Showing posts with label காயல்பட்டினம். Show all posts
Showing posts with label காயல்பட்டினம். Show all posts

Wednesday, July 7, 2010

முஸ்லிம் லீக் முயற்சியால் காயல்பட்டினம் ரயில் நிலையப் பணிகள் தீவிரம்

முஸ்லிம் லீக் முயற்சியால் காயல்பட்டினம் ரயில் நிலையப் பணிகள் தீவிரம்

காயல்பட்டினம், ஜூலை 7‍

காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் மேம்பாட் டுப் பணிகள் படிப்படி யாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

காயல்பட்டினம் ரயில் நிலையத்தில், பயணியர் தங்கும் அறை, கழிப்பறை, நடைமேடை உயர்த்தல், மேற்கூரையமைப்பு, ஒளி வெள்ள விளக்குகள் நிறுவுதல், பயணச்சீட்டு முன்பதிவு கணணிமய மாக்கல் உள்ளிட்ட அடிப் படைத் தேவைகள் நிறை வேற்றப்பட வேண்டு மென்று கோரி, காயல் பட்டினம் நகர பொதுமக் கள் சார்பாக காயல்பட் டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை மற்றும் பொது நல அமைப்புகள், சம்பந் தப்பட்ட துறை அமைச்சர் களுக்கும், அதிகாரிகளுக் கும் தொடராக கோரிக்கை வைத்தவண்ணம் இருந் தனர்.

இந்நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதியன்று, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால், ஜலாலிய்யாஹ் நிக்காஹ் மஜ்லிஸில் நடத்தப்பட்ட விழாவில், மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் இ.அஹ்மத் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்டு, மேற்படி அடிப்படைத் தேவைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப் படும் என்று அந்த மேடை யிலேயே உத்தரவிடுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, இருளடைந்திருந்த ரயில் நிலையப் பாதையில் துவக்கமாக 3 ஒளிவிளக் குகள் மட்டும் பொருத்தப் பட்டன. அதன் பின், எந்த வொரு மேல்நடவடிக்கை யும் மேற்கொள்ளப்படாத நிலையில், சில மாதங் களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு கணணிமயமாக் கப்பட்டது.

இந்நிலையில், ரயில்வே துறை இணையமைச்சர் இ.அஹ்மதை, ஐக்கியப் பேரவை நிர்வாகிகளும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம்.அபூபக்கரும் தொடர்ச் சியாக தொடர்பு கொண்டு, நிறைவேற்றப்பட வேண் டிய அடிப்படை வசதிகள் குறித்து நினைவூட்டிக் கொண்டே இருந்தனர்.

அத்தோடு, மதுரை கோட்ட ரயில்வே துறை முக்கிய அதிகாரி களிடமும் தொடர்ந்து அவர்கள் வலியுறுத்தி வந்த தன் பலனாக, தற்சமயம் இருளடைந்திருந்த இருப் புப்பாதை நடைமேடை யின் அனைத்துப் பகுதி களிலும் ஓரளவுக்கு குழல் விளக்குகளும், இரண்டு ஒளிவெள்ள விளக்குகளும் நிறுவப்பட்டுள்ளன. பய ணியர் அமருவதற்காக, ஆங்காங்கே கல் இருக்கை கள் நிறுவப்பட்டு வரு கிறது.

கழிப்பறை விரைவில் நவீனப்படுத்தப்படும் என் றும், பயணியர் தங்கும் அறை முழுமையாக தரை மட்டமாக்கப்பட்டு தற்கா லத் தேவைக்கேற்ப புதிதா கக் கட்டப்படும் என்றும், வரும் நவம்பர் மாதத்திற் குள் நிலைய மேலாளர் (ஸ்டேஷன் மாஸ்டர்) மற்றும் பயணச்சீட்டு முன்பதிவாளர் (டிக்கட் புக்கிங் க்ளெர்க்) என இரண்டு ஊழியர்கள் நியமிக்கப்படுவர் என்றும், நடைமேடை உயர்மட்ட நடைமேடையாக (ஹை லெவல் ப்ளாட்ஃபார்ம்) ஆக மாற்றப்படும் என்றும் அதிகாரப்பூர்வமற்ற செய் திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, முன்பு மத்திய ரயில்வே அமைச்ச ராக இருந்த ஜாஃபர் ஷரீஃப் 21.10.1993 அன்று காயல் பட்டினம் வந்த இடத்தில், உயர்மட்ட நடைமேடை (ஹை லெவல் ப்ளாட் ஃபார்ம்) உருவாக்கத்திற் கான கட்டுமானப் பணி யைத் துவக்கி வைத்த தாகவும், 02.05.1994 அன்று காயல்பட்டினம் வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடி ஆதித்தன் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட நடைமேடை யைத் துவக்கி வைத்த தாகவும், ரயில் நிலைய பயணியர் தங்கும் அறை சுவற்றிலிருந்த அடுத்தடுத்த இரண்டு கல்வெட்டுகளில் வாசகங்கள் காணப்படு கின்றன.
இதுபற்றி விசாரிக்கை யில், இதற்கு முன்பிருந்த மீட்டர் கேஜ் இருப்புப் பாதைக்கு ஏற்ப, அந்த உயர்மட்ட நடைமேடை அமைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது புதிதாக நிறு வப்பட்டுள்ள ஒளிவெள்ள விளக்குகளை, பொதுநல ஆர்வலர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல் ஹஸன் இயக்கி, செயல் பாட்டைத் துவக்கி வைத் தார். நிலைய அதிகாரி முஹம்மத் யூசுப் உட னிருந்தார்

செந்தூர் விரைவு ரயில் விரைவில் மயிலாடுதுறை வழித்தடத்தில் இயக்கபட வுள்ளதாகவும், இதனால் தற்போதைய பயண நேரத்தை விட 2 மணி நேரம் கூடுதலாக பயணம் செய்ய வேண்டி வரும் எனவும் செய்திகள் தெரி விக்கின்றன.

Tuesday, April 27, 2010

காயல் பட்டினத்திற்கு ரூ. 30 கோடி கடையநல்லூருக்கு 21.40 கோடி

காயல் பட்டினத்திற்கு ரூ. 30 கோடி கடையநல்லூருக்கு 21.40 கோடி

ரூ.1,800 கோடியில் வேலூர் கூட்டு குடிநீர் திட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நன்றி


சென்னை, ஏப்.27:

வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ 1,800 கோடி மதிப்பீட்டில் இந்த ஆண்டே பணிகள் தொடங்கும் என்றும், ரூ. 168 கோடியில் திருவண் ணாமலை, கோவில் பட்டி, காயல் பட்டினம், கடைய நல்லூர் ஆகிய நகராட்சி களில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள் ளதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப் பேர வையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட் சித்துறை, நகராட்சி நிர்வா கம் மற்றும் குடிநீர் வழங் கல் துறை மீதான விவாதத் துக்கு பதில் அளித்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்புக் களை வெளியிட்டார்:

ரூ. 1,800 கோடியில் வேலூர் கூட்டுக் குடிநீர்

வேலூர் மாவட்டத்தி லுள்ள வேலூர் மாநக ராட்சி, 6 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 64 வழியோர குடியிருப்பு களுக்கு காவேரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு ஒரு கூட்டுக் குடிநீர் திட் டத்துக்காக விரிவான அறிக்கையை ரூ.1,400 கோடி மதிப்பீட்டில் தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரி யம் தயாரித்தது.


விரிவான கலந்தாய்வுக் குப் பின்னர், நாளொன் றுக்கு 270 மில்லியன் லிட் டர் குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத் துக்கு ரூ.1,500 கோடி வரை நிதி உதவி அளிக்க, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு நிறுவனம் இசைவு அளித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் திட் டப் பணிகள் மேற்கொள் ளப்படும்.

ரூ. 168 கோடியில் நான்கு நகராட்சிகளில் குடிநீர்

திருவண்ணாமலை நகராட்சிக்கு சாத்தனூர் அணையை நீராதாரமாகக் கொண்டு, ரூ.36.66 கோடி மதிப்பீட்டில் ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் நிதி ஆதாரத்துடன் புதிய குடி நீர் திட்டம் செயல் படுத் தப்படும்.

கடையநல்லூர் நகராட் சிக்கான புதிய குடிநீர் மேம் பாட்டுத் திட்டம், 2008 -2009ம் ஆண்டில் அறிவிக் கப்பட்டது. இந்த திட்டத் துக்கான ஆய்வுப் பணிகள் முடிந்தது. ரூ.21.40 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக் கப்பட்டு, ஜெர்மன் மேம் பாட்டு வங்கி நிதி ஆதாரத் துடன் செயல்படுத்தப் படும்.

காயல்பட்டினம் நகராட்சி

கோவில்பட்டி நகராட் சிக்கு ரூ.80 கோடி மதிப் பீட்டிலும், காயல்பட்டி னம் நகராட்சிக்கு ரூ.30 கோடி மதிப்பீட்டிலும் குடிநீர் திட்டம் செயல் படுத்த விரிவான திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப் பட்டுள்ளன.

இத்திட்டங்களுக்கான நிதி ஆதாரம் இறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. நிதி ஆதா ரம் இறுதி செய்யப் பட்ட வுடன் இத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக் கைகள் மேற்கொள்ளப் படும்.

இவ்வாறு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நன்றி

முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பல்வேறு நகராட்சி களில் புதிய குடிநீர் திட் டங்கள் இந்த ஆண்டே தொடங்குவதற்கு முடி வெடுத்த தமிழக அரசுக்கும் முதல்வர் கலைஞருக்கும், தமிழக சட்டப் பேரவையில் அறிவிப்புக் கள் வெளியிட்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளது.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம் முஹம்மது அப+பக்கர் நன்றி தெரி வித்து தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., நன்றி

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளருமான எம். அப்துல் ரஹ்மான் ரூ.1,800 கோடி மதிப்பீட் டில் வேலூர் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் இந்த ஆண்டே தொடங்கும் என துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் அறிவித்தற்கு மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்தார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் மிக முக்கிய பிரச்சினையான குடிநீர் பிரச்சினை முழுமையாக தீர இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என குறிப்பிட்டார்.

அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.க்கு நன்றி

இந்திய யூனியன் முஸ் லிம் லீகின் மாநில கொள்கை பரப்புச் செய லாளர் காயல் மகப+ப் திருச் செந்தூர் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ் ணனை சந்தித்து காயல் பட்டினம் நகராட்சியில் புதிய குடிநீர் திட்டம் தொடங்குவதற்கு முழு முயற்சி மேற்கொண்ட தற்கு நன்றி தெரிவித்தார்.

Thursday, December 31, 2009

காயல்பட்டினம் இரயில்வே நிலைய விரிவாக்கம்!

காயல்பட்டினம் இரயில்வே நிலைய விரிவாக்கம்!

நகர்மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றார் இ.அஹ்மத்!!


காயல்பட்டினம். டிச.30

காயல்பட்டினம் வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், மத்திய இரயில்வே துறை இணையமைச்சருமான இ.அஹ்மத் ஸாஹிப், முதல் நிகழ்ச்சியாக காயல்பட்டினம் இரயில்வே நிலையத்தைப் பார்வையிட்டார். அங்குள்ள குறைபாடுகளையும், செய்யப்பட வேண்டிய பணிகளையும் மக்களிடம் கேட்டறிந்தார்.

முன்னதாக, கடந்த 15ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், காயல்பட்டினம் இரயில்வே நிலையத்தை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து முழுமையாகக் கேட்டறிந்திருந்தார். அதனடிப்படையில், நேற்று காயல்பட்டினம் நிகழ்ச்சியில் நகர்மக்கள் சார்பாக இ.அஹ்மத் ஸாஹிபிடம் கோரிக்கைகளை அவர் விளக்கிச் சொன்னார்.

பின்னர் உரையாற்றிய மத்திய அமைச்சர் இ.அஹ்மத் இக்கோரிக்கைகள் குறித்து பேசுகையில், காயல்பட்டினம் மிகப்பெரிய ஊர்@ மிகச் சிறந்த மக்கள்@ ஆனால் மிகச் சிறிய இரயில்வே ஸ்டேஷன்... எனவே உங்கள் கோரிக்கைகள் நியாயமானவையே! உங்கள் கோரிக்கைகளில் ஒன்றான, காயல்பட்டினம் இரயில் நிலையத்தில் கணணி மயமாக்கப்பட்ட முன்பதிவு மையம் மற்றும் உடனடி பயணச்சீட்டு மையம் விரைவில் திறக்கப்படும் என்றும், 18 இரயில் பெட்டிகள் நிறுத்துவதற்கு வசதியாக, இந்நிலையத்திலுள்ள நடைமேடை விரிவுபடுத்தப்படும்... பயணியர் வசதிக்காக, காயல்பட்டினம் இரயில் நிலையத்தில் மேற்கூரை விரைவில் அமைக்கப்படும் என்று கூறிய அவர், திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி வரையிலுள்ள இரயில் நிலையங்களில் நடைமேடை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது@ இது விரைவில் முடிக்கப்பட்டு, செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயிலை தினசரி இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில், சி.லெ.சாகுல் ஹமீது, எஸ்.ஏ.முஹம்மத் அலீ, அ.குலாம் ஹஸன், எஸ்.டி.வெள்ளைத்தம்பி, எஸ்.எம்.மிஸ்கீன் சாஹிப் ஃபாஸீ, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், சொளுக்கு எஸ்.எம்.கபீர், எஸ்.செய்யித் அஹ்மத், எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, பிரபு சுல்தான், வாவு நாஸர், பி.எம்.எஸ்.அமானுல்லாஹ் ஆகிய நகரப் பிரமுகர்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட – நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி நன்றி கூறினார். தூத்துக்குடி மாவட்ட காழீ மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ ஃபைஜீ மஹ்ழரீ துஆ ஓதினார்.

தூத்துக்குடி மாவட்ட கல்வி மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மதுரை இரயில்வே கோட்ட மேலாளர் அனில் சிங்கால், காயல்பட்டினம் இரயில் நிலைய அதிகாரி முஹம்மத் இப்றாஹீம் உள்ளிட்ட இரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர்.

Wednesday, December 30, 2009

காயல்பட்டினம் நகர மக்கள்வரவேற்பில், தேசிய தலைவர் இ.அஹமது முழக்கம்

காயல்பட்டினம் நகர மக்கள்வரவேற்பில், தேசிய தலைவர் இ.அஹமது முழக்கம்


காயல்பட்டினம். டிச.30

இந்திய முஸ்லிம்களை கண்ணியத்துடன் வாழச் செய்வதே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இலட்சியம் என தேசிய தலைவர் இ.அஹ்மது ஸாஹிப் பெரு மிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், மத்திய இரயில்வே துறை இணை யமைச்சருமான இ.அஹ் மத் ஸாஹிப், தேசிய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மாநில தலை வருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் நேற்று (29.12.09) காயல் பட்டினம் வருகை தந்தனர்.

காயல்பட்டினம் இரயில்வே நிலையத்தைப் பார்வையிட்டுவிட்டு, வருகை தந்த அவர்களுக்கு பாங்காக் காயிதெமில்லத் பேரவையின் அமைப்பா ளர் வாவு ஷம்சுத்தீன் இல்லத்திலிருந்து கருத் தம்பி மரைக்காயர் தெரு, பிரதான வீதி, ஆறாம் பள்ளித் தெரு, சதுக்கைத் தெரு வழியாக ஊர்வல மாக அழைத்துச்செல்லப் பட்டனர்.


பின்னர், ஜலாலிய்யாஹ் திருமண மஹாலில், நகர மக்களின் சார்பிலும், அனைத்து மஹல்லா ஜமா அத்துகளின் சார்பிலும் எழுச்சிமயமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமையில், காயல்பட்டி னம் நகராட்சி தலைவர் வாவு செய்யது அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட பிர முகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில், எம்.ஏ.செய்யித் முஹம் மத் அலீ வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரி யர் கே.எம்.காதர் மொகி தீன், மாநில பொதுச் செய லாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செய லாளர் காயல் மகப+ப், ஐக்கியப் பேரவை கவுரவ ஆலோசனைக்குழு உறுப் பினர் எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், இ.அஹ்மத் ஸாஹிப் பேசு கையில் குறிப்பிட்டதா வது:-

காயல்பட்டினத்திற்கு வந்த என்னை சிறப்பான முறையில் வரவேற்ற மைக்கு எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனக் களிக்கப்பட்ட இந்த வரவேற்பு நான் அமைச்சர் என்பதற்காக அல்ல! காயி தெமில்லத் அவர்களின் ஊழியன் என்ற முறையி லும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தொண் டன் என்ற முறையிலும் தான் எனக்கு இந்த வர வேற்பு தரப்பட்டிருக்கிறது.

பாரம்பரியமிக்க கேரள இஸ்லாமிய கலாச்சாரத் தோடு, அரபிப்பாடல் இசைத்து, பெண்களும் - ஆண்களும் ஸலாம் கூறி எங்களை வரவேற்ற காட்சி எனக்கு அப்படியே கேரளாவை நினைவூட்டியது. மலபார் பகுதிக்கும் காயல் பட்டினத்திற்கும் நெருங் கிய தொடர்புண்டு என் பதை இது நிரூபித்து விட்டது.

காயல்பட்டினம் நகர மக்கள் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் பரவி இருக்கின்றார்கள். கெய்ரோவிலும் கூட நான் சென்றிருக்கையில், இந்த நகராட்சியின் தலைவரின் மகனார் என்னை வரவேற் றார். இப்படிப்பட்ட சர் வதேச தொடர்புள்ளவர் களை ஓரிடத்தில் சந்திக்கின்ற அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த மாநில பொதுச் செய லாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செய லாளர் காயல் மகபூப் ஆகி யோருக்கு எனது மன மார்ந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

இங்கு அளிக்கப்பட்ட இந்த மகத்தான வரவேற் பின் மூலமாக, கண்ணியத் திற்குரிய காயிதெமில்லத் தின் கொள்கைகளையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் லட்சியங்களையும் இன்னமும் அதிகமாக செயல்படுத்துவதற்கான ஓர் உறுதியை ஏற்கவேண்டிய நிலையை எனக்கு ஏற் படுத்தியுள்ளது.

இந்திய விடுதலைக்குப் பின், முஸ்லிம் லீகை இன்ன மும் ஏன் தொடர்ந்து நடத்துகிறீர்கள் என்று காயிதெமில்லத்திடம் கேட்கப்பட்டபோது, இந்திய முஸ்லிம்களை கண்ணியத்துடன் வாழச் செய்வதற்காகத்தான் முஸ்லிம் லீகை நான் தொடர்ந்து நடத்துகிறேன் என்று காயிதெமில்லத் அவர்கள் சொன்னார்கள். மக்கள் மன்றத்தில் மட்டு மல்லாது நாடாளுமன்றத் திலும், அரசியல் நிர்ணய சபையிலும் அவர்கள் அதை உறுதியுடன் கூறி னார்கள். அதைத்தான் நாங் களும் சொல்கிறோம். அது மட்டுமின்றி, அவர்கள் சொன்ன அந்தப் பாதை யில்தான் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம்.

கண்ணியத்துடன் வாழ் வது என்பதை வெறும் வார்த்தைகளாக மட்டு மின்றி, நாடு தழுவிய அள வில் முஸ்லிம்களுக்கு அதி கமான கல்வி நிலையங்கள், சர்வதேச அளவில் வேலை வாய்ப்புகள், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அணுகுமுறை, அனாதை இல்லங்கள், சமூக சேவை அமைப்புகள் என ஏராளமாக உருவாவ தற்கு நாங்கள் காரணமாக இருந்துள்ளோம்.

இந்த சமுதாயத்தின் பெயரால் சில இயக்கங்கள் ஆங்காங்கே சமுதாய மக் களுக்கு தவறான வழி காட்டுதலைக் காட்டி பிரச்சினையை ஏற்படுத்தி விட்டனர். ஆனால் நாங் களோ அல்லாமா இக்பால் அவர்கள் சொன்னதைப் போன்று, சத்திய இஸ்லா மியப் பாதையில் எங்கள் சமுதாய மக்களை வழி நடத்திக் கொண்டிருக்கி றோம்.

இந்த நாட்டைப் பொருத்த வரையில், முஸ்லிம்களை இரண்டாந் தர பிரஜைகளாக ஆக்க முயற்சித்தபோது, அவர்கள் கண்ணியத்தோடும், மானம் -மரியாதையுடனும் வாழ்ந்து, இந்த நாட்டி லேயே மடிவதற்கு எல்லா வகையான வழிமுறை களையும் நாங்கள் செய்து தந்தோம். வன்முறை வழிகாட்டுதலை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. சாந்தி - சமாதானம் - நல்லொழுக் கம் போன்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை களைப் பின்பற்றித்தான் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயல்பட்டு வருகிறது.

காயிதெமில்லத் காட் டித்தந்த வழியில் உறுதியு டன் நாங்கள் செயல் பட்டுக் கொண்டிருக்கிற காரணத்தினால்தான், 15ஆவது நாடாளுமன்றத்தி லும் நாங்கள் தொடர்ந்து இடம்பெறக்கூடிய வாய்ப் பும், மத்திய அமைச்சரவை யில் அங்கம் வகிக்கின்ற வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இது இந்த சமுதாயமும், நம் நாடும் நமது தாய்ச்சபைக் குக் கொடுத்த அங்கீகாரம்.

இந்திய அரசில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அங்கம் வகிக்கின்ற கார ணத்தினால்தான், முஸ்லிம் களின் கல்வி உதவிக்காக வேண்டி 3000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கி றது. சென்ற வாரம் கூட, பாரதப் பிரதமரை நான் உள்ளிட்ட 12 முஸ்லிம் எம்.பி.க்கள் சந்தித்து, பல கோரிக்கைகளை வலியு றுத்தி, அரை மணி நேரம் கலந்து பேசினோம். நீதியர சர் ரங்கநாத் மிஸ்ரா தலை மையிலான கமிஷன் பரிந் துரைகள் அமுல்படுத்தப் பட வேண்டும். குறிப்பாக, சிறுபான்மையினருக்கு 15 சதவிகிதம் இட ஒதுக்கீடு அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம் என்ற பரிந்துரை உடனடியாக அமுல்படுத் தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளோம்.

இப்படிப்பட்ட இயக் கம் இந்த நாட்டில் வளர வேண்டுமா, வேண்டாமா? இதில் நீங்களெல்லாம் அங் கம் பெற வேண்டுமா, வேண்டாமா? ஆகவேதான் நாடு முழுவதும் இந்த இயக்கத்தை வளர்ப்பதற் காக நானும், எனதருமை நண்பரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களும் அயராது பாடுபடுகிறோம். வரும் ஜனவரி 15ஆம் தேதி, பெங்களுருவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு நடைபெறவிருக் கிறது. அந்த மாநாட்டிற்கு அனைவரும் வருகை தாருங்கள் என அன்போடு அழைக்கிறேன்.

இவ்வாறு இ.அஹ்மது பேசினார்