Showing posts with label விடுதலை. Show all posts
Showing posts with label விடுதலை. Show all posts

Sunday, October 24, 2010

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் லீக் !

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் லீக் !

இந்திய திருநாட்டை 800 ஆண்டு காலம் ஆண்டது இஸ்லாமிய சமுதாயம். அதே நேரத்தில் அடிமை இந்தியாவை சுதந்திர இந்தி யாவாக மாற்றியது இஸ்லாமியர்கள். நம்மவர்கள் இந்நாட்டை ஆண்டார்கள் என்பதற்கு சான்றாக ‘இந்நாளும் எந்நாளும் தாஜ்மஹால் சாட்சி சொல்லும் அதுவன்றி குதுப்மினார் சின்னமுண்டு’ இந்த சுதந்திரத்தை அடைவதற்காக நமது தேசத் தலைவர்கள், முஸ்லிம் லீக் தலைவர்கள், உலமாக்கள், பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மற்றும் தலைவர்கள் இன்னும் ஏனைய சமுதாயத்தினர் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த நாட்டிற்காக சுதந்திர வேட்கையால் பல முஸ்லிம் லீக் தலைவர்கள், உலமாக்கள், பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், முஸ்லிம் தலைவர்கள் தங்களுடைய உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் தியாகம் செய்த வரலாற்று சம்பவங்களை இந்த நாடு மறந்து விட்டதா ?

காங்கிரஸ் புகழாரம்

இந்நாட்டில் எந்த இயக்கம் தோன்றவில்லை என்றால் சுதந்திரம் இல்லையே என்று வரலாற்றில் வர்ணிக்கப்படுகிறதோ அந்த காங்கிரஸ் அதன் தலைவர் இவ்வாறு கூறுகிறார். இந்திய முஸ்லிம் லீக் தலைமையில் 1923- ஆம் ஆண்டு ஜனவரி 23 – ம்தேதி சென்னை சவுக்கார்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் சுயசரிதை வெளியிடுதல் மற்றும் மனிதருள் மாணிக்கம் மெளலானா முஹம்மது அலியின் சுயசரிதை வெளியீடு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறுகிறார். இவ்வாறு எங்களுக்கு கிலாபத் இயக்கத்தினை தோற்றுவித்ததின் தாக்கம்தான் இந்நாட்டில் எங்களுக்கு சுதந்திர கிளர்ச்சியையும், உணர்ச்சியையும், புரட்சியையும், சுதந்திர தாகத்தையும் எங்களுக்கு ஏற்படுத்தியது என்று தனது உரையில் கூறினார். இங்கு கவனிக்கப்பட வேண்டியது எது என்றால் வெள்ளையர் களால் சூளுரைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப்போர் ‘சிப்பாய் கலகம்’ 1857 –ம் ஆண்டு ஏற்படுத்திய நிகழ்ச்சியின் எழுச்சியைக் குறிப்பிடுவதுண்டு. ஆனால், அது வடநாடு சம்பந்தப்பட்ட ஒரு எழுச்சியாகவே முடிந்தது. ஆனால் இமயம் முதல் குமரி வரை உள்ள இந்தியப் பெருமக்களின் இதயங்களினால் சுதந்திர உணர்ச்சியை தேசிய உணர்ச்சியாக கனன்றெழுந்தது – ‘கிலாபத்’ இயக்கத்தின்போது தான். ஆக அகில இந்திய அளவிலும், அரசியல் எழுச்சியையும், உணர்ச்சியையும் ஊட்டியது முஸ்லிம் லீக் தலைவர்கள் தோற்றுவித்த ‘கிலாபத் இயக்கம்’

இந்திய தேசிய ராணுவம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ‘இந்திய தேசிய ராணுவத்தை’ உருவாக்கி நம் மண், பொன் மீது வெறி கொண்ட வெள்ளை அரசை தூங்க விடாமல் துளைத்தெடுக்கவும், துரத்தி அடிக்கவும் செய்தார். அந்த நேரத்தில் நேதாஜியின் படையில் பல்வேறு சமுதாயத்தினர் இருந்தாலும் அதில் பல முஸ்லிம் ஜெனரல்கள், கர்னல், லெப்டினென்ட் கர்னல்கள், முஸ்லிம் சிப்பாய்கள் பல பேர் இருந்தனர். இதில் நேதாஜியுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் முஸ்லிம் லீகை சேர்ந்த பள்ளப்பட்டி மணிமொழி மெளலானா எம்.ஜி. கலீல் ரஹ்மான் பாகவி அவர்கள். நேதாஜி அவர்களுடன் இந்திய நாட்டு விடுதலைக்காக 1941 முதல்1945 வரை வெளிநாட்டிலே பெரும்பாலும் குறிப்பாக இந்தோ – சீனாவில் இருந்து செயலாற்றிய பெருமைக்குரியவர். சைக்கோன் ரேடியோவில் மூன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நேதாஜி அவ்வப்போது பேசி வந்துள்ளார். அந்த பேச்சுக்களை தமிழ் மூலம் மணிமொழி மெளலானா எம்.ஜி. கலீல் ரஹ்மான் பாகவி பிரச்சாரம் செய்து வந்துள்ளார். இது இந்திய தமிழ் வாலிபர்களுக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் எழுச்சியையும் தந்தது.

வட்ட மேஜை மாநாட்டில் முஸ்லிம் லீக் பங்களிப்பு

முதல் வட்ட மேஜை மாநாடு (1930-32) லண்டனில் நடந்தது. இந்த மாநாட்டில் கிலாபத் இயக்கத்தின் தலைவரும், முஸ்லிம் லீக் தலைவரான மெளலானா முஹம்மது அலி பங்கேற்றார்.

உணர்ச்சியுடன் பேசினால் உயிருக்கே ஆபத்து நேரிடும் என்று மருத்துவர்கள் தடுத்துங்கூட மெளலானா அவர்கள் ‘என் உள்ளத்திலுள்ளதை வெளியிடாமல் இருப்பதை விட வெளியிட்டு இறந்து விடுகிறேன். இல்லையேல் சுதந்திரம் பெற்ற இந்நாட்டிலே ஒரு புதைகுழியைக் கொடுங்கள்’ என விடுதலை தாகத்தை வெளியிட்டார். எனவே, மெளலானாவின் தேசப்பற்றையும், விடுதலை வேட்கையும், மெய்சிலிர்க்க வைக்கிறது.

நம்நாடு விடுதலையான அந்த நேரத்தில் அந்த நடுநிசியில், அதாவது நிசப்தம் நிலவிய வேளையில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15 ஆம் தேதி அந்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் மத்திய மண்டபத்தில் அரசியல் நிர்ணய சபையின் அத்தனை உறுப்பினர்களுடன் கூடி இருந்த நிசப்தம் நிலவிய வேளையில் அந்த நேரத்தில் இந்தியா விடுதலை பிறந்தது என்பதற்காக அறிகுறியாக பன்னிரெண்டு மணி அடித்து ஓய்ந்த அந்த வேளையில் கணீரென ஒலித்த சுதந்திர கீதம் நாம் தற்போது பாடக்கூடிய தேசிய கீதம் ‘ஜனகனமண’ அல்ல: தேசிய கீதமாக ஒலித்தது முஸ்லிம் லீக் தலைமையேற்று வழிநடத்திய தலைவரான அமரகவி அல்லாமா இக்பாலின்

’ஸாரே ஜஹான்ஸே அச்சா
ஹிந்துஸ்தான் ஹமாரா ‘

எனவே, இந்நாட்டில் முதல் தேசிய கீதமாக இந்த பாடல்தான் பாடப்பட்டது. ஆக இந்த கீதத்தை தான் தேசிய கீதமாக இந்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், இந்த கீதத்தைத்தான் இன்று நம் முப்படையின் வீரர்கள் அணி வகுக்கும் போது எடுப்பான குரலில் இசையுடன் பாடுகிறார்கள்.

சங்கைக்குரிய உலமா பெருமக்களே !
முஸ்லிம் சமுதாய சான்றோர்களே !
தங்க நிகர் சமுதாயத்தின் சிங்கநிகர்
இளைஞர் பட்டாளமே !
மாணவச் செல்வங்களே !

இந்திய விடுதலையின்
முஸ்லிம் லீகின் தியாக வரலாறு
உலகெங்கும் ஒலிக்கட்டும் !
-எம் அப்துல் பாஸித், தேவதானப்பட்டி

நன்றி : பிறைமேடை மாதமிருமுறை இதழ்

Tuesday, June 1, 2010

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளோரை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் - எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., வேண்டுகோள்

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளோரை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் - எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., வேண்டுகோள்

கோவை உக்கடத்தில் உள்ள லாரிபேட்டை மைதானத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம் மாவட் டத் தலைவர் எஸ்.எம். காசிம் தலைமை யில் மாநிலத் துணைத் தலைவர் எல்.எம். அப்துல் ஜலீல் கோவை மண்டல இளை ஞர் அணி அமைப் பாளர் பி. முஹம்மது பஷீர், மாநகராட்சி உறுப்பினர் மெஹருன்னிசா சாகுல் ஹமீது ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது. மாநகரத் தலைவர் டி.ஏ. அப்துல் நாசர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை அப்துல் மஜீத், கோவை மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம். உசைன், செயலாளர் ஏ.என். அசன்பாபு, திருப்ப+ர் மாவட்டத் தலைவர் பி. ஹம்சா, செயலாளர் மங்களம் அக்பர் அலி ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியில் சிறப்புரையாற்றிய காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங் கிணைப்பாளர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., குறிப்பிட்டதாவது-

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

கோவையில் ஜூன் மாதம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மிகச் சிறப்பான முறையில் நடைபெற இருக்கிறது. இம் மாநாட்டை முஸ்லிம் சமுதாயம் வாழ்த்தி வர வேற்கிறது. இம் மாநாட்டிற்கான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கி வரும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இம் மாநாட்டில் சமுதாயத்தினர் பெருமளவில் பங்குபெற வேண்டுகோள் விடுத்து வருகிறது.
சரித்திரத்தில் மிகச் சிறந்த உலக மாநாடுகளில் ஒன்றாக நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிகழ்த்தப்பட உள்ளன. அந்த சிறப்புக்களில் ஒன்றாக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்து வரலாற்று அத்தியாயத்தை உருவாக்க வேண்டும் என தமிழக முதல்வர் முத்தமிழ் கலைஞரை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

யாரும் சிறை செல்வதற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் எந்த ஒரு கால கட்டத்திலும் காரணமாக இருந்ததில்லை. அதை ஊக்குவித்ததும் இல்லை. அப்படிப்பட்ட செயலை தூண்டிவிட்டதும் இல்லை. இன்று சிறையில் இருப்போர் யாருடைய தூண்டுதலால் அல்லது உணர்ச்சிவசத்துக்கு ஆளாகி சிறையில் இருக்கிறார்கள் என்பதை பார்க்காமல் அவர்களுடைய விடுதலைக்கு இன்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் குரல் கொடுக்கிறது அவசரப்பட்டு தூர நோக்கு பார்வையில்லாமல் எதிர்கால விளைவுகளை பற்றி சிந்திக்காமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று காரியங்களை செய்யக் கூடியவர்களின் அழைப்புகளில் தடுமாறி விழுந்து இன்று நிர்க்கதியாகி சிறைக் கொட்டடிகளில் தங்கள் காலக் கிரகத்தை அனுபவிப்பதோடு அவர்களுடைய குடும்பங்களையெல்லாம் சொல்லொணா துயரத்துக்கு ஆளாக்கிவிட்டார்கள்.
இந்த துன்பமும், துயரமும் தொடர் கதையாகிக் கொண்டே போகக்கூடாது என்பதற்காக சிறைவாசிகளுடைய விடுதலைக்கு தாய்ச்சபை குரல் கொடுத்தது. வரலாறு படைத்த இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாட்டில் கலைஞர் முன்னிலையில் நம் தலைவர் பேராசிரியர் முன்வைத்த கோரிக்கையின் காரணத்தால் ஆயிரத்து நானூறுக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் விடுதலை பெற்றனர். தற்போது 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆயுள் சிறைவாசிகளாக உள்ளனர். கருணையின் அடிப்படையில் அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக் கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
குணங்குடி ஹனீபா விடுதலை

13 ஆண்டு காலம் சிறையில் இருந்த குணங்குடி ஆர். ஹனீபா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட வேண்டும் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கோரிக்கை வைத்தது. தமிழக முதல்வர் கலைஞரையும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினையும், பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையிலான இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தூதுக்குழு சந்தித்தது. அவர்களும் சில சமிக்கைகளை தெரிவித்தார்கள். அந்த தகவல்கள் எல்லாம் குணங்குடி ஹனீபாவின் குடும்பத்தாருக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமையால் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்பு சில நாட்களில் வெளியாகும் குணங்குடி ஹனீபா உள்ளிட்டோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை எங்களைப் போல் தெரிந்து கொண்டவர்கள், தீர்ப்பு வெளியாகும் நாளுக்கு சில நாட்களுக்கு முன்னதாக நீதிமன்ற முற்றுகை என ஒரு போராட்டத்தை அறிவித்து விளம்பரத்தை தேடிக்கொண்டார்கள். விளம்பரத்தின் வெளிச்சமே இல்லாமல் அந்த விளம்பரத்தின் மூலம் சொந்த ஆதாயத்தை எதிர்பார்க்காமல் தாய்ச்சபை செயல் படுகின்ற போது விளம்பரத்தை மட்டுமே முன்னி லைப்படுத்தி வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் போராட்டத்தை நடத்துகிறார்கள் என்று சொன்னால் அதை என்ன சொல்வது?
நீதிமன்ற தீர்ப்பு கிடைப்பதற்கு நீதிமன்றம் முன்பு போராட்டம் நடத்துவது அர்த்தமற்ற ஒன்று என்று சாதாரண சாமானியர்கள் அறிவார்கள். அந்த ஆர்ப்பாட் டத்தை நடத்திய தலைவர்களுக்கும் இது தெரியும். ஆனால், மற்றவர்களை யெல்லாம் செயல்படா தவர்கள் என்றும், தாங்கள் மட்டும்தான் போராடக் கூடியவர்கள் என்றும் விளம்பரம் செய்வதற்காக இந்த விடுதலையை பயன் படுத்திக் கொண்டார்கள். எண்ணற்ற இளைஞர்கள் அநியாயமாக சிறை செல்வதற்கு யார் காரணம்? என்பதற்கும், அவர்கள் சிறை புகுந்ததால் யாருக்கு ஆதாயம் என்பதும் இந்த சமுதாயத்துக்கு நன்கு தெரிந்ததே.

சிறைவாசிகள் குடும்பம் சந்திப்பு

இன்று கோவை வந்த நான் சிறைவாசிகளுடைய குடும்பத்தாரை சந்தித்தேன். அவர்கள் கண்கலங்கிய காட்சி எங்கள் சகோதரன் வெளியின் வந்தால்தான் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என சிறை வாசிகளின் சகோதரிகள் செய்த உறுதி அவர்கள் படுகின்ற துயரங்கள் அனைத்தையும் நேரில் தெரிந்து கொண்டேன். அவர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு வந்தேன். ஆறுதல் கூறுவதுடன் எங்கள் பணி நின்று விடவில்லை. தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்து விட்ட வர்களின் நலனுக் கான இன்று நாங்கள் பாடுபடுகிறோம்.

ஆயுள் சிறைவாசியாக இருக்கும் இளைஞர் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து மிகுந்த சிரமத் தில் சிறையில் இருந்தார். அபுதாஹிர் என்று அந்த இளைஞருக்கு 3 பரோல் விடுப்புகளுக்கு நாங்கள் முயற்சி செய்தோம். பல சிறைவாசிகளுடைய பரோல் விடுப்புகளுக்கும் நாங்கள் முயற்சி செய்துள் ளோம். இவைகளையெல் லாம் சொல்லி விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சாதி அரசி யல் நடத்தக் கூடிய இயக் கம் அல்ல. இஸ்லாம் வழி நடத்துகின்ற மனித நேயம், சமூக நல்லிணக்கம், நம்மு டைய கலாச்சார தனித் தன்மை பாதுகாத்தல் இவைகளை லட்சியமாக கொண்டுதான் செயல்படு கிறது. மத துவேஷங்களை உருவாக்கக்கூடிய எதையும் நாங்கள் செய்வதில்லை. பேசுவதும் இல்லை. மத துவேஷத்தை வளர்க்கின்ற வகையில் முஸ்லிம்கள் கடையில் சாமான்கள் வாங்காதீர்கள் என்று ஒரு காலகட்டத்தில் சொல்லப் பட்டபோது கூட, அதற்கான பதிலை அவர்கள் பாணியில் சொல் லாமல் சகோதரத்துவத்தை வலியுறுத்தி நாம் பிரச்சாரம் செய்த காரணத்தால் அதனால் ஏற்பட்ட பலன் என்ன என்பது உங்களுக்குத் தெரியும்.

எனவே, உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் மனிதநேயத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கின்ற பணியில் நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை பலப்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு எம். அப்துர்ரஹ்மான் எம்.பி. உரையாற்றினார்.

ஆரம்பமாக குனிய முத்தூர் இமாம் அப்துல் ரஹ்மான் ஜமாலி இறை மறை ஓதினார். மாவட்ட துணைச் செயலாளர் ஏ.எம். இப்ராஹீம் நன்றி கூறினார்.

Saturday, March 13, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைமுன்னிட்டு அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைமுன்னிட்டு அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 62வது நிறுவன தின மாநாட்டில்

பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் கோரிக்கை


மேலப்பாளையம், மார்ச் 13:

உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாடு நடைபெற இருப்பதையொட்டி பல் லாண்டு காலமாக விசாரணை கைதிகளாக கோவை உள் ளிட்ட பல சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி களை கருணை அடிப்படை யில் விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு மாநி லப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் வேண்டுகோள் விடுத்துள் ளார்.

இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் 62வது நிறுவன தினம் கடந்த 10ம் தேதி திருநெல்வேலி மேலப்பா ளையத்தில் சமுதாய மறு மலர்ச்சி மாநாடாக நடை பெற்றது. இதில் தமிழ்நாடு மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் பேசும்போது குறிப்பிடடதாவது:

கண்ணியத்துக்குரிய காயிதெ மில்லத் அவர் களால் 1948ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி சென்னை ராஜாஜி ஹாலில் துவக்கப் பட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இங்கு தனது 62வது நிறுவன தினத்தை சிறப்பான மாநாடாக கொண்டாடிக்கொண்டி ருக்கிறது.

காயிதெ மில்லத் அவர் கள் அமானிதமாக ஒப் படைத்துச் சென்ற இந்த இயக்கத்தை கட்டிக்காப் பாற்ற வேண்டியது சமு தாய மக்கள் அனைவரின் கடமையாகும்.

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத், சிறப்புக் குரிய ஜானிபாய், சிராஜுல் மில்லத் அப்துல் சமது ஆகி யோரின் சிறப்பான தலை மையின் கீழ் பல சாதனை களை நிகழ்த்திய இந்த இயக்கம் முனீருல்மில்லத் பேராசிரியர் அவர்கள் தலைமையில் சீரோடும் சிறப்போடும் செயல்பட்டு சமுதாயத்துக்கு ஆக்கப்ப+ர் வமாக பணியாற்றி வருகி றது.

இந்த நல்ல நாளில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்காக, சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக தங் கள் வாழ்வை அப்பணித் தவர்களை நினைவு கூற கடமை பட்டுள்ளோம். எந்த எதிர்பார்ப்பும் இன்றி தங்கள் வாழ்க்கையை தியா கம் செய்த தூய்மையான ஊழியர்கள். அனைவர் களுக்காகவும் துஆ செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

இன்று சமுதாயத்தில் எத்தனையோ இயக்கங்கள் அரசியல் ரீதியாக செயல் பட்டாலும் இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் போன்று வரலாற்று பாரம்பரியமோ-சரித்திர சாதனைகளோ அவர்களிடம் இல்லை.

நமது இயக்கத்தின் ஆலிம்கள் அணி அமைப் பாளர் ஹாமித் பக்ரி முன்பு பல் வேறு அமைப்புகளில் செயல்பட்டவர். அவர் எந்த அமைப்புகளுக்காக கடுமையாக உழைத்தாரோ அந்த அமைப்புகளாளே அவருக்கு பிரச்சினை வந் தது. அவரை கண்டு கொள்ளவில்லை.

ஹாமித் பக்ரீயை பயங் கரவாதியாக சித்தரித்துக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டபோது முஸ்லிம் லீக்தான் அவருக் காக குரல் கொடுத்தது. சேலத்தில் நடந்த இ.ய+. முஸ்லிம் லீக் மாநாட்டில் பனாத்வாலா சாஹிபு குரல் கொடுத்தார். தலைவர் பேராசிரியர் காயல்பட்டி னத்திற்கே வந்து தீர விசா ரித்து ஹாமித் பக்ரி விடு தலைக்கு முயற்சி மேற் கொண்டார்.

இப்படி பாதிக்கப்பட்ட வர்கள்-அநியாயமாக தண்டிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர் களுக்காக முதல் குரல் கொடுக்கக் கூடிய இயக் கம் இந்திய ய+னியன் முஸ் லிம் லீக்தான்.

தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் பல்லாண்டு காலமாக விசாரணைக் கைதிகளாக அடைக்கப் பட்டிருக்கும் நூற்றுக் கணக்கான அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகி றோம்.

சிறையில் உள்ள பலர் பல நோய்களாலும் பாதிக் கப்பட்டு உள்ளனர். ஒரு வருக்கு இரண்டு கிட்னி களும் பாதிக்கப்பட்டுள் ளது. மருத்துவ சிகிச்சை பெற வேண்டி உள்ளது. இப்படி பலவித பாதிப்பு கள் உள்ளன.

உலகத் தமிழ்ச்செம் மொழி மாநாடு நடை பெறும் இந்த சூழலை ஒட்டியாவது கோவை உள்ளிட்ட பல சிறைகளில் உள்ள அப்பாவிகள் விடு தலை செய்ய வேண்டும் என மத்திய மாநில அர சுகளை கேட்டுக்கொள்கி றோம்.

முஸ்லிம் லீகின் 62வது நிறுவன தினம் நடைபெற் றுக் கொண்டிருக்கும் இந் நாளில் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் பிறந்து வளர்ந்த இந்த மண்ணில் நாம் அனைவரும் ஒரு உறுதியினை எடுத்துக் கொள்வோம்.

சமுதாய மக்கள் அனை வரையும், தாய்ச்சபையான இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கவும், முஸ்லிம் லீகிற்கு 10லட்சம் உறுப்பினர் சேர்க்கும் திட் டத்தை விரைந்து முடித்து வெற்றி காணவும் ஒவ் வொரு மாவட்ட நிர்வாகி களும் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள் வோமாக.

இவ்வாறு பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் பேசினார்.