Thursday, March 11, 2010

2010 மார்ச் 10 இ.யூ.முஸ்லிம் லீக் 62வது நிறுவன தின """"சமுதாய மறுமலர்ச்சி மாநாடு||

2010 மார்ச் 10 இ.யூ.முஸ்லிம் லீக் 62வது நிறுவன தின """"சமுதாய மறுமலர்ச்சி மாநாடு||

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உதயம் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்

""""கவுரவத்துடன் வாழ உறுதியேற்போம்|| தேசியத் தலைவர் இ.அஹமது வாழ்த்து


சென்னை, மார்ச் 9:

2010மார்ச் 10 இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62வது நிறுவனதினமாகும்.

இந்நாளையொட்டி திரு நெல்வேலி மாவட்டம் மேலப் பாளையத்தில் ஹசமுதாய மறு மலர்ச்சி மாநாடு| மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை யில் நடை பெறுகிறது.

இம்மாநாட்டிற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவரும் மத்திய ரயில்வே இணையமைச்சரு மான இ.அஹமது சாஹிப் வாழ்த்துச் செய்தி அனுப்பி யுள்ளார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உதயம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும், அது துவக்கப்பட்ட நன்னாளில் இந்திய முஸ்லிம்கள் அனை வரும் கவுரவத்துடன் வாழ உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு:

இ.ய+.நிறுவன தினம்

2010 மார்ச் 10 அன்று இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமது 62 வது நிறுவன தினத்தை கொண்டாடுவது பெருமைக்குரிய விசய மாகும்.

இந்நாளையொட்டி திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் ஹசமுதாய மறுமலர்ச்சி மாநாடு| நடைபெறுவது மகிழ்வுக்குரியது.

இந்திய முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில்-இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உதயம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.

காயிதெமில்லத்

அறை கூவல்

இந்திய முஸ்லிம்கள் கவுரவத்துடன வாழ ஒரு அமைப்பு தேவை என நமது தாய்ச்சபையின் நிறு வனரும் பெரும் தலைவரு மான காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாஹிப் அவர்கள் அறை கூவல் விடுத்தார்.

இந்திய முஸ்லிம்களின் வரலாற்று ஏட்டில் இது ஒரு புதிய சகாப்தத்தை துவக்கியது. இந்திய நாட் டின் ஒற்றுமைக்கும், பேராண்மைக்கும் முஸ்லிம் லீகின் ஒவ்வொரு உறுப் பினரும் தங்களை அர்ப் பணித்துக்கொண்டது இந்திய முஸ்லிம்கள் தங்களது தனித்தன்மையை வெளிக்காட்டும் முகமாக அமைந்தது.

முஸ்லிம் லீக் சமுதாய ரீதியான ஒற்றுமையையும், மத ரீதியான நல்லிணக் கத்தையும் முன்னிறுத்தி பலசார் சமுதாயத்தில் அனைவரும் அமைதியு டன் ஒற்றுமையாக வாழ பாடுபட்டது.

இந்திய அரசியல் சாச னத்தில் கொடுக்கப்பட் டுள்ள உரிமைகளை நிலை நாட்டவும், தேசிய புனர் நிர்மான பணிகளில் ஆர் வத்துடன் பங்கேற்பதும், இஸ்லாமிய கலாச்சார மற் றும் மார்க்கத்தை விட்டுக் கொடுக்காமல் தேசிய நீரோட்டத்தில் கலப்பது இந்திய நாடு தனது அடிப் படையாக கொண்டுள்ள மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக கொள்கைகளை பாது காக்கவும், அவை களை பரப்பவும் பாடுபடு வது போன்ற லட்சியங் களை நமது கட்சியின் தெளிவான சித்தாந்தங் களாக கொண்டுள்ளது.

குறிக்கோள் 2020

இந்தியாவின் சிறு பான்மை இனத்தவரில் பெருவாரியான மக்க ளின் பிரதிநிதியாக உயி ரோட்டத்துடன் செயல் படும் அரசியல் அமைப்பே இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்.

நாட்டின் சிறுபான்மை யினருக்கும், பிறப்டுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப் பட்டவருக்கும் சமூக நீதி மற்றும் உரிமைகள் பெற் றுத்தர வேண்டிய பணியில் முஸ்லிம் லீகின் பங்கு மிகவும் முக்கியமானது.

பெங்களூரில் நடந்த அகில இந்திய பிரதிநிதிகள் மாநாட்டில் வரையறுக் கப்பட்ட குறிக்கோள் 2020 நமது சமுதாயம் மற்றும் நமது நாடு வளர்ச்சிக்கு நமது கட்சியின் உறுதியான சமர்ப்பனமாகும். அது காயிதெ மில்லத் அவர் களின் லட்சிய வழித்தோன் றலே.

இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் மக்களுக்கும், நாட்டுக்கும் சேவையாற் றும் உயரிய கொள்கையுட னும், தனது குறிக்கோளை மையாககொண்டு முன் னேற்றப் பாதையில் நடை போடும் என நான் உறுதி யாக நம்புகிறேன்.

பிரார்த்தனை

மறைந்த நமது தலைவர் கள் அனைவரின் மறுஉலக நல்வாழ்விற்கு இந்நேரத்தில் இறைவனிடம் மனமுருகி பிரார்த்திப்போம்.

நம்முடைய தாய்ச் சபைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருள் பரிப+ரணமாக கிடைக்க துஆ செய்வோமாக!

இவ்வாறு தேசியத் தலை வர் இ.அஹமது தமது வாழ்த்துச் செய்தியில் குறிப் பிட்டுள்ளார்.

யினருக்கும், பிறப்டுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப் பட்டவருக்கும் சமூக நீதி மற்றும் உரிமைகள் பெற் றுத்தர வேண்டிய பணியில் முஸ்லிம் லீகின் பங்கு மிகவும் முக்கியமானது.

பெங்களூரில் நடந்த அகில இந்திய பிரதிநிதிகள் மாநாட்டில் வரையறுக் கப்பட்ட குறிக்கோள் 2020 நமது சமுதாயம் மற்றும் நமது நாடு வளர்ச்சிக்கு நமது கட்சியின் உறுதியான சமர்ப்பனமாகும். அது காயிதெ மில்லத் அவர் களின் லட்சிய வழித்தோன் றலே.

இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் மக்களுக்கும், நாட்டுக்கும் சேவையாற் றும் உயரிய கொள்கையுட னும், தனது குறிக்கோளை மையாககொண்டு முன் னேற்றப் பாதையில் நடை போடும் என நான் உறுதி யாக நம்புகிறேன்.

பிரார்த்தனை

மறைந்த நமது தலைவர் கள் அனைவரின் மறுஉலக நல்வாழ்விற்கு இந்நேரத்தில் இறைவனிடம் மனமுருகி பிரார்த்திப்போம்.

நம்முடைய தாய்ச் சபைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருள் பரிப+ரணமாக கிடைக்க துஆ செய்வோமாக!

இவ்வாறு தேசியத் தலை வர் இ.அஹமது தமது வாழ்த்துச் செய்தியில் குறிப் பிட்டுள்ளார்.

மத உணர்வு இருப்பதில் தவறில்லை

மத உணர்வு இருப்பதில் தவறில்லை

கே.எம்.காதர் மொகிதீன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-


காயல்பட்டினம் நகர மக்கள் ஒன்றுகூடி, உங்கள் பகுதி மக்களுக்காக ஓர் அமைப்பையும் நிறுவி, சேவைகள் பல ஆற்றி வருவது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பார்கள். இந்த சங்கம் அப்படி பல சேவைகளைச் செய்து வருவது மகிழ்ச்சிக்குரியது. இன்னும் பல சேவைகளை செய்ய அது காத்திருக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சியில் காயல்பட்டினத்தின் பங்கு மகத்தானது. தளபதி ஷஃபீக்குர்ரஹ்மான் அவர்கள் சொன்னதைப் போல, தற்போது முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளராக இருக்கும் ஆற்றல் மிக்க தம்பி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் காயல்பட்டினத்திலிருந்து முஸ்லிம் லீகிற்கு கிடைத்த சொத்து.

அதுபோல, முஸ்லிம் லீகின் அதிகாரப்பூர்வ தினசரி நாளிதழான மணிச்சுடரின் செய்தி ஆசிரியராக உங்கள் ஊரைச் சார்ந்த காயல் மகபூப் திறம்பட பணியாற்றி வருகிறார்.
இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளைக் குறிப்பெடுத்து செய்தியாக்கிக் கொண்டிருக்கும் தம்பி ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் மணிச்சுடர் நாளிதழின் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளராக உள்ளார்.
பாங்காக்கிலிருந்து வாவு ஷம்சுத்தீன் ஹாஜியார், அபூதபியிலிருந்து ஷாஹ{ல் ஹமீத், ஹாங்காங்கிலிருந்து தம்பி ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன், இலங்கையிலிருந்து சகோதரர் ஹாஜி பி.எம்.ரஃபீக் உள்ளிட்ட உங்கள் ஊரைச் சார்ந்த ஆற்றல் மிக்க பல நல்லவர்கள் இந்த தாய்ச்சபைக்கு என்றும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

தமிழக முஸ்லிம்களின் வளர்ச்சி வரலாற்றில் காயல்பட்டினத்திற்கென்று தனியோர் இடம் எப்பொழுதும் உள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி உருவாக்கப்படும்போது, அதன் அஸ்திவாரத்திற்கு தங்கள் பணம், உழைப்பு, ஒத்துழைப்புகளை நிறைவாக வழங்கியவர்கள் காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்கள்.

சென்னையிலுள்ள காயிதெமில்லத் கலைக் கல்லூரியின் உருவாக்கத்திற்கும் உங்கள் ஊரைச் சார்ந்த பெருமக்கள் நிறைவான பங்களிப்புகளைச் செய்துள்ளனர். வெளியூர்களில் இவ்வளவும் செய்த இம்மக்கள் தங்கள் சொந்த ஊரில் கல்லூரி ஆரம்பித்ததோ சில ஆண்டுகளுக்கு முன்புதான். நமது தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த - பாரம்பரியமிக்க வாவு குடும்பத்தினர், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி என்ற பெயரில், இந்தக் கல்லூரியை உருவாக்கியுள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு அவர்கள் காலங்காலமாக செய்து வரும் ஒத்துழைப்புகள் என்றும் மறக்க முடியாதவை.
இவற்றுக்கெல்லாம் காரணம், இந்நகர மக்கள் என்றுமே இஸ்லாமிய வழிமுறைகளை முறைப்படி பேணி ஒழுகி வந்ததுதான்.

1986ஆம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய மாபெரும் மாநாட்டில், முஸ்லிம்கள் நிறைவாக வாழும் பகுதிகளில் பைத்துல்மால் நிதியம் நிறுவப்பட வேண்டும் என்பது ஒரு முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில காலங்களிலேயே இந்த காயல்பட்டினத்தில்தான் துவக்கமாக பைத்துல்மால் உருவாக்கப்பட்டது.
அன்று பசியோடிருந்த மக்களுக்கு கலீஃபா உமர் ரழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் தமது தோளில் மாவு சுமந்து வந்து, அம்மக்களின் பசியைப் போக்கினார்கள். அந்த வழியைப் பின்பற்றி காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்கள் செய்த அறப்பணிகள் காரணமாக இன்று அங்கு பசியோடு ஒருவரும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

தெற்கு ஆத்தூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்குள்ள குடிமக்களின் வீடுகள் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்ட நேரத்தில், உங்கள் காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்கள் 200 வீடுகளைக் கட்டிக் கொடுத்தனர். இவ்வளவு செய்தும் இவற்றையெல்லாம் அவர்கள் வெளியில் பேசாத - பேச விரும்பாத காரணத்தால், வெளி உலகுக்கு அவை தெரியாமலே இருந்து வருகிறது. இம்மக்களிடம் இருந்து வரும் மார்க்க உணர்வுகளே இவர்களை இவ்வாறு செயல்படச் செய்கிறது.
காயிதெமில்லத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் காலத்திலிருந்தே, பொது சிவில் சட்டத்திற்கெதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போராடி வருகிறது. அக்காலத்தில், இச்சட்டத்திற்கெதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டபோது, உச்ச நீதிமன்றத்திலிருந்து வெளியிடப்பட்ட தீர்ப்பில், காயல்பட்டினம் முஸ்லிம்கள் அனுப்பிய மஹஜர் இது... அதனடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்படுகிறது என்று, அப்போது காயல்பட்டினம் மக்கள் எழுதியனுப்பிய ஒரு சொற்றொடரை மேற்கோள் காட்டி குறிப்பிடப்பட்டிருந்தது மறக்க முடியாத வரலாறு.

காயல்பட்டினத்தின் உலமாக்கள் அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அரபு நாட்டு மக்களுக்கு அரபு மொழி இலக்கணம் படித்துக் கொடுத்தது பெருமைக்குரிய வரலாறு. மார்க்கத்தை அறிதல், பேணுதல், பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்களில் காயல்பட்டினத்து மக்கள் எப்போதும் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

ஊலக அறிவையும் கற்ற ஹாஃபிழ்கள் ஏராளமாக உருவாகி வெளிவருவதும் இந்தக் காயல்பட்டினத்திலிருந்துதான். காரணம் அரபு நாட்டின் ஆதிகால தொடர்புதான். 10ஆம், 11ஆம் நூற்றாண்டில் பக்தாதிலிருந்து கப்பலில் இங்கு வந்திறங்கிய ஆண்-பெண்கள் இங்கு வந்து தங்கி, வணிகம் செய்து, குடும்ப உறவுகளையும் ஏற்படுத்திக்கொண்டனர்.

காயல்பட்டினம் நகர மக்களிடம் அரபியர்களின் கலாச்சாரங்கள் வெகுவாக மேலோங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே ஏதாவது மகிழ்ச்சிக்குரிய நிகழ்வுகள் நடைபெற்றால் அரபியில் கீதம் பாடுவார்கள். காயல்பட்டினத்திலும் அது பாரம்பரியமாக இருந்து வருகிறது.

அண்மையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான இ.அஹ்மத் ஸாஹிப் அவர்கள் காயல்பட்டினம் வந்தபோது, அங்குள்ள இளம் மாணவர்கள் அரபி கீதங்களைப் பாடி அவர்களை வரவேற்று மகிழ்வித்தார்கள். இந்நிகழ்வை இ.அஹ்மத் ஸாஹிப் அவர்கள் அரபு நாட்டு கலாச்சாரம் என்று மகிழ்ச்சியுடன் போற்றிக் கூறினார்கள். இதுபோன்ற கலாச்சாரங்கள் வளர்க்கப்பட வேண்டும்.

1973ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஒரு மீலாத் விழாவில் உரையாற்றுவதற்காக நான் இலங்கை வந்த பிறகு, அடுத்ததாக இப்போதுதான் வந்துள்ளேன். இப்போதும், இலங்கை நாட்டின் வெலிகமை என்ற ஊரில், அத்தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ள மீலாத் விழாவில் உரையாற்றுவதற்காகவே நான் வருகை புரிந்துள்ளேன்.
இதுபோன்ற மீலாத் விழாக்களை நடத்துவது, இறைத்தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இவர்களுக்குள்ள இஷ்க் - பற்று, பாசத்தைக் காண்பிப்பதாக உள்ளது.

வெளிநாட்டவர்களுக்காக இந்நாட்டில் தரப்படும் இரட்டைக் குடியுரிமை போன்ற சலுகைகளை நம் மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காலம் கடந்து யோசிப்பதை விட, உரிய காலத்திலேயே அவற்றைப் பயன்படுத்திக்கொள்வது சிறப்பிற்குரியது.

இந்தியாவில், மத ரீதியாக மக்களின் மனோநிலை என்ன என்பது குறித்த புள்ளிவிபரம் ஒன்றை ஹிந்து நாளிதழ் அதன் முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அந்த புள்ளிவிபரப்படி, இந்தியர்கள் 10 பேரில் 5 பேர் மத உணர்வுடையவர்களாகவும், 10 பேரில் 4 பேர் அதிக மத உணர்வுடையவர்களாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லா மதத்தினரிடையேயும் இந்தப் போக்கு அதிகமாகக் காணப்படுகிறது.

மத உணர்வாக இருக்கும் இது மதவெறியாக மாறிவிடக் கூடாது. நமது கவலையெல்லாம், மத உணர்வு இருப்பதில் தவறில்லை. மதவெறியை உருவாக்க சிலர் முயற்சித்துக் கொண்டிருப்பதுதான் மிகுந்த கவலையளிக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் இந்தியாவின் வருங்காலம் கேள்விக்குறியாகி விடும்.
பொதுவான இந்து மக்கள் இந்து மத உணர்வோடு வாழ்ந்து வருகின்றனர். அது சரியானதே. அதே நேரத்தில் அவர்களில் சிலர் இந்துத்துவா, இந்து ராஜ்ஜியம் என்ற பெயரில் மதவெறியூட்டப்படுகின்றனர். இந்து மத உணர்வை மதிக்கின்ற அதே வேளையில் இந்து மத வெறியை நாம் அனுமதிக்க முடியாது. இதுபோல்தான் எல்லா மதத்தினருக்கும்.

படிப்பினைக்காக கதை ஒன்றைச் சொல்கிறேன். சன்னியாசிகள் பதினைந்து பேர் தங்கள் பயணத்திற்கிடையே ஒரு காட்டில் தங்கினராம்... அவர்களுள் நான்கு இளம் சன்னியாசிகள் புறாக்களை வேட்டையாடிக் கொண்டு வந்தார்களாம். இதனைக் கண்ணுற்ற புறாக்கூட்டத் தலைவர், சன்னியாசிகளின் தலைவரைச் சந்தித்து, ஐயா, எங்கள் கூட்டத்திலுள்ள புறாக்களை தங்கள் சன்னியாசிகள் நால்வர் வேட்டையாடிச் சென்றுவிட்டனர். இது என்ன நியாயம்? வந்தவர்கள் வேதாந்திகள் என்பதால்தானே நாங்கள் எங்களைத் தற்காத்துக்கொள்ளத் தேவையில்லை என்றிருந்தோம்...? வந்தவர்கள் வேதாந்திகளல்ல@ வேதாந்திகள் வேடத்திலுள்ள வேட்டைக்காரர்கள் என்று தெரிந்திருந்தால் நாங்கள் எங்களைத் தற்காத்துக் கொண்டிருப்போமே...? என்று கேட்டதாம்.

முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாமிய நெறிப்படி வாழ வேண்டும். முஸ்லிம்களைப் பார்த்து இஸ்லாம் பிறரால் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
இன்று உலகின் பல நாடுகளில் மிக வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம்தான். அதற்குக் காரணம், முஸ்லிம்கள் வேதாந்திகாளகச் சென்று, தமது சொல் - செயல் - எண்ணத்தால் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை முழுமையாகப் பேணி வாழ்ந்தமைதான். அதனால்தான், பார்த்த மாத்திரத்தில் மொழி தெரியாத நிலையிலும் கூட அவர்களால் இஸ்லாம் ஏற்கப்பட்டது. இன்றைய தேவை இந்த நல்ல செயல்பாடுதான்.
நிராகரிப்பாளர்கள் விரும்பாத நிலையிலும், மற்றெல்லா மார்க்கங்களை விடவும் மேம்படுத்திக் காண்பிப்பதற்காக அவனே அவனது தூதரை நேர்வழியைக் கொண்டும், சத்திய மார்க்க நெறியைக் கொண்டும் அனுப்பிவைத்தான் என்று திருமறை குர்ஆனில் ஒரு வசனம் உள்ளது. இவ்வசனத்தை தவறாகப் புரிந்துகொண்ட சிலர் - இஸ்லாம் எல்லா மதங்களையும் அழித்து விட்டு அது மட்டும் வாழ வேண்டும் என்ற சிந்தனையைத் தூண்டுவதாக கருத்து தெரிவிக்கின்றனர். உண்மையில் இதன் கருத்து, இஸ்லாம் தனது உள்ளடக்கத்தை வெளிப்படுத்துவதன் மூலம் மற்ற மதங்களில் இல்லாத தனது தனித்தன்மையை உலகிற்கு உணர்த்தும் என்பதுதான்.
அண்மையில், வேளாங்கன்னியில் சமயங்களுக்கிடையேயான ஐக்கியத்தை மேம்படுத்தும் வகையில் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. அதில், இந்துக்கள் சார்பில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களும், கிறிஸ்துவர்கள் சார்பில் பிஷப் ஒருவரும், கம்யூனிஸ சிந்தனையாளர்கள் சார்பில் தா.பாண்டியன் அவர்களும், முஸ்லிம்கள் சார்பில் நானும் அழைக்கப்பட்டிருந்தோம்.
அப்போது, முஸ்லிம் தீவிரவாதம் பற்றி உங்கள் கருத்தென்ன என்று என்னிடம் கேட்கப்பட்டது. அவர்களுக்கு நான் விடை தருகையில், குண்டு வைக்கக்கூடிய யாரோ இருவரின் செயல்களை வைத்து இஸ்லாமைப் புரிந்துகொள்ளக் கூடாது. ஆதாரப்பூர்வ சான்றுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த இஸ்லாமிய வாழ்வியல் நெறியை அதன் மூலத்திலிருந்தும், அந்த நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி வாழ்ந்த ஞானிகள், கற்றறிந்த குருமார்களின் செயல்பாடுகளிலிருந்தும்தான் பார்க்க வேண்டும் என்று கூறினேன்.
கிறிஸ்துவர்களால் கடவுளாக மதிக்கப்படும் இயேசுவை இறைத்தூதராக நம்பாமல் ஒருவர் முஸ்லிமாக இருக்க முடியாது. அதே நேரத்தில், முஹம்மத் நபியை நம்பாமலேயே ஒருவர் கிறிஸ்துவராக இருக்கலாம். அப்படி இருக்கையில் மத தீவிரவாதம் இஸ்லாம் மார்க்கத்தில் எங்கிருந்து முளைக்கும்...? என்று நான் தெரிவித்தேன்.

அதற்குப் பின் பேசிய கிறிஸ்துவ பிஷப் அவர்கள், பேராசிரியர் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகச் சரியானவையே... முஸ்லிம்களையும், இஸ்லாமையும் புரிந்துகொள்வதில் நமது அணுகுமுறைகள் மாற்றப்பட வேண்டும் என்றார்.

நுpறைவாக, இந்த இலங்கை காயல் நல மன்றத்தின் நற்பணிகள் தொடரப்பட வேண்டும். முயுறுயுடுயுNமுயு - காவாலங்கா என்று இந்த அமைப்புக்குப் பெயர். இந்த அமைப்பு தனது செயல்பாடுகளால் இலங்கையைப் பாதுகாக்கும் காரணியாக இருக்கும் என்பதால் நான் அதை காவல் லங்கா என்று வாசிக்க ஆசைப்படுகிறேன். இதன் மக்கள் நலப் பணிகள் என்றென்றும் தொடரவும், சிறக்கவும், அவற்றுக்கான முழு நற்பலன்களும் இம்மையிலும், மறுமையிலும் இதன் கீழ் செயல்படுவோருக்குக் கிடைக்கவும் நான் அல்லாஹ்வைப் பிரார்த்தித்து நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனதுரையில் தெரிவித்தார்.

பேராசிரியரின் உரையைத் தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கமளித்தார். கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் கல்விப் பணிப்பாளர் அன்வர்தீன் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, தமது கல்லூரிக்கு இந்தியாவின் புகழ்பெற்ற முஸ்லிம் பல்கலைக்கழகங்களில் ஒன்றின் அஃபிலியேஷன் வேண்டும் எனவும், அதற்கு பேராசிரியர் உதவ வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

அவரது கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டறிந்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தாம் இந்தியா திரும்பிய பின், இது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த உயரதிகாரிகளிடம் தேவையான விளக்கங்களைப் பெற்று, இயன்றளவு விரைவாக ஆவன செய்து தருவதாக தெரிவித்தார்.









தகவல்:
ஓ.எல்.எம்.ஆரிஃப்,
செயற்குழு உறுப்பினர்,
காயல் நல மன்றம்,
கொழும்பு, இலங்கை.

Monday, March 8, 2010

மார்ச் 10: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினம்

மார்ச் 10: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினம்

மேலப்பாளையத்தில் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு

பந்தல் அமைக்கும் பணியை

நிர்வாகிகள் பார்வையிட்டனர்


நெல்லை, மார்ச்.8-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தின சமுதாய மறு மலர்ச்சி மாநாடு வருகிற 10-3-2010 அன்று மேலப் பாளையம் ஜின்னா திடலில் நடைபெறுகிறது.

அன்று காலை 10 மணிக்கு முஸ்லிம் லீக் மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் தலைமையில் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெறுகிறது.

மாலை 4 மணிக்கு மாபெரும் பிறைக்கொடி பட்டாளத்தின் சமூக நல்லி ணக்க பேரணி நடைபெறு கிறது.

மாலை 6 மணிக்கு சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நடைபெறுகிறது. நெல்லை மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா மாநாட்டுப் பந்தலை திறந்து வைக் கிறார். மதுரை மாவட்டத் தலைவர் அப்துல் காதர் ஆலிம், மாநாட்டுத் திட லில் முஸ்லிம் லீக் கொடி யேற்றி வைக்கிறார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மாநாட்டு நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.

மாவட்டச் செயலாளர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன் அனைவரையும் வரவேற்றுப் பேசுகிறார்.

மு.க. அழகிரி

மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி, தமிழக அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், மாநிலப் பொரு ளாளர் வடக்குகோட்டை யார் வ.மு. செய்யது அஹ மது, கேரள முன்னாள் கல்வியமைச்சர் இ.டி. பஷீர் அஹமது எம்.பி., நாடாளு மன்ற உறுப்பினர்கள் எம். அப்துர் ரஹ்மான், எஸ். எஸ். ராமசுப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் வி. கருப்ப சாமி பாண்டியன், என். மாலைராஜா, எம்.ஏ. கலீல் ரஹ்மான், எச். அப்துல் பாசித்,

முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர்கள் தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான், எம்.எஸ்.எ. ஷாஜஹான், நாகூர் ஜபருல்லா, நெல்லை மஜீத், காயல் மஹப+ப், கமுதி பஷீர்,

அணிகளின் அமைப் பாளர்கள் திருப்ப+ர் சத்தார், கே.எம். நிஜாமுதீன், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், ஹாமீத் பக்ரீ ஆலிம்,

முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் எஸ்.எம். கோதர் முகைதீன், வி.எஸ். டி. சம்சுல் ஆலம் உள்பட அனைத்து மாவட்ட நிர் வாகிகள் கலந்து கொள் கிறார்கள்.

சமுதாய

ஒளிவிளக்கு மாநாடு

இம் மாநாட்டில் கல்வி, இலக்கியம், சமூக சேவை களில் சிறந்து விளங்கும் சிறந்த கல்வியாளர் கீழக் கரை சீனாதானா, செய்யது அப்துல் காதர் சிறந்த இலக் கியவாதி கவிஞர் வீரை ரஹ்மான், சிறந்த சமூக சேவகர் ஷிபா டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, சிறந்த பெண் கல்வியாளர், மதுரை தஸ்ரீப் ஜஹான் ஆகிய நான்கு பேருக்கு சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கப்படுகிறது.

பந்தல் அமைக்கும்

பணி தீவிரம்

மேலப்பாளையம் ஜின்னா திடலில் மாநாட் டுப் பந்தல் அமைக் கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது.

மாநாட்டுப் பந்தல் அமைக்கும் பணியை மாநிலப் பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எம். எஸ். துராப்ஷா, மாவட்டச் செயலாளர் எல். கே.எஸ். மீரான் முகைதீன், மாநாட்டு நிதிக்குழு தலைவர் ஷிபா, எம்.கே.எம். முஹம்மது ஷாபி, மாவட்ட துணைச் செயலா ளர் பாட்டப்பத்து எம். முஹம்மது அலி, மாவட்ட துணைத் தலைவர்கள் வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம், ஜே. ஷாகுல் ஹமீது, மாவட்ட தொண்டர் அணி செயலாளர் வி.ஏ. எஸ். செய்யது இப்ராஹீம், பட்டதாரி அணி செயலா ளர் எஸ். மசூது, செய்தித் தொடர்பாளர் எஸ். பீர் முகைதீன், மேலப்பாளை யம் நகரச் செயலாளர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர், மறு மலர்ச்சி புளியங்குடி எம். ஷாகுல் ஹமீது, இளைஞர் அணி தலைவர் எம்.ஏ. நாகூர் கனி, செயலாளர் அப்துல் ஜப்பார் ஆகி யோர் பார்வையிட்டார் கள்.

பல்லாணிரக் கணக்கானோர்

பங்கறெ;கின்றனர்

மாநாட்டுப் பந்தலில் மாநாட்டு நிதிக்கழு தவைர் ஷிபா எம்.கே.எம். முஹம் மது ஷாபி நிருபர்களிடம் கூறியதாவது-

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62-வது ஆண்டு நிறுவன தின சமுதாய மறுமலர்ச்சி மாநாடு வருகிற 10-3-2010 அன்று மேலப்பாளையம் ஜின்னா திடலில் மிகச் சிறப்பாக நடைபெற இருக் கிறது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வாக னங்களில் பல்லாயிரக் கணக்கானோர் முஸ்லிம் லீக் ஊழியர்கள் மாநாட் டில் வந்து கலந்து கொள்கி றார்கள்.

இம் மாநாடு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் வர லாற்றில் ஒரு புதிய அத்தி யாயத்தைப் படைப்ப தோடு சமுதாயத்தின் மறு மலர்ச்சியை ஏற்படுத்தும்.

இவ்வாறு ஷிபா எம்.கே.எம். முஹம்மது ஷாபி கூறினார்.

ஆலோசனை

கூட்டம்

இன்று மேலப்பாளை யம் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் பள்ளியில் மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இதில் மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் மற்றும் நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர் . மாநாட்டுப் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன.

Sunday, March 7, 2010

க‌வ‌லை ம‌ற‌ந்து சிரிங்க‌..........

க‌வ‌லை ம‌ற‌ந்து சிரிங்க‌..........

மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.


தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.
தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!
யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?
கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!

இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?

பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?
தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!

அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?

பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!


மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை
காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு
உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?


டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!

அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே
ஓடி போய்டாங்க!!

2010 மார்ச் 10 இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நிறுவன தினத்திற்கு முதல்வர் கலைஞர் வாழ்த்து

2010 மார்ச் 10 இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நிறுவன தினத்திற்கு முதல்வர் கலைஞர் வாழ்த்து

2010 மார்ச் 10 புதன் கிழமை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62வது நிறுவன தினமாகும். இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நடை பெறுகிறது. இதற்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு கலைஞர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
தந்தை பெரியார் அவர் களின் அன்புக்கும், பேரறிஞர் அண்ணா அவர்களின் பாசத் திற்கும், எனது மட்டற்ற மதிப்புக்கும் உரிய பெருந்தகை யாளர் கண்ணியத்துக்குரிய காயிதெ மில்லத் அவர்கள். சுதந்திர இந்தியாவின் 1948 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 10ம் நாள் தொடங்கிய இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் நிறுவன நாள் விழா, 10.3.2010 அன்று நெல்லை மாநகரில் நிகழ்வதறிந்து மகிழ்கிறேன்.

இந்திய அரசியல் நிர்ணய சபை இந்தியாவின் பொது மொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்ற போது, அந்த அவையின் உறுப்பினராக இருந்த காயிதெ மில்லத் அவர்கள், அதனைக் கடுமையாக எதிர்த்ததுடன்@ இந்தி கூடாது என்றால் இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழியை ஏற்பது என்று அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் கேட்டபோது, ~~வளம் செறிந்ததும், தொன்மை நிறைந்ததுமான எனதருமைத் தாய் மொழியாம் தமிழ் மொழியையே ஆட்சி மொழியாக்கலாம்|| என ஆணித் தரமாக முழங்கியதை, தமிழ் மத்திய ஆட்சி மொழியாக ஏற்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வரும் தமிழக அரசின் சார்பில், ~~உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு|| நடைபெறவிருக்கும் வேளையில் நினைவுகூர்ந்து அன்னாரைப் போற்றுவதுடன் அவர் நிறுவிய முஸ்லிம் லீக் இயக்கத்தின் நிறுவன நாள் விழா எழுச்சியுடன் நிகழ எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன். இவ்வாறு முதல்வர் கலைஞர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சமுதாய மறுமலர்ச்சி மாநாடு

இந்திய ய+னியன் முஸ் லிம் லீக் 62வது நிறுவன தினத்தை முன்னிட்டு 2010 மார்ச் 10 புதன் கிழமை திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் சமு தாய மறுமலர்ச்சி மாநாடு நடைபெறுகிறது.
மகளிர் கருத்தரங்கு

காலை 9மணிமுதல் பகல் 1மணிவரை மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெறுகிறது. மாநில மகளிர் அணி அமைப்பாளர் பாதிமா முஸப்பர் தலைமையில் நடைபெறும்
இக்கருத்தரங்கிற்கு நெல்லை மாநக ராட்சி இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர்கள் ரஹ்மத் அப்துல் ரஹ் மான், ய+சுப் சுலைஹா மீரான் மைதீன், சைபுன்னிஸா, கோ.கு. ஜமீலா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

குடும்ப விழிப்புணர்வு என்ற தலைப்பில் ஏ. ரபீகா, மருத்துவ விழிப்புணர்வு பற்றி டாக்டர் திருமதி எல். என். ராதா, கல்வி விழிப் புணர்வு குறித்து பேராசிரியை தஸ்ரீப் ஜஹான் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

இசையரங்கம்

பிற்பகல் 2மணி முதல் 3.45 வரை இஸ்லாமிய இன்னிசை விருந்து ஆழ்வை உஸ்மான் குழுவினரால் அளிக்கப்படுகிறது.

சமூக நல்லிணக்க பேரணி

மாலை 4மணிக்கு சமூக நல்லிணக்க பேரணி மேலப் பாளையம் அன்னை ஹாஜரா கல்லூரி சாலை யில் உள்ள வி.எஸ்.டி. பள்ளிவாசலிலிருந்து தொடங்குகிறது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில உலமாக்கள் அணி அமைப்பாளர் மௌலவி ஹாமித் பக்ரி தலைமையில் நடைபெறும் இப்பேரணியை டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி துவக்கி வைக்கிறார். சங்கைக்குரிய உலமா பெருமக்களான டி.ஜெ.எம். சலாஹ{த்தீன் ஹஜ்ரத், சதக்கத்துல்லா மிஸ்பாஹி ஹஜ்ரத், பி.ஏ. காஜா முஈ னுத்தீன் பாகவி ஹஜ்ரத், ஹெச்.கே. முஹம்மது முஸ்தபா பாகவி ஹஜ்ரத், பி.ஏ. கே. அப்துல் ரஹீம் பாகவி ஹஜ்ரத், எஸ்.எஸ். ஹைதர் அலி மிஸ்பாஹி ஹஜ்ரத், எம்.ஹெச். ஷம்சுத்தீன் உலவி ஹஜ்ரத், என். எஸ். மீரான் மன்பஈ ஹஜ்ரத், எம்.என்.எம். இல்யாஸ் உஸ் மானி ஹஜ்ரத், ஷாமதார் ஆலிம் ஹஜ்ரத், ஏ.ஒய். முகையதீன் ரஷாதி ஹஜ் ரத், சுலைமான் சேட் ஆலிம் ஹஜ்ரத், அப்துர் ரஹ்மான் ஷிப்லி ஹஜ்ரத், கே.எப். ஜலீல் உஸ்மானி ஹஜ்ரத், சுலைமான் ஆலிம் ஹஜ்ரத் மற்றும் வழக்கறிஞர்கள் எம்.எஸ். முஹம்மது முஸ்தபா, எம்.எம். ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

சமுதாய மறுமலர்ச்சி மாநாடுp

மாலை 6.30மணிக்கு சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநித் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையேற்கிறார். மௌலவி எம்.ஏ. முஹம் மது இப்ராஹீம் ஆலிம் கிராஅத் ஓதுகிறார். மாநாட்டு அமைப்புக் குழுத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா மாநாட்டை திறந்து வைக்கிறார். மாநாட்டு அமைப்புக் குழுத் தலைவர் மதுரை மௌலவி பி.கே.எம். அப்துல் காதர் ஆலிம் பச்சிளம் பிறைக் கொடியை ஏற்றிவைக்கிறார். மாநில கொள்கைபரப்புச் செயலாளர் காயல் மகப+ப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். மாவட்டச் செயலாளர் எல்.கே.எஸ். மீரான் மைதீன் வரவேற்று பேசுகிறார். மு.க.அழகிரி

மாநாட்டின் சிறப்பு விருந்தினராக தென்மண் டல தி.மு.க. அமைப்புச் செயலாளரும் மத்திய உரம் மற்றும் ரசாயணத்துறை அமைச்சருமான அஞ்சா நெஞ்சர் மு.க.அழகிரி பங்கேற்கிறார். தமிழக அமைச்சர் டி.பி. எம். மைதீன்கான், மாநகர மேயர் ஏ.எல். சுப்பிரமணியம், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர். நாடாளுமன்ற உறுப்பி னர்கள் எம். அப்துர் ரஹ்மான், இ.டி. முஹம்மது பஷீர், எஸ்.எஸ். ராம சுப்பு, சட்டமன்ற உறுப்பினர் கள் வி.கருப்ப சாமி பாண் டியன், என். மாலை ராஜா, எம். கலீலுர் ரஹ்மான், ஹெச். அப்துல் பாசித், மாநிலச் செயலாளர்கள் தளபதி ஷபீகுர் ரஹ்மான், நாகூர் ஜபருல்லா, எம்.எஸ். ஏ. ஷாஜஹான், கமுதி பஷீர், மாநில அணிகளின் அமைப்பாளர்கள் திருப் ப+ர் சத்தார், ஏ.அப்துர் ரவ+ப், வி.எஸ். அமா னுல்லா, மௌலவி ராஜா ஹ{சைன் மற்றும் மௌ லவி ஜஹாங்கீர் அரூஸி, ஜாஹிர் ஹ{சைன், புளியங் குடி அப்துல் வகாப் உள்ளிட்டோர் உரையாற்று கின்றனர்.மாநிலத் துணைத் தலைவர்கள், மாவட்டங் களி,ன் தலைவர், செயலா ளர், பொருளாளர்கள், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கின்றனர். மாவட்டச் செயலாளர் த.அ. செய்யது மஹம்மது நன்றி கூறுகிறார்.

விருதுகள்

சிறந்த கல்வியாளருக்கான விருது கீழக்கரை சீனாதான செய்யது அப்துல் காதர் அவர்களுக்கும், சிறந்த சமூக சேவையா ளர் விருது டாக்டர் எம். கே.எம். முஹம்மது ஷாபி அவர்களுக்கும், சிறந்த இலக்கியவாதி விருது கவிஞர் வீரை ரகுமான் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. சிறந்த பெண் கல்வியா ளருக்கான விருது பேராசிரியை தஸ்ரீப் ஜஹானுக்கு மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கின் போது வழங்கப் படுகிறது.

சிறப்பான ஏற்பாடுகள்

இம்மாநாட்டிற்கு மிகச் சிறப்பான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தென் மாவட் டங்கள் முழுவதிலும் சுவர் விளம்பரங்களும், பிளக்ஸ் விளம்பர பேனர்களும் செய்யப்பட்டுள்ளன. இம்மாநாட்டையொட்டி தென்மாவட்டங்களில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.

Saturday, March 6, 2010

மேலப்பாளையத்தில் மார்ச் 10ல் நடைபெறும் முஸ்லிம் லீக் 62 ஆவது நிறுவன தினத்தில் விருது பெறும் பெரு மக்கள்

மேலப்பாளையத்தில் மார்ச் 10ல் நடைபெறும் முஸ்லிம் லீக் 62 ஆவது நிறுவன தினத்தில் விருது பெறும் பெரு மக்கள்

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினமான 2010 மார்ச் 10-ம் தேதி திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ~சமுதாய மறுமலர்ச்சி மாநாடு| நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் கல்வி, பொது நலம், இலக்கியத் துறைகளில் சிறந்து விளங்கும் நால்வருக்கு சமுதாய ஒளிவிளக்கு விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளன.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினம் சமுதாய மறுமலர்ச்சி மாநாடாக மேலப்பாளையம் ஜின்னா திடலில் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது. இம் மாநாட்டிற்கான ஏற்பாடு கள் முழுவீச்சில் நடை பெற்று வருகின்றன.

சமூக நல்லிணக்க பேரணி

காலையில் நடை பெறும் மகளிர் விழிப் புணர்வு கருத்தரங்கையும், பிற்பகலில் நடைபெறும் பிரமாண்டமான சமூக நல்லிணக்கப் பேரணியையும், மாலையில் நடைபெறும் சமுதாய மறு மலர்ச்சி மாநாட்டையும் மிகச் சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தென் மாவட்டங்களிலிருந்து இம்மாநாட்டிற்கு பெருமளவில் சமுதாயப் பெருமக்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டுகோள் விடப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் மஹல்லாக்கள்தோறும் சென்று மாநாட்டு அழைப்பிதழ்கள் கொடுப்பது என்றும், மேலப்பாளையத்தில் வீடுவீடாக சென்று அழைப்பது என்றும், தெருமுனைப் பிரச்சாரங்கள் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கல்வி, இலக்கியம், சமூக சேவைகளில் மிகச் சிறந்த சேவையாற்றி வரும் பிரமுகர்கள் நால்வருக்கு ~சமுதாய ஒளிவிளக்கு| விருதுகள் வழங்கப்பட இக்கூட்டத்தில் முடிவானது.

விருது பெறும் பெரு மக்கள்

சிறந்த கல்வியாளர் - சீனாதானா செய்யது அப்துல் காதர்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 22-8-1946-ல் பிறந்த சீனா தானா செய்யது அப்துல் காதர் ஹாங்காங், இலங்கை, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் தொழில் செய்யும் முன்னணி பிரமு கர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர் கல்வி கற்பதற்கு சொந்த முயற்சி யிலும், ஓமியத் மற்றும் சமூகப் பொருளாதார கல்வி வளர்ச்சிக்கான அறக்கட்டளை சார்பிலும், பைத்துல்மால் வழியிலும் உதவி செய்துவரக் கூடியவர்.

தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில் பைத்துல் மால் அமைக்கப்படுவதற்கு துணை புரியக்கூடியவர். அனைத்து சமயத்தவர்களுக்கான அறிவுரைகள், மதங்கள் சொல்லும் நற் சிந்தனைகள் உள்ளிட்ட தமிழிலும், ஆங்கிலத்திலும் நான்கு புத்தகங்களை எழுதியிருக்கக் கூடியவர். சீனாதான சாரிடபிள் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை நிறுவி ஏழை களுக்கு மருத்துவ மற்றும் உணவு உதவிகள் செய்து வரக்கூடியவர். ஏராளமானோர் வெளி நாட்டு வேலை வாய்ப்பு பெறுவதற்கு துணை நிற்கக் கூடியவர். இத்தகையப் பெருமைக் குரிய சீனாதானா செய்யது அப்துல் காதர் அவர்களுக்கு ~சிறந்த கல்வியாள ருக்கான சமுதாய ஒளி விளக்கு| விருது இம்மாநாட்டில் வழங்கப்படுகிறது.

சிறந்த இலக்கியவாதி - கவிஞர் வீரை ரஹ்மான்

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த கவிஞர் அப்துல் ரஹ்மான் 1931 மார்ச் 28-ல் பிறந்தவர். நாற்பது ஆண்டுகளாக புகைப்படக் கலைஞராக உள்ள இவர் சிறந்த பொதுநல ஊழியர். மிகச் சிறந்த இலக்கியவாதி.

போட்டிகளையும் நடத்தியுள்ளார்.

முஸ்லிம் சமுதாய நலச் சங்கம், வீரை ஜும்ஆ பள்ளிவாசல், மூத்த குடிமக்கள் மன்றம், மக்கள் இயக்கம், தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம், பாளையங்கோட்டை முஸ்லிம் அனாதை நிலையம், வீரை ஜுல்பா அறக் கட்டளை, சிராஜுல் ஹ{ப்தா மதரஸா உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் சமுதாய அமைப்புகளில் பொறுப்பு வகித்து அறப்பணியாற்றி வரக்கூடியவர்.

மிகச் சிறந்த இலக்கிய வாதியான வீரை ரஹ்மான் அருமையான கவிஞர். இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபா பாடிய புகழ் பெற்ற பாடல்கள் பல இவர் எழுதியவை. இத்தகையப் பெருமைக் குரிய கவிஞர் வீரை ரஹ்மானுக்கு ~சிறந்த இலக்கிய வாதிக்கான சமுதாய ஒளி விளக்கு| விருது இம் மாநாட்டில் வழங்கப்படுகிறது.

சிறந்த சமூகசேவகர் டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டை ஒட்டியுள்ள மியான்பள்ளி கிராமத்தில் 1961 மே 4-ம் தேதி பிறந்தவர் டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி. திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஷிபா மருத்துவமனை, ஷிபா ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநராகவும், எம்.எச். அக்ரோபார்ம் பங்குதார ராகவும் உள்ளார்.

ஷிபா கல்வி அறக்கட்டளை, திருநெல்வேலி ரோட்டரி கிளப், சேம்பர் ஆஃப் காமர்ஸ், முஸ்லிம் அனாதை நிலையம், காதர் அவுலியா பள்ளிவாசல், மதரஸத்துல் ஹ{சைனியா அரபிக் கல்லூரி, பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி நிர்வாகக் குழு, தனியார் நர்சிங் ஹோம், மனிதஉரிமை அமைப்பு, செஞ்சிலுவை சங்கம் போன்ற பல்வேறு பொதுஅமைப்புகளில் பொறுப்பு வகித்து அறப்பணியாற்றி வரக்கூடியவர். சமயப் பாகுபாடின்றி ஆதரவற்றோருக்கு உதவும் மனப்பான்மையுள்ள இவர் நேசப்பார்வை என்ற அமைப்பை ஏற்படுத்தி விபத்து நடக்கும் போது மருத்துவஉதவி செய்து வரக்கூடியவர். கடந்த 20 ஆண்டு காலத்துக்கும் மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாரம்தோறும் இலவச மருத்துவ முகாம் நடத்தி வரக்கூடியவர். இவர் ஏற்பாடு செய்கின்ற இலவச கண் சிகிச்சை மூலம் மட்டுமே வருடத்திற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை பயன் அடைந்து வருகின்றனர்.

இளம்பிள்ளை வாத நோயை ஒழிப்பதற்கு இலவச சொட்டு மருந்து வழங்கி சேவை செய்து வரக் கூடியவர். 1986- முதல் ஆண்டு தோறும் 15 தம்பதிகளுக்கு இலவச திருமணங்கள் செய்தல், கல்வி உதவித் தொகை வழங்குதல், விதவைகள் மற்றும் முதியோர்களுக்கு மருத்துவ உதவி வழங்குதல் போன்ற அளப்பரிய காரியங்களை செய்து வருகின்றவர்.

இலவச மருத்துவ ஆலோசனை, விபத்து முதலுதவி பயிற்சி முகாம் கள் நடத்துதல், இயற்கை சீற்றப் பாதுகாப்பு உதவிகளை தாராளமாக செய்து வரக்கூடியவர். இவரது தர்ம காரியங்களும், அறப்பணிகளும் இறைவனின் நன்மைக்காக என்ற அடிப்படையில் ரகசியமாக செய்யப்படுவது பாராட்டிற்குரியதாகும். இத்தகையப் பெருமைக் குரிய டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி அவர்களுக்கு ~சிறந்த சமூக சேவகருக்கான சமுதாய ஒளி விளக்கு| விருது இம்மாநாட்டில் வழங்கப்படுகிறது.

சிறந்த பெண் கல்வியாளர்- தஸ்ரீப் ஜஹான்

மதுரை ஸ்டேட் பாங்க் பணியாளர் காலனியைச் சேர்ந்த ஏ.கே. தஸ்ரீப் ஜஹான் எம்.ஏ. எம்.பில்., பி.ஜி.டி.சி.ஏ. பட்டம் பெற்றவர். சென்னை எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரியில் பொருளாதார விரிவுரையாளராகவும், சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும், புதுக்கோட்டை ராஜா அரசு கலைக் கல்லூரியி லும், மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு கலைக் கல்லூரியி லும் முதல்வராக பணி செய்தவர்.
கல்விக் கருத்தரங்குகள், சர்வதேச கருத்தரங்குகள் பலவற்றில் பங்கு கொண்டு பல்வேறு தலைப்புகளில் ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்கிய வர். பொருளாதாரப் பேராசிரியையான இவர் அது குறித்த தலைப்புகளில் ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு விழிப் புணர்வை ஏற்படுத்தியவர். இஸ்லாம் வலியுறுத்துகின்ற மனிதநேயம், சகோத ரத்துவம், கல்வியின் முக்கியத்துவம், குறிப்பாக பெண் கல்வி உள்ளிட்ட தலைப்புகளில் பயனுள்ள பல ஆக்கங்களைத் தந்தவர். 2007.ல் அவர் பணி ஓய்வு பெற்ற பின் மதுரை அவனியாபுரத்தில் உள்ள அல்புர்கான் மெட்ரிகுலே ஷன் பள்ளியின் தாளாளராக பணியாற்றி வருகிறார். முஸ்லிம் பெண் கல்வியாளர்கள் முனைவர் பட்டம் பெறுவதற்கான வழிகாட்டுபவராக திகழ் கிறார். உயர்நிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக் கான வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறார். ஏராளமான பெண்கள் உயர் கல்வி பெறுவதற்கு மிகச் சிறந்த உதவிகள் செய்து வருகிறார். இத்தகைய பெருமைக் குரிய தஸ்ரீப் ஜஹான் அவர்க ளுக்கு ~சிறந்த பெண் கல்வியாளருக்கான சமுதாய ஒளி விளக்கு| விருது இம்மாநாட்டில் வழங்கப் படுகிறது

லால்பேட்டையில் தமிழக துணை முதல்வர் தளபதி

லால்பேட்டையில் தமிழக துணை முதல்வர் தளபதி

ஸ்டாலினுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எழுச்சிமிகு வரவேற்ப்பு
துணை முதல்வருக்கு ஏ.எஸ்.அஹமத் பேராசிரியர் கே.எம்.கே.சார்பில் வாழ்த்து

காட்டுமன்னார் கோயில் ,முட்டம் பாலம் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகை தந்த தமிழக துணை முதல்வர் தளபதி
ஸ்டாலினுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் லால்பேட்டைநகரில் மகத்தான வரவேற்ப்பு வழங்கப்பட்டது

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் தளபதி ஷபிகுர் ரஹ்மான் ,கடலூர் மாவட்ட தலைவர் அப்துல் கப்பார் ,லால்பேட்டை நகர தலைவர் முகமத் ,பேரூராட்சி மன்றத்தலைவர் சபியுல்லா,நகர முஸ்லிம் லீக் செயலாளர் அப்துல் அலி ,துணைத்தலைவர்கள் அப்துல் ஜெமில் ,தஹா முகமத் , அப்துல் ரசித்,துணை செயலாளர்கள் முகமத் தைய்யுப் ,ரஊப்,ஹிதயதுல்ல இளைஞர் அணி நூருல் அமின் தலைமை நிலைய பேச்சாளர் சல்மான் பாரிஸ் ஆகியோர் சால்வை அணிவித்தனர்
துணை முதல்வருக்கு ஏ.எஸ்.அஹமத் பேராசிரியர் கே.எம்.கே.சார்பில் வாழ்த்து
முஸ்லிம் லீக் மாணவர் அணியைச்சார்ந்த ஏ.எஸ்.அஹமத் தளபதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து பென்னகரம் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் தங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க சொன்னார்கள் என்ற செய்தியை தெரிவித்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து நன்றி கூறினார்

இந்நிகழ்ச்சியில் லால்பேட்டை நகரெங்குமுல்ல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னோடிகள் ,உலமாக்கள் ,ஜமாத்தார்கள் திரளானோர் பங்கேற்றனர் .தி.மு.க.மற்றும் தோழமை கட்சியினரும் பொது மக்களும் பங்கேற்றனர் ஆயிரக்கணக்கான மக்களும் முஸ்லிம் லீக் ஜிந்தாபாத் ,தளபதி ஸ்டாலின் ஜிந்தாபாத்,பேராசிரியர் காதர் மொகிதீன் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டு வரவேற்ற பொது துணை முதல்வர் தளபதி ஸ்டாலின் மகிழ்ச்சி அடைந்தார்