சாதனை படைத்த "காயிதே மில்லத்" தொகுதிக்கு போகாமலேயே தேர்தல்களில் வென்றவர்
Chennai சனிக்கிழமை, மே 08, 10:45 AM IST
இஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் `காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப். நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர்.
அன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக திகழ்ந்தவர். தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்.
அனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.
இத்தகைய பெருமைக்குரிய இஸ்மாயில் சாகிப், திருநெல்வேலியை அடுத்த பேட்டை என்ற ஊரில் 1896_ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முஸ்லிம் மத தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இஸ்மாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார்தான் அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார்.
திருநெல்வேலியில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் படிப்பு முடிந்ததும் திருச்சி ஜோசப் கல்லூரியிலும், பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார்.
பட்டம் பெற 2 மாதம் இருந்தபோது, காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1920_ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். அந்த ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றினார்.
1936_ம் ஆண்டு இஸ்மாயில் சாகிபு, முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். 1945_ம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948_ம் ஆண்டு இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
1946 முதல் 52_ம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1952_ம் ஆண்டு முதல் 58_ம் ஆண்டு வரை டெல்லி மேல்_சபை உறுப்பினராக பதவி வகித்தார்.
1962_ம் ஆண்டில் கேரளாவில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன் பின் 1967, 1971 தேர்தல்களிலும் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.
தொகுதிக்கு செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெற்றவர் இஸ்மாயில் சாகிப் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு தூரம் தொகுதி மக்களின் செல்வாக்கை பெற்றவர்.
இஸ்மாயில் சாகிப்பின் மனைவி பெயர் அமீதா பீவி. இவர் 1962_ம் ஆண்டில் காலமானார். இஸ்மாயில் சாகிப்பின் ஒரே மகன் மியாகான்.
"காயிதே மில்லத்" இஸ்மாயில் சாகிபுக்கு 1972 மார்ச் 25_ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
குடல் புண் (அல்சர்) நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர் யு.முகமது தலைமையில் 15 டாக்டர் கள் கொண்ட குழு சிகிச்சை அளித்தார்கள். 31_ந்தேதி காலை அவர் ரத்த வாந்தி எடுத்தார். கல்லீரலும் சரிவர வேலை செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து உணர்வு இழந்தார். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. டாக்டர்கள் இரவு பகலாக அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
ஏப்ரல் 4_ந்தேதி சிறுநீரகம் சரிவர இயங்கவில்லை. அதை சீராக்க ஒரு மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. ஆயினும் அவர் உடல் நிலை தேறவில்லை. தொடர்ந்து மோசம் அடைந்தது.
முதல்_அமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா. பெரியார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை பார்த்தனர். முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற, பாராளு மன்ற உறுப்பினர்களும், பிரமுகர்களும் ஆஸ்பத்திரியிலேயே இருந்தனர்.
அன்றைய தினம் (4_4_1972) இரவு 10 மணி அளவில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது. உறவினர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து "குர்ஆன்" ஓதினார்கள்.
நள்ளிரவு 1_15 மணிக்கு இஸ்மாயில் சாகிப் மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது, அவருடைய மகன் மியாகான், மருமகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அருகில் இருந்தனர்.
இஸ்மாயில் சாகிப் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள அவர் வீட்டுக்கு காரில் கொண்டு போகப்பட்டது. மரணம் அடைந்தபோது காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபுக்கு வயது 76.
மறுநாள் (5_ந்தேதி) காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. கல்லூரியின் கலை அரங்கின் மத்தியில் ஒரு மேடை அமைத்து அதில் இஸ்மாயில் சாகிப் உடல் வைக்கப்பட்டது. உடல், முஸ்லிம் லீக் கொடியால் போர்த்தப்பட்டு இருந்தது. காலையில் இருந்தே மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து, இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
முதல்_அமைச்சர் கருணாநிதி, காலை 8_25 மணிக்கு வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மற்றும் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், மாதவன், ப.உ.சண்முகம், சத்தியவாணிமுத்து அம்மையார், சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், ராசாராம், மன்னை நாராயணசாமி, ராமச்சந்திரன், ஓ.பி.ராமன், கண்ணப்பன் ஆகியோரும் மலர் மாலை வைத்தனர்.
பிற்பகலில் திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். இஸ்மாயில் சாகிப்பின் மகன் மியாகானுக்கு ஆறுதல் கூறினார்.
பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், சபாநாயகர் மதியழகன், மேல்_சபை தலைவர் சி.பி.சிற்றரசு, தமிழரசு கழக தலைவர் ம.பொ.சிவஞானம், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், நீதிபதி இஸ்மாயில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பொன்னப்ப நாடார், ராஜாராம் நாயுடு ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்னர் புதுக்கல்லூரியில் உள்ள மசூதிக்கு இஸ்மாயில் சாகிப் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தொழுகை நடைபெற்றது. பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் புறப்படுவதற்கு முன் முதல்_அமைச்சர் கருணாநிதியும், மற்ற அமைச்சர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
ஊர்வலத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம் முதலிய வெளி மாநிலங்களில் இருந்து வந்த முஸ்லிம் லீக் பிரமுகர்கள் நடந்து சென்றனர்.
தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆரும் நடந்து போனார். ஊர்வலத்தில் போனவர்கள் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் கேரள கல்வி மந்திரி முகமது கோயா, ஊராட்சி மந்திரி அவுக்காதல் குட்டிநகா, பொதுப்பணி மந்திரி திவாகரன், ரெவினிï மந்திரி பேபி ஜான், சபாநாயகர் மொகிதீன் குட்டி, புதுச்சேரி மந்திரி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரத்தில், அண்ணாவை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் "காயிதே மில்லத்" கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிக்கொண்டிருப்பது அப்துல் சமது (1962). ஊர்வலம் பீட்டர்ஸ் ரோடு, பெசன்ட் ரோடு வழியாக, திருவல்லிக்கேணி ஐரோட்டில் உள்ள வாலாஜா மசூதியை அடைந்தது. அங்கு இஸ்மாயில் சாகிப் உடல், முஸ்லிம் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் நடந்தபோது கூடி இருந்தவர்கள் "அல்லாஹ் _ அக்பர்" என்று குரல் எழுப்பினார்கள்.
இஸ்மாயில் சாகிப் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. அதில் கருணாநிதி பேசுகையில் கூறியதாவது:-
"தனது 50 ஆண்டு கால வாழ்வில் 8 கோடி முஸ்லிம்களுக்காக உழைத்து பொற்கால மாக்கித் தந்தார். தமிழர்களுக்கு மட்டும் அல்ல _ இந்தியர்களுக்கும் அவர் மறைவு மாபெரும் இழப்பு. இஸ்மாயில் சாகிப் மனிதருள் மாமணி. அடக்கம், அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடம். இஸ்மாயில் சமூகத்துக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நீண்ட நெடுங்கால தொடர்பு இருந்து வருகிறது.
எங்கள் அண்ணன் மறைவுக்கு பிறகு இஸ்மாயில் சாகிப் அண்ணனுக்கு அண்ணனாக திகழ்ந்தார். அவர் மறைந்து விட வில்லை. நெஞ்சத்தில் உறைந்து விட்டார். அவர் நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் இருக்கிறார்."
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
கூட்டத்தில் கேரள அமைச்சர்கள் முகமது கோயா, திவாகரன், பாண்டிச்சேரி அமைச்சர் ராமசாமி, சபாநாயகர் மதியழகன், தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆர்., கேரள முஸ்லிம் லீக் தலைவர் தங்கல், இந்திய முஸ்லிம் லீக் செயலாளர் இப்ராகிம் சுலைமான் சேட், அப்துல் சமது, பீர்முகமது, திருப்பூர் மொய்தீன் மற்றும் பலர் பேசினார்கள்.
இஸ்மாயில் சாகிப் மறைவுக்கு ஜனாதிபதி வி.வி.கிரி, தமிழக கவர்னர் கே.கே.ஷா, திராவிட கழக தலைவர் பெரியார், சுதந்திரா கட்சி தலைவர் ராஜாஜி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், கேரள முதல்_மந்திரி அச்சுதமேனன் உள்பட ஏராளமான தலைவர்கள் அனுதாப செய்தி வெளியிட்டார்கள்.
டெல்லி பாராளுமன்றத்திலும், தமிழ்நாடு சட்டசபையிலும் அனுதாப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லா உறுப்பினர் களும் ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label காயிதே மில்லத். Show all posts
Showing posts with label காயிதே மில்லத். Show all posts
Sunday, October 24, 2010
Tuesday, August 3, 2010
காயிதே மில்லத்தின் கல்விச் சிந்தனைகள் !
காயிதே மில்லத்தின் கல்விச் சிந்தனைகள் !
http://www.mudukulathur.com/educationdetails.asp?id=330
அரசு பள்ளிக்கூடங்களில் மத கல்வி போதிக்கப்பட வேண்டும் !
சிறுபான்மையினர் தாய்மொழிகளில் ஆரம்ப கல்வி தேவை !
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் கண்ணியத்திற் குரிய காயிதே மில்லத் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று தனது கல்லூரி படிப்பை தியாகம் செய்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்த்தே ! இந்திய முஸ்லிம்கள் கல்வித்துறையில் முன்னேற வேண்டும் என்ற அக்கறையுடன் அவர் அரும்பாடு பட்டார். சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும் எதிர்கட்சித் தலைவராகவும் அரசியல் நிர்ணய சபைக் குழு சபை உறுப்பினராகவும், பாராளுமன்ற லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினராகவும் அவர் பணியாற்றிய காலங்களில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக அவர் ஆக்கப்பூர்வமான பல யோசனைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளார்.
இந்திய முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட ‘அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக’ த்திற்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்ட போதெல்லாம் அதன் உரிமைக்காக அவர் துணிந்து குரல் கொடுத்துள்ளார். காயிதே மில்லத்தின் அயராத உழைப்பின் காரணமாகவே, கேரளா மாநிலத்திலும் தமிழகத்திலும் முஸ்லிம்கள் கல்வித் துறையில் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளனர். கேரளாவின் முஸ்லிம் லீக் தலைவர், சி.ஹெச். முகம்மது கோயா, அம்மாநில கல்வி அமைச்சராகவும் மாநில முதலமைச்சராகவும் பதவி வகிக்க முடிந்ததென்றால், அதற்குக் காரணம் காயிதே மில்லத் அவர்களின் கல்விச் சிந்தனையும் சேவையுமே ஆகும்.
சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக அவர் பதவி வகித்த போது 06.03.1947, 30.10.1947, 26.04.1948, 14.03.1949, 05.08.1950, 28.03.1951, ஆகிய தேதிகளில் அவர் உரையாற்றும்போது இந்திய முஸ்லிம்களின் கல்வி பிரச்சினைகள் குறித்து தெளிவாக பேசியதுடன் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
அரசியல் நிர்ணய சபையில் …
08.11.1948, 7.12.1948 ஆகிய தினங்களில், அரசியல் நிர்ணய சபையில் காயிதே மில்லத் அவர்கள் உரையாற்றும்போது கல்வி நிலையங்களில் மதக் கல்வி போதிக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய ஆன்மீகக் கல்வி வழங்குவதன் மூலமே எதிர் காலத்தில் சிறந்த குடிமக்களாக மாணவர்களை உருவாக்க முடியும் என்பதை வலியுறுத்தினார்.
ராஜ்ய சபாவில் 11.09.1956 அன்று உரையாற்றும்போது உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு உருது மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார். 03.09.1965, 06.09.1965 ஆகிய தேதிகளில் உரையாற்றும்போது அலிகர் முஸ்லிம் கலாச்சாலை பிரச்சினை குறித்து விரிவாக பேசி பதிவு செய்துள்ளார்.
சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் மட்டுமல்லாது பொது மேடைகளிலும் முஸ்லிம் சமுதாயம் கல்வித் துறையில் முன்னேற வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து அதற்காக அவர் பாடுபட்டதன் காரணமாகவே தமிழகத்தில் முஸ்லிம் மக்களால் பல கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 1919 –ல் இஸ்லாமியா கல்லூரி, வாணியம்பாடி என்ற ஒரே ஒரு கல்லூரி மட்டுமே முஸ்லிம் களால் நடத்தப்பட்டு வந்தது. சென்னையில் சுதந்திரத்திற்கு முன் முஹம்மதன் கலைக்கல்லூரி என்ற பெயரில் இயங்கி வந்த கல்லூரியை அரசு கலைக்கல்லூரி என பெயர் மாற்றம் செய்ததுடன் அக்கல்லூரியில் முஸ்லிம்களுக்கு கிடைத்து வந்த சலுகைகளையும் அரசாங்கம் தடை செய்ததனால் அன்றைய கல்வியமைச்சர் அவிநாசி லிங்கத்தின் ஆலோசனையின் பேரில் முஸ்லிம்களுக்கென்று தனியாக கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக ஊர் ஊராகச் சென்று முஸ்லிம் செல்வந்தர்களை அணுகி உழைத்ததன் மூலமாகவே, இன்று ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சில –
முஸ்லிம் வள்ளல்கள் உருவாக்கிய கல்வி நிறுவனங்கள்
தமிழகத்தில் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டு மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளித்துவரும் உயர்நிலைக் கல்விக்கூடங்கள்.
புதுக் கல்லூரி, சென்னை
ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை
சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி, மேல்விஷாரம்
ஜாஹிர் ஹூசைன் கல்லூரி, இளையான்குடி
ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம்
காதிர் முஹைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்
ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மது பெண்கள் கல்லூரி, சென்னை
காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம், சென்னை
முஸ்லிம் கலைக் கல்லூரி, திருவிதாங்கோடு
மழ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூர்
எம்.என்.எஸ். வக்ஃப் கல்லூரி, மதுரை
தாசிம் பீவி பெண்கள் கலைக்கல்லூரி, கீழக்கரை
வாவு வஜிகா வனிதையர் கல்லூரி, காயல்பட்டணம்
அன்னை ஹாஜரா மகளிர் கல்லூரி, மேலப்பாளையம்
எம்.ஐ.டி. மகளிர் கல்லூரி, திருச்சி
ராஜகிரி தாவூத் பாட்சா கல்லூரி, தஞ்சாவூர்
ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி, சென்னை
கிரஸண்ட் பொறியியல் கல்லூரி, வண்டலூர்
(தமிழக பொறியியல் கல்லூரிகளில் முதல் இடத்தை பல ஆண்டுகளாக இக்கல்லூரி பெற்று வந்துள்ளது).
சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை
டானிஷ் அஹமது பொறியியல் கல்லூரி, சென்னை உட்பட
ஏராளமான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மகளிர் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பல மருந்தியல் கல்லூரிகள் எனப் பலதரப்பட்ட கல்லூரிகளையும், மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்களையும் முஸ்லிம்கள் தமிழகத்தில் நடத்தி வருகின்றார்கள். இக்கல்லூரிகளில் அதிகம் பயின்று பயன்பெற்றவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்திந்திய அளவில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமும் பன்னெடுங்காலமாக கல்விச் சேவையை ஆற்றி வருகின்றன.
கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களில் தமிழகத்தை விட பன்மடங்கு அதிகமான அளவில் முஸ்லிம்கள் கல்வி நிலையங்கள் நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் மருத்துவ கல்லூரியைத் துவக்கி நடத்துவதற்கான முயற்சிகளும் ஆரம்பமாகியுள்ளன. கடந்த 2010, மே 25 ஆம் தேதி முஸ்லிம் லீக் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற முஸ்லிம் கல்வியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் இதற்கான அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கெல்லாம் காரணம் காயிதே மில்லத் என்பதை எவரும் மறுக்க முடியாது !
நன்றி :
பள்ளபட்டியில் ஜுன் 9 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு 2010 ல் வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் இருந்து….
தொகுத்தவர் : மணிச்சுடர் இ.ரா.ச.மு. ஹமீது ( 99410 86586 )
sadayan sabu
dateWed, Aug 4, 2010 at 11:03 AM
அஸ்ஸலாமு அலைக்கும்
சிறுபான்மை கல்வி நிலையங்களாக கடந்த 1998 ல் இருந்து நம் சமுதாயத்திற்கும். மாற்று மத சமுதாயத்தினருக்கும் கல்விச்சேவை செய்து வரும் இரு கல்லூரிகளை மணிச்சுடர் இ.ரா.ச.மு. ஹமீது மறந்து விட்டார் போல் தெரிகிறது.
சுல்தானா அப்துலலாஹ் ராவுத்தர் மகளிர் கல்லூரி - கூத்தாநலலூர்
ராபியம்மாள் அஹமது மைதீன் மகளிர் கல்லூரி - திருவாரூர்
இரு கல்வி நிறுவனங்களும் கூத்தாநல்லூர்காரர்களால் நடத்தப் படுகிறது
http://www.mudukulathur.com/educationdetails.asp?id=330
அரசு பள்ளிக்கூடங்களில் மத கல்வி போதிக்கப்பட வேண்டும் !
சிறுபான்மையினர் தாய்மொழிகளில் ஆரம்ப கல்வி தேவை !
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் கண்ணியத்திற் குரிய காயிதே மில்லத் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று தனது கல்லூரி படிப்பை தியாகம் செய்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்த்தே ! இந்திய முஸ்லிம்கள் கல்வித்துறையில் முன்னேற வேண்டும் என்ற அக்கறையுடன் அவர் அரும்பாடு பட்டார். சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும் எதிர்கட்சித் தலைவராகவும் அரசியல் நிர்ணய சபைக் குழு சபை உறுப்பினராகவும், பாராளுமன்ற லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினராகவும் அவர் பணியாற்றிய காலங்களில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக அவர் ஆக்கப்பூர்வமான பல யோசனைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளார்.
இந்திய முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட ‘அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக’ த்திற்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்ட போதெல்லாம் அதன் உரிமைக்காக அவர் துணிந்து குரல் கொடுத்துள்ளார். காயிதே மில்லத்தின் அயராத உழைப்பின் காரணமாகவே, கேரளா மாநிலத்திலும் தமிழகத்திலும் முஸ்லிம்கள் கல்வித் துறையில் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளனர். கேரளாவின் முஸ்லிம் லீக் தலைவர், சி.ஹெச். முகம்மது கோயா, அம்மாநில கல்வி அமைச்சராகவும் மாநில முதலமைச்சராகவும் பதவி வகிக்க முடிந்ததென்றால், அதற்குக் காரணம் காயிதே மில்லத் அவர்களின் கல்விச் சிந்தனையும் சேவையுமே ஆகும்.
சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக அவர் பதவி வகித்த போது 06.03.1947, 30.10.1947, 26.04.1948, 14.03.1949, 05.08.1950, 28.03.1951, ஆகிய தேதிகளில் அவர் உரையாற்றும்போது இந்திய முஸ்லிம்களின் கல்வி பிரச்சினைகள் குறித்து தெளிவாக பேசியதுடன் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
அரசியல் நிர்ணய சபையில் …
08.11.1948, 7.12.1948 ஆகிய தினங்களில், அரசியல் நிர்ணய சபையில் காயிதே மில்லத் அவர்கள் உரையாற்றும்போது கல்வி நிலையங்களில் மதக் கல்வி போதிக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய ஆன்மீகக் கல்வி வழங்குவதன் மூலமே எதிர் காலத்தில் சிறந்த குடிமக்களாக மாணவர்களை உருவாக்க முடியும் என்பதை வலியுறுத்தினார்.
ராஜ்ய சபாவில் 11.09.1956 அன்று உரையாற்றும்போது உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு உருது மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார். 03.09.1965, 06.09.1965 ஆகிய தேதிகளில் உரையாற்றும்போது அலிகர் முஸ்லிம் கலாச்சாலை பிரச்சினை குறித்து விரிவாக பேசி பதிவு செய்துள்ளார்.
சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் மட்டுமல்லாது பொது மேடைகளிலும் முஸ்லிம் சமுதாயம் கல்வித் துறையில் முன்னேற வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து அதற்காக அவர் பாடுபட்டதன் காரணமாகவே தமிழகத்தில் முஸ்லிம் மக்களால் பல கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 1919 –ல் இஸ்லாமியா கல்லூரி, வாணியம்பாடி என்ற ஒரே ஒரு கல்லூரி மட்டுமே முஸ்லிம் களால் நடத்தப்பட்டு வந்தது. சென்னையில் சுதந்திரத்திற்கு முன் முஹம்மதன் கலைக்கல்லூரி என்ற பெயரில் இயங்கி வந்த கல்லூரியை அரசு கலைக்கல்லூரி என பெயர் மாற்றம் செய்ததுடன் அக்கல்லூரியில் முஸ்லிம்களுக்கு கிடைத்து வந்த சலுகைகளையும் அரசாங்கம் தடை செய்ததனால் அன்றைய கல்வியமைச்சர் அவிநாசி லிங்கத்தின் ஆலோசனையின் பேரில் முஸ்லிம்களுக்கென்று தனியாக கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக ஊர் ஊராகச் சென்று முஸ்லிம் செல்வந்தர்களை அணுகி உழைத்ததன் மூலமாகவே, இன்று ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சில –
முஸ்லிம் வள்ளல்கள் உருவாக்கிய கல்வி நிறுவனங்கள்
தமிழகத்தில் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டு மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளித்துவரும் உயர்நிலைக் கல்விக்கூடங்கள்.
புதுக் கல்லூரி, சென்னை
ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை
சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி, மேல்விஷாரம்
ஜாஹிர் ஹூசைன் கல்லூரி, இளையான்குடி
ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம்
காதிர் முஹைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்
ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மது பெண்கள் கல்லூரி, சென்னை
காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம், சென்னை
முஸ்லிம் கலைக் கல்லூரி, திருவிதாங்கோடு
மழ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூர்
எம்.என்.எஸ். வக்ஃப் கல்லூரி, மதுரை
தாசிம் பீவி பெண்கள் கலைக்கல்லூரி, கீழக்கரை
வாவு வஜிகா வனிதையர் கல்லூரி, காயல்பட்டணம்
அன்னை ஹாஜரா மகளிர் கல்லூரி, மேலப்பாளையம்
எம்.ஐ.டி. மகளிர் கல்லூரி, திருச்சி
ராஜகிரி தாவூத் பாட்சா கல்லூரி, தஞ்சாவூர்
ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி, சென்னை
கிரஸண்ட் பொறியியல் கல்லூரி, வண்டலூர்
(தமிழக பொறியியல் கல்லூரிகளில் முதல் இடத்தை பல ஆண்டுகளாக இக்கல்லூரி பெற்று வந்துள்ளது).
சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை
டானிஷ் அஹமது பொறியியல் கல்லூரி, சென்னை உட்பட
ஏராளமான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மகளிர் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பல மருந்தியல் கல்லூரிகள் எனப் பலதரப்பட்ட கல்லூரிகளையும், மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்களையும் முஸ்லிம்கள் தமிழகத்தில் நடத்தி வருகின்றார்கள். இக்கல்லூரிகளில் அதிகம் பயின்று பயன்பெற்றவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்திந்திய அளவில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமும் பன்னெடுங்காலமாக கல்விச் சேவையை ஆற்றி வருகின்றன.
கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களில் தமிழகத்தை விட பன்மடங்கு அதிகமான அளவில் முஸ்லிம்கள் கல்வி நிலையங்கள் நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் மருத்துவ கல்லூரியைத் துவக்கி நடத்துவதற்கான முயற்சிகளும் ஆரம்பமாகியுள்ளன. கடந்த 2010, மே 25 ஆம் தேதி முஸ்லிம் லீக் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற முஸ்லிம் கல்வியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் இதற்கான அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கெல்லாம் காரணம் காயிதே மில்லத் என்பதை எவரும் மறுக்க முடியாது !
நன்றி :
பள்ளபட்டியில் ஜுன் 9 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு 2010 ல் வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் இருந்து….
தொகுத்தவர் : மணிச்சுடர் இ.ரா.ச.மு. ஹமீது ( 99410 86586 )
sadayan sabu
dateWed, Aug 4, 2010 at 11:03 AM
அஸ்ஸலாமு அலைக்கும்
சிறுபான்மை கல்வி நிலையங்களாக கடந்த 1998 ல் இருந்து நம் சமுதாயத்திற்கும். மாற்று மத சமுதாயத்தினருக்கும் கல்விச்சேவை செய்து வரும் இரு கல்லூரிகளை மணிச்சுடர் இ.ரா.ச.மு. ஹமீது மறந்து விட்டார் போல் தெரிகிறது.
சுல்தானா அப்துலலாஹ் ராவுத்தர் மகளிர் கல்லூரி - கூத்தாநலலூர்
ராபியம்மாள் அஹமது மைதீன் மகளிர் கல்லூரி - திருவாரூர்
இரு கல்வி நிறுவனங்களும் கூத்தாநல்லூர்காரர்களால் நடத்தப் படுகிறது
Subscribe to:
Posts (Atom)