சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் இரத்த தான முகாம்!
http://www.muslimleaguetn.com/news.asp?id=157
15.08.2008 அன்று இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு, நேதாஜி சாலை - மரப்பாலம் அருகிலுள்ள மகாத்மா நினைவு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் ஈரோடு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்) ஆகியன அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் நடத்தவுள்ளது.
இம்முகாமிற்கு மாவட்ட தலைவர் ஏ.ஆர்.கலீபுல்லாஹ் தலைமையேற்கிறார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஏ.சாதிக் அலீ வரவேற்புரையாற்றுகிறார். வி.ஐ.பி. டெய்லர் பாக்யராஜ், எம்.ஜபருல்லா (எம்.எஸ்.எஃப்.), ஏ.எஸ்.சுஹைல் அஹ்மத் (எம்.எஸ்.எஃப்.), எம்.அன்வர் ஹ{ஸைன் (ஸ்டார் விஷன்), எஸ்.மீரா ஹ{ஸைன் (எம்.எஸ்.எஃப்.), ஏ.பிலால் (எம்.எஸ்.எஃப்.). பி.தவ்ஃபீக் (எம்.எஸ்.எஃப்.), ரியாஜ் முஹம்மது (எம்.எஸ்.எஃப்.) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அ.பஜ்லுர்ரஹ்மான் நன்றியுரையாற்றவுள்ளார்.
இம்முகாமின் சிறப்பம்சங்களாக, இரத்த வகை தெரியாதோருக்கு இலவசமாக அவற்றைக் கண்டறிதலும், பள்ளிக்கூடத்திற்கு மரக்கன்றுகள் அர்ப்பணிப்பும் நடைபெறவுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Friday, August 15, 2008
முஸ்லிம் லீக் தலைமை நிலையத்தில் இந்திய சுதந்திர தின விழா!
முஸ்லிம் லீக் தலைமை நிலையத்தில் இந்திய சுதந்திர தின விழா!
15-08-2008 வெள்ளி காலை 9.00 மணிக்கு தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையமான காயிதெ மில்லத் மன்ஸிலில் இந்திய சுதந்திர தினவிழா நடைபெறும்.
மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்றுவார்.
மாநிலப் பொருளாளர் வடக்குகோட்டையார் வி.எம். செய்யது அஹமது இனிப்பு வழங்குவார். மாநில நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
வடசென்னை, தென்சென்னை மாவட்ட முஸ்லிம் லீகின் நிர்வாகிகள் செயல்வீரர்கள் அனைவரும் விழாவில் பங்கேற்குமாறு வட சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
15-08-2008 வெள்ளி காலை 9.00 மணிக்கு தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையமான காயிதெ மில்லத் மன்ஸிலில் இந்திய சுதந்திர தினவிழா நடைபெறும்.
மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்றுவார்.
மாநிலப் பொருளாளர் வடக்குகோட்டையார் வி.எம். செய்யது அஹமது இனிப்பு வழங்குவார். மாநில நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
வடசென்னை, தென்சென்னை மாவட்ட முஸ்லிம் லீகின் நிர்வாகிகள் செயல்வீரர்கள் அனைவரும் விழாவில் பங்கேற்குமாறு வட சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Labels:
இந்தியா,
சுதந்திர தின விழா,
தலைமை,
நிலையம்,
முஸ்லிம் லீக்
இஸ்லாமிய பெண்கள் மாநாட்டில் அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் அப்துர் ரஹ்மான்!
இஸ்லாமிய பெண்கள் மாநாட்டில் அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் அப்துர் ரஹ்மான்!
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினரும், ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவருமான முத்துப்பேட்டை எம்.அப்துர்ரஹ்மான் தமிழகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
வரும் 15ம் தேதி வெள்ளிக்கிழமை திருச்சி வரும் அவர் காலை 9 மணிக்கு ஜமால் முகம்மது கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். காலை 10 மணிக்கு திருச்சி 49வது வட்டத்தில் முஸ்லிம் லீக் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் சிறு விவசாயிகளுக்கு மூன்று சக்கர தள்ளுவண்டிகளை வழங்குகிறார்.
அன்று இரவு 9மணிக்கு நெல்லிக்குப்பம் தைக்கால் தெரு ஷேக்சாகிப் தர்கா வளாகத்தில் இஸ்லாமிய நல்வாழ்வு சங்கம் நடத்தும் இஸ்லாமிய பெண்கள் கல்வி மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார்.
16ஆம் தேதி சனிக்கிழமை காலை இந்திய முஸ்லிம் அயோஸியேஷன் ஒருங்கி ணைப்பாளர்களுடன் கல்வி உதவி தொகை பற்றி ஆலோசிக்கிறார். அன்று மாலை முத்துப் பேட்டையில் நகர முஸ்லிம் லீக் அலுவலகத்தை திறந்து வைத்து, திருவாரூர் மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினரும், ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவருமான முத்துப்பேட்டை எம்.அப்துர்ரஹ்மான் தமிழகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
வரும் 15ம் தேதி வெள்ளிக்கிழமை திருச்சி வரும் அவர் காலை 9 மணிக்கு ஜமால் முகம்மது கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். காலை 10 மணிக்கு திருச்சி 49வது வட்டத்தில் முஸ்லிம் லீக் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் சிறு விவசாயிகளுக்கு மூன்று சக்கர தள்ளுவண்டிகளை வழங்குகிறார்.
அன்று இரவு 9மணிக்கு நெல்லிக்குப்பம் தைக்கால் தெரு ஷேக்சாகிப் தர்கா வளாகத்தில் இஸ்லாமிய நல்வாழ்வு சங்கம் நடத்தும் இஸ்லாமிய பெண்கள் கல்வி மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார்.
16ஆம் தேதி சனிக்கிழமை காலை இந்திய முஸ்லிம் அயோஸியேஷன் ஒருங்கி ணைப்பாளர்களுடன் கல்வி உதவி தொகை பற்றி ஆலோசிக்கிறார். அன்று மாலை முத்துப் பேட்டையில் நகர முஸ்லிம் லீக் அலுவலகத்தை திறந்து வைத்து, திருவாரூர் மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
Thursday, August 14, 2008
Thursday, July 24, 2008
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு குறுந்தகடு வெளியீட்டு விழா!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு குறுந்தகடு வெளியீட்டு விழா!
எதிர்வரும் 26.07.2008 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் திருச்சி, பாலக்கரை - மதுரை ரோடு, பேலஸ் தியேட்டர் அருகிலுள்ள சந்தன மஹாலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு குறுந்தகடு வெளியீட்டு விழா மற்றும் எழுத்தரசு ஏ.எம்.ஹனீஃபின் எழுத்துலக சேவைக்கு பாராட்டு விழா ஆகியன நடைபெறவுள்ளன.
விழாவுக்கு துபை காயிதெமில்லத் பேரவை தலைவர் ஹாஜி எம்.அப்துர் ரஹ்மான் தலைமையேற்கிறார். திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் வி.எம்.ஃபாரூக் வரவேற்புரையாற்றுகிறார்.
புறநகர் மாவட்ட தலைவர் ஜி.எஸ்.ஏ.மன்னான், மாநகர் மாவட்டத் தலைவர் கே.எம்.கே.ஹபீபுர்ரஹ்மான், புறநகர் மாவட்ட பொருளாளர் எம்.ஒய்.ஷாஜஹான், மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.அப்துல் கப+ர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு குறுந்தகட்டை, மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ.சையத் சத்தார் வெளியிட, முதல் பிரதியை துபை காயிதெ மில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஏ.லியாகத் அலி, துபை காயிதெ மில்லத் பேரவை ஏ.முஹம்மது தாஹா ஆகியோர் பெறுகின்றனர்.
மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.செய்யது அஹமது, எம்.ஏ.கலீலுர் ரஹ்மான் எம்.எல்.ஏ., எச்.அப்துல் பாஸித் எம்.எல்.ஏ., தளபதி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், கவிஞர் இஸட்.ஜபருல்லாஹ், நெல்லை மஜீத், திருப்ப+ர் எம்.ஏ. சத்தார், கோவை எம்.எஸ். முஹம்மது ரபீக், ஜி.எம். ஹாஸிம், முஃப்தி ஏ.உமர் பாரூக், எம். ஜெய்னுல் ஆபிதீன், காயல் மஹப+ப், கமுதி பஷீர், கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், கோவை நாஸர் எம்.சி., வழக்கறிஞர் வெ.ஜீவகிரிதரன், வழுத்தூர் ஏ.பஷீர் அஹமது, மில்லத் எஸ்.பி.முஹம்மது இஸ்மாயில், எம்.ஏ.எம். நிஜாமுத்தீன் (எம்.ஏ.எம். கல்லூரி), கே.பி.இஸ்மத் பாட்ஷா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மாநில துணைத்தலைவர் எழுத்தரசு ஏ.எம்.ஹனீஃப் ஏற்புரை நிகழ்த்துகிறார்.
விழா ஏற்பாடுகளை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி புறநகர் மாவட்டம் ஆகியன இணைந்து செய்துள்ளன.
இதனையே அழைப்பாக ஏற்று தாய்ச்சபையின் முன்னணியினர், சமுதாய பெருமக்கள் அனைவரும் பெருந்திரளாக வருகை தர அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.
தகவல்:
எம்.கே.எஸ்.ஜமால்,
மாநகர் மாவட்ட செயலாளர்.
http://www.muslimleaguetn.com/news.asp?id=113
எதிர்வரும் 26.07.2008 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் திருச்சி, பாலக்கரை - மதுரை ரோடு, பேலஸ் தியேட்டர் அருகிலுள்ள சந்தன மஹாலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு குறுந்தகடு வெளியீட்டு விழா மற்றும் எழுத்தரசு ஏ.எம்.ஹனீஃபின் எழுத்துலக சேவைக்கு பாராட்டு விழா ஆகியன நடைபெறவுள்ளன.
விழாவுக்கு துபை காயிதெமில்லத் பேரவை தலைவர் ஹாஜி எம்.அப்துர் ரஹ்மான் தலைமையேற்கிறார். திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் வி.எம்.ஃபாரூக் வரவேற்புரையாற்றுகிறார்.
புறநகர் மாவட்ட தலைவர் ஜி.எஸ்.ஏ.மன்னான், மாநகர் மாவட்டத் தலைவர் கே.எம்.கே.ஹபீபுர்ரஹ்மான், புறநகர் மாவட்ட பொருளாளர் எம்.ஒய்.ஷாஜஹான், மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.அப்துல் கப+ர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு குறுந்தகட்டை, மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ.சையத் சத்தார் வெளியிட, முதல் பிரதியை துபை காயிதெ மில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஏ.லியாகத் அலி, துபை காயிதெ மில்லத் பேரவை ஏ.முஹம்மது தாஹா ஆகியோர் பெறுகின்றனர்.
மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.செய்யது அஹமது, எம்.ஏ.கலீலுர் ரஹ்மான் எம்.எல்.ஏ., எச்.அப்துல் பாஸித் எம்.எல்.ஏ., தளபதி ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், கவிஞர் இஸட்.ஜபருல்லாஹ், நெல்லை மஜீத், திருப்ப+ர் எம்.ஏ. சத்தார், கோவை எம்.எஸ். முஹம்மது ரபீக், ஜி.எம். ஹாஸிம், முஃப்தி ஏ.உமர் பாரூக், எம். ஜெய்னுல் ஆபிதீன், காயல் மஹப+ப், கமுதி பஷீர், கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், கோவை நாஸர் எம்.சி., வழக்கறிஞர் வெ.ஜீவகிரிதரன், வழுத்தூர் ஏ.பஷீர் அஹமது, மில்லத் எஸ்.பி.முஹம்மது இஸ்மாயில், எம்.ஏ.எம். நிஜாமுத்தீன் (எம்.ஏ.எம். கல்லூரி), கே.பி.இஸ்மத் பாட்ஷா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மாநில துணைத்தலைவர் எழுத்தரசு ஏ.எம்.ஹனீஃப் ஏற்புரை நிகழ்த்துகிறார்.
விழா ஏற்பாடுகளை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி புறநகர் மாவட்டம் ஆகியன இணைந்து செய்துள்ளன.
இதனையே அழைப்பாக ஏற்று தாய்ச்சபையின் முன்னணியினர், சமுதாய பெருமக்கள் அனைவரும் பெருந்திரளாக வருகை தர அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.
தகவல்:
எம்.கே.எஸ்.ஜமால்,
மாநகர் மாவட்ட செயலாளர்.
http://www.muslimleaguetn.com/news.asp?id=113
Thursday, July 17, 2008
துணை ஜனாதிபதியுடன் பேராசிரியர் சந்திப்பு!
துணை ஜனாதிபதியுடன் பேராசிரியர் சந்திப்பு!
சிறுபான்மை சமூகத்தின் முதல் கவனம் கல்வி, சமூக நலத்திட்டங்களில்தான் இருக்க வேண்டும் என தம்மை சந்தித்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. தலைமையிலான குழுவினரிடம் இந்தியக் குடியரசு துணைத் தலைவர் அன்ஸாரி கேட்டுக் கொண்டார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., தமிழ்நாடு சிறுபான்மையினர் நிதி மேம்பாட்டுக் கழக தலைவர் சேவியர் அருள்ராஜ், தென்னக ரயில்வே சென்னை கூடுதல் மேலாளர் சுல்தான் முசாதிக், மஜ்லிஸே முஸாவராத் தலைவர் டாக்டர் சத்தார், திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி தலைவர் அப்துல் ஹக், பொருளாளர் நல்லாசிரியர் அப்துல் முத்தலிப், சித்திக் அஹமது, சென்னை பார்த்தியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் நஸீமா பேகம், தென்சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் கே.பி.இஸ்மத் பாஷா ஆகியோர் நேற்று (ஜூலை 14) மாலை இந்திய குடியரசு துணைத்தலைவர் அன்ஸாரியை புதுடெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை:
நீதிபதி சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் சிறுபான்மை மாணவர்களுக்கு தற்போது கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த உதவிகள் அனைத்தும் மாணவர்களின் மதிப்பெண் தகுதி அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. இதனால் கல்வியில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின ஏழை மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கியது போல், சிறுபான்மையின மக்களுக்கும், குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கினால் கிராமப்புறங்களை சார்ந்த பின்தங்கியுள்ள ஏழை மாணவர்களும் பயன்பெறுவர் என இக்குழுவினர் குறிப்பிட்டனர்.
குஜராத், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இத்தகைய கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதே இல்லை. சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்படும் மத்திய அரசின் மானியங்கள் கூட திருப்பி அனுப்பப்படுகின்றன என்ற அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இதில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர்.
வக்ஃப் அபிவிருத்தி:
மேலும், வக்ஃப், செய்யப்பட்டுள்ள சொத்துக்களின் ஆக்கிரமிப்புக்கள் செய்திருப்பவர்களை அகற்றுவதோடு அந்த சொத்துக்களை அபிவிருத்தி செய்வதற்கு தனி திட்டங்கள் செயல்படுத்த வலியுறுத்தினர்.
குழுவினரின் கோரிக்கைகளை கேட்டறிந்து குடியரசு துணைத் தலைவர் மத்திய - மாநில அரசுகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என்றார்.
சிறுபான்மையினருக்கு இன்று ஏராளமான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அரசு அமைத்த குழுக்களின் பரிந்துரையில் நிறைய பலன் கிட்டியுள்ளது. ஆனால் இவைகள் மக்களுக்குப் போய் சேரவேண்டும். அரசு திட்டங்கள் பத்திரிகை விளம்பரத்தால் முழுமையாக மக்களை போய் சென்றடையாது.
ஜமாஅத் அமைப்புகள், பள்ளிவாசல் ஜும்ஆ மேடை, பொது நல அமைப்புகள் மூலம் தனி பிரச்சாரம் செய்யப்பட்டு இந்த நல்ல பலன்கள் உரியவர்களை சென்றடைய வாய்ப்பு ஏற்படுத்தித் தர சிறுபான்மை அமைப்புக்கள் முன்வர வேண்டும்.
கவ்வியில் முதல் கவனம் வேண்டும்:
இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மையினரின் முழு முதல் கவனமும் கல்வி, சமூக நலத் திட்டங்களில்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர், சிறுபான்மையினர் அனைவரும் கல்வி கற்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் நடத்தும் ஒரு கல்வி நிறுவனத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினேன்.
ஆனால், அதில் ஒரு முஸ்லிம் மாணவர் கூட இல்லை. இதுபற்றி விசாரித்தபோது அந்த கல்வி நிறுவனத்தின் தரம் அறிந்து அனைவருமே அதில் சேர்ந்துள்ளனர் என தெரிய வந்தது. திறமையாக கல்வி நிறுவனம் நடத்துகின்றவர்கள் தங்கள் சமுதாயத்தில் திறமை மிக்க மாணவர்களை உருவாக்கவும் முன்வர வேண்டும்.
இவ்வாறு தம்மை சந்தித்த குழுவினரிடம் குடியரசு துணைத்தலைவர், அன்ஸாரி கேட்டுக் கொண்டார்.
www.muslimleaguetn.com
சிறுபான்மை சமூகத்தின் முதல் கவனம் கல்வி, சமூக நலத்திட்டங்களில்தான் இருக்க வேண்டும் என தம்மை சந்தித்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. தலைமையிலான குழுவினரிடம் இந்தியக் குடியரசு துணைத் தலைவர் அன்ஸாரி கேட்டுக் கொண்டார்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., தமிழ்நாடு சிறுபான்மையினர் நிதி மேம்பாட்டுக் கழக தலைவர் சேவியர் அருள்ராஜ், தென்னக ரயில்வே சென்னை கூடுதல் மேலாளர் சுல்தான் முசாதிக், மஜ்லிஸே முஸாவராத் தலைவர் டாக்டர் சத்தார், திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரி தலைவர் அப்துல் ஹக், பொருளாளர் நல்லாசிரியர் அப்துல் முத்தலிப், சித்திக் அஹமது, சென்னை பார்த்தியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் நஸீமா பேகம், தென்சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் கே.பி.இஸ்மத் பாஷா ஆகியோர் நேற்று (ஜூலை 14) மாலை இந்திய குடியரசு துணைத்தலைவர் அன்ஸாரியை புதுடெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை:
நீதிபதி சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் சிறுபான்மை மாணவர்களுக்கு தற்போது கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த உதவிகள் அனைத்தும் மாணவர்களின் மதிப்பெண் தகுதி அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. இதனால் கல்வியில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின ஏழை மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கியது போல், சிறுபான்மையின மக்களுக்கும், குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கினால் கிராமப்புறங்களை சார்ந்த பின்தங்கியுள்ள ஏழை மாணவர்களும் பயன்பெறுவர் என இக்குழுவினர் குறிப்பிட்டனர்.
குஜராத், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இத்தகைய கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதே இல்லை. சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்படும் மத்திய அரசின் மானியங்கள் கூட திருப்பி அனுப்பப்படுகின்றன என்ற அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இதில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர்.
வக்ஃப் அபிவிருத்தி:
மேலும், வக்ஃப், செய்யப்பட்டுள்ள சொத்துக்களின் ஆக்கிரமிப்புக்கள் செய்திருப்பவர்களை அகற்றுவதோடு அந்த சொத்துக்களை அபிவிருத்தி செய்வதற்கு தனி திட்டங்கள் செயல்படுத்த வலியுறுத்தினர்.
குழுவினரின் கோரிக்கைகளை கேட்டறிந்து குடியரசு துணைத் தலைவர் மத்திய - மாநில அரசுகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என்றார்.
சிறுபான்மையினருக்கு இன்று ஏராளமான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அரசு அமைத்த குழுக்களின் பரிந்துரையில் நிறைய பலன் கிட்டியுள்ளது. ஆனால் இவைகள் மக்களுக்குப் போய் சேரவேண்டும். அரசு திட்டங்கள் பத்திரிகை விளம்பரத்தால் முழுமையாக மக்களை போய் சென்றடையாது.
ஜமாஅத் அமைப்புகள், பள்ளிவாசல் ஜும்ஆ மேடை, பொது நல அமைப்புகள் மூலம் தனி பிரச்சாரம் செய்யப்பட்டு இந்த நல்ல பலன்கள் உரியவர்களை சென்றடைய வாய்ப்பு ஏற்படுத்தித் தர சிறுபான்மை அமைப்புக்கள் முன்வர வேண்டும்.
கவ்வியில் முதல் கவனம் வேண்டும்:
இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மையினரின் முழு முதல் கவனமும் கல்வி, சமூக நலத் திட்டங்களில்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர், சிறுபான்மையினர் அனைவரும் கல்வி கற்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் நடத்தும் ஒரு கல்வி நிறுவனத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினேன்.
ஆனால், அதில் ஒரு முஸ்லிம் மாணவர் கூட இல்லை. இதுபற்றி விசாரித்தபோது அந்த கல்வி நிறுவனத்தின் தரம் அறிந்து அனைவருமே அதில் சேர்ந்துள்ளனர் என தெரிய வந்தது. திறமையாக கல்வி நிறுவனம் நடத்துகின்றவர்கள் தங்கள் சமுதாயத்தில் திறமை மிக்க மாணவர்களை உருவாக்கவும் முன்வர வேண்டும்.
இவ்வாறு தம்மை சந்தித்த குழுவினரிடம் குடியரசு துணைத்தலைவர், அன்ஸாரி கேட்டுக் கொண்டார்.
www.muslimleaguetn.com
இராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்
இராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்
இராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் 15 நவம்பர் 2008 சனிக்கிழமை காலை நடைபெற்றது.
மாவட்ட செயற்குழுக் கூட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹாஜி எம்.எஸ். சௌக்கத் அலி தலைமை தாங்கினார். பேரையூர் மவ்லவி சாகுல் ஹமீது அரூஸி இறைவசனங்களை ஓதினார்.
மாவட்ட செயலாளர் ஹாஜி எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் அனைவரையும் வரவேற்று தீர்மானங்களை முன்மொழிந்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு :
மறைந்த மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி கே.கே.எஸ்.ஏ.பக்ருதீன் மறைவுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்னாரது தியாக மனப்பான்மையை மாவட்ட நிர்வாகிகள் நினைவு கூர்ந்தனர். அவருக்காக துஆ ஓதப்பட்டது.
இராமநாதபுரம், விருதுநகர், சிவகெங்கை,கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பங்கேற்கும் மண்டல மாநாட்டினை இராமநாதபுரத்திலேயே நடத்த மாநில தலைமையினை கேட்டுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. இதற்காக 31 பேர் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழு பிற மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் செய்யும்.
டிசம்பர் மாதம் 26,27 ஆகிய தேதிகளில் உத்திர பிரதேச மாநிலம் லக்ணோவில் நடக்கும் அகில இந்திய மாநாட்டில் மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
மாலேகான் குண்டுவெடிப்பில் உண்மைக் குற்றவாளியை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இலங்கைத் தமிழர் துயர்துடைக்க ஒத்துழைப்பு நல்கி வரும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் இப்பிரச்சனையில் ஒரு குழுவை ஏற்படுத்த பிரதமரை தமிழக முதல்வர் கேட்டுக் கொள்ளவேண்டும் எனவும், அக்குழு இலங்கை சென்று பிரச்சனைகளை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ராமேசுவரம் தொடர்வண்டிப்பாதை விரிவாக்கப் பணி நடந்த பின்னர் அரசு அறிவித்தபடி வடமாநிலங்களை இணைக்கும் வண்ணம் தொடர்வண்டிகளை விட அரசும், ரயில்வே நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாநில பொருளாளர் நிதிநிலை குறித்து அனுப்பிய சுற்றறிக்கை கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
பயிற்சிப் பாசறைகள் நடத்திய பனைக்குளம், மண்டபம், கீழக்கரை நகர முஸ்லிம் லீக் கிளைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதே போல் மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் பயிற்சிப் பாசறையினை விரைந்து நடத்தி முடிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் ஆர்வத்துடன் அதிக அளவில் பங்கேற்ற அனைவருக்கும் பாரட்டு தெரிவிக்கப்பட்டது. இம்மாநாட்டுக்காக சீருடைகளை தயாரித்து வழங்கிய பனைக்குளம் நகர முஸ்லிம் லிக்கிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அமீரக காயிதெமில்லத் பேரவை செய்தித் தொடர்பாளர் முதுவை ஹிதாயத், பனைக்குளம் அபு முஹம்மது, கீழக்கரை வரிசை முஹம்மது ஹாஜியார், கீழக்கரை லெப்பைத்தம்பி, ஆர்.எஸ்.மங்கலம் அமானுல்லாஹ், தேவிபட்டிணம் சித்திக், மண்டபம் லியாக்கத் அலி, வேதாளை அப்துல் ரஷீத் ஆலிம், இராமநாதபுரம் சாதுல்லாஹ் கான், இராமநாதபுரம் மணிச்சுடர் ஏஜெண்ட் யாக்கூப், முதுகுளத்தூர் அமானுல்லாஹ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
வேதாளை அப்துல் ரஷீத் ஆலிம் துஆவுடன் செயற்குழுக் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்திற்குப் பின்னர் மீன் பொறியலுடன் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செய்தி : முதுவை ஹிதாயத் ( எம்.என்.ஏ. )
இராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் 15 நவம்பர் 2008 சனிக்கிழமை காலை நடைபெற்றது.
மாவட்ட செயற்குழுக் கூட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹாஜி எம்.எஸ். சௌக்கத் அலி தலைமை தாங்கினார். பேரையூர் மவ்லவி சாகுல் ஹமீது அரூஸி இறைவசனங்களை ஓதினார்.
மாவட்ட செயலாளர் ஹாஜி எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் அனைவரையும் வரவேற்று தீர்மானங்களை முன்மொழிந்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு :
மறைந்த மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி கே.கே.எஸ்.ஏ.பக்ருதீன் மறைவுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்னாரது தியாக மனப்பான்மையை மாவட்ட நிர்வாகிகள் நினைவு கூர்ந்தனர். அவருக்காக துஆ ஓதப்பட்டது.
இராமநாதபுரம், விருதுநகர், சிவகெங்கை,கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பங்கேற்கும் மண்டல மாநாட்டினை இராமநாதபுரத்திலேயே நடத்த மாநில தலைமையினை கேட்டுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. இதற்காக 31 பேர் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழு பிற மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் செய்யும்.
டிசம்பர் மாதம் 26,27 ஆகிய தேதிகளில் உத்திர பிரதேச மாநிலம் லக்ணோவில் நடக்கும் அகில இந்திய மாநாட்டில் மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
மாலேகான் குண்டுவெடிப்பில் உண்மைக் குற்றவாளியை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இலங்கைத் தமிழர் துயர்துடைக்க ஒத்துழைப்பு நல்கி வரும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் இப்பிரச்சனையில் ஒரு குழுவை ஏற்படுத்த பிரதமரை தமிழக முதல்வர் கேட்டுக் கொள்ளவேண்டும் எனவும், அக்குழு இலங்கை சென்று பிரச்சனைகளை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ராமேசுவரம் தொடர்வண்டிப்பாதை விரிவாக்கப் பணி நடந்த பின்னர் அரசு அறிவித்தபடி வடமாநிலங்களை இணைக்கும் வண்ணம் தொடர்வண்டிகளை விட அரசும், ரயில்வே நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாநில பொருளாளர் நிதிநிலை குறித்து அனுப்பிய சுற்றறிக்கை கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
பயிற்சிப் பாசறைகள் நடத்திய பனைக்குளம், மண்டபம், கீழக்கரை நகர முஸ்லிம் லீக் கிளைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதே போல் மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் பயிற்சிப் பாசறையினை விரைந்து நடத்தி முடிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் ஆர்வத்துடன் அதிக அளவில் பங்கேற்ற அனைவருக்கும் பாரட்டு தெரிவிக்கப்பட்டது. இம்மாநாட்டுக்காக சீருடைகளை தயாரித்து வழங்கிய பனைக்குளம் நகர முஸ்லிம் லிக்கிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அமீரக காயிதெமில்லத் பேரவை செய்தித் தொடர்பாளர் முதுவை ஹிதாயத், பனைக்குளம் அபு முஹம்மது, கீழக்கரை வரிசை முஹம்மது ஹாஜியார், கீழக்கரை லெப்பைத்தம்பி, ஆர்.எஸ்.மங்கலம் அமானுல்லாஹ், தேவிபட்டிணம் சித்திக், மண்டபம் லியாக்கத் அலி, வேதாளை அப்துல் ரஷீத் ஆலிம், இராமநாதபுரம் சாதுல்லாஹ் கான், இராமநாதபுரம் மணிச்சுடர் ஏஜெண்ட் யாக்கூப், முதுகுளத்தூர் அமானுல்லாஹ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
வேதாளை அப்துல் ரஷீத் ஆலிம் துஆவுடன் செயற்குழுக் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்திற்குப் பின்னர் மீன் பொறியலுடன் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செய்தி : முதுவை ஹிதாயத் ( எம்.என்.ஏ. )
Subscribe to:
Posts (Atom)