அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவன் மறுமையில் சுவனத்தின் உயரிய இடமான ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. .

Saturday, March 12, 2011

நம் தாய்ச்சபை!

நம் தாய்ச்சபை!

இலட்சோப லட்சம் கரங்களால் எழுப்பப்பட்ட மாளிகை.இதில் கோட்டான்களின் அலறலுக்கு இடமில்லை!

இது லட்சோப லட்சம் வியர்வைத்துளிகளால் உருவாக்கப்பட்ட கடல்.இதில் திமிங்கலங்கள் நீந்த தடை விதிப்போம்!

இது இலட்சோப லட்சம் மரங்களால் உருவாக்கப்பட்ட வனம்.இதில் குள்ளநரிகள் நாட்டாண்மை செய்ய அனுமதியோம்!

இது இலட்சோப லட்சம் பாறைகளால் உருவாக்கப்பட்ட மலை.சுண்டெலிகள் இதை சுரண்டுவது சாத்தியமில்லை!

செங்குருதி சிந்தி-இன்னுயிர் ஈந்து இலட்சோப லட்சம் தியாகிகள் உருவாக்கிய இயக்கம் இது.இதன் புனிதம் காப்போம்!

வல்லூறுகளின் சிறகுகள் இந்த வானத்தில் விரியாது-ஷைத்தானின் ஜம்பம் பலிக்காது!
ஒன்றுபட்டு நிற்போம்!

உரத்த குரலில் முழங்குவோம்!

முஸ்லிம் லீக் ஜிந்தாபாத்! -வழக்கறிஞர் வெ.ஜீவகிரிதரன்


நன்றி மணிச்சுடர் நாளிதழ்
12/13/03/2011

Saturday, January 8, 2011

IUML webtv

IUML webtv

http://mslive.co.in/iuml/index.html

பிறைக்கொடிப் பேரணி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மநில மாநாட்டில் நான்கு கிலோ மீட்டர் தூரம்,மூன்று மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற மாபெரும் பிறைக்கொடிப் பேரணியின் மாட்சிமிகு காட்சிகள்!தாய்ச் சபையின் எழுச்சி மிகு தங்கங்கள் பீடு நடை போட்டு வரும் அற்புத காட்சி..! அல்ஹம்துலில்லாஹ்.

http://www.youtube.com/watch?v=saMfYJ1xia0

இன்ஷா அல்லாஹ் விரைவில் அனைத்து வீடியோ தொகுப்பும் முஸ்லிம் லீக் இணையதளத்தில் வெளியிடப்படும்,அதைத்தொடர்ந்து Youtube -லும் Upload செய்யப்படும்.


11 December 2011

Saturday, December 18, 2010

Karunanidhi steps in to save minority languages in Tamil Nadu

Karunanidhi steps in to save minority languages in Tamil Nadu



show details 3:21 PM (1 minute ago)

http://twocircles.net/2010dec16/karunanidhi_steps_save_minority_languages_tamil_nadu.html
Submitted by admin4 on 16 December 2010 - 2:51pm
Indian Muslim
By Shafee Ahmed Ko, TwoCircles.net,


Chennai: Enacting his assurance at Indian Union Muslim League conference here last week, Tamil Nadu Chief Minister M
Karunanidhi on December 15 issued an order restoring the status of minority languages including Urdu and Arabic at
schools covered under the Uniform System of School Education (Samacheer Kalvi).
According to the order, four classes a week will be set apart for teaching minority languages such as Urdu, Kannada,
Malayalam, Telugu and Arabic. Being part of syllabus, examinations will be held for these minority languages, mark
sheets will also indicate marks scored by students in these subjects. The government also said that text books in these
languages are under preparation.


The order follows Mr. Karunanidhi’s assurance at a public meeting organised by the Indian Union of Muslim League on
11 December in Chennai. Through the resolutions passed at the conference, IUML had demanded the CM to intervene
for safety of the minority languages in the state.


There are around 10 lakh Urdu speaking people in the state, with 350 schools offering Urdu as medium of instruction.
There are other linguistic minorities including those who speak Telugu, Malayalam or Kannada. It is hoped that as many
as 27 oriental Arabic schools will also get benefit of the order. The CM’s order enhances the study of BUMS, the Unani
medical course wherein Urdu is the medium of instruction.


Various Urdu and different associations, including OMIET were constantly knocking the doors of the Tamil Nadu
Government in order to revoke the policy of Samacheer Kalvi. On behalf of these groups, IUML leaders including Prof

Khader Mohideen, the State President of IUML and M. Abdul Rahman, Lok Sabha Member of the party from Vellore,
had given several presentations before the concerned authorities.

Thursday, December 9, 2010

டிசம்பர் 11 ல் வரலாறு படைக்கிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு !

டிசம்பர் 11 ல் வரலாறு படைக்கிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு !

மஹல்லா ஜமாஅத்தின் ஒருங்கிணைப்பிற்கு கருத்தரங்கு

சமுதாயத்தின் வலிமைக்கு இலக்கு 2020 பிரகடனம்

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு ‘நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்’ விருது

http://www.muslimleaguetn.com
http://mudukulathur.com


நூற்றாண்டு காலத்திற்கு மேல் இந்திய முஸ்லிம்களின் வாழ்வோடும் வரலாற்றோடும் பின்னிப் பிணைந்து விட்ட தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்த சமுதாயத்திற்கு எண்ணற்ற உரிமைகளை பெற்றுத் தந்தது.

இந்திய முஸ்லிம்கள் மானத்தோடும் மரியாதையோடும் வாழ்வதற்கு அளப்பரிய தியாகங்களைச் செய்தது.

இந்திய விடுதலைக்குப் பின் ஏற்பட்ட சோதனையான கால கட்டத்தில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் உள்ளிட்ட தாய்ச்சபையின் தலைவர்கள் செய்த மகத்தான சாதனை இந்த சமுதாயத்தை தலை நிமிர செய்தது.

பச்சிளம் பிறைக் கொடிகள் எங்கெல்லாம் பட்டொளி வீசி பறந்தனவோ அந்த ஊர்களெல்லாம் அமைதியின் இருப்பிடங்களாக சிறப்பைப் பெற்றன.

ஆனால் இன்று சமுதாய ஒற்றுமை கேள்விக் குறியாகவும், மார்க்க கடமைகள் கேலிப் பொருளாகவும் ஆக்கப்பட்டு விட்டன.

மஹல்லா ஜமாத் கட்டுக்கோப்பு சீர்குலைக்கப்பட்டு வருகிறது.

தேவையற்ற வாதங்களும், விதண்டாவாதங்களும் பிற சமய மக்களை கூட முகம் சுளிக்க வைக்கிறது.

மனநிறைவையும், மகிழ்வையும் கொண்டு வரும் ரமளான், பக்ரீத் பெருநாட்கள் கூட ஆளுக்கொரு நாள் என்று அறிவிப்புச் செய்து கொண்டாடப்படுவதால் கேலியாக்கப்பட்டுவிட்டன.

பாங்கு சத்தம் ஒலிக்கும் பள்ளிவாசல்களில் வேட்டுச் சத்தங்கள்.

குழப்பங்களும், குதர்க்கங்களும் ஒற்றுமையை மட்டும் சீர்குலைக்க வில்லை - சமுதாய வளர்ச்சியையும் தடுத்து நிறுத்துகின்றன.

இந்த நிலைமை இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் தொடருவது?

எனவேதான் இவைகளை முடிவிற்கு கொண்டு வர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு கருத்தரங்கம் காலை அமர்வாக நடத்தப்படுகிறது.

சங்கைக்குரிய உலமா பெருமக்கள், பல துறைகளின் அறிஞர்கள், சமுதாய புரவலர்கள், மஹல்லா ஜமாஅத் தலைவர்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.

பிற்பகலில் பிரமாண்டமான பிறைக்கொடி பேரணி சீருடை அணிந்த இளைஞர்களின் கண்கவர் அணிவகுப்பாக நடைபெறுகிறது.

மாலையில், தாம்பரம் ரயில்வே மைதானத்தில் மாநாட்டின் நிறைவு விழா.

கல்வி வேலை வாய்ப்பில் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு உயர்த்தித் தர வேண்டும். நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட உள்ளன.

அதனைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இலக்கு 2020 பிரகடணம் நம் தேசிய தலைவர் மாண்புமிகு இ.அஹ்மது அவர்களால் வெளியிடப்பட இருக்கிறது.

கடந்த கால அனுபவங்களையும், நிகழ்கால சம்பவங்களையும், எதிர் காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களையும் மனதில் கொண்டு, வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்ட இலக்கு 2020 உருவாக்கப்பட்டுள்ளது.

இது சமுதாயத்தின் வழிகாட்டும் ஒளிவிளக்கு, நாம் பின்பற்ற வேண்டிய மணிவிளக்கு !

இலக்கு 2020 பிரகடணத்தை பெற்றுக் கொண்டு தமிழக துணை முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் பானக்காடு சையது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், கேரள மாநில பொதுச் செயலாளர் பி.கே. குஞ்சாலி குட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அதனைத் தொடர்ந்து

இளமையில் ஒரு கையில் பச்சிளம் பிறைக்கொடியை பிடித்த காலம் தொட்டு, இன்று வரையிலும் நம் சமுதாயத்திற்கு உற்ற உயிர் தோழராக இருந்து இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்த மாண்பிமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர் விருது வழங்கப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பளித்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றிய E.T.A. குழுமத்தின் நிர்வாக இயக்குனர் செய்யது எம். சலாஹுதீன் உள்ளிட்ட புரவலர்கள் இந்த விருதினை வழங்குகின்றனர்.

சமுதாய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியப் பெருந்தகை கே.எம். காதர் மொகிதீன் இம்மாநாட்டிற்கு தலைமை ஏற்கிறார்.

உள்நாட்டு மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்து ஆர்வத் துடிப்போடு சமுதாய பெருந்தகைகள் இம்மாநாட்டில் சங்கமிக்கின்றனர்.

டிசம்பர் – 11 தாம்பரத்தில் நடப்பது கூடிக் கலையும் மாநாடல்ல !

கொள்கை லட்சிய வாதிகளின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் மாநாடு !

சமுதாய வலிமைக்கு

திட்டம் தீட்டித் தரப்போகும் மாநாடு !

இம்மாநாட்டில் …

சமூகத்தை சீர்குலைப்பவர்களை

அடையாளம் காட்டுவோம் !

சமுதாயத்தை வளப்படுத்தும் செயல் திட்டங்களை ஆவணப்படுத்துவோம் !

இம்மாநாடு

வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்

இதில் பங்கேற்பது கிடைத்தற்கரிய பாக்கியம் !

Sunday, November 28, 2010

பராக்.... பராக்.... (ஒ) பாமா விஜயம்..........-வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்

பராக்.... பராக்.... (ஒ) பாமா விஜயம்..........-வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்


வரவு எட்டணா! செலவு பத்தணா! அதிகம் இரண்டணா! கடைசியில் துந்தணா! என்ற பாடல் அறுபதுகளில் தமிழகத்தில் மிக பிரபல்யமாக இருந்தது. அது இன்றளவும்கூட ஊதாரித்தனமான செலவினங்களை குறிக்க மக்களால் பாடப்படுகிறது. `பாமா விஜயம்’ என்ற திரைப்படப் பாடல் அது. அந்த திரைப்படத்திலே ஒரு சாதாரண நடுத்தர குடும்பம் தான் கதையின் நாயகன். தங்களின் சொற்ப வருமானத்திலே, திட்டமிட்ட சிக்கனமான செலவுகளால், நிம்மதியான-அமைதியான வாழ்க்கையை ருசித்துக் கொண்டிருந்த அந்த குடும்பம், தங்கள் வீட்டின் பக்கத்து பங்களாவில் குடிவந்த பாமா என்ற திரைப்பட நடிகையுடன் நட்பு பேணுவதற்காக தங்களின் குடும்ப நிலையை கருத்தில் கொள்ளாமல், ஊதாரித்தனமாக ஆடம்பர செலவுகள் செய்து, அதனால் கடன்படுவதும், சொந்த சகோதரர் களும், குடும்பத் தலைவரும் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொள்வதும், வன்மம் பாராட்டவதும், உறவுகள் சிதைவும் மிக அற்புதமாக காட்டப்பட்ட திரைப்படம் தான் பாமா விஜயம். தெளிந்த நீரோடை போல் அமைதியாக சலசலத்து ஓடிக்கொண்டிருந்த குடும்பத்தை அந்த `பாமா விஜயம்’ - நாசமாக்கி சாக்கடையாக்கி விடும். இன்று அதேபோல நம் நாட்டின் `பாமா விஜயம்’ ….- ஆம், ….ஒபாமா விஜயம் நடந்து முடிந்துள்ளது. 3 நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கஅதிபர் பராக் ஒபாமா அவர்கள் இந்தியா வந்து சென்றுள்ளார். அவரின் வருகை உலகமெங்கம் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இதுவரை அமெரிக்க ஜனாதிபதிகள் எவருக்குமே செய்யப்படாத வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் அவரின் வருகையை ஒட்டி செய்யப்பட்டது. பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளான மும்பை தாஜ் ஓட்டலில் ஒபாமா தங்கினார். குழந்தைகளுடன் நடன மாடினார். பெருமுதலாளிகளுடன் கலந்துரையாடினார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். பறந்து சென்று விட்டார். அமெரிக்க அதிபரின் வருகைக்கு ஒருநாள் பாதுகாப்பு செலவு எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ.900 கோடி. 3 நாட்களுக்கான பாதுகாப்பு செலவு சுமார் ரூ.2,700 கோடி எனப்படுகிறது. இவர் வருவதற்கு ஒரு வாரம் முன்பாகவே வெள்ளை மாளிகை அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் என ஒரு பiயே மும்பை வந்திறங்கி விட்டது. அவர்கள் அனைத்து நவீன சாதனங் களும் பொருத்தப்பட்ட 13 நடுத்தர விமானங்கள், 3 அதி நவீன ஹெலிகாப்டர்கள், ஒரு கப்பல், 30 மோப்ப நாய்கள், ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் அதிநவீன கருவிகளை தம்முடன் கொண்டு வந்தனர். ஒபாமா தங்கும் மும்பை தாஜ் ஓட்டல் மற்றும் டெல்லி மவுரியா ஓட்டல்களை சுற்றியுள்ள அனைத்து கட்டிடங்களிலும் பாதுகாப்பு சோதனைகள் மிகத் தீவிர மாக நடத்தப்பட்டன. கட்டிடங்களின் கூரைகளில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டனர். வான்வழி தாக்குதல் ஏதும் நடந்தால் அதை முறியடிக்கத் தேவை யான நவீன கருவிகள் இக் கட்டிடங்களில் நிறுத்தப் பட்டன. சாட்டிலைட் கண்காணிப்பு மற்றும் அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறைகள் மும்பையிலும், டெல்லியிலும் நிறுவப்பட் டன. ஒபாமா சனிக்கிழமையன்று மும்பை வந்திறங்கிய போது அவருடன் சுமார் 3 ஆயிரம் பேர் வந்தனர். இவர்களில் வெள்ளை மாளிகை அதிகாரிகள், புலனாய்வு பிரிவினர், பாதுகாப்பு படையினர், பத்திரிகையாளர்கள், அமெரிக்க கம்பெனி அதிபர்கள் ஆகியோரும் அடங்குவர். ஒபாமா அவர்கள் அமெரிக்க வான்படை யின் ஏர்போர்ஸ் - 1 என்ற விமானத்தில் 40 விமானங்கள் புடைசூழ வந்திறங்கினார். இத்துடன் அதிநவீன கருவிகள் பொருந்திய இரண்டு ஜெட் விமானங்களும் வந்தன. குண்டு துளைக்காத கார்கள் ஆறும், ஒபாமாவின் உபயோகத்துக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு காரும் அவருடன் வந்திறங்கியது. அந்த காரில் இருந்தபடியே வெள்ளை மாளிகையுடன் உடனுக்குடன் தொடர்பு கொள்ளலாம். அமெரிக்காவின் அணு ஆயுதங்களை அதிபர் இயக்கக் கூடிய பொத்தானும் அந்த காரிலே வடிவமைக்கப்பட்டிருந்தது.அதிபரும் அவருடன் வந்தவர்களும் தங்க தாஜ் ஓட்டலிலும், மற்ற ஓட்டல்களிலும் 800 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.ஒபாமா குழுவினரின் வருகைக்கு அரை மணி நேரம் முன்னமே மும்பை வான் வழி மூடப்பட்டது. வேறு எந்த விமானமும் பறந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்திய கடற்படையும், விமானப்படையும் மும்பை கடல் பகுதியையும், வான் பகுதியையும் வலம் வந்தன. 34 போர்க் கப்பல்களும், ஒரு விமானம் தாங்கிக் கப்பலும் கடலோர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டன. அமெரிக்க அதிபரின் சிறப்பு பாதுகாப்பு படையினர், நம் நாட்டின் மிக உயர்ந்த பாதுகாப்பு பிரிவான என்.எஸ்.ஜி. கமாண்டோகள், துணை ராணுவப் படையினர், மாநில காவல் படை என நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டது. இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியிலே அதிபர் ஒபாமா முன்னிலையிலே அமெரிக்க முதலாளிகள். இந்திய அரசுடனும், இந்திய முதலாளிகளுடனும் பல்வேறு வியாபார ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டனர். இதுதான் ஒபாமா விஜயத்தின் முக்கிய நோக்கமே.இந்த வியாபார ஒப்பந்தங்களில் மிக முக்கியமான சிலவற்றை பார்ப்போம்.இந்திய விமானப் படைக்கு அமெரிக்க போயிங் நிறுவனம் போர் விமானங்களை விற்க 410 கோடி டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் அமெரிக்க போயிங் தொழிற்சாலையில் 22,160 அமெரிக்கர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகியுள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இந்தியன் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சிக்கு தேவையான தேஜாஸ் என்ற இலகு ரக போர் விமானத்தில் பொருத்தக்கூடிய எப்.414 என்னும் என்ஜின்கள் 107 வாங்க அமெரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனியிடம் ஒப்பதமாகியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 82 கோடி டாலர்கள். ஆகும். இதன் மூலம் சுமார் 4440 அமெரிக்கர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகும். இந்திய ரயில்வே துறைக்கு 1000 ரயில் என்ஜின்களை விற்க அமெரிக்காவின் ஜி.இ. ட்ரான்ஸ்போர்டேஷன் அண்டு எலக்ட்ரோமோடிவ் டீசல் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளது. இதன் மதிப்பு 100 கோடி டாலருக்கும் அதிகம் என சொல்லப்படுகிறது. இந்தியாவிலுள்ள ஸ்பைஸ்ஜெட் என்ற தனியார் விமான நிறுவனம் அமெரிக்க போயிங் நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தப்படி பி-737-800 போயிங் விமானங்கள் -30 இந்திய நிறுவனத்திற்கு சப்ளை செய்யப் படும். இதன் மதிப்பு 300 கோடி டாலர்கள் இருக்கும் எனப்படுகிறது. இதன் மூலம் 12,970 அமெரிக்கர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாகும் என கணக்கிடப்பட் டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரான அம்பானியின் நிறுவனங்கள் ஏறத்தாழ 700 கோடி டாலர்களுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி ரிலையன்ஸ் பவர் என்ற நிறுவனத்தின் 2,500 மெகாவாட் மின் உற்பத்தி நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான அதி நவீன டர்பைன்கள் 6-ம், நீராவி டர்பைன்கள் 3-ம் விற்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கர்கள் 2,650 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகிறது. அமெரிக்க எக்ஸ்போர்ட் - இம்போர்ட் வங்கி இந்த ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கு 500 கோடி டாலர்கள் நிதி உதவி செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் தாகியுள்ளது. ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் துணை நிறுவனமான சாசன் பவர் நிறுவனத்துக்கு தேவையான சுரங்க தளவாடங்களை அமெரிக்க புசிரெஸ் இண்டர் நேஷனல் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கான நிதி உதவியான சுமார் 641 மில்லியன் டாலர்களையும் இந்த வங்கி வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. ஏறக்குறைய 20 ஒப்பந்தங்கள் சுமார் 1500 கோடி டாலர்கள் (ரூ.67,200 கோடி) மதிப்பில் கையெழுத்தாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்க தொழில் நிறுவனங்களில் சுமார் 50 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.ஒபாமாவின் வருகைக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அவருடைய டெமாக்ரடிக் கட்சி தேர்தலிலே படுதோல்வியினை சந்தித்திருந்தது. அமெரிக்காவிலே பொருளாதார சிக்கல்கள், வேலையின்மை போன்றவை பெருகிவிட்ட தால், மக்களின் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் ஒபாமா, இந்திய வருகையின் மூலம் அமெரிக்க தொழிலதிபர்களுக்கு 1500 கோடி டாலர்கள் - இந்திய மதிப்பில் ரூ.67,200 கோடி வியாபாரமும், அமெரிக்க மக்கள் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பையும் ஏற் படுத்தி கொடுத்துள்ளனர். அவர் தன்னுடைய உரையின் போது அமெரிக்க ஏற்றுமதி வர்த்தகத்தில் 2 சதவீதம் மட்டுமே இந்தியாவுடன் செய்யப்படுவதாகவும், அதை பெருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். உலகின் இரண்டாவது மிகப் பெரிய சந்தையான இந்திய சந்தையை கைப்பற்றி விழுங்க அமெரிக்க பெரு முதலாளிகள் திமிங்கலத்தைப் போல அலைகின்றனர். இந்த வியாபார ஒப்பந்தங்கள் மூலம் தங்கள் கருவூலங்களை நிரப்பிக் கொள்வதிலும், தங்கள் நாட்டில் niலை வாய்ப்புகளைப் பெருக்குவதிலும் குறியாக இருக்கின்ற னர்.ஆனால், பல ஆயிரம் கோடி ரூபாய்கள் பாதுகாப்புக்கு செலவழித்து அமெரிக்கஅதிபர் இந்தியாவுடன் நல்லுறவும், நட்பும் பேணுவதற்கு வந்துபோவதாக ஊடகங்கள் ஊதுகின்றன.

Friday, November 19, 2010

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நிகழ்ச்சி ஏற்பாடு குழுக்கள் விபரம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நிகழ்ச்சி ஏற்பாடு குழுக்கள் விபரம்


தாம்பரம் அலுவலகம் எண்.4, பள்ளிவாசல் கட்டிடம் (முதல் மாடி), சண்முகம் ரோடு, மேற்கு தாம்பரம், சென்னை - 600 045, தொலைபேசி : 044 - 222 66666

அலுவலகத் தொடர்பு....
பி.கே.எம். செய்யது அலி ராஜா (செல்: 9444499901)

எஸ்.எம். முஸ்தபா (செல்: 9787845684)

காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர்:
ஆலந்தூர் எம்.எஸ். அப்துல் வஹாப் (9444055649)

மாவட்டச் செயலாளர்: இ. அப்துல் ரஷீத் (9840999757)

மாவட்டப் பொருளாளர்: ஐ. அசதுல்லாஹ் (9659938786)

காஞ்சிபுரம் மாவட்ட நிதிக்குழு:
ஆலந்தூர் எம்.எஸ். அப்துல் வஹாப், தாம்பரம் ஐ அப்துல் ரசீத், மதுராந்தகம் அஜ்மத்துல்லாஹ், ஆலந்தூர் கே.எம்.ஓ. நாகூர் மீரான், கிண்டி கேப்டன் கலீல் ரஹ்மான், பல்லாவரம் முஹம்மது பேக், தாம்பரம் பி.கே.எம். செய்யது அலி ராஜா, மதுராந்தகம் ஏஜாஸ் திருமண மண்டபம் மற்றும் வாகன நிறுத்தம்

தலைமை நிலைய பொறுப்பாளர்கள் :
கமுதி பஷீர், திருப்பூர் எம்.ஏ. சத்தார்

காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர்கள்:
பல்லாவரம் கே. கமால் பாஷா, மாடம்பாக்கம் எஸ். அப்துல் ஹலீம், காட்டாங்குளத்தூர் எச். இப்ராஹீம், தாம்பரம் எஸ்.எம். முஸ்தபா, பி.கே.எம். செய்யது அலி ராஜா, பள்ளிக்கரணை கே. அப்துல் ரஹ்மான் சேட்.

ஜமாஅத்தினர் சந்திப்பு மற்றும் சென்னை வாழ் உறவினர் முறை சங்கத்தினர் அழைப்பு:

தலைமை நிலையப் பொறுப்பாளர்கள்:
மவ்லவி என். ஹாமித் பக்ரீ, ஆப்பனூர் கே. பீர் முஹம்மது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள்:
ரப்பானி கே.ஏ. அப்துல் குத்தூஸ், காயல் அஹமது சாலிஹ், மீஞ்சூர் சிக்கந்தர் பாஷா, பல்லாவரம் முஹம்மது பேக், பேராசிரியர் கே.டி. கிஜர் முஹம்மது, ஹிமாயத்துல்லாஹ், பொழிச்சலூர் செய்யது பாருக்.

அண்ணா விளையாட்டு அரங்கம்:
தலைமை நிலைய பொறுப்பாளர்கள்:

கமுதி பஷீர், திருப்பூர் எம்.ஏ. சத்தார்,

காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர்:
சேலையூர் அப்துல் காதர், சீர்காழி எஸ்.எம் யூசுப், பள்ளிக்கரணை அப்துல் ரஹ்மான், செம்பாக்கம் காஜா முகைதீன் கொடி தோரணங்கள்:
தலைமை நிலையப் பொறுப்பாளர்கள் - கே.பி. இஸ்மத் பாட்சா, கே.எம். நிஜாமுதீன், பூவை எம்.எஸ். முஸ்தபா, சேப்பாக்கம் எஸ்.எம். ஆலம்கான்

காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் -
கிழக்கு கடற்கரை சாலை - கல்பாக்கம் எஸ். ஜாகிப், பனையூர் எச். முஹம்மது யூனூஸ்,

சோழிங்கநல்லூர் - செம்பாக்கம் காஜா முகைதீன் சேலையூர் அப்துல் காதர்,

கத்திப்பாரா சந்திப்பு - எம்.எஸ். அப்துல் வஹாப், ஆலந்தூர் கே.எம்.ஓ. நாகூர் மீரான்

செங்கல்பட்டு - ஏ. சர்தார் பாஷா, எச். இப்ராஹீம் (காட்டாங்குளத்தூர்), டி.டி.கே. சாகுல் ஹமீது (திருக்கழுக்குன்றம்).

பூந்தமல்லி - ஏ. செய்யது ஆஜம் (காஞ்சிபுரம்), அஸ்லம் பாஷா (காஞ்சிபுரம்), ஏ.கே. அஹ்மது (குன்றத்தூர்), அமானுல்லாஹ் (நந்தம்பாக்கம்)

பேரணி ஒருங்கிணைப்பு
தலைமை நிலையப் பொறுப்பாளர்கள்:

கே.எம். நிஜாமுதீன், திருச்சி எம்.கே.எஸ். ஜமால், டி.கே. ஷாநவாஸ், செய்யது பட்டாணி காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் :
கிண்டி - கேப்டன் கலீல் ரஹ்மான்,

மதுராந்தகம் ஏஜாஸ், பல்லாவரம் பாருக், ஆலந்தூர் சஹாபுதீன், மதுராந்தகம் கௌஸ் பாஷா, ஜாபர் ரயில்வே மைதானம்

தலைமை நிலையப் பொறுப்பாளர்:
எம் ஜெய்னுல் ஆபிதீன், ஏ.எச்.எம். இஸ்மாயில், கேப்டன் பஷீர் அஹமது,

காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர்கள்:
ஐ. அப்துல் ரஷீத், பல்லாவரம் முஹம்மது பேக், பொழிச்சலூர் செய்யது பாருக் விருது, சால்வை, வரவேற்புக்குழு பரிசு:

ஏ.ஹெச்.எம். இஸ்மாயில், மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில்

தொலைக்காட்சி, பத்திரிகை விளம்பரம்

மற்றும் செய்தியாளர்கள்:
காயல் மகபூப், எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கீ

இணைய தளம் மூலம் நேரடி ஒளிபரப்பு:

குத்தாலம் ஏ.லியாகத் அலி (அமீரக காயிதெ மில்லத் பேரவைத் தலைவர்)

தோப்புத்துறை நூர்தீன் (அமெரிக்கா, காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர்)

(இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு மற்ற குழுக்களின் விபரம் விரைவில் வெளியிடப்படும்.)

இந்த அறிவிப்பு தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் ஒப்புதலுடன் வெளியிடப்படுகின்றது.


கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர்,
காயிதெ மில்லத் மன்ஸில் மாநிலப்பொதுச் செயலாளர்,

சென்னை 15-11-2010 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் http://muslimleaguetn.com/news.asp?id=2003

Sunday, November 14, 2010

சமுதாய ஒற்றுமை மற்றும் முன்னேற்ற பதைக்கு வழிவாக்கும் மாநில மாநாடு - குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, தலைவர் அமீரக காயிதே மில்லத் பேரவை

சமுதாய ஒற்றுமை மற்றும் முன்னேற்ற பதைக்கு வழிவாக்கும் மாநில மாநாடு - குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, தலைவர் அமீரக காயிதே மில்லத் பேரவை



அன்று முதல் இன்று வரை தொடர்ந்து இஸ்லாமிய சமுதாயத்தின் ஒற்றுமை, சமய நல்லிணக்கத்தை வேண்டி மார்க்கத்திற்காகவும், பண்பாடு, கலாச்சாரத்திற்காகவும், தூய்மையான அரசியலுக்காகவும் ஒரே குடையின் கீழ் இயக்கும் சமுதாய பேரியக்கம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஒன்று மட்டுமே.

இந்தியாவில் குக்கிராமம் முதல் பெரிய நகரங்கள் வரை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நோக்கங்களை பறைசாட்டும் விதமாக முஸ்லிம் லீகின் பிறைக் கொடி சமாதனம், நல்லிணக்கத்தை வலியுறுத்தி பறக்கிறது. இந்த பிறைக் கொடியை தூக்கி பிடிப்பவர்கள் எந்த வித சந்தேகமற்ற நிலையில் பொதுமக்கள் மூலம் அனுகப்படுவார்கள். இந்த பச்சை கொடியில் தன்னை ஐயக்கியப்படுத்தி கொண்ட ஒருவர் அடுத்தவர்களுக்கு நன்மை தவிர வேறு எதுவும் தவறாக பாவங்களை செய்யமாட்டார், இந்த சத்தியசீலர்கள், தனக்கும் இந்த சமுதாயத்திற்கும் ஒரு முன்மாதிரியான, அதுவும் அமைதியின் வழிகாட்டியாக ஒவ்வொரு லீக்கர்களும் திகழ்ந்து, அனைத்து மக்களின் பாசத்தையும், அன்பையும் பெற்றுள்ளார்கள். அரசு முதல் அதன் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் வரை முஸ்லிம் லீக்கர்களை மதிப்பும், மாரியாதையுடன் தொடர்பு கொண்டு செயல்படும் விதம் என்றும் தொடர்ந்து கொண்டு தான் இருகிறது.

"மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாவும், நல்லதைக் கொண்டு மக்களை ஏவுபவர்களாவும், தீயதிலிருந்த மக்களை விலக்குபவர்களாகவும் உங்களின் ஒரு கூட்டத்தார் இருக்கட்டும், இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்" என்ற அல்லாஹ்வின் திருவசனத்திற்கு ஏற்ப எத்தனையோ சமுதாய பணிகளை எந்த வித சுயவிளம்பரம் இன்றி அல்லாஹ்வின் திருப்பொருத்தம் வேண்டியே இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் செய்து அல்லாஹ் கூறிய வெற்றியாளர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னிலையாக இருந்து வருகிறது.

சமுதாயத்தின் பெயரில் எத்தனையோ விளம்பர இயக்கங்கள், கழகங்கள், ஜமாஅத்கள் என்று தினமும் ஒரு பெயரில் வந்தாலும் பராபரியமிக்க இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் சமூக சமுதாய நல்லிணக்கமிக்க கொள்கையின் முன்பாக இதுபோன்ற கொள்கை அற்ற இயக்கங்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும் கதை தான் நாம் இன்றைய அளவில் கண்டுவருகிறோம். இது போன்ற சுயநலமிக்க இயக்கங்கள் நமது சமுதாய இளைஞர்களை அவர்களின் சமுதாய கவலையை வேறு வகையில் பயன்படுத்தி கொண்டததுடன், அவர்கள் மட்டும் தங்கள் அளவில் வளப்படுத்தி கொண்டார்கள், ஆனால் பயன்படுத்தி கொண்ட இளைஞர்களை நடுதெருவில் விட்ட நிகழ்வுகள் தான் தமிழகத்தில் நடந்து கொண்டு இருந்தது. இதுபோன்ற எண்ணற்ற பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சமுதாயத்திற்கு என்றும் குரல் கொடுக்கும், அதுவும் பொதுவில் சமுதாயத்திற்கு என்று அங்கீகாரமிக்க ஒரே அரசியல் இயக்கம் முஸ்லிம் லீக் தான் என்று தன்னை தாய் சபையில் தொடர்ந்து இணைந்து கொண்டு வரும் செய்தி உங்கள் அனைவர்களுக்கும் தெரிந்த விசயம்.

இளைஞர்களுக்கு சமுதாய பணிகளை எந்த விதத்தில் அமைதியான, ஆர்பாட்டமற்ற வழியில் செய்து சாதிப்பது போன்ற அறவழிகளை முஸ்லிம் லீக் போதிப்பதுடன் இதன் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் வழி தவறி சென்றவர்களை அவர்களின் சமுதாய வேட்கையை நன்கு உணர்ந்து இளைஞர்களின் வேகத்தை விவேகமான முறையில் சிறப்பான சிந்தனைகளை கொடுத்து ஒரு பண்பட்டவர்களின் பட்டியலில் இந்த இளைஞர்களை சேர்ந்து வருதுடன், மற்றவர்கள் மதித்து போற்றும் விதமாக செய்து வரும் முஸ்லிம் லீக்கின் செயல் தான் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களின் பாராட்டுகளை என்றும் பெற்று பெருமையுடன் முஸ்லீம் லீக் இருந்து வருகிறது.

தன்னக்கும், தன் குடும்பத்திற்கும், தன் ஊருக்கும் எந்த வித அவபெரும் வராமல் இருக்கவும், சமுதாயத்திற்கு பணியாற்ற வரும் அல்லது செய்ய நினைக்கும் இளைஞர்கள் தொடர்ந்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கில் தன்னை இணைத்து சமுதாயத்திற்கும், மார்க்கத்திற்கும் அறப்பணிகளை சிறப்புடன் செய்வதுடன், இம்மைக்கும், மறுமைக்கும் ஓர் உயர்ந்த இடத்தை பெற வேண்டும், இப்படி கவலை கொண்ட இளைஞர்களை முஸ்லிம் தலைமையகம் என்றும் கதவை திறந்து வைத்து காத்திருக்கிறது. பாதை தெரியாமல் அலைந்து திரிந்து எத்தனையோ இளைஞர்கள் இன்று கடைசியில் தாய் சபையில் தன்னை இணைத்து இன்று சிறந்து விளங்குகிறார்கள். சமுதாய சிறக்க பாடுபடுகிறார்கள்.

வரும் டிசம்பர் 11, 2010 அன்று வரலாறு படைக்கவுள்ள முஸ்லிம் லீக் மாநில மாநாடு ஒர் உயர்வான எண்ண பிரதிபலிப்புடன் இம்மாநாட்டின் இலட்சியமாக சமய "நல்லிணக்கம் தழைக்கட்டும், சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்" என்று இந்த தமிழ் பேசும் உலகத்திற்கு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தன்னளவில் நடந்தி காட்டி ஒவ்வொரு சமுதாய கவலை கொண்ட இளைஞர்கள் பாடுபட வேண்டும். பல்வேறு சமய, சமுதாயத்தின் மத்தில் வாழும் நாம் அவர்களுடன் எப்படி நல்லிணக்கமாக வாழ்வதுடன், நம் சமுதாயத்தில் பின்தள்ளப்பட்ட ஒற்றுமையை மீண்டும் முன் நிலை நிறுத்தி மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக முஸ்லிம் சமுதாயம் சிறந்து வாழ வேண்டும்.

ஊர் மஹல்லா ஜமாஅத் என்றால் முஸ்லிம் லீக், முஸ்லிம் லீக் என்றால் மஹல்லா ஜமாஅத் என்ற நிலை காலம் காலமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஊர் ஜமாஅத் விசேஷங்களில் நிகழ்ச்சியின் முன்பாக பிறைக்கொடியை ஏற்றி உயர பறக்கவிட்டு தான் அந்த நிகழ்ச்சியை தொடங்கும் வழிமுறைகள் இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் மஹல்லா ஜமா அத் ஒருங்கிணப்பு மற்றும் சமுதாய ஒற்றுமை என்று மாநாடு நடக்கும் தினத்தில் காலை அமர்வாக தனியாக ஒரு கருத்தரங்கம் முஸ்லிம் லீக் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது. கடந்த சில வருடங்களாக பல்வேறு காரணங்களால் மார்க்கம், அரசியல் பெயரில் சமுதாய ஒற்றுமையை சீர்குலைத்து பல்வேறு இன்னல்களை இந்த சமுதாய ஜமாத் அத்தார்கள் பெற்று காவல்நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் தேவையற்ற வகையில் அலை வேண்டியதாகிவிட்டது. நம்மை படைத்து பரிபாலனம் செய்யும் வல்ல அல்லாஹ் நம் சமுதாயத்தில் எதில் கவனமாக இருக்க சொல்லி இருந்தானோ அந்த ஒற்றுமையை விட்டு நம்மிடையே விரோத போக்கை சில கூட்டங்களின் தூண்டுகோலின் காரணமாக சீர்குலைந்து போய்விட்டது. ஒற்றுமையாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர்கள் என்று அடிதடி, கொலை என்று மனிதர்கள் வெறுக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். இந்த மார்க்க விரோத செயல்கள் அனைத்தையும் கலைந்து சமுதாய ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டி இந்த மாநில மாநாடு கருந்தரங்கம் வலிவகுக்கும். அத்துடன் ஒவ்வொரு ஊரின் ஜமாஅத் நிர்வாகத்தின் மூலமாக ஊரின் வளர்ச்சி திட்டப்பணிகளை சொந்தமாகவே, அதுவும் எந்தவித அரசு உதவி இல்லாமல் சுயமாகவே ஊரில் பைத்துல் மால், வட்டியில்லா கடன் உதவி, கல்வி விழிப்புணர்வு மற்றும் கல்வி உதவி தொகை, ஏழைகுமர் மற்றும் முதியோர்களுக்கு உதவி என்பன போன்ற நலப்பணிகளில் சிறப்பாக செய்து தமிழக ஜமாஅத் நிர்வாகங்களுக்கு முன்மாதிரியாக செயல்படும் ஜமாஅத்களை இனம் கண்டு இந்த மாநில மாநாடு விழாவில் முன்மாதிரி ஜமாஅத் என்ற விருதுகளை முஸ்லிம் லீக் வழங்கி அந்த ஜமாஅத்களை கவுரவிக்க உள்ளது. இதன் மூலம் மற்ற ஊர் ஜமாஅத் நிர்வாகங்களும் தங்கள் ஊரில் மேற்கண்ட அறப்பணிகளை செய்ய வழிகாட்டியாக இருக்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற சிறப்புமிக்க விருதுகளை அவர்களும் பெற முடியும்.

மொத்தத்தில் இந்த டிசம்பர் 11 மாநில மாநாடு சமுகநல்லிணக்கதையும், வல்ல அல்லாஹ்வின் உதவியுடன். சமுதாய ஒற்றுமை மற்றும் முன்னேற்ற பாதைகளுக்கு பல வகையில் வழிகாட்டும்

மாநாடு ஆரம்ப ஏற்பாடுகளை தலைமையகம் சிறப்பாக தொடங்கி மாநாடு அழைப்பிதழ், சுவர் விளம்பரம் முதல் டிஜட்டல், ஸ்டிக்கர் விளம்பரம் வரை சிறப்பாக செய்து வருகிறது. மாநாடு சிறப்பாக நடைபெற ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பை அமீரக காயிதே மில்லத் பேரவை முதல் தமிழகம், இந்தியா மற்றும் உலகங்கும் இருக்கும் காயிதே மில்லத் பேரவை மேலும் சமுதாய புரவலர்கள் செய்து வருகிறார்கள்.

சர்வசேத காயிதே மில்லத் பேரவை ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி அவர்கள் அமீரகத்திற்கு நேரடியாக வருகை புரிந்து, டிசம்பர் 11 மாநில மாநாடு பற்றிய விளக்க பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு நம் அனைவர்களுக்கும் அழைப்பு கொடுத்தார்கள். அத்துடன் அமீரகத்தில் வாழும் சமுதாய புரவலர்கள், ஆதரவார்களை நேரடியாக சந்திந்து அழைப்பு கொடுத்ததுடன் மற்ற வளைகுடா நாடுகளில் உள்ள காயிதே மில்லத் பேரவைகளின் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அழைத்தார்கள். இதன் அடிப்படையில் அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் சவுதி, கத்தார், குவைத், அமெரிக்கா, ஹாங்ஹாங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா மற்றும் உலகெங்கும் உள்ள காயிதே மில்லத் பேரவையினரை தொடர்பு கொண்டு மாநாட்டில் கூட்டாக கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கையுடன் அழைப்பு கொடுக்கப்பட்டது, அழைப்பை ஏற்று கொண்ட அவர்களும் திரளாக மாநில மாநாட்டில் கலந்து கொள்ள முன்ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியை தருகிறது. மேலும் அமீரகத்தில் பேரவை பொதுச் செயலாளர் முகம்மது தாஹா, பொருளாளர் ஹமீதுர் ரஹ்மான், ஊடகத்துறை முதுவை ஹிதாயத் மற்றும் பேரவையினர்கள் அமீரகத்தில் உள்ள சமுதாய மக்களை சந்தித்து மாநாடு நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்ள வேண்டி அழைப்பிதழ் கொடுத்ததுடன், ஆதரவுகளை பெற்று அமீரகத்திலிருந்து ஒரு இளைஞர் பட்டாளத்தையே திரட்டி மாநில மாநாட்டில் கலந்து கொள்ள களப்பணியாற்றி வருகிறார்கள். இதுபோன்ற களப்பணிகளை மற்ற நாடுகளில் உள்ள காயிதே மில்லத் பேரவையும் செய்ய வேண்டுகிறேன். அத்துடன் மாநாடு நிகழ்ச்சிகளை உலகத்தில் இருக்கும் அனைவர்களும் இருந்த இடத்திலிருந்து நேரடியாக காண முஸ்லிம் லீக் இணையதளத்தின் மூலம் காண அமீரக மற்றும் அமெரிக்கா காயிதே மில்லத் பேரவை சார்பாக மாநாடு நேரடி ஒளிப்பரப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

அல்லாஹ்விடம் பிரார்த்னை செய்யுங்கள் சமுதாய நலம் வேண்டி.. மாநில மாநாடு சிறக்க�

வாருங்கள் அனைத்து சமுதாய மக்களும்..

ஒற்றுமைக்கு முன்மாதிரியான சமுதாயம் என்று உலகிற்கு அறிவிக்க..

சமுதாய இளைஞர்கள் அதிக அளவில் ஒன்று கூடும் மாநில மாநாடு�

மீண்டும் உலகம் முழுவதும் எத்திவைப்போம்..

சமய நல்லிணக்கம் தழைக்கட்டும்�

சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்�

ஒற்றுமையே பிரச்னைகளுக்கான ஒரே தீர்வு

Assalamualaikum Wara....

Pls check this link:

http://satyamargam.com/1568

"ஒற்றுமையே பிரச்னைகளுக்கான ஒரே தீர்வு" - அப்துர் ரஹ்மான் M.P யுடன் ஒரு நேர்காணல்!"

Thank you


Kind Regards,

Siddiq Ahmed Abdul Rahman
+91 95000 73786
siddiqar@yahoo.com

இணையதள மூலம் நேரடி ஒளிப்பரப்பு (Live Webcast )

இணையதள மூலம் நேரடி ஒளிப்பரப்பு (Live Webcast )

அமீரகம் மற்றும் அமெரிக்கா காயிதே மில்லத் பேரவை ஏற்பாட்டின் மூலம் டிசம்பர் 11 மாநில மாநாடு முழு நிகழ்ச்சிகளையும் http://muslimleaguetn.com இணையதள மூலம் நேரடி ஒளிப்பரப்பை உலக முழுவதும் பார்க்கலாம்.
-மாநில மாநாடு வரவேற்புக் குழு
______________________________

Monday, November 1, 2010

IUML STATE CONFERENCE NEWS

IUML STATE CONFERENCE NEWS

http://www.twocircles.net/2010oct13/tamil_nadu_muslim_league_hold_state_conference_december_11.html

Khorrum Omer
National Secretary-IUML

IUML becomes third biggest party in Kerala

IUML becomes third biggest party in Kerala
By IANS,

Thiruvananthapuram: With an excellent performance in the Kerala local body polls, Congress ally Indian Union Muslim League (IUML) Saturday edged out the Communist Party of India (CPI) to become the third biggest party in the state.

"We have proved that we are a truly secular party by winning seats across the state. The CPI-M (Communist Party of India-Marxist) has time and again been levelling baseless allegations and even questioning our secular nature," said senior IUML leader P.K. Kunhalikutty.
"On one hand, they blame us for being communal but in the recent polls it became quite clear that it was the CPI-M who joined hands with parties like PDP, SDPI (formerly Popular Front of India) and Jamaat-i-Islami," he said.

IUML won 1,443 seats in the village panchayats, 190 at the block level, 32 at the district level, 234 in the municipalities and five in the four corporations and their tally is all set to increase as counting in one of their strongholds - Kozhikode district - is to be taken up Sunday.
The CPI, which was earlier at the third position, has got only 979 seats in the village panchayats.

"Our presence now spans across the state and we are a dominant force all over. We have hugely improved our position in districts like Wayanad, Palakkad, Trissur and Ernakulam. The only place we did not do as expected was here (Thiruvananthapuram)," said Kunhalikutty.

"This election also proved that the minority community does not see the CPI-M as their saviour as always claimed by them," said Kunhalikutty.

Sunday, October 24, 2010

சாதனை படைத்த "காயிதே மில்லத்" தொகுதிக்கு போகாமலேயே தேர்தல்களில் வென்றவர்

சாதனை படைத்த "காயிதே மில்லத்" தொகுதிக்கு போகாமலேயே தேர்தல்களில் வென்றவர்

Chennai சனிக்கிழமை, மே 08, 10:45 AM IST

இஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் `காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப். நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர்.

அன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக திகழ்ந்தவர். தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்.

அனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.

இத்தகைய பெருமைக்குரிய இஸ்மாயில் சாகிப், திருநெல்வேலியை அடுத்த பேட்டை என்ற ஊரில் 1896_ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முஸ்லிம் மத தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இஸ்மாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார்தான் அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார்.

திருநெல்வேலியில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் படிப்பு முடிந்ததும் திருச்சி ஜோசப் கல்லூரியிலும், பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார்.

பட்டம் பெற 2 மாதம் இருந்தபோது, காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1920_ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். அந்த ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றினார்.

1936_ம் ஆண்டு இஸ்மாயில் சாகிபு, முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். 1945_ம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948_ம் ஆண்டு இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

1946 முதல் 52_ம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1952_ம் ஆண்டு முதல் 58_ம் ஆண்டு வரை டெல்லி மேல்_சபை உறுப்பினராக பதவி வகித்தார்.

1962_ம் ஆண்டில் கேரளாவில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன் பின் 1967, 1971 தேர்தல்களிலும் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.

தொகுதிக்கு செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெற்றவர் இஸ்மாயில் சாகிப் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு தூரம் தொகுதி மக்களின் செல்வாக்கை பெற்றவர்.

இஸ்மாயில் சாகிப்பின் மனைவி பெயர் அமீதா பீவி. இவர் 1962_ம் ஆண்டில் காலமானார். இஸ்மாயில் சாகிப்பின் ஒரே மகன் மியாகான்.

"காயிதே மில்லத்" இஸ்மாயில் சாகிபுக்கு 1972 மார்ச் 25_ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

குடல் புண் (அல்சர்) நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர் யு.முகமது தலைமையில் 15 டாக்டர் கள் கொண்ட குழு சிகிச்சை அளித்தார்கள். 31_ந்தேதி காலை அவர் ரத்த வாந்தி எடுத்தார். கல்லீரலும் சரிவர வேலை செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து உணர்வு இழந்தார். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. டாக்டர்கள் இரவு பகலாக அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

ஏப்ரல் 4_ந்தேதி சிறுநீரகம் சரிவர இயங்கவில்லை. அதை சீராக்க ஒரு மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. ஆயினும் அவர் உடல் நிலை தேறவில்லை. தொடர்ந்து மோசம் அடைந்தது.

முதல்_அமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா. பெரியார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை பார்த்தனர். முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற, பாராளு மன்ற உறுப்பினர்களும், பிரமுகர்களும் ஆஸ்பத்திரியிலேயே இருந்தனர்.

அன்றைய தினம் (4_4_1972) இரவு 10 மணி அளவில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது. உறவினர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து "குர்ஆன்" ஓதினார்கள்.

நள்ளிரவு 1_15 மணிக்கு இஸ்மாயில் சாகிப் மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது, அவருடைய மகன் மியாகான், மருமகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அருகில் இருந்தனர்.

இஸ்மாயில் சாகிப் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள அவர் வீட்டுக்கு காரில் கொண்டு போகப்பட்டது. மரணம் அடைந்தபோது காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபுக்கு வயது 76.

மறுநாள் (5_ந்தேதி) காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. கல்லூரியின் கலை அரங்கின் மத்தியில் ஒரு மேடை அமைத்து அதில் இஸ்மாயில் சாகிப் உடல் வைக்கப்பட்டது. உடல், முஸ்லிம் லீக் கொடியால் போர்த்தப்பட்டு இருந்தது. காலையில் இருந்தே மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து, இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

முதல்_அமைச்சர் கருணாநிதி, காலை 8_25 மணிக்கு வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மற்றும் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், மாதவன், ப.உ.சண்முகம், சத்தியவாணிமுத்து அம்மையார், சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், ராசாராம், மன்னை நாராயணசாமி, ராமச்சந்திரன், ஓ.பி.ராமன், கண்ணப்பன் ஆகியோரும் மலர் மாலை வைத்தனர்.

பிற்பகலில் திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். இஸ்மாயில் சாகிப்பின் மகன் மியாகானுக்கு ஆறுதல் கூறினார்.

பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், சபாநாயகர் மதியழகன், மேல்_சபை தலைவர் சி.பி.சிற்றரசு, தமிழரசு கழக தலைவர் ம.பொ.சிவஞானம், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், நீதிபதி இஸ்மாயில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பொன்னப்ப நாடார், ராஜாராம் நாயுடு ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர்.

பின்னர் புதுக்கல்லூரியில் உள்ள மசூதிக்கு இஸ்மாயில் சாகிப் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தொழுகை நடைபெற்றது. பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் புறப்படுவதற்கு முன் முதல்_அமைச்சர் கருணாநிதியும், மற்ற அமைச்சர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

ஊர்வலத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம் முதலிய வெளி மாநிலங்களில் இருந்து வந்த முஸ்லிம் லீக் பிரமுகர்கள் நடந்து சென்றனர்.

தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆரும் நடந்து போனார். ஊர்வலத்தில் போனவர்கள் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் கேரள கல்வி மந்திரி முகமது கோயா, ஊராட்சி மந்திரி அவுக்காதல் குட்டிநகா, பொதுப்பணி மந்திரி திவாகரன், ரெவினிï மந்திரி பேபி ஜான், சபாநாயகர் மொகிதீன் குட்டி, புதுச்சேரி மந்திரி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரத்தில், அண்ணாவை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் "காயிதே மில்லத்" கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிக்கொண்டிருப்பது அப்துல் சமது (1962). ஊர்வலம் பீட்டர்ஸ் ரோடு, பெசன்ட் ரோடு வழியாக, திருவல்லிக்கேணி ஐரோட்டில் உள்ள வாலாஜா மசூதியை அடைந்தது. அங்கு இஸ்மாயில் சாகிப் உடல், முஸ்லிம் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் நடந்தபோது கூடி இருந்தவர்கள் "அல்லாஹ் _ அக்பர்" என்று குரல் எழுப்பினார்கள்.

இஸ்மாயில் சாகிப் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. அதில் கருணாநிதி பேசுகையில் கூறியதாவது:-

"தனது 50 ஆண்டு கால வாழ்வில் 8 கோடி முஸ்லிம்களுக்காக உழைத்து பொற்கால மாக்கித் தந்தார். தமிழர்களுக்கு மட்டும் அல்ல _ இந்தியர்களுக்கும் அவர் மறைவு மாபெரும் இழப்பு. இஸ்மாயில் சாகிப் மனிதருள் மாமணி. அடக்கம், அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடம். இஸ்மாயில் சமூகத்துக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நீண்ட நெடுங்கால தொடர்பு இருந்து வருகிறது.

எங்கள் அண்ணன் மறைவுக்கு பிறகு இஸ்மாயில் சாகிப் அண்ணனுக்கு அண்ணனாக திகழ்ந்தார். அவர் மறைந்து விட வில்லை. நெஞ்சத்தில் உறைந்து விட்டார். அவர் நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் இருக்கிறார்."

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

கூட்டத்தில் கேரள அமைச்சர்கள் முகமது கோயா, திவாகரன், பாண்டிச்சேரி அமைச்சர் ராமசாமி, சபாநாயகர் மதியழகன், தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆர்., கேரள முஸ்லிம் லீக் தலைவர் தங்கல், இந்திய முஸ்லிம் லீக் செயலாளர் இப்ராகிம் சுலைமான் சேட், அப்துல் சமது, பீர்முகமது, திருப்பூர் மொய்தீன் மற்றும் பலர் பேசினார்கள்.

இஸ்மாயில் சாகிப் மறைவுக்கு ஜனாதிபதி வி.வி.கிரி, தமிழக கவர்னர் கே.கே.ஷா, திராவிட கழக தலைவர் பெரியார், சுதந்திரா கட்சி தலைவர் ராஜாஜி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், கேரள முதல்_மந்திரி அச்சுதமேனன் உள்பட ஏராளமான தலைவர்கள் அனுதாப செய்தி வெளியிட்டார்கள்.

டெல்லி பாராளுமன்றத்திலும், தமிழ்நாடு சட்டசபையிலும் அனுதாப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லா உறுப்பினர் களும் ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்.

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் லீக் !

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் லீக் !

இந்திய திருநாட்டை 800 ஆண்டு காலம் ஆண்டது இஸ்லாமிய சமுதாயம். அதே நேரத்தில் அடிமை இந்தியாவை சுதந்திர இந்தி யாவாக மாற்றியது இஸ்லாமியர்கள். நம்மவர்கள் இந்நாட்டை ஆண்டார்கள் என்பதற்கு சான்றாக ‘இந்நாளும் எந்நாளும் தாஜ்மஹால் சாட்சி சொல்லும் அதுவன்றி குதுப்மினார் சின்னமுண்டு’ இந்த சுதந்திரத்தை அடைவதற்காக நமது தேசத் தலைவர்கள், முஸ்லிம் லீக் தலைவர்கள், உலமாக்கள், பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மற்றும் தலைவர்கள் இன்னும் ஏனைய சமுதாயத்தினர் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த நாட்டிற்காக சுதந்திர வேட்கையால் பல முஸ்லிம் லீக் தலைவர்கள், உலமாக்கள், பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், முஸ்லிம் தலைவர்கள் தங்களுடைய உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் தியாகம் செய்த வரலாற்று சம்பவங்களை இந்த நாடு மறந்து விட்டதா ?

காங்கிரஸ் புகழாரம்

இந்நாட்டில் எந்த இயக்கம் தோன்றவில்லை என்றால் சுதந்திரம் இல்லையே என்று வரலாற்றில் வர்ணிக்கப்படுகிறதோ அந்த காங்கிரஸ் அதன் தலைவர் இவ்வாறு கூறுகிறார். இந்திய முஸ்லிம் லீக் தலைமையில் 1923- ஆம் ஆண்டு ஜனவரி 23 – ம்தேதி சென்னை சவுக்கார்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் சுயசரிதை வெளியிடுதல் மற்றும் மனிதருள் மாணிக்கம் மெளலானா முஹம்மது அலியின் சுயசரிதை வெளியீடு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறுகிறார். இவ்வாறு எங்களுக்கு கிலாபத் இயக்கத்தினை தோற்றுவித்ததின் தாக்கம்தான் இந்நாட்டில் எங்களுக்கு சுதந்திர கிளர்ச்சியையும், உணர்ச்சியையும், புரட்சியையும், சுதந்திர தாகத்தையும் எங்களுக்கு ஏற்படுத்தியது என்று தனது உரையில் கூறினார். இங்கு கவனிக்கப்பட வேண்டியது எது என்றால் வெள்ளையர் களால் சூளுரைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப்போர் ‘சிப்பாய் கலகம்’ 1857 –ம் ஆண்டு ஏற்படுத்திய நிகழ்ச்சியின் எழுச்சியைக் குறிப்பிடுவதுண்டு. ஆனால், அது வடநாடு சம்பந்தப்பட்ட ஒரு எழுச்சியாகவே முடிந்தது. ஆனால் இமயம் முதல் குமரி வரை உள்ள இந்தியப் பெருமக்களின் இதயங்களினால் சுதந்திர உணர்ச்சியை தேசிய உணர்ச்சியாக கனன்றெழுந்தது – ‘கிலாபத்’ இயக்கத்தின்போது தான். ஆக அகில இந்திய அளவிலும், அரசியல் எழுச்சியையும், உணர்ச்சியையும் ஊட்டியது முஸ்லிம் லீக் தலைவர்கள் தோற்றுவித்த ‘கிலாபத் இயக்கம்’

இந்திய தேசிய ராணுவம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ‘இந்திய தேசிய ராணுவத்தை’ உருவாக்கி நம் மண், பொன் மீது வெறி கொண்ட வெள்ளை அரசை தூங்க விடாமல் துளைத்தெடுக்கவும், துரத்தி அடிக்கவும் செய்தார். அந்த நேரத்தில் நேதாஜியின் படையில் பல்வேறு சமுதாயத்தினர் இருந்தாலும் அதில் பல முஸ்லிம் ஜெனரல்கள், கர்னல், லெப்டினென்ட் கர்னல்கள், முஸ்லிம் சிப்பாய்கள் பல பேர் இருந்தனர். இதில் நேதாஜியுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் முஸ்லிம் லீகை சேர்ந்த பள்ளப்பட்டி மணிமொழி மெளலானா எம்.ஜி. கலீல் ரஹ்மான் பாகவி அவர்கள். நேதாஜி அவர்களுடன் இந்திய நாட்டு விடுதலைக்காக 1941 முதல்1945 வரை வெளிநாட்டிலே பெரும்பாலும் குறிப்பாக இந்தோ – சீனாவில் இருந்து செயலாற்றிய பெருமைக்குரியவர். சைக்கோன் ரேடியோவில் மூன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நேதாஜி அவ்வப்போது பேசி வந்துள்ளார். அந்த பேச்சுக்களை தமிழ் மூலம் மணிமொழி மெளலானா எம்.ஜி. கலீல் ரஹ்மான் பாகவி பிரச்சாரம் செய்து வந்துள்ளார். இது இந்திய தமிழ் வாலிபர்களுக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் எழுச்சியையும் தந்தது.

வட்ட மேஜை மாநாட்டில் முஸ்லிம் லீக் பங்களிப்பு

முதல் வட்ட மேஜை மாநாடு (1930-32) லண்டனில் நடந்தது. இந்த மாநாட்டில் கிலாபத் இயக்கத்தின் தலைவரும், முஸ்லிம் லீக் தலைவரான மெளலானா முஹம்மது அலி பங்கேற்றார்.

உணர்ச்சியுடன் பேசினால் உயிருக்கே ஆபத்து நேரிடும் என்று மருத்துவர்கள் தடுத்துங்கூட மெளலானா அவர்கள் ‘என் உள்ளத்திலுள்ளதை வெளியிடாமல் இருப்பதை விட வெளியிட்டு இறந்து விடுகிறேன். இல்லையேல் சுதந்திரம் பெற்ற இந்நாட்டிலே ஒரு புதைகுழியைக் கொடுங்கள்’ என விடுதலை தாகத்தை வெளியிட்டார். எனவே, மெளலானாவின் தேசப்பற்றையும், விடுதலை வேட்கையும், மெய்சிலிர்க்க வைக்கிறது.

நம்நாடு விடுதலையான அந்த நேரத்தில் அந்த நடுநிசியில், அதாவது நிசப்தம் நிலவிய வேளையில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15 ஆம் தேதி அந்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் மத்திய மண்டபத்தில் அரசியல் நிர்ணய சபையின் அத்தனை உறுப்பினர்களுடன் கூடி இருந்த நிசப்தம் நிலவிய வேளையில் அந்த நேரத்தில் இந்தியா விடுதலை பிறந்தது என்பதற்காக அறிகுறியாக பன்னிரெண்டு மணி அடித்து ஓய்ந்த அந்த வேளையில் கணீரென ஒலித்த சுதந்திர கீதம் நாம் தற்போது பாடக்கூடிய தேசிய கீதம் ‘ஜனகனமண’ அல்ல: தேசிய கீதமாக ஒலித்தது முஸ்லிம் லீக் தலைமையேற்று வழிநடத்திய தலைவரான அமரகவி அல்லாமா இக்பாலின்

’ஸாரே ஜஹான்ஸே அச்சா
ஹிந்துஸ்தான் ஹமாரா ‘

எனவே, இந்நாட்டில் முதல் தேசிய கீதமாக இந்த பாடல்தான் பாடப்பட்டது. ஆக இந்த கீதத்தை தான் தேசிய கீதமாக இந்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், இந்த கீதத்தைத்தான் இன்று நம் முப்படையின் வீரர்கள் அணி வகுக்கும் போது எடுப்பான குரலில் இசையுடன் பாடுகிறார்கள்.

சங்கைக்குரிய உலமா பெருமக்களே !
முஸ்லிம் சமுதாய சான்றோர்களே !
தங்க நிகர் சமுதாயத்தின் சிங்கநிகர்
இளைஞர் பட்டாளமே !
மாணவச் செல்வங்களே !

இந்திய விடுதலையின்
முஸ்லிம் லீகின் தியாக வரலாறு
உலகெங்கும் ஒலிக்கட்டும் !
-எம் அப்துல் பாஸித், தேவதானப்பட்டி

நன்றி : பிறைமேடை மாதமிருமுறை இதழ்

Friday, October 22, 2010

2010 டிசம்பர் 11 முஸ்லிம் லீக் மாநில மாநாடு

2010 டிசம்பர் 11 முஸ்லிம் லீக் மாநில மாநாடு எழுச்சியின் தொடர்ச்சி -
தோப்புத்துறை அ.முகம்மது நூர்தீன்
தலைவர், அமெரிக்க காயிதே மில்லத் பேரவை


டிசம்பர் மாதம் என்றால் நம் சமுதாய மக்களிடம் பீதியும், தேவையில்லாத பதட்டமும் தான் இத்தனை காலமாக இருந்து வந்தது. அயோத்தி பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை காட்டி சமுதாயத்தின் பெயரில் ஆதாயத்திற்கு என்றே வீடுகளில் அடைந்து கிடந்தவர்களை எல்லாம் வீதியில் வந்து போராட செய்தோம் என்று பெருமை பேசி வந்தவர்கள் நம் சமுதாயத்தின் இளைஞர்களை நீதிமன்றங்களுக்கும், சிறைச்சாலைகளுக்கும் தொடர்ந்து அனுப்பி கொண்டு இருந்தார்கள்.

பல்வேறு மத, இன வேறுபாடுகளை புறம்தள்ளி சகோதரத்துவத்துடன் வாழ்ந்த காலத்தை வீண் செய்து நம் சமுதாய குடும்பங்களில் நிம்மதி அற்ற தன்மையை பெறச் செய்தார்கள். ஒருவருக்கு ஒருவர் விரோதியாக இருக்கும் நிலைக்கு ஆளாக்கினார்கள். ஆனால், தங்களை மட்டும் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார்கள்.

இவர்களின் வீவேகமற்ற வழிகாட்டு தலில் எண்ணற்ற குடும்பங்கள் சீரழிந்து போய்விட்டன என்பதை யாரும் மறுக்க முடியாது. டிசம்பர் போராட்டங்களால் சாதித்தது என்ன என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

அன்று முதல் இன்று வரை சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற்றத்திற்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் பேரியக்கம் ஒன்று மட்டுமே பல்நோக்கு பார்வையுடன் மார்க்க நெறிக்கும், அரசியல் நாகரிகத்திற்கும் சமூக சமய நல்லிணக்கத்திற்கும் செயலாற்றி மற்றவர் களுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது என்பதை ஒவ்வொருவரும் தன் மனசாட்சிக்கும் இறை பயபக்திக்கும் உகந்த வகையில் சான்று தருவார்கள்.

இதோ அடுத்தவர்களின் மன உணர்வுகளையும் ஏக் கத்தையும் அறிந்து, நாளை வல்ல அல்லாஹ்விடம் திருப்பொருத்ததை பெற வேண்டும் என்ற உயர்வான நோக்கத்தில் எத்தனையோ இன்னல்களை சமுதாயத் திற்காகவும், அல்லாஹ்விற்காகவும் பொறுமையுடன் சந்தித்த ஆற்றல்மிக்க பாராம்பரியத்திற்கு சொந்தகாரர்கள் முஸ்லிம் லீகர்கள்.

இந்த தியாக சீலர்களான இந்திய யூனியன் முஸ்லிம் லீகர்களின் பேச்சும் செயலும் வரும் டிசம்பர்-11ஐ முன்நிறுத்தி நமது தலைவர்கள் வழிகாட்டிய வழியில் சமய நல்லிணக்கம் தழைக்கட்டும்! சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்!�� என்ற மாநில மாநாட்டின் நோக்கத்தை உலகிற்கு பறைசாட்டுவதுடன்நம்முடைய குரல் எத்திசையி லும் எதிரோலிக்க செய்ய வேண்டும். கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்களின் வழியில் சிராஜுல் மில்லத், மூனீருல் மில்லத் என்ற தன்னலமற்ற தலைவர்களின் வழிகாட்டுதல் தான் நம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் மூலதனம்.

முஸ்லிம் லீக் என்றால் இளைஞர்களே இல்லை என்று பிரச்சாரம் செய்தவர்களுக்கு பெரும் அடியாக மணிவிழா மாநில மாநாட்டில் தமிழகம் முழுவதும் இளைஞர்களின் பட்டாளம் வந்து சென்னை மாநகரத்தையே திகைக்க வைத்தது.

இன்றைய தமிழக முதல்வர் அவர்கள் மணிவிழா மாநாட்டு மேடையிலேயே எங்கள் கட்சிக்கு நிகரான கட்சி இது, சமுதாய மக்களின் பலத்தை முஸ்லிம் லீக் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் பெற்றுள்ளார்கள் என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

டிசம்பர் 11-ல் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு உலகம் முழுவதும் இருந்தும் முஸ்லிம் லீகர்கள் திரளாக வருவதற்கு இப்போதே திட்டம் வகுத்து செயல் படுகிறார்கள் என்று அறியும்போது மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்படுகிறது.

தமிழகம் முழுவதும் மாநில மாநாட்டுக்கு வர அழைப்பும் ஏற்பாடுகளையும் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் ஊர் பிரைமரிகள் செய்ய தொடங்கி விட்டன என்ற செய்தி மாநில தலைமைக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது.

டிசம்பர் 11-ல் நடக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நேரடி ஒளிப்பரப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்க காயிதே மில்லத் பேரவை கூட்டாக முஸ்லிம் லீக் இணையதளம் மூலம் ஒளிப்பரப்ப இருக்கிறது.

இம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற வேண்டுகோளை உலகம் முழுவதும் உள்ள தமிழக முஸ்லிம்கள் தங்களின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கும் பணியை வெளிநாடு வாழ் தமிழக முஸ்லிம்கள் செய்ய தொடங்கி உள்ளனர்.

வல்ல அல்லாஹ்வின் திருவேதத்தையும், இறுதி தூதர் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிகளையும் என்றும் சமுதாய அரசியல் பொது வாழ்வில் பேணிநடக்கும் இயக்கமாக இருக்கிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

இந்த இயக்கம் யாருக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல-ஒவ்வொரு முஸ்லிமின் உரிமைமிக்க இயக்கம்.

அதனால் தான் அதனை தாய்ச் சபை"" என்று எல்லோரும் போற்றி பேணி அன்பு காட்டி அழைக்கிறோம்.

மாநில மாநாடு சிறக்க வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து ஒற்றுமையுடன் களப்பணியாற்றி மாநாடு வெற்றி பெற செய்வோம். இந்த மாநாட்டின் மூலம் நம் சமுதாயத்திற்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கட்டும்.

முனைப்புடன் செயல்படுவோம்-மாநாடு வெற்றிக்கு முழு மூச்சுடன் பாடுபடுவோம்.

சமுதாயம் தாம்பரத்தில் சங்கமம் ஆகட்டும்!
http://muslimleaguetn.com/news.asp?id=1935

Wednesday, October 6, 2010

முஸ்லிம் லீக் அகில இந்திய செயலாளருக்கு வரவேற்பு நிகழ்ச்சி

முஸ்லிம் லீக் அகில இந்திய செயலாளருக்கு வரவேற்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயலாளர் ஜனாப் குர்ரம் அனீஸ் உமர் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 03.10.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணிக்கு ஸ்டார் மெட்ரோ தேரா ஹோட்டல் அபார்ட்மெண்டில் நடைபெற இருக்கிறது.

நிகழ்விற்கு அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தலைமை தாங்குகிறார்.

பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் அல்ஹாஜ் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

இந்நிகழ்வில் வேலூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினரும், பிறைமேடை மாதமிருமுறை ஆசிரியருமான எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்கள் வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.

மேலும் அமீரக காயிதெமில்லத் நிர்வாகிகள் பலர் கருத்துரை வழங்குகின்றனர்.

இந்நிகழ்வில் அமீரக காயிதெமில்லத் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக விபரங்களுக்கு : 050 467 4399 / 050 51 96 433

முஸ்லிம் லீக் இணையத்தளங்கள் :
http://www.indianunionmuslimleague.in
http://muslimleaguetn.com