உர்தூ மொழிக்கு முக்கியத்துவம் வேண்டும் நாடாளுமன்றத்தில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கோரிக்கை
உர்தூ மொழி எந்தச் சூழ் நிலையிலும் புறக்கணிக்க முடியாத ஒன்று. அதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற மக்களவையில் தலைவர்கள் கோரிக்கை எழுப்பினர்.
இன்று நாடாளுமன்ற த்தில் ஜீரோ அவர்| என்ற நேரமில்லா நேரத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் உர்தூ மொழி பற்றிய பிரச் சினையை எழுப்பினார்.
உர்தூ மொழி பல வழிகளி லும் புறக்கணிக்கப்படுவதாக வும், உர்தூ பத்திரிகைகளில் விளம்பரம் அளிப்பதிலும் கூட பாரபட்சம் காட்டப்படுவதாகவும், உர்தூ முஸ்லிம்கள் பேசும் மொழி என்பதால் இந்த புறக்கணிப்பு நடைபெறுவதாகவும் குறிப் பிட்டார்.
உர்தூ ஒரு இனிமையான மொழி அதை புறக்கணித்து விட்டு சரித்திரத்தை எழுத முடி யாது. தொடர்ந்து உர்தூ மொழி புறக்கணிக்கப்பட் டால் போராட தயங்க மாட்டோம் என்றும் அவர் எச்சரித்தார்.
அப்துர் ரஹ்மான் பேச்சு
இதனைத் தொடர்ந்து வேலூர் நாடாளுமன்ற உறுப் பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசியதாவது- உர்தூ இந் நாட்டின் தேசிய மொழி. இந்த தேசத்திற்கு பெருமை சேர்த்த மொழி. உர்தூ இந் நாட்டின் கலாச்சார சின்னம். எல்லா வகையிலும் அம் மொழி முக்கியப்படுத்தப்பட வேண்டும்.
இங்கு முலாயம்சிங் அவர் கள் உர்தூ மொழி பற்றி குறிப்பிட்ட அனைத்தையும் நானும் வழிமொழிகிறேன். அவரது கூற்று 100 சதவீதம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. உர்தூ மொழிக்கான அனைத்து முக்கியத்துவத்தை யும் இந்த அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. குறிப்பிட் டார்.
அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் குலாம் நபி ஆஸாத், மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, பாரதீய ஜனதா கட்சியின் சத்ருகன் சின்ஹா, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட் டோரும் உர்தூ மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பிரணாப் முகர்ஜி பதில்
அவை முன்னவரும், மத்திய நிதித்துறை அமைச்சருமான பிரணாப் முகர்ஜி இதற்கு பதில் அளித்து பேசுகையில், எந்த நிலையிலும் உர்தூ மொழி புறக்கணிக்க முடியாத ஒன்று. மூத்த மொழிகளில் ஒன்று. அரசின் விளம்பரங்கள் உர்தூ பத்திரிகை களுக்கு வழங்கப்பட வில்லை என்று தெரிய வந்தால் அதன்மீது நடவடிக்கை எடுப்ப தற்குத் தயாராக இருக்கி றோம்.
உர்தூ மொழி மதித்துப் போற்றப்பட்டு வளர்க்கப்பட வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கீகாரம் பெற்ற சமுதாய அமைப்பு
Showing posts with label மொழி. Show all posts
Showing posts with label மொழி. Show all posts
Friday, August 6, 2010
Thursday, July 15, 2010
சிறுபான்மை மொழிகளை பாதிக்கும் வகையில் தமிழக அரசின் செயல்பாடு இருக்காது|
சிறுபான்மை மொழிகளை பாதிக்கும் வகையில் தமிழக அரசின் செயல்பாடு இருக்காது|
மொழியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர் முதல்வர் கலைஞர்
சென்னை, ஜூலை 9-
மொழிகளையும், அதன் முக்கியத்துவத்தையும், சிறப்புக்களையும் நன்கு அறிந்தவர் கலைஞர். மொழியின் முக்கியத்து வத்தை உணர்ந்ததன் காரணமாகத்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை மிகச் சிறப்பாக அவர் நடத்திக் காட்டியுள் ளார். திராவிட முன்னேற் றக் கழக அரசு எப்பொழு துமே சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களின் முன் னேற்றத்திலும் அக்கறை கொண்ட அரசா கவே திகழ்ந்து வருகிறது. உர்தூ உள்ளிட்ட சிறுபான்மை மொழிகளை பாதிக்கும் வகையில் தமிழக அரசின் எந்த செயல்பாடும் அமை யாது என்று நம்புகிறேன் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய இணை யமைச்சருமான இ.அஹமது தெரிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாறு குறித்த நஜ்ரிய்யாதி ஸபர் ஹராஜாஜி ஹல்சே சாதாப் மஹல் தக்| என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று (10-07-2010) சென்னை எழும்பூரில் உள்ள ஹோட் டல் மெரீனா டவரில் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலா ளரும், மாநிலத் தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். தேசியச் செய லாளர் குர்ரம் அனீஸ், தமிழ்நாடு மாநிலப் பொரு ளாளர் வடக்குகோட்டை யார் வி.எம். செய்யது அஹ மது முன்னிலை வகித்தனர். மாநிலப் பொதுச் செய லாளர் கே.ஏ.எம். முஹம் மது அப+பக்கர் வரவேற் புரையாற்றினார்.
நூலினை டாக்டர் ஹக்கீம் செய்யது கலீபத் துல்லாஹ் வெளியிட வாணியம்பாடி நிஸார் அஹமது, எஸ்.பீடி அதிபர் அஷ்ரப், பைஸ் மஹால் இயக்குநர் ருமானுதீன் ஆகி யோர் பெற்றுக் கொண்ட னர்.
இந் நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் இ. அஹமது கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறிய தாவது-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கடந்த 62 ஆண்டுகால சரித்திரத்தின் முக்கிய நிகழ்வுகளையெல் லாம் தொகுத்து கூறும் வகையில் ஒரு சிறந்த வரலாற்று நூலினை உர்தூ மொழியில் ஆக்கித் தந் துள்ள திருச்சி ஹனீப் அவர்களின் சேவை போற் றப்படக் கூடிய - பாராட் டப்படக்கூடிய செயலா கும். இந்த நூலினை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உரு வான சென்னையிலேயே வெளியிடப்படுவது மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடந்த 62 ஆண்டு காலமாக இந்திய நாட்டிற்கும், சிறுபான்மை சமுதாய மக்கள் முன்னேற் றத்திற்கும் ஆக்கப்ப+ர்வ மான வகையில் செய்துள்ள சேவைகளுக்கு காங்கிரஸ் கட்சியும், நாட்டில் உள்ள பிரதான கட்சிகளெல்லாம் உரிய அங்கீகாரத்தை அளித்துள்ளதன் அடையா ளம்தான் நான் மத்திய அமைச்சராக உங்கள் முன் நிற்பதற்கு காரணமாகும்.
2004-ம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததும் இந் திய ய+னியன் முஸ்லிம் லீகின் சேவைகளை அங்கீ கரிக்கும் வகையில் மத்திய அமைச்சரவையில் நமக்கு இடமளித்தார்கள்.
இந்த அங்கீகாரமானது சாதாரண ஒன்றல்ல. இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தொடர்ந்து 2.வது முறையாகவும் ஐக் கிய முற்போக்கு கூட்டணி அரசின் மத்திய அமைச் சரவையில் நமக்கு இடம் கிடைத்துள்ளது. இதற் கெல்லாம் அடிப்படை காரணம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் உயரிய கொள்கைகளும், செயல் பாடுகளுமே ஆகும்.
இஸ்லாமிய நெறிமுறை களுக்குட்பட்டு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் கொள்கைகள் அமையும் வகையில் கண்ணியத்திற் குரிய காயிதெ மில்லத் உள்ளிட்ட தலைவர்கள் நமக்கு தெளிவான திட்டங் களை வகுத்துத் தந்து அதன் அடிப்படையில் நாம் செயல்பட்டதற்கான அங்கீ காரம்தான் இதுவாகும்.
தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம், சிறு பான்மையினரின் கலாச் சாரத் தனித்தன்மை பாது காப்பு என்ற மூன்று உயரிய லட்சியங்களின் அடிப் படையிலேயே முஸ்லிம் லீகின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. எந்த ஒரு பிரச்சினையும் இந்த தத்துவங்களின் அடிப் படையில்தான் முஸ்லிம் லீக் அணுகி வந்திருக்கிறது. இன்று நாடு முழுவதும் நீதிபதி சச்சார் கமிட்டி அறிக்கை குறித்தும், ரங்க நாத் மிஸ்ரா அறிக்கை குறித்தும் விவாதிக்கப்படு கிறது. இந்த அறிக்கைகள் இந்திய முஸ்லிம்களின் யதார்த்த நிலையை, உண்மை நிலவரங்களை புள்ளி விவரங்களுடன் தெரிவிக்கக் கூடியதாக அமைந்துள்ளன. இந்த அறிக்கைகள் வெளிவரு வதற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும், மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருப்பதுதான் காரணமாக அமைந்துள் ளதை எவரும் மறுக்க முடியாது.
சிறுபான்மை சமுதாய மக்களின் முன்னேற்றத்திற் காக நாம் தொடர்ந்து வலி யுறுத்தி வந்ததன் அடிப் படையில் பிரதமரின் புதிய 15 அம்சத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்படுகிறது. நான் சமீபத்தில் பிரதமரை சந்தித்தபோது கூட இந்த திட்டங்களை விரிவான அளவில் செயல்படுத்துவது குறித்து
வலியுறுத்தினேன்.
பிரதமரின் திட்டங் களில் ஒன்றாக உர்தூ மொழி மேம்பாடும் அமைந்துள்ளது. ஹஜாரே ஜஹான்ஸே அச்சா| ஹஹிந்துஸ்தான் ஹமாரா| என்ற இந்த சில வரிகளே உர்தூ மொழியின் சிறப் பையும், அதன் தேசிய உணர்வையும் எளிதாக வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கிறது. எந்த மொழியைச் சார்ந்தவராக இருந்தாலும் இந்த ஹஜாரே ஜஹான்ஸே அச்சா| ஹஹிந்துஸ்தான் ஹமாரா| என்ற இந்த வரிகளை உச்சரிக்கும்போது ஒருவித பெருமித உணர்ச்சியை பெற முடிகிறது.
தமிழகத்தில் செயல் படுத்தப்படும் சமச்சீர் கல்வித் திட்டத்தால் உர்தூ மொழிக்கு பாதிப்பு ஏற் படும் என்ற அச்சம் உரு வாகியுள்ளதாக அறிந்தேன். ஆனால், நிச்சயம் அப்படி ஒரு நிலை தமிழகத்தில் ஏற்படாது. மொழிகளை யும், அதன் முக்கியத்துவத் தையும், சிறப்புக்களையும் நன்கு அறிந்தவர் முதல்வர் கலைஞர் ஆவார். மொழி யின் முக்கியத்துவத்தை உணர்ந்ததன் காரணமா கத்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை மிகச் சிறப்பாக அவர் நடத்திக் காட்டியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்பொழுதுமே சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களின் முன் னேற்றத்திலும் அக்கறை கொண்ட அரசாகவே திகழ்ந்து வருகிறது.
முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையேற்று வழிநடத்தும் தமிழக அரசு சிறுபான்மை மொழிகளை பாதிக்கும் வகையில் எத்தகைய ஒரு நிலை யையும் ஏற்படுத்தாது என் பதை நான் உறுதியாக நம்புகிறேன். நிச்சயம் தமிழக அரசு நல்ல முடி வினை அறிவிக்கும் என்ப தில் எவருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பதிப்பக அறக்கட்டளை சார்பில் இத்தகைய சிறப் பான நூலை வெளியிட் டதை பாராட்டுகிறேன். இன்னும் பல நூல்கள் இது போன்று வெளிவர வேண்டும் என வாழ்த்து கிறேன்.
இவ்வாறு தேசியத் தலைவர் இ.அஹமது பேசினார்.
மொழியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர் முதல்வர் கலைஞர்
சென்னை, ஜூலை 9-
மொழிகளையும், அதன் முக்கியத்துவத்தையும், சிறப்புக்களையும் நன்கு அறிந்தவர் கலைஞர். மொழியின் முக்கியத்து வத்தை உணர்ந்ததன் காரணமாகத்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை மிகச் சிறப்பாக அவர் நடத்திக் காட்டியுள் ளார். திராவிட முன்னேற் றக் கழக அரசு எப்பொழு துமே சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களின் முன் னேற்றத்திலும் அக்கறை கொண்ட அரசா கவே திகழ்ந்து வருகிறது. உர்தூ உள்ளிட்ட சிறுபான்மை மொழிகளை பாதிக்கும் வகையில் தமிழக அரசின் எந்த செயல்பாடும் அமை யாது என்று நம்புகிறேன் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய இணை யமைச்சருமான இ.அஹமது தெரிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாறு குறித்த நஜ்ரிய்யாதி ஸபர் ஹராஜாஜி ஹல்சே சாதாப் மஹல் தக்| என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று (10-07-2010) சென்னை எழும்பூரில் உள்ள ஹோட் டல் மெரீனா டவரில் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலா ளரும், மாநிலத் தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். தேசியச் செய லாளர் குர்ரம் அனீஸ், தமிழ்நாடு மாநிலப் பொரு ளாளர் வடக்குகோட்டை யார் வி.எம். செய்யது அஹ மது முன்னிலை வகித்தனர். மாநிலப் பொதுச் செய லாளர் கே.ஏ.எம். முஹம் மது அப+பக்கர் வரவேற் புரையாற்றினார்.
நூலினை டாக்டர் ஹக்கீம் செய்யது கலீபத் துல்லாஹ் வெளியிட வாணியம்பாடி நிஸார் அஹமது, எஸ்.பீடி அதிபர் அஷ்ரப், பைஸ் மஹால் இயக்குநர் ருமானுதீன் ஆகி யோர் பெற்றுக் கொண்ட னர்.
இந் நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் இ. அஹமது கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறிய தாவது-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கடந்த 62 ஆண்டுகால சரித்திரத்தின் முக்கிய நிகழ்வுகளையெல் லாம் தொகுத்து கூறும் வகையில் ஒரு சிறந்த வரலாற்று நூலினை உர்தூ மொழியில் ஆக்கித் தந் துள்ள திருச்சி ஹனீப் அவர்களின் சேவை போற் றப்படக் கூடிய - பாராட் டப்படக்கூடிய செயலா கும். இந்த நூலினை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் உரு வான சென்னையிலேயே வெளியிடப்படுவது மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடந்த 62 ஆண்டு காலமாக இந்திய நாட்டிற்கும், சிறுபான்மை சமுதாய மக்கள் முன்னேற் றத்திற்கும் ஆக்கப்ப+ர்வ மான வகையில் செய்துள்ள சேவைகளுக்கு காங்கிரஸ் கட்சியும், நாட்டில் உள்ள பிரதான கட்சிகளெல்லாம் உரிய அங்கீகாரத்தை அளித்துள்ளதன் அடையா ளம்தான் நான் மத்திய அமைச்சராக உங்கள் முன் நிற்பதற்கு காரணமாகும்.
2004-ம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததும் இந் திய ய+னியன் முஸ்லிம் லீகின் சேவைகளை அங்கீ கரிக்கும் வகையில் மத்திய அமைச்சரவையில் நமக்கு இடமளித்தார்கள்.
இந்த அங்கீகாரமானது சாதாரண ஒன்றல்ல. இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தொடர்ந்து 2.வது முறையாகவும் ஐக் கிய முற்போக்கு கூட்டணி அரசின் மத்திய அமைச் சரவையில் நமக்கு இடம் கிடைத்துள்ளது. இதற் கெல்லாம் அடிப்படை காரணம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் உயரிய கொள்கைகளும், செயல் பாடுகளுமே ஆகும்.
இஸ்லாமிய நெறிமுறை களுக்குட்பட்டு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் கொள்கைகள் அமையும் வகையில் கண்ணியத்திற் குரிய காயிதெ மில்லத் உள்ளிட்ட தலைவர்கள் நமக்கு தெளிவான திட்டங் களை வகுத்துத் தந்து அதன் அடிப்படையில் நாம் செயல்பட்டதற்கான அங்கீ காரம்தான் இதுவாகும்.
தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம், சிறு பான்மையினரின் கலாச் சாரத் தனித்தன்மை பாது காப்பு என்ற மூன்று உயரிய லட்சியங்களின் அடிப் படையிலேயே முஸ்லிம் லீகின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. எந்த ஒரு பிரச்சினையும் இந்த தத்துவங்களின் அடிப் படையில்தான் முஸ்லிம் லீக் அணுகி வந்திருக்கிறது. இன்று நாடு முழுவதும் நீதிபதி சச்சார் கமிட்டி அறிக்கை குறித்தும், ரங்க நாத் மிஸ்ரா அறிக்கை குறித்தும் விவாதிக்கப்படு கிறது. இந்த அறிக்கைகள் இந்திய முஸ்லிம்களின் யதார்த்த நிலையை, உண்மை நிலவரங்களை புள்ளி விவரங்களுடன் தெரிவிக்கக் கூடியதாக அமைந்துள்ளன. இந்த அறிக்கைகள் வெளிவரு வதற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும், மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருப்பதுதான் காரணமாக அமைந்துள் ளதை எவரும் மறுக்க முடியாது.
சிறுபான்மை சமுதாய மக்களின் முன்னேற்றத்திற் காக நாம் தொடர்ந்து வலி யுறுத்தி வந்ததன் அடிப் படையில் பிரதமரின் புதிய 15 அம்சத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்படுகிறது. நான் சமீபத்தில் பிரதமரை சந்தித்தபோது கூட இந்த திட்டங்களை விரிவான அளவில் செயல்படுத்துவது குறித்து
வலியுறுத்தினேன்.
பிரதமரின் திட்டங் களில் ஒன்றாக உர்தூ மொழி மேம்பாடும் அமைந்துள்ளது. ஹஜாரே ஜஹான்ஸே அச்சா| ஹஹிந்துஸ்தான் ஹமாரா| என்ற இந்த சில வரிகளே உர்தூ மொழியின் சிறப் பையும், அதன் தேசிய உணர்வையும் எளிதாக வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கிறது. எந்த மொழியைச் சார்ந்தவராக இருந்தாலும் இந்த ஹஜாரே ஜஹான்ஸே அச்சா| ஹஹிந்துஸ்தான் ஹமாரா| என்ற இந்த வரிகளை உச்சரிக்கும்போது ஒருவித பெருமித உணர்ச்சியை பெற முடிகிறது.
தமிழகத்தில் செயல் படுத்தப்படும் சமச்சீர் கல்வித் திட்டத்தால் உர்தூ மொழிக்கு பாதிப்பு ஏற் படும் என்ற அச்சம் உரு வாகியுள்ளதாக அறிந்தேன். ஆனால், நிச்சயம் அப்படி ஒரு நிலை தமிழகத்தில் ஏற்படாது. மொழிகளை யும், அதன் முக்கியத்துவத் தையும், சிறப்புக்களையும் நன்கு அறிந்தவர் முதல்வர் கலைஞர் ஆவார். மொழி யின் முக்கியத்துவத்தை உணர்ந்ததன் காரணமா கத்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை மிகச் சிறப்பாக அவர் நடத்திக் காட்டியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்பொழுதுமே சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களின் முன் னேற்றத்திலும் அக்கறை கொண்ட அரசாகவே திகழ்ந்து வருகிறது.
முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையேற்று வழிநடத்தும் தமிழக அரசு சிறுபான்மை மொழிகளை பாதிக்கும் வகையில் எத்தகைய ஒரு நிலை யையும் ஏற்படுத்தாது என் பதை நான் உறுதியாக நம்புகிறேன். நிச்சயம் தமிழக அரசு நல்ல முடி வினை அறிவிக்கும் என்ப தில் எவருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பதிப்பக அறக்கட்டளை சார்பில் இத்தகைய சிறப் பான நூலை வெளியிட் டதை பாராட்டுகிறேன். இன்னும் பல நூல்கள் இது போன்று வெளிவர வேண்டும் என வாழ்த்து கிறேன்.
இவ்வாறு தேசியத் தலைவர் இ.அஹமது பேசினார்.
அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பளிக்கும் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பளிக்கும் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு
சென்னை, ஜுலை 11-
அனைத்து மொழிகளை சேர்ந்தவர்களுக்கும் அவர வருக்குரிய மதிப்பளித்து செயல்படக்கூடிய இயக்க மாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்றும், உர்தூ மொழியினை வளர்க் கும் வகையில் அதனை கற்றுக் கொள்ளவும், பரப்பவும் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என்றும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித் தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாறு குறித்த நஜ்ரிய்யாதி ஸபர் ஹராஜாஜி ஹல்சே சாதாப் மஹல் தக்| என்ற உர்தூ நூல் வெளியீட்டு விழாவில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளரும், மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையுரையாற்றும் போது குறிப்பிட்டதாவது-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாறு என்பது மிகப் பெருமைக் குரியதும், பாராம்பரிய சிறப்புக்குரிய ஒன்றாகும். இதனை அழகிய முறையில் ஒரு பெருநூலாக தமிழி லும், அதன் சுருக்கமாக ஒருசிறிய நூலை உர்தூ மொழியிலும் அண்ணன் திருச்சி எழுத்தரசு ஏ.எம். ஹனீப் அவர்கள் சிறப்பான முறையில் உருவாக்கித் தந்து அதன் வெளியீட்டு விழாவில் நாமெல்லாம் இங்கே குழுமியிருக்கி றோம்.
உர்தூ மொழி இனிமை யான மொழி. பழமையான மொழி ஒரு கருத்தை உர்தூ அறிந்தவர் அந்த மொழியி லேயே சொல்லும் போது அதிலும் கவிதையாக சொல்லும் போது கேட்ப வர்களின் உள்ளத்தில் கிளர்ச்சி ஏற்பட்டு ஆன்மா வுக்கு சுகமளிக்கின்ற அமுத மொழியாக உர்தூ மொழி விளங்குவதை உணரலாம்.
எனது மூதாதையர்கள் கூட குறிப்பாக, தாய்வழி பாட்டியார் உர்தூ மொழியை சார்ந்த வரேயாவார். அடுத்தடுத்து வந்த தலைமுறையினர் அந்த மொழியை பேசவும், எழுதவும் மறந்த காரணத் தால் இன்று நான் தமிழினை அறிந்துள்ள அளவுக்கு உர்தூவை அறிந்திருக்கவில்லை என்பதை பலரும் சொல்ல கேட்டுள்ளேன்.
இந்தியாவைப் பொறுத்த அளவில் உர்தூ மொழியில்தான் இஸ்லா மிய இலக்கியங்கள் வர லாற்று நூல்கள் ஏராள மாக உள்ளன. அந்த மொழியை கற்றுக் கொள் வதும், சரளமாக பேசவும், எழுதவும் பயிற்சி பெற வேண்டியதும் நமது கடமையாக இருக்கின்றது. இந்த விஷயத்தில் நாம் அனைவரும் உரிய கவனம் செலுத்த வேண்டும். இந்த நூலினை வெளியிட்ட நமது டாக்டர் கலீபத்துல் லாஹ் சாஹிப் அவர்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தலைவர்களில் ஒருவ ராவார்.
கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்க ளோடும், அவரைத் தொடர்ந்து சிராஜுல் மில்லத், சம்சுரே மில்லத் போன்ற தலைவர் பெரு மக்களோடு எல்லாம் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர். அவர் இன்று இந்த விழாவில் நம்மோடு பங்கேற்று இந்த நூலினை வெளியிட்டிருப் பது நமக்கு பெருமை அளிக்கக் கூடிய ஒன்றா கும்.
தமிழகத்தின் மிக சிறந்த நூல்களையெல்லாம் உர்தூ மொழியில் மொழி பெயர்த்து வெளியிடும் பணியினை உர்தூ அறிஞர் பெருமக்கள் மேற்கொண் டுள்ளனர். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி மறைந்த அஸ்ரப் சொகர வர்த்தி திருக்குறளை உர்தூ மொழியில் மொழி பெயர்த்த பெருமைக்குரி யவர் ஆவார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்த வரையில் எல்லா மொழிக ளையும் மதிக்கிற இயக்க மாகவே அதன் தொடக்க நாள் முதல் செயல்பட்டு வருகிறது. அதன் செயல் பாடுகள் மொழிவேறுபாடு களுக்கு அப்பாற்பட்டே இருந்து வருகின்றன. முஸ்லிம் லீகில் தமிழ் முஸ்லிம், உர்தூ முஸ்லிம் என்பது போன்ற பிரி வினைகளை ஏற்படுத்தி குழப்பங்களை நிகழ்த்த லாம் என்றெல்லாம் எவரா வது நினைத்தால் அவர்க ளின் எண்ணம் நிறை வேறாது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மொழி கடந்த இயக்கமாக - அனைத்து மொழிகளை யும் அவரவருக்கு உரிய மரியாதையுடன் நடத்து கின்ற இயக்கமாக இருந்து வருகிறது.
தமிழக அரசு செயல் படுத்தும் சமச்சீர் கல்வித் திட்டமானது உர்தூ மொழிக்கு பாதிப்பு ஏற் படுத்தக் கூடியது என கூறி சிலர் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவற் றில் ஈடுபட்டுள்ளனர். முஸ்லிம் லீகை பொறுத் தவரை அமைதியான முறையில் ஆக்கப்ப+ர்வ மான வழியில் செயல்படக் கூடிய இயக்கம். வீதியில் இறங்கி போராட்டம் நடத் துவதில் முஸ்லிம் லீகிற்கு உடன்பாடு இல்லை. சமுதாய கோரிக் கைகளை உரியவர்களிடம் சரியான முறையில் எடுத்துரைத்து தீர்வு காண்பதுதான் முஸ்லிம் லீகின் பாணி. அதன் அடிப்படையில், சமச்சீர் கல்வித் திட்டத் தால் உர்தூ உள்ளிட்ட சிறுபான்மை மொழிக ளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சிலர் நம்மிடம் அச்சம் தெரிவித்த உட னேயே நாம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து அவரிடம் நமது கருத்துக்களை தெரிவித்தோம். முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கவனத்துக்கும் இப் பிரச்சினையை கொண்டு சென்றோம். அப் போதே அவர்கள் நமது கருத்துக்கு மதிப்பளித்து திருப்திகரமான பதிலை தெரிவித்து விட்டனர்.
அதுதொடர்பான அரசு அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்ற சூழ் நிலையில் சிலர் வேண்டு மென்றே முதல்வர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் வகை யில் ஆர்ப்பாட்டம், போராட்டம் என செயல் படுவது நல்ல அணுகு முறையாக இருக்காது.
முஸ்லிம் லீகின் வரலாற்றை நல்ல சிறப்பான முறையில் உர்தூ மொழியில் நூலாக வெளி யிட்டுள்ள முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை சார்பில் இன்னும் பல நூல்கள் உர்தூ மொழியில் வெளியாகும். அதற்கான பணிகளில் எல்லோரும் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.
எழுத்தரசு ஹனீபுக்கு பாராட்டு
நிகழ்ச்சியில் நூலாசிரி யர் எழுத்தரசு ஏ.எம். ஹனீப் அவர்களுக்கு தேசியத் தலைவர் இ. அஹமது பொன்னாடை அணிவித்து பாராட்டி னார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய துணைத் தலைவர் மீரட் வழக்கறிஞர் இக்பால் அஹமது, கேரள மாநில செயலாளர் இ.டி. முஹம் மது பஷீர் எம்.பி., காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப் பாளர் அப்துர் ரஹ்மான் எம்.பி., சட்டமன்ற உறுப் பினர் எச். அப்துல் பாசித் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர்.
பதிப்பக அறக்கட் டளை செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ் மாயில் நன்றி கூறினார்.
கலந்து கொண்டோர்
நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் கமுதி பஷீர், மாநில சொத்துப் பாது காப்புக்குழு உறுப்பினர் எஸ்.எம். கனி சிஷ்தி, காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் திருப்ப+ர் எஸ்.ஏ. சத்தார், வழக்கறி ஞர் அணி அமைப்பார் வெ. ஜீவகிரிதரன், இளை ஞர் அணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன், எஸ்.டி. யு. அமைப்பாளர் அப்சல், இலக்கிய அணி ஏம்பல் தஜம்முல் முஹம்மது, டாக்டர் எஸ்.கே. அமீன்.
வடசென்னை மாவட்ட செயலாளர் ஏ.எச். முஹம் மது இஸ்மாயில், தென் சென்னை மாவட்ட செய லாளர் பூவை முஸ்தபா, காஞ்சி மாவட்ட தலைவர் ஆலந்தூர் அப்துல் வஹாப், கவிஞர் சேக் மதார், ரப்பானி அப்துல் குத்தூஸ், மாணவர் அணி யைச் சார்ந்த ஷாநவாஸ், பாம்புக்கோயில் வி.ஏ. செய்யது பட்டாணி, வி.ஏ. செய்யது அபுதாஹிர், ராய புரம் ஏ.ஆர். இக்பால், உஸ்மான், மணிச்சுடர் ஹமீது, ஷெரீப் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர்.
தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேச்சு
சென்னை, ஜுலை 11-
அனைத்து மொழிகளை சேர்ந்தவர்களுக்கும் அவர வருக்குரிய மதிப்பளித்து செயல்படக்கூடிய இயக்க மாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்றும், உர்தூ மொழியினை வளர்க் கும் வகையில் அதனை கற்றுக் கொள்ளவும், பரப்பவும் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என்றும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித் தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாறு குறித்த நஜ்ரிய்யாதி ஸபர் ஹராஜாஜி ஹல்சே சாதாப் மஹல் தக்| என்ற உர்தூ நூல் வெளியீட்டு விழாவில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளரும், மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையுரையாற்றும் போது குறிப்பிட்டதாவது-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாறு என்பது மிகப் பெருமைக் குரியதும், பாராம்பரிய சிறப்புக்குரிய ஒன்றாகும். இதனை அழகிய முறையில் ஒரு பெருநூலாக தமிழி லும், அதன் சுருக்கமாக ஒருசிறிய நூலை உர்தூ மொழியிலும் அண்ணன் திருச்சி எழுத்தரசு ஏ.எம். ஹனீப் அவர்கள் சிறப்பான முறையில் உருவாக்கித் தந்து அதன் வெளியீட்டு விழாவில் நாமெல்லாம் இங்கே குழுமியிருக்கி றோம்.
உர்தூ மொழி இனிமை யான மொழி. பழமையான மொழி ஒரு கருத்தை உர்தூ அறிந்தவர் அந்த மொழியி லேயே சொல்லும் போது அதிலும் கவிதையாக சொல்லும் போது கேட்ப வர்களின் உள்ளத்தில் கிளர்ச்சி ஏற்பட்டு ஆன்மா வுக்கு சுகமளிக்கின்ற அமுத மொழியாக உர்தூ மொழி விளங்குவதை உணரலாம்.
எனது மூதாதையர்கள் கூட குறிப்பாக, தாய்வழி பாட்டியார் உர்தூ மொழியை சார்ந்த வரேயாவார். அடுத்தடுத்து வந்த தலைமுறையினர் அந்த மொழியை பேசவும், எழுதவும் மறந்த காரணத் தால் இன்று நான் தமிழினை அறிந்துள்ள அளவுக்கு உர்தூவை அறிந்திருக்கவில்லை என்பதை பலரும் சொல்ல கேட்டுள்ளேன்.
இந்தியாவைப் பொறுத்த அளவில் உர்தூ மொழியில்தான் இஸ்லா மிய இலக்கியங்கள் வர லாற்று நூல்கள் ஏராள மாக உள்ளன. அந்த மொழியை கற்றுக் கொள் வதும், சரளமாக பேசவும், எழுதவும் பயிற்சி பெற வேண்டியதும் நமது கடமையாக இருக்கின்றது. இந்த விஷயத்தில் நாம் அனைவரும் உரிய கவனம் செலுத்த வேண்டும். இந்த நூலினை வெளியிட்ட நமது டாக்டர் கலீபத்துல் லாஹ் சாஹிப் அவர்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தலைவர்களில் ஒருவ ராவார்.
கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்க ளோடும், அவரைத் தொடர்ந்து சிராஜுல் மில்லத், சம்சுரே மில்லத் போன்ற தலைவர் பெரு மக்களோடு எல்லாம் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர். அவர் இன்று இந்த விழாவில் நம்மோடு பங்கேற்று இந்த நூலினை வெளியிட்டிருப் பது நமக்கு பெருமை அளிக்கக் கூடிய ஒன்றா கும்.
தமிழகத்தின் மிக சிறந்த நூல்களையெல்லாம் உர்தூ மொழியில் மொழி பெயர்த்து வெளியிடும் பணியினை உர்தூ அறிஞர் பெருமக்கள் மேற்கொண் டுள்ளனர். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி மறைந்த அஸ்ரப் சொகர வர்த்தி திருக்குறளை உர்தூ மொழியில் மொழி பெயர்த்த பெருமைக்குரி யவர் ஆவார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்த வரையில் எல்லா மொழிக ளையும் மதிக்கிற இயக்க மாகவே அதன் தொடக்க நாள் முதல் செயல்பட்டு வருகிறது. அதன் செயல் பாடுகள் மொழிவேறுபாடு களுக்கு அப்பாற்பட்டே இருந்து வருகின்றன. முஸ்லிம் லீகில் தமிழ் முஸ்லிம், உர்தூ முஸ்லிம் என்பது போன்ற பிரி வினைகளை ஏற்படுத்தி குழப்பங்களை நிகழ்த்த லாம் என்றெல்லாம் எவரா வது நினைத்தால் அவர்க ளின் எண்ணம் நிறை வேறாது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மொழி கடந்த இயக்கமாக - அனைத்து மொழிகளை யும் அவரவருக்கு உரிய மரியாதையுடன் நடத்து கின்ற இயக்கமாக இருந்து வருகிறது.
தமிழக அரசு செயல் படுத்தும் சமச்சீர் கல்வித் திட்டமானது உர்தூ மொழிக்கு பாதிப்பு ஏற் படுத்தக் கூடியது என கூறி சிலர் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவற் றில் ஈடுபட்டுள்ளனர். முஸ்லிம் லீகை பொறுத் தவரை அமைதியான முறையில் ஆக்கப்ப+ர்வ மான வழியில் செயல்படக் கூடிய இயக்கம். வீதியில் இறங்கி போராட்டம் நடத் துவதில் முஸ்லிம் லீகிற்கு உடன்பாடு இல்லை. சமுதாய கோரிக் கைகளை உரியவர்களிடம் சரியான முறையில் எடுத்துரைத்து தீர்வு காண்பதுதான் முஸ்லிம் லீகின் பாணி. அதன் அடிப்படையில், சமச்சீர் கல்வித் திட்டத் தால் உர்தூ உள்ளிட்ட சிறுபான்மை மொழிக ளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சிலர் நம்மிடம் அச்சம் தெரிவித்த உட னேயே நாம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து அவரிடம் நமது கருத்துக்களை தெரிவித்தோம். முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கவனத்துக்கும் இப் பிரச்சினையை கொண்டு சென்றோம். அப் போதே அவர்கள் நமது கருத்துக்கு மதிப்பளித்து திருப்திகரமான பதிலை தெரிவித்து விட்டனர்.
அதுதொடர்பான அரசு அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்ற சூழ் நிலையில் சிலர் வேண்டு மென்றே முதல்வர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் வகை யில் ஆர்ப்பாட்டம், போராட்டம் என செயல் படுவது நல்ல அணுகு முறையாக இருக்காது.
முஸ்லிம் லீகின் வரலாற்றை நல்ல சிறப்பான முறையில் உர்தூ மொழியில் நூலாக வெளி யிட்டுள்ள முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை சார்பில் இன்னும் பல நூல்கள் உர்தூ மொழியில் வெளியாகும். அதற்கான பணிகளில் எல்லோரும் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசினார்.
எழுத்தரசு ஹனீபுக்கு பாராட்டு
நிகழ்ச்சியில் நூலாசிரி யர் எழுத்தரசு ஏ.எம். ஹனீப் அவர்களுக்கு தேசியத் தலைவர் இ. அஹமது பொன்னாடை அணிவித்து பாராட்டி னார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய துணைத் தலைவர் மீரட் வழக்கறிஞர் இக்பால் அஹமது, கேரள மாநில செயலாளர் இ.டி. முஹம் மது பஷீர் எம்.பி., காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப் பாளர் அப்துர் ரஹ்மான் எம்.பி., சட்டமன்ற உறுப் பினர் எச். அப்துல் பாசித் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர்.
பதிப்பக அறக்கட் டளை செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ் மாயில் நன்றி கூறினார்.
கலந்து கொண்டோர்
நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் கமுதி பஷீர், மாநில சொத்துப் பாது காப்புக்குழு உறுப்பினர் எஸ்.எம். கனி சிஷ்தி, காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் திருப்ப+ர் எஸ்.ஏ. சத்தார், வழக்கறி ஞர் அணி அமைப்பார் வெ. ஜீவகிரிதரன், இளை ஞர் அணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன், எஸ்.டி. யு. அமைப்பாளர் அப்சல், இலக்கிய அணி ஏம்பல் தஜம்முல் முஹம்மது, டாக்டர் எஸ்.கே. அமீன்.
வடசென்னை மாவட்ட செயலாளர் ஏ.எச். முஹம் மது இஸ்மாயில், தென் சென்னை மாவட்ட செய லாளர் பூவை முஸ்தபா, காஞ்சி மாவட்ட தலைவர் ஆலந்தூர் அப்துல் வஹாப், கவிஞர் சேக் மதார், ரப்பானி அப்துல் குத்தூஸ், மாணவர் அணி யைச் சார்ந்த ஷாநவாஸ், பாம்புக்கோயில் வி.ஏ. செய்யது பட்டாணி, வி.ஏ. செய்யது அபுதாஹிர், ராய புரம் ஏ.ஆர். இக்பால், உஸ்மான், மணிச்சுடர் ஹமீது, ஷெரீப் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர்.
Tuesday, April 20, 2010
முஸ்லிம் பள்ளிகளில் உருது மொழியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று விருத்தாசலத்தில நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முஸ்லிம் பள்ளிகளில் உருது மொழியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று விருத்தாசலத்தில நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஷரீஅத் விளக்க மாநாடு
கடலூர் மாவட்ட ஜமா அத்துல் உலமா ஷரீஅத் விளக்க மாநாடு விருத்தாசலம் நவாப் பள்ளிவாசலில் நடந் தது. மாநாட்டிற்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார். விருத்தாசலம் முத்தவல்லி நவாப் ஜாமிஆ மஸ்ஜித் அப்துல் மஜீது, டவுன் ஜீம்ஆ மஸ்ஜித் சையது முகம்மது, ஷேக்கவுஸ்மியான், அப்துல் ஹமீது, சத்தார்பாஷா, சையது இப்ராஹீம், முகம்மது ஜவ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜமா அத்துல் கடலூர் மாவட்ட செயலாளர் சபியுல்லாஹ் வரவேற்றார். விருத்தாசலம் நகர செய லாளர் முகம்மது சாலிஹ், இஸ்மாயில் நாஜி, முகம்மது இஸ்ஹாக் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட தலைவர் நூருல் அமீன் தொடக்க உரை யாற்றினார்.
திண்டுக்கல் ïசுபிய்யா அரபிக்கல்லூரி கலீல் அகமது மாநில துணைத் தலைவர் சலாஹீத்தீனும், மாநில பொதுச்செயலாளர் அப்துல்காதிர், சதீதுத்தீன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். மாநாட்டில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
இஸ்லாமிய முறைப்படி...
மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வரு மாறு:-
*சமச்சீர் கல்வி திட்டத்தின் மூலமாக முஸ்லிம்களின் உருது பள்ளிகளில் தாய் மொழியான உருதை விருப்ப பாடமாக்கப்படும் போது 2-ம் நிலைக்கு தள்ளப்பட வாய்ப்பு உள்ளது. எனவே முஸ்லிம்களின் நலன் கருதி உருது பள்ளியில் உருது மொழியை கட்டாய பாட மாக்கப்பட வேண்டும்.
*ஆடு, மாடுகளை இஸ்லா மிய முறைப்படி நேரடியாக அறுப்பதை தொடர வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
*புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ளும் முஸ்லிம்கள் புனி ஹஜ் கடமையை சரிவர நிறைவேற்றிட, அவர்களுக்கு சட்டங்களை தெளிவாக்கி, கடமை முழுமை பெற விமானத்திற்கு ஒரு ஆலிமை வழிகாட்டியாக அனுப்ப வேண்டும்.
வரதட்சனை வாங்காமல்...
*விருத்தாசலம் பகுதிகளில் பெண்கள் கலைக்கல்லூரி நிறுவ வேண்டும்.
*கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டால் சுமூகமாக பேசி உறவை தொடர வேண்டும். முடியாத பட்சத்தில் கணவன் ஒரே ஒரு தலாக்கை மட்டும் பயன்படுத்தி கணவன்- மனைவி உறவை முறித்து கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் 3 தலாக் விடுவது அல்லாவின் கோபத்தை ஏற்படுத்தும் செயலாகும். எனவே இஸ்லாமியர்கள் இது போன்ற செயல்களை தவிர்த்து கொள்ள வேண்டும்.
*அல்லாவின் கட்டளைக்கு ஏற்ப வரதட்சனை வாங்காமல், மஹர் கொடுத்து திருமணம் முடிப்போம் என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
அரசுக்கு நன்றி
*சமீபத்தில் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட கட்டாய திருமண பதிவு சட்டத்தில், பள்ளிவாசலில் பதிவு செய்யப் படும் பதிவு நகலை சிறிய மாற்றத்துடன் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஜமாஅத்துல் உலமா பேரவையின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசுக்கு இம்மா நாடு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
முடிவில் பொருளாளர் அப்துர்ரஜ்ஜாக் நன்றி கூறினார்.
http://lalpetexpress.blogspot.com/2010/04/blog-post_1551.html
--
லால்பேட்டை எக்ஸ்பிரஸ்
http://lalpetexpress.blogspot.com/
ஷரீஅத் விளக்க மாநாடு
கடலூர் மாவட்ட ஜமா அத்துல் உலமா ஷரீஅத் விளக்க மாநாடு விருத்தாசலம் நவாப் பள்ளிவாசலில் நடந் தது. மாநாட்டிற்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார். விருத்தாசலம் முத்தவல்லி நவாப் ஜாமிஆ மஸ்ஜித் அப்துல் மஜீது, டவுன் ஜீம்ஆ மஸ்ஜித் சையது முகம்மது, ஷேக்கவுஸ்மியான், அப்துல் ஹமீது, சத்தார்பாஷா, சையது இப்ராஹீம், முகம்மது ஜவ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜமா அத்துல் கடலூர் மாவட்ட செயலாளர் சபியுல்லாஹ் வரவேற்றார். விருத்தாசலம் நகர செய லாளர் முகம்மது சாலிஹ், இஸ்மாயில் நாஜி, முகம்மது இஸ்ஹாக் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட தலைவர் நூருல் அமீன் தொடக்க உரை யாற்றினார்.
திண்டுக்கல் ïசுபிய்யா அரபிக்கல்லூரி கலீல் அகமது மாநில துணைத் தலைவர் சலாஹீத்தீனும், மாநில பொதுச்செயலாளர் அப்துல்காதிர், சதீதுத்தீன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். மாநாட்டில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
இஸ்லாமிய முறைப்படி...
மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வரு மாறு:-
*சமச்சீர் கல்வி திட்டத்தின் மூலமாக முஸ்லிம்களின் உருது பள்ளிகளில் தாய் மொழியான உருதை விருப்ப பாடமாக்கப்படும் போது 2-ம் நிலைக்கு தள்ளப்பட வாய்ப்பு உள்ளது. எனவே முஸ்லிம்களின் நலன் கருதி உருது பள்ளியில் உருது மொழியை கட்டாய பாட மாக்கப்பட வேண்டும்.
*ஆடு, மாடுகளை இஸ்லா மிய முறைப்படி நேரடியாக அறுப்பதை தொடர வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
*புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ளும் முஸ்லிம்கள் புனி ஹஜ் கடமையை சரிவர நிறைவேற்றிட, அவர்களுக்கு சட்டங்களை தெளிவாக்கி, கடமை முழுமை பெற விமானத்திற்கு ஒரு ஆலிமை வழிகாட்டியாக அனுப்ப வேண்டும்.
வரதட்சனை வாங்காமல்...
*விருத்தாசலம் பகுதிகளில் பெண்கள் கலைக்கல்லூரி நிறுவ வேண்டும்.
*கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டால் சுமூகமாக பேசி உறவை தொடர வேண்டும். முடியாத பட்சத்தில் கணவன் ஒரே ஒரு தலாக்கை மட்டும் பயன்படுத்தி கணவன்- மனைவி உறவை முறித்து கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் 3 தலாக் விடுவது அல்லாவின் கோபத்தை ஏற்படுத்தும் செயலாகும். எனவே இஸ்லாமியர்கள் இது போன்ற செயல்களை தவிர்த்து கொள்ள வேண்டும்.
*அல்லாவின் கட்டளைக்கு ஏற்ப வரதட்சனை வாங்காமல், மஹர் கொடுத்து திருமணம் முடிப்போம் என்பதில் முஸ்லிம்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
அரசுக்கு நன்றி
*சமீபத்தில் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட கட்டாய திருமண பதிவு சட்டத்தில், பள்ளிவாசலில் பதிவு செய்யப் படும் பதிவு நகலை சிறிய மாற்றத்துடன் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஜமாஅத்துல் உலமா பேரவையின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசுக்கு இம்மா நாடு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
முடிவில் பொருளாளர் அப்துர்ரஜ்ஜாக் நன்றி கூறினார்.
http://lalpetexpress.blogspot.com/2010/04/blog-post_1551.html
--
லால்பேட்டை எக்ஸ்பிரஸ்
http://lalpetexpress.blogspot.com/
Saturday, April 11, 2009
அரபு மொழி பேசுவோரையும் தமிழ் படிக்க வைத்த பெருமை முஸ்லிம் லீகிற்கு உண்டு! தளபதி ஷபீகுர் ரஹ்மான்
அரபு மொழி பேசுவோரையும் தமிழ் படிக்க வைத்த பெருமை முஸ்லிம் லீகிற்கு உண்டு! தளபதி ஷபீகுர் ரஹ்மான்
இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் 13ஆம் ஆண்டுவிழா தஞ்சையில் நடைபெற்றது. ஆன்மீக அரங்கத்திற்கு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குநர் ஹாஜி 'மெஹர்' ப.யு.அய்யூப் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட அரசு காஜியார் அல்ஹாஜ் டி.சைய்யத் காதர் ஹுசைன் புகாரி ஆலிம் முன்னிலை வகித்தார்.
வவ்வாலடி 'அன்னை கதீஜா' இதழ் துணை ஆசிரியர் தமிழ்மாமணி ஹாஜி அ. ஹபீப் முஹம்மது இஸ்லாமியப் பாடல் இசைத்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான்
சிறப்புரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது :
இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் சார்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இஸ்லாமிய இலக்கியப் பெருவிழாவில் ஆண்டுதோறும் கலந்து கொள்ளும் வாய்ப்பினை எனக்கு நல்கிய உங்கள் அனைவருக்கும் முதலில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த நமது தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத், நீடூர் சயீத் ஆகியோருடன் இணைந்து இதற்கு முன்பு இலக்கிய மாநாடுகளில் நான் பங்கேற்றுள்ளேன்.
சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது அவர்கள் முஸ்லிம் லீக் பணிகளோடு, இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் உலக ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்று இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். அவரது மறைவை தொடர்ந்து தற்போது நமது முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., உலக ஒருங்கிணைப்பாளராக இருந்து இஸ்லாமிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சேவை புரிந்து வருகிறார்.
தமிழக முஸ்லிம்களை பொறுத்தவரை தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் பற்றும் - பாசமும் கொண்டிருக்கின்றனர். அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர்.
தமிழக ஆலிம் பெருமக்கள் பலர் மார்க்க சேவையோடு, தமிழ் சேவையையும் புரிந்துள்ளனர். மதரஸாக்களில் அரபி மொழி போதிக்கும் போதெல்லாம் தமிழ் மொழியின் சிறப்புக்களையும் எடுத்து விளக்கி வருகின்றனர். தமிழகத்தின் புகழ் பெற்ற ஆலிமாக திகழ்ந்த ஷெய்குல் மில்லத் அமானி ஹஸரத் அவர்கள் மதரஸாவில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும்போதெல்லாம் அரபி மொழி கற்றுக் கொடுக்கும்போதெல்லாம் தமிழ் மொழியின் சிறப்புக்களையும், இலக்கியத்தையும் எடுத்து விளக்குவார்.
அதேபோன்று கண்ணியத்துக்குரிய காயிதெ மில்லத் அவர்கள் இந்திய அரசியல் சபையிலே இந்தியாவில் ஆட்சி மொழியாக அறிவிக்கக்கூடிய தகுதியும், தொன்மையும் இலக்கிய - இலக்கண வளமையும் நிறைந்த மொழி தமிழ் ஒன்றுதான். தமிழையே இந்தியாவின் பொது மொழியாக அங்கீகரிக்க வேண்டும் - அறிவிக்க வேண்டும் என குரல் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்ல - மொராக்கோ நாட்டிலே நடைபெற்ற உலக முஸ்லிம் தலைவர்களின் மாநாட்டிலே இந்திய அரசின் பிரதிநிதியாக கலந்து கொள்ளும் வாய்ப்பு ஒருமுறை முஸ்லிம் லீகிற்கு கிடைத்தது.
முஸ்லிம் லீகின் சார்பாக, காயிதெ மில்லத் அவர்கள் அப்துஸ் ஸமதை இந்த மாநாட்டிற்கு அனுப்பி வைத்தார். அப்போது அப்துஸ் ஸமதிடம் சில புத்தகங்களை கொடுத்து இந்த புத்தகங்களை மொராக்கோ மாநாட்டில் கலந்துகொள்ளும் முஸ்லிம் கல்வியாளர்களிடம் கொடுத்து படிக்கச் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
காயிதெ மில்லத் அப்துஸ் ஸமதிடம் கொடுத்தனுப்பிய தப்ஸீர் ஜலாலைன், மிஷ்காத், பத்ஹுர் ரப்பானி, சிம்து ஸுபியான் போன்ற அரபு - தமிழ் நூல்களை மொராக்கோவில் நடைபெற்ற உலக முஸ்லிம் கல்வியாளர்கள் மாநாட்டிலே கலந்து கொண்ட அரேபியர்கள் பலரும் வாசிக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது அவர்கள் வாயிலிருந்து ஏராளமான தமிழ் சொற்கள் வெளிப்பட்டன. இத்தகைய ஒரு அதிசயம் அங்கு நிகழ்ந்தது.
மாநாட்டை முடித்து தமிழகம் திரும்பிய அப்துஸ் ஸமத் மாநாட்டு நிகழ்வுகள் தொடர்பாக ~மணிவிளக்கு ஏட்டிலே எழுதிய கட்டுரையில், அரபுகளையும் தமிழ் பேச வைத்த அற்புத தலைவர் காயிதெ மில்லத் அவர்களின் அந்த செயலினை வெகுவாக பாராட்டி புகழ்ந்துள்ளார்.
இந்த அளவுக்கு முஸ்லிம் பெருமக்கள் தமிழின் மீது தனியாத பற்றுக்கொண்டுள்ளனர். அரசியல் தலைவர்களாக மட்டுமல்லாமல் ஆன்மீகத் தலைவராகவும், திகழ்ந்து தமிழின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர்.
தமிழ் மொழிக்கும் - அரபு மொழிக்கும் இடையேயான ஒற்றுமைகளை ஆய்வு செய்து நூல்களை எழுதுபவர்களுக்கு ஆண்டுதோறும் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. அறிவித்துள்ளார்.
தமிழ் அறிஞர் பெருமக்களும், முஸ்லிம் ஆலிம்களும் இத்தகைய பணிகளில் ஈடுபடுவது இன்றைய காலத்தின் அவசியமாகும்.
முஸ்லிம்கள் தமிழை வளர்த்தார்கள். தமிழால் இஸ்லாம் வளர்ந்தது. தமிழ் மொழிக்காக முஸ்லிம் பெருமக்கள் இயற்றித் தந்துள்ள ஏராளமான இலக்கியங்கள் இன்னும் பொது மக்களின் கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை. அவற்றையெல்லாம் அனைத்து மக்களும் அறிந்து பயன்பெறும் வகையில் இதுபோன்ற இலக்கிய மாநாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
-இவ்வாறு தளபதி ஷபீகுர் ரஹ்மான் பேசினார். நிகழ்ச்சியில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழக துணைத்தலைவர் அதிரை அருட்கவி முஹம்மது தாஹா மதனீ, பாபநாசம் ராஜகிரி தாவூத் பாட்சா கலைக்கல்லூரி அரபி மொழிப் பேராசிரியர் ஆலிம் கவிஞர் தேங்கை ஷர்புதீன், ஆகியோர் உரையாற்றினர்.
இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் 13ஆம் ஆண்டுவிழா தஞ்சையில் நடைபெற்றது. ஆன்மீக அரங்கத்திற்கு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குநர் ஹாஜி 'மெஹர்' ப.யு.அய்யூப் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட அரசு காஜியார் அல்ஹாஜ் டி.சைய்யத் காதர் ஹுசைன் புகாரி ஆலிம் முன்னிலை வகித்தார்.
வவ்வாலடி 'அன்னை கதீஜா' இதழ் துணை ஆசிரியர் தமிழ்மாமணி ஹாஜி அ. ஹபீப் முஹம்மது இஸ்லாமியப் பாடல் இசைத்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மார்க்க அணி செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான்
சிறப்புரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது :
இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் சார்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இஸ்லாமிய இலக்கியப் பெருவிழாவில் ஆண்டுதோறும் கலந்து கொள்ளும் வாய்ப்பினை எனக்கு நல்கிய உங்கள் அனைவருக்கும் முதலில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த நமது தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத், நீடூர் சயீத் ஆகியோருடன் இணைந்து இதற்கு முன்பு இலக்கிய மாநாடுகளில் நான் பங்கேற்றுள்ளேன்.
சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது அவர்கள் முஸ்லிம் லீக் பணிகளோடு, இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் உலக ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்று இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். அவரது மறைவை தொடர்ந்து தற்போது நமது முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., உலக ஒருங்கிணைப்பாளராக இருந்து இஸ்லாமிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு சேவை புரிந்து வருகிறார்.
தமிழக முஸ்லிம்களை பொறுத்தவரை தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் பற்றும் - பாசமும் கொண்டிருக்கின்றனர். அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர்.
தமிழக ஆலிம் பெருமக்கள் பலர் மார்க்க சேவையோடு, தமிழ் சேவையையும் புரிந்துள்ளனர். மதரஸாக்களில் அரபி மொழி போதிக்கும் போதெல்லாம் தமிழ் மொழியின் சிறப்புக்களையும் எடுத்து விளக்கி வருகின்றனர். தமிழகத்தின் புகழ் பெற்ற ஆலிமாக திகழ்ந்த ஷெய்குல் மில்லத் அமானி ஹஸரத் அவர்கள் மதரஸாவில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும்போதெல்லாம் அரபி மொழி கற்றுக் கொடுக்கும்போதெல்லாம் தமிழ் மொழியின் சிறப்புக்களையும், இலக்கியத்தையும் எடுத்து விளக்குவார்.
அதேபோன்று கண்ணியத்துக்குரிய காயிதெ மில்லத் அவர்கள் இந்திய அரசியல் சபையிலே இந்தியாவில் ஆட்சி மொழியாக அறிவிக்கக்கூடிய தகுதியும், தொன்மையும் இலக்கிய - இலக்கண வளமையும் நிறைந்த மொழி தமிழ் ஒன்றுதான். தமிழையே இந்தியாவின் பொது மொழியாக அங்கீகரிக்க வேண்டும் - அறிவிக்க வேண்டும் என குரல் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்ல - மொராக்கோ நாட்டிலே நடைபெற்ற உலக முஸ்லிம் தலைவர்களின் மாநாட்டிலே இந்திய அரசின் பிரதிநிதியாக கலந்து கொள்ளும் வாய்ப்பு ஒருமுறை முஸ்லிம் லீகிற்கு கிடைத்தது.
முஸ்லிம் லீகின் சார்பாக, காயிதெ மில்லத் அவர்கள் அப்துஸ் ஸமதை இந்த மாநாட்டிற்கு அனுப்பி வைத்தார். அப்போது அப்துஸ் ஸமதிடம் சில புத்தகங்களை கொடுத்து இந்த புத்தகங்களை மொராக்கோ மாநாட்டில் கலந்துகொள்ளும் முஸ்லிம் கல்வியாளர்களிடம் கொடுத்து படிக்கச் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
காயிதெ மில்லத் அப்துஸ் ஸமதிடம் கொடுத்தனுப்பிய தப்ஸீர் ஜலாலைன், மிஷ்காத், பத்ஹுர் ரப்பானி, சிம்து ஸுபியான் போன்ற அரபு - தமிழ் நூல்களை மொராக்கோவில் நடைபெற்ற உலக முஸ்லிம் கல்வியாளர்கள் மாநாட்டிலே கலந்து கொண்ட அரேபியர்கள் பலரும் வாசிக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது அவர்கள் வாயிலிருந்து ஏராளமான தமிழ் சொற்கள் வெளிப்பட்டன. இத்தகைய ஒரு அதிசயம் அங்கு நிகழ்ந்தது.
மாநாட்டை முடித்து தமிழகம் திரும்பிய அப்துஸ் ஸமத் மாநாட்டு நிகழ்வுகள் தொடர்பாக ~மணிவிளக்கு ஏட்டிலே எழுதிய கட்டுரையில், அரபுகளையும் தமிழ் பேச வைத்த அற்புத தலைவர் காயிதெ மில்லத் அவர்களின் அந்த செயலினை வெகுவாக பாராட்டி புகழ்ந்துள்ளார்.
இந்த அளவுக்கு முஸ்லிம் பெருமக்கள் தமிழின் மீது தனியாத பற்றுக்கொண்டுள்ளனர். அரசியல் தலைவர்களாக மட்டுமல்லாமல் ஆன்மீகத் தலைவராகவும், திகழ்ந்து தமிழின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர்.
தமிழ் மொழிக்கும் - அரபு மொழிக்கும் இடையேயான ஒற்றுமைகளை ஆய்வு செய்து நூல்களை எழுதுபவர்களுக்கு ஆண்டுதோறும் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. அறிவித்துள்ளார்.
தமிழ் அறிஞர் பெருமக்களும், முஸ்லிம் ஆலிம்களும் இத்தகைய பணிகளில் ஈடுபடுவது இன்றைய காலத்தின் அவசியமாகும்.
முஸ்லிம்கள் தமிழை வளர்த்தார்கள். தமிழால் இஸ்லாம் வளர்ந்தது. தமிழ் மொழிக்காக முஸ்லிம் பெருமக்கள் இயற்றித் தந்துள்ள ஏராளமான இலக்கியங்கள் இன்னும் பொது மக்களின் கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை. அவற்றையெல்லாம் அனைத்து மக்களும் அறிந்து பயன்பெறும் வகையில் இதுபோன்ற இலக்கிய மாநாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
-இவ்வாறு தளபதி ஷபீகுர் ரஹ்மான் பேசினார். நிகழ்ச்சியில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழக துணைத்தலைவர் அதிரை அருட்கவி முஹம்மது தாஹா மதனீ, பாபநாசம் ராஜகிரி தாவூத் பாட்சா கலைக்கல்லூரி அரபி மொழிப் பேராசிரியர் ஆலிம் கவிஞர் தேங்கை ஷர்புதீன், ஆகியோர் உரையாற்றினர்.
Labels:
அரபு,
தமிழ்,
தளபதி ஷபீகுர் ரஹ்மான்,
முஸ்லிம் லீக்,
மொழி
Subscribe to:
Posts (Atom)