Showing posts with label பணி. Show all posts
Showing posts with label பணி. Show all posts

Wednesday, July 7, 2010

முஸ்லிம் லீக் முயற்சியால் காயல்பட்டினம் ரயில் நிலையப் பணிகள் தீவிரம்

முஸ்லிம் லீக் முயற்சியால் காயல்பட்டினம் ரயில் நிலையப் பணிகள் தீவிரம்

காயல்பட்டினம், ஜூலை 7‍

காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் மேம்பாட் டுப் பணிகள் படிப்படி யாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

காயல்பட்டினம் ரயில் நிலையத்தில், பயணியர் தங்கும் அறை, கழிப்பறை, நடைமேடை உயர்த்தல், மேற்கூரையமைப்பு, ஒளி வெள்ள விளக்குகள் நிறுவுதல், பயணச்சீட்டு முன்பதிவு கணணிமய மாக்கல் உள்ளிட்ட அடிப் படைத் தேவைகள் நிறை வேற்றப்பட வேண்டு மென்று கோரி, காயல் பட்டினம் நகர பொதுமக் கள் சார்பாக காயல்பட் டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை மற்றும் பொது நல அமைப்புகள், சம்பந் தப்பட்ட துறை அமைச்சர் களுக்கும், அதிகாரிகளுக் கும் தொடராக கோரிக்கை வைத்தவண்ணம் இருந் தனர்.

இந்நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதியன்று, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால், ஜலாலிய்யாஹ் நிக்காஹ் மஜ்லிஸில் நடத்தப்பட்ட விழாவில், மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் இ.அஹ்மத் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்டு, மேற்படி அடிப்படைத் தேவைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப் படும் என்று அந்த மேடை யிலேயே உத்தரவிடுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, இருளடைந்திருந்த ரயில் நிலையப் பாதையில் துவக்கமாக 3 ஒளிவிளக் குகள் மட்டும் பொருத்தப் பட்டன. அதன் பின், எந்த வொரு மேல்நடவடிக்கை யும் மேற்கொள்ளப்படாத நிலையில், சில மாதங் களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு கணணிமயமாக் கப்பட்டது.

இந்நிலையில், ரயில்வே துறை இணையமைச்சர் இ.அஹ்மதை, ஐக்கியப் பேரவை நிர்வாகிகளும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம்.அபூபக்கரும் தொடர்ச் சியாக தொடர்பு கொண்டு, நிறைவேற்றப்பட வேண் டிய அடிப்படை வசதிகள் குறித்து நினைவூட்டிக் கொண்டே இருந்தனர்.

அத்தோடு, மதுரை கோட்ட ரயில்வே துறை முக்கிய அதிகாரி களிடமும் தொடர்ந்து அவர்கள் வலியுறுத்தி வந்த தன் பலனாக, தற்சமயம் இருளடைந்திருந்த இருப் புப்பாதை நடைமேடை யின் அனைத்துப் பகுதி களிலும் ஓரளவுக்கு குழல் விளக்குகளும், இரண்டு ஒளிவெள்ள விளக்குகளும் நிறுவப்பட்டுள்ளன. பய ணியர் அமருவதற்காக, ஆங்காங்கே கல் இருக்கை கள் நிறுவப்பட்டு வரு கிறது.

கழிப்பறை விரைவில் நவீனப்படுத்தப்படும் என் றும், பயணியர் தங்கும் அறை முழுமையாக தரை மட்டமாக்கப்பட்டு தற்கா லத் தேவைக்கேற்ப புதிதா கக் கட்டப்படும் என்றும், வரும் நவம்பர் மாதத்திற் குள் நிலைய மேலாளர் (ஸ்டேஷன் மாஸ்டர்) மற்றும் பயணச்சீட்டு முன்பதிவாளர் (டிக்கட் புக்கிங் க்ளெர்க்) என இரண்டு ஊழியர்கள் நியமிக்கப்படுவர் என்றும், நடைமேடை உயர்மட்ட நடைமேடையாக (ஹை லெவல் ப்ளாட்ஃபார்ம்) ஆக மாற்றப்படும் என்றும் அதிகாரப்பூர்வமற்ற செய் திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, முன்பு மத்திய ரயில்வே அமைச்ச ராக இருந்த ஜாஃபர் ஷரீஃப் 21.10.1993 அன்று காயல் பட்டினம் வந்த இடத்தில், உயர்மட்ட நடைமேடை (ஹை லெவல் ப்ளாட் ஃபார்ம்) உருவாக்கத்திற் கான கட்டுமானப் பணி யைத் துவக்கி வைத்த தாகவும், 02.05.1994 அன்று காயல்பட்டினம் வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்கோடி ஆதித்தன் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட நடைமேடை யைத் துவக்கி வைத்த தாகவும், ரயில் நிலைய பயணியர் தங்கும் அறை சுவற்றிலிருந்த அடுத்தடுத்த இரண்டு கல்வெட்டுகளில் வாசகங்கள் காணப்படு கின்றன.
இதுபற்றி விசாரிக்கை யில், இதற்கு முன்பிருந்த மீட்டர் கேஜ் இருப்புப் பாதைக்கு ஏற்ப, அந்த உயர்மட்ட நடைமேடை அமைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது புதிதாக நிறு வப்பட்டுள்ள ஒளிவெள்ள விளக்குகளை, பொதுநல ஆர்வலர் லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல் ஹஸன் இயக்கி, செயல் பாட்டைத் துவக்கி வைத் தார். நிலைய அதிகாரி முஹம்மத் யூசுப் உட னிருந்தார்

செந்தூர் விரைவு ரயில் விரைவில் மயிலாடுதுறை வழித்தடத்தில் இயக்கபட வுள்ளதாகவும், இதனால் தற்போதைய பயண நேரத்தை விட 2 மணி நேரம் கூடுதலாக பயணம் செய்ய வேண்டி வரும் எனவும் செய்திகள் தெரி விக்கின்றன.

Wednesday, June 25, 2008

”முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப்பின் நினைவு கூறத்தக்க பணிகள்

"முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!":

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா சாஹிப் அவர்களின் மரணம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய முஸ்லிம்களுக்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது, இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும், ஷரீஅத் பற்றிய தெளிவுரையும், பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (Banatwala Bill) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகையே சாரும். பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபான்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல், அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை, அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்... முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்... வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தேசிய பாதுகாப்பு சட்டம், ஜாமிஆ மில்லியா, இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா, ராம்பூர் ரஜா நூலக மசோதா, மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா, வாரணாசி, பேர்ணாம்பட், ஜாம்ஷெட்பூர், முஜப்பூர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள், மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு, கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இந்திய முஸ்லிம்களுக்கு செய்த சேவை கணக்கில் அடங்காதவை. அதன் தகுதிமிக்க தலைவராக விளங்கிய ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்களின் சேவையும் போற்றத்தக்க சாதனையாகும். என்றும் இந்திய முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் நினைவு கூர்ந்து அவர்களின் அப்பழுக்கற்ற அரசியலை இந்திய முஸ்லிம் சமுதாயம் பின்பற்றவேண்டும். ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் அவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து அவர்களின் மறுமை வாழ்வை பிரகாசகமாக ஆக்கி அவர்களை உயர்ந்த இடத்தில் (சுவர்க்கலோகத்தில்) வைக்க அல்லாஹூ தஆலாவிடம் இறைஞ்சுவோம். ஆமீன்

B.சகதுல்லாஹ்.
வடக்கு மாங்குடி

Inna lillahi wa inna ilaihi rajioun. May Allah accept his services towards
society and nation admit him in paradise.

Akbar Batcha
MaxVision International FZ LLC.
108, Building 9, Dubai Media City,
P. O. Box 6727, Dubai
United Arab Emirates
Tel: +971 4 374 8213
abatcha@gmail.com

மணியன்
dateWed, Jun 25, 2008 at 5:51 PM
subjectRe: [சற்றுமுன்...] Comment: "��ுஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் மரணம்"

அவருடன் கேரளாவில் தொடர்வண்டியில் உரையாடியது நினைவிற்கு வருகிறது. ஒரு எளிமையான மனிதாபிமானமிக்க அரசியல் தலைவராக அவரைக் கண்டேன். அவரது மறைவிற்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலிகள்


அது பொதுவான உரையாடல்தான். குறிப்பிடும்படி எதுவும் இல்லை. நான் கேரளத்தில் தகவல் தொடர்பு திட்டங்களில் பணிபுரிந்த நேரத்தில் ஒருமுறை கோழிக்கோடிலிருந்து எர்ணாகுளம் வரும்போது எனது அடுத்த இருக்கையில் அவர் பயணித்தார். எனக்கு அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என தெரியாது. பொன்னானியில் அவர் தொடர்வண்டியில் ஏறியபோது எந்தவொரு கூட்டமோ பந்தாவோ இல்லாதிருந்தமையாலும் முன்னறிமுகம் இல்லாததாலும். எனது பணிகளைப் பற்றி கேட்கத்துவங்கிய பின்னரே நான் பதிலுக்கு அவரது அறிமுகத்தைக் கேட்க தாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என தெரிவித்தார். சற்றுநேரம் போதுவாக பேசிவிட்டு தாம் கொண்டுவந்திருந்த புத்தக வாசிப்பில் ஆழ்ந்துவிட்டார்.

அன்புடன்,
மணியன்