Thursday, March 11, 2010

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தின சமுதாய மறுமலர்ச்சி மாநாடு: மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கினார்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தின சமுதாய மறுமலர்ச்சி மாநாடு: மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கினார்

பிரமாண்டமான பிறைக்கொடி பேரணி

தாய்மார்கள் வரவேற்ற கண்கொள்ளாக் காட்சி


மேலப்பாளையம், மார்ச்.11-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தின சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டை யொட்டி சமூக நல்லிணக்க பேரணி மேலப்பாளையத் தில் 10-3-2010 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. சமுதாய அறிஞர்கள் 6 பேருக்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஹசமுதாய ஒளிவிளக்கு விருது|களை வழங்கி சிறப்பித்தார்.

மாலை 4 மணிக்கு மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் அருகில் மக்கள் வெள்ளம் குவியத் தொடங்கியது. எங்கு நோக்கினும் பச்சிளம் பிறைக்கொடிகளின் பசுமைக்காடாக காட்சி யளித்தது. சமுதாயத்தின் சன்மார்க்க ஊழியர்கள் வாகனங்கள் மூலம் பச்சிளம்பிறைக் கொடிக ளுடன் தக்பீர் முழங்கிய வாறு சாரிசாரியாக வரத் தொடங்கினர்.

மாலை 5 மணிக்கு மாநில உலமாக்கள் அணி அமைப்பாளர் எச். ஹாமீத் பக்ரீ ஆலிம் தலைமையில் மாநாட்டு நிதிக் குழு தலைவர் ஷிபா எம்.கே.எம். முஹம்மது ஷாபி கொடி யசைத்து பேரணியை துவக்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர், எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட் டச் செயலாளர் எல்.கே. எஸ். மீரான் முகைதீன், டி.ஏ. செய்யது முஹம்மது, மாவட்டப் பொருளாளர் ஏ. அப்துல் வஹாப்,

நெல்லை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் டி.ஜே.எம். ஸலா ஹ{த்தீன் ரியாஜி, மாவட் டச் செயலாளர் பி.ஏ.கே. அப்துல் ரஹீம் ஆலிம், ஏம்எ. முஹம்மது இப்ரா ஹீம் ஆலிம், தென்காசி ரப்பானியா அரபிக் கல்லூரி முதல்வர் எம்.எச். ஷம்சுத்தீன் ஹஜ்ரத், வடகரை சுலைமான் சேட் ஆலிம், தென்காசி ஏ. அப்துல் ரஹ்மான் ஷிப்லி ஆகியோர் பேரணியின் முன்னிலையாளர்களாக பங்கேற்று வந்தனர்.

புளியங்குடி நகராட்சி துணைத் தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில், மாவட்ட துணைச் செய லாளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் வி.ஏ.எஸ். செய்யது இப்ராஹீம், மாவட்ட துணைச் செய லாளர்கள் வி.கே.புரம் கானகத்தி மீரான், தென் காசி எம்.எஸ். முஹம்மது உசேன், கடையநல்லூர் எஸ்.ஏ. ஹைதர் அலி முதலியார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் எம். பஸ்லுர் ரஹ்மான், தென் காசி நகராட்சி துணைத் தலைவர் பி. இப்ராஹீம், புளியங்குடி நகரச் செய லாளர் எம். அப்துல் ரஹீம், துணைத் தலைவர் பி.என்.எம். காதர் முகைதீன், பாளை மகப+ப் அலி, பத்தமடை சிராஜ்தீன், சங்க ரன்கோவில் சேகனா, மேலப்பாளையம் நகரச் செயலாளர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர், இளைஞர் அணி தலைவர் எம்.ஏ. நாகூர் கனி செயலா ளர் பி.எம். முகைதீன் அப் துல் ஜப்பார் ஆகியோர் பேரணியை ஒழுங்குபடுத்தி வந்தனர்.

நகரின் முக்கிய வீதிக ளில் தக்பீர் முழங்கி வரும் போது பார்வையா ளர்களாக நின்று கொண் டிருந்த ஆயிரக்கணக்கான தாய்மார்கள் முகமலர்ச்சி யுடன் பேரணியை வர வேற்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி, திருவாரூர், சென்னை ஆகிய மாவட் டங்களில் இருந்து வந்த ஏராளமான ஊழியர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

மாநில தொண்டர் அணி அமப்பாளர் திருச்சி ஜிஎம். ஹாஷிம் ஆள்உயர பச்சிளம் பிறைக்கொடியை பிடித்து வந்தார். திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் கே.எம்.கே. ஹபி புர் ரஹ்மான், தேனி மாவட்டத் தலைவர் கம்பம் எம் ஷாகுல் ஹமீது, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வாவு நாசர், விருதுநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஏ. இப்ரா ஹீம் ஷா, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் புது ஆயக்குடி பாரூக், காயல் பட்டினம் நகரச் செய லாளர் அமானுல்லா, எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கி ஆகியோரும் பேரணியில் வந்தனர்.

பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாலை 6 மணிக்கு ஜின்னா திடல் மாநாட்டுப் பந்தலை வந்தடைந்தது.

பின்னர் நடைபெற்ற சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் பேராசி ரியர் கே.எம்.காதர் மொகி தீன் தலைமை வகித்தார்.

எச். ஹாமித் பக்ரீ ஆலிம் கிராஅத் ஓதினார். மாவட்டச் செயலாளர் எல். கே.எஸ். மீரான் முகைதீன் அனைவரையும் வரவேற் றார்.

மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா மாநாட்டு அரங்கை திறந்து வைத்தார். மதுரை மாவட் டத் தலைவர் பி.கே.எம். அப்துல் காதர் ஆலிம் மாநாட்டு திடலில் பச்சி ளம் பிறைக்கொடி ஏற்றி வைத்தார்.

தமிழக வக்ஃபு வாரிய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர், மாநிலச் செயலாளர்கள் காயல் மஹப+ப், கமுதி பஷீர், நெல்லை மஜீத், நாகூர் கவிஞர்இஜட். ஜப ருல்லாஹ், திருப்ப+ர் எம்.ஏ. சத்தார், ஏ. அப்துல் ரவ+ப், நெல்லை மாவட்ட ஜமா அத்துல் உலமா சபைத் தலைவர் டி.ஜே.எம். சலா ஹ{த்தீன் ரியாஜி ஆகி யோர் பேசினர்.

மாநாட்டில் சிறந்த கல்வியாளர் கீழக்கரை சீனாதானா செய்யது அப்துல் காதர், சிறந்த சமூக சேவையாளர் ஷிபா டாக் டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, சிறந்த இலக்கியவாதி கவிஞர் வீரவநல்லூர் ரஹ்மான் ஆகியோருக்கு ஹசமுதாய ஒளி விளக்கு விருது|களையும், மாவட்ட துணைச் செயலாளர் பாட்டப்பத்து எம். முஹம் மது அலி, எம்.என்.எம். முஹம்மது இல்யாஸ் ஆலிம், சிலம்பு வித்வான் மணியாச்சி ஹாஜா முகைதீன் ஆகியோருக்கு மாவட்ட முஸ்லிம் லீகின் விருதுகளையும் மத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி வழங்கினார்.

ஹபிறைமேடை| மாதமிரு முறை, ஹமணிச்சுடர் மாநாட்டு சிறப்பு மலர்|, ஏ.எம். ஹனீப் எழுதிய ஹசென்னை ராஜாஜி ஹாலிலிருந்து பெங்களூர் சாதாப் மைதானம் வரை| என்ற நூலையும் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வெளியிட்டு சிறப்புரையாற் றினார்.

மாநாட்டில் தமிழக அமைச்சர் டாக்டர் ப+ங் கோதை, மாவட்ட திமு.க. செயலாளர் வி. கருப்பசாமி பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு. அப்பாவு, என். மாலை ராஜா, நெல்லை மாநக ராட்சி மேயர் ஏ.எல். சுப்பிரமணியன், துணை மேயர் கா. முத்துராம லிங்கம், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம், மாநில துணைத் தலைவர்கள் கோவை எல்.எம். ஜலீல் ஹாஜியார், திருப்ப+ர் ஹம்ஸா, திருச்சி ஏ.எம். ஹனீப், மாவட்டத் துணைத்தலைவர்கள் பாம்புக்கோவில் வி.ஏ. செய்யது பட்டாணி, புளியங்குடி ஏ. மைதீன் பிச்சை, நெல்லை பேட்டை வீ.ம. திவான் மைதீன், கடைய நல்லூர் ஏ.இ. அப்துல் காதர், மேலப் பாளையம் ஜே. ஷாகுல் ஹமீது, ஏர்வாடி தீன் இப்ராஹீம், மாவட்டச் செய்தி தொடர் பாளர் எஸ். பீர் முகைதீன், தொழிலதி பர்கள் எம்.கே. எம். கபீர், எம்.கே.எம். ஹமீது உட்பட பல்லாயிரக் கணக்கானோர் மாநாட் டில் பங்கேற்றனர்.

முடிவில் மாவட்டச் செயலாளர் த.அ. செய்யது முஹம்மது நன்றி கூறினார்.

தொகுப்பு - புளியங்குடி ஷாகுல் ஹமீது



மேலப்பாளையம் மாநாட்டுத் தீர்மானங்கள்


மேலப்பாளையம், மார்ச்.11-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தினத்தை முன்னிட்டு 2010 மார்ச் 10 புதன்கிழமை மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்ட முயற்சியின் பலனாக அமைக்கப்பட்ட நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் கல்வி வேலைவாய்ப்பில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்திற்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரையை ஏற்று உடனடியாக அமல்படுத்த மத்திய அரசை இம் மாநாடு வலியுறுத்துகிறது.

திருமண கட்டாயப் பதிவுச் சட்டம்

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அண்மை யில் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட திருமண கட்டாயப் பதிவு சட்டம் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் தலையிடுவதாக அமைந்து விடுமோ என்ற ஐயப்பாடு முஸ்லிம்கள் மத்தியில் எழுந்தது. இச் சட்ட மசோதா முன்வடிவாக கொண்டு வரப்பட்ட உடனேயே அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்தி முஸ்லிம்களின் அச்சம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து மேற் கொண்ட முயற்சியின் விளைவாக முஸ்லிம்களின் ஐயப் பாட்டை நீக்க தமிழக அரசு முன் வந்துள்ளதற்கு இம் மாநாடு நன்றி தெரி வித்துக் கொள்கிறது.

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை

அறிஞர் அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றினோம். அறிஞர் அண்ணா நூற்றாண்டு துவக்க விழா மற்றும் நிறைவு விழாக்களில் சுமார் 1500 ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர்.

தற்போது கோவை சம்பவங்களில் தண்டிக்கப்பட்ட 18 பேர் உள்ளிட்ட 51 பேர் ஆயுள் சிறைவாசிகளாக உள்ளனர். இதில் கோவை மத்திய சிறையில் மட்டும் 32 பேர் உள்ளனர்.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி 10 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய முத்தமிழ் அறிஞர் முதல் அமைச்சர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

வெளிநாடு செல்லும் முஸ்லிம் இளைஞர்களுக்கு

பாஸ்போர்ட் வழங்க வேண்டுதல்

மேலப்பாளையத்தில் முஸ்லிம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி வெளிநாடு செல்ல விரும்பினால் அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் காவல் துறை தடையில்லா சான்று தர மறுப்பது உள் ளிட்ட பல்வேறு நெருக் கடிகள் அளிக்கப்படுவதாக நீண்ட காலமாக புகார் சொல்லப்படுகிறது.

உள்நாட்டில் வேலை இல்லாத இந்த இளைஞர்கள் வெளிநாட்டில வேலைவாய்ப்பு பெற அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க ஆவன செய்ய மத்திய - மாநில அரசுகளின் சம்பந்தப்பட்ட துறைகளை இம் மாநாடு வலியு றுத்தி கேட்டுக் கொள்கி றது.

சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம்

தமிழ்நாட்டில் சிறு பான்மையினரால் நடத்தப்படும் ஆரம்ப நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஓரியண்டல் அரபி சுயநிதி கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கடந்த 19 ஆண்டு காலமாக அரசு சம்பளம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு அரசு ஊதியம் வழங்கி உதவ தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுதல்

அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங் களில் காலிப்பணியி டங்களை விரைவாக நிரப்பிட தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

கடையநல்லூர் வரிவிதிப்பு பிரச்சினை

கடையநல்லூர் நகராட்சியில் முஸ்லிம்கள் நிறைந்த ஐந்து வார்டுகளில் மட்டும் 533 வீடுகளுக்கு 1000 சதவீதத்திகு மேல் வரி விதிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி முதல்வர் கலைஞரின் கவனத்திற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நேரில் கொண்டு சென்றார். முதல்வரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதனை பரிசீலிக்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகி யோர் தமிழ்நாடு நகராட் சிகளின் நிர்வாக இயக்கு நரை சந்தித்து பேசிய போது, இந்த வரிவிதிப்பு பெரும் அநீதி இது மறுபரிசீலனை செய்யப்படும் என உறுதி தரப்பட்டதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு இந்த வரி குறைப்பை விரைந்து நிறைவேற்றித் தர இம் மாநாடு வலியுறுத்துகிறது.

தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம்

தென் மாவட்ட வளர்ச்சி, தொழில் வளம், மக்கள் பயன்பாடு இவைகளை கருத்தில் கொண்டு தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்தி அதிக விமானங்கள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலை

தூத்துக்குடி - திருநெல்வேலி இரு மாநகரங்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்க தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே நான்கு வழிச்சாலை அமைக்க தமிழ்நாடு அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கி றது.

செங்கோட்டை மார்க்கத்தில் அதிக ரயில்கள்

செங்கோட்டை - சென்னை வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகத்தை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மேலப்பாளையம் ரயில் நிலைய அபிவிருத்தி

மேலப்பாளையம் ரயில்வே நிலையம் கடந்த 29 வருடங்களாக எந்த அபிவிருத்தி பணிகளும் நடைபெறாமல் உள்ளது. இந்த ரயில் நிலையத்தை புதுப்பித்து, ரிஸர்வேஷன் கவுண்டர், சுகாதார வசதிகள் உள்ளிட்ட வைகள் செய்து தருவதோடு ரயில்கள் இங்கு நின்று செல்லவும் உத்தரவிட மத்திய ரயில்வே அமைச்சகத்தை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

பேட்டை நூற்பாலை திறக்க வேண்டுதல்

திருநெல்வேலி பேட்டை தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை கடந்த 10 வருடங்களாக மூடப்பட்டு கிடப்பதால் இங்கு பணிபுரிந்த மூன்றாயிரம் பேர் வேலையின்றி அவர்கள் குடும்பங்கள் சிரமப்படுகின்றன.

இந்த நூற்பாலை நவீனப்படுத்தப்பட்டு திறக்கப்பட்டால் 5 ஆயிரம் பேருக்கு மேல் வேலை கிடைக்கும். எனவே, இந்த நூற்பாலையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முஸ்லிம் லீக் 62-வது நிறுவனதின சமுதாய மறுமலர்ச்சி மாநாடு

முஸ்லிம் லீக் 62-வது நிறுவனதின சமுதாய மறுமலர்ச்சி மாநாடு

விழிப்புணர்வு கருத்தரங்கில் மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் உரை


மேலப்பாளையம், மார்ச்.10-

மகளிர் முன்னேற்றத் திற்கு ஹஇஸ்லாம்| மார்க்கம் எப்போதுமே தடையாக இருந்ததில்லை என்று மகளிர் விழிப்புணர்வு மாநாட்டைத் தொடங்கி வைத்து தலைமை உரை யாற்றிய மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் கூறி னார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினம் சமுதாய மறுமலர்ச்சி மாநாடாக திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் எழுச்சியோடு இன்று தொடங்கியது.

மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக மகளிர் விழிப் புணர்வு மாநாடு காலை 10.30 மணிக்கு தொடங் கியது. நிகழ்ச்சிக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் தலைமை தாங்கினார். ரஹ்மத் அப்துல் ரஹ்மான், ய+சுப் சுலைஹா மீரான் மைதீன், சைபுன்னிசா, ஜமீலா ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

குடும்ப விழிப்புணர்வு என்ற தலைப்பில் பேராசி ரியை ஏ. ரபீக்கா, மருத்துவ விழிப்புணர்வு என்ற தலைப்பில் டாக்டர் எல். என். ராதா, கல்வி விழிப் புணர்வு என்ற தலைப்பில் பேராசிரியை தஸ்ரீக் ஜஹான் ஆகியோர் கருத் துரை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற ஃபாத்திமா முஸப்பர் உரையாற்றும் போது குறிப் பிட்டதாவது-

தாய்ச்சபையாம் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினம் இன்று சமுதாய மறுமலர்ச்சி மாநா டாக ஏற்பாடு செய்துள்ள தென் மண்டல மாவட்டங் களின் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அனைவருக் கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றி யையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலப்பாளையம் கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதெ மில்லத் பிறந்து வளர்ந்து அவர் காலடி பட்ட பகுதியில் இந்த மாநாடு நடைபெறு வதில் பெருமிதம் கொள் கிறோம். இந்தியப் பெண்க ளின் பல்லாண்டு கால கோரிக்கையான 33 சதவீத இடஒதுக்கீடு நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்யப் பட்டு விவாதம் நடை பெற்று கொண்டிருக்கிற இக் காலகட்டத்தில் முஸ்லிம் லீகின் துவக்க நிகழ்ச்சியாக மகளிர் விழிப்புணர்வு மாநாடாக நடத்திக் கொண்டிருக் கிறோம்.ஹ இதற்கு முழு முதல் காரணமாக இருந்த ஐக்கிய முற்போக்கு கூட் டணியின் தலைவர் சோனியாகாந் திக்கும், இதே கோரிக் கையை மகளிர் சார்பாக வலியுறுத்தி வந்த தமிழக முதல்வர் கலைஞர் அவர் களுக்கும் நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறோம்.

இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு சகலவித மான உரிமைகளையும் வழங்கியுள்ளது. மகளிர் முன்னேற்றத்துக்கு இஸ் லாம் மார்க்கம் எவ்வித மான தடையாகவும் இருந் ததில்லை. கல்வி கற்பதை ஆண் - பெண் அனைவருக் கும் கட்டாய கடமையாக் கியுள்ளது இஸ்லாம் மார்க்கம். அப்படியிருந் தும் இந்திய முஸ்லிம்கள் கல்வியிலும், பொருளா தாரத்திலும், அரசியலிலும் மிகவும் பின்தங்கியுள்ளனர். நீதிபதி சச்சார் கமிட்டி அறிக்கையும், ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையும் இந் திய முஸ்லிம்களின் அவல நிலைகளை விரிவாக ஆய்வு செய்து அறிவித் துள்ளன.

நாட்டின் பல பாகங்க ளிலும் 80 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் அடிப்படை கல்வி கூட இல்லாமல் உள்ளனர். ஆண்கள் நிலையும் அவ் வாறுதான் உள்ளது. தாழ்த் தப்பட்ட தலித் மக்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் முஸ்லிம் சமுதாயம் உள்ளது என் பதை அந்த அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன.

இறைத்தூதர் முஹம் மது நபி (ஸல்) அவர்கள் குகையில் பசித்திருந்தும், தனித்திருந்தும், விழித்திருந் தும் இறைவனை துதி செய்த போது முதலில் இறங்கிய திருக்குர்ஆன் வசனம், ஹஓதுவீராக|. உம்மைப்படைத்த இறைவ னின் திருப்பெயரைச் சொல்லி ஹஓதுவீராக|. அவனே உங்களை ஹஅலக்கு| என்னும் நீர்த்துளியி லிருந்து படைத்தான். நீங்கள் அறியாத பல விஷயங்களை அறிவித்துக் கொடுத்தான். எழுது கோலை கொண்டு எழுத கற்பித்தான். இந்த இறை வசனம்தான் முதலில் இறங்கியது.

1400 ஆண்டுகளுக்கு முன்பாக படிக்கவும், எழுத வும் இறைவனால் கட் டளையிடப்பட்ட போதும் முஸ்லிம் பெண்கள் இன்றும் கையெழுத்துப் போடக் கூட தெரியாமல் இருப்பது வெட்கப் படவேண்டியது மட்டு மல்லாமல் வேதனைக்கும் உரியதாகும்.

இந்த நிலைமைகளை உடனடியாக மாற்றியாக வேண்டும். பெண்கள் கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு சமுதாயமே கல்வி கற்ற தற்கு ஒப்பாகும். ஆண் கல்வி கற்றால் அவனுக்கு மட் டும்தான் பயன்படும். பெண் படித்தால் புதிய உல கத்தையே உருவாக்க முடியும். ஒவ்வொரு குழந் தைக்கும் தாயின் மடிதான் முதல் பள்ளியாக திகழ்கி றது.

கல்வி பயில்வதையும், கற்பிப்பதையும் இஸ்லாம் மார்க்கம் இறை வணக்க மாக்கியுள்ளது. கல்விக்காக பாடுபடுவது தர்ம காரிய மாகும். பெண்கள் கல்வி பெறுவதன் மூலமே பொரு ளாதாரம், மருத்துவம், சமுதாயம் என அனைத்து துறைகளிலும் முன்னேற முடியும். அதற்கான பணியை தொடங்கும்முக மாகவே இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் இந்த சமுதா யத்தின் முன்னேற்றத்திற்கு தங்களுடைய பங்களிப் பைச் செய்ய முன் வர வேண் டும்.

இவ்வாறு ஃபாத்திமா முஸப்பர் பேசினார்.

சமுதாய மறுமலர்ச்சி மாநாடு இ.யூ. முஸ்லிம் லீக் வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்கும்

சமுதாய மறுமலர்ச்சி மாநாடு இ.யூ. முஸ்லிம் லீக் வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்கும்

பொதுச் செயலாளர் கே.ஏ.எம். அப+பக்கர் பேட்டி



காயல்பட்டினம், மார்ச் 9-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தினத்தை முன் னிட்டு மேலப்பாளை யத்தில் நடைபெறும் சமு தாய மறுமலர்ச்சி மாநாடு தாய்ச்சபையின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை படைக்கும் என மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர் தெரிவித்தார்.

மாநாடு நடைபெறும் இடத்தையும், பந்தலையும் பார்வையிட்டு பின்னர் நடைபெற்ற மாநாட்டு ஆலோசனை கூட்டத்தி லும் பங்கேற்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-

சமுதாய மறுமலர்ச்சி மாநாடு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும்.

இம் மாநாட்டின் ஒரு அங்கமாக முஸ்லிம் பெண் கள் விழிப்புணர்வு கருத்த ரங்கம் நடைபெறுகிறது. முஸ்லிம் லீக் லட்சியங் களில் ஒன்றான சமூக நல்லிணக்கத்தை வலியு றுத்துகின்ற வகையில் நடைபெறுகிறது. அத னைத் தொடர்ந்து சமுதாய மறு மலர்ச்சி மாநாடு நடை பெறுகின்றது.

இம் மாநாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென் மாவட்டத் தொண் டர்கள் பங்கேற் கின்றனர்.

தமிழ்நாட்டின் 42 மாவட்டங்களில் முஸ்லிம் லீகிற்கு 10 லட்சம் உறுப்பி னர்கள் சேர்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான கிளை கள் உருவாக்கப்பட இருக் கின்றன. மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி ஆகியவை நாடு தழுவிய அளவில் அமைக்கப்பட இருக்கின்றன. அவைகளுக் கெல்லாம் இம் மாநாடு ஒரு சிறந்த அடித்தளத்தை அமைக்கும்.

இவ்வாறு பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் கூறினார்.

மேலப்பாளையத்தில் நடைபெறும் சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட இருப்பவை

மேலப்பாளையத்தில் நடைபெறும் சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட இருப்பவை


பிறைமேடை மாதமிருறை ஏடு

முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை சார்பில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் மாதமிருமுறை ஏடான ஹஹபிறைமேடை|| இதழை தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட த.இ.செ. நெய்னா முஹம்மது, எம்.கே.எம். கபீர், வி.ஏ. செய்யது பட்டாணி, பேராசிரியர் அ. சாகுல் ஹமீது ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.

இ.ய+.முஸ்லிம் லீக் 62வது நிறுவன தின

சமுதாய மறுமலர்ச்சி மாநாடு

மணிச்சுடர் நாளிதழ் சிறப்பு மலர்

இந்திய ய+னியன் முஸ்லிம் வரலாற்றுச் செய்திகள், சன்மார்க்க கட்டுரைகள், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான சிறப்புக் கட்டுரைகள் என பல்வேறு அரிய விஷயங்களை தாங்கி ஹ-4 அளவில் 144 பக்கங்களில் அழகாக உரு வாக்கப்பட்டுள்ள மணிச்சுடர் நாளிதழ் சிறப்பு மலரை மாண்புமிகு மத்தியஅமைச்சர் அஞ்சாநெஞ்சர் மு.க.அழகிரி வெளியிட தமிழக அமைச்சர் மாண்புமிகு டி.பி.எம். மைதீன்கான் பெற்றுக் கொள்கிறார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் லட்சியப்பயணத்தில்

இராஜாஜி ஹால் முதல்

சாதாப் மஹால் வரை

முஸ்லிம் லீக் வரலாறாகவே வாழ்ந்துக் கொண் டிருக்கின்ற எழுத்தரசு ஏ.எம். ஹனீப் எழுதிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் லட்சியப் பயணத்தில் இராஜாஜி ஹால் முதல் சாதாப் மஹால் வரை என்ற இந்நூல் 1+8 அளவில் 90 பக்கங்களுடன் தமிழிலும், உருதுவிலும் தனித் தனி புத்தகங்களாக உருவாக்கப் பட்டுள்ளது.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.கோதர் மொகிதீன் வெளியிட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம் பெற்றுக் கொள்கிறார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62வது நிறுவன தின சிறப்பு மலர்

அய்யம்பேட்டை ஆலிமான் ஆர்.எம். ஜியா வுதீன் தொகுத்துள்ளஆயிஷா பதிப்பக வெளியீடான இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62வது நிறுவன தின சிறப்பு மலர் 1+8 அளவில் 32 பக்கங்களுடன் இம்மாநாட்டில் வெளியிடப்படுகிறது.

2010 மார்ச் 10 இ.யூ.முஸ்லிம் லீக் 62வது நிறுவன தின """"சமுதாய மறுமலர்ச்சி மாநாடு||

2010 மார்ச் 10 இ.யூ.முஸ்லிம் லீக் 62வது நிறுவன தின """"சமுதாய மறுமலர்ச்சி மாநாடு||

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உதயம் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்

""""கவுரவத்துடன் வாழ உறுதியேற்போம்|| தேசியத் தலைவர் இ.அஹமது வாழ்த்து


சென்னை, மார்ச் 9:

2010மார்ச் 10 இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62வது நிறுவனதினமாகும்.

இந்நாளையொட்டி திரு நெல்வேலி மாவட்டம் மேலப் பாளையத்தில் ஹசமுதாய மறு மலர்ச்சி மாநாடு| மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை யில் நடை பெறுகிறது.

இம்மாநாட்டிற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவரும் மத்திய ரயில்வே இணையமைச்சரு மான இ.அஹமது சாஹிப் வாழ்த்துச் செய்தி அனுப்பி யுள்ளார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உதயம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும், அது துவக்கப்பட்ட நன்னாளில் இந்திய முஸ்லிம்கள் அனை வரும் கவுரவத்துடன் வாழ உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு:

இ.ய+.நிறுவன தினம்

2010 மார்ச் 10 அன்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமது 62 வது நிறுவன தினத்தை கொண்டாடுவது பெருமைக்குரிய விசய மாகும்.

இந்நாளையொட்டி திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் ஹசமுதாய மறுமலர்ச்சி மாநாடு| நடைபெறுவது மகிழ்வுக்குரியது.

இந்திய முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில்-இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உதயம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.

காயிதெமில்லத்

அறை கூவல்

இந்திய முஸ்லிம்கள் கவுரவத்துடன வாழ ஒரு அமைப்பு தேவை என நமது தாய்ச்சபையின் நிறு வனரும் பெரும் தலைவரு மான காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாஹிப் அவர்கள் அறை கூவல் விடுத்தார்.

இந்திய முஸ்லிம்களின் வரலாற்று ஏட்டில் இது ஒரு புதிய சகாப்தத்தை துவக்கியது. இந்திய நாட் டின் ஒற்றுமைக்கும், பேராண்மைக்கும் முஸ்லிம் லீகின் ஒவ்வொரு உறுப் பினரும் தங்களை அர்ப் பணித்துக்கொண்டது இந்திய முஸ்லிம்கள் தங்களது தனித்தன்மையை வெளிக்காட்டும் முகமாக அமைந்தது.

முஸ்லிம் லீக் சமுதாய ரீதியான ஒற்றுமையையும், மத ரீதியான நல்லிணக் கத்தையும் முன்னிறுத்தி பலசார் சமுதாயத்தில் அனைவரும் அமைதியு டன் ஒற்றுமையாக வாழ பாடுபட்டது.

இந்திய அரசியல் சாச னத்தில் கொடுக்கப்பட் டுள்ள உரிமைகளை நிலை நாட்டவும், தேசிய புனர் நிர்மான பணிகளில் ஆர் வத்துடன் பங்கேற்பதும், இஸ்லாமிய கலாச்சார மற் றும் மார்க்கத்தை விட்டுக் கொடுக்காமல் தேசிய நீரோட்டத்தில் கலப்பது இந்திய நாடு தனது அடிப் படையாக கொண்டுள்ள மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக கொள்கைகளை பாது காக்கவும், அவை களை பரப்பவும் பாடுபடு வது போன்ற லட்சியங் களை நமது கட்சியின் தெளிவான சித்தாந்தங் களாக கொண்டுள்ளது.

குறிக்கோள் 2020

இந்தியாவின் சிறு பான்மை இனத்தவரில் பெருவாரியான மக்க ளின் பிரதிநிதியாக உயி ரோட்டத்துடன் செயல் படும் அரசியல் அமைப்பே இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.

நாட்டின் சிறுபான்மை யினருக்கும், பிறப்டுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப் பட்டவருக்கும் சமூக நீதி மற்றும் உரிமைகள் பெற் றுத்தர வேண்டிய பணியில் முஸ்லிம் லீகின் பங்கு மிகவும் முக்கியமானது.

பெங்களூரில் நடந்த அகில இந்திய பிரதிநிதிகள் மாநாட்டில் வரையறுக் கப்பட்ட குறிக்கோள் 2020 நமது சமுதாயம் மற்றும் நமது நாடு வளர்ச்சிக்கு நமது கட்சியின் உறுதியான சமர்ப்பனமாகும். அது காயிதெ மில்லத் அவர் களின் லட்சிய வழித்தோன் றலே.

இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் மக்களுக்கும், நாட்டுக்கும் சேவையாற் றும் உயரிய கொள்கையுட னும், தனது குறிக்கோளை மையாககொண்டு முன் னேற்றப் பாதையில் நடை போடும் என நான் உறுதி யாக நம்புகிறேன்.

பிரார்த்தனை

மறைந்த நமது தலைவர் கள் அனைவரின் மறுஉலக நல்வாழ்விற்கு இந்நேரத்தில் இறைவனிடம் மனமுருகி பிரார்த்திப்போம்.

நம்முடைய தாய்ச் சபைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருள் பரிப+ரணமாக கிடைக்க துஆ செய்வோமாக!

இவ்வாறு தேசியத் தலை வர் இ.அஹமது தமது வாழ்த்துச் செய்தியில் குறிப் பிட்டுள்ளார்.

யினருக்கும், பிறப்டுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப் பட்டவருக்கும் சமூக நீதி மற்றும் உரிமைகள் பெற் றுத்தர வேண்டிய பணியில் முஸ்லிம் லீகின் பங்கு மிகவும் முக்கியமானது.

பெங்களூரில் நடந்த அகில இந்திய பிரதிநிதிகள் மாநாட்டில் வரையறுக் கப்பட்ட குறிக்கோள் 2020 நமது சமுதாயம் மற்றும் நமது நாடு வளர்ச்சிக்கு நமது கட்சியின் உறுதியான சமர்ப்பனமாகும். அது காயிதெ மில்லத் அவர் களின் லட்சிய வழித்தோன் றலே.

இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் மக்களுக்கும், நாட்டுக்கும் சேவையாற் றும் உயரிய கொள்கையுட னும், தனது குறிக்கோளை மையாககொண்டு முன் னேற்றப் பாதையில் நடை போடும் என நான் உறுதி யாக நம்புகிறேன்.

பிரார்த்தனை

மறைந்த நமது தலைவர் கள் அனைவரின் மறுஉலக நல்வாழ்விற்கு இந்நேரத்தில் இறைவனிடம் மனமுருகி பிரார்த்திப்போம்.

நம்முடைய தாய்ச் சபைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருள் பரிப+ரணமாக கிடைக்க துஆ செய்வோமாக!

இவ்வாறு தேசியத் தலை வர் இ.அஹமது தமது வாழ்த்துச் செய்தியில் குறிப் பிட்டுள்ளார்.

மத உணர்வு இருப்பதில் தவறில்லை

மத உணர்வு இருப்பதில் தவறில்லை

கே.எம்.காதர் மொகிதீன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-


காயல்பட்டினம் நகர மக்கள் ஒன்றுகூடி, உங்கள் பகுதி மக்களுக்காக ஓர் அமைப்பையும் நிறுவி, சேவைகள் பல ஆற்றி வருவது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பார்கள். இந்த சங்கம் அப்படி பல சேவைகளைச் செய்து வருவது மகிழ்ச்சிக்குரியது. இன்னும் பல சேவைகளை செய்ய அது காத்திருக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சியில் காயல்பட்டினத்தின் பங்கு மகத்தானது. தளபதி ஷஃபீக்குர்ரஹ்மான் அவர்கள் சொன்னதைப் போல, தற்போது முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளராக இருக்கும் ஆற்றல் மிக்க தம்பி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் காயல்பட்டினத்திலிருந்து முஸ்லிம் லீகிற்கு கிடைத்த சொத்து.

அதுபோல, முஸ்லிம் லீகின் அதிகாரப்பூர்வ தினசரி நாளிதழான மணிச்சுடரின் செய்தி ஆசிரியராக உங்கள் ஊரைச் சார்ந்த காயல் மகபூப் திறம்பட பணியாற்றி வருகிறார்.
இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளைக் குறிப்பெடுத்து செய்தியாக்கிக் கொண்டிருக்கும் தம்பி ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் மணிச்சுடர் நாளிதழின் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளராக உள்ளார்.
பாங்காக்கிலிருந்து வாவு ஷம்சுத்தீன் ஹாஜியார், அபூதபியிலிருந்து ஷாஹ{ல் ஹமீத், ஹாங்காங்கிலிருந்து தம்பி ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன், இலங்கையிலிருந்து சகோதரர் ஹாஜி பி.எம்.ரஃபீக் உள்ளிட்ட உங்கள் ஊரைச் சார்ந்த ஆற்றல் மிக்க பல நல்லவர்கள் இந்த தாய்ச்சபைக்கு என்றும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

தமிழக முஸ்லிம்களின் வளர்ச்சி வரலாற்றில் காயல்பட்டினத்திற்கென்று தனியோர் இடம் எப்பொழுதும் உள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி உருவாக்கப்படும்போது, அதன் அஸ்திவாரத்திற்கு தங்கள் பணம், உழைப்பு, ஒத்துழைப்புகளை நிறைவாக வழங்கியவர்கள் காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்கள்.

சென்னையிலுள்ள காயிதெமில்லத் கலைக் கல்லூரியின் உருவாக்கத்திற்கும் உங்கள் ஊரைச் சார்ந்த பெருமக்கள் நிறைவான பங்களிப்புகளைச் செய்துள்ளனர். வெளியூர்களில் இவ்வளவும் செய்த இம்மக்கள் தங்கள் சொந்த ஊரில் கல்லூரி ஆரம்பித்ததோ சில ஆண்டுகளுக்கு முன்புதான். நமது தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த - பாரம்பரியமிக்க வாவு குடும்பத்தினர், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி என்ற பெயரில், இந்தக் கல்லூரியை உருவாக்கியுள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு அவர்கள் காலங்காலமாக செய்து வரும் ஒத்துழைப்புகள் என்றும் மறக்க முடியாதவை.
இவற்றுக்கெல்லாம் காரணம், இந்நகர மக்கள் என்றுமே இஸ்லாமிய வழிமுறைகளை முறைப்படி பேணி ஒழுகி வந்ததுதான்.

1986ஆம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய மாபெரும் மாநாட்டில், முஸ்லிம்கள் நிறைவாக வாழும் பகுதிகளில் பைத்துல்மால் நிதியம் நிறுவப்பட வேண்டும் என்பது ஒரு முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில காலங்களிலேயே இந்த காயல்பட்டினத்தில்தான் துவக்கமாக பைத்துல்மால் உருவாக்கப்பட்டது.
அன்று பசியோடிருந்த மக்களுக்கு கலீஃபா உமர் ரழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் தமது தோளில் மாவு சுமந்து வந்து, அம்மக்களின் பசியைப் போக்கினார்கள். அந்த வழியைப் பின்பற்றி காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்கள் செய்த அறப்பணிகள் காரணமாக இன்று அங்கு பசியோடு ஒருவரும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

தெற்கு ஆத்தூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்குள்ள குடிமக்களின் வீடுகள் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்ட நேரத்தில், உங்கள் காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்கள் 200 வீடுகளைக் கட்டிக் கொடுத்தனர். இவ்வளவு செய்தும் இவற்றையெல்லாம் அவர்கள் வெளியில் பேசாத - பேச விரும்பாத காரணத்தால், வெளி உலகுக்கு அவை தெரியாமலே இருந்து வருகிறது. இம்மக்களிடம் இருந்து வரும் மார்க்க உணர்வுகளே இவர்களை இவ்வாறு செயல்படச் செய்கிறது.
காயிதெமில்லத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் காலத்திலிருந்தே, பொது சிவில் சட்டத்திற்கெதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போராடி வருகிறது. அக்காலத்தில், இச்சட்டத்திற்கெதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டபோது, உச்ச நீதிமன்றத்திலிருந்து வெளியிடப்பட்ட தீர்ப்பில், காயல்பட்டினம் முஸ்லிம்கள் அனுப்பிய மஹஜர் இது... அதனடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்படுகிறது என்று, அப்போது காயல்பட்டினம் மக்கள் எழுதியனுப்பிய ஒரு சொற்றொடரை மேற்கோள் காட்டி குறிப்பிடப்பட்டிருந்தது மறக்க முடியாத வரலாறு.

காயல்பட்டினத்தின் உலமாக்கள் அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அரபு நாட்டு மக்களுக்கு அரபு மொழி இலக்கணம் படித்துக் கொடுத்தது பெருமைக்குரிய வரலாறு. மார்க்கத்தை அறிதல், பேணுதல், பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்களில் காயல்பட்டினத்து மக்கள் எப்போதும் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

ஊலக அறிவையும் கற்ற ஹாஃபிழ்கள் ஏராளமாக உருவாகி வெளிவருவதும் இந்தக் காயல்பட்டினத்திலிருந்துதான். காரணம் அரபு நாட்டின் ஆதிகால தொடர்புதான். 10ஆம், 11ஆம் நூற்றாண்டில் பக்தாதிலிருந்து கப்பலில் இங்கு வந்திறங்கிய ஆண்-பெண்கள் இங்கு வந்து தங்கி, வணிகம் செய்து, குடும்ப உறவுகளையும் ஏற்படுத்திக்கொண்டனர்.

காயல்பட்டினம் நகர மக்களிடம் அரபியர்களின் கலாச்சாரங்கள் வெகுவாக மேலோங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே ஏதாவது மகிழ்ச்சிக்குரிய நிகழ்வுகள் நடைபெற்றால் அரபியில் கீதம் பாடுவார்கள். காயல்பட்டினத்திலும் அது பாரம்பரியமாக இருந்து வருகிறது.

அண்மையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான இ.அஹ்மத் ஸாஹிப் அவர்கள் காயல்பட்டினம் வந்தபோது, அங்குள்ள இளம் மாணவர்கள் அரபி கீதங்களைப் பாடி அவர்களை வரவேற்று மகிழ்வித்தார்கள். இந்நிகழ்வை இ.அஹ்மத் ஸாஹிப் அவர்கள் அரபு நாட்டு கலாச்சாரம் என்று மகிழ்ச்சியுடன் போற்றிக் கூறினார்கள். இதுபோன்ற கலாச்சாரங்கள் வளர்க்கப்பட வேண்டும்.

1973ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஒரு மீலாத் விழாவில் உரையாற்றுவதற்காக நான் இலங்கை வந்த பிறகு, அடுத்ததாக இப்போதுதான் வந்துள்ளேன். இப்போதும், இலங்கை நாட்டின் வெலிகமை என்ற ஊரில், அத்தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ள மீலாத் விழாவில் உரையாற்றுவதற்காகவே நான் வருகை புரிந்துள்ளேன்.
இதுபோன்ற மீலாத் விழாக்களை நடத்துவது, இறைத்தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இவர்களுக்குள்ள இஷ்க் - பற்று, பாசத்தைக் காண்பிப்பதாக உள்ளது.

வெளிநாட்டவர்களுக்காக இந்நாட்டில் தரப்படும் இரட்டைக் குடியுரிமை போன்ற சலுகைகளை நம் மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காலம் கடந்து யோசிப்பதை விட, உரிய காலத்திலேயே அவற்றைப் பயன்படுத்திக்கொள்வது சிறப்பிற்குரியது.

இந்தியாவில், மத ரீதியாக மக்களின் மனோநிலை என்ன என்பது குறித்த புள்ளிவிபரம் ஒன்றை ஹிந்து நாளிதழ் அதன் முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அந்த புள்ளிவிபரப்படி, இந்தியர்கள் 10 பேரில் 5 பேர் மத உணர்வுடையவர்களாகவும், 10 பேரில் 4 பேர் அதிக மத உணர்வுடையவர்களாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லா மதத்தினரிடையேயும் இந்தப் போக்கு அதிகமாகக் காணப்படுகிறது.

மத உணர்வாக இருக்கும் இது மதவெறியாக மாறிவிடக் கூடாது. நமது கவலையெல்லாம், மத உணர்வு இருப்பதில் தவறில்லை. மதவெறியை உருவாக்க சிலர் முயற்சித்துக் கொண்டிருப்பதுதான் மிகுந்த கவலையளிக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் இந்தியாவின் வருங்காலம் கேள்விக்குறியாகி விடும்.
பொதுவான இந்து மக்கள் இந்து மத உணர்வோடு வாழ்ந்து வருகின்றனர். அது சரியானதே. அதே நேரத்தில் அவர்களில் சிலர் இந்துத்துவா, இந்து ராஜ்ஜியம் என்ற பெயரில் மதவெறியூட்டப்படுகின்றனர். இந்து மத உணர்வை மதிக்கின்ற அதே வேளையில் இந்து மத வெறியை நாம் அனுமதிக்க முடியாது. இதுபோல்தான் எல்லா மதத்தினருக்கும்.

படிப்பினைக்காக கதை ஒன்றைச் சொல்கிறேன். சன்னியாசிகள் பதினைந்து பேர் தங்கள் பயணத்திற்கிடையே ஒரு காட்டில் தங்கினராம்... அவர்களுள் நான்கு இளம் சன்னியாசிகள் புறாக்களை வேட்டையாடிக் கொண்டு வந்தார்களாம். இதனைக் கண்ணுற்ற புறாக்கூட்டத் தலைவர், சன்னியாசிகளின் தலைவரைச் சந்தித்து, ஐயா, எங்கள் கூட்டத்திலுள்ள புறாக்களை தங்கள் சன்னியாசிகள் நால்வர் வேட்டையாடிச் சென்றுவிட்டனர். இது என்ன நியாயம்? வந்தவர்கள் வேதாந்திகள் என்பதால்தானே நாங்கள் எங்களைத் தற்காத்துக்கொள்ளத் தேவையில்லை என்றிருந்தோம்...? வந்தவர்கள் வேதாந்திகளல்ல@ வேதாந்திகள் வேடத்திலுள்ள வேட்டைக்காரர்கள் என்று தெரிந்திருந்தால் நாங்கள் எங்களைத் தற்காத்துக் கொண்டிருப்போமே...? என்று கேட்டதாம்.

முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாமிய நெறிப்படி வாழ வேண்டும். முஸ்லிம்களைப் பார்த்து இஸ்லாம் பிறரால் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
இன்று உலகின் பல நாடுகளில் மிக வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம்தான். அதற்குக் காரணம், முஸ்லிம்கள் வேதாந்திகாளகச் சென்று, தமது சொல் - செயல் - எண்ணத்தால் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை முழுமையாகப் பேணி வாழ்ந்தமைதான். அதனால்தான், பார்த்த மாத்திரத்தில் மொழி தெரியாத நிலையிலும் கூட அவர்களால் இஸ்லாம் ஏற்கப்பட்டது. இன்றைய தேவை இந்த நல்ல செயல்பாடுதான்.
நிராகரிப்பாளர்கள் விரும்பாத நிலையிலும், மற்றெல்லா மார்க்கங்களை விடவும் மேம்படுத்திக் காண்பிப்பதற்காக அவனே அவனது தூதரை நேர்வழியைக் கொண்டும், சத்திய மார்க்க நெறியைக் கொண்டும் அனுப்பிவைத்தான் என்று திருமறை குர்ஆனில் ஒரு வசனம் உள்ளது. இவ்வசனத்தை தவறாகப் புரிந்துகொண்ட சிலர் - இஸ்லாம் எல்லா மதங்களையும் அழித்து விட்டு அது மட்டும் வாழ வேண்டும் என்ற சிந்தனையைத் தூண்டுவதாக கருத்து தெரிவிக்கின்றனர். உண்மையில் இதன் கருத்து, இஸ்லாம் தனது உள்ளடக்கத்தை வெளிப்படுத்துவதன் மூலம் மற்ற மதங்களில் இல்லாத தனது தனித்தன்மையை உலகிற்கு உணர்த்தும் என்பதுதான்.
அண்மையில், வேளாங்கன்னியில் சமயங்களுக்கிடையேயான ஐக்கியத்தை மேம்படுத்தும் வகையில் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. அதில், இந்துக்கள் சார்பில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களும், கிறிஸ்துவர்கள் சார்பில் பிஷப் ஒருவரும், கம்யூனிஸ சிந்தனையாளர்கள் சார்பில் தா.பாண்டியன் அவர்களும், முஸ்லிம்கள் சார்பில் நானும் அழைக்கப்பட்டிருந்தோம்.
அப்போது, முஸ்லிம் தீவிரவாதம் பற்றி உங்கள் கருத்தென்ன என்று என்னிடம் கேட்கப்பட்டது. அவர்களுக்கு நான் விடை தருகையில், குண்டு வைக்கக்கூடிய யாரோ இருவரின் செயல்களை வைத்து இஸ்லாமைப் புரிந்துகொள்ளக் கூடாது. ஆதாரப்பூர்வ சான்றுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த இஸ்லாமிய வாழ்வியல் நெறியை அதன் மூலத்திலிருந்தும், அந்த நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி வாழ்ந்த ஞானிகள், கற்றறிந்த குருமார்களின் செயல்பாடுகளிலிருந்தும்தான் பார்க்க வேண்டும் என்று கூறினேன்.
கிறிஸ்துவர்களால் கடவுளாக மதிக்கப்படும் இயேசுவை இறைத்தூதராக நம்பாமல் ஒருவர் முஸ்லிமாக இருக்க முடியாது. அதே நேரத்தில், முஹம்மத் நபியை நம்பாமலேயே ஒருவர் கிறிஸ்துவராக இருக்கலாம். அப்படி இருக்கையில் மத தீவிரவாதம் இஸ்லாம் மார்க்கத்தில் எங்கிருந்து முளைக்கும்...? என்று நான் தெரிவித்தேன்.

அதற்குப் பின் பேசிய கிறிஸ்துவ பிஷப் அவர்கள், பேராசிரியர் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகச் சரியானவையே... முஸ்லிம்களையும், இஸ்லாமையும் புரிந்துகொள்வதில் நமது அணுகுமுறைகள் மாற்றப்பட வேண்டும் என்றார்.

நுpறைவாக, இந்த இலங்கை காயல் நல மன்றத்தின் நற்பணிகள் தொடரப்பட வேண்டும். முயுறுயுடுயுNமுயு - காவாலங்கா என்று இந்த அமைப்புக்குப் பெயர். இந்த அமைப்பு தனது செயல்பாடுகளால் இலங்கையைப் பாதுகாக்கும் காரணியாக இருக்கும் என்பதால் நான் அதை காவல் லங்கா என்று வாசிக்க ஆசைப்படுகிறேன். இதன் மக்கள் நலப் பணிகள் என்றென்றும் தொடரவும், சிறக்கவும், அவற்றுக்கான முழு நற்பலன்களும் இம்மையிலும், மறுமையிலும் இதன் கீழ் செயல்படுவோருக்குக் கிடைக்கவும் நான் அல்லாஹ்வைப் பிரார்த்தித்து நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனதுரையில் தெரிவித்தார்.

பேராசிரியரின் உரையைத் தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கமளித்தார். கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் கல்விப் பணிப்பாளர் அன்வர்தீன் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, தமது கல்லூரிக்கு இந்தியாவின் புகழ்பெற்ற முஸ்லிம் பல்கலைக்கழகங்களில் ஒன்றின் அஃபிலியேஷன் வேண்டும் எனவும், அதற்கு பேராசிரியர் உதவ வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

அவரது கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டறிந்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தாம் இந்தியா திரும்பிய பின், இது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த உயரதிகாரிகளிடம் தேவையான விளக்கங்களைப் பெற்று, இயன்றளவு விரைவாக ஆவன செய்து தருவதாக தெரிவித்தார்.









தகவல்:
ஓ.எல்.எம்.ஆரிஃப்,
செயற்குழு உறுப்பினர்,
காயல் நல மன்றம்,
கொழும்பு, இலங்கை.

Monday, March 8, 2010

மார்ச் 10: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினம்

மார்ச் 10: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினம்

மேலப்பாளையத்தில் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு

பந்தல் அமைக்கும் பணியை

நிர்வாகிகள் பார்வையிட்டனர்


நெல்லை, மார்ச்.8-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தின சமுதாய மறு மலர்ச்சி மாநாடு வருகிற 10-3-2010 அன்று மேலப் பாளையம் ஜின்னா திடலில் நடைபெறுகிறது.

அன்று காலை 10 மணிக்கு முஸ்லிம் லீக் மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் தலைமையில் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெறுகிறது.

மாலை 4 மணிக்கு மாபெரும் பிறைக்கொடி பட்டாளத்தின் சமூக நல்லி ணக்க பேரணி நடைபெறு கிறது.

மாலை 6 மணிக்கு சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நடைபெறுகிறது. நெல்லை மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா மாநாட்டுப் பந்தலை திறந்து வைக் கிறார். மதுரை மாவட்டத் தலைவர் அப்துல் காதர் ஆலிம், மாநாட்டுத் திட லில் முஸ்லிம் லீக் கொடி யேற்றி வைக்கிறார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மாநாட்டு நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.

மாவட்டச் செயலாளர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் அனைவரையும் வரவேற்றுப் பேசுகிறார்.

மு.க. அழகிரி

மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி, தமிழக அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், மாநிலப் பொரு ளாளர் வடக்குகோட்டை யார் வ.மு. செய்யது அஹ மது, கேரள முன்னாள் கல்வியமைச்சர் இ.டி. பஷீர் அஹமது எம்.பி., நாடாளு மன்ற உறுப்பினர்கள் எம். அப்துர் ரஹ்மான், எஸ். எஸ். ராமசுப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் வி. கருப்ப சாமி பாண்டியன், என். மாலைராஜா, எம்.ஏ. கலீல் ரஹ்மான், எச். அப்துல் பாசித்,

முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர்கள் தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான், எம்.எஸ்.எ. ஷாஜஹான், நாகூர் ஜபருல்லா, நெல்லை மஜீத், காயல் மஹப+ப், கமுதி பஷீர்,

அணிகளின் அமைப் பாளர்கள் திருப்ப+ர் சத்தார், கே.எம். நிஜாமுதீன், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், ஹாமீத் பக்ரீ ஆலிம்,

முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் எஸ்.எம். கோதர் முகைதீன், வி.எஸ். டி. சம்சுல் ஆலம் உள்பட அனைத்து மாவட்ட நிர் வாகிகள் கலந்து கொள் கிறார்கள்.

சமுதாய

ஒளிவிளக்கு மாநாடு

இம் மாநாட்டில் கல்வி, இலக்கியம், சமூக சேவை களில் சிறந்து விளங்கும் சிறந்த கல்வியாளர் கீழக் கரை சீனாதானா, செய்யது அப்துல் காதர் சிறந்த இலக் கியவாதி கவிஞர் வீரை ரஹ்மான், சிறந்த சமூக சேவகர் ஷிபா டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, சிறந்த பெண் கல்வியாளர், மதுரை தஸ்ரீப் ஜஹான் ஆகிய நான்கு பேருக்கு சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கப்படுகிறது.

பந்தல் அமைக்கும்

பணி தீவிரம்

மேலப்பாளையம் ஜின்னா திடலில் மாநாட் டுப் பந்தல் அமைக் கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது.

மாநாட்டுப் பந்தல் அமைக்கும் பணியை மாநிலப் பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எம். எஸ். துராப்ஷா, மாவட்டச் செயலாளர் எல். கே.எஸ். மீரான் முகைதீன், மாநாட்டு நிதிக்குழு தலைவர் ஷிபா, எம்.கே.எம். முஹம்மது ஷாபி, மாவட்ட துணைச் செயலா ளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, மாவட்ட துணைத் தலைவர்கள் வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம், ஜே. ஷாகுல் ஹமீது, மாவட்ட தொண்டர் அணி செயலாளர் வி.ஏ. எஸ். செய்யது இப்ராஹீம், பட்டதாரி அணி செயலா ளர் எஸ். மசூது, செய்தித் தொடர்பாளர் எஸ். பீர் முகைதீன், மேலப்பாளை யம் நகரச் செயலாளர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர், மறு மலர்ச்சி புளியங்குடி எம். ஷாகுல் ஹமீது, இளைஞர் அணி தலைவர் எம்.ஏ. நாகூர் கனி, செயலாளர் அப்துல் ஜப்பார் ஆகி யோர் பார்வையிட்டார் கள்.

பல்லாணிரக் கணக்கானோர்

பங்கறெ;கின்றனர்

மாநாட்டுப் பந்தலில் மாநாட்டு நிதிக்கழு தவைர் ஷிபா எம்.கே.எம். முஹம் மது ஷாபி நிருபர்களிடம் கூறியதாவது-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62-வது ஆண்டு நிறுவன தின சமுதாய மறுமலர்ச்சி மாநாடு வருகிற 10-3-2010 அன்று மேலப்பாளையம் ஜின்னா திடலில் மிகச் சிறப்பாக நடைபெற இருக் கிறது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வாக னங்களில் பல்லாயிரக் கணக்கானோர் முஸ்லிம் லீக் ஊழியர்கள் மாநாட் டில் வந்து கலந்து கொள்கி றார்கள்.

இம் மாநாடு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வர லாற்றில் ஒரு புதிய அத்தி யாயத்தைப் படைப்ப தோடு சமுதாயத்தின் மறு மலர்ச்சியை ஏற்படுத்தும்.

இவ்வாறு ஷிபா எம்.கே.எம். முஹம்மது ஷாபி கூறினார்.

ஆலோசனை

கூட்டம்

இன்று மேலப்பாளை யம் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் பள்ளியில் மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இதில் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் மற்றும் நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர் . மாநாட்டுப் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன.