Showing posts with label மணிச்சுடர். Show all posts
Showing posts with label மணிச்சுடர். Show all posts

Thursday, August 5, 2010

மணிச்சுடர் நாளிதழ் ரமளான் சிறப்பு மலர் 2010

மணிச்சுடர் நாளிதழ் ரமளான் சிறப்பு மலர் 2010

அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…
உங்களுடன் ….

உண்மை சொல்வோம் ! நன்மை செய்வோம் ! என்ற லட்சியத்துடன் கடந்த 21 ஆண்டு காலமாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ் ‘மணிச்சுடர்’
சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் அவர்கள் தினத்தாள் முயற்சியை துவங்கியபோது அவர் முன் இருந்த கனவுகள் மணிச்சுடரின் தொடர் வரவால் இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் தமிழ்ச் சமுதாயத்திடம் உண்மை நடப்புகள் உடனுக்குடன் சென்றடைய வேண்டுமென்ற உயரிய நோக்கம் ‘மணிச்சுடர்’ மூலம் நிறைவேறி வருகிறது.
அதில் இடம் பெறும் செய்திகள் அன்றாடம் முஸ்லிம் லீக் இணைய தளத்தில் வெளியிடப்படுகின்றன.
எத்தனையோ இதழ்கள் வெளிவரும் இக்காலக் கட்டத்தில் எதிலும் வெளிவராத பல செய்திகள் மணிச்சுடரில் மட்டுமே இடம் பெறுகிறது இதன் தனிச் சிறப்பு.
நல்ல செய்திகளை நாள்தோறும் தரும் ‘மணிச்சுடர்’ சமுதாயத்தின் மனசாட்சியாக மலர்கிறது. இதற்கு ஒத்துழைப்பும் உதவியும் பெருகுகிறது என்பதை காட்டும் வகையில் அனைவரின் ஆதரவும் தேவை.
ஒவ்வொரு ஆண்டும் ‘மணிச்சுடர்’ ரமளான் சிறப்பு மலர் வெளியிடப்பட்டு அது அனைவராலும் ஆவணமாக பாதுகாக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ரமளான் சிறப்பு மலர் இதுவரை வெளியான மலர்களில் முத்திரை பதிக்கும் மலராக முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளையால் வெளியிடப்படவுள்ளது.
இம்மலருக்கு சமுதாய பெருந்தகைகளின் ஊக்கமும், சிந்தனை யாளர்களின் ஆக்கமும் தேவை என்பதோடு வணிக நிறுவனங்களின் விளம்பரங்கள் அவசியத் தேவை.
மலர் முன்கூட்டியே வெளிவர அவை உரிய காலத்தில் கிடைக்கப் பெற வேண்டும். இதற்கு உங்களின் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் நாடுகிறேன்.
நன்றி
தங்கள் அன்புள்ள
பேராசிரியர் கே.எம். காதர் முகைதீன்
ஆசிரியர் – ’மணிச்சுடர்’ நாளிதழ்

இம்மலரில் தங்களது ஆக்கங்களும் இடம் பெற விரும்பினால் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை
காயிதே மில்லத் மன்ஸில்
36 மரைக்காயர் லெப்பை தெரு
சென்னை 600 001
போன் : 044 2521 8786 / 25217890 / 2524 7863
ஃபேக்ஸ் : 044 – 2521 7786
செல் : 944 3839 401 / 996 281 5495 / 98 407 52313
மின்னஞ்சல் : info@muslimleaguetn.com
www.muslimleaguetn.com


விளம்பரக் கட்டணங்களை அமீரகத்தில் செலுத்த விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
முதுவை ஹிதாயத் :
050 51 96 433
muduvaihidayath@gmail.com
லால்பேட்டை அப்துல் ரஹ்மான், அபுதாபி
050 282 1852

Saturday, April 17, 2010

மணிச்சுடரை வளர்ப்போம் தோழா !

மணிச்சுடரை வளர்ப்போம் தோழா !

( இக்பால் ராஜா )

உத்தேசித் தபத்து லட்சம்

உருவாகும் உறுப்பி னர்கள்

மத்தாப்பாய் ஒளிசிந் தாமல்

மணிவிளக்காய் பிரகா சிப்போம் !

வித்தாகும் தலைமு றைக்கும்

வித்தகர்நம் முனீருல் மில்லத்

அத்தாட்சி வழங்கும் வண்ணம்

அறிவார்ந்த பணிதொ டர்வோம் !



’தரவரிசை இதழ்க ளுக்கு

தகுந்தவாறு இடம்அ மைக்க

அறமுரசு மணிச்சுடர்’ ராய் !

அடிச்சுவடு அமைந்த பாங்கு

திரண்டசமு தாயத் தில்நம்

தானைத்தலைவர் சிராஜுல் மில்லத்

அரவணைத்த நேர்த்தி கண்டு

அதிசயத்து வியந்தோம் தோழா !



’வீடுவீடாய் மணிச்சுடர்’ ரை

வழங்குகின்ற முகவர் மூலம்

வீடுசென்று விநியோ கித்தும்

வீறுகொண்டு வலிமை சேர்க்க

கூடுகின்ற பெரும்கூட் டங்கள்

கூவிவிற்க வழிவ குப்போம் !

ஏடுதந்த சிராஜுல் மில்லத்

எப்படிநாம் மறப்போம் தோழா ?



தாய்சபைக்கு காயிதெ மில்லத்

தலைமைஏற்ற மகத்து வத்தை

வாய்மணக்க சிராஜுல் மில்லத்

வழிமொழிந்து சொல்லக் கேட்டோம் !

வாய்மையுடன் முனீருல் மில்லத்

வழிநடத்தும் தலைமை எண்ணி

வாய்ப்பினிலே மணிச்சுடர்’ ரை

வம்சத்தில் வளர்போம் தோழா !





( மணிச்சுடர் 15/16 மார்ச் 2010 நாளிதழிலிருந்து )

Tuesday, January 12, 2010

காலமானார்

காலமானார்

மணிச்சுடர் நாளிதழ் அலுவலகப் பணியாளர் ஏ.ஆர். இக்பால் அஹமது தாயார் மஹ்மூதாபீ சென்னை ராயபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (10.01.2010) மாலை காலமானார். அவருக்கு வயது 70.

அன்னாரின் ஜனாஸா சென்னை ராயபுரம் பர்குந்தா மஸ்ஜிதில் இன்று பிற்பகல் ஜனாஸா தொழுகை நடத்தப் பட்டு திருவெற்றிய+ர் தாங்ஙள் மையவாடியில் நல்லடக் கம் செய்யப்பட்டது.

தகவலறிந்து தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகளும் மணிச்சுடர் நாளிதழ் பணியாளர்களும் நேரில் சென்று ஆறுதல் கூறி, அன்னாரின் மஃக்பிரத்திற்காக துஆ செய்தனர்.

Tuesday, November 24, 2009

மணிச்சுடர் முஸ்லிம் லீகின் ஒளிச்சுடர்! - கே.எம்.கே

மணிச்சுடர் முஸ்லிம் லீகின் ஒளிச்சுடர்! - கே.எம்.கே






மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்னும் பெயரில் நிறுவனம் உருவாக்கி, அதன் சார்பில் மணிச்சுடர்| நாளிதழை தலைவர் சிராஜுல் மீல்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமது சாஹிப் தொடர்ந்து நடத்தி வந்து, அதனை தமிழக இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பிரச்சார ஏடாகப் பரிணமிக்கச் செய்துள்ளார்கள்.


1987-ல் ஆரம்பமான மணிச்சுடர்| இத்தனை காலமாகப் பலப்பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிராஜுல் மில்லத் அவர்களின் கனவை தமிழக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நனவாக்கிக் கொண்டிருக்கிறது.


அப+ர்வ சகோதரர்கள் என்று வர்ணிக்கப்பட்ட டாக்டர் ஷேகு நூருத்தீன், ஹ{சைன் அப்துல் காதர், ஆலிம் செல்வன் ஷம்சுதீன் ஆகிய மூவரும் அவர்கள்தம் அருமைக் குடும்பத்தினரும், மறைந்த தேவிப்பட்டினம் பாருக் சாஹிப் போன்றவர்களும் மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருந்து உதவி வந்துள்ளனர்.


நிறுவனமும், மணிச்சுடரும் காலப்போக்கில் பல்வேறு சோதனைகளுக்கு ஆட்பட்டபோது, பங்குதாரர்களும், இயக்குநர்களும் 1996-ல் கூடி நிறுவனத்தையும், மணிச்சுடர் நாளேட்டையும் தலைவர் சிராஜுல் மில்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப், அன்றைய தமிழக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகிய இருவரிடத்தில் மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் மணிச்சுடர் சம்பந்தப்பட்ட அனைத்து முந்திய பிந்திய கொடுக்கல் வாங்கலுக்கும் இருவர் பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானித்து ஒப்படைத்தனர்.


தலைவர் சிராஜுல் மில்லத் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவரின் புதல்வரும், நிறுவன ஸ்தாபகர்களில் ஒருவருமாக இருந்த ஜனாப் ஏ. அப்துல் ஹக்கீம் அவர்களுடைய ஒத்துழைப்போடு இதுகாறும் நிறுவனமும், மணிச்சுடரும் தொடர்ந்து வரப் பாடுபட்டு வந்துள்ளோம். முஸ்லிம் லீகர்களின் முழு ஒத்துழைப்போடும், சமுதாயப் பிரமுகர்களின் ஆதரவோடும் மணிச்சுடர் நாளேடு இதுகாறும் நடந்து வந்திருக்கிறது.


ஜனாப் அப்துல் ஹக்கீம் அவர்கள் திடீரென மரணமெய்திய பிறகு நிறுவனத்தையும், மணிச்சுடரையும் தொடர்ந்து நடத்துவதற்கு புதிய இயக்குநர் குழுமம் உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே, பங்குதாரர்கள் மற்றும் இயக்குநர்கள் பொதுக்குழு கடந்த 6-11-09-ல் மூத்த இயக்குநரும், சமுதாயப் புரவலருமாகிய டாக்டர் ஷேகு நூருதீன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பழைய இயக்குநர்கள் குழுமம் முற்றிலுமாகக் கலைக்கப்பட்டு புதிய குழுமம் அமைத்துத் தீர்மானிக்கப்பட்டது. மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனப் பங்குதாரர்கள் யாவரும் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளைக்குத் தங்களின் பங்கு பத்திரங்களை நன்கொடையாக மாற்றிக் கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மலையாள நாளிதழ் ~சந்திரிகா|, கேரள மாநில முஸ்லிம் லீக் சார்பில் நடத்துவது போல மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தையும், மணிச்சுடர் நாளேட்டையும் முஸ்லிம் லீகர்களே ஏற்று நடத்துவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.. அதன் அடிப் படையில் புதிய இயக்குநர்கள் குழுமம் உருவாக்கப்பட்டிருக்கிறது.


மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை இயக்கும் இயக்குநர் குழுவில் கீழ்க்கண்டவர்கள் புதிய பொறுப்புக்களுடன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.


புதிய இயக்குநர்கள் குழுமத்தின் தலைவர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., மணிச்சுடர் நாளேட்டின் அச்சிட்டு வெளியிடுபவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், மணிச்சுடர் ஆசிரியர், முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், முஸ்லிம் லீக் பொருளாளர் வடக்குக் கோட்டையார் வி.எம். சைஃயது அஹமது, யு.ஏ.இ. காயிதெ மில்லத் பேரவைத் தலைவர் எம். லியாகத் அலி, மகளிர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். பாத்திமா முஸப்பர், முஸ்லிம் லீக் முன்னாள் பொதுச் செயலாளர் டாக்டர் எஸ்.ஏ. ஹக்கீம் சையத் சத்தார் ஆகியோர் இயக்குநர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.


முழுமையாக முஸ்லிம் லீக் சார்பில் பொறுப் பேற்றுள்ள இந்த புதிய இயக்குநர்கள் குழுமம் மணிச்சுடரை பிரபல்யமான பத்திரிகையாக உயர்த்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.


தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பிரைமரி முஸ்லிம் லீகிலும் மணிச்சுடர்| சென்றிட வேண்டும். தமிழகத்தல் உள்ள பதினோராயிரம் மஹல்லா ஜமாஅத்துகள் ஒவ் வொன்றுக்கும் மணிச்சுடர் செல்ல வேண்டும். தமிழகத்தில் உள்ள கல்விச் சாலைகள், அரபி கல்லூரிகள் மற்றும் சமுதாய நிறுவனங்கள் அனைத்திற்கும் மணிச்சுடர் சென்றிட வேண்டும்.


இதற்கு உங்களின் ஒத்துழைப்பும், உதவியும், ஆதரவு மிகமிகத் தேவை

Sunday, February 22, 2009

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தியாகிகளில் சிலர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தியாகிகளில் சிலர்
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தென் மண்டல மாநாடு கடந்த 24.01.2009 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் காலமெல்லாம் தாய்ச்சபைக்கு உழைத்து தாய்ச்சபையின் வரலாற்றிலும் ஊழியர்களின் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் தாய்ச்சபை தியாகிகளை நினைவு கூர்கிறோம்
எஸ்.எம். சரீப்
1967 வருடம் எஸ்.எம்.சரீப் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு இந்தியாவிற்குச் சொந்தம் என்பதையும் சேது சமுத்திரம் திட்டம் முக்கியத்துவம் பற்றி சேது மன்னர்களின் ஆவணங்களை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியவர்.
பசுங்கதிர் எம். கே. ஈ.மெளலானா
இந்த மாவட்டத்தின் முஸ்லிம் லீக் தலைவராக இருந்து செயலாற்றிய பசுங்கதிர் எம். கே. ஈ. மெளலானா அவர்கள் வரலாற்று ஆராய்ச்சி நூலானா சேதுவிலிருந்து சிந்து வரை என்ற அரசு பரிசு பெற்ற நூலைத் தந்தவர்.
எம்.எஸ்.அப்துல் ரஹீம்
1962 இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் மன்னர் சேதுபதியை எதிர்த்து முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிட்டவர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.அப்துல் ரஹீம்
டி.எஸ்.ஓ. அப்துல் காதர்
1981 டி.எஸ்.ஓ. அப்துல் காதர் மாவட்ட தலைவராகவும் கடலாடி சட்டமன்றத் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளராகவும் போட்டியிட்டவர்.
முஸ்லிம் லீக் இயக்கத்திற்காக உழைத்த இயக்க கண்மணிகள்
மெளலானா நூரி ஹஜ்ரத், முகவை எம்.எஸ். அப்துல்லா, முகவை செய்யதலி ஆலிம், மெளலவி முதுகுளத்தூர் சேட் ஆலிம், பெரியகுளம் தியாகி அப்துர் ரஹ்மான், வலிநோக்கம் சே.மு. முஹம்மது மீரா சாஹிப், கமுதி டி.எஸ்.டி. முஹம்மது தாவூது, தேவிபட்டிணம் எம்.எஸ்.எம். புஹாரி, ஏர்வாடி பி.எஸ்.கே. அப்துல் ரஹ்மான், எஸ்.தரைக்குடி கே.எம். நல்லகனி ராவுத்தர், எமனேஸ்வரம் எஸ்.துல்கருணை, பரமக்குடி எஸ்.அல்லா பிச்சை, எக்ககுடி ஏ.ராவுத்தர் பிள்ளை, அழகன் குளம் அப்துல் மஜீது, கீழக்கரை எஸ். ஐதுரூஸ், முகவை இ.ஏ. இபுராகீம், முகவை பி.நாகூர்கனி, கீழக்கரை எம். தாவூது, பார்த்திபனூர் பி.எஸ். அப்துல் ரஹ்மான், மண்டபம் பி.ஏ.எம் முஹைதீன் குப்பை மரைக்காயர், ஆர்.எஸ்.மங்களம் என்.ஏ. மெளலா முஹைதீன் ஆலிம், திருப்பாலைக்குடி சல்மான் பாரீஸ், என்மனங்கொண்டான் ஜே. காதர் முகைதீன், தொண்டி அப்துஸ் ஸலாம், கீழக்கரை ஏ.எம்.எம்.சாகுல் ஹமீது, வாலிநோக்கம் பி.முஹம்மது இப்னு செய்யது, வாலிநோக்கம் பி.என்.ஏ. பீர் முஹம்மது சம்மாட்டி, சாயல்குடி எஸ்.என்.சந்தனமீரா, சித்தார்கோட்டை எம்.எஸ்.எம். வருசை களஞ்சியம், ஆர். எஸ்.மங்களம் க.சீ.அப்துல் முத்தலிபு, மண்டபம் எஸ்.முஹைதீன் பக்கீர், தேவிபட்டிணம் சுல்தான், முகவை சே.ரா.மீராசா ராவுத்தர், முகவை வி.எஸ்.சீனி மதார், பனைக்குளம் முஹம்மது முபாரக் ஆலிம், முகவை கே.கே.எஸ்.ஏ. பஜ்ருத்தீன், கீழக்கரை ஏ.கே.எஸ்.கபீர், தேவிபட்டிணம் செய்யது நூகு, உமர் நகர் அப்துல் ஸமது, எமனேஸ்வரம் முகம்மது இக்பால், மண்டபம் எம்.அப்துல் மஜீத்கான், மண்டபம் எஸ்.எம்.எம்.எஸ். மீராசா மரைக்காயர்.

நன்றி : மணிச்சுடர் நாளிதழ்