Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Thursday, March 18, 2010

முஸ்லிம் லீக் பிரைமரி தேர்தல்களை விரைவாக முடித்திட தலைவர் பேராhசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள்

முஸ்லிம் லீக் பிரைமரி தேர்தல்களை விரைவாக முடித்திட தலைவர் பேராhசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள்

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் ஒவ்வொரு ஆண்டுக்கான சேவைத் திட்டங்கள் வகுத்தளிக்கப்பட்டதன் அடிப்படையில் 2010 ஆம் ஆண்டில் முஸ்லிம் லீக் பயிற்சி முகாம் தஞ்சை வழுத்தூரிலும் கிருஷ்ணகிரி ஒசூரிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இளைஞர்கள் பல நூற்றுக்கணக்கில் பங்கேற்று, முஸ்லிம் லீக் கொள்கை கோட்பாடுகளில் பயிற்றி பெற்று, சமுதாய சன்மார்க்க தேசிய சேவையில் இப்பொழுது முனைந்து ஈடுபட்டும் பாடுபட்டும் வருகின்றனர்.
எதிர் பார்த்ததைவிடப் பலமடங்கு இதயத்துக்கு நிறைவு தரும் வகையில் இந்தப் பயிற்சி முகாம்களும், அவற்றின் பயன்பாடுகளும் அமைந்திருக்கின்றன.
அடுத்த திட்டமாக, மார்ச் 10 ஆம் நாள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிறுவன தினவிழா நெல்லைச் சீமையில் மேலப்பளையத்தில் மிகமிக விமரிசையாக நடைபெற் றிருக்கிறது. மகளிர் அரங்கும், பிறைக் கொடி பேரணியும் விழாவுக்குப் பெருமை சேர்த்துள்ளன. மத்திய அமைச்சர் மாண்புமிகு மு.க. அழகிரி அவர்களும், மாநில அமைச்சர் மாண்புமிகு மொய்தீன்கான் அவர்களும், மாண்புமிகு ப+ங்கோதை அருணா அவர்களும் நிறைவு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். துராப்ஷா அவர்கள் தலைமையிலான விழாக்குழுவினர் மார்ச் 10ஆம் நாள் விழா தமிழக அரசியல் அரங்கில் அனைத்துக் கட்சிகளின் கவனத்தையும்
விழாவில் ~~இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் - இலட்சியப் பயணத்தில் இராஜாஜி ஹால் முதல் சாதாப் மஹால் வரை|| என்னும் சிறிய நூலும் வெளியிடப்பட்டது. முஸ்லிம் லீக் வரலாற்று ஆசிரியர் எழுத்தரசு ஏ.எம். ஹனீப் அவர்கள் 1948 மார்ச் 10 முதல் ஜனவரி 16, 2010 வரையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை இந்தக் குறுநூலில் கோர்வை செய்திருக்கிறார். அந்த நூலில் கேரள மாநிலத்தில் முஸ்லிம் லீக் எத்துணை பலமாக உள்ளது என்பதை எடுத்துக் காட்டும்விதமாக, அங்கே பன்னிரண் டாயிரம் பிரைமரிகளுக்கு மேல் உள்ளன என்பதை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அதாவது ஒரு கோடி இருபது இலட்சம் உறுப்பினர்களுக்கு மேலாக கேரளாவில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் சேர்ந்திருக்கின்றனர் என்பதே அந்த உண்மையாகும். கேரளாவில் முஸ்லிம்கள் மட்டுமன்றி, தலித் இன மக்களும் முஸ்லிம் லீகில் ஏராளமான இணைந்துள்ளனர். இதே நிலையைத் தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்ற பேரவாவின் அடிப்படையில்தான் பத்து இலட்சம் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
மகிழ்ச்சிய+ட்டும் செய்தி என்னவெனில், தமிழகத்தில் சுதந்திரத்துக்கு முன்னரும் அதன் பின்னரும் முஸ்லிம் லீக் நுழையாத பல ஊர்களில் இன்றைய தினம் நட்சத்திரம் பொறித்த பச்சிளம் பிறைக் கொடி பறக்கிறது@ ஆர்வத் துடிப்போடு அங்கெல்லாம் இளைஞர்கள் முஸ்லிம் லீகில் இணைந்து வருகின்றனர்@ புதிய பிரைமரிகள் உருவாக் கப்பட்டு வருகின்றன.
எந்த மாவட்டத்தில் உறுப்பினர் சேர்ப்பும் பிரைமரி தேர்தலும் நிறைவு பெற்றுள்ளதோ, அந்த மாவட்டத் தலைவரும் மாவட்டச் செயலாளரும் மாவட்டம் முழுவதிலும் உள்ள உறுப்பினர் படிவங்களை மாநில முஸ்லிம் லீக் தலைமையகத்தில் சேர்ப்பித்திட வேண்டும். அதோடு, ஒவ்வொரு பிரைமரிவாரியாக மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை பிரைமரி தேர்தல் விவரங்கள் மற்றும் உறுப்பினர் கட்டண மாநில அந்த மாவட்ட முஸ்லிம் லீக் தேர்தல் தேதியும் மற்ற விவரமும் அறிவிக்கப்பட விருக்கின்றது. சில மாவட்டங்களில் ஐம்பது ஆயிரத்துக்குப் மேலாக உறுப்பினர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் @ சில மாவட்டங் களில் சில ஆயிரம் பேர் மட்டுமே சேர்ந்திருக்கிறார்கள். இத்தகைய மாவட்டங்களில் உறுப்பினர் சேர்ப்புக்கு என்றும் பிரைமரி தேர்தலுக்கு என்றும் நாட்களைக் குறித்து அறிவித்து இப்பணிகளை மாவட்ட நிர்வாகிகள் முடித்திட வேண்டும்.
நாம் அறிவித்த தேதிகள் கடந்துள்ள நிலையிலும் சில இடங்களில் இந்தப் பணிகள் முழுமை பெறவில்லை என்னும் செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வலிமையான அடித்தளம் அமைக்கும் பணியில் அனைவரின் பங்களிப்பும் சிறப்பாக இருந்திடல் மிக மிக அவசியம்.
இன்றைக்குப் பாடுபட்டால்தான் நாளைக்குப் பலனை எதிர் பார்க்க முடியும்.

Saturday, January 23, 2010

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரைமரி தேர்தல் அறிவிப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரைமரி தேர்தல் அறிவிப்பு

அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கிளையின் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி அனைத்து மாநிலங்களிலும் முறையாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு பிரைமரி, மாவட்ட, மாநில நிர்வாகிகளின் தேர்தல் நடத்திட வேண்டுமென பெங்களுரு தேசிய பிரதிநிதிகள் மாநாடு பிரகடனம் வலியுறுத்தி இருக்கின்றது.
தமிழகத்தில் திட்டமிட்டபடி 2010 பிப்ரவரி முதல் தேதியிலிருந்து 20-02-2010 தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் பிரைமரி தேர்தலை நடத்திட மாவட்ட தலைவர், செயலாளர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பிரைமரி தேர்தல் நடைபெற்ற விவரங்களை ப+ர்த்தி செய்ய வேண்டிய படிவம் மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிர்வாகத் தேர்தலில் பேணப்பட வேண்டிய குறிப்பு பின்வருமாறு...
1. குறைந்தபட்சம் நூறு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அந்த பிரைமரியில் தேர்தல் நடத்தலாம். பிரைமரி தேர்தல் பொதுக்குழுவில் மூன்றில் ஒரு பகுதியினர் கோரம் ஆவார்கள்.
2. பிரைமரி தேர்தல் நடைபெறும் இடம், தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கையை பிரைமரி தலைவர் பெயரில் விநியோகிக்க வேண்டும். மாவட்டத்தலைவர் ஃ மாவட்டச் செயலாளர் ஃ மாநில தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடைபெறும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும்.
3. தேர்தல் நடைபெறும் தேதியை பத்து நாட்களில் இருந்து ஆறு நாட்ளளுக்கு முன்னதாக அறிவிப்பு செய்யவேண்டும்.
4. பிரைமரி தேர்தல் பொதுக்குழு கூடியவுடன் அனைத்து உறுப்பினர்களின் கையெழுத்து மினிட் புத்தகத்தில் பெற வேண்டும். தேர்தல் முடிவுகளை விவரமாகப் பதிவு செய்திட வேண்டும்.
5. தேர்தலில் ஜனநாயக முறைப்படியாக மெஜாரிட்டி வாக்குகள் பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவர். இரு போட்டியாளர்களுக்கு இடையில் சரிசமமாக வாக்குகள் உள்ள நிலையில் பிரைமரி பொதுக்குழுக் கூட்டத் தலைவர் தனது வாக்குடன் தீர்வு வாக்கு ஒன்றும் அளிக்கலாம். முன்னிலை வகிப்பவர் வாக்கு அளிக்க கூடாது.
6. பிரைமரி நிர்வாகிகளாகப் பொதுவாக ஒரு தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள் ஒரு செயலாளர், இரண்டு துணைச் செயலாளர்கள், ஒரு பொருளாளர். நிர்வாகக் குழுவுக்கு 5 ஃ 7 ஃ 9 ஃ 12 ஃ 15 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படலாம். அதிக பிரைமரி உறுப்பினர்கள் இருப்பின், துணைத் தலைவர் ஃ துணைச் செயலாளர்கள் எண்ணிக்கையை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.
7. பிரைமரி துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் பதவிகள் வார்டு அல்லது வட்டத்திற்கு ஒருவர் என்ற விகிதத்தில் பிரித்தளிக்க வேண்டும். துணைச் செயலாளர்கள் 45 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் நன்று. பிரைமரி, மாவட்டம், மாநிலம் ஆகிய நிர்வாகப் பொறுப்புக்களில், ஒருவருக்கு ஒரு பதவி என்றிருந்தால், மற்றும் சிலர் பணியாற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
8. ஓவ்வொரு பிரைமரியில் இருந்தும் பிரைமரி தலைவர், பிரைமரி செயலாளர் ஆகிய இருவருடன் நூறு உறுப்பினர்களுக்கு ஒருவர் என்ற ரீதியில் மாவட்ட பிரதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
9. உறுப்பினர் நான்காண்டு சந்தா ரூ5; ஃ- ( ரூபாய் ஐந்து மட்டும்) -ல் பிரைமரிக்கு ரூ.2ஃ- மாவட்டத்திற்கு ரூ1ஃ- மாநிலத்திற்கு 2ஃ- என்ற விகிதத்தில்
10. ஓவ்வொரு பிரைமரியிலும் சேர்க்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விண்ணப்ப படிவங்களில் உள்ள எல்லா விவரங்களையும், பிரைமரி உறுப்பினர் பதிவு ஏடு ஒன்றில் பதிவு செய்திட வேண்டும். அந்த பதிவேட்டில் உள்ளபடிதான் மாநில முஸ்லிம் லீக் பதிவு ஏட்டில் பதிவு செய்யப்பட்டு, உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
11. பிரைமரி தேர்தல் மாநில தேர்தல் அதிகாரி, மாவட்ட தலைவர் - செயலாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும். இத்தேர்தலுக்கு முன்பாக பிரைமரி பொறுப்பாளர்கள், உறுப்பினர் படிவத்தையும், அதற்கான செயலாளர் இடம் வழங்க வேண்டும். பிரைமரி தேர்தல் நடைபெற்ற முழு விபரம் தலைமை நிலையத்திற்கு கிடைக்கப் பெற்றவுடன் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படும்.
12. பிரைமரி தேர்தல் அங்கீகாரச் சான்றிதழ்களில்;, அந்தந்த பிரைமரி - தலைவர், செயலாளர், பொருளாளர், ஆகியோரின் பெயர் மற்றும் முகவரி இடம் பெறும். இச்சான்றிதழ் வங்கி கணக்கு துவங்குதல், அரசு துறை காரியங்களுக்கு பயன் அளிக்கக் கூடியவைகளாகும்.
13. அகில இந்திய புதிய சட்ட விதிப்படி, இளைஞர் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எப்) சுதத்திர தொழிலாளர் ய+னியன் (எஸ்.டி.யு) , மகளிர் லீக் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அணிகளாகும். இந்த அணிகளின் அமைப்பாளர்கள் அனைத்து பிரைமரி;களிலும் தேர்வு செய்யப்பட வேண்டும்.
14. இளைஞர் லீக் அமைப்பாளர்களின் வயது வரம்பு 35 ஆகும், முஸ்லிம் மாணவர் பேரவை (எம். எஸ். எப்) அமைப்பாளர்களின் வயது வரம்பு 27 ஆகும், சுதந்திர தொழிலாளர் ய+னியன் (எஸ்.டி.யு) அமைப்பாளர்கள் தொழிலாளர்களுடன் தொடர்புடையவர்களாக இருத்தல் வேண்டும். மகளிர் லீக் அமைப்பாளர்களாக மகளிர் சுய உதவிக்குழு, கல்வி மற்றும் சமூக பணிகளாற்றும் பெண்களை தேர்வு செய்யவும்.
15. 2010 பிப்ரவரி மாதம் இறுதியில் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்பு தலைமை நிலையத்திலிருந்து வெளியிடப்படும். இத்தேர்தல் மாநில தலைவர், பொதுச் செயலாளர், பாராளுமன்ற - சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெறும் இத்தேர்தலுக்கு முன்பாக மாவட்ட தலைவர் - செயலாளர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரைமரிகளிலிருந்தும் பெறப்பட்ட உறுப்பினர் படிவத்தையும், அதற்கான
16. மாநில தலைமை நிலையத்தில் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் முழு விபரங்களையும் கணினியில் பதிவு செய்திட பிரத்தியேகமாக புதிதாக பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
17. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஊழியர்களின் முழு ஒத்துழைப்போடும் திட்டமிட்ட பணிகளாலும் தாய்ச்சபையை மேலும் வலிமை மிக்கதாக ஆக்கிடுவோம். நம் லட்சியப் பணிகளில் ஒற்றுமையுடனும், தியாக மனப்பான்மையுடனும் செயலாற்றி வெற்றிகள் பல கண்டிடுவோம். அல்லாஹ் அருள்வானாக வஸ்ஸலாம்.
- கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர்
மாநில பொதுச் செயலாளர்,
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்
(தமிழ்நாடு மாநிலம்)

Wednesday, July 15, 2009

மே 2009 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்த அமைப்புகள்

மே 2009 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்த அமைப்புகள்


1. ஜி. சுபஹான்,
பொதுச்செயலாளர்
இந்திய ஜீவா கம்யூனிஸ்டு கட்சி
தமிழ் மாநிலக் குழு

2. அ. அந்தோணி ஆரோக்கிய ராஜ், பொதுச்செயலாளர்
கிறிஸ்தவ தமிழர் கழகம்
122, வன்னியர் தெரு, சூளைமேடு,
சென்னை – 94.

3, உசேன் தெரு, கிருஷ்ணாபுரம்
அம்பத்தூர்
சென்னை 600 053.

4. டி.ஜான்பால், மாநிலத்தலைவர்
தேசிய கிறிஸ்தவ மக்கள் இயக்கம்
144, இண்டேன் கேஸ் கம்பெனி 2- வது மாடி
1-வது ஹால், சம்பத் நகர்,
ஈரோடு – 638 011.


5. தீக்சீத் ஆதித்யா, தலைவர் (தமிழ்நாடு)
அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ்

6. கோவைத்தம்பி, பச்சைமுத்து
பார்கவகுல சங்கம்

7. கே. ரங்கநாதன், தலைவர்
தமிழக தாய் காங்கிரஸ் கமிட்டி
53/23, 86-வது தெரு, அசோக்நகர்,
சென்னை – 600 083.

8. திண்டிவனம் க. அன்பரசு,
தலித் மாணவர் கூட்டமைப்பு
நிறுவனர் – தலைவர்,
60/60, எம்.எஸ்.நகர், 2-வது பிரதான சாலை,
சேத்துப்பட்டு,
சென்னை – 600 031.

9. மரு.துரை. பாலகுரு, பொதுச்செயலாளர்
அருந்ததியர் மக்கள் நல சங்கம்
6/ஏ, பட்டக்கால் தெரு, இஞ்சிக்குடி,
பேரளம் – 609405
நன்னிலம், திருவாரூர் மாவட்டம்.


10. ஜெயம் இ. புஷ்பராஜா, பொதுச் செயலாளர்
அகில இந்திய தலித் சிறுபான்மை
இளைஞர்கள் சமூக நீதிப் பேரவை
16, வி.பி. கோவில் தெரு,
சென்னை – 600 081.


11. அ. வடிவேல், தமிழ் மாநில பொதுச் செயலாளர்
ஜீவா கம்யூனிஸ்டு கட்சி (லெனின்)
பிளாட். 57, எம்.எம்.நகர், திருப்பாலை,
மதுரை – 625014


12. எம். பழனி மோசஸ், நிறுவனம் – தலைவர்
புதிய தலைமுறை மக்கள் கட்சி
1/206, பெரியார் நகர், திரிசூலம்,
சென்னை – 600 043.


13. நாகை ஆ. மணி, பொதுச் செயலாளர்
அனைத்துலக எம்.ஜி.ஆர். தி.மு.க
88/ 2, ரத்தினா நகர், நாலுகால் மண்டபம்,
கீழ்காவாகுடி – 610 002, திருவாரூர் மாவட்டம்


14. ஜெ. நாகபூஷணம், தலைவர்
அம்பேத்கார் ஜனநாயக பேரவை
13/7, பூத பெருமாள் 1-வது சந்து, அண்ணாசாலை,
சென்னை – 600 002.


15. சி.கலிய மூர்த்தி, பொதுச் செயலாளர்
புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட்) – தமிழ் மாநில குழு
17, நாராயணப்பா தெரு, மண்ணடி,
சென்னை – 600 001.


16. இ.முத்துசாமி, நிறுவனர் – மாநில தலைவர்
தமிழக மக்கள் வாழ்வுரிமை கட்சி
16/28, கம்பர் தெரு, தேவ நேசர் நகர், பீர்க்கன்கரணை
சென்னை – 600 033.


17. கோ.ச. தேவராஜன், நிறுவனர்
தமிழக தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்
23, மூகாம்பிகை நகர், டி.என். பாளையம்
கோபிசெட்டிபாளையம்
ஈரோடு – 638506


18. கவிஞர் சேலம் சிங்காரவேல், தலைவர்
அகில இந்திய அம்பேத்கார் மக்கள்
மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்
5/128, சண்முக நிலையம்,
பாலப்பட்டி – 637017
ப. வேலூர் வட்டம், நாமக்கல் மாவட்டம்

19. எம்.ஏ.ராஜ், பொதுச்செயலாளர்
தமிழ்நாடு அனைத்து கிறிஸ்தவ ஐக்கிய முன்னணி
8ஏ, 2- வது புதுத்தெரு, ஏ.கே.நகர்,
சங்கரன் கோவில் – 627 756 (நெல்லை மாவட்டம்)


20. எம்.ஆர். கந்தசாமி, நிறுவனர் - தலைவர்
தமிழக பசவர் முன்னேற்றக் கழகம்
1/84, ஆத்தூர் மெயின் ரோடு,
மங்களபுரம் – 638202
(நாமக்கல் மாவட்டம்)


21. ஜி.கமருதீன், பொதுச்செயலாளர்
காயிதே மில்லத் லீக்
தானிப்பாடி (தண்டராம்பட்டு வட்டம்)
திருவண்ணாமலை மாவட்டம்.


22. எம்.எச்.அஹமது மரைக்காயர், நிறுவனர் – தலைவர்
அகில இந்திய ஜனநாயக கட்சி
15/17, நூரிஷா தைக்கால் தெரு,
நாகூர் – 611 002.


23. T.G.S PAUL, CHAIRMAN
SOUTH INDIA CHRISITIAN COUNCIL (R)
DR. DANIEL JESUDASS – GEN. SECRETARY
35,6th MAIN ROAD, BANASWADI,
BANGALORE – 560043


23. கா முருகேசன், மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு விஸ்வ கர்ம (ஆசாரியார்)
இளைஞர் முன்னேற்ற பேரவை
இராசிங்கபுரம், (போடி வட்டம் – தேனி மாவட்டம்)


24. ஆர். ரமேஷ், பொதுச் செயலாளர்
தமிழ்நாடு மாநில கட்டிட உழைப்பாளிகள் மற்றும்
அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்
4/117,ஆறகழூர், ஆத்தூர் வட்டம் (சேலம் மாவட்டம் )


25. சி. ராஜேந்திரன், நிறுவனத் தலைவர்
உழைப்பாளி மக்கள் முன்னேற்ற கட்சி
153/147, ஆற்றோரம் கிழக்கு தெரு, குகை,
சேலம் – 636006


26. கோ. வைரபாண்டியன், பொதுச்செயலாளர்
அம்பேத்கார் மக்கள் முன்னணி
1/47, பாரதி தெரு, டாக்டர் அம்பேத்கார் பவன்,
சிறுநாகலூர் – 603 319. (மதுராந்தகம் வட்டம்)


27. இ. செல்வம், நிறுவனத் தலைவர்,
மக்கள் காங்கிரஸ் கட்சி
35, பராசக்தி கட்டிடம்,
நெல்லை – 627001.


28. செய்யூர் இரா. மாமல்லன், நிறுவனர் – தலைவர்
ஆதி திராவிடர் முன்னேற்றக்கழகம்
2, வடக்கு செய்யூர்,
செய்யூர் – 603 202
காஞ்சிபுரம் மாவட்டம்.


29. தீப்பொறி பாண்டியன், பொதுச்செயலாளர்
அகில இந்திய முக்குலத்தோர்
மக்கள் முன்னேற்றக் கட்சி
16/25, குமரப்பன் தெரு, ஏழுகிணறு,
சென்னை – 1.


30. ஏ. டி. விஸ்வநாத், நிறுவனத் தலைவர்
அம்பேத்கார் ஜனசக்தி
94, கண்ணகப்பட்டு, ராஜீவ்காந்தி சாலை,
திருப்போரூர் – 603 110. (காஞ்சி மாவட்டம்)


31. டி.கே. ஜார்ஜ், நிறுவனத் தலைவர்
எம்.ஜி.ஆர் தொண்டர்கள் கட்சி
புதிய எண்.11, பள்ளித் தெரு, சிந்தாதிரிப்பேட்டை,
சென்னை – 2.


32. திருச்சி என்.எஸ்.திலிப் குமார், மாநிலத் தலைவர்
மாணவர் முன்னேற்ற கழகம்
எஸ்.வி.வி.வி. காம்ப்ளக்ஸ், பெரிய மிளகு பாறை,
திருச்சி – 1.


33. இரா. அதியமான், நிறுவனர்
ஆதித் தமிழர் பேரவை
அ-7, சக்தி அடுக்ககம், மாவீரர் நகர், வடவள்ளி,
கோவை – 641041.


34. வி.என்.ஆர். ரங்கநாதன், பொதுச்செயலாளர்
அகில இந்திய கட்டிட தொழிலாளர்
மத்திய சங்கம்
170, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி,
சென்னை – 600 005


35. என்.ஆர். தனபாலன், தலைவர்
தமிழ்நாடு நாடார் பேரவை
என்.ஆர்.டி. டவர்ஸ், 11, ஜவஹர்லால் நேரு சாலை
(100) அடி சாலை), அசோக் நகர்,
சென்னை -83.


36. கே. ராகவன், நிறுவனர் – தலைவர்,
தமிழ்நாடு பாரதீய குடியரசு கட்சி
2, துலுக்கானம் தெரு,
பேர்ணாம்பட்டு – 635810
குடியாத்தம் வட்டம்.

Saturday, May 2, 2009

தேர்தலில் குழப்பம் இல்லை பிரதமர் யார் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள்

தேர்தலில் குழப்பம் இல்லை பிரதமர் யார் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள்
சிவகாசியில் பேராசிரியர் காதர்மொய்தீன் பேச்சு


சிவகாசி, மே.3-

பிரதமர் யார் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர் என சிவகாசியில் நடந்த தேர் தல் பிரசார கூட்டத்தின் போது காதர் மொய் தீன் பேசினார்.

பிரசார கூட்டம்

ஐக்கிய ஜனநாயக முற் போக்கு கூட்டணி சார்பில் சிவகாசி பாவடித்தோப்பு திடலில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய ïனியன் முஸ்லிம் லீக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் காதர்மொய்தீன் பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த முறை நடந்த பாராளுமன்ற தேர்த லில் 40 இடங்களில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோல் இந்த முறையும் 40 தொகுதிகளிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்து நாட்டிற்கு வர இருக் கும் பேராபத்தை விரட்டி அடிப்போம். பெரிய குழப் பத்தை உருவாக்கி மதங்க ளுக்கு இடையே மோதலை உருவாக்க சிலர் முயற்சித்து வருகிறார்கள். பள்ளிவாசலை இடித்து அங்கு தான் ராமர் பிறந்தார். அங்கு தான் கோவிலை கட்டுவோம் என்றால் என்ன நியாயம்? 428 ஆண்டுகள் அங்கு தொழுகை நடந்தது என்பது உண்மை யானால் அங்கு மீண்டும் பள்ளிவாசல் வந்து தான் தீரும். அங்கு தொழுகை நடந்துதான் தீரும். குஜராத்தில் கலவரம் தூண்டப்பட்டு தற்போது அங்கு லட்சக்கணக்கான முஸ் லிம்கள் அகதிகளாக இருக்கிறார்கள். அங்கு இருந்த 699 முஸ்லிம் கிராமங்கள் தற் போது இல்லை. அப்படிப் பட்ட கலவரத்தை நடத்திய மோடிக்கு 64 வகை உணவு டன் விருந்துவைத்தவர் தான் ஜெயலலிதா.

யாருக்கு ஓட்டு

உங்கள் கூட்டணியில் யார் பிரதமர்? நீங்கள் யாருக்கு ஓட்டு கேட்கிறீர்கள். இந்தியா வின் பிரதமர் வைகோ என்று யாராவது எழுதி கொடுத்து விட்டார்களா? இலங்கையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாக திரிகிறார்கள். நாங்கள் தமிழ் இனத்தை அழித்து வரும் ராஜபக்சே அரசை ஆதரிக்க வில்லை. இலங்கையில் அப் பாவி தமிழர்கள் கொல்லப்ப டுவதை தடுக்கத் தான் நாங் கள் அங்கே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகி றோம். இலங்கை பிரச்சினை பற்றி முழுவதும் தெரிந்தவர் கருணாநிதி மட்டும் தான். வைகோவுக்கு எதுவும் தெரி யாது. முஸ்லிம் சமுதாயத் துக்கு நீங்கள் செய்த நன்மை கள் என்ன? தமிழ் மக்கள் மத்தியில் குழப்பம் இல்லை.

330 திட்டங்கள்

யார் பிரதமர் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கி றார்கள். மன்மோகன் சிங் இந்தியாவின் பொருளாதா ரத்தை நிலை நிறுத்தியவர். அதனால் தான் அவரை சோனியா பிரதமராக அறி வித்தார். அமெரிக்க பொரு ளாதாரம் ஆட்டம் கண்டு கொண்டு இருக்கிறது.இதில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாட்டின் பொரு ளாதாரத்தில் எந்தவித பிரச் சினையும் இல்லாமல் இருக் கிறது. அதற்கு மன்மோகன் சிங்தான் காரணம். நாம் பிரதமரை தேர்ந்தெடுத்து விட்டோம். அதற்கு இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மாணிக் தாகூரை வெற்றி பெற செய்யவேண்டும். சென்ற முறை தமிழகத்தை சேர்ந்தவர்கள் 13 பேர் அமைச்சர்களாக இருந்த னர் இந்த முறை 15-க்கும் மேற் பட்டவர் அமைச்சராக உட் கார போகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 330 திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். இந்த தொகுதியில் கை சின் னத்தை தவிர வேறு யாருக்கு வாக்க ளித்தாலும் அது செல்லாத வாக்காக மாறும். தமிழகத் தில் கருணாநிதி செயல் படுத்தி வரும் திட்டங்களை மற்ற மாநிலங்கள் தற்போது பின்பற்றி வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசி னார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Monday, April 13, 2009

ஆடுதுறை காக்காவும், சுலைமானும்..(தேர்தல் ஜுரம் பகுதி-3)

ஆடுதுறை காக்காவும், சுலைமானும்..(தேர்தல் ஜுரம் பகுதி-3)

சுலைமான் பாய்: என்ன காக்கா மம கட்சி இப்போ 4வது அணிதொடங்கி உள்ளதமே!

ஆடுதுறை காக்கா: ஆமா பாய்! நானும் பார்த்தேன், தினமலரை தினமலம் என்றும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிரான பத்திரிகை, தினமலரை எந்த ஒரு இஸ்லாமியனும் வாங்க கூடாது என்று சொன்ன தமுமுக இப்போது மம கட்சியாக மாறிய பின் தினமலர் மட்டும் தான் இவர்களை பற்றி செய்தி போடுகிறது என்ற நன்றி கடனில் தினமலர் கட்டிங்கேயே எடுத்து தமுமுக வெப்ஸைட்டில் போடுகிறார்கள் இப்போ?
சுலைமான் பாய்: நானும் தினமலர் படித்தேன் அதில் தமுமுக அமைப்பு மம கட்சி என்ற அரசியல் கட்சியாக மாறியது என்று செய்தி போட்டுள்ளார்களே அப்போ தமுமுக அமைப்பு இப்ப இல்லையா காக்கா?

ஆடுதுறை காக்கா: தமுமுக அமைப்பு விதி 2- கொள்கை மற்றும் நோக்க விதிப்படி அரசியலில் எந்த தேர்தல்களiலும் பங்கு கொள்ள கூடாது. அத்துடன் தேர்தல் விதிகளiல் படி தமுமுக அமைப்பு தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள் நிர்வாகிகளாக பொறுப்பு வகிப்பவர்கள் அதாவது தமுமுக நிர்வாகிகள், அரசியல் கட்சி எதிலும் பொறுப்பு ஏற்றால் கழகத்தில் அவர் வகிக்கும் பொறுப்பு தானாக ரத்தாகிவிடும்.

சுலைமான் பாய்: அப்ப தமுமுக அமைப்பின் கொள்கைக்கு எதிராக அமைப்பு தலைவர் பொது செயலாளர் தேர்தலில் போட்டி போடுகிறார்களே, தமுமுக அமைப்பு தேர்தல் விதியின் படி தலைவர், பொது செயலாளர் பொறுப்பு தானாகவே ரத்தாகிவிடுமா?
ஆடுதுறை காக்கா: இந்த விதியை கருத்தில் கொண்டு தான் மம கட்சிக்கு தனிபொது செயலாளர் என்று அறிவித்தார்கள் அவருக்கு அன்று தொப்பி மாற்றி விட்டதோடு சரி அவரை எதுவும் கண்டு கொள்வதில்லை பாய், தமுமுக மாநில நிர்வாகிகளுக்கு பதவி ஆசை விடுமா என்ன? வாரிய பதவியும் போய்விட்டதே உடனே வெட்கமில்லாமல் தலைவரும், பொது செயலாளரும் தேர்தலில் நிற்கிறோம் என்று அவர்களாகவே அறிவித்துவிட்டார்கள் மம கட்சியின் பொது செயலாளர் சமது இதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை பாவம் சமது. ஒருவேளை இந்த தேர்தலில் சும்ம போட்டி போடுவோம் நாம் நிச்சயம் வெற்றி பெற போவதில்லை. ஒருவேளை அடிமட்டத்தில் உள்ள ஒரு உஷாரான தொண்டனான கண்மணி அல்லது சொந்தம் தமுமுக அமைப்பு விதி கொள்கை பற்றி கேட்டால் நாம் நம்ம தான் தேர்தலில் போட்டி போட்டோம் எந்த பதவியும் தான் வரவில்லையே என்று சொல்லி எப்போதும் போல் மழுப்பல் பதில் தான் இவர்களiடமிருந்து வரும்.
சுலைமான் பாய்: என்ன காக்கா தமுமுக அமைப்பு விதி கூட்டுறவு சங்க பதவியில் கூட இருக்க கூடாது என்று சொல்லுது ஆனால் இத்தனை நாள் எப்படி தமுமுக பொது செயலாளர் வாரிய அரசு பதவியை வகித்தார்

ஆடுதுறை காக்கா: உங்களுக்கு எனக்கும் தான் இயக்க விதிகளiன் முழுமை தெரியும் அப்பாவி கண்மணிகளுக்கும், சொந்தங்களுக்கும் அடிப்படை விதி கொள்கை மற்ற எழவுகள் எல்லாம் தெரியாது மாநில நிர்வாகிகள் சொல்வது தான் சட்டம் விதி எல்லாம் இதை யார் கேட்பது கேட்டால் மறுநாள் தமுமுக பக்கம் தலை வைத்து படுக்க முடியாது

சுலைமான் பாய்: அப்ப தமுமுக நிர்வாகிகளுக்கு பதவி தான் முக்கியம் சமுதாய கவலை இல்லை என்று சொல்லுங்கள் காக்கா!

ஆடுதுறை காக்கா: என்ன பாய்! இதை நான் தான் சொல்லனுமா இது உலகம் அறிந்த உண்மை தானே, கோடி கணக்கில் பணம் சேர்த்து வங்கி இருப்பு பட்டியலை திமுக, அதிமுக என்று காட்டி வருகிறர்களே இந்த பணம் எல்லாம் அவர்களiன் குடும்ப சொத்தா என்ன? இல்லை பட்டான் முப்பாட்டன் சேர்த்து வைத்த சொத்தா? எல்லாம் நம்மை போன்றவர்களiடம் வசுல் வேட்டையில் கிடைத்த தொகை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி சேகரிக்கிறோம் என்று இவர்களiன் தொப்பையை நிரப்பி கொண்டார்கள்.

சுலைமான் பாய்: இவர்கள் எப்படி காக்கா சமுதாயத்திற்கு பலனை கொண்டு வர போகிறார்கள். வெட்கம் மானம் கேட்டவர்கள். பதவிக்கு இப்படி அலைகிறார்களே ஆனால் தன்மானம் என்று வேறு வரட்டு பேசுகளை பாருங்களேன்.

ஆடுதுறை காக்கா: அரசியேலே வேண்டாம், ஒரு சில சீட் வாங்கி தேர்தலில் வெற்றி பெற்று நம் சமுதாயத்திற்கு எந்த பலனும் வராது என்று வேதம் ஒதியவர் தான் இந்த தமுமுக தலைவர், பதவியே விரும்பதவர்கள் இவர்கள் ஆனால் சமுதாய கவலை இப்போது திடீர் என்று வந்துவிட்டது. ஏகத்துவம் பேசினார்கள் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்த பணத்தில் பங்கு பிரிப்பதில் வம்பு செய்து கொண்டார்கள், நிவார நிதி சேகரித்தார்கள் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை, இப்படியே மக்களை ஒருநிலையில் வழி தவற செய்து தங்கள் சுயநலத்தில் தான் பெரிய அக்கறையுடன் நடத்து கொண்டு வருகிறார்கள். இரண்டு சீட் கொடுத்தால் திமுகவிற்கு நல்ல சிறப்பான சான்றிதழ் கொடுப்பார்கள். ராமதாஸ் மதுவிலக்கு பேசியபோது இந்த தமுமுக மூச்சு விடவில்லை. காரணம் வாரிய பதவியை தக்கவைத்து கொள்ள திமுகவிற்கு ஜால்ரா அடித்து கொண்டு இருந்தார்கள். இப்போது சொல்லுகிறார்கள் ஒரு முஸ்லிம் கூட திமுக நிறுத்தவில்லை என்று ஒப்பாரி வைக்கிறார்கள். எத்தனை நாள் சிகப்பு விளக்கு காரியில் பவனிவந்த சமயத்தில் இது எல்லாம் தெரியாமல் போய்விட்டது

சுலைமான் பாய்: காக்கா நீங்கள் எல்லாம் தௌiவாக சொல்லுகிறீங்க ஆனால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம், தினமலர் செய்தியின் படி தமுமுக இப்போது இல்லை மம கட்சியாக மாறி விட்டது என்றால் தமுமுக இல்லை இப்போது மம கட்சி மட்டும் தான் சொல்ல வருகிறீங்களா?

ஆடுதுறை காக்கா: அப்படி தான் பாய், தமுமுக விதிப்படி அரசியல் பொது பதவியில் இருக்க கூடாது. மம கட்சி என்றால் எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம் அல்லவா?

-ஆடுதுறையான்

Wednesday, April 8, 2009

ஆடுதுறை காக்காவும், சுலைமானும்..பகுதி-2 தேர்தல் ஜுரம்

QMF UAE
dateWed, Apr 8, 2009 at 8:41 PM
subjectஆடுதுறை காக்காவும், சுலைமானும்..பகுதி-2 தேர்தல் ஜுரம் (8/4/2009@7.30pm IST)-Hot News From MMK


"அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-அதிமுக அணிகளுடன் கூட்டணி இல்லை என மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு. யாருடன் கூட்டணி என்று நாளை இன்ஷா அல்லாஹ் அறிவிக்கப்படும்." Source: TMMK web site

ஆடுதுறை காக்காவும், சுலைமானும்..பகுதி-2 தேர்தல் ஜுரம்
சுலைமான் பாய்: இத்தனைநாள் முறைமுக ஆலோசனை நடத்தி திராவிட கட்சிகள் கதவை மூடிவிட்டதால், ஒருவழியாக மனிதநேய மக்கள் கட்சி திமுக-அதிமுக அணிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவிப்பு வந்துட்டு காக்கா
ஆடுதுறை காக்கா: சந்தோசம் அப்ப 40 தொகுதியிலும் நீங்கள் சொன்ன மாதிரியே மமக போட்டி போட போறாங்க என்று சொல்லங்க பாய்? ததஜ வேறு எதிர் போட்டி போட்டு மக்களுக்கு தமுமுக(மமக) சமுதாயத்திற்கு செய்த துரோகங்களை வெளiக்காட்டுவோம் என்று பொதுக்குழு தீர்மானம் வேறு போட்டு இருக்கே?
சுலைமான் பாய்: நம்மை விட ததஜ-க்கு தான் தமுமுக பற்றி நல்ல தெரியும், அவர்கள் எப்படி எல்லாம் காசு பன்னுறாங்க என்று, எல்லாம் பங்காளi சண்டை தான் பாய், நீங்க, நான் தான் தேவையில்லாமல் கஷ்டப்படுறோம். அவர்களுக்கு என்ன அரசியலில் இன்றைய எதிரி நாளைய நண்பன். இதில் இவர்கள் என்ன விதிவிலக்கா?
ஆடுதுறை காக்கா: பாவம் தமுமுக பொது செயலாளருக்கு வாரிய பதவியை கடைசி வரை விட மனசு இல்ல, திமுக கொடுத்த ஒரு சீட்டை வாங்கி இருக்கலாம் என்று தலைவருடன் "டு" போட்டுவிட்டார், அத்துடன் சிகப்பு விளக்கு காரில் பவணிவருவது போகுதே என்ற டென்சன் வேறு ஆகிவிட்டார் பாய்.
சுலைமான் பாய்@ தன்மானம் காக்க வேண்டும் இல்லவா? சிகப்பு விளக்கு தானே மீண்டும் கிடைக்கும் 40 எம்.பி கிடைத்தும், பொது செயலாளரை அமைச்சராக ஆகிவிட்டால் போகுது.
ஆடுதுறை காக்கா: முஸ்லிம் இரண்டு எம்.பி கிடைக்க வேண்டியதை இவர்கள் போட்ட வரட்டு சண்டையால் ஒன்று என்ற நிலையாகி விட்டது. திமுக பட்டியலில் ஒரு முஸ்லிம் கூட இல்லை.
சுலைமான் பாய்: தமுமுக தலைவர் தான் முன்பு கொடுத்த பேட்டியில் பெரிய கட்சி கொடுக்கும் ஒரு சில சீட்டால் சமுதாயத்திற்கு எந்த பலன் இfல்லை என்று தௌiவாக சொல்லி இருக்கிறார் அல்லவா?
ஆடுதுறை காக்கா: ஆமா பாய் அவர் வரும் முன் காக்கும் தலைவர், இப்ப நடப்பதை அப்பவே சொல்லிவிட்டார்.
சுலைமான் பாய்: காக்கா நவீன முறையில் குறி சொல்ல பேராசிரியருக்கு சான்ஸ் இருக்குக்குனு சொல்லுங்க
ஆடுதுறை காக்கா: நம்மவர்களiல் படித்த முட்டாள்கள் நிறைய இருப்பதால், இவர்களுக்கு அரசியல் செய்ய நிறைய வாய்ப்பாக போய்விட்டது.
சுலைமான் பாய்: சரி சொன்னீங்க காக்கா, நம்ம பிள்ளைகளுக்கு இவர்கள் தான் கொம்பு சீவி விட்டுவிடுகிறார்கள், கடைசியில் பாதிப்பது நம் சமுதாயம் தான்.
ஆடுதுறை காக்கா: சரியா சொன்னீங்க, இப்பவது நம் சமுதாய மக்கள் அல்லாஹுHக்கு பயந்து இவர்களை போன்றவர்களுக்கு கொடி பிடிக்காமல் இருந்தால் சரி
சுலைமான் : நாம் தான் சமுதாய இளைஞர்களுக்கு நல்ல வழியை காட்ட வேண்டும்.

-ஆடுதுறையான்