அறிவிப்பு
கட்டாய திருமண பதிவுச் சட்டம் சம்பந்தமாக முஸ்லிம் சமுதாயத்திற்கு உள்ள ஐயப்பாடுகளை தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை சந்தித்து தெரிவிப்பதற்கு முன்பாக உரிய திருத்தங்கள் பற்றி அரசு அதிகாரிகளிடம் ஆலோசிப் பதற்காக கீழ்க்காணும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
1. பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்
2. பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்.
3. மௌலவி டாக்டர் அன்வர் பாதுஷா உலவி
4. எம். பஷீர் அஹமது
5. மௌலவி இல்யாஸ் ரியாஜி
6. வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்
7. முஹம்மது ஹனீபா
17.2.2010 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளதகா தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலானா அ.இ. முஹம்மது அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் அறிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts
Thursday, February 25, 2010
Friday, February 5, 2010
தமிழக அரசின் திருமண கட்டாய பதிவுச் சட்டம்: சிறுபான்மையின தலைவர்களுடன் ஆலோசித்து தீர்வு காணப்படும் முதல்வர் கலைஞர் அறிவிப்பு
தமிழக அரசின் திருமண கட்டாய பதிவுச் சட்டம்: சிறுபான்மையின தலைவர்களுடன் ஆலோசித்து தீர்வு காணப்படும் முதல்வர் கலைஞர் அறிவிப்பு
தமிழக அரசு கொண்டு வந்துள்ள திருமண கட்டாயப் பதிவுச் சட்டம் பற்றி முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சம் போக்க அச்சமுதாயத்தின் தலைவர்களுடன் ஆலோசித்துத் தீர்வு காணப்படும் என தமிழ்நாடு முதல்வர் கலைஞர் அறிவித்துள்ளார்.
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, ஹமணிச்சுடர்| நாளிதழ் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கை யில் அவர் இதனை தெரிவித்தார். நாடு முழுவதும் நடை பெறும் திருமணங்கள் அனைத்தும் கட்டாயப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு திருமண கட்டாயப் பதிவுச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கான சட்ட முன் வடிவு அறிமுகப்படுத்தப்பட்ட போதே உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 2009-ம் ஆண்டு ஜுலை 7-ம் தேதி சென்னை பிரசிடென்ட் ஓட்டலில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டத்தை நடத்தியது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசி ரியர் கே.எம். காதர் மொகிதீன் முன்னிலையில் தமிழ் நாடு வக்ஃபு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் தலைமையில் இக்கூட்டத்தை நடத்தி, கட்டாய திருமணப் பதிவு சட்டம் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு பாதகம் ஏற்படுத்தி விடுமோ? என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. உரிய கவனத்துடன் வேண்டிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற விவாதம்
அதன் பின்னர், தமிழ் நாடு சட்டமன்றத்தில் இந்த மசோதா 2009 ஜுலை 21-ம் தேதி விவாதத்திற்கு வந்தபோது அரவாக் குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாஸித் ஆகிய இருவரும் சந்தேகங் கள் தெரிவித்து வெட்டுத் தீர்மானங்களை முன் மொழிந்தனர்.
எந்தவொரு சூழ்நிலையி லும் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இந்த சட்டம் தொடர்பாக உரிய திருத்தங்கள் செய்ய இரண்டு வருட கால அவகாசம் அளிக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் சட்ட அமைச்சர் தனது பதிலுரையில் உறுதியளித்தார்.
இதனால் வெட்டுத் தீர்மானங்கள் திரும்பப் பெறப்பட்டன. இந்த விவாதத்தில் உரையாற்றிய எச். அப்துல் பாசித் எம். எல்.ஏ., முஸ்லிம் தனியார் சட்ட வாரிய ஆலிம் பெரு மக்கள் தரக் கூடிய பரிந்து ரைகளை ஏற்று உரியத் திருத்தங்களை இந்த சட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இச் சட்டம் நடை முறைக்கு வந்ததற்கு பிறகு சார்பாதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யும் போது வயது மற்றும் இருப்பிட சான்றுகளுக்கு ஆவணங்கள் கேட்கப்ப டுவது உள்ளிட்ட பிரச்சி னைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் முஸ்லிம் ஷரீஅத் சட்டத்திற்கு பாதகம் ஏற்பட்டு விடும். ஜமா அத் கட்டுப்பாடுகள் சீர் குலைந்துவிடும் என்ற அச்சம் முஸ்லிம் சமுதா யத்திற்கு மத்தியில் ஏற்பட்டது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற் குழு கூட்டம் தஞ்சை மாவட்டத்தில் கூடி தமிழ் நாடு அரசின் திருமண கட்டாயப் பதிவு சட்டம் தொடர்பாக முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்குவதற்காக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா மற்றும் முத்தவல்லிகள், மதரஸா நிர்வாகிகள், பிரதிநிதிகளை முதல்வர் சந்தித்து விவாதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தது.
தமிழக அரசின் சார்பில் முஸ்லிம் லீகின் தீர்மானம் முதல்வரின் பரிசீலனையில் இருப்பதாக தமிழ்நாடு பதிவுத் துறை தலைவரி டமிருந்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமை யகத்துக்கு தகவல் தரப்பட்டது. கடந்த ஜனவரி 31-ம் தேதி பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தோர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இணைந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், திருமண கட்டாயப் பதிவுச் சட்டம் தொடர்பாக முஸ்லிம் சமுதாயத்தின் ஐயப்பாடு களை முதல்வர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து எடுத்துச் சொல்லி, பள்ளி வாசல்களில் காலம் காலமாக பதிவு செய்யப் பட்டு பராமரிக்கப்படும் பதிவேடுகளை அப்படியே அங்கீகரித்து பதிவு செய்ய வேண்டும் என கோருவோம் என குறிப்பிட்டிருந் தார். இந்த செய்தி பிரபல நாளிதழ்களில் வெளிவந்திருந்தது.
முதல்வர் கலைஞர் அறிவிப்பு
இன்று முதல்வர் கலைஞர் அண்ணா அறி வாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, ~மணிச்சுடர்| நாளிதழின் செய்தியாளர் இது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
~தமிழக அரசின் கட்டாய திருமணம் பதிவு சட்டம் சிறுபான்மையின மக்களின் தனியார் சட்டத் திற்கு குறிப்பாக முஸ்லிம் களின் ஷரீஅத் சட்டத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள தாகவும், அதில் தேவையான திருத்தங்கள் செய்ய வேண்டும் எனவும், முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்தள்ளன. எனவே இது குறித்து உங்கள் கருத்து என்ன?| என கேட்டபோது,
~தமிழக அரசின் திருமண கட்டாயப் பதிவு சட்டம் சிறுபான்மையினருக்கு பாதகங்களை ஏற்படுத்தக் கூடியதா? என் பதை குறித்து ஆராய சிறு பான்மை சமூக தலைவர்களுடன் விரைவில் ஆலோ சனை நடத்த உள்ளேன். அதில் தீர்வு காணப்படும்.| என முதல்வர் கலைஞர் அறிவித்தார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சி களுக்கு பலன் கிடைத் துள்ளது. முஸ்லிம் சமுதாயத்தின் தலைவர்களை முதல்வர் கலைஞர் விரைவில் சந்திப்பார். அதன் மூலம் திருமண கட்டாயப் பதிவு சட்டம் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள திருமண கட்டாயப் பதிவுச் சட்டம் பற்றி முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சம் போக்க அச்சமுதாயத்தின் தலைவர்களுடன் ஆலோசித்துத் தீர்வு காணப்படும் என தமிழ்நாடு முதல்வர் கலைஞர் அறிவித்துள்ளார்.
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, ஹமணிச்சுடர்| நாளிதழ் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கை யில் அவர் இதனை தெரிவித்தார். நாடு முழுவதும் நடை பெறும் திருமணங்கள் அனைத்தும் கட்டாயப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு திருமண கட்டாயப் பதிவுச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கான சட்ட முன் வடிவு அறிமுகப்படுத்தப்பட்ட போதே உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 2009-ம் ஆண்டு ஜுலை 7-ம் தேதி சென்னை பிரசிடென்ட் ஓட்டலில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டத்தை நடத்தியது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசி ரியர் கே.எம். காதர் மொகிதீன் முன்னிலையில் தமிழ் நாடு வக்ஃபு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் தலைமையில் இக்கூட்டத்தை நடத்தி, கட்டாய திருமணப் பதிவு சட்டம் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு பாதகம் ஏற்படுத்தி விடுமோ? என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. உரிய கவனத்துடன் வேண்டிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற விவாதம்
அதன் பின்னர், தமிழ் நாடு சட்டமன்றத்தில் இந்த மசோதா 2009 ஜுலை 21-ம் தேதி விவாதத்திற்கு வந்தபோது அரவாக் குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாஸித் ஆகிய இருவரும் சந்தேகங் கள் தெரிவித்து வெட்டுத் தீர்மானங்களை முன் மொழிந்தனர்.
எந்தவொரு சூழ்நிலையி லும் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இந்த சட்டம் தொடர்பாக உரிய திருத்தங்கள் செய்ய இரண்டு வருட கால அவகாசம் அளிக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் சட்ட அமைச்சர் தனது பதிலுரையில் உறுதியளித்தார்.
இதனால் வெட்டுத் தீர்மானங்கள் திரும்பப் பெறப்பட்டன. இந்த விவாதத்தில் உரையாற்றிய எச். அப்துல் பாசித் எம். எல்.ஏ., முஸ்லிம் தனியார் சட்ட வாரிய ஆலிம் பெரு மக்கள் தரக் கூடிய பரிந்து ரைகளை ஏற்று உரியத் திருத்தங்களை இந்த சட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இச் சட்டம் நடை முறைக்கு வந்ததற்கு பிறகு சார்பாதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யும் போது வயது மற்றும் இருப்பிட சான்றுகளுக்கு ஆவணங்கள் கேட்கப்ப டுவது உள்ளிட்ட பிரச்சி னைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் முஸ்லிம் ஷரீஅத் சட்டத்திற்கு பாதகம் ஏற்பட்டு விடும். ஜமா அத் கட்டுப்பாடுகள் சீர் குலைந்துவிடும் என்ற அச்சம் முஸ்லிம் சமுதா யத்திற்கு மத்தியில் ஏற்பட்டது.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற் குழு கூட்டம் தஞ்சை மாவட்டத்தில் கூடி தமிழ் நாடு அரசின் திருமண கட்டாயப் பதிவு சட்டம் தொடர்பாக முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்குவதற்காக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா மற்றும் முத்தவல்லிகள், மதரஸா நிர்வாகிகள், பிரதிநிதிகளை முதல்வர் சந்தித்து விவாதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தது.
தமிழக அரசின் சார்பில் முஸ்லிம் லீகின் தீர்மானம் முதல்வரின் பரிசீலனையில் இருப்பதாக தமிழ்நாடு பதிவுத் துறை தலைவரி டமிருந்து இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமை யகத்துக்கு தகவல் தரப்பட்டது. கடந்த ஜனவரி 31-ம் தேதி பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தோர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் இணைந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், திருமண கட்டாயப் பதிவுச் சட்டம் தொடர்பாக முஸ்லிம் சமுதாயத்தின் ஐயப்பாடு களை முதல்வர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து எடுத்துச் சொல்லி, பள்ளி வாசல்களில் காலம் காலமாக பதிவு செய்யப் பட்டு பராமரிக்கப்படும் பதிவேடுகளை அப்படியே அங்கீகரித்து பதிவு செய்ய வேண்டும் என கோருவோம் என குறிப்பிட்டிருந் தார். இந்த செய்தி பிரபல நாளிதழ்களில் வெளிவந்திருந்தது.
முதல்வர் கலைஞர் அறிவிப்பு
இன்று முதல்வர் கலைஞர் அண்ணா அறி வாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, ~மணிச்சுடர்| நாளிதழின் செய்தியாளர் இது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
~தமிழக அரசின் கட்டாய திருமணம் பதிவு சட்டம் சிறுபான்மையின மக்களின் தனியார் சட்டத் திற்கு குறிப்பாக முஸ்லிம் களின் ஷரீஅத் சட்டத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள தாகவும், அதில் தேவையான திருத்தங்கள் செய்ய வேண்டும் எனவும், முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்தள்ளன. எனவே இது குறித்து உங்கள் கருத்து என்ன?| என கேட்டபோது,
~தமிழக அரசின் திருமண கட்டாயப் பதிவு சட்டம் சிறுபான்மையினருக்கு பாதகங்களை ஏற்படுத்தக் கூடியதா? என் பதை குறித்து ஆராய சிறு பான்மை சமூக தலைவர்களுடன் விரைவில் ஆலோ சனை நடத்த உள்ளேன். அதில் தீர்வு காணப்படும்.| என முதல்வர் கலைஞர் அறிவித்தார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சி களுக்கு பலன் கிடைத் துள்ளது. முஸ்லிம் சமுதாயத்தின் தலைவர்களை முதல்வர் கலைஞர் விரைவில் சந்திப்பார். அதன் மூலம் திருமண கட்டாயப் பதிவு சட்டம் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
Saturday, January 23, 2010
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரைமரி தேர்தல் அறிவிப்பு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரைமரி தேர்தல் அறிவிப்பு
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கிளையின் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி அனைத்து மாநிலங்களிலும் முறையாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு பிரைமரி, மாவட்ட, மாநில நிர்வாகிகளின் தேர்தல் நடத்திட வேண்டுமென பெங்களுரு தேசிய பிரதிநிதிகள் மாநாடு பிரகடனம் வலியுறுத்தி இருக்கின்றது.
தமிழகத்தில் திட்டமிட்டபடி 2010 பிப்ரவரி முதல் தேதியிலிருந்து 20-02-2010 தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் பிரைமரி தேர்தலை நடத்திட மாவட்ட தலைவர், செயலாளர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பிரைமரி தேர்தல் நடைபெற்ற விவரங்களை ப+ர்த்தி செய்ய வேண்டிய படிவம் மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிர்வாகத் தேர்தலில் பேணப்பட வேண்டிய குறிப்பு பின்வருமாறு...
1. குறைந்தபட்சம் நூறு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அந்த பிரைமரியில் தேர்தல் நடத்தலாம். பிரைமரி தேர்தல் பொதுக்குழுவில் மூன்றில் ஒரு பகுதியினர் கோரம் ஆவார்கள்.
2. பிரைமரி தேர்தல் நடைபெறும் இடம், தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கையை பிரைமரி தலைவர் பெயரில் விநியோகிக்க வேண்டும். மாவட்டத்தலைவர் ஃ மாவட்டச் செயலாளர் ஃ மாநில தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடைபெறும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும்.
3. தேர்தல் நடைபெறும் தேதியை பத்து நாட்களில் இருந்து ஆறு நாட்ளளுக்கு முன்னதாக அறிவிப்பு செய்யவேண்டும்.
4. பிரைமரி தேர்தல் பொதுக்குழு கூடியவுடன் அனைத்து உறுப்பினர்களின் கையெழுத்து மினிட் புத்தகத்தில் பெற வேண்டும். தேர்தல் முடிவுகளை விவரமாகப் பதிவு செய்திட வேண்டும்.
5. தேர்தலில் ஜனநாயக முறைப்படியாக மெஜாரிட்டி வாக்குகள் பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவர். இரு போட்டியாளர்களுக்கு இடையில் சரிசமமாக வாக்குகள் உள்ள நிலையில் பிரைமரி பொதுக்குழுக் கூட்டத் தலைவர் தனது வாக்குடன் தீர்வு வாக்கு ஒன்றும் அளிக்கலாம். முன்னிலை வகிப்பவர் வாக்கு அளிக்க கூடாது.
6. பிரைமரி நிர்வாகிகளாகப் பொதுவாக ஒரு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள் ஒரு செயலாளர், இரண்டு துணைச் செயலாளர்கள், ஒரு பொருளாளர். நிர்வாகக் குழுவுக்கு 5 ஃ 7 ஃ 9 ஃ 12 ஃ 15 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படலாம். அதிக பிரைமரி உறுப்பினர்கள் இருப்பின், துணைத் தலைவர் ஃ துணைச் செயலாளர்கள் எண்ணிக்கையை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.
7. பிரைமரி துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் பதவிகள் வார்டு அல்லது வட்டத்திற்கு ஒருவர் என்ற விகிதத்தில் பிரித்தளிக்க வேண்டும். துணைச் செயலாளர்கள் 45 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் நன்று. பிரைமரி, மாவட்டம், மாநிலம் ஆகிய நிர்வாகப் பொறுப்புக்களில், ஒருவருக்கு ஒரு பதவி என்றிருந்தால், மற்றும் சிலர் பணியாற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
8. ஓவ்வொரு பிரைமரியில் இருந்தும் பிரைமரி தலைவர், பிரைமரி செயலாளர் ஆகிய இருவருடன் நூறு உறுப்பினர்களுக்கு ஒருவர் என்ற ரீதியில் மாவட்ட பிரதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
9. உறுப்பினர் நான்காண்டு சந்தா ரூ5; ஃ- ( ரூபாய் ஐந்து மட்டும்) -ல் பிரைமரிக்கு ரூ.2ஃ- மாவட்டத்திற்கு ரூ1ஃ- மாநிலத்திற்கு 2ஃ- என்ற விகிதத்தில்
10. ஓவ்வொரு பிரைமரியிலும் சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விண்ணப்ப படிவங்களில் உள்ள எல்லா விவரங்களையும், பிரைமரி உறுப்பினர் பதிவு ஏடு ஒன்றில் பதிவு செய்திட வேண்டும். அந்த பதிவேட்டில் உள்ளபடிதான் மாநில முஸ்லிம் லீக் பதிவு ஏட்டில் பதிவு செய்யப்பட்டு, உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
11. பிரைமரி தேர்தல் மாநில தேர்தல் அதிகாரி, மாவட்ட தலைவர் - செயலாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும். இத்தேர்தலுக்கு முன்பாக பிரைமரி பொறுப்பாளர்கள், உறுப்பினர் படிவத்தையும், அதற்கான செயலாளர் இடம் வழங்க வேண்டும். பிரைமரி தேர்தல் நடைபெற்ற முழு விபரம் தலைமை நிலையத்திற்கு கிடைக்கப் பெற்றவுடன் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படும்.
12. பிரைமரி தேர்தல் அங்கீகாரச் சான்றிதழ்களில்;, அந்தந்த பிரைமரி - தலைவர், செயலாளர், பொருளாளர், ஆகியோரின் பெயர் மற்றும் முகவரி இடம் பெறும். இச்சான்றிதழ் வங்கி கணக்கு துவங்குதல், அரசு துறை காரியங்களுக்கு பயன் அளிக்கக் கூடியவைகளாகும்.
13. அகில இந்திய புதிய சட்ட விதிப்படி, இளைஞர் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எப்) சுதத்திர தொழிலாளர் ய+னியன் (எஸ்.டி.யு) , மகளிர் லீக் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அணிகளாகும். இந்த அணிகளின் அமைப்பாளர்கள் அனைத்து பிரைமரி;களிலும் தேர்வு செய்யப்பட வேண்டும்.
14. இளைஞர் லீக் அமைப்பாளர்களின் வயது வரம்பு 35 ஆகும், முஸ்லிம் மாணவர் பேரவை (எம். எஸ். எப்) அமைப்பாளர்களின் வயது வரம்பு 27 ஆகும், சுதந்திர தொழிலாளர் ய+னியன் (எஸ்.டி.யு) அமைப்பாளர்கள் தொழிலாளர்களுடன் தொடர்புடையவர்களாக இருத்தல் வேண்டும். மகளிர் லீக் அமைப்பாளர்களாக மகளிர் சுய உதவிக்குழு, கல்வி மற்றும் சமூக பணிகளாற்றும் பெண்களை தேர்வு செய்யவும்.
15. 2010 பிப்ரவரி மாதம் இறுதியில் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்பு தலைமை நிலையத்திலிருந்து வெளியிடப்படும். இத்தேர்தல் மாநில தலைவர், பொதுச் செயலாளர், பாராளுமன்ற - சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெறும் இத்தேர்தலுக்கு முன்பாக மாவட்ட தலைவர் - செயலாளர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரைமரிகளிலிருந்தும் பெறப்பட்ட உறுப்பினர் படிவத்தையும், அதற்கான
16. மாநில தலைமை நிலையத்தில் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் முழு விபரங்களையும் கணினியில் பதிவு செய்திட பிரத்தியேகமாக புதிதாக பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
17. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஊழியர்களின் முழு ஒத்துழைப்போடும் திட்டமிட்ட பணிகளாலும் தாய்ச்சபையை மேலும் வலிமை மிக்கதாக ஆக்கிடுவோம். நம் லட்சியப் பணிகளில் ஒற்றுமையுடனும், தியாக மனப்பான்மையுடனும் செயலாற்றி வெற்றிகள் பல கண்டிடுவோம். அல்லாஹ் அருள்வானாக வஸ்ஸலாம்.
- கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர்
மாநில பொதுச் செயலாளர்,
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்
(தமிழ்நாடு மாநிலம்)
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கிளையின் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி அனைத்து மாநிலங்களிலும் முறையாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு பிரைமரி, மாவட்ட, மாநில நிர்வாகிகளின் தேர்தல் நடத்திட வேண்டுமென பெங்களுரு தேசிய பிரதிநிதிகள் மாநாடு பிரகடனம் வலியுறுத்தி இருக்கின்றது.
தமிழகத்தில் திட்டமிட்டபடி 2010 பிப்ரவரி முதல் தேதியிலிருந்து 20-02-2010 தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் பிரைமரி தேர்தலை நடத்திட மாவட்ட தலைவர், செயலாளர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பிரைமரி தேர்தல் நடைபெற்ற விவரங்களை ப+ர்த்தி செய்ய வேண்டிய படிவம் மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிர்வாகத் தேர்தலில் பேணப்பட வேண்டிய குறிப்பு பின்வருமாறு...
1. குறைந்தபட்சம் நூறு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அந்த பிரைமரியில் தேர்தல் நடத்தலாம். பிரைமரி தேர்தல் பொதுக்குழுவில் மூன்றில் ஒரு பகுதியினர் கோரம் ஆவார்கள்.
2. பிரைமரி தேர்தல் நடைபெறும் இடம், தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கையை பிரைமரி தலைவர் பெயரில் விநியோகிக்க வேண்டும். மாவட்டத்தலைவர் ஃ மாவட்டச் செயலாளர் ஃ மாநில தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடைபெறும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும்.
3. தேர்தல் நடைபெறும் தேதியை பத்து நாட்களில் இருந்து ஆறு நாட்ளளுக்கு முன்னதாக அறிவிப்பு செய்யவேண்டும்.
4. பிரைமரி தேர்தல் பொதுக்குழு கூடியவுடன் அனைத்து உறுப்பினர்களின் கையெழுத்து மினிட் புத்தகத்தில் பெற வேண்டும். தேர்தல் முடிவுகளை விவரமாகப் பதிவு செய்திட வேண்டும்.
5. தேர்தலில் ஜனநாயக முறைப்படியாக மெஜாரிட்டி வாக்குகள் பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவர். இரு போட்டியாளர்களுக்கு இடையில் சரிசமமாக வாக்குகள் உள்ள நிலையில் பிரைமரி பொதுக்குழுக் கூட்டத் தலைவர் தனது வாக்குடன் தீர்வு வாக்கு ஒன்றும் அளிக்கலாம். முன்னிலை வகிப்பவர் வாக்கு அளிக்க கூடாது.
6. பிரைமரி நிர்வாகிகளாகப் பொதுவாக ஒரு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள் ஒரு செயலாளர், இரண்டு துணைச் செயலாளர்கள், ஒரு பொருளாளர். நிர்வாகக் குழுவுக்கு 5 ஃ 7 ஃ 9 ஃ 12 ஃ 15 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படலாம். அதிக பிரைமரி உறுப்பினர்கள் இருப்பின், துணைத் தலைவர் ஃ துணைச் செயலாளர்கள் எண்ணிக்கையை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.
7. பிரைமரி துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் பதவிகள் வார்டு அல்லது வட்டத்திற்கு ஒருவர் என்ற விகிதத்தில் பிரித்தளிக்க வேண்டும். துணைச் செயலாளர்கள் 45 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் நன்று. பிரைமரி, மாவட்டம், மாநிலம் ஆகிய நிர்வாகப் பொறுப்புக்களில், ஒருவருக்கு ஒரு பதவி என்றிருந்தால், மற்றும் சிலர் பணியாற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
8. ஓவ்வொரு பிரைமரியில் இருந்தும் பிரைமரி தலைவர், பிரைமரி செயலாளர் ஆகிய இருவருடன் நூறு உறுப்பினர்களுக்கு ஒருவர் என்ற ரீதியில் மாவட்ட பிரதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
9. உறுப்பினர் நான்காண்டு சந்தா ரூ5; ஃ- ( ரூபாய் ஐந்து மட்டும்) -ல் பிரைமரிக்கு ரூ.2ஃ- மாவட்டத்திற்கு ரூ1ஃ- மாநிலத்திற்கு 2ஃ- என்ற விகிதத்தில்
10. ஓவ்வொரு பிரைமரியிலும் சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விண்ணப்ப படிவங்களில் உள்ள எல்லா விவரங்களையும், பிரைமரி உறுப்பினர் பதிவு ஏடு ஒன்றில் பதிவு செய்திட வேண்டும். அந்த பதிவேட்டில் உள்ளபடிதான் மாநில முஸ்லிம் லீக் பதிவு ஏட்டில் பதிவு செய்யப்பட்டு, உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
11. பிரைமரி தேர்தல் மாநில தேர்தல் அதிகாரி, மாவட்ட தலைவர் - செயலாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும். இத்தேர்தலுக்கு முன்பாக பிரைமரி பொறுப்பாளர்கள், உறுப்பினர் படிவத்தையும், அதற்கான செயலாளர் இடம் வழங்க வேண்டும். பிரைமரி தேர்தல் நடைபெற்ற முழு விபரம் தலைமை நிலையத்திற்கு கிடைக்கப் பெற்றவுடன் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படும்.
12. பிரைமரி தேர்தல் அங்கீகாரச் சான்றிதழ்களில்;, அந்தந்த பிரைமரி - தலைவர், செயலாளர், பொருளாளர், ஆகியோரின் பெயர் மற்றும் முகவரி இடம் பெறும். இச்சான்றிதழ் வங்கி கணக்கு துவங்குதல், அரசு துறை காரியங்களுக்கு பயன் அளிக்கக் கூடியவைகளாகும்.
13. அகில இந்திய புதிய சட்ட விதிப்படி, இளைஞர் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எப்) சுதத்திர தொழிலாளர் ய+னியன் (எஸ்.டி.யு) , மகளிர் லீக் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அணிகளாகும். இந்த அணிகளின் அமைப்பாளர்கள் அனைத்து பிரைமரி;களிலும் தேர்வு செய்யப்பட வேண்டும்.
14. இளைஞர் லீக் அமைப்பாளர்களின் வயது வரம்பு 35 ஆகும், முஸ்லிம் மாணவர் பேரவை (எம். எஸ். எப்) அமைப்பாளர்களின் வயது வரம்பு 27 ஆகும், சுதந்திர தொழிலாளர் ய+னியன் (எஸ்.டி.யு) அமைப்பாளர்கள் தொழிலாளர்களுடன் தொடர்புடையவர்களாக இருத்தல் வேண்டும். மகளிர் லீக் அமைப்பாளர்களாக மகளிர் சுய உதவிக்குழு, கல்வி மற்றும் சமூக பணிகளாற்றும் பெண்களை தேர்வு செய்யவும்.
15. 2010 பிப்ரவரி மாதம் இறுதியில் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்பு தலைமை நிலையத்திலிருந்து வெளியிடப்படும். இத்தேர்தல் மாநில தலைவர், பொதுச் செயலாளர், பாராளுமன்ற - சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெறும் இத்தேர்தலுக்கு முன்பாக மாவட்ட தலைவர் - செயலாளர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரைமரிகளிலிருந்தும் பெறப்பட்ட உறுப்பினர் படிவத்தையும், அதற்கான
16. மாநில தலைமை நிலையத்தில் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் முழு விபரங்களையும் கணினியில் பதிவு செய்திட பிரத்தியேகமாக புதிதாக பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
17. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஊழியர்களின் முழு ஒத்துழைப்போடும் திட்டமிட்ட பணிகளாலும் தாய்ச்சபையை மேலும் வலிமை மிக்கதாக ஆக்கிடுவோம். நம் லட்சியப் பணிகளில் ஒற்றுமையுடனும், தியாக மனப்பான்மையுடனும் செயலாற்றி வெற்றிகள் பல கண்டிடுவோம். அல்லாஹ் அருள்வானாக வஸ்ஸலாம்.
- கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர்
மாநில பொதுச் செயலாளர்,
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்
(தமிழ்நாடு மாநிலம்)
Labels:
அறிவிப்பு,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
தேர்தல்,
பிரைமரி
Thursday, December 11, 2008
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு அறிவிப்பு!
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு அறிவிப்பு!
தமிழ்நாடு மாநில, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக் குழுக்கூட்டம், 27-12-2008 சனிக்கிழமை, காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரில், கீழ்கண்ட முகவரியில், தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்கள் தலைமையில் நடைபெறும்.
நிகழ்ச்சி நிரல் :
1., அரசியல் நிலைமை
2. இயக்க நிதி சேகரிப்பு
3. மண்டல மாநாடுகள், முஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு பற்றி
4. லக்னோ அகில இந்திய மாநாட்டில் பங்குபெறுவது பற்றி
5. தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள்
கூட்டம் நடைபெறும் இடம் :
வாவு வஜிஹா மகளிர் கல்லூரி காயல்பட்டினம் -, திருச்செந்தூர் நெடுஞ்சாலை காயல்பட்டினம் - 628 204.
திருநெல்வேலி - தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு வருபவர்களை காயல்பட்டினம் அழைத்து வர தூத்துக்குடி மாவட்டம் சார்பாக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
தொடர்புக்கு கீழ்கண்டவர்களில் ஒருவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம்:
1. வாவு நாஸர் (தூத்துக்குடி மாவட்ட செயலாளர்) - செல் : 9788131176
2. பி.எம்.எஸ்.அமானுல்லா (காயல் நகர செயலாளர்) - செல் : 9842199731
3. எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ (மாநில பதிப்பக குழு உறுப்பினர்) - செல் : 9443839401
http://www.muslimleaguetn.com/hqreleases.asp?id=27
தமிழ்நாடு மாநில, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக் குழுக்கூட்டம், 27-12-2008 சனிக்கிழமை, காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரில், கீழ்கண்ட முகவரியில், தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்கள் தலைமையில் நடைபெறும்.
நிகழ்ச்சி நிரல் :
1., அரசியல் நிலைமை
2. இயக்க நிதி சேகரிப்பு
3. மண்டல மாநாடுகள், முஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு பற்றி
4. லக்னோ அகில இந்திய மாநாட்டில் பங்குபெறுவது பற்றி
5. தலைவர் அனுமதியுடன் இதர விஷயங்கள்
கூட்டம் நடைபெறும் இடம் :
வாவு வஜிஹா மகளிர் கல்லூரி காயல்பட்டினம் -, திருச்செந்தூர் நெடுஞ்சாலை காயல்பட்டினம் - 628 204.
திருநெல்வேலி - தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு வருபவர்களை காயல்பட்டினம் அழைத்து வர தூத்துக்குடி மாவட்டம் சார்பாக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
தொடர்புக்கு கீழ்கண்டவர்களில் ஒருவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம்:
1. வாவு நாஸர் (தூத்துக்குடி மாவட்ட செயலாளர்) - செல் : 9788131176
2. பி.எம்.எஸ்.அமானுல்லா (காயல் நகர செயலாளர்) - செல் : 9842199731
3. எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ (மாநில பதிப்பக குழு உறுப்பினர்) - செல் : 9443839401
http://www.muslimleaguetn.com/hqreleases.asp?id=27
Subscribe to:
Posts (Atom)