Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Tuesday, June 22, 2010

முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து செயல்படும் கலைஞர் அரசு நல்லது செய்யும்

முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து செயல்படும் கலைஞர் அரசு நல்லது செய்யும்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக கடந்த 2 தினங்களுக்கு முன் கோவைக்கு நான் சென்றிருந்தேன்.
கோவை சிறையில் பல்லாண்டுகளாக அடைபட்டுக் கிடக்கும் சிறைவாசிகளின் குடும்பத்தார் பெண்கள், முதியோர், குழந்தைகள் என ஏராளமானோர் என்னை வந்து சந்தித்தனர். தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வருவதாகவும், அவர்களை விடுவிக்க முதல்வர் கலைஞரிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து கண்ணீர் விட்டனர்.
இந்த இளைஞர்களெல் லாம் சிறையில் வாடுவதற்கு யார் காரணம்? ஏன் இத் தகைய நிலை ஏற்பட் டது? அவர்களுக்கு தவறாக வழிகாட்டியவர்கள் யார்? சிறை சென்றதால் என்ன பெருமை ஏற்பட்டு விட்டது? இதைப் பற்றியெல்லாம் சிறையில் இருப்பவர்களும், அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இந் நிலைமை இனி ஒருபோதும் ஏற்பட்டு விடக் கூடாது. முஸ்லிம் லீகைச் சார்ந்த எந்த ஒரு தொண்டர் மீது ஹநிய+சென்ஸ்| வழக்குகூட ஏற்பட்டு விடக் கூடாது என கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். அவர் காட்டிய வழியில் தான் நாங்களெல்லாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
குடும்பத்தின் ஆண்கள் சிறையில் இருப்பதால் அந்த குடும்பங்கள் படுகின்ற வேதனையும், இழப்புகளும் சொல்லிக் காட்ட இயலாதவை. அதனால் இந்த சமுதாயத்திற்கும் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு ஆயுள் சிறைவாசிளை விடுதலை செய்ய வேண்டும் என முதல்வர் கலைஞர் அவர்களையும், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களையும் நாங்கள் சந்தித்து கோரிக்கை வைத்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படக் கூடியவர்கள் அவர்கள். இதிலும் நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் நமக்கு உண்டு.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் எதையும் அமைதி வழியிலும், ஜனநாயகரீதியிலும் தான் செயல்படுத்தும். அந்த வழிதான் வெல்வதற்கு உண்டான வழி.
சமூகங்களிடையே இணக்கமாக வாழ்வதற்கு இந்த வழியைத்தான் இளைஞர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த வழியில் செல்வதற்கு முன் வருகின்ற இளைஞர்களை வாருங் கள் என வரவேற்கிறோம்.
(- சென்னை லாயிட்ஸ் சாலையில் ஜூன் 19-ம் தேதி நடைபெற்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆற்றிய உரையிலிருந்து......)

Sunday, March 7, 2010

2010 மார்ச் 10 இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நிறுவன தினத்திற்கு முதல்வர் கலைஞர் வாழ்த்து

2010 மார்ச் 10 இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நிறுவன தினத்திற்கு முதல்வர் கலைஞர் வாழ்த்து

2010 மார்ச் 10 புதன் கிழமை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62வது நிறுவன தினமாகும். இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நடை பெறுகிறது. இதற்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு கலைஞர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
தந்தை பெரியார் அவர் களின் அன்புக்கும், பேரறிஞர் அண்ணா அவர்களின் பாசத் திற்கும், எனது மட்டற்ற மதிப்புக்கும் உரிய பெருந்தகை யாளர் கண்ணியத்துக்குரிய காயிதெ மில்லத் அவர்கள். சுதந்திர இந்தியாவின் 1948 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 10ம் நாள் தொடங்கிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் நிறுவன நாள் விழா, 10.3.2010 அன்று நெல்லை மாநகரில் நிகழ்வதறிந்து மகிழ்கிறேன்.

இந்திய அரசியல் நிர்ணய சபை இந்தியாவின் பொது மொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்ற போது, அந்த அவையின் உறுப்பினராக இருந்த காயிதெ மில்லத் அவர்கள், அதனைக் கடுமையாக எதிர்த்ததுடன்@ இந்தி கூடாது என்றால் இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழியை ஏற்பது என்று அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் கேட்டபோது, ~~வளம் செறிந்ததும், தொன்மை நிறைந்ததுமான எனதருமைத் தாய் மொழியாம் தமிழ் மொழியையே ஆட்சி மொழியாக்கலாம்|| என ஆணித் தரமாக முழங்கியதை, தமிழ் மத்திய ஆட்சி மொழியாக ஏற்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வரும் தமிழக அரசின் சார்பில், ~~உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு|| நடைபெறவிருக்கும் வேளையில் நினைவுகூர்ந்து அன்னாரைப் போற்றுவதுடன் அவர் நிறுவிய முஸ்லிம் லீக் இயக்கத்தின் நிறுவன நாள் விழா எழுச்சியுடன் நிகழ எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன். இவ்வாறு முதல்வர் கலைஞர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சமுதாய மறுமலர்ச்சி மாநாடு

இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் 62வது நிறுவன தினத்தை முன்னிட்டு 2010 மார்ச் 10 புதன் கிழமை திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் சமு தாய மறுமலர்ச்சி மாநாடு நடைபெறுகிறது.
மகளிர் கருத்தரங்கு

காலை 9மணிமுதல் பகல் 1மணிவரை மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெறுகிறது. மாநில மகளிர் அணி அமைப்பாளர் பாதிமா முஸப்பர் தலைமையில் நடைபெறும்
இக்கருத்தரங்கிற்கு நெல்லை மாநக ராட்சி இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர்கள் ரஹ்மத் அப்துல் ரஹ் மான், ய+சுப் சுலைஹா மீரான் மைதீன், சைபுன்னிஸா, கோ.கு. ஜமீலா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

குடும்ப விழிப்புணர்வு என்ற தலைப்பில் ஏ. ரபீகா, மருத்துவ விழிப்புணர்வு பற்றி டாக்டர் திருமதி எல். என். ராதா, கல்வி விழிப் புணர்வு குறித்து பேராசிரியை தஸ்ரீப் ஜஹான் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

இசையரங்கம்

பிற்பகல் 2மணி முதல் 3.45 வரை இஸ்லாமிய இன்னிசை விருந்து ஆழ்வை உஸ்மான் குழுவினரால் அளிக்கப்படுகிறது.

சமூக நல்லிணக்க பேரணி

மாலை 4மணிக்கு சமூக நல்லிணக்க பேரணி மேலப் பாளையம் அன்னை ஹாஜரா கல்லூரி சாலை யில் உள்ள வி.எஸ்.டி. பள்ளிவாசலிலிருந்து தொடங்குகிறது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில உலமாக்கள் அணி அமைப்பாளர் மௌலவி ஹாமித் பக்ரி தலைமையில் நடைபெறும் இப்பேரணியை டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி துவக்கி வைக்கிறார். சங்கைக்குரிய உலமா பெருமக்களான டி.ஜெ.எம். சலாஹ{த்தீன் ஹஜ்ரத், சதக்கத்துல்லா மிஸ்பாஹி ஹஜ்ரத், பி.ஏ. காஜா முஈ னுத்தீன் பாகவி ஹஜ்ரத், ஹெச்.கே. முஹம்மது முஸ்தபா பாகவி ஹஜ்ரத், பி.ஏ. கே. அப்துல் ரஹீம் பாகவி ஹஜ்ரத், எஸ்.எஸ். ஹைதர் அலி மிஸ்பாஹி ஹஜ்ரத், எம்.ஹெச். ஷம்சுத்தீன் உலவி ஹஜ்ரத், என். எஸ். மீரான் மன்பஈ ஹஜ்ரத், எம்.என்.எம். இல்யாஸ் உஸ் மானி ஹஜ்ரத், ஷாமதார் ஆலிம் ஹஜ்ரத், ஏ.ஒய். முகையதீன் ரஷாதி ஹஜ் ரத், சுலைமான் சேட் ஆலிம் ஹஜ்ரத், அப்துர் ரஹ்மான் ஷிப்லி ஹஜ்ரத், கே.எப். ஜலீல் உஸ்மானி ஹஜ்ரத், சுலைமான் ஆலிம் ஹஜ்ரத் மற்றும் வழக்கறிஞர்கள் எம்.எஸ். முஹம்மது முஸ்தபா, எம்.எம். ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

சமுதாய மறுமலர்ச்சி மாநாடுp

மாலை 6.30மணிக்கு சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநித் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையேற்கிறார். மௌலவி எம்.ஏ. முஹம் மது இப்ராஹீம் ஆலிம் கிராஅத் ஓதுகிறார். மாநாட்டு அமைப்புக் குழுத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா மாநாட்டை திறந்து வைக்கிறார். மாநாட்டு அமைப்புக் குழுத் தலைவர் மதுரை மௌலவி பி.கே.எம். அப்துல் காதர் ஆலிம் பச்சிளம் பிறைக் கொடியை ஏற்றிவைக்கிறார். மாநில கொள்கைபரப்புச் செயலாளர் காயல் மகப+ப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். மாவட்டச் செயலாளர் எல்.கே.எஸ். மீரான் மைதீன் வரவேற்று பேசுகிறார். மு.க.அழகிரி

மாநாட்டின் சிறப்பு விருந்தினராக தென்மண் டல தி.மு.க. அமைப்புச் செயலாளரும் மத்திய உரம் மற்றும் ரசாயணத்துறை அமைச்சருமான அஞ்சா நெஞ்சர் மு.க.அழகிரி பங்கேற்கிறார். தமிழக அமைச்சர் டி.பி. எம். மைதீன்கான், மாநகர மேயர் ஏ.எல். சுப்பிரமணியம், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர். நாடாளுமன்ற உறுப்பி னர்கள் எம். அப்துர் ரஹ்மான், இ.டி. முஹம்மது பஷீர், எஸ்.எஸ். ராம சுப்பு, சட்டமன்ற உறுப்பினர் கள் வி.கருப்ப சாமி பாண் டியன், என். மாலை ராஜா, எம். கலீலுர் ரஹ்மான், ஹெச். அப்துல் பாசித், மாநிலச் செயலாளர்கள் தளபதி ஷபீகுர் ரஹ்மான், நாகூர் ஜபருல்லா, எம்.எஸ். ஏ. ஷாஜஹான், கமுதி பஷீர், மாநில அணிகளின் அமைப்பாளர்கள் திருப் ப+ர் சத்தார், ஏ.அப்துர் ரவ+ப், வி.எஸ். அமா னுல்லா, மௌலவி ராஜா ஹ{சைன் மற்றும் மௌ லவி ஜஹாங்கீர் அரூஸி, ஜாஹிர் ஹ{சைன், புளியங் குடி அப்துல் வகாப் உள்ளிட்டோர் உரையாற்று கின்றனர்.மாநிலத் துணைத் தலைவர்கள், மாவட்டங் களி,ன் தலைவர், செயலா ளர், பொருளாளர்கள், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கின்றனர். மாவட்டச் செயலாளர் த.அ. செய்யது மஹம்மது நன்றி கூறுகிறார்.

விருதுகள்

சிறந்த கல்வியாளருக்கான விருது கீழக்கரை சீனாதான செய்யது அப்துல் காதர் அவர்களுக்கும், சிறந்த சமூக சேவையா ளர் விருது டாக்டர் எம். கே.எம். முஹம்மது ஷாபி அவர்களுக்கும், சிறந்த இலக்கியவாதி விருது கவிஞர் வீரை ரகுமான் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. சிறந்த பெண் கல்வியா ளருக்கான விருது பேராசிரியை தஸ்ரீப் ஜஹானுக்கு மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கின் போது வழங்கப் படுகிறது.

சிறப்பான ஏற்பாடுகள்

இம்மாநாட்டிற்கு மிகச் சிறப்பான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தென் மாவட் டங்கள் முழுவதிலும் சுவர் விளம்பரங்களும், பிளக்ஸ் விளம்பர பேனர்களும் செய்யப்பட்டுள்ளன. இம்மாநாட்டையொட்டி தென்மாவட்டங்களில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.

Friday, February 5, 2010

தமிழக அரசின் திருமண கட்டாய பதிவுச் சட்டம்: சிறுபான்மையின தலைவர்களுடன் ஆலோசித்து தீர்வு காணப்படும் முதல்வர் கலைஞர் அறிவிப்பு

தமிழக அரசின் திருமண கட்டாய பதிவுச் சட்டம்: சிறுபான்மையின தலைவர்களுடன் ஆலோசித்து தீர்வு காணப்படும் முதல்வர் கலைஞர் அறிவிப்பு


தமிழக அரசு கொண்டு வந்துள்ள திருமண கட்டாயப் பதிவுச் சட்டம் பற்றி முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சம் போக்க அச்சமுதாயத்தின் தலைவர்களுடன் ஆலோசித்துத் தீர்வு காணப்படும் என தமிழ்நாடு முதல்வர் கலைஞர் அறிவித்துள்ளார்.
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, ஹமணிச்சுடர்| நாளிதழ் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கை யில் அவர் இதனை தெரிவித்தார். நாடு முழுவதும் நடை பெறும் திருமணங்கள் அனைத்தும் கட்டாயப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு திருமண கட்டாயப் பதிவுச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கான சட்ட முன் வடிவு அறிமுகப்படுத்தப்பட்ட போதே உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 2009-ம் ஆண்டு ஜுலை 7-ம் தேதி சென்னை பிரசிடென்ட் ஓட்டலில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டத்தை நடத்தியது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசி ரியர் கே.எம். காதர் மொகிதீன் முன்னிலையில் தமிழ் நாடு வக்ஃபு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் தலைமையில் இக்கூட்டத்தை நடத்தி, கட்டாய திருமணப் பதிவு சட்டம் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு பாதகம் ஏற்படுத்தி விடுமோ? என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. உரிய கவனத்துடன் வேண்டிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற விவாதம்
அதன் பின்னர், தமிழ் நாடு சட்டமன்றத்தில் இந்த மசோதா 2009 ஜுலை 21-ம் தேதி விவாதத்திற்கு வந்தபோது அரவாக் குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாஸித் ஆகிய இருவரும் சந்தேகங் கள் தெரிவித்து வெட்டுத் தீர்மானங்களை முன் மொழிந்தனர்.
எந்தவொரு சூழ்நிலையி லும் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இந்த சட்டம் தொடர்பாக உரிய திருத்தங்கள் செய்ய இரண்டு வருட கால அவகாசம் அளிக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் சட்ட அமைச்சர் தனது பதிலுரையில் உறுதியளித்தார்.
இதனால் வெட்டுத் தீர்மானங்கள் திரும்பப் பெறப்பட்டன. இந்த விவாதத்தில் உரையாற்றிய எச். அப்துல் பாசித் எம். எல்.ஏ., முஸ்லிம் தனியார் சட்ட வாரிய ஆலிம் பெரு மக்கள் தரக் கூடிய பரிந்து ரைகளை ஏற்று உரியத் திருத்தங்களை இந்த சட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இச் சட்டம் நடை முறைக்கு வந்ததற்கு பிறகு சார்பாதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யும் போது வயது மற்றும் இருப்பிட சான்றுகளுக்கு ஆவணங்கள் கேட்கப்ப டுவது உள்ளிட்ட பிரச்சி னைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் முஸ்லிம் ஷரீஅத் சட்டத்திற்கு பாதகம் ஏற்பட்டு விடும். ஜமா அத் கட்டுப்பாடுகள் சீர் குலைந்துவிடும் என்ற அச்சம் முஸ்லிம் சமுதா யத்திற்கு மத்தியில் ஏற்பட்டது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற் குழு கூட்டம் தஞ்சை மாவட்டத்தில் கூடி தமிழ் நாடு அரசின் திருமண கட்டாயப் பதிவு சட்டம் தொடர்பாக முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்குவதற்காக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா மற்றும் முத்தவல்லிகள், மதரஸா நிர்வாகிகள், பிரதிநிதிகளை முதல்வர் சந்தித்து விவாதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தது.
தமிழக அரசின் சார்பில் முஸ்லிம் லீகின் தீர்மானம் முதல்வரின் பரிசீலனையில் இருப்பதாக தமிழ்நாடு பதிவுத் துறை தலைவரி டமிருந்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமை யகத்துக்கு தகவல் தரப்பட்டது. கடந்த ஜனவரி 31-ம் தேதி பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தோர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இணைந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், திருமண கட்டாயப் பதிவுச் சட்டம் தொடர்பாக முஸ்லிம் சமுதாயத்தின் ஐயப்பாடு களை முதல்வர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து எடுத்துச் சொல்லி, பள்ளி வாசல்களில் காலம் காலமாக பதிவு செய்யப் பட்டு பராமரிக்கப்படும் பதிவேடுகளை அப்படியே அங்கீகரித்து பதிவு செய்ய வேண்டும் என கோருவோம் என குறிப்பிட்டிருந் தார். இந்த செய்தி பிரபல நாளிதழ்களில் வெளிவந்திருந்தது.
முதல்வர் கலைஞர் அறிவிப்பு
இன்று முதல்வர் கலைஞர் அண்ணா அறி வாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, ~மணிச்சுடர்| நாளிதழின் செய்தியாளர் இது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
~தமிழக அரசின் கட்டாய திருமணம் பதிவு சட்டம் சிறுபான்மையின மக்களின் தனியார் சட்டத் திற்கு குறிப்பாக முஸ்லிம் களின் ஷரீஅத் சட்டத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள தாகவும், அதில் தேவையான திருத்தங்கள் செய்ய வேண்டும் எனவும், முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்தள்ளன. எனவே இது குறித்து உங்கள் கருத்து என்ன?| என கேட்டபோது,
~தமிழக அரசின் திருமண கட்டாயப் பதிவு சட்டம் சிறுபான்மையினருக்கு பாதகங்களை ஏற்படுத்தக் கூடியதா? என் பதை குறித்து ஆராய சிறு பான்மை சமூக தலைவர்களுடன் விரைவில் ஆலோ சனை நடத்த உள்ளேன். அதில் தீர்வு காணப்படும்.| என முதல்வர் கலைஞர் அறிவித்தார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சி களுக்கு பலன் கிடைத் துள்ளது. முஸ்லிம் சமுதாயத்தின் தலைவர்களை முதல்வர் கலைஞர் விரைவில் சந்திப்பார். அதன் மூலம் திருமண கட்டாயப் பதிவு சட்டம் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

Thursday, January 7, 2010

கலைஞர் வீட்டு வசதித் திட்டம் வரலாற்றில் உதயசூரியனைப் போல் ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஆளுநர் உரைக்கு பேராசிரியர் வரவேற்பு

கலைஞர் வீட்டு வசதித் திட்டம் வரலாற்றில் உதயசூரியனைப் போல் ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஆளுநர் உரைக்கு பேராசிரியர் வரவேற்பு

சென்னை, ஜன.7

ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள கலைஞரின் வீட்டு வசதித் திட்டம் உதயசூரியனைப் போல் என்றும் ஓளிர்ந்து கொண்டே இருக்கும் என்று இந்திய ய+னியன் முஸ்லீம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள் ளதாவது:-

தமிழக மக்களின் நலனுக்கும் வளமான வாழ்வுக்கும் வழி வகுக்கக் கூடிய உரையாக ஆளுநர் உரை அமைந்துள்ளது.

ஆளுநர் உரை என்ப தைவிட தமிழக மக்களின் வாழ்நர் உரை என்றால் அது மிகையாகாது. எல்லா தரப்பினருக்கும் வாழ்வு அளித்திடும் வகையில் கலைஞரின் பாரம்பரிய பழக்கப்படி தொடர்ந்து மக்களுக்கு ஆற்றி வரும் பணிகளுக்கு ஏற்ப மனமகி ழும் திட்டங்களை ஆளுநர் உரை மூலம் கலைஞர் தெரிவித்துள்ளார்.

21 லட்சம் மண் குடிசைகளை கான்கீரிட் வீடுகளாக மாற்றும் திட்டம் சோவியத் ரஷ்யாவிலோ, சீனாவிலோ கூட கற்பனை செய்துகூட பார்க்க முடியாத திட்டம்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம்போல் கலைஞர் வீட்டு வசதி திட்டமும் வரலாற்றில் உதயசூரியனைப்போல் ஒளிர்ந்துகொண்டே இருக்கும்.

எனவே, முதல்வர் கலைஞரின் ஒப்பற்ற திட்டங்களை தாங்கிய ஆளுநர் உரையை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் உவகையுடனும், பெருமிதத்துடனும் வரவேற்கிறேன்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Wednesday, June 25, 2008

முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் இரங்கல்

முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் இரங்கல்




சென்னை, ஜூன் 25: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:

கடந்த சனிக்கிழமை சென்னை தீவுத் திடலில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநாட்டில் நானும், அவரும் கலந்து கொண்டு உரையாற்றியது என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.

அவரது உரையை சிங்கநாதம் என்றே விமர்சித்தோம். இவ்வளவு சீக்கிரத்தில் நம்மை விட்டுப் பிரிந்து செல்வார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. சிறந்த நாடாளுமன்ற வாதியாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களாலும் பெரிதும் மதித்துப் போற்றப்பட்ட பனாத்வாலா மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080625093101&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=