Showing posts with label பிரதமர். Show all posts
Showing posts with label பிரதமர். Show all posts

Thursday, August 5, 2010

பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த முஸ்லிம் எம்.பி.க்களின் முயற்சி வெற்றி

பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த முஸ்லிம் எம்.பி.க்களின் முயற்சி வெற்றி

http://muslimleaguetn.com/news.asp

நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக புலம் பெயர்ந்தோர் விட்டுச் சென்ற சொத்துக்கள் தொடர்பான எனிமி பிராபர்டீஸ் பில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருந்தது நிறுத்தப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏராளமானோர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தா னுக்கும், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கும் இடம் பெயர்ந்தனர். அப்படி அவர்கள் புலம் பெயர்ந்தபோது தங்கள் சொத்துக்களை அப்படி அப்படியே விட்டுச் சென் றனர். அந்த சொத்துக்களை புலம் பெயர்ந்தோரின் வாரிசுகள் மற்றும் உறவி னர்கள் அனுபவித்து வந் தனர். இந்த சொத்துக் களில் பல அறக்கட்டளை களாகவும், முஸ்லிம்களின் நலனுக்கு பயன்படக் கூடியதாகவும் இருந்து வந் துள்ளன.
எனிமி பிராபர்டீஸ் பில்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று விட்டவர்கள் விட்டுச் சென்ற இந்த சொத்துக் களை அரசே கையகப் படுத்த வகை செய்யும் மசோதா நடப்பு நாடாளு மன்ற கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட இருந் தது. இந்த மசோதா நிறை வேற்றப்பட்டால் உச்சநீதி மன்றம் உள்ளிட்ட இந்தி யாவின் எந்த ஒரு நீதி மன்றமும் இந்த விவகாரத் தில் தலையிட முடியாது என்றும், எந்த விசாரணையு மின்றி அரசே இதை கையகப்படுத்தும் என்றும் கூறப்பட்டிருந்தது.
எனிமி பிராப்பரிட்டீஸ் பில் என்ற இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட் டால் பஞ்சாப், மகாராஷ் டிரா, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களிலும், தென் னகத்திலும் ஏராளமான முஸ்லிம்கள் பாதிக்கப்படு வர் என்பதை உணர்ந்த முஸ்லிம் தலைவர்கள் இதை தடுக்கும் முயற்சியில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.
முஸ்லிம் எம்.பி.க்கள் ஆலோசனை
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் உறுப்பினர்களின் ஆலோ சனை கூட்டம் நாடாளு மன்ற மாநிலங்களவை துணைத்தலைவர் ரஹ்மான்கான் இல்லத்தில் நேற்று மாலை (ஆக‌ஸ்ட் 3-ம் தேதி) நடைபெற்றது. பிரதமரை சந்தித்து முறையிடுவது என முடிவு எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மாநிலங் களவை துணைத் தலைவர் ரஹ்மான்கான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய ரயில்வே துறை இணையமைச்சருமான இ.அஹமது, மத்திய மரபுசாரா எரி சக்தித் துறை அமைச்சர் பருக் அப்துல்லா, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச் சர் சல்மான் குர்ஷித், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட 26 முஸ்லிம் எம்.பி.க்கள் ஒன்றிணைந்து இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தனர்.
எனிமி பிராப்பரிட்டீஸ் பில்| என்ற பெயரில் கொண்டு வரப்பட உள்ள இந்த மசோதா தேவையற்ற சர்ச் சைகளையும், விளைவு களையும் உருவாக்கும். புலம் பெயர்ந் தோர் விட்டுச் சென்ற சொத்துக்களை எனிமி பிராப்பரிட்டீஸ் என அழைக்கப்படுவது தேவையற்றது.
இதை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் ஏற்கவில்லை என்றும் எனவே, இதனை தாக்கல் செய்ய விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
பிரதமர் உத்தரவு
நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களின் கோரிக் கைகளை கவனமாகக் கேட்ட பிரதமர் உடனடி யாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை தொடர்பு கொண்டு எனிமி பிராப் பரிட்டீஸ் பில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை நிறுத்த கேட்டுக் கொண் டார்.
பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப் படுவது நிறுத்தப்பட்டது. இது நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களின் ஒட்டுமொதத முயற்சிக்கு கிடைத்த வெற்றி என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

--
MUDUVAI HIDAYATH
www.imandubai.org
www.mudukulathur.com

Saturday, May 2, 2009

தேர்தலில் குழப்பம் இல்லை பிரதமர் யார் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள்

தேர்தலில் குழப்பம் இல்லை பிரதமர் யார் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள்
சிவகாசியில் பேராசிரியர் காதர்மொய்தீன் பேச்சு


சிவகாசி, மே.3-

பிரதமர் யார் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர் என சிவகாசியில் நடந்த தேர் தல் பிரசார கூட்டத்தின் போது காதர் மொய் தீன் பேசினார்.

பிரசார கூட்டம்

ஐக்கிய ஜனநாயக முற் போக்கு கூட்டணி சார்பில் சிவகாசி பாவடித்தோப்பு திடலில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய ïனியன் முஸ்லிம் லீக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் காதர்மொய்தீன் பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த முறை நடந்த பாராளுமன்ற தேர்த லில் 40 இடங்களில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோல் இந்த முறையும் 40 தொகுதிகளிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்து நாட்டிற்கு வர இருக் கும் பேராபத்தை விரட்டி அடிப்போம். பெரிய குழப் பத்தை உருவாக்கி மதங்க ளுக்கு இடையே மோதலை உருவாக்க சிலர் முயற்சித்து வருகிறார்கள். பள்ளிவாசலை இடித்து அங்கு தான் ராமர் பிறந்தார். அங்கு தான் கோவிலை கட்டுவோம் என்றால் என்ன நியாயம்? 428 ஆண்டுகள் அங்கு தொழுகை நடந்தது என்பது உண்மை யானால் அங்கு மீண்டும் பள்ளிவாசல் வந்து தான் தீரும். அங்கு தொழுகை நடந்துதான் தீரும். குஜராத்தில் கலவரம் தூண்டப்பட்டு தற்போது அங்கு லட்சக்கணக்கான முஸ் லிம்கள் அகதிகளாக இருக்கிறார்கள். அங்கு இருந்த 699 முஸ்லிம் கிராமங்கள் தற் போது இல்லை. அப்படிப் பட்ட கலவரத்தை நடத்திய மோடிக்கு 64 வகை உணவு டன் விருந்துவைத்தவர் தான் ஜெயலலிதா.

யாருக்கு ஓட்டு

உங்கள் கூட்டணியில் யார் பிரதமர்? நீங்கள் யாருக்கு ஓட்டு கேட்கிறீர்கள். இந்தியா வின் பிரதமர் வைகோ என்று யாராவது எழுதி கொடுத்து விட்டார்களா? இலங்கையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாக திரிகிறார்கள். நாங்கள் தமிழ் இனத்தை அழித்து வரும் ராஜபக்சே அரசை ஆதரிக்க வில்லை. இலங்கையில் அப் பாவி தமிழர்கள் கொல்லப்ப டுவதை தடுக்கத் தான் நாங் கள் அங்கே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகி றோம். இலங்கை பிரச்சினை பற்றி முழுவதும் தெரிந்தவர் கருணாநிதி மட்டும் தான். வைகோவுக்கு எதுவும் தெரி யாது. முஸ்லிம் சமுதாயத் துக்கு நீங்கள் செய்த நன்மை கள் என்ன? தமிழ் மக்கள் மத்தியில் குழப்பம் இல்லை.

330 திட்டங்கள்

யார் பிரதமர் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கி றார்கள். மன்மோகன் சிங் இந்தியாவின் பொருளாதா ரத்தை நிலை நிறுத்தியவர். அதனால் தான் அவரை சோனியா பிரதமராக அறி வித்தார். அமெரிக்க பொரு ளாதாரம் ஆட்டம் கண்டு கொண்டு இருக்கிறது.இதில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாட்டின் பொரு ளாதாரத்தில் எந்தவித பிரச் சினையும் இல்லாமல் இருக் கிறது. அதற்கு மன்மோகன் சிங்தான் காரணம். நாம் பிரதமரை தேர்ந்தெடுத்து விட்டோம். அதற்கு இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மாணிக் தாகூரை வெற்றி பெற செய்யவேண்டும். சென்ற முறை தமிழகத்தை சேர்ந்தவர்கள் 13 பேர் அமைச்சர்களாக இருந்த னர் இந்த முறை 15-க்கும் மேற் பட்டவர் அமைச்சராக உட் கார போகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 330 திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். இந்த தொகுதியில் கை சின் னத்தை தவிர வேறு யாருக்கு வாக்க ளித்தாலும் அது செல்லாத வாக்காக மாறும். தமிழகத் தில் கருணாநிதி செயல் படுத்தி வரும் திட்டங்களை மற்ற மாநிலங்கள் தற்போது பின்பற்றி வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசி னார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.