Showing posts with label எஸ்.எம்.ஷேக் நூர்தீன். Show all posts
Showing posts with label எஸ்.எம்.ஷேக் நூர்தீன். Show all posts

Thursday, June 16, 2011

சமுதாய புரவலர் எஸ்.எம்.ஷேக் நூர்தீன் காகா மறைவு

சமுதாய புரவலர் எஸ்.எம்.ஷேக் நூர்தீன் காகா அவர்களின் மறைவுக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் எம்.லியாகத் அலி அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:


இன்று காலை சென்னையில் மரணமடைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கௌரவ ஆலோசகரும் ஏ.எம்.எஸ்.கல்லூரியின் தாளாளர் சமுதயபுரவலர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஷேக் நூர்தீன் காகா அவர்களின் மறைவு செய்தி அறிந்து அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் எம்.லியாகத் அலி,பொதுச் செயலாளர் ஏ.முஹமத் தஹா ஆகியோர் கூட்டக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்


அல்ஹாஜ் எஸ்.எம்.ஷேக் நூர்தீன் காகா அவர்களின் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம் அனைத்துத் தரப்பு மக்களின் இதயங்களிலும் இடம் பிடித்திருக்கும் காகா அவர்கள் சமுதாய நலனில் மிகுந்த அக்கறையுடையவராக திகழ்ந்தார் ,தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீதும் அதன் தலைவர்கள் மீதும் தனிப்பெரும் பாசம் கொண்டிருந்த காகா அவர்கள் மணிச்சுடர் நாளிதழ் இயக்குநராக பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .ஷேக் நூர்தீன் காகா அவர்களின் மறைவை ஈடு செய்ய முடியாமல் தவிக்கும் அவர்தம் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கும் மற்றும் நிறுவனத்தினருக்கும் அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவன் மறுமையில் சுவனத்தின் உயரிய இடமான ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. .