ஆசிரியர்கள் சமூகசேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்
அப்துல்பாசித் எம்.எல்.ஏ. பேச்சு
ஆம்பூர்,செப்.25-
ஆசிரியர்கள் சமூகசேவை மனப்பான்மையுடன் செயலாற்ற வேண்டும் என்று அப்துல்பாசித் எம்.எல்.ஏ. பேசினார்.
பாராட்டு விழா
வேலூர் மாவட்ட தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகம் சார்பில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சி.குணசேகரன், கரும்பூர் இந்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் துரை.கருணாகரன், பாராஞ்சி சி.எஸ்.ஐ. நடுநிலைபள்ளி தலைமை ஆசிரியர் மதியழகன் ஆகியோர்களுக்கு பாராட்டு விழா ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்கள் ஜேபஸ்சந்திரசேகர், ராதாகிருஷ்ணன், கொர்னேலியஸ் திவாகரன், லட்சுமிபாய், ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் டி.மணிவண்ணன் வரவேற்று பேசினார். வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் எச்.அப்துல்பாசித் கலந்து கொண்டு விருது பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மாணவர்களின் மதிப்பு உயர்ந்துள்ளது
ஆசிரியர்களுக்கு சமுதாய நோக்கு அதிகமாக இருக்க வேண்டும். சமூகசேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும். நாட்டின் எதிர்காலம் மாணவர்களின் கையில் உள்ளது. மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்களின் கையில் உள்ளது என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். தற்போது கல்வியின் மதிப்பு உயர்ந்துள்ளது.
மாணவர்கள் தவறு செய்யும்போது அதை அவர்களின் பெற்றோருக்கு தெரியபடுத்த வேண்டும். தாய், தந்தை உறவைவிட புனிதமான உறவான ஆசிரியர், மாணவன் உறவை மேம்படுத்தும் பணி ஆசிரியர்கள் கையில் உள்ளது என்பதை புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பேரணாம்பட்டு எம்.எல்.ஏ.சின்னசாமி, ஆம்பூர் நகர தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம், நகரசபை துணை தலைவர் தமிழரசிலட்சுமிகாந்தன், பேரணாம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் பத்மாவதிவில்வநாதன், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சிவாஜிராவ் நன்றி கூறினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Wednesday, September 24, 2008
பெண் கல்வியால்தான் சமுதாயத்தின் எதிர்காலம் சிறக்கும்! -ஹாஜிரா மகளிர் கல்லூரியில் பேராசிரியர்
பெண் கல்வியால்தான் சமுதாயத்தின் எதிர்காலம் சிறக்கும்! -ஹாஜிரா மகளிர் கல்லூரியில் பேராசிரியர்
http://www.muslimleaguetn.com/news.asp
பெண் மக்களுக்கு கல்வி கொடுத்தால்தான் சிறப்பான கற்றுணர்ந்த தலைமுறையை எதிர்கால முஸ்லிம் சமுதாயம் பெறமுடியும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.
மேலப்பாளையம் ஹாஜரா மகளிர் கல்லூரியில் அளிக்கப்பட்ட வரவேற்பில் மாணவிகள் மற்றும் பெற்றோரிடையே பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு கல்லூரித் தலைவரும், சமுதாய ஒளிவிளக்கு பட்டம் பெற்றவருமான பொறியாளர் செய்யது அகமது தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற மாணவிகள் அனைவரும் கலந்துகொண்ட கூட்டத்தில் தலைவர் பேசியதாவது:-
பெண் மக்களுக்கு கல்வி கொடுத்தால்தான் சிறப்பான கற்றுணர்ந்த தலைமுறையை எதிர்கால முஸ்லிம் சமுதாயம் பெறமுடியும். ஒரு பெண் படித்தால் அவள் குடும்பம் மட்டுமல்லாது, அவள் சார்ந்த தலைமுறையே நன்றாக விளங்கும்.
நாட்டில் உள்ள சுய நிதிக்கல்லூரிகள் பலவற்றிற்கு சமூகத்தில் அதிகம் உதவி பெறுவதில் சற்று பின்னடைவு உள்ளது. அதுபோலத்தான் பள்ளிக்கூடங்களுக்கும், ஆசிரியப்பயிற்சி நிறுவனங்களுக்கும் உதவிகள் பெறுவதில் மிகவும் துன்பப்பட வேண்டியதுள்ளது.
சுயநிதிக்கல்லூரிகள் சிலவற்றில் மாணவச் செல்வங்களிடம் மிக அதிகமாக பணத்தைப் பெற்று கல்லூரியை நடத்த வேண்டியதிருக்கிறது. காரணம் அரசிடமிருந்து எவ்விதமான நிதி உதவியும் கிடைக்காததால் படிக்க வருபவர்களிடமிருந்துதான் பெறவேண்டியதுள்ளது. ஆனால் இந்தக் கல்லூரி அதில் விதிவிலக்கு போல் உள்ளது.
சகோதரர் என்ஜினியர் செய்யது அகமது அவர்களின் உழைப்பை மனதார பாராட்டுவதில் மிக்க மகிழ்வடைகிறேன். அவர் செய்த பணிக்கு பக்கபலமாக சமுதாய புரவலர்கள் மிகப் பெருந்தன்மையோடு வகுப்பறைகள் பல கட்டித் தந்துள்ளார்கள். இது அவர் மீதும், மற்றைய கமிட்டி உறுப்பினர்கள் மீதும் சமுதாயம் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
அதுபோல இந்தக் கல்லூரியின் முதல்வர் அவர்களும் மிக்க கடினமாக உழைத்துள்ளார். அதனாலேதான் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதலாவது செட் மாணவச் செல்வங்கள் வணிகவியலில் தங்கப் பதக்கத்தையும் மற்றும் 7க்கும் மேற்பட்ட தகுதி நிலைகளையும் பெற முடிந்துள்ளது.
மகளிர் கல்வியை மிகச்சிறப்பாகச் செய்யும் இந்தக் கல்லூரிக்கு ஆஸாத் பவுண்டேசன் போன்றவற்றில் நிதி பெறுவதில் உள்ள தடைகளை நீக்கிட என்னாலான அத்தனை நடவடிக்கைகளையும் செய்வேன். மனது மிக்க மகிழ்வாக உள்ளது.
பெண் மக்கள் கல்விப் பணிக்கு சிறப்பாகப் பணி செய்யும் இந்தக் கல்லூரி இன்னும் அதிகமான கல்விப்பிரிவுகள் பெற்று, தன்னாட்சிக் கல்லூரியாக மாறி பல்கலைக் கழகமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
செய்யது அகமது அவர்களுக்கு உறுதுணையாகப் பணியாற்றும் தலைவர் ஹ_தா முகம்மது, பொருளாளர் ஜாபர் சாதிக், சிறப்பான கல்வி வழங்க அயராது பாடுபடும் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் சிந்தியா ஜோன்ஸ் மற்றும் பேராசிரியர்களையும், கமிட்டி உறுப்பினர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இந்த்கல்லூரி தமிழகத்தின் தலைசிறந்த கல்லூரியாக மாறிட அல்லாஹ்வை வேண்டுகிறேன்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனதுரையில் குறிப்பிட்டார். உரைக்குப் பின் கல்லூரி மாணவியருக்கு விருதுகளை வழங்கினார்.
மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி விழாவில் மாணவிக்கு தலைவர் பேராசிரியர் விருது வழங்குகிறார். வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம், தாளளார் செய்யது அகமது, எல்.கே.எஸ். மீரான் முகைதீன் ஆகியோர் உடன் உள்ளனர்.
மேலும் இவ்விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் திருமதி சிந்தியா ஜோன்ஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.டி.சம்சுல் ஆலம், எல்.கே.எஸ்.மீரான் முகைதீன் ஆகியோர் உரையாற்றினர்.
http://www.muslimleaguetn.com/news.asp
பெண் மக்களுக்கு கல்வி கொடுத்தால்தான் சிறப்பான கற்றுணர்ந்த தலைமுறையை எதிர்கால முஸ்லிம் சமுதாயம் பெறமுடியும் என்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.
மேலப்பாளையம் ஹாஜரா மகளிர் கல்லூரியில் அளிக்கப்பட்ட வரவேற்பில் மாணவிகள் மற்றும் பெற்றோரிடையே பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு கல்லூரித் தலைவரும், சமுதாய ஒளிவிளக்கு பட்டம் பெற்றவருமான பொறியாளர் செய்யது அகமது தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற மாணவிகள் அனைவரும் கலந்துகொண்ட கூட்டத்தில் தலைவர் பேசியதாவது:-
பெண் மக்களுக்கு கல்வி கொடுத்தால்தான் சிறப்பான கற்றுணர்ந்த தலைமுறையை எதிர்கால முஸ்லிம் சமுதாயம் பெறமுடியும். ஒரு பெண் படித்தால் அவள் குடும்பம் மட்டுமல்லாது, அவள் சார்ந்த தலைமுறையே நன்றாக விளங்கும்.
நாட்டில் உள்ள சுய நிதிக்கல்லூரிகள் பலவற்றிற்கு சமூகத்தில் அதிகம் உதவி பெறுவதில் சற்று பின்னடைவு உள்ளது. அதுபோலத்தான் பள்ளிக்கூடங்களுக்கும், ஆசிரியப்பயிற்சி நிறுவனங்களுக்கும் உதவிகள் பெறுவதில் மிகவும் துன்பப்பட வேண்டியதுள்ளது.
சுயநிதிக்கல்லூரிகள் சிலவற்றில் மாணவச் செல்வங்களிடம் மிக அதிகமாக பணத்தைப் பெற்று கல்லூரியை நடத்த வேண்டியதிருக்கிறது. காரணம் அரசிடமிருந்து எவ்விதமான நிதி உதவியும் கிடைக்காததால் படிக்க வருபவர்களிடமிருந்துதான் பெறவேண்டியதுள்ளது. ஆனால் இந்தக் கல்லூரி அதில் விதிவிலக்கு போல் உள்ளது.
சகோதரர் என்ஜினியர் செய்யது அகமது அவர்களின் உழைப்பை மனதார பாராட்டுவதில் மிக்க மகிழ்வடைகிறேன். அவர் செய்த பணிக்கு பக்கபலமாக சமுதாய புரவலர்கள் மிகப் பெருந்தன்மையோடு வகுப்பறைகள் பல கட்டித் தந்துள்ளார்கள். இது அவர் மீதும், மற்றைய கமிட்டி உறுப்பினர்கள் மீதும் சமுதாயம் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
அதுபோல இந்தக் கல்லூரியின் முதல்வர் அவர்களும் மிக்க கடினமாக உழைத்துள்ளார். அதனாலேதான் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதலாவது செட் மாணவச் செல்வங்கள் வணிகவியலில் தங்கப் பதக்கத்தையும் மற்றும் 7க்கும் மேற்பட்ட தகுதி நிலைகளையும் பெற முடிந்துள்ளது.
மகளிர் கல்வியை மிகச்சிறப்பாகச் செய்யும் இந்தக் கல்லூரிக்கு ஆஸாத் பவுண்டேசன் போன்றவற்றில் நிதி பெறுவதில் உள்ள தடைகளை நீக்கிட என்னாலான அத்தனை நடவடிக்கைகளையும் செய்வேன். மனது மிக்க மகிழ்வாக உள்ளது.
பெண் மக்கள் கல்விப் பணிக்கு சிறப்பாகப் பணி செய்யும் இந்தக் கல்லூரி இன்னும் அதிகமான கல்விப்பிரிவுகள் பெற்று, தன்னாட்சிக் கல்லூரியாக மாறி பல்கலைக் கழகமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
செய்யது அகமது அவர்களுக்கு உறுதுணையாகப் பணியாற்றும் தலைவர் ஹ_தா முகம்மது, பொருளாளர் ஜாபர் சாதிக், சிறப்பான கல்வி வழங்க அயராது பாடுபடும் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் சிந்தியா ஜோன்ஸ் மற்றும் பேராசிரியர்களையும், கமிட்டி உறுப்பினர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இந்த்கல்லூரி தமிழகத்தின் தலைசிறந்த கல்லூரியாக மாறிட அல்லாஹ்வை வேண்டுகிறேன்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனதுரையில் குறிப்பிட்டார். உரைக்குப் பின் கல்லூரி மாணவியருக்கு விருதுகளை வழங்கினார்.
மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி விழாவில் மாணவிக்கு தலைவர் பேராசிரியர் விருது வழங்குகிறார். வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம், தாளளார் செய்யது அகமது, எல்.கே.எஸ். மீரான் முகைதீன் ஆகியோர் உடன் உள்ளனர்.
மேலும் இவ்விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் திருமதி சிந்தியா ஜோன்ஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.டி.சம்சுல் ஆலம், எல்.கே.எஸ்.மீரான் முகைதீன் ஆகியோர் உரையாற்றினர்.
Tuesday, September 23, 2008
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையத்தில் ஏழைகளுக்கு இலவச அரிசி
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையத்தில் ஏழைகளுக்கு இலவச அரிசி
காதர்மொய்தீன் எம்.பி. வழங்கினார்
மேலப்பாளையம், செப்.24-
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையத்தில் நேற்று காதர் மொய்தீன் எம்.பி. ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கினார்.
மேலப்பாளையத்தில் செயல்பட்டு வரும் "மேலப்பாளையம் பைத்துல் மால்" என்ற இஸ்லாமிய பொது நிதியத்தின் சார்பில் ஏழைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம், மருத்துவ செலவு, திருமண நிதி உதவி, மாணவ-மாணவிகளுக்கு படிப்புக்கான உதவித்தொகை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
இலவச "பித்ரா" அரிசி
அதன் அடிப்படையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழைகளுக்கு இலவசமாக "பித்ரா" அரிசி வழங்கும் நிகழ்ச்சி நேற்று கொட்டிகுளம் பஜாரில் பைத்துல்மால் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதற்காக பைத்துல்மால் உறுப்பினர்களது பிரதிநிதிகள் உள்பட 500 பேருக்கு டோக்கன்கள் முன்கூட்டியே வழங்கப்பட்டு இருந்தது.
அரிசி வழங்கும் நிகழ்ச்சிக்கு பைத்துல்மால் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.எஸ்.டி.சம்சுல் ஆலம் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.எம்.அப்துல் கபூர் வரவேற்று பேசினார். இந்திய ïனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய பொதுச் செயலாளரும், வேலூர் தொகுதி எம்.பி.யுமான பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் கலந்து கொண்டு 21/2 கிலோ அரிசி பைகளை முதற்கட்டமாக 20 பேருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
யார்-யார்?
நிகழ்ச்சியில் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்ட செயலாளர் எல்.கே.எஸ்.முகம்மது மீரான் மைதீன், நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் எம்.எஸ்.முகைதீன் அப்துல் காதர், முன்னாள் கவுன்சிலர்கள் எஸ்.எஸ்.அப்துல் ரகுமான், என்.எம்.எச்.அனீபா, ஓய்வு பெற்ற அரசு நூலகர் ஓ.எம்.சாகுல் அமீது, தொண்டர் அணித்தலைவர் பீமா இல்லியாஸ், பிரசாரக்குழு பொறுப்பாளர்கள் மில்லத் காஜா, எம்.ஜி.காஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவித்தலைமை ஆசிரியரும், மேலப்பாளையம் பைத்துல்மால் பொருளாளருமான பி.எம்.காஜா நஜிமுத்தீன் நன்றி கூறினார்.
காதர்மொய்தீன் எம்.பி. வழங்கினார்
மேலப்பாளையம், செப்.24-
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையத்தில் நேற்று காதர் மொய்தீன் எம்.பி. ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கினார்.
மேலப்பாளையத்தில் செயல்பட்டு வரும் "மேலப்பாளையம் பைத்துல் மால்" என்ற இஸ்லாமிய பொது நிதியத்தின் சார்பில் ஏழைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம், மருத்துவ செலவு, திருமண நிதி உதவி, மாணவ-மாணவிகளுக்கு படிப்புக்கான உதவித்தொகை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
இலவச "பித்ரா" அரிசி
அதன் அடிப்படையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழைகளுக்கு இலவசமாக "பித்ரா" அரிசி வழங்கும் நிகழ்ச்சி நேற்று கொட்டிகுளம் பஜாரில் பைத்துல்மால் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதற்காக பைத்துல்மால் உறுப்பினர்களது பிரதிநிதிகள் உள்பட 500 பேருக்கு டோக்கன்கள் முன்கூட்டியே வழங்கப்பட்டு இருந்தது.
அரிசி வழங்கும் நிகழ்ச்சிக்கு பைத்துல்மால் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வி.எஸ்.டி.சம்சுல் ஆலம் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.எம்.அப்துல் கபூர் வரவேற்று பேசினார். இந்திய ïனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய பொதுச் செயலாளரும், வேலூர் தொகுதி எம்.பி.யுமான பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் கலந்து கொண்டு 21/2 கிலோ அரிசி பைகளை முதற்கட்டமாக 20 பேருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
யார்-யார்?
நிகழ்ச்சியில் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்ட செயலாளர் எல்.கே.எஸ்.முகம்மது மீரான் மைதீன், நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் எம்.எஸ்.முகைதீன் அப்துல் காதர், முன்னாள் கவுன்சிலர்கள் எஸ்.எஸ்.அப்துல் ரகுமான், என்.எம்.எச்.அனீபா, ஓய்வு பெற்ற அரசு நூலகர் ஓ.எம்.சாகுல் அமீது, தொண்டர் அணித்தலைவர் பீமா இல்லியாஸ், பிரசாரக்குழு பொறுப்பாளர்கள் மில்லத் காஜா, எம்.ஜி.காஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவித்தலைமை ஆசிரியரும், மேலப்பாளையம் பைத்துல்மால் பொருளாளருமான பி.எம்.காஜா நஜிமுத்தீன் நன்றி கூறினார்.
Sunday, September 21, 2008
கடையநல்லூர் நகராட்சி வார்டு இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வெற்றி
கடையநல்லூர் நகராட்சி வார்டு இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வெற்றி
கடையநல்லூர், செப். 20: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி 14- வது வார்டிற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷாகுல்ஹமீது அதிமுக வேட்பாளர் ஷயிகுர்ரஹ்மானை விட 239 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த வார்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1467. இதில் ஆண் வாக்காளர்கள்-721. பெண் வாக்காளர்கள்-746.
கடந்த 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 915. இதில் பதிவான ஆண் வாக்குகள் 324. பெண் வாக்குகள் 591.
இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை காலை நடைபெற்றது. வாக்குப்பதிவு மின்னணு எந்திரத்தில் நடைபெற்ற காரணத்தால் சில நிமிஷங்களிலேயே முடிவுகளை நகராட்சி ஆணையர் அருணாசலம் அறிவித்தார்.
இதில் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் ஷாகுல்ஹமீது 577 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் ஷயிகுர்ரஹ்மான் 338 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
இதையடுத்து வெற்றிபெற்ற வேட்பாளர் ஷாகுல்கமீதுவிற்கு சான்றிதழை ஆணையர் அருணாசலம் வழங்கினார்.
இதில் உதவி வாக்குபதிவு அலுவலர் கரீம், கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம், முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலர் செய்யது முகமது, நகர்மன்ற உறுப்பினர் அப்துல்காதர், நகரத் துணைச் செயலர் ஹைதர் அலி, திமுக நிர்வாகி முகமதுஅலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர், செப். 20: திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சி 14- வது வார்டிற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷாகுல்ஹமீது அதிமுக வேட்பாளர் ஷயிகுர்ரஹ்மானை விட 239 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த வார்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1467. இதில் ஆண் வாக்காளர்கள்-721. பெண் வாக்காளர்கள்-746.
கடந்த 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 915. இதில் பதிவான ஆண் வாக்குகள் 324. பெண் வாக்குகள் 591.
இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை காலை நடைபெற்றது. வாக்குப்பதிவு மின்னணு எந்திரத்தில் நடைபெற்ற காரணத்தால் சில நிமிஷங்களிலேயே முடிவுகளை நகராட்சி ஆணையர் அருணாசலம் அறிவித்தார்.
இதில் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் ஷாகுல்ஹமீது 577 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் ஷயிகுர்ரஹ்மான் 338 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
இதையடுத்து வெற்றிபெற்ற வேட்பாளர் ஷாகுல்கமீதுவிற்கு சான்றிதழை ஆணையர் அருணாசலம் வழங்கினார்.
இதில் உதவி வாக்குபதிவு அலுவலர் கரீம், கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம், முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலர் செய்யது முகமது, நகர்மன்ற உறுப்பினர் அப்துல்காதர், நகரத் துணைச் செயலர் ஹைதர் அலி, திமுக நிர்வாகி முகமதுஅலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Labels:
இடைத்தேர்தல்,
கடையநல்லூர்,
நகராட்சி,
முஸ்லிம் லீக்,
வார்டு,
வெற்றி
Monday, September 15, 2008
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய தேசிய நிர்வாகிகள்! டெல்லி செயற்குழுவில் ஒருமனதாகத் தேர்வு!!


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய தேசிய நிர்வாகிகள்! டெல்லி செயற்குழுவில் ஒருமனதாகத் தேர்வு!!
http://www.muslimleaguetn.com/news.asp?
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவராக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அஹமது, பொதுச்செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, அகில இந்திய அளவில் முஸ்லிம் லீக் பணிகளை விரிவுபடுத்தவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
தேசிய செயற்குழு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டம் செப்டம்பர் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் புதுடெல்லியிலுள்ள ரஃபிமார்க் அரசியல் நிர்ணய மாடத்திலுள்ள சபாநாயகர் அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் எம்.பி. தலைமை தாங்கினார். டெல்லி இமாம் மௌலானா ஹாபிஸ் அபுல் காசிம் கிராஅத் ஓதினார்.
மத்திய இணை அமைச்சர் இ.அஹமது அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் பானக்காடு செய்யது முஹம்மது அலி ஷிஹாப் தங்கள் துவக்க உரை நிகழ்த்தினார்.
பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக இருந்த குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் மற்றும் தலைவர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் ஒருங்கிணைந்த முறையில் தேசிய அளவில் ஒரே மாதிரியாக செயல்படுவதற்கு ஏற்ற வகையில் கட்சியின் சட்ட திட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு புதிய தேசிய நிர்வாகிகள் பின்வருமாறு தேர்வு செய்யப்பட்டனர்:
தேசிய நிர்வாகிகள்:
தலைவர்:
இ. அஹமது (கேரளா)
பொதுச் செயலாளர்:
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. (தமிழ்நாடு)
பொருளாளர்:
தஸ்தகீர் ஐ.ஆகா (கர்நாடகா)
துணைத் தலைவர்கள்:
வழக்கறிஞர் அஹமது பக்ஷ் (ராஜஸ்தான்),
வழக்கறிஞர் இக்பால் அஹமது (உத்தர பிரதேசம்)
இணைச் செயலாளர்கள்:
நயீம் அக்தார் (பீகார்),
முஹம்மது இஸ்மாயில் பனாத்வாலா (மஹாராஷ்டிரா),
ஷாஹின்ஷா ஜஹாங்கீர் (மேற்கு வங்காளம்),
அப்துஸ் ஸமத் சமதானி (கேரளா),
குர்ரம் அனீஸ் உமர் (டெல்லி).
மேற்கண்டவாறு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்நிர்வாகிகளை முஸ்லிம் லீகின் மூத்த தலைவர் பானக்காடு செய்யது முஹம்மது அலி ஷிஹாப் தங்கள் முன்மொழிந்தார்.
அகில இந்திய மாநாடு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய மாநாடு உத்தரபிரதேசத்தில் இரண்டு நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். இம்மாநாட்டில் அனைத்து மாநில நிர்வாகிகள் அந்தந்த மாநில அமைப்புப் பணிகள் பற்றி விளக்கும் வகையிலும், இளைஞர்கள் மாணவர்கள், தொழிலாளர்கள் பங்கேற்கும் வகையிலும் நிகழ்ச்சி நிரல் அமைக்கப்படும். அதற்குப் பின் ஒவ்வொரு மாநிலத்திலும் மண்டல மாநாடுகள் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.
சென்னையில் தலைமையகம்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய அலுவலகத்திற்கு புதுடெல்லியில் தனி இடம் வாங்கப்படும். அதுவரை அகில இந்திய அலுவலகமாக சென்னை மண்ணடி மரைக்கார் லெப்பைத் தெருவில் உள்ள தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதே மில்லத் மன்ஸிலே அகில இந்திய அலுவலகமாகவும் செயல்படும் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தீர்மானங்கள்:
டெல்லி குண்டு வெடிப்பு, ஓரிஸ்ஸா கலவரம், பீகார் வெள்ளம், ரங்கனாத் மிஸ்ரா, கமிஷன் போன்ற தேசீய பிரச்சனைகள் பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் உரையாற்றியோர்:
செய்யது முஹம்மது அலி ஷிஹாப் தங்ஙள், இ.அஹமது, பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழ்நாட்டின் பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ.சையத் சத்தார், எச். அப்துல் பாஸித் எம்.எல்.ஏ., ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் எம்.அப்துர் ரஹ்மான், உத்தர பிரதேச தலைவர் கௌஸர் ஹயாத் கான். அஸ்ஸாம் தலைவர் முஹம்மது திலீர் கான், மேற்கு வங்க தலைவர் ஷஹீன் ஷா ஜஹாங்கீர், மகாராஷ்டிர தலைவர் ஷமீவுல்லா அன்ஸாரி, பொதுச் செயலாளர் ஹபீப் கான், கர்னாடக மூத்த தலைவர் முஹம்மது ஷம்ஷீர் இனாம்தார், ஆந்திரா தலைவர் ஷாஹித், பீகார் பொதுச்செயலாளர் செய்யது அய்னுல் ஆப்தீன், கேரள பொதுச் செயலாளர் குஞ்ஞாலி குட்டி ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியில் புதிய தலைவர் இ. அஹமது நன்றி கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு தீர்மானங்கள்!
புதுடெல்லியில் 2008 செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம் 1:
டெல்லி குண்டு வெடிப்புக்கு கண்டனம்:
டெல்லியில் நடைபெற்ற மனிதாபிமானமற்ற தேசவிரோத சக்திகள் மறைமுகமாக நடத்திய காட்டுமிராண்டித்தனமான குண்டுவெடிப்புகளை இச்செயற்குழுக் கூட்டம் கடுமையாக கண்டிக்கிறது. சமூக கட்டுப்பாட்டை சீர்குலைத்து, நாட்டின் அமைதியையும், நல்லிணக்கத்தையும் அழிக்கும் பேய்த்தனமான கொடிய நடவடிக்கையை எந்த நாகரீக மக்களும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.
இந்த கோழைத்தனமான செயலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும், இந்த பயங்கரவாத செயல்களைத் தடுத்து நிறுத்த மேலும் எச்சரிக்கையாக இருக்கவும் மத்திய அரசை நாம் வற்புறுத்துகிறோம்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நமது அழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மனிதநேயத்திற்கு புறம்பான ஷைத்தானிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தீர்மானம் 2:
கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை:
சமீபத்தில், ஒரிஸ்ஸா மாநிலத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளில், சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயத்தின் உயிர்கள், உடைமைகள், மற்ற அந்தஸ்துகளைக் காப்பாற்றுவதில் மாநில அரசின் தோல்விக்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த விரக்தியையும், ஏமாற்றத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.
மாநில நிர்வாகத்தின் செயல்படாமை மற்றும் தாக்குதல் நோக்கம், பாசிச சக்திகள் சிறுபான்மையினருக்கு சொந்தமான வீடுகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தீ வைக்க இடமளித்துள்ளது.
சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதில் மாநில அரசின் ஒருதலைபட்சமான உள் நோக்கம் மிகவும் கண்டனத்திற்குரியது.
ஒரிஸ்ஸாவில் மதச் சிறுபான்மையினரைப் பாதுகாக்க அரசியல் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பிரிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இக்கூட்டம் வற்புறுத்துகிறது.
உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கும் அரசு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இடம் பெயர்ந்தவர்கள் மீளக் குடியேற்றப்படவேண்டும் என்றும் இக்கூட்டம் வற்புறுத்துகிறது.
தீர்மானம் 3:
பீகார் வெள்ள நிலவரம்:
ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஏற்பட்ட எதிர்பாராத பிரளயத்தினால் 10 லட்சம் மக்கள் வீடிழந்தனர். பலர் உயிரையும், உடைமைகளையும் இழந்தனர். இந்த பேரழிவுக்கு செயற்குழு கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
பாதிக்கப்பட்ட பீகார் மக்களுக்கு மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் தகுந்த தருணத்தில் உதவி அளித்தமைக்காக நாங்கள் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம்.
30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 300 நிவாரண முகாம்களில் 3 லட்சம் மக்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர். இவர்களது நிவாரணம் மற்றும் புணர்வாழ்வுப் பணிகளுக்கு இந்திய மக்கள் தாராளமாக பெரிய மனதுடன் உதவ வேண்டும் என்று செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மற்ற மனிதாபிமானிகளுடன் இணைந்து நிவாரண மற்றும் புனர்வாழ்வு பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று இந்த கூட்டம் வற்புறுத்துகிறது.
இந்த நிவாரணப் பணிகளில் அனைவரும் தாராளமாக பங்கேற்க வேண்டும் என்று இந்த கூட்டம் அன்புடன் வேண்டுகிறது.
தீர்மானம் 4:
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு:
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டும் என்றும், நாட்டில் வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் செயற்குழு வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது.
மேற்கண்டவாறு, புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜி.எம்.பனாத்வாலா மற்றும் உமர் பாபகி தங்ஙள் மறைவுக்கு இரங்கல்!
புதுடெல்லியில் செப்டம்பர் 14ஆம் தேதி கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற் குழுக் கூட்டத்தில் ஜி.எம்.பனாத்வாலா சாஹிப், சையத் உமர் பாபக்கி தங்ஙள் சாஹிப் மற்றும் சையத் உமர் ஷிஹாப் தங்ஙள் சாஹிப் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரங்கல் தீர்மானம் 1:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் அல்ஹாஜ் குலாம் மஹ்மூத் பனாத்வாலா சாஹிபின் திடீர் மறைவிற்கு செயற்குழு கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
பனாத்வாலா சாஹிப் ஒருமைப்பாடு, நேர்மை மற்றும் எளிமைமிக்க அரிய தலைவராகவும், தனி குணாதிசயம், சிறப்பான தகுதி, சிந்தனை மற்றும் பேச்சில் திறமை பெற்றவராகவும், மனித நேய உறவுகளில் மிகுந்த அக்கறை கொண்டவராகவும் விளங்கினார்.
முஸ்லிம் சமூகத்தில் உலகளாவிய சிறந்த நாடாளுமன்றவாதி@ ஒப்பற்ற அறிஞர் சிறப்பான ஆசிரியர்@ ஷரீஅத் சட்டம் மற்றும் முஸ்லிம் கலாச்சார அடையாளங்களை வெளிப்படுத்துவதில் சிறந்தவர்@ மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் பாதுகாவலர்@ சிறுபான்மை உரிமைகளுக்காக விட்டுக்கொடுக்காத போராளி@ அரசியல் சட்டத்தின் ஒவ்வொரு பகுதியையும் அறிந்தவர்@ இந்தியாவின் தலைசிறந்த குடிமகன்களில் ஒருவராக வாழ்ந்தவர் பனாத்வாலா சாஹிப் அவர்கள்.
செயல்மிக்க முயற்சியாலும், நோக்கத்தாலும் சமுதாயத்தின் பொதுச் சபைக்காகவும், நாட்டின் சேவைக்காகவும் அழகான முன்மாதிரியொன்றை பெருமளவில் நமக்கு வழங்கியுள்ளார்.
அல்லாஹ் - ரப்புல் - இஸ்ஸத் அவர்களை சுவனத்தில் உயர்பதவி அளிப்பானாக.
இரங்கல் தீர்மானம் 2:
சையத் உமர் பாபக்கி தங்ஙள் மறைவிற்கு செயற்குழு கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.
முஸ்லிம் சமுதாயத்தின் நலன்களில் தலைசிறந்த மூத்த வழிகாட்டியாகவும், காப்பாளராகவும் அவர் திகழ்ந்தார். சமுதாயத்தின் தலைசிறந்த தலைவரான அவர் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் சேவை செய்ய முன்வருவோருக்கு கண்ணியமிக்க தூண்டுகோலாக விளங்கினார்.
இதயப்பூர்வமான அனுதாபங்களை செயற்குழு கூட்டம் தெரிவித்துக் கொள்வதோடு அவருடைய மஃபிரத்திற்காக பிரார்த்திக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டது., எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான சுவனபதியை தந்தருள்வானாக.
இரங்கல் தீர்மானம் 3:
சையத் உமர் அலி ஷிஹாப் தங்ஙள் திடீர் மறைவுக்கு கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
கேரள முஸ்லிம் சமுதாயத்திற்கு அவர் சிறந்த பாராட்டத்தக்க உந்துசக்தியாக விளங்கினார். அவருடைய மஃபிரத்திற்கு அனைவரும் பிரார்த்திப்போமாக.
மேற்கண்ட இரங்கல் தீர்மானங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதுடெல்லி செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
Saturday, September 13, 2008
இ.யூ.முஸ்லிம் லீக்தேசிய செயற்குழு டெல்லியில் நாளை கூடுகிறது! புதிய தேசியத் தலைவர் தேர்வு!!
இ.யூ.முஸ்லிம் லீக்தேசிய செயற்குழு டெல்லியில் நாளை கூடுகிறது! புதிய தேசியத் தலைவர் தேர்வு!!
http://www.muslimleaguetn.com/news.asp
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டம் செப்டம்பர் 14-ம் தேதி ஞாயிறு பிற்பகல் 3 மணிக்கு புதுடெல்லியிலுள்ள ரபிமார்க் அரசியல் நிர்ணய மாடத்திலுள்ள சபாநாயகர் அரங்கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
பனாத்வாலாவுக்கு இரங்கல்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய துணைத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தேசிய பொதுச் செயலாளர் இ.அகமது வரவேற்றுப் பேசுகிறார். கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் செய்யதலி ஷிஹாப் தங்ஙள் துவக்க உரை நிகழ்த்துகிறார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக இருந்த குலாம் மஹ்மூது பனாத்வாலா சாகிப்காலமானதற்குப் பின் முதன் முறையாகக் கூடும் தேசிய செயற்குழு கூட்டத்தில் பனாத்வாலாசாகிப் மறைவிற்கும்கேரள மாநில முஸ்லிம் லீக் பொருளாளர் செய்யது உமர் பாபக்கி தங்ஙள் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர்கள் மறுவுலக நல்வாழ்விற்கு துஆ செய்யப்படுகிறது.
தலைவர் தேர்வு:
பனாத்வாலா சாகிப் மறைவிற்குப் பின் காலியாக உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அகில இந்திய அளவில் முஸ்லிம் லீக் பணிகளை சிறப்பான முறையில் திட்டமிட்டு விரிவுபடுத்திட அமைப்பு பணிகள் பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன.
ஆலோசனை:
தேசிய அளவில் தலையாய பிரச்சணைகளாக உள்ள விஷயங்கள் குறித்து தேசிய செயற்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து பரிசிலிப்பதற்கான ஆலோ சனைக் கூட்டம் பொதுச் செயலாளர் இ.அஹமது இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய செயலாளர் நயீம் அக்தார், தேசிய பொருளாளர் தஸ்தகீர் ஆகா, ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம்.அப்துர் ரஹ்மான், பொதுச் செயலாளர் குத்தாலம் எம்.லியாகத்அலி, பீகார் மாநில பொதுச் செயலாளர் அய்னுல் ஆபிதீன், தமிழ்நாடு மாநில தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர், மாநில வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வி. ஜீவகிரிதரன், டெல்லி பிரதேச இளைஞர் அணி தலைவர் குர்ரம் உமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தலைவர்கள் வருகை:
தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து மாநில முஸ்லிம் லீக் நிர்வாகிகளும் டெல்லிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
கேரள மாநில தலைவர் செய்யதலி ஷிஹாப், தங்ஙள் பொதுச் செயலாளர் குஞ்ஞாலி குட்டி, செயலாளர்கள் இ.டி. பஷீர், டாக்டர் முனீர்கோயா, அகமது கபீர், கேரள முன்னாள் அமைச்சர்கள் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாட்டிலிருந்து தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், அரவககுறிச்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான், தலைமை நிலைய செயலாளர் கே.ஏ. எம்.முகம்மது அபூபக்கர், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வி. ஜீவகிரிதரன், ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத்பேரவை தலைவர் எம்.அப்துர் ரஹ்மான், பொதுச்செயலாளர் எம்.லியாகத் அலி, ராஜஸ்தான் மாநில தலைவர் அகமதுபக்ஷ், அஸ்ஸாம் மாநில தலைவர் முகம்மது திலீர்கான், மேற்கு வங்க தலைவர் ஷாஹின்ஷா ஜஹாங்கீர், கர்நாடக செயலாளர் இப்ராகீம் ஷம்ஷீர், அகில இந்திய பொருளாளர் தஸ்தகீர் ஆகா, தேசிய செயலாளர் நயீம் அக்தர், பீகார் பொதுச் செயலாளர் அய்னுல் ஆபிதீன், ஜார்கண்ட் மாநில தலைவர் அம்ஜத்அலி, பொதுச் செயலாளர் ஹபீஸ் அகமது, புதுச்சேரி மாநில தலைவர் சி.வி.சுலைமான் உள்ளிட்டோர் டெல்லி வந்துள்ளனர்.
தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் மற்றும் அனைத்து மாநில நிர்வாகிகள் நாளை காலை டெல்லி வருகின்றனர்.
இஃப்தார்:
டெல்லி வருகைதரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு உறுப்பினர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் இ.அஹமது நாளை இஃப்தார் விருந்தளிக்கிறார்.
தேசியசெயற்குழு கூட்ட ஏற்பாடுகளை டெல்லி பிரதேச தலைவர் மர்கூப் ஹ_சைன் இளைஞர் அணிதலைவர் குர்ரம் உமர், சந்திரிகா செய்தியாளர் முகம்மது குட்டி, பேராசிரியரின் டெல்லி உதவியாளர் நூர்ஷம்ஸ் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
http://www.muslimleaguetn.com/news.asp
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டம் செப்டம்பர் 14-ம் தேதி ஞாயிறு பிற்பகல் 3 மணிக்கு புதுடெல்லியிலுள்ள ரபிமார்க் அரசியல் நிர்ணய மாடத்திலுள்ள சபாநாயகர் அரங்கில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
பனாத்வாலாவுக்கு இரங்கல்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய துணைத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தேசிய பொதுச் செயலாளர் இ.அகமது வரவேற்றுப் பேசுகிறார். கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் செய்யதலி ஷிஹாப் தங்ஙள் துவக்க உரை நிகழ்த்துகிறார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக இருந்த குலாம் மஹ்மூது பனாத்வாலா சாகிப்காலமானதற்குப் பின் முதன் முறையாகக் கூடும் தேசிய செயற்குழு கூட்டத்தில் பனாத்வாலாசாகிப் மறைவிற்கும்கேரள மாநில முஸ்லிம் லீக் பொருளாளர் செய்யது உமர் பாபக்கி தங்ஙள் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர்கள் மறுவுலக நல்வாழ்விற்கு துஆ செய்யப்படுகிறது.
தலைவர் தேர்வு:
பனாத்வாலா சாகிப் மறைவிற்குப் பின் காலியாக உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
அகில இந்திய அளவில் முஸ்லிம் லீக் பணிகளை சிறப்பான முறையில் திட்டமிட்டு விரிவுபடுத்திட அமைப்பு பணிகள் பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன.
ஆலோசனை:
தேசிய அளவில் தலையாய பிரச்சணைகளாக உள்ள விஷயங்கள் குறித்து தேசிய செயற்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து பரிசிலிப்பதற்கான ஆலோ சனைக் கூட்டம் பொதுச் செயலாளர் இ.அஹமது இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய செயலாளர் நயீம் அக்தார், தேசிய பொருளாளர் தஸ்தகீர் ஆகா, ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம்.அப்துர் ரஹ்மான், பொதுச் செயலாளர் குத்தாலம் எம்.லியாகத்அலி, பீகார் மாநில பொதுச் செயலாளர் அய்னுல் ஆபிதீன், தமிழ்நாடு மாநில தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர், மாநில வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வி. ஜீவகிரிதரன், டெல்லி பிரதேச இளைஞர் அணி தலைவர் குர்ரம் உமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தலைவர்கள் வருகை:
தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து மாநில முஸ்லிம் லீக் நிர்வாகிகளும் டெல்லிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
கேரள மாநில தலைவர் செய்யதலி ஷிஹாப், தங்ஙள் பொதுச் செயலாளர் குஞ்ஞாலி குட்டி, செயலாளர்கள் இ.டி. பஷீர், டாக்டர் முனீர்கோயா, அகமது கபீர், கேரள முன்னாள் அமைச்சர்கள் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாட்டிலிருந்து தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், அரவககுறிச்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான், தலைமை நிலைய செயலாளர் கே.ஏ. எம்.முகம்மது அபூபக்கர், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வி. ஜீவகிரிதரன், ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத்பேரவை தலைவர் எம்.அப்துர் ரஹ்மான், பொதுச்செயலாளர் எம்.லியாகத் அலி, ராஜஸ்தான் மாநில தலைவர் அகமதுபக்ஷ், அஸ்ஸாம் மாநில தலைவர் முகம்மது திலீர்கான், மேற்கு வங்க தலைவர் ஷாஹின்ஷா ஜஹாங்கீர், கர்நாடக செயலாளர் இப்ராகீம் ஷம்ஷீர், அகில இந்திய பொருளாளர் தஸ்தகீர் ஆகா, தேசிய செயலாளர் நயீம் அக்தர், பீகார் பொதுச் செயலாளர் அய்னுல் ஆபிதீன், ஜார்கண்ட் மாநில தலைவர் அம்ஜத்அலி, பொதுச் செயலாளர் ஹபீஸ் அகமது, புதுச்சேரி மாநில தலைவர் சி.வி.சுலைமான் உள்ளிட்டோர் டெல்லி வந்துள்ளனர்.
தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார் மற்றும் அனைத்து மாநில நிர்வாகிகள் நாளை காலை டெல்லி வருகின்றனர்.
இஃப்தார்:
டெல்லி வருகைதரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு உறுப்பினர்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் இ.அஹமது நாளை இஃப்தார் விருந்தளிக்கிறார்.
தேசியசெயற்குழு கூட்ட ஏற்பாடுகளை டெல்லி பிரதேச தலைவர் மர்கூப் ஹ_சைன் இளைஞர் அணிதலைவர் குர்ரம் உமர், சந்திரிகா செய்தியாளர் முகம்மது குட்டி, பேராசிரியரின் டெல்லி உதவியாளர் நூர்ஷம்ஸ் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)