Friday, July 30, 2010

கோவை சிறைக்கு மீண்டும் அன்சாரி மாற்றம் ! சிறைத்துறை அமைச்சர் உறுதி !!

கோவை சிறைக்கு மீண்டும் அன்சாரி மாற்றம் ! சிறைத்துறை அமைச்சர் உறுதி !!
முஸ்லிம் லீக்கின் முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு !!!

சென்னை : கோவை சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்ட ஆயுள் கைதி அன்சாரி மீண்டும் கோவை சிறைக்கு மாற்ற சிறைத்துறை அமைச்சர் அவர்கள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், காயிதேமில்லத் பேரவையின் அகில உலக ஒருங்கிணைப்பாளருமான எம். அப்துல் ரஹ்மான் அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
இதனையடுத்து ஓரிரு நாளில் அன்சாரி மீண்டும் கோவை சிறைக்கு மாற்றப்படுவார் எனத் தெரிகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் கோவை சிறையில் உள்ள 52 ஆயுள் கைதிகளும் பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்படலாம் என்ற அச்சம் நிலவியது. இதனையடுத்து அக்குடும்பத்தாரின் கோரிக்கையினையடுத்து சிறைத்துறை ஐ.ஜி. யாக இருந்த திருமிகு ஷியாம் சுந்தர் அவர்களை வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மான் சந்தித்து இது போன்ற மாற்றம் நிகழாத சூழ்நிலையினை ஏற்படுத்தினார்.

( தற்பொழுது ஷியாம் சுந்தர் அவர்கள் சிறைத்துறை ஐ.ஜி. பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுவிட்டார் )

சிறைத்துறை அமைச்சர் அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வீணாக ஆர்ப்பாட்டம், போராட்டம் ஏதும் நடத்தாமல் முறையாக அணுகி சிறைக்கைதிகளின் கோரிக்கையினை அன்போடும், தகுந்த முறையிலும் உரிய இடத்தில் சேர்க்கும் முறை வரவேற்கத்தக்கது என்றார்

அப்துல் ர‌ஹ்மான் எம்.பி.யின் ப‌ணிக‌ளைப் பாராட்டும் தி ஹிந்து நாளித‌ழ் மூத்த‌ உத‌வி ஆசிரிய‌ர்

அப்துல் ர‌ஹ்மான் எம்.பி.யின் ப‌ணிக‌ளைப் பாராட்டும் தி ஹிந்து நாளித‌ழ் மூத்த‌ உத‌வி ஆசிரிய‌ர்

syedmuthahar@thehindu.co.in
dateFri, Jul 30, 2010 at 5:32 PM

Dear Hidayath Sahib, Assalamu Alaikum.

I happened to hear the speeches made by Mr. Abdul Rahman, MP, in the Lok Sabh on a few occsion live in the Lok Sabha TV. He has done extremely well in presenting his points on the given subject as an experienced Parliamentarian. Kindly request your friends to view the Lok Sabha TV whenever the Parliament session is in progress.
Vassalam.

Syed Muthahar / Sr. Assistant Editor / The Hindu / Tiruchi.




AbdulSubhan AbdulRaguf (ADNOC MKT)
dateFri, Jul 30, 2010 at 5:22 PM

Assalamu Alaikum.
Dear Brothers,

Whoever raises the question, they have to use their wisdom. Whatever capacity Br. Abdul Rahman MP holds, he uses its maximum objectivity to envisage the message of the whole community in the Parliament which hitherto other muslim MPs of various parties were not doing at any number of times. Air-India Express budget airlines from Abu Dhabi/Dubai to Tiruchirappalli/Chennai contributed to the public due to the strenuous efforts of IUML gulf members and enlightened the issue in the parliament by Bro. Khader Moideen, Ex-MP.

I request the brothers to give positive comments instead of raising negative questions and ridiculing the integrity of the beloved Br. Abdul Rahman, MP.

Wassalam,

A.S. Abdul Rauf ., M.A. (Pub. Admin.)
Gas &Sulphur Division
Marketing & Refining Directorate
Abu Dhabi National Oil Company (ADNOC)
P.O. Box 898, ABU DHABI – U.A.E
TEL : 00971-2-6023983 (Direct)

இந்திய முஸ்லிம்களின் வரலாற்று தொடர்ச்சியே முஸ்லிம் லீக் - அதிராம்பட்டினத்தில் பொதுச் செயலாளர் பேச்சு

இந்திய முஸ்லிம்களின் வரலாற்று தொடர்ச்சியே முஸ்லிம் லீக் - அதிராம்பட்டினத்தில் பொதுச் செயலாளர் பேச்சு

இந்திய முஸ்லிம்களின் வரலாற்று தொடர்ச்சியே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று அதிராம்பட்டி னத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேசினார். மேலும் அவர் கூறியதா வது:

வரலாற்று சிறப்புமிக்க அதிராம்பட்டினத்தில் உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை சுதந்திரத்திற்குப் பிறகு கண்ணியத் திற்குரிய காயிதெ மில்லத் 3 லட்சியத்திற்காக தோற்று வித்தார்கள்.

பல்வேறு மொழி, இனம் என வேறுபாடுகள் நிறைந்த இந்நாட்டில் தேசிய ஒற்றுமைக்காகவும், ஒருமைபாட்டிற்காகவும் பாடுபடுதல், சமய நல்லிணக்கம், கலாச்சாரத் தன்மை ஆகியவற்றை காப்பாற்றுவதற்காக முஸ்லிம் லீகை தோற்றுவித்தார்.
இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தில் பல் லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். குழப்ப மான சூழ்நிலையில் காயிதெ மில்லத் அவர்கள் முஸ்லிம்களை ஒருங்கிணைத்தார்.
சுதந்திரத்திற்குப்பின் காயிதெ மில்லத் அவர்கள் பாராளுமன்ற உறுப்பின ராக இருந்தபோது இந் தியா-சீனா போர் ஏற்பட்டி ருந்தது. அப்போது அவர் தனது உரையில்,
இந்திய நாட்டிற்காக எனது மகனை போருக்கு அனுப்ப தயாராக இருக்கி றேன் என்று கூறினார். இது இந்திய முஸ்லிம்களின் தேசப் பற்றை நிரூபிப்பதாக இருந்தது.
கஷ்மீர் பிரச்சினையை பொறுத்தவரை முஸ்லிம் லீகின் நிலைப்பாடு தெளி வாக உள்ளது. கஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடி யாத ஒரு பகுதி என்பது முஸ்லிம் லீகின் நிலைப்பா டாகும் என்று குறிப்பிட் டார். மேலும் முஸ்லிம் லீக் தேசிய ஒருமைப்பாட்டை தொடர்ந்து காத்து வருகி றது. இ.அஹமது அவர்கள் முஸ்லிம் லீகின் நிலைப் பாட்டை பற்றி ஐ.நா.சபை யில் உரையாற்றியபோது, இந்திய முஸ்லிம்கள் 1400 வருடங்களாக இஸ் லாத்தை பின்பற்றி வரு கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே இந்தியாவிற்குள் இஸ்லாம் வந்தது. எனவே, இங்கிருக் கும் முஸ்லிம்கள் இந்திய நாட்டின் மைந்தர்களாவர் என்று கூறினார்.
மேலும், இ. அஹமது அவர்கள் கடந்தமுறை வெளியுறவுத்துறை அமைச் சராக இருந்தபோது, முஸ்லிம் லீகின் தலைவர்கள் தொடர்ந்து நாட்டுக்காக பாடுபட்டு தொடர்ந்து ஒருமைப்பாட்டை காத்து வருகின்றனர்.
சமய நல்லிணக்கம்
சமய நல்லிணக்கம்- இது முஸ்லிம் லீகின் இரண்டா வது குறிக்கோளாகும்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தின் போது இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மக்களை அமைதிப்படுத்தியது.
மீனாட்சிபுரத்தில் தாழ்த் தப்பட்ட மக்கள் இஸ்லாத் தால் கவரப்பட்டு அதனை ஏற்றுக் கொண்டனர். இதனை பயன்படுத்தி இந்துத்துவா அமைப்புகள் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தனர்.
இந்திய ய+னியன் முஸ்லிம்லீக் அந்த சூழ் நிலையில் முஸ்லிம்களை அமைதிப்படுத்தி சமய நல்லிணக்கம் காத்தது.
அதேபோல, டிசம்பர் 6 சங்பரிவாரால் பாபர் மஸ் ஜித் இடிக்கப்பட்ட போதும் இந்தியா முழுவ தும் கலவரம் வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட னர். ஆனால், முஸ்லிம் லீக் வலுவாக உள்ள கேரளா மற்றும் தமிழகதில் இந்த கலவரம் அமைதிப்படுத் தப்பட்டது. இந்த மாநிலங் களில் முஸ்லிம்களுக்கு பெருமளவு பாதிப்பு ஏற் படாமல் காக்கப்பட்டது. இதனை செய்தது முஸ்லிம் லீக்.
பல்வேறு அமைப்புகள் பாபர் மஸ்ஜிதை மீட்க போராட்டங்களை அறி வித்தன. ஆனால் யாராலும் அதனை மீட்க முடிய வில்லை. ஆனால், முஸ்லிம் லீக் கேரள மாநில தலை வர் ஷிஹாப் தங்ஙள் அவர் கள் கேரள முஸ்லிம்களை அமைதிப்படுத்தியதோடு ஒரு பள்ளிக்கு பதிலாக இதுவரை 100 பள்ளிகளை கட்டிக் கொடுத்துள்ளார். இதுவே முஸ்லிம் லீகின் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாகும்.
சென்னையில் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாகிப் முதல்வர் கலைஞர் உட்பட பல தலைவர்களை அழைத்து அமைதி கூட் டத்தை நடத்தினார்.
மேலும் தமிழகத்திலும் பதற்றமான சூழ்நிலையில் திருச்சியில் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் காவல்துறை வாகனத்தில் அமர்ந்துகொண்டு மக் களை அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும், பல்வேறு தரப்பு மக்களையும் அழைத்து அமைதி நட வடிக்கைகளை முஸ்லிம் லீக் மேற்கொண்டது. பல்வேறு அமைப்புகள் ஒவ்வொரு வருடமும் நாங்கள் பாபர் மஸ்ஜிதை மீட்கிறோம் என்று சொல்லி இதுவரை ஆயி ரக்கணக்கான போராட் டங்களை நடத்தி விட்டன. பல இலட்சக்கணக்கான ரூபாய்களை மக்களிடம் வசூல் செய்தும் விட்டன. அவர்கள் இதுவரை செலவழித்த தொகையைக் கொண்டு புதிதாக பத்து பள்ளிகளை கட்டியிருக் கலாம்.
ஆனால், முஸ்லிம் லீக் தொடர்ந்து ஆக்கப்ப+ர்வ பணிகளை செய்து வருகி றது. முஸ்லிம் லீகின் உறுப் பினர்கள் கேரள சட்ட மன்றத்தில் அனைத்து உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து பாபர் மஸ்ஜித் விஷயத்தில் மத்திய அரசை வலியுறுத்தும் தீர் மானம் கொண்டு வந்தனர்.
இதனை உச்சநீதி மன்றமே பிரதமரிடம் வலியுறுத்தியது. இது போன்று தொடர்ந்து சட்ட அவைகளில் குரல் எழுப்பி வருவது முஸ்லிம் லீக் மட்டுமே.
மேலும், டிசம்பர் 6 அன்று மற்ற அமைப்புகள் போராட்டங்களுக்கு முஸ்லிம்களை அழைக் கின்றனர் பிற சமூக மக்கள் அந்நியப்படுத்தப்படுகின்றனர்.
ஆனால் முஸ்லிம் லீக் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று சமூக நல்லிணக்க கூட்டங்களை நடத்தி அனைத்து மதத்த வர்களையும் அழைத்து பாபர் மஸ்ஜிதிற்காக குரல் எழுப்பி வருகிறது.
கலாச்சார தனித்தன்மை
முஸ்லிம் லீகின் முக்கிய கொள்கையான சிறு பான்மை முஸ்லிம்களின் கலாச்சார தனித்தன் மையை காக்க தொடர்ந்து போராடி வருகிறது. தனி காலாச்சாரம் என்பது முஸ்லிம்கள் தொப்பி அணிவது, தாடி வைப்பது, இறந்தவர்களை அடக்கும் முறை, தனி சொத்துரிமை சட்டங்கள் உள்ளிட்ட ஷரீஅத் சட்டங்களாகும். இதனை காக்க முஸ்லிம் லீக் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.
ஒரு சமயம் முஸ்லிம் களின் சடலங்களை எரிக்க வேண்டும் என்ற சட்டம் முன்வரைவு விவாதத்திற்கு வந்தபோது அதனை முஸ்லிம் லீக் கடுமையாக எதிர்த்தது. தொடர்ந்து போராடிஷரீஅத் சட்டத்தை காத்தது.
1955ல் ஷரீஅத் இயக் கத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. அதன் மூலம் முஸ்லிம்களின் ஷரீ அத் பாதுகாப்பு சட்டம் தொடர்ந்து பாதுகாக்கப் பட்டு வருகிறது.
இதேபோல் ஒலிப் பெருக்கியில் பாங்கு சொல் வதும் விவாதத்திற்கு வந் தது. இதனை எதிர்த்து முஸ்லிம் லீக் குரல் கொடுத்து ஒலிபெருக்கி யின் மூலம் பாங்கு சொல் வதை உறுதிப்படுத்தியது.
கல்விச் சேவையில் முஸ்லிம் லீக்
கல்விச் சேவையில் முஸ்லிம் லீக் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. காயிதெ மில்லத் அவர் களின் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் பல முஸ்லிம் கல்லூரிகள் ஏற்படுத்தப் பட்டன.
உதாரணமாக, சென்னை புதுக்கல்லூரி, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, சதக் கல்லூரி உள் ளிட்ட கல்லூரிகள் ஏற் படுத்தப்பட்டன. இதேபோல் கேரளாவி லும் பல கல்லூரிகள் முஸ் லிம் லீகினால் ஏற்படுத்தப் பட்டு தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.
காயிதெ மில்லத்தை தொடர்ந்து சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாகிப் புதுக் கல்லூரி தலை வர் மியாசி ஓமியத் போன்ற முஸ்லிம்களின் கல்வி ஸ்தாபனங்களை ஒருங்கிணைக்கும் முயற்சி களையும், இன்றைய தலை வர் பேராசிரியர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி யில் ஏழை மாணவர் களுக்கு விடுதி மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கியதும் முஸ்லிம் லீக் தலைவர்கள் கல்விக்காக செய்த வரலாற்று செய்தி களாகும்.
இட ஒதுக்கீடு
முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு களத்தில் முஸ்லிம் லீகின் பணி மிக முக்கியமானது.
முஸ்லிம்களில் பல் வேறு பிரிவினர்களாக இருந்த தக்னி, லெப்பை, மரைக்காயர் உள்ளிட்ட பிரிவுகளை ஒரே பிற்படுத் தப்பட்ட இனத்தில் சேர்த்து இடஒதுக்கீடு சிக்கலை தீர்த்துவைத்தது.
மேலும் தமிழக அரசின் சமச்சீர் கல்வி முறையில் உர்தூ, தெலுங்கு மொழி சிறுபான்மையினர் பாதிக் கப்படுவதாக கருத்து எழுந் துள்ளது. அதனை எதிர்த்து முஸ்லிம் லீக் குரல் எழுப்பி வருகிறது.
மேலும், பேராசிரியர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களையும் ஒன்றி னைத்து முஸ்லிம்களின் நிலை பற்றி அறிய ஒரு கமிட்டியை உருவாக்க வேண்டும் என்று பிரதமரி டம் வலியுறுத்தினார். அதன் அடிப்படையி லேயே சச்சார் கமிட்டி மற்றும் மிஸ்ரா கமிட்டி கள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும், 62 வருட சுதந் திர இந்தியாவில் இப் போதுதான் சிறுபான்மை நல அமைச்சகம் முஸ்லிம் லீகின் முயற்சியால் ஏற் படுத்தப்பட்டது.
2010-11 வருடத்திற்கான சிறுபான்மை மாணவர் களுக்கான கல்வி ஒதுக்கீடு 2,600 கோடியாக மத்திய அரசு நிர்ணயம் செய்துள் ளது. இதுவும் முஸ்லிம் லீகின் சாதனையாகும்.
மேற்கூறிய தகவல் அனைத்தும் சட்டமன்ற பாராளுமன்ற கஜட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் ஒரு தெளிவற்ற அரசியல் நிலையை எடுத்து வருகின் றன. காயல்பட்டினத்தில் தி.மு.க., வுக்கு ஆதரவும், சென்னை துறைமுகத்தில் எதிர்ப்பும் காட்டி தெளி வற்ற அரசியல் நிலையை எடுத்து வருகின்றன.
த.மு.மு.க. என்ற அமைப்பு இப்போது பல பிரிவுகளாக பிரிந்து ம.ம.க. என்று அரசியல் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், எஸ்.டி.பி.ஐ. என்ற அமைப்பும் புதிதாக தோன்றியுள்ளது. இது மனித நீதி பாசறை என்றும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்றும் இப் போது எஸ்.டி.பி.ஐ., என்று அடிக்கடி பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வமைப்புகளில் முஸ் லிம் என்ற பெயர் இல்லை. புதிய சட்ப்படி யாரும் சாதி சமயங்களின் பெயரை வைக்க முடியாது. துவங் கிய காலம் முதல் முஸ்லிம் என்ற பெயரிலும் இச்ச முதாயத்திற்கு நாம் பாடு பவது இறைவன் நமக்கு கொடுத்த நஃமத்-அருட் கொடை. பெயரையே தேர்வு செய்ய முடியாத அமைப்புகள் மக்களுக்கு எப்படி நல்லது செய்ய முடியும்?.
மேலும் டி.என்.டிஜே. 15 லட்சம் முஸ்லிம்களை தீவுத்திடலிலே கூட்டுவதாக அறிவித்தது. தீவுத்திடலில் சில ஆயிரம் மக்களுக்கு மேல் அமர முடியாது.
தமுமுக பணபிரச்சினை யின் காரணமாகவே டி. என்.டி.ஜே அமைப்பு உரு வானது. எங்கேயாவது பணத்திற்காக முஸ்லிம் லீக் பிரச்சினை செய்வதை காட்டமுடியுமா?
மேலும் ம.ம.க. போயஸ் கார்டனும் கோபலாபுர மும் எங்களை தேடி வர வேண்டும் என்று கூறினர். பிறகு, அவர்களால் நடிகர் சரத்குமாரைத்தான் வழிய சென்று பார்க்க முடிந்தது.. மேலும் பாராளுமன்ற தேர் தலில் படுதோல்வியையும் சந்தித்தனர்.
ஆனால், முஸ்லிம் லீக் இதுவரை தெளிவான அர சியல் முடிவுகளை எடுத்து வருகிறது. தனது முடிவை அடிக்கடி மாற்றும் பழக் கம் முஸ்லிம் லீகிற்கு இல்லை.
தீவுத்திடலிலே இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மணி விழா மாநாடு நடந்தபோது தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தி-மு.கவிற்கு இணையான கூட்டம் இது என்று புகழாரம் சூட்டி னார். எனவே, மாற்று கட்சியனரும் புகழும் இயக்கமாகவே முஸ்லிம் லீக் இருந்து வருகிறது.
எனவே, பல்வேறு அமைப்பினரும் அரசியல் ரீதியாக ஒரே தலைமையின் கீழ் இணைந்து முஸ்லிம் லீகை பலப்படுத்தவேண் டும் என்று கேட்டுக் கௌ;கிறேன். மேலும், ஜமாஅத்தார் கள் மத்திய மாநில அரசுகளின் சலுகை களை அறிந்து அதனை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
இவ்வாறு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அப+பக்கர் உரையாற்றினார்.

பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ருக்கு இர‌ண்டு கேள்விக‌ள் என்று உலாவி வ‌ரும் மின்ன‌ஞ்ச‌லுக்கு எம்.அப்துல் ர‌ஹ்மான் எம்.பி. அவ‌ர்க‌ள் அளித்துள்ள‌ ப‌தில் இதோ

பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ருக்கு இர‌ண்டு கேள்விக‌ள் என்று உலாவி வ‌ரும் மின்ன‌ஞ்ச‌லுக்கு எம்.அப்துல் ர‌ஹ்மான் எம்.பி. அவ‌ர்க‌ள் அளித்துள்ள‌ ப‌தில் இதோ



அன்புச் ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு

அஸ்ஸ‌லாமு அலைக்கும் வ‌ர‌ஹ்

எந்த‌க் கேள்வியாக‌ இருந்தாலும் அது ச‌முதாய‌த்திற்குப் ப‌ல‌ன‌ளிக்கும் வ‌ண்ண‌ம் இருப்பின் அது வர‌வேற்க‌த்த‌க்க‌தே. அது உண்மையில் அத‌ன் நோக்க‌த்தை தெளிவுப‌டுத்தும். ஆனால் இங்கு ச‌கோத‌ர‌ர் கேட்டுள்ள‌ கேள்வி பாராளும‌ன்ற‌த்தில் என‌து இருக்கை என்ன‌வென்று. இது ச‌முதாய‌த்திற்கு ப‌ல‌ன‌ளிக்க‌க் கூடிய‌ கேள்வியா ? இல்லை யாருக்கும் தெரியாத‌ ஒன்றா ? இக்கேள்வி கேட்டு கிண்ட‌ல் செய்வ‌த‌ன் மூல‌ம் ச‌கோத‌ர‌ர் த‌ன‌து த‌குதியை வெளிப்ப‌டுத்தி இருக்கிறார் என்று தான் நினைக்க‌ முடிகிற‌து. இதுபோன்ற‌ கேள்வி கேட்டு அவ‌ர் ம‌கிழ்ச்சி பெற‌க்கூடிய‌வ‌ரென்றால் என‌து ப‌தில் இதோ :

எந்த‌ வ‌ழியான‌ பிரதிநிதித்துவ‌ம் என்ப‌தை விட‌ ந‌ம‌து ச‌முதாய‌த்தின் ப‌ங்களிப்பு பாராளும‌ன்ற‌த்தில் இருந்திட‌ வேண்டும் என்ப‌து தான் எந்த‌ ஒரு சாமான்ய‌ முஸ்லிமின் உண‌ர்வாக‌ இருக்க‌ முடியும். என‌து போட்டி ச‌முதாய‌ ந‌ல‌ன் க‌ருதி இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக்கினால் தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌ ஒன்று. ஒரு குறிப்பிட்ட‌ சின்ன‌த்தில் நின்று வெற்றி பெற்ற‌தால் திமுக‌ வின் உறுப்பின‌ர் என்று கூற‌ விரும்புகிறீர்க‌ள். இதுபோன்ற‌ கேள்விக‌ளை ச‌கோத‌ர‌ர்க‌ள் மீண்டும் மீண்டும் கேட்ப‌தை விட்டு விட்டு ச‌முதாய‌த்திற்கு ப‌ல‌ன‌ளிக்கும் வ‌ண்ண‌ம் ஆரோக்ய‌மான‌ க‌ருத்துக்க‌ளை முன்வைத்தால் வ‌ர‌வேற்கிறேன். அறிவு‌பூர்வ‌மான‌ ஆலோச‌னைக‌ளை வ‌ர‌வேற்கிறேன்.

மேலும் க‌ட‌ந்த‌ ஒரு வ‌ருட‌ கால‌மாக‌ என‌து பாராளும‌ன்ற‌ உரைக‌ளை கேட்டிருப்பீர்க‌ளேயானால் என‌து பாராளும‌ன்ற‌ ப‌ங்க‌ளிப்பின் மூல‌ம் ச‌முதாய‌த்தின் குர‌லாக‌ எந்த‌வ‌கையில் எல்லாம் குர‌ல் எழுப்ப‌ இய‌லுமோ அவ்வாறெல்லாம் எழுப்பியுள்ளேன். இத‌ற்கு யாருடைய‌ இடையூரும் எந்த‌வித‌த்திலும் கிடையாது. மென்மேலும் ந‌ல்ல் ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் ந‌டைபெற‌ துஆச் செய்திட‌வும். நீங்க‌ள் ஒரு ந‌ல்ல முஸ்லிம் ச‌கோத‌ரராக‌ இருந்தால் ஆரோக்ய‌மான‌ க‌ருத்துக்க‌ளையும், அறிவுரைக‌ளையும் கொண்டு வாருங்க‌ள். இதுபோன்ற‌ ச‌முதாய‌த்திற்குப் ப‌ல‌னில்லாத‌ க‌ருத்துக்க‌ளைத் த‌விர்த்துக்கொள்ளுங்க‌ள்.

மேலும் என‌து மூன் டிவி க‌ல‌ந்துரையாட‌ல் சாதி வாரி ம‌க்க‌ள் தொகைக் க‌ண‌க்கெடுப்பு குறித்த‌தே. இட‌ஒதுக்கீடு குறித்த‌த‌ல்ல‌. ச‌கோத‌ர‌ர் கேட்ட‌ கேள்விக்கான‌ பதில் இதோ :

நீதிய‌ர‌ச‌ர் ரெங்க‌நாத் மிஸ்ரா க‌மிஷ‌ன் முஸ்லிம்க‌ளுக்கு ப‌ரிந்துரைத்துள்ள‌ ப‌த்து ச‌த‌வீத‌ இட‌ ஒதுக்கீட்டிற்கு சென்னையில் ந‌டைபெற்ற‌ க‌மிஷ‌னின்ல் க‌ல‌ந்துரையாட‌லில் முஸ்லிம் லீக்கின் எழுத்துப்பூர்வ‌ வேண்டுகோளும் ஒரு பிர‌தான‌ கார‌ண‌ம் என்ப‌த‌னை இங்கு குறிப்பிட‌ விரும்புகிறேன். பார்லிமெண்டிற்கு உள்ளும், வெளியும் என‌து க‌ருத்துக்க‌ளை கேட்டிருப்பீர்க‌ளேயானால் இட‌ ஒதுக்கீடு குறித்து என‌து ப‌ங்க‌ளிப்பு தெரிய‌வ‌ரும். பாராளும‌ன்ற‌ தொட‌ரில் இக்க‌மிஷ‌னின் ப‌ரிந்துரை விவாவ‌த‌த்திற்கு வ‌ரும் போது என‌து உரையினைக் காண‌ காத்திருங்க‌ள் இன்ஷா அல்லாஹ்.

எம். அப்துல் ர‌ஹ்மான் எம்.பி.
புதுதில்லியிருந்து............


2010/7/29 abdul rahman

Assalamu Alaikum

Reply to those two questions:


1) If the question is not known to any one and there is a curiosity on the basis of community welfare, such question can be welcome. It will serve the real purpose. But here our brother has asked to redicule my placement in parliament which shows the nature of his quality. If he wants to enjoy by asking such question, please note that this is my reply:

As even an ordinary muslim realises that our ways of placement in Parliament is so important than any other creteria to represent us, my contest has been wisefully determined by Muslim League irrespective of symbol concerned matter. As per symbol, your intention of rediculing can be achieved to say as DMK, but try to come forward with healthy comments and advices which will be beneficial to the society.

In addition, try to encourage by referring to my speeches and involvements in favour of our community during the past one year service after I became MP which clearly proved that my placement in parliament alone is our significant creteria without having anyone's pressure in exercising our mission. Please do Dua for further more good events to happen. If you are a good muslim, please try to come up with far-sighted vision and healthy mission by avoiding such rediculous comment.

2) My interview in Moon TV was on the title of 'Caste based Census' and not on 'Reservation'. As the question was asked, this is my reply:

Please note that Renganath Misra Commission Report's recommendation of providing 10% reservation to Muslim community itself was Muslim League's specific written request to Commission's consideration during its interaction event in Chennai. Focussing my part on this issue, please refer to all my speeches in and outside the parliament. In addition, please wait for my participation in the debate when it comes in parliament.

Thanks.

Abdul Rahman


---------- Forwarded message ----------
From: iq bal
Date: 2010/7/28
Subject: Fw: [TMMKGULF] பாராளுமன்ற உறுப்பினர் சகோ.அப்துல் ரஹ்மானுக்கு 2 கேள்விகள்
To: muduvai idayath





.SheiqB


----- Forwarded Message ----
From: AbuFaaiz

To: tamilmuslimbrothers ; tmmkgulf ; Tmmk
Sent: Wed, 28 July, 2010 3:06:55 PM

Subject: [TMMKGULF] பாராளுமன்ற உறுப்பினர் சகோ.அப்துல் ரஹ்மானுக்கு 2 கேள்விகள்

Assalamu Alaikkum

சென்ற வெள்ளிக் கிழமை சகோ.அப்துல் ரஹ்மான் (பாராளு மன்ற உறுப்பினர்) அவர்கள் மூன் தொலைக்காட்சியில் இட ஒதுக்கீடு பற்றிய ஒரு கலந்துரையாடல் நடை பெற்றது. நேயர்களும் கேள்வி கேட்கலாம் என்று ஒரு தொலைபேசி நம்பர் இருந்தது. நாம் அந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு 2 கேள்விகள் கேட்டோம். ஆனால் அந்த மாதிரி கேள்விகள் கேட்கப் படாது என்று கூறிவிட்டார்கள். அதே கேள்வியை வைக்கின்றோம்.

1. நீங்கள் தற்போது திமுக எம்.பியா? முஸ்லிம் லீக் எம்.பியா?

2. தற்போதுள்ள நிலையில் (அந்த நிலையை அவர் தான் சொல்லியிருப்பார்) முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு கிடைக்க என்ன செய்துள்ளீர்கள்? என்ன செய்யப் போகிறீர்கள்?

கடலூர் மாவட்டத் தலைவருக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை வாழ்த்து!

கடலூர் மாவட்டத் தலைவருக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை வாழ்த்து!

கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஞாயிற்றுக் கிழமை சிதம்பரம் நகரில் நடைபெற்றது.மாநிலத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத்,பொதுச் செயலாள‌ர் கே.ஏ.எம்.அபூபக்கர்,மாநிலச் செயலாள‌ர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இத்தேர்தலில்,மாவட்டத் தலைவராக லால்பேட்டை அல்ஹாஜ் கே.ஏ.அமானுல்லாஹ்,செயலாள‌ராக விருதாச்சலம் ஏ.சுக்கூர்,பொருளாள‌ராக பி.முட்லூர் அப்துல் கப்பார் உள்ளிட்ட மாவட்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழுவில் பங்கேற்க்க தாயகம் சென்றுள்ளஅமீரக காயிதெ மில்லத் பேரவையின் பொதுச் செயலாள‌ர் ஏ.முஹம்மது தாஹா
கடலூர் மாவட்டத் தலைவர் அமானுல்லாவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்தினார்.இச்சந்திப்பின் போது மாநிலச் செயலாள‌ர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் உடனிருந்தார்.

கடலூர் மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை ஊட‌க‌த்துறை செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த் ம‌ற்றும் அபுதாபி மண்டலச் செயலாள‌ர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tuesday, July 20, 2010

ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்| : முஸ்லிம் லீக் தமிழக அரசுக்கு கோரிக்கை

ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்| : முஸ்லிம் லீக் தமிழக அரசுக்கு கோரிக்கை

காஞ்சிபுரத்தில் 17-07-2010 அன்று மாநிலத் தலை வரும், தேசியப் பொதுச் செயலாளருமான பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற காஞ்சிபுரம் மாவட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அவசர பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வரு மாறு-
1. உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டினை உலக வரலாற்றில் புதிய சாதனை படைக்கும் வகை யில் நடத்திய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்க ளுக்கும் இப் பொதுக்குழு நன் றியையும், பாராட்டுக் களையும் தெரிவித்துக் கொள்கிறது.
2. தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்க ளால் அமையப் பெற வுள்ள தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம் மொழிச் சங்கத்தில் அரபுத் தமிழ் குறித்த ஆய்வு அமர்வும் ஏற்படுத்திட தமிழக அரசை இப் பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
3. புனித ரமளான் மாதத்தில் வழக்கம்போல நோன்புக்கஞ்சி காய்ச்சு வதற்கு மானிய விலையில் பச்சரிசி வழங்க ஆவன செய்ய வேண்டுமென்று தமிழக அரசை இப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
இதுபோல நோன்புக் கஞ்சி காய்ச்சுவதற்கு வீட்டு உபயோகத்திற்கு தரப்படுவ தைப் போல ஒரு மாதத் திற்கு மட்டும் மானிய விலையில் எரிவாயு கியாஸ் இணைப்பு வழங்க வேண் டும் எனவும் தமிழக அரசை இப் பொதுக்குழு கேட்டுக் கொள்வதோடு தமிழக முதல்வரும், தமிழக துணை முதல்வரும் சிறப்பு கவனம் செலுத்திட இப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
4. தமிழகம் முழுவதும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பேரியக்கத்திற்கு 10 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்கும் முயற்சிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் என்றும் போல் துணை நிற்கும் என்பதை தெரி வித்துக் கொள்வதோடு வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் மாவட்டத்தில் உள்ள எல்லா ஊர்களிலும் பிரைமரிகளை அமைக்க இப் பொதுக்குழு உறுதி கொள்கிறது.

Thursday, July 15, 2010

சிறுபான்மை மொழிகளை பாதிக்கும் வகையில் தமிழக அரசின் செயல்பாடு இருக்காது|

சிறுபான்மை மொழிகளை பாதிக்கும் வகையில் தமிழக அரசின் செயல்பாடு இருக்காது|
மொழியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர் முதல்வர் கலைஞர்


சென்னை, ஜூலை 9-

மொழிகளையும், அதன் முக்கியத்துவத்தையும், சிறப்புக்களையும் நன்கு அறிந்தவர் கலைஞர். மொழியின் முக்கியத்து வத்தை உணர்ந்ததன் காரணமாகத்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை மிகச் சிறப்பாக அவர் நடத்திக் காட்டியுள் ளார். திராவிட முன்னேற் றக் கழக அரசு எப்பொழு துமே சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களின் முன் னேற்றத்திலும் அக்கறை கொண்ட அரசா கவே திகழ்ந்து வருகிறது. உர்தூ உள்ளிட்ட சிறுபான்மை மொழிகளை பாதிக்கும் வகையில் தமிழக அரசின் எந்த செயல்பாடும் அமை யாது என்று நம்புகிறேன் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய இணை யமைச்சருமான இ.அஹமது தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாறு குறித்த நஜ்ரிய்யாதி ஸபர் ஹராஜாஜி ஹல்சே சாதாப் மஹல் தக்| என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று (10-07-2010) சென்னை எழும்பூரில் உள்ள ஹோட் டல் மெரீனா டவரில் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலா ளரும், மாநிலத் தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். தேசியச் செய லாளர் குர்ரம் அனீஸ், தமிழ்நாடு மாநிலப் பொரு ளாளர் வடக்குகோட்டை யார் வி.எம். செய்யது அஹ மது முன்னிலை வகித்தனர். மாநிலப் பொதுச் செய லாளர் கே.ஏ.எம். முஹம் மது அப+பக்கர் வரவேற் புரையாற்றினார்.

நூலினை டாக்டர் ஹக்கீம் செய்யது கலீபத் துல்லாஹ் வெளியிட வாணியம்பாடி நிஸார் அஹமது, எஸ்.பீடி அதிபர் அஷ்ரப், பைஸ் மஹால் இயக்குநர் ருமானுதீன் ஆகி யோர் பெற்றுக் கொண்ட னர்.
இந் நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் இ. அஹமது கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறிய தாவது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கடந்த 62 ஆண்டுகால சரித்திரத்தின் முக்கிய நிகழ்வுகளையெல் லாம் தொகுத்து கூறும் வகையில் ஒரு சிறந்த வரலாற்று நூலினை உர்தூ மொழியில் ஆக்கித் தந் துள்ள திருச்சி ஹனீப் அவர்களின் சேவை போற் றப்படக் கூடிய - பாராட் டப்படக்கூடிய செயலா கும். இந்த நூலினை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உரு வான சென்னையிலேயே வெளியிடப்படுவது மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடந்த 62 ஆண்டு காலமாக இந்திய நாட்டிற்கும், சிறுபான்மை சமுதாய மக்கள் முன்னேற் றத்திற்கும் ஆக்கப்ப+ர்வ மான வகையில் செய்துள்ள சேவைகளுக்கு காங்கிரஸ் கட்சியும், நாட்டில் உள்ள பிரதான கட்சிகளெல்லாம் உரிய அங்கீகாரத்தை அளித்துள்ளதன் அடையா ளம்தான் நான் மத்திய அமைச்சராக உங்கள் முன் நிற்பதற்கு காரணமாகும்.

2004-ம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததும் இந் திய ய+னியன் முஸ்லிம் லீகின் சேவைகளை அங்கீ கரிக்கும் வகையில் மத்திய அமைச்சரவையில் நமக்கு இடமளித்தார்கள்.

இந்த அங்கீகாரமானது சாதாரண ஒன்றல்ல. இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தொடர்ந்து 2.வது முறையாகவும் ஐக் கிய முற்போக்கு கூட்டணி அரசின் மத்திய அமைச் சரவையில் நமக்கு இடம் கிடைத்துள்ளது. இதற் கெல்லாம் அடிப்படை காரணம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் உயரிய கொள்கைகளும், செயல் பாடுகளுமே ஆகும்.

இஸ்லாமிய நெறிமுறை களுக்குட்பட்டு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் கொள்கைகள் அமையும் வகையில் கண்ணியத்திற் குரிய காயிதெ மில்லத் உள்ளிட்ட தலைவர்கள் நமக்கு தெளிவான திட்டங் களை வகுத்துத் தந்து அதன் அடிப்படையில் நாம் செயல்பட்டதற்கான அங்கீ காரம்தான் இதுவாகும்.
தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம், சிறு பான்மையினரின் கலாச் சாரத் தனித்தன்மை பாது காப்பு என்ற மூன்று உயரிய லட்சியங்களின் அடிப் படையிலேயே முஸ்லிம் லீகின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. எந்த ஒரு பிரச்சினையும் இந்த தத்துவங்களின் அடிப் படையில்தான் முஸ்லிம் லீக் அணுகி வந்திருக்கிறது. இன்று நாடு முழுவதும் நீதிபதி சச்சார் கமிட்டி அறிக்கை குறித்தும், ரங்க நாத் மிஸ்ரா அறிக்கை குறித்தும் விவாதிக்கப்படு கிறது. இந்த அறிக்கைகள் இந்திய முஸ்லிம்களின் யதார்த்த நிலையை, உண்மை நிலவரங்களை புள்ளி விவரங்களுடன் தெரிவிக்கக் கூடியதாக அமைந்துள்ளன. இந்த அறிக்கைகள் வெளிவரு வதற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும், மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருப்பதுதான் காரணமாக அமைந்துள் ளதை எவரும் மறுக்க முடியாது.

சிறுபான்மை சமுதாய மக்களின் முன்னேற்றத்திற் காக நாம் தொடர்ந்து வலி யுறுத்தி வந்ததன் அடிப் படையில் பிரதமரின் புதிய 15 அம்சத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்படுகிறது. நான் சமீபத்தில் பிரதமரை சந்தித்தபோது கூட இந்த திட்டங்களை விரிவான அளவில் செயல்படுத்துவது குறித்து
வலியுறுத்தினேன்.

பிரதமரின் திட்டங் களில் ஒன்றாக உர்தூ மொழி மேம்பாடும் அமைந்துள்ளது. ஹஜாரே ஜஹான்ஸே அச்சா| ஹஹிந்துஸ்தான் ஹமாரா| என்ற இந்த சில வரிகளே உர்தூ மொழியின் சிறப் பையும், அதன் தேசிய உணர்வையும் எளிதாக வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கிறது. எந்த மொழியைச் சார்ந்தவராக இருந்தாலும் இந்த ஹஜாரே ஜஹான்ஸே அச்சா| ஹஹிந்துஸ்தான் ஹமாரா| என்ற இந்த வரிகளை உச்சரிக்கும்போது ஒருவித பெருமித உணர்ச்சியை பெற முடிகிறது.

தமிழகத்தில் செயல் படுத்தப்படும் சமச்சீர் கல்வித் திட்டத்தால் உர்தூ மொழிக்கு பாதிப்பு ஏற் படும் என்ற அச்சம் உரு வாகியுள்ளதாக அறிந்தேன். ஆனால், நிச்சயம் அப்படி ஒரு நிலை தமிழகத்தில் ஏற்படாது. மொழிகளை யும், அதன் முக்கியத்துவத் தையும், சிறப்புக்களையும் நன்கு அறிந்தவர் முதல்வர் கலைஞர் ஆவார். மொழி யின் முக்கியத்துவத்தை உணர்ந்ததன் காரணமா கத்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை மிகச் சிறப்பாக அவர் நடத்திக் காட்டியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்பொழுதுமே சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களின் முன் னேற்றத்திலும் அக்கறை கொண்ட அரசாகவே திகழ்ந்து வருகிறது.

முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையேற்று வழிநடத்தும் தமிழக அரசு சிறுபான்மை மொழிகளை பாதிக்கும் வகையில் எத்தகைய ஒரு நிலை யையும் ஏற்படுத்தாது என் பதை நான் உறுதியாக நம்புகிறேன். நிச்சயம் தமிழக அரசு நல்ல முடி வினை அறிவிக்கும் என்ப தில் எவருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பதிப்பக அறக்கட்டளை சார்பில் இத்தகைய சிறப் பான நூலை வெளியிட் டதை பாராட்டுகிறேன். இன்னும் பல நூல்கள் இது போன்று வெளிவர வேண்டும் என வாழ்த்து கிறேன்.
இவ்வாறு தேசியத் தலைவர் இ.அஹமது பேசினார்.