~பிறைமேடை| க்கு தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வாழ்த்து
பிறைமேடை- மாத இருமுறை ஏடு வெளிவருகிறது! இது நமக்கு மிகுந்த இன்பம் தருகிறது!
தமிழகத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் ஆரம்பக் காலக் கட்டத்தில் முஸ்லிம் லீகின் சார்பு பத்திரிகைகள் பல வெளிவந்துள்ளன. வார ஏடு, மாதமிருமுறை ஏடு, மாத ஏடு என்று முஸ்லிம் லீக் முன்னோடிகள் பலரும் இதழ்களை நடத்தி முஸ்லிம் லீக் இயக்கத்தை வலிமையுறச் செய்துள்ளனர். இன்றைக்கு முஸ்லிம் சமுதாயத்தில் வாரஇதழ்களும், மாத இதழ்களும் பிரசுரிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றிரண்டைத் தவிர மிகுதமானவை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை விரோதியாகச் சித்தரிக்கும் போக்கும் நோக்கும் உடையவையாக அமைந்திருப்பதைக் காண்கிறோம்.
முஸ்லிம் லீகின் அடிப்படைக் கொள்கைகளான-இந்திய தேசிய ஒற்றுமை ஒருமைப்பாட்டை நிலை நிறுத் துவது இந்திய சமுதாயங்கள்-சமயங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்குவது, சிறுபான்மையினர், குறிப் பாக முஸ்லிம்கள் தங்களின் கலாச்சாரத் தனித்தன்மையைப் பேணிப் பாதுகாப்பதற்கு முஸ்லிம் லீகின் கொடியின் அடியில் கூடி வருவது போன்றவற்றை கேலியும் கிண்டலும் செய்யும் ஏடுகளும் உள்ளன. முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் முன்னோடிகளைப் பற்றிக் கற்பனை மூட்டைகளையும், கட்டுக்கதைகளையும், பொய்களையும் புனைந்துரைகளையும் தொடர்ந்து எழுதி வருவதன் மூலம் தங்களின் சிறப்பம்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவரும் ஏடுகளும் இன்றைக்கு சமுதாயத்துக்குள் வலம் வரவே செய்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில் முஸ்லிம் லீகின் ஏடுகள் பலவும் வெளிவரவேண்டும் என்று இயக்கத்தில் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் நடந்து வந்திருக்கிறது. திருச்சி பொதுக்குழுவில் பத்திரிகை பலம் பற்றி பல செய்திகளும் முஸ்லிம் லீகர்கள் மத்தியில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
~மணிச்சுடர்| நாளேடு முஸ்லிம் லீகின் மூல பலம் மட்டுமல்ல@ மூளை பலமுமாக இருந்து வருகிறது என்பதை சிராஜுல் மில்லத் காலம் தொட்டு உணர்ந்து வருகிறோம். மணிச்சுடர் பணிக்கு இன்னும் வலிவும் பொலிவும் சேர்க்கும் வகையில் இந்தப் புதிய ஏடு-பிறைமேடை-
புறப்பட்டிருக்கிறது.
நமது நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப் எம். அப்துர் ரஹ்மான் எம்.ஏ., இந்த ஏட்டின் வெளியீட்டாளராகவும், ஆசிரியராகவும் பொறுப்பேற்று பிறைமேடை சமுதாயத்துக்குள் பிரவேசிக்கிறது. முஸ்லிம் லீக் குடும்பத்தில் பிறந்து, முஸ்லிம் லீக் பாரம்பரியத்தில் வளர்ந்து, இன்றைக்கு முஸ்லிம் சமுதாயச் சேவையளராகப் பரிமாணம் பெற்றுள்ள பிறைமேடை ஆசிரியர்-தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் அரசியல் ரீதியான ஒற்றுமையை உருவாக்க வேண்டும்@ மார்க்கத்தில் தெளிவும் ஆழமான ஞானமும் வேண்டும்@ இன்றைய சமுதாயத்தவர் மத்தியில் புதிய எழுச்சியும் ஆக்க சக்தியோடு ஆகர்ஷண சக்தியும் வளர வேண்டும், என்று உழைப்பவர்சகோதரர் அப்துர் ரஹ்மான். இவரின் எழுத்து வண்ணத்தில் பிறைமேடை புதிய ஒளிவட்டங்களை உருவாக்கும் என்ற நம்பிக்கைநிறையவே உண்டு.
பிறைமேடையின் பொறுப் பாசிரியராக சகோதரர் ஜே. மீராமைதீன் பணியேற்றிருக்கிறார். மணிச்சுடரில் சமுதாயச் செய்திகளும் முஸ்லிம் லீக்செய்திகளும் இவரின் பொறுப்பில் வெளிவந்த வரலாறு உள்ளது. பொறுப்பானவர்@ மிகுந்த பொறுமையுள்ளவர். இவரின் பணியில் பிறை மேடை புதிய தோர் எழுச்சிக்கு வித்திடும் என்று நம்புகிறேன். பிறைமேடை, முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை சார்பில் வெளியிடவிருக்கும் தினசரி, வார, மாதமிருமுறை, மாத இதழ்கள் வரிசையில் இணைய இருக்கிறது என்பதை யும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். பிறைமேடை, பிறைப்படையாக வலம் வரவும் சமுதாயத்துக்கு நலம் தரவும் வாழ்த்துகிறேன்.
- பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்
தலைவர், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்
தமிழ்நாடு
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label கே.எம்.காதர் மொகிதீன். Show all posts
Showing posts with label கே.எம்.காதர் மொகிதீன். Show all posts
Tuesday, March 23, 2010
Thursday, March 18, 2010
முஸ்லிம் லீக் பிரைமரி தேர்தல்களை விரைவாக முடித்திட தலைவர் பேராhசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள்
முஸ்லிம் லீக் பிரைமரி தேர்தல்களை விரைவாக முடித்திட தலைவர் பேராhசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் ஒவ்வொரு ஆண்டுக்கான சேவைத் திட்டங்கள் வகுத்தளிக்கப்பட்டதன் அடிப்படையில் 2010 ஆம் ஆண்டில் முஸ்லிம் லீக் பயிற்சி முகாம் தஞ்சை வழுத்தூரிலும் கிருஷ்ணகிரி ஒசூரிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இளைஞர்கள் பல நூற்றுக்கணக்கில் பங்கேற்று, முஸ்லிம் லீக் கொள்கை கோட்பாடுகளில் பயிற்றி பெற்று, சமுதாய சன்மார்க்க தேசிய சேவையில் இப்பொழுது முனைந்து ஈடுபட்டும் பாடுபட்டும் வருகின்றனர்.
எதிர் பார்த்ததைவிடப் பலமடங்கு இதயத்துக்கு நிறைவு தரும் வகையில் இந்தப் பயிற்சி முகாம்களும், அவற்றின் பயன்பாடுகளும் அமைந்திருக்கின்றன.
அடுத்த திட்டமாக, மார்ச் 10 ஆம் நாள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிறுவன தினவிழா நெல்லைச் சீமையில் மேலப்பளையத்தில் மிகமிக விமரிசையாக நடைபெற் றிருக்கிறது. மகளிர் அரங்கும், பிறைக் கொடி பேரணியும் விழாவுக்குப் பெருமை சேர்த்துள்ளன. மத்திய அமைச்சர் மாண்புமிகு மு.க. அழகிரி அவர்களும், மாநில அமைச்சர் மாண்புமிகு மொய்தீன்கான் அவர்களும், மாண்புமிகு ப+ங்கோதை அருணா அவர்களும் நிறைவு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். துராப்ஷா அவர்கள் தலைமையிலான விழாக்குழுவினர் மார்ச் 10ஆம் நாள் விழா தமிழக அரசியல் அரங்கில் அனைத்துக் கட்சிகளின் கவனத்தையும்
விழாவில் ~~இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் - இலட்சியப் பயணத்தில் இராஜாஜி ஹால் முதல் சாதாப் மஹால் வரை|| என்னும் சிறிய நூலும் வெளியிடப்பட்டது. முஸ்லிம் லீக் வரலாற்று ஆசிரியர் எழுத்தரசு ஏ.எம். ஹனீப் அவர்கள் 1948 மார்ச் 10 முதல் ஜனவரி 16, 2010 வரையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை இந்தக் குறுநூலில் கோர்வை செய்திருக்கிறார். அந்த நூலில் கேரள மாநிலத்தில் முஸ்லிம் லீக் எத்துணை பலமாக உள்ளது என்பதை எடுத்துக் காட்டும்விதமாக, அங்கே பன்னிரண் டாயிரம் பிரைமரிகளுக்கு மேல் உள்ளன என்பதை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அதாவது ஒரு கோடி இருபது இலட்சம் உறுப்பினர்களுக்கு மேலாக கேரளாவில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் சேர்ந்திருக்கின்றனர் என்பதே அந்த உண்மையாகும். கேரளாவில் முஸ்லிம்கள் மட்டுமன்றி, தலித் இன மக்களும் முஸ்லிம் லீகில் ஏராளமான இணைந்துள்ளனர். இதே நிலையைத் தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்ற பேரவாவின் அடிப்படையில்தான் பத்து இலட்சம் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
மகிழ்ச்சிய+ட்டும் செய்தி என்னவெனில், தமிழகத்தில் சுதந்திரத்துக்கு முன்னரும் அதன் பின்னரும் முஸ்லிம் லீக் நுழையாத பல ஊர்களில் இன்றைய தினம் நட்சத்திரம் பொறித்த பச்சிளம் பிறைக் கொடி பறக்கிறது@ ஆர்வத் துடிப்போடு அங்கெல்லாம் இளைஞர்கள் முஸ்லிம் லீகில் இணைந்து வருகின்றனர்@ புதிய பிரைமரிகள் உருவாக் கப்பட்டு வருகின்றன.
எந்த மாவட்டத்தில் உறுப்பினர் சேர்ப்பும் பிரைமரி தேர்தலும் நிறைவு பெற்றுள்ளதோ, அந்த மாவட்டத் தலைவரும் மாவட்டச் செயலாளரும் மாவட்டம் முழுவதிலும் உள்ள உறுப்பினர் படிவங்களை மாநில முஸ்லிம் லீக் தலைமையகத்தில் சேர்ப்பித்திட வேண்டும். அதோடு, ஒவ்வொரு பிரைமரிவாரியாக மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை பிரைமரி தேர்தல் விவரங்கள் மற்றும் உறுப்பினர் கட்டண மாநில அந்த மாவட்ட முஸ்லிம் லீக் தேர்தல் தேதியும் மற்ற விவரமும் அறிவிக்கப்பட விருக்கின்றது. சில மாவட்டங்களில் ஐம்பது ஆயிரத்துக்குப் மேலாக உறுப்பினர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் @ சில மாவட்டங் களில் சில ஆயிரம் பேர் மட்டுமே சேர்ந்திருக்கிறார்கள். இத்தகைய மாவட்டங்களில் உறுப்பினர் சேர்ப்புக்கு என்றும் பிரைமரி தேர்தலுக்கு என்றும் நாட்களைக் குறித்து அறிவித்து இப்பணிகளை மாவட்ட நிர்வாகிகள் முடித்திட வேண்டும்.
நாம் அறிவித்த தேதிகள் கடந்துள்ள நிலையிலும் சில இடங்களில் இந்தப் பணிகள் முழுமை பெறவில்லை என்னும் செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வலிமையான அடித்தளம் அமைக்கும் பணியில் அனைவரின் பங்களிப்பும் சிறப்பாக இருந்திடல் மிக மிக அவசியம்.
இன்றைக்குப் பாடுபட்டால்தான் நாளைக்குப் பலனை எதிர் பார்க்க முடியும்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் ஒவ்வொரு ஆண்டுக்கான சேவைத் திட்டங்கள் வகுத்தளிக்கப்பட்டதன் அடிப்படையில் 2010 ஆம் ஆண்டில் முஸ்லிம் லீக் பயிற்சி முகாம் தஞ்சை வழுத்தூரிலும் கிருஷ்ணகிரி ஒசூரிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இளைஞர்கள் பல நூற்றுக்கணக்கில் பங்கேற்று, முஸ்லிம் லீக் கொள்கை கோட்பாடுகளில் பயிற்றி பெற்று, சமுதாய சன்மார்க்க தேசிய சேவையில் இப்பொழுது முனைந்து ஈடுபட்டும் பாடுபட்டும் வருகின்றனர்.
எதிர் பார்த்ததைவிடப் பலமடங்கு இதயத்துக்கு நிறைவு தரும் வகையில் இந்தப் பயிற்சி முகாம்களும், அவற்றின் பயன்பாடுகளும் அமைந்திருக்கின்றன.
அடுத்த திட்டமாக, மார்ச் 10 ஆம் நாள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிறுவன தினவிழா நெல்லைச் சீமையில் மேலப்பளையத்தில் மிகமிக விமரிசையாக நடைபெற் றிருக்கிறது. மகளிர் அரங்கும், பிறைக் கொடி பேரணியும் விழாவுக்குப் பெருமை சேர்த்துள்ளன. மத்திய அமைச்சர் மாண்புமிகு மு.க. அழகிரி அவர்களும், மாநில அமைச்சர் மாண்புமிகு மொய்தீன்கான் அவர்களும், மாண்புமிகு ப+ங்கோதை அருணா அவர்களும் நிறைவு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். துராப்ஷா அவர்கள் தலைமையிலான விழாக்குழுவினர் மார்ச் 10ஆம் நாள் விழா தமிழக அரசியல் அரங்கில் அனைத்துக் கட்சிகளின் கவனத்தையும்
விழாவில் ~~இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் - இலட்சியப் பயணத்தில் இராஜாஜி ஹால் முதல் சாதாப் மஹால் வரை|| என்னும் சிறிய நூலும் வெளியிடப்பட்டது. முஸ்லிம் லீக் வரலாற்று ஆசிரியர் எழுத்தரசு ஏ.எம். ஹனீப் அவர்கள் 1948 மார்ச் 10 முதல் ஜனவரி 16, 2010 வரையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை இந்தக் குறுநூலில் கோர்வை செய்திருக்கிறார். அந்த நூலில் கேரள மாநிலத்தில் முஸ்லிம் லீக் எத்துணை பலமாக உள்ளது என்பதை எடுத்துக் காட்டும்விதமாக, அங்கே பன்னிரண் டாயிரம் பிரைமரிகளுக்கு மேல் உள்ளன என்பதை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அதாவது ஒரு கோடி இருபது இலட்சம் உறுப்பினர்களுக்கு மேலாக கேரளாவில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் சேர்ந்திருக்கின்றனர் என்பதே அந்த உண்மையாகும். கேரளாவில் முஸ்லிம்கள் மட்டுமன்றி, தலித் இன மக்களும் முஸ்லிம் லீகில் ஏராளமான இணைந்துள்ளனர். இதே நிலையைத் தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்ற பேரவாவின் அடிப்படையில்தான் பத்து இலட்சம் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
மகிழ்ச்சிய+ட்டும் செய்தி என்னவெனில், தமிழகத்தில் சுதந்திரத்துக்கு முன்னரும் அதன் பின்னரும் முஸ்லிம் லீக் நுழையாத பல ஊர்களில் இன்றைய தினம் நட்சத்திரம் பொறித்த பச்சிளம் பிறைக் கொடி பறக்கிறது@ ஆர்வத் துடிப்போடு அங்கெல்லாம் இளைஞர்கள் முஸ்லிம் லீகில் இணைந்து வருகின்றனர்@ புதிய பிரைமரிகள் உருவாக் கப்பட்டு வருகின்றன.
எந்த மாவட்டத்தில் உறுப்பினர் சேர்ப்பும் பிரைமரி தேர்தலும் நிறைவு பெற்றுள்ளதோ, அந்த மாவட்டத் தலைவரும் மாவட்டச் செயலாளரும் மாவட்டம் முழுவதிலும் உள்ள உறுப்பினர் படிவங்களை மாநில முஸ்லிம் லீக் தலைமையகத்தில் சேர்ப்பித்திட வேண்டும். அதோடு, ஒவ்வொரு பிரைமரிவாரியாக மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை பிரைமரி தேர்தல் விவரங்கள் மற்றும் உறுப்பினர் கட்டண மாநில அந்த மாவட்ட முஸ்லிம் லீக் தேர்தல் தேதியும் மற்ற விவரமும் அறிவிக்கப்பட விருக்கின்றது. சில மாவட்டங்களில் ஐம்பது ஆயிரத்துக்குப் மேலாக உறுப்பினர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் @ சில மாவட்டங் களில் சில ஆயிரம் பேர் மட்டுமே சேர்ந்திருக்கிறார்கள். இத்தகைய மாவட்டங்களில் உறுப்பினர் சேர்ப்புக்கு என்றும் பிரைமரி தேர்தலுக்கு என்றும் நாட்களைக் குறித்து அறிவித்து இப்பணிகளை மாவட்ட நிர்வாகிகள் முடித்திட வேண்டும்.
நாம் அறிவித்த தேதிகள் கடந்துள்ள நிலையிலும் சில இடங்களில் இந்தப் பணிகள் முழுமை பெறவில்லை என்னும் செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வலிமையான அடித்தளம் அமைக்கும் பணியில் அனைவரின் பங்களிப்பும் சிறப்பாக இருந்திடல் மிக மிக அவசியம்.
இன்றைக்குப் பாடுபட்டால்தான் நாளைக்குப் பலனை எதிர் பார்க்க முடியும்.
Labels:
கே.எம்.காதர் மொகிதீன்,
தலைவர்,
தேர்தல்,
பிரைமரி,
முஸ்லிம் லீக்
Subscribe to:
Posts (Atom)